ஐ.ஏ.எஸ். தேர்வு எப்படி நடைபெறுகிறது?
ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு முக்கியமாக இரண்டு நிலைகள் உள்ளன. முதலாவது பிரிலிம்ஸ். மற்றொன்று மெயின்ஸ். இதில் பிரில்ம்ஸ் என்பது ஸ்கிரீனிங் டெஸ்ட் மாதிரிதான். இதற்கு புவியியல், வரலாறு.. இப்படிப்பட்ட 27 சப்ஜெட்டுகளில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
‘ஜெனரல் ஸ்டடிஸ்’ என்றும் ஒரு பேப்பர் இருக்கிறது. இதில் நம் நாட்டின் இப்போதைய நடப்புகள், இந்திய அரசியல், வரலாறு இப்படி பல துறைகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த மதிப்பெண்ணைக் கொண்டுதான் மெயின்ஸ்க்கு தேர்ந்தெடுப்பார்கள்.
மெயின்ஸில் இரண்டு தேர்வுகள் உண்டு. முதலாவது எழுத்துத் தேர்வு. இதற்கென முதலில் சொன்ன 27 சப்ஜெட்டுகளில் இருந்து ஏதாவது இரண்டைத் தேர்வு செய்ய வேண்டும். பிரிலிம்ஸில் எடுத்த சப்ஜெக்டையே மீண்டும் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
அதையே தேர்வு செய்தாலும் பரவாயில்லை. இந்தத் தேர்வோடு ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஒரு மாநில மொழியில் தேர்வு எழுத வேண்டும். அதில் போதுமான மதிப்பெண் வாங்கினால்தான், மெயின்ஸில் எழுதிய தேர்வுத்தாள்களைத் திருத்துவார்கள்.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் அடுத்து நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டி வரும். இதில் பர்சனாலிட்டி, பேசும் திறன் எல்லாமே உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.
டிகிரி எந்த சப்ஜெக்டில் படித்தாலும், பிரிலிம்ஸ் தேர்வுக்கு அதே சப்ஜெக்டைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
எதில் விருப்பம் இருக்கிறதோ, எந்த சப்ஜெக்டுக்கு நல்ல வழிகாட்டுதல் கிடைக்கிறதோ அதை எடுத்துப் படிக்கலாம். U.P.S.C. கேள்விகளைத் தேர்வு செய்யும் குழு, மூன்று வருடத்துக்கு ஒரு முறை மாறிக் கொண்டே இருக்கும். ஒரு முறை கேள்வி எளிதாக இருந்தால் மறுமுறையும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. எந்த சப்ஜெக்டில் நீங்கள் ஸ்டிராங்கோ, அதைத் தேர்வு செய்வது நல்லது.
(நன்றி: கேளுங்கள் சொல்கிறோம், விகடன் பிரசுரம்)
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label ஐ.ஏ.எஸ்.. Show all posts
Showing posts with label ஐ.ஏ.எஸ்.. Show all posts
Thursday, March 18, 2010
Sunday, May 10, 2009
மீண்டும் வரலாறு திரும்புகிறது ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி
மீண்டும் வரலாறு திரும்புகிறது ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி
ராணுவ பணிகளில் சேரும் ஆர்வமும் அதிகரிப்பு
சென்னை, மே 9-
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வந்ததைப்போல இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளார்கள். இதேபோல், தமிழக மாணவர்களுக்கு ராணுவ பணிகளில் சேரும் ஆர்வமும் அதிகரித்துள்ளது.
சாப்ட்வேர் வேலை
தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்ட புரட்சி காரணமாக என்ஜினீயரிங் மற்றும் சாப்ட்வேர் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாயின. என்ஜினீயரிங் மாணவர்களுக்கு இறுதி ஆண்டு படிக்கும்போதே `கேம்பஸ் இண்டர்விï' மூலம் பெரிய பெரிய நிறுவனங்களில் கைநிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்தது. இதனால், பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் போட்டிப்போட்டு சேர்ந்தனர்.
எலெக்ட்ரானிக்ஸ் கம்ïனிகேஷன், கம்ப்ïட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் எலெக்ட்ரிக்கல்ஸ், ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கடும் மவுசு ஏற்பட்டது. என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு சாப்ட்வேர் நிறுவனங்கள் 30 ஆயிரம், 40 ஆயிரம். 70 ஆயிரம் என்று சம்பளத்தை வாரி வழங்கின. ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வாங்கும் சம்பளத்தை சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைபார்க்கும் 21 வயது என்ஜினீயரிங் பட்டதாரி வாங்க முடியும் என்ற நிலை உருவானது.
அரசு பணிக்கு மவுசு
என்ஜினீயரிங் பட்டதாரிகள் மட்டுமின்றி தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கால் சென்டர், இ-பப்ளிஷிங், பி.பி.ஓ. உள்ளிட்ட துறைகளில் வேலைக்குச்சேரும் கலை அறிவியல் பட்டதாரிகளும் அரசு பணியைவிட அதிக சம்பளம் பெற்றனர். திறமை இருந்தால் மிகக்குறுகிய காலத்திலேயே உயர்ந்த பொறுப்புக்கு வருவதுடன் சம்பளமும் கணிசமாக அதிகரிக்கும் நிலையும் ஏற்பட்டது. இதனால் இளைஞர்களுக்கு அரசு வேலையில் சேரும் ஆர்வம் மெதுவாக குறைந்தது.
இந்த நிலையில், அண்மையில் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தகவல் தொழில்நுட்பத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்பு குறைந்ததுடன் ஆட்குறைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், பணிப்பளு அதிகரித்ததுடன் ஏராளமான சலுகைகள் குறைக்கப்பட்டன. அதேநேரத்தில் அரசு துறை நிறுவனங்கள் போட்டிப்போட்டு ஊழியர்களை தேர்வுசெய்தன. அதோடு 6-வது ஊதியக்குழுவின்படி சம்பளமும் கணிசமாக உயர்ந்தது.
வரலாறு திரும்புகிறது
இதனால், கம்ப்ïட்டர் சம்பந்தப்பட்ட துறைகளில் வேலைபார்த்து வந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் பார்வை, அரசு வேலை பக்கம் திரும்ப தொடங்கியது. அரசு வேலைக்கான போட்டிதேர்வுகளுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாதாரண பி.ஏ.. பி.எஸ்சி. கல்வித்தகுதி கொண்ட வேலைக்கும் பி.இ., பி.டெக். பட்டதாரிகள் போட்டிப்போட்டு விண்ணப்பிக்கிறார்கள். தேர்வில் வெற்றிபெற்று வேலையிலும் சேர்ந்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 101 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலை தற்போது மீண்டும் திரும்பியுள்ளது. 1970-களில் தமிழக மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். முதல் 10 ரேங்க் இடங்களையும் கணிசமான அளவு பிடிப்பவர்களா தமிழக மாணவர்களாக இருந்தனர். இதனால், டெல்லி பாராளுமன்றத்திலும், வெவ்வேறு மாநிலங்களிலும் செயலாளர், தலைமைச் செயலாளர் பொறுப்புகளில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் காண முடிந்தது. இடையில் பல ஆண்டுகள் தொய்வு ஏற்பட்டு தற்போது மீண்டும் வரலாறு திரும்புள்ளது.
முப்படைகளிலும்
முன்பு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கு நிகராக ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளிலும் அதிகாரி பணி இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கோலேச்சினார்கள். ஜெனரல், அட்மிரல், ஏர் சீப் மார்ஷல் போன்ற தலைமை பதவிகளை அலங்கரித்தனர். ஆனால் காலப்போக்கில் பாதுகாப்புத்துறையில் தமிழக இளைஞர்கள் சேருவது குறைய தொடங்கியது.
இந்த நிலையில், ராணுவ, கடற்படை, விமானப்படையில் சேர நடத்தப்படும். என்.டி.ஏ., சி.டி.எஸ். எஸ்.எஸ்.பி., உள்ளிட்ட தேர்வுகளுக்கு தற்போது தமிழக மாணவர்கள் போட்டிப்போட்டு விண்ணப்பிக்கிறார்கள். அதற்கான வழிமுறைகளை தற்போதைய இளைஞர்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பதால் அதற்கேற்ப பாடத்திட்டங்களில் தங்களை மேம்படுத்திக்கொள்கிறார்கள்.
ராணுவ பணிகளில் சேரும் ஆர்வமும் அதிகரிப்பு
சென்னை, மே 9-
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வந்ததைப்போல இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளார்கள். இதேபோல், தமிழக மாணவர்களுக்கு ராணுவ பணிகளில் சேரும் ஆர்வமும் அதிகரித்துள்ளது.
சாப்ட்வேர் வேலை
தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்ட புரட்சி காரணமாக என்ஜினீயரிங் மற்றும் சாப்ட்வேர் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாயின. என்ஜினீயரிங் மாணவர்களுக்கு இறுதி ஆண்டு படிக்கும்போதே `கேம்பஸ் இண்டர்விï' மூலம் பெரிய பெரிய நிறுவனங்களில் கைநிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்தது. இதனால், பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் போட்டிப்போட்டு சேர்ந்தனர்.
எலெக்ட்ரானிக்ஸ் கம்ïனிகேஷன், கம்ப்ïட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் எலெக்ட்ரிக்கல்ஸ், ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கடும் மவுசு ஏற்பட்டது. என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு சாப்ட்வேர் நிறுவனங்கள் 30 ஆயிரம், 40 ஆயிரம். 70 ஆயிரம் என்று சம்பளத்தை வாரி வழங்கின. ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வாங்கும் சம்பளத்தை சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைபார்க்கும் 21 வயது என்ஜினீயரிங் பட்டதாரி வாங்க முடியும் என்ற நிலை உருவானது.
அரசு பணிக்கு மவுசு
என்ஜினீயரிங் பட்டதாரிகள் மட்டுமின்றி தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கால் சென்டர், இ-பப்ளிஷிங், பி.பி.ஓ. உள்ளிட்ட துறைகளில் வேலைக்குச்சேரும் கலை அறிவியல் பட்டதாரிகளும் அரசு பணியைவிட அதிக சம்பளம் பெற்றனர். திறமை இருந்தால் மிகக்குறுகிய காலத்திலேயே உயர்ந்த பொறுப்புக்கு வருவதுடன் சம்பளமும் கணிசமாக அதிகரிக்கும் நிலையும் ஏற்பட்டது. இதனால் இளைஞர்களுக்கு அரசு வேலையில் சேரும் ஆர்வம் மெதுவாக குறைந்தது.
இந்த நிலையில், அண்மையில் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தகவல் தொழில்நுட்பத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்பு குறைந்ததுடன் ஆட்குறைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், பணிப்பளு அதிகரித்ததுடன் ஏராளமான சலுகைகள் குறைக்கப்பட்டன. அதேநேரத்தில் அரசு துறை நிறுவனங்கள் போட்டிப்போட்டு ஊழியர்களை தேர்வுசெய்தன. அதோடு 6-வது ஊதியக்குழுவின்படி சம்பளமும் கணிசமாக உயர்ந்தது.
வரலாறு திரும்புகிறது
இதனால், கம்ப்ïட்டர் சம்பந்தப்பட்ட துறைகளில் வேலைபார்த்து வந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் பார்வை, அரசு வேலை பக்கம் திரும்ப தொடங்கியது. அரசு வேலைக்கான போட்டிதேர்வுகளுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாதாரண பி.ஏ.. பி.எஸ்சி. கல்வித்தகுதி கொண்ட வேலைக்கும் பி.இ., பி.டெக். பட்டதாரிகள் போட்டிப்போட்டு விண்ணப்பிக்கிறார்கள். தேர்வில் வெற்றிபெற்று வேலையிலும் சேர்ந்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 101 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலை தற்போது மீண்டும் திரும்பியுள்ளது. 1970-களில் தமிழக மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். முதல் 10 ரேங்க் இடங்களையும் கணிசமான அளவு பிடிப்பவர்களா தமிழக மாணவர்களாக இருந்தனர். இதனால், டெல்லி பாராளுமன்றத்திலும், வெவ்வேறு மாநிலங்களிலும் செயலாளர், தலைமைச் செயலாளர் பொறுப்புகளில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் காண முடிந்தது. இடையில் பல ஆண்டுகள் தொய்வு ஏற்பட்டு தற்போது மீண்டும் வரலாறு திரும்புள்ளது.
முப்படைகளிலும்
முன்பு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கு நிகராக ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளிலும் அதிகாரி பணி இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கோலேச்சினார்கள். ஜெனரல், அட்மிரல், ஏர் சீப் மார்ஷல் போன்ற தலைமை பதவிகளை அலங்கரித்தனர். ஆனால் காலப்போக்கில் பாதுகாப்புத்துறையில் தமிழக இளைஞர்கள் சேருவது குறைய தொடங்கியது.
இந்த நிலையில், ராணுவ, கடற்படை, விமானப்படையில் சேர நடத்தப்படும். என்.டி.ஏ., சி.டி.எஸ். எஸ்.எஸ்.பி., உள்ளிட்ட தேர்வுகளுக்கு தற்போது தமிழக மாணவர்கள் போட்டிப்போட்டு விண்ணப்பிக்கிறார்கள். அதற்கான வழிமுறைகளை தற்போதைய இளைஞர்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பதால் அதற்கேற்ப பாடத்திட்டங்களில் தங்களை மேம்படுத்திக்கொள்கிறார்கள்.
Saturday, August 16, 2008
சென்னை-ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இலவச பயிற்சி
சென்னை-ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இலவச பயிற்சி
சனிக்கிழமை, ஆகஸ்ட் 16, 2008
சென்னை: சென்னை மனித நேயம் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் கீழ் ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மனித நேயம் என்ற அமைப்பின் பெயரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சைதை துரைசாமி ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறார். முற்றிலும் இலவசப் பயிற்சி இது.
இங்கு தரமான பயிற்சி, தங்குமிடம், உணவு, உடை, செய்தித்தாள், யோகா வகுப்புகள், போதுமான பாட புத்தங்கள், போக்குவரத்து வசதி போன்றவை ஒராண்டு பயிற்சியின் போது இலவசமாக வழங்கப்படுகிறது.
வருகிற அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புகின்றவர்கள் வரும் 18, 19 ம் தேதிகளில் சான்றிதழ்களுடன் நேரடியாக வந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு 044 - 24 35 83 73 என்ற எண்ணிலோ அல்லது 99406 - 70110 என்ற செல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://thatstamil.oneindia.in/news/2008/08/16/tn-applicants-invited-for-free-ias-coaching.html
சனிக்கிழமை, ஆகஸ்ட் 16, 2008
சென்னை: சென்னை மனித நேயம் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் கீழ் ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மனித நேயம் என்ற அமைப்பின் பெயரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சைதை துரைசாமி ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறார். முற்றிலும் இலவசப் பயிற்சி இது.
இங்கு தரமான பயிற்சி, தங்குமிடம், உணவு, உடை, செய்தித்தாள், யோகா வகுப்புகள், போதுமான பாட புத்தங்கள், போக்குவரத்து வசதி போன்றவை ஒராண்டு பயிற்சியின் போது இலவசமாக வழங்கப்படுகிறது.
வருகிற அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புகின்றவர்கள் வரும் 18, 19 ம் தேதிகளில் சான்றிதழ்களுடன் நேரடியாக வந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு 044 - 24 35 83 73 என்ற எண்ணிலோ அல்லது 99406 - 70110 என்ற செல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://thatstamil.oneindia.in/news/2008/08/16/tn-applicants-invited-for-free-ias-coaching.html
Monday, August 4, 2008
ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( பி ) லிட்
41 பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர்
சென்னை 600 098
விலை ரூ. 50
வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( பி ) லிட்
41 பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர்
சென்னை 600 098
விலை ரூ. 50
Subscribe to:
Posts (Atom)