Tuesday, July 15, 2008

கைப்பேசி கோபுர மின்காந்த அலைகள் உடலுக்கு ஊறுவிளைவிப்பவை

கைப்பேசி, கைப்பேசி கோபுர மின்காந்த அலைகள் உடலுக்கு ஊறுவிளைவிப்பவை என்னும் செய்திகள் பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்திருக்கும் வேளையில் அதை மறுத்தும் பல்வேறு அறிக்கைகளும், ஆய்வுகளும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. எனினும் இந்த மின்காந்த அலைகளினால் எந்த பாதிப்பும் இல்லை எனும் ஆய்வு முடிவு ஒன்றை யாராலும் நிகழ்த்த முடியவில்லை.

மின் காந்த அலைகள் எனும் மௌனக் கொலையாளியின் கைகளிலிருந்து நம்மை நாமே காத்துக் கொள்வதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன.

. கைப்பேசியை நேராக காதில் வைத்துப் பேசாமல் தவிர்க்க, வயர் இணைப்புடன் கூடிய ஹெட்போனைப் பயன்படுத்துங்கள்.

. வீட்டில் சாதாரண தொலைபேசி இருந்தால் அதிலேயே பேசுங்கள். கைப்பேசியைப் பயன்படுத்தாதீர்கள்.

. கைப்பேசியில் ஒலிபெருக்கி வசதி இருந்தால் அதைப் பயன்படுத்துங்கள்.

. கைப்பேசியில் பேசவேண்டிய கட்டாயம் வரும்போது உரையாடலை மிகச் சுருக்கமாக முடித்துக் கொள்ளுங்கள்.

. நம் உடலை விட்டு சற்றுத் தூரமாகவே கைப்பேசியை வைத்துவிட்டு பணி செய்யப் பழக வேண்டும்.

. கைப்பேசியை கைகளிலோ, பாக்கெட்டிலோ வைப்பதற்குப் பதிலாக பையில் வைக்கலாம்.

. குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு கைப்பேசியில் பேசாதீர்கள். குழந்தைக்கு அது பாதிப்பை உண்டாக்கும்.

. இரவில் கைப்பேசியை அணைத்து வைத்து விட்டு தூங்குங்கள். முடியாத சூழல் எனில் முடிந்த அளவு தூரமாக கைப்பேசியை வைத்துவிடுங்கள்.

. நல்ல சிக்னல் கிடைக்காத இடங்களில் கைப்பேசியைப் பயன்படுத்தாதீர்கள். அதை அணைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

. கைப்பேசியை சார்ஜ் செய்யும்போது அதிக மின் காந்த அலைகள் உருவாகும். எனவே அதை அதிகம் பயன்படுத்தாத அறைகளில் சார்ஜ் செய்யுங்கள்.


நன்றி: ராஜா-ரகுபதி

உலகின் முதிய பிளாக்கர் மரணம்

'World's oldest blogger' dies at 108
Posted Mon Jul 14, 2008 1:40pm AEST
Updated Mon Jul 14, 2008 1:54pm AEST


Olive Riley was known as the world's oldest blogger (ABC)

Video: Watch Joe O'Brien's report from Olive Riley's last birthday celebration. (ABC News) Audio: Filmmaker Mike Rubbo on ABC Broken Hill discusses the life of the world's oldest blogger Olive Riley (ABC News)

A filmmaker who made a documentary on the life and times of Olive Riley says he will sorely miss the woman who is known as the world's oldest blogger.

She died in a nursing home on the New South Wales central coast at the weekend, aged 108.

Born in Broken Hill in 1899, Olive Riley returned in 2004 for the filming of the documentary.

Since early last year, she had written about 70 entries on her life experiences and posted them online, receiving feedback from all over the world.

Documentary maker Mike Rubbo says the idea for blogging came from another older friend who had taken it up.

"He suggested that Ollie could blog so we put it to her and explained what a blog was and then I undertook to do all the sort of leg work, it was great fun and it was great too to probe her memory more deeply and you get evermore stories about her past, many of which of course were set in Broken Hill," he said.

http://www.abc.net.au/news/stories/2008/07/14/2303077.htm

துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பு நடத்திய கவியரங்கம் - நூல் வெளியிட்டு விழா

துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பு நடத்திய கவியரங்கம் - நூல் வெளியிட்டு விழா


துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பு மாதந்தோறும் கவியரங்கம் நடத்தி ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்து வரும் கவிஞர்களை உலகறியச் செய்திடும் வண்ணமாக அதன் படைப்புகளை நூலாக்கி வெளியிட்டு வருகிறது.

இம்மாத கவியரங்கம் அன்பு எனும் தலைப்பில் கராமா சிவ் ஸ்டார் பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்நிகழ்வு பள்ளிப் பருவத்து நினைவுகளை அசை போடச் செய்தது.

அன்பு எனும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கிற்கு முகவை முகில் மற்றும் வசந்தப்பிரியன் ஆகியோர் நடுவர்களாக இருந்து தொகுத்து வழங்கினர். கவிஞர்கள் காவிரிமைந்தன், இளைய சாகுல், ஜெயராமன், நிலாவண்ணன், ஜியாவுதீன், ஆதிபரணி, சிம்மபாரதி, கவிஞர் அத்தாவுல்லா உள்ளிட்டோர் கவிதைகளை வாசித்தனர்.

அதனைத் தொடர்ந்து தமிழ்த்தேர் எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழ் ஆர்வலர் ராஜகோபால் தலைமை வகித்தார்.
தான் பரோடோ, டேராடூன், பாட்னா உள்ளிட்ட பல்வேறு இந்திய நகரங்களில் பணிபுரிந்த போது அங்கெல்லாம் நடைபெற்ற தமிழ்ச் சங்க நிகழ்வுகளில் பங்கேற்றதை நினைவு கூர்ந்தார். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை வரும் என்ற ஆவலை ஏற்படுத்திவிட்டது இக்கவிதை நிகழ்வு. ஒவ்வொருவரும் தான் பணிபுரியும் இடங்களில் சக பணியாளரிடம் அன்பு செலுத்திட வேண்டும் என இந்த அன்பு எனும் தலைப்பில் நடைபெறும் கவிதை நிகழ்வின் வாயிலாகக் கேட்டுக் கொண்டார்.

கவிஞர் அத்தாவுல்லாஹ் முன்னிலை வகித்தார். வானலை வளர்தமிழ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காவிரிமைந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

துபாய் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் குறித்த அறிமுகவுரையினை தளபதி ஏ.முஹம்மது தாஹா நிகழ்த்தினார். அப்துல் ரஹ்மான் அவர்கள் சிராஜுல் மில்லத் ஏ.கே.அப்துல் ஸமத் சாஹிப். பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. உள்ளிட்டோரின் சிஷ்யர் ஆவார். கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளைச் செய்து வருபவர். துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மனித நேய மாண்பாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். எட்டாம் வகுப்பு படிக்கும் போதே தமிழகத்தின் சிறந்த மாண்வ பேச்சாளர் என்ற பட்டம் பெற்றவர்.

தமிழ்த்தேர் இதழின் அன்பு சிறப்பு வெளியீட்டை சொல்லின் செல்வர் எம்.அப்துல் ரஹ்மான் வெளியிட முதல் பிரதியை நிலவன் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து வெரோஸ், சீனிவாசன் பெற்றுக்கொண்டனர்.

எம். அப்துல் ரஹ்மானுக்கு நினைவுப் பரிசை முதுவை ஹிதாயத் வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துபாய் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் 'சொல்லின் செல்வர்' எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது விழாப் பேருரையில் சகோதர சமுதாய மக்களுடன் தனக்குள்ள அன்பு வெளிப்பாட்டை உணர்ச்சிப் பூர்வ உரை நிகழ்த்தினார். வானலை வளர்தமிழ் அமைப்பு மாதந்தோறும் இத்தகைய கவிதை நிகழ்வினை நடத்தி வருவது குறித்து பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்வு இன்னும் விரிவடைய வேண்டும் என்றார். கண்ணதாசன் மீது காவிரிமைந்தனுக்கு உள்ள ஈடுபாடு அவரைவிட அவர் தமிழின் மீது கொண்டுள்ள பற்றின் காரணமாகவே எனலாம்.

ஒவ்வொரு சமயமும், மார்க்கமும் அனபை எவ்வாறெல்லாம் விவரித்துள்ளன எனபதனை எடுத்தியம்பினார் அப்துல் ரஹ்மான். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணி விழா மாநாட்டில் தான் சமய நல்லிணக்க விருது பெற தேர்வு செய்யப்பட்டதாகவும், அதனை தன்னை விட எழுபதாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு காரணமாக இருக்கும் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநரும், ஈமான் அமைப்பின் தலைவருமான சையத் எம். ஸலாஹுத்தீன் அவர்களுக்கு வழங்குவதே பொருத்தமாகும் என குறிப்பிட்டதை நினைவு கூர்ந்தார்.

அன்பு செலுத்துவதன் மூலம் வாழ்வில் உயர் நிலையை அடையலாம் என்றார் சொல்லின் செல்வர் அப்துல் ரஹ்மான்.

பத்மநாதன் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் வானலை வளர்தமிழ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பலர் பங்கேற்று கவிதை நிகழ்வினை அலங்கரித்தனர்.

வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவராக இருக்கும் சிவ் ஸ்டார் பவன் உரிமையாளர் கோவிந்தராஜ் மாதந்தோறும் இலவசமாக இடம் தந்து, நிகழ்விற்குப் பின்னர் உணவும் தந்துதவி தமிழ் வளர்ச்சிக்கு துணைபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வானலை வளர்தமிழ் அமைப்பின் மின்னஞ்சல் முகவரி : "Kavirimaindhan" ,

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=831&Country_name=Gulf&cat=new

ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க தாவூத் பாட்சா உதவித் தொகை

ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க தாவூத் பாட்சா உதவித் தொகை


பாபநாசம், ஜூலை 14: தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், சேர இயலாத ஏழை மாணவர்கள் இலவசக் கல்வி உதவித் தொகை பெறலாம்.

இதுகுறித்து தஞ்சை மாவட்டம், பாபநாசத்திலுள்ள இராஜகிரி தாவூத் பாட்சா கலை அறிவியல் கல்லூரித் தலைவர் எம்.ஏ. தாவூத் பாட்சா தெரிவித்தது:

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அனுமதி கிடைத்தும், பொருளாதார வசதியின்மை காரணமாக சேர இயலாத அனைத்து மாணவர்களுக்கும், எங்கள் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணம், ஐந்தாண்டுகளுக்கும் இந்த மாணவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த உதவித் தொகையால் எதிர்காலத்தில் மருத்துவராவோர் மூலம், பொதுமக்களுக்குச் சிறப்பான சேவை கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.

எனினும், படிக்கும் காலத்தில் பல்கலை. தேர்வில் ஏதாவதொரு பாடத்தில் தோல்வியுற்றாலும், அதன்பின்னர் உதவித் தொகை நிறுத்தப்படும்.

உதவித் தொகை பெற விரும்புவோர், தலைவர் மற்றும் செயலர், ஆர்.டி.பி. கலை, அறிவியல் கல்லூரி, பாபநாசம்-614 205, தஞ்சை மாவட்டம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். (தொலைபேசி: 04374-222123, 221267, 9443151267).

துபாய் பொது நூலகத்தில் இலவச அரபி மொழி பயிற்சி வகுப்புகள்

துபாய் பொது நூலகத்தில் இலவச அரபி மொழி பயிற்சி வகுப்புகள்

துபாய் பொது நூலகம் ( http://www.libraries.ae ) துபாயிலுள்ள நகராட்சியின் கீழ் செயல்பட்டு வருகிறது. துபாய் பொது நூலகத்தின் அல் தவார் மற்றும் அல் சஃபா கிளை நூலகங்கள் அரபி மொழியினை தாய்மொழியாகக் கொண்டிராத நாட்டவர்களுக்கு இலவச அரபி மொழி வகுப்புகள் ஜுலை 19 முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நடத்தப்படுகின்றன.

இந்த இலவச அரபி மொழி வகுப்புகள் தினமும் எட்டு மணி முதல் 9.30 மணி வரை அல் தவார் கிளை நூலகத்திலும், ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய தினங்களில் அல் சஃபா கிளை நூலகத்திலும் நடைபெறும்.