Friday, August 22, 2008

திருச்சி : சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


திருச்சி, ஆக. 21: முதியோர் நலனுக்காக சேவை புரியும் சமூக சேவகர்களுக்கான விருது பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2008-09 ஆம் ஆண்டுக்கான சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட இருப்பதையொட்டி, அவ்விழாவில் முதியோர் நலனுக்காக சேவை புரியும் சமூக சேவகர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் முதியோர் நலனுக்காக நடப்பாண்டில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் இவ்விருதை பெற விண்ணப்பிக்கலாம்.

இவ்விருதுகளை பெற தங்களது பெயர், முதியோர் நலனுக்காக செய்துள்ள பணிகள் மற்றும் சாதனைகள் குறித்த விவரங்களை, மாவட்ட சமூக நல அலுவலர், எண் 11, அரபிக் கல்லூரித் தெரு, காஜாநகர், திருச்சி 20 என்ற முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்கலாம்.

"வாழை நாரிலிருந்து துணிகள் தயாரிக்கத் திட்டம்': இயக்குநர் மு.மு. முஸ்தபா

"வாழை நாரிலிருந்து துணிகள் தயாரிக்கத் திட்டம்': இயக்குநர் மு.மு. முஸ்தபா



திருச்சி, ஆக. 21: வாழை நாரிலிருந்து இழைகள் தயாரிப்பதற்குப் பதிலாக, வாழை நாரை நெசவு செய்து துணிகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் மு.மு. முஸ்தபா.

திருச்சி மாவட்டம், போதாவூரில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:

"திருச்சி தாயனூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தால் 2005 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உதயம் வாழை ரகத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த ரகம் கற்பூரவள்ளி ரகத்துக்கு மாறாக விவசாயிகளிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது.

இதைத் தொடர்ந்து மேலும் 2 புதிய வாழை ரகங்களை அறிமுகப்படுத்த ஆராய்ச்சி மையம் திட்டமிட்டு வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில், பல்வேறு நிலைகளில் எம்.எல். சோதனை (மல்டி லோக்கேசனல் டெஸ்ட்) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனை நீண்ட காலம் பிடிக்கும் என்பதால் புதிய வாழை ரகத்தை அறிமுகப்படுத்த இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம்.

வாழை மூலம் தயாரிக்கக்கூடிய 12 வகை பொருள்களுக்கான தொழில்நுட்பங்களை இதுவரை கண்டறிந்து உள்ளோம். இதில் நேந்திரம் வாழைக்காய் வருவல், வாழைப்பழத் தொக்கு, உலர்ந்த வாழைப்பழம், வாழைக்காய் ஊறுகாய், வாழைப்பழ பவுடர், வாழை ஜூஸ் என பல்வேறு பொருள்களை தயாரித்து, வர்த்தக ரீதியாகவும் வெற்றி கிடைத்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமன்றி, ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள் இந்த பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.

வாழைப்பழத் தோலிலிருந்து ஒயின் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பை, அதை ஒரு நவீன தயாரிப்புத் தொழிலாக மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மகாராஷ்டிர மாநிலம், பெல்காம் பகுதியில் உள்ள ஓர் கூட்டுறவு நிறுவனத்தின் முயற்சியில் இந்த தயாரிப்பை ஏற்றுக் கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திராட்சை பழத்திலிருந்து ஒயின் தயாரிப்புக்கு கலால் வரி விதிக்கப்படுவது போல், வாழைப்பழத் தோலிலிருந்து தயாரிக்கப்படும் ஒயினுக்கும் விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக கல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வாழைத்தண்டு சாறு எதிர்ப்பு சக்தி வாய்ந்தது என்று கண்டறிந்து, தற்போது பலர் பயன்படுத்தி வருகின்றனர். இதை எளிதாக ஏற்றுக் கொள்ளும் வகையில் வாழைச்சாறிலிருந்து பவுடர் தயாரித்து, அதை மாத்திரை வடிவில் வழங்குவதற்கான ஆய்வுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வாழை நாரை நெசவு செய்து அதன் மூலம் துணிகள் தயாரிக்கும் ஆய்வுப் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதில், வாழை நாரை கிழித்து இழைகள் தயாரிப்பதற்குப் பதிலாக "ரெட்டிங்' என்ற முறையில் வேதியியல் பொருளைக் கலந்து துணிகள் தயாரிக்க முடியும் என்று கண்டறிந்து உள்ளோம்.

தொடர்ந்து, தேசிய வாழை ஆராய்ச்சி நிலையமும், மும்பையில் உள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையமும் இணைந்து கூட்டாக ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம்' என்றார் முஸ்தபா.

வெஸ்ட் ஆசியா அலுவலக முகவரிகள்

வெஸ்ட் ஆசியா அலுவலக முகவரிகள்

வெஸ்ட் ஆசியா எக்ஸ்போர் & இம்போர்ட் பி லிட்
எண் 55 கிரீம்ஸ் சாலை
அலி டவர்ஸ்
எம்.எஃப், டி பிளாக்
சென்னை 600 006
தொலைபேசி : 2829 2850 / 2829 4789
தொலைநகல் : 2829 2499

செல் : 94441 20277 ( ஜாஹிர் / மீரான் )
pmzakir@westasia.com
A G Ahmed Rifai
Senior Manager


West Asia E & I Ltd
Harilela House
First Floor
Mint Road
Opp GPO
Mumbai 400 001
Tel : 2267 3537
Fax : 2267 3554
Mob : 98 211 27384 Baskar
waei@vsnl.com

C T Pinto , DGM

West Asia Ramnad
Old No 135
New No I 365
Bharathi Nagar
Rameshwaram Road
Ramanathapuram 623 503
Tel : 04567 232 630 /230150 /230530
Fax : 04567 232430

ஏர்இந்தியா - இந்தியன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ள 547 காலியிடங்கள்

ஏர்இந்தியா - இந்தியன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ள 547 காலியிடங்கள்

நேஷனல் ஏவியேஷன் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் என்பது இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர்இந்தியா நிறுவனங்கள் 547 காலியிடங்களை அறிவித்துள்ளது. இதன் விபரம் வருமாறு:

வடக்கு பிராந்தியம் - 100 காலியிடங்கள் மேற்கு - 200 காலியிடங்கள்; தெற்கு - 237; கிழக்கு - 35.

தகுதிகள்: வயது 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும். அல்லது பிளஸ் 2-வுக்குப் பின் ஓட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜியில் டிப்ளமோ தகுதி பெற்றிருக்க வேண்டும். அல்லது பிளஸ் 2 முடித்தபின் ஓட்டல் துறையில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் படிப்புகளில் தற்போது இறுதியாண்டு படிப்பவரும் விண்ணப்பிக்கலாம். ஆண்கள் குறைந்தது 163 செ.மீ. உயரமும் பெண்கள் 154.5 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். ஆங்கிலம் சரளமாகப் பேசக் கூடியவராகவும் பிராந்திய மொழி ஒன்றை அறிந்திருப்பவராகவும் இருக்க வேண்டும். இந்தி அறிந்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

கட்டணம்: இந்தப் பணிக்கான கட்டணம் ரூ.300 இதை நேஷனல் ஏவியேஷன் கம்பெனி ஆப் இந்தியா லிமிடட் என்ற பெயரில் புதுடில்லியில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணிகளுக்கு ஆன்லைனில் அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். முழு விவரங்களையும் படிவத்தையும் ஆன்லைனில் விண்ணப் பிக்கும் முறைகளையும் www.art india.in தளத்தில் பார்த்துக் கொள்ளலாம். விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் செப்டம்பர் 5, 2008.

அரசு அலுவலகங்களில் லஞ்சமா?

அரசு அலுவலகங்களில் லஞ்சமா?

தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்

சென்னை, ஆக. 20- அரசு அலுவலகங்களில் ஊழியர் கள் லஞ்சம் வாங்கினால் தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம். விழிப்புப் பணி மற்றும் ஊழல் தடுப்புத்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் கூறலாம். தொலைபேசி எண்கள்: 0442662 1232, 94440 77666, சென்னை நகரம் : 044 24455089, 9444113058.

சன் நியூஸ் நேருக்குநேர் நிகழ்ச்சியில் பேராசிரியர்!

சன் நியூஸ் நேருக்குநேர் நிகழ்ச்சியில் பேராசிரியர்!


www.muslimleaguetn.com


சன் நிய+ஸ் தொலைக்காட்சியில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., ஆர்.எஸ்.எஸ். கொள்கைபரப்புச் செயலாளர் திருமதி ராதாராஜன் ஆகியோர் பங்கேற்ற அமர்நாத் ஆலய விவகாரம் பற்றிய நேர்காணல் நிகழ்ச்சி, 23-08-2008 சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கும், இதன் மறுஒளிபரப்பு 25-08-2008 திங்கள் மாலை 5.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது - காணத் தவறாதீர்கள