Showing posts with label படைப்பு. Show all posts
Showing posts with label படைப்பு. Show all posts

Sunday, March 29, 2009

கவிதைப் போட்டிக்கு படைப்புகள் வரவேற்பு

கவிதைப் போட்டிக்கு படைப்புகள் வரவேற்பு

திருப்பூர், மார்ச் 28: திருப்பூர் மக்கள் மாமன்றம் நடத்தும் கவிதைப் போட்டிக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

கோடையை முன்னிட்டு திருப்பூர் மக்கள் மாமன்றம் சார்பில் கவிதைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. "கோடையில் வீசிய தென்றல்' என்ற தலைப்பில் கவிதையை 1 பக்கம், 24 வரிகளுக்கு மிகாமல் 3 நகல்கள் அனுப்ப வேண்டும். ஒருவர் எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.

கவிதையுடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஒரு சுய முகவரியிட்ட அஞ்சல் அட்டைகள் சேர்த்து அனுப்ப வேண்டும். கவிதையில் தனிமனிதரை விமர்சிப்பதும், அரசியல் கருத்துக்களும் இருக்கக் கூடாது. படைப்புகளை நேரில் அல்லது அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி, திருப்பூர் மக்கள் மாமன்றம், எழுத்தறிவாலயம், மங்கலம் சாலை, திருப்பூர். ஏப்ரல் 15-ம் தேதிக்குள் கவிதைகளை அனுப்ப வேண்டும் என்று அமைப்பின் தலைவர் சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Sunday, February 22, 2009

படைப்பாளிகளுக்கு ஒரு வாய்ப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

படைப்பாளிகளுக்கு ஒரு வாய்ப்பு!

எழுத்தார்வம் கொண்ட படைகளிகள் தங்கள் கதை, கவிதை, கட்டுதை ஆகிற படைப்புகளை வலைதளத்திற்குஅனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய email: perambalur.in@gmail.com

Friday, December 12, 2008

சிறுவர் கதைப் போட்டி: படைப்புகளை டிச.31-க்குள் அனுப்பலாம்

சிறுவர் கதைப் போட்டி: படைப்புகளை டிச.31-க்குள் அனுப்பலாம்

கோவை, டிச.11: கனவு அமைப்பு சார்பில் சிறந்த கதைகளுக்கு ரூ.5,000 ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது.

இப் போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தங்களது கதைகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் அனுப்பலாம்.

கனவு அமைப்பு சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான "கதை சொல்லி' நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

போட்டியில் பங்கேற்பவர்கள் சிறுவர் கதைகளை எளிய நடையில் 3 முதல் 5 பக்கங்கள் வரை எழுதி அனுப்பலாம். சுயமான படைப்புகளாக இருக்க வேண்டும்.

சிறந்த கதைகளுக்கு ரூ.5,000 பரிசு வழங்கப்படும். கதைகளை அனுப்பும் மாணவ, மாணவிகள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தின் முழு விவரத்துடன் அனுப்ப வேண்டும்.

இது குறித்து கூடுதல் விவரம் அறிய சுப்ரபாரதி மணியன், கனவு அமைப்பு, இலக்கிய இதழ், 8/2835 பாண்டியன் நகர், திருப்பூர்-641602 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: 0421-2350199, 9486101003.