துபாய் தமிழ்ச் சங்கம் நடத்தும் நகைச்சுவை பட்டிமன்றம்
துபாய் தமிழ்ச் சங்கம் ஏப்ரல் 3, 2008 வியாழக்கிழமை மாலை 7.30 மணிக்கு துபாய் இந்திய உயர்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள ஷேக் ராஷித் அரங்கில் ராஜா பங்கு பெறும் நகைச்சுவைப் பட்டிமன்றம் நடைபெற இருக்கிறது.
அத்துடன் பிரவஸி பாரதிய சம்மன் விருதுபெற்ற இந்திய சமூக நலச் சங்க ஒருங்கிணைப்பாளர் கே. குமார் கௌரவிக்கப்பட உள்ளார். மேலும் இவ்விழாவில் தலைமை விருந்தினர்களாக 'சித்தி' ராதிகா மற்றும் சரத்குமார் பங்கேற்க உள்ளனர். அதனைத் தொடர்ந்து குழந்தைகள் நடனம் நடைபெறும் என துபாய் தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் திருமதி சந்திரா ரவி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெற வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்ஃபர், அகுமென், நைல் ஹெர்பல் ஹேர் ஆயில், ஈடிஏ ஸ்டார், ரிட்ஸி பால்ம் ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் உதவிகரமாக இருந்து வருகின்றன.
இந்நிகழ்ச்சியின் ஊடக அணுசரனை விண் டிவி.மேலதிக விபரம் பெற 050 6370472