Sunday, March 14, 2010

நாவைப் பேணி, பாவமன்னிப்புக் கோருவோம்!

நாவைப் பேணி, பாவமன்னிப்புக் கோருவோம்!



http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0825-control-the-sins-of-the-tongue.html

(ஆக்கம்: மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)

மாதங்களிலேயே மிகச்சிறந்த மாதமாக புனிதமிகும் ரமலான் மாதம் திகழ்ந்து வருகிறது. இம்மாதத்தை எவர் பெற்றுக் கொண்டாரோ, அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும் (2:185) என வல்லோன் அல்லாஹ் தனது திருமறையில் கூறியுள்ளதன் மூலம் ரமலான் மாதத்தின் தனிப்பெரும் சிறப்பினை உணர்த்தியுள்ளான்.

தம் வாழ்க்கையில் பாவமே செய்யாத மனிதர்கள் இருக்க முடியுமா? என்ற கேள்விக்கு எத்தனை பேர் சரியான பதிலை கூறிவிட முடியும்? அதுவும் தற்போதைய நாகரீக கலாச்சார வாழ்க்கையில் சிக்கிக் கொண்டிருக்கும் நாம் மேலே கண்ட கேள்விக்கு பதில் சொல்ல தயக்கமே வரும். பாவத்திற்குரிய செயல்களில் ஒன்று மனிதன் தெரிந்தே பாவம் செய்தல் மற்றொன்று தனக்கே தெரியாமல் பாவம் செய்தல்.

மனிதனின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் பாவச் செயலை தூண்டும் நிலையிலேயே இருப்பதால் நாம் மிகவும் எச்சரிக்கையுணர்வுடன் வாழ வேண்டும். பாவத்தின் முதல் துவக்கமாக மன இச்சையும் அடுத்ததாக மனிதனின் நாவும் இருப்பதை மறுக்க முடியாது!. மனம் போகும் போக்கில் வாழ ஆசைபடுதலே பாவத்தின் தலைவாசல் என கலீபா அலி (ரலி) அவர்கல் கூறியுள்ளார்கள். நாவால் பிறரின் மனதை புண்படுத்துபவர்கள் நம்மில் மிகுதமாக உள்ளனர்.

நாம் கூறும் ஒவ்வொரு சொல்லையும் நிதானத்துடன் சொல்ல முன் வராத வரை, சொல்லப்படும் அந்த வார்த்தைகளில் நமக்கே தெரியாமல் சில நேரங்களில் பாவம் கலந்து விடுகின்றன. "யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகப்பர் சொல் இழுக்கு ப்டடு" திருவள்ளுவரின் இந்த கூற்றும் நாவை பேண வேண்டிய அவசியத்தையே வலியுறுத்துகின்றன.

சொல்லிவிட்ட வார்த்தைக்கு நாம் அடிமை, சொல்லாத வார்த்தை நமக்கு அடிமை! என்ற பழமொழி கூட நம்மை சிந்திக்க வைக்கின்றன. ஆக மனிதனை பாவத்தின் பக்கம் தூண்டும் முக்கிய உறுப்பாக "நாவு" இருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை. பாவத்தின் பக்கங்களாய் பொய் பேச வைப்பதின் மூலம் நாவு தன் முகவுரையை தொடங்குகிறது. பிறரை பற்றி புறம் பேசுதல் மூலம் நடுவுரையை தருகிறது. அடுத்தவரின் விஷயத்தில் கோள் சொல்வதின் மூலம் தனது முடிவுரையை எழுதுகிறது.

மொத்தத்தில் தமது நேர்மையையும், ஒழுக்கத்தையும் குழி தோண்டி புதைத்து விடுகிறது. இவ்வளவு பெரிய கூரிய ஆயுதமான நாவை நாம் கவனமுடன் பயன்படுத்த வேண்டும். "சொல்லாதே செய்" என்ற வாக்கியத்தை சரிவர பேணியவர்கள் தான் ஆன்றோர்களாகவும், சான்றோர்களாகவும் திகழ்ந்துள்ளனர்.

"தவளை தன் வாயால் கெட்டது" என்ற பழமொழியை கூட நம்மை எச்சரிக்கத்தான் சொல்லி வைத்துள்ளனர் முன்னோர்கள். இவற்றையெல்லாம் சிந்தித்து நாம் ஏற்கனவே பேசியிருக்கும் பேச்சுக்களில் எதுவெல்லாம் பாவம் கலந்தது என்பதை நம்மால் யூகிக்க முடியாவிட்டாலும். அனுதினமும் படைத்தவனிடம் கையேந்தி பாவ மன்னிப்பு கோருவதே மிகவும் அவசியமாகும்.

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் படியில் இருந்தபோது தமது கைகளை உயர்த்தியவர்களாக ஆமீன், ஆமீன், ஆமீன் என மூன்று முறை தொடர்ந்து கூறினார்கள். பிறகு மிம்பரில் இருந்து கீழிறங்கியதும் தோழர்களெல்லாம் யாரசூலுல்லாஹ் எப்போதும் கண்டிராத ஒரு காட்சியை இன்று கண்டோமே? என கேட்டதற்கு நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்:- வானவர் கோமான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வந்து "ரமலானை அடைந்தும் அதில் பாவமன்னிப்பு தேடாதவன் நாசமடைவானாக" என கூறியதும் அதற்கு நான் ஆமீன் சொன்னேன் என்ற விபரத்தை தம் தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்.

பிறகு இரண்டு முறை எதற்காக ஆமீன் சொன்னார்கள் என்ற விபரத்தை இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்க்கலாம். (இந்த நிகழ்வை ஹழ்தத் கஃபு இப்னு உஜ்ரத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளது ஹாகிம் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது) ஆக ரமலான் மாதத்தில் நாம் அதிகமதிகம் பாவ மன்னிப்பு கோர வேண்டும் என்பதை தான் மேலே கண்ட ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது. புனிதமிகும் ரமலானில் நமது நாவைப் பேணும் பயிற்சியை தொடங்குவதுடன் பாவ மன்னிப்பு தேடுபவர்களாகவும் நம்மை பழக்கிக் கொள்வோம். இறைவன் நம் அனைவரின் நாவுகளையும் தீமைகளிலிருந்து பாதுகாத்து மன்னித்து அருள் பாலிப்பானாகவும். ஆமீன்!

ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் !

ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் !
( ஆக்கம் ; மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி )


http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=164

நான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவன் என்ற போதிலும் பெற்றோர், மனைவி, உறவினர் என்ற உள் வட்டத்திற்குள் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன். ஒரு கடையில் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்த போதிலும் மனதில் ஒரு நிறைவு இருந்தது. குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றிலும் தவறாமல் கலந்து கொள்ளும் பாக்கியமும் கிடைத்தது.
இதே சூழ்நிலையில் ஓடிக்கொண்டிருந்த என் வாழ்க்கைச் சக்கரம் துபாய் மோகம் என்ற பேராசையில் சிக்கி தடம் புரண்டு விட்டது. ஆம் இந்த மோகம் எனக்குள் வந்ததல்ல, எனது தாய் வீட்டாரிடமிருந்து நற்போதனை என்ற மயக்க ஊசி மூலம் எனக்குள் ஏற்றப் பட்டது. ஊரிலிருந்து எவ்வளவு தான் உழைத்தாலும் எவ்வித முன்னேற்றமும் காணமுடியாது ! ஒரு இரண்டு வருடம் துபாய்க்கு போய் வந்தாலே போதும் வீடு, வாசல், நகை, பணம் என ஓரளவுக்கு சொத்து சேர்த்து விடலாம். பிறகு வேண்டுமானால் ஊரிலேயே ஏதாவதொரு கடைவைத்து பிழைத்துக் கொள்ளலாம். என்ற வசீகர திட்டத்தை கூறிய போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனது குடும்பத்தார் கூறிய திட்டமெல்லாம் உண்மையிலேயே நடந்து விட்டதை போன்ற உணர்வே எனக்குள் ஏற்பட்டது.
அப்போதே துபாய் மோகம் என்னும் நெருப்பு எனக்குள் கொழுந்து விட்டு எரிந்தது. திருமணம் முடிந்து இரண்டு மாதம் தானே ஆகிறது புது மனைவியை விட்டு பிரிவது நியாயமா? என்ற கேள்விக்கெல்லாம் கூட விடை கொடுக்க என் மனம் இசையவில்லை. காலம் தாமதிக்காது எனது ஊரின் முக்கியஸ்தர் ஒருவரை பார்த்து என்னை எப்படி யாவது துபாய்க்கு அனுப்பிவிடுங்கள். என்ன வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்று கெஞ்சிக் கூத்தாடினேன். நான் ஒன்றும் படித்த பட்டதாரியல்லவே, படிப்புக்கேற்ற வேலை தேட! அதனால் தான் என்ன வேலையாக இருந்தாலும் என சொல்லி இருந்தேன்.
எனது ஆர்வத்தைப் பார்த்து அந்த நல்ல மனிதர் சம்பளம் குறைவாக கிடைக்கும் விசா,டிக்கெட்க்கு 50 ஆயிரம் செலவாகும் பரவாயில்லையா எனக் கேட்டது தான் தாமதம் துபாய்க்கே போனது போல் ஒரு நம்பிக்கை எனக்குள் பிறந்தது. எவ்வளவு சம்பளமானாலும் பரவாயில்லை என்னை எப்படியும் துபாய்க்கு அனுப்பி விடுங்கள் என்ற கோரிக்கை வைப்பதில் மட்டும் கொஞ்சமும் சுரத்துக் குறையாமல் பார்த்துக் கொண்டேன். சரி பார்க்கலாம் என்ற அந்த பெரிய மனிதர் ஒரு வழியா என்னை துபாய்க்கு அனுப்பி விட்டார். நானும் பல கனவுகளுடன் துபாய் வந்து 15 ஆண்டுகள் ஓடி விட்டன.
என்னுடன் துபாய் வந்த எனது நண்பன் சுஹைல் மட்டும் சொல்லி வைத்தாற் போல இரண்டு வருடம் முடிந்ததுமே விசாவை கேன்சல் செய்து விட்டு தாயகம் போய் விட்டான். ஊரில் ஏதோ ஒரு பெட்டிக்கடை வைத்து கஷ்டப்படுவதாக பிற நண்பர்களின் மூலம் கேள்விப்பட்ட ஞாபகமுண்டு. நான் துபாய் வந்து இரண்டு வருடம் முடியும் தருவாயில் விடு முறையில் ஊருக்கு போகலாம் என நினைத்து என் வீட்டாரிடம் அதாவது சகோதர, சகோதரிகளிடம் நான் ஊருக்கு வரப்போகிறேன் உங்களுக்கெல்லாம் என்ன வேண்டுமென கேட்டது தான் தாமதம் மிகப்பெரிய பட்டியலே வந்து சேர்ந்து விட்டது கடிதத்தின் வாயிலாக, அந்தப் பட்டியலுடன் ஒரு வேண்டுகோளும் இருந்தது தான் கொஞ்சம் நெருடலாக இருந்தது.
அதாவது உடனே வர வேண்டாம் துபாய் போய் இரண்டு வருஷம் தானே ஆகுது இன்னும் இரண்டு வருஷம் இருந்து உழைத்துவிட்டு கை நிறைய பணத்துடன் வந்தால் நல்லாயிருக்கும் என்ற வேண்டுகோள் தான் அது ! அந்தக் கடிதம் பார்த்ததுமே ஊருக்குப் போகும் எனது ஆசை யெல்லாம் கானல் நீராய் மாறிவிட்டது. எனது தாய், உடன் பிறந்தவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளித்த நான் என் மனைவியின் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்காத குற்றவாளி யாகி விட்டேன்.
பிறகு ஒரு வழியா 4 வருஷம் முடிந்து ஊருக்கு பயணம் மேற்கொண்டேன் விடுமுறையில் தான் ! அதற்கு முன்பே கடைசி இரண்டு வாரங்களும் யார் யாருக்கு என்னென்ன வாங்க வேண்டுமோ? அதையெல்லாம் கொளுத்தும் வெயிலென்றும் பாராமல் ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி ஆசை ஆசையாய் வாங்கினேன். தாய், சகோதரிகள், மனைவிக்கு சேலைகள் எடுத்துக் கொண்டேன், மற்றபடி வாசனை திரவியங்கள், தைலங்கள், சோப்புகள் என வகை வகையாக வாங்கிக் கொண்டேன். நான் எடுத்த சேலைகளில் என் மனைவிக்கு கத்திரிப் பூ கலரில் ஒரு சேலையும் என் சகோதரிக்கு ஆரஞ்சுக் கலரில் ஒரு சேலையும் ரொம்ப ஆசைப்பட்டு எடுத்தேன்.
இந்த இரண்டு சேலை மட்டும் எடுப்பதற்காகவே சோனாப்பூரிலிருந்து ( Labour Camp Area ) டேரா பஜாருக்கு வெயில் நேரத்தில் போய் சேலையை எடுத்துக் கொண்டு என் அறைக்கு வருவதற்குள் வியர்த்த வியர்வையை டவலால் துடைத்து அதை இரு முறை பிழிந்தும் விட்டேன். ஆனாலும் டவல் ஈரமாகவே இருந்தது.
ஒரு வழியா வாங்கிய பொருட்களையெல்லாம் லக்கேஜாக கட்டி விட்டு நான்கு வருடம் கழித்து பெற்றோரை, உடன்பிறப்புகளை, மனைவியை காணப் போகிறோம் என்ற வெறித்தனமான ஆசையில் நான் அணிந்த ஃபேண்டில் பெல்ட் போட மறந்து விட்டேன். ஏர் போர்ட்டில் வந்து பார்த்த பிறகு தான் அதை உணர்ந்தேன். அதுவும் பயணிகளின் உடைமைகளை பரிசோதிக்கும் இடத்தில் சக ஆண் பயணிகள் பெல்ட்டை கழற்றி பிளாஸ்டிக் தட்டில் வைத்த போது தான் எனது இடுப்புக்கும் கை வைத்து பெல்ட் போடாத உண்மையை கண்டு பிடித்தேன். அந்தளவுக்கு என் நினைவெல்லாம் என் குடும்பத்தைப் பற்றியே இருந்தது. பெல்ட் போடாததால் அடிக்கடி இடுப்பிலிருந்து கீழிறங்கிய எனது ஃபேண்ட்டை அவ்வப்போது மேல் தூக்கி விடும் போது சுகமான சுமை யாகவே இருந்தது ! விமானத்தில் அமர்ந்து விட்டேன் குறிப்பிட்ட நேரம் வந்ததும் விமானம் புறப்படப் போகும் தகவலை விமானப் பணிப்பெண் உணர்த்தினார் ஆம் இடையில் விமானம் பறக்கும் போது ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் எப்படி உயிருடன் தப்பிப்பது? என்ற செய்முறை பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார்.
விபத்திற்குள்ளான விமானங்களிலிருந்து பாராசூட் மூலம் உயிர் தப்பிய பயணிகளின் எண்ணிக்கையை மட்டும் கேட்டு விடாதீர் அதை கடைசி வரைக்கும் யாராலும் கண்டு பிடிக்க முடியாது! பிறகு ஏன் இந்த சடங்கு சம்பிராதயம்? எனக் கேட்கிறீர்களா? எல்லாம் பயணிகளின் நம்பிக்கையை அதிகரிக்கத்தான் !விமானம் மேலெழும்பியதும் சக பயணிகள் பாதுகாப்பான பயணத்திற்காக அவரவர் கடவுளை வேண்டினர்.
ஆனால் என் மனம் மட்டும் பறக்கும் விமான வேகத்தை விட தாயகத்தைப் பற்றிய பல சுகமான நினைவு களாய் சீறிப் பாய்ந்தன. ஊர் போனதும் மறக்காமல் நமக்கு கற்றுத் தந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் முத்துவேலை நேரில் பார்த்து சுகம் விசாரித்து விட வேண்டும். நம் வளர்ச்சியைப் பார்த்து (அதாவது என் தொப்பை வயிற்றை சொல்கிறேன்) ஆச்சர்யப்படுவார்.
காமெடி நடிகர் வடிவேலு பாஷையில் சொல்வதானால் ஆசிரியர் என்னைப் பார்த்ததும் அவனா …….. நீ? என்று கூட கேட்கலாம். பிறகு அவரது வகுப்பு மாணவர்களிடம் இவன் என் பழைய மாணவன் என நம்மை அறிமுகப்படுத்தும் போது நமக்குள் எவ்வளவு உற்சாகம் ஏற்படும் ! இன்னும் இது போன்ற பல எதிர்பார்ப்பு நினைவுகள் அசை போட ஆரம்பிக்கும் போதே விமானம் சென்னையில் தரையிறங்கி விட்டது. நான்கு மணிநேரம் போனதே தெரியவில்லை. சென்னை விமான நிலையமே பரபரப்பாக காணப்பட்டது. முறையான பரிசோதனைகள் முடிந்து எனது லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தேன்.
என் கண்களின் தேடலை புரிந்து கொண்ட இளைய தம்பி அண்ணே…. எனக் குரல் கொடுத்தான் அவனைப் பார்த்ததும் தான் ஓரளவுக்கு பதற்றம் குறைந்தது. பிறகு என் தாய் மற்ற சகோதரர்கள், சகோதரிகள் என எல்லோரும் என் தலையை அன்பாக தடவிக் கொண்டே சுகம் விசாரித்தனர். இவைகளினூடே எனது இதயத்துடிப்பு மட்டும் அதிகரித்துக் கொண்டே போனது. எல்லாம் என் ஆசை நாயகியை காண வேண்டும் என்ற பரபரப்புத்தான்! என் அண்ணிக்குப் பின்னால் வெட்கத்துடன் மறைந்து கொண்டு நின்றிருந்தாள் என் அன்பு மனைவி ! அவளை அருகில் போய் பார்த்த போது அப்பப்பா …… அந்த இனிமையை வர்ணிக்க வார்த்தையில்லை என்னைப் பார்த்த அவள் சிறிய சினுங்கலுடன் சொகமா இருக்கீங்களா? எனக் கேட்ட போது எனக்குள் நான் பாட ஆரம்பித்து விட்டேன். ஒரு வார்த்தை பேச காத்திருந்தேன் நான்கு வருஷம் …. இந்தப் பாட்டை என் மனசுக்குள்ளேயே பாடிக் கொண்டேன். பிறகு நலம் விசாரிப்புகள் முடிந்ததும் என் குடும்பத்தார் வந்த காரில் ஏறிக் கொண்டேன். கார் ஒரே சீரான வேகத்திலேயே எனது ஊரை நோக்கி போய்க் கொண்டிருந்தது.
ஆனால் என் மனம் மட்டும் ஒரே சீராக இருக்கவில்லை ! நான் சொன்ன மாடலில் வளையல் எடுத்தாயா? இது என் தங்கையின் கேள்வி? எனக்கு என்ன வாங்கினாய்? என்ற என் அக்காவின் கேள்விக்கு பதில் சொல்ல முயன்ற போதே என் தாயார் குறுக்கிட்டு எம் மவன் பயணம் செய்து களைப்பா இருக்கான் அவனை தொந்தரவு செய்யாமல் ஓய்வெடுக்க விடுங்கள் என அரட்டியதும் தான் எனது லக்கேஜின் விசாரிப்புகள் நின்றன. டெக்னாலஜியின் உதவியுடன் உலகமே முன்னேறிக் கொண்டிருந்தாலும் சென்னையிலிருந்து எனது ஊருக்கு 12 மணி நேரம் பயணம் செய்வதென்ற தரித்திரம் மட்டும் மாறவே இல்லை. அதிகாலை புறப்பட்ட எனது பயணம் மாலையில் தான் முடிந்தது. ஆம் எனது ஊருக்குள் வந்து விட்டேன் குறுக்கும் நெடுக்குமாக இருந்த தெருவுக்குள் வளைந்து வளைந்து கார் போனது. அந்தத் தெருவின் கடைசி வீடு என்னுடைய ஓட்டு வீடு தான். ஒரு வழியா காருக்குள் ளிருந்து வெளியில் வந்த நான் எனது வீட்டின் வாசலில் கையில் ஆரத்தி தட்டுடன் நின்ற என் மனைவியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அப்படியானால் நாம் சென்னை ஏர் போர்ட்டில் பார்த்தது? பாட்டுப் பாடியது? எல்லாமே என் மனப்பிரம்மை தான் என்பதை சில விநாடி களிலேயே உணர்ந்து கொண்டேன்.
உண்மையாகவே என் மனைவி சென்னைக்கு வரவில்லை. காரணம் நான் ஊர் வரும் போது ஆரத்தி எடுக்க ஆள் வேண்டுமாம், அதனால் தான் என் மனைவியை மட்டும் அழைத்து வரவில்லை என என் வீட்டார் சொன்னார்கள். இந்த ஆரத்தி முறையை கண்டு பிடித்தவன் மட்டும் அன்று எதிரில் கிடைத்திருந்தால் அவனை உண்டு இல்லை என ஆக்கியிருப்பேன். அவ்வளவு கோபம். என் மனைவியின் ஆரத்திக்குப் பிறகு வீட்டுக்குள் போய் குளித்து விட்டு புதிய ஆடையணிந்து ஹாலில் வந்து அமர்ந்தேன். என்னை நலம் விசாரிப்பதற்காக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களெல்லாம் வந்து போயினர். இரவு ஒன்பது மணியாகி விட்டது.
இனியும் குடும்பத்தாரின் பார்சல் பிரிப்பு ஆர்வத்திற்கு தடை போட விரும்பாமல் பார்சலை பிரித்து அவரவருக்குரியதை பங்கு வைத்து கொடுத்தேன். ஒரு வழியா பாகப்பிரிவினையெல்லாம் முடிந்து இரவு உணவருந்தி விட்டு பயணக்களைப்பால் சோர்ந்து போயிருந்த என் கண்களுக்கு ஓய்வு கொடுத்தேன். நான்கு வருடம் கழித்து குடும்பத்தை பார்த்த பரவசத்தில் கண்கள் நன்றாய் உறங்கி விட்டன. காலையில் எழுந்து குளித்து முடித்து காலை உணவை முடித்ததும் மனைவியை அழைத்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு போனேன். அங்கே ராஜ மரியாதை கிடைத்தது. வாய்க்கு ருசியான மட்டன் பாங்கா, நெய் சோறு சாப்பாட்டை முடித்ததும் நானும் என் மனைவியும் தனியறைக்குள் போய் வாயில் வெற்றிலை மென்று கொண்டே நான்கு வருட பிரிவின் சோகத்தை வார்த்தைகளால் பரிமாறிக் கொண்டிருந்தோம்.
திடீரென ஒரு கூச்சல் சப்தம் வந்ததும் பதறியடித்து அறையை விட்டு வெளியே வந்தேன் சிறிதும் தாமதமின்றி என் கால் அருகில் வந்து விழுந்தன ஆரஞ்சுக் கலர் சேலை ஆமாம், நான் வெயிலில் அலைந்து என் சகோதரிக்காக ஆவலுடன் எடுத்த அதே ஆரஞ்சுக்கலர் சேலை தான் ! சேலை வந்த திசையை நோக்கினேன் வாசலில் என் சகோதரி கண்களில் கோபம் கொப்பளிக்க நின்று கொண்டு இதையும் உன் பொண்டாட்டிக்கே கொடுத்து விடு ! இந்த நாத்தம் பிடித்த சேலை எனக்கு வேண்டாம். அவள் உன்னை வசியம் பண்ணி மயக்கி விட்டாள். அதனால் தான் அவளுக்கு விலை உயர்ந்த சேலையும் எனக்கு விலை குறைந்த சேலையுமாய் எடுத்திருக்கிறாய்.
சமீப காலமாக உனது நடவடிக்கையில் பெரிய மாற்றம் தெரிகிறது போன மாசம் ஊர் வந்த நடுத்தெரு ஹாஜா கனி மகன் ராவுத்தரிடம் உம் பொண்டாட்டிக்கு கேமரா வைத்த மொபைல் போன் வாங்கி கொடுத்து விட்டியாமே, எல்லாம் எங்களுக்கு தெரியா தென்றா நினைத்து விட்டாய்? திடீரென பொண்டாட்டி மோகம் வந்து விட்டதோ? இதெல்லாம் நீயாக செய்ய வில்லை எல்லாம் அவள் செய்துள்ள மருந்து மாயம் தான். எத்தினி நாளைக்கு இந்த மோகம்? நானும் பார்த்திர்ரேன் என மூச்சு விடாமல் பத்ரகாளி ஆட்டம் ஆடி விட்டு வெடுக்கென போகிறாள். அவள் போன திசையை பார்த்தேன் நல்லவேளை தெரு வெறிச்சோடி கிடந்தது. தெருவில் என் சகோதரி மட்டுமா போகிறாள் கூடவே எனது சந்தோஷத்தை யுமல்லவா பிடுங்கிப் போகிறாள். அவள் தூக்கியெறிந்தது சேலையை மட்டுமல்ல, அதில் இருந்த எனது உழைப்பின் வியர்வையையும் தான் !
பாவம் என் மனைவிக்கு எடுத்த சேலையின் விலை சகோதரிக்கு எடுத்த சேலையை விட 10 திர்ஹம் விலை குறைவென்பது எனக்கும் அந்த ஆண்டவ னுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். பிறகு ஏன் இந்த கலவரம்? விலை குறைவான எனது மனைவியின் சேலை கலரும், டிசைனும் ஏதோ விலையுயர்ந்த ரகம் போல் காட்டி விட்டது ! அதனால் வந்த வினை தானோ? இது. எந்தவொரு விஷயத்தையும் வெளித்தோற்றத்தை மட்டுமே வைத்து எடை போடும் நாசகார சிந்தனை இன்னுமா மனிதர்களுக்குள் இருக்கிறது? நல்லதுக்கே காலமே கிடையாது என்பதை சாதாரண இந்த சேலை விவகாரத்திலேயே புரிஞ்சிகிட்டேன்.
சரி ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம், என் மனைவிக்கு எடுத்த சேலையின் விலை மற்றவர்களுக்கு எடுத்ததை விட அதிகமாகவே இருக்கட்டுமே, இதில் என்ன குற்றம் உள்ளது? என்னை நம்பி வந்த அவளுக்கு நானே உரிமையாகிவிட்ட பிறகு எனது பணமும், பொருளும் உரிமையாகதா? அவள் என்ன விலை கொடுத்து வாங்கப்பட்ட அடிமையா? இன்னும் சொல்லப்போனால் என் மனைவிக்கு நான் தானே அடிமை ! அவள் என்னைத்தானே விலை கொடுத்து வாங்கி இருக்கிறாள். ஆம் வரதட்சிணை எனும் லட்சங்களையும், மோட்டார் பைக், தங்கச் செயின் உள்ளிட்ட சீர் பொருட் களையும் விலையாக கொடுத்து தானே என்னை மாப்பிள்ள யாக ஏற்றுக் கொண்டாள்.
லட்சங்களை வாரி கொடுத்தபோது என் வீட்டாரால் மதிக்கப்பட்ட என் மனைவி இப்போது தீண்டத்தகாதவளா? ஏன் இந்த முரண்பாடு? சகோதரிகளாய் இருப்போரே கொஞ்சம் மனச்சாட்சியுடன் நடக்க கூடாதா? என சத்தம் போட்டு தெருவில் கத்த வேண்டும் போல் இருந்தது. காரணம் நான் துபாய்க்கு வந்ததே என் மனைவி யின் நகைகளை விற்றுத்தான் ! இவ்வளவு தியாகத்தையும் செய்துள்ள என் மனைவிக்கென்று இந்த நான்கு வருடத்தில் பெரிதாக எதுவுமே செய்திடவில்லை எனக்குத் தெரிந்த வரைக்கும் என் சகோதரி சொன்னது போல் நடுத்தெரு ஹாஜா கனி மகன் ராவுத்தரிடம் கொடுத்து விட்டது மற்றபடி எதுவுமே கொடுத்துவிடவில்லை. ஏன் எனக்கு எதுவும் தரவில்லை என்றோ, எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என என்றைக்குமே என்னிடம் வாக்குவாதம் செய்யாத என் மனைவியை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்ததை தான் என்னால் ஜீரணிக்கவே முடியல.
நான்கு வருடங்கள் கொதிக்கும் பாலைவன மணலில் கல்லையும், மண்ணையும் சுமந்து காய்த்துப் போன கைகளுடன் திட்டு திட்டான பித்த வெடிப்பு கால்களுடன் ஒரு இரண்டு மாதம் ஊருக்குப் போய் நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் என வந்துள்ள எனக்கு சந்தோஷத்தை தராவிட்டாலும் பரவாயில்லை இருக்கும் நிம்மதியையாவது பிடுங்காமல் இருந்திருக்கலாமே? என நினைத்து அழுதே விட்டேன் பாலைவன நெருப்புக் காற்றில் கஷ்டப்பட்ட போது கூட நான் அழுததில்லை !
ஆனால் இப்போ அழுகிறேன். எந்த குடும்பத்தின் சந்தோஷத்திற் காகவும், வசதிக்காகவும் என் உணர்ச்சிகளை சாகடித்து விட்டு இளம் மனைவியை தனிமையில் தவிக்க விட்டுட்டு துபாய் வந்து உழைத்து ஓடாய் தேய்ந்து ஒரு வேளை உணவு மறுவேளை உண்ணா நோன்பென்று செலவை சிக்கனப்படுத்தி பணம் சேர்த்து கொடுத்தேனோ? இப்போ அதே குடும்பம் தான் எனக்கெதிராக உள்ளது ! உணர்ச்சி வயப்பட்ட நிலையில் வேதனையுடன் நின்றிருந்த எனது தோளில் ஆறுதலாக கை வைத்து அமரவைத்தாள் என் மனைவி. தேவையில்லாமல் என்னால் உங்கள் குடும்பத் திற்குள் சண்டை வேணாங்க,
எனக்கு தந்த கத்திரிப்பூ கலர் சேலையையும் உங்கள் சகோதரிக்கே கொடுத்திடுங்க உங்கள் உண்மையான அன்பு மட்டுமே போதும்ங்க என்ற எனது மனைவியின் முகத்தை பார்த்தேன் அதில் என் மீதான கரிசனம் மட்டுமே தெரிந்தது. ஒரு சேலை கலவரத்தால் அன்றைய சுகமான பகல் உறக்கத்தை தொலைத்து விட்டேன். மாலையில் முகம் அலம்பி மனைவி கையால் தேநீர் அருந்தி விட்டு மீண்டும் என் வீட்டிற்கு போனேன். வாசலில் அமர்ந்து பக்கத்து வீட்டு பாட்டிம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த எனது தாயார் என்னைக் கண்டதும் சந்தோஷ மாக வா தம்பீ சாப்பிட்டியா? முகமெல்லாம் வாட்டமா யிருக்கு ஏன் பகலில் தூங்கலியா? என அதிக அக்கறையுடன் கேட்டதை வைத்தே பகலில் சகோதரி வந்து ஆடிய ஆட்டம் நம் தாய்க்கு தெரிந்திருக்கவில்லை என்று யூகித்துக் கொண்டேன்.
பிறகு வீட்டிற்குள் போன என்னை அம்மாவைத் தவிர யாருமே கண்டு கொள்ளவில்லை. இப்படியே இரண்டு மாதங்களும் உருண்டோடி விட்டன. மீண்டும் எனது துபாய் பயணத்திற்கான நாளும் வந்து விட்டது. பயணம் புறப்படுவதற்கு முதல் நாள் இரவில் கனத்த இதயத்துடன் தேம்பி, தேம்பி அழுத என் மனைவியின் அழுகையை என்னால் நிறுத்த முடியலை. நீங்கள் ஏன் துபாய் போகிறீர்கள்? பேசாமல் இங்கேயே ஏதாவது வியாபாரமோ, அல்லது கடையிலோ வேலை பாருங்கள். குறைந்த வருமானமாக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் துபாயி லிருந்து தரும் மாசக் காசு 1500 ரூபாயை இங்கிருந்து தர முடியாதா? உங்கள் கை, கால்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அழுகையாக வருதுங்க இனிமேலும் பாலை வனத்தில் கஷ்டப்படாதீங்கமா ப்ளீஸ் ! என்று எனது கைகளை பிடித்து கெஞ்சிய போது ஏறத்தாழ ஒரு குழந்தையை போலவே மாறியிருந்தாள் எனது மனைவி. கவலைப்படாதே, இன்னும் இரண்டே வருஷம் தான் ! ஓரளவுக்கு சம்பாதித்து விட்டு கேன்சலில் ஊர் வந்து விடுகிறேன். பிறகு நாம் நினைத்தது போல் இங்கேயே ஏதாவதொரு வியாபாரம் செய்து கொண்டு காலத்தை ஓட்டிடலாம் என நான் கொஞ்சம் நம்பிக்கையுடன் கூறிய பிறகு தான் என் மனைவி சமாதானமடைந்தாள்.
பின்னர் பொழுது விடிந்து பயணத்திற்கான ஆயத்தங்கள் வெகு ஜோராக நடந்தன. குடும்பத்தார் அனைவரின் வீட்டிற்கும் நேரில் போய் பயணம் சொன்னேன் ஒவ்வொரு வீட்டிலும் அவரவர் சக்திகேற்ப 51, 101 என வெற்றிலையும் பணமும் தந்தனர். தொலை தூர பயணம் செல்லும் போது வெற்றிலை பணம் கொடுக்கும் கலாச்சாரத்தைக் கண்டு பிடித்தவர் 501, 1001 என நிர்ணயம் செய்திருக்க கூடாதா? என்று என் உள் மனம் கேட்டுக் கொண்டது ! ஒரு வழியா குடும்பத்தார் எல்லோரிடமும் பயணம் சொல்லிவிட்டு நண்பகல் ஒரு மணிக்கு வீடு வந்தேன். மனைவி பகல் உணவை எடுத்து வைத்து பரிமாறினாள் எனக்கோ வயிற்றுப்பசி அறவே இல்லாததால் சாப்பாட்டின் மீது ஆர்வமின்றி இருந்தேன். அப்போது எனக்கிருந்ததெல்லாம் நம் மனைவியை விட்டு இன்னும் இரண்டு வருஷம் பிரியப் போகிறோமே என்ற கவலை தான் என்னை அணுஅணுவாய் சாகடித்தது. என் நிலையை புரிந்து கொண்ட மனைவி சட்டென சாப்பாட்டை யெல்லாம் ஒடுக்கி வைத்து விட்டு எனது மடியில் விழுந்து அழத்தொடங்கினாள்.
பயணம் புறப்பட இன்னும் இரண்டு மணி நேரமே இருக்கிறது என்பதை நினைத்து ஒவ்வொரு நொடியின் மீதும் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. அழுதழுது வீங்கியிருந்த என் மனைவியின் நெற்றியில் உச்சி முகர்ந்து விட்டு அழுது வடிந்த எனது முகத்தையும் சோப்பு போட்டு கழுவி பின்னர் ஃபேண்ட், சர்ட் அணிந்தவனாய் சுண்ட வைத்து காய்ச்சித் தந்த பசும்பாலை மட்டும் சம்பிரதாயத் திற்காக குடித்தேன். வாசலில் ஆட்டோக்காரன் மெட்ராஸ் பஸ் கிளம்ப இன்னும் ½ மணி நேரமே உள்ளது சீக்கிரம் கிளம்புங்க என்று குரல் கொடுத்தான். எனது லக்கேஜ்கள் ஆட்டோவில் ஏற்றப்பட்டு நானும் எனது மனைவியும் ஆட்டோவில் உட்கார்ந்து கொண்டோம். எனது தாய் சகோதரிகள் மற்றொரு ஆட்டோவில் பின்னால் வந்து கொண்டிருந்தனர். சென்னைக்கு செல்லும் சொகுசு பஸ் நிறுத்தம் வந்ததும் முன்னதாக எல்லோரிடத்திலும் கை குலுக்கி விட்டு விடை பெற்றுக் கொண்டு பஸ்ஸில் ஏறி அமரவும் பஸ் கிளம்பவும் சரியாக இருந்தது. எனது பூத உடலைத்தான் பஸ் சுமந்ததே தவிர உயிரை அல்ல ! காரணம் உயிர் என் மனைவியின் நினைவோடு கலந்து விட்டது. செய்யாத கொலைக்கு ஆயுள் தண்டனை பெற்ற சிறைக் கைதியின் மனநிலை எப்படியோ? அப்படித்தான் சென்னை புறப்பட்ட அன்று எனக்கும் இருந்தது. குடும்பத்தார் களெல்லாம் சிரிக்க நான் மட்டும் அழவேண்டுமா? என்ன நியாயம் இது?
பஸ் பயணம் முடிந்து சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தேன். விமான நிலைய பரிசோதனைகள் முடிந்த பின் தொலைபேசி மூலம் ஊரில் உள்ளவர்களிடம் பயணம் சொல்லி விட்டு துபாய் வந்து சேர்ந்து விட்டேன். சென்னையிலிருந்து துபாய்க்கு பறந்து கொண்டிருந்த நான்கு மணி நேரத்தில் எத்தனை எத்தனை கேள்விகளால் என்னையே நான் கேட்டுக் கொண்டேன். நான்கு வருடம் கழித்து தேவைக்கு மேல் சாமான்களும் வாங்கி கொண்டு ஊர் போய் கிடைத்த இரண்டு மாத விடுமுறையை ஜாலி பண்ணிவரலாம் என்று நினைத்து போன எனக்கு எவ்வளவு மன உளைச்சல்களை குடும்பத்தினர் தந்து விட்டனர்.
சேலை நல்லா இல்லை என்பது ஒரு பிரச்சினை, கேட்ட ஸ்பிரே வாங்கி வரலை என இன்னொரு பிரச்சினை, வளையல் டிசைன் சரியில்லை என்ற மற்றொரு குறை, தன் கணவனுக்கு கேமரா மொபைல் போன் வாங்கித் தரலையென்று அக்காவின் கோபம் என ஒவ்வொரு கோணத்திலும் நான் சந்தித்த பிரச்சினை யெல்லாம் எனக்குத் தேவையா? நான் மட்டும் உள்ளூர் உழைப்பாளியாக இருந்தாதிருந்தால் இந்த ஈனத்தனமான சண்டைகள் வந்திருக்குமா? நான் சுமந்து போன பார்சலின் மீதான பாசத்தை கூட என் மீது வைக்காத குடும்பத்தினரின் செயலை என்னவென்று சொல்வது? நான் யாருக்காக துபாய் வந்தேன்? உங்களுக்காகத்தானே, மாதம் தவறாமல் தேதி வைத்து அனுப்பிய பணமெல்லாம் உங்களின் தேவைகளுக் காகத்தானே, அனுப்பினேன்.
வாங்கிய சம்பளம் பற்றாக்குறை என தெரிந்ததும் பண்டிகைக்கு புதுத்துணியெல்லாம் நீங்கள் எடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அந்த வருடத்தின் பண்டிகைக்கு நான் மட்டும் பழைய துணியையே உடுத்தி கொண்டு கையிலிருந்த பணத்தை யெல்லாம் உங்களின் சந்தோஷத்திற்காக அனுப்பி வைத்தேனே ! இந்த தியாகத்திற்கெல்லாம் மரியாதை இல்லாமல் ஆக்கி விட்டீர்களே ! எனது குடும்பமே உங்களிடம் தான் கேட்கிறேன் ! இது போன்ற பல கேள்வி களை எனக்குள் கேட்டுக் கொண்டே வந்ததில் விமானம் துபை ஏர்போர்ட்டில் தரை இறங்கப் போவதை கூட உணர முடியாமல் போய் விட்டது. விமானப் பணிப்பெண் பெல்ட் போட சொன்ன போது தான் ஊர் சிந்தனையை உடைத்து விட்டு துபாய் வாழ்க்கைக்கு திரும்பினேன்.
பிறகு மீண்டும் ஊர் சென்றேன் இப்படியே 15 வருஷ என் துபாய் வாழ்க்கை யில் மொத்தமே ஐந்து முறை தான் ஊர் சென்றுள்ளேன். ஊரில் எனது மனைவியுடன் நான் வாழ்ந்த காலம் வெறுமனே 11 மாதம் 16 நாட்களாகும்.
15 வருஷத்தில் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே எனது மனைவியுடன் வாழ்ந்த தால் என்னவோ? இது வரைக்கும் எனக்கு குழந்தை பாக்கியமும் இல்லை. ஒரு முறை ஊர் சென்றிருந்த போது மருத்துவரிடம் போய் உரிய சிகிச்சை எடுத்து கொண்டோம். நானும் எனது மனைவியும் ! அப்போது மருத்துவர் கூட எதற்கும் நீங்கள் விசாவை கேன்சல் செய்து விட்டு ஒரு வருஷமாவது ஊரில் இருந்து பாருங்கள். ஒரு வேளை குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கலாம். என சொல்லிய விஷயத்தை எனது வீட்டாரிடம் கூறினேன். சரி பரவாயில்லை டாக்டர் சொன்ன மாதிரி துபாயை முடித்து விட்டு ஒரு வருஷம் ஊரில் தான் இருந்து பாரேன். அப்படி யாவது குழந்தை பிறக்கட்டுமே என சொல்லி இருப்பார்கள் என்று நினைத்தால் ஏமாந்து தான் போவீர்கள்.
டாக்டரென்றால் எதையாவது சொல்லத்தான் செய்வார் அப்பத்தான் அவருக்கும் பிழைப்பு ஓடும். நம் குடும்பத்தில் யாருக்கு பிள்ளை இல்லை? உனக்கு மட்டும் இல்லாமல் போவதற்கு ஆண்டவன் நாடும்போது எல்லாம் தானாக நடக்கும். தேவை இல்லாமல் மனசை போட்டு குழப்பிக் கொள்ளாமல் துபாய் கிளம்புற வழியைப்பாரு என என் வீட்டார் சொன்ன போது என் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? நான் என்ன சிறிய வயதுக்காரனா? எப்போ வேண்டுமானாலும் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பதற்கு எனக்கும் வயது 41 ஆகி விட்டது. எனது மனைவிக்கும் வயது 38 ஆகிவிட்டது. இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைக் கைதி போல் மறுப்பேதும் கூறாமல் உடனே துபாய் கிளம்பிவிட்டேன்.
இப்போது எனது துபாய் வாழ்க்கைக்கு வயது 15 நான் முதன் முதலில் துபாய் வரும் போது என் வீடு எப்படி இருந்ததோ? அப்படியே தான் இப்போதும் அதே பழைய வீடாகவே இருக்கிறது. அப்படி யானால் எனது 15 வருஷ உழைப்பு என்னாச்சு?
கடைசியாக நான் ஊர் போயிருந்தபோது என் மனைவி வீட்டிற்கான மளிகை சாமான்கள் வாங்குவதற்கு எனது ஊரிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நகரத்தில் இருக்கும் பிரபலமான J.J. சூப்பர் மார்க்கெட்டுக்குப் போயிருந்தோம் நானும் என் மனைவியும், ஷாப்பிங் முடித்து விட்டு பணம் செலுத்தும் இடத்திற்கு வந்து பொருட்களுக்கெல்லாம் பில் போடப்பட்டபோது வேறு யாரோ எடுத்து வைத்த இரண்டு பிளாஸ்டிக் குடமும் என் பில்லோடு சேர்க்கப்பட்டதை அறிந்து குடத்தை ரிட்டர்ன் செய்து விடுமாறு காசாளரிடம் வலியுறுத்தினேன்.
ஆனால் அவர் ரிட்டர்ன் செய்ய முடியாது பில் போட்டது போட்டது தான் என வாக்குவாதம் செய்ய ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நான் உன் முதலாளியை காட்டு நான் அவரிடம் பேசிக் கொள்கிறேன் என சொன்னதும் மிகவும் நக்கலாக மாடியில் இருக்கிறார் போய் பார்த்து விட்டு வா என காசாளர் ஓர்மையில் பேசிவிட்டான்.
இந்த மன உளைச்சலுடன் பக்க வாட்டிலிருந்த மாடிப்படியேறி முதலாளியைப் பார்க்க வந்த விஷயத்தை அவரது அறைக்கு வெளியிலிருந்த இளம் பெண்ணிடம் கூறினேன். சில நிமிட காத்திருப்புக்குப் பின் முதலாளி அறைக்குள் செல்லுமாறு அப்பெண் கூறியதும் நான் உள்ளே நுழைந்து மரியாதை நிமித்தமாக கை குலுக்க அருகில் சென்ற போது அதிர்ச்சி அடைந்து விட்டேன். அவர் வேறு யாருமில்லை.
15 ஆண்டுகளுக்கு முன் என்னுடன் துபாய் வந்து இரண்டே வருஷத்தில் கேன்சலில் ஊர் வந்து பெட்டிக்கடை வைத்து கஷ்டப்படுவதாக கேள்விப்பட்ட அதே சுஹைல் தான் ! என்னப்பா சுஹைல் எப்படி இருக்கிறாய்? என கேட்ட என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை போலும் நீங்கள் யார்? என திருப்பி கேட்டு விட்டார்.
ஏனென்றால் 15 வருடத்திற்கு முன்பு பார்த்த என்னை இப்போது முழு வழுக்கைத்தலையுடனும், நரைத்த தாடியுடனும், பெருத்த தொப்பையுடனும் பார்த்ததால் அடையாளம் தெரியாமல் போய்விட்டது. ஆமாம் வலுக்கைத் தலை, நரைத்தாடி, தொப்பை இவைகளெல்லாம் நீண்ட காலம் துபாயில் இருப்பவர்களுக்கு ஏற்படும் மறைக்க முடியாத அடையாளங் களாகும்.
பிறகு என்னை கடை முதலாளி சுஹைலுக்கு நினைவு படுத்திய போதுதான் ஓரளவுக்கு புரிந்து கொண்டவரைப் போல மெலிதாக சிரித்து விட்டு எனது புகாரை ஏற்றுக்கொண்டு காசாளரை என் முன்னாலேயே கண்டித்துவிட்டு இரண்டு பிளாஸ்டிக் குடத்தையும் ரிட்டர்ன் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினார். ஒரு வழியா மற்றவை களுக்கு பணம் கொடுத்து விட்டு வெளியில் வந்த நானும் என் மனைவியும் காரில் ஏறி ஊர் திரும்பினோம்.
மிதமான வேகத்தில் ஆற்றை ஒட்டிய ஒற்றையடி சாலையில் கார் சீராய்ப் போய்க் கொண்டிருந்த போது என் நினைவெல்லாம் J.J. சூப்பர் மார்க்கெட் சுஹைலைப் பற்றியேத்தான் இருந்தது. பெட்டிக்கடை வைத்தவனா இன்று இவ்வளவு பெரிய சூப்பர் மார்க்கெட் ஓனர்? அதிலும் 40 பேருக்கு மேல் சம்பளம் கொடுக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கானே, சுஹைல் எங்கே? நான் எங்கே? என சிந்தித்தவனாகவே என் வீடு வந்து சேர்ந்தேன். இதுபோன்ற பழைய நினைவுகளும் எனது குடும்பத்தாரின் போக்குகளும் துபாயில் உள்ள என்னை தடுமாற செய்கிறது.
துபாய் போனால் குறுகிய காலத்தி லேயே பணக்காரனாகி விடலாம் என கனவு காண்போரே, இதேக் கனவுடன் துபாய் வந்து என்னைப் போல கஷ்டப்படும் சக உழைப்பாளிகளே, 15 ஆண்டுகளாய் பாலைவனத்தில் உழைத்த நான் இப்போதும் கையில் எவ்வித சேமிப்புமில்லாமல் முதன் முதலில் துபாய் வரும் போது எப்படி இருந்தேனோ அப்படியேத்தான் கஷ்டப்பட்ட நிலையில் இருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போகும் போதும் நான் வாங்கி செல்லும் சாமான்களால் எனது குடும்பத்திற்குள் ஏற்படும் தேவையற்ற சண்டை சச்சரவுகள் மட்டும் தான் எவ்வித குறைவுமின்றி முன்னேற்றம் கண்டு வருகிறது !
குழந்தையில்லாமல் இருக்கும் எனக்கு மீண்டும் விடுமுறை காலம் நெருங்குகிறது. இப்போது சொல்லுங்கள் நான் மறுபடியும் விடுமுறை யிலேயே ஊர் செல்லவா? அல்லது கேன்சலில் ஊர் செல்லவா?
எதுவானாலும் நீங்கள் கூறப்போகும் பதிலைப் பொறுத்து தான் எனது முடிவு இருக்கும் !
உங்களின் மேலான நல்ல பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனக் குமுறலுடன் ஓர் உழைப்பாளி !!

குறிப்பு ;
வாசகர்களே, உங்களின் மேலான கருத்துக்களை sjaroosi@yahoo.com என்ற இ.மெயில் முகவரிக்கு தெரியப்படுத்தலாம்.

100 websites for sending Free SMS

100 websites for sending Free SMS

There are 100 websites to send sms via online for free



குறுஞ்செய்திகள் அனுப்புவதற்கான 100 இணைய தளங்களின் பெயர்களை இதில் கொடுத்துள்ளேன்.இதில் சில இணைய தளங்களின் குறுஞ்செய்தி சேவைகளின் வழியாக பன்னாட்டு குறுஞ்செய்திகளையும் அனுப்ப இயலும்(இலவசமாக) ஆகையால் இவற்றை பயன்படுத்தி கொள்வதன் பொருட்டு உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.



http://4usms.net/
http://50sms.com/
http://adleel.com/sms.htm
http://adleel.com/sms.htm
http://free-sms-message.com/index.htm
http://free-sms-message.com/index.htm
http://gsms.se/
http://mobile.fares.net/sms/uae
http://my.phonegnome.com/
http://simsor.com/register
http://sms4u.biz/signup.php
http://smscity.com/
http://stepsms.com/
http://thesmszone.com/
http://www.160by2.com/
http://www.agentsms.com/
http://www.aircall.ch/sms/sendmsg_main_free.asp
http://www.atrochatro.com/
http://www.awalsms.com/
http://www.awalsms.com/
http://www.boswtol.com/
http://www.boswtol.com/
http://www.cbfsms.com/
http://www.cbfsms.com/
http://www.cellular.co.za/
http://www.clickatell.com/
http://www.clickatell.com/
http://www.d1g.com/
http://www.devinosms.com/
http://www.ecosms.ch/
http://www.edihasms.com/
http://www.edihasms.com/
http://www.freesms.2way.de/
http://www.freesms.co.za/
http://www.freesms.co.za/
http://www.freesms.com/
http://www.freesms.com/
http://www.free-sms.com/
http://www.free-sms.com/
http://www.free--sms.com/index.go
http://www.freesms.net/
http://www.freesms.net/
http://www.freesms.web.tr.tc/
http://www.free-sms-service.de/
http://www.genie.co.uk/
http://www.genie.co.uk/
http://www.gosms.com/
http://www.gsmvault.com/
http://www.hai91.com/
http://www.hot.it/sms
http://www.hotsms.com/
http://www.hotsms.com/
http://www.islamweb.net/
http://www.itsalat.com/
http://www.itsalat.com/
http://www.jfax.de/
http://www.jfax.de/
http://www.junglesms.com/
http://www.lycos.co.uk/
http://www.lycos.co.uk/
http://www.metacrawler.de/
http://www.mginger.com/
http://www.mobik.com/mobik/client/
http://www.mobizone.com/
http://www.mobizone.com/
http://www.mobyko.com/
http://www.mycantos.com/
http://www.nemra1.com/
http://www.nice-prizes.de/
http://www.nice-prizes.de/
http://www.phones.com/
http://www.pimpmysms.com/
http://www.quicksms.de/
http://www.quicksms.de/
http://www.quios.com/
http://www.quios.com/
http://www.resalh.com/
http://www.rosms.home.ro/
http://www.rosms.home.ro/
http://www.send.sms.to/free.asp
http://www.sendsmsnow.com/
http://www.shortmessage.com/
http://www.sms.ac/
http://www.sms.at/
http://www.sms.at/
http://www.sms.com/
http://www.sms.de/
http://www.sms.de/
http://www.sms.mums.it/
http://www.sms.mums.it/
http://www.sms2india.org/
http://www.smsdiscount.com/en/index.html
http://www.smsfree.co.uk/
http://www.smsfree.co.uk/
http://www.smspop.com/
http://www.smspress.com/
http://www.smspress.com/
http://www.smspup.com/
http://www.smspup.com/
http://www.sms-sprueche.tv/
http://www.sms-sprueche.tv/
http://www.smstxtbox.com/web/
http://www.smsyes.com/
http://www.smsyes.com/
http://www.textmefree.com/
http://www.textmefree.com/
http://www.themobiweb.com/en/sms.html
http://www.uaesms.com/
http://www.uni.de/
http://www.uni.de/
http://www.unisms.uni.cc/
http://www.vazu.com/
http://www.vizzavi.it/
http://www.vizzavi.it/
http://www.world-free.com/free-sms
http://www.worldxs.net/sms.html
http://www.yellowpages.com.eg/
http://zyb.com/
http://zyb.com/
sms2.htm
www.aircall.ch/sms/sendmsg_main_free.asp
www.bestspider.com/sms
www.bestspider.com/sms
www.call-magazine.de/free_sms
www.call-magazine.de/free_sms
www.cellular.co.za/send_
www.cellular.co.za/send_sms2.htm
www.hot.it/sms
www.jinny.com.lb/sms
www.jinny.com.lb/sms
www.jokes.gr/en/sms
www.jokes.gr/en/sms
www.jump.to/freesms
www.jump.to/freesms
www.masrawy.com/sms
www.mobileedge.co.uk/freesms/freesms.htm
www.mobileedge.co.uk/freesms/freesms.htm
www.ournet.md/sms
www.ournet.md/sms
www.send.sms.to/free.asp
www.smsuae.com/sms-uae
www.smsuae.com/sms-uae
www.telefonmarkt.de/sms/sms_info.php
www.telefonmarkt.de/sms/sms_info.php
www.uboot.com/uk
www.uboot.com/uk
www.ulluminati.ch/Nexus/sms.html
www.ulluminati.ch/Nexus/sms.html
www.world-free.com/free-sms
www.worldxs.net/sms.html

--

அரபி மொழி படித்தால் வேலை கிடைக்குமா …?

அரபி மொழி படித்தால் வேலை கிடைக்குமா …?

டாக்டர். மவ்லானா மவ்லவி முஹம்மது அப்துல்லாஹ் பேக் ரப்பானி உமரி. இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உருது மொழியில் பி.எச்.டி. பட்டம் பெற்றவர். ஜாமியா தாருஸ் ஸலாம் அரபிக் கல்லூரியில் ஆலிம் பட்டம் பெற்ற பிறகு 3 ஆண்டுகள் ரியாத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் 6 ஆண்டுகள் அரபித்துறை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அவர் நடத்தும் அரபி மொழி வகுப்புகள் குறித்து அறிவதற்காக அவரைச் சந்தித்தோம்.

நீங்கள் நடத்தும் கோர்ஸ் பற்றி கூறுங்கள்.
நான் இந்த அரபி மொழிப் பாடத்தை நடத்த வேண்டுமென்பதற் காகவே ரியாத் சென்றேன். 1994 இல் 2 மாதத்தில் குர்ஆனைக் கற்போம் என்று ஆரம்பித்தேன். அதில் கலந்து கொண்ட மாணவர்கள் மிகச் சரியாக சிறந்த உச்சரிப்புடன் குர்ஆனைக் கற்றனர். அதைத் தொடர்ந்து அவர்களிடம் குர்ஆனைக் கற்றால் மட்டும் போதாது. அரபி மொழியினை முழுமையாக கற்க வேண்டுமென்ற ஆவல் மிளிர்ந்தது. அப்பொழுது அரபி மொழி சார்ந்த புத்தகங்கள் இல்லாத காரணத்தால் ரியாத் சென்று 3 வருடங்கள் இருந்து நானே சுயமாக ஒரு பாடத் திட்டத்தை உருவாக்கினேன். 2000- இல் 2 ஆண்டு அரபி மொழிப்பாடத் திட்டத்தை அறிமுகம் செய்தேன். அதில் 6 மாதங்கள் அரபி மொழிப் பயிற்சியும் 18 மாதங்கள் முழுமையான ஷரீஅத்தையும் கற்றுக் கொடுத்தேன். இதன்படி 6 ஆண்டுகள் மதரஸாவிலிருந்து எதனைக் கற்பார்களோ அதனை 2 ஆண்டுகளில் கற்றுக் கொடுக்கிறேன்.
இப்பொழுது நீங்கள் நடத்தக்கூடிய இந்த வகுப்புகள் எத்தகைய கால அளவைக் கொண்டவை?
10 மாத கால அளவை கொண்டவை. அதாவது 10 மாதம் என்றால் வாரத்தில் 3 நாட்களில் தினம் 2 மணிநேரம் மட்டுமே இந்த வகுப்புகள். ஆக, ஒட்டுமொத்தமாக 250 மணிநேரம் மட்டுமே வகுப்புகள் நடத்தப் படுகின்றன. இந்தக் கால அளவை இன்னமும் குறைக்கலாம்.
நீங்கள் எத்தனை இடங்களில் இது போன்ற வகுப்புகள் நடத்துகிறீர்கள்?
மொத்தம் மூன்று இடங்களில் இத்தகைய வகுப்புகள் நடைபெறு கின்றன. ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு நேரத்தில் நடைபெறு கின்றன.
பயிற்றுமொழி எது?
பயிற்றுமொழி என்று தனியாக எந்த ஒரு மொழியினையும் வைப்ப தில்லை. ஏனென்றால் அரபி மொழி அடிப்படையிலேயே வகுப்புகளை நடத்துகின்றேன். அரபிமொழியின் அடிப்படை வார்த்தைகளை மாணவர் களுக்கு மனனம் செய்யக் கற்றுக் கொடுத்து அந்த வார்த்தைகளின் அடிப்படையில் வினாக்களை உருவாக்கி அதற்குச் சரியான பதிலை அவர்களாகவே உருவாக்கும் விதத்தில் பாடத்திட்டத்தை அமைத்திருக் கின்றோம். இலக்கிய வார்த்தைகள் இடம்பெறும்போது மாணவர்களைப் பொறுத்து தமிழ்,ஆங்கிலம்,உருது ஆகிய மொழியினை இடையிடையே இணைத்துக் கொள்கின்றோம். இதுவும் ஆரம்ப சில காலங்கள் மட்டுமே. மற்றபடி அனைத்தும் முழுமையாக அரபிமொழியில் நடத்தப் படுகிறது.
அயல்மொழி என்றாலே ஆங்கிலம் தான் என்று இருக்கும் போது அரபி மொழியினை கற்பதனால் ஏதேனும் பயன் உண்டா?
90 களில் நீங்கள் சொல்வதைப் போன்று இருந்தது. ஆனால், தமிழகத் தில் 90க்குப் பிறகு இஸ்லாமிய இயக்கங்களின் தாக்கம் அதிகரித்தது. முஸ்லிம் இளைஞர்களிடம் குர்ஆனைப் பொருளறிந்து கற்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. இஸ்லாத்தை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அரபி மொழி அதற்கு ஆணி வேராக இருக்கிறது. இந்த 21 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிற காலத்தில் குர்ஆனையும் ஹதீஸையும் இஸ்லாமியச் சட்டங்களையும் ஷரீஅத்தையும் முழுமையாக அறிய அரபி மொழி கட்டாயமாகிறது.
அரபி மொழி கற்பது மிகவும் கடினம் என்கிறார்களே, சரியா?
இது, முழுக்க முழுக்க தவறான எண்ணமாகும். அரபி மொழி கற்பதற்கு மிக எளிமையானது. நாம் அரபியை 5 வேளைத் தொழுகை களில் அன்றாடம் கேட்கின்றோம். நமது குழந்தைகளுக்கு சிறு வயதிலி ருந்தே நாம் குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுக்கிறோம். இப்படி இருக்கும் போது அரபி மொழி என்பது மிகவும் எளிமையான மொழியாகும். அரபி மொழி அறிவியல் பூர்வமான மொழியும்கூட.
மொழி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கின்றனவா?
நிச்சயமாக. ஏராளமான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால் இன்று உலகில் மூன்றில் ஒரு பகுதி அரபி பேசக் கூடியவர்களின் நாடுகளாக இருக்கின்றன. உங்களுக்கு அரபி தெரிந்தால் இத்தகைய நாடுகளில் உயர் பதவிகளுக்குச் செல்லவும் பணியாற்றவும் வாய்ப்புகள் உள்ளன. இந்தியா போன்ற நாடுகளில் கூட அரபி மொழி கற்றவருக்கு வேலை வாய்ப்பு உள்ளது. சமீப காலமாக முஸ்லிம் தொழிலதிபர்களிடம், அறிஞர்களிடம், இயக்கங்களிடம் கல்வித்தாக்கம் அதிகரித்து இருக்கிறது. அல்- பஜ்ர் இண்டர்நேஷனல் ஸ்கூல், டாக்டர் ஜாகிர் நாயக் IRF இண்டர்நேஷனல் ஸ்கூல், ஐ- மேக்ஸ் ஸ்கூல், ஆலிவ் இண்டர்நேஷனல் ஸ்கூல், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் குட்வேர்ட் இண்டர்நேஷனல் ஸ்கூல் போன்ற பல கல்விக்கூடங்கள் உதயமாகிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் அரபி மொழி கற்றால் ஆசிரியர் பணிக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
இதனால் மாணவர்கள் பயனடைகிறார்களா?
அரபி மொழி கற்றால் மாணவர்களின் வாழ்க்கை பிரகாசிக்கும். அவர்களின் இம்மை வாழ்க்கை மட்டுமன்று மறுமை வாழ்க்கையும் ஒளிமயமாய் இருக்கும். அவர்கள் அரபி மொழி கற்றால் இஸ்லாத்தை முழுமையாக அறிந்து தங்களுடைய வாழ்வைச் செம்மைப்படுத்த மிகவும் உதவும்.
அரபி மொழிக்கும் மற்ற மொழிக்கும் உள்ள வேறுபாடு என்ன?
மிகப்பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. பல மொழிகள் தோன்றிய காலத்தில் எப்படி இருந்தனவோ அப்படி இன்றில்லை.செம்மொழிகளான ஹீப்ரு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் இன்று வழக்கத்தில் இல்லை. பல மொழிகள் கடந்த 100 ஆண்டுகளில் பல மாறுதலுக்கு உள்ளாகி யுள்ளன. அரபி மொழியோ நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் எப்படி எழுதப்பட்டு இருந்ததோ அதே போன்றுதான் இன்றும் இருக்கிறது. அதே போன்று அரபி மொழியில் கலப்படம் இல்லை. நாம் தமிழில் பேசும் போது ஆங்கிலத்தையும் கலக்கிறோம் அல்லவா ….? அரபி மொழி அப்படி இல்லை. எதனைச் சொன்னாலும் அரபி மொழியில் தான் சொல்லப்படுகிறது. ஆக அரபி மொழியில் எத்தகைய இடைச் செருகலும் ஏற்படாதது அரபி மொழிக்கும் மற்ற மொழிக்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடாகும்.
தமிழ் மொழிக்கும் அரபிக்கும் உள்ள மொழியியல் ரீதியான தொடர்பு குறித்துச் சொல்லுங்கள்?
மிக அழகான கேள்வியைக் கேட்டீர்கள். ஒரு மொழிக்கும் மற்றொரு மொழிக்கும் அடிப்படையில் 3 ஒற்றுமைகள் இருக்கும். 1.ஒலி (Sound), 2.எழுத்து முறை (Writting), 3. மொழியியல் குடும்பம் (Language Relationship) குர்ஸி, மஸ்ஜித், இமாம், இக்ஸான் இத்தகைய வார்த்தைகள் அரபியிலும் உருதுவிலும் ஒரே மாதிரியாக வரும். இவை ஒலியியல் தொடர்பானவை. பார்ஸி,உருது,அரபி இவை மூன்றுக்கும் எழுத்தியல் தொடர்பு இருக்கும். இவற்றிற்கு ஒரே மாதிரியான எழுத்து வடிவம் இருக்கும்.
மொழியியல் குடும்பம் என்பது வேறு. தமிழ் மொழியை திராவிட மொழி என்கிறோம். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் இவை 4 மொழிகளும் ஒரே குடும்பவியல் மொழிகள். அதே போன்று உருது, பார்ஸி, பஞ்சாபி ஆகியன ஒரே குடும்ப மொழிகள். ஹிந்தி, சமஸ் கிருதம், பெங்காலி, மராத்தி ஆகியன ஒரே குடும்ப மொழிகள்.
ஆனால் தமிழக முஸ்லிம்களைப் பொறுத்தவரை அரபி மொழி அவர் களிடம் ஒலியியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எப்படியென்றால் அவர்கள் சிறுவயதிலிருந்தே குர்ஆனை ஓதுகிறார்கள். தொழுகையில் அரபியைக் கேட்கிறார்கள்; ஓதுகிறார்கள். ஒருவருக்கொருவர் சலாம் கூறுகிறார்கள். இன்ஷா அல்லாஹ், மாஷா அல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ் இத்தகைய வார்த்தைகள் நாம் அடிக்கடி கூறுவதால் அரபி மொழி ஒலியியல் தொடர்பை ஏற்படுத்துகிறது.
சந்திப்பு : M. முகம்மது கெளஸ்
தொகுப்பு : H. தில்ஷாத் கெளஸ்
நன்றி : சமரசம் ( 16 – 31 மே 2009 )

ரமளானின் மகிமை

ரமளானின் மகிமை

( தொகுப்பு : மவ்லவி அப்துல் காதர் ரஷாதி, புளியங்குடி )

புனிதமிகு ரமளான் மாதம் முஸ்லிம்களின் பரக்கத் என்னும் ரஹ்மத்துடைய அளப்பெரும் பொக்கிஷமாகும்.

ரமளான் மாதத்தின் முதல் இரவில் ஷைத்தான்களை விலங்கிடப்படுகிறது. நரகத்தின் தாழிட்டு சுவர்க்கம் என்னும் ரஹ்மத்தின் வாசல்களை திறந்து விடப்படுகிறது.

இப்புனிதமிகு மாதத்தின் மிகமுக்கிய வணக்கம் நோன்பாகும். நோன்பு என்றால் சுபுஹுஸாதிக் (மெய் வெள்ளை) அதிகாலையிலிருந்து சூரியன் மறையும் வரை நோன்பின் நிய்யத்துடன் உண்ணுவது, குடிப்பது, மனோ இச்சை சேர்க்கை செய்வது ஆகியவற்றிலிருந்து தவிர்த்து கொள்வதாகும்.

நோன்பு சம்பந்தமான ஹதீஸுகளில் நோன்பிருப்பதால் ஏற்படக்கூடிய பலாபலன்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக:

’’அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்போரின் முந்தைய பாவங்களனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான்’’

’’நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தை விடவும் அதிகம் மதிப்புள்ளதாகும்’’

’’நோன்பிருப்போருக்கு அல்லாஹ்வே தனது புறத்திலிருந்து நன்மையை அளிக்கிறான்’’

’’ சுவனலோகத்தில் ‘ரய்யான்’ என்னும் வாசல்வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்’’

நோன்பில்லாதவர்களுக்கு உண்டாகும் கடுமையான கொடூரமான வேதனையைப் பற்றியும் ஹதீஸில் கூறப் பட்டுள்ளன.

‘’படைத்தவன் எஜமானனாகிய அல்லாஹுத்தஆலா அவனின் (நோன்பில்லாதவனின்) இழிவான இச்செயலால் அவனை கடுமையாக வெறுக்கிறான்’’

‘’வானவர்கள் இன்னும் நல்லோர்களின் கூட்டத்தில் அவனின் இச்செயல் இழிவானது தீயது என்று ஞாபிக்கப் படுகிறது’’

‘’ரமளான் மாதத்தில் நோன்பில்லாதவன் உண்ணக் குடிக்கச் சென்ற அவ்விடம் இவன் என்மீது பாவம்புரிந்தான் என்று மறுமையில் சாட்சி பகரும்’’

எனவே முஸ்லிம்கள் ரமளான் மாதத்தின் மகிமையை உணர்ந்து அதனின் கிரியைகளை ஏற்று நடப்பது மிக அவசியமாகும். மாறாக ரமளான் மாதத்தில் ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றாது அசட்டையாகவும் பொழுது போக்காகவும் ரமளான் மாதத்தை கழித்து விட்டால் அதுவே தமது இம்மை மறுமையின் நஷ்ட வழிகேடாகும். இதனை முஸ்லிம்களாகிய நாம் உணர்ந்து செயல்படுவோமாக!

நோன்பு ஃபர்ளு கட்டாயக்கடமை

நோன்பு நோற்பது ஃபர்ளு – கட்டாயக்கடமை என்பது குர்ஆன், ஹதீஸ், இஜ்மாயே உம்மத் ஆகியவற்றால் உறுதிப் படுத்தப்பட்டதாகும்.

நோன்பு நோற்பது ஃபர்ளு – கட்டாயக்கடமை என்பதை மறுப்பவன் காஃபிர் ஆவான். தங்கடமின்றி நோன்பு வைக்காதவன் பெரும்பாவி தீயவனாவான்.

நோன்பின் நிய்யத்

நோன்பு வைப்பதற்கு நாவால்தான் நிய்யத் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்று நான் நோன்பு வைக்கிறேன் என்று மனத்தால் நிய்யத் செய்தாலே போது மானாதாகும்.

தமிழில் அல்லது அரபியில் நாவால் நிய்யத்செய்வது ஏற்றமானதாகும். நோன்பின் நிய்யத்:

நவைது ஸவ்மகதின் அன் அதாயி ஃபர்ளி ரமளானி ஹாதி ஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா

இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் ஃபர்ளான நோன்மை அதாவாக அல்லாஹுத்தஆலாவுக்காக நாளை நோற்க நிய்யத் செய்கிறேன்.

உண்ணாமல் குடிக்காமல் சேர்க்கை செய்யாமல் இருந்தும் நோன்பின் நிய்யத் இல்லையாகில் நோன்பாகாது.

நோன்பின் நேரம் சுபுஹு ஸாதிக் (மெய் வெள்ளை) அதிகாலையிலிருந்து ஆரம்பமாகின்றது. ரமளான் மாதத்தின் நோன்பின் நிய்யத்தை சுபுஹு ஸாதிக் முன்பாகவே நிய்யத் செய்வது ஏற்றமானதாகும். இருப்பினும் மதியம் உச்சத்திற்கு சிறிது நேரம் முன்பு வரையிலும் நிய்யத் செய்யலாம் கூடும். நிபந்தனையாதெனில் சுபுஹு ஸாதிகிலிருந்து சாப்பிடாமல் குடிக்காமல் உடலுறவு கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்.

ஸஹர் – நோன்புபிடிப்பது

ஸஹர் சாப்பிடுவது சுன்னத்தாகும். பசி இல்லை என்றாலும் சிறிதளவேனும் சாப்பிடவேண்டும் அல்லது தண்ணீராகிலும் குடித்துக் கொள்ள வேண்டும்.

ஸஹர் உடைய நேரம் பிற்படுத்திச் சாப்பிடுவது சுன்னத் தாகும் எனினும் ஸஹர் உடைய நேரம் கழிந்து விட்டதோ என்று நேரத்தில் சந்தேகம் கொள்ளும் அளவு பிற்படுத்தக் கூடாது.

இஃப்தார் – நோன்பு திறப்பது

சூரியன் மறைந்துவிட்டது என்று உறுதியானதற்குப்பின் உடன் நோன்பைத் திறந்துவிடுவது முஸ்தகப் ஆகும். நேரம் தாழ்த்துவது மக்ருஹ் ஆகும்.

மேகத்துடைய காலங்களில் இஃப்தார் – நோன்பு திறப்பதைத் தாமதித்தும் ஸஹர் – நோன்பு பிடிப்பதை தீவிர மாக்குவதும் அவசியமாகும்.

நோன்பு திறக்கும் நேரத்தில் தனது கடுமையான தேவை கம்மியாகும். அளவுக்கு முடிந்தால் சாப்பிட்டுக் குடித்துக் கொள்ள வேண்டும். அதனால் மக்ரிப் உடைய தொழுகை மனநிம்மதியுடன் பயபக்தியாக தொழுது கொள்வதற்கு வழி வகுக்கும்.

இமாம் மக்ரிப் உடைய தொழுகைக்கு தீவிரமாக்காமல் முக்ததி – பின்தொடரும் ஜனங்களை கவனத்தில்கொண்டு சிறிது நேரம் தாமதிக்கவும். அதனால் ஜனங்கள் நிம்மதியுடன் வாய் கொப்பளித்து ஜமாஅத்தில் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

இனிப்பான பொருளைக்கொண்டு நோன்பு திறப்பது நல்லதாகும். பேரீத்தம் பழம், தண்ணீர் அல்லது மற்றவை களைக்கொண்டும் நோன்பு திறக்கலாம். சிலர் உப்பைக் கொண்டு நோன்பு திறப்பது மிகுந்த நன்மையளிக்கும் என விளங்கிக்கொண்டுள்ளனர். அது தவறாகும்.

நோன்பு திறக்கும் துஆ

அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமன்து வஅலைக தவக்கல்து வஅலா ரிஜ்கிக அஃப்தர்து பதகப்பல்மின்னி.

’’யா அல்லாஹ்! உனக்காகவே நோன்பு வைத்தேன், உன்னைக் கொண்டே விசுவாசம் கொண்டேன், உன் மீதே நம்பிக்கை வைத்தேன், உன்னுடைய இரணம் கொண்டே நோன்பு திறக்கின்றேன் என்னுடைய நோன்பை ஏற்றுக் கொள்வாயாக!

நோன்பின் முறித்தல்கள்

1)மூக்கு அல்லது காதில் மருந்து செலுத்துவது. 2) வேண்டு மென்றே வாய்நிரம்ப வாந்தியெடுப்பது. 3)வாய்கொப்பளிக்கும் போது தொண்டையினுள் தண்ணீர் சென்றுவிடுவது. 4) கல், மண், இரும்பு போன்றவற்றை விழுங்குவது. 5) சூரியன் மறைந்துவிட்டது என தவறுதலாக எண்ணிக்கொண்டு நோன்பு திறப்பது. 6) இரவு என தவறுதலாக எண்ணிக் கொண்டு சுபுஹு ஸாதிக்குப்பின் சாப்பிடுவது. 7) பீடி, சிகரெட், குடிப்பது, வெற்றிலைப்பாக்கு சுவைப்பது. 8)அதிகம் இரத்தம் கலந்த எச்சிலை விழுங்குவது. 9) மலம் கழிக்கும் துவாரத்தில் மருந்திடுவது, பெண் சிறுநீர் கழிக்கும் இடத்தில் மருந்திட்டால் நோன்பு முறிந்துவிடும் ஆணுக்கு அல்ல. 10) பற்களின் இடரில் அகப்பட்ட மாமிசம் போன்றவைகளை வாயிலிருந்து வெளியாக்கிப் பின்னர் அதை உட்கொண்டால் நோன்பு முறிந்து விடும். வாயினுள்ளே தனது நாவால் அதனை அகற்றி அதுவும் ஒரு சுண்டல் அளவு பருமன் உள்ளதாக இருப்பின் அதை உட்கொள்வதால் நோன்பு முறிந்துவிடும். ஒரு சுண்டல் அளவைவிட சிறியதானால் நோன்பு முறியாது.

வேண்டுமென்றே நோன்பை முறித்தால் அந்தநோன்பை ‘களா’ செய்யவேண்டும். மேலும் கப்பாரா (பரிகாரமும்) வாஜிபாகும்.

நோன்புடைய கப்பாரா - பரிகாரமாகிறது.

தொடர்ந்து இரண்டு மாதகாலம் வரை 60 நாட்கள் இடைவிடாது நோன்பு நோற்கவேண்டும். இடையில் விடுபட்டுவிட்டால் திரும்பவும் 60 நாட்கள் இடைவிடாது நோன்பிருக்க வேண்டும்.

நோன்புவைப்பதற்கு சக்தியற்றிருந்தால் அறுபது மிஸ்கீன் களுக்கு காலையிலும் மாலையிலும் வயிறுநிரம்ப உணவளிக்க வேண்டும். அல்லது அறுபது மிஸ்கீன்களுக்கு ஸதகயே ஃபித்ர் உடைய அளவு அரைமரக்கால் தானியம் அல்லது தானியத்துடைய மதிப்பின் பணத்தை கொடுக்க வேண்டும்.

நோன்பை முறிக்காதவைகள்

1)மறதியாக சாப்பிடுவது, குடிப்பது, சேர்க்கை செய்வது. 2)மிஸ்வாக் பல்துலக்குவது. 3) தனது நாட்டமின்றி வாந்தி வருவது. 4) நறுமணம் நுகர்வது. 5) தனது விருப்பமின்றி தூசி, புளுதி, ஈ, கொசு தொண்டையினுள் செல்லுவது. 6) தலை மீசையின் மீது எண்ணெய் தடவுவது. 7) தூக்கத்தில் ஸ்கலிதமாவது. 8) கண்ணில் சுர்மா இடுவது, மருந்து அல்லது தண்ணீர் ஊற்றுவது. 9) எச்சில், சளியை விழுங்குவது. 10) வேண்டுமென்றே வாயநிம்பாமல் சிறிதளவு வாந்தியெடுப்பது. 11) இரவில் உடலுறவுகொண்டு சுபுஹு ஸாதிக்கு முன்பே குளிக்காமலிருப்பது. 12) இன்ஜெக்‌ஷன் – டாக்டரிடம் ஊசிமருந்து எடுப்பது. இவைகளினால் நோன்பு முறிந்துவிடாது.

நோன்பின் மக்ருஹ்கள்

1)அவசியமின்றி ஏதாவது பொருளை வாயில்போட்டு சுவைப்பது அல்லது உப்பு போன்றவைகளை சுவைத்து துப்புவது. 2) புகையிலை கொண்டு பல்துலக்குவது. 3)முழுக்குடன் குளிக்காமல் பகல் முழுவதும் கழிப்பது. 4) இரத்தம் குத்தி வாங்குவது. 5) புறம்பேசுவது அதாவது பிறரின் குறையை மறைமுகமாக பேசுவது இச்செயல் அனைத்துக் காலங்களிலும் ஹராமாகும். அதிலும் ரமளானின் காலத்தில் புறம்பேசுவது குற்றத்தை அதிகரிக்கிறது. 6) நோன்பு வைத்துக்கொண்டு ஏசி பேசி சண்டையிடுவது.

இவைகள் அனைத்தும் நோன்பின் மக்ருஹ் ஆகும். நோன்பு முறிந்துவிடாது.

நோன்பு வைக்காமலிருப்பதற்கு

அனுமதிக்கப்பட்டவர்கள்

1)வியாதியின் காரணத்தால் நோன்பிருக்க சக்தியற்றிருந்தால் அல்லது வியாதி அதிகரித்துவிடும் என்றிருந்தால் நோன்பில் லாமல் இருப்பதற்கு அனுமதி உண்டு. பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.

2) கற்பஸ்திரி நோன்பிருப்பது தனது அல்லது தன்னுடைய குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகும் என்றிருப்பின் அச்சமயம் நோன்பு நோற்காமலிருப்பதற்கு அனுமதியுண்டு பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.

3) தனது அல்லது பிறரின் குழந்தைக்கு பால் குடிப்பாட்டும் பெண் நோன்பு நோற்பதால் குழந்தைக்கு பால் குறைந்து விடும் கஷ்டம் ஏற்படும் என்றிருப்பின் அச்சமயம் நோன்பு நோற்காமல் பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.

4) பிரயாணம் செய்யும் முஃஸாபிர் (சுமார் 48 – மைல் தொலை தூரம் பயணம் செல்பவர்) நோன்பு வைக்காமலிருப் பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

பிரயாணத்தில் கஷ்டம் இடைஞ்சலில்லாமலிருப்பின் நோன்பு நோற்பதுவே ஏற்றமானதாகும். பிரயாணத்தில் தனக்கு அல்லது தன்னுடனிருக்கும் சஹாக்களுக்கு நோன்பிருப்பதினால் கஷ்டம் ஏற்படும் என்றால் நோன்பில்லாமலிருப்பதுவே நல்லதாகும்.

5) நோன்புடன் பிரயாணத்தைத் தொடர்ந்தால் அந்த நோன்பை பூர்த்திசெய்வது அவசியமாகும். பிரயாணத்தி லிருந்து நோன்பில்லாமல் சாப்பிட்டு, குடித்து ஊர் திரும்பினால் அன்றைய மீதமான நேரங்களை நோன்பைப் போன்றே இருந்து கழிக்க வேண்டும்.

6) நோன்பை விட்டு விடு என்று கொலைமிரட்டலைக் கொண்டு பயமுறுத்தப்பட்டால் நோன்பைவிட்டு விடுவதற்கு அனுமதியுண்டு. பின்னர் அதனை ‘களா’ செய்யவேண்டும்.

7) வியாதி, பசி, தாகத்தின் அதிகரிப்பால் அவரை நோட்ட மிட்ட தீன்தாரியான முஸ்லிம் வைத்தியர் அல்லது டாக்டர் உயிருக்கு ஆபத்து என குறிப்பிட்டால் நோன்பை விட்டு விடுவதற்கு அனுமதியென்ன! கட்டாயக்கடமையுமாகும். பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமுமாகும்.

8) ஹைள் – மாதவிடாய் , நிபாஸ் – பிரசவத்திற்கு பின் ஏற்படும் இரத்தம் இக்காலங்களில் பெண் நோன்பிருக்காமல் விடுபட்ட அந்த நோன்பை பின்னர் ‘களா’ செய்வது கட்டாயமாகும்.

தராவீஹின் சட்டங்கள்

புனித ரமளான் மாதத்தின் இரவுகளில் இஷாவுடைய ஃபர்ளு தொழுகைக்குப்பின் 20 ரகஅத் தராவீஹ் தொழுகை தொழுவது சுன்னத்தே முஅக்கதாவாகும். தராவீஹ் தொழுகையில் ஒரு தடவை குர்ஆன்ஷரீப் ஓதுவது அல்லது கேட்பது சுன்னத்தாகும்.

எனவே தராவீஹ் 20 ரகஅத் தொழுவது – குர்ஆன்ஷரீப் ஒரு தடவை தராவீஹ் தொழுகையில் ஓதுவது அல்லது கேட்பது ஆக இவ்விரண்டும் தனித்தனியான சுன்னத்தாகும். ஒருசில இரவுகளில் பூராகுர்ஆன்ஷரீபையும் தராவீஹ் தொழுகையில் ஓதக்கேட்டு மீதமான நாட்களில் தராவீஹ் தொழுகையை விட்டு விடுவோருக்கு ஒரு சுன்னத்தை நிறை வேற்றிய நன்மைதான் கிடைக்கும்.

குர்ஆன்ஷரீப் மனனமான ஹாபிஸ் கிடைக்காவிட்டால் அலம்தரகைப போன்ற சிறு சூராக்களை மட்டும் ஓதி தராவீஹ் தொழுகையை நிறைவேற்றிவிடலாம்.

இஷா ஃபர்ளு தொழுகைக்கு முன் தராவீஹ் தொழுகை தொழுவது கூடாது. எனவே பள்ளிவாசலில் இஷா ஃபர்ளு ஜமாஅத் முடிந்ததின் பின் வருவோர். இஷாஉடைய ஃபர்ளு தொழுகையை நிறைவேற்றிய பின்புதான் தராவீஹ் தொழுகையில் சேர வேண்டும். விடுபட்ட தராவீஹ் தொழுகையை தராவீஹ் ஜமாஅத் முடிந்ததற்குப் பின்பு தனிமையாக தொழுது கொள்ள வேண்டும்.

வித்ரு தொழுகையை தராவீஹ் தொழுகைக்கு முன் அல்லது பின் தொழுது கொள்ளலாம். எனவே தராவீஹ் தொழுகை பாக்கியுள்ளவர் வித்ரு தொழுகையை ஜமா அத்துடன் நிறைவேற்றிவிட்டு பின்னர் விடுபட்ட தராவீஹ் தொழுகையை தனியாக தொழுது கொள்ளலாம்.

தராவீஹ் தொழுகையில் குர்ஆன் ஷரீப் உடைய எழுத்துக் களின் உச்சரிப்புகள் விடுபடும் விதத்தில் மிகவேகமாக ஓதுவது பெரும்பாவமாகும். அவ்வாறு ஓதுவதால் ஓதக் கூடிய இமாமும், ஓதுவதைக் கேட்கும் முக்ததிகளுக்கும் எவ்வித நன்மையும் கிட்டாது.

ஒவ்வொரு நான்கு ரகஅத்திற்குப் பின்பும் சிறிதுநேரம் அமர்ந்திருப்பது முஸ்தஹப்பாகும். தொழுகக்கூடியவர்களின் சவுகரியத்தைக் கருதி இமாம் ருகூவு. சுஜூதுஉடைய தஸ்பீஹ்கள், ஸலவாத் போன்றவற்றை ஓதாமல் விட்டு விடுவது கூடாது.

குர்ஆன்ஷரீப் கத்தம்செய்யும் நாளில் அளவுக்கதிகமான மின் விளக்குகளைக் கொண்டு அலங்கரிப்பது போன்ற இஸ்ராப் – மேல்மிச்சமான செலவுகள் செய்வது தவிர்க்க வேண்டியவைகளாகும். இனிப்பு வழங்குவதற்கு வலுக் கட்டாயமாக பணம் வசூலிப்பதும் பள்ளியில் இனிப்பு வழங்கும் சமயம் இரைச்சலிட்டுக் கூச்சலிடுவதும் ஒன்றுக் கொன்று ஏசிப்பேசிக்கொள்வதும் மார்க்க முரணான காரியங்களாகும்.

இஃதிகாப்

புனித் ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் இஃதிகாப் இருப்பது சுன்னத்தே முஅக்கதா அலல் கிபாயாவாகும். ஊரில் ஒருவர் மட்டும் இஃதிகாப் இருந்தால் அதுவே மற்றெல்லோருடைய பொருப்பிலிருந்தும் கடமை விடுபட்டு விடுகிறது. ஒருவர்கூட இஃதிகாபில் இல்லையாகில் எல்லோரும் சுன்னத்தை விட்ட பாவிகளாகி விடுவார்கள்.

ஆண்கள் பள்ளிவாசலிலும் பெண்கள் தன்னுடைய வீட்டின் குறிப்பான ஒரு பகுதியிலும் இஃதிகாப் இருக்க வேண்டும். இஃதிகாப் உடைய நிய்யத்தும் பெண்கள் ஹைளு, நிபாஸை விட்டும் சுத்தமாக இருத்தலும் வேண்டும். இஃதிகாப் இருக்கும் காலங்களில் ஹைளு வந்துவிட்டால் அல்லது குழந்தை பிறந்துவிட்டால் இஃதிகாபை விட்டுவிடவேண்டும்.

இஃதிகாபின்போது உடலுறவு கொள்வது, முத்தமிடுவது, கட்டிபிடிப்பது கூடாது.

இஃதிகாப் இருக்கும் ஆண் தேவையற்று பள்ளிவாசலை விட்டும் பெண் தனது இஃதிகாபின் இடத்தை விட்டும் வெளியாகுவது கூடாது. தேவையில்லாமல் இஃதிகாபின் இடத்தை விட்டும் வெளியாகுவது இஃதிகாபை முறித்து விடும் செயலாகும். இதுவரை எத்தனை நாட்கள் இஃதிகாபில் இருந்தாரோ அதுமட்டும் கூடிவிடும்.

ஆம், தன்னுடைய அல்லது மார்க்கத்தின் தேவையைக் கருதி வெளிக்கிளம்புவது கூடும்.

1)தன்னுடைய தேவைக்கு வெளிக்கிளம்புவது உதாரணமாக: மலம், ஜலம், கழிப்பதற்கு வெளியாகுவது.

2)மார்க்கத்தின் தேவையைக் கருதி வெளியாகுவது உதாரணமாக இஃதிகாப் இருக்கும் பள்ளிவாசலில் ஜும்ஆ நடைபெறவில்லையாகில் ஜும்ஆ தொழுகைக்காக வேண்டி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு வெளிக்கிழம்பிச் செல்வது.

அறிந்தோ அல்லது மறதியாகவோ உடலுறவு கொள்வது இஃதிகாபை முறித்துவிடும். இதில் ஞாபக மறதியைக் கவனிக்கப்பட மாட்டாது. இஃதிகாபில் முற்றிலும் வாய்மூடி இருப்பது மக்ரூஹ் ஆகும் வீண்பேச்சில் ஈடுபடாமல் குர்ஆன் ஷரீப் ஓதுவதிலும் மற்ற வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட வேண்டும்.

நோன்பு

நோன்பு
*நம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் தூய்மை அடையும் பொருட்டு உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது விதியாக்கப்பட்டது போல, உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதியாக்கப்பட்டிருக்கிறது.
*(இவ்விதி) எண்ணப்படும் (குறிப்பிட்ட) சிலநாள்களிலே ஆகும். (அந்நாள் களில்) உங்களில் எவரேனும் நோயாளிகளாகவோ, அல்லது பயணத் திலோ இருந்தால், அவர் வேறு நாள்களைக் கணக்கிட்டு (நோன்பு நோற்று)க் கொள்ளவும். நோன்பு நோற்கச் சக்தியற்றவர்கள் அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும். ஆனால் எவரேனும் விரும்பி (கடமைக்கு மேல்) அதிக நன்மை செய்தால், அது அவருக்கு மிகச்சிறந்ததாகும். நீங்கள் (நோன்பின் பலனை) அறிந்தவர் களாக இருப்பின் நோன்பு நோற்பதே மிக்க மேலானதாகும்.
*நோன்பும் அதன் பலன்களும்
அல்லாஹ்விற்காக என்னும் தூய்மையான எண்ணத்துடன் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை உண்பது, குடிப்பது, உடலுறவு கொள்வது ஆகிய சுகங்களைத் துறப்பதற்கே நோன்பு எனப்படும். இவ்வாறு ஒவ்வோர் ஆண்டும் “ரமளான்” மாதம் முழுவதும் நோன்பு இருப்பது பருவமடைந்த ஆண் –பெண் அனைவர் மீதும் கட்டாயக் கடமையாகும்.
இந்த நோன்பினால் உடல் மட்டுமன்றி உள்ளமும் தூய்மை அடைகிறது. நோயாளிகளிடம் உணவைக் குறைத்துக் கொள்ளுமாறும், பத்தியம் இருக்குமாறும் மருத்துவர்கள் கூறுவர். ஆண்டில் பதினொரு மாதங்கள் ஓயாது உழைக்கும் குடலுக்கு ஒரு மாதம் சற்று ஓய்வு தருவதால் குடல் சுத்தமாகி நோய்கள் அகலவும், உடல் ஆரோக்கியம் பெறவும் வழிபிறக்கிறது. ஆண்டு முழுவதும் உடலில் தேங்கும் அசுத்தத்தை நீக்கி உடலைத் தூய்மைப்படுத்துகிறது நோன்பு.
நோன்புக் காலங்களில் பசி, தாகம், காமம் ஆகிய உணர்வுகளை சகித்துப் பழகுவதன் மூலம், இதர நாள்களிலும் தீமைகளை விட்டகன்று, தூய்மை அடைய நோன்பு ஒரு பயிற்சிக்களமாக விளங்கு கிறது. வாழ்க்கையில் ஒரு நாளும் பசியை உணர்ந்திராதவர்கள் கூட, பசிக்கொடுமையை அனுபவ ரீதியாக உணரவும், ஏழை எளியோர் மீது இரங்கவும் நோன்பு வழிவகுக்க்கிறது.
இதற்கெல்லாம் மேலாக உண்ணஉணவிருந்தும், பருகப்பானமிருந்தும் அனுபவிக்க அருகில் மனைவி இருந்தும் அல்லாஹ்வின் கட்டளைக் காக அவற்றையெல்லாம் துறக்கும் பொழுது, மனிதனின் பக்தியும், இறையச்சமும் மேலோங்க இந்த நோன்பு காரணமாகிறது.
இவ்விதம் உடல் ஆரோக்கியம், மனக்கட்டுப்பாடு, இரக்கம், இறையச்சம் ஆகிய உயர் பண்புகளின் மூலம் மனிதன் தூய நிலையை அடைய இந்த நோன்பு காரணமாகிறது. எனவேதான் “நீங்கள் தூய்மை அடையும் பொருட்டு உங்கள் மீது நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. என்று இறைவன் இங்கே சுட்டிக்காட்டுகின்றான்.
அதே நேரத்தில் நோன்பு நோற்றுக் கொண்டே பொய்,புறம்,கோள் மற்றும் தீய பேச்சுகளிலும், தீய செயல்களிலும் ஈடுபடுவோரின் நோன்புக்கு இறைவனிடம் மதிப்பு இல்லை. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள் ‘வீண் பேச்சுகளையும், வீணான செயல் களையும் கைவிடாத ஒருவர், தன் உணவையும் பானத்தையும் கை விடுவதில் அல்லாஹ்விற்கு எத்தேவையும் இல்லை.
இன்றும் பழைய மதத்தார் இடையே நோன்பு நோற்கும் வழக்கம் காணப்படுகிறது. எனினும் அது இஸ்லாமிய நோன்பு போன்று மிகுந்த பயன் தரும் முறையில் அமையவில்லை. துக்கம் அனுஷ்டிக்கவும், போரில் வாகை சூடவும், சோதனையிலிருந்து மீளவும் வேண்டி துறவிகள் மேற்கொள்ளும் ஒரு சடங்காக யூதர்கள் நோன்பைச் சுருக்கிக் கொண்டு விட்டார்கள்.
*நோன்பு நோற்கச் சக்தியற்றோருக்கு பரிகாரம் –ஃபித்யா
நோன்பு நோற்க முடியாத நிலையில் உள்ள முதியோர், ஒரு நோன்புக்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் விடுபட்ட ஒவ்வொரு நோன்புக்கும் பதிலாக 1600 கிராம் கோதுமை, அல்லது அரிசி, அல்லது கோதுமையின் கிரயத்தை ஏழைகளுக்கு தர்மம் செய்து விடவேண்டும். அல்லது ஒவ்வொரு நோன்புக்கும் பதிலாக ஓர் ஏழைக்கு இருவேளை நடுத் தரமான உணவு அளித்திட வேண்டும். இது இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்களின் கருத்தாகும். இமாம் ஷாஃபீ (ரஹ்) அவர்களின் கூற்றுப்படி ஒரு நோன்புக்கு 2150 கிராம் வீதம் விடுபட்ட ஒவ்வொரு நோன்புக்கும் கோதுமை அல்லது அரிசி வழங்க வேண்டும்.
இவையெல்லாம் குறைந்தபட்ச அளவைக் குறிப்பதாகும். விரும்பு வோர் இந்த அளவைவிட அதிகமாக வழங்கலாம். மேலும் ஓர் ஏழைக்கு மட்டுமன்றி பல ஏழைகளுக்கும் அளிக்கலாம். நடுத்தரமான உணவை விடுத்து, உயர் தரமான உணவையும் வழங்கலாம். இவ்விதம் கூடுதலாக கொடுப்பது சிறந்ததாகும் என அல்லாஹ் கூறுகின்றான்.
நோன்பு நோற்க சக்தியற்றோர் இவ்வாறு ஃபித்யா – பரிகார தர்மம் செய்யலாம். என்றாலும் கூட, சிரமத்தைச் சகித்துக் கொண்டு நோன்பு நோற்று விடுவதே மேலான செயலாகும் என நோன்பின் மாண்பை இறைவன் அரிவிக்கிறான்.
*’இஃதிகாஃப்’ தொடர்பான சட்டம்
இஃதிகாஃப் என்பதற்குப் பொதுவாக தங்கியிருத்தல் என்பதே பொருளாகும். ஆயினும் இஸ்லாமிய வழக்கில் குறிப்பிட்ட சில வரை முறைகளுடன் மஸ்ஜிதுகளில் – இறையில்லங்களில் தங்கி வழிபாடு கள் செய்வதற்கே இஃதிகாஃப் எனப்படும்.
ரமளான் மாதம் கடைசிப்பத்து நாள்களில் நோன்புநோற்று மஸ்ஜிதில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். நோன்பு திறந்த பின் உண்பது, பருகுவது, உடலுறவு கொள்வது முதலியவை மற்றவர் களுக்குக் கூடும். ஆனால் இஃதிகாஃபில் இருப்பவர் நோன்பு திறந்த பின்னர் உண்ணவும் பருகவும் செய்யலாம்; உடலுறவு கொள்ளக் கூடாது என்ற வரைமுறை உண்டு.
இதேபோல இயற்கைக் கடன்கள் மற்றும் மார்க்கத் தேவைகளுக்காக வேண்டியே தவிர, அவர் மஸ்ஜிதிலிருந்து வெளியேறக்கூடாது. இவ்வாறு ஆண்டில் ஒருமுறை மஸ்ஜிதில் தங்கியிருந்து இறைவழி பாட்டில் ஈடுபடுவதால் மனிதனுக்கு மன அமைதியும், மனத்தூய்மை யும் கிடைக்கும். இறைநெருக்கத்தைப் பெறவும் வழியேற்படும். தனக்கும், தன் குடும்பத்தார், சமூகத்தார், தேசத்தார் ஆகியோருக்கும் இறைவனிடம் சிறப்பாகப் பிரார்த்திப்பதற்கு மனிதன் இதன் மூலம் அரியதோர் வாய்ப்பைப் பெறுகிறான்.
அவன், தான் நாடுகின்றவர்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றான். (அப்படி) ஞானம் கொடுக்கப்பெற்றவர் அபரிமிதமான நன்மை கொடுக்கப் பெற்றவராவார். (ஆனால்) அறிவாளிகள் தவிர (வேறு எவரும்) இதனை உணர்வதில்லை.
(நீங்கள் தர்மம் செய்ய விழையும் போது) ஷைத்தான் வறுமை குறித்து உங்களை அச்சுறுத்தி (கருமித்தனம் போன்ற) தீமைகளைக் கொண்டு உங்களை ஏவுகிறான். ஆனால் அல்லாஹ்வோ தன்னுடைய மன்னிப்பையும், உதவியையும் உங்களுக்கு வாக்களிக்கின்றான். .அல்லாஹ் தாராளமானவனும் அறிவோனுமாவான்.
*வறுமையைக் காட்டி மிரட்டும் ஷைத்தான்:
தர்மம் செய்யத் தொடங்கினால் “நாம் தர்மம் செய்து ஏழையாகி விடுவோமோ” என்று மனிதன் எண்ணுவதுண்டு. இது ஷைத்தான் தூண்டுகிற எண்ணம் என இறைவன் எச்சரிக்கின்றான். இறைவழியில் செலவு செய்து கொண்டே போனால், இறுதியில் வறிய நிலைக்குத் தள்ளப்படுவாய் என்று அச்சுறுத்தும் ஷைத்தான், கருமித்தனம் மற்றும் பேராசை போன்ற தீய பழக்கவழக்கங்களை மேற்கொள்ளுமாறே தூண்டி விடுவான். ஆனால் அல்லாஹ்வோ “நீங்கள் அறம் செய்யுங்கள்; உங்களின் பிழைகளைப் பொறுக்கின்றேன். மேலும் உங்களுடைய தொழிலில் முன்னேற்றத்தை அருள்வேன்” என வாக்களிக்கின்றான் எனவும் திருமறை சுட்டுக் காட்டுகிறது.

நன்றி : நர்கிஸ் மாத இதழ் – செப்டம்பர் 2008

பள்ளிவாசல் ‘மினாரா’ பேசுகிறேன்!

பள்ளிவாசல் ‘மினாரா’ பேசுகிறேன்!

(ஆக்கம்: மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0822-the-holy-call-from-minaret.html
http://www.mudukulathur.com/religiondetails.asp?id=147

என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே! என்னைப் பற்றிய அறிமுகம் அவசியமில்லையென்றாலும் சிலவற்றை கூறாமல் இருக்க முடியாது. என்னைத் தெரியாதவர்கள் உலகில் யாருமே இருக்க வாய்ப்பில்லை. அந்தளவுக்கு நான் மிகவும் பிரபலமானவன். எனது கம்பீரத்திற்கு இணையாக உலகில் வேறு எதையும் நீங்கள் கண்டிருக்கமாட்டீர்கள் எனபதை தைரியமாக சொல்வேன்!
என்னடா இது, மினாரா ஆணவப் போதையில் உளறுகிறது என நீங்கள் நினைத்தாலும் எனக்கு கவலையில்லை. நீங்கள் தரையில் நின்று கொண்டு எனது உச்சந்தலையை பார்த்தால் நான் வானத்தை உரசிக்கொண்டு நிற்பது போன்றதொரு மனப்பிரம்மை உங்களுக்குத் தோன்றும். நான் வானத்தை உரசி நிற்கவில்லையென்றாலும், வானத்தின் எல்லாப் பகுதிகளிலும் எனது அசைவுகள் எதிரொலித்துக் கொண்டேயிருக்கும்.
இவ்வளவு சிறப்புகளும் எனக்கு எங்கிருந்து வந்த்தென ஆச்சர்யப்பட வேண்டாம். உங்களையும், என்னையும் படைத்த இறைவனை வணங்குவதற்கு வாருங்கள் என ‘அதான்’ என்னும் பாங்கின் மூலம் எல்லோரையும் அழைக்கக்கூடிய பணியை நான் தான் செய்து வருகிறேன். அதனால் தான் இறைவன் எனக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்தை தந்துள்ளான்.
சுவனத்தின் தோழர்களில் ஒருவரான ஹழ்ரத் பிலால் ( ரலி ) அவர்களே, என் முதுகில் ஏறி நின்று பாங்கு சொன்னதால் இன்னும் எனக்கு பெருமை கூடிவிட்ட்து. நான் கொடுக்கும் சப்தம் வான் மண்டலம் முழுவதும் எதிரொலிப்பது உங்களுக்குத் தெரியுமா?. தெரியாவிட்டால் அறிவியல் ஆய்வாளர் ஆம்ஸ்ட்ராங்கை கேட்டுப் பாருங்கள். அவர் ஒரு முறை சந்திரமண்டலத்தில் கால் வைத்த போது எனது சப்தத்தை கேட்டு திடுக்கிட்டவராக பூமியில் சொல்லப்படும் பாங்கின் ஓசை சந்திர மண்டலம் வரைக்கும் எதிரொலிக்கிறதே என வியப்படைந்தவராக பூமிக்கு திரும்பியதும் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.
இஸ்லாத்தின் தீர்க்க தரிசியாம் நமதருமை நாயகம் ( ஸல் ) அவர்களுக்கு அடுத்தபடியா முதன் முதலில் சந்திர மண்டலத்தில் கால்பதித்த சிறப்பையும் பெற்றவர்தான் ஆம்ஸ்ட்ராங். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கு நான் கொடுத்த சப்தமும் ஒரு காரணம் எனபதை நினைக்கும் போதெல்லாம் எனக்குள் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும். உலகம் எப்போது அழியுமோ? அப்போது தான் எனக்கும் மரணம் நிகழும். இடையிடையே நான் நோய்வாய்ப்பட்டுவிட்டால் (பழைய மினாராகிவிட்டால்) என்னை குணப்படுத்தும் வகையிலேயே இடித்துவிட்டு மீண்டும் அதே இட்த்திலேயே உயிருடன் எழுப்பி விடுவார்கள். அப்போது சில அடிகள் நான் வளர்ந்துமிருப்பேன்.
இப்படி என் சிறப்பைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். என்னை ஒரு கல்லாக பார்ப்பவர்களுக்கு எனது வரலாறு தெரியாது!. இன்னொரு கோணத்தில் பார்த்தால் நானும் ஒரு வகையில் தியாகி தான். உங்களை இறையாடியார்களாக மாற்றும் மிகப்பெரிய பொறுப்பை நான் செய்து வந்தாலும் உலக முடிவிற்குப் பிறகு நீங்களெல்லாம் மீண்டும் உயிர் கொடுக்கப்படுவீர்கள். ஆனால் நான் உயிர் கொடுக்கப்படாமலேயே போய் விடுவேன்.
எனது அழைப்பை செவிமடுத்து ஐந்து வேளை தொழுகையையும் இமாம் ஜமாஅத்துடன் தொழுதுவரும் நீங்கள் நல்லோர்களாகும் பட்சத்தில் சுவர்க்கம் சென்று விடுவீர்கள். ஆனால் நான் எதுவுமே இல்லாமல் நிராதரவற்றவனாகிவிடுவேன்.
ஒருவகையில் உலகம் அழியும் வரைக்கும் நான் மட்டுமே நீண்ட ஆயுளுடன் வாழ்வேன் எனபதை நினைக்கும் போது மனதிற்கு மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாகவே உள்ளது. என் இனிய சொந்தங்களே, எவ்வளவு தான் கஷடப்பட்டாலும் நல்ல விஷயங்களுக்கு துணை நின்றாலும் மண்ணில் உருவான எனது இறுதி முடிவு சல்லிக்காசுக்கு கூட தேறாது!. மறுமையில் மண்ணிற்கு மதிப்பில்லை என்பதை நன்கறிவேன். எனக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட அறிவுள்ள உங்களுக்குத் தெரியாமல் போனதேன்?. அதனால் தானே ஒரு சாண் அளவானாலும் அடுத்தவரின் இடத்தை (நிலத்தை) அபகரித்துக் கொள்ளத் துடிக்கிறீர்கள்.
எனதருமை நண்பா!. ஓ ……………காதர் பாய் உங்களைத்தான் கூப்பிடுகிறேன் என்ன சௌக்யமா இருக்கீங்களா!. அடேங்கப்பா போன வருஷம் ரமலானில் பார்த்தது. அந்த வருட பெருநாள் தொழுகைக்குப்பின் இப்போதுதான் உங்களை பார்க்க முடிகிறது. அதுவும் நான் பாங்கு சொல்வதற்கு முன்பே பள்ளிக்கு வந்து விட்டீர்களே, எதுவும் விசேஷமா? என நான் கேட்டு முடிப்பதற்குள் காதர் பாய்க்கு கோபத்தில் மூக்கு வியர்த்து விட்டது.
ஓ… அறிவு கெட்ட மினாராவே, நான் போன வருஷ ரம்ஜான் பெருநாள் தொழுகைக்குப் பின் நீ இருக்கும் திசை பக்கமே வரவில்லை என்றாயே?. எவ்வளவு பெரிய பொய்யை சொல்கிறாய்!. அதற்கடுத்து வந்த பக்ரீத் பெருநாள் தொழுகைக்கு நான் வந்ததை நீ மறந்து விட்டாயா?.
நான் எப்போதும் வளமையாக வருடத்தின் இரண்டு பெருநாள் தொழுகைக்கும் ரமலானின் முழுமாத இரவு தொழுகைக்கும் விசேஷமாக பள்ளிக்கு வந்திடுவேன் என்பதை கூடவா மறந்து விட்டாய்?. நோன்பு மாத்த்தில் உன் குரல் கேட்பதற்கு முன்பே நான் பள்ளிக்குள் நுழைந்தால் தானே, முதல் வரிசையில் நின்று தொழ வாய்ப்பு கிடைக்கும் என ( NON STOP ) இடை நிறுத்தமில்லாமல் தொடர்ந்து கொட்டி தீர்த்து விட்டார் காதர் பாய்!.
ஆனாலும் நான் விடவில்லை ஏன் காதர்பாய் வருஷம் முழுவதும் ஒரு வக்து தொழுகையை கூட விடாமல் தொடர்ந்து இமாம் ஜமாஅத்தின் முதல் வரிசையில் நின்று தொழுதுவரும் நல்லோர்களுக்கு சங்கை மிகும் ரமலானில் மட்டும் முதல் வரிசையில் நின்று தொழ முடியாமல் போகும் வகையில் சீசன் தொழுகையாளியான நீங்கள் இடையூறு செய்வது எந்த வகையில் நியாயம்? என நானும் விடாமல் துரத்தினேன்.
உங்களுடன் போன வருஷம் நோன்புக்கு மட்டும் தொழ வந்த உங்கள் கூட்டாளி கனிபாய் எங்கே? வெளிநாடு போய்விட்டாரா? இந்தக் கேள்வியை நான் கேட்ட்தும் காதர் பாயின் முகம் வாடிவிட்டது. என் நண்பர் கடந்த ஷஃபான் மாதம் மௌத்தாகிவிட்டார் எனக் கூறி கண் கலங்கினார். பரவாயில்லை காதர்பாய் உங்கள் நண்பரின் மறைவு உங்களுக்கு பேரிழப்புதான் என்றாலும் சராசரியாக நாளொன்றுக்கு ஒரு மய்யித்து வீதம் நான் பார்த்து வருவதால் எனக்கு அதில் வருத்தம் எதுவும் கிடையாது!.
ஆனாலும் சீசன் தொழுகையாளி என்ற குற்றப் பின்னணியுடன் மௌத்தாகிவிட்டாரே என்ற அனுதாபம் மட்டுமே எனக்குள் வந்து போகிறது. கடந்த வருட ரமலானில் நான் பார்த்த எத்தனையோ நபர்களை இவ்வருட ரமலானில் பார்க்க முடியவில்லை காதர்பாய்!.
ஏதோ உங்களைப் போன்ற ஒரு சில சீசன் நேர தொழுகையாளிகளை மட்டுமே இவ்வருட ரமலானில் காண முடிகிறது!
கல்லாக நிற்கும் நானே எனது இறைவனுக்கும் கடமையை பேணுதலோடு செய்து வரும் போது மனிதனாய் இருக்கும் நீங்கள் சீசன் காலத்து தொழுகையாளியாய் (வேடந்தாங்கல் பறவை போல் ) இருப்பது வெட்கம் இல்லையா? என்னை வணங்குவதற்கேயன்றி உம்மை படைக்கவில்லையென ஓராயிரம் முறைக்கு மேல் கூறியுள்ள இறைவனின் கூற்றுகள் உமது செவிகளுக்கு உறைக்கவில்லையா?
ஆட்சியாளர்களின் பார்வையில் நிரந்தர ஊழியர்களும், தற்கால பணியாளர்களும் எப்படி சம அந்தஸ்தை பெற முடியாதோ? அதே போலத்தான் இறைவனின் பார்வையிலும் நிரந்தர தொழுகையாளிகளும், சீசன் காலத்து தொழுகையாளிகளும் சமநிலையை அடைய மாட்டார்கள்.
கல்லும், மண்ணுமாகவுமிருக்கிற நானே இவ்வளவு கேவலமாக பேசியதற்குப் பிறகும் ரோசமுள்ள மனிதர்களான நீங்கள் இவ்வருட நோன்பிலிருந்தாவது நிரந்தரமான தொழுகையாளிகளாய் வாழும் காலம் வரை தொழக்கூடிய நிலைக்கு உங்களை மாற்றிக் கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். அடிக்க, அடிக்க அம்மிக் கல்லும் நகரும் என்பது போல நானும் தொடர்ந்து ஐந்து நேரமும் உங்களை தொழுகைக்கு வாருங்கள் என அழைத்துக் கொண்டேயிருப்பேன்! நீங்கள் தொழ வர வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, உங்களுக்கு தொழ வைக்க வேண்டும் என்பதற்காக அல்ல!.
( மௌலவி ஜஹாங்கீர் அரூஸி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர். தற்பொழுது துபையில் பணியாற்றி வருகிறார். மின்னஞ்சல்: sjaroosi@yahoo.com)

மனக்குமுறலை எழுதியவன் பேசுகிறேன் !

மனக்குமுறலை எழுதியவன் பேசுகிறேன் !
என் இதயங்கவர்ந்த வாசகர் நெஞ்சங்களே, உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் நல்லருள் நிலவிட பிரார்த்தனை செய்தவனாக துவங்குகிறேன்…. நான் எழுதிய “ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல்” கட்டுரையை படித்துவிட்டு நீங்கள் கொடுத்து வரும் ஆலோசனை களையும், நல்லாதரவையும் எண்ணி பெருமிதம் கொண்டவனாக இறைவனுக்கு நன்றி சொல்கிறேன் !
எனது நெருக்கமான நண்பர் ஒருவர் தம் பிரச்சனையை என்னிடம் சொன்னதைத் தான் உங்களிடம் கட்டுரையாய் சமர்ப்பித்துள்ளேன். நான் சொல்லியுள்ள விஷயங்கள் தனிப்பட்ட ஒருவரின் விஷயமாக பார்க்காமல் ஒரு சமூக கண்ணோட்டத்துடன் பார்த்ததால் உருவானதே இந்தக் கட்டுரை !
இதை மிகவும் நிதானமாக படித்துவிட்டு ஒவ்வொரு வாசகரும் அவரவர் தம் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்ட விதம் குறித்து என்னவென்று சொல்வேன்? எவ்வளவு அற்புதமான கருத்துக்கள். சமூகத்தின் மீது கவலை கொண்ட நிறைய பேர் பாதிக்கப் பட்ட நண்பரின் நிலை குறித்து தங்கள் கண்கள் குளமானதாகவும், அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென புரியவில்லையென்றும் கூறினர்.
சில வாசகர்கள் கட்டுரைக்குரிய நபர் இந்துவா? முஸ்லிமா? கிறிஸ்டினா? என்றெல்லாம் கேட்டனர். காரணம் நான் அவரின் மதத்தை அடையாளப்படுத்தவில்லையாம் ! பிறப்பால் மனிதனாகவும், பேசும் மொழியால் தமிழனாகவுமே நான் அவரை பார்த்ததால் மதத்தை இங்கு குறிப்பிடவில்லை என அந்த வாசகர்களுக்கு பதிக் கூறினேன்.
உங்கள் கட்டுரை காலத்திற்கேற்ற கண்ணாடி ! என் கணவரின் நிலையும் அப்படித்தான் உள்ளது உரிமைகளையும், உணர்ச்சிகளையும் இழந்தவளாய் நான் பரிதவிக்கிறேன். தயவுசெய்து என் கணவரின் பார்வைக்கு உங்கள் கட்டுரையை அனுப்புவீர்களா? எனக்கேட்டு அவரது கணவரின் மின்னஞ்சல் முகவரியையும் நமக்கு கொடுத்தார் மதுரையைச் சேர்ந்த பெண் வாசகி ஒருவர். அவர் விருப்பப்படியே நமது கட்டுரையை சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பி வைத்தோம் !
காரைக்கால் நண்பர் அமீருத்தீன் தொலைபேசி வாயிலாக நம்மை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட நபர் இனியும் இங்கே இருப்பதில் அர்த்தமில்லை. அவர் உடனே கேன்சலில் ஊர் போகட்டும் ஊரில் போய் அவருக்கு தெரிந்த தொழில் எதையாவது செய்து கொண்டு மனைவியுடன் மகிழ்வோடு வாழட்டும். தொழில் செய்ய என்னால் இயன்ற பொருளாதாரத்தை செய்யவும் தயார் எனக் கூறியதை கேட்டதும் அவரது அளவு கடந்த மனிதாபிமானத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.
வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் ஊருக்கு செல்லும் ஒவ்வொரு மனிதனும் அளவுக்கு மீறிய வகையில் சாமான்களை கட்டிக் கொண்டு பெட்டி, பெட்டியாய் இறக்குவதால் தான் ஊரில் இருக்கும் பெண்களுக்கு இங்கு படும் நம்மவர்களின் கஷ்டங்கள் தெரிவதில்லையென்றும், ஒரு முறை பொருள் கொடுத்து எப்போது பிரச்சினை வந்ததோ? அப்போதே கட்டுரைக்குரிய நபர் சுதாரித்திருக்க வேண்டாமா? தொடர்ந்து அதே தவறை செய்தது அவரின் அறிவீனத்தையே காட்டுகிறது. என விமர்சனம் செய்தார் கடைய நல்லூர் பாரூக்.
இவரது கூற்றிலும் உண்மை இருக்கவே செய்கிறது. அதிக சம்பளம் பெறுபவரும் சாமான்களுடன் தாயகம் செல்கிறார். குறைந்த சம்பளம் பெறுபவரும் சாமான்களுடன் தான் ஊர் போகிறார். ஆக வெளிநாட்டிலிருந்து ஊர் செல்லும் எல்லோருமே பெட்டி, பெட்டியாய் சாமான்கள் வாங்கி செல்லும்போது பெண்களின் பார்வைக்கு அனைவரும் சமமாகவே தெரிகின்றனர். அதனால் தான் பக்கத்து வீட்டு ரேவதிக்கு அதிக சம்பளம் பெறும் அவள் புருஷன் பத்தாயிரம் ரூபாய்க்கு தங்க வேட்டை புடவை வாங்கி கொடுத்ததால் ரேவதிக்கு அவள் புருஷன் வாங்கி கொடுத்த அதே புடவையை எனக்கும் வாங்கி அனுப்புங்கள் என்று மிக குறைந்த சம்பளம் பெறும் தம் புருஷனுக்கு போன் மூலம் விண்ணப்பிக்கிறாள் ராக்காயி ஆக வெளிநாட்டு சாமான்கள் மீதான மோகம் ஒட்டுமொத்த பெண்களை யும் வாட்டி வதைப்பது எதார்த்தம். இதற்கு முழுபொறுப்பும் உழைப் பாளிகளாகிய நாம் தான் !
மாண்புமிகு மக்களவை உறுப்பினர் ஒருவர் டெல்லியிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களது கட்டுரையை மின்னஞ்சல் மூலம் படித்து மிகவும் வேதனை அடைந்தேன். இந்த நிலை ஒருவருக்கு மட்டுமே சொந்தமானதல்ல பல பேரின் எதார்த்தமும் அதுவாகவே உள்ளது. அருமையான கருத்துக் களை காலம் அறிந்து சமூக அக்கறையுடன் கொடுத்துள்ளீர்கள். சம்பந்தப்பட்ட நபரின் பிரச்சினைகள் தீர அவர் தாயகம் செல்வதுதான் சிறந்தது. அவர் வாழ்க்கை வளம்பெற எல்லோரும் பிரார்த்திப்போம் எனக் கூறியதையும் இங்கே பதிவு செய்கிறேன்.
பிரச்சினைக்குரிய நபர் உணர்ச்சி வயப்பட்டு கேன்சல் செய்து விடாமல் குழந்தையில்லா தமது சூழ்நிலையை அவரது கம்பெனி நிர்வாகத்திடம் எடுத்து சொல்லி ஐந்தரை மாதம் நீண்ட கால விடுமுறை வாங்கி ஊர் செல்வது தான் நல்லது என்றார் வேலூர் ராஜேஸ் கண்ணன்.
ஒரு மனிதன் இறந்த பின்பும் அவனை அடையாளப்படுத்துவது அவனது வாரிசே ! அதனால் குழந்தையின்மையை தவிர்க்க உடனடியாக அவர் கேன்சலில் ஊர் செல்லட்டும். கடவுள் பாக்கியத்தால் அவரது எல்லா காரியங்களும் கை கூடிய பிறகும் அவர் துபாய் வர ஆசைப்பட்டால் நானே எனது நண்பரின் கம்பெனியில் நல்ல சம்பளத்திற்கு வேலையில் சேர்த்து விடுகிறேன் எனக்கூறிய தஞ்சை ஜவஹரின் மனிதநேய சிந்தனையை என்னவென்று சொல்வது?
பொதுவாக அமீரக வாழ்க்கை என்பது சிலருக்கு வேண்டுமானால் சோலைவனமாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானோர்க்கு பாலைவனமாகவே இருக்கிறது. தற்போதைய பொருளாதார மாற்றத்தால் குடும்பத்துடன் இருப்பவர்களுக்கும் பல பிரச்சினைகள் உள்ளன. குடும்ப வசதிக்காக எடுத்த லோன் மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியால் ஒவ்வொருவரும் செய்வதறியாது திகைத்து நிற்கிறோம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் மிஞ்சுவது ‘0’ பூஜ்ஜியமே ! அதனால் பிரச்சினைக் குரிய நண்பர் தாயகம் செல்வதுதான் சரியானதாக இருக்கும். என்றார் முகவை தைய்யூப் அலி,
உங்கள் கட்டுரையை படித்ததும் ‘ஷாக்’ காகி விட்டேன். காரணம் நானும் தற்போது திருமணம் முடிந்து 55 வது நாளிலேயே துபாய் வந்து விட்டேன். நிச்சயம் உங்கள் கட்டுரை எனக் கொரு எச்சரிக்கை மணியாக இருக்கும் எனக் கருதுகிறேன். உங்கள் நண்பர் எதைப் பற்றியும் யோசிக்காமல் இறைவன் மீது நம்பிக்கை வைத்து கேன்சலில் ஊர் செல்வது தான் சிறந்தது எனக்கூறி நம்மை வியப்படைய வைத்தார் ஏர்வாடி சுல்தான். பிழைப்புத்தேடி வெளிநாடு செல்லும் ஒவ்வொருவரும் ஆரம்பத்திலிருந்தே தனக்கென்று ஒரு சேமிப்பை உருவாக்கி இருந்தால் இந்த நண்பரைப் போல கவலைப்பட வேண்டிய அவசியமே இருக்காது ! என சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்திய பரமக்குடி தர்மலிங்கத்தின் கருத்து பாராட்டிற்குரியது தான் ! திருமணம் முடித்து வந்து முதல் முறையாக விடுமுறையில் ஊர் சென்ற திருநெல்வேலியை சேர்ந்த எனது நண்பன் தன் மனைவிக்காக ஒரு மொபைல் போன் வாங்கியவுடன் உனக்கென்று தனியாக போன் வாங்கிவிட்டேன் இனிமேல் நீயும் நானும் சுதந்திரமாக பேசிக் கொள்ளலாம் என்று மனைவியிடம் உற்சாகமாக கூறினான். ஆனால் ஊரில் போய் பார்சலை பிரித்ததும் நண்பனின் அக்கா மகன் போன் சூப்பர் மாமா நான் எடுத்துக் கொள்கிறேன் எனக்கூறிவிட்டு நண்பனின் சம்மதமே அவசியமில்லாதது போல் சிட்டாய் பறந்து விட்டான் மருமகன். இவற்றை யெல்லாம் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த என் நண்பனின் மனைவியுடைய முகம் வாடிப்போய் கண்ணில் தூசி விழுந்ததைப் போல கண்ணை கசக்கிக் கொண்டு தன் ஆற்றாமையை அழுது தீர்த்துக் கொண்டாள். என்ற தகவலை கேட்கும் போது கிட்டத்தட்ட பெரும்பாலானவர்களின் நிலையும் இப்படித்தான் உள்ளது என யூகிக்க முடிகிறதென்று நீண்ட விளக்கம் கொடுத்தார் கீழக்கரை உசேன், பிரச்சினைக்குரிய நண்பர் திடீரென்று ஊர் போய் என்ன செய்ய முடியும்? 15 ஆண்டுகள் குடும்பத்திற் காக உழைத்தவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் அவருக்காகவும் அவரது மனைவிக் காகவும் ஏன் உழைக்கக்கூடாது? கையில் கொஞ்சம் பணமாவது சேர்த்துக் கொண்டு ஊர் போனால் தானே, ஒரு பெட்டிக்கடை வைத்தாவது பிழைத்துக் கொள்ளலாம். அதனால் அவசரப்பட்டு முடிவெடுக்காமல் தற்போது விடுமுறையிலேயே ஊர் செல்லட்டும் என்றார் கீழக்கரை நசீர் சுல்தான், இவ்வளவு தியாகம் செய்தும் கூட குடும்பத்தார் புரிந்து கொள்ளவில்லையென்றும், தன்னை மதிப்பதில்லையென்றும் கூறும் நண்பர் இன்னும் ஏன் கூட்டுக் குடும்பத்தை விரும்புகிறார்? பேசாமல் தனிக் குடித்தனம் போவதே புத்திசாலித்தனம் எனக்கூறிய காயல்பட்டினம் நிஜாமின் கருத்தையும் உள்வாங்கி கொண்டேன். உயிருள்ளவரை பெற்றோர்களை பேணுவது காலத்தின் கடமையாகும். அதே நேரத்தில் நம்மை நம்பி வந்துள்ள மனைவிக்குரிய கடமையையும் நாம் செய்தாக வேண்டும். இந்த நேரத்தில் கேன்சலில் ஊர் போய் எவ்வளவு வருவாய் ஈட்டுகிறாரோ? அதில் சிலதை பெற்றோர்க்கும் மிகுதியை துணைவிக்குமாய் பங்கீடு செய்து கொண்டு ஆனந்தமாய் வாழலாமே ! என மிகவும் பொறுப்புடன் கூறினார் முதுவை சம்சுதீன் சேட், 15 வருட பிரச்சினை என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது ! இன்னுமா அவர் துபாயில் இருக்க ஆசைப்படுகிறார்? கேட்கவே கொடுமையாக இருக்கிறது என கோபப்பட்டார் நாமக்கல் பரமசிவன். உங்களின் கட்டுரையை படித்துவிட்டு எனக்காக நான் அழுவதா? அல்லது உங்கள் நண்பருக்காக அழுவதா? எனத் தெரியவில்ல சார், உண்மையாகவே நான் அமீரகம் வந்து 20 ஆண்டுகளாகிவிட்டன. கிட்டத்தட்ட உங்கள் கட்டுரை எனது வாழ்க்கையைத்தான் படம் பிடித்து காட்டி விட்டதோ? என நினைக்கத் தோன்றுகிறது. மற்றவர் கண்களை மூடுவது உறக்கத்திற்காக ! ஆனால் நான் கண்களை மூடுவது என் கண்ணீர்த்துளிகளை நிறுத்துவதற்காக ! எங்களைப் போன்றோர்களின் நிலை மற்றவர் களுக்கு விழிப்புணர்வை கொடுக்கட்டும் ! உங்கள் கட்டுரையின் மூலம் நானும் ஒரு தெளிவான முடிவுக்கு வந்து விட்டேன். எனக்கூறி என்னை நிலை தடுமாற வைத்து விட்டார் பாண்டிச்சேரி முருகேசன், இலங்கையில் நடந்து வரும் எமது மக்களின் துயரங்களை நினைத்து வருந்துவதா? அல்லது உழைப்பாளியின் மனக் குமுறலைப் பார்த்து வேதனைப்படுவதா? எனத் தெரியவில்லை ! இது போன்ற அவலங்கள் எமது மக்களை விட்டு நீங்க இறைவனைத்தான் கேட்கனும் என மழலைத் தமிழில் வருத்தத்துடன் பேசினார் இலங்கை பவாஸ், பிரச்சினைகள் இல்லாத மனிதனே கிடையாது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான கோணத்தில் பிரச்சினைகள் இருந்து கொண்டேயிருக்கும். அதனை அணுகும் முறையை அம்மனிதன் சரியாக செய்து விட்டால் ஓரளவுக்கு சேதாரத்தை தடுத்து விடமுடியும். (No pain – No Gain) ஒன்றை இழக்காமல், ஒன்றை பெற முடியாது என்பது வாழ்வியல் எதார்த்தம். வெளிநாட்டிற்கு பிழைக்க வருபவர்களின் நிலையும் அப்படித்தான். குழந்தை யென்னும் செல்வத்தை அடைய நினைக்கும் கட்டுரைக்குரியவர் அமீரக வாழ்க்கையை இழந்தே தீர வேண்டும். தற்காலிகமாக, இதுதான் சரியான தீர்வாகவும் அமையும் என தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் அற்புதமான பல ஆலோசனை களை சகோதர வாஞ்சையோடு எடுத்து சொன்ன விதத்திலேயே தாம் ஒரு மனநல ஆலோசகர் என்பதை உணர்த்தி விட்டார் மதுரை முகைதீன் பாட்சா, துபாய் மோகம் என்ற அவலநிலையை எதார்த்தமாய் எடுத்துக் காட்டியுள்ள உங்களின் எழுத்தாற்றல் பாராட்டிற்குரியது ! கட்டுரையின் ஆரம்பம் முதல் கடைசி வரைக்கும் சொல்ல வந்த விஷயத்தை சரியான கோணத்தில் தெளிவான நடையில் சொல்லி விட்டீர்கள். ஆனால் இது மாதிரியான கட்டுரைகள் நமது பெண்களின் பார்வைக்கு செல்ல வேண்டும். அவர்கள் தான் விழிப்புணர்வு பெற வேண்டும். இந்தக் கட்டுரையை படிக்கும் ஒவ்வொரு வாசகரும் பிரிண்ட் எடுத்து தங்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்தாலே போதும் தமிழகம் முழுவதுமாக பெண்களின் பார்வைக்கு சென்றைடைந்து விடும். பெண்கள் மாறினால் தான் சமூக அவலங்களை களைய முடியும் என குற்றால அருவியைப் போல கொட்டித் தீர்த்து விட்டார் பொறியாளர் கீழை இர்பான், ஊரில் துணிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு 25 வயதாகியும் திருமணம் செய்து வைக்க விருப்பம் கொள்ளாத என் பெற்றோர்கள் நீ வெளிநாட்டிற்கு ஒரு சபுரு போய் வா, அப்பத்தான் நல்ல விலைக்கு உன்னை விற்று தங்கைகளுக்கு செய்ய வேண்டியதை செய்ய முடியும். என்பது போல இருந்து விட்டார்கள். காரணம் எங்கள் ஊரில் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு அவ்வளவு மவுசு. நானும் வேறு வழியின்றி கட்டிட வேலைக்கு துபாய் வந்துவிட்டேன். வந்த புதிதில் நாங்களாகவே சமைத்து சாப்பிட்டோம். இந்நிலையில் எங்களது பழைய கேம்பை இடித்து விட்டு புதிதாக கட்டினார்கள். ஆனால் கேட்டரிங் சிஸ்டம் தான். சொந்தமாக சமைத்து சாப்பிட எங்கள் கம்பெனியில் தடை போட்டு விட்டனர். நாங்களாக சமைத்து சாப்பிட்ட போது ஒரு நபர் இரண்டு தபூக் கல்லை தூக்கி எடுப்போம். அவ்வளவு தெம்பாக இருந்த நாங்கள் எங்கள் கம்பெனியின் கேட்டரிங் சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்த பிறகு இப்போது ஒரு தபூக் கல்லை இரண்டு பேர் சேர்ந்து தூக்கும் நிலைக்கு ஆளாகி விட்டோம். திருமணத்திற்கு தயாராக இருக்கும் என் அவல நிலையை பார்த்தீர்களா? வெளிநாட்டு மாப்பிள்ளை என்னும் மோகத்தில் குளித்து சுகம் காணத்துடிக்கும் பெற்றோர்கள் திருந்தாத வரைக்கும் குடும்ப பாசத்திற்கு அடிமையாகிவிட்ட என் போன்றோர்கள் நிலையும் தொடரத்தான் செய்யும். இதைப் போலத்தான் உங்கள் கட்டுரைக்குரிய நபரும் பாதிக்கப்பட்டுள்ளதாக உணர்கிறேன். என தனது விரக்தியையும் திருமண ஏக்கத்தையும் நம்மிடம் பகிர்ந்து கொண்ட பெயர் சொல்ல விரும்பாத தூத்துக்குடி மாவட்ட நண்பரின் சோக கீதத்தை அவரது பெற்றோரின் செவிகளுக்கு எட்ட வைத்துவிடு இறைவா ! என பிரார்த்தனை தான் செய்ய முடிந்தது. கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் ஒருவரின் அவல நிலையை வெளிக்கொண்டு வர நினைத்த நமது கட்டுரை பலபேரின் சோகங்களை யும், வேதனைகளையும் வெளிக்கொண்டு வந்துவிட்டது ! மனதளவில் பாதிக்கப் பட்டிருந்த சில வாசகர்கள் தமது வருத்தத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்ட பிறகு நிச்சயம் மன ஆறுதலை பெற்றிருப்பார்கள் என்றே கருதுகிறேன். நூற்றுக்கணக்கான வாசகர்கள் மின்னஞ்சல் மூலமாகவும், கைபேசி மூலமாகவும் நல்ல ஆலோசனை களையும், நல்ல கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டதை எண்ணி பாராட்டி நன்றியை உரித்தாக்குகிறேன். வாசகர்கள் அளித்த அனைத்து வழிமுறைகளையும் கட்டுரைக்குரிய நண்பரிடம் கூறி விட்டேன். அப்போது அவரது முகத்தில் ஒரு தீர்க்கமான முடிவு எடுத்த ரேகை தெரிந்தது. அவரது சோகத்தில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து வாசகர்களுக்கும் தமது நெஞ்சார்ந்த நன்றியினை நா தழுதழுக்க கூறிக்கொண்டார். விரைவிலேயே ஊர் நோக்கிய அவரது பயணம் தொடரவும், அமீரக வாழ்க்கை சூழல் நிறைவு பெறவுமிருக்கிறது ! புதிதாக அமீரகம் வந்திருப்பவர் களுக்கும், ஏற்கனவே வந்திருந்து பல வருடங்களை கடந்துள்ளவர்களுக்கும் நமது கட்டுரையின் மூலம் சொல்லிக் கொள்வதெல்லாம்! உழைப்பின் சிறு பகுதியை கட்டாய சேமிப்பில் ஒதுக்கிவிடுங்கள். கார்கோ மூலம் பெட்டி, பெட்டியாய் சாமான்கள் அனுப்பி வைக்கும் ஆடம்பர கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! தாய் தந்தையர், உடன் பிறந்தவர், மனைவி ஆகியோரின் நிலையறிந்து அதற்குத் தகுந்தாற்போல யாருக்காகவும் யாருடைய உரிமைகளையும் விட்டுக் கொடுக்காமல் எல்லோருடைய விஷயத்திலும் மனம் குளிரும்படியாக நடந்து கொள்ளுங்கள். ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்பட்டால் எல்லோருக்கும் எல்லாமும் சாத்தியமே ! இத்துடம் நிறைவு பெறட்டும் ! எல்லோருடைய மனக்குமுறலும் !!


நன்றி !!!
அன்புடன்
மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி
துபை.

தந்தையையும்-தாயையும் காப்பது தலையாய கடமை

தந்தையையும்-தாயையும் காப்பது தலையாய கடமை

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி)


05. 02. 2010 காலைப் பத்திரிக்கையினை புரட்டிக் கொண்டிருந்த எனக்கு ஒரு பெட்டிச் செய்தியினைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அது என்ன என்று கேட்கிறீர்களா?

70 வயதான கலீல் அகமது என்ற பெரியவர் சென்னைக் கூடுவாஞ்சேரி மெயின் ரோடில் உள்ள காட்டுச் செடிகள் ஓரத்தில் அவருடைய மகன்களால் காரில் கொண்டு வரப்பட்டு அனாதையாக தள்ளப்பட்டார். ஒட்டிய வயிறும், மெலிந்த தேகமும் கொண்ட அவரைக்கண்ட அந்த வழியாகச் சென்ற இரக்கக் குணம் கொண்ட சிலர் தின்பதிற்காக தின்பண்டங்களை அவர் அருகில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர் அதனைக்கூட அவர் எடுக்கக்கூடிய திராணியில்லை. அதனை தெருநாய்கள் சாப்பிட்டதாகவும், அந்த பரிதாப நிலையினைப் பார்த்த சிலர் அருகில் இருந்த காவல் துறையினரை அனுகியதாகவும். அவர்கள் அதனைக் கண்டு கொள்ளவில்லையென்றும், ஆகவே காஞ்சிபுரம் மாவட்டக் கலெக்டருக்கு செல்போனில் தகவல் சொன்னதாகவும், அவர் தாசில்தாரை அனுப்பி மருத்துவ மனையில் சேர்த்துள்ளதாகவும், ஆனால் அந்த முதியவர் எவ்வளவோ அதிகாரிகள் கேட்டுக் கொண்டும் அவரை அனாதையாக விட்டுச் சென்ற மகன்கள் பெயர்களைச் சொல்லத் தயாராகவில்லை என்றும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது.. தான் துன்பப்பட்டாலும் தன்னை நடுத் தெருவில் அனாதையாக விட்ட பிள்ளைகளைக் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை என்று அறியும் போது அவரை நீங்கள் முதன்முதலில் அறிமுகமான தெய்வக் குணம் கொண்டவராக உங்களுக்குத் தெரியவில்லையா?

இரண்டாவது செய்தி 02. 02. 2010 அன்று பத்திரிக்கைகளில் வந்தது. 70 வயதான கணவர,; ப+ங்காவனம்-மனைவி, சின்னக்குழந்தை திருவேற்காடு தன் மகன் வீட்டில் வசித்து வந்தனர். அந்தப் பெண்மனி தன் நகைகளை மகன் கேட்டுக் கொண்டதிற்கிணங்க கொடுத்து வைத்ததாகவும், சில நாட்களுக்கு முன்பு அந்த நகைகளை திருப்பிக் கேட்டதாகவும், ஆனால் மகன் அதனை மனைவியிடமிருந்து வாங்கிக் கொடுக்கவில்லையென்றும் அதனையறிந்து மனம் நொந்த வயதான தந்தையும்-தாயும் தாங்கள் சொந்தக்காரர்களைப் பார்க்க வந்தவாசிக்கு செல்வதாக மகன் குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு திருவேற்காடு ஏரிக்கரை சென்று விஷம் அருந்தி இறந்ததாகவும் செய்தி வெளி வந்தது.





ழூன்றாவது செய்தி 01. 02. 2010 தேதியில் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக நடப்பதாக ஒரு சம்பவத்தினை மேற்கோள் காட்டியிருந்தது. அதுதான் ‘கைக்குத்தல்’ என்ற பழக்கம். நெல்லை உரலில் குத்தி எடுத்த அரிசியைத்தானே கைக்குத்தல் என்று கேள்விப்பட்டிருக்கிறோம.; ஆனால் வயதானவர்களை அன்புக் கொலை மூலம் சாகடிப்பதினைக் கேள்விப் பட்டிருக்கிறோமா? இல்லையே! அதுதானே புது தகவலான ‘கைக்குத்தல்;’. அதாவது 80 வயதினைக் கடந்த ஆணோ-பெண்ணே தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இழுத்துக் கொண்டு அவஸ்தை படக்கூடாது என்ற அபூர்வ நடவடிக்கையாகும். 80 வயதினைக் கடந்த பெரியவர்; உறவினர்களுக்கு தகவல் சொல்லி வரவழைத்து அவர்களுக்கு உடல் முழுக்க எண்ணெய் தடவப்படும். பின்பு குளிர்ந்த தண்ணீரில் அவரைக் குளிப்பாட்டுவார்கள். அதன் பயனாக அந்த பெரியவர் ஜன்னிக் கண்டு இரண்டு நாளைக்குள் இறந்து விடுவார். அதன் பின்பு அவருடைய உறவினர் இறுதி சடங்கு செய்வார்களாம்.மேற்கூறிய சம்பவங்கள் ழூன்றுமே அதிர்ச்சியான செய்திதானே?


குர்ஆனுடைய மேற்கோள்படி பிள்ளைகளை ஒரு ரத்தக்கட்டி ழூலம் உருக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப்பிள்ளை தாயின் கருவில் வளரும் போது தாய் தன் உதிரத்தை உணவாக தந்து வளர்க்கிறாள். குழந்தை தாயின் வயிற்றில் தவழும் போது ஏற்படும் அசைவுகளை இன்ப வேதனையாக ஏற்றுக் கொள்கிறாள். பிறக்கும் போது தாய் படும் வேதனையினை எடுத்தியம்ப வார்த்தையில்லை. சில சமயங்களில் அந்தக் குழந்தையினைப் பெறும் போது தாயும் மடிவதுண்டு. பிறந்த குழந்தையினை தாழாட்டி, .சீராட்டி வளர்க்கும் போது கணவன் கூட சில சமயங்களில் மனைவியினைப் பார்த்து பெறாமை அடைவதுண்டு. குழந்தையினை தூக்கிக் கொஞ்சும் போது சிறுநீர், மலம் கழித்தாலும் அதனை புன்சிரிப்புடன் தாங்கிக் கொள்வதுண்டு, குழந்தை பெற்றோர்கள் நெஞ்சில் மிதித்தாலும் அதன் வலியைப் பொறுத்துக் கொள்வதுமுண்டு. தாய் வாழ்நாளில் ஒரே ஒரு நாள் தான் குழந்தை அழும் போது சிரிப்பாளாம். அது எப்போது தெரியுமா நண்பர்களே? தன்னுடையக் குழந்தை பிறக்கும் போது அழுவதைப் பார்த்துத் தானே தாய் மகிழ்ச்சி வெள்ளத்தில் அழுவாளாம். ஆனால் அந்தக் குழந்தை வளர்ந்த பின்பு ‘வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த’ கதைகளைக் கேட்கும் போது தானே நாம் குழந்தைகளுக்கு மார்க்க நல்லொழுக்கங்களைச் சொல்லிக் கொடுக்க மறந்துவிட்டோமா? என்ற சந்தேகம் எழுகிறது.





இக்ராமுல் முஸ்லிமீனில் தந்தையினை நடத்தும்விதம் சம்பந்தமாக கூறுகையில், ‘அன் அபிதர்தா கால சமிஹ்து ரஸ_லல்லாஹ் யக்கூலுல் வாலிது அவ்சத்து அப்வாபில் ஜன்னத்தி பஇன்ஸித்த பஅழ்ஹி தாலிக்கல் பாப அவிஹ் பழ்கு’. அதாவது தந்தை சுவர்க்க வாசல்களில் சிறந்த வாசல். (அவருக்கு மாறு செய்து மனவேதனை கொடுத்து) அவ்வாசலை அழித்து விடவும் அல்லது அவருக்குக் கீட்படிந்து நடந்து(அவரைத் திருப்திப்படுத்தி) அவ்வாசலை பாதுகாக்கவும் உனக்கு விருப்பம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று ரஸ_லல்லாஹ் கூறியதாக ஹஜ்ரத் அப+தர்தா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இன்னொரு தடவை ரஸ_லுல்லாஹ், ‘கேவலமடையவும்! மீண்டும் கேவலமடையவும்! மறுபடியும் கேவலமடையவும்’ என கூறியபோது திகைத்து காரணம் கேட்டு கேள்வி எழுப்பிய தோழர் ஹஜரத் அப+ஹ_ரைரா (ரலி)

அவர்களிடம், “ தனது பெற்றோரில் இருவர் அல்லது ஒருவர் முதுமை அடைந்த நிலையில் இருக்க, அவர்களுக்கு பணிவிடை செய்து அவர்களை மகிழ்வித்து சுவர்க்கத்தில் நுழையாதவன் கேவலமடையவும்” எனக் கூறியதாகச் சொன்னார்கள். ஆகவே நமது வேதமும், அதனை உலகில் பரப்ப காரண கர்த்தாவான கடைசி நபியும் எடுத்துக் காட்டிய உதாரணத்திற்கு மேல் வேறு என்ன வேண்டும் நல்மார்க்க பண்புகளை கற்க?

நல்ல நெல் விளைச்சல் வேண்டுமென்றால்; நல்;ல விதை நெல்லை விதைக்க வேண்டும். அதை விதைத்தால் மட்டும் போதுமா? அதனை போதுமான தண்ணீர்-போசாக்கான உரம்-ப+ச்சி தாக்காதளவில் ப+ச்சி மருந்து ஆகியவைகள் தெளித்த பின்பு தான் நல்ல நெல் அறுவடை செய்ய முடியும். அதேபோன்று தானே குழந்தை பிறப்பதிற்கு எவ்வாறு கவனம் செலுத்துகிறோமோ அதே போன்று அன்பு, பாசம், நல்லொழுக்கம், நல்ல உலகக் கல்வி, மார்க்கப்பற்று போன்றவைகளை குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அந்தக் குழந்தை தவறு செய்தால் எப்படி செடிக்கு ப+ச்சி மருந்து தெளிப்போமோ அதேபோன்று தவறை அந்தக் குழந்தைக்கு கசப்பானதாக இருந்தாலும் சுட்டிக் காட்டி கண்டிப்புடன் வளர்த்தால் தானே நல்லவர்களாக வளரும். அவ்வாறு செய்யவில்லையெனில் நல்ல விதை எப்படி பேணிக் காக்காவிடில் பதராக போய் விடுமோ அதே போன்று குழந்தைகள் வாழ்வும் வீணடிக்கப்படும்.

எனது உறவினர் மலேசியா சிட்டிசன் தகுதி உடையவர். ஐவேளை தொழுது மார்க்கப்பற்று குறையாதவர். அவருக்கு மூன்று பெண் குழந்தைகள். அவருடைய தாயார் எட்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவருடைய பார்வையிழந்த தந்தை இரண்டு வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கிறார். அந்தத் தந்தையினைப் பார்த்துக் கொள்வதிற்காகவே அவர் மலேசியா செல்லாமல் தந்தையினை பேனிக் காப்பதிலேயே அவரும் அவருடைய மனைவியும் கவனம் செலுத்துகிறார்கள். அவ்வாறு உள்ளவர்களுக்குத் தானே எல்லாம் வல்ல அல்லாஹ் ஜென்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்க வாசலை திறந்து வைப்பான். அது போன்றவர்கள் நம்மிடையே இல்லாமலில்லை என்பதிற்காகத் தான் மேற்கொண்ட உதாரணத்தினைச் சொன்னேன்.

சில மாதங்களுக்கு முன்பு பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளியானதினை அனைவரும் படித்திருப்பீர்கள். அதனை இந்தச் சமயத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். உத்திரப் பிரதேசத்தினைச் சார்ந்த ஒரு திருமணமாகாத இளைஞர் தந்தையினை இழந்தவர். பொருளாதாரத்தில் அவ்வளவு வசதியில்லாதவர.; அன்புத் தாய் மட்டுமே உள்ளார். அந்தத் தாய்க்கு ஒரு ஆசை. எப்படியாவது தமிழ்நாட்டிலுள்ள ராமேஸ்வரக் கோயிலுக்குச் செல்ல வேண்டுமென்று. ஆனால் அந்த ஆசையினை நிறைவேற்ற அந்த மகனிடம் போதிய வசதியில்லை. அதற்காக தாயின் ஆசையினை எட்டாக்கனி என்று ஒதிக்கித் தள்ளினாரா? என்றால், இல்லையே! ஒரு கூடையிலே தாய் அடுத்தக்கூடையிலே தனக்கும்,தனது தாயும் உடுத்த போதுமான உடை எடுத்துக் கொண்டு அந்தக் கூடையில் தாயினை உட்கார வைத்து உத்திரப் பிரதேச மாநிலத்திலுருந்து ராமேஸ்வரம் வந்து தன் அன்புத் தாயின் ஆசையினை நிறைவேற்றி மகிழ்ந்ததாக பத்திரிக்கைகளுக்குப் பேட்டியும் அளித்துள்ளார் என்றால் பாருங்களேன். பெற்றோரை எவ்வளவு மதிக்கிறார் அவர் என்று.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு எங்க@ர் கண்மாயின் கீழ் கோடியில் உள்ள கீழாயூருக்கு அருகில் குடிக்கத் தண்ணீர் எடுக்க ஊற்றுத் தோண்டும் போது முதுமக்கள் தாழியினை தோண்டி யெடுத்தார்கள். அங்கே சென்று பார்த்தேன். அந்தத்தாழிகள் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு வயதானவர்களை உயிருடன் போட்டு அவர்கள் சில நாட்கள் வாழும் அளவிற்கு வாக்கரிசி, அவர்களுக்கு பிடித்த பண்டங்கள், அவர்கள் உபயோகித்;த மண்பண்டஙகள், சிறிய எண்ணெய் விளக்கு வைத்து மூடி வைத்து விடுவார்களாம். அது தானே உயிர் ஊசலாடும் போது அந்தக் காலத்தில் எடுத்த நடவடிக்கை. அதே நடவடிக்கையைத் தானே மேற்கூறிய விருதுநகர் மாவட்டத்தில் நடப்பதாகக் கூறிய ‘கைக்குத்தல்’; என்ற அன்புக்கொலை என்றால் மிகையாகுமா?

பார்சி இனத்தவர் இறந்தவர்களை காக்கைக்கும், கழுகுக்கும் உணவாகும் படி குன்றுகள் மேல் வைத்து விடுவார்களாம். அதுபோன்று வயதில் பெரியோர்களை நடத்தக் கூடாது, இறந்தவர்களைக் கண்ணியப்படுத்த வேண்டுமென்று என்று தானே ரஸ_லுல்லாஹ் இறந்தவர்களை குளிப்பாட்டி சுத்தம் செய்து கபனிட்டு நல்லடக்கம் செய்யச் சொன்னார்கள். அதனை விட்டு விட்டு பெற்றோரை நடுரோட்டில் அனாதையாக விட்டு தலைமுழுகலாமா? இங்கே ஒரு தமிழ் பழமொழியினையும் அதற்கான ஒரு கதையினையும்; சொல்வது சரியானதாகும் என் நினைக்கிறேன். ஒரு வீட்டில் உள்ள சிறுவன் தன் பெற்றோர் தினமும் தன் வயதான பாட்டனாருக்கு ஒரு சிறு மண்பாண்டத்தில் உணவிடுவதும், அவரை கீழ்தரமாக நடத்துவதையும் பார்த்து பொருமிக்கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் தன் பாட்டனார் சாப்பாட்டு மண் பாத்திரத்தை தந்தை கண் எதிரே எடுத்து பத்திரப்படுத்தினான். தந்தை அதனைப் பார்த்து ஏன் அதை; எடுத்து பாதுகாப்பாக வைக்கிறாய் என்றார். அதற்கு அந்த சிறுவன், ‘தாத்தா இறந்த பின்பு உங்களுக்கு உணவளிக்க அது உதவுமே என்றுதான் அதனைப் பத்திரப்படுத்து’வதாகச் சொன்னதும் அதிர்ச்சியடைந்து பாட்டனாரை தந்தையும், தாயும் போட்டி போட்டு நல்ல முறையில் நடத்தினார்கள் என்பது கதையாக இருக்கலாம். அந்தக் கதையினை தழுவித் தானே தமிழில் உள்ள பழமொழியில், ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் செயல்களை கண்காணிக்காமலில்லை என நினைத்து தங்கள் பெற்றோருக்கு கடமை செய்ய வேண்டும்.

தீன் குறள் என்ற புத்தகத்தில் கவிஞர் இ. பதுருத்தீன் கீழ்கண்ட குறளை பெற்றோர் பற்றி எழுதியுள்ளார்:

‘செல்லுபடியாகாச் செயல்புரினும் தள்ளுபடி செய்யற்க தாய்தந்தைச் சொல்’

அதாவது தனக்கு உடன்படாத செயல் பெற்றோர் செய்தாலும் பொற்றோரை ஒதுக்கித்தள்ளாதே, என்பதே அதன் பொருள்.

மற்றொரு குறளில், ‘தோள் துர்க்கி, தொட்டிலும் ஆட்டி, அரவணைத்தார் தாள்துர்க்கிக் காத்தல் தலை;’ அதாவது தோளிலும் துர்க்கித் தொட்டிலிலும் ஆட்டி அரவணைத்து வளர்த்த பெற்றோர்தம் பாதங்களையும் போற்றிக் காப்பது பிள்ளைகளின் கடமையாகும். ஆகவே தான் தாயின் காலடியில் சொர்க்கமிருக்கிறது என்று போதித்தது இஸ்லாம். அதற்காக தாயின் காலடியில் தலை வைத்து வணங்கவேண்டுமென்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அது சிர்க் ஆகும். தாய், தந்தையினை பேணிக்க காப்பாற்றுங்கள்: அவர்களை அனாதையாக நடுத் தெருவில் விடாதீர்கள் என்பதைத் தானே போதித்தது இஸ்லாம்.

உங்கள் பெற்றோரை கூடுவாஞ்சேரியில் அனாதையாக விடப்பட்ட 70 வயது கலீல் அஹமது போன்று விட்டு விடுடாதீர்கள். அவர்கள்தானே நீங்கள் உலகத்தின் பார்த்த முதன் முதல் அறிமுகமாக இருக்கிறார்கள். அவர்களை காப்பதின் மூலம் ஜென்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்க வாசலை அடைய உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

Qualities of Good will Ambassador

Qualities of Good will Ambassador

(Dr. A.P. Mohamed Ali, I.P.S®)


Start with the flashing smile.
Fail not to say, ‘Hallo’ to a stranger.
Show a right direction to a stranger looking for address.
Shove off the obstruction stones, sticks, glass pieces and nails on the footbath.
Show comfort and compassion to the special people.
Extend your helping hand to the elderly persons to carry weighty bags.
Feed the birds with eatables to birds, cows with the greens, water the plants and feed the sickly and needy persons.
Pay a courtesy call to the elderly citizens, sickly persons and persons languishing in prisons.
Be helpful letter writer to the blind, handicapped and illiterate.
(When I was a student of New college in 1967 I used to visit Egmore Ophthalmic hospitals with post card and inland letters to write letters to the eye patients during holidays)

Be a Traffic warden nearby school zone or pedestrian cross to help school children, women, elderly and handicapped.
Be a volunteer and first aid worker to help the victims of the accident, riots and natural calamities.
While driving give a lift to the genuine persons on need.
Voluntarily offer your seat while travelling in public transports to the aged, pregnant and women with child.
Pay visits to relatives with small gifts and don’t forget to carry toffees to children.
Speak softly and sweetly and be a good listener. Don’t expect that everyone should agree on your views.
Compliment your wife with praise and sweet words. Be a good tutor and model in character to your children.
Celebrate your happiness with the poor children and inmates of the aged homes.
Be a companion of good books.
Don’t loose the good friends.
Above all thank Allah when you raise in the morning for waking you alive and before going to bed in the night for making you alive to enjoy the worldly life.

மரபுப் பா பயிலரங்கம்

மரபுப் பா பயிலரங்கம் .. தொடர் பதிவு (மரபு கவிதைகள் எழுத கற்றுக்கொடுக்கப்படுகிறது)

அருமை தமிழ் நண்பர்களே,


வணக்கம், நமது தமிழ்த்தோட்டம் மரபு கவிதைகள் எழுத பயிற்ச்சி கொடுக்கிறது... வாருங்கள் தமிழ்த்தோட்டத்திற்கு ...


உங்களின் படைப்புகளையும் இலவசமாக வெளியிடுகிறது...




மரபுப் பா பயிலரங்கம்
கற்று தரும் ஆசிரியர் - தமிழநம்பி



என்றும் நன்றியுடன்
தமிழ்த்தோட்டம்
http://tamilparks.50webs.com



2010/3/5 Kovai Images .

நண்பர்களே..!!

தொடர்பதிவுக்கு அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து உங்கள் எண்ணங்களை இங்கு பதிவு செய்யுங்கள். உண்மையான தேடல் உள்ளவர்களுக்கு ஒருவேளை இந்த பதிவு பயன்படலாம்.

http://nanbansuresh.blogspot.com/2010/03/blog-post_9357.html

ஜீவன்சிவம்





--
http://tamilparks.50webs.com (Tamil Community)
http://babyworld.sitesled.com (Only for parents)
http://mobilepark.50webs.com (Mobile Park)
http://collections4u.50webs.com (Collections)
http://tamilflowers.blogspot.com (Tamil News)
http://itpark.50webs.com (Technology World)
http://kanyakumari.sitesled.com (About Kanyakumari)

Riyadh Tamil-speaking Mouvlavi’s Association

There is no doubt that time is of great importance in Islam and it has a special importance in the life of a Muslim as it is in reality the life and age of a person. If time is lost, subsequently the life of a person is lost. In His Book, Allaah made clear the importance of time as He swore by some parts of time in verses like Al-Fajr, Al-Asr, Al-Layl, Al-Nahaar. The Prophet drew our attention to the importance of time as he said: "People are losers in respect of two bounties, i.e. health and free time" [Al-Bukhaari].

This is the privilege for those who want to spend some time to seek knowledge.


The Riyadh Tamil-speaking Mouvlavi’s Association informs you with pleasure about the Islamic studies classes…They intend starting Classes as quickly as they can as it will take about 3 Months to complete One level/Stage. There fore, your early reply is awaited.
Location will be in Malaz… and to be notified in due Course

The subjects are –

1] Al Tawheed [the Islamic monotheiesm]
2] Al Hadeedh
3] Al Fiqh

The classes are for both Males & Females

Please enroll your self with

Moulavi Mafhoom 0504 150 737, Moulavi Zafarullah 0567 148 958 Moulavi Ramzan Faris 0507 129 963, Moulavi Rashad 0502 451 788

thariq@sails.net

டென்சனுக்கு ஒரு குட்பை ... !

டென்சனுக்கு ஒரு குட்பை ... !

இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லா துறையிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது. இதுவே மன அழுத்தத்தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது.

சக மனிதன் மீதான கரிசனையும், ஆத்மார்த்தமான அக்கறையும் விலகி சுயநலச் சிந்தனைகள் விஸ்வரூபமெடுக்கும் போது இத்தகைய இறுக்கமான சூழல்கள் உருவாகின்றன.

மேலதிகாரிகளின் கெடுபிடிகளால் தொல்லைகளுக்கு ஆளாகும் ஊழியர்கள், வாழ்க்கைத் துணையின் விட்டுக் கொடுத்தல் அல்லது புரிந்து கொள்ளல் இல்லாத சூழலில் உருவாகும் மன அழுத்தம், சாதீய, மத, இன ரீதியாக அழுத்தமான சூழலுக்கு உள்ளாகும் பொது மக்கள். என எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும், அல்லது எந்த ஒரு சூழலை எடுத்துக் கொண்டாலும் இன்று மக்கள் ஒருவித மன அழுத்தத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மன அழுத்தம் மிகவும் கொடுமையானது. இயல்பான வாழ்க்கையைப் பறித்து நிம்மதியற்ற பொழுதுகளையும், நோய்களையும் தந்து செல்லும் இந்த மன அழுத்தம் களையப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மன அழுத்தத்தைக் குறித்து மருத்துவர்கள் குறிப்பிடுகையில் எதிர்பாராத சூழலுக்கு மனிதன் தள்ளப்படும் போதே அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறான் என்கின்றனர். எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லாதவர்கள், அவர்கள் எதையும் ஆனந்தத்துடன் பெற்றுக் கொள்ளும் தன்மையுடையவர்கள் எனவே அவர்களால் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடிகிறது, ஆனால் பெரியவர்கள் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துவதும், கிடைப்பதில் திருப்தி பெறாத நிலையையும் கொண்டிருப்பதால் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம் இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் இவை கூட மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பிறப்பு, இறப்பு, போர்கள், திருமணங்கள், விவாக ரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, பெயர் இழத்தல், கடன், வறுமை, தேர்வு, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும்.

புகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதை மருத்து பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை இவையெல்லாம் மன அழுத்தத்தை நாம் விலை கொடுத்து வாங்கும் செயல்கள். புகை பிடிக்கும்போது உடலில் கலக்கும் நிக்கோட்டினுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.

முதுமை நிலையை அடைபவர்களிடமும், மாதவிடாய் காலத்தில் பெண்களிடமும் இந்த மன அழுத்தம் அதிகமாய் இருக்கும் என்றும் அத்தகையவர்களிடம் அன்புடன் உரையாடி மன இறுக்கத்தைத் தணிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மன அழுத்தம் நல்ல செயல்களில் கூட வரும் என்கிறது ஒரு ஆய்வு. திருமணம் போன்ற நிகழ்வுகள், பதவி உயர்வு, இவையெல்லாம் ஒருவகையில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் அதை சரியான விதத்தில் கையாள்வதில் நம்முடைய கவனத்தைச் செலுத்தவேண்டும் என்கிறது அதே ஆய்வறிக்கை.

எல்லா பாதைகளையும் மெத்தைகளால் அலங்கரிப்பது இயலாது என்பதால் செருப்பு அணிகிறோம். அது போலவே மன அழுத்தத்தை உண்டாக்கும் காரணிகளை ஒழிப்பது என்பது இயலாத காரியம் ஆனால் நம்முடைய மனதை திறமையாகக் கையாள்வதன் மூலமாக மன அழுத்தத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க முடியும்.

மன அழுத்தத்தைக் கையாள்வதற்கு நம்முடைய மனதின் சிந்தனைகளை தூய்மைப்படுத்த வேண்டும். எதிர்மறைச் சிந்தனைகள் பெரும்பாலும் மன அழுத்தத்தையே அளிக்கின்றன. எனவே நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் மன அழுத்தத்தைக் கையாள முடியும்.

தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவதும், ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் சில என்கின்றனர் பயிற்சியாளர்கள். மனதை ஒருமுகப் படுத்தும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தருகின்றன.

அமைதியான குடும்பச் சூழல் பெரும்பாலான மன அழுத்தத்தைக் குறைக்கிறது. அலுவலகத்தின் குழப்பங்களையோ, எரிச்சல்களையோ குவிக்கும் இடமாக குடும்பம் இருக்கக் கூடாது, மாறாக அவற்றை அழிக்கும் இடமாகவே குடும்பம் இருக்க வேண்டும் என்பதனை குடும்பத்தினர் புரிந்து கொள்ளவேண்டும். குடும்பத்தில் நுழைந்தவுடன் மனம் மகிழ்ச்சியடையும் வகையில் குடும்பத்தினரோடு அன்பான வாழ்க்கை வாழ்தல் மிகவும் முக்கியம்.

ஆவேசம், கோபம் இவை மன அழுத்தத்தின் வெளிப்பாடுகள், தெளிவான அமைதியான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு அவற்றை அடக்க வேண்டும்.

மன அழுத்தம் பல நோய்களைக் கொண்டு வரும். குறிப்பாக மைகிரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி, ஸ்ட்ரோக், எஸீமா உட்பட பல நோய்களை மன அழுத்தம் கொண்டு வருகிறது.

தாய்மை நிலையிலிருக்கும் பெண்களுக்கு மன அழுத்தம் மிகப்பெரிய எதிரி. அது தாயையும், கருவில் இருக்கும் குழந்தையையும் நேரடியாகப் பாதிக்கிறது என்கிறார் அமெரிக்காவின் மாயோ கிளினிக்ஸ் எனும் மருத்துவர் , எனவே தான் தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் நல்ல புத்தகங்கள் படிப்பது, நல்ல இசை கேட்பது என மனதை இலகுவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.

சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்படுபவர்களை இந்த மன அழுத்தம் எளிதில் பிடித்துக் கொள்கிறது. எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துபவர்கள் மன அழுத்தம் உருவாகும் சூழலை பெரும்பாலும் விலக்கி விடுகிறார்கள்.

செய்ய முடியாத வேலைகளை ‘முடியாது’ என்று மறுத்து விடும் உள்ள உரம் மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க மிகவும் அவசியம். எல்லா வேலைகளையும் இழுத்துப் போடுபவர்கள் பிரச்சனையிலிருந்து தப்ப முடியாது.

உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அழுத்தம் மனிதனுக்கு பல இன்னல்களைத் தருகிறது. சிறு சிறு அழுத்தமான சூழல்களைத் தவிர்க்காத போதோ, அல்லது தீர்க்காத போதோ அழுத்தம் அதிகரித்து பெரிய இன்னலுக்கு ஆளாக்கி விடுகிறது.

அழுத்தம் இருவகையில் வரலாம். ஒன்று நம்மைச் சூழ்ந்த சமூகத்தின் செயல்பாடுகளால் நமக்குள் வருவது. இன்னொன்று நம்முடைய வாழ்க்கை முறை, சிந்தனைகளினால் வருவது.

நேர் சிந்தனை உள்ளவர்கள் எல்லாவற்றையும் நல்ல விதமாகப் பார்க்கிறார்கள். அதிக நேரப் பயணிக்க வேண்டியிருந்தால் அதிக நேரம் இசை கேட்க முடியுமே என்று நினைக்கக் கூடிய அளவுக்கு மனதை இலகுவாக வைத்திருக்க வேண்டும்.

‘இந்த வேலை எனக்குப் பிடிக்கவேயில்லை..’ அல்லது ‘என்னை யாருக்கும் பிடிக்கவில்லை’ இது போன்ற சிந்தனைகள் பரிதவிக்க வைத்து மன அழுத்தத்துக்குள் இட்டுச் செல்கிறது.

கவனக் குறைவு, முடிவுகள் எடுப்பதில் சிக்கல், ஞாபக மறதி, குழப்பம், எதிர் மறை சிந்தனைகள், தெளிவற்ற சிந்தனைகள், தவறான முடிவுகள், தப்பித்தல் முயற்சிகள் என மன அழுத்தம் மனதைப் பாதிக்கும் செயல்களைப் பட்டியலிடலாம்.

தலைவலி, அஜீரணக் குறைபாடுகள், தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, உடல் வலி, நெஞ்சு வலி, சீரற்ற இதயத் துடிப்பு, உயர் இரத்த அழுத்தம், உடல் எடை அதிகரித்தல், குறைதல், ஆஸ்த்மா, மூச்சுத் திணறல், தோல் நோய்கள், தாம்பத்தியக் குறைபாடுகள், புற்று நோய், அல்சர், சர்க்கரை நோய், என மன அழுத்தம் தரும் உடல் நோய்களும் ஏராளம்.

இந்த மனம் உடல் சார்ந்த பாதிப்புகளினால் தன்னம்பிக்கைக் குறைபாடு, கோபம், எரிச்சல், சீரற்ற உணவு உண்தல், சீரற்ற தூக்கம், தனிமை விரும்புதல், கடமைகளைத் தவிர்த்தல், பதட்டம் உட்பட ஏராளமான செயல்களுக்கும் நம்மை அறியாமலேயே தள்ளப்பட்டு விடுகிறோம்.

மன அழுத்தத்தை மருத்துவம் பல விதமாகப் பிரிக்கிறது. திடீரென நிகழும் ஒரு நிகழ்வினால் ஏற்படும் ஒரு மன அழுத்தத்தை அக்கியூட் ஸ்ட்ரெஸ் என்கிறார்கள். இதன் காரணம் நமக்கு தெரிந்ததாகவே இருக்கும். இது விரைவிலேயே காணாமல் போய் விடுகிறது.

தொடர் நிகழ்வுகளினால் ஏற்படும் மன அழுத்தத்தை எபிசாடிக் அக்யூட் ஸ்ட்ரெஸ் என்கிறார்கள். அதிகப்படியான வேலை. ஏராளமான பணிகள், தினமும் தாமதாய் வருவதால் வரும் பிரச்சனை, அவசரம் போன்ற தொடர் காரணிகளால் வருவது இது.

இயல்பிலேயே வறுமை, நீண்டகால வேலையின்மை, குடும்ப சூழல், அவஸ்தையில் மாட்டிக் கொண்டது போன்ற சூழல் இவையெல்லாம் தரும் மன அழுத்தத்தை குரோனிக் ஸ்ட்ரெஸ் என்று அழைக்கிறார்கள்.

ட்ராமிக் ஸ்டெரெஸ் என்பது இன்னொரு வகை. ஏதோ ஒரு அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வராமல் இருக்கும் நிலையே இப்படி அழைக்கப்படுகிறது. கணினித் துறையில் இந்த மன அழுத்தம் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான அலுவலகங்கள் ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இறுக்கமற்ற சூழலை குடும்பங்களில் குழந்தைகளிடம் உருவாக்க அமெரிக்க மருத்துவர்கள் ஆய்வறிக்கையில் கீழ்க்கண்டவை பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. தினமும் குழந்தைகளுடன் உரையாடுங்கள். அவர்களுடைய தினம் எப்படி செலவழிந்தது. என்னென்ன செயல்கள் நடந்தன என்றெல்லாம் உரையாடுங்கள். அழுத்தமான சூழல் இருப்பது போல உணர்ந்தால் அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.

உங்கள் பிரச்சனைகளை குழந்தைகள் மேல் எக்காரணம் கொண்டும் திணிக்காதீர்கள். அவர்களுக்கு குடும்பத்தின் தேவை மற்றும் அமைதியான வாழ்க்கையின் அவசியத்தை வலியுறுத்துங்கள்.

குழந்தைகள் எதையாவது செய்யும் போது மனம் விட்டுப் பாராட்டுங்கள். அவர்களை அரவணைத்துச் செல்ல மறக்காதீர்கள். அவர்கள் இசை, பெயிண்டிங், நடனம் போன்றவற்றில் ஈடுபட தூண்டுங்கள்.

நகைச்சுவை உணர்வுள்ள குழந்தையாக உங்கள் குழந்தையை வளர்க்க முயலுங்கள். அது இறுக்கமான சூழல்களை குழந்தைகள் சமாளிக்க பிற்காலத்தில் பயன்படும்.

குழந்தைகள் எப்போதும் எதிலும் முதன்மையாக வரவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். அது தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கி விடும். எல்லோரும் முதலாவதாக வருவது நடப்பதில்லையே. விடுமுறைகள், மாலை வேளைகளை சற்று இலகுவாகவே வைத்திருங்கள். அதிகப்படியான கல்வியும் மன அழுத்தத்தை நல்கும் என்பதை மறவாதீர்கள். தோல்வியும் வெற்றியும் சகஜம் என்னும் மனநிலையைக் கொண்டிருங்கள் அல்லது எதிர்காலத்தில் குழந்தை தோல்விகளைச் சந்திக்கும் போது உடைந்து போகும் வாய்ப்பு உண்டு.

உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஒரு நல்ல முன்மாதிரியாக இருங்கள். குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் தந்தை குழந்தை குடிக்கக் கூடாது என அறிவுரை சொல்வது பாதிப்பை ஏற்படுத்தாது. குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதும், அவர்கள் பதின் வயது எட்டுகையில் நல்ல நண்பர்கள், உறவினர்களுடன் ஆரோக்கியமான நட்பு வைத்துக்கொள்ள தூண்டுவதும், உடற்பயிற்சிகள் செய்யத் தூண்டுவதும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

மன அழுத்தம் சிலவேளைகளில் நாமாகவே கர்ப்பித்துக் கொள்ளும் தவறான சிந்தனைகளின் மூலமாகவும் வரும் என்பது கண்கூடு. தேர்வை நன்றாக எழுதிய மாணாக்கர் கூட மன அழுத்தத்துடன் திரிவது இதனால் தான்.

எத்தனை இறுக்கமான சூழலாக இருந்தாலும் சிரிக்கக் கற்றுக் கொண்டால் பிரச்சனைகள் பல காணாமல் போய்விடும். நல்ல நகைச்சுவை உரையாடல்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். தசைகளை இறுக்கமற்ற நிலைக்கு கொண்டு செல்லும். நுரையீரலுக்கு சுத்தமான காற்றை கொண்டு செல்லும் எனவே மன அழுத்தத்தைக் குறைக்க சிரியுங்கள் என்கிறார் மனோ தத்துவ நிபுணர் லீ பெர்க்.

குடும்பங்களில் பிரச்சனைகள் வருவது சகஜம். கணவன் மனைவியரிடையே பிரச்சனை வரும்போது ‘உன்னால் தான் வந்தது’ என்று பழியை மாறி மாறி சுமத்தாமல் ‘நமக்கு பிரச்சனை இருக்கிறது’ எப்படி தீர்வு காண்பது எனும் கண்ணோட்டத்தில் பேச வேண்டும் என்கிறான் பிரபல அமெரிக்க உளவியலாளர் வில்லார்ட் எஃப் ஹார்லே.

மன அழுத்தத்தை சூழ்நிலைகள் பத்து விழுக்காடும் நாம் எப்படி அதை எதிர்கொள்கிறோம் என்பது தொன்னூறு விழுக்காடும் நிர்ணயிக்கின்றன என்கிறார் சார்லஸ் ஸ்விண்டால். எதையும் எதிர்கொள்ளும் மனநிலை கொண்டவர்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருக்கும் காரணம் இது தான்.

பெண்களுக்கு வேலை, குடும்பம் என இரட்டை அழுத்தமான சூழல்கள் இருப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அதை சரியான முறையில் கையாள குடும்ப சூழல் அமைதல் அவசியம்.

அலுவலகத்தில் இறுக்கத்தைத் தளர்த்த சரியான திட்டமிடுதல், காலத்தை சரியாக அட்டவணையிட்டு பயன்படுத்துதல், அவ்வப்போது மூச்சை இழுத்து விடுதல், இடையிடையே ஓய்வு எடுத்தல், மனதை தளர்வாக வைத்திருத்தல், நேர் சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்தல், முக்கியமான பணிகளை முதலில் முடித்தல், பகிர்ந்து கொள்ள ஒரு நண்பனைக் கொண்டிருத்தல், அவ்வப்போது விடுப்பு எடுத்தல் இவை பயன்படும்.

மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.

* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக் கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

* காஃபி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்… என்பது போன்றவை.

* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

* சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.

* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் ‘மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது’ என்று சொல்லப் பழகுங்கள்.

* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

* எளிமையாக வாழுங்கள்.

* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.

* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.

* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.



இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்கு வசப்படும்.

- தமிழ் ஓசை களஞ்சியம்