செம்மொழிப் பாடல் !!!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழி செம்மொழி - தமிழ் மொழியாம்!
கம்ப நாட்டாழ்வாரும் கவியரசி அவ்வை நல்லாளும்
எம்மதமும் ஏற்ற புகழ்கின்ற
எம்மதமும் ஏற்ற புகழ்கின்ற
எத்தனயோ ஆயிரம் கவதை நெய்வோர் தரும்
புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழி!
தமிழ் மொழி!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
எங்கள் தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
எங்கள் தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
இசை - எ.ஆர்.ரஹ்மான்
எழுத்து - கலைஞர் மு.கருணாநதி
பாடியவர்கள் : ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா, டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா, அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, கார்த்திக், ஹரிணி, சின்மயி, ஹரிகரன், சுவேதா மோகன், ஜி.வி.பிரகாஷ், பென்னி தயள், ஸ்ரீனிவாஸ், விஜய் யேசுதாஸ், டி.எல்.மகாராஜன், நித்யஸ்ரீ, சவும்யா, எம்.ஒய்.அப்துல் கனி, எம்.காஜாமொய்தீன், எஸ்.சாபுமொய்தீன், பி.எல்.கிருஷ்ணன், நரேஷ் அய்யர், குணசேகர், சுருதிஹாசன், சின்ன பொண்ணு, சுசீலா ராமன், ப்ளேஸ், காஷ், ரெஹ்னா ஆகிய 30 பேர்.
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label செம்மொழி. Show all posts
Showing posts with label செம்மொழி. Show all posts
Friday, June 25, 2010
செம்மொழி எம்மொழி
செம்மொழி எம்மொழி
”தமிழ்” என்றாலே “மூவினம்”
த – என்னும் வல்லினம்;
மி – என்னும் மெல்லினம்
ழ் – என்னும் இடையினம்
முத்தமிழாம்
இயல்,இசை,கூத்து
மூவேந்தர்
சேர்,சோழ, பாண்டியர்
முக்கனியின் சுவைபோன்றே
மூன்று தமிழ்ச் சங்கம்
முப்பெரும் கடல் தாண்டி
முழங்கும் மொழி
தாய்மொழியாம் தமிழ் மற்ற மொழிகட்கும்
தாயான மொழி
தொன்மை;வளமை;தனித்தன்மை
செம்மை;இனிமை;எளிமை;இளமை;
வளமை;புதுமை;மென்மை;மேன்மை கண்டு
பரிதிமாற் கலைஞர் ஆய்வு செய்தார்;
மூதறிஞர் கலைஞர் நிறைவு செய்தார்
எம்மொழி “செம்மொழி”யானதே..!!
ஆதாம் பேசியதும் தமிழே என்று
ஆய்வுகள் உண்டு
பேச்சுத் தமிழ்; எங்களின் செவி வழி
மூச்சுத் தமிழ்
அருந்தமிழ்ப் பற்றிய குறுஞ்செய்திகள்
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார்;இதுவே இந்தியாவின் முதல் இணையப் பல்கலைக்கழகமாகும்.
“கண்ணுக்கு மையிடுவது போல, பிறமொழிகளைப் பயன்படுத்த வேண்டும்.மை அதிகமானால் கண் எப்படிக் கரித்துவிடுகிறதோ, அதுபோல பிறமொழிகள் அதிகம் கலப்பதும் ஆபத்தான நிலையை உண்டாக்கும்.”- பேரறிஞர் அண்ணா.
நமஸ்காரம் வணக்கமானதும்; உபந்நியாசம் சொற்பொழிவானதும்; பிரகஸ்பதி தலைவரானதும்;
மகாஜனங்கள் பொதுமக்களானதும்; உபாத்தியாயர் ஆசிரியரானதும்; காரியதரிசி செயலாளரானதும்; சர்வகலாசாலை பல்கலைக்கழகமானதும்; ராஜ்ஜியம் மாநிலமானதும்; உப அத்தியட்சகர் துணைவேந்தரானதும் பேரறிஞர் அன்ணாவின் பெரும் முயற்சியே;அதனால் பெற்றது தமிழுக்குப் புதிய வளர்ச்சியே.
சிங்கப்பூர் நூலகங்களில் தமிழ் நூல்கள், இதழ்கள் கிடைக்கின்றன. அந்நாட்டு குடியரசு தலைவர் செல்லப்பன் ராமநாதன் தமிழர்தான். அங்கே பாராளுமன்றம், அமைச்சரவையிலும் தமிழர்கள் அங்கம் வகிக்கின்றனர்; சிங்கப்பூர் வானூர்தியிலும் தமிழில் அறிவிப்புகள் சொல்லப்படுகின்றன.
1955 ஜூன் மாதம் டெல்லியில் நடைபெற்ற 18 மொழிகளின் வல்லுந்னர்களின் ஆய்வரங்கத்தில்
Tax, assessment, duty, customs ஆகிய ஆங்கிலச்சொற்களுக்கு இணையான இந்திய மொழி சொற்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வேறு மொழி எதிலும் பொருத்தமான வார்த்தைகள் சமர்ப்பிக்கப் படவில்லை.
தமிழ்நாடு சார்பில் கலந்துகொண்ட தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை எழுந்தார்,”இதில் எல்லாச் சொற்களுக்கும் தமிழில் தனி தனி சொற்கள் உண்டு. அவை வரி, தீர்வை, கடமை, சுங்கம்” என்று முழங்கினார்
தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம் என்கின்றனர் வல்லுநர்கள்.
1991-ம் ஆண்டு நிலவரப்படி உலகில் அதிகபட்சமாக சீன மொழி(மாண்டரின்)பேசுவோர் எண்ணிக்கை 130 கோடியாக இருந்தது. 8-வது இடத்தில் தமிழ்(11 கோடியே 40 லட்சம் பேர்) இருந்தது. இதைவிடக் குறைவே ஆங்கிலம் பேசுவோர்.
திருக்குறளின் பெருமையை அறிந்த காந்தியடிகள்,”திருக்குறளைப் படிப்பதற்காக நான் தமிழனாக பிறக்க ஆசைப்படுகின்றேன்” என்றார்.
ரஷ்ய கிரளின் மாளிகையில் அணுத்துளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது திருக்குறள்.
விக்டோரியா அரசியும் வைத்திருந்தார் திருக்குறள்
இங்கிலாந்தில் விவிலியத்துடன் போற்றப்படுகின்றது திருக்குறள்
தமிழ்நாடு சட்டமன்றம் திருக்குறள் ஓதியேத் துவங்கும்
சூரிய ஆண்டு முறையில் திருவள்ளுவராண்டு முறை; தை 1-ந் திகதி புத்தாண்டு;ஆங்கில ஆண்டைவிட திருவள்ளுவராண்டு 31 ஆண்டுகள் அதிகம்.
தமிழ்நாடு அரசும் திருவள்ளுவராண்டு முறையைப் பின்பற்றி வருகின்றது. அதன் 12 மாதங்களாவன:
கறவம்(தை); கும்பம்(மாசி);மீனம்(பங்குனி)மேழம்(சித்திரை);விடை(வைகாசி),ஆடவை(ஆனி);கடகம்(ஆடி);மடங்கல்(ஆவணி);கன்னி(புரட்டசி);துலை(ஐப்பசி);நளி(கார்திகை)சிலை(மர்கழி)
தமிழ்நாட்டில் மட்டுமன்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிஜி, மொரீசியஸ், பர்மா, தெ ஆப்பிரிக்கா, வியட்நாம் முதலிய நாடுகளில் தமிழ் பேசப்படுகின்றது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தாய்மொழியாக-கல்வி மொழியாக, துணை ஆட்சி மொழியாக, செய்திப் பரவல் தொடர்பு மொழியாக, இலக்கிய மொழியாக பயன்பட்டு வருகின்றது. இந்தோனேசியா, மொரீசியஸ், டிரினிடாட் போன்ற நாடுகளில் தமிழ் தாய்மொழியாக பேசப்பட்டு வருகின்றது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்சு, ஜெர்மனி, போலந்து, செக்கோஸ்லோவாக்கியா முதலிய நாடுகளில் தமிழ் மொழி பல்கலைக்கழகங்களில் அறிஞர்கள் விரும்பிப் பயிலும் மொழியாக தமிழ் அமைந்துள்ளது. ”பலநாடுகளில் பேசப்படுகின்ற நிலைகளில் உள்ள உலக மொழிகளில் ஒன்றாகத் தமிழ்மொழி திகழ்கின்றது”என்று செக் நாட்டு மொழியியல் பேரறிஞர் கமில் கவலபில் கூறியுள்ளார்.”யுனெஸ்கோ” நிறுவனம் தமிழ் மொழியில் இதழ் வெளியிடுவது தமிழுக்கு கிடைத்த இன்னொரு சிறப்பாகும்.
உலகத் தமிழ் மாநாடுகள்:
முதல் மாநாடு கோலாலம்பூர்(1966)
2-வது மாநாடு சென்னை(1968)
3-வது மாநாடு பாரீஸ்(1970)
4-வது மாநாடு யாழ்ப்பாணம்(1974)
5-வது மாநாடு மதுரை(1981)
6-வது மாநாடு கோலாலம்பூர்(1987)
7-வது மாநாடு மொரீசியஸ்(1989)
8-வது மாநாடு தஞ்சாவூர்(1995)
உலகத் தமிழ்ச்
செம்மொழி மாநாடு கோவை(2010)
உலகப் புகழ்பெற்ற நயாகரா அருவியின் நுழைவு வாயிலில் தமிழில் வரவேற்பு வாசகம் எழுதப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பெரிய நூலகம் நியூயார்க் நகரில் உள்ளது. அதன் முகப்பு வாயிலில்
”கற்க கசடற கற்பவைக் கற்றபின்
நிற்க அதற்குத் தக” என்ற திருக்குறள் இடம்பெற்றுள்ளது.
“அமிழ்து அமிழ்து” என்று திரும்பத் திரும்ப சொன்னால், “தமிழ்.. தமிழ்” என்று ஒலிக்கும்
தமிழ் இலக்கண இலக்கியங்களைத் தானே படித்து “முத்தமிழ்க் காவலர்” ஆனார் கி.ஆ.பெ.விசுவநாதம்.
1967 ஜூலை 18-ல் “தமிழ்நாடு” என்னும் பெயர் அண்ணாவின் ஆட்சியில் சூட்டப்பட்டது.
நொபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சி.வி.ராமன் தமிழில் கையொப்பம் இடுவார்.
தமிழில் தட்டச்சை கண்டுபிடித்தவர் தஞ்சை சோமசுந்தர அய்யர்
தமிழில் ஒருங்குறி கணிணி எழுத்து உருவாக்கி உலகுக்கு அர்ப்பணித்தவர் அதிராம்பட்டினம்
உமர்தம்பி என்ற விஞ்ஞானி.
சென்னை மாநிலக் கல்லூரியில் முதல் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர் பர்சிவெல் என்ற ஆங்கிலேயர்.
செம்மொழி வரையறைகளைப் பெற்ற மொழிகளான லத்தீன்,பாரசீகம்,சீனம்,அரபு,சமச்கிருதம் ஆகிய ஐந்து மொழிகள் பட்டியலில் தமிழ் மொழியும் இணைந்துள்ளது.
தமிழ்ச்சொற்களின் மூலம் எபிரேய்,மங்கோலிய,ஐரொப்பிய மொழிகலிலும் கலந்திருப்பதைக் கண்டுபிடித்து சொன்னவர் ஈழத்தில் உள்ள மானிப்பாய் என்ற ஊரில் 1875-ல் பிறந்த வைத்தியலிங்கம் (ஞானப் பிரகாசம்);இவருக்கு 72 மொழிகள் தெரியும்.
பெண் கவிகள்:
அவ்வையார், ஆதிமந்திரியார், ஆண்டாள், ஒக்கூர் மாசாத்தியார், காக்கைப் பாடியானார், கவெற்பெண்டு, குறமகள் இளவெயினி, நக்கன்னையார், நல்முல்லையார், பாரிமகளிர், பூங்கண் உத்தரையார், நல்வெள்ளியார், பாரி மகளிர், பூங்கண் உத்தரையார், இளவெயினி, பொன்முடியார், போந்தைப் பசலையார், முடத்தாமக்கண்னியார், மாற்பித்தியார், மறோகத்து நற்பசலையார், வெண்ணிகுயத்தியார், வெள்ளிவீதியார்,
ஸ்பெயின் நாட்டில் பிறந்து தமிழ்நாட்டுக்கு வந்து சமயப் பணியாற்ற வந்த “காண்டன்ஸ்டைன் பெஸ்கி” என்பாரே “வீர்மாமுனிவர்” என்று தன் பெயரை தமிழ்ப் படுத்திய அவர்தான், “தேம்பாவணி” என்ற இலக்கியம் படைத்தார்.
1916-ம் ஆண்டு சுவாமிவேதாசலம் என்பார் தன் 13வயது மகள் நீலாம்பிகையுடன், “திருவருட்பா”வில் “உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்” என்ற வரியினைப் பாடும் போழ்து, “தேகம்” என்ற வடசொல்லுக்கு மாறாக “யாக்கை” என்ற தமிழ்ச் சொல் இருக்குமானால் தமிழ் இனிமைக் குன்றாது இருக்கும் என்று கருதினார். அதைக் கேட்ட நீலாம்பிகை,”அப்படியானால், இன்று முதல் நாம் அயல்மொழிச் சொற்களை நீக்கித் தனித் தமிழிலேயே பேசுதல், அதற்கான முயற்சியை நாம் விடாது செய்தல் வேண்டும் என்று ஆர்வ்த்தோடு கூறினார்.மகளின் வேண்டுகோளை ஏற்று “சுவாமி வேதாசலம்” எனும் தன் பெயரை ”மறைமலை அடிகள்” என்று தனித் தமிழில் மாற்றினார். இப்படித் தோன்றியதுதான் “தனித்தமிழ் இயக்கம்”!
வ.ரா. என அழைக்கப்படும் வ.ராமசாமி, பாரதியாரைச் சந்திக்கப் புதுச்சேரி சென்றார்.அப்போது ஆங்கிலத்தில் வ.ரா.பேசினார்.”ஒரு தமிழன் இன்னொரு தமிழனோடு இன்னும் எவ்வளவு காலம்தன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்க வேண்டும்?” என்று கேட்டார் பாரதி. வ.ரா.வுக்கு அழுகையே வந்து விட்டது.
இசையரங்குகளில் பிறமொழிப் பாடல்களே பாடப்பட்ட நேரத்தில், “தமிழிசைச் சங்கம்” நிறிவி-தமிழிசையை வளர்த்த பெருமை ‘செட்டிநாட்டரசர்’ ராஜா அண்ணாமலை செட்டியாரைச் சாரும்.
ஒரு மொழி வழக்கொழிதலுக்கான காரணங்கள் ஆறு என ஆய்வில் கூறுகின்றார்:மார்டின் ஹாஸ்பல்மாத் என்னும் ஜெர்மானிய அறிஞர்.
1) மக்கள் இடப்பெயர்ச்சி
2) வணிகம்
3) சிறுபான்மை மக்கள் மீது பெரும்பான்மை மக்களின் ஆதிக்கம்
4) ஊடகங்கள்
5) காலனி ஆதிக்கம்
6) இனப் படுகொலை
முதல் தமிழ்ச் சஙம் 4440 ஆண்டுகளும், இரண்டாம் தமிழ்ச் சங்கம் 3700 ஆண்டுகளும், மூன்றாம் தமிழ்ச் சஙம் 1850 ஆண்டுகளும் செயல்பட்டன. இவை முதல், இடை, கடை என வழக்கில் இருந்தன. கி.பி.1-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதே சஙகாலம்.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என தென் மாநிலங்கள் ‘சென்னை மாகாணம்’ என்று அழைக்கப்பட்டது. தமிழ் பேசும் மாந்னிலத்திற்கு “மெட்ராஸ் ஸ்டேட்’ என்று ஆங்கிலத்தில் வழங்குதல் கூடாது. “தமிழ்நாடு” என்று பெயரிட வேண்டும் என்று 64 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டார் தியாகி சங்கரலிங்கனார். தமிழுக்காகத் தன் உயிரையே தந்து சரித்திரத்தில் இடம் பிடித்தார்.
”தமிழ்” என்றாலே “மூவினம்”
த – என்னும் வல்லினம்;
மி – என்னும் மெல்லினம்
ழ் – என்னும் இடையினம்
முத்தமிழாம்
இயல்,இசை,கூத்து
மூவேந்தர்
சேர்,சோழ, பாண்டியர்
முக்கனியின் சுவைபோன்றே
மூன்று தமிழ்ச் சங்கம்
முப்பெரும் கடல் தாண்டி
முழங்கும் மொழி
தாய்மொழியாம் தமிழ் மற்ற மொழிகட்கும்
தாயான மொழி
தொன்மை;வளமை;தனித்தன்மை
செம்மை;இனிமை;எளிமை;இளமை;
வளமை;புதுமை;மென்மை;மேன்மை கண்டு
பரிதிமாற் கலைஞர் ஆய்வு செய்தார்;
மூதறிஞர் கலைஞர் நிறைவு செய்தார்
எம்மொழி “செம்மொழி”யானதே..!!
ஆதாம் பேசியதும் தமிழே என்று
ஆய்வுகள் உண்டு
பேச்சுத் தமிழ்; எங்களின் செவி வழி
மூச்சுத் தமிழ்
அருந்தமிழ்ப் பற்றிய குறுஞ்செய்திகள்
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார்;இதுவே இந்தியாவின் முதல் இணையப் பல்கலைக்கழகமாகும்.
“கண்ணுக்கு மையிடுவது போல, பிறமொழிகளைப் பயன்படுத்த வேண்டும்.மை அதிகமானால் கண் எப்படிக் கரித்துவிடுகிறதோ, அதுபோல பிறமொழிகள் அதிகம் கலப்பதும் ஆபத்தான நிலையை உண்டாக்கும்.”- பேரறிஞர் அண்ணா.
நமஸ்காரம் வணக்கமானதும்; உபந்நியாசம் சொற்பொழிவானதும்; பிரகஸ்பதி தலைவரானதும்;
மகாஜனங்கள் பொதுமக்களானதும்; உபாத்தியாயர் ஆசிரியரானதும்; காரியதரிசி செயலாளரானதும்; சர்வகலாசாலை பல்கலைக்கழகமானதும்; ராஜ்ஜியம் மாநிலமானதும்; உப அத்தியட்சகர் துணைவேந்தரானதும் பேரறிஞர் அன்ணாவின் பெரும் முயற்சியே;அதனால் பெற்றது தமிழுக்குப் புதிய வளர்ச்சியே.
சிங்கப்பூர் நூலகங்களில் தமிழ் நூல்கள், இதழ்கள் கிடைக்கின்றன. அந்நாட்டு குடியரசு தலைவர் செல்லப்பன் ராமநாதன் தமிழர்தான். அங்கே பாராளுமன்றம், அமைச்சரவையிலும் தமிழர்கள் அங்கம் வகிக்கின்றனர்; சிங்கப்பூர் வானூர்தியிலும் தமிழில் அறிவிப்புகள் சொல்லப்படுகின்றன.
1955 ஜூன் மாதம் டெல்லியில் நடைபெற்ற 18 மொழிகளின் வல்லுந்னர்களின் ஆய்வரங்கத்தில்
Tax, assessment, duty, customs ஆகிய ஆங்கிலச்சொற்களுக்கு இணையான இந்திய மொழி சொற்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வேறு மொழி எதிலும் பொருத்தமான வார்த்தைகள் சமர்ப்பிக்கப் படவில்லை.
தமிழ்நாடு சார்பில் கலந்துகொண்ட தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை எழுந்தார்,”இதில் எல்லாச் சொற்களுக்கும் தமிழில் தனி தனி சொற்கள் உண்டு. அவை வரி, தீர்வை, கடமை, சுங்கம்” என்று முழங்கினார்
தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம் என்கின்றனர் வல்லுநர்கள்.
1991-ம் ஆண்டு நிலவரப்படி உலகில் அதிகபட்சமாக சீன மொழி(மாண்டரின்)பேசுவோர் எண்ணிக்கை 130 கோடியாக இருந்தது. 8-வது இடத்தில் தமிழ்(11 கோடியே 40 லட்சம் பேர்) இருந்தது. இதைவிடக் குறைவே ஆங்கிலம் பேசுவோர்.
திருக்குறளின் பெருமையை அறிந்த காந்தியடிகள்,”திருக்குறளைப் படிப்பதற்காக நான் தமிழனாக பிறக்க ஆசைப்படுகின்றேன்” என்றார்.
ரஷ்ய கிரளின் மாளிகையில் அணுத்துளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது திருக்குறள்.
விக்டோரியா அரசியும் வைத்திருந்தார் திருக்குறள்
இங்கிலாந்தில் விவிலியத்துடன் போற்றப்படுகின்றது திருக்குறள்
தமிழ்நாடு சட்டமன்றம் திருக்குறள் ஓதியேத் துவங்கும்
சூரிய ஆண்டு முறையில் திருவள்ளுவராண்டு முறை; தை 1-ந் திகதி புத்தாண்டு;ஆங்கில ஆண்டைவிட திருவள்ளுவராண்டு 31 ஆண்டுகள் அதிகம்.
தமிழ்நாடு அரசும் திருவள்ளுவராண்டு முறையைப் பின்பற்றி வருகின்றது. அதன் 12 மாதங்களாவன:
கறவம்(தை); கும்பம்(மாசி);மீனம்(பங்குனி)மேழம்(சித்திரை);விடை(வைகாசி),ஆடவை(ஆனி);கடகம்(ஆடி);மடங்கல்(ஆவணி);கன்னி(புரட்டசி);துலை(ஐப்பசி);நளி(கார்திகை)சிலை(மர்கழி)
தமிழ்நாட்டில் மட்டுமன்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிஜி, மொரீசியஸ், பர்மா, தெ ஆப்பிரிக்கா, வியட்நாம் முதலிய நாடுகளில் தமிழ் பேசப்படுகின்றது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தாய்மொழியாக-கல்வி மொழியாக, துணை ஆட்சி மொழியாக, செய்திப் பரவல் தொடர்பு மொழியாக, இலக்கிய மொழியாக பயன்பட்டு வருகின்றது. இந்தோனேசியா, மொரீசியஸ், டிரினிடாட் போன்ற நாடுகளில் தமிழ் தாய்மொழியாக பேசப்பட்டு வருகின்றது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்சு, ஜெர்மனி, போலந்து, செக்கோஸ்லோவாக்கியா முதலிய நாடுகளில் தமிழ் மொழி பல்கலைக்கழகங்களில் அறிஞர்கள் விரும்பிப் பயிலும் மொழியாக தமிழ் அமைந்துள்ளது. ”பலநாடுகளில் பேசப்படுகின்ற நிலைகளில் உள்ள உலக மொழிகளில் ஒன்றாகத் தமிழ்மொழி திகழ்கின்றது”என்று செக் நாட்டு மொழியியல் பேரறிஞர் கமில் கவலபில் கூறியுள்ளார்.”யுனெஸ்கோ” நிறுவனம் தமிழ் மொழியில் இதழ் வெளியிடுவது தமிழுக்கு கிடைத்த இன்னொரு சிறப்பாகும்.
உலகத் தமிழ் மாநாடுகள்:
முதல் மாநாடு கோலாலம்பூர்(1966)
2-வது மாநாடு சென்னை(1968)
3-வது மாநாடு பாரீஸ்(1970)
4-வது மாநாடு யாழ்ப்பாணம்(1974)
5-வது மாநாடு மதுரை(1981)
6-வது மாநாடு கோலாலம்பூர்(1987)
7-வது மாநாடு மொரீசியஸ்(1989)
8-வது மாநாடு தஞ்சாவூர்(1995)
உலகத் தமிழ்ச்
செம்மொழி மாநாடு கோவை(2010)
உலகப் புகழ்பெற்ற நயாகரா அருவியின் நுழைவு வாயிலில் தமிழில் வரவேற்பு வாசகம் எழுதப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பெரிய நூலகம் நியூயார்க் நகரில் உள்ளது. அதன் முகப்பு வாயிலில்
”கற்க கசடற கற்பவைக் கற்றபின்
நிற்க அதற்குத் தக” என்ற திருக்குறள் இடம்பெற்றுள்ளது.
“அமிழ்து அமிழ்து” என்று திரும்பத் திரும்ப சொன்னால், “தமிழ்.. தமிழ்” என்று ஒலிக்கும்
தமிழ் இலக்கண இலக்கியங்களைத் தானே படித்து “முத்தமிழ்க் காவலர்” ஆனார் கி.ஆ.பெ.விசுவநாதம்.
1967 ஜூலை 18-ல் “தமிழ்நாடு” என்னும் பெயர் அண்ணாவின் ஆட்சியில் சூட்டப்பட்டது.
நொபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சி.வி.ராமன் தமிழில் கையொப்பம் இடுவார்.
தமிழில் தட்டச்சை கண்டுபிடித்தவர் தஞ்சை சோமசுந்தர அய்யர்
தமிழில் ஒருங்குறி கணிணி எழுத்து உருவாக்கி உலகுக்கு அர்ப்பணித்தவர் அதிராம்பட்டினம்
உமர்தம்பி என்ற விஞ்ஞானி.
சென்னை மாநிலக் கல்லூரியில் முதல் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர் பர்சிவெல் என்ற ஆங்கிலேயர்.
செம்மொழி வரையறைகளைப் பெற்ற மொழிகளான லத்தீன்,பாரசீகம்,சீனம்,அரபு,சமச்கிருதம் ஆகிய ஐந்து மொழிகள் பட்டியலில் தமிழ் மொழியும் இணைந்துள்ளது.
தமிழ்ச்சொற்களின் மூலம் எபிரேய்,மங்கோலிய,ஐரொப்பிய மொழிகலிலும் கலந்திருப்பதைக் கண்டுபிடித்து சொன்னவர் ஈழத்தில் உள்ள மானிப்பாய் என்ற ஊரில் 1875-ல் பிறந்த வைத்தியலிங்கம் (ஞானப் பிரகாசம்);இவருக்கு 72 மொழிகள் தெரியும்.
பெண் கவிகள்:
அவ்வையார், ஆதிமந்திரியார், ஆண்டாள், ஒக்கூர் மாசாத்தியார், காக்கைப் பாடியானார், கவெற்பெண்டு, குறமகள் இளவெயினி, நக்கன்னையார், நல்முல்லையார், பாரிமகளிர், பூங்கண் உத்தரையார், நல்வெள்ளியார், பாரி மகளிர், பூங்கண் உத்தரையார், இளவெயினி, பொன்முடியார், போந்தைப் பசலையார், முடத்தாமக்கண்னியார், மாற்பித்தியார், மறோகத்து நற்பசலையார், வெண்ணிகுயத்தியார், வெள்ளிவீதியார்,
ஸ்பெயின் நாட்டில் பிறந்து தமிழ்நாட்டுக்கு வந்து சமயப் பணியாற்ற வந்த “காண்டன்ஸ்டைன் பெஸ்கி” என்பாரே “வீர்மாமுனிவர்” என்று தன் பெயரை தமிழ்ப் படுத்திய அவர்தான், “தேம்பாவணி” என்ற இலக்கியம் படைத்தார்.
1916-ம் ஆண்டு சுவாமிவேதாசலம் என்பார் தன் 13வயது மகள் நீலாம்பிகையுடன், “திருவருட்பா”வில் “உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்” என்ற வரியினைப் பாடும் போழ்து, “தேகம்” என்ற வடசொல்லுக்கு மாறாக “யாக்கை” என்ற தமிழ்ச் சொல் இருக்குமானால் தமிழ் இனிமைக் குன்றாது இருக்கும் என்று கருதினார். அதைக் கேட்ட நீலாம்பிகை,”அப்படியானால், இன்று முதல் நாம் அயல்மொழிச் சொற்களை நீக்கித் தனித் தமிழிலேயே பேசுதல், அதற்கான முயற்சியை நாம் விடாது செய்தல் வேண்டும் என்று ஆர்வ்த்தோடு கூறினார்.மகளின் வேண்டுகோளை ஏற்று “சுவாமி வேதாசலம்” எனும் தன் பெயரை ”மறைமலை அடிகள்” என்று தனித் தமிழில் மாற்றினார். இப்படித் தோன்றியதுதான் “தனித்தமிழ் இயக்கம்”!
வ.ரா. என அழைக்கப்படும் வ.ராமசாமி, பாரதியாரைச் சந்திக்கப் புதுச்சேரி சென்றார்.அப்போது ஆங்கிலத்தில் வ.ரா.பேசினார்.”ஒரு தமிழன் இன்னொரு தமிழனோடு இன்னும் எவ்வளவு காலம்தன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்க வேண்டும்?” என்று கேட்டார் பாரதி. வ.ரா.வுக்கு அழுகையே வந்து விட்டது.
இசையரங்குகளில் பிறமொழிப் பாடல்களே பாடப்பட்ட நேரத்தில், “தமிழிசைச் சங்கம்” நிறிவி-தமிழிசையை வளர்த்த பெருமை ‘செட்டிநாட்டரசர்’ ராஜா அண்ணாமலை செட்டியாரைச் சாரும்.
ஒரு மொழி வழக்கொழிதலுக்கான காரணங்கள் ஆறு என ஆய்வில் கூறுகின்றார்:மார்டின் ஹாஸ்பல்மாத் என்னும் ஜெர்மானிய அறிஞர்.
1) மக்கள் இடப்பெயர்ச்சி
2) வணிகம்
3) சிறுபான்மை மக்கள் மீது பெரும்பான்மை மக்களின் ஆதிக்கம்
4) ஊடகங்கள்
5) காலனி ஆதிக்கம்
6) இனப் படுகொலை
முதல் தமிழ்ச் சஙம் 4440 ஆண்டுகளும், இரண்டாம் தமிழ்ச் சங்கம் 3700 ஆண்டுகளும், மூன்றாம் தமிழ்ச் சஙம் 1850 ஆண்டுகளும் செயல்பட்டன. இவை முதல், இடை, கடை என வழக்கில் இருந்தன. கி.பி.1-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதே சஙகாலம்.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என தென் மாநிலங்கள் ‘சென்னை மாகாணம்’ என்று அழைக்கப்பட்டது. தமிழ் பேசும் மாந்னிலத்திற்கு “மெட்ராஸ் ஸ்டேட்’ என்று ஆங்கிலத்தில் வழங்குதல் கூடாது. “தமிழ்நாடு” என்று பெயரிட வேண்டும் என்று 64 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டார் தியாகி சங்கரலிங்கனார். தமிழுக்காகத் தன் உயிரையே தந்து சரித்திரத்தில் இடம் பிடித்தார்.
Tuesday, June 22, 2010
”மாநாடு சிறக்கும் ; செம்மொழி சிறக்குமா?”
”மாநாடு சிறக்கும் ; செம்மொழி சிறக்குமா?”
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற இருக்கிறது. தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் சீரிய தலைமையில், துணை முதல்வர் ஸ்டாலினின் மேற்பார்வையில் சிறப்புடன் நடைபெற இருக்கும் இந்த மாநாடு எல்லா வகையிலும் வெற்றி பெறும்; வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்து கிறோம். ‘உலகெலாம் தமிழ் முழக்கம் கேட்கச் செய்ய’ இந்த மாநாடு பேருதவியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஆனால் செம்மொழி மாநாடு நடைபெறும் இத்தருணத்தில் தமிழ் நாட்டில் தமிழின் நிலை என்ன?
தமிழ் ஆர்வலர்களும் தமிழ்ச் சான்றோர்களும் தமிழ்ப் புலவர்களும் ‘தமிழ்நாட்டில் தமிழ் இல்லையே’ என்று புலம்பத் தொடங்கிச் சற்றொப்பக் கால் நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்று வரை அவர்களின் கவலை தீரவில்லை; கண்ணீர் வற்றவில்லை.
தில்லியைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று தமிழகத்தின் பள்ளிகளில் ஓர் ஆய்வை நடத்தியது. கிராமப்புறங்களில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் ஏறத்தாழ 65
விழுக்காட்டினர்க்குத் தமிழ்வழி இரண்டாம் வகுப்புப் பாட நூலைப் படிக்கக்கூட முடியவில்லை என்று அது கண்டறிந்துள்ளது.
தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் தமிழ் இல்லை.
தமிழகத்தின் கடைத்தெருக்களில், அங்காடி வீதிகளில் தமிழ் இல்லை.
அரசு அலுவலகங்களில் தமிழ் இல்லை.
நீதிமன்றங்களில் தமிழ் இல்லை.
தமிழ்க் கல்லூரிகள் எல்லாம் கலைக் கல்லூரிகளாக மாறிவிட்டன.
தமிழ்ப் படித்தவர்களுக்கு வேலை இல்லை.
தொலைக்காட்சிகளிலும் (கலைஞர் தொலைக்காட்சி உட்பட) திரைப் படங்களிலும் தமிழும் இல்லை; தமிழ்ப்பண்பாடும் இல்லை; தமிழ் வாழ்வும் இல்லை.
நாளிதழ்களிலும் பருவ இதழ்களிலும் நடத்தப்படும் தமிழ்க் கொலைக்கு அளவே இல்லை. (பேராசிரியர் நன்னன் அவர்கள் இதைக் குறித்து அன்றாடம் கலங்குகிறார்; கதறுகிறார்; குமுறுகிறார். ஆனால் அவருடைய கதறல் யாருடைய காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை)
தமிழர்கள் பலரும் ‘தமிங்கிலர்’ ஆகிவிட்டனர். ஆங்கிலம் கலக்காமல் யாருக்கும் ஒரு சொற்றொடர் கூட பேசவோ எழுதவோ இயலவில்லை.
கன்னித் தழிழ் இன்றைக்குப் ‘பண்ணித் தமிழ்’ ஆகிவிட்டது. (இதோ, ஓர் உரையாடல்: ‘நீ காலையில டிபன் பண்ணி டென் ஓ க்ளாக் மேல ஆபிசுக்கு போன் பண்ணிப் பேசு. அவன் ஈவினிங் வெயிட் பண்ணி உன்னை வீட்ல டிராப் பண்ணிடுவான். போன் பண்ண மிஸ் பண்ணிடாதே.’)
தமிழ்நாட்டில் தமிழின் அவல நிலையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒரே ஒரு வினா உள்ளத்தைத் துளைத்துக் கொண்டே இருக்கிறது :
”மாநாடு சிறக்கும் ; செம்மொழி சிறக்குமா?”
-சிராஜுல்ஹஸன்
நன்றி : சமரசம் ( 16 – 30 ஜுன் 2010 )
Sheikh Sintha Mathar Masoud
dateTue, Jun 22, 2010 at 6:17 PM
subjectமாநாடு, செம்மொழி .........
மாநாடு சிறக்கும்; செம்மொழி சிறக்குமா?
மாநாடு சிறக்கும்; செம்மொழி இறக்கும் ……
ஷேக் சிந்தா மதார்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற இருக்கிறது. தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் சீரிய தலைமையில், துணை முதல்வர் ஸ்டாலினின் மேற்பார்வையில் சிறப்புடன் நடைபெற இருக்கும் இந்த மாநாடு எல்லா வகையிலும் வெற்றி பெறும்; வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்து கிறோம். ‘உலகெலாம் தமிழ் முழக்கம் கேட்கச் செய்ய’ இந்த மாநாடு பேருதவியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஆனால் செம்மொழி மாநாடு நடைபெறும் இத்தருணத்தில் தமிழ் நாட்டில் தமிழின் நிலை என்ன?
தமிழ் ஆர்வலர்களும் தமிழ்ச் சான்றோர்களும் தமிழ்ப் புலவர்களும் ‘தமிழ்நாட்டில் தமிழ் இல்லையே’ என்று புலம்பத் தொடங்கிச் சற்றொப்பக் கால் நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்று வரை அவர்களின் கவலை தீரவில்லை; கண்ணீர் வற்றவில்லை.
தில்லியைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று தமிழகத்தின் பள்ளிகளில் ஓர் ஆய்வை நடத்தியது. கிராமப்புறங்களில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் ஏறத்தாழ 65
விழுக்காட்டினர்க்குத் தமிழ்வழி இரண்டாம் வகுப்புப் பாட நூலைப் படிக்கக்கூட முடியவில்லை என்று அது கண்டறிந்துள்ளது.
தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் தமிழ் இல்லை.
தமிழகத்தின் கடைத்தெருக்களில், அங்காடி வீதிகளில் தமிழ் இல்லை.
அரசு அலுவலகங்களில் தமிழ் இல்லை.
நீதிமன்றங்களில் தமிழ் இல்லை.
தமிழ்க் கல்லூரிகள் எல்லாம் கலைக் கல்லூரிகளாக மாறிவிட்டன.
தமிழ்ப் படித்தவர்களுக்கு வேலை இல்லை.
தொலைக்காட்சிகளிலும் (கலைஞர் தொலைக்காட்சி உட்பட) திரைப் படங்களிலும் தமிழும் இல்லை; தமிழ்ப்பண்பாடும் இல்லை; தமிழ் வாழ்வும் இல்லை.
நாளிதழ்களிலும் பருவ இதழ்களிலும் நடத்தப்படும் தமிழ்க் கொலைக்கு அளவே இல்லை. (பேராசிரியர் நன்னன் அவர்கள் இதைக் குறித்து அன்றாடம் கலங்குகிறார்; கதறுகிறார்; குமுறுகிறார். ஆனால் அவருடைய கதறல் யாருடைய காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை)
தமிழர்கள் பலரும் ‘தமிங்கிலர்’ ஆகிவிட்டனர். ஆங்கிலம் கலக்காமல் யாருக்கும் ஒரு சொற்றொடர் கூட பேசவோ எழுதவோ இயலவில்லை.
கன்னித் தழிழ் இன்றைக்குப் ‘பண்ணித் தமிழ்’ ஆகிவிட்டது. (இதோ, ஓர் உரையாடல்: ‘நீ காலையில டிபன் பண்ணி டென் ஓ க்ளாக் மேல ஆபிசுக்கு போன் பண்ணிப் பேசு. அவன் ஈவினிங் வெயிட் பண்ணி உன்னை வீட்ல டிராப் பண்ணிடுவான். போன் பண்ண மிஸ் பண்ணிடாதே.’)
தமிழ்நாட்டில் தமிழின் அவல நிலையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒரே ஒரு வினா உள்ளத்தைத் துளைத்துக் கொண்டே இருக்கிறது :
”மாநாடு சிறக்கும் ; செம்மொழி சிறக்குமா?”
-சிராஜுல்ஹஸன்
நன்றி : சமரசம் ( 16 – 30 ஜுன் 2010 )
Sheikh Sintha Mathar Masoud
dateTue, Jun 22, 2010 at 6:17 PM
subjectமாநாடு, செம்மொழி .........
மாநாடு சிறக்கும்; செம்மொழி சிறக்குமா?
மாநாடு சிறக்கும்; செம்மொழி இறக்கும் ……
ஷேக் சிந்தா மதார்
Friday, April 23, 2010
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைக்குமா?
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைக்குமா?
தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன. ஓரிருவரிகொண்ட மென்பொருள் நிரழிகளை இலட்சக்கணக்காண ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் பல மென்பொருள் நிரழிகளை உருவாக்கி பொதுப்பயன்பாட்டுக்கு வைத்தவர் திரு.உமர் தம்பி அவர்கள்.
விண்டோஸ் 98 பயனர்கள் தமிழிணைய தளங்களை எவ்வித சிரமமுமின்றி கணினியில் பார்வையிடவும், யூனிகோட் ஒருங்குறியில் தட்டச்சவும் உமர் தம்பி உருவாக்கிய 'தேனீ' வகை எழுத்துருக்கள் மற்றும் நிரழிகள் இன்றும் பல தமிழ்தளங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் எழுத்துறுக்கள் (Theenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அவற்றிற்குண்டான கிரடிட்டோ எதிர்பாராது சேவையாற்றியவர்.
கணினித் தமிழ் தளங்களான சங்கமம், தமிழ் வலைப்பூக்களின் முன்னோடி திரட்டியான தமிழ்மணம், எழில்நிலா மற்றும் அதிரை.காமிலும் பல்சுவை கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுதப்பழகுவோம் HTML, யுனிகோடும் இயங்கு எழுத்துருவும், யுனிகோடும் தமிழ் இணையமும், யுனிகோடின் பன்முகங்கள்-RSS ஓடை-ஒரு அறிமுகம்,தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு மற்றும் பல கணினித் தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
நான்காம் இணையத் தமிழுக்காகச்செய்த தமிழ்ச்சேவை மகத்தானது. இ-கலப்பை தமிழ் தட்டச்சு மென்பொருள் உருவாக்கத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டவர்களில் உமர்தம்பியும் ஒருவர்.
சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் உத்தமம் (INFITT) சார்பில் நடந்த மாநாட்டில் 'உமர்தம்பி அரங்கு' என்று பெயரிட்டிருந்ததாக தமிழூற்று மாஹிர் தெரிவித்திருந்தார்.
தமிழா,அன்புடன்,அதிரை வெப் கம்யூனிடி மற்றும் பல குழுமங்களிலிலும் உமர்தம்பி அவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளன. மொத்தத்தில் தமிழ் கணிமையின் முன்னோடியாக அரியபல தொண்டாற்றியுள்ள அதிரையின் தவப்புதல்வர்களில் ஒருவரான உமர்தம்பி வாழும்காலத்தில் கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.
மறைந்த உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்தொண்டைப் போற்றும் வகையில் கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் என்பது தமிழ் கணிமை பயனர்களின் அவா!
தமிழக முதல்வரும், உலகதமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுவினரும் உரிய நேரத்தில் இதைச் செய்வார்களா?
உமர்தம்பி அவர்களை நினைவுகூறும் தமிழிணைய தளங்கள்,குழுமங்கள் மற்றும் தனிநபர் வலைப்பூக்களின் தொகுப்பை கீழ்கண்ட சுட்டிகளில் வாசிக்கலாம்.
இணைய தளங்கள்:
www.ta.wikipedia.org/wiki/உமர்_தம்பி
http://www.tamilmanam.net/m_thiratti_author.php?value=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&pageno=17
http://www.pudhucherry.com/pages/umar.html
http://www.satyamargam.com/index2.php?option=com_content&task=emailform&id=166&itemid=300131
www.geotamil.com/pathivukal/notice_unicode_umar.html
http://www.islamkalvi.com/portal/?p=77
http://ezilnila.com/archives/803
http://ezilnila.com/2009/07/umarthambi/
http://tamilnirubar.org/?p=9958
http://www.nouralislam.org/tamil/islamkalvi/web/unicode_dynamic_website.htm
http://www.pudhucherry.com/
http://umarthambi.sulekha.com/blog/post/2006/07/.htm
http://www.tmpolitics.net/reader/
http://www.desikan.com/blogcms/?item=theene-eot
குழுமங்கள்
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4845&mode=threaded&pid=71005
http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=1213.0
http://groups.yahoo.com/group/tamil_araichchi/message/4633
http://tech.groups.yahoo.com/group/e-Uthavi/message/579
http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/93c7eeb38bede818/814be493e9c363f6?hl=en&ie=UTF-8&q=csd_one
http://groups.google.com/group/Thamizmanam/browse_thread/thread/a510f4d1e236527c/deffa100a949050e#deffa100a949050e
வலைப்பூக்கள்:
http://valai.blogspirit.com/archive/2006/07/14/கணித௠தமிழர௠-உமர௠தம௠பி.html
http://muthukumaran1980.blogspot.com/2006/07/blog-post_24.html
http://akaravalai.blogspot.com/2006/07/blog-post.html
http://kasiblogs.blogspot.com/2006/07/blog-post.html
நிரழிகள்/மென்பொருள் தரவிறக்கம்
http://www.geocities.com/csd_one/UniConMagz.zip
http://www.geocities.com/csd_one/UWriterSetup.zip
http://www.geocities.com/csd_one/fonts/TheneeUni.zip
ஓரளவு மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.மேலதிக தகவலறிந்தவர்கள் தயவு செய்து கருத்துக்களை பின்னூட்டமிடவும். மேலே குறிப்பிடத் தவறிய சுட்டிகளையும் பின்னூட்டத்தில் தந்துதவினால் உமர்தம்பி அவர்கள் குறித்த தேட்ல்களுக்கு உதவியாக இருக்கும்.
by அதிரைக்காரன்
http://vettippechu.blogspot.com/2010/04/blog-post.html
தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன. ஓரிருவரிகொண்ட மென்பொருள் நிரழிகளை இலட்சக்கணக்காண ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் பல மென்பொருள் நிரழிகளை உருவாக்கி பொதுப்பயன்பாட்டுக்கு வைத்தவர் திரு.உமர் தம்பி அவர்கள்.
விண்டோஸ் 98 பயனர்கள் தமிழிணைய தளங்களை எவ்வித சிரமமுமின்றி கணினியில் பார்வையிடவும், யூனிகோட் ஒருங்குறியில் தட்டச்சவும் உமர் தம்பி உருவாக்கிய 'தேனீ' வகை எழுத்துருக்கள் மற்றும் நிரழிகள் இன்றும் பல தமிழ்தளங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் எழுத்துறுக்கள் (Theenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அவற்றிற்குண்டான கிரடிட்டோ எதிர்பாராது சேவையாற்றியவர்.
கணினித் தமிழ் தளங்களான சங்கமம், தமிழ் வலைப்பூக்களின் முன்னோடி திரட்டியான தமிழ்மணம், எழில்நிலா மற்றும் அதிரை.காமிலும் பல்சுவை கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுதப்பழகுவோம் HTML, யுனிகோடும் இயங்கு எழுத்துருவும், யுனிகோடும் தமிழ் இணையமும், யுனிகோடின் பன்முகங்கள்-RSS ஓடை-ஒரு அறிமுகம்,தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு மற்றும் பல கணினித் தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
நான்காம் இணையத் தமிழுக்காகச்செய்த தமிழ்ச்சேவை மகத்தானது. இ-கலப்பை தமிழ் தட்டச்சு மென்பொருள் உருவாக்கத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டவர்களில் உமர்தம்பியும் ஒருவர்.
சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் உத்தமம் (INFITT) சார்பில் நடந்த மாநாட்டில் 'உமர்தம்பி அரங்கு' என்று பெயரிட்டிருந்ததாக தமிழூற்று மாஹிர் தெரிவித்திருந்தார்.
தமிழா,அன்புடன்,அதிரை வெப் கம்யூனிடி மற்றும் பல குழுமங்களிலிலும் உமர்தம்பி அவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளன. மொத்தத்தில் தமிழ் கணிமையின் முன்னோடியாக அரியபல தொண்டாற்றியுள்ள அதிரையின் தவப்புதல்வர்களில் ஒருவரான உமர்தம்பி வாழும்காலத்தில் கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.
மறைந்த உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்தொண்டைப் போற்றும் வகையில் கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் என்பது தமிழ் கணிமை பயனர்களின் அவா!
தமிழக முதல்வரும், உலகதமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுவினரும் உரிய நேரத்தில் இதைச் செய்வார்களா?
உமர்தம்பி அவர்களை நினைவுகூறும் தமிழிணைய தளங்கள்,குழுமங்கள் மற்றும் தனிநபர் வலைப்பூக்களின் தொகுப்பை கீழ்கண்ட சுட்டிகளில் வாசிக்கலாம்.
இணைய தளங்கள்:
www.ta.wikipedia.org/wiki/உமர்_தம்பி
http://www.tamilmanam.net/m_thiratti_author.php?value=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&pageno=17
http://www.pudhucherry.com/pages/umar.html
http://www.satyamargam.com/index2.php?option=com_content&task=emailform&id=166&itemid=300131
www.geotamil.com/pathivukal/notice_unicode_umar.html
http://www.islamkalvi.com/portal/?p=77
http://ezilnila.com/archives/803
http://ezilnila.com/2009/07/umarthambi/
http://tamilnirubar.org/?p=9958
http://www.nouralislam.org/tamil/islamkalvi/web/unicode_dynamic_website.htm
http://www.pudhucherry.com/
http://umarthambi.sulekha.com/blog/post/2006/07/.htm
http://www.tmpolitics.net/reader/
http://www.desikan.com/blogcms/?item=theene-eot
குழுமங்கள்
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4845&mode=threaded&pid=71005
http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=1213.0
http://groups.yahoo.com/group/tamil_araichchi/message/4633
http://tech.groups.yahoo.com/group/e-Uthavi/message/579
http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/93c7eeb38bede818/814be493e9c363f6?hl=en&ie=UTF-8&q=csd_one
http://groups.google.com/group/Thamizmanam/browse_thread/thread/a510f4d1e236527c/deffa100a949050e#deffa100a949050e
வலைப்பூக்கள்:
http://valai.blogspirit.com/archive/2006/07/14/கணித௠தமிழர௠-உமர௠தம௠பி.html
http://muthukumaran1980.blogspot.com/2006/07/blog-post_24.html
http://akaravalai.blogspot.com/2006/07/blog-post.html
http://kasiblogs.blogspot.com/2006/07/blog-post.html
நிரழிகள்/மென்பொருள் தரவிறக்கம்
http://www.geocities.com/csd_one/UniConMagz.zip
http://www.geocities.com/csd_one/UWriterSetup.zip
http://www.geocities.com/csd_one/fonts/TheneeUni.zip
ஓரளவு மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.மேலதிக தகவலறிந்தவர்கள் தயவு செய்து கருத்துக்களை பின்னூட்டமிடவும். மேலே குறிப்பிடத் தவறிய சுட்டிகளையும் பின்னூட்டத்தில் தந்துதவினால் உமர்தம்பி அவர்கள் குறித்த தேட்ல்களுக்கு உதவியாக இருக்கும்.
by அதிரைக்காரன்
http://vettippechu.blogspot.com/2010/04/blog-post.html
Subscribe to:
Posts (Atom)