Thursday, January 22, 2009

ஜன. 27, 28 தேதிகளில் ஓமன் நாட்டில் கட்டுமானப் பணிகளுக்கு சிவகங்கை, திருவாரூரில் ஆள்கள் தேர்வு

ஜன. 27, 28 தேதிகளில் ஓமன் நாட்டில் கட்டுமானப் பணிகளுக்கு சிவகங்கை, திருவாரூரில் ஆள்கள் தேர்வு


மதுரை, ஜன. 21: ஓமன் நாட்டில் கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் ஆள்கள் தேர்வு சிவகங்கை, திருவாரூர் மாவட்டங்களில் இம்மாதம் 27, 28 தேதிகளில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கொத்தனார்கள், சென்டரிங் கார்பென்டர்கள், ஸ்டீல் ஃபிட்டர்கள் போன்றவர்கள் பெருமளவில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இலவச இருப்பிடம் மற்றும் விசாவுடன் பணி அனுபவத்தின் அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்கள் உடனடியாக வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்கப்படுவர்.

ஆர்வமுள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட் மற்றும் அதன் இரு நகல்கள், நீலநிற பின்னணியில் எடுக்கப்பட்ட 6 பாஸ்போர்ட் புகைப்படங்கள் போன்றவற்றுடன், இம்மாதம் 27-ம் தேதி திருவாரூரில் நாகை புறவழிச்சாலையில் உள்ள விஜயபுரம் வர்த்தகர் சங்கத்தில் காலை 8 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்விலோ அல்லது இம்மாதம் 28-ம் தேதி சிவகங்கையில் தொண்டி சாலையில் உள்ள ஆர்.எம். ராஜ்மோகன் வெங்கடேஸ்வரி மகாலில் நடைபெறும் தேர்விலோ கலந்துகொள்ளலாம்.

இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய 93818 00181, 99402 76366, 94446 90026, 044-24464268, 69 ஆகிய செல்பேசி, தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.