Showing posts with label கல்லூரி. Show all posts
Showing posts with label கல்லூரி. Show all posts

Wednesday, March 11, 2009

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாரதி விருது: மார்ச் 30 கடைசி

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாரதி விருது: மார்ச் 30 கடைசி


கோவை, மார்ச் 10: கலை, இலக்கியம், விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு யுவஸ்ரீ கலா பாரதி விருது வழங்கப்படவுள்ளது.

இவ் விருது பெற விரும்புவோர் மார்ச் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து பாரதி யுவ கேந்திரா அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஒவ்வொரு மாவட்டங்களிலும் இசை, படிப்பு, ஓவியம், விளையாட்டு, சமூகப்பணி, பரத நாட்டியம், பேச்சு, கவிதை, சமூகப்பணி உள்பட அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு யுவஸ்ரீ கலா பாரதி விருது, விவேகானந்தர் விருது ஆகியவை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

பாரதி யுவ கேந்திரா அறக்கட்டளை சார்பில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும்.

விழாவில் மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர், ஆர்ஷ வித்யா பீடம் சுவாமி ததேவானந்த சரஸ்வதி, கருமாத்தூர் விவேகானந்த சேவாஸ்ரம் தலைவர் சுவாமி ஸதா சிவானந்தா, வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமம் சுவாமி சைதன்யானந்தா, சுவாமி கருணானந்தா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இசை, ஓவியம், விளையாட்டு போன்றவற்றில் சிறப்பாக விளங்கும் மாணவ, மாணவிகள் தங்களது சுயகுறிப்பு மற்றும் பரிசு சான்றிதழ் நகல்களை நெல்லை பாலு, நிறுவனர் பாரதி யுவ கேந்திரா, ஜி52, சாந்தி சதன் குடியிருப்பு, கோச்சடை, மதுரை-625016 என்ற முகவரிக்கு மார்ச் 30-ம் தேதிக்குள் அனுப்பலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி எண்கள்:9443930815, 9442630815.

Thursday, March 5, 2009

திருவிதாங்கோடு முஸ்லிம் கல்லூரியில் மார்ச் 13-ல் உணவு திருவிழா

திருவிதாங்கோடு முஸ்லிம் கல்லூரியில் மார்ச் 13-ல் உணவு திருவிழா


நாகர்கோவில், மார்ச் 4: திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் 3 நாள் உணவு திருவிழா இம் மாதம் 13-ம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து, கல்லூரித் தாளாளர் மற்றும் செயலர் எச். முகம்மது அலி நாகர்கோவிலில் புதன்கிழமை அளித்த பேட்டி:

இக் கல்லூரி ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவியல் துறை நடத்தும் இந்த அறுசுவை உணவு திருவிழாவை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் தொடக்கிவைக்கிறார்.

இதையொட்டி, 100 ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. பண்டைய கால உணவு வகைகளில் இருந்து பலவகையான வடஇந்திய, தென்னிந்திய மற்றும் பண்பாட்டு உணவு வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.

திருவிழாவையொட்டி பலவித கலை நிகழ்ச்சிகளும், மாயாஜால நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கலாம் என்றார் அவர்.

Monday, February 2, 2009

சேது பொறியியல் கல்லூரி 10_வது பட்டமளிப்பு விழா அமைச்சர் அன்பழகன் பங்கேற்பு

சேது பொறியியல் கல்லூரி 10_வது பட்டமளிப்பு விழா அமைச்சர் அன்பழகன் பங்கேற்பு
மதுரை,பிப்.2


சேது பொறியியல் கல்லூரியின் 10_வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அன்பழகன் கலந்துகொண்டு மாணவ_மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.




மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் 10_வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் முகமது ஜலீல் பட்டமளிப்பு விழாவை துவக்கிவைத்து வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் அ.செந்தில்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.




இந்த விழாவில் நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் கலந்துகொண்டு 250 மாணவ_மாணவிகளுக்கு பொறியியல் பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:_




தமிழ்நாட்டில் அண்மையில் கடந்த 50 ஆண்டு காலத்தில் நடைபெறாத வளர்ச்சி கல்வித்துறையில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐ.டி.துறை உலக அளவில் இந்திய நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட ஐ.டி.துறையில் கைதேர்ந்த இளைஞர்கள் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட தகுதி வாய்ந்த இளைஞர்கள் தமிழ்நாட்டில் இருந்து சென்று ஐ.டி.துறையில் சிறந்து பணியாற்றி வருகிறார்கள். இது நமது மாநிலத்தை உலக அளவில் அறியச்செய்துள்ளது. ஒரு காலத்தில் பலருக்கு கல்வி மறுக்கப்பட்டது.




இன்னார்தான் கல்வி அறிவு பெறவேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு இருந்தது. அதையெல்லாம் மாற்றி தற்போது யார் வேண்டுமானாலும் கல்வியை பெறலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வியை புகுட்டுவது ஒரு அரசின் கடமை. கல்வி யாருக்கும் மறுக்கப்பட கூடாது என்ற நிலை இப்போது உள்ளது. எனவே இதை பயன்படுத்தி அனைத்து இளைஞர்களும் முன்னேற வேண்டும். அதற்கான முயற்சியில் ஞிங்கள் ஈடுபட வேண்டும். இங்கு படித்து பட்டங்களை பெற்றுச்செல்லும் ஞிங்கள் உங்களது தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் அடைந்து ஏராளமாக சம்பாதித்து வீட்டையும் நாட்டையும் வளப்படுத்த எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.




பட்டமளிப்பு விழாவில் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதன்மை கல்வி அதிகாரி சீனி முகைதீன் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர். முடிவில் ஆங்கிலத்துறை தலைவர் கிறிஸ்டோபர் ரமேஷ் நன்றி கூறினார்.

Tuesday, January 6, 2009

கல்லூரி பேராசிரியர் பணிக்கு பி.எச்டி. பட்டம் கட்டாயம்

கல்லூரி பேராசிரியர் பணிக்கு பி.எச்டி. பட்டம் கட்டாயம்
மத்திய அரசு புதிய உத்தரவு


சென்னை, ஜன.6-

கல்லூரிகளில் பேராசிரியர் பணிக்கு பி.எச்டி. பட்டத்தை கட்டாயமாக்கும் வகையில் மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

கல்லூரி ஆசிரியர்

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர் ஆகிய பல்வேறு நிலைகளில் ஆசிரியர் பணி இடங்கள் உள்ளன. விரிவுரையாளர்களும், உதவி பேராசிரியர்களும் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் இணை பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர் என்று பதவி உயர்வு பெறுவார்கள்.

தற்போது விரிவுரையாளர் பணிக்கு எம்.பில். அல்லது ஸ்லெட், நெட் தேர்ச்சி தகுதியாக வைக்கப்பட்டுள்ளது. பி.எச்டி. முடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. முடித்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

யு.ஜி.சி. பரிந்துரை

இந்த நிலையில், கல்லூரி ஆசிரியர் ஊதிய நிர்ணயம் தொடர்பாக அமைக்கப்பட்ட பேராசிரியர் ஜி.கே.சதா கமிட்டியின் பல பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதைத்தொடர்ந்து கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை விட கூடுதல் சம்பளம் வழங்கப்பட இருக்கிறது.

இனிமேல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் என்று 3 வகையான ஆசிரியர் பணி இடங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், பேராசிரியர் பணிக்கு பி.எச்டி. பட்டத்தை கட்டாயமாக்க வேண்டும் என்றும் சதா கமிட்டி பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில், சதா கமிட்டியின் இந்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்திருந்தது.

பி.எச்டி. கட்டாயம்

இந்த நிலையில், யு.ஜி.சி. பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது. அதில், இனிமேல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் என்ற அடிப்படையில்தான் ஆசிரியர் பணி இடங்கள் இருக்க வேண்டும். இதுவரை இருந்து வந்த விரிவுரையாளர் பதவி நீக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் பணிக்கு கண்டிப்பாக பி.எச்டி. தேவை என்று கூறப்பட்டுள்ளது.

நேரடியாக பேராசிரியர் பணியில் சேருவதற்கும், இணை பேராசிரியர் பணியிலிருந்து பேராசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கும் பி.எச்டி. பட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. புதிய நியமனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 24, 2008

செல்ஃபோனில் படம் பிடித்த விவகாரம்: கடலூர் கல்லூரி ஆசிரியைகள் கைதாகிறார்கள்

செல்ஃபோனில் படம் பிடித்த விவகாரம்: கடலூர் கல்லூரி ஆசிரியைகள் கைதாகிறார்கள்

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080924132856&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&ndate=9/25/2008&dName=No+Title&Dist=0

கடலூர் மாவட்ட எஸ்.பி.யை சந்தித்து புகார் அளித்த மாணவி ஷகநாச்பேகம்,
அவரது பெற்றோர் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள்.

கடலூர், செப். 24: மாணவியை செல்ஃபோனில் படம் எடுத்து துன்புறுத்திய கடலூர் கல்லூரி ஆசிரியைகள் கைது செய்யப்படுவார்கள் என்று, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரதீப்குமார் புதன்கிழமை தெரிவித்தார்.

கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரியில் ஆசிரியர்களுக்கும் முதல்வருக்கும் இடையே எழுந்த பிரச்னைகள் காரணமாக, கடந்த 3 மாதங்களாக மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஆசிரியைகளின் தூண்டுதல் காரணமாகவே, மாணவிகள் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் திங்கள்கிழமை பி.ஏ. ஆங்கில இலக்கியம் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி ஷகநாச்பேகம், வகுப்புக்குச் சென்று இருந்தார்.

பாடம் நடத்த வராத ஆசிரியைகள் அவரை, பல கோணத்தில் செல்ஃபோனில் படம் பிடித்து துன்புறுத்தி உள்ளனர்.

இது குறித்து அவர் கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார்.

புதன்கிழமை அந்த மாணவி தனது பெற்றோருடன் வந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரதீப்குமாரைச் சந்தித்து மனு கொடுத்தார்.

பின்னர் எஸ்.பி. செய்தியாளர்களிடம் கூறியது:

கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் எழுந்துள்ள பிரச்னை, ஆசிரியைகளுக்கும் முதல்வருக்கும் இடையேயானது. இது மாணவிகள் பிரச்னை அல்ல. இப்பிரச்னைக்குக் கல்லூரி நிர்வாகம்தான் தீர்வு காணவேண்டும். ஞாயிற்றுக்கிழமை முதல்வர் கூட்டி இருந்த கூட்டத்துக்கு வந்த பெற்றோரை, ஆசிரியைகள் மிரட்டி இருக்கிறார்கள். திங்கள்கிழமை கோட்டாட்சியரை கட்டாயப்படுத்தி வெளியேற்றி இருக்கிறார்கள்.

ஆனால் அவர் இது குறித்துக் காவல்துறையில் புகார் செய்ய வில்லை. வகுப்புக்குச் சென்ற மாணவி ஷகநாச் பேகத்தை 8 ஆசிரியைகள் செல்ஃபோனில் படம் பிடித்து ஆபாசமாகத் திட்டி இருக்கிறார்கள்.

செல்ஃபோன் படங்களை தவறாகப் பயன்படுத்த நிறைய வாய்ப்பு இருக்கிறது. இது குறித்து விசாரணை நடத்தி, கைது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள, கடலூர் டி.எஸ்.பி.க்கு உத்தரவிட்டு இருக்கிறேன்.

ஏற்கெனவே சாலை மறியலுக்கு மாணவிகளைத் தூண்டியது தொடர்பான வழக்கைக் கைவிடவில்லை. வழக்கு விசாரணையில் உள்ளது. உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேவைப்பட்டால் கைது செய்யப்படுவார்கள். கல்லூரி வளாகத்துக்குள் வெளியாட்கள் நுழைவது குற்றம். விழாக்கள் எதுவும் இல்லாதபோது, முன்னாள் மாணவிகள் வருவதும் குற்றமாகும். போலீஸôரையும் செய்தியாளர்களையும் கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டது, என் தகவலுக்கு வந்துள்ளது. அச்சகத்தின் பெயர், அச்சிட்டோர் பெயர் இல்லாமல் போஸ்டர் அடித்து ஒட்டக் கூடாது. அவ்வாறு போஸ்டர் வெளியானால் அச்சகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பி.களுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன்.

கல்லூரி பிரச்னைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மூலமாக கல்லூரி நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றார் எஸ்.பி.



முஸ்லிம் அமைப்புகள் கண்டனம்



கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் வகுப்புக்குச் சென்ற மாணவி ஷகநாச்பேகத்தை 8 ஆசிரியைகள் செல்ஃபோனில் படம் பிடித்து துன்புறுத்தியதற்கு, முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. போலீஸ் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் அவை புதன்கிழமை அறிவித்து உள்ளன.

ஷகநாச்பேகம் தனது பெற்றோர் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சென்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரதீப்குமாரைச் சந்தித்து மனு அளித்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் ஷேக்தாவூத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் துணைத் தலைவர் முகமுது கமாலுதீன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் முகமது முஸ்தபா ஆகியோரும் உடன் சென்று இருந்தனர்.

இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:

மாணவியைக் கல்லூரி ஆசிரியர்களே செல்ஃபோனில் படம் எடுத்து மிரட்டிய சம்பவம் மோசமானது. வேறு எங்கும் நிகழாதது. இது ""சைஃபர் கிரைம்'' பிரிவில் வரும்.

சம்பந்தப்பட்ட ஆசிரியைகளைக் கைது செய்து, போலீஸôர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இல்லாவிட்டால் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் திரட்டி போராட்டம் நடத்துவோம்.

ஷகநாச்பேகம் மன உளைச்சலில் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார். மாணவிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியைகள்தான் பொறுப்பு.

இது குறித்து மனித உரிமை ஆணையத்துக்கும் புகார் அனுப்பி இருக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம், முதல்வர் மற்றும் ஆசிரியைகளை அழைத்துப் பேசி இருப்பதாகக் கூறப்படுகிறது.

நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கல்லூரி முதல்வர் ஆர்.வள்ளி, புதன்கிழமை விடுமுறையில் சென்றுள்ளார்.

எத்தனை நாள் விடுமுறை என்று தெரியவில்லை. பொறுப்பு முதல்வராக ரமாமணி நியமிக்கப்பட்டு இருக்கிறார். புதன்கிழமை மாணவிகள் கல்லூரிக்குச் சென்று இருந்தனர்.

Monday, August 25, 2008

கல்லூரி மாணவ, மாணவியருக்கு கட்டுரைப்போட்டி

கல்லூரி மாணவ, மாணவியருக்கு கட்டுரைப்போட்டி

தமிழ் இஸ்லாமியக் கழகத்தின் 13 ஆவது மாநாடு தஞ்சையில் அக்டோபர் 4,5 நாட்களில் நடக்க இருக்கிறது. அதையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஒரு கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது. மொத்தம் ரூ. 10 ஆயிரம் பரிசு தரப்படும்.

இஸ்லாமியர் தமிழர் தொண்டு என்ற தலைப்பில் கையெழுத்தில் பத்துப் பக்கத்துக்குள் கட்டுரை அமையவேண்டும். கல்லூரி மாணவர் என்பதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும்.

இன, மத வேறுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ளாலம். முதல் பரிசு ரூ. 3 ஆயிரம், 2 ஆம் பரிசு ரூ. 1000 ( 2 பேருக்கு ) மூன்றாம் பரிசு ரூ. 500 ( பத்து பேருக்கு )

கட்டுரை அனுப்ப வேண்டிய முகவரி

பொதுச்செயலாளர்
தமிழ் இஸ்லாமிய இலக்கியக் கழகம்
எண் 8 தம்பி சாயபு மரைக்காயர் வீதி
காரைக்கால் 609 002

கடைசி தேதி : 10 செப்டம்பர் 2008

Sunday, June 15, 2008

அப்துல் கலாம் கூற்றை நனவாக்கும் ஆலிம் முகம்மது சாலிஹ் கல்லூரி

அப்துல் கலாம் கூற்றை நனவாக்கும் ஆலிம் முகம்மது சாலிஹ் கல்லூரி


மாணவ -மாணவியரே கனவு காணுங்கள் என்று உன்னத தலைமகன் மரியாதைக்குரிய ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் கூற்று நன்கு கற்றால்தான் செயல்திறன் பெறலாம். செயல்திறன் அதிகரித்தால் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் பரிணமிக்கும் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் அறிவுசக்தியாக மிளிரும் அந்த அறிவு நல்வாழ்வை வளமாக்கும். இதனால் நம் அறிவு வளர்ந்து நம்நாடு வளம் பெறும்.

ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயிலும் வகையில் கல்விப் பணியை கடந்த 15 வருடங்களாக ஆலிஹ் முகம்மது சாலீஹ் அறக்கட்டளை மூலம் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கொடுப்பதில் பெருமைப்படுகிறோம். எங்களது கல்லூரியில் இன்ஜினீயரிங் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப் பிரிவுகள் உள்ளன.

பி.டெக்.கில் இன்பர்மேஷன் டெக்னாலஜி பாடப் பிரிவும் சிவில் இன்ஜினீயரிங் மெக்கானிக் இன்ஜினீயரிங் உள்ளது. மற்றும் மேலாண்மைப் படிப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு எம்.பி.ஏ., இரண்டு வருட எம்.சி.ஏ., படிப்பு உள்ளது.

ஆலிஹ் முகம்மது சாலீஹ் பாலிடெக்னிக் பிரிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், சிவில், மெக்கானிக்கல், இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பாடப் பிரிவுகள் மூலம் சிறந்த கல்வியை கொடுத்து வருகிறோம்.

எங்களது கல்வி நிறுவனத்தில் பாரா மெடிக்கல் சயின்ஸ் பிரிவில் பி.பி.டி, படிப்பும் வழங்கி வருகிறோம். இன்டஸ்ட்ரியல் டிரைனிங் பிரிவில் எலக்ரிஷியன், பிட்டர், மோட்டார் வாகனம் பற்றிய படிப்புகளும் உள்ளது.

கடந்த 2003-2004, 2004-05ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டாண்டுகள் பிசியோதெரபி பாடத்தில் தங்க மெடல் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Najumudin Habeeb
dateMon, Jun 16, 2008 at 1:45 PM

Dear Hidayath, Assalamu Alaikum. The donation they charge for every course is more than 200,000/- and more. This amount is very very high for an ordinary Muslim student. There are lot of poor Muslim students passed out with acadamically rich marks but they could not attend this college due to high donation. If IMAN can make some deal with the management for the admission of poor Muslim students, then we can say that this college is trying to make the dream of Kalaam TRUE. Other wise, it is one of a propaganda to tell lies. Regards. Najumudin.Â

Friday, June 6, 2008

திருவாரூரில் கேட்டரிங் கல்லூரி

திருவாரூரில் கேட்டரிங் கல்லூரி

பேரகான் கேட்டரிங் கல்லூரி
எஸ்.எம். பில்டிங்
அங்காளம்மன் சன்னதி தெரு
திருவாரூர் 610 002
மின்னஞ்சல் : paragon_panacea@yahoo.co.in
தொலைபேசி : 04366 325733

வழங்கும் படிப்புகள்

டிப்ளமோ இன் ஹோட்டல், ஹேட்டரிங் & லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட்

சான்றிதழ் படிப்புகள்

ஃபுட் புரொடக்‌ஷன்
ஃபுட் & பெவரேஜ் சர்வீஸ்
பிரண்ட் ஆபிஸ் மேனேஜ்மெண்ட்
ஹவுஸ் கீப்பிங்

லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட்

எம்பிஏ ( லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட் )
டிப்ளமோ இன் பிசினஸ் லாஜிஸ்டிக்ஸ் & சப்ளை செய்ன் மேனேஜ்மெண்ட்
டிப்ளமோ இன் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட்
டிப்ளமோ இன் பிரைட் பிசினஸ் மேனேஜ்மெண்ட்
சர்டிபிகேட் இன் பிசினஸ் லாஜிஸ்டிக்ஸ் & சப்ளை செய்ன் மேனேஜ்மெண்ட்

இப்படிப்புகள் சிங்கப்பூர் டைமெண்சன் கல்வி குழுமம் மற்றும் மலேசியாவின் யுனிசெல் பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்றது. மேலும் சென்னை லயோலா கல்லூரி தொழில்படிப்பு நிறுவனத்தின் இணைவு பெற்றது.

Monday, June 2, 2008

அரபுக் கல்லூரிகள்

அல் ஜாமிஅத்துல் ஹமீதிய்யா அரபுக் கல்லூரி
நிர்வாகம் : நாகூர் கல்வி அறக்கட்டளை
எண் 23 யாஹுசைன் தைக்கால் தெரு
நாகூர் 611 002
நாகப்பட்டிணம் மாவட்டம்
தொலைபேசி : 04365 251267
98 420 11211
98 436 55883

ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரி
லால்பேட்டை 608 303
கடலூர் மாவட்டம்
தொலைபேசி : 04144 269079
துவக்கம் ஹிஜ்ரி 1281 ஈஸவி 1864

ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி
நீடூர் நெய்வாசல் 609 203
நாகப்பட்டிணம் மாவட்டம்

கீழக்கரைஅரபு கல்லூரி பட்டமளிப்பு விழா

கீழக்கரைஅரபு கல்லூரி பட்டமளிப்பு விழா


கீழக்கரை, ஜுன்.2-

கீழக்கரை அரூஸிய்யா தைக்கா அரபு கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

அரபு கல்லூரி

கீழக்கரையில் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு 1671-ம் ஆண்டு மேலத்தெருவில் இஸ் லாமிய மார்க்க மகான் சதக் கத்துல்லா அப்பா என்பவ ரால் அரபு கல்லூரி தொடங் கப்பட்டது. இந்த கல்லூரிக்கு அல்மதரசத்துல் அரூஸிய்யா தைக்கா அரபிகல்லூரி என்று பெயர்.

இங்கு அரபு மொழி கல்வி கற்கும் ஆலிம், உலமாக்களுக்கு இலவச உணவு, தங்குமிடம் வழங்கப்படுகிறது. இந்த கல் லூரியை தைக்கா சாகிபு ஒலியுல்லா மற்றும் மார்க்க மாமேதை செய்யது முகமது மாப்பிள்ளை லெவ்வை ஆலிம் ஆகியோரின் வாரிசு கள் நிர்வகித்து வருகின்ற னர்.

பட்டமளிப்பு விழா

இந்த கல்லூரியின் மவுலவி ஆலிம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு டிரஸ்டி அல்ஹாஜ் டி.எம்.அகமது அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். சென்னை சுலைமான் அறக் கட் டளை தலைவர் அல்ஹாஜ் கே.எஸ்.எம்.சாகுல்ஹமீது ஆலிம் முன்னிலை வகித்தார். அல்மதரஸத்துல் அரூஸிய்யா தைக்கா டிரஸ்டி அல்ஹாஜ் கே.டி.எம். அகமது முஸ்தபா வரவேற்று பேசினார். டிரஸ்டி டி.எஸ்.ஏ.ஹமீது அப்துல் காதிர் அறிமுக உரையாற்றி னார்.கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளி வாசல் கத்தீபு எம்.அஜ்மத் உசேன் ஆலீம் தொடக்க உரையாற்றினார். காயல்பட்டிணம் மதரஸா மஹ்ரத்துல் காதிரியா அரபி கல்லூரி முதல்வர் எஸ்.கலந் தர் மஸ்தான் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு பேசி னார்.

விழாவில், கல்லூரி மேனே ஜிங் டிரஸ்டி அல்ஹாஜ் டாக் டர்.தைக்கா சுஐபு அலீம் கலந்து கொண்டு மாண வர்களுக்கு மவுலானா மவு லவி பட்டங்களை வழங்கி பேசினார். இதில் தைக்கா டிரஸ்டி அல்ஹாஜ் தைக்கா அகமது ஷாகீர், கீழக் கரை செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி பேராசிரியர் எம்.ரபீக் அகமது, அல்மதரசத்துல் அரூ ஸிய்யா தைக்கா பேராசிரி யர்கள் கே.ஏ.முகைதீன் அப் துல் காதர், எச்.முகைதீன் அப்துல்காதர், எம்.ஐ.முகமது சுல்தான், எஸ்.எஸ்.சலாஹூ தீன் ரிபாயி ஆகியோர் வாழ்த்தி பேசினர். டிரஸ்டி, அல்ஹாஜ் தைக்கா முகமது அஷரப் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

கலந்து கொண்டோர்

விழாவில் சீதக்காதி அறக் கட்டளை செயலாளர் காலித் ஏ.கே.புகாரி, இ.டி.ஏ. ஸ்டார் நிறுவனங்களின் நிர்வாகி ஷாக் கிர், உஸ்வத்துன் ஹசனா சங்க செயலாளர்எம்.கே.எம்.அசன் தம்பி, கே.வி.எம்.கïம், இஸ் லாமி பைத்துல்மால் -குத்பா கமிட்டி செயலாளர் மைதீன் தம்பி, டாக்டர்.செய்யது அப் துல்காதர், என்.டி.எம்.அகமது பாரூக், சா.கி.மு.ஹபீபு முக மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஹமீது சுல்த்தான் ஆலிம் அரூஸி உள்பட பல ருக்கு மவுலானா மவுலவி பட்டங்களும் மற்றும் அவர் கள் படித்த கல்வி படிப்புக் கான பட்டங்களும் வழங்கப் பட்டது. முடிவில் கல்லூரி முதல்வர் சலாகுதீன் ஆலிம் நன்றி கூறினார். கீழக்கரை மேலத்தெரு பள்ளிவாசல் இமாம் அல்ஹாஜ் எஸ்.ஏ.முக மது ஆரிப் ஆலிம் துஆ ஓதி னார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=416316&disdate=6/2/2008&advt=2

Sunday, May 25, 2008

கல்வியியல் கல்லூரிகள்

கல்வியியல் கல்லூரி
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் 613 010
தொலைபேசி : 04362 - 227782 / 226720
www.tamiluniversity.ac.in

பொறியியல் கல்லூரிகள்

Adhiyamaan College of Engineering
Dr M G R Nagar
Hosur 635 109
Krishnagiri District
Tel : 04344 261025/260570/261002
Fax : 04344 260573

E mail : aeri_admission@yahoo.com
info@adhiyamaan.ac.in
www.adhiyamaan.ac.in


Chennai Office :

Madras Institute of Social Science
621 Anna Salai
Khiviraj Motors Bldg
Chennai 600 006
Tel : 044 28295110 / 2829 3218 / 2829 3112
Fax : 044 2829 5110

Tuesday, May 20, 2008

சென்னை பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கண்காட்சி - 27 கல்லூரிகள் பங்கு பெறுகின்றன

சென்னை பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கண்காட்சி - 27 கல்லூரிகள் பங்கு பெறுகின்றன


27 கல்லூரிகள் பங்குபெறும் உயர் கல்வி கண்காட்சி-2008, சென்னை பல்கலைக்கழகத்தில் 19-ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது.

இது குறித்து சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.ராமச்சந்திரன், செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:

பிளஸ் 2-வில் தேறிய மாணவர்கள் அடுத்து எந்த வகையான இளங்கலை, இளஅறிவியல் பாடத்தைத் தேர்வு செய்வது என்பது குறித்து விளக்குவதற்காக முதல்முறையாக இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

இதில் பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள 27 தனியார் கல்லூரிகள், சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனம் ஆகியவை பங்கேற்கின்றன.

இந்த கண்காட்சி மூலம் கல்வி நிறுவனங்களில் உள்ள துறைகள், வேலைவாய்ப்புக்கு உதவும் துறைகள் பற்றிய தகவல்கள், கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள், கட்டணம், மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் போன்றவற்றை ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளலாம்.

விளக்கக் கையேடுகள், அனைத்து கல்லூரிகளின் விண்ணப்பங்கள் ஆகியவையும் இந்த கண்காட்சியில் வழங்கப்படும்.

அடுத்த ஆண்டு..மாவட்டங்களில்:பல்கலைக்கழக ஆட்சி எல்லைக்குள் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த ஆண்டு அந்தந்த மாவட்டம் வாரியாக இந்த கண்காட்சி நடைபெறும்.

மேலும் இதில் தலைசிறந்த தொழிற்சாலைகள், நிறுவனங்களை பங்குகொள்ளச் செய்து, அவர்கள் மூலம் எந்தெந்த படிப்புகளுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்பதை மாணவர்களுக்கு விளக்கமளிக்கச் செய்யும் திட்டமும் உள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள 122 கல்லூரிகளில் மொத்தம் 32 ஆயிரம் இடங்கள் உள்ளன. பி.காம். பாடத்தில் 5 பிரிவுகளும், பி.எஸ்.சி. பாடத்தில் 48 விதமான பிரிவுகளும் உள்ளன என்றார்.

பல்கலைக்கழக கல்லூரி மேம்பாட்டுக் குழும பொறுப்புத் தலைவர் வி.கே.பத்மநாபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Wednesday, April 9, 2008

இஸ்லாத்தை பற்றி சென்னை பொறியியல் கல்லூரி மாணவர்களின் ......

இஸ்லாத்தை பற்றி சென்னை பொறியியல் கல்லூரி மாணவர்களின் கீழ்காணும் கேள்விகளுக்கு மருத்துவர் K.V.S .ஹபீப் முஹம்மது அவர்கள் தொலைகாட்சியில் மானுட வசந்தம் நிகழ்சி மூலம் அளித்த பதில் இதோ உங்கள் முன் www.tamilmuslimtube.com ல்

Part 1.இறைவனை ஏன் நம்ப வேண்டும்? நல்ல காரியங்கள் பல செய்து நாத்திகராக வாழ முடியாதா?
Part 2.குர்'ஆன் அன்பை போதிக்கிறது, ஆனால் முஸ்லிம்கள் ஏன் மனித நேயமற்றவர்களாக நடந்து கொள்கிறார்கள்?
Part 3.இந்துக்கள் பசுவை தெய்வமாக வணங்கும் போது, முஸ்லிம்கள் அதை உணவாக உண்ணலாமா?
Part 4.முஸ்லிம்கள் உபயோகப்படுத்தும் "786"ன் முக்கியத்துவம் என்ன?
Part 5.இஸ்லாத்திற்கும் , கிறிஸ்துவதிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
Part 6.இறைவன் ஏன் பல வேத நூல்களை படைக்க வேண்டும், ஒன்றை மட்டும் படைத்திருந்தால் உலகில் குழப்பம் ஏற்படாதல்லவா?
Part 7.முஸ்லிம்கள் கொடுக்கும் புனித பொருட்களை இந்துக்கள் உபயோகிக்கும் போது இந்துக்களின் புனித பொருட்களை முஸ்லிம்கள் வாங்கி ஏன் உபயோகிப்பதில்லை?


thamizhmuslim@gmail.com

Thursday, March 13, 2008

வெளிநாடு வாழ் இந்தியர் குழந்தைகள் அண்ணா பல்கலையில் சேர்க்க ....................

வெளிநாடு வாழ் இந்தியர் குழந்தைகள் அண்ணா பல்கலையில் சேர்க்க ....................

வெளிநாடு வாழ் இந்தியர் குழந்தைகள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கீழ்க்கண்ட கல்லூரிகளில் B.E./B.Tech. / B. Arch. மற்றும் முதுநிலைப்படிப்புகளில் சேர்க்க 2008 -09 ஆம் கல்வியாண்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கிண்டி பொறியியல் கல்லூரி
ஏ.சி. தொழில்நுட்பக் கல்லூரி
கட்டிடக்கலை & திட்டவியல் பள்ளி ( School of Architecture & Planning Campus )
சென்னை தொழில்நுட்பக் கல்லூரி

விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய www.annauniv.edu
அல்லது
இயக்குநர் ( சேர்க்கை )
சென்டர் ஃபார் இண்டர்நேஷனல் அஃபையர்ஸ்
அண்ணா பல்கலைக்கழக வளாகம்
சென்னை 600 025

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 200 அமெரிக்க டாலர் வங்கி வரைவோலையுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு இளநிலைப் படிப்புக்கு 06 ஜுன் 2008 க்கு முன்னதாகவும், முதுநிலைப் படிப்புகளுக்கு 30 ஜுன் 2008 க்கு முன்னதாகவும் அனுப்ப வேண்டும்.


Director ( Admissions ) / Director
Centre for International Affairs
Anna University Chennai
Chennai 600 025


Source : Gulf News March 6,2008 Advt in Business section
Page No. 38

Sunday, March 9, 2008

பெண்கள் படித்தால் குடும்பம் பல்கலைகழகம் : பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி


பெண்கள் படித்தால் குடும்பம் பல்கலைகழகம் : பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி

கீழக்கரை: பெண்கள் படித்தால் குடும்பமே பல்கலை கழகமாகும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார். கீழக்கரை தாசீம்பீவி அப் துல்காதர் பெண்கள் கல்லுõரி 17வது பட்டமளிப்பு விழா ஹசன்அலி எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. சீதக்காதி அறக்கட்டளை செயலாளர் காலித் ஏ.கே.புஹாரி வரவேற்றார். அமைச்சர் பொன் முடி பேசியதாவது: கல்லுõரிகளில் பெண்களின் விகிதம் அதிகரித்துள்ளது. விவசாய கல்லுõரிகளில் மாணவர்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர். பெண்கள் படித்தால் குடும்பமே பல்கலை கழகமாகும். படிக்கிற போது சிந்தனை வளர்ச்சி பெறவேண்டும், மூடநம்பிக்கைகளுக்கு இடம் தரக்கூடாது. தமிழக முதல்வர் கருணாநிதி 11 தொழிற்சாலைகள் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இதன்மூலம் அடுத்த மூன்றாண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார். கல்லுõரி முதல்வர் சுமையா மாணவியர்களுக்கான உறுதி மொழியை வாசித்தார். அமைச்சர் தங்கவேலன், பவானி எம்.பி., பெண்கள் கல்லுõரி இயக்குனர் ஷெரீப்பா அஜீஸ், நகராட்சி தலைவர் பஷீர் அகமது, மாவட்ட ஊராட்சி தலைவர் ரவிசந்திர ராமவன்னி, சீதக்காதி டிரஸ்ட் பொது மேலாளர் ஜலால், துணை பொது மேலாளர் ஷேக்தாவூகான் ஊராட்சி மன்ற தலைவர்கள் மகாவள்ளி(தில்லையேந்தல்) முருகேசன்(மாயாகுளம்) லட்சுமி(ரெகுநாதபுரம்) உட்பட பலர் பங்கேற்றனர். பல்கலை கழக அளவில் முதல் ராங்க் வாங்கிய முத்துமீனாட்சி, செய்யதா நஷீபா, அரிபாபேகம், நஜிராபானு உட்பட தரப்பட்டியலில் இடம் பெற்ற 19 மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப் பட்டன. அலுவலக நிர்வாக அதிகாரி அஜீஸ்முகைதீன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Dear Hidayath, Assalamu Alaikum. How are you all? I have attended the Graduation ceremony of THASIM BEEVI ABDUL KADER COLLEGE FOR WOMEN at Keelakkarai on 8th March 2008. It was a very interesting event to see our own sisters excelling in all fields of education. I could see the visionary personality if BSA, the father of modern day Muslim education.

First, second and third ranks of MCA, first, second and third ranks of B.Sc.(Home Science), first,second and third ranks of B.Sc (Home science with computer application), first,second,fourth,fifth, sixth, seventh, eigth and nineth ranks of B.A.(English Literature), third rank of B.Sc(Mathematics) and third rank of B.Sc(Information Technology) were secured by fourteen Muslim sisters and five Hindu sisters. This is a great achievment for TBAK College for Women. They are securing many ranks of Alagappa University from year three of their opening. ALHAMDU LILLAAH. Give them a big clapping hand by posting this achievment in your daily postings. Regards. Najumudin.

najumudin@rediffmail.com

Friday, January 18, 2008

சிறுபான்மை மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு

சிறுபான்மை மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு
கல்வி உதவி தொகை

+1 முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப் பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ/மாணவியருக்கு 2007 - 2008 முதல் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தினை மத்திய அரசின் சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2876 மாணவர்களுக்கு, இவ்வுதவிகள் கிடைக்கும். அதில் 1372 முஸ்லிம் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பங்களுக்கும் தொடர்பு கொள்க:

http://www.minorityaffairs.gov.in/

Tuesday, August 14, 2007

MUSLIM POLYTECHNICS

01. MOHAMED SATHAK POLYTECHNIC COLLEGE
Kilakarai - 623 806
Tel : 04567 - 244889/241392
Fax : 04567 - 244928
E mail : info@mspc.ac.in
www.mspc.ac.in

02. Aalim Muhammed Salegh Polytechnic College
Nizara Educational Campus
Muthapudupet
Avadi IAF
Chennai 55
Tel : 2684 2636 /26842339
Fax : 26842447

Thursday, August 2, 2007

அரபுக் கல்லூரிகள்

ஆமிர் கலீமி அரபிக் கல்லூரி
இலாஹி ஹால்
எண் 2/46 அசுதீன் கான் தெரு
ஆதம் மார்க்கெட் எதிரில்
திருவல்லிக்கேணி
சென்னை 600 005
தொலைபேசி : 98 407 78677 / 98 407 76692
aamirkaleemiarabiccollege@yahoo.co.in


Arivaham
Muthuthevanpatti
Theni - 625 547
Tel : 04546 - 264808

Arivaham for ladies
Ervadi - 627 103
Tel : 04637 - 240948



Darul Uloom Nadwatul Ulama
P O Box No. 93
Lucknow - 226 007
Tel : 0522 - 2740151/2741316
nadwi@nadwi.net
Rabeynadwi@yahoo.com



IRSHATHUL ULOOM ARABIC COLLEGE
Irshathu Nagar
Alambadi Road
Perambalur - 621 212
Tel : 04328 - 220823


ஜாமி ஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரி
காஜா நகர்
திருச்சி 620 020
0431 2420389

கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக் கல்லூர்
கிரசண்ட் வளாகம்
வண்டலூர்
சென்னை 600 048
தொலைபேசி : 22751280/82
bukhariarabic@yahoo.co.in



மத்ரஸயே மஜீதிய்யா பெண்கள் ஷரீஅத் கல்லூரி நிஸ்வான்
மதீனா பள்ளிவாசல் அருகில்
காயிதெமில்லத் நகர்
வடகரை
பெரியகுளம் 656 501
தேனி மாவட்டம்
தொலைபேசி : 93457 41994 / 98426 71896 / 04546 232 786
அல்ஹாஜ் எஸ் முஹம்மது ஸாதிக் யூசுஃபி - தாளாளர்



Manbavul Hasanath Arabic College
Nachiyarkoil
Kumbakonam Taluk
Tel : 0435 2467855

நூருல் ஹிதாயா ஆங்கிலோ அரபிக் கல்லூரி
14 ஜாஹிர் ஹுசை தெரு
பனையூர்
சோழிங்கநல்லூர் (அஞ்சல் )
சென்னை 600 119
எம்.பி. முஹம்மது ஜக்கரியா ஹஸனி 98 403 70922


RAHMATH ARABIC ACADEMY
Abdul Kasim Nagar
No 140 Pattukottai Road
Muthupet 614 704
Tiruvarur Dist
Tel : 04369 - 261796

MUSLIM ARTS COLLEGES

AIMAN Arts, Science Women's College
K Sathanur
Trichy 620 021
Tel : 0431 - 2455876/2455407
E-mail : principal@aimancollege.org
www.aimancollege.org


RDB Arts,Science College
Papanasam - 614 025
Tanjore Dist
Tel : 04374-221267/222123
Cell : 92452 87079

Justice Basheer Ahmed Sayeed College for Women ( Autonomous )
New No 56 Old No 310
K B Dasan Road
Teynampet
Chennai 600 018
Tel : 243 64152 / 24364140
Fax : 24364533
www.jbascollege.com