Tuesday, January 6, 2009

கல்லூரி பேராசிரியர் பணிக்கு பி.எச்டி. பட்டம் கட்டாயம்

கல்லூரி பேராசிரியர் பணிக்கு பி.எச்டி. பட்டம் கட்டாயம்
மத்திய அரசு புதிய உத்தரவு


சென்னை, ஜன.6-

கல்லூரிகளில் பேராசிரியர் பணிக்கு பி.எச்டி. பட்டத்தை கட்டாயமாக்கும் வகையில் மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

கல்லூரி ஆசிரியர்

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர் ஆகிய பல்வேறு நிலைகளில் ஆசிரியர் பணி இடங்கள் உள்ளன. விரிவுரையாளர்களும், உதவி பேராசிரியர்களும் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் இணை பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர் என்று பதவி உயர்வு பெறுவார்கள்.

தற்போது விரிவுரையாளர் பணிக்கு எம்.பில். அல்லது ஸ்லெட், நெட் தேர்ச்சி தகுதியாக வைக்கப்பட்டுள்ளது. பி.எச்டி. முடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. முடித்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

யு.ஜி.சி. பரிந்துரை

இந்த நிலையில், கல்லூரி ஆசிரியர் ஊதிய நிர்ணயம் தொடர்பாக அமைக்கப்பட்ட பேராசிரியர் ஜி.கே.சதா கமிட்டியின் பல பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதைத்தொடர்ந்து கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை விட கூடுதல் சம்பளம் வழங்கப்பட இருக்கிறது.

இனிமேல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் என்று 3 வகையான ஆசிரியர் பணி இடங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், பேராசிரியர் பணிக்கு பி.எச்டி. பட்டத்தை கட்டாயமாக்க வேண்டும் என்றும் சதா கமிட்டி பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில், சதா கமிட்டியின் இந்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்திருந்தது.

பி.எச்டி. கட்டாயம்

இந்த நிலையில், யு.ஜி.சி. பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது. அதில், இனிமேல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் என்ற அடிப்படையில்தான் ஆசிரியர் பணி இடங்கள் இருக்க வேண்டும். இதுவரை இருந்து வந்த விரிவுரையாளர் பதவி நீக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் பணிக்கு கண்டிப்பாக பி.எச்டி. தேவை என்று கூறப்பட்டுள்ளது.

நேரடியாக பேராசிரியர் பணியில் சேருவதற்கும், இணை பேராசிரியர் பணியிலிருந்து பேராசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கும் பி.எச்டி. பட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. புதிய நியமனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றுமையே தீர்வு!

ஒற்றுமையே தீர்வு!

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1125&Itemid=52

உண்மைகள் உறங்குவதற்கும் அசத்தியமும் அட்டூழியமும் அதிகாரங்களில் வீற்றிருப்பதற்கும் அநியாயமாக ஒரு சமூகம் அடக்கி ஒடுக்கப்படுவதற்கும் தங்களது உரிமைகள் என்ன என்பதைக் குறித்தும் அதனை அடைவதற்கான வழிமுறைகள் யாவை என்பதைக் குறித்தும் போதிய அறிவின்றியும் அதற்காக ஒன்றுபட்டு போராடும் போராட்ட குணமின்றியும் இருப்பதே அச்சமூகம் பின்தங்கிக் கிடப்பதற்கு முழு முதற்காரணமாகும். விழிப்புணர்ச்சி என்பதும் ஒன்றிணைந்து உரிமைக்காக உழைத்தல் என்பதும் ஒன்றோடொன்று கலந்ததாகும். இரண்டில் எந்த ஒன்றில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் உண்மை உறங்கும்; அக்கிரமம் கோலோச்சும்; உரிமைக்குரியவர் அநியாயமாக அடக்கி ஒடுக்கப்படுவர். இவ்விரண்டில் இரண்டுமே இல்லாதிருந்தால்.....?


80 களிலிருந்து 2000 க்கு இடைப்பட்ட 20 ஆண்டுகால இடைவெளியில் இந்திய முஸ்லிம்களின் நிலையினை எடுத்துப் பார்த்தால் கிட்டத்தட்ட மேற்கண்ட இரண்டுமே இல்லாமல், அநியாயக்காரர்களால் படுபயங்கரமாக அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டு கொள்ளலாம். இதனைத் தெளிவாக படம் பிடித்துக் காண்பித்ததுதான் இந்திய முஸ்லிம்களின் அரசியல், அதிகார, கல்வி, பொருளாதார நிலை குறித்த சச்சார் கமிட்டியின் அறிக்கை.

இந்திய அரசியல்-அதிகார அமைப்புக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது போன்று, தங்களை எவர் ஆண்டால் என்ன? யார் அதிகாரத்தில் இருந்தால் என்ன என்று, இந்திய முஸ்லிம் சமூகம் அசட்டையாக இருந்ததன் விளைவு, நாட்டில் வெடிக்கும் அனைத்து குண்டுகளுக்கும் மூலாதாரியாக வேறு சக்திகள் இயங்கினாலும் கார்க்கரேக்கள் மூலம் அவை வெளிச்சத்துக்கு வந்தாலும் சாமர்த்தியமாக அவை மறைக்கப்பட்டு குற்றவாளிக் கூண்டில் நிரபராதியான இந்த முஸ்லிம் சமூகம் அடைக்கப்பட்டு நாட்டை விட்டு அந்நியப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

காலம் கடந்தெனினும் இன்று, மாநிலங்களிலிருந்து தேசியம்வரை, அரசியல் விழிப்புணர்ச்சியும் அதனை அடைவதற்கான வழிமுறைகளைக் குறித்துச் சிந்திக்கும் போக்கும் சமூகத்தில் கொஞ்சங் கொஞ்சமாக வேரூன்றி வருகிறது.

இதற்கான வெளிப்படையான உதாரணங்களாக சமீபத்தில் தமிழகத்தில் உருவான ஐ.டி.எம்.கே, தமுமுகவின் மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற முஸ்லிம் அரசியல் இயக்கங்களும் தென்னகத்தை மையமாக வைத்து உருவாக நினைக்கும் பாப்புலர் 'ஃப்ரண்ட ஆஃப் இந்தியா'வின் அரசியல் பிரவேசமும் தேசிய அளவில் செயல்படப் போகும் ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் பிரவேச அறிக்கையும் சான்றுகளாக அமைந்துள்ளன.

முஸ்லிம்கள் அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தால் மட்டும் போதாது. அதனை அடைய, "அரசியலில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டால் மட்டுமே அற்புதங்களை நிகழ்த்திக் காட்ட இயலும்!". இதனை ஒரு தாரக மந்திரமாகக் கையில் எடுத்துக் கொண்டு செயலாற்ற இந்த அமைப்புகள் முன்வர வேன்டும். என்றாலே உரிமைகளை மீட்டெடுப்பதிலும் அடக்கி ஒடுக்கப் படுவதிலிருந்து சமுதாயத்தை முழுமையாகப் பாதுகாப்பதிலும் வெற்றி பெற இயலும்.

இந்தத் தாரக மந்திரம் சரியாகப் பின்பற்றப் படுமானால், தமிழக அரசியல் கட்சிகள் பெருமளவில் முஸ்லிம்களை அணுகி மன்றாட வேண்டிய நிலையினை முஸ்லிம் சமுதாயத்தால் ஏற்படுத்த இயலும்.

கடந்த 1967 இல் தமிழகத்தில் நடந்த நான்காவது சட்டசபைத் தேர்தலின்போது இஸ்லாமியர்களிடையே ஏற்பட்ட மார்க்க மற்றும் அரசியல் ரீதியிலான ஒற்றுமை ஏற்படுத்திய விளைவுகளை ஒரு சிறந்த உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

தமிழகத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகை மொத்த மக்கள் தொகையில் 6% என அரசு பதிவேடு கூறுகிறது.

கடந்த 1967 இல் காயிதே மில்லத் இஸ்மாயில் அவர்களின் தலைமையில் அமைந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மூலம் தமிழக முஸ்லிம்கள் ஓரணியில் திரண்டனர். காயிதே மில்லத் அவர்கள் அண்ணாதுரையுடன் கைகோர்த்து தி.மு.கவுடனான வலுவான அரசியல் கூட்டணியை அமைத்தார்.

அதனைத் தொடர்ந்து 1967 தேர்தல் களத்தில் 137 இடங்களைத் திமுக கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது. 1962 இல் நடந்த இதற்கு முந்தைய தேர்தலில் இதே திமுக வெறும் ஏழு இடங்களை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது.

1967 தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து திருச்சியிலிருந்து பிரசுரமாகும் "மறுமலர்ச்சி" செய்தித்தாள் தேர்தல் முடிவுகளைப் பற்றிய தனது ஆய்வுகளை மேற்கொண்டது.

அதில், 58 தொகுதிகளில் திமுக எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றதற்கான காரணிகள் அத்தனையும் ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகின. அதாவது மேற்கண்ட தொகுதிகளில் மூவாயிரம் முதல் பத்தாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது திமுக.

மேற்கூறிய அதே தொகுதிகளில், முஸ்லிம்களின் ஓட்டுக்கள் அனைத்தும் பெருவாரியாக திமுகவிற்கு அளிக்கப்பட்டிருந்ததும், அதுவே திமுகவின் அரசியல் வரலாற்றில் அண்ணாதுரையின் தலைமையில் முதன் முறையாக திமுக பெருவாரியான இடங்களைக் கைப்பற்றக் காரணமாயிருந்ததும் நிரூபிக்கப்பட்டன. தேர்தல் களத்தில் 80% தொகுதிகளில் வெற்றியினை நிர்ணயிப்பது வெறும் 5% முதல் 10% வரையிலான ஓட்டுக்களே என்பதும் அதுவே ஒரு வேட்பாளரின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடியதுமாகும் என்பதும் சிறுபிள்ளைக்குக்கூடத் தெரியும் ஒரு விஷயமாகும்.

அரசியல் ரீதியில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஓரணியில் நின்றால் தமிழக அரசியலை நிர்ணயிக்கக்கூடிய பெரும் சக்தியாக முஸ்லிம்கள் விளங்க முடியும்.

தமிழக முஸ்லிம்களின் சக்தி என்னவென்பதைத் திமுகவின் மூத்த தலைவர்கள் அனைவரும் நன்கு அறிவர். அதிலும் குறிப்பாக திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் கண்களுக்கு தமிழக முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ள தமுமுக- வினை தம் பக்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் மிகுந்து காணப்படுகிறது.

இந்தியா விடுதலை பெற்று 61 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்திய அளவில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு கேட்டுப் பெறப் போராடும் வேளையில் முஸ்லிம்களுக்கு 3.5% இட ஒதுக்கீட்டைத் திமுக அளித்தது இந்த ஆவலை மனதில் வைத்துத்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அதே வேளையில் இந்திய ராணுவத்தில் 3.5 % முஸ்லிம்கள் உள்ளனரா? அல்லது வெறும் 0.25% மட்டுமா? போன்றவற்றினைப் பற்றி இத்தனை நாள் அறியாத கட்டுப் பெட்டிகளாக முஸ்லிம்கள் இருந்து வந்தனர்.

இதனைப் பற்றிய கேள்விகள் எழுப்பியபின் தொடர்ந்த விசாரணையில் அநீதியும் அவநம்பிக்கையும் வெளிப்படையாகத் தெரிந்தன. இத்தனை நாட்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த அநியாயத்தினை வெளிக் கொண்டுவந்த சச்சார் கமிட்டி அறிக்கையினை முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டும். இதனை ஒட்டிய கேள்விகளையும் உரிமைக்குரல்களையும் முஸ்லிம் அறிவுஜீவிகள் உரிய இடங்களில் எழுப்ப வேண்டும்.

ஆக, ஒரு 6% முஸ்லிம் மக்கள்தொகை 40% சட்டசபை இடங்களை வெற்றியோ தோல்வியோ அடையச் செய்து தமிழக அரசியலை நிர்ணயிக்குமெனில் இந்திய அளவில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் என்னவாகும் என்பதை இந்தச் சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டும். குறிப்பாக உ.பி, கேரளா, அஸ்ஸாம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்களே துருப்புச் சீட்டுக்களாக உள்ளனர். அரசியல் ரீதியில் முஸ்லிம் அமைப்புகளிடையே ஒற்றுமை மலர்ந்தால் இந்திய அளவில் சிறிதும் பெரிதுமாக 150 பாராளுமன்ற சீட்களை முஸ்லிம்களால் நிர்ணயிக்க முடியும் என்பது ஆணித்தரமான உண்மை.

மார்க்க ரீதியில் இயக்கங்கள், அமைப்புக்கள் என்று ஏகத்திற்கு தமிழகத்தில் பெருகினாலும், அவைகூடத் தம்மை வளர்த்து விட்ட சாதாரண பாமர முஸ்லிம்களுக்கு அரசு மூலம் கிடைக்கக் கூடிய உரிமைகளை, பலன்களை எப்படி வாங்கித் தருவது? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்திய அளவிலும் மாநில அளவிலும் அரசியல் ரீதியில் முஸ்லிம்கள் பிரிந்து கிடப்பதே கடந்த 60 ஆண்டுகளாக மோசமான பின்தங்கியிருக்கும் சமுதாயமாக முஸ்லிம் சமுதாயத்தை இன்னும் வைத்திருக்கிறது.

எனவே முஸ்லிம்கள் குறைந்தபட்சம் அரசியல் ரீதியில் ஒன்றுபட்டு மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கும் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம் சமுதாய இயக்கங்கள், அமைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரீதியிலாக கொள்கை கட்டமைப்பினைக் கொண்டிருந்தாலும் தொலைநோக்குப்பார்வையுடன் முஸ்லிம் சமுதாயம் செல்ல வேண்டிய பாதையினை நிர்ணயிக்கும் அரசியல் சக்தியாக உருவெடுக்க தேசிய அளவில் ஒன்றிணைந்து ஒரே கட்சியாக வெளிவர வேண்டும்.

வெற்றியைத் தரக்கூடியவன் வல்ல இறைவன். அதற்கான அணுகூலங்களை அமைக்க சமுதாயம் ஒன்றுபடட்டும்!

கல்வி உதவித்தொகை

1.ஐக்கிய பொருளாதரப் பேரவை
அலி டவர்ஸ் 55 கிரீம்ஸ் ரோடு
ஆயிரம் விளக்கு சென்னை-6
(அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மட்டும்)

2. இஸ்லாமிக் டெவலப்மெண்ட் பேங்க்
முஸ்டாக் அஹமது (ஐ.டி..பி)
11 இராயப்பேட்டை நெடுஞ்சாலை
சென்னை-14
(அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மட்டும்)

3. ஆல் இந்தியா இஸ்லாமிக் ஃபவுண்டேஷன்
688 அண்ணாசாலை
சென்னை-6

4. பி.எஸ் அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் ஃபவுண்டேஷன்
4 மூர்ஸ் சாலை
சென்னை-6
(ஜகாத் உரியவர்களுக்கு மட்டும்)

5. முகம்மது சதக் அறக்கட்டளை
133 நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை
சென்னை-34

6. மெஜஸ்டிக் ஃபவுண்டேஷன்
117 ஜெனரல் பேட்டர்ஸ் சாலை
சென்னை-2

7. ஆலிம் முகம்மது சாலிஹ் அறக்கட்டளை
நிசாரா பொனன்ஸா எல்.ஐ.சி எதிரில்
அண்ணாசாலை
சென்னை-2

8. செய்யது வெல்ஃபேர் டிரஸ்ட்
சிந்துபூந்துரை
நெல்லை

9. அஸ்மாகாசிம் அறக்கட்டளை
மாண்ட்டியத் சாலை
எக்மோர் சென்னை-8

10. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்ஃபேர் டிரஸ்ட்
டி-பிளாக் 10(23) 11 வது தெரு
அண்ணா நகர் சென்னை-40

11. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்
118பி வேப்பேரி நெடுஞ்சாலை
சென்னை-3

12. இஸ்லாமிய இலக்கியக் கழகம்

27-உட்ஸ் சாலை

சென்னை-2

13. தமிழ்நாடு பைத்துல்மால்
வாலாஜா மசூதி வளாகம்
காயிதே மில்லத் நெடுஞ்சாலை
திருவல்லிக்கேணி சென்னை-5

14. கீழக்கரை பைத்துல்மால்
கீழக்கரை

15. அடையாறு பைத்துல்மால்
அடையாறு மசூதி எல்.பி ரோடு
சென்னை-41

16. சகோதரத்துவ சமூக நீதிப் பேரவை
ரயிலார் நகர்
மதுரை-18

17. மியாஸி அறக்கட்டளை
புதுக்கல்லூரி வளாகம்
பீட்டர்ஸ் ரோடு
சென்னை-14

18. எஸ்.ஐ.இ.டி.
கே.பி தாசன் ரோடு
தேனாம்பேட்டை சென்னை-18

19. எஸ்.அஹமது மீரான்
புரபசனல் கொரியர்ஸ்
மகாராஐh சூர்யா ராவ் ரோடு
ஆழ்வார்பேட்டைசென்னை-18

20. மெப்கான்
தபால்பெட்டி எண் 3
திருமங்களம்
மதுரை-625106

பாடுங்கள்! தேடுங்கள்!-ஒரு இசை இணையதளம்

பாடுங்கள்! தேடுங்கள்!-ஒரு இசை இணையதளம்

இசைப்பிரியர்களுக்கான நற்செய்தி எனும் அடைமொழியோடு அறிமுகம் செய்யக் கூடிய இணைய தளங்களின் வரிசையில் சமீபத்தில் வந்து நிற்பது மிடோமிடாட்காம்.
.
இசைத்தேடியந்திரங்களின் காலம் இது என்று உணர்த்தக் கூடிய வகை யில் இந்த தளமும், பாடல்களை தேடி பெறும் சேவையோடு உதயமாகி இருக்கிறது.

பாடல்களை தேடுவது மிகவும் சுலபமானது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பாட வேண்டியது மட்டும்தான் எனும் உற்சாக அழைப் போடு இந்த தளம் இணையவாசிகளை வரவேற்கிறது.

ஒரே ஒரு மைக்ரோபோன் இருந்தால் போதும்பாடல்களை பாடியோ அல்லது முனுமுனுத்தோ, அதற்கு நிகரான பாடல்களை தேடலாம். விரும்பிய பாடல்களை தேடிப் பெறும் வசதியைத் தரும் இணைய தளங்கள் அனேகம் இருக்கின்றன.

ஆனால் பாடல்களை பாடிக்காட்டியே தேடக் கூடிய, புதுமையான வசதி தரும் தளம் இது மட்டும்தான். அந்த வகை யில் இந்த தளம் மிகவும் சுவாரசியமானது.
தற்போது அறிமுகமாகும் எந்த தளமும், சமூக பண்பு இல்லாமல் இருப்பதில்லை. அதாவது இணைய வாசிகள் பரஸ்பரம் தொடர்பு கொண்டு நட்பை வளர்த்து கொள்ளும் சேவை யையும் சேர்ந்தே வழங்குகின்றன. இந்த தளமும் இத்தகைய சமூக பண்புடனேயே உதயமாகியிருக்கிறது.

இசைப்பிரியர்கள் இந்த தளத்தின் மூலம் மற்ற இசைப்பிரியர்களை தொடர்பு கொண்டு நண்பர்களாக முடியும். பாடல்களை பாடி காட்டும் போது, அதே பாடலை வேறு யார் பாடியிருக் கிறாரோ, அதனை நாம் கேட்டு மகிழ முடியும். அது பற்றி கருத்துக்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் அவரோடு நட்பு கொள்ளலாம்.

இவ்வாறு பிடித்தமான பாடல்களை பாடுவதன் மூலமும், அவற்றை மற்ற வர்கள் பாடிக் காட்ட கேட்டு கருத்து சொல்வதன் மூலமும் இசைப்பிரியர் கள் தங்களுக்கென ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கி கொள்ளலாம்.

அடுத்தமுறை வேறு யாராவது பாடலை பாடி தேடும் போது, நீங்கள் பாடி வைத்திருக்கும் பாடல் அவருக் கான பட்டியலில் முதலிடத்தில் வந்து நிற்கும் வாய்ப்பும் இருக்கிறது. அவர் அதனை கேட்டு ரசித்து உங்களோடு தொடர்பு கொண்டு, நண்பராகும் வாய்ப்பு உள்ளது.
மற்ற எந்த இசையைச் சேர்ந்த தளங்களிலும் இல்லாத மற்றொரு சிறப்பம்சம், இந்த தளத்தில் எந்த மொழியிலும் பாடலாம் என்பதே. பெரும்பாலான இசைத் தளங்களில் ஆங்கிலமே பிரதான மொழியாக இருக்கிறது. நம்மவர்கள் தமிழ் பாடலை கேட்க விரும்பினால் அந்த தளங்கள் கைகொடுக்காது.

ஆனால் இந்த தளத்தில் அப்படியில்லை. தமிழிலேயே பாடித் தேடலாம்.
இது போல எந்த உலக மொழியிலும் பாடல்களை பாடலாம். காலப் போக்கில் இந்த தளம் பிரபலமாகி பல நாடுகளைச் சேர்ந்தவர்களின் ஆதரவை பெறும் போது எல்லா மொழி களிலும் பொருத்தமான பாடல்களை தேடுவது சாத்தியமாகலாம்.

இந்த தளத்தில் தேடுவதோடு, தங்களுக்கான தனி பக்கத்தையும் உருவாக்கி கொண்டு சுருக்கமான சுயசரிதை விவரங்களை வெளியிட்டு, ஒத்த ரசனை உள்ளவர்களை தேடி நட்புறவு கொள்வது மிகவும் சுலபமானது. இத்தோடு பிடித்தமான பாடல்களை இந்த தளத்தின் மூலமே காசு கொடுத்து வாங்கவும் முடியும்.

இசையையும், இசைச்சார்ந்த மனிதர் களையும் தேடுவதை சுலபமாக்கும் சுவாரஸ்யமான தளம் என்று இதனை வர்ணிக்கலாம். இசைப்பிரியர்கள் இந்த தளத்தில் தங்களை மறந்து மூழ்கிக் கிடக்கலாம்.

www.midomi.com

Minambur Foundation

Dear All,

We give free service and coordination for getting admission for the following Institutes.

For MBA in Indian and UK universities minimum qualification must be a graduation. For USA online university, you can apply, if you have experience of two years with a two year diploma of any course.

Please visit the websites and choose a suitable course according to your qualification and requirements.

If you find any difficulty, please feel free to meet me in our office to decide.

1) English language courses in UK for any age group at London Study Center (www.londonstudycentre.co.uk )(British council approved Institute). These are full time courses in London , UK . On admission guidance will be given for visa procedure.

2) International School of Business Studies (www.isbs.org.uk). - Business Studies and Accountancy courses in London , UK for regular students. (British council approved Institute) MBA degree awarded by " Wales University ". These are full time courses in London, UK. On admission, guidance will be given for visa procedure. These courses can be converted part time to find a job after some time. IELTS requirement can be relaxed. Assured admission guaranteed.

3) Banasthali Deemed University, Rajasthan, India, (www.banasthali.org): Self study B.Ed. (One year), M.Ed. (One year), BBA, B.Sc.(Comp.Sci), MBA, etc. distance courses from Banasthali University , (Accredited, Indian Human resources Ministry approved university), for working class.

4) Online courses of Washington American Global University, (private non-accredited, registered university) USA for senior working class.(www.wagu-edu.us) , Any country Embassy attestation can be obtained.

Ashfaq Hussain
Saad Othman Al-Brahim Cont. Est. (Educational services).
Minambur Foundation (Chennai , India ),
14, Hafsa Bint Umar Street , Raudah-I,
P.O.box-100805, Riyadh- 11645.
Phone# 01 4915683, Fax# 01 4931988,
Mobile # 0551986077, Email: ashfaq106@gmail.com

என் செய்வேன்?

என் செய்வேன்?

http://www.muduvaivision.com/data/kavithai.asp?id=8

விலங்கினங்களை சிறைபிடித்து – அதை
வேலிகளால் அடைத்து – நாலாபுறமும்
வெஞ்சினம் கொண்ட கொல்லிகளால்
வாட்டிவதைத்திடின் அவை என்செய்யும்

காளை கரவை மாடுகளை எல்லாம்
கயிறுகளால் கட்டி வைத்து
தார் குச்சிகளால் தினமும்
தீண்டினால் அவை என் செய்யும்

காண்பவர் வாழாவிருப்பாரோ
கண்களை முடிகொள்வாரோ
வாயில்லா ஜீவன் அதை
வஞ்சிக்கும் மனிதர்களை ஏசிடமாட்டனரோ

மிருகம் குஉட கண்ணீர் சிந்துமய்யா
மனித மனம் என்ன
மிருகத்திலும் கொடியதா – அல்லது
மங்கி மழுங்கி விட்டோடா?

பாலஸ்தீன மண் மானபங்கப்படுத்தப்பட்டது
பிழைக்க வந்த வந்தேரிகளால்
ஏ அமெரிக்காவின் கள்ள குழந்தையே
இஸ்ரேல் எனும் ஈனப்பிரவியே

ஏதைக் கண்டுவிட நீ துடிக்கிறாய்
யாரை வெல்வோம் என நினைக்கிறாய்?
மண்ணில் சாய்ந்தவரெல்லாம் மாண்டுவிட்டனரா - இல்லை
மறுமை சோலையின் மலர்களாகி விட்டனர்

வீழாத வல்லரசு உண்டா?
வீண்சுமர் வென்று
வெற்றி வாகை சுஉடிய கொற்றவன் எவனும்
உலகில் உண்டா?

தொடுத்த போர்கள் எல்லாம்
தொடர்வதைத்தானே பார்க்கிறோம்
வியட்நாம் பாடம் தரவில்லையா
வீழவில்லை இன்னும் பாரசீகமும் ஆப்கானும்


உயிர் துறந்த எங்களது உடல் உறுப்பே
உன் உடல் வடிக்கும் குருதியால்
என் இகம் துடிக்கும் செய்தியை
என் இதயம் கேட்கும் கேள்வியை

அது உகுக்கும் கண்ணீரை
எப்படி துடைப்பேன் - இறைவனிடம்
இரு கைகளை ஏந்துவதை தவிர நான்
என் செய்வேன்? என் செய்வேன்?


முதுவை சல்மான் - ரியாத்-அல்ஜிரியா
salmanhind007@yahoo.co.in