Thursday, May 13, 2010

உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம் தொடர்ச்சி:

உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம் தொடர்ச்சி:



தமிழக அரசு மாற்றுத்திரனாளிகளுக்கு கீழ் கண்ட ஊக்கத் திட்டத்தினை அறிவித்துள்ளது. அதனை சமுதாய மக்கள் பயன்படுத்த வேண்டுகிறேன்.:


அரசு பஸ்களில் நான்கில் ஒரு பங்கு கட்டணச் சலுகை

கூடுதல் எண்ணிக்கையில் அவர்களுக்கு கடனுதவி பெறும் வகையில் அரசு உத்திரவாதத் தொகை ரூபாய் நான்கு கோடியிலிருந்து ரூபாய் எட்டுக் கோடியாக உயர்த்தல்.

திருமண உதவித் தொகை ரூபாய் 20 ஆயிரத்திலிருந்து ரூபாய் 25 ஆயிரமாக உயர்த்தல்
பத்தாவது மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடத்தில் வெற்றியினை தட்டிச் செல்பவர்களுக்கு ரொக்கத்தொகை மூன்று மடங்காக உயர்த்துதல்.

ஓன்றுக்கு மேற்பட்ட குறைபாடுகள் உடையவர்களுக்கு ஆண்டுக்கு 1500 மடக்கு சக்கர நாற்காலி வழங்குதல். முடக்கு வாதத்தால் பாதித்தவர்களுக்கு 500 பேருக்கு சிறப்பு நாற்காலி வழங்குதல்.

தசைப்பயிற்சி மையம் சென்னைஇ திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, வேலூர் மாவட்டங்களில் அமைத்தல்.

அங்கன்வாடி ஊழியர்கள் வேலையில் முக்கியத்துவம் கொடுத்தல்.

(பெரும்பாலான ஏழை முஸ்லிம் பெண்கள் வீட்டு வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு அங்கன் வாடியில் வேலை வாய்ப்பினை பெற்று அவர்களை அரசு அரவணைக்கும் ஊழியர்களாக ஆக்க வேண்டும் சமுதாய, மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஓய்வூதியமும் உண்டு என்று சமீபத்தில் அறிவிப்பு வந்துள்ளது)