Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Thursday, September 23, 2010

சுதந்திர இந்தியாவில் நாங்கள்..

சுதந்திர இந்தியாவில் நாங்கள்..

மறந்துப்போன
மனிதநேயம்;
மரத்துவிட்ட
மனிதனின் மனம்!

குட்டி நாய் அடிப்பட்டாலும்
குமுறும் சமூகம் – எங்களை
வெட்டிப்போட்டாலும்
வேடிக்கைப் பார்க்கும்!
நல்ல உள்ளங்களுக்கு
நடுவே சில மதம் பிடித்த யானை;
மிதித்துவிட்டு
மிரட்டிவிட்டுச் செல்லும் - எங்களை
விரட்டி விரட்டிக் கொல்லும்!

விடுதலைக்கு
வித்திட்ட சத்தான சமூகம்;
களம் காண கல்விக்கு
பிரிவுக்கொடுத்தோம் பின்னாளில்
பறிக்கொடுத்தோம்!

மறந்துவிட்ட எங்கள் தியாகம்
மறைத்துவிட்டது எங்கள் சோகம்!
வெடித்தாலும் எங்கள் மீதேப் பழி
இடித்தாலும் எங்கள் மீதேப் பழி;

காஷ்மீரில் இருந்து
கன்னியாக்குமரிவரை
எங்களுக்குப் பிடித்த
காவலர்கள் குறைவு – பிடிக்காமல்;
எங்களைப் பிடித்த காவலர்கள் நிறைவு!

ஓட்டுக்கேட்க மட்டும்
ஓடி வரும் அரசியல் கூட்டம்;
வினாவோடு நாங்கள் போகும்போது
விடைக்கொடுத்துவிட்டு சென்றிடும்
வினோத அரசியல்வாதிகள்!

பத்திரிக்கைகளின்
பக்கம் நிரம்ப
முதலில் எங்கள் மீது பழிப்போடும்;
பின்புதான் வழித்தேடும்
குற்றம் செய்தது யார் என்று!

-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com

--

Saturday, February 14, 2009

விடுதலைப் போரில் இந்திய முஸ்லிம்கள்

விடுதலைப் போரில் இந்திய முஸ்லிம்கள்

(இந்த கட்டுரையின் ஆசிரியர் முஸ்லிமாக இருந்தால் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்களுக்கு சாதகமாக எழுதியிருக்கிறார் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் இந்த கட்டுரையின் ஆசிரியர் வி.என்.சாமி என்ற முஸ்லிமல்லாதவர், இவர் எழுதிய 'கடற்போர்கள்' 'பார்வை விஞ்ஞானம்' பரிசுகளைப் பெற்ற நூற்களாகும். இப்போது இவர் 'விடுதலைப் போரில் இஸ்லாமியர்' என்ற நூலை எழுதி வருகிறார். இந்த கட்டுரை 'ஒற்றுமை' என்ற பத்திரிக்கையில் வெளிவந்ததாகும்.)

இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாக வேள்வியில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. இதனை 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான 'இல்லஸ்டிரேட்டட் வீக்லி' என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.
'இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்' என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
அலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயர்
இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத் திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்சாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர் பல செய்த குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி. கடற்போரில் சாகசங்கள் புரிந்த இந்த வீரத் தளபதியை வெற்றி கொள்ள முடியாத எதிரிகள் நயவஞ்சகமாகக் கொன்றனர்.
வரி தர மறுத்த வரிப்புலிகள்
இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. ஆனால், அதற்கு முன்னரே சுதந்திரம் பெற்று விட்டோம் என்று மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்' என்று பாடினார் மகாகவி பாரதியார். அந்த அளவுக்கு அவரது மனதில் நம்பிக்கை விதையை விதைத்தது ஹாஜி ஷரியத்துல்லா 1781ம் ஆண்டு தொடங்கிய பெராஸி இயக்கமும் அதன் பின் தோற்றுவிக்கப்பட்ட வஹாபி இயக்கமும் ஆகும் என்று கூறலாம்.
வஹாபி இயக்கம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படும் இயக்கத்தை தோற்றுவித்தவர் சையது அஹமது என்பவர் ஆவார். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் பல போராட்டங்களை அந்த வஹாபி இயக்கம் நடத்தியது. வங்கத்தில் வரி கொடா இயக்கம் நடத்தி நாடியா மாவட்டத்தில் 24 பர்கனாக்களைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, இந்திய மக்கள் சுதந்திரச் சுவாசிக்க வழிவகுத்தது. சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று தீர்க்க தரிதனத்துடன் அமரகவி பாரதி பாடியதற்கு இந்த வரலாற்றுப் பிண்ணனி தான் காரணம் என்று உகிக்க முடிகிறது.
கதி கலக்கிய கான் சாஹிபு
ஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக இருந்து, பிறகு அவர்களுக்கு எதிராக மாறியவர் கான்சாஹிப்.. இவர் யூசுப்கான், நெல்லூர் சுபேதார், முஹம்மது யூசுப், கும்மந்தான், கம்மந்தான் சாகிபு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். யூசுப் கான் சாஹிபு மதுரையில் ஆங்கிலேயரின் கொடியைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டுத் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர் அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.
ஷா அப்துல் அஜீஸ்
இந்தியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்த இஸ்லாமிய விடுதலை வீரர்களில் ஷா அப்துல் அஸீஸ் அல் தெஹ்லவியும் ஒருவர். பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னல்கள் இழைத்து வருவதைக் கண்டு வேதனைப்பட்ட அவர் இந்தியாவை 'தாருல் ஹர்ப்' ஆகப் பிரகடனம் செய்தார்.
ஷா வலியுல்லாஹ்வின் மூத்த மகனாக 1746ம் ஆண்டு டெல்லியில் பிறந்த தெஹ்லவி ஆங்கிலேயரை எதிர்க்க முஸ்லிம்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டிருந்தார். அத்திட்டம் நிறைவேறுவதற்கு முன்னரே காலமாகிவிட்டார். இவர் கூறியுள்ள மார்க்கத் தீர்ப்புகள் 'பத்வா' எனும் பெயருடன் இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ளன.
அஞ்சாத புலி ஹைதர் அலி
18ம் நூற்றாண்டில் சிறந்த தளபதியாகத் திகழ்ந்தவர் ஹைதர் அலி. இவர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போர் 'முதலாம் மைசூர் போர்' எனப்படுகிறது. ஹைதர் அலியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர் தோற்று ஓடினர். ஆனால், இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து இவரைத் தோற்கடித்தனர்.
தீரன் திப்பு சுல்தான்
'மைசூர் புலி' திப்பு சுல்தானின் பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயரின் உடல்கள் நடுங்கும். இவர் ஹைதர் அலியின் மகனாவார். இரண்டாம் மைசூர் போரில் இவரது பங்கு மகத்தானது. தன் தந்தையின் மறைவிற்குப் பின், ஆங்கிலேயரை எதிர்த்து இவர் போரில் ஈடுபட்டார்.
1790ம் ஆண்டு முதல் 1792ம் ஆண்டு வரை நடை பெற்ற மூன்றாம் மைசூர் போரில் திப்பு தோல்வியடைந்தார். தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கூறிய போது, திப்பு சுல்தான் 'முடியாது' என்று மறுப்புத் தெரிவித்தார். மதிப்பிற்குரிய இந்த வீரருக்கு ஒருவன் துரோகம் செய்தான். அதன் காரணமாக எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு திப்பு சுல்தான் இரையானார்.
வங்கத்துச் சிங்கங்கள்
வங்காளத்தில் 1776ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம் பக்கிரிகள் நடத்திய புரட்சியால் பிரிட்டிஷ் ஆட்சி கதிகலங்கி விட்டது. இந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய சிராக் அலியைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் எவ்வளவோ முயற்சித்தனர். தலைமறைவான அவரை கடைசி வரை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை.
தென்னாட்டு வேங்கைகள்
தென்னகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் புரட்சியாளர்கள் கிளர்ச்சி செய்தனர். 1800ம் ஆண்டு இக்கிளர்ச்சிக்கு கோவையில் தலைமை தாங்கி நடத்தியவர் முஹம்மது ஹசன். ஓசூரில் தலைமை வகித்து நடத்தியவர் ஃபத்தேஹ் முஹம்மது. ஆங்கிலேயப் படை முஹம்மது ஹசனைக் கைது செய்தது. கிளர்ச்சி பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ஆங்கிலேயர் அவரை சித்ரவதை செய்தனர். புரட்சியாளர்களின் திட்டங்கள் ஆங்கிலேயருக்குத் தெரிந்து விடக் கூடாது என்று கருதிய முஹம்மது ஹசன் தன் குரல்வளையை அறுத்துக் கொண்டு இந்தியத் தாயின் விடுதலைக்குத் தன் இன்னுயிரை அர்ப்பணித்துக் கொண்டார்.
குடகுப் பகுதியில் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்திய மக்கான் கான், மகபூப்தீன் ஆகியோரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். மங்களூருக்கு அருகில் உள்ள எட்காலி குன்றில் இவர்கள் இருவரும் 1800ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதியன்று தூக்கிலிடப் பட்டனர்.
முஃப்தீ இனாயத் அஹ்மது
தேடி வந்த முன்சீப் பதவியை உதறித் தள்ளி விட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் முஃப்தீ இனாயத் அஹ்மது. உ.பி.யில் 1822ம் ஆண்டு பிறந்த இவர் நிகழ்த்திய தீப்பொறி பறக்கும் சொற்பொழிவுகள் மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டின. இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்தது. இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 'நீங்கள் புரட்சி செய்தது உண்மையா?' என்று நீதிபதி இவரிடம் கேட்டார்.
'ஆம். அடிமை விலங்கை உடைத்தெறியப் புரட்சி செய்வது என்னுடைய கடமை என்று உணர்ந்து கொண்டேன். புரட்சி செய்தேன்' என்று முஃப்தி இனாயத் அஹ்மது துணிச்சலுடன் பதிலளித்தார். இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
அன்றும்... அயோத்தி அவலம்...
தேச விடுதலைக்காக நாடு முழுவதும் துறவிக் கோலத்தில் சுற்றுப்பயணம் செய்து புரட்சிப் பிரச்சாரம் செய்தவர் மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி. சென்னை நவாபின் வழிவந்தவரான இவர் கிழக்கு அயோத்தி எனப்படும் பைசாபாத்தின் அதிபராக இருந்தவர். இவரது புரட்சிப் பிரச்சாரம் ஆங்கிலேயருக்கு ஆத்திரமூட்டியது. இவரைக் கைது செய்து பைசாபாத் சிறையில் அடைத்தனர். புரட்சியாளார்கள் சிறைக் கதவை உடைத்து இவரை மீட்டு வந்தனர். இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ ஒப்படைப்பவருக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது.
தலைமறைவாக இருந்த மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி அயோத்தி மன்னன் விரித்த வஞ்சக வலையில் சிக்கினார். அவரைக் காண யானைப் பாகனாக மாறு வேடத்தில் சென்ற போது, அயோத்தி மன்னனின் தம்பி பாவென் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். 1858ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதியன்று அவரது தலையை அயோத்தி மன்னன் வெட்டி ஆங்கிலேயரிடம் கொண்டு போய்க் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசை பெற்றான்.
புதைந்து போன புரட்சி மலர்கள்
வட இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது ஹியூவீலர் என்னும் ஆங்கிலேய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். இப்புரட்சியில் கலந்து கொண்ட ஜாபர் அலி என்பவர் தான் அவரைச் சுட்டுக் கொன்றார் என்ற தவறான தவகல் ஆங்கிலேய அதிகாரிகளுக்குத் தரப்பட்டது. ஜாபர் அலி கைது செய்யப்பட்டார். அவரை ஒரு தூணில் கட்டி வைத்து, சாட்டையால் அடித்தனர். அவரது உடலிலிருந்து கசிந்த இரத்தம் கீழே விரிக்கப்பட்டிருந்த ஈரப்பாயில் சிந்தி உறையாமல் ஈரமாக இருந்தது. பாயில் சிந்திய இரத்தத்தை நாவினால் சுத்தப்படுத்தும் படி ஜாபர் அலியை சித்ரவதை செய்தனர். பாயை சுத்தம் செய்த போதும் சாட்டையால் அவரை அடித்தனர். இறுதியில் ஜாபர் அலி ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1857ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது டிட்டு மிர் மியான் என்று அழைக்கப்பட்ட மிர் நிசார் அலி வஹாபிகளை ஒன்று திரட்டிக் கிளர்ச்சியில் ஈடுபடுத்தினார். கொல்கத்தா அருகே பல கிராமங்களை ஆங்கிலேயரின் அதிக்கத்திலிருந்து விடுவித்தார். பிரிட்டிஷ் தளபதி அலெக்சாண்டர் தலைமையில் இராணுவம் வந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இதில் 400 வஹாபியர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியின் முன்னணியில் இருந்த ரசூல் என்பவர் தூக்கிலிடப்பட்டார்.
அன்றும் ஒரு பொடோ
இந்திய மக்களை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்கள் பல அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தனர். அவற்றுள் மிகக் கொடுமையானது 'ரௌலட் சட்டம்'. இந்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவெங்கும் பெரும் கிளர்ச்சி மூண்டது. பஞ்சாபில் இக்கிளர்ச்சி மிகத் தீவிரமாக நடைபெறக் காரணமாக இருந்தவர் டாக்டர் சைபுதீன் கிச்சுலு. இவரைப் பிரிட்டிஷ் இராணுவம் அமிர்தஸரசிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தர்மசாலா என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றது. இதனை அறிந்த மக்கள் கொதிப்படைந்தனர். போலீஸ் ஆணை ஆணையர் அலுவலகத்திற்கு அவர்கள் பெருந்திரளாகச் சென்றனர். அந்த மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்தனர். இதில் ராபின்சன், சார்ஜண்ட் ரௌலண்ட் என்னும் இரு ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.
அப்போது மக்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்த மக்பூல் மாமூத் என்னும் வழக்கறிஞரைப் போலீசார் கைது செய்தனர். ராபின்சன், ரௌலண்ட் ஆகியோரைக் கொன்றவர்கள் யார் என்று கூறும் படி அவரைச் சித்ரவதை செய்தனர். 'கொலையாளிகளை என்னால் அடையாளம் காட்ட முடியாது' என்று அவர் எழுதிக் கொடுத்தார். உடனே போலீசாரே சில பெயர்களை எழுதி, அவர்கள் குற்றவாளிகள் என்று வாக்குமூலம் தருமாறு அவரை வற்புறுத்தினர். 'எனக்கு மனசாட்சி உண்டு, பொய் சொல்ல மாட்டேன்' என்று அவர் உறுதியாகக் கூறிவிட்டார். மன சாட்சியுடன் நடந்து கொண்ட அவரது வக்கீல் சான்றிதழ் பறிக்கப்பட்டது.
இந்தக் கலவரத்தின் போது ஈஸ்டன் என்னும் ஆங்கிலப் பெண்மணியைத் தாக்க முயன்றதாக முஹம்மது அக்ரம் என்பவர் கைது செய்யப்பட்டார். உண்மையில் அவர் ஈஸ்டனைத் தாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் விசாரணையில் அவர் குற்றவாளி என்று கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சட்டத்தை மீறி தண்டியில் உப்பு அள்ளிய காந்தியடிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் வெற்றிகரமாக பொது வேலைநிறுத்தம் நடத்தியவர் அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன். அப்போது அந்த மாநிலத்தில் பல இடங்களில் கலவரங்கள் நடந்தன. இக்கலவரங்களைத் தூண்டிவிட்டதாக அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன் மீது வழக்குத் தொடரப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1931ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதியன்று ஏர்வாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.
ககோரி ரயில் கொள்ளை வழக்கில் புரட்சி வீரர் அஷ்பாகுல்லாஹ் கான் மீது விசாரணை நடைபெற்றது. 'நீ முஸ்லிம். மற்ற புரட்சிக்காரர்கள் இந்துக்கள். அவர்களைக் காட்டிக் கொடுத்தால் உனக்கு நிபந்தனையற்ற விடுதலை கிடைக்கும். ஏராளமான பணமும் தரப்படும்' என்றெல்லாம் கூறி வெள்ளை அதிகாரிகள் ஆசை காட்டினார்கள். இந்த ஆசை வார்த்தைகளையெல்லாம் கேட்ட அஷ்பகுல்லாஹ் கான் பாறைபோல் அசையாமல் நின்றார். தங்கள் பரித்தாளும் சூழ்ச்சி பலிக்காமல் போகவே பிரிட்டிஷார் இவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தனர். அவர் தூக்கில் ஏற்றப்பட்ட நாளன்று திருக்குர்ஆனைக் கழுத்திலே தொங்கப் போட்டார். ஹாஜிகளைப் போன்று 'லப்பைக் லப்பைக்' என்று கூறிக் கொண்டிருந்தார். தாமே சுருக்குக் கயிற்றை எடுத்துக் கழுத்திலே மாட்டிக் கொண்டார். அஷ்பகுல்லாஹ் கான் உ.பி.யில் உள்ள ஷாஜஹான்பூரில் பிறந்தவர்.
முஹம்மதலி, ஷெளகத் அலி, அபுல்கலாம் அஸாத் ஆகியோர் காந்தியடிகளின் ஆதரவுடன் துவக்கிய கிலாஃபத் இயக்கத்திற்குத் தமிழக முஸ்லிம்கள் பேராதரவு அளித்தனர். காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் இந்த இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். ஆங்கில ஆட்சியை எதிர்த்து மாணவர்கள் கல்லூரிகளையும் படிப்பையும் துறக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று பி.ஏ படிப்பை இடையில் நிறுத்தினார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். கதர் மீது மிகுந்த அபிமானம் கொண்ட இவர் தனது திருமணத்தின் போது கரடுமுரடான கதர் ஆடை தான் அணிந்திருந்தார்.
விடுதலைப் போரில் ஈடுபடுவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையை உதறி எறிந்தவர் - கம்பம் பீர்முஹம்மது பாவலர். இவர் கதர் இயக்கத்தின் தீவிரத் தொண்டராகத் திகழ்ந்தவர். விடுதலை உணர்வைத் தூண்டும் நாடகத்தில் நடித்ததற்காக இவர் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பொதுக்கூட்டங்களில் பேச ஆங்கிலேய அரசு இவருக்குத் தடை விதித்தது. அதனால் இவர் வாயைத் துணியால் கட்டிக் கொண்டு மேடையேறி சைகைகளின் மூலம் பேசி வரலாறு படைத்தவர்.
சிலையை உடைத்த சீலர்
தமிழ்நாட்டில் கதர் இயக்கத்திற்கு அருந்தொண்டு புரிந்தவர்களில் காஜா மியான் ராவுத்தர், 'மேடை முதலாளி' என்று அன்புடன் அழைக்கப்பட்ட மு.ந.அப்துர்ரஹ்மான் சாகிப், ஆத்தூர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இலவசமாக கதராடை வழங்கியவர் காஜா மியான் ராவுத்தர். பெருமளவில் கதர்த்துணி உற்பத்தி செய்வதற்காக கதர் ஆலை ஒன்றையே அவர் நிறுவினார். 'மேடை முதலாளி' அப்துர்ரஹ்மான் சாகிப் மக்களிடையே கதர் பிரச்சாரம் செய்தார். மக்களுக்கு இலவசமாக கதராடை வழங்கினார். கதர்த் துணி தயாரிக்க இவர் தனது வீட்டிலேயே தறி அமைத்தார். பல வீடுகளுக்குச் சென்று கதர் ராட்டினம் கொடுத்து, கதர் நூற்கக் கற்றுக் கொடுத்தார்.
கதர் அணியாத முஸ்லிம் மணமக்களின் திருமணங்களில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தவர் அல்லாமா அப்துல் ஹமீத் பாகவி. இவர் தீவிர கதர் பக்தராகத் திகழ்ந்தவர். இவர் பல ஊர்களுக்குச் சென்று மேடையேறி விடுதலைப் போர் முரசு முழங்கினார்.
ஆங்கிலேய அரசின் இராணுவத் தளபதியாக இருந்த நீல் எனப்படும் நீசன் மிகுந்த கொடூரக்காரன். சிப்பாய்க் கலகத்தின் போது கண்ணில் பட்ட இந்தியர்களைச் சுட்டுக் கொன்றவன். இவனுக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டிருந்தது. அச்சிலையைத் தகர்க்கும் போராட்டம் 1927ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை பெற்றது. இராமநாதபுரம் முஹம்மது சாலியா சிலையை சம்மட்டியால் அடித்து உடைத்தார். இவருக்கு முன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜீது, லத்தீப், இராமநாதபுரம் மஸ்தான், பண்ருட்டி முஹம்மது உசேன் முதலியவர்கள் சிலை உடைப்புப் போரில் பங்கு கொண்டு 6 மாதம் முதல் 2 வருடம் வரை கடுங்காவல் தண்டனை பெற்றனர்.
பிரமிக்க வைத்த வள்ளல் ஹபீப்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலைப் போராட்டத்தில் கிழக்காசியாவில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் பெரும் பங்கு கொண்டனர். மியான்மரில் (அன்றைய பர்மா) ஹபீப் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர்.
பெரும் கோடீஸ்வரர். நேதாஜி, மியான்மர் சென்ற போது அவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். அதைக் கண்டு நேதாஜி பிரமித்து விட்டார். இதன் பின் கிழக்காசியாவில் நேதாஜி பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். 'நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை' என்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார்.
ஹபீபுர் ரஹ்மான், ஷாநவாஸ் கான், கரீம் கனி, மௌலானா கலீலுர்ரஹ்மான், முஹ்யித்தீன் பிச்சை ஆகிய இந்திய முஸ்லிம்கள் நேத்தாஜியின் உதவியாளர்களாக இருந்து அரும்பணியாற்றினார்கள்.
பெண் போராளிகள்
இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியப் பெண்களும் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர்.
அயோத்தி மன்னர் வஸீர் அலிஷாவிடமிருந்து ஆங்கிலேயர் அயோத்தியைக் கைப்பற்றினர். அப்போது மன்னரின் மனைவி பேகம் ஹசரத் மஹல் லக்னோவில் தங்கியிருந்தார். அயோத்தியை ஆங்கிலேயர் கைப்பற்றியதை எதிர்த்து மக்களைத் திரட்டி அவர் புரட்சியில் ஈடுபட்டார். ஒன்பது மாத காலம் புரட்சியாளர்கள் பேகம் ஹசரத் மஹல் தலைமையில் ஆங்கிலேயப் படையை எதிர்த்துப் போர் புரிந்தனர். இறுதியில் ஆங்கிலேய இராணுவத்தின் கை ஓங்கியது. பேகம் ஹசரத் மஹல் தனது மகன் பிரிஜிஸ் காதிருடன் நேபாளத்திற்குத் தப்பிச் சென்றார். நேபாள எல்லையில் ஆங்கிலேயர்களால் அவரும் அவரது மகனும் கொல்லப்பட்டனர்.
அபுல் கலாம் ஆசாத் மீது ஆங்கிலேய அரசு 1922ம் ஆண்டு ராஜ நிந்தனை குற்றம் சாட்டி கைது செய்தது. அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் ஒரு வருடக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இத்தண்டனை பற்றி ஆசாத்தின் மனைவி ஸுலைஹா பேகம் கீழ்க்கண்டவாறு காந்திஜிக்கு தந்தி அனுப்பினார்.
'என் கணவர் அபுல் கலாம் ஆசாத்திற்க நீதி மன்றம் ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. இந்தத் தண்டனை நாங்கள் எதிர் பார்த்ததை விடக் குறைவு. தேசத் தொண்டுக்கு வழங்கப்படும் பரிசு சிறைத் தண்டனை என்றால் இப்போது வழங்கப்பட்டுள்ள ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை மிகவும் அற்பமான பரிசு'.
வெளிநாடுகளில் தங்கியிருந்து இந்திய விடுதலைக்கு உழைத்த இஸ்லாமியர்கள் பலர்.
பஞ்சாபில் பிறந்த உபைதுல்லாஹ் சிந்தி காபூலில் ஏழு ஆண்டுகள் தங்கி இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். 1923ம் ஆண்டு காங்கிரஸ் மகா சபையின் ஒரு கிளையை இவர் காபூலில் ஏற்படுத்தினார். பின்னர் துருக்கியின் தலைநகரான ஆங்காரா சென்று அங்கு மூன்று ஆண்டுகள் தங்கி பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார்.
சிங்கை சிங்கம்
1914-ம் ஆண்டில் சூரத்தில் பிறந்து, சிங்கப்பூரில் வாழ்ந்த காசிம் இஸ்மாயில் மன்சூர் பெரும் வணிகர், கோடீஸ்வரர்.
1915 - ம் ஆண்டு ரங்கூனில் முகாமிட்டிருந்த இந்தியப்படையினர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் புரட்சியில் கலந்து கொள்வதென முடிவு செய்தனர். இந்தப் படை அணியினருக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி ஊக்குவிக்க முன்வந்தார் காசிம் இஸ்மாயில் மன்சூர். இந்திய விடுதலைக்காகப் புரட்சியாளர்கள் நடத்தும் கிளர்ச்சியில் கலந்து கொள்ள சிங்கப்பூரிலிருந்து ஆட்களை ரங்கூனுக்கு அனுப்ப அவர் ஏற்பாடு செய்தார். இத்தகவல் பிரிட்டிஷ் உளவுத் துறைக்குத் தெரிந்து விட்டது. உடனே இவர் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றச் சாட்டை இராணுவ நீதிமன்றம் விசாரித்து, இவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. 1915 - ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் சிங்கப்பூர் சிறைச் சாலையில் தூக்கிலிடப்பட்டார்.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக வெளிநாடுகளில் இருந்த இந்திய இராணுவ முகாம்களில் புரட்சி நடத்தத் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின்படி, சிங்கப்பூரில் முகாமிட்டிருந்த இந்தியக் காலாட்படை அணியினர் புரட்சியில் ஈடுபட்டனர். இராணுவச் சட்டத்தை அமல்படுத்தி இவர்களது புரட்சியை ஒடுக்கினர் ஆங்கிலேயர். புரட்சி பற்றி அவர்கள் விசாரணை நடத்தி ரசூலுல்லாஹ், இம்தியாஸ் அலி, ரக்னுத்தீன் ஆகிய மூவருமே இப்புரட்சிக்குக் காரணம் என்று கண்டு பிடித்தனர். இராணுவ நீதிமன்றம் இந்த மூவரையும் பலரது முன்னிலையில் சுட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டது. அதன்படி இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புரட்சியில் ஈடுபட்ட காலாட்படை அணிக்குத் தலைமை வகித்த சுபேதார் தண்டுகான், ஜமேதார் கிஸ்டிகான் ஆகியோருக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 1915 ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதியன்று இவர்கள் சிங்கப்பூர் சிறைச்சாலை வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Thursday, January 8, 2009

மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 35வயதிற்குட்பட்ட இளைஞர்கள் உள்ள நாடு இந்தியா

மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 35வயதிற்குட்பட்ட இளைஞர்கள் உள்ள நாடு இந்தியா

விருதுநகர், ஜன.8.

இந்தியாவின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள், காந்தீயமும், நேருவின் பொருளாதாரக் கொள்கைகள்தான் உலக அளவில் நிலைத்து நிற்கக்கூடியவை என்று கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உலகமயமாதலில் மாணவர்களின் பங்கு என்ற தலைப்பில் பேசிய நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் டாக்டர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.


ஸ்ரீவில்லி கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இலக்கிய வட்டம் சார்பாக கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்வுக்கு பல்கலைக்கழக வேந்தர் தி.கலசலிங்கம் தலைமை தாங்கினார். துணை வேந்தர் டாக்டர் செல்லையாதங்கராசு, டாக்டர் எம்.ஜெயகுமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரேணுகா வரவேற்புரையாற்றினார். சந்தியா நன்றி கூறினார். இந்து லட்சுமி அறிக்கை வாசித்தார். கருத்தரங்கில் உலகமயமாதலில் மாணவர்கள் பங்கு என்ற தலைப்பில் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் டாக்டர் இ.எம்.சுதர்சனநாச்சியப்பன் பேசும்போது கூறியதாவது இன்டர்நெட்டில் இந்த தலைப்புக்கு 2 கோடியே 22 லட்சம் அர்த்தமுள்ள சொற்றொடர்கள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கணியன் ஞீங்குன்றனர் என்ற புலவர் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று கூறியதை அன்னை இந்திராகாந்தி ரஷியாவில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசும்போது குறிப்பிட்டார். அதையே நேரு டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற தனது நூலில் குறிப்பிட்டார். மாணவர்களாகிய ஞிங்கள் உங்கள் கவனத்தை திசை திருப்பிச் செல்லும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். ஞிங்கள் உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி வாழக்கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வல்லுநர்களாக மாற முடியும்.

உலகம் முழுவதும் உங்கள் திறமைகளை அறிவுக்கூர்மையை பயன்படுத்த நாடுகள் தயாராக உள்ளன. உலகில் உள்ள 193 நாடுகளில் 151 நாடுகள் உலக வர்த்தக அமைப்பில் கையெழுத்திட்டுள்ளன. இதன்மூலம் எந்த நாடும் எந்த நாட்டிலும் வாணிபம் செய்யலாம்.

பணத்தை வங்கியில் போடலாம். உங்கள் திறமையை 151 நாடுகளில் காட்டி முன்னேற முடியும். டெக்னாலஜிக்கு எல்லை கிடையாது. இந்திய மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களாக உள்ளனர். இந்தியாவிலும், சைனாவிலும் தான் மனித வலம் கொட்டிக்கிடக்கிறது. எனவேதான் இங்கிருந்து ஆட்களை வெளிநாடுகளுக்கு அழைத்துப்போகின்றன.

1995_ம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பு உருவானது. இன்டர்நெட் உலகில் வாழ்கிறீர்கள். சந்தையில் எது தேவைப்படுகிறதோ அதை உருவாக்குங்கள். வெளிநாட்டவர் இங்கே முதலீடு செய்கிறார்கள்.

உங்களுக்கு இங்கேயே நிறைய வாய்ப்புள்ளது. இப்போது வந்தது போல் பொருளாதாரப் பாதிப்பு சில துறைகளில் வரலாம். ஐ.டி. போல் நமது நாட்டில் இது அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நேருவின் பொருளாதாரக் கொள்கையும், காந்தீயக்கொள்கையும் தான் உலகில் நிலைத்து நிற்கும் சக்தி வாய்ந்தவை. நமது பொருளாதாரம் நல்ல ஸ்திரத்தன்மையோடு விளங்குகிறது. உள்ள இருப்பையும் சேர்த்தால் பல லட்சம் கோடி இருப்பு ஆதாரம் உள்ளது. நமது ரிசர்வ் வங்கி சட்டங்கள் பாதுகாப்பானவை.

இப்போதுதான் இதுபோல் (ஆர்பிஐ) நாமும் செய்யலாமா என்று அமெரிக்கா ஆய்வுசெய்கிறது. மிகப்பெரிய கம்பெனிகளுக்குத்தான் ரிஸ்க் அதிகம். நமது பொருளாதாரம் ஒரு மிக்ஸ்டு எக்கனாமி. இப்போதெல்லாம் எம்.பி.ஏ. வகுப்புகளில் யோகா, பகவத்கீதை போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது. எனவே உலகமயமாதலில் உங்கள் பங்கு இந்த நாட்டிற்கு பயன்படுவதாக இருக்கட்டும் என்றார்.

விழா நிகழ்ச்சிகளை ராஜேஸ்சர்மா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரா.யவனராணி, டாக்டர் சக்திவேல் ராணி செய்திருந்தனர்.

Thursday, August 14, 2008

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்!

இந்திய விடுதலைக்கு சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர் களிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது.

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் (இல்லஸ்டிரேட் வீக்லி 29.12.1975)

ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கு முன்பாக, இந்தியாவை ஆண்டவர்கள் முகலாய முஸ்லிம் மன்னர்கள். ஒளரங்கசீப் அவர்கள் தான் அகண்ட பாரதத்தை உருவாக்கி யவர். இன்றைய ஆப்கான், பாகிஸ் தான், பங்களாதேஷ் மற்றும் இன்றைய இந்தியாவில் காஷ்மீர் முதல் மதுரை வரையிலும் அவர் ஆட்சி நடந்தது. அவருக்குப் பின்னால் முகலாய பேரரசு பலவீனம் அடைந் தது. அதன் வீழ்ச்சிதான் ஆங்கிலேயர் கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர் கள், போர்ச்சுகீசியர்கள் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்தனர். இதில் 95 சதவீத இந்தியாவை ஆக்கிரமித்த வர்கள் ஆங்கிலேயர்கள். இவர்கள் அனைவருக்கும் எதிராக வீரம் செறிந்த போர்களை முதலில் தொடங்கியவர்கள் முஸ்லிம்களே! அவர்களில் சிலரைப் பற்றிய சிறு குறிப்புகளை துணுக்குகளாக வாசகர் களுக்கு வழங்குகிறோம்.
-ஆசிரியர், மக்கள் உரிமை வார இதழ், சென்னை.


குஞ்சாலி மரைக்காயர்கள்
போர்ச்சுகீசியர்கள்தான் முதன் முதலில் இந்தியாவை நோக்கி படை யெடுத்தவர்கள். அவர்கள் கேரளாவின் கடலோரப் பகுதிகளை கடற்படையுடன் முற்றுகையிட்ட போது, கேரளாவின் பகுதிகளை ஆட்சி செய்து வந்த குஞ்சாலி மரைக்காயர்கள்தான் அவர்களை படு தோல்வி அடையச் செய்தனர். முதலாம் குஞ்சாலி மரைக்காயர், இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் என தலைமுறை யாக தொடர்ந்த முதல் விடுதலைப் போரில் அனைவரும் தங்கள் இன்னுயிர் களை நீத்தனர். 16ஆம் நூற்றாண்டி லேயே விடுதலை தீபத்தை ஏற்றிவைத்து முதலில் உயிர்த்தியாகத்தை அர்ப்பணம் செய்தவர்கள் இவர்களே.

சிராஜுத் தௌலா

17ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பிளாசி என்ற இடத்தில் கடும் போர் நடத்தி ஆங்கிலேயர்களை திணறடித்தவர் சிராஜுத் தௌலா. சூழ்ச்சிகள் மூலம் துரோகிகளின் துணையுடன் சிராஜுத் தௌலா கைது செய்யப்பட்டார். அவரைப் பணியவைக்க ஆங்கிலேயர் கள் எடுத்த முயற்சி பலிக்கவில்லை. அந்த மாவீரனை கல்கத்தா துறைமுகத் தில் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டு கொன்றனர்.

மருதநாயகம்

பிரெஞ்சுக்காரர்கள் படையில் சாதாரண வீரனாக இருந்து தம் திறமைகளால் படைத் தளபதியானவர் மருதநாயகம். இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்ட யூசுப்கான் என்ற அடையாளத் துடன் பின்னாளில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரப்போர் புரிந்தார். நவீன ஆயுதங்களுடன் கூடிய ஆங்கிலப் படை மருதநாயகத்தின் வீரத்தின் முன் பலமுறை மண்டியிட்டது. அந்த மாவீரன் பிராமணன் ஒருவனின் காட்டிக் கொடுக்கும் சூழ்ச்சியால் ஆங்கிலேயர் களால் கைது செய்யப்பட்டு 15.10.1764ல் தூக்கிலிடப்பட்டார். அவரது உடலை பல பாகங்களாக வெட்டி ஆங்கிலேயர்கள் பல்வேறு இடங்களில் புதைத்தனர். இறந்த பிறகும் அவரது உடலைக் கண்டு ஆங்கிலேய தளபதிகள் குலைநடுங்கிய தையே இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

ஹைதர் அலி
17ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் விடுதலை அதிர்வுகளை முதலில் தொடங்கியவர் ஹைதர் அலி அவர்கள்தான். அவர் நடத்திய விடுதலைப் போர் 'முதலாம் கர்நாடகப் போர்' என வர்ணிக்கப் படுகிறது. ஆங்கிலேயர்களை நாலா புறமும் திணறடித்த ஹைதர் அலி இறுதியில் கொல்லப்படுகிறார். அவர் வழியிலேயே அவர் மகன் திப்பு சுல்தான் விடுதலைப் போரை தொடர்ந்து நடத்தினார்.

திப்பு சுல்தான்
'பல நாள் நாயாக வாழ்வதை விட, ஒரு நிமிடம் சிங்கமாக வாழ்ந்துவிட்டு சாவது மேல்' என கர்ஜித்த மாவீரன் திப்பு சுல்தான். ஸ்ரீரங்கப் பட்டினத்தை தலைநகராகக் கொண்டு கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா என தென்னிந்தி யாவின் சரிபாதி பகுதிகளை தன் சாம்ராஜ்யத்தில் இணைத்தார். இவர்தான் இந்தியாவில் மதுவிலக்கு கொள்கையை முதன் முதலில் அமல்படுத்தியவர். உலக ஏவுகணை தொழில்நுட்பத்தின் முன்னோடி என அப்துல் கலாம் போன்றவர்களே வியந்து போற்றும் விஞ்ஞானி. இந்தியாவை ஆண்ட மன்னர்களில் தனது அரண் மனையில் பிரம்மாண்ட நூலகத்தை வைத்திருந்த ஒரே மன்னனும் திப்பு சுல்தான் தான்.

ஆங்கிலேயர்களை வீழ்த்த அவர் களின் படைகளை ஐரோப்பாவில் குலைநடுங்கச் செய்த பிரெஞ்ச் மன்னர் நெப்போலியனுடனும் ராணுவ ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்த ராஜதந்திரியும் கூட. இந்துக்களின் உரிமைகளைப் பெரிதும் மதித்த பண்பாளர். இவரது வீர வாள் சுழலும் போதெல்லாம் ஆங்கி லேயர்களின் துப்பாக்கிகள் வீழ்ந்தன. இவரது குதிரைப் படைகள் முன்னேறும் போதெல்லாம் ஆங்கிலேயர்களின் பீரங்கிகள் பின்வாங்கின. இறுதியில் காட்டிக் கொடுக்கும் துரோகிகளால் திப்பு கொல்லப்பட்டார். ஆனால் வரலாற்றில் இன்றும் எழுந்து நிற்கிறார் தியாகியாக! அவர் 4.5.1799 அன்று கொல்லப்பட்டார்.

திப்புவின் வாரிசுகள் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்ட னர். அவர்கள் தங்களது தாத்தா ஹைதர் அலி, தந்தை திப்புவின் வழியில் சிறை வைக்கப்பட்ட சூழலிலும் புரட்சியில் ஈடுபட்டு ஆங்கிலேய தளபதிகளையும், சிப்பாய்களையும் கோட்டைக்குள் கொன்றனர். இது 1806லிஆம் ஆண்டு நடைபெற்றது. இது வேலூர் புரட்சி என அழைக்கப்படுகிறது. இதில் திப்புவின் வாரிசுகள் அனைவரும் கைது செய்யப்பட்டு பீரங்கிகளால் துளைக்கப்பட்டு ஷஹீதுகளாய் வீழ்ந்தார் கள் வேலூரில். அவர்களது ரத்தம் வேலூரின் கோட்டையிலும், சுற்றி ஓடும் அகழியிலும் கொட்டிக் கிடக்கிறது.

இரண்டாம் பகதூர்ஷா
1857ல் நாடு தழுவிய புரட்சி ஆங்கி லேயர்களுக்கு எதிராகக் கிளம்பியது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருங்கி ணைந்து வீரப்போரை தொடங்கினர். ஜான்ஸி ராணி லெட்சுமிபாய் போன்ற குறுநில மன்னர்களெல்லாம் ''எங்கள் இந்தியாவின் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாதான்'' என பிரகடனம் செய்து புரட்சியில் குதித்தனர். இதுதான் ''சிப்பாய் கலகம்'' என ஆங்கிலேயர்களாலும், ''முதல் இந்திய சுதந்திரப் போர்'' என இந்தியர்களாலும் போற்றப்படுகிறது. இதில் டெல்லியில் மட்டும் 27 ஆயிரம் முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிர் துறந்த னர். இறுதியில் புரட்சி ஒடுக்கப்பட்டு மன்னர் பகதூர்ஷா நாடு கடத்தப்பட்டார். பர்மாவின் ரங்கூன் சிறையில் மனைவி ஜீனத் மஹலுடன் அடைக்கப்பட்டு உயிர் துறந்தார். நேதாஜி அவர்கள் பர்மா வந்ததும், பேரரசர் பகதூர்ஷாவின் கல்லறைக்குச் சென்று தன் அன்பை வெளிப்படுத்தினார். மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களும் பர்மா சென்றபோது இவரது கல்லறைக்கு சென்று தன் மரியாதையை வெளிப்படுத்தினார். பாபரில் தொடங்கிய முகலாய பேரரசு இரண்டாம் பகதூர்ஷாவுடன் நிறைவுற்றது.

ஜான்சி ராணி லெட்சுமிபாய்
ஜான்சி ராணி லெட்சுமிபாய் விடுதலைப் போரில் பங்கெடுத்தார். இன்றைய உ.பி. மற்றும் ம.பி. மாநிலங் களின் சில பகுதிகள் இவரது ஆட்சியில் இருந்தது. இவரது படைத் தளபதி காஸாகான் என்பவர்தான் ஆங்கிலேயர்களை வீழ்த்தி கோட்டை யைக் கைப்பற்றி னார். ஜான்சி ராணியை ஆங்கிலேய தளபதி கேப்டன் கென் என்பவன் கொல்ல முயன்றபோது, அவனை வீழ்த்தி ஜான்சி ராணியைக் காப்பாற்றியவர் பக்ஷீஸ் அலி என்பவரா வார். ஜான்சி ராணியை ஆங்கிலேயர்கள் தாக்கியபோது, அவர்களுக்கு கடும் தோல்வியைக் கொடுத்து தன்னுயிரை ஈத்தவர் குலாம் கவுஸ்கான் என்பவ ராவார்.

முதல் இந்திய இடைக்கால அரசு

1915ல் ஆப்கானிஸ்தானில் ஆங்கி லேயப் படையை முஸ்லிம்கள் தோற் கடித்தனர். ஆப்கானிஸ்தானில் இந்தியா வுக்கு வெளியே இந்தியாவுக்கான முதல் இந்திய சுதந்திர அரசை தற்காலிகமாக அமைத்தவர்கள் முஸ்லிம்கள்தான். முதல் பிரதமராக இருந்தவர் பரக்கத்துல் லாஹ், உள்துறை அமைச்ச ராக இருந்தவர் உபைதுல்லாஹ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பத்ருதீன் தையாப்ஜி

இந்தியாவின் இன்றைய மூவர்ணக் கொடியை உருவாக்கியவர் ஒரு முஸ்லிம். அவர் பெயர் பத்ருதீன் தையாப்ஜி. இவர் 1902ல் பம்பாய் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர்தான் ஆர்எஸ்எஸ்காரர்கள் மதிக்கும் பால கங்காதர திலகரை விடுதலை செய்தவர். இவரது மனைவி பீபி ரஹ்மத்லிஉன்லிநபா என்பவர் இந்திய தேசிய மகளிர் சங்கத்தை உருவாக்கினார். இதுதான் இந்தியாவில் உருவான முதல் மகளிர் மேம்பாட்டுக்கான அமைப்பாகும். பத்ருதீன் தயாப்ஜியை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் ஒரு தெருக் கோடிக்கு கூட அவர் பெயர் சூட்டப்பட வில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.

காங்கிரஸில் முஸ்லிம்கள்

காங்கிரஸின் முதல் தலைவராக சைமன் என்ற ஆங்கிலேயர் இருந்தார். ஆங்கிலேயர்களில் சில நல்லவர்கள் தான் காங்கிரஸ் கட்சியைத் துவக்கினார். இரண்டாவது தலைவராக ரஹ்மத்துல் லாஹ் சயானி என்பவரும், மூன்றாவது தலைவராக பத்ருதீன் தையாப்ஜியும் பணியாற்றினார்கள். அப்போது காந்தி இந்தியாவுக்கே வரவில்லை, அவர் அப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தி 1915லில்தான் இந்தியாவுக்கு வருகை தந்தார். 1915ல் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக மௌலானா முகம்மது அலி தேர்ந் தெடுக்கப்பட்டார். 1930ல் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் அவர்தான் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார்.

1935ல் காங்கிரஸின் தலைவராக அபுல்கலாம் ஆசாத் தேர்ந்தெடுக்கப் பட்டார். தனது 'அல்லிஹிலால்' என்ற இதழ் மூலம் முஸ்லிம்களிடம் விடுதலைத் தீயை மூட்டினார். முஹம்மது அலி ஜின்னாவும் ஒருமுறை காங்கிரஸ் தலைவராக பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் பெண்கள்

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம் பெண்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இரண்டாம் பகதூர்ஷா ஜாபரின் மனைவி ஜீனத் மஹல், திப்பு வின் குடும்பப் பெண்கள். பேகம் ஹஜ்ரத் மஹல், அலி சகோதரர்களின் தாயார் பீபியம்மாள் எனப்படும் ஸாஹிபா பானு ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.



அலி சகோதரர்கள்

கிலாபத் இயக்கத்திலும் ஒத்துழை யாமை இயக்கத்திலும் பங்கெடுத்த மௌலானா முகம்மது அலி மற்றும் சௌகத் அலி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது முகம்மது அலியின் மனைவி பேகம் சாஹிபாவும், அவரது தாயார் ஸாஸியா பானுவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அந்தக் காலத்திலேயே விடுதலைப் போருக்கு ரூ.30 லட்சத்தை நிதியாகத் தந்தனர். என் பிள்ளைகள் சிறையில் இருக்கும்போது, ஒருவேளை அவர்கள் ஆங்கிலேயர் களிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலை யானால், அவர்களது குரல் வளையை நானே நெறித்துக் கொல்வேன் என கர்ஜித்தார் அவரின் தாயார் பீபியம்மாள்! அவரைப் போலவே அவர்களின் பிள்ளைகள் இரட்டைக் குழல் துப்பாக்கி களாக வீரத்தோடு களமாடினார்கள். இந்த வீரத்தாய் பீபியம்மாள்தான் காந்திஜிக்கு கதர் ஆடையைப் போர்த்தி கண்ணியப் படுத்தினார். (கதர் என்ற அரபுச் சொல்லுக்கு கண்ணியம் என்று அர்த்தம்). பின்னர் காந்தியால் கதர் இயக்கமாக தொடங்கப்பட்டு இன்றுவரை நீடிக்கிறது.

பகத்சிங்

மாவீரன் பகத்சிங்கிற்கு, காந்தி போன்றோர் 'தண்டனை தரவேண்டும்' என போலிக் கொள்கை பேசியபோது, பகத்சிங்கின் தூக்குத் தண்ட னையை எதிர்த்து நீதிமன்றத்தில் பல வழக்கறிஞர் கள் வாதாடினர். அதில் முக்கியமானவர் வழக்கறிஞர் ஆசிப் அலி என்பவராவார். இவரை ஆங்கில அரசு பல்வேறு காலக்கட்டங்களில் 13 ஆண்டுகள் சிறையில் அடைத்தது.

மதரஸாக்களின் சுதந்திர வேட்கை

சுதேசி இயக்கம் நடந்தபோது அந்நியப் பொருட்களை முஸ்லிம்கள் புறக்கணித்தனர். கதர் ஆடைகளையே அணிந்தனர். கதர் ஆடை உடுத்திய மணமக்களின் திருமணங்களுக்கு மட்டுமே முஸ்லிம் தலைவர்கள் வருகை தந்தனர். முஸ்லிம்கள் ஆங்கிலேய தயாரிப்புகளை தீயிலிட்டுக் கொளுத்தி னர். வேலூரில் மவ்லவி கலீலுர் ரஹ்மான் தலைமையில் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் மதரஸா வளாகத்தில் அந்நிய துணிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மதரஸாக் களிலும் சுதந்திர வேட்கை வீறிட்டு பரவியது.

முஸ்லிம் வள்ளல்கள்

இதன் தொடர்ச்சியாக இந்தியர்களுக்கு என சுதேசி கப்பல் கம்பெனியை வ.உ.சிதம்பரனார் பிள்ளை தொடங்கிய போது, அந்தக் காலத்தில் ரூ.2 லட்சத்தை தந்து உதவியவர் ஹாஜி பக்கீர் முஹம்மது ராவுத்தர் என்பவராவார். கப்பல் கம்பெனி நஷ்டத்தில் இயங்கிய போது வ.உ.சி. அவர்களுக்கு யாகூப் சேட், உமர் கத்தாப், இப்ராகிம் செய்யது ராவுத்தர், அஹமது சாஹிப், முகம்மது சுலைமான் ஆகியோர் தொடர்ந்து பல லட்சங்களை வாரி வழங்கினர். வ.உ.சிதம்பரனார் அவர்கள் 1912ல் வறுமையில் வாடியபோது அவருக்கு உதவிகளை செய்து மகிழ்ந்த வர் அகமது மீரான் என்பவராவார். வ.உ.சி.யின் விடுதலைக்காக வாதாடிய ஒருவரும் முஸ்லிம் வழக்கறிஞர்.

ஒத்துழையாமை இயக்கத்தில் முஸ்லிம்கள்

காந்தி தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் நடந்தபோது நாடெங்கும் முஸ்லிம்கள் களத்தில் குதித்தனர். 1920ல் காயிதே மில்லத் போன்றோர் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு போராட்டத்தில் குதித்தனர். ஆங்கிலக் கல்விக்கூடங்களுக்கு தங்கள் பிள்ளை களை அனுப்பாமல் ''ஆங்கிலம் படிப்பது ஹராம்'' என அறிஞர்கள் ஃபத்வா வழங்கினர்.

ஜாலியன் வாலாபாக்

இன்றைய தடா, பொடா சட்டத்திற்கு முன்னோடியான ரௌலட் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வெடித்தது. அப்போது பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக்கில் பெரும் கூட்டம் கூடியது. அந்த மைதானத்தில் ஒருவழிப் பாதை மட்டுமே உண்டு. அங்கே நுழைந்த ஜெனரல் டயர் என்ற ஆங்கி லேய தளபதியின் தலைமையிலான படை சுற்றி வளைத்து 1650 தோட்டாக் களை சரமாரியாகப் பாய்ச்சியது. அதில் சுமார் 1000 பேர் இறந்ததாக விசாரணைக் கமிஷன் கூறியது. அதில் சரிபாதிக்கும் மேலானோர் முஸ்லிம்கள் என்பதை அங்கிருக்கும் கல்லறைகள் சாட்சியாக கூறிக் கொண்டிருக்கின்றன.

வள்ளல் ஜமால் முஹம்மது

காந்தி அவர்கள் தமிழகம் வருகை தந்து விடுதலைப் போராட்டத்திற்கும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான பிரச்சாரத் திற்கும் நிதி சேர்க்க முயன்றார். அப்போது வெற்றுக் காசோலையை காந்தியிடம் கொடுத்து நீங்கள் விரும்பும் தொகையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என காந்திக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தவர் ஜமால் முஹம்மது. அவரது பெயரால் தான் இன்று திருச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரி விளங்குகிறது.

காந்தியின் கதர் துணி பிரச்சாரத்திற்கு வலுவூட்ட காஜா மியான் ராவுத்தர் 50 ஆயிரம் ரூபாயில் கதர் நெசவு ஆலையை நிறுவினார். அவரது பெயர் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரிக்குள் இருக்கும் விடுதிக்கு சூட்டப்பட்டிருக்கிறது.

கேரள மாப்பிள்ளைமார்கள்

1921ல் கேரளாவில் மாப்பிள்ளை மார்கள் நடத்திய போராட்டம் வரலாற்றில் ஒரு மைல்கல். அந்தப் புரட்சியால் ஆங்கிலேயப் படைகள் சிதறி தெறித்து புறமுதுகிட்டனர். அந்தப் புரட்சி ஒடுக்கப்பட்டு மாப்பிள்ளைமார்களில் பலர் கைது செய்யப்பட்டனர். ஏராளமானோர் சன்னல்கள் இல்லாத கூட்ஸ் ரயிலில் அடைக்கப்பட்டு கோவைக்கு அனுப்பப் பட்டனர். கோவை ரயில் நிலையம் வந்ததும், கூட்ஸ் வண்டி திறக்கப்பட்டது. அதில் மூச்சுத் திணறி 65 முஸ்லிம் வீரர்கள் தம் இன்னுயிர் நீத்தனர். அவர்களது ஜனாஸாக்கள் கோவை ரயில் நிலையம் அருகில் புதைக்கப்பட்டன. இப்போதும் கோவை ரயில் நிலையத்திற்கு சென்று பார்த்தால் அருகில் ஒரு பள்ளிவாசல் இருக்கும். அங்கிருக்கும் அம்மண்ணறைகள் ஒன்றும் அவர்களின் தியாகத்தை சாட்சி கூறிக் கொண்டிருக்கின்றன.


தொகுப்பு: எம். தமிமுன் அன்சாரி, ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ்

Saturday, August 9, 2008

Tuesday, August 5, 2008

Launch of Online Registration for Indian Nationals in Kuwait

The Embassy of India announces the launch of Online Registration for Indian Nationals based in Kuwait with effect from August 15, 2008. All Indian nationals are encouraged to visit the Embassy website http://indembkwt.org/onlineregister.php in this regard and register themselves on the Online Registration Form.

Saturday, August 2, 2008

அராபிய இலக்கியங்களில் இந்தியா

அராபிய இலக்கியங்களில் இந்தியா




Webdunia









- எம்.எஸ்.அஷ்ரஃப்

சிற்றிதழ் : அட்சரம் (செப். 03)
ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்
தனி இதழ் : ரூ.25/-

பல நூற்றாண்டுகளாக, கலாச்சார, கல்வி மற்றும் பொருளாதார உறவுகள் அராபியர்களுக்கும் இந்தியாவிற்குமிடையே வளர்ந்து வந்துள்ளன. அபாஸித் காலத்தில் இந்திய மருத்துவ, வானியல், தத்துவ நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டன. இபின் நாதிம் தனது நூலான அல்-ஃபெஹ்ரிஸ்ட்டில் அபாஸித் அமைச்சர் யாஹியா பின் காலித் அல்-பர்மாகி, இந்திய விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டு, ஒரு குழுவை இந்தியாவிற்கு அனுப்பி அங்கிருந்து மூலிகைகளையும், வாசனைத் திரவியங்களையும், இந்திய மதங்களைப் பற்றிய விவரங்களையும் சேகரித்து வரச் செய்ததாக எழுதுகிறார். இக்குழுவின் தலைவர் திரும்பி வந்ததும் "இந்தியாவின் மதங்களும் அதன் பிரிவுகளும்" என்றொரு நூலையும் எழுதியிருக்கிறார். மேலும் இபில் எல்-நாதிம் இந்தியாவிலிருந்து அரபியில் மொழி பெயர்க்கப்பட்ட 51 நூல்களைப் பட்டியலிடுகிறார். இவற்றில் விஷயங்களைப் பற்றிய புத்தகமும், பிரசவ மருத்துவம் பற்றிய ஒரு நூலும், பாம்புகளைப் பற்றியும், பாம்பு விஷம், அதை முறிக்கும் மருந்துகள் பற்றி பல நூல்களும் உண்டு. பல்வகை நோய்களைப் பற்றியும் குறிப்பாக ஹிஸ்டீரியா மற்றும் மனநல நோய்களைப் பற்றியும் பல நூல்கள் உள்ளன.

பிற்காலத்தில் அராபிய உலகம் இந்தியாவின் மத நூல்களைப் பற்றி அறிந்து கொண்டது. அபு-சாலே பின் எல்-கபாலி (கி.பி.1026) மகாபாரதத்தின் ஒரு பகுதியை மொழி பெயர்த்திருக்கிறார். சாணக்கியரின் எழுத்துக்களும், இன்னும் பல தர்க்க சாஸ்திர, மந்திர நூல்களும் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

இடைக்காலத்தில் அபு-ரேஹன் அல் பெரூனி என்ற மாபெரும் அராபிய அறிஞர் 11-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்து இந்திய விஞ்ஞானத்தைக் கற்றிருக்கிறார். "இந்தியாவின் மதங்களை அறிதல்" என்ற செறிவானதும், முழுமையானதுமான ஒரு நூலை அவர் இயற்றியுள்ளார். இந்நூலின் 18 அத்தியாயங்களில் இந்தியாவின் மதங்கள், இலக்கியம், புவியியல், வரலாறு, சோதிடம், வானியல் மற்றும் இந்திய மரபுகளைப் பற்றியும் சட்டங்களைப் பற்றியும் விளக்கியுள்ளார்.

அல்-பெரூனி இந்தியாவில் கழித்த காலத்தில் அதிகம் சோதிட அறிவை கற்றுக் கொள்வதிலேயே செலவழித்திருக்கிறார்.இவர் இந்தியாவிலிருந்து திரும்பியதும் ஆர்வமுள்ள பலருக்கு சோதிடக்கணக்குகளை பயிற்றுவித்திருக்கிறார். அவர்களும் இவற்றையெல்லாம் அவருக்கு சொல்லிக் கொடுத்த அறிஞர்களின் பெயர்களைக் கூறுமாறு கேட்டிருக்கின்றனர்.

சமஸ்கிருதத்தை முழுதாகக்கற்றறிந்த அல்-பெரூனி, கபிலின் ஒரு நூலையும், பிரம்ம குப்தாவின் இரு நூல்களையும் அரபியில் மொழி பெயர்த்துள்ளார். இவர் யூக்ளிடெஸின் நூலை சமஸ்கிருதத்திலும் மொழி பெயர்த்துள்ளார். இவையன்றிஅல்-பெரூனி சூரியன், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் தூரங்களை கணக்கிடும் பழையதொரு கருவியைப் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரையும் வெளியிட்டிருக்கிறார். பிரசித்தி பெற்ற ஜெர்மானிய அறிஞர் ஜக்கோ, இந்தியப் பொருட்களைக் குறித்து -சோதிடம், கணிதம், மருத்துவம் போன்றவை - அல்-பெரூனி எழுதிய இருபத்திரெண்டு ஆய்வுக் கட்டுரைகளை பட்டியலிட்டுள்ளார்.

இந்திய அறிவியலின் பால் அவருக்கிருந்த அன்பினாலும்,பெருமதிப்பாலும், அவர் காலத்தைய இந்தியர்களை, தமது உலகத்தை மற்றோரும் அறிந்து கொள்ளும் வகையில் கதவுகளைத் திறந்து வைக்காமை குறித்து சாடுகிறார். தமது மூதாதையர்களின் ஞானத் தேடலைத் தொடரும் வகையில் அப்போதைய இந்தியர்களும் உலகம் முழுக்க பயணம் செய்ய அறிவுறுத்துகிறார்.

இந்திய விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டிருந்த ஒரே அராபிய அறிஞர் அல்-பெரூனி மட்டுமல்ல. மற்றுமொரு அராபிய யாத்ரீகர் இபின்-பதூதா (கி.பி.1304-1378) தனது 28 வருட பயணத்தில் 75000 மைல்களை கடந்திருக்கிறார். இபின்-பதூதா, முகமது-பின் துக்ளக்கின் (கி.பி.1325-1351) ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்து தனது "துஹ்ஃபத்அல் நூஸார்" என்ற நூலில் 100 பக்கங்களை இந்தியாவிற்காக ஒதுக்கியிருக்கிறார்.

இபின்-பதூதாவின் மேல் கொண்ட மதிப்பால் துக்ளக் அவரை தில்லியின் நீதிபதியாக நியமித்திருக்கிறார்.

இப்பதவியை சிறிதுகாலம் வகித்த பின்பு, அரசர் அவரது தலைமையில் ஒரு குழுவை சீனாவிற்கு அனுப்பியிருக்கிறார். சில தவிர்க்க முடியாத காரணங்களினால் இபின் பதூதாவிற்கு அப்போது சீனா சென்றடைய முடியாவிட்டாலும், பிறகு தனது சொந்த பயணத்தில் சீனாவிற்கு சென்றிருக்கிறார்.

இபின் பதூதா டில்லி அற்புதமானதொரு நகரமாகவும், இந்தியாவில் மட்டுமல்ல, இஸ்லாமிய உலகிலேயே மிகப்பெரிய நகரமென்றும் வர்ணிக்கிறார். இபின் பதூதா தில்லிக்கு அருகில் நான்கு அண்டை நகரங்கள் அமைந்திருப்பதாகவும், அதில் ஒன்று இஸ்லாமியா ஆட்சி வருவதற்கு முன்னரே இருந்துவரும் பழைய தில்லி என்றும், மற்றொன்று துக்ளக் நிர்மானித்த துக்ளகாபாத் என்றும் குறிப்பிடுகிறார்.

அராபிய இலக்கியங்களில் இந்தியா

இபின் பதூதா இந்தியாவை வர்ணிக்கும்போது, இந்திய பழக்கவழக்கங்களையும், மரபுகளையும் சேர்த்தே விளக்குகிறார். இந்தியர்களுக்கு தாமரை மேலிருக்கும் பெரு மதிப்பைப் பற்றிக் கூறுகிறார்: "இந்தியர்கள் இந்த மலர் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர். இந்தியர் ஒருவர் தனது நண்பரைப் பார்க்கச் செல்லும்போது தாமரை இலைகள் ஐந்தை பரிசாகத் தருகிறார். நண்பருக்கு இதில் மொத்த உலகத்தையே பரிசாக அளித்துவிட்டதைப் போல பெருமகிழச்சி ஏற்படுகிறது. பொன்னையும், வெள்ளியையும் விட இதுவே மிக உயர்ந்த பரிசாக இருக்கிறது. "இபின் பதூதா இந்திய பழக்க வழக்கங்களையும் மரபுகளையும் கூர்ந்து கவனித்தவராகையால், எந்தவொரு இந்தியனையும் வெளித்தோற்றத்தை வைத்தே அவர்களது மத, கலாச்சாரப் பிரிவுகளைப் பற்றி சொல்லிவிட முடியும் என்று எழுதுகிறார். இந்திய மரபுகளை நன்றாக அறிந்து கொண்டால், முஸ்லீமிற்கும், முஸ்லீம் அல்லாதவர்களுக்குமிடையேயான வேறுபாடுகளை சுலபமாக சொல்லிவிடலாம். முஸ்லீம் அல்லாத பெண்கள் தமது காதுகளை குத்திக்கொண்டு காதணிகள் அணிந்து கொள்கையில், முஸ்லீம் பெண்கள் காது குத்திக் கொள்வதேயில்லை. இபின்-பதூதாவின் கவனத்தை பாதித்த அந்நாளைய இந்திய வழக்கம், உடன் கட்டை ஏறுதல். கணவனின் எரியும் சிதையில் மனைவி உயிருடன் தள்ளப்படுவதை தனது நூலில் அடிக்கடி குறிப்பிடுகிறார்.

இந்தியப் பேரரசர் துக்ளக்கின் விருந்தோண்மையும், மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதில் அவருக்கிருந்த மன உறுதியும் இபின்பதூதாவை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

சிந்து மாகாணம் ஒருமுறை கடும் வறட்சியில் தவித்து, முன்னெப்போதுமில்லாத வகையில் விலைவாசிகள் உயர்ந்ததில், முகமது-பின்-துக்ளக் தனது கஜானாவிலிருந்து நேரடியாகவே நிதி எடுத்து ஆறுமாதங்களுக்கு அம்மக்களுக்கு வழங்கியதாக அவர் குறிப்பிடுகிறார். துக்ளக் தனது தலைநகரை மாற்றியதற்கான விவேகமான காரணங்களையும் அவர் விளக்குகிறார்.

இபின் பதூதாவின் நூலில் இயற்கையின் பல்வேறு கொடைகளை, மரங்களை, பூக்களை, கனிகளை மிக விரிவாக படம் பிடித்துக் காட்டுகிறார். தான் சென்ற இடங்களைத் தத்ரூபமாக வர்ணிக்கிறார். இந்தியாவின் அறிவுக்களஞ்சியங்களில் அபார ஆர்வம் கொண்ட மற்றொருவர் மாபெரும் அபாஸிட் எழுத்தாளர் அல்-கஹேத் ஆகும். இவர் தனது அல்-பாயன் மற்றும் அல்-டேமியான் என்ற நூல்களில் இந்திய தத்துவ ஞானிகளைப் பற்றியும், இந்தியர்களின் அறிவுக் கூர்மையும், தீரத்தையும் புகழ்கிறார். "அறிவிற்கும், ஞானத்திற்கும், தீட்சண்யத்திற்கும் இந்தியாவே ஆதார ஊற்று" என்கிறார்.

மற்றும் அல்-மவூதி (கி.பி.956) என்பவர் சிந்து, குஜராத், மகாராஷ்டிரா பகுதிகளில் பயணம் செய்து எழுதிய நூலில் உலகின் மிகச்சிறந்த ஏழு இனங்களில் ஒன்றாக இந்தியர்களை மதிப்பிடுகிறார். இதே போல் இந்தியாவில் பயணம் செய்து அதன் வியத்தகு பெருமைகளை எழுதியிருக்கும் பிற அராபிய எழுத்தாளர்களாக பின் அல்-ஃபக்கிஹ் அல்-ஹம்தானி (பத்தாம் நூற்றாண்டு அல்-ஷெரீஃப் அல்-இட்ரிஸி (கி.பி.1099-1153) அல்-காஸெளனி (கி.பி.1203-1283), அல்-நூரி (கி.பி.1278-1332) மற்றும் அல்-கலாக் சந்தி (கி.பி.1355-1488) போன்றோரும் ஆவர்.

அராபிய இலக்கியங்களில் இந்தியா

எல்லா நூற்றாண்டுகளிலும் இந்தியா அராபிய இலக்கியங்களில் இடம் பெற்று வந்திருப்பினும், அபாஸிட் காலத்தில் இந்தியாவிற்கும், அராபிய நாகரிகத்திற்கும் நெருக்கமான தொடர்பும், உறவும் இருந்திருக்கிறது. காலங்கள் கடந்து, நமது ஞாபகங்கள் கலைந்த நிலையில், பண்டைய அராபிய இலக்கியத்தில் இடம் பெற்றிருந்த இந்தியத் தொடர்புகளை இதுவரை மீள்பார்வை பார்க்க வேண்டியிருந்தது.

நவீன இந்தியா, தனது சின்னங்களுடனும், ஒப்பற்ற தலைவர்களுடனும் நவீன அராபிய இலக்கியத்திலும் அரசியல், சமுதாய எழுத்துகளிலும் பெரும் பங்கு வகித்து வருகிறது. தாகூரும், காந்தியும், நேருவும், அராபிய இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக தாகூர் வெறும் கவிஞராகவும், ஓவியராகவும், தத்துவாசிரியராகவும், ஞானியாகவும் மட்டுமின்றி எப்போதும் மங்காத ஞானஜோதியாகவே அறியப்படுகிறார்.

தாகூரின் பெரும்பான்மையான கவிதைகளும், நாடகங்களும் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டு, குறிப்பாக எகிப்தியர்களால் ஆழ்ந்து பயிலப்பட்டு வருகிறது, பேடி ஹகி "தாகூர் தொகுப்பு" (பெய்ரூட், 1955) வையும், "பறித்த கனிகள்" மற்றும் "இளவேனில்" (டமாஸ்கஸ், 1965) ஐயும் மொழி பெயர்த்துள்ளனர்.

முகமது பதிர் எல்-தின் கலீல், முகமது தாகிர் கல்-கபாலவி, கலீஸ் கிர்கிஸ் கலில், வேடி அல்-புஸ்தானி போன்றவர்கள் தாகூரின் படைப்புகளை மொழி பெயர்த்துள்ளனர். முகமது மெஹ்தி ஆலம், அப்துல் ரகுமான் சித்திக், ஷிர்கி அய்யாது போன்றோர் தாகூரின் படைப்புகளை திறனாய்வு செய்துள்ளனர்.

இந்திய செவ்வியல் காப்பியங்கள் அரபியில் மொழி பெயர்த்தவர்கள் முக்கியமான பங்களிப்பை ஆற்றியவர் லெபனான் தேசத்து கவிஞர் வேடி அல்-புஸ்தானி ஆவார். இவர் பகவத்கீதையின் சில பகுதிகளை மட்டுமின்றி ராமாயணத்திலிருந்தும், பல பகுதிகளை மொழி பெயர்த்திருக்கிறார். மொழி பெயர்ப்பில் இவர் பயன்படுத்திய உத்திகளும், இயல்பான உணர்ச்சிகரமான, சரளமான நடையும் பலருக்கு முன்னுதாரணமாக அமைந்தது. எகிப்திய எழுத்தாளர் ஆனிஸ் மன்சூர் கலைக்களஞ்சியமாக படைத்த தனது உலகைச் சுற்றி 200 நாட்கள், நூலில் இந்தியாவிற்கு 154 பக்கங்களை ஒதுக்கியுள்ளார்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலங்களில், எகிப்திய எழுத்தாளர்களை மிகவும் பாதித்த இந்தியத் தலைவராக மகாத்மா காந்தியை கூறலாம். அராபிய இலக்கியத்தில் அவர் சகிப்புத் தன்மைக்கும், அன்பிற்கும், அமைதிக்கும் சின்னமாக விளங்குகிறார். அராபிய எழுத்தாளர்களால் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் அவரது வாழ்க்கையைப் பற்றியும், அவரது போராட்டத்தைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளன.


http://tamil.webdunia.com/miscellaneous/literature/magazine/0705/11/1070511017_1.htm

Friday, July 25, 2008

Saudi Arabian warships on maiden visit to India

Saudi Arabian warships on maiden visit to India

Signalling improvement in defence ties between the two countries, two Saudi Arabian naval warships will arrive in India on their maiden visit Monday, a Indian Navy official said here Friday.

"The Saudi Arabian ships have been visiting Pakistan. But it is the first time that the country's warships are coming to India," the navy official said.

The two warships will arrive July 28 at Mumbai on a four-day friendly port call.

'The visit by the Saudi Navy ships is a result of the Indian Ocean Naval Symposium organised by India recently. Saudi Arabia is an important country in the In
dian Ocean Rim and the port call is an indication how countries look at India in the emerging world scenario,' the official added.

Seventy-nine cadets of the Al Fahad Naval Academy will also be part of the entourage.

Saudi Arabia is considered a major ally of the US and most of its weapons platforms come from the West.

http://www.indiaenews.com/india/20080725/134452.htm

Saturday, July 19, 2008

FUTURE MUSLIMS OF INDIA

Dear brothers and sisters,

ASSALAM ALAIKUM




All these years I was using my influence over Muslims to support secular parties but betrayal changed my views. The betrayal of all the secular parties and all the ex-so-called secular politicians joining or supporting communal parties directly and indirectly, made me carry out a research in search of a permanent solution for the future of Muslims in India. Allahamdulliah, finally found the right solution. Read this letter closely and you will find wisdom in my explanation.




History of Muslims in India after Independence



After independence, no government till date has ever made any attempts to give rights to Muslims. During partition, Mohamed Ali Jinnah was alone on one side and on the other side all our Muslims leaders like Abdul Kalam Asad, Zakir Hussain, Fakrudeen Ali Ahmed, etc etc. stood hand in hand with Hindus as brothers. Jinnah as a single man achieved every thing but what did others who stood with Hindus achieve. Today we are able to see what they have achieved for us.




The population of Muslims on the date of partition was 10 crores. 3 crores left with Jinnah and are living with fundamental rights (especially religious rights). But 7 crores Muslims who stayed back in India are threatened & treated as 3rd class citizens. Secularism has gone with wind. Dr. Ambedkar a single man achieved 150 MP seats in the country of 9 crores schedule caste but our leaders with 7 crores Muslims, failed to achieve even a single seat and were ashamed of themselves. If we had contested under one banner, we would have won many seats, but only supported other parties which resulted in their winning and ending up with no Muslim MPs.




Shaikh Abdulla who stood hand-in-hand with Indians was arrested under National Security Act and kept in Kodaikanal Jail, (not even in Kashmir Jail). Hyderabad Nizam & Arcot Nawab stooped themselves to the Indian Military and submitted themselves. Only Sikhs & Gourkas were recruited in Defense leaving Muslims. Kerala Muslims were called revolutionist and were sidelined, Marathi Muslims were residing in slums, Bihar, UP, Gujrat Muslims were disabled through communal threatening. Muslims are still living under threatened shelter and have not raised their heads except in Kerala because Kerala Muslims are united and have all parties running after them during elections.




In 1985 after the assassination of Indira Gandhi, more than 3000 Sikhs were killed in Delhi riots. Sikh Akalidal continued their fight in court in spite of being only 2 crores, got compensation and put former minister PC Shukla & associates behind bars. In Biwandi, Meerut, Bagalpur, Bombay, Lucknow, Delhi, Surat, Coimbatore and other places, many 1000 Muslims were killed & looted but till date not a single person is punished.




Mahatma Gandhi was murdered by Brahmins
Indira Gandhi was murdered by Sikhs
Rajiv Gandhi was murdered by Tamils



These people today are patriots, but we, innocent and crime-less people are branded as national enemies and it is a pity that we are unable to ask even for our rights. I agree Pakistan is indulging in acts against Islam, but how are we connected. These parties are taking advantage of the situation and are punishing innocent Muslims who are no way connected with Pakistan.




Situation of Muslims Today




Muslims are being made weaker day by day. Better we unite before we become too weak even to talk. Some communal parties were only hand-full, had we united then, we could have stopped their growth, but we are trying to unite when they have gone miles away. Its still not late, let us unite at least now.




All the parties promise welfare for Muslims to get minority votes, but on their victory, stab us at the back. No one to support us in the assembly; the MLAs who promise us many things before elections, take decisions that best suits them, after elections. In spite of knowing all this we do not unite, form and vote for our own party. Most of our Muslim politicians beg for a seat from other parties and seats are given to us in of Muslim Majority constituency, as a favour. Actually it is not a favour, seats are given as only Muslims can win in these constituency.




We vote for a Muslim candidate irrespective of the party he belongs. During crises, such Muslim MLAs or MPs are unable to raise their voices in our support fearing to be removed from the party. What is the use of having such MLAs or MPs. Why should they be in a party that gives no respect or right to talk? Having such MLAs or NOT does not make any difference.




In all Muslim majority constituency, Muslim candidates are fielded by all the parties, not for our benefit, but for their own benefit as they know only a Muslim can win from these constituency. Why not all the Muslim leaders of such constituency join together to form a party (or) support one Muslim party?




My dear brothers, both the Central and State Government have suppressed & sidelined us. Inspite of this, some Muslims politicians are supporting the government. What for? For whose benefit ? Put your heart & mind together & think deeply, using your thinking power.




The Government or Policies may change, but the attitude of Government(s) towards Muslims will never change. The government will create problems within us and our own people will join such communal parties and will back-stab us. Such people are only handful, identify, boycott them and help in achieving our target & success.




Remedy
What is the remedy for this?

What is the remedy to come out of this false threat?

How to get back our lost rights?




We are 30 crore Muslims in India yet our representation in Parliament was never above 10. WHY?




If all the Muslims vote for one party, it will surely make a big difference, but we are divided among ourselves; supporting different parties and splitting our votes. Take the case of Sikhs (except for a few individuals) all of them vote for one party. If the Sikhs with only 2% can have so much influence, why are we with 20% crying? – Because we are not united; we are diluted; we are supporting 20 parties (1% each). Which ever party comes to power, we have just 1% representation. We should be ashamed of ourselves, being 20% of the population and having 1% representation. The whole world is laughing at us. The communal parties are trying their best keep Muslims disunited and we are succumbing to their plans.




TDP (Telugu Desam Party), Tirumal Congress, DMK, Akali Dal and many more parties had Congress and BJP licking their feet for support to form the government. Now these parties are imposing conditions on the government and are getting everything by threatening to withdraw support. TDP demanded the Govt. to have Bill Clinton visit Hyderabad and got it. All these parties are putting forward their demands and getting it. We can have them do the same to us? If we also had few MPs from our own party, we also could have done so much, demanded welfare for Muslims, viz security, social & legal rights, reservation, probing into atrocities against Muslims etc. etc….




In Tamil Nadu, many Muslims died at the hands of Hindu terrorist in the Coimbatore-blast case but no compensation was given but when few Hindus were injured during a communal violence, compensation was given to the injured. This partiality is because we do not have MLAs to voice our grievance or fight for our rights. On the other hand, Hindu MLAs fought for Hindus, demanded compensation, failing which they threatened to withdraw support & finally had the govt. grant Rs. 1 lakh to all Hindus injured in the violence.




We need a party of our own with large no. of MLAs & MPs, whose support will be necessary to form the government. The only answer is unity. We can extend support by placing few conditions for the benefit of our community. If we had our own party, we could have avoided all this torture Muslim are facing today. The ruling party would act fairly at least to keep our alliance.




What is the necessity to bear the burning torture, oppression etc……Is there no right solution or is there no one to show the right way. Taking out processions, protest march, challenging the Government etc., is waste of time and we will very soon be sidelined, rejected, ill-treated and disbanded.

Solution / Next course of action



We should get our rights and what is the best way for that? After days of thinking, survey, research and analyzing, the following is the conclusion that was arrived at: There are only 2 ways:




Intelligently Pen
War Sword



I have analyzed both the above options and the option of sword does not suit the present Indian condition. The Sikhs, who had the most sophisticated weapons in Asia failed. Now they have become clever and are using option no.1 - They have united, won many seats and have all the major parties running after them and are now able to achieve what they could not achieve by swords. Bal Thackeray inspite of having murdered many, Government is not able to touch him because he is using option no 1. - His Marati community united resulting in winning many seats and demanding everything in this world and getting it.




Other organizations are still using options no. 2 and are disappearing. Eg. Kashmir Liberation Front have been separated into many groups, BODA land, Nagaland, ULFA and many such organizations have become blunt and useless. The results are only causality and that is why these communal parties instigate us Muslims to choose option no.2. They like to wipe us out like they are doing to Kashmiris.




So the only answer is:- Options no. 1 - We should unite, identify a common party, get our Parliamentary & Assembly seats. When we get power, everything will be as per our wishes.




Our Strength in India.




In the 30 states of India, even if 5 Muslim MPs are selected from each state, India will have 30x5=150 Muslim MPs. Who is prepared to think about this & lead the way?




Tamil Nadu will lead the way




Let us first start in Tamil Nadu & show the way to other states, which will be an eye opener to them.

In Tamil Nadu, the Muslims organisations are with wrong attitude, unnecessary & false claim and are trying to achieve fame through useless method and being puppets of politicians of parties who are against us. There are so many Muslim parties in TN that causes splitting of votes and loosing. I will inshallah spare no efforts to make all our parties come under one umbrella.




Our Strength in Tamil Nadu




In Tamil Nadu about 60 assembly constituency consist of more than 80,000 Muslim voters, apart from this Nannilam (Quaide Millet Dist.) constituency which consists of 1.2 Lakh Muslims voters, but so far Muslims have never contested for assembly election from that constituency. There are 30 constituency with more than 1 lakh Muslim voters, some of them are Nannilam, Kadaladi, Coimbatore west, and Madurai central, Trichy, Salem, Aravakurachi, Gudiyatam, Ranipet, Arcot and Madras Beach, Chepauk, Thousand light, Triplicane, Egmore, Madras Park, Royapuram, Dindugul, Nattham, Periyakulam, Melapalayam, Kayalpatinam.




Further, there are about 30 constituencies consisting of nearly 80,000 Muslims voters & 23 constituency with more than 60,000 Muslims voters. If we unite and vote under one banner, we can achieve 100 assembly seats. Then we can dictate terms and all political parties will respect us. Apart from the present 10 MP seats, we can win large number of MP seats in 16 constituencies.




6 Mayors in Tamil Nadu can be Muslims. It is enough to have 1½ lakh voters (except in Madras) to win a Mayor seat. There are 3 lakhs Muslims in voter list of Madurai Corporation, Nellai 2½ lakhs, Trichy 3 Lakh, Coimbatore 3 lakhs, Salem 2½ lakhs.







In Madras there are about 20 Lakhs Muslims, but Stalin won by 16 Lakh. If all 186 mosques of Madras Metropolitan city had decided to vote for one Muslim Mayor casting at least 18 lakh votes, Muslim Mayor could have won. It is not a big task - Unity. Will it not change the Government policy if there is a Muslims Mayor? In Madras approximately there are about 20 lakhs Muslims voters in 14 constituency, even if 2 lakhs Muslim voters do not support our candidates, we can still win with 18 lakhs votes. The present Mayors in Madras, Nellai, Coimbatore, Madurai, Trichy, Salem etc. have won by less then 1½ lakhs, but there are more that 2 lakhs Muslim voters in those constituencies that could have easily given rise to 6 Muslim Mayors, Insha Allah this day will come.




In Tamil Nadu assembly we can achieve 1/3 Majority and then no bill will be passed without our consent, thereby become strong. So can be the case in Karnataka, Bihar, A.P., Maharstra etc. If this is followed, our strength in parliament will also double.




It is very easy to unite at least 400 to 600 mosques in one district. If all the 8000 mosque of Tamil Nadu and 1½ crore Muslims unite together with a common intention, anything & everything can be achieved. This is graceful, safe & silent decision. There is no other decision better than this to achieve power. Nothing is possible in this land without political power.




Some parties claim to be secular. Do not believe anyone. Even if some are true, why support a third party when we can have our own party. It is better to get our rights thro our own party instead of begging others. During elections, we make announcement to all Muslims to vote for a particular party-WHY? Let Muslims vote for our party and after the election, analyze the situation and extend support to others. Self-respect is part of religion.




Read this again and again, Do not believe any non-Muslim party, let us unite, things can be achieved overnight. It is in your hands to think and implement this decision. Unite yourself, life will be easy for you, the religious rights for you and the future generation will be protected.




My dear brothers and sisters, we Muslims boycott voting and become fools. Every vote is valuable - It makes a lot of difference. Some of us stay away from voting in protest – Other parties laugh at our decision as they gain and we loose. My dear brothers and sisters our duty is to identify a common Muslim party and achieve as many Muslim MLAs and MPs in Assembly and Parliment.




Taking out processions, protest march, challenging the Government etc. is a waste of time. Very soon we will be sidelined, rejected, ill-treated and disbanded. Unnecessary procession, protest, strike etc. will change the direction of our policy. Our only target is to unite Muslims. We do not have to walk like dead people when we know tomorrow is ours. All the political parties will come behind us. We can silently win our goal. Your assurance will concrete the living rights of the coming generation. Do not divert your attention for any reason.




Let this message reach all the Muslims. Send it to every nook and corner.




I am studying and working on the following:




To identify the best Muslim party to extend our support (or)

To start one genuine Muslim party to look after the welfare of Muslims.




In my next mail you will be informed of the out-come. Whether to support an existing Muslim party with reasons for having made such a selection. Or the reasons for not supporting any party and forming a new one.




Your valuable suggestions, comments, etc., are most welcome and can be sent on now_wake_up@hotmail.com




If for any reasons you are not able to send your mail to the above ID, you may send them to n_w_up@hotmail.com




For various reasons my name is withheld for the time being. Wa Salam




NB: You will understand better only if you read this letter more than once, take a print-out of these 4 pages and read it again & again.


abaig@adnoc.com

துபாயில் இந்திய அரசு மற்றும் பொதுத்துறை அலுவலகங்கள்

துபாயில் இந்திய அரசு மற்றும் பொதுத்துறை அலுவலகங்கள்

India Tourism
P O Box No 12856
Dubai
UAE
Tel : 04 227 4848
Fax : 04 227 4013

www.incredibleindia.org
goirto@emirates.net.ae



ஸ்டேட் வங்கி

sbinri@batelco.com.bh
www.sbibahrain.com
www.onlinesbi.com/nri

இந்தியா டீ
Tea Board of India
Tel : o4 352 2612
teaboard@emirates.net.ae
teaboard@teaindia.org

Ministry of Petroleum

www.petrotech2009.org
convenor_petrotech@ioci.co.in


Union Bank of India
Abu Dhabi 02 6222661 / 6222774
050 128 47 47

Central Bank of India
www.centralbankofindia.co.in


Institute of Chartered Accountants of India
www.icai.org

Reliance

www.reliancemutual.com


LIFE INSURANCE CORPORATION OF INDIA
Dubai : 04 335 4858
Abu Dhabi 02 6455704
oman 968 247 00 441
Jeddah : 02 65452136
www.licinternational.com
licintl@batelco.com.bh


www.airindia.in

www.orientalinsurance.nic.in

www.syndicatebank.in

www.ttdcoonline.com
www.tamilnadutourism.org
ttdc@vsnl.com



www.teaboard.gov.in

The New India Assurance Co. Ltd
04 352 5563
02 6440428
newindia@nia-dubai.com
newindia@emirates.net.ae

Monday, July 14, 2008

இன்றைய இந்திய அரசியல்

இந்திய அரசியல் - ஒரு குழம்பிய குட்டை. இந்திய அரசியல் வாதிகள் - அந்தக்
குட்டையில் ஊறிய மட்டைகள்
என்றார் ஒரு முதிர்ந்த ஊடகவியலாளர். சரி அதை விடுவோம். இன்று
இந்தியாவெங்கும், இந்தியர் வாழும்
இடமெங்கும் பாய்ந்து - படர்ந்து - ஊடுருவி - உயர்ந்து நிற்கும் கேள்வி... ?

வரும் 22ம் தேதி நட்க்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்
கூட்டணி அரசு தப்பிப் பிழைக்குமா ?
அல்லது தடுக்கி விழுமா ? - என்பதே.

உள்ள மொத்த இடங்கள் 545. அதில் இப்போதிருப்பது 543. இதில் வெளியிலிருந்து
ஆதரவு தந்து வந்த இடதுசாரிகளும்
(59 இடங்கள்) மயாவதியின் பகுஜன் சமாஜும் (17 இடங்கள்) தங்கள் ஆதரவை
விலக்கிக் கொள்ள, முலாயம் சிங்கின்
சமாஜ்வாதி கட்சி உள்ளே வந்தும் அரசின் நிலை பத்திரமாக வில்லை

கட்சிகளின் நிலையும் எண்ணிக்கைகளும் எவ்வாறிருந்தாலும் இவற்றில் சில
உட்கதைகளும் உபகதைகளும்
சேர்ந்தே வேறோர் பக்கத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன. மாயாவதியின் கட்சியை
உடைத்து சிலரை அரசுக்கு
ஆதரவாகத் திருப்ப அனில் அம்பானி முனைகிறார் என்பதும், முலயம் சிங்கின்
கட்சியை இரு கூறாக்கி அவர்களை
அரசுக்கு எதிராகத் திருப்ப முகேஷ் அம்பானி பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்
என்பதும் அவற்றில் சில.

காங்கிரஸ் 153, லல்லுவின் கட்சி 24, தி.மு.க 15, சரத் பவார் கட்சி 11,
பா.ம.க. 6, ஜே.எம்.எம். 5, எல்.ஜே.பி 4
ம.தி.மு.க (பிரிவு) 2, முஸ்லிம் லீக் 2, உதிரிகள் 4, = மொத்தம் 226.
சமாஜ்வாதி 37, சுயேச்சைகள் 5 = மொத்தம் 42
ஆக மொத்தம் 268.

எதிரணியில் பா.ஜ.க 130, சிவசேனை 12, பிஜு ஜனதா தள் 11, ஐக்கிய ஜனதா தள்
8, அகாலி தளம் 8 = ஆக 169.
இ.கம். 43, வ.கம் 10, ஃபார்வர்ட் ப்ளாக், ஆர்.எஸ்.பி தலா 3 ,
இடதுசாரிகள் ஆதரவு சுயே. 3 ஆக = 62. மூன்றாவது
அணி தெலுங்கு தேசம் 5, அஸ்ஸாம் கண பரிஷத் 2, சுயேச்சை 1 = ஆக 8. ஒட்டு
மொத்த எதிர்க்கட்சிகளின் பலம்
265. மயாவதியும் சேர்ந்தால் 282. சமாஜ்வாதி (பிரிவு) 2, ம.தி.மு.க 2 ஆக
286 வருகிறது.

இன்னும் முடிவெடுக்காத 16 பேர்களில் அத்தனை பேரும் அரசுக்கு
வாக்களித்தாலும் 284 தான் வருகிறது.
என்றாலும் அரசு வெல்லும் என்று அரசு தரப்பு உறுதியாகச் சொல்கிறது. அந்த
அளவுக்கு 'குதிரை பேரம்'
நடப்பதாகத் தகவல். முலாயம் கட்சியைச் சேர்ந்த முனவ்வர் ஹுசைன் தனக்கு 25
கோடி ரூபாயும் அமைச்சர்
பதவியும் வாக்களிக்கப் பட்டதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டி இருக்கிறார்.

அணு ஒப்பந்தம் முஸ்லிம்களின் நலனுக்கு எதிரானது என்கிற அபிப்பிராயமும்
மேலோங்கி வருகிறது. எனவே
வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஈ.அஹ்மது தனது பதவியை ராஜினாமாச் செய்து விட்டு
அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பேரா: காதர் மொஹிதீனுக்கு அந்தப் பிரச்னை இல்லை என்று
தோன்றுகிறது. மேலும் நா.ம.
ஆவணங்களின் படி அவர் ஒரு தி.மு.க. உறுப்பினர். எனவே கட்சியின் கட்டளைக்கு
எதிராக வாக்களித்தால்
அவர் பதவியே பறிபோகும் வாய்ப்புண்டு.

தனது கட்சிக்காரர் காடுவெட்டி குரு கைது விஷயத்தில் மன்னிப்புக்
கெட்பதுடன் விடுதலை என்பதை டாக்டர்
ராம்தாஸ் ஆதரவுக்கு நிபந்தனையாக வைக்கக் கூடும் என்று
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அப்படிச்
செய்யவில்லை. காடுவெட்டியின் விடுதலையை விட மத்தியில் இரண்டு அமைச்சர்கள்
பதவி முக்கியம்
என்று அவர் தீர்மானித்ததில் ஆச்சர்யமில்லை. நா.மன்றம் மக்கள் அவையில்
அ.தி.மு.க.வுக்கு உறுப்பினர்கள்
எவரும் இல்லை. இருந்திருப்பின் 'தலைவி' ஒரு கை பார்த்திருப்பார்.

அரசின் தலை விதியை மக்கள் பிரதிநிதிகள் தீர்மானித்தால் அதில்
அர்த்தமுண்டு. மாயாவதியுன் கட்சியை
உடைப்பதில் வெற்றி கண்டால் அனில் அம்பானியும், முலாயம் சிங்கின் கட்சியை
பிளர்ப்பதில் முகேஷ் அம்பானி
வாகை சூடினால் அவரும் அரசின் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள் என்கிற ஊகம்
உண்மை என்றால் நம்மால்
ஒன்றுதான் சொல்ல முடியும் ---

பிழைப்பு நாறிப் போய்க் கிடக்கிறது நாறி...!!!!!

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

Friday, July 4, 2008

ரியாத்தில் இந்திய தூதரக சந்திப்பு நிகழ்ச்சி

Dear Friend,

The Federation of Kerala Associations in Saudi Arabia (FOKASA) is hosting the Open House organized by the Embassy of India in Riyadh at Batha Classic Auditorium on 11th July (Friday) from 3.00 to 5.00 PM. This Open House is intended to clear all your doubts concerning Passports and other Consular matters and to avoid exploitation by middlemen. The officers of the Consular Division of the Embassy of India will attend the Open House to answer your queries and receive your complaints and petitions.

Please prepare your petitions in your language along with the supporting documents and hand over them to the FOKASA representative who approaches you. You may also bring the petition at the venue and can hand over directly to the Embassy officials. You can ask your questions in your mother tongue so that FOKASA shall translate and present them before the Embassy officials.

The Indian nationals residing in and around Riyadh are requested to utilize fully this benevolent gesture shown the Indian Embassy.

FOKASA


From: jayaseelan santhanam [mailto:sjay_seelan@yahoo.com]
Sent: Thursday, June 19, 2008 2:10 AM
To: ariff maricar
Subject: Fwd: open house_letter to beneficiaries

Dear Mr.Muraleedhan

That is an excellent initiative by FOKASA to bring the Indian Embassy Officials to public to face the public face to face. This will help many Indians without proper documents who are are scared to go through the Security to reach the Embassy to present their grievences.

Thanks for thinking of involving India Forum also in this good cause. Our President will come back to you after discussing with others.

In the mean time I request our members to pass on this information to all community members. Also please translate the attachment in your language - Hindi, Urudu, Punjabi, Gujarathi, Bengali, Bihari, Marathi, Telegu, Tamil, Kanada, Malayalam, etc, as we are the only association representing all states of India and forward the translation to Mr.R.Muraleedharan in PDF format as requested.

Mr.Murali, we, India Forum is really proud to have members like you.

Best regards
S.Jayaseelan
General Secretary
India Forum

Tuesday, July 1, 2008

ஜித்தா இந்திய துணைத் தூதரகத்தின் தற்காலிக பணி வாய்ப்புகள்

Applications are invited from Indian nationals for temporary posts of Data Entry Operators, Clerks, Drivers and Office Boys-cum-Cleaners for Haj season - 2008.

http://www.cgijeddah.com/cgijed/index.htm




Applications in the prescribed proforma along with copies of valid Iqama, passport, educational certificates and Driving License (for those applying for drivers’ posts) and no objection letters from sponsors should reach Haj Section, Consulate General of India, P.O.Box.No. 952, Jeddah-21421 latest by 01.08.2008. The prescribed proforma can be obtained from the Haj Information Desks at our offices in Jeddah, Makkah and Madinah or down loaded from our website

http://www.cgijeddah.com/cgijed/haj/contacts.HTM Candidates holding a Bachelor’s degree from a recognized University and conversant with Arabic language in addition to one Indian language will be given preference for the post of clerks. Those applying for the post of Data Entry Operator should also possess a diploma/certificate in Computer applications from a recognized University/Institution and at least a year’s exper/ience as Data Entry Operator. For the posts located in Makkah and Madinah, candidates resident there will be given preference.

Photocopies of Passport, Iqama, Educational Certificates, No objection letter from the sponsor (In original) along with two recent passport size photographs should be attached with the application. Applications without the required enclosures are liable to be rejected.

Hajj – 2008 : Contact Details:


Indian Hajj Office: Makkah Al-Mukarramah
Tel: 02 – 5758218/5761447/5758214
Fax: 02 – 5758216

Indian Hajj Office: Madinah Al-Munawwarah
Tel: 04 – 8380025/8344715
Fax: 04 – 8387549

Consulate of India, Jeddah (Haj Section)
Phone: 02-6520084/6510514
Fax: 02-6533964
E-mail: haj@cgijeddah.com

Tuesday, June 17, 2008

ஒற்றுமையே வேண்டாம்

ஒற்றுமையே வேண்டாம்


சமீபத்தில் ஷியாக்களும், சுன்னிகளும் சேர்ந்து தொழுகை நடத்தியதாகவும்,
மேலும் நடத்த இருப்பதாகவும் இது ஏற்படப்போகும் ஒற்றுமையின் அறிகுறி
என்று ஒரு செய்தி படித்தேன் இதுவரை நடந்தவை, இனி நடக்கக் கூடியவை என்ன
விளைவுகளை ஏற்படுத்தும் என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

இந்த நிலையில் பொதுவாக இந்தியாவில், குறிப்பகத் தமிழகத்தில், இஸ்லாமிய
இயக்கங்களிடையே 'ஒற்றுமை' என்பது அனைவரும் எதிர்பார்ப்பட்டது.
ஆனால் எட்டாக் கனியாகவே காட்சி தருவது என்றாகி இருக்கிறது.

இப்போது பரஸ்பரத் தாக்குதல்கள் மூர்க்கமாகி இருக்கின்றன. ஆகவே ஒற்றுமை
என்பதே வேண்டாம். தாக்குதல்கள் த்ரம் தாழ்ந்து போகாமல் இருந்தால்
சரி என்கிற நிலைக்கு நாம் ஆளாகி இருக்கிறோம். சிலர் கண்ணியமாக தங்கள்
வாதத்தை முன் வைக்க சிலர் காட்டுத்தனமாக வசை மாரிகளைப் பொழிந்து
தள்ளுகிறார்கள்.

இதில் எதிலும் சேராத, நல்லதை மட்டுமே விரும்பும் என்னைப் போன்றவர்களும்
இடையில் அகப்பட்டுக் கொண்டு அநியாயத்துக்கு அநாவசிய சொல்லடிகளை
வாங்க வேண்டியதிருப்பதுதான் பெரும் சோகம்.

நான் ஒரு ஊடகவியளாளன். அல்ஹம்துலில்லா, ஓரிரு வருடங்களல்ல. சுமார் அரை
நூற்றாண்டுக்கும் அதிகமாக ! இதில் நமது சமுதாயத் தலைவர்களை
உலகின் பல்வேறு பகுதி மக்களுக்குப் பரிச்சயப் படுத்தும், நம் சமுதாயச்
செய்திகளை உலகெங்கும் எடுத்துச் செல்லும் வசதியும் வாய்ப்பும் இறைவன்
அருளால் எனக்கு அமைந்து இருக்கிறது. அதை நன்கு பயன்படுத்திக் கொண்டு
என்னால் இயன்றவற்றையெல்லாம் சமுக நன்மைக்கு செய்து வருகிறேன் -
பிரதி பலன் கருதாது.

தனி நபர் ஆராதனையில் (Hero Worship) எனக்கு நம்பிக்கை இல்லை. எந்த
இயக்கத்தின் மீதோ அல்லது கட்சியின் மீதோ எவ்வித பற்றும் கிடையாது.
உண்மையான் பத்திரிகை தர்மப்படி காய்தல், உவத்தல் இன்றி, விருப்பு -
வெறுப்புகளின்றி எல்லோர் கருத்துக்கும் மதிப்பளித்து அவற்றை மக்கள்
முன்பு
வைக்கிறேன். தீர்ப்பை அவர்களுக்கே விட்டு விடுகிறேன். கண்ணியமானவர்கள்,
விஷயம் தெரிந்தவர்கள் என்னுடைய இந்த நிலையை பாராட்டுகிறார்கள்.

இதைப் பொறுக்க மாட்டாதவர்களோ அல்லது " நீ எங்கள் இயக்கமில்லையா
அப்படியானால் நீ எங்கள் எதிரிதான்" என்கிற குரூரமான (Sadist) மனப்
பான்மை உடையவர்கள் புழுதி வாரித் தூற்றுகிறார்கள். அவர்கள்
தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் நாகரீகமானவையாக இல்லை. ஒரு இந்துத்வ
"ஜடாயு"
அவ்வாறு திட்டுவதை என்னால் புரிந்து கொள்ளமுடியும். ஆனால் ஒரு முஸ்லிம்
'சத்தியத்தின் குரல்' அவ்வாறு செய்வது வேதனை தருகிறது.இத்தகைய
சூழ்நிலையில் அபூ நூரா போன்ற நண்பர்கள் கண்ணியமான வார்த்தைகளைப்
பயன்படுத்தி இருப்பது மனதுக்கு இதம் தருகிறது. அதேசமயம், நான் ஒரு
குறிப்பிட்ட இயக்கத்துக்குப் பயந்து கொண்டு அல்லது அங்கு எனக்குள்ள
நாற்காலி மறுக்கப் பட்டு விடும் என்கிற எண்ணத்தில் நான் செயல் படுவதாக
உள்
நோக்கம் கற்பித்து கொச்சைப் படுத்துவது நியாயமானதாகப் படவில்லை.

ஆயிற்று ஐம்பத்தெட்டு ஆண்டுகள் - ஒலிபரப்புத்துறையில் - ஊடகத் துறையில்
உள் நுழைந்து.! "உலகின் மூத்த தமிழ் ஒல்லிபரப்பாளன்" ( The most SENIOR
Tamil Broadcaster in the WORLD) என்கிற தகுதியை எனக்களித்துள்ள
இறைவனுக்கே எல்லப் புகழும் -- நன்றியும்.

இத்தனை காலத்தில் யாருக்கும் தீங்கு எண்ணியதில்லை. உண்மைகளை மட்டுமே
உலகுக்குச் சொல்வதில் உறுதியாக இருந்திருக்கிறேன். காரணம்
'உண்மைக்கு நடுநிலை இல்லை' என்று நம்புகிறவன் நான். எனக்குப் பூச்சூட
வேண்டாம், பொன்னாடை போர்த்த வேண்டாம், 'வாழ்-நாள் சாதனையாளர்'
விருது கூட வேண்டாம். என்னை தூற்றாமல் இருங்கள் போதும். என் கருத்து
பிடிக்கவில்லையா ? அதை எடுத்துச் சொல்வதில் ஒரு கண்ணியம் இருக்கட்டும்.

அதுபோல, ஒற்றுமை என்பது வருகிறபோது வரட்டும். இப்போது வேண்டாம் என்றால்
வேண்டாம் என்றே இருக்கட்டும். யாரும் சரி, எந்தச் சூழலிலும் சரி தரம்
தாழ்ந்து தாக்குவதைக் கை விடுங்கள். ஏனெனில் நாம் மனிதர்களுக்குப்
பயப்படாதவர்களாக இருக்கலாம். ஆனால் ஆண்டவனுக்குப் பதில் சொல்லியே
ஆக வேண்டும். எல்லாவற்றின் மையப் புள்ளியும் அதுதான்.

நலமே நடக்கும் என்கிற நம்பிக்கையுடன் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
abjabin@gmail.com

Sunday, June 15, 2008

Saudi Arabia to admit 4,000 more Haj pilgrims from India

Saudi Arabia to admit 4,000 more Haj pilgrims from India

BS Reporter / New Delhi June 13, 2008, 5:58 IST

After tough negotiations with India, Saudi Arabia has decided to allow 4,000 more Indians to do the Haj this year. The number was decided following talks between King Abdullah of Saudi Arabia and Foreign Minister Pranab Mukherjee.

The increase in numbers, though far less than what the Indian government had asked for, is expected to win plaudits for the United Progressive Alliance (UPA) government from the minority community.
Last month, Mukherjee and his deputy, E Ahamed, had visited Saudi Arabia to press for an increase in India's quota by at least 15,000. But the Saudis have partially accepted the demand. In fact, agencies managing the Haj pilgrimage in Saudi Arabia had asked the government to reduce India's participation because of paucity of accommodation.
During their visit last month, Mukherjee and Ahmed tried to impress upon the Saudis that every year the government received more than 200,000 applications and at least a part of this number should be allowed in.

www.seyedonline.googlepages.com

Monday, May 19, 2008

துபாய் இந்திய துணைத்தூதரகத்தில் பேராசிரியருக்கு சிறப்பான வரவேற்பு !

துபாய் இந்திய துணைத்தூதரகத்தில் பேராசிரியருக்கு சிறப்பான வரவேற்பு !


இந்திய துணைத்தூதர் ( Consul General ) வேணு ராஜாமணி - கன்சல் முபாரக் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு !!




ஐக்கிய அரபு அமீரகத்தில் எழுச்சிமிகு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ் மாநில தலைவருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அமீரகத்தில் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் நிலையினை அறிந்து கொள்ளவும், அவர்களுக்கு ஏற்பட்டு வரும் இன்னல்களைக் களைய முயற்சிகளை மேற்கொள்ள இந்திய துணைத்தூதர் ( Consul General ) திருமிகு வேணு ராஜாமணி, தமிழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி கன்சல் ( Consul - Labour & Welfare ) உள்ளிட்ட உயர் அதிகாரிகளைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.

அப்பொழுது இந்திய துணைத்தூதர் பேராசிரியரிடம் தமிழகத்தைச் சேர்ந்த பலர் வேலைக்காக அமீரகம் வரும் பொழுது வேலைக்கான விசாவில் வராமல் ஆயிரக்கணக்கில் ரூபாய்களை ஏஜெண்டுகளிடம் கட்டி விசிட் விசாவில் வந்து விடுகின்றனர். இதற்குக் காரணம் விசா குறித்த விழிப்புணர்வு தொழிலாளர் மத்தியில் குறிப்பாக தமிழக தொழிலாளர்களிடம் இல்லாததே காரணம். விசிட் விசாவில் வந்து அமீரகத்தில் வேலை செய்யக்கூடாது என்பது சட்டம். இது தெரியாமல் இங்கு வந்து ஏமாந்து விடுகின்றனர். எனவே சட்ட ரீதியாக இதுபோன்றவர்களுக்கு உதவ முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் சிறைச்சலைகளில் பலர் வாடுகின்றனர். எனவே தொழிலாளர்கள் அமீரகம் வரும் பொழுது கண்டிப்பாக வேலைக்கு வருபவர்களாக இருந்தால் வேலைக்கான விசா ( EMPLOYMENT VISA ) வில் மட்டுமே வரவேண்டும்.

மேலும் தங்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் நிறுவனம் நம்பகமானது தானா என்பதை அறிவதற்கு உதவும் பணியிலும் துபாய் இந்திய துணைத்தூதரகம் உதவத் தயாராக உள்ளது.

இந்திய துணைத்தூதரகத்தின் http://www.cgidubai.com எனும் இணையத்தளத்தை பார்வையிட்டால் அதில் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளன. அதன் மூலம் தொடர் கொண்டால் தாங்கள் வேலைக்கு தேர்ந்தெடுத்திருக்கும் நிறுவனம் நம்பகமானது தானா என்பதனை அறிந்து கொள்வதற்கும் உதவத் தயாராய் உள்ளது.

இந்திய துணைத்தூதரகத்தின் தொடர்பு முகவரி வருமாறு :


Consulate General of India
P.O.Box 737, Dubai
United Arab Emirates

Tel: 3971222/3971333

Fax: 3970453

Email:cgidubai@emirates.net.ae





அமீரகத்திற்கு பணிக்காக அழைத்து வரப்படும் இந்தியப் பெண்கள் சிலர் தவறான வழிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காகவும் இந்திய துணைத்தூதரகம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அமீரகத்தில் பணிக்கு வருவோர் இந்திய துணைத்தூதரகத்துடன் தொடர்பு கொண்டால் ஆபத்து ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அவர்களை அதிலிருந்து மீட்டு தாயகத்திற்கு பத்திரமாக அனுப்பி வைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

மேலும் இந்தியர்கள் பணியின் நிமித்தமாக அமீரகம வரும் பொழுது எதிர்பாராத விதமாக மரணமடையும் பொழுது இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்திய துணைத் தூதரகம் விரைவாக அவர்களது உடல்களை தாயகம் அனுப்பி வைத்து வருகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலமும் இதுபோல் செய்திட பேராசிரியர் முயற்சி மேற்கொள்ள கேட்டுக் கொண்டார்.

பாஸ்போர்ட் புதுப்பித்தல் இந்தியாவின் பல்வேறு நகர பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் சரிபார்கப்பட்டு விரைவாக கொடுக்கப்படுகிறது. எனினும் திருச்சி பாஸ்போர் அலுவலக பாஸ்போர்ட்கள் மட்டும் சிறிது தாமதமடைகிறது. அவையும் விரைவில் சரிசெய்யப்படுவதற்கான முயற்சி கொள்ளப்படும் என்றார்.

இந்தியர் நலன் காக்க எத்தகைய பணிகளானும் இந்திய துணைத் தூதரகம் தனது வாயில்களை இருபத்து நான்கு மணிநேரமும் திறந்தே வைத்துள்ளது. முறையான தகவல்களுடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்களது துன்பங்கள் துடைதெரியப்படும் என்றார்.

மேலும் தான் அரபகத்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பை நூலாக வடிவமைத்து வருவதாக குறிப்பிடார் துணைத் தூதர் வேணு ராஜாமணி. வரலாற்றுப் பேராசிரியரான காதர் மொகிதீன் எம்பி மிகவும் மகிழ்வுடன் அவர்களைப் பாராட்டினார். பல்வேறு வரலாற்றுத் தகவல்களையும் அவர்களுக்கு நினைவு கூர்ந்தார். அவர்களது பணிகளை வாழ்த்தினார்.


கன்சல் முபாரக்

இந்திய துணைத்தூதரகத்தில் மிகவும் சிறப்புடன் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த கன்சல் பி.எஸ். முபாரக் ( லேபர் & வெல்பேர் ) அவர்களையும் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்பி சந்தித்தார். அவர்களது பணிகளை வாழ்த்தினார். மிகவும் இளம் வயதில் உயர் பொறுப்பில் சிறப்புடன் பணியாற்றி வரும் பாங்கை பாராட்டினார்.

பி.எஸ். முபாரக் அவர்கள் அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஈமான் அமைப்பின் பொதுச்செயலளர் ஏ. லியாக்கத் அலி, கல்விச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் தினமும் தங்களது சமுதாயப் பணிகள் பற்றிக் குறிப்பிடாத நாளே இல்லை எனலாம் என்றார்.

இச்சந்திப்பின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஏ ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, காயிதெ மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தகவல் : முதுவை ஹிதாயத் ( முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி )

Wednesday, May 7, 2008

துபாயில் கல்வி உதவித்தொகைக்கான நுழைவுத் தேர்வு

Common entrance test for Indian students to be held in Dubai


Dubai: The Common Entrance Test for the Scholarship Programme for Diaspora Children (SPDC-2008), conducted by the Ministry of Overseas Indian Affairs, Government of India, will be held at 10.30am (UAE time) on Sunday, 18th May 2008, at the Indian High School, Oud Metha Road, Dubai.
Entrance will be from Gate No. 4 of the school. For identification purpose, candidates should produce their original passport and a copy thereof.

Monday, April 28, 2008

PRESS RELEASE

Consulate General of India
Jeddah

PRESS RELEASE

A high level Civil Society delegation from India is currently on a visit to Saudi Arabia. The delegation is sponsored by Indian Council for Cultural Relations (ICCR) and is led by Mr. Syed Shahid Mahdi, Vice President of ICCR. The delegation comprises of Mr. P.K. Abdul Aziz, Vice Chancellor of the Aligarh Muslim University; Mr. Anwar Moazzam, Islamic Scholar, Academician, Writer and Director (Honorary), Urdu Documentation Centre, Hyderabad; Mr. A.C. Patankar, Adviser, Confederation of Indian Industry; Mrs. Rakhshanda Jalil – Coordinator, Media and Culture, Jamia Milia Islamia; and Ms. Mita Vasisht – Indian television, film and theatre actress, and founder of Mandala, Space for arts, collaborations, research and education.

During the visit, the delegation will interact extensively with the Saudi Civil Society. The delegation is also expected to call on the Deputy Minister of Information & Culture, Dr. Abu Baker Bagader and is scheduled to visit Jeddah Chamber of Commerce & Industry, Dar-Al-Hekma Women University, Islamic Development Bank, National Commercial Bank, International Medical Centre etc. Saudi-India Friendship Society will be hosting a reception in honour of the delegation. The delegation will also participate in a ‘Panel Discussion’ on 30th April where some of the Saudi speakers would also be participating.

The visit is another opportunity for diversifying and strengthening India-Saudi relations, in light of the high level visits that have been exchanged between the two countries in the past few years. The visit of the delegation is also a follow up to the Saudi Civil Society delegation which visited India on the sidelines of the Royal visit in January 2006.
***

***

Regards



Dr Suhel Ajaz Khan
Consul ( Haj, P&I)
Consulate General of India
Jeddah
Ph: 00966 2 6520084( o)
00966 2 6694135 ( R)
Mo: 00966505656301

Saturday, January 26, 2008

முதுகுளத்தூரில் குடியரசு தின விழா



முதுகுளத்தூரில் அனைத்து பள்ளி மாணவ, மாணவிகள், காவல்துறை மற்றும் காவல்துறை நண்பர்கள் குழு சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் நகரின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

தகவல் உதவி : தாஹிர் உசேன், சீனி ஜெராக்ஸ்,முதுகுளத்தூர்.

Thursday, January 24, 2008

துபாய் கல்வி நிறுவனங்கள்

துபாயில் உயர் கல்வி வழங்கும் தமிழ் நிறுவனம்

துபாயில் விஸ்டம் இன்ஸ்டிடியூட் உயர்கல்வியினை வழங்கி வருகிறது. இங்கு பல்வேறு இந்தியப் பல்கலைக்கழகங்களின் உயர்கல்வியினை தொடர்கல்வி மூலம் வழங்கி வருகிறது.

தொடர்புக்கு

விஸ்டம் இன்ஸ்டிடியூட்
துபாய் : 04 396 44 55
அபுதாபி : 02 621 44 74

மின்னஞ்சல் : wisdom@emirates.net.ae

மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் ( Off campus Center )

Block 3 Dubai Knowlege village
Tel : 04 3902981 / 82
E mail : contact@mgudxboc.com
www.mgudxboc.com

Courses : MBA ( Regular & Weekend ) , B.Com, BBA, BBM, BCA , BSc ( Computer Science ), BTS ( Bachelor of Tourism Studies )


Rajagiri International School
P O Box NO. 500438
Al Warqa'a
Dubai
UAE
Tel : 04 2800 691
Fax : 04 2800 692
E mail : info@risdubai.org
www.risdubai.org


Link India Educational Consultancy Center
P O Box No 55246
No 5 Al Nakheel Center
Deira
Dubai
Tel : 04 223 9224 / 223 4660
Mobile : 050 8428319

www.linkindia.org
E mail : linkindiagcc@yahoo.com