Sunday, September 14, 2008

நூர் துபாய் எனும் பார்வையின்மைத் தடுப்புத் திட்டத்தின் மூலம் பார்வையினைப் பெறும் ஈராக்கியப் பெண்


நூர் துபாய் எனும் பார்வையின்மைத் தடுப்புத் திட்டத்தின் மூலம் பார்வையினைப் பெறும் ஈராக்கியப் பெண்


நூ துபாய் எனும் பார்வையின்மைத் தடுப்புத் திட்டம் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி அமீரக துணை அதிபரும்,பிரதம அமைச்சரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் பார்வையின்மைக் கோளாறுகளை உடையவர்கள் அதற்கான மருத்துவ செலவுகளைச் செய்ய முடியாதவர்கள் பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்திற்காக பறக்கும் மருத்துவமனை ஒன்று தயார் நிலையில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பயன்பெற மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, தெற்காசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

இத்திட்டம் மூலம் முதலில் பார்வையினைப் பெற இருப்பது ஈராக் நாட்டினைச் சேர்ந்த நூர் எனும் ஏழைப்பெண். நூர் என்ற அரபி மொழிக்கு ஒளி என்பதாகும்.

இப்பறக்கும் மருத்துவமனை பார்வையிழப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் மேற்கொள்ளும்.

http://www.gulfnews.com/nation/Health/10244986.html

No comments: