Tuesday, March 31, 2009

www.prophetmuhammadforall.org

Explore the Holy Life of
Prophet Muhammad
(Peace Be Upon Him)
Through Audios

Excellent Listening Material FREE Available by Renowned Islamic Scholars: Dr. Jamal Badawi, Bilal Philips, Yusuf Estes, Abdullah Hakim Quick, Dawud Wharnsby & many more…

Lectures in English

BEING LIKE PROPHET MUHAMMAD IS SOCIETY'S ONLY HOPE
LOVE OF THE PROPHET SALLALLAHU ALAYHI WA SALLAM
LOVE OF THE PROPHET SALLALLAHU ALAYHI WA SALLAM 2
METHODOLOGY OF STUDYING SEERAH-INT RODUCTION
THE TOLERANCE OF PROPHET MUHAMMAD
BIRTHDAY OF THE PROPHET 1OF2
SUNNAH JUST A SUNNAH
LOVE OF THE PROPHET SALLALLAHU `ALAYHI WA SALLAM 1
PROOFS OF THE PROPHETHOOD OF MUHAMMAD(PBUH)
SOME DU'AS OF RASULULLAH (SAW)
AN INTRODUCTION TO HADITHS
WHY THE SUNNAH IS SO IMPORTANT - THE RELEVANCE OF


Lectures in URDU delivered by renowned Islamic Scholars:
Shaikh Habibur Rahman, Shaikh Nisar Ahmed, Shaikh Inayatullah Gujarati, Shaikh Hafiz Mohd Idris, Dr. Farhat Ali Berni, Dr. Hasanuddin Ahmed, Shaikh Syed Maududi & many more…

SEERATH-UN-NABI SAW KAY TAQAZAY (IN URDU)
SEERATH-E-MUHAMMADI KA PAYGAM
SEERATH-UN-NABI KAY IMTIYAZATH
ESHQ! UE-E-MUSTAFA KAY TAQAZAY
USWA-E-RASOOL AUR HUM
AKHLAQ-E-NABI SAW (IN URDU)
ITAATH-E-RASOOL (IN URDU)
HIJRAT-E-NABI SAW
HADRITH AYESHA R.A. (IN URDU)
HADRATH FATIMA RA (IN URDU)
KHATAM-E-NABOUWAT


And many more AUDIOS are available in Multiple Languages

Please Visit
www.prophetmuhammadforall.org
Biggest FREE e-Library & Audio Collection

துபாயில் தேரிழ‌ந்தூர் ஜமாஅத் ஏற்பாட்டில் ந‌ட‌த்தும் க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்க‌ம்

துபாயில் தேரிழ‌ந்தூர் ஜமாஅத் ஏற்பாட்டில் ந‌ட‌த்தும் க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்க‌ம்

துபாயில் தேரிழ‌ந்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத், அர்ர‌ஹீமிய்யா க‌ல்வி அற‌க்க‌ட்ட‌ளையின் ம‌னித‌வ‌ள‌ மேம்பாட்டு ஆராய்ச்சிய‌க‌ம் ஆகிய‌வை இணைந்து க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்கை 02.04.2009 வியாழ‌க்கிழ‌மை மாலை 8.30 ம‌ணிய‌ள‌வில் அஸ்கான் டி பிளாக்கில் ந‌ட‌த்த‌ இருக்கிற‌து.

இக்க‌ருத்த‌ர‌ங்கில் தென்ஆற்காடு, ஒருங்கிணைந்த‌ த‌ஞ்சை ( நாகை, த‌ஞ்சை, திருவாரூர் ), காரைக்கால் மாவ‌ட்ட‌ முஸ்லிம் ஜ‌மாஅத்தார்க‌ள் ஒருங்கிணைந்து க‌ல்விப் ப‌ணி மேற்கொள்வ‌து குறித்த‌ ஆலோச‌னையும் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

துபாய் ஸ்கை சீ குரூப் இய‌க்குந‌ர் சி.த‌.அப்துல் காத‌ர் த‌லைமை தாங்குகிறார். இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ பொதுச்செய‌லாள‌ர் எஸ்.எம். இதாய‌த்துல்லா சிற‌ப்புப் பேருரை நிக‌ழ்த்துகிறார்.

இக்க‌ருத்த‌ர‌ங்கின் முக்கிய‌ நோக்க‌ம் உய‌ர் தொழில்நுட்ப‌ க‌ல்லூரியினை ஏற்ப‌டுத்துவ‌து குறித்தாகும்.

இத‌ற்கான‌ ஏற்பாடுக‌ளை தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன் ( 050 5429422 ) ஏற்பாடு செய்து வ‌ருகிறார்.

மின்னஞ்சல் : thajanas@gmail.com / abdulrabik@yahoo.com

Monday, March 30, 2009

IQRA'A Institute

Assalamu alaikum.

We are happy to inform that we have started a training centre by name
IQRA'A Institute and took Franchisee of:

Computer Career Park - CCP
Authorized Tally Academy, Tirunelveli jn.
and offer the following programs.

TALLY SOFTWARE EDUCATION
VAT and TAXATION PROCIDURES
COMPANY ACCOUNTS & AUDITING
BASIC & PRACTICAL ACCOUNTING
ENGLISHCOMMUNICATION SKILL
PERSONALITY DEVELOPMENT
CAMPUS INTERVIEW TRAINING

For TALLY Education, Software, Maintenance, Print options and for all
Tally related doubts and clarifications, Pls contact our TALLY EXPERT
Mr.HARI - CCP Tally Academy,Tirunelveli at Mobile: 92454 77810. He
visits Nagercoil and available at our IQRA'A Institute on every Thursdays
and Saturdays. You can consult via mobile or email: hrmadurai@yahoo.com

Kindly inform all our relatives and friends to utilise our centre for their computer related works, software education, computerisation and finalization of accounts, internal auditing, higher education, career and employment guidance.

Truly yours,

Abdul Raziq - Centre Manager
IQRA'A Institute - CCP Tally Franchisee
I Floor, Masjid Ashraf Building,
Opp.Abdul Kadir Hospital,
Elankadai, Nagercoil - 2
Nagercoil. Mobile: 94431 78050

Sunday, March 29, 2009

சீரழியும் சகோதரத்துவம்;

சீரழியும் சகோதரத்துவம்;

இந்த உலகில் வசிக்கின்ற மனிதர்கள் யாராக இருந்தாலும், எப்படிப்பட்ட
மக்களாக இருந்தாலும் சரி. அவர்கள் ஒரு விஷயத்தை நேசிக்கிறார்கள்.
உடல்நலம், ஆரோக்கியம். எல்லோரும் நலமுடன் இருக்கவேண்டும,; எல்லோரும்
ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நோய், நொடியில்லாமல் சுகமாக
வாழவேண்டும் என்று எல்லா மனிதர்களுமே ஆசைப்படுகிறார்கள். ஆனால்,
ஆரோக்கியத்திற்காக நாம் என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்?
என்பதைப் பற்றி டயட்டீஷpயன்ஸ் மருத்துவர்கள் பல குறிப்புகளைத்
தருகிறார்கள். டயட்டீஷpயன் எனப்படும் ஒரு பிரிவே மருத்துவத்தில் உள்ளது.
உடலை கட்டுப்பாட்டில் எப்படி வைத்துக் கொள்வது. என்னென்ன உணவுகளை
நாம் உண்ணலாம், ஒரு நாளைக்கு என்னென்ன உடற்பயிற்சி மேறkoள்ள
வேண்டும், நம்முடைய உடலில் தேவையில்லாத கொழுப்பு சேகரிகக் hமல்
இருப்பதற்கு என்னென்ன பத்தியங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று ஒரு நீண்ட
பட்டியலே அதற்காக கொடுக்கப்படுகின்றது. more details;; http://islamiyargal.blogspot.com/

Regards

islamiyargal@gmail.com

கிலாஃபா

கிலாஃபா
இஸ்லாமிய கிலஃபா ஆட்சியால் மட்டுமே முஸ்லிம்களின் நாடுகளை பாதுகாக்க முடியும். அதனை நிலைநாட்டுவது கடமையாகும். இக்கடமையை நிலைநாட்டாது முடங்கிக்கிடப்பது ஹராமாகும். உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்குமான ஆட்சி ஒழுங்குதான் கிலாஃபா ஆகும்;. இதன் மூலம் இஸ்லாமிய ஷரீஆ சட்டங்கள் அமுல் செய்யப்படும்.

இஸ்லாமிய தஆவா முழு உலகுக்கும் சுமந்து செல்லப்படும். இது முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கக்கூடிய, இஸ்லாமிய நாடுகளை ஒன்றுபடுத்தக்கூடிய அரசியல் ஒழுங்காகும். இஸ்லாமிய ஷரீஆவைக் கொண்டு ஆளுகின்ற கலீஃபா ஒருவர் இருப்பது அவசியம் என நபிகள் நாயகம்(ஸல்) கட்டளையிட்டார்கள். ஸஹீஹ் முஸ்லிமில் பின்வரும் ஹதீஸ் பதியப்பட்டுள்ளது. "...அதிகமான கலீஃபாக்கள் காணப்படுவார்கள் நாயகமே அப்போது நாம் என்ன செய்யவேண்டும்?" என்றனர் சஹாபாக்கள். அதற்கு நாயகம்(ஸல்) கூறினார்கள்.

'முதலாமவருக்கு உங்கள் பைஅத்(சத்தியப்பிரமாணத்தை) கொடுங்கள்' மேலும் கூறினார்கள் 'இரண்டு கலீஃபாக்களுக்கு பைஅத் கொடுக்கப்பட்டால் அவர்களுள் இரண்டாமவரை கொன்றுவிடுங்கள்'. கிலாஃபா என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீண்டும் வரும் என்று செய்தி கூறிச்சென்ற ஆட்சிமுறையாகும். நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள் 'பிறகு ஒரு கிலாஃபா நபியின் வழிமுறையில் தோன்றும்'.இஸ்லாமிய கிலாஃபா ஆட்சி மூலமே முஸ்லிம்கள் மீது அல்லாஹ் கடமையாக்கிய நீதி நிர்வாகம், பொருளாதாரம், சமூகவியல், கல்வி, வெளிநாட்டு அலுவல்கள் ஆகியவை தொடர்பான சகல இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களும் நடைமுறைபடுத்தப்படும். கிலாஃபா ஆட்சி மூலமே முஸ்லிம்கள் மீது அல்லாஹ் கடமையாக்கிய ஜிஹாத் போராட்டம் நடைமுறைபடுத்தப்படும்.

இந்த ஜிஹாத் இஸ்லாத்தை முழு உலகுக்கும் சுமந்து செல்வதற்காகவும், முஸ்லிம் நிலங்;களையும், உயிர், மானம், செல்வம் ஆகியவற்றையும் பாதுகாப்பதற்காகவும், மேலும் தமது ஆட்சியை ஏற்றுக்கொண்ட திம்மீக்களையும் (இஸ்லாமிய ஆட்சியில் வாழும் முஸ்லீம் அல்லாதவர்கள்) பாதுகாப்பதற்கான போராட்டமாகும்.இஸ்லாமிய கிலாஃபா என்பது அல்லாஹ்(சுபு) எந்தத் தீமைகளைவிட்டும் தவிர்த்து விலகிக்கொள்ளுமாறு முஸ்லீம்களுக்கு ஏவினானோ அவற்றை தடுக்கின்ற ஆட்சியாகும். இது சமூகத்தில் காணப்படுகின்ற தீமையின் அடையாளங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டும். இஸ்லாமிய நன்மையை பாதுகாக்கும். சகலவிதமான வழிகேடுகள் உட்செருகல்கள், அத்துமீறல்கள் அனைத்தையும் தடுக்கும். கிலாஃபா, சமூகத்தின் நாலா பக்கங்களிலும் ஈமானிய பண்பாடுகளையும் போற்றத்தக்க சுத்தத்தையும், ஒளியையும், தொலைத்தொடர்பு மூலமாகவும் கல்லூரிகள், நிறுவனங்கள் மூலமாகவும் பரப்பிவிடும். இஸ்லாமிய ஆட்சியில் வாழும் பிரஜைகள், தமது பிள்ளைகள், தீமைகள், சீர்கேடு, ஒழுக்க வீழ்ச்சி என இழுத்துச் செல்லப்படுவார்களே என அஞ்சமாட்டார்கள்.கிலாஃபா என்பது அல்லாஹ் முஸ்லிம்களுக்கு நிறைவேற்றும்படி கூறிய கட்டளையாகும்.

தங்களுக்கு மத்தியில் ஒற்றுமையாக இருத்தல், இனவெறி, நிறவெறி மற்றும் கோத்திற வெறிகளை விட்டும் தூரமாக இருத்தல் ஆகியவற்றையும் நிலைநாட்டும். இது ஒருசாரரின் அல்லது ஒரு துறையினரின் ஆட்சியாக இருக்காது. மாறாக இதன் பார்வை தமது பிரஜைகள் அனைவரும் ஒன்றே என்பதாகவே இருக்கும். குர்ஆனிலும் சுன்னாவிலும் காணப்படுகின்ற பலமான ஆதாரத்திற்கு ஏற்பவே இஸ்லாம் நடைமுறைபடுத்தப்படும். இது இனத்தையும் நிறத்தையும் பார்க்கின்ற ஆட்சியாக இருக்காது. அஜமியைவிட அரபிக்கு எந்த சிறப்பும் இருக்காது. கறுப்பரைவிட வெள்ளையருக்கு எந்த சிறப்புமிருக்காது.

தக்வாவைக்கொண்டே சிறப்பு கணிக்கப்படும்.ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்;லாமிய சட்டங்கள் சகலத்தையும் நிறைவேற்றும்படியே ஏவப்பட்டுள்ளனர். இதன் கருத்து உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் சமம் என்பதே. எனவே அவர்கள் அனைவரையும் கவனத்தில் கொள்வது அவசியமாகும். அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் நிச்சயமாக விசுவாசிகள் சகோதரர்களே!நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் விசுவாசிகள் தங்களுக்கு மத்தியில் இரக்கம் காட்டுவதிலும் அன்பு செலுத்துவதிலும் ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக இருப்பதிலும் ஓர் உடலைப் போன்றவர்கள். உடலின் ஓர் உறுப்பிற்கு நோய் ஏற்பட்டாலும் ஏனைய உறுப்புகளும் உறக்கமின்மையாலும் காய்ச்சலாலும் பாதிக்கப்படும்.

இஸ்லாமிய கிலாஃபா என்பது சகல முஸ்லிம்களுக்குமான ஆட்சியும் தேவையுமாகும். மேலும் அவர்கள் மீது கடமையுமாகும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹ் முஸ்லிமில் பின் வரும் ஹதீஸ் பதியப்பட்டுள்ளது. கலீஃபாவிற்கு கொடுக்கப்பட்ட பைஆ (சத்தியப்பிரமாணம்) இல்லாத நிலையில் யார் மரணிக்கிறாரோ அவர் ஜாஹிலிய மரணத்தை அடைந்தவராவர்.அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருக்கிற முஸ்லிமாக இருக்கட்டும், சீனாவிலும் இந்தோனேசியாவிலுமுள்ள முஸ்லிமாக இருக்கட்டும், லெபனானிலும் மொரோக்கோவிலுமுள்ள முஸ்லிமாக இருக்கட்டும், இந்தியாவிலும் இலங்கையிலுமுள்ள முஸ்லிமாக இருக்கட்டும் அனைவருமே இஸ்லாமிய சட்டங்கள் முழுவதையும் பின்பற்றுமாறு ஏவப்பட்டுள்ளனர். எனவே இ;ஸ்லாமிய கிலாஃபாவை நிலைநாட்டுவதும் அவர்கள் மீது கடமையாகும்.நாம் அனைவரும் ஒரேயொரு இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை ஒவ்வொரு முஸ்லிமிடமும் இருப்பது அவசியமாகும். ஏகாதிபத்தியவாதிகளால் நம்மீது திணிக்கப்பட்ட நிலையில் உருவான பல நாடுகளாக நாம் பிரிந்துள்ளோம். எனவே மிக பலவீனமானவர்களாகவும் இருக்கின்றோம். இதனை ஒருபோதும் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. மாறாக முஸ்லிம்கள் அனைவருக்குமான ஒரு ஆட்சியின் கீழ் முஸ்லிம்களின் பலமான இருப்பை ஏற்;படுத்திக்கொள்ள நாம் ஆர்வத்தோடும் முழு முயற்சியோடும் செயற்படுவது அவசியமாகும்.

எகிப்து இஸ்லாமிய ஆட்சியின் ஒரு அங்கமாக இருக்கவேண்டும் என்பதற்காக எகிப்தில் வாழுகின்ற முஸ்லிம்கள் இஸ்லாமிய கிலாஃபா நோக்கி அழைக்கவேண்டும். அதற்காக பாடுபடவேண்டும். அவ்வாறே குவைத்தில் வாழுகின்ற முஸ்லிம்கள் குவைத் இஸ்லாமிய ஆட்சியின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்பதற்காக பாடுபடவேண்டும். இதைப்போன்றே ஏனைய அனைத்து இஸ்லாமிய நாடுகளில் இருக்கின்ற முஸ்லிம்களும் இஸ்லாமிய கிலாஃபாவை நோக்கி அழைக்கவேண்டும், பாடுபடவேண்டும்.இஸ்லாமிய கிலாஃபா முஸ்லிம்களை மட்டும் கவனிக்கின்ற ஓர் ஆட்சியாக இருக்காது, மாறாக முஸ்லிமாக இருந்தாலும் சரி முஸ்லிமல்லாதவராக இருந்தாலும் சரி, இ;ஸ்லாமிய ஆட்சியோடு இருக்கிற சகலரையும் கவனிக்கிற ஆட்சியாக இருக்கும். இஸ்லாமிய ஆட்சியோடு இருக்கிற சகலருக்கும் பரிபூரண குடியுரிமை இருக்கும். ஷரீஆ எதிர்பார்க்கின்ற கடமைகளையும் உரிமைகளையும் அனுபவிப்பார்கள். நீதி, சமூக விவகாரங்கள் எதிலும் பாகுபாடு காட்டப்படமாட்டாது. முஸ்லிம்களைப்போன்றே முஸ்லிம் அல்லாதோரின் உடல், மானம், உடமைகள் யாவும் பாதுகாக்கப்படும். சத்தியமும் அச்சமும் ஒன்று சேரமுடியாது என ஒரு முஸ்லிமிற்கு நன்றாகத்தெரியும். அதைப்போலவே இறைவிசுவாசமும், இறைமறுப்பும் ஒன்றுசேரமுடியாது.

இஸ்லாமிய கிலாஃபாவை நோக்கி போராடுகையில், இறைமறுப்பாளர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் சந்திக்கவேண்டிவரும் என்பதை முஸ்லிம் நன்கு அறிவான்.நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் அவர்களுடைய விசுவாசிகளும் அங்கீகாரத்தையோ வரவேற்பையோ முதலில் பெறவில்லை. மாறாக உருவப்பட்ட வாள்களையும் கடும் கோபப்பட்ட உள்ளங்களையுமே சந்தித்தனர். மிகப்பெரிய இஸ்லாமியப் போராட்டங்களே நிகழ்ந்தன. ஆனால் அவற்றில் இஸ்லாத்திற்கே வெற்றி கிட்டின. இதுவே நம்மை நோக்கி அல்லாஹ் அருள்மறையில் கூறுகின்ற சத்தியமாக இருக்கிறது.


COURTESY=http://nermai.blogspot.com/2006/04/blog-post_114578126221905641.html

இஸ்லாமிய இலக்கியவாதிகளுக்கு இனிய செய்தி!

இஸ்லாமிய இலக்கியவாதிகளுக்கு இனிய செய்தி!

http://www.muduvaivision.com/islamicilakiyam.asp

இனியவர்களே! ‘‘அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).’’

தமிழில் எழுதும் முஸ்லீம் படைப்பாளிகளின் சிறுகதைகளில் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து முழுமையான நல்ல சிறுகதைத்தொகுதி இதுவரை வெளிவரவில்லை என்ற குறை இஸ்லாமிய இலக்கியத்துறையில் நீண்ட காலமாக இருந்து வருகிறது… இலக்கியத்தரம்வாய்ந்த, இஸ்லாமிய இலக்கிய வரம்புகளுக்குட்பட்ட படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டுள்ள முஸ்லீம் எழுத்தாளர்களின் சிறுகதைகளில் ஒவ்வொரு எழுத்தாளர்களின் கதைகளில் ஒரு மிகச்சிறந்த கதையைத் தேர்வுசெய்து “இதயம் கவர்ந்த இஸ்லாமிய இலக்கியக் கதைகள்;” என்ற நல்ல ஒரு சிறுகதைத்தொகுப்பு வெளியிட வேண்டும் என்பது என் கனவு.

இத்தொகுப்பிற்காக தாங்கள் எழுதிய சிறுகதைகளில் மிகவும் சிறந்தகதையாக தாங்கள் கருதும் ஒரு கதையை அனுப்புங்கள்! தங்கள் சகஎழுத்தாளர்கள் எழுதிய கதைகளில் தங்களுக்குப் பிடித்த சிறுகதையையும் (எழுதியவர் பெயரோடு) அனுப்பி வைக்கலாம்! வாசகர்கள் தாங்கள் படித்த கதைகளில் தங்களுக்குப் பிடித்த கதையையும் (எழுதியவர் பெயரோடு) அனுப்பி வைக்கலாம்! இறந்துபோன எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் அவரது பிள்ளைகள் அனுப்பி வைக்கலாம். முதல் பரிசு ரூ.10,000. இரண்டாம் பரிசு ரூ.5,000. மூன்றாம் பரிசு ரூ.2,000. மற்றும் ஆறுதல் பரிசு தலா ரூ.1,000 வீதம் மூன்று கதைகளுக்கு வழங்கி கௌரவிக்கப்படும். (படைப்புகள் அனுப்புபவர்கள் தங்கள் முகவரியை குறிப்பிட்டால் நூல் வெளிவரும்போது அனுப்பி வைக்க வசதியாக இருக்கும்!). பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து கதைகளுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறுநூலும், சான்றிதழும் வழங்கப்படும்.

சகோதர சமுதாய மக்களும் இஸ்லாத்தின் மேன்மையை உணரும் வகையில் கதை உணர்ச்சிபூர்வமாகவும், உள்ளத்தை தொடும்வகையிலும் இருக்க வேண்டும். பிறமதத்தவர்களின் மனதைக் காயப்படுத்தும்வகையில் கதை கண்டிப்பாக இருக்கக்கூடாது. வசனங்கள், வர்ணணைகள் ஆபாசமாகவோ, கொச்சையாகவோ, சர்ச்சைக்குரியதாகவோ இருக்கக்கூடாது. ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். வியாபார நோக்கத்தோடு இந்நூலை தயாரிக்கவில்லை. இஸ்லாமிய இலக்கியம் பரவலாக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடும், முஸ்லீம் படைப்பாளிகள் கௌரவிக்கப்பட வேண்டும் என்ற இயல்பான ஆசையுடனும் இந்நூல் தயாராகிறது! நூலில் மூலம் கிடைக்கும் தொகை இஸ்லாமிய தொண்டு நிறுவனத்துக்கோ, இறந்துபோன ஏழ்மையில் வாடும் இஸ்லாமிய எழுத்தாளர்களின் குடும்பத்துக்கோ வழங்கப்படும்.

இன்ஷாஅல்லாஹ்… வந்துசேரும் சிறுகதைகள் ஜே.எம்.சாலி, ஹிமானாசையத், ஷின்னா ஷரீபுத்தீன், சிராஜூல் ஹஸன் போன்ற இஸ்லாமிய இலக்கியவாதிகளின் கனிவான பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களால் பரிசீலனை செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் கதைகள் அழகிய நூலாக மலரும்! ஆண்டவன் நாடினால்… கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் அணிந்துரையோடும், ‘மானுட வசந்தம்’ டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களின் மதிப்புரையோடும் வெளிவரும். இஸ்லாமி தமிழ் இலக்கிய மாநாட்டு விழாவில் நூலினை வெளியிட ஆசைப்படுகிறோம்.

இஸ்லாமியனாக பிறந்த நான் இஸ்லாமிய இலக்கியத்திற்காக… தனித்தனியே வௌ;வேறு இடத்தில் சிதறிக்கிடக்கும் வாசமலர்களை நேசமுடன் சேகரித்து அழகான மாலையாக்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் இந்தநூல் இஸ்லாமிய இலக்கியத்திற்கு பெருமைதரக்கூடிய பதிவாக இருக்கும் என்று நம்புகிறேன். என் முயற்சிக்கு படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறேன். மகிமையும் மேன்மையும் நிறைந்த ஆண்டவன் நம் முயற்சிகளுக்கு துணை நிற்பானாக!
சிறுகதை நகலை ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : trichysyed@yahoo.com
கதைகள் வந்துசேர வேண்டிய கடைசி தேதி : 31.12.2009

தோழமையுடன் …

திருச்சி சையது, M.A., M.Phil.,
(பத்திரிகையாளர்)

கவிதைப் போட்டிக்கு படைப்புகள் வரவேற்பு

கவிதைப் போட்டிக்கு படைப்புகள் வரவேற்பு

திருப்பூர், மார்ச் 28: திருப்பூர் மக்கள் மாமன்றம் நடத்தும் கவிதைப் போட்டிக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

கோடையை முன்னிட்டு திருப்பூர் மக்கள் மாமன்றம் சார்பில் கவிதைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. "கோடையில் வீசிய தென்றல்' என்ற தலைப்பில் கவிதையை 1 பக்கம், 24 வரிகளுக்கு மிகாமல் 3 நகல்கள் அனுப்ப வேண்டும். ஒருவர் எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.

கவிதையுடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஒரு சுய முகவரியிட்ட அஞ்சல் அட்டைகள் சேர்த்து அனுப்ப வேண்டும். கவிதையில் தனிமனிதரை விமர்சிப்பதும், அரசியல் கருத்துக்களும் இருக்கக் கூடாது. படைப்புகளை நேரில் அல்லது அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி, திருப்பூர் மக்கள் மாமன்றம், எழுத்தறிவாலயம், மங்கலம் சாலை, திருப்பூர். ஏப்ரல் 15-ம் தேதிக்குள் கவிதைகளை அனுப்ப வேண்டும் என்று அமைப்பின் தலைவர் சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Saturday, March 28, 2009

முதுகுளத்தூர் இளங்கோவன் மடல்

Dear Brothers and Sisters


First of all my greetings to everyone...and their family members.

Everybody knows about me without introduction myself, I want to say few words about me and my involvement to this society. I have completed 28 years in UAE and I have been deeply involved Social Service activities in local organization since 1993 which was very much impressed to me. My involvement is entirely different from others . Many Social Service organization have been taking care of their own people society but my intention is to contribute to this society and pay back whatever the country has given us. A new authority under the Dubai Govt was recently set up to act as an umbrella for social service organizations and was also talked with promoting national Identity and empowering UAE National. Their objective is to promote national identity, to ensure that the UAE National is distinguishable and noticeable.


Herewith I am forwarding the following message from His Highness Sheikh Mohamed Bin Rashid Al Maktoum vision


It is far easier to build financial capital than it is to build intellectual, psychological and moral capital. Building a road or a bridge may take a year or two, but developing people takes a lifetime. Social development, in all its aspects, requires distinct programs, outstanding performance, patience and special criteria for measurement and evaluation.”


With these words, His Highness Sheikh Mohammed Bin Rashid Al Maktoum launched the Dubai Strategic Plan (DSP 2015), outlining his vision for Dubai as an inspiring model of community well-being and national identity.

I am taking s Statistical survey particular of this task. In this part I would request you all please forward your personal opinion "what we can serve to this society and what the country people are expecting us etc.." Your answer has to reach to me on or before 5th April 2009. I have to give the survey report to the Authority at teh earliest.

Your valuable points will elevate and strengthening the National Identity development.

My e.mail ID:saithree@hotmail.com

With Prayers, Love and Good wishes to all


Ilangovan
0506759789

As-Salam Trust, Aduthurai

Dear Brothers & Sisters,

Assalamu Alaikkum (Varah)

We are very glad to say that we have got the LETTER OF INTENT (first level approval) from AICTE - New Delhi. They have given two months time to visit us for inspection. Insha Allah we will be ready by April end for inspection.

Also we launched our website today. The site name is www.assalamtrust.com. Please view the website frequently for updates. You can give your suggestions for the quality of our website.

As we all know that we have to reach 100 members for the trust, up to now 74 has been filled and we are expecting your kind support to fill the remaining.

We request you to intimate your friends and relatives about our website.


Thanks & Regards,

Jamal Mohamed Ibrahim, Chairman
Shahjahan, Secretary
As-Salam Trust, Aduthurai

கண்ணே-கனியமுதே!

கண்ணே-கனியமுதே!

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி)

சமீபத்திய மணமுறிவுகள் நவீன முறையினை கையாண்டு எஸ்.எம்;.எஸ்-தொலைபேசி-கடிதங்கள் ழூலம் மிக எளியமுறையில் சொல்லி கட்டுக்கோப்பான குடும்ப வாழ்வினை சீர்குழைக்கப்படுகிறது. திருமணத்தில் கை நிறைய கைக்கூலி-சீர்-சீராட்டு பெற்றுக்கொண்டாலும் நிக்காப்புத்தகத்தில் அதெல்லாம் எழுதப்படுகிறதா என்றால் இல்லை. ஆனால் டைவர்ஸ் செய்யும் போது வெறும் மகரினை குறைந்த அளவு தொகையியாகத்திருப்பி மணமகளுக்கு அனுப்புவதும் வாடிக்கையாகி விட்டது. அதன் முடிவு மணமக்கள் மகிழ்வோடு வாழ்வினைத் தொடங்குவதை விட்டு விட்டு கோர்ட்-வக்கீல்-காவல் நிலையம் ஆகியோரின் வாசல்படியினை மிதிக்கும் அவல நிலை ஏற்படுகிறது. இது போன்ற மணமுறிவுகள் ஏற்படுவதிற்கு காரணங்கள்-அவைகளை போக்கும் வழிகள் பற்றி சிந்தனை ஓட்டத்தில் உதிர்த்த கருத்தோவியம்-கவிதைத் தொகுப்பினை உங்கள் பார்வைக்கு வைக்க விழைகிறேன்.

காரணங்கள் பல விதம்:

மணப்பெண் பெற்றோர் அரவணைப்பிலிருந்து புகுந்த வீட்டுக்கு எண்ணிலா கனவுக் கோட்டைகளுடன் காலடி வைக்கிறாள். ஆனால் கணவன் வீட்டில் இருப்பவர்கள் தனக்கு ஆதரவாக இருக்கவில்லை என்று எண்ணும்போது அதிர்ச்சி அடைகிறாள். விதவை மாமியார்-வாழாவெட்டியாக இருக்கும் நாத்தனார் தங்களுடைய விரக்தியினை
புதுப்பெண்ணிடம் பொறிந்து தள்ளும் போதும்-அதனை தட்டிக்கேட்பதிற்கு தனது கணவனிடம் திரானி இல்லாத போது புகுந்த வீட்டில் அவள் அனாதையாகிறாள். மணகளை விட்டு மணமகன் பிரிந்து வெளி நாட்டுக்கு வேலைத் தேடி செல்லும் போது மணமகளைப் பற்றி அபாண்டமான தூபம் போடும் போது

மணமகனோ- மணமகளோ திருமணத்திற்கு முன்பு நடத்திக் கொண்டிருந்த காதல் நாடகங்களை அவையெல்லாம் கானல்நீர் என்று மறக்காமல்-நிக்கா புத்தகத்தில் மனவொப்ப கையெழுத்துப் போட்ட பின்னும் முந்தைய காதல் உலகில் சன்சரிக்கும் போது
மகன்; எங்கே மருமகள் முந்தானையில் ஒளிந்து கொள்வானோ என்ற பய உணர்வு மாமியாரை தொற்றிக்கொள்ளும் போது
மருமகள் படித்தவளாக இருந்தால் தங்களை மதிக்கமாட்டாளோ என்று படிக்காத மாமியாரோ-நாத்தனாரோ தாழ்வு மனப்பான்மையில் உழழும் போது
மருமகள் சற்று பொருளாதாரத்தில் தாழ்ந்து இருந்தால் அவளை அடிமைபோல் நடத்த முயலும் போது
மருமகள் பணக்காரியாக இருந்தால் அகங்காரி அவள் என்று அவப் பெயர் சூட்டும் போது
மருமகளுக்கு சிறு நோய் இருந்தாலும் அதை ஊதிப் பெரிதாக்கி அவளை தீண்டத்தகாதவள் ஆக்க முயலும் போது. ஆனால் தன் மகனுக்கு என்ன நோய் இருந்தாலும் அதை மூடி மறைப்பது. ஊதாரணத்திற்கு குணமாக்கக் கூடிய இனிப்பு நீர் மணமகளுக்கு இருக்கிறது என்று ஆட்டை வீட்டுக்கு அனுப்பியது போல் ஈனச்செயலும் நடந்துள்ளது. இந்தக் குறை போக்கத்தான் சீனாவின் சிற்பி மாசே துங் திருமணத்திற்கு முன்பு மணமக்கள் டாக்டரிடம் தனிக்கை செய்து நோய் குணமாதும் திருமண செய்யும் சம்பிராயத்தினை கொண்டு வந்தார்.
புகுந்த வீட்டில் தான் படும் வேதனையின் அதிர்ச்சியில் மூழ்கியிருக்கும் போது அவளைப் பார்த்து மணகளுக்கு பைத்தியம் என்ற பட்டத்தினை சூட்டும் பல்கலைக்கலகங்களாக மாமியார்களோ-நாத்தனார்களோ மாறும் போது-ஆனால் மணமகன் மன நிலை பாதித்தவன் என்ற உண்மையினை மறைக்க முயலும் போது
டி.விக்காட்சிகளில் வரும் மாமியார்-மருமகள் சண்டைகளை தங்கள் வீட்டிலும் அரங்கேற்ற முயலும் போது
பலர் மெச்ச ஆடம்பர திருமணம் கடன் வாங்கி நிறைவேற்றி விட்டு கடன்காரர்கள் துரத்தும் போது ஏற்படும் விரக்தி தங்களை கவ்வும் போது
இல்லாதவர் வீட்டில் அழகான பெண்ணை மகருக்காக திருமணம் என்று ஊரில் பறை சாட்டி விட்டு சீர்-சீராட்டு என்ற பெரிய லிஸ்ட்டை பெண் வீட்டாரிடம் கொடுத்து அவர்களும் தங்கள் மான மரியாதையை விட்டு நோட் புத்தகத்தினை கையிலேந்தி வீதி வீதியாக அலைய விட்டு திருமணம் செய்து கொடுத்தாலும் போதும் என்ற மன பக்குவம் அடையாது மணமகளை சீர்-சீராட்டுக் குறை சொல்லி நோகடிக்கும் போது
மேற்கூறிய குறைகளைக் களைய கீழ்கண்ட வழிமுறைகளைக் கையாளாம்:


திருமணத்திற்கு முன்பு மணமக்கள்-அவர்கள் பெற்றோர்கள் குடும்ப வாழ்வு சமூக சிந்தனை அடங்கிய புத்தகங்களை படிக்கச் செய்யலாம். மலேசியாவில் மணமக்களுக்கு ~கவின் குரிசு| என்று இன்பமான வழியில் வாழ்க்;கை அமைய மார்க்க போதனை நடைபெறும். அதே போன்று அமைப்பை ஏற்படுத்தி வழிகாட்டுதலில் ஈடுபடலாம்.
திருமணத்திற்கு பின்பு ஏற்படுகின்ற கருத்து வேற்றுமை காவல் நிலையம்-கோர்ட் வரை சென்று மானம் கப்பல் ஏறாமல் இருக்க கற்ற பெரியோர்கள் அடங்கிய கவுன்சிலிங் குழுவினை அமைக்கலாம்
ஏழை-எழியோர் திருமணம் செய்ய ஊர்க்காரர்களே பொறுப்பினை எடுத்துக் கொண்டு ஒரு கூட்டுத் தொகையினை(கார்ப்பஸ் பண்ட்) ஏற்படுத்தி எளிய முறையில் திருமணம் அமைய வழி வகுக்கலாம்
திருமணம் முடிந்து-விருந்தில் கலந்து கொண்டு வீட்டுச் செல்வதோடு தங்கள் காரியம் முடிந்தது என்றில்லாமல்-மணமக்களிடையே கருத்து வேற்றுமை ஏற்படும் போது அதனை தீர்த்து வைப்பதிற்கு ஒவ்வோர் ஊரிலும் பெரியோர் ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும. இறை நம்பிக்கையாளர்கள் மனைவியின் ஒரு நடத்தை பிடிக்கவில்லை என்றாலும் அவளுடைய வேறு நல்ல குணங்களுக்காவது மணகனுக்கு மனநிறைவினைத் தரலாம்.
குத்பாவில் ஓதப்படும் ~தஷஹ்ஹ_து| துவாவின் நோக்கம் ~ திருமணம் வெறும் மகிழ்ச்சி குதுகூலமட்டுமல்ல-அது மணமக்களிடையே நாங்கள் இருவரும் வாழ்க்கை முழுவதும் தோழர்களாக-உற்ற துனைவர்களாக வாழ் நாள் முழுவதும் ஒற்றுமையாக வாழ்வோம் என்ற ஒப்பந்த பத்திரமாகும் என்று மணமக்களுக்கு அறிவு சான்ற பெரியோர் நினை ஊட்ட வேண்டும்.


மனைவிப் பா

-------------

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகிறது

என பொற்றோர் பெரியோர் சொல்ல

படிப்பை பாதியில் நிறுத்தி உன்

பள்ளியறை தஞ்சம் புகுந்தேன்


கண்ணே கனிமானே தேனே தௌ;ளமுதே

மயிலே மாங்குயிலே

முகிலைக் கிழித்து வந்த முழு நிலவே

ஆழ் கடல் மூழ்கி தெரிந்தெடுத்த வலம் புரி சங்கே


கொம்புத் தேனல்லவோ உன் பேச்சு

கொடியிடையடி உன் இடுப்பு

சந்தனமடி உன் தேகம்

சலங்கையடி உன் சிரிப்பு


நடந்தால் நீ நடனம்

அசைந்தால் நீ தேர்

கவின் மிகு கவிதை உன் மூச்சு

கருமேகடி உன் கூந்தல்


கம்ப ரசத்தை மிஞ்சியது உன் கவிதை மயக்கத்தில

தந்தேன் என் தளிர் மேனியை

சுனாமியாக மாறி என்னை சூறையாடி உன்

தாகத்தை தனித்துக் கொண்டாய்



எல்லையில்லா மகிழ்ச்சி மூழ்கியிருந்த போது

இடிவிலுந்தது உன் செல்போன் வடிவில்

அர்த்த ராத்திரியில் கேட்டது பெண் குரல்

நடுங்கியது உன் குரல்


என்னை கண்ணே கற்கண்டே என

கவிதை பாடியது பொய்யா?

கேட்டது மறுமுனை பெண் குரல்

கண்ணாடியாக நொருங்கியது என் இதயம்


அடப்பாவி காலமெல்லாம் என்னைக்

காப்பாற்றுவாய் என வீர வசனம் பேசி-என்

கருப்பையை நீ ஈரமாக்கினாய்-ஆனால் நீயோ

கல்லறையடி உன் கருப்பை என்றாய்


வாடகைத் தாய் என்று உன்

பாவச்செயலை சுமந்தேன் பிள்ளை வடிவில்

அழுதேன் புழம்பினேன்

ஆறுதல் சொல்வதிற்குப் பதிலாக அடித்தாய்


ஆண்கள் எந்தச் சேற்றிலும்

கால் மிதித்து

எந்தக் குட்டையிலும்

கால் கழுவுவான் என்றாய்


நீயும் வேணும் அவளும் வேணும்

மறக்க முடியுமா அவள் நினைவை

என்று ~காதல் பரிசு| சினிமா பாணியில்

வஞ்சித்தாய் வசனம் பேசி


கொஞ்சும் கிளியே என அழைத்த நீயே என்னை

வஞ்சித்தபோது சொல்ல வேண்டுமா

உன் குடும்பத்தார்

குரூர குணங்களை


நின்றால் குற்றம் நடந்தால் குற்;றம்

தொட்டால் குற்றம் தொடங்கினால் குற்றம்

சிரித்தால் குற்றம் சினுங்கினால் குற்றம்

அம்மம்மா எத்தனை ஏச்சும் பேச்சும்


கண்ணீர் கரைந்த தூத்துக்குடி உப்பளமா என் வேதனை

காதல் சருகு போன்றது அதனை சேகரித்தால்

குளிர்காய உதவும்-ஆனால்

காலமெல்லாம் வாழ்விற்குத் துணையாகுமா?


மாற்றான் தோட்டத்து மல்லிகையை

மனக்க விரும்பும் நீ

தன் வீட்டு மல்லிகையை

தவிக்க விடலாமா?


கனவனே கண்கண்ட தெய்வம் கற்புக்கரசி கண்ணகி

கதையில் படித்தேன்-ஆனால்

என்னை வாடகைத் தாயாக்கி

மாதவியினைக் கைப்படிக்க எண்ணலாமா?


மனிதன் தனித்திருப்பது நல்லதல்ல

ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர்

ஆடையாக என சொல்லியது திருக்குர்ஆன்

ஆனால் நீ ஆட்கொல்லி விஷமாக மாறலாமா?



ஆடு மாடுமாடுகள் திருமணம் செய்வதில்லை

ஆறறிவு மனிதனுக்கு திருமணம் புனிதச் செயல்

துன்பத்தைத மறந்து இன்பத்தைத் தருபவள் மனைவி

அந்தத் துணையைத் துறத்தலாமா?


ஓர் இறை நம்பிக்கையாளன்-தன் துணையின்

ஒரு பழக்கம் பிடிக்கவில்லையெனில்

அவளுடைய வேறு பழக்கங்கள் உங்களுக்கு

மனநிறை தந்தால் அவளை நேசியுங்கள்


சொன்னது அல்குர்ஆன்-நீ

மறந்திருக்க மாட்டாய்- ஏனென்றால்

படித்தவன் பண்பாளன் என பெரியோர்

சொல்லக் கேட்டிருக்கிறேன்


நல்ல குடும்பம் ஓர் பல்கலைக் கழகமாமே

நம் குடும்பம் மட்டும் நடுத் தெருவிலா?

சிந்தித்து செயலாற்று-அடிமைச்

சிறைக்கதவை உடைத்து வெளியே வா


இசைக்கு சரணம்-சுருதி அவசியம்-உன்

செவிக்கு என் கவிதை

எதுகை-மோனை தெரியாது-என்

இதயச்சுமை எதுவுமே தெரியாதா?.

வட்டி 'சமுதாயத்தின் சாபக்கேடு'

வட்டி 'சமுதாயத்தின் சாபக்கேடு'

முன்னுரை:
சமீபத்தில் எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. அவற்றுக்கு மூலகாரணம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையேயாகும். உலகின் மிகப்பிரபல்யமான சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் சின்னஞ்சிறிய அதிர்வுகளைக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் முழுவதும் முடங்கிப்போயின, இதற்கு காரணம் வட்டி அடிப்படையிலான வர்த்தகமேயாகும். பல குடும்பங்கள் அழிந்து போனதற்கும் வட்டியே முதற்க் காரணமாகும். இஸ்லாம் வட்டியை முற்றாக தடை செய்கிறது. அவற்றை தெரிந்து கொண்டு நமது வாழ்வில் கடைபிடிப்பது அவசியமாகும்.

1. வட்டி என்றால் என்ன?:
அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது.
'...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279)
இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான்.
'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130)
2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு:
வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது.
'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275)
வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.
1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது.
2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும்.
3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும்.
3. வட்டி ஒரு பெரும் பாவம் :
'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
4. வட்டி ஒரு கொடிய குற்றம் :
'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ)
மற்றொரு அறிவிப்பில்,
'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன்.
5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் :
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை:
1. நிரந்தர நரகம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085)
நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள்.. 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர்.
ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான்.
7. போர்ப் பிரகடணம்:
வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள்.
8. வட்டி வாங்குவோரின் அவல நிலை :
1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான்.
'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275)
2. நபி (ஸல்) அவர்களின் சாபம்.
'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962)
3. அல்லாஹ்வின் சாபம்.
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
4. போர் பிரகடணம்.
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
9. அடமானம்:
அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார்.
இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன.
முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும்.
நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்)
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும்.
'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
10. ஒத்தி வட்டியா?:
ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும்.
ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது..
'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
11. பேங்க்கில் பணம் போடலாமா? :
வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது.
இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது.
இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது.
இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும்.
12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?:
ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும்.
இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும்.
13. குலுக்கல் சீட்டு:
குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது.
அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே.
14. தவணை முறையில் பொருள் வாங்குவது:
இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று.
இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது.
15. வங்கியில் வேலை செய்வது:
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
16. பகடி கூடுமா?:
பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார்.
பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது.
17. முடிவுரை:
பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக!

அஜ்மானில் சிவ் ஸ்டார் ப‌வ‌ன் புதிய‌ கிளை திற‌ப்பு விழா

அஜ்மானில் சிவ் ஸ்டார் ப‌வ‌ன் புதிய‌ கிளை திற‌ப்பு விழா

அஜ்மானில் சிவ் ஸ்டார் ப‌வ‌ன் புதிய‌ கிளை திற‌ப்பு விழா 03.04.2009 வெள்ளிக்கிழ‌மை மாலை ந‌டைபெற்ற‌து.

நிக‌ழ்ச்சியில் ச‌மூக‌ ந‌ல‌ ஆர்வ‌ல‌ர் ஏ. அஷ்ர‌ப் அலி, வ‌ளைகுடா த‌மிழ‌ர் பேர‌வை த‌லைவ‌ர் அன்வ‌ர் பாஷா, அஜ்மான் அமீர‌க‌ த‌மிழ‌ர்க‌ள் அமைப்பின் நிர்வாகி மூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்துரை வ‌ழ‌ங்கின‌ர்.

சிவ் ஸ்டார் ப‌வ‌ன் உரிமையாள‌ர் கோவிந்த‌ராஜ‌ன் ஏற்புரை நிக‌ழ்த்தினார். 2001 ஆம் ஆண்டு துபாயில் 5 ஊழிய‌ர்க‌ளுட‌ன் துவ‌ங்கிய‌ இந்நிறுவ‌ன‌ம் இன்று 140 பேருட‌ன் உய‌ர்ந்திருப்ப‌த‌ற்கு த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் பேராத‌ர‌வு தான் என‌க் குறிப்பிட்டார்.

வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் செயலாள‌ர் ஜியாவுத்தீன் த‌ம்ப‌தியின‌ர் வாழ்த்துக்க‌விதை வாசித்தார்.

இந்நிக‌ழ்வில் இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன்,யுஏஇ த‌மிழ்ச்ச‌ங்க‌ம், அமீர‌க‌ த‌மிழ் ம‌ன்ற‌ம், அமீர‌க‌ த‌மிழ்க் க‌விஞ‌ர் பேர‌வை ப‌ல்வேறு அமைப்புக‌ளின் நிர்வாகிக‌ள் ப‌ங்கேற்ற‌ன‌ர். ச‌ங்க‌ம் தொலைக்காட்சியின் இய‌க்குந‌ர் க‌லைய‌ன்ப‌ன் நிக‌ழ்ச்சியினை தொகுத்து வ‌ழ‌ங்கினார்.
ச‌ங்க‌ம‌ம் தொலைக்காட்சியின் சார்பில் ப‌ல்வேறு போட்டிக‌ள் ந‌டைபெற்ற‌ன‌. அத‌னைத் தொட‌ர்ந்து விருந்து உப‌ச‌ரிப்பு ந‌டைபெற்ற‌து.














Thursday, March 26, 2009

பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி ஒரு கண்ணோட்டம்

பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி ஒரு கண்ணோட்டம்


1989 - பா.ம.க
1991 - பா.ம.க
1996 - பா.ம.க
1998 - பா.ம.க + அ.தி.மு.க + பி.ஜே.பி
1999 - பா.ம.க + தி.மு.க + பி.ஜே.பி
2001 - பா.ம.க + அ.தி.மு.க + காங்
2004 - பா.ம.க + தி.மு.க + காங்
2006 - பா.ம.க + தி.மு.க + காங்
2009 - பா.ம.க + அ.தி.மு.க
2011 - பா.ம.க + தே.மு.தி.க
2014 - பா.ம.க + அ.இ.ச.ம.க
2016 - பா.ம.க + அ.இ.நா.ம.க(கார்த்திக் கட்சி)
2019 - பா.ம.க + ல.தி.மு.க + கு.மு.க (குஷ்பு முன்னேற்ற கழகம்)
2021 - பா.ம.க + ந.மு.க (நமீதா முன்னேற்ற கழகம்)
2024 - பா.ம.க - ந.மு.கவுடன் இணைப்பு - நமீதா பிரதமரானார்

அரசு வேலைவாய்ப்புகள்

அரசு வேலைவாய்ப்புகள்

சென்னை ரெயில்வே துறையில் (B.E/ Diploma) படித்த பொறியாளர்கள் , (Physics/Chemistry) படித்த பட்டதாரிகள் மற்றும் I.T.I படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. விண்ணப்பம் சேர வேண்டிய கடைசி நாள் 20.04.2009
முழு விவரம் பார்க்க >>>

http://nellikuppamjamaath.blogspot.com/2009/03/blog-post_26.html

Wednesday, March 25, 2009

அல்குர்ஆனின் சிறப்புகள்

அல்குர்ஆனின் சிறப்புகள



அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன், தான் விரும்புவது போல் வாழ்ந்துக் கொள்ள விட்டுவிடாமல் வாழ்க்கை நெறியை வேதங்களின் மூலமும் தூதர்களின் மூலமும் வகுத்துக் கொடுத்தான். இந்த அடிப்படையில் மனித சமுதாயத்திற்கு இறுதி வேதமாக அல்குர்ஆனையும் இறுதித் தூதராக முஹம்மது(ஸல்) அவர்களையும் அனுப்பியுள்ளான். எனவே நமது வாழ்க்கையை மன இச்சைப்படி அமைத்துக் கொள்ளாமல் அல்குர்ஆனும் நபிமொழியும் காட்டித்தரும் நெறியிலேயே அமைத்துக் கொள்ள வேண்டும். இதுவே முஸ்லிமின் உயரிய பண்பும் குர்ஆன் மற்றும் ஹதீஸின் எதிர்பார்ப்புமாகும். மார்க்கத்தின் இவ்விரு அங்கங்களில் முதலிடம் பெறுவது அல்குர்ஆன் ஆகும்.

அல்குர்ஆனுடன் இரண்டு விதமான தொடர்புகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும்.

1. திருக்குர்ஆனை பொருளறிந்து படிப்பது. அதன் கட்டளைகளைப் புரிந்து அதன் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது.

2. அல்குர்ஆனை அதிகமாக ஓதி அளவற்ற நன்மையைப் பெற்றுக் கொள்வது.

அல்குர்ஆனை பொருளறிந்து படிப்பது
திருமறையை சூரத்துல் ஃபாத்திஹாவிலிருந்து சூரத்துன்னாஸ் வரை முழுமையாகப் படித்து அதன் செய்திகளை அறிந்து கொள்ளவேண்டும். அதன் கட்டளைகளுக்கு கட்டுப்படுவது, அது தடுக்கும் செயல்களை விட்டும் விலகிக் கொள்வது. அதில் கூறப்பட்ட சம்பவங்களின் மூலம் படிப்பினை பெறுவது, இவ்வாறு அல்குர்ஆனோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது முஸ்லிம்கள் அனைவரின் மீதும் கட்டாயக் கடமையாகும். நபி(ஸல்) அவர்களின் குணநலன்கள் அல்-குர்ஆனாகவே இருந்தது என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதின் பொருளும் இதுதான்.

எனவே நம்முடைய வாழ்க்கையை முற்றிலும் அல்-குர்ஆனுக்கு கட்டுப்படும் வாழ்க்கையாக அமைத்துக் கொள்ளவேண்டும். அதுவே அல்-குர்ஆன் இறக்கி அருளப்பட்டதின் மகத்தான நோக்கமாகும்.
இந்த நோக்கத்தைப் புரிந்து கொண்ட நபித்தோழர்களும் நபித்தோழியர்களும் அல்-குர்ஆனுக்கு இணங்க தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு வசனம் இறங்கும் போதும் அதன் கட்டளைகளுக்கு உடனே கட்டுப்படுபவர்களாக இருந்தனர். இதற்கு வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் உள்ளன. எனவே நாமும் அல்குர்ஆனைப் படித்து, அதன் அடிப்படையில் செயல்பட்டு ஈருலக வெற்றியைப் பெறுவோமாக!

திருக்குர்ஆன் பொதுமக்களுக்குப் புரியாது என்று கூறுவது தவறான கூற்றாகும். திருக்குர்ஆனின் அர்த்தம் மற்றும் விளக்கங்களை நேரடியாக அறிவதற்கு அரபி மொழியில் புலமை அவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மொழி பெயர்க்கப்பட்டவற்றைப் படித்து அதில் உள்ள செய்திகளை ஒவ்வொருவரும் அவரவரின் அறிவுக்கு ஏற்றவாறு புரிந்து கொள்ள முடியும். ஒரு நூல் மொழிபெயர்க்கப்படுகிறது என்றால் அந்த மொழியை அறியாதவர்கள் அதனை புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்குத்தான். எனவே குர்ஆனை அதன் மொழிபெயர்ப்பை புரிந்து கொள்ள முடியாதென்பது தவறானதும் அல்லாஹ்வின் வேதவசனங்களுக்கு மாற்றமான கூற்றுமாகும். அல்லாஹ் இதனை 54: 32, 47: 24 வசனங்களின் மூலம் உணர்த்துகிறான்.

நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
(அல்-குர்ஆன் 54:32)

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்-குர்ஆன் 47:24)

அல்குர்ஆனை ஓதுதல்
பொருளறியாமல் படித்தாலும் ஆன்மீக ரீதியாக நன்மையை பெற்றுத்தரும் ஒரே நூல் அல்குர்ஆன் மட்டும்தான். திருக்குர்ஆனை ஓதுவதில் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன. அல்குர்ஆனை முறையாக, புரிந்து ஓதுபவர் மறுமையில் மலக்குமார்களுடன் இருப்பார். திருமறையைப் படித்தவர்களுக்காக அது மறுமையில் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யும். இதுபோன்ற இன்னும் பல நன்மைகளும் சிறப்புக்களும் உள்ளன. எனவே பொருட்செலவோ, கடின உடலுழைப்போ இன்றி குறைந்த நேரத்தில் நிறைந்த நன்மையைப் பெற்றுத் தரும் திருமறையை அதிகமாக ஓதிடவேண்டும்.

குறிப்பாக ரமலான் மாதத்தில் அதிமாக ஓதவேண்டும். ரமலான் மாதத்தில் ஒவ்வொரு முஸ்லிம் ஒரு தடவையாவது குர்ஆனை முழுமையாக ஓதி முடிப்பது நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் ஒன்றாகும்.

நபி(ஸல்) அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ரமலானில் ஒரு தடவை குர்ஆனை ஓதிக் காண்பிக்கப்பட்டது. அவர்கள் மரணிக்கும் வருடம் இரண்டு தடவை ஓதிக் காண்பிக்கப்பட்டது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : புகாரி)

அல்குர்ஆனின் எழுத்துக்களை முறையாக உச்சரித்து, நிறுத்தி, நிதானமாக, ஓதவேண்டும்.
(நபியே! இரவுத் தொழுகையான) அதில் குர்ஆனை (நன்கு திருத்தமாக) நிறுத்தி, நிறுத்தி ஓதுவீராக! என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். குர்ஆனை அழகாக, ராகமாக, ஓதாதவன் நம்மைச் சார்ந்தவனல்ல என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

குர்ஆனை ஓதுவதை விட்டும் பொடுபோக்காக இருக்கும் சகோதர, சகோதரிகள், நாளை மறுமை நாளில் ஓரு நன்மைக்காக அங்கும் இங்கும் ஓடித் திரிந்து அல்லோலப்பட்டும் அது கிடைக்காமல் நரகில் விழ நேரிடும் அந்நாளை நாம் மறந்து விடக்கூடாது. இதோ குர்ஆனின் சிறப்புக்கள் குறித்து குர்ஆன் மற்றும் நபிமொழிகள் கூறிய ஒருசில சிறப்புக்கள்:-

குர்ஆன் குறித்து குர்ஆன் கூறுவது
1. குர்ஆனை புரிந்து கொள்வது எளிது - நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
(அல்-குர்ஆன் 54:32)

2. சிந்திக்கத் தூண்டும் குர்ஆன்
- மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)

3. குர்ஆன் விசுவாசிகளுக்கு அருமருந்து - இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம் ஆனால் அக்கிரமக் காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. (அல்-குர்ஆன் 17:82)

4. குர்ஆன் மனிதர்களின் இதய நோய்நிவாரணி - மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது. (அல்-குர்ஆன் 10:57)

5. குர்ஆனை ஓதும் முன்பு ஷைத்தானிய தீண்டுதலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருதல் - மேலும் (நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக. (அல்-குர்ஆன் 16:98)

6. குர்ஆன் எழுத்து வடிவில் நபிக்கு அருளப்படவில்லை - காகிதத்தில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே நாம் உம் மீது இறக்கி வைத்து, அதனை அவர்கள் தம் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும், இது பகிரங்கமான சூனியத்தைத்தவிர வேறில்லை என்று அந்நிராகரிப்போர் நிச்சயமாக சொல்வார்கள். (அல்-குர்ஆன் 6:7)

7.குர்ஆன் நபியின் சொந்த கூற்றல்ல - அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்படடதாகும். அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால், அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம். (அல்-குர்ஆன் 69: 43-46)

குர்ஆன் குறித்து நபிமொழிகள் கூறுவது
1. நிச்சயமாக இந்தக் குர்ஆன் பரிந்துரை செய்யக்கூடியதாகும். அது ஏற்கப்படக்கூடியதுமாகும். அதனைப் பின்பற்றினால் அவரை அது சுவனத்தில் சேர்க்கும். அதனை பின்பற்றாமல் விட்டு விட்டால் அல்லது நிராகரித்தால் அவன் நரகின் அடித்தளத்தில் தள்ளப்படுவான்.
(அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத்(ரலி) – ஆதாரம் : முஸ்லிம்)

2. குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு அத்தியாயங்கள் அல்பகரா, ஆலஇம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

3. குர்ஆனின் விஷயத்தில் தர்க்கம் புரிவது இறை மறுப்புச் செயலாகும்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : அபூதாவூத்

4. குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர்.
அறிவிப்பாளர்: உஸ்மான்(ரலி) – ஆதாரம் : புகாரி

5. இக்குர்ஆனின் ஒரு முனை அல்லாஹ்வின் கையிலும் மறுமுனை உங்கள் கைளிலும் உள்ளது. எனவே இதனை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் இம்மையில் வழிதவறமாட்டீர்கள், மறுமையில் அழிவுறவும் மாட்டீர்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : தப்ரானி )

6. பேச்சுக்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டுதல்களில் மிகச்சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் பாதையாகும். தீனில் தீமையானது மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். (ஆதாரம் : முஸ்லிம்)

7. இவ்வேதத்தைக் கொண்டே அல்லாஹ் சில கூட்டத்தாரை உயர்த்துகிறான். மற்றோரு கூட்டத்தினரை இதனைக் கொண்டே தாழ்த்துகிறான். சமுதாய உயர்வு, தாழ்வுக்கு காரணம் குர்ஆனே. (அறிவிப்பாளர்: உமர்(ரலி) - ஆதாரம் : முஸ்லிம்)

8. குர்ஆனின் சிறு பகுதியேனும் யார் உள்ளத்தில் மனனம் இல்லையோ அவர் உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றது. அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) – ஆதாரம் : திர்மிதி

9. எவர் குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதினால் நன்மை இருக்கிறது. ஒரு நன்மை அதுபோன்று பத்து மடங்காக்கப்படும். "அலீஃப், லாம், மீம்" ஒரு எழுத்து என்று சொல்லமாட்டேன். மாறாக அலீஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்துமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூத்(ரலி) - ஆதாரம் : திர்மிதி, தாரமி.)

10. குர்ஆனை ஓதக்கூடியவருக்கு உவமைகளையும், ஓதாமல் இருப்பவருக்கு உவமைகளையும் பெருமானார்(ஸல்) அவர்கள் மொழிந்துள்ளார்கள். குர்ஆனை ஓதக்கூடிய முஃமினின் உவமை பழத்தைப் போன்றது. அதனுடைய வாசனையோ மணமானது. அதனுடைய சுவையோ ருசிக்கத்தக்கது. குர்ஆனை ஓதாத மூஃமீனின் உவமை பேரித்தம் பழத்தை போன்றது. அதற்கு வாசனை இல்லை. அதனுடைய சுவையோ இனிப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் உவமை குமட்டிக்காய் போன்றது. அதற்கு வாசனை இல்லை. அதனுடைய சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதக்கூடிய நயவஞ்சகனின் உதாரணம் துளசி செடியை போன்றது. அதனுடைய வாசனை மணமானது. அதனுடைய சுவையோ கசப்பானது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபு மூஸா(ரலி) - ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

11. யார் குர்ஆனை ராகமாக (தஜ்வீத்துடன்) ஓதவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல. (அறிவிப்பாளர்: பசீர் பின் அப்துல் முன்திர்(ரலி) - ஆதாரம் : அபூதாவூத்)

12. குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள் மேலும் அதை ஓதுங்கள். குர்ஆனைக் கற்று அதனை ஒதி அதன் அடிப்படையில் நடப்போருக்கு உவமையானது கஸ்தூரியால் நிரப்பப்பட்ட பையைப் போன்றது. அது அனைத்து இடங்களிலும் மணம் வீசிக்கொண்டிருக்கும். குர்ஆனைக் கற்று அது அவருடைய உள்ளத்தில் பசுமையாய் பதிந்தும் அதனடிப்படையில் நடக்கவில்லையோ அவரின் உவமை கஸ்தூரியால் நிரப்பப்பட்ட பையை அது பரவாமல் கட்டிக்கொண்டவரைப் போல என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி) - ஆதாரம் : திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா)

13. நாங்கள் திண்ணையில் அமர்ந்து இருக்கிற சமயத்தில் பெருமானார்(ஸல்) எங்களிடம் வந்து உங்களிடம் பாவம் செய்யாது சொந்த பந்தங்களை துண்டிக்காத நிலையில் ஒவ்வொரு நாளும் புத்ஹான் அல்லது ஹதீக் என்ற இடத்திற்கு சென்று திமில்களுடைய இரண்டு ஓட்டகங்களை கொண்டு வர யார் விரும்புவார்? என வினவினார்கள். நாங்கள் அனைவரும் இதை விரும்புவோம் என்று பதிலளித்தோம். உங்களில் ஒருவர் பள்ளிவாசல் பக்கம் செல்லக்கூடாதா? அவ்வாறு சென்று அல்லாஹ்வுடைய வேத்தில் இரண்டு வசனங்களை ஓதுதல் அல்லது கற்றல் இரண்டு ஒட்டகங்களை விட சிறந்தது. மூன்று வசனங்களை ஓதுவது மூன்று ஒட்டகங்களை விட சிறந்தது. நான்கு வசனங்களை ஓதுவது நான்கு ஒட்டகங்களை விட சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தன்னுடைய இல்லத்திற்கு செல்லும்போது தன்னுடன் நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்களை பெற்றுச் செல்லவேண்டும் என்று விரும்புவாரா? என்று வினவினார்கள். நாங்கள் அனைவரும் அதை விரும்புவோம் என்று கூறினோம். மூன்று (குர்ஆனிய) வசனங்களை உங்களில் ஒருவர் தன்னுடைய தொழுகையில் ஓதுவது அவருக்கு நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்கள் கிடைப்பதை விட சிறந்தது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி) - ஆதாரம் : முஸ்லிம், இப்னுமாஜா)

14. குர்ஆனை ஓதுவதில் தேர்ச்சி பெற்றவர் கண்ணிமிக்க வானவர்களுடன் இருப்பார். குர்ஆனை ஒதுவது சிரமமாக இருப்பினும் அதைத் திருப்பித்திருப்பி சிரமத்துடன் ஓதுவாரானால் அவருக்கு இரண்டு கூலி இருக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) - ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

15. மறுமை நாளில் குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம் குர்ஆனிய தோழரே ஓதுவீராக என்று கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பாரோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும் என்று கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) - ஆதாரம் : அபூதாவுத், திர்மிதி)

16. குர்ஆனை ஓதிய தோழர் மறுமையில் வருவார். அப்போது குர்ஆன் இறைவா இவருக்கு ஆடையை அணிவி என்று சொல்லும் அப்போது அவருக்கு உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்படும். இறைவா இவருக்கு உன் அருளை வழங்குவாயாக! என்று கூறும். அப்போது அவருக்கு உயர்ந்த சீருடை அணிவிக்கப்படும். பிறகு குர்ஆன் இவரை பொருந்திக் கொள்ளுமாறு சொல்லும் அவரை இறைவன் பொருந்திக் கொள்வான். அம்மனிதரிடம் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஒதுவீராக!, அவர் ஒதுகிறபோது ஒவ்வொரு வசனத்திற்க்கும் ஒரு நன்மை அதிகப்படுத்தப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி) - ஆதாரம் : திர்மிதி, இப்னு குஸைமா)

குர்ஆன் உயிருடன் இருக்கும் போதே படித்து நேர்வழி பெறுவதற்குத்தானேயொழிய இறந்த பின் மரணித்தவர்களுக்கு குர்ஆனை அஞ்சல் செய்வதற்கு இல்லை.

(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனையுண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப்படுத்துகிறது
(அல்குர்ஆன் 36: 70)

குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளிய நோக்கம் நாம் அதைப் படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பது உண்மை. உங்களை மரணம் வந்தடைவதற்கு முன் குர்ஆனை ஓதத் தெரிந்தவர்களிடம் சென்று குர்ஆனை ஓதத் தெரிந்து கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதரர்கள் குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். குர்ஆனைப் படியுங்கள். அதைப்படிப்பது மிகவும் இலகுவானது.

குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆகவே அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜுமதுல் குர்ஆனில் விளங்கிப்படியுங்கள். விளங்காதவற்றை அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள். அதன் படி செயல்படுங்கள்.

குர்ஆனைப் படித்து அதன்படி நடந்து ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!

Motivational Coach and Sales Trainer

A.Mohamed Ali
reply-tojilsam@yahoo.com
toimantimes+owner@googlegroups.com
dateThu, Mar 26, 2009 at 7:06 AM
subjectRe: திருச்சியில் அ ய்மான் மகளிர் கல ்லூரி ஆறாம் ஆண்ட ு பட்டமளிப்பு வி ழா

Dear brothers,

Wa Alaikkum salam,

I am glad to know about Aiman Women College. I wish and very sincerely offer my prayers
for the success of this college, the success of the students.

I pray to the Almighty Allah to bless all the children( the students) of this college
with excellent knowledge, health, brilliant career prospects, a beautiful life to live. Aameen.

Dear brothers and sisters... I am a Motivational Coach and Sales Trainer. I live in Chennai.
If any organization in Chennai city interested in utilizing my services may contact me.
I may consider other areas too depending on my work schedule
.
I wish to offer/share the knowledge, that Almighty Allah has given me, with the younger generation in our community so that they make use of the same to come up in life.

I am practicing Insurance( Shariah Compliant General, Non-Life Insurance ONLY).
If students and unemployed youth wish to earn a decent income as full timer or during their spare time, they may contact me.


May Allah the Almighty bless all of us.

Best regards

A.Mohamed Ali
Chennai.

e-mail: jilsam@yahoo.com
committed_to_customer_service@yahoo.co.in

துபாய் வருகைபுரிந்த தன்னம்பிக்கை பயிற்சியாளர் சாதத்துல்லா கானுக்கு வரவேற்பு



துபாய் வருகைபுரிந்த தன்னம்பிக்கை பயிற்சியாளர் சாதத்துல்லா கானுக்கு வரவேற்பு

அமீரகத்தில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை பயிற்சி முகாமினை நடத்த வருகை புரிந்த பெங்களூர் இஸ்லாமிக் வாய்ஸ் ஆசிரியர் சாதத்துல்லா கான் அவர்களுக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இவ்வரவேற்பில் உணர்வாய் உன்னை பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளர் மஜித் முகர்ரம், முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் பங்கெற்றனர்.

Tuesday, March 24, 2009

மனித உரிமை மீறல்களும்- சிறையில் சில மனிதாபிமான சம்பவங்களும்!

மனித உரிமை மீறல்களும்- சிறையில் சில மனிதாபிமான சம்பவங்களும்!

முனைவர் ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு )
mdaliips@yahoo.com

“அரசியல் வாதிகளிடமிருந்து காவல்துறை அதிகாரிகளைக் காப்பாற்றுங்கள்” ‘அரசியல் வாதிகளிடமிருந்து காவலர்களைக் காப்பாற்றுங்கள்’ என்ற கோசத்தினை எழுப்பியது வேறு யாருமில்லை. இந்தியாவின் தலைசிறந்த சி.பி.ஐ. டைரக்டரகளாக இருந்த திரு. சி.வி. நரசிம்மன், வி.ஆர். லஷ்மிநாராயணன், சி.பி.ஐ. ரூபன் மற்றும் வக்கீல்கள், மனித உரிமைகள் அமைப்புகள்தாம். 16-3-07 நடத்திய கூட்டத்தின் எழுப்பிய குரல்தான் நான் சொன்ன வாசகம். இது டெக்கான் குரோனிக்கல், 10.3.07 தேதியிட்ட பத்திரிக்கை 5 ஆம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. கலைஞர் திரு. மு. கருணாநிதியினைச் சென்னை மேம்பால ஊழல் சம்பந்தமான வழக்கில் 29.6.01 அன்று கைது செய்ததன் மூலம் நானும், அரசியல் வாதிகளின் பலி கடா ஆக்கப்பட்டேன். 1861இல் ஆங்கிலேயர்கள் இயற்றப்பட்ட இந்தியன் போலீ° சட்டத்தினைத் திருத்துவது மூலம் சட்டத்தினைத் தங்களுடைய கைப்பாவையாக்கி அதிகாரிகளை ப்பழிவாங்குவதை அரசியல் வாதிகள் நிறுத்த வழி வகுக்க வேண்டும்.
‘சேவல் கூவுவதற்கு முன்பு எழுந்து நடந்தால்’ சிங்கத்தையும் எதிர் கொள்ளலாம்’ என்ற ‘செம்மொழி மூதறிஞர்’வாக்கிற்கிணங்க, 1-7-2004 அதிகாலை 5.30 மணிக்கு எழுந்து, ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு °பூன் தேன் கலந்து குடித்து விட்டு, 5.45 மணிக்குக் கையில் பிரம்புடன், நேர் கொண்ட பார்வையும் நிமிர்ந்த நெஞ்சுடனும் மிடுக்கான நடையுடன் சென்னைக் கீழ்ப்பாக்கம் டெய்லர்° ரோடு அரசு அலுவலர் குடியிருப்பிலிருந்து வாக்கிங் கிளம்பி வெகு வேகமாக ஆர்ம்°ரோடு, சில்வன் காலணி, பர்னபிரோடு, லான்டன்° ரோடு வழியாக நடையைமுடித்து வீட்டினுள் 6.30 க்கு வேர்க்க விறுவிறுக்க நுழைந்து, சிறிது யோக பயிற்சி செய்தேன். வேர்வையில் நனைந்த ஆடைகளைக் களைந்து விட்டு, கைலியினைக் கட்டிக் கொண்டு மனைவி அளித்த சுடச்சுடக் காபியினை அருந்திக் கொண்டிருந்தேன் உள் அறையில் காலை 7மணியளவில் வீட்டில் காலிங் பெல்லை மூன்று தடவை வேகமாக அடித்து விட்டு கதவு திறந்திருந்ததால் 4,5 பேர் ஹாலில் வந்து நிற்பதாக , என் மனைவி பார்த்து வந்து சொன்னாள். நான் சட்டையினைப் போட்டுக் கொண்டு, அறையிலிருந்து ஹாலுக்குள் வந்த போது சி.பி.ஐ. எ°.பி. கபூர் என்பவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, வீட்டைச் சோதனை போட வேண்டும் என்றார்கள். பின்பு மூன்று நாட்களுக்குப் போலீ° க°டடி கொடுக்கப்பட்டது. அதன்பின்பே எங்களைச் சென்னை சென்ட்ரல் ஜெயிலுக்கு 5ஆம் தேதி மாலை கூட்டிக் கொண்டு சென்றார்கள். அடிஷனல் சூப்ரண்டெண்ட் அறையில் எங்களைச் சி.பி.ஐ. அதிகாரிகள்ஒப்படைத்தார்கள். அடிஷனல் எ°.பி.கோவிந்தராஜ், எங்கே எங்களுடைய பெர்ஷனல் ஐடெண்டிபிகேஷன் (அடையாள) மெமோ என்று கேட்டார். அதற்குச் சி.பி.ஐ. அதிகாரி கரம்யாள், எங்களுக்கு அதெல்லாம் தெரியாது. நாங்கள் கைதிகளை ஒப்படைத்து விட்டோம். நீங்கள் எடுத்துக் கொள்ளவேண்டும் என ஆவேசமாகச் சொன்னார். அதற்கு ஜெயில் அடிஷனல் எ°.பி. அமைதியாக ஜெயில் மேனுவலைக் காட்டி, நீங்கள் மேஜி°திரேட்டிடம் மெமோ எழுதிக் கொண்டு வந்திருக்கவேண்டும் என்று ஆணித்தரமாகச் சொன்னார். இருந்தாலும், இப்போது நான் இவர்களை எடுத்துக் கொள்கிறேன். இனி மேல் நீங்கள் இதனைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சட்டத்தினை எடுத்துச் சொன்னது, “நீ நெற்றிக் கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே” என்று இயம்பிய தமிழ் இலக்கியத்தை ஞாபகப் படுத்தியது.
நான் எ.சி வண்ணாரப்பேட்டை வடக்குச் சட்டம் ஒழுங்கு டி.சி.யாக இருந்த போது, பல தடவை அலுவல் நிமித்தமாகச் சென்ட்ரல் ஜெயில் வந்துள்ளேன். ஏ.சி.யாக இருந்த போது, 1980ஆம் வருடம், ஒரு போராட்டம் சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் அமைச்சர் நாஞ்சில் மனோகரன், தி.மு.க. சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.டி. சீதாபதி, மு.க.°டாலின் ஆகியோர்களை- ஜெயிலிருந்து எழும்பூர் மற்றும் சைதாப்பேட்டை கோர்ட்டிற்கும் அழைத்துச் சென்றுள்ளேன். அதே ஜெயிலின் வாசலைக் கைதியாக மிதிக்கும் போது , ஒரு விதமான உடம்பு சிலிர்த்தது. எங்களை நேராகக் குவாரன்டெய்ன் செல்லுக்குக் கொண்டு சென்றார்கள். இந்தச் சிறைப்பகுதி தற்காலிகமாக ரீமாண்டுக்கு அழைத்து வருகிறவர்கள் வைக்கப்படுவார்கள். எங்களை அழைத்துச் சென்ற சிறை அதிகாரி, இந்த செல்லில் தான் முன்னாள், இன்றைய தமிழக முதல்வர்கள் வாசம் செய்த இடம் என்று அடையாளம் காட்டினார்கள். அந்தச் செல்லின் முன்புறம் ஒரு அரசமரம், அதன் கீழ் ஒரு சிறிய விநாயகர் கோவில், அதன் அருகில் ஒரு தென்னை மரம் இருந்தன. அதில் சிவப்பு இளநீர், காய்த்துக் குலுங்கியது. அந்தத் தென்னங்கன்றை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நட்டதாகச் சொன்னார்கள்.
நாங்கள் அடைக்கப்பட்ட கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய கட்டிடம். நான் தங்கியிருந்த காலத்தில் ஐந்து தினங்கள் மழை பொழிந்தன. அதன் சாரல் படுக்கையினை நனைத்தது. சுத்தம் செய்யாக் கூவம் ஆற்றின் கடுங்கொசு கடியின் கொடுமைக்கும், தூர்நாற்றத்திற்கும் அச்சப்படும் யாரும், சிறைக்கு மறுபடியும் வரமாட்டார்கள். ஆனால் அதையும் பொறுத்துக் கொண்டு அடிக்கடி வருகை தரும் சிறைப் பறவைகள், அங்கு ஏராளம், ஏராளம்!

போலி முத்திரைத்தாள் மோசடியில் 1-7-2004 கைது செய்த சி.பி.ஐ. 2-7-2004-இல் என்னையும், ஏசி.சங்கர், எல்.ஐ.சிஆபீசர் சாது ஆகியோரையும் அடிஷனல் சி.எம்.எம் பொறுப்பில் இருந்த மேஜி°திரேட் அலமேலு அவர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். கடப்பை பகுதியிலிருந்து வந்த சிறைவாசி மூர்த்தியினை இரண்டு மாதமாகப் பெயில் எடுக்க யாரும் வரவில்லை. ஒரு நாள் மாலை விநாயகர் கோயில் முன்பு நின்று விநாயகரைத் திட்டிக் கொண்டிருந்தார். நான் என்ன காரணம் என்று கேட்டேன். அதற்கு அவர், இரண்டு மாதமாகியும் யாரும் பெயில் எடுக்கவில்லை. இந்தக் கடவுள் இருந்து என்ன செய்கின்றார். நான் அதற்கு, உன் சொந்தக்காரர்கள், உடன்பிறந்தவர்கள், உதவாததிற்குக் கடவுள் என்ன செய்வார் என்றேன். மற்றொரு நாள், விநாயகர் நிலைப் படியில் தலை வைத்து அழுது கொண்டிருந்தார். நான் அவருக்கு ஆறுதல் சொன்னேன். ஐந்து நாட்களில் பெயில் கிடைத்ததும், விநாயகரிடம் கூடச் சொல்லாமல் சிட்டாய்ப் பறந்து விட்டார் அந்தச் சிறைவாசி.
சிறைவாசிகளைப் பார்ப்பதற்கு அவர்களுடைய உறவினர்கள் வருவதுண்டு. எங்களை ஜெயிலிருந்து கோர்ட்டுக்குக் கொண்டு செல்லும் போது, கண்ட காட்சி உருக்கமானதாக இருந்தது. ஒரு பெண் தன்னுடன் கைக்குழந்தையினைக் கொண்டு வந்து, தன் கணவனைப் பார்த்து விட்டுத் திரும்பிய போது, கைக்குழந்தை, அப்பாவிடம் கைநீட்டி அழுதது பரிதாபமானது. ஒரு நாள் ஒரு தடா குற்றவாளி தன் மனைவியினைப் பார்க்க வந்தவர், தன் மனைவியிடம் ஆண்டவனிடம் வேண்டிக் கொள், நான் ஏழு வருடமாக ஜெயிலில் இருந்தும், கருணை காட்டவில்லை, என்றது அவர்படும் வேதனையின் ஆழம் தெரிந்தது. ஆனால் எதற்கும் கவலைப் படாத தனிக்காட்டு ராஜாக்களும் சிறையில் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. காரணம் சிறையில் அவர்களுக்குத் தனி கவனிப்பு இருப்பதுதான் சில சிறைத்துறை அதிகாரிகள், கைதிகள் ஜெயிலிருந்து சென்ற பின்பும் அவர்களுடன் தொடர்பு கொண்டு இருந்ததை அறிந்தேன்.
கள்ளச் சாரயத்தினை அடியோடு அழித்து விடலாம் ஆனால் அழிக்க முடியாததிற்குக் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் ஊக்கம் கொடுப்பது தான் என்றும் அறிந்தேன். சாராயம் காய்ச்சுவதற்கு, விற்பதற்கு, வழிவகைகள் வகுத்துக் கொடுப்பது காவலர்கள் என்பதும், அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் காவல் நிலையத்தில் ஆகும் செலவுகளை ஈடு செய்ய ஒரே வழி பண வசூல் செய்வது என்றும், சாராயக் குற்றவாளிகள் விலாவரியாக விவரித்தார்கள். எப்போது தீவிர ரெய்டு என்று அறிவிக்கப் படுகிறதோ அப்போது சாராயக் குற்றவாளிகள் காவலர்களுக்குக் கொடுக்கும் மாமூல் அதிகப்படுத்தப்படுமாம் . இந்த ஊழலை ஒழிக்கத்தான் மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள், பாட்டிலில் அடைத்த சாராயத்தை விற்பனைக்குக் கொண்டு வந்தார்கள். சாராயக் கடை ஏலம் எடுத்தவர்கள், தங்கள் பகுதியில் கள்ளச் சாராயத்தை ஒழிக்கத் தனிபடைகளையே வைத்து, கள்ளச் சாராய விற்பனையைக் கட்டுக்குள்வைத்திருந்தனர். ஆனால் இப்போது அந்த நிலைமையில்லை. அரசே ஏற்று நடத்தும் இந்தியத் தயாரிப்பு மது விற்பனை நிலையம் மட்டுமே இருப்பதால், கள்ளச் சாராய வியபாரிகளுக்கும், அதனை மறைமுகமாக ஆதரிக்கும் காவல் துறையினருக்கும் தீபாவளிகொண்டாட்டமாக உள்ளது!
எனது கைது செய்தி கேட்ட என் மூத்தமகள், சௌதியிலிருந்து குழந்தைகளுடன் தனியாக இருக்கும் தன் தாய்க்குத் துணையாக வந்து விட்டது. சாதரணமாக என் பேரக்குழந்தைகள் வந்தால், அவர்களை மெரினாபீச்சு, கிண்டி குழந்தைகள் பூங்கா, வண்டலூர் மிருகக்காட்சிச் சாலை என்று அழைத்துச் செல்வேன். 6 வயது ஆன என் பேரன் இர்பான், சென்னை வந்த 5.7.2004 அன்று எங்கே ‘நன்னா’ (தாத்தாவை அவ்வாறு தான் அழைப்பது வழக்கம்) என்று கேட்டு இருக்கிறான் . அதற்கு என் மகளும் நன்னா ஆபீஸீக்குச் சென்றிருப்பதாகச் சொல்லியிருக்கிறது. அந்தி மயங்கும் வரை நான் வராததைக் கண்டு என் மனைவிக்கு நான் ஜெயிலில் இருப்பதைச் சொல்லியிருக்கிறாள். அன்று இரவில் திடீர், திடீர் என்று விழித்து அழுதிருக்கிறான். அடுத்த நாள் காலை அவனைக் கூட்டிக் கொண்டு என் மகள் மனைவி ஆகியோர் வந்தார்கள்.
அவனை ஜெயில் பார்வையாளர்கள் அறைக்குள் என்னைப் பார்க்க அழைத்துக் கொண்டு வந்தார்கள். பாசத்தோடு வரும் அவன் எங்கே கூண்டுக்குள் வைத்து விடுவார்களோ எனப் பயந்து வீல் என அழுதுவிட்டான். உடனே அவனை வெளியே தாயிடம் சேர்த்து விட்டார்கள் சிறை அலுவலர்கள் அவன் சௌதியில் இருக்கும் போது தான் நன்னா போன்று இருக்கப் போலீ° டிர° போட்டுக் கொண்டு ஒரு கைக் குச்சியும் வைத்திருப்பானாம். என்னிடம் அந்த டிரஸைக் காட்ட, அதனை போட்டு வந்தும் ஜெயிலில் உள்ள கம்பிகளையும் சிறையில் இருக்கும் வார்டர்களின் டிர°ஸையும் பார்த்துப் பயந்து விட்டான். தனக்கு வேண்டியவர்கள் ஜெயிலில் இருப்பது குழந்தைகளின் மனத்தினை எவ்வாறு பாதிக்கும் என்பது மட்டுமல்ல; கைது செய்யப் பட்டவர்களுக்கும் தங்கள் குடும்பம் குழந்தைகள் மேல் எவ்வாறு பாசப் பிணைப்பு இருக்கும் என்பதும் தெரிந்தது. என்னுடன் கைது செய்யப்பட்ட உதவி ஆணையர் திரு.சங்கர், திருமணம் நடந்து பல ஆண்டுகளுக்குப் பின்பு பெண் குழந்தையைத் தவமிருந்து பெற்றிருக்கிறார். அந்தக் குழந்தை 7ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தது. அவரைப் பார்க்க அவரது மனைவி வரும் போது, குழந்தையை அழைத்து வருவதில்லை பல நாட்கள் ஆனதால் அவரால் தன் மகளைப் பார்க்காமலும் இருக்க முடியவில்லை. ஒரு நாள் அவரைப் பார்க்க அவருடைய மனைவி, மகளையும் அழைத்து வந்திருந்தார்கள். அவர்களை பார்த்து விட்டு வந்த உதவி ஆணையர் சங்கர், மிகவும் சோகத்துடன் இருந்தார். அவருக்கு ஆறுதல் சொல்லிப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதிற்கு மிகவும் சிரமமாக இருந்தது.
சிறைக்குள் இரவு நேரத்தில் நடமாடும் காவலர்களாகப் பூனைகளும், பெருச்சாளிகளும் இருக்கும். ஒருநாள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது, அறைக்குள் சர,சர என்ற சத்தம் கேட்டது. தூக்கம் கலைந்து எழுந்த போது , பூனை ஒன்று மாடர்ன் பிரட் பிளா°டிக் பையை எடுத்துக் கொண்டு ஓடியது. அதன் பின்பு ஒரு நாள் காலை அங்கு வந்த இன்சாhர்ஜ் சூப்பிரடெண்ட் ராஜேந்திரனிடம் பூனை, எலி தொல்லை கொடுக்க முடியாத வலை யினை, இரும்புக்கம்பி கதவில் பொருத்த முடியுமா எனக் கேட்டேன். அதற்கு அவர் அவ்வாறு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்குக் கம்பிவலை போட்டு கொடுத்ததால் தான், தொலைவில் உள்ள சப்-ஜெயிலுக்கு தூக்கி எறியப்பட்டேன் என்ற கதையினைச் சென்னார். ஆகவே, போதுமடா சாமி என்று கும்பிட்டுப் போய் விட்டார். நான் சிறைக்குள் 3 மாதங்களாக இருந்தபோது, பல புத்தகங்கள் படிக்க முடிந்தது. சிறைக்கைதிகளுடன் சேர்ந்து, சில கவிதை, கானாப்பாட்டுகளையும் எழுதினேன். நான் படித்த புத்தகங்களின் முக்கியமானவை ராபார்ட் சொகுல்லர் எழுதிய ‘சக்ஸ° இ° நெவர் எண்டிங், பெயிலியர் இ° நெவர் பைனல்’, ‘டப் டைம்° நெவர் லா°ட், பட் டப் பீப்பிள் டு’, கண்ணதாசன் எழுதிய ‘ரத்த புஷ்பங்கள்’, உமர் கயாம் கவிதைகள், நா.காமராசனின் ‘சந்தோக்கனவுகள்’ மூவேந்தரின் ‘சுடர் விளக்கு’, குமரி அனந்தனின் ‘கடவுளை நோக்கி’, டாக்டர் அழகுகண்ணனின் ‘சிலப்பதிகாரம் காட்டும் பண்பாடும் சமுதாய வரலாறும்’ மற்றும் பல. அதிகாலை 41/2 மணிக்கு பெரியமேடு பள்ளி வாசல் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு) சொன்னதும் எழுந்து, காலைத் தொழுகை (பஜ்ர்) முடித்து விட்டு, நாலு சுவர் ஜெயிலுக்குள் உடற்பயிற்சி, யோகாவும் செய்வேன். அதனை முடித்ததும் காலை சிறைக் கதவு ரோல்காலுக்காகத் திறக்கப்படும். மாலை வேளையில் பூப்பந்து மற்ற கைதிகளுடன் சேர்ந்து விளையாடுவேன். இப்படியாக 90 நாட்களும் வசிக்கும் இடமே வாழ்க்கையானது. ஆனால் எங்களைப் போன்ற சிறைவாசிகளின் குடும்ப வாழ்வு நரகமாகி விடுகிறது என்பது தான் உண்மை!




---------- Forwarded message ----------
From: Mohamed Ali
Date: Mon, Feb 23, 2009 at 10:58 AM
Subject: jail life
To: hidayath


Assalamu allaikum Mr. Hidayath.
I have attached the chapter about prison life written in my book on"Oru Kakki Chattai Pesugiradu" as per request. If the article is useful to our brethren you may circulate. Good day.


AP,Mohamed Ali

இனிய பெருநாள் வாழ்த்துகள்

இனிய பெருநாள் வாழ்த்துகள்

முன்னவரின் கடமையது இரமளான் நோன்பு
...முஸ்லிம்கள் பேணுவதும் அதனைத் தானே
எண்ணமதைச் சுத்திசெய்யும் இந்த மாதம்
....இதயத்தில் ஒளிவீசும் விரதத் தூய்மை
விண்ணவரின் வாழ்த்துக்கு உரிய தாக
....விளங்குகின்ற வாய்ப்பளிக்கும்; உயர்வு நல்கும்
மன்னவரோ மற்றவரோ வயிறால் ஒன்றே!
....மண்ணுலகின் பசிபஞ்சம் மாய்த்தல் நன்றே!


வணக்கத்தை இறைவனுக்கே உறுதி செய்து
....வளமாகும் நல்லுணர்வும் வாய்க்கப் பெற்று
இணக்கத்தை வளர்க்கின்ற ஈகை மனங்கள்
....இன்பத்தை அதனாலே எடுத்துக் கொள்வார்
சுணக்கத்தை நற்செயலில் செய்து வந்தோர்
....சுறுசுறுப்பை செயல்தனிலே சேர்த்துக் கொள்வார்
பிணக்கென்றால் வேண்டாமே என்று சொல்லி
....பிள்ளைநிலா முழுமதியாய் பிரகா சிக்கும்.

ஒன்றுக்குப் பத்தேழாய் வழங்கும் நோன்பு
....உயர்வான வெற்றிக்கு வழியைச் சொல்லும்
நன்றாக ஏற்கின்ற நண்பர் யார்க்கும்
....நாளைக்கு நற்சாட்சி நோன்பில் உண்டு
மன்றாடும் இறையடியார் மன்னிப் படைவார்
....மகத்தான ஓரிறையின் மார்க்கம் கொள்வார்
அன்றாட வாழ்நாளில் நோன்பின் பயிற்சி
....அற்புதங்கள் வெளிப்படுத்தும் ஆன்ம மாட்சி.


மெய்யான இறையச்சம் மனதில் கொண்டால்
....மேற்படியான் சாத்தானும் தோற்றுப் போவான்
ஐயமில்லாப் பேருண்மை அரிய நோன்பில்
....அடைந்தாரே அடைகின்றார் அதுவே நோக்கம்.
வையத்தில் வைக்கின்ற விரத மெல்லாம்
.... வயிற்றுக்கே உணவுக்கே என்றி ருக்க
பொய்யில்லா இஸ்லாமின் இந்த நோன்பு
....புலனடக்கம் போதிக்கும் பேரா சானே!

இறைவேதம் அருளான இந்த மாதம்
....எண்ணத்தை வளமாக்கும்; ஓடிப் போகும்
விரைவாக மீண்டுவர உள்ளம் வேண்டும்
...விண்மதிகள் பதினொன்று முழுதாய் ஆகும்
பிறைபார்க்க பெருநாளும் பூத்து நிற்கும்
....பேரன்பை ஈகையிலே பார்த்தி ருக்கும்.
நிறைவான நேரங்கள் நோன்பில் என்றும்
....நிலையான வெகுமதியும் இறையின் நாட்டம்


இனிய பெருநாள் வாழ்த்துகள்

--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian.blogspot.com
www.mypno.blogspot.com

பணம்

பணம்

பணம்
பொருளாதார
மின்சாரம்

அரசாங்கத்தின்
அலாவுதீன்
விளக்கு

பணமே !
கரன்ஸிநோட்டில்
நீ
பதிவு
செய்திருப்பது
கலையெழுத்து
அல்ல,
பலரின்
தலையெழுத்து

நேர்மையாய்
வியாபாரம்
செய்தால்
நீ
வெள்ளை

கணக்கில்
விபச்சாரம்
செய்தால்
நீ
கறுப்பு

ஸ்விஸ்வங்கியில்
ரகசியமாய்
உன்னைச்
சிறை
வைத்தாலும்,
உலகை
தொடர்ந்து
ஆள்பவன்
நீ

நீ
ஒரு
பாரபட்ச
பல்லாக்கு
ஏழை
உன்னை
சுமக்கிறான்

நீ
பணக்காரனை
சுமக்கிறாய்

வாழ்க்கை
நீ
இருந்தால்
துபாய்
இல்லாவிட்டால்
கிழிந்த பாய்

-எம்.ஏ.ஷாகுல் ஹமீது -

'ஓ' போடு

'ஓ' போடு





To read in English



'ஓ' போடு ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்



'ஓ' போடு என்றால் ஓட்டு போடு என்று அர்த்தம். ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும். ஓட்டு போடும்போது 49 ஓ பிரிவின் கீழ் ஓட்டு போட ஒவ்வொரு வாக்காளருக்கும் அரசியல் சட்டப்படி உள்ள உரிமையை தெளிவுபடுத்துவது எமது இயக்கத்தின் இன்னொரு நோக்கம்.

சராசரியாக எந்தத் தேர்தலிலும் 45 சத விகித வாக்காளர்கள் ஓட்டு போடுவதில்லை. வெற்றி பெறுவதாக அறிவிக்கப்படும் வேட்பாளர் பதிவான வாக்குகளில் 30 சதவிகிதம் வாங்கினாலும், அது மொத்த வாக்குகளில் 16 சதவிகிதம் மட்டுமேதான். ஓட்டு போடாதவர்களும் ஓட்டு போட வந்தால், பல தேர்தல் முடிவுகள் மாறிவிடும்.

ஏன் ஓட்டு போடுவதில்லை என்பதற்கு சொல்லப்படும் பல காரணங்களில் ஒன்று இருப்பதில் ஒருவருக்கு ஓட்டு போடவும் விருப்பமில்லை; எந்த வேட்பாளரையும் ஏற்க முடியவில்லை என்பதாகும்.

எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையையும் வாக்காளருக்கு சட்டப்படி கொடுத்திருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் சிறப்பாகும். தேர்தல் விதிகள் 1961ன் கீழ் 49 (ஓ) பிரிவு இந்த உரிமையை வாக்காளருக்கு வழங்கியிருக்கிறது. ஓட்டு போடுவதற்காக விரலில் மை வைத்த பிறகு, எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று வாக்காளர் தெரிவிக்கலாம். அதை ஓட்டுச் சாவடி அதிகாரி பதிவு செய்யவேண்டும் என்பதே 49 (ஓ).

வாக்காளர் இதற்காக எந்த விண்ணப்பத்தையும் நிரப்பத் தேவையில்லை. ஓட்டுச் சாவடி அதிகாரியிடம் சொன்னால் போதும். அவர் தன்னிடம் உள்ள பாரம் 17 ஏ என்ற பதிவேட்டில் இதை எழுதிக் கொள்வார். அதில் நாம் கையெழுத்திட்டால் போதும்.

எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்த வேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் 49 ஓவின் கீழ் நம்முடைய ஓட்டைப் பதிவு செய்தால் நமது அதிருப்தியை அவர்களுக்குத் தெரியப்படுத்த முடிகிறது. ஒரு தொகுதியில் ஜெயிக்கிற வேட்பாளரை விட , 49 ஓவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்போது 'இனி நேர்மையான அரசியல் செய்ய வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் ஆதரவு கிடைக்காது' என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு உறைக்கும். மக்களுடைய அதிருப்தியை அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்த சிறந்த வழி - 49 ஓ.

'ஓ' போடு இயக்கம் கீழ் வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.

1. எல்லா வாக்காளர்களும் ஓட்டு போட வேண்டும். ஓட்டு போடாமல் இருப்பது அரசியலின் தரத்தை மேம்படுத்த விடாமல் தடுப்பதாகும்.

2. எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு உணர்த்துவதற்கான சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும்.

3. ரகசிய ஓட்டு என்பது அரசியல் சட்டப்படி வாக்காளருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையாகும். ஆனால் 49 ஓவை ரகசியமாகப் போடமுடியாமல் தேர்தல் ஆணையம் வைத்திருப்பது சட்டப்படி தவறாகும். இதையும் ரகசிய வாக்காக அளிக்கும் விதத்தில் மின் வாக்கு இயந்திரத்தில் 49 ஓவுக்கு ஒரு தனி பட்டனை வரும் தமிழக சட்ட மன்றத் தேர்தலிலேயே தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும்.

4. ஓட்டுச் சாவடி அதிகாரிகளுக்கு வகுப்பு நடத்தும்போது தவறாமல் 49 ஓ பிரிவு பற்றி கற்றுத் தருவது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். ஓட்டுச் சாவடிக்கு வந்து 49 ஓ பிரிவின் கீழ் பதிவு செய்ய விரும்பும் எந்த வாக்காளரையும், அது பற்றி எனக்குத் தெரியாது என்று சாவடி அதிகாரி திருப்பி அனுப்புவது தவிர்க்கப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 'ஓ' போடு இயக்கம் பிரசாரம் செய்யும்.

ஓட்டு போடாமல் இருப்பது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.
49 ஓ போடுவது, நம்மை இனி ஏமாற்ற முடியாது என்று அறிவிப்பதாகும்.

ஓட்டு போடுங்க. 49 ஓ போடுங்க.


Source : http://keetru.com/ohpodu/

இஸ்லாமிய இலக்கியவாதிகளுக்கு இனிய செய்தி !

இஸ்லாமிய இலக்கியவாதிகளுக்கு இனிய செய்தி !

இனியவர்களே !
அஸ்ஸலாமு அலைக்கும்

தமிழில் எழுதும் முஸ்லிம் படைப்பாளிகளின் சிறுகதைகளில் சிறந்த சிறுகதைகளை தொகுத்து நல்ல சிறுகதை தொகுப்பு இதுவரை வெளிவரவில்லை என்ற குறை இஸ்லாமிய இலக்கியத்துறையில் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இலக்கியத்தரம் வாய்ந்த இஸ்லாமிய வரம்புகளுக்குட்பட்ட படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் எழுத்தாளர்களின் சிறுகதைகளில் ஒவ்வொரு எழுத்தாளர்களின் சிறுகதைகளில் மிகச்சிறந்த ஒரு கதையை தேர்வு செய்து “இதயத்தைக் கவர்ந்த இஸ்லாமிய இலக்கியக் கதைகள்” என்ற நல்ல சிறுகதை தொகுப்பு ஒன்று வெளியிட வேண்டும் என்பது என் கன்வு !

இத்தொகுப்பிற்காக... தாங்கள் எழுதிய சிறுகதைகளில் மிகவும் சிறந்த கதையாக தாங்கள் கருதும் கதையை அனுப்புங்கள் ! தங்கள் சக எழுத்தாளர்கள் எழுதிய கதைகளில் தங்களுக்குப் பிடித்த சிறுகதையையும் ( எழுதியவர் பெயரோடு ) அனுப்பி வைக்கலாம் ! வாசகர்கள் தாங்கள் படித்த கதைகளில் தங்கள் மனசுக்குப் பிடித்த சிறுகதையை ( எழுதியவர் பெயரோடு ) அனுப்பி வைக்கலாம் !

சகோதர சமுதாய மக்களும் இஸ்லாத்தின் மேன்மையை உணரும் வகையில் சிறுகதைகள் உணர்ச்சி பூர்வமாக இருக்க வேண்டும். பிற மதத்தவர்களின் மனதை காயப்படுத்தும் வகையில் கண்டிப்பாக கதை இருக்கக் கூடாது.

வியாபார நோக்கத்தோடு இந்நூலை தயாரிக்கவில்லை. இஸ்லாமிய இலக்கியம் பரவலாக்கப்பட வேண்டும். முஸ்லிம் படைப்பாளிகள் கௌரவிக்கப்பட வேண்டும் என்ற உயரிய இலட்சியத்துடனே இந்நூல் தயாராகிறது.

இன்ஷா அல்லாஹ் ........ வந்து சேரும் சிறுகதைகள் ஜே.எம்.சாலி, ஹிமானா சையத், ஜின்னாஹ் ஷரீபுத்தீன், சிராஜுல் ஹஸன் போன்ற இஸ்லாமிய இலக்கியவாதிகளின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் கதைகள் அழகிய நூல் வடிவில் மலரும். ஆண்டவன் நாடினால் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் அணிந்துரையோடும், மானுட வசந்தம் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களின் மதிப்புரையோடும் வெளிவரும் !

சிறுகதை நகலை ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : trichysyed@yahoo.com

கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி : 31.12.2009



மகிமையும், மேன்மையும் நிறைந்த அல்லாஹ் நம் முயற்சிகளுக்கு துணை நிற்பானாக !

தோழமையுடன்

திருச்சி சையது

அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் பயிற்சி

அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் பயிற்சி


சென்னை, மார்ச் 23: அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு ( AIEEE-2009 ),"எய்ம்ஸ் கல்வி நிறுவனம்” ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கிறது.

தேசிய தொழில்நுட்ப கழகங்களில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக சி.பி.எஸ்.இ. சார்பில் ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், பிளஸ் 2 முடித்த சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் கலந்துகொள்கின்றனர்.

நுழைவுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு எய்ம்ஸ் கல்வி நிறுவனம் ஆன்லைன் மூலம் ஏப்ரல் 14 முதல் 24 வரை பயிற்சி வகுப்பு நடத்துகிறது. உலகின் எந்த மூலையில் இருந்தும் மாணவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். மேலும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு கல்வியாளர்கள் விளக்கம் அளிப்பர்.

பயிற்சியின் முடிவில், முதல் 3 இடங்கள் பிடிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப், ஐ-பாட் பரிசு வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மேலும் விவரங்களை கீழ்க்கண்ட இணையதளத்தில் காணலாம்.

www.topperlearning.com

இணையதள பாஸ்வேர்ட் ஜாக்கிரதை

இணையதள பாஸ்வேர்ட் ஜாக்கிரதை

இணையதளத்தில் உலகிலேயே அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட் 123456 என்று தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இணையதள நிறுவனம் ஒன்று உலகத்திலேயே அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட் குறித்த பட்டியலை ஆய்வுக்கு பின் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

உலகில் மிக அதிகம் பேர் தங்கள் இணையதள பாஸ்வேர்டாக 123456 ஐ உபயோகிக்கின்றனர்.
இதற்கு அடுத்ததாக பாஸ்வேர்ட் என்ற ஆங்கில வார்த்தையையே ரகசிய குறியீடாக பலர் உபயோகிக்கின்றனர். சிலர் பயங்கர கெட்டவார்த்தைகளையும் வேகமான கார்களின் பெயர்களையும் சினிமா படங்களில் வரும் ஹீரோக்கள் வில்லன்கள் பயன்படுத்தும் வாகனங்களின் எண்களையும் பயன்னடுத்துகின்றனர்.

ஸ்டார் டிரக்கில் வரும் என்சிசி 1701 என்பதையும் பாண்ட் 007 பேட்மேன் கோகாகோலா போன்ற வற்றையும் சிலர் பாஸ்வேர்டாக பயன்படுத்துகின்றனர்.

மேலே சொன்ன பாஸ்வேர்டுகளில் ஏதாவது ஒன்றை இணையதளம் பயன்படுத்துவோரில் 9 பேரில் ஒருவர் பயன்படுத்துவதாகவும் 50ல் ஒருவர் டாப் 20 பாஸ்வேர்டுகளில் பயன்படுத்துவதாகவும் அந்த இணையதளம் கூறியுள்ளது.

இணையதளத்தை பயன்படுத்தும் பெரியவர்களில் சராசரியாக 15 பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்துள்ளதாகவும் 61 சதவீதம் பேர் ஒரே பாஸ்வேர்டையே தங்கள் அனைத்து இணையதள முகவரிக்கும் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….

எனவே நாம் நமது பாஸ்வேர்ட்களை எல்லோரும் அறிந்த ஒன்றை தேர்ந்தெடுப்பதை விட்டு தன் குடும்பத்தினர்களின் பெயர்களை அல்லது தான் உபயோகப்படுத்தும் வீட்டு பொருள்களின் பெயர்களையோ பாஸ்வேர்டாக தேர்தெடுத்துக் கொள்வது பிறர் ஞாபகத்துக்கு வராத ஒன்றாகஇருக்கும் எனவே பாஸ்வேர்ட்டில் மிக கவனமாக இருக்கவேண்டும்…இல்லையெனில் நமக்கே தெரியாமல் நமது இமெயில் கடிதங்கள் பிறரால் வசிக்கப்படும்…நமது வங்கி கணக்கில் உள்ள தொகைகள் மாயமாகிவிடும்…நமக்கு இரத்தஅழுத்தம் அதிகரித்துவிடும் …கவனம்தேவை…!


--
3/24/2009 02:20:00 AM அன்று கவி(மதி)வனம் இல் கிளியனூர் இஸ்மத் K.LIYAKATHALI ஆல் இடுகையிடப்பட்டது

Sunday, March 22, 2009

வெங்காயத்தின் பலன்கள்

வெங்காயத்தின் பலன்கள்
வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது.

இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும்.
இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.

சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

100 ஆண்டுகள் வாழ 10 எளிய வழிமுறைகள்

100 ஆண்டுகள் வாழ 10 எளிய வழிமுறைகள்

1. நாம் வசிக்கும் இடத்தில் சூரிய வெளிச்சமும், சுத்தமான காற்றும் ஏராளமாகக் கிடைக்க வேண்டும்.
2. பல் ஈறு இவற்றைத் தினமும் காலை,மாலை இரு வேளையும் பல் துலக்கியால் தேய்த்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
3. நிற்கும் போதும், நடக்கும்போதும் நமது உடல் நிமிர்ந்து இருக்க வேண்டும்.

4. உடற்பயிற்சி உயிர்காக்கும்; உடற்பயிற்சியை தின்மும் திறந்த வெளி அல்லது காற்றோட்டமான இடங்களில் செய்ய வேண்டும்.

5. நோய்க் கிருமிகள் உடலில் நூழையா வண்ணம் சுகாதர விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

6. கோபம், உணர்ச்சி வசப்படுதல், கவலை இவைகளைத் தவிர்த்து, மன அமைதியுடன் இருக்க வேண்டும்.

7. உழைப்பிற்கு ஏற்ற உணவைச் சாப்பிட வேண்டும். உணவை நன்றாக மென்று, மெதுவாக, அளவோடு சாப்பிட வேண்டும். (நொறுங்க தின்றால் நூறு வயது).

8. பச்சை காய்கறிகள், நார்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்கள் மற்றும் சுத்தமாக காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.

9. கொழுப்பு, காரம், புளிப்பு சேர்ந்த உணவுப் பொருட்களை அளவோடு சாப்பிட வேண்டும்.

10. இரவு மனச்சிக்கல் இன்றி படுத்து, காலை மலச்சிக்கல் இன்றி எழல் வேண்டும்.

மக்களவைத் தேர்தல் 2009

மக்களவைத் தேர்தல் 2009
(http://www.makkalavaitherdhal2009.wordpress.com)
என்ற என் புதிய வலைப்பதிவுக்கு வருகை தருமாறு அழைக்கிறேன். இறைவன் நாடினால், தேர்தல் தொடர்பான விமர்சனங்களைத் தொடர்ந்து எழுத உள்ளேன்.

இதுவரை எழுதப்பட்ட பதிவுகள்:

1. பா.ஜ.க கூட்டணியில் சரத்குமார்
2. முஸ்லிம் அரசியல் கட்சிகள்
3. பெண் வேட்பாளர்கள் எத்தனை பேர்?
4. அரசியலில் மாணவர் தலைவர்கள்
5. இளஞ்சிவப்பு சிறுத்தை
6. அரசியலில் விவசாயிகளின் பங்கு
7. முஸ்லிம் அமைப்புகளின் ஆதரவு யாருக்கு?

Saturday, March 21, 2009

நட்புக்கு இலக்கணமான நண்பர்.

நட்புக்கு இலக்கணமான நண்பர்.
துன்பம் என்று வருகின்ற போது தூரப்போகும் நண்பர்கள் உண்மையான நண்பர்களா? மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் துன்பத்தை, துக்கத்தை பகிர்ந்துகொள்ள முன் வருபவரே உண்மையான நண்பராக ஒருவருக்கு திகழுவார்.
மக்கா நகரில் இஸ்லாத்தின் மகத்துவங்களை எடுத்துச் சொல்லிவந்தார் நபிகள் நாயகம்(ஸல்). விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டுமே புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். ஏற்றுக் கொள்ளாதவர்கள் நபிகள் நாயகத்திற்கு விவரிக்க இயலாத துன்பங்களையும் தொல்லைகளையும் விளைவித்தனர். நபிகளுக்கெதிராக பகைவர் கூட்டம் உருவானது. அவரை ஒழித்துக் கட்ட முடிவு செய்து ஒரு கூட்டம் புறப்பட்டது. தகவலறிந்த நபிகள் நாயகம் தலைமறைவாக இருக்க வேண்டி வந்தது.
இறைக் கட்டளையின்படி மக்காவிலிருந்து மதீனா செல்ல முடிவெடுத்தார்கள் நபிகள் நாயகம். பகைவர்களின் கண்களிலிருந்து தப்பிக்க எண்ணி, இரவோடிரவாக யாரும் அறியாமல் மக்காவை விட்டு கிளம்ப எண்ணிய நபிகள் நாயகம் அவர்களுக்குத் துணையாக அவரின் இனிய நண்பர் அபூபக்கர் சென்றார்.
எதிரிகள் நடமாட்டம் இல்லாத பகுதிகள் வழியாக அபூபக்கர் நபிகள் நாயகத்தை அழைத்துச் சென்றார். அப்படி அவர் அழைத்துச் சென்றபோது, நபிகள் நாயகத்திற்கு முன்புறமாகக் கொஞ்ச நேரமும், பின்புறம் கொஞ்சநேரமும் ஓட்டமும் நடையுமாகச் சென்றார். பின்னர் நபிகள் நாயகத்தின் வலப்பக்கமாக கொஞ்ச நேரமும், இடப்பக்கம் கொஞ்ச நேரமும் ஓட்டமும் நடையுமாகப் போனார். வழி நெடுகிலும் இதேபோல நபிகள் நாயகத்திற்கு அரணாக முன்பாகவும், பின்புறமாகவும், இடவலப் பக்கங்களிலுமாக மாறிமாறி அபூபக்கர் சென்றார். நண்பர் இப்படி மாறி, மாறி ஓடிச் செல்வதைக் கண்ட நபிகள் நாயகம், "அபூபக்கரே, சிலசமயம் என் முன்பாக ஓடுகிறீர். சிலசமயம் என் பின்னால் வருகின்றீர்கள். திடீரென்று வலப்புறமாகவும் பிறகு இடப்புறமாகவும் மாறிமாறி வருகின்றீர்கள்? ஏன் இப்படிச் செய்கின்றீர்கள்?" என்று வினவினார்.
அதற்கு மறுமொழியளித்த சித்திக் அபூபக்கர்,"இறைத்தூதரே! எம் உயிரினும் மேலானவரே!
நபிகள் நாயகமே! நான் அப்படி நடக்கக் காரணம், நீங்கள் இந்த வழியாகத்தான் வருகிறீர்கள் என்பதை எதிரிகள் ஒருவேளை அறிந்து உங்களைத் தாக்க ஒளிந்திருப்பார்களோ என்று உங்களுக்கு முன்பாகச் செல்கிறேன். ஒருவேளை நம்மைப் பின்தொடர்ந்து வந்து உங்களைத் தாக்கிவிட்டால் என்ன செய்வது என்று பின்னால் வருகிறேன். ஒருவேளை எதிரிகள் பாதையின் வலப்புறம் மறைந்திருப்பார்களோ என்ற எண்ணம் எழும்போது வலப்பக்கமாக வருகிறேன். இடப்பக்கம் மறைந்திருந்து எதிரிகள் தாக்கினால் என்ன செய்வது என்று எண்ணி இடப்புறமாக நடந்து வருகிறேன்," என்றுரைத்தார். இதைக் கேட்ட நபிகள், "நீரல்லவா எனது உண்மையான நண்பர்," என்று சொல்லி அபூபக்கரைக் கட்டித் தழுவிக்கொண்டார். இப்போதும் சில நண்பர்கள் இருக்கிறார்கள்.


--
A.Ahamed Ismathullah Sait
Camp@Gulbarga-585 104
CELL : 0091 94804 83943

National Institutes of Technology (NITs)

National Institutes of Technology (NITs) are premier colleges of engineering and technology education in India. They were originally called Regional Engineering Colleges (RECs). In 2002, the Ministry of Human Resource Development, Government of India, decided to upgrade, in phases, all the original 17 Regional Engineering Colleges (RECs) as National Institutes of Technology (NITs). There are currently 20 NITs, the latest being NIT, Agartala. The Government of India has introduced the National Institutes of Technology (NIT) Act 2007 to bring 20 such institutions within the ambit of the act and to provide them with complete autonomy in their functioning. The NITs are deliberately scattered throughout the country in line with the government norm of an NIT in every major state of India to promote regional development. The individual NITs, after the introduction of the NIT Act, have been functioning as autonomous technical universities and hence can draft their own curriculum and functioning policies.

for more details


http://en.wikipedia.org/wiki/National_Institutes_of_Technology