Monday, August 25, 2008

கல்லூரி மாணவ, மாணவியருக்கு கட்டுரைப்போட்டி

கல்லூரி மாணவ, மாணவியருக்கு கட்டுரைப்போட்டி

தமிழ் இஸ்லாமியக் கழகத்தின் 13 ஆவது மாநாடு தஞ்சையில் அக்டோபர் 4,5 நாட்களில் நடக்க இருக்கிறது. அதையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஒரு கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது. மொத்தம் ரூ. 10 ஆயிரம் பரிசு தரப்படும்.

இஸ்லாமியர் தமிழர் தொண்டு என்ற தலைப்பில் கையெழுத்தில் பத்துப் பக்கத்துக்குள் கட்டுரை அமையவேண்டும். கல்லூரி மாணவர் என்பதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும்.

இன, மத வேறுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ளாலம். முதல் பரிசு ரூ. 3 ஆயிரம், 2 ஆம் பரிசு ரூ. 1000 ( 2 பேருக்கு ) மூன்றாம் பரிசு ரூ. 500 ( பத்து பேருக்கு )

கட்டுரை அனுப்ப வேண்டிய முகவரி

பொதுச்செயலாளர்
தமிழ் இஸ்லாமிய இலக்கியக் கழகம்
எண் 8 தம்பி சாயபு மரைக்காயர் வீதி
காரைக்கால் 609 002

கடைசி தேதி : 10 செப்டம்பர் 2008

No comments: