இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி
விளையாட்டு – தங்கும் விடுதி
2010 – 2011 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை ஆரம்பம்
6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்கு ( தமிழ் மொழியுடன் உருது / ஆங்கிலம் மீடியம் ) இலவசக் கல்வியும் தங்குமிடமும் அளிக்கப்படுகிறது.
ஆர்வமுள்ள மாணவர்கள் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
அரசு மதரஸா ஆஜம் மேல்நிலைப்பள்ளி
779 அண்ணா சாலை
எல்.ஐ.சி. எதிரில்
சென்னை 600 002
போன் : 2841 2742
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 30 மே 2010
தலைவர் : டாக்டர் சையத் எம்.எம். அமீன்
ஏழை மாணவர் இல்லம்
தொலைபேசி : 2848 1344
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label மாணவர். Show all posts
Showing posts with label மாணவர். Show all posts
Thursday, March 18, 2010
Saturday, May 16, 2009
மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம்
மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம்
சென்னை, மே 13: பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறும்
மாணவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என எஸ்.டி.கூரியர்ஸ் நிறுவனம்
அறிவித்துள்ளது.
இந் நிறுவனத்தின் சார்பில் பிளஸ் டூ தேர்வில் தமிழகத்திலேயே முதல் மூன்று
இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு விருது மற்றும் ரொக்கப் பரிசு
வழங்கப்படும்.
மாநிலத்திலேயே இரண்டாம் இடம் பெறும் மாணவருக்கு ரூ.50 ஆயிரம், மூன்றாம்
இடம் பெறும் மாணவருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.
மேலும் இந்தக் கல்வியாண்டு முதல் அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவம்,
பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் பொருளாதார வசதியின்றி படிப்பைத்
தொடர முடியாத 10 மாணவர்களின் முழுப் படிப்புச் செலவையும்
எஸ்.டி.கூரியர்ஸ் நிறுவனம் ஏற்கும் என அந்த நிறுவனத்தின் நிர்வாக
இயக்குநர் கே. நவாஸ்கனி தெரிவித்துள்ளார்
சென்னை, மே 13: பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறும்
மாணவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என எஸ்.டி.கூரியர்ஸ் நிறுவனம்
அறிவித்துள்ளது.
இந் நிறுவனத்தின் சார்பில் பிளஸ் டூ தேர்வில் தமிழகத்திலேயே முதல் மூன்று
இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு விருது மற்றும் ரொக்கப் பரிசு
வழங்கப்படும்.
மாநிலத்திலேயே இரண்டாம் இடம் பெறும் மாணவருக்கு ரூ.50 ஆயிரம், மூன்றாம்
இடம் பெறும் மாணவருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.
மேலும் இந்தக் கல்வியாண்டு முதல் அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவம்,
பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் பொருளாதார வசதியின்றி படிப்பைத்
தொடர முடியாத 10 மாணவர்களின் முழுப் படிப்புச் செலவையும்
எஸ்.டி.கூரியர்ஸ் நிறுவனம் ஏற்கும் என அந்த நிறுவனத்தின் நிர்வாக
இயக்குநர் கே. நவாஸ்கனி தெரிவித்துள்ளார்
Thursday, April 30, 2009
TNTJ மாணவர் அணியின் இந்த வார கல்வி சேவை நிகழ்சிகள்
TNTJ மாணவர் அணியின் இந்த வார கல்வி சேவை நிகழ்சிகள்
தர்மபுரியில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்
என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?
நாள் : மே 2 - சனி கிழமை- (இன்ஷா அல்லாஹ் )
நேரம் : காலை 10 மணி
சிறப்புரை : S. சித்திக் M.Tech ( மாநில மாணவர் அணிச் செயலாளர்)
இடம் : PRK கல்யாண மண்டபம், உருது ஸ்கூல் ரோடு, தர்மபுரி
தொடர்பிற்கு : 9443212388, 9894520178 -அபூ சலீம் (தர்மபுரி மாவட்ட மாணவர் அணி செயலாளர்)
மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது
TNTJ. தர்மபுரி மாவட்ட மாணவர் அணி.
லெப்பைகுடி காடு (பெரம்பலுர் மாவட்டம்) -ல் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்
என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?
நாள் : மே 3 - ஞாயிற்று கிழமை- (இன்ஷா அல்லாஹ் )
நேரம் : காலை 10 மணி
சிறப்புரை : Dr.S.ஜாபர் அலி.PhD. (உதவி பேராசிரியர்)
S. சித்திக் M.Tech ( மாநில மாணவர் அணிச் செயலாளர்)
இடம் : அரசு பெண்கள் மேல் நிலை பள்ளி, லெப்பைகுடி காடு, பெரம்பலுர்
தொடர்பிற்கு : 9843398149
மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ
பெரம்பலுர் மாவட்ட மாணவர் அணி.
திருப்பதூரில் (சிவகங்கை மாவட்டம்) TNTJ மாணவர் அணியின் ஒழுக்க பயிற்சி முகாம் (தர்பியா)
நாள் : மே 3- ஞாயிற்று கிழமை- (இன்ஷா அல்லாஹ் )
நேரம் : காலை 10 மணி
இடம் : இமயம் டியூஸன் சென்டர், மேஸ்த்திரியார் தெரு. திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டம்
தொடர்பிற்கு : 9003811959, 9944244632
மாணவர்கள், இளைஞர்கள், அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ
சிவகங்கை மாவட்ட மாணவர் அணி.
தர்மபுரியில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்
என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?
நாள் : மே 2 - சனி கிழமை- (இன்ஷா அல்லாஹ் )
நேரம் : காலை 10 மணி
சிறப்புரை : S. சித்திக் M.Tech ( மாநில மாணவர் அணிச் செயலாளர்)
இடம் : PRK கல்யாண மண்டபம், உருது ஸ்கூல் ரோடு, தர்மபுரி
தொடர்பிற்கு : 9443212388, 9894520178 -அபூ சலீம் (தர்மபுரி மாவட்ட மாணவர் அணி செயலாளர்)
மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது
TNTJ. தர்மபுரி மாவட்ட மாணவர் அணி.
லெப்பைகுடி காடு (பெரம்பலுர் மாவட்டம்) -ல் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்
என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?
நாள் : மே 3 - ஞாயிற்று கிழமை- (இன்ஷா அல்லாஹ் )
நேரம் : காலை 10 மணி
சிறப்புரை : Dr.S.ஜாபர் அலி.PhD. (உதவி பேராசிரியர்)
S. சித்திக் M.Tech ( மாநில மாணவர் அணிச் செயலாளர்)
இடம் : அரசு பெண்கள் மேல் நிலை பள்ளி, லெப்பைகுடி காடு, பெரம்பலுர்
தொடர்பிற்கு : 9843398149
மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ
பெரம்பலுர் மாவட்ட மாணவர் அணி.
திருப்பதூரில் (சிவகங்கை மாவட்டம்) TNTJ மாணவர் அணியின் ஒழுக்க பயிற்சி முகாம் (தர்பியா)
நாள் : மே 3- ஞாயிற்று கிழமை- (இன்ஷா அல்லாஹ் )
நேரம் : காலை 10 மணி
இடம் : இமயம் டியூஸன் சென்டர், மேஸ்த்திரியார் தெரு. திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டம்
தொடர்பிற்கு : 9003811959, 9944244632
மாணவர்கள், இளைஞர்கள், அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ
சிவகங்கை மாவட்ட மாணவர் அணி.
Wednesday, March 11, 2009
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாரதி விருது: மார்ச் 30 கடைசி
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாரதி விருது: மார்ச் 30 கடைசி
கோவை, மார்ச் 10: கலை, இலக்கியம், விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு யுவஸ்ரீ கலா பாரதி விருது வழங்கப்படவுள்ளது.
இவ் விருது பெற விரும்புவோர் மார்ச் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து பாரதி யுவ கேந்திரா அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஒவ்வொரு மாவட்டங்களிலும் இசை, படிப்பு, ஓவியம், விளையாட்டு, சமூகப்பணி, பரத நாட்டியம், பேச்சு, கவிதை, சமூகப்பணி உள்பட அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு யுவஸ்ரீ கலா பாரதி விருது, விவேகானந்தர் விருது ஆகியவை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
பாரதி யுவ கேந்திரா அறக்கட்டளை சார்பில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும்.
விழாவில் மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர், ஆர்ஷ வித்யா பீடம் சுவாமி ததேவானந்த சரஸ்வதி, கருமாத்தூர் விவேகானந்த சேவாஸ்ரம் தலைவர் சுவாமி ஸதா சிவானந்தா, வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமம் சுவாமி சைதன்யானந்தா, சுவாமி கருணானந்தா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இசை, ஓவியம், விளையாட்டு போன்றவற்றில் சிறப்பாக விளங்கும் மாணவ, மாணவிகள் தங்களது சுயகுறிப்பு மற்றும் பரிசு சான்றிதழ் நகல்களை நெல்லை பாலு, நிறுவனர் பாரதி யுவ கேந்திரா, ஜி52, சாந்தி சதன் குடியிருப்பு, கோச்சடை, மதுரை-625016 என்ற முகவரிக்கு மார்ச் 30-ம் தேதிக்குள் அனுப்பலாம் எனத் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி எண்கள்:9443930815, 9442630815.
கோவை, மார்ச் 10: கலை, இலக்கியம், விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு யுவஸ்ரீ கலா பாரதி விருது வழங்கப்படவுள்ளது.
இவ் விருது பெற விரும்புவோர் மார்ச் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து பாரதி யுவ கேந்திரா அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஒவ்வொரு மாவட்டங்களிலும் இசை, படிப்பு, ஓவியம், விளையாட்டு, சமூகப்பணி, பரத நாட்டியம், பேச்சு, கவிதை, சமூகப்பணி உள்பட அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு யுவஸ்ரீ கலா பாரதி விருது, விவேகானந்தர் விருது ஆகியவை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
பாரதி யுவ கேந்திரா அறக்கட்டளை சார்பில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும்.
விழாவில் மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர், ஆர்ஷ வித்யா பீடம் சுவாமி ததேவானந்த சரஸ்வதி, கருமாத்தூர் விவேகானந்த சேவாஸ்ரம் தலைவர் சுவாமி ஸதா சிவானந்தா, வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமம் சுவாமி சைதன்யானந்தா, சுவாமி கருணானந்தா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இசை, ஓவியம், விளையாட்டு போன்றவற்றில் சிறப்பாக விளங்கும் மாணவ, மாணவிகள் தங்களது சுயகுறிப்பு மற்றும் பரிசு சான்றிதழ் நகல்களை நெல்லை பாலு, நிறுவனர் பாரதி யுவ கேந்திரா, ஜி52, சாந்தி சதன் குடியிருப்பு, கோச்சடை, மதுரை-625016 என்ற முகவரிக்கு மார்ச் 30-ம் தேதிக்குள் அனுப்பலாம் எனத் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி எண்கள்:9443930815, 9442630815.
Monday, February 2, 2009
காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் மேல் நிலைப்பள்ளி,,இமாம் ஷாஃபி (ரஹ்) மேல்நிலைப் பள்ளி,,,---மாணவர் பேரவை
காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் மேல் நிலைப்பள்ளி,,இமாம் ஷாஃபி (ரஹ்) மேல்நிலைப் பள்ளி,,,---மாணவர் பேரவை
தளமும் மாணவர் பேரவையும் ஏன்? எதற்கு? எப்படி?
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)...
அன்புள்ள முன்னாள்,இன்னாள் மாணவர்களே!
நலம்!
நலம் பல சூழ்க,
நாம் அனைவரும் ஒரு இடத்தில் குழுமி நாம் கற்ற கல்விக்கூடத்திற்கு ஏதேனும் செய்திடல் வேண்டும்!!
அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் காரண காரியங்களை விவாதித்து, நல்ல விசயங்களில் நிருவாகதிற்கு துணை நின்றிட வேண்டும்;
அதற்கு இடற்பாடுகள் வருகிறபோது துணை நிற்கவும்; தடுமாறுகிற போது ஆலேசனைக் கூறி தடம் மாறாமல் இருக்கவுமே இத்தளம்!!
எனவே, முன்னாள், இன்னாள் மாணவர்களே!!
தளத்தில் உங்களை இனைத்துக்கொண்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்!!!
அதன் தனெழுச்சியே இத்தளமும் மாணவர் பேரவையும்!!!
இவைப்போக, உங்களுடைய கல்விக் கற்ற/கற்கும் நாட்களின் மறக்கமுடியாத
சம்பவங்கள்,
நகைச்சுவைகள்,
உங்களைப்பாதித்த விசயங்கள்,
ஆசிரியர்கள் பற்றி...
இன்னும் பள்ளி, கல்வி மேம்பாடு குறித்து...
எங்களுக்கு மின்னஞ்சல் adiraipost@gmail.com அனுப்பினால் பதிவோம்!
அல்லது பின்னூட்டமாகவும் பதியவும்!
C BOX-ஸையும் பயன் படுத்திக்கொள்ளவும்!!
இன்ஷாஅல்லாஹ்...
மீண்டும் சந்திப்போம்........
காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் மேல் நிலைப்பள்ளி
மாணவர் பேரவை www.kmcadirai.blogspot.com
இமாம் ஷாஃபி (ரஹ்) மேல்நிலைப் பள்ளி
மாணவர் பேரவை www.imamshafi.blogspot.com
தளமும் மாணவர் பேரவையும் ஏன்? எதற்கு? எப்படி?
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)...
அன்புள்ள முன்னாள்,இன்னாள் மாணவர்களே!
நலம்!
நலம் பல சூழ்க,
நாம் அனைவரும் ஒரு இடத்தில் குழுமி நாம் கற்ற கல்விக்கூடத்திற்கு ஏதேனும் செய்திடல் வேண்டும்!!
அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் காரண காரியங்களை விவாதித்து, நல்ல விசயங்களில் நிருவாகதிற்கு துணை நின்றிட வேண்டும்;
அதற்கு இடற்பாடுகள் வருகிறபோது துணை நிற்கவும்; தடுமாறுகிற போது ஆலேசனைக் கூறி தடம் மாறாமல் இருக்கவுமே இத்தளம்!!
எனவே, முன்னாள், இன்னாள் மாணவர்களே!!
தளத்தில் உங்களை இனைத்துக்கொண்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்!!!
அதன் தனெழுச்சியே இத்தளமும் மாணவர் பேரவையும்!!!
இவைப்போக, உங்களுடைய கல்விக் கற்ற/கற்கும் நாட்களின் மறக்கமுடியாத
சம்பவங்கள்,
நகைச்சுவைகள்,
உங்களைப்பாதித்த விசயங்கள்,
ஆசிரியர்கள் பற்றி...
இன்னும் பள்ளி, கல்வி மேம்பாடு குறித்து...
எங்களுக்கு மின்னஞ்சல் adiraipost@gmail.com அனுப்பினால் பதிவோம்!
அல்லது பின்னூட்டமாகவும் பதியவும்!
C BOX-ஸையும் பயன் படுத்திக்கொள்ளவும்!!
இன்ஷாஅல்லாஹ்...
மீண்டும் சந்திப்போம்........
காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் மேல் நிலைப்பள்ளி
மாணவர் பேரவை www.kmcadirai.blogspot.com
இமாம் ஷாஃபி (ரஹ்) மேல்நிலைப் பள்ளி
மாணவர் பேரவை www.imamshafi.blogspot.com
Sunday, January 4, 2009
கேரம் போட்டி: கீழக்கரை பள்ளி மாணவர்கள் முதலிடம்
கேரம் போட்டி: கீழக்கரை பள்ளி மாணவர்கள் முதலிடம்
கீழக்கரை, ஜன. 3: ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை மாவட்ட அளவில் நடைபெற்ற இரட்டையர் கேரம் போட்டியில், கீழக்கரை மஹ்தூமியா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முதல் இடத்தைப் பிடித்தனர்.
ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த இரட்டையர் கேரம் போட்டியில், கீழக்கரை மஹ்தூமியா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் எம். ஹீப்பத்துல்லா, ஏ. அஜ்மீர் இர்சாத் ரசூல் ஆகியோர் வெற்றி பெற்று, முதல் பரிசாக ரூ. 4,000 மற்றும் அதற்கான சான்றிதழையும் பெற்றனர்.
வெற்றிபெற்ற மாணவர்களை, பள்ளியின் தாளாளர் ஏ.கே.எஸ். ஹிதாயத்துல்லா, தலைமை ஆசிரியர் ஏ. ஜரீனா லோட்டஸ், உடற்கல்வி ஆசிரியர் ஐ. பாபு ஆபிரகாம் ஆகியோர் பாராட்டினர்.
மேலும், இவர்கள் மாநில அளவிலான போட்டிக்கும் தேர்வு பெற்றுள்ளனர்.
கீழக்கரை, ஜன. 3: ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை மாவட்ட அளவில் நடைபெற்ற இரட்டையர் கேரம் போட்டியில், கீழக்கரை மஹ்தூமியா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முதல் இடத்தைப் பிடித்தனர்.
ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த இரட்டையர் கேரம் போட்டியில், கீழக்கரை மஹ்தூமியா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் எம். ஹீப்பத்துல்லா, ஏ. அஜ்மீர் இர்சாத் ரசூல் ஆகியோர் வெற்றி பெற்று, முதல் பரிசாக ரூ. 4,000 மற்றும் அதற்கான சான்றிதழையும் பெற்றனர்.
வெற்றிபெற்ற மாணவர்களை, பள்ளியின் தாளாளர் ஏ.கே.எஸ். ஹிதாயத்துல்லா, தலைமை ஆசிரியர் ஏ. ஜரீனா லோட்டஸ், உடற்கல்வி ஆசிரியர் ஐ. பாபு ஆபிரகாம் ஆகியோர் பாராட்டினர்.
மேலும், இவர்கள் மாநில அளவிலான போட்டிக்கும் தேர்வு பெற்றுள்ளனர்.
Monday, September 22, 2008
துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி : யேமன் மாணவர் முதல் பரிசு பெற்றார்


துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி : யேமன் மாணவர் முதல் பரிசு பெற்றார்
http://www.kayalpatnam.in/latest/news-23092008-1
http://www.muduvaivision.com/
http://www.adhikaalai.com/index.php?/en/?????????/?????-???????/???????-?????????????-?????-??????
துபாயில் வருடந்தோறும் சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டிகள் அமீரக துணை அதிபர்,பிரதம அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் ஆதரவில் நடத்தப்பட்டு வருகிறது.
12 ஆவது ஆண்டாக இவ்வாண்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா கண்டங்களைச் சேர்ந்த எண்பத்து ஐந்து நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் யேமன் நாட்டைச் சேர்ந்த ஃபரேஸ் அல் அகம் முதல் பரிசைப் பெற்றார். இவருக்கு திர்ஹம் 250,000 பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
இரண்டாவது இடத்தை லிபியாவின் நூர் அல் தீன் அல் யூனுஸி ( திர்ஹம் 200,000 ), மூன்றாவது இடத்தை குவைத்தின் காலித் அல் அய்னதி ( திர்ஹம் 150,000 ), நான்காவது இடத்தை ஆப்கானிஸ்தானின் மஜித் அப்துல் சமி ( திர்ஹம் 65,000 ), ஐந்தாவது இடத்தை மொரிடானியாவின் அஹ்மது தாலிப் ( திர்ஹம் 60,000 ) ஆறாவது இடத்தை லெபனானின் நாஜிஹ் அல் யாஃபி ( திர்ஹம் 55,000 ), ஏழாவது இடத்தை தைவானின் உசாமா சியான் ( திர்ஹம் 50,000 ), எட்டாவது இடத்தை பாகிஸ்தானின் முஹம்மது ஆலம் ( திர்ஹம் 45,000 ), ஒன்பதாவது இடத்தை கேமரூனின் அப்துல் ரஹ்மான் அட்ஜித் ( திர்ஹம் 40,000 ), பத்தாவது இடத்தை சவுதி அரேபியாவின் தாரிக் அல் லுஹைதான் ( திர்ஹம் 35,000 ) பெற்றனர்.
மேலும் பத்தாவது இடத்திற்குப் பின்னர் எண்பது சதவிகிதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 30,000 மும், 70 முதல் 79 சதவிகித மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 25,000 ம், 70 சதவிகிதத்திற்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 20,000 மும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
சிறந்த குரல் வளத்துக்கான பரிசு மலேசிய மாணவருக்கு வழங்கப்பட்டது.
இப்பரிசுகளை துபாயில் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் வழங்கினார்.
விருது
சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியினையொட்டி வருடந்தோறும் சிறந்த இஸ்லாமிய அறிஞருக்கான விருது வழங்கப்படுகிறது. இவ்வாண்டு இவ்விருது தனிநபருக்கு இல்லாமல் திருக்குர்ஆன் பிரதிகளை அதிக அளவில் அச்சிட்டு வழங்கி வரும் சவுதி அரேபியாவின் மன்னர் பஹத் திருக்குர்ஆன் அச்சகத்துக்கு வழங்கப்பட்டது. இதுவரை 200 மில்லியன் திருக்குர்ஆன் பிரதிகள் இவ்வச்சகத்தின் மூலம் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வருடந்தோறும் 10 மில்லியன் திருக்குர்ஆன் பிரதிகள் இங்கு அச்சிடப்பட்டு வருகின்றன. 30 மில்லியன் திருக்குர்ஆன் பிரதிகள் அச்சிடப்படுவதற்குரிய வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கான பரிசுத்தொகை திர்ஹம் ஒரு மில்லியன் ஆகும். இதன் மூலம் இவ்வச்சகம் இன்னும் பன்மடங்கு விரிவுபடுத்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வருடந்தோரு இப்போட்டிகள் பெருமளவு மக்களைக் கவர்ந்துள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் இப்போட்டியைக் காணவருவது இப்போட்டிக்கு ஏற்பட்டு வரும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திவருவதாக இப்போட்டிக்கான தலைவர் இப்ராஹிம் பூ மெல்ஹா தெரிவித்தார்.
http://www.kayalpatnam.in/latest/news-23092008-1
Thursday, September 18, 2008
ரூ.200 காணாமல் போனதால் 200 மாணவர்களை அறையில் அடைத்து வைத்த ஆசிரியை; மூச்சு திணறி 12 பேர் மயக்கம்
ரூ.200 காணாமல் போனதால் 200 மாணவர்களை அறையில் அடைத்து வைத்த ஆசிரியை; மூச்சு திணறி 12 பேர் மயக்கம்
www.muduvaivision.com
லக்னோ,செப்.18-
ரூ.200 காணாமல் போனதால் ஆசிரியை 200 மாணவர்களை 10 மணி நேரம் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தார். இதில் மூச்சு திணறி 12 பேர் மயக்கம் அடைந்தனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ளது ஜிர்கா கிராமம்.இங்கு அரசு ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையின் பையில் இருந்த ரூ.200 காணாமல் போய் விட்டது.இதை மாணவர்களில் யாரோ ஒருவர் தான் திருடி இருக்க வேண்டும் என்று அவர் கருதினார்.
இதுபற்றி சந்தேகப்படும் மாணவர்களிடம் அவர் விசாரணை நடத்தினார். ஆனால் பணத்தை எடுத்ததாக யாரும் கூறவில்லை.
எனவே அங்கு படித்து வந்த 200 மாணவர்களÛயும் வகுப்பறையில் வைத்து பூட்டும்படி வகுப்பு ஆசிரியைக்கு உத்தரவிட்டார். அவர் 200 மாணவர்களையும் இடநெருக்கடி உள்ள அறைக்குள் அடைத்து பூட்டினார்.தண்ணீர், உணவு எதுவும் கொடுக்கவில்லை.
குறுகிய இடத்தில் அனைவரையும் அடைத்து இருந்தால் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் கதறினார்கள். ஆனாலும் ஆசிரியை கண்டுகொள்ளவில்லை.
மாலையில் வகுப்பு முடிந்த போதும் மாணவர்களை வெளியே அனுப்பவில்லை. அவர்கள் 10 மணி நேரத்துக்கு மேலாக அடைத்து வைக்கபட்டு கிடந்தனர்.
மாணவர்கள் உரிய நேரத்தில் வீடு திரும்பாததால் கவலையடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு தேடி சென்றனர். அப்போது தான் மாணவர்கள் அறைக்குள் அடைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
அப்போதும் அறையை திறக்க ஆசிரியை மறுத்துவிட்டார். இதனால் பெற்றோர்கள் வகுப்பறையின் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அவர்களை மீட்டு வந்தனர். உள்ளே 12 மாணவர்கள் மயங்கி கிடந்தனர்.
இதுபற்றி கல்வித்துறையிடம் பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர்.
www.muduvaivision.com
லக்னோ,செப்.18-
ரூ.200 காணாமல் போனதால் ஆசிரியை 200 மாணவர்களை 10 மணி நேரம் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தார். இதில் மூச்சு திணறி 12 பேர் மயக்கம் அடைந்தனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ளது ஜிர்கா கிராமம்.இங்கு அரசு ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையின் பையில் இருந்த ரூ.200 காணாமல் போய் விட்டது.இதை மாணவர்களில் யாரோ ஒருவர் தான் திருடி இருக்க வேண்டும் என்று அவர் கருதினார்.
இதுபற்றி சந்தேகப்படும் மாணவர்களிடம் அவர் விசாரணை நடத்தினார். ஆனால் பணத்தை எடுத்ததாக யாரும் கூறவில்லை.
எனவே அங்கு படித்து வந்த 200 மாணவர்களÛயும் வகுப்பறையில் வைத்து பூட்டும்படி வகுப்பு ஆசிரியைக்கு உத்தரவிட்டார். அவர் 200 மாணவர்களையும் இடநெருக்கடி உள்ள அறைக்குள் அடைத்து பூட்டினார்.தண்ணீர், உணவு எதுவும் கொடுக்கவில்லை.
குறுகிய இடத்தில் அனைவரையும் அடைத்து இருந்தால் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் கதறினார்கள். ஆனாலும் ஆசிரியை கண்டுகொள்ளவில்லை.
மாலையில் வகுப்பு முடிந்த போதும் மாணவர்களை வெளியே அனுப்பவில்லை. அவர்கள் 10 மணி நேரத்துக்கு மேலாக அடைத்து வைக்கபட்டு கிடந்தனர்.
மாணவர்கள் உரிய நேரத்தில் வீடு திரும்பாததால் கவலையடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு தேடி சென்றனர். அப்போது தான் மாணவர்கள் அறைக்குள் அடைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
அப்போதும் அறையை திறக்க ஆசிரியை மறுத்துவிட்டார். இதனால் பெற்றோர்கள் வகுப்பறையின் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அவர்களை மீட்டு வந்தனர். உள்ளே 12 மாணவர்கள் மயங்கி கிடந்தனர்.
இதுபற்றி கல்வித்துறையிடம் பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர்.
Wednesday, September 3, 2008
துபாயில் நாளை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி
துபாயில் நாளை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி
துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நாளை 04 செப்டம்பர் 2008 வியாழன் மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள ஹோட்டல் லேண்ட்மார்க்கில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்க பொதுச்செயலாளர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்திக் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
சிறப்பு விருந்தினராக அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிறுவனர்களில் ஒருவரும், பாபநாசம் ஆர்.டி.பி. கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் முனைவர் எம்.ஏ. தாவூத் பாட்சா, ஈடிஏ ஸ்டார் சர்வதேசப் பள்ளிகளின் கல்வி இயக்குநர் பேராசிரியர் எஸ்.எம். கலந்தர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற முன்னாள் மாணவர் சங்க விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்ட அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாதிக் காக்கா விழாவில் கௌரவிக்கப்பட இருக்கிறார்.
இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களுக்குத் தெரிந்த பழைய மாணவர்களுக்கும் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முன்னாள் மாணவர் சங்கத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள 050-5489609/050-5356650 எனும் தொலைபேசி இலக்கத்தில் பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
The Organizing Committee of
Alumni of Jamal Mohamed College
UAE Chapter
has the pleasure to invite all the Jamalians to
A Grand IFTHAR Party
Guest of Honour
Dr. M.A. Dawood Batcha
(Founder Patron - JMC Alumni, UAE Chapter)
(Founder & Chairman, RDB College, Papanasam)
Prof. S.M. Khalanthar
(Director of Education – SEMS Group)
(ETA Star International Schools, U.A.E)
will preside over the function
Venue: Landmark Hotel, Level-1
(Nasser Square, Deira, Dubai)
Date: 4th Sep 2008 (Thursday) at 06:00 pm
“We meet to reminisce our college days”
“Your pleasing presence will be cherished by each one of our fellow Jamalians”
For further information, please contact 050-5489609/050-5356650
துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நாளை 04 செப்டம்பர் 2008 வியாழன் மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள ஹோட்டல் லேண்ட்மார்க்கில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்க பொதுச்செயலாளர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்திக் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
சிறப்பு விருந்தினராக அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிறுவனர்களில் ஒருவரும், பாபநாசம் ஆர்.டி.பி. கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் முனைவர் எம்.ஏ. தாவூத் பாட்சா, ஈடிஏ ஸ்டார் சர்வதேசப் பள்ளிகளின் கல்வி இயக்குநர் பேராசிரியர் எஸ்.எம். கலந்தர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற முன்னாள் மாணவர் சங்க விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்ட அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாதிக் காக்கா விழாவில் கௌரவிக்கப்பட இருக்கிறார்.
இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களுக்குத் தெரிந்த பழைய மாணவர்களுக்கும் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முன்னாள் மாணவர் சங்கத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள 050-5489609/050-5356650 எனும் தொலைபேசி இலக்கத்தில் பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
The Organizing Committee of
Alumni of Jamal Mohamed College
UAE Chapter
has the pleasure to invite all the Jamalians to
A Grand IFTHAR Party
Guest of Honour
Dr. M.A. Dawood Batcha
(Founder Patron - JMC Alumni, UAE Chapter)
(Founder & Chairman, RDB College, Papanasam)
Prof. S.M. Khalanthar
(Director of Education – SEMS Group)
(ETA Star International Schools, U.A.E)
will preside over the function
Venue: Landmark Hotel, Level-1
(Nasser Square, Deira, Dubai)
Date: 4th Sep 2008 (Thursday) at 06:00 pm
“We meet to reminisce our college days”
“Your pleasing presence will be cherished by each one of our fellow Jamalians”
For further information, please contact 050-5489609/050-5356650
Wednesday, August 27, 2008
துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி
துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி
துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி எதிர்வரும் 04 செப்டம்பர் 2008 வியாழன் மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள ஹோட்டல் லேண்ட்மார்க்கில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்க பொதுச்செயலாளர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்திக் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
சிறப்பு விருந்தினராக சவுதி அரேபிய ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி ராஜகிரி அப்துல் மாலிக் கலந்து கொள்ள இருக்கிறார். சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற முன்னாள் மாணவர் சங்க விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்ட அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாதிக் காக்கா விழாவில் கௌரவிக்கப்பட இருக்கிறார்.
இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களுக்குத் தெரிந்த பழைய மாணவர்களுக்கும் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முன்னாள் மாணவர் சங்கத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள 050 5489 609 எனும் தொலைபேசி இலக்கத்தில் பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி எதிர்வரும் 04 செப்டம்பர் 2008 வியாழன் மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள ஹோட்டல் லேண்ட்மார்க்கில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்க பொதுச்செயலாளர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்திக் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
சிறப்பு விருந்தினராக சவுதி அரேபிய ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி ராஜகிரி அப்துல் மாலிக் கலந்து கொள்ள இருக்கிறார். சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற முன்னாள் மாணவர் சங்க விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்ட அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாதிக் காக்கா விழாவில் கௌரவிக்கப்பட இருக்கிறார்.
இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களுக்குத் தெரிந்த பழைய மாணவர்களுக்கும் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முன்னாள் மாணவர் சங்கத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள 050 5489 609 எனும் தொலைபேசி இலக்கத்தில் பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Monday, August 25, 2008
கல்லூரி மாணவ, மாணவியருக்கு கட்டுரைப்போட்டி
கல்லூரி மாணவ, மாணவியருக்கு கட்டுரைப்போட்டி
தமிழ் இஸ்லாமியக் கழகத்தின் 13 ஆவது மாநாடு தஞ்சையில் அக்டோபர் 4,5 நாட்களில் நடக்க இருக்கிறது. அதையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஒரு கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது. மொத்தம் ரூ. 10 ஆயிரம் பரிசு தரப்படும்.
இஸ்லாமியர் தமிழர் தொண்டு என்ற தலைப்பில் கையெழுத்தில் பத்துப் பக்கத்துக்குள் கட்டுரை அமையவேண்டும். கல்லூரி மாணவர் என்பதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும்.
இன, மத வேறுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ளாலம். முதல் பரிசு ரூ. 3 ஆயிரம், 2 ஆம் பரிசு ரூ. 1000 ( 2 பேருக்கு ) மூன்றாம் பரிசு ரூ. 500 ( பத்து பேருக்கு )
கட்டுரை அனுப்ப வேண்டிய முகவரி
பொதுச்செயலாளர்
தமிழ் இஸ்லாமிய இலக்கியக் கழகம்
எண் 8 தம்பி சாயபு மரைக்காயர் வீதி
காரைக்கால் 609 002
கடைசி தேதி : 10 செப்டம்பர் 2008
தமிழ் இஸ்லாமியக் கழகத்தின் 13 ஆவது மாநாடு தஞ்சையில் அக்டோபர் 4,5 நாட்களில் நடக்க இருக்கிறது. அதையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஒரு கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது. மொத்தம் ரூ. 10 ஆயிரம் பரிசு தரப்படும்.
இஸ்லாமியர் தமிழர் தொண்டு என்ற தலைப்பில் கையெழுத்தில் பத்துப் பக்கத்துக்குள் கட்டுரை அமையவேண்டும். கல்லூரி மாணவர் என்பதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும்.
இன, மத வேறுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ளாலம். முதல் பரிசு ரூ. 3 ஆயிரம், 2 ஆம் பரிசு ரூ. 1000 ( 2 பேருக்கு ) மூன்றாம் பரிசு ரூ. 500 ( பத்து பேருக்கு )
கட்டுரை அனுப்ப வேண்டிய முகவரி
பொதுச்செயலாளர்
தமிழ் இஸ்லாமிய இலக்கியக் கழகம்
எண் 8 தம்பி சாயபு மரைக்காயர் வீதி
காரைக்கால் 609 002
கடைசி தேதி : 10 செப்டம்பர் 2008
Saturday, July 12, 2008
10ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!
10ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! உடனே
விண்ணப்பிப்பீர்!!
1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவ -
மாணவியருக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலக்கெடு
31-07-2008 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையைப் பெற
விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பப்படிவத்தை அனைத்து
ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க
வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை
சரிபார்த்து வகுப்பு, வருமானம், இனவாரியாக தொகுக்கப்பட்ட, விவரங்களை உரிய
படிவம் மற்றும் குறுந்தகட்டுடன் பதிவு செய்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திலுள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலருக்கு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் அனுப்பி
வைக்க வேண்டும்.
இதுபற்றிய முழு தகவல்களை
www.tn.gov.in/documents/bcmw/prematricscholarship
www.minorityaffairs.gov.in
என்ற இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார
மேம்பாட்டுக் கழக ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.
இந்தக் கல்வி உதவித் தொகையை, வசதியற்ற முஸ்லிம் மாணவர் அனைவருக்கும்
கிடைக்கச் செய்யும் வகையில் இந்த அறிவிப்பை அச்சிட்டு அல்லது பிரதி
எடுத்து பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும்
வினியோகிக்கவும், அறிவிக்கச் செய்யவும், உதவித் தொகை படிவங்களை நிரப்பிக்
கொடுக்கவும் முனைப்பு காட்ட பிரைமரி முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் லீக்
இளைஞர் அணி, முஸ்லிம் மாணவர் பேரவையினரை கேட்டுக் கொள்கிறோம்.
Message
Mubarack rasvi
Kuwait Indian Union Muslim Leauge
10ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! உடனே
விண்ணப்பிப்பீர்!!
1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவ -
மாணவியருக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலக்கெடு
31-07-2008 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையைப் பெற
விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பப்படிவத்தை அனைத்து
ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க
வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை
சரிபார்த்து வகுப்பு, வருமானம், இனவாரியாக தொகுக்கப்பட்ட, விவரங்களை உரிய
படிவம் மற்றும் குறுந்தகட்டுடன் பதிவு செய்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திலுள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலருக்கு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் அனுப்பி
வைக்க வேண்டும்.
இதுபற்றிய முழு தகவல்களை
www.tn.gov.in/documents/bcmw/prematricscholarship
www.minorityaffairs.gov.in
என்ற இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார
மேம்பாட்டுக் கழக ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.
இந்தக் கல்வி உதவித் தொகையை, வசதியற்ற முஸ்லிம் மாணவர் அனைவருக்கும்
கிடைக்கச் செய்யும் வகையில் இந்த அறிவிப்பை அச்சிட்டு அல்லது பிரதி
எடுத்து பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும்
வினியோகிக்கவும், அறிவிக்கச் செய்யவும், உதவித் தொகை படிவங்களை நிரப்பிக்
கொடுக்கவும் முனைப்பு காட்ட பிரைமரி முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் லீக்
இளைஞர் அணி, முஸ்லிம் மாணவர் பேரவையினரை கேட்டுக் கொள்கிறோம்.
Message
Mubarack rasvi
Kuwait Indian Union Muslim Leauge
விண்ணப்பிப்பீர்!!
1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவ -
மாணவியருக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலக்கெடு
31-07-2008 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையைப் பெற
விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பப்படிவத்தை அனைத்து
ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க
வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை
சரிபார்த்து வகுப்பு, வருமானம், இனவாரியாக தொகுக்கப்பட்ட, விவரங்களை உரிய
படிவம் மற்றும் குறுந்தகட்டுடன் பதிவு செய்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திலுள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலருக்கு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் அனுப்பி
வைக்க வேண்டும்.
இதுபற்றிய முழு தகவல்களை
www.tn.gov.in/documents/bcmw/prematricscholarship
www.minorityaffairs.gov.in
என்ற இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார
மேம்பாட்டுக் கழக ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.
இந்தக் கல்வி உதவித் தொகையை, வசதியற்ற முஸ்லிம் மாணவர் அனைவருக்கும்
கிடைக்கச் செய்யும் வகையில் இந்த அறிவிப்பை அச்சிட்டு அல்லது பிரதி
எடுத்து பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும்
வினியோகிக்கவும், அறிவிக்கச் செய்யவும், உதவித் தொகை படிவங்களை நிரப்பிக்
கொடுக்கவும் முனைப்பு காட்ட பிரைமரி முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் லீக்
இளைஞர் அணி, முஸ்லிம் மாணவர் பேரவையினரை கேட்டுக் கொள்கிறோம்.
Message
Mubarack rasvi
Kuwait Indian Union Muslim Leauge
10ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! உடனே
விண்ணப்பிப்பீர்!!
1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவ -
மாணவியருக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலக்கெடு
31-07-2008 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையைப் பெற
விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பப்படிவத்தை அனைத்து
ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க
வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை
சரிபார்த்து வகுப்பு, வருமானம், இனவாரியாக தொகுக்கப்பட்ட, விவரங்களை உரிய
படிவம் மற்றும் குறுந்தகட்டுடன் பதிவு செய்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திலுள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலருக்கு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் அனுப்பி
வைக்க வேண்டும்.
இதுபற்றிய முழு தகவல்களை
www.tn.gov.in/documents/bcmw/prematricscholarship
www.minorityaffairs.gov.in
என்ற இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார
மேம்பாட்டுக் கழக ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.
இந்தக் கல்வி உதவித் தொகையை, வசதியற்ற முஸ்லிம் மாணவர் அனைவருக்கும்
கிடைக்கச் செய்யும் வகையில் இந்த அறிவிப்பை அச்சிட்டு அல்லது பிரதி
எடுத்து பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும்
வினியோகிக்கவும், அறிவிக்கச் செய்யவும், உதவித் தொகை படிவங்களை நிரப்பிக்
கொடுக்கவும் முனைப்பு காட்ட பிரைமரி முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் லீக்
இளைஞர் அணி, முஸ்லிம் மாணவர் பேரவையினரை கேட்டுக் கொள்கிறோம்.
Message
Mubarack rasvi
Kuwait Indian Union Muslim Leauge
Monday, July 7, 2008
கேரளாவில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி முகாம்
Expa registration closes on 20th July
Plase register now
http://expascan.registerhere.org
CIGI
(CENTRE FOR INFORMATION & GUIDANCE, INDIA -CIGI)
Golf Link Road , Calicut – 17, Tel 91-495-2356059, 2351377 cigihq@cigi.org, www.cigi.org
announces
ExpaScan' 2008
(A five-day residential camp designed specifically for expatriate students of 9 to 12 std.)
"Celebrate Learning - Experience Living"
On
2008' August 13,14,15,16 & 17
at
CIGI Campus
Chevayoor, Calicut
Please ensure this golden opportunity is utilized by YOUR Child
For registration and details please call logn on Now :
http://expascan.registerhere.org
or call
Adv. Backer Ali
050-4599159
Plase register now
http://expascan.registerhere.org
CIGI
(CENTRE FOR INFORMATION & GUIDANCE, INDIA -CIGI)
Golf Link Road , Calicut – 17, Tel 91-495-2356059, 2351377 cigihq@cigi.org, www.cigi.org
announces
ExpaScan' 2008
(A five-day residential camp designed specifically for expatriate students of 9 to 12 std.)
"Celebrate Learning - Experience Living"
On
2008' August 13,14,15,16 & 17
at
CIGI Campus
Chevayoor, Calicut
Please ensure this golden opportunity is utilized by YOUR Child
For registration and details please call logn on Now :
http://expascan.registerhere.org
or call
Adv. Backer Ali
050-4599159
Thursday, June 5, 2008
துபாயில் கீழக்கரை பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
துபாயில் கீழக்கரை பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
துபாயில் கீழக்கரை ஹமீதிய்யா மெட்ரிகுலேஷன் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை ( 06 ஜுன் 2008 ) மாலை 5.30 மணிக்கு அஸ்கான் சமுதாயக்கூடத்தில் நடைபெற இருப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீதுயாசின் 050 475 3052 தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தொடர்புக்கு : 050 4753052 / 050 3875658 / 050 3727047
துபாயில் கீழக்கரை ஹமீதிய்யா மெட்ரிகுலேஷன் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை ( 06 ஜுன் 2008 ) மாலை 5.30 மணிக்கு அஸ்கான் சமுதாயக்கூடத்தில் நடைபெற இருப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீதுயாசின் 050 475 3052 தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தொடர்புக்கு : 050 4753052 / 050 3875658 / 050 3727047
Tuesday, June 3, 2008
வசதியற்ற, மாணவர்களுக்கு இலவசக் கல்வி
வசதியற்ற, மாணவர்களுக்கு இலவசக் கல்வி
இஸ்லாமிய ஏழை மாணவ,மாணவியர் இலவசமாக விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்கவும்,ஏழைக் குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் சேரவும் உடனடியாக அணுகவும்.
டாக்டர் சையத் எம்.எம்.அமீன்
தலைவர், ஏழை மாணவர் இல்லம்
செயலாளர்
ஏழைக் குழந்தை மற்றும் முதியோர் இல்லம்
36 ஜானி ஜஹான் கான் சாலை
ராயப்பேட்டை
சென்னை 600 014
தொலைபேசி : 28481344
இஸ்லாமிய ஏழை மாணவ,மாணவியர் இலவசமாக விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்கவும்,ஏழைக் குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் சேரவும் உடனடியாக அணுகவும்.
டாக்டர் சையத் எம்.எம்.அமீன்
தலைவர், ஏழை மாணவர் இல்லம்
செயலாளர்
ஏழைக் குழந்தை மற்றும் முதியோர் இல்லம்
36 ஜானி ஜஹான் கான் சாலை
ராயப்பேட்டை
சென்னை 600 014
தொலைபேசி : 28481344
Monday, May 26, 2008
சென்னையில் பஸ் மோதி எம்பிபிஎஸ் மாணவர் ஷேக் அப்துல்லா பலி
சென்னையில் பஸ் மோதி எம்பிபிஎஸ் மாணவர் பலி
சென்னையில் பைக்கில் சென்ற முதலமாண்டு எம்பிபிஎஸ் மாணவர் அரசுப் பேருந்து மோதி பலியானார்.
விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் இச் சம்பவம் நடந்தது. இதையடுத்து அந்த பஸ் டிரைவர் தப்பியோடிவிட்டார்.
கோடம்பாக்கம் டாக்டர் சுப்பராயர் நகரைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா (21) என்ற அந்த மாணவர், போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார்.
நேற்று காலை தனது நண்பரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆற்காடு ரோட்டில் சென்றபோது அய்யப்பன்தாங்கல் செல்லும் 11 எச் அரசுப் பேருந்து பின்னால் இருந்து பைக் மீது மோதியது.
இதில் அப்துல்லா அந்த இடத்திலேயே பலியானார்.
சென்னையில் பைக்கில் சென்ற முதலமாண்டு எம்பிபிஎஸ் மாணவர் அரசுப் பேருந்து மோதி பலியானார்.
விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் இச் சம்பவம் நடந்தது. இதையடுத்து அந்த பஸ் டிரைவர் தப்பியோடிவிட்டார்.
கோடம்பாக்கம் டாக்டர் சுப்பராயர் நகரைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா (21) என்ற அந்த மாணவர், போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார்.
நேற்று காலை தனது நண்பரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆற்காடு ரோட்டில் சென்றபோது அய்யப்பன்தாங்கல் செல்லும் 11 எச் அரசுப் பேருந்து பின்னால் இருந்து பைக் மீது மோதியது.
இதில் அப்துல்லா அந்த இடத்திலேயே பலியானார்.
Wednesday, May 7, 2008
துபாயில் கல்வி உதவித்தொகைக்கான நுழைவுத் தேர்வு
Common entrance test for Indian students to be held in Dubai
Dubai: The Common Entrance Test for the Scholarship Programme for Diaspora Children (SPDC-2008), conducted by the Ministry of Overseas Indian Affairs, Government of India, will be held at 10.30am (UAE time) on Sunday, 18th May 2008, at the Indian High School, Oud Metha Road, Dubai.
Entrance will be from Gate No. 4 of the school. For identification purpose, candidates should produce their original passport and a copy thereof.
Dubai: The Common Entrance Test for the Scholarship Programme for Diaspora Children (SPDC-2008), conducted by the Ministry of Overseas Indian Affairs, Government of India, will be held at 10.30am (UAE time) on Sunday, 18th May 2008, at the Indian High School, Oud Metha Road, Dubai.
Entrance will be from Gate No. 4 of the school. For identification purpose, candidates should produce their original passport and a copy thereof.
Labels:
இந்தியா,
உதவித்தொகை,
துபாய்,
நுழைவுத்தேர்வு,
மாணவர்
Wednesday, April 9, 2008
இஸ்லாத்தை பற்றி சென்னை பொறியியல் கல்லூரி மாணவர்களின் ......
இஸ்லாத்தை பற்றி சென்னை பொறியியல் கல்லூரி மாணவர்களின் கீழ்காணும் கேள்விகளுக்கு மருத்துவர் K.V.S .ஹபீப் முஹம்மது அவர்கள் தொலைகாட்சியில் மானுட வசந்தம் நிகழ்சி மூலம் அளித்த பதில் இதோ உங்கள் முன் www.tamilmuslimtube.com ல்
Part 1.இறைவனை ஏன் நம்ப வேண்டும்? நல்ல காரியங்கள் பல செய்து நாத்திகராக வாழ முடியாதா?
Part 2.குர்'ஆன் அன்பை போதிக்கிறது, ஆனால் முஸ்லிம்கள் ஏன் மனித நேயமற்றவர்களாக நடந்து கொள்கிறார்கள்?
Part 3.இந்துக்கள் பசுவை தெய்வமாக வணங்கும் போது, முஸ்லிம்கள் அதை உணவாக உண்ணலாமா?
Part 4.முஸ்லிம்கள் உபயோகப்படுத்தும் "786"ன் முக்கியத்துவம் என்ன?
Part 5.இஸ்லாத்திற்கும் , கிறிஸ்துவதிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
Part 6.இறைவன் ஏன் பல வேத நூல்களை படைக்க வேண்டும், ஒன்றை மட்டும் படைத்திருந்தால் உலகில் குழப்பம் ஏற்படாதல்லவா?
Part 7.முஸ்லிம்கள் கொடுக்கும் புனித பொருட்களை இந்துக்கள் உபயோகிக்கும் போது இந்துக்களின் புனித பொருட்களை முஸ்லிம்கள் வாங்கி ஏன் உபயோகிப்பதில்லை?
thamizhmuslim@gmail.com
Part 1.இறைவனை ஏன் நம்ப வேண்டும்? நல்ல காரியங்கள் பல செய்து நாத்திகராக வாழ முடியாதா?
Part 2.குர்'ஆன் அன்பை போதிக்கிறது, ஆனால் முஸ்லிம்கள் ஏன் மனித நேயமற்றவர்களாக நடந்து கொள்கிறார்கள்?
Part 3.இந்துக்கள் பசுவை தெய்வமாக வணங்கும் போது, முஸ்லிம்கள் அதை உணவாக உண்ணலாமா?
Part 4.முஸ்லிம்கள் உபயோகப்படுத்தும் "786"ன் முக்கியத்துவம் என்ன?
Part 5.இஸ்லாத்திற்கும் , கிறிஸ்துவதிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
Part 6.இறைவன் ஏன் பல வேத நூல்களை படைக்க வேண்டும், ஒன்றை மட்டும் படைத்திருந்தால் உலகில் குழப்பம் ஏற்படாதல்லவா?
Part 7.முஸ்லிம்கள் கொடுக்கும் புனித பொருட்களை இந்துக்கள் உபயோகிக்கும் போது இந்துக்களின் புனித பொருட்களை முஸ்லிம்கள் வாங்கி ஏன் உபயோகிப்பதில்லை?
thamizhmuslim@gmail.com
Saturday, January 19, 2008
அது ஒரு பொற்காலம்
அது ஒரு பொற்காலம்
(அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா )
கடந்த காலத்தை,அதிலும் குறிப்பாகப் பள்ளிக் கூட வாழ்க்கையை மலரும் நினைவுகளாக மனதில் அசை போட்டுப் பார்ப்பதில் கிடைக்கும் இன்பம் அலாதியானது. சொந்த ஊரில் உள்ள பள்ளிக் கூடங்களில் படித்த மாணவர்களுக்குக் கிடைக்கும் இன்பத்தை விட வெளியூரில் விடுதியில் தங்கிப் படித்த மாணவர்களுக்குக் கிடைக்கும் இன்பமே தனி. அந்த இன்பத்தை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத் தான் தெரியும். ஒருவருக்கொருவர் மனம் விட்டுப்பழகிய பழக்கம், குடும்ப விஷயங்கள் வரை பகிர்ந்துக் கொண்டு தேடிய ஆறதல், இறுதியாகப் பள்ளிப் படிப்பை நிறைவு செய்து பிரிந்து சென்ற சோகம், ஆகிய இவற்றில் எதைத்தான் மறக்க முடியும்?
1970 ஆம் ஆண்டு ஆக்கூர் ஓரியண்டலில் அடியெடுத்து வைத்து ஆறு ஆண்டுக்காலம் அற்புதமான கல்வியைக் கற்று 1976 ஆம் ஆண்டு நூறு சதவிகிதத் தேர்ச்சியைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த நாங்கள் இன்றளவும் எங்களால் மறக்க முடியாத அந்த நற்காலத்தை மனதால் அசைபோடுகிறோம். ஆம் அது ஒரு பொற்காலம்.
தாய் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரவி வாழ்ந்துக் கொண்டிருக்கும் முன்னாள் மாணவர்களாகிய எங்கள் இதயத்தில் நீங்கா இடம் பிடித்த 'ஆக்கூர் ஓரயண்டல் அரபி மேல் நிலைப் பள்ளி' இன்று பொன் விழா காண்பதை அறிந்து எங்கள் உள்ளமெல்லாம் குளிருகிறது.
பள்ளி வாழ்க்கையை முடித்து நாங்கள் வெளியேறினாலும் எங்களில் சிலர் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் வந்து எங்களை உருவாக்கிய எங்கள் பள்ளியை பார்வையிட்டிருக்கிறோம். இடையில் சில காலம் பள்ளியின் வளர்ச்சியில் சற்று தளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் தற்போதைய தாளாளர் கண்ணியத்திற்குரிய அல்ஹாஜ் A.முஹம்மது இக்பால் அவர்கள் நிர்வாகப் பொறுப்பை ஏற்றது முதல், முன்னேற்றப் பாதையில் எங்கள் பள்ளி பீடு நடை போடத் தொடங்கியிருப்பதை காணும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
உள்ளம் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள உணவுக் கூடம், மனதைக் கொள்ளைக் கொண்ட புதிய மாணவர் விடுதி,அதி நவீன வசதிகளுடன் கூடிய அழகான வகுப்பறைகள்,எழில் மிகுந்த இறையில்லம்,ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, சுவையான உணவு, சுத்தமான சுற்றுப் புறச்சூழல், ஆகா! மெய்மறந்து நின்றோம். மாணவனாக ஆறாம் வகுப்பில் சேர்ந்து மறுபடியும் படிக்கத் தொடங்குவோமா! என்று உள்ளம் ஏங்கியது. சாத்தியமில்லாத கற்பனைகள் கூட சில சமயம் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவதுண்டு.
இது வரை இப் பள்ளி அடைந்திருக்கும் அசுர வளர்ச்சியைக் காணும் போது, இன்ஷா அல்லாஹ் இனியும் அடையப் போகும் அபரிமிதமான வளர்ச்;சி இதோ நம் கண் முன்னே தெரிகிறது.இப்போது நடைபெறும் பொன் விழா நிகழ்ச்சிகள் அதற்குக் கட்டியம் கூறுகின்றன. பொன் விழா காணும் இந்தப் பொன்னான 'ஓரியண்டல் அரபி மேல் நிலைப்பள்ளி' என்னும் மாபெரும் கல்விக் கடலில் நாங்களும் ஒரு காலத்தில் மூழ்கி முத்தெடுத்தவர்கள் என்பதை நினைக்கும்போது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது.
இந்த ஆக்கூர் ஓரியண்டல் எங்களுக்கு அறிவைத் தந்தது, ஆற்றலைத் தந்தது, அனுபவங்களைத் தந்தது, அநேக நண்பர்களைத் தந்தது, மனப்பக்குவத்தைத் தந்தது, மார்க்க ஞானத்தைத் தந்தது, காலமெல்லாம் நேர் வழி நடக்க எங்கள் கரம் பிடித்து நடை பழக்கியது.
இம்மை மறுமை ஈருலகக் கல்வியையும் ஒர சேரப் பயில எங்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு, தொழுகை நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளில் இன்றளவும் நாங்கள் நின்றொழுக எங்களுக்குக் கிடைத்த அருமையானப் பயிற்சி, நல்லொழுக்கத்துடன் நாங்கள் வாழ எங்களுக்கு விதிக்கப்பட்ட நியாயமான கட்டுப்பாடுகள், ஆகிய இவை தான் இன்று நாங்கள் தூயவர்களாக வாழ்வதற்குத் துணை நின்றவை என்றால் அதற்கு மூல முதற்காரணமாக அமைந்த எங்கள் ஆக்கூர் ஓரியண்டலை நாங்கள் எப்படி மறக்கமுடியும்?
பள்ளி இறுதி வகுப்பை இனிதே நிறைவு செய்து உயர் கல்வி கற்பதற்காக நாங்கள் உயர் கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற போது தான் நாங்கள் கல்வி பயின்ற ஆக்கூர் ஓரியண்டலின் மகிமையைப் புரிந்துக் கொண்டோம். பிற கல்வி நிறுவனங்களிலிருந்து வந்து சேர்ந்த மாணவர்களை விட நாங்கள் உயர்வாக மதிக்கப்பட்டோம். அந்த அளவுக்கு எங்கள் கல்வியின் தரமும் ஒழுக்கத்தின் தரமும் உயர்வானதாக இருந்தது. எங்களுக்குப் பெருமையாகவும் இருந்தது. இந்தப் பெருமையும் புகழும், உயர்;ந்த கல்வியையும் உன்னத நல்லொழுக்கத்தையும் எங்களுக்குப் போதித்து, எங்களை நல்வழிப்படுத்திய எங்கள் ஆசிரியப் பெருந்தகைகளையும், எங்களின் உயர்வுக்குக் காரணமாகிய ஆக்கூர் ஓரியண்டல் என்னும் இந்த அற்புத நிறுவனத்தையுமே சாரும்.
எங்களுக்கு நற்கல்வியையும் நல்லொழுக்கத்தையும் போதித்த நல்லாசிரியர்களில் யாரை நாங்கள் மறக்க முடியும்? அவர்களில் சிலர் மறைந்து விட்டனர். பலர் ஓய்வு பெற்று விட்டனர். ஆனால் எங்கள் நெஞ்சங்களில் என்றென்றும் நிறைந்து வாழ்கின்றனர். அறிஞர் பெருமக்களையும் ஆன்றோர்களiயும் சான்றோர்களையும் உருவாக்கிய ஆசிரியர்களாகிய அந்த அறிவு ஜீவிகள் ஒவ்வொருவரைப்பற்றியும் ஓராயிரம் வரிகள் எழுதலாம். எவ்வளவு எழுதினாலும் அந்த நல்லாசிரியர்கள் எங்களுக்குப் போதித்த நற்கல்விக்கும்
நல்லொழுக்கத்திற்கும் அவை போதுமான நன்றிக் கடன் ஆகாது. இன்றளவும் சக நண்பர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது அந்த அறிஞர் பெருமக்களை நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.
பல்வேறு கால கட்டங்களிலும் எண்ணற்ற சிரமங்களுக்கு மத்தியில் விடுதி நிர்வாகத்தை திறம்பட நடத்திச் சென்ற, இறையடி சேர்ந்து விட்ட முன்னாள் தாளாளர்களின் மறுமைப் பேற்றுக்காக மனமாற இறைவனை இறைஞ்சுகிறோம். தன்னலம் கருதாது பாடுபட்ட அந்த தயாள உள்ளங்களை என்றென்றும் நினைவில் வைத்திருப்போம்.
தத்தம் இல்லங்களில் நடைபெற்ற விருந்து வைபவங்களின் போது எங்களையும் தங்கள் குடும்பத்தினர்களாக எண்ணி அத்துனை பேருக்கும் அறுசுவை விருந்தளித்து கௌரவப்படுத்திய ஆக்கூர் வாழ் மக்களை எப்படி மறக்க முடியும்? எங்களை கௌரவித்த அந்தக் கொடை வள்ளல்களை, இம்மையிலும் மறுமையிலும் இறைவன் கௌரவிப்பானாக!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து ஆக்கூரில் சங்கமித்தோம். காலமெல்லாம் பயன் தரும் கல்வியை திறம்படக் கற்பதில் கவனம் செலுத்தினோம். கள்ளம் கபடமில்லாமல் பழகினோம். ஒன்றாக உண்டோம், உறங்கினோம்,ஓடி விளையாடினோம். ஒருவருக்கொருவர் உதவியாய் ஒத்தாசையாய் இருந்து கவலை மறந்து காலம் கழித்தோம். பள்ளி வாழ்க்கை நிறைவடைந்த போது ஆரத்தழுவி கண்ணீர் மல்க பிரியா விடை பெற்றோம். இனி எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ?
ஆக்கூர் ஓரியண்டலில் நாங்கள் வாழ்ந்த அற்புத வாழ்க்கை 30 ஆண்டுகளுக்கு முன் நிறைவடைந்து விட்டது.ஆனால் அந்தப் பசுமையான நினைவுகள் மட்டும் பசுமரத்தாணிபோல் இன்றும் எங்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்று விட்டது. ஆம் அது ஒரு பொற்காலம்.
நாங்கள் இருந்து பயின்ற வகுப்பறைகள் அதி நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடிக் கட்டடங்களாகிவிட்டன. நாங்கள் கட்டாந்தரையில் அமர்ந்து உண்ட, ஓலை வேயப்பட்ட உணவுக் கூடம் இப்போது கண்ணைக் கவரும் உணவுக் கூடமாக மிளிர்கிறது. நெரிசலுடன் நாங்கள் தங்கியிருந்த மாணவர் விடுதி இன்று விசாலமான விடுதியாகப் பரிணமித்துள்ளது. வகுப்பறையை தொழுகைக் கூடமாக்கி நாங்கள் தொழுகை நடத்தியது அந்தக் காலம். இப்போது எழில்மிகுந்த இறையில்லம் கம்பீரமாகக் காட்சி தருகிறது. உயர் நிலைப் பள்ளியாக இருந்தது இப்போது மேல் நிலைப் பள்ளியாக உயர்வு பெற்றுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு எங்கள் பள்ளி அடைந்து வரும் முன்னேற்றத்தைக் கண்டு நாங்கள் பூரிப்படைகிறோம். வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.
இந்தக் கல்விக் கூடத்திலிருந்து உருவான எண்ணற்ற தாரகைகள் சமுதாய வானில் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் ஆயிரமாயிரம் அறிவு ஜீவிகளை உருவாக்க இந்த 'ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல் நிலைப் பள்ளி' தன் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறது.
masdookaa@yahoo.com
(அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா )
கடந்த காலத்தை,அதிலும் குறிப்பாகப் பள்ளிக் கூட வாழ்க்கையை மலரும் நினைவுகளாக மனதில் அசை போட்டுப் பார்ப்பதில் கிடைக்கும் இன்பம் அலாதியானது. சொந்த ஊரில் உள்ள பள்ளிக் கூடங்களில் படித்த மாணவர்களுக்குக் கிடைக்கும் இன்பத்தை விட வெளியூரில் விடுதியில் தங்கிப் படித்த மாணவர்களுக்குக் கிடைக்கும் இன்பமே தனி. அந்த இன்பத்தை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத் தான் தெரியும். ஒருவருக்கொருவர் மனம் விட்டுப்பழகிய பழக்கம், குடும்ப விஷயங்கள் வரை பகிர்ந்துக் கொண்டு தேடிய ஆறதல், இறுதியாகப் பள்ளிப் படிப்பை நிறைவு செய்து பிரிந்து சென்ற சோகம், ஆகிய இவற்றில் எதைத்தான் மறக்க முடியும்?
1970 ஆம் ஆண்டு ஆக்கூர் ஓரியண்டலில் அடியெடுத்து வைத்து ஆறு ஆண்டுக்காலம் அற்புதமான கல்வியைக் கற்று 1976 ஆம் ஆண்டு நூறு சதவிகிதத் தேர்ச்சியைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த நாங்கள் இன்றளவும் எங்களால் மறக்க முடியாத அந்த நற்காலத்தை மனதால் அசைபோடுகிறோம். ஆம் அது ஒரு பொற்காலம்.
தாய் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரவி வாழ்ந்துக் கொண்டிருக்கும் முன்னாள் மாணவர்களாகிய எங்கள் இதயத்தில் நீங்கா இடம் பிடித்த 'ஆக்கூர் ஓரயண்டல் அரபி மேல் நிலைப் பள்ளி' இன்று பொன் விழா காண்பதை அறிந்து எங்கள் உள்ளமெல்லாம் குளிருகிறது.
பள்ளி வாழ்க்கையை முடித்து நாங்கள் வெளியேறினாலும் எங்களில் சிலர் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் வந்து எங்களை உருவாக்கிய எங்கள் பள்ளியை பார்வையிட்டிருக்கிறோம். இடையில் சில காலம் பள்ளியின் வளர்ச்சியில் சற்று தளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் தற்போதைய தாளாளர் கண்ணியத்திற்குரிய அல்ஹாஜ் A.முஹம்மது இக்பால் அவர்கள் நிர்வாகப் பொறுப்பை ஏற்றது முதல், முன்னேற்றப் பாதையில் எங்கள் பள்ளி பீடு நடை போடத் தொடங்கியிருப்பதை காணும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
உள்ளம் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள உணவுக் கூடம், மனதைக் கொள்ளைக் கொண்ட புதிய மாணவர் விடுதி,அதி நவீன வசதிகளுடன் கூடிய அழகான வகுப்பறைகள்,எழில் மிகுந்த இறையில்லம்,ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, சுவையான உணவு, சுத்தமான சுற்றுப் புறச்சூழல், ஆகா! மெய்மறந்து நின்றோம். மாணவனாக ஆறாம் வகுப்பில் சேர்ந்து மறுபடியும் படிக்கத் தொடங்குவோமா! என்று உள்ளம் ஏங்கியது. சாத்தியமில்லாத கற்பனைகள் கூட சில சமயம் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவதுண்டு.
இது வரை இப் பள்ளி அடைந்திருக்கும் அசுர வளர்ச்சியைக் காணும் போது, இன்ஷா அல்லாஹ் இனியும் அடையப் போகும் அபரிமிதமான வளர்ச்;சி இதோ நம் கண் முன்னே தெரிகிறது.இப்போது நடைபெறும் பொன் விழா நிகழ்ச்சிகள் அதற்குக் கட்டியம் கூறுகின்றன. பொன் விழா காணும் இந்தப் பொன்னான 'ஓரியண்டல் அரபி மேல் நிலைப்பள்ளி' என்னும் மாபெரும் கல்விக் கடலில் நாங்களும் ஒரு காலத்தில் மூழ்கி முத்தெடுத்தவர்கள் என்பதை நினைக்கும்போது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது.
இந்த ஆக்கூர் ஓரியண்டல் எங்களுக்கு அறிவைத் தந்தது, ஆற்றலைத் தந்தது, அனுபவங்களைத் தந்தது, அநேக நண்பர்களைத் தந்தது, மனப்பக்குவத்தைத் தந்தது, மார்க்க ஞானத்தைத் தந்தது, காலமெல்லாம் நேர் வழி நடக்க எங்கள் கரம் பிடித்து நடை பழக்கியது.
இம்மை மறுமை ஈருலகக் கல்வியையும் ஒர சேரப் பயில எங்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு, தொழுகை நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளில் இன்றளவும் நாங்கள் நின்றொழுக எங்களுக்குக் கிடைத்த அருமையானப் பயிற்சி, நல்லொழுக்கத்துடன் நாங்கள் வாழ எங்களுக்கு விதிக்கப்பட்ட நியாயமான கட்டுப்பாடுகள், ஆகிய இவை தான் இன்று நாங்கள் தூயவர்களாக வாழ்வதற்குத் துணை நின்றவை என்றால் அதற்கு மூல முதற்காரணமாக அமைந்த எங்கள் ஆக்கூர் ஓரியண்டலை நாங்கள் எப்படி மறக்கமுடியும்?
பள்ளி இறுதி வகுப்பை இனிதே நிறைவு செய்து உயர் கல்வி கற்பதற்காக நாங்கள் உயர் கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற போது தான் நாங்கள் கல்வி பயின்ற ஆக்கூர் ஓரியண்டலின் மகிமையைப் புரிந்துக் கொண்டோம். பிற கல்வி நிறுவனங்களிலிருந்து வந்து சேர்ந்த மாணவர்களை விட நாங்கள் உயர்வாக மதிக்கப்பட்டோம். அந்த அளவுக்கு எங்கள் கல்வியின் தரமும் ஒழுக்கத்தின் தரமும் உயர்வானதாக இருந்தது. எங்களுக்குப் பெருமையாகவும் இருந்தது. இந்தப் பெருமையும் புகழும், உயர்;ந்த கல்வியையும் உன்னத நல்லொழுக்கத்தையும் எங்களுக்குப் போதித்து, எங்களை நல்வழிப்படுத்திய எங்கள் ஆசிரியப் பெருந்தகைகளையும், எங்களின் உயர்வுக்குக் காரணமாகிய ஆக்கூர் ஓரியண்டல் என்னும் இந்த அற்புத நிறுவனத்தையுமே சாரும்.
எங்களுக்கு நற்கல்வியையும் நல்லொழுக்கத்தையும் போதித்த நல்லாசிரியர்களில் யாரை நாங்கள் மறக்க முடியும்? அவர்களில் சிலர் மறைந்து விட்டனர். பலர் ஓய்வு பெற்று விட்டனர். ஆனால் எங்கள் நெஞ்சங்களில் என்றென்றும் நிறைந்து வாழ்கின்றனர். அறிஞர் பெருமக்களையும் ஆன்றோர்களiயும் சான்றோர்களையும் உருவாக்கிய ஆசிரியர்களாகிய அந்த அறிவு ஜீவிகள் ஒவ்வொருவரைப்பற்றியும் ஓராயிரம் வரிகள் எழுதலாம். எவ்வளவு எழுதினாலும் அந்த நல்லாசிரியர்கள் எங்களுக்குப் போதித்த நற்கல்விக்கும்
நல்லொழுக்கத்திற்கும் அவை போதுமான நன்றிக் கடன் ஆகாது. இன்றளவும் சக நண்பர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது அந்த அறிஞர் பெருமக்களை நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.
பல்வேறு கால கட்டங்களிலும் எண்ணற்ற சிரமங்களுக்கு மத்தியில் விடுதி நிர்வாகத்தை திறம்பட நடத்திச் சென்ற, இறையடி சேர்ந்து விட்ட முன்னாள் தாளாளர்களின் மறுமைப் பேற்றுக்காக மனமாற இறைவனை இறைஞ்சுகிறோம். தன்னலம் கருதாது பாடுபட்ட அந்த தயாள உள்ளங்களை என்றென்றும் நினைவில் வைத்திருப்போம்.
தத்தம் இல்லங்களில் நடைபெற்ற விருந்து வைபவங்களின் போது எங்களையும் தங்கள் குடும்பத்தினர்களாக எண்ணி அத்துனை பேருக்கும் அறுசுவை விருந்தளித்து கௌரவப்படுத்திய ஆக்கூர் வாழ் மக்களை எப்படி மறக்க முடியும்? எங்களை கௌரவித்த அந்தக் கொடை வள்ளல்களை, இம்மையிலும் மறுமையிலும் இறைவன் கௌரவிப்பானாக!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து ஆக்கூரில் சங்கமித்தோம். காலமெல்லாம் பயன் தரும் கல்வியை திறம்படக் கற்பதில் கவனம் செலுத்தினோம். கள்ளம் கபடமில்லாமல் பழகினோம். ஒன்றாக உண்டோம், உறங்கினோம்,ஓடி விளையாடினோம். ஒருவருக்கொருவர் உதவியாய் ஒத்தாசையாய் இருந்து கவலை மறந்து காலம் கழித்தோம். பள்ளி வாழ்க்கை நிறைவடைந்த போது ஆரத்தழுவி கண்ணீர் மல்க பிரியா விடை பெற்றோம். இனி எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ?
ஆக்கூர் ஓரியண்டலில் நாங்கள் வாழ்ந்த அற்புத வாழ்க்கை 30 ஆண்டுகளுக்கு முன் நிறைவடைந்து விட்டது.ஆனால் அந்தப் பசுமையான நினைவுகள் மட்டும் பசுமரத்தாணிபோல் இன்றும் எங்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்று விட்டது. ஆம் அது ஒரு பொற்காலம்.
நாங்கள் இருந்து பயின்ற வகுப்பறைகள் அதி நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடிக் கட்டடங்களாகிவிட்டன. நாங்கள் கட்டாந்தரையில் அமர்ந்து உண்ட, ஓலை வேயப்பட்ட உணவுக் கூடம் இப்போது கண்ணைக் கவரும் உணவுக் கூடமாக மிளிர்கிறது. நெரிசலுடன் நாங்கள் தங்கியிருந்த மாணவர் விடுதி இன்று விசாலமான விடுதியாகப் பரிணமித்துள்ளது. வகுப்பறையை தொழுகைக் கூடமாக்கி நாங்கள் தொழுகை நடத்தியது அந்தக் காலம். இப்போது எழில்மிகுந்த இறையில்லம் கம்பீரமாகக் காட்சி தருகிறது. உயர் நிலைப் பள்ளியாக இருந்தது இப்போது மேல் நிலைப் பள்ளியாக உயர்வு பெற்றுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு எங்கள் பள்ளி அடைந்து வரும் முன்னேற்றத்தைக் கண்டு நாங்கள் பூரிப்படைகிறோம். வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.
இந்தக் கல்விக் கூடத்திலிருந்து உருவான எண்ணற்ற தாரகைகள் சமுதாய வானில் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் ஆயிரமாயிரம் அறிவு ஜீவிகளை உருவாக்க இந்த 'ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல் நிலைப் பள்ளி' தன் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறது.
masdookaa@yahoo.com
Subscribe to:
Posts (Atom)