Thursday, April 30, 2009

மனித நேய விரோதிகள் யார்?

மனித நேய விரோதிகள் யார்?

(காயல் இளம்பிறையான்)
kayalpirai@gmail.com

இந்திய பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. அனல் பறக்கும் பிரச்சாரங்கள், அறிக்கை போர்கள், வாக்குறுதி மழைகள் என தேர்தல் திருவிழா களைகட்டத் துவங்கிவிட்டது. இதில் தமிழக முஸ்லிம்களின் நிலை என்ன? என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

தமிழகத்தை மாறி மாறி ஆட்சிபுரியும் இருபெரும் திராவிட கட்சிகள் இம்முறையும் ஒரு முஸ்லிமுக்குக்கூட வாய்ப்பு வழங்காதது பெரும் ஏமாற்றத்தையும், வேதனையையும் தருகிறது. இதற்கு மூலகாரணம், முஸ்லிம்கள் பல்வேறு தலைமையின் கீழ் செயல்படுகிறார்கள் என்ற எண்ணம் அவர்களிடத்திலே மேலோங்கி இருப்பதுதான். இந்த எண்ணம் முறியடிக்கப்பட வேண்டும். இதற்கு முடியுமான எல்லா முயற்சிகளையும் எடுத்தாக வேண்டிய கடமையும், கடப்பாடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு உண்டு என நான் வலியுறுத்துகிறேன். இது எனது சொந்தக் கருத்தல்ல. நமது சமுதாயத்திலுள்ள நடுநிலையாளர்களின் கருத்தாக உருப்பெற்றிருக்கிறது.

பல நேரங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களை பகிரங்கமாக பேசி மக்களுக்கு மத்தியில் குழப்பத்தை விளைவித்துவரும் பா.ஜ.க-வைப் போலவே அ.தி.மு.க-வும் சில நேரங்களில் சிறுபான்மையினரை சீண்டி வருகிறது. உதாரணத்திற்கு ஒன்றிரண்டைக் குறிப்பிடலாம்.

1. பொது சிவில் சட்டம் வேண்டும், 2. ராமருக்கு அயோத்தியில் கோயில் கட்டாமல் வேறு எங்கு கட்ட வேண்டும்? 3. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினால் மதமோதல்களை உருவாக்கும் போன்ற பா.ஜ.க-வின் ஊதுகுழல் போல் இப்படிப்பட்ட அர்த்தமற்ற அபத்தமான கருத்துக்களை கூறி வருகிறது. எனவேதான் பி.ஜே.பி தமிழகத்திற்கு அவசியமில்லை. அதன் கொள்கைகளைத்தான் அ.தி.மு.க. பரப்பிவருகிறதே என அரசியல் விமர்சகர் சோலை அருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை இன விரோதப்போக்கை கடைபிடித்துவரும் அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலில் தமக்கு சீட்டு தந்தால், தங்களின் கொள்கைகளை குப்பைக்கூடையில் போட்டுவிட்டு அதனைப்பெற பேரம் பேசும் பெருமைக்குரியவர்கள்தான் மனித நேய மக்கள் கட்சி என்பதை மக்கள் தெளிவாக அடையாளம் கண்டு கொண்டார்கள்.

மனிதநேயத்திற்கும் அவர்களுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது என்பதை மறைப்பதற்காகவே முஸ்லிம் என்ற பெயரை வைப்பதற்கு அஞ்சுகின்றனர். இவர்கள்தான் முஸ்லிம்களின் காவலர்களாம்!

சமுதாயத்தின் ஒற்றுமையை, கட்டுக்கோப்பை சிதைத்து உடைத்து சின்னாபின்னப் படுத்தியதுதான் அவர்கள் செய்த மகத்தான சாதனை. சமுதாயத்தை ஓரணியில் திரட்டுகிறோம் என்று புறப்பட்டவர்கள் தாங்களே பல அணிகளாக பிரிந்ததுதான் மிச்சம். தங்களுக்கிடையே திருட்டுப்பட்டங்கள் சூட்டி திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். இவர்கள் சமுதாய வழிகாட்டிகளாம்! வெட்கமாயில்லை?

முழுக்க முழுக்க வஹ்ஹாபிசத்தை விதைத்துவரும் உங்களுக்கும் வக்ஃப் வாரியத்திற்கும் என்ன சம்பந்தம்? கோடிக்கணக்கான சொத்துக்கள் வக்ஃப் வாரியத்தில் உள்ளது என்பதை குறிவைத்துத்தானே அந்தப்பதவியை அடம்பிடித்து வாங்கி அனுபவித்து வந்தீர்கள்? இல்லை இல்லை அந்த வாரியத்தை நெறிபடுத்தி, ஒழுங்குபடுத்தத்தான் அதனைக்கேட்டுப் பெற்றோம் என்றால், அதனை கைகழுவியதன் காரணம் என்ன? உங்களை நோக்கி சமுதாயத்திலிருந்து புறப்பட்ட எதிர்கணைகள்தானே? நாமாகவே விலகிவிடுவதுதான் கௌரவம் என்றுதானே அதனை ராஜினாமா செய்தீர்கள்? சமுதாயம் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று இனியும் பகல்கனவு காணாதீர்கள்.

நீங்கள் யார்? எந்தப் போர்வையில் உலா வருகிறீர்கள் என்பதையெல்லாம் முஸ்லிம் லீக் தோலுரித்துக்காட்ட முனைந்து விட்டதால் என்னப்பேச்சு பேசுகிறோம் என்றுகூட சிந்திக்காமல் அநாகரீகமாக முஸ்லிம் லீக்கை பி.ஜே.பியோடு ஒப்பிட்டுப் பேசுகிறார் சகோதரர் ஜவாஹிருல்லாஹ். நாவடக்கம் வேண்டும். நாவு நரகத்தற்கு இழுத்துச்செல்லும் என்ற நபிமொழிக் கருத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பி.ஜே.பியைப் போலவே சமூக ஒற்றுமையை, மத நல்லிணக்கத்தை பாழ்படுத்துபவர்கள் என்று உங்களை நோக்கித்தான் மக்கள் கைநீட்டிப் பேசுகிறார்கள் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

ஏதோ தமிழக முஸ்லிம்கள் உங்களைத்தான் ஆதரிக்கிறார்கள், முஸ்லிம் லீக்கை கைவிட்டுவிட்டார்கள் என்ற உங்களின் தவறான எண்ணம், அகங்காரம், ஆணவம் எல்லாம் உங்களை இந்தத்தேர்தலில் தலைகுணிய செய்துவிடும் என்பது மட்டும் திண்ணம். இன்ஷா அல்லாஹ்.

உங்கள் தலைமை நிர்வாகிகளை எடுத்துக்கொண்டாலும், செயற்குழு, பொதுக்குழு என்று எடுத்துக்கொண்டாலும் எல்லோரும் வஹ்ஹாபிச சாயலைக் கொண்டவர்கள்தானே? அப்படி இருக்க, நாங்கள்தான் ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதித்துவ அமைப்பு என்று உங்களால் எப்படி சொல்லமுடியும்? என்று நான் வினவ கடமைப்பட்டுள்ளேன். விடையுண்டா?


இடஒதுக்கீடை தி.மு.க. அரசு நடைமுறைப் படுத்தவில்லை என்று கூறி ஒரு கூட்டம் அ.தி.மு.க-வின் பக்கமும், இல்லை இல்லை கலைஞர்தான் இந்த மகத்தான இடஒதுக்கீட்டையே நம் சமுதாயத்திற்கு வழங்கினார் என்று ஒரு குழுவும் பிரிந்து நின்று பிரச்சார சண்டை போட்டுக் கொண்டவர்கள் இன்றைக்கு எந்தக் காரணத்தை சொல்லி எதிர்த்தார்களோ அவர்கள் தி.மு.க-வை ஆதரிக்க, நன்றி கெட்டவர்களாய் ஆதரித்தவர்கள் இன்றைக்கு தி.மு.க-வை எதிர்க்கிறார்கள். இந்த இரு பிரிவினரும்தான் சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி மஹல்லாக்களில், பள்ளிகளில் பிரிவினைகளை உருவாக்க முனைந்தவர்கள் என்பதற்கு தமிழகமெங்கும் உள்ள பள்ளிவாசல்களில் எழுதிப்போடப்பட்டுள்ள போர்டு – கரும்பலகைகளே போதிய ஆதாரமாகும்.

எனவே இவர்களை தமிழக முஸ்லிம்கள் மட்டுமல்ல, எல்லோரும் ஒன்றாக புறக்கணிப்பார்கள் என்பதில் முள்ளின் முனையளவும் சந்தேகமில்லை.

யுஏஇ த‌மிழ்ச்ச‌ங்க‌ நிக‌ழ்ச்சி புகைப்ப‌ட‌ங்க‌ள் ( 23 ஏப்ர‌ல் 2009 )

யுஏஇ த‌மிழ்ச்ச‌ங்க‌ நிக‌ழ்ச்சி புகைப்ப‌ட‌ங்க‌ள் ( 23 ஏப்ர‌ல் 2009 )

http://picasaweb.google.com/packven/FINAL?authkey=Gv1sRgCKSjvt_hv8zLrQE&feat=directlink

Why mother is so special

Why mother is so special


When I came home in the rain,

Brother asked why didn't you take an umbrella.
Sister advised, Why didn't you wait till rain stopped.
Father angrily warned, only after getting cold, you will realize.

But Mother, while drying my hair, said, stupid rain!
Couldn't it wait, Till my child came home?

That's MOM ...................

India International School - Bangalore - India

kamala marapatla
dateMon, Apr 27, 2009 at 1:35 PM
subject:India International School - Bangalore - India

Dear Parents / Students,

It was a great pleasure to meet you at our stall in GETEX, Education Exhibition, Dubai during 15th -18th April, 2009 and share information about India International School, Bangalore, India.

Our school is situated in the IT hub and in the safest place with respect to safety concerns of parents. The school focuses on the all round development of the student with Music, Arts, Sports as a part of its curriculum resulting in holistic attribute

CURRICULUM :

We are a Co- Educational Institute following the ICSE (Indian Certificate of Secondary Education , Affiliated to New Delhi Board , India) curriculum from Nursery to Grade 12 , IGCSE (International Certificate of Secondary Education , Affiliated to Cambridge University , UK) curriculum for Grade 9 – 10 we also offer “A “ level and “O” level courses. We offering PUC (Pre University College, affiliated to Bangalore University) and ISC (11th and 12th as per ICSE curriculum) courses.

IIS Infrastructure:

The school takes great pride in its imposing, contemporary state-of-the-art infrastructure, inviting students to explore new arenas of learning.
The campus boasts of an international standard indoor stadium, play grounds, game courts and well maintained parklands.
The school possesses:
Fully equipped, spacious and well ventilated Physics, Chemistry & Biology Laboratories.
A separate English Language Laboratory for linguistic research and development of skills.
An exclusive Mathematics Laboratory for making mathematical activities interesting.
A Social-Science Laboratory for learning and preserving artifacts of historical value.
A Computer Laboratory that boasts of a computer-student ratio of 1:1 with internet browsing facilities.

HOSTEL FACILITIES :

The IIS Hostel Block is a spatial structure built within the pristine campus. Every room accommodates three inmates, equipped with modern amenities of international standards, with ample storage, comfortable furnishings with separate cupboards, study table for every individual in each room, attached bathrooms running hot/cold water for every room and separate study room on every floor. The hostels are efficiently supervised by hostel mothers. To handle any sort of medical emergency the school provides in-house medical services, with a doctor and his team always on alert.



FOOD :

For boarders there is a wide choice of both, vegetarian and non-vegetarian in Indian/Continental food. Complete hygiene as per International Standards is maintained in the kitchen under the supervision of professional cooks and professionally trained staff
.
For any further enquires,kindly contact :

India International School
# 26/1 , Sarjapur Road (Near Wipro Corporate Office)
Chikka Bellandur , Carmelram Post
Bangalore – 560035
India

Ph.No. – 080 – 28439001 / 2
080 – 28439382 / 4
080 – 65366001 / 2
080 – 28440407

009844082220
009844504257


Fax – 28440944

Email Id – contacts.iis@gmail.com

Website – www.iis.edu.in

”ஓட்டு” களுக்காக இறையருளை இழக்க வேண்டாம் !

”ஓட்டு” களுக்காக இறையருளை இழக்க வேண்டாம் !

தமுமுகவினருக்கு கீழை ஜஹாங்கீர் அரூஸி வேண்டுகோள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொது செயலாளர் மற்றும் தொண்டர்களுக்கு மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி சலாத்துடன் எழுதிக் கொள்வது. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இம்மடல் காணும் உங்கள் அனைவரின் மீதும் சமாதானம் நிலவிட துஆ செய்கிறேன்.கடந்த 16 ஆண்டுகளாக தங்கள் இயக்கத்தின் சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மருத்துவ முகாம், இரத்ததான முகாம், ஆம்புலன்ஸ் சேவை போன்ற பொது சேவைகளை சாதி, மதம் வேறுபாடு இல்லாமல் செய்து வருவதை எல்லோரும் நன்கறிவோம். இச்சேவைகளுக்கான நற்கூலி நாளை மறுமையில் கிடைக்கும். என்ற நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் தான் தாங்கள் செய்திருப்பீர்கள் என திடமாக நம்பிக் கொண்டிருக்கிறோம். இது தான் உண்மையென்றால் அனைவருக்கும் சந்தோஷமே! மனிதன் செய்யும் ஒவ்வொரு அமல்களுக்கும் நிச்சயமாக கூலி வழங்குபவன் அல்லாஹ் ஒருவனே! அதற்குரிய நற்கூலியை நாளை மறுமையில் வழங்கப்படும் போது நல் அமல்களில் ஈடுபட்ட மனிதர்களின் முகத்தில் ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது ! இதையெல்லாம் உணர்ந்து தான் தாங்கள் பகிரங்கமாகவே அரசியலுக்கு வர மாட்டோம் இது அல்லாஹ்வின் மீது சத்தியம் ! என்று பிரகடனம் செய்தீர்கள். ஒருவேளை மனம் மாறி அரசியலுக்கு வந்து விட்டால் இதற்காகத்தான் தமுமுகவினர் இரத்ததான முகாம், ஆம்புலன்ஸ் போன்ற சேவைகளை செய்திருக்கின்றனர். என்ற எண்ணம் பொது மக்களிடம் ஏற்பட்டு நாளை மறுமையில் இறைவனின் அருள் கிடைக்காமல் போய் விடலாம் என்ற அச்சத்தின் விளைவாகத் தானே நீங்கள் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் அறிவித்த அரசியலுக்கு வர மாட்டோம் இது அல்லாஹ் மீதாணை என்ற சத்தியம். அந்த நேரத்தில் உங்களது குரலில் இருந்த வீரியத்தை வர்ணிக்க வார்த்தை கிடையாது ! ஆனால் இன்றோ, அந்த சத்தியம் என்னாயிற்று? ஏன் சத்தியத்தை முறித்தீர்கள்? ஒரு முஸ்லிம் சத்தியத்தை முறிக்க நினைத்தால் அதற்கான பரிகாரத்தை நிறைவேற்றிய பின்னரே சத்தியத்தை முறித்ததற்கான காரண காரியங்களில் ஈடுபட வேண்டும் என்ற அல்குர்ஆனின் வசனத்தை படித்துப் பாருங்கள். குர்ஆனின் அடிப்படையில் வாழ வேண்டிய நீங்கள் உங்களது சத்திய முறிவுக்கான பரிகாரத்தை நிறைவேற்றினீர்களா? இதை நீங்கள் மட்டுமல்ல உங்கள் சத்திய பிரகடனத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு தொண்டரும் பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும். சத்தியத்தை முறிப்பது பாவம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் முறித்த சத்தியத்திற்கான பரிகாரத்தை செய்யாமல் இருப்பது மிகப்பெரிய பாவம் என்பதும் உங்களுக்கு தெரியாமல் இருக்காது ! உங்களின் சத்திய முறிவுக்கான பரிகாரத்தை இதோ அல்குர்ஆன் கூறுகிறது பாருங்கள்! ஏதாவதொன்றை உறுதிபடுத்து வதற்காகச் செய்யும் சத்தியத்திற்காக (அவற்றில் தவறினால்) அல்லாஹ் உங்களை பிடிப்பான். எனவே (சத்தியத்தை முறித்தால்) அதனுடைய பரிகாரமாவது உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் உணவில் நடுத்தரமானதிலிருந்து பத்து ஏழைகளுக்கு உணவளிப்பதாக இருக்கும். அல்லது பத்து ஏழைகளுக்கு உடுத்த உடை கொடுப்பதாயிருக்கும். அல்லது ஓர் அடிமையை உரிமை விடுவதாயிருக்கும். ஆனால் எவர் இம்மூன்றில் எதனையும் செய்ய சக்தி பெற்றுக் கொள்ளவில்லையோ? அப்போது மூன்று நாட்கள் நோன்பு (வைப்பது பரிகாரம் ஆகும்) இது தான் உங்களுடைய சத்தியங்களுக்கு அவற்றை நீங்கள் முறித்தால் பரிகாரமாகும். ஆகவே உங்களுடைய சத்தியங்களைப் பேணி காத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:89) இவ்வளவு பெரிய விஷயத்தை சடாரென உதறிவிட்டு நாளை மறுமையின் விளைவுகளை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் இவ்வுலக அரசியல் பதவிகளுக்காக ஆசைப்பட்டு இறையருளை இழக்க துணிந்திருப்பது எவ்வகையில் நியாயம்? இதை உங்களில் ஒருவன் என்ற சகோதர உரிமையோடு கேட்கிறேன். அரசியல் என்னும் சாக்கடைக்குள் மூழ்கியதும் உங்களின் அணுகுமுறைகளை கொஞ்சம் யோசித்து பார்த்தீர்களா? உங்களது 16 வருட பொது சேவைக்குரிய நற்கூலி வெறும் ஒரேயொரு சீட் ஒதுக்கீடு மட்டுமே! இப்போது அதற்கும் வழி இல்லாமல் போய் விட்டது. நான் கூறுவது நீங்கள் எடுத்த திமுகவுடனான கூட்டணி பேச்சு வார்த்தையைப் பற்றி! உங்களின் கண்ணியத்தையும், செல்வாக்கையும் திரைப்பட நடிகர் சரத்குமாரிடம் நீங்கள் நடத்திய கூட்டணி பேச்சு வார்த்தையின் போதே தமிழக முஸ்லிம் சமுதாயம் நன்கு தெரிந்து கொண்டது! உங்கள் கட்சியின் வலிமையை தெரிந்து கொண்ட சரத்குமார் உங்களுடன் கூட்டணியே வேண்டாமென்று தலை தெறிக்க ஓடியதையும் மக்கள் நன்கறிவர். இவ்வளவு அவமானங்களும் உங்களுக்கு ஏன் எதனால் ஏற்பட்டது? இறைவன் மீது செய்த சத்தியத்தை கேவலம் அரசியலுக்காக முறித்துக் கொண்டதால் வந்த வினையால் தான்! தமுமுகவினரின் பொது சேவைக்குரிய நற்கூலியை அரசியல் மூலம் பெறுவதைவிட நாளை மறுமையில் இறைவனிடம் பெறுவதுதான் உயர்வு! இப்போதும் கெட்டு விடவில்லை உடனடியாக உங்கள் கட்சியை கலைத்து விட்டு நீங்கள் செய்த சத்தியத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் தேர்தலில் இருந்து விலகி கொள்ளுங்கள். மீண்டும் தமுமுகவின் மூலமே பொது சேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்போம் என்ற லட்சியப் பயணத்தை தொடருங்கள். அரசியல் எனும் சாக்கடைக்காக இறையருளை இழக்க வேண்டாம் என மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி
துபை

Lose your job?? Don't lose hope!!

Lose your job?? Don't lose hope!!
by Asma bint Shameem


As world markets suffer from the ongoing global financial crisis and housing markets slump, as jobs are lost and unemployment rates rise high, as businesses close down and people don't have a source of income, you worry.
You worry about the growing global recession and its challenges. And you worry about your family, your kids, how to provide for them, how to put food on the table, how to pay the bills....

In times such as these, this is a reminder for my brothers and sisters, as the reminder always benefits the believers.
"But remind, the Reminder will benefit the believers." (Surah adh-Dhaariyaat: 55)

KEEP YOUR IMAAN STRONG

1. Remember.... nothing happens except by the will and decree of Allaah:

Belief in al-qadar (the Divine decree) is one of the pillars of our Imaan, and no one's faith is complete without it. So if you lost your job, it was by the Will and Decree of Allaah. Allaah says:

"No calamity befalls on the earth or in yourselves but it is inscribed in the Book of Decrees (al-Lawh al-Mahfooz) before We bring it into existence. Verily, that is easy for Allaah" (al-Hadeed:22)
Also the Prophet (sal Allaahu Alayhi wa sallam) said: "Know that what has passed you by was not going to befall you, and that what has befallen you was not going to pass you by. And know that victory comes with patience, relief with affliction, and ease with hardship." (Tirmidhi-Saheeh)



2. It is Allaah that provides for you and NOT your employer;

Remember that Allaah is al-Razzaaq (the Provider) and the Best of those who provide. It was Allaah who was providing you before you lost your job and it is still He that will provide you after you lost it. The one who fed you when you were in your mother's womb will also feed you when you are an adult. And it was not you who was putting food on the table for your family. Rather it was Allaah using you as a means to provide for them.
"Except for Allah, is there any other Creator who provides for you out of heaven and earth? There is no god except He. Where then do you turn?" (Surah Faatir:3)



3. Know that your provision was written for you before you were even born:

Allaah had sent an angel to write down your provision for you when you were just a few days old in your mother's womb, and you will get it, no matter what.
"(the angel) says, ‘O Lord, male or female? Doomed or blessed? What is his provision? What is his lifespan?' And that is written in his mother's womb." (Bukhaari)

There is nothing that can take your provision away. And you will not die until you have had your full provision. The Prophet (sal Allaahu Alaiyhi wa sallam) said:

"The Holy Spirit (Jibreel) has inspired to me that no soul will die until it has completed its appointed term and received its provision in full, so fear Allaah and do not be desperate in seeking provision, and no one of you should be tempted to seek provision by means of committing sin if it is slow in coming to him, for that which is with Allaah can only be attained by obeying Him." (Saheeh al-Jaami', 2085)

4. It is a test for you from Allaah:

Remember that disasters and calamities are a test of a believer's patience. And so He will test you to see how strong you are and how you will react to His test. And know if Allaah loves a person, He tests him.

"We shall test you with something of fear and hunger, and decrease of goods, life and fruits. Give glad tidings to the patient." (al-Baqarah: 155)

5. Surely, it is a means of expiation of your sins:

Calamities are a means of expiation of sin and raising one's status. The Prophet (sal Allaahu Alaiyhi wa sallam) said:
"There is nothing that befalls a believer, not even a thorn that pricks him, but Allaah will record one good deed for him and will remove one bad deed from him." (Muslim).
And he said: "Trials will continue to befall the believing man and woman, with regard to themselves, their children and their wealth, until they meet Allaah with no sin on them." (Tirmidhi, saheeh by al-Albaani)

WHAT TO DO

1. Have tawakkul on Allaah

Always think to yourself...Allaah wouldn't decree something for me unless it was good for me. Have faith in Allaah's Words....
"But you may hate a thing although it is good for you, and may love a thing although it is evil for you. Allah knows, and you do not." (Baqarah:216)


The Prophet (sal Allaahu Alaiyhi wa sallam) said: "If you put your trust in Allaah in the true sense, He will grant your provision as He grants to the birds, who go out in the morning hungry and come back full." (Ahmad, Ibn Maajah and al-Tirmidhi) .

2. Be patient

Remember that with every difficulty comes ease and with hardship comes relief.
"How wonderful is the affair of the believer, for all his affairs are good and this does not apply to anyone except the believer. If something good happens to him he is grateful, and that is good for him, and if something bad happens to him he is patient, and that is good for him." (Muslim).

3. Review your life and make LOTS of Istighfaar

Look at your life. Is there something that you need to improve on? Is there something that you need to give up? Is there anything that may be a cause of Allaah's warning or punishment to you?

"And whatever of misfortune befalls you, it is because of what your hands have earned" [al-Shoora:30]

"A man may be deprived of provision by a sin that he commits." (Ibn Maajah-saheeh by al-Albaani)

If there is such a thing, NOW is the time to fix yourself. Ask Allaah sincerely to forgive you and He will. There is no doubt in that.For He is al-Ghafoor, ar-Raheem.
‘Ask forgiveness from your Lord, verily, He is Oft‑Forgiving. He will send rain to you in abundance, and give you increase in wealth and children, and bestow on you gardens and bestow on you rivers.'"[Nooh 71:10-12]



Fear Allaah and obey Him as much as you can:

Obedience is the key to the Mercy of Allaah and fearing Him (taqwa) is a means to attain all success. Allaah says:
"And whosoever fears Allaah and keeps his duty to Him, He will make a way for him to get out (from every difficulty). And He will provide him from (sources) he never could imagine. And whosoever puts his trust in Allaah, then He will suffice him. Verily, Allaah will accomplish his purpose. Indeed Allaah has set a measure for all things" [al-Talaaq:2- 3]

Make dua and do lots of good deeds

Never forget that Dua is the weapon of the believer. Pray to Allaah with the attitude of certainty and He will surely respond. Do a lot of acts of worship, such as reading Qur'aan, fasting, giving charity, etc. This will get rid of your worry and anxiety, and give you happiness, peace of mind and success in this dunya as well as in the Hereafter.
"Whoever works righteousness - whether male or female - while he (or she) is a true believer; verily, to him We will give a good life (in this world with respect, contentment and lawful provision), and We shall pay them certainly a reward in proportion to the best of what they used to do (i.e. Paradise in the Hereafter)" (al-Nahl:97)
Also, worship at times of hardship and tribulation has a special sweetness to it and a great reward.
The Prophet (sal Allaahu Alayhi wa sallam) said: "Worshipping at times of tribulation and confusion is like migrating to join me." (Muslim)



Uphold ties of kinship


If there are any family members that you have cut off from or are not on speaking terms, etc., correct that and ask them for forgiveness, even if it was not your fault.
Why?
Because the Prophet (sal Allaahu Alayhi wa sallam) said: "Whoever would like his provision to be increased and his life span to be extended, let him uphold the ties of kinship."

Do your best to seek Halaal earnings.... .


Work hard to find a means of living for your family, while relying on Allaah. That is a responsibility placed upon you by Him.


Imam Ahmad was asked about a man who sat in his house or in the masjid and said, "I will not do anything until my rizq comes to me." He said, "This is a man who has no knowledge.
"Strive to do that which will benefit you and seek the help of Allaah, and do not feel helpless." (Muslim).



BUT, don't lose sight of the Aakhirah


However, do realize that this world is only temporary and the REAL life is that of the Hereafter. This world should not be the main concern of the Muslim, rather our focus should be on what we do for the Aakhirah.
The Prophet (sal Allaahu Alayhi wa sallam) said: "Whoever is mainly concerned about the Hereafter, Allaah will make him feel independent of others and will make him focused and content, and his worldly affairs will fall into place. But whoever is mainly concerned with this world, Allaah will make him feel in constant need of others and will make him distracted and unfocused, and he will get nothing of this world except what is decreed for him." (Tirmidhi- saheeh by al-Albaani in Saheeh al-Jaami').
Wassalam.

TNTJ மாணவர் அணியின் இந்த வார கல்வி சேவை நிகழ்சிகள்

TNTJ மாணவர் அணியின் இந்த வார கல்வி சேவை நிகழ்சிகள்





தர்மபுரியில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்


என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?


நாள் : மே 2 - சனி கிழமை- (இன்ஷா அல்லாஹ் )


நேரம் : காலை 10 மணி


சிறப்புரை : S. சித்திக் M.Tech ( மாநில மாணவர் அணிச் செயலாளர்)

இடம் : PRK கல்யாண மண்டபம், உருது ஸ்கூல் ரோடு, தர்மபுரி



தொடர்பிற்கு : 9443212388, 9894520178 -அபூ சலீம் (தர்மபுரி மாவட்ட மாணவர் அணி செயலாளர்)


மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது
TNTJ. தர்மபுரி மாவட்ட மாணவர் அணி.



லெப்பைகுடி காடு (பெரம்பலுர் மாவட்டம்) -ல் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்


என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?


நாள் : மே 3 - ஞாயிற்று கிழமை- (இன்ஷா அல்லாஹ் )


நேரம் : காலை 10 மணி


சிறப்புரை : Dr.S.ஜாபர் அலி.PhD. (உதவி பேராசிரியர்)

S. சித்திக் M.Tech ( மாநில மாணவர் அணிச் செயலாளர்)

இடம் : அரசு பெண்கள் மேல் நிலை பள்ளி, லெப்பைகுடி காடு, பெரம்பலுர்


தொடர்பிற்கு : 9843398149

மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ
பெரம்பலுர் மாவட்ட மாணவர் அணி.



திருப்பதூரில் (சிவகங்கை மாவட்டம்) TNTJ மாணவர் அணியின் ஒழுக்க பயிற்சி முகாம் (தர்பியா)

நாள் : மே 3- ஞாயிற்று கிழமை- (இன்ஷா அல்லாஹ் )


நேரம் : காலை 10 மணி


இடம் : இமயம் டியூஸன் சென்டர், மேஸ்த்திரியார் தெரு. திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டம்


தொடர்பிற்கு : 9003811959, 9944244632

மாணவர்கள், இளைஞர்கள், அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ
சிவகங்கை மாவட்ட மாணவர் அணி.

Tuesday, April 28, 2009

http://picasa.google.com

http://picasa.google.com/


Download Picasa and install, create username and password
Open Picasa
It will read all the photos
and select the folders all pictures and Synchroniz
and Share enter the email address

மஸ்னவி ஷரீப் தமிழாக்கம்

assalamu alaikkum

masnavi sharif available at jeddha
plz call your copy 0506573319
price 50 riyal

wasasalam

சில சில்லி வாக்கியங்கள்

சில சில்லி வாக்கியங்கள்

கங்கை, காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம் ,ஆனால் ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியாது

திருவள்ளுவர் 1330 குறள் எழுதியிருக்கலாம் ஆனால் அவரால் ஒரு குரலில் மட்டுமே பேசமுடியும்

என்ன தான் தன் தலை சுற்றினாலும் தன் முதுகை பார்க்க முடியாது ..

மீன் பிடிப்பவர் மீனவர் . நாய் பிடிப்பவர் நாயவராக முடியாது.

என்ன தான் ஒருவன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கி
உள்ளே போட முடியாது

தேள்,பாம்பு கொட்டினால் வலிக்கும் முடி கொட்டினால் வலிக்காது.

ஸ்கூல்,காலேஜ் டெஸ்டில் பிட் அடிக்கலாம் , பிளட் டெஸ்டில் பிட் அடிக்க முடியாது .

பொங்கலுக்கு அரசாங்க லீவு.ஆனால் இட்லி , தோசைக்கு ?

கோலம் மாவுல கோலம் போடலாம், ஆனால் கடலை மாவுல கடலை போட முடியாது .

லைஃப் ல ஒன்னுமே இல்லைனா போர் அடிக்கும். தலையில்

ஒன்னுமே இல்லைனா கிளார் அடிக்கும்.

ஏழு பரம்பரைக்கு உட்கார்ந்து சாப்பிட காசு இருந்தாலும், ஃபாஸ்ட் ஃபுட் ல் நின்று தான் சாப்பிடனும்.

என்ஜினியரிங் காலேஜ்ல் படித்தால் என்ஜினியர், ஆனால் பிரஸிடன்ஸி காலேஜ்ல் படித்தால் ? ?

டீ கப்பில் டீ இருக்கும், ஆனால் வேர்ல்டு கப்பில் வேர்ல்டு
இருக்குமா ?

பால் கோவா செய்ய பால் தேவை. ஆனால் ரச குள்ளா செய்ய ரசமா ?

பல் வலி வந்தால் பல் பிடுங்கனும்,கால்,தலை வலி வந்தால் ??

Sunday, April 26, 2009

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கருணாநிதி உண்ணாநிலை!

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கருணாநிதி உண்ணாநிலை!


இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி இன்று காலை முதல் உண்ணாநிலையைத் தொடங்கியுள்ளார்.

இன்று காலை அண்ணா நினைவிடத்திற்குச் சென்ற கருணாநிதி அங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தனது உண்ணாநிலையைத் தொடங்கினார்.

இது தமிழர்களுக்கான தன்னுடைய மற்றொரு தியாகம் என்று கூறிய முதல்வர், ராஜபக்சேவின் இன அழிப்பில் நானும் ஒருவனாக இருக்கட்டும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக நேற்று விடுதலைப் புலியினர் தாங்களாகவே முன்வந்து போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டனர். இலங்கை அரசு அதனை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்ட நிலையில், இதுபற்றிக் கூறிய கருணாநிதி இன்று ஓர் இரவு பொறுத்திருப்போம் என்று கூறியிருந்தார்.

நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம்

அப்துல் கையூம் அவர்களின் எள்ளலும்-துள்ளலும் இணைந்த எழுத்து நடையில் இசைமுரசு நாகூர் ஹனீபாவை பற்றிய கட்டுரை மிக மிக அருமை.

கட்டுரை நாகூர் ஹனீபா பற்றி - தமிழ் விக்கிப்பீடியாவில் இணைக்கத்தக்க அளவிற்கு ஆதாரபூர்வமான தகவல்களை கொண்டிருக்கிறது.

தமிழ் முஸ்லிம்களின் இல்லங்களில் - ஒரு காலத்தில் ‘வெள்ளிக்கிழமை’ இரவு நேரங்களில் அவரின் பாடல்கள் ’டேப் ரிகார்டர்’ மூலம் ஒலிக்கப்படுவது ’சுன்னத்தாக’ கருதப்பட்டு வந்தது..


வீடியோவாக்கப்படும் தமிழ் முஸ்லிம்களின் திருமண நிகழ்ச்சிகளில் மறக்காமல் (இன்றும்) இணைக்கப்படும் பாடலான
‘வாழ்க..வாழ்கவே..
‘வாழ்க..வாழ்கவே..
‘வாழ்க..வாழ்க வாழ்க..
மணமக்கள்
வாழ்க வாழ்கவே .
வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்க.. என்ற பாடலை யாரும் மறக்க இயலாது...

உண்மையில் நாகூர் ஹனீபா அவர்கள் ஒரு சரித்திரம்தான்..

அருமையான கட்டுரை தந்த ஆசிரியர் அப்துல் கையூம் அவர்களுக்கு
நன்றியும்..வாழ்த்துகளும்..


தோழமையுடன்
பிறைநதிபுரத்தான்
வலைப்பூ: உரையாடல்

-----------------------------------------------------------------------
Stand upright,
Speak your thoughts,
Declare the truth you have - that all may share,
Be bold, proclaim it everywhere:
They only live who dare


--- On Fri, 24/4/09, அப்துல் கையூம் wrote:


From: அப்துல் கையூம்
Subject: {TMB - 3010} நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம்
To: "Tamil Muslim Brothers"
Date: Friday, 24 April, 2009, 12:18 AM



நன்றி : திண்ணை
ஏப்ரல் 23, 2009
- அப்துல் கையூம்

சென்ற வாரம் "நாகூர் - ஒரு வேடிக்கை உலகம்" என்ற எனது கட்டுரையை
‘திண்ணை’யில் படித்துவிட்டு நாகூர் ஹனிபாவைப் பற்றி ஒரு வார்த்தையும்
எழுதவில்லையே என்று

குறைபட்டுக் கொண்டார் நண்பர் வேல். “அவர் எப்போது வேடிக்கை ஆனார்?” என்று
கேட்க வேண்டும் போல் தோன்றியது. அவர் -ஒரு சரித்திரம், ஆகையால்
'சரித்திரம்' 'வேடிக்கை'யில் இடம் பெறவில்லை என்று கூறி சமாளிஃபிகேஷன்
செய்தேன்.

‘வானளாவிய புகழைக் கொண்ட இந்த வாழும் சரித்திரத்தைக் குறித்து நாம்
இதுவரை எதுவும் எழுதாமல் இருக்கிறோமே’ என்று சீத்தலைச் சாத்தனார்
பாணியில் பால்பாயிண்ட்
பேனாவினால் லேசாக உச்சந்தலையில் குத்திக் கொண்டேன்.

வெள்ளி நரை, வெண்கலக் குரல், வேகமான நடை, விவேகமான பேச்சு, வீறுகொண்ட
மிடுக்கு இவற்றின் மொத்த உருவம்தான் இசைமுரசு E.M.ஹனீபா. “கம்பீரத்திற்கு
அர்த்தம் யாது?” என யாராவது கேட்டால், பேசாமல் இவரது போட்டோவைக் காட்டி
‘அதுதான் இது’, ‘இதுதான் அது’ என்று கூறி தப்பித்துக் கொள்ளலாம்.

நாகூரில் ஹனீபா என்ற பெயரில் இரண்டு பாடகர்கள் இருந்ததால் மற்றவருக்கு
‘பித்தளை ஹனிபா’வென்று பெயர் வைத்து விட்டார்கள் இந்த வேடிக்கை
மனிதர்கள். ஒருத்தர் “ஈயம்”
என்றால் மற்றவர் “பித்தளை”தானே?

அத்தாவுக்கும் (அப்படித்தான் அவரை நான் அழைப்பேன்) எனக்கும் உள்ள
நெருக்கம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அவரும், என் தந்தையும், குடும்ப
நண்பர்கள். 1966-ஆம் ஆண்டு
அறிஞர் அண்ணா அவரது இல்லத் திறப்பு விழாவுக்கு வந்தபோது, ஒன்பது வயது
சிறுவனாக இருந்த நான், நாகை அந்திக்கடையில் விற்ற "கருப்பு-சிவப்பு" நிற
பெர்லூன் பனியனை அணிந்துக் கொண்டு பந்தாவாக நின்றேன். வீட்டின் மையத்தில்
போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அண்ணாவை உட்கார வைத்து எல்லோரும் புகைப்படம்
எடுத்துக் கொண்டார்கள்.

மொட்டை மாடியில் தலைவாழை இலைபோட்டு தடபுடலாக விருந்து ஏற்பாடாகி
இருந்தது. கட்சிக்கொடி நிறத்தில் பனியன் அணிந்து அவர் கவனத்தை ஈர்த்த
என்னைக் கண்டு "யார் இந்தச் சிறுவன்?" என்று அண்ணா வினவ "இச்சிறுவனின்
குடும்பமே காங்கிரஸ் குடும்பம். தன் தந்தையின் பேச்சையும் மீறி உங்களைப்
பார்ப்பதற்காக இவன் இந்த பனியனை போட்டுகொண்டு ஓடோடி வந்திருக்கிறான்"
என்று அத்தா என்னை அறிமுகம் செய்ய, அண்ணா என்னை அன்புடன் அரவணைத்து தன்
பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.

ஐந்தாம் வகுப்பிலிருந்தே, அவர் மகன் நவுஷாத் படித்த அதே சென்னை பள்ளியில்
என்னையும் சேர்க்கச் சொல்லி, என் தந்தையாரிடம் வற்புறுத்தி, எனது நலனில்
அக்கறை
செலுத்தியவர். அந்த சரித்திர நாயகனுடன் ஒன்றாகச் சேர்ந்து காரில் சென்னை
செல்கையில், சிற்றுண்டி அருந்த உணவகத்துக்குள் அடியெடுத்து வைக்க, அவரை
அடையாளம் கண்டுகொண்டு "அதோ பார் நாகூர் ஹனீபா" என்று பொதுமக்கள் அவரை
வியப்போடு பார்ப்பார்கள். உடன் செல்லும் எனக்கு பெருமிதம் தாங்காது.
ஊரினால் சிலருக்குப் பெருமை. சிலரால் ஊருக்குப் பெருமை. இதில் இசைமுரசு
இரண்டாவது ரகம். ஒருமுறை இந்தியாவிலிருந்து அரசியல் பிரமுகர் ஒருவர் ரஷ்ய
பயணம் சென்றபோது, “நீங்கள் ராஜ்கபூர் நாட்டிலிருந்தா
வந்திருக்கிறீர்கள்?” என்று அங்குள்ளவர்கள் ஆச்சரியம் மேலிடக்
கேட்டார்களாம். தாஜ்மகாலும், ராஜ்கபூரும்தான் அவர்களுக்கு
இந்தியாவாகத் தெரிந்தது.

நான் பஹ்ரைன் நாட்டுக்கு வந்த புதிதில் மலபாரி நண்பரொருவர் “சாருக்கு ஊரு
எவிடே” என்று சோதித்தார். நான் “நாகூர்” என்றதும், “நாகூர் ஹனீபா
அறியாமோ?” “நிங்ஙள் அவரை
கண்டுட்டுண்டோ” என்று என்மீது அடுக்கடுக்காய் கேள்விக் கணைகளைத்
தொடுத்தார். நாகூர் ஹனிபாவை வைத்துதான் அந்த பிரகஸ்பதி நாகூர்பதியையே
அறிந்து வைத்திருந்தார்.

வைகைப்புயல் வடிவேலுவை துபாய் நிகழ்ச்சிக்கு காமெடி பண்ண அழைத்தார்கள்.
அவரோ “இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற அனைத்து மதத்தினருக்கும்
பொருந்துகின்ற

அற்புதமான பாட்டை தன் கட்டைக்குரலில் பாடி, பக்திக்கடலில் அனைவரையும்
மூழ்கடித்தார். ஆராய்ந்ததில் அவரும் ஹனிபாவின் ஆத்மார்த்த ரசிகராம்.

‘அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்’ என்று ஒரு வரி அப்பாடலில்
வரும். “பிறகு எப்படி அது எல்லா மதத்தினருக்கும் பொருந்துகின்ற பாடல்?”
என்ற கேள்வி எழலாம்.

“அல்லாஹ்” என்பதற்கு முஸ்லீம் கடவுள் என்று பொருள் கொள்ளலாகாது. அது GOD
என்பதற்கான அரபுச் சொல். அவ்வளவே.

நாகூர் ஹனிபாவை ‘ஆஹா! ஓஹோ!’வென புகழ்பவர்களைப் போலவே, அவரை நக்கல்,
நையாண்டி செய்பவர்கள் உள்ளூரிலேயே உண்டு. பழுத்த கனிதானே கல்லடி படும்?

ஹனீபா முறையான சங்கீதம் படிக்காமலேயே நிறைவான புகழை அடைந்தார் என்பது
கலப்படமில்லாத உண்மை. வித்வான் எஸ்.எம்.ஏ.காதர், பாகவதர் இசைமணி யூசுப்
போன்ற

உள்ளுர்க் கலைஞர்களுக்கு இணையாக ஆழமான சங்கீத ஞானம் இவருக்கு இல்லை என்ற
விவாதத்தை மறுத்துப் பேச இயலாமல் திணறிப் போயிருக்கிறேன். இசைத்திறன்
இவருக்கு இறைவன் கொடுத்த வரம்.

“மணி ஒலித்தால் நாதம் கிளம்பும். ஆனால் முரசு ஒலித்தால் சப்தம்தான்
வரும். எனவேதான் ‘இசைமணி’ என்று பெயர் வைக்காமல் ‘இசைமுரசு’ என்று
பொருத்தமாக பெயர் வைத்திருக்கிறார்கள்” என்று உள்ளுர்க் கவிஞர் ஒருவர்
கிண்டல் செய்வதைக் காதுபட கேட்டிருக்கிறேன்.

அழுத்தம் திருத்தமாக உச்சரித்து ஆணித்தரமாக மனதில் பதிய வைக்க வேண்டும்
என்ற ஆர்வ மிகுதியினால் இவர் மெல்லினத்தைக்கூட வல்லினமாக்கி உச்சரிக்கும்
கொடுமையை
எங்கே போய்ச் சொல்வது என்பார்கள்.

"அருள் வடிவானவர்" "எங்கள் நபிநாதர்" என்று முடியும் வரிகளில்
‘ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று இப்படிப் போட்டு வறுத்து
எடுக்கிறாரே என்று இவரை குறை சொல்பவர்கள், இப்பாடலை
எழுதிய நபரை தேடிப்பிடித்து கலாய்ப்பதுதான் உசிதம்.

இணைத்து பாட வேண்டிய வார்த்தைகளை சிலசமயம் பிரித்துப் பாடி, அர்த்தங்கள்
மாறி, விமர்சனங்களுக்கு உள்ளான இவரது பாடல்களும் இருக்கத்தான்
செய்கிறது.

ஆனால் ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை. இவரைப் போன்று “ஹ” “ஷ” போன்ற
அட்சரங்களை தெள்ளத் தெளிவாக உச்சரிக்கும் பாடகர்கள் யாருமே கிடையாது.
“முஹம்மது” “மஹ்மூது” என்ற பெருமானாரின் திருப்பெயரை இவரைப் போன்று அட்சர
சுத்தமாக வேறெந்த பாடகரும் அட்டகாசமாக உச்சரித்ததில்லை. ஹனிபாவின் சில
பழைய பாடல்களை தேடிப் பிடித்து அதிலுள்ள குறைகளை அலசி ஆராய்ந்து அவரை
குற்றவாளிக் கூண்டில் ஏற்றுபவர்களும் உண்டு.

“நமனை விரட்ட மருந்தொன்று விற்குது நாகூர் தர்காவிலே” என்று இவர்
பாடியதைக் கேட்டு, உயிரை எடுப்பது வானவர் இஸ்ராயீல் என்கிறார்களே, இவரோ
எமன் என்கிறாரே என்று மண்டையை போட்டு குழப்பிக் கொள்ளும் முஸ்லீம்கள்
உண்டு. நமனை விரட்டுவதற்கு மருந்து இங்கே கிடைக்குதென்றால்
ஆஸ்பத்திரிக்கு அலைய வேண்டிய அவசியமென்ன? இங்கேயே வந்து ஒரு கிலோ, இரண்டு
கிலோ வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ளலாமே? – இப்படி விவாதம் செய்வோர்
உண்டு.

“நீர் எங்கே எங்கே எங்கே சாஹே மீரானே – உன்
வாசல்தேடி வந்தேன் நாகூர் மீரானே”

என்று இவர் பாடும்போது நமக்குள் பக்தி பரவசம் ஏனோ மிஸ்ஸிங். ஒரு
குத்துப்பாட்டு கேட்கின்ற உணர்வு.

“ஹம் தேரே தேரே தேரே சாஹ்னே வாலே ஹே
ஹம் காலே ஹோதோ க்யா ஹுவா தில் வாலே ஹே”

என்று இந்தி நடிகர் மஹ்மூது ஹிட்லர் மீசை வைத்துக்கொண்டு கோணங்கியாக
ஆடிக் கொண்டே பாடும் அந்த ஒரிஜினல் மூலப்பாட்டுதான் மூளையில் உதிக்கும்.

தொடக்க காலத்தில் சர்ச்சைக்குரிய சப்ஜெக்ட்களை தொட்டுக் கொண்டிருந்தவர்
நாளடைவில்

“ஒரு கையில் இறைவேதம், மறு கையில் நபிபோதம்
இருக்கையில் நமக்கென்ன தயக்கம்
கண்களில் ஏனிந்த கலக்கம்”

என்பது போன்ற கருப்பொருளை தேர்வுச் செய்து தனது பாதையை சீர்படுத்திக்
கொண்டது அவருக்குள்ளேயே ஏற்பட்ட ஒரு இயற்கையான மனமாற்றம் என்றுதான் சொல்ல
வேண்டும்.

‘அந்த நாளிலே மக்கா நகரம் இருந்தது’ எப்படியென்றும், ‘ஐயாயிரம் ஆண்டுகள்
முன்னே நடந்த அரபு நாட்டு தியாக’த்தையும், ‘பாத்திமா வாழ்ந்த
முறை’யையும், ‘பெரியார் பிலாலின்
தியாக வாழ்க்கை’யையும், ‘கண்களை குளமாக்கும் கர்பலா’ நிகழ்ச்சியையும்
பாமரர்கள் ஏட்டில் படித்து தெரிந்துக் கொண்டதைவிட இவர் வாயிலாக இஸ்லாமிய
சரித்திர நிகழ்வுகளை அறிந்து கொண்டவர்கள் ஆயிரமாயிரம்.

“மெளத்தையே நீ மறந்து இங்கு வாழலாகுமா?
மாறிடும் வாழ்வினில் மூழ்குதல் நியாயமா?”

என்று இவரது பாடல், “தழுவாது எனக்கு மரணபயமே” என்று பாடிய ஆசைக்கவிஞன்
கண்ணதாசன், “காலா என் கண்முன் வாடா, உன்னைக் காலால் உதைக்கின்றேன்” என்று
பாடிய மீசைக் கவிஞன் போன்ற கேரக்டர் மனிதர்களையும், ‘மரணபயம்’ ஆட்கொண்டு
தெளிவு பிறக்க வைத்து விடும்.

“கன்னியரே! அன்னையரே! கொஞ்சம் நில்லுங்கள்” என்று அன்புடன் இவர்
அழைக்கையில் கடுக்கண்களை காதில் போட்டுக் கொள்ளும் கன்னியர்கள் இந்த
கனிவான அறிவுரையை
காதில் போட்டுக் கொள்ள ஆயத்தமாகி விடுவார்கள்.

“காணக் கண் கோடி வேண்டும் கஃபாவை
ஹஜ்ஜூ காட்சிக்கிணை யாகஉலகில் எதுவுமே இல்லை”

என்று இவர் இசைக்கையில் மக்கமா நகரத்து இறையில்லக் காட்சிகள் கண்முன்
தத்ரூபமாக காட்சிதரும்.

“நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு
மாறாத ஈமானோடு யாரசூலுல்லாஹ்”

என்று அவர் உருகும்போது கல்லும் கனியாகும்; உள்ளம் பனியாய் இளகிவிடும்.

“ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா?
கானத்தினால் அதை இன்னும் கொஞ்சம் சொல்லவா?”

என்று அவர் ஆரம்பம் செய்கையில் “ஓ! தாரளாமாகச் சொல்லுங்கள். நாங்களும்
கேட்கிறோம்” என்று நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படும் குரலை நாமே
உணர முடியும்.

தனக்கு பாட்டெழுதி கொடுத்த புலவர்களுக்கு உரிய மரியாதை அவர்
கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் என்றால் பாடலுக்கு
இசையமைத்துத் தந்த இன்பராஜ் போன்ற இசையமைப்பாளர்களை அவர் வெளிச்சத்துக்கு
கொண்டுவரவே இல்லை என்ற குற்றச்சாட்டு வேறொரு புறம் நிலவுவதும் உண்மை.]

ஆனால் இந்த 'பிஸ்கோத்து' குறைகள் யாவும் இந்த மனிதனுக்குள்ளே
பொதிந்திருக்கும் மனிதநேயப் பண்பு, கொள்கைப் பிடிப்பு, அசாத்தியத்
துணிச்சல், இவைகளுக்கும் முன்பு பவுடராகி தூள்தூளாகி விடுகிறது.

இசையால் மயங்க வைக்கும் இந்த லாகிரி வஸ்தாது எத்தனையோ இஸ்லாமிய
பாடகர்களுக்கு அழகிய-முன்-மாதிரி. கவ்வாலி பாடலில் ஒரே சங்கதியை பல
‘மாடுலேஷனில்’ ஏற்ற இறக்கத்தில் பாடி "ரிபீட்டு" செய்வதைப் போல, இஸ்லாமிய
பாடல்கள் என்றாலே எட்டுக் கட்டையில்தான் பாடவேண்டும் என்ற எழுதப்படாத
இலக்கணத்தை ஏற்படுத்தி வைத்தவர் இவர்.

ஊசி உடைகிற உச்சஸ்தாயிலும் பூசிமொழுகுகிற பூத்த குரல்வளம் இவரது.

இவரை விட ஒரு கட்டை கூடுதலாக பாடி சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் "உலக
முஸ்லீம்களே நில்லுங்கள்!" என்ற விவகாரமான பாட்டை வேறொருவர் பாட,
நின்றுக்
கொண்டிருந்த உலக முஸ்லீம்களையும் பயந்து ஓட வைத்தது கைக்கொட்டிச் சிரிக்க
வைத்த கதை.

இவரைப்போலவே ஏழுகட்டை, எட்டுக்கட்டை என்று பாடுவதோடு மட்டும்
நிறுத்திக்கொண்டால் பரவாயில்லையே. சாய்வாக அணிந்த ‘Fur’ தொப்பி,
உள்ளங்கையை இறுக்கிப் பிடித்து மூக்கு நுனிவரை இழுத்துப்பிடித்தவாறு சைகை
செய்வது, காதோரத்தில் கையை குவித்து வைத்துக் கொள்வது இது போன்ற
மேனரிஸங்களைக்கூட இவரது ‘டூப்ளிகேட்’கள் விட்டு வைக்காததைத்தான்
சகித்துக் கொள்ள முடியவில்லை.

எல்விஸ் பிரெஸ்லிக்கு அடுத்தப்படியான ‘Look Alike’ ‘எதிரொலி’ ஆசாமிகள்
வாய்க்கப் பெற்றது நாகூர் ஹனீபாவாகத்தான் இருக்க முடியும்.

மேடைக் கச்சேரியின்போது, இசைக்குழு ஆசாமிகளின் காதில் இவர் ஏதோ
‘கிசுகிசு’ப்பதை பலர் கவனித்திருக்கக்கூடும். அடுத்த பாடலுக்கான சுதி
எத்தனை கட்டை என்ற விவரத்தை
காதில் ஓதுகிறாரோ என்று பார்த்தால், “ஒழுங்கா வாசியேண்டா உதவாக்கரை”
என்பதைப்போன்ற அர்ச்சனைகளை அனாயசமாக ஆராதித்துக் கொண்டிருப்பார்.
(‘டோஸ்’களை மிகவும் நாசுக்காகவே இங்கு உளறியிருக்கிறேன்)

ஒருமுறை உணர்ச்சிவசப்பட்டு மேடையின் விளிம்பில் உட்கார்ந்திருந்த
நரிபோன்று பிறாண்டும் ஒரு தபேலாக்காரரை லேசாக தள்ளிவிட அவர்
தொபுக்கடீரென்று தலைக்குப்புற விழுந்தது ஊள்ளூர் ஜனங்கள் இரசித்த
‘சிச்சுவேஷன் காமெடி’.

“இவரின் இசைக் கச்சேரி
ஒரு யாகம் .. .. ..
மூன்று மணி நேரம் –
மேடையில் சுற்றியுள்ள
வாத்யக் காரர்கள் மட்டுமல்ல .. ..
இவர் சுருதியும்
கீழே இறங்காது”

என்று இவருக்கு புகழாரம் சூட்டுவார் கவிஞர் இசட் ஜபருல்லாஹ்.

"நாகூர் ஹனீபாவைப் போன்ற ஒரு பாடகர் ஐரோப்பாவிலோ , மொராக்கோ போன்ற
தேசத்திலோ இருந்திருந்தால் உலகப் புகழ் அடைந்திருப்பார். அப்பேர்ப்பட்ட
குரல் வளம்
அவருடையது” என்று பாரட்டுப் பத்திரம் வழங்குகிறார் எழுத்தாளர் சாரு
நிவேதிதா.

நாகூர் முஸ்லிம் சங்கத்தின் சார்பாக இந்த மாமனிதனுக்கு 'வாழ்நாள்
சாதனையாளர் விருது' வழங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்தனர். போஸ்டர்
ஒட்டி, ஒலி பெருக்கியில் அறிவிப்புச் செய்து கூட்டியிருந்த கூட்டத்தை
கண்டபோது என் கண்கள் ரத்தக்கண்ணீரை வடித்தது, சிறப்பு பேச்சாளராக மேடை
ஏறிய கம்பம் பீர் முகம்மது "இதே விழாவை எனதூரில் கூட்டியிருந்தால்
அலைமோதும் கூட்டத்தை திரட்டியிருப்பேன்" என்று தன் கோபத்தை
வெளிப்படுத்தினார்.


நாகூர் அல்வா பிரசித்திப் பெற்றது. ஆனால் அரசியல் நாகூர் ஹனிபாவுக்கு
அக்காலத்திலிருந்தே 'அல்வா' கொடுத்து வந்தது.

1957- ஆம் ஆண்டு தி.மு.க. முதன்முறையாக சட்டசபை தேர்தலில்
களமிறங்கியபோது, நாகை தொகுதியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு
தோல்வியைத் தழுவினார்.

மீண்டும் 2001- ஆம் ஆண்டில் வாணியம்பாடியில் தி.மு.க. வேட்பாளராக களம்
இறங்கியபோதும் அந்த ஊர்க்காரர்கள் அவருக்கு அல்வா கொடுத்தார்கள்.

பாட்டு பாடியே ஓட்டுக்களைச் சேகரித்தார் இந்த பைந்தமிழ்ப் பாடகர். பாவம்
A right person in a wrong place. கவ்வாலி பாடகர் அதா அலி ஆஜாத்
நின்றிருந்தாலாவது
ஜெயித்திருப்பாரோ என்னவோ?

“ஹனீஃபா சாஹேப் பத்தி நம்பள்கி ஜனங்களுக்கு அவ்ளோ தூரம் மாலுமாத்
இல்லீங்கோ” என்று சொன்னார் அந்த ஊரைச் சேர்ந்த தோல் வியாபாரி என் இனிய
நண்பர் அன்வாருல்லா.

கழக இயக்கத்திற்கும் இந்த கருப்புக் குயிலுக்கும் உள்ள தொடர்பு இன்று
நேற்று எற்பட்ட ஒன்றா?

“வாடா கருப்பா” என்று இவரை வாஞ்சையுடன் அழைப்பார் திராவிட இயக்கத்து
முன்னோடிகளில் ஒருவரான ‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரி.

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு”

என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாடலை, இந்த பாசறை மறவனைக் கொண்டு பாடவைத்து
இயக்கத்தை வளர்த்தார் அந்த பட்டுக்கோட்டையார்.

தந்தை பெரியார் தான் செல்லுமிடம் யாவும் தமிழுணர்ச்சி பொங்கும்
பாடல்களைப் பாட இந்த தன்னிகரில்லா பாடகனைத்தான் தன்னோடு அழைத்துச்
செல்வார். “அனிபா அய்யாவுக்கு ஒலிபெருக்கி தேவையில்லை” என்பார். இவரது
குரல் பெருமைக்குரிய குரல் மட்டுமல்ல. “பெரு-மைக்”குரிய குரலும் கூட
என்பது அ.மா.சாமியின் கூற்று.

“தூங்கிக் கிடந்த உனைத் தூக்கி துடைத்தணைத்து
தாங்கித் தரைமேல் இட்டார் – தமிழா
தாத்தாவாம் ஈ.வே.ரா”

என்று ஹனீபா தொண்டைக் கிழிய பாட, தந்தை பெரியாரின் சிந்தைக்கினிய
பேச்சுக்கு முந்திக்கொண்டு வருவார்கள் செந்தமிழ்ச் சீலர்கள்.

“ஓடி வந்த இந்திப்பெண்ணே கேள் – நீ
தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே!” என்று உரமேற்றி

“ஆறிலும் சாவு நூறிலும் சாவு அஞ்சாமல் ஓடிவா” என்று இவரது உணர்ச்சி
பொங்கும் பாடலைக் கேட்டுவிட்டு இந்தி எழுத்துக்களை தாரு பூசி அழிக்க
வீறு கொண்டு எழுவார்கள் வீரமறவர்கள்.

“பாடல்களில் சுருதி, லயம், ராகம்தான் இருக்கும் என்பார்கள். இவர்
பாடல்களில் இவைகளை மீறி உணர்ச்சி இருக்கிறது. அது இப்போது தமிழர்களுக்கு
தேவையாக இருக்கிறது”

என்று அறிஞர் அண்ணா புகழ்ந்தார்.

1954- ஆம் ஆண்டு கைத்தறி நெசவாளர் துயர் துடைக்க அறிஞர் அண்ணாவுடன்
சேர்ந்து ஊர் ஊராக துணிமூட்டைகளைச் சுமந்துச் சென்று உடுமலை நாராயணகவி
எழுதிய

“செந்தமிழ் நாட்டுக் கைத்தறி நெசவு
சேலைகள் வேட்டிகள் வாங்குவீர்
திராவிட நாட்டின் சேமம் வேண்டி
சிங்கார ஆடைகள் வாங்குவீர்”

என்று பாடி தெருத் தெருவாக கூவி விற்றார் இவர்.

கலைஞர் அரைக்கால் சட்டையணிந்து கழகச் சேவை புரிந்த காலம் முதற்கொண்டு
ஹனிபா மேடை ஏறி பாடி வருகிறார். நீதிக்கட்சியின் தலைவரான பன்னீர் செல்வம்
லண்டனுக்கு பயணிக்கையில் ஓமான் அருகே விமான விபத்துக்குள்ளாகி உயிர்
துறந்தார்.

1940-ஆம் ஆண்டு நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் “பறந்தாயோ எங்கள்
பன்னீர் செல்வமே!” என்று இவர் நெஞ்சுருக பாடியபோது, மாநாட்டு பந்தலில்
அமர்ந்திருந்த அத்தனை பேரும் விம்மி விம்மி அழுதக் காட்சி ஒரு சரித்திர
நிகழ்வு.

“அனிபாவின் கம்பீரத் தொண்டையைப் போலவே அவரது கழகத் தொண்டும் சற்றும்
மாறவில்லை” என்று கலைஞர் இவருக்கு ‘அக்மார்க்’ முத்திரை வழங்கினார்.

இப்போதுகூட, டாக்டர் கலைஞர் தோளில் ஒரு கையையும், பேராசிரியர் அன்பழகன்
தோளில் மற்றொரு கையையும், ஜாலியாக போட்டுக் கொண்டு பேசக்கூடிய லைசன்சு
ஹனீபாவுக்கு மட்டுமே உண்டு.

அரசியல் துறையில் ‘அட்ஜஸ்ட்’ பண்ணத் தெரிந்து ‘ஆமாம் சாமி’ போட கற்று
வைத்திருந்தால் எப்போதோ இவர் அமைச்சர் ஆகியிருப்பார். ‘தூக்குத்தூக்கி’
கலை அறியாது
‘வணங்காமுடி’யாக இருந்தமையால் ‘சக்கரவர்த்தி திருமகனாக’ இருக்க வேண்டிய
இந்த ‘உத்தம புத்திரன்’ ஊர் ஊராக பாட்டுப் பாடிக்கொண்டு ‘நாடோடி
மன்னனாகவே’ காலத்தைத் தள்ளிவிட்டார்.

தன் மேன்மையான எழுத்துக்களால் தமிழ்மொழிக்கு மீசை வரைத்த பாரதியைப் போல,
கம்பீரமான தன் குரல்வளத்தால் தமிழுக்கு தலைப்பாகை கட்டி அழகு பார்த்தவர்
இந்த வெள்ளிநரை வேந்தன்.

ஒருமுறை விழுப்புரத்தில், கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்கள்
கலந்துக் கொண்ட முஸ்லீம்லீக் மாநாட்டில், நாகூர் ஹனிபா பாடினார். கூட்டம்
முடிந்து ‘கெஸ்ட் ஹவுஸில்’ ஹனிபா அசந்து தூங்கிக் கொண்டிருக்கையில்
நள்ளிரவில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. கதவைத் திறந்தபோது
காயிதேமில்லத் நின்றுக் கொண்டிருந்தார். “ஹனிபா சாஹேப் எனக்குத் தூக்கமே
வரவில்லை. எனக்காக அந்த பாட்டை பாடுவீங்களா?” என்று நடுநிசியில்
சின்னக்குழந்தைபோல் அடம் பிடித்தபோது ஹனிபாவுக்கு உள்ளூர ஒரே ஆனந்தம்.

“மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே!
மாநிலத்தைத் தாங்கிடவோ எங்கள் பெருமானே!”

என்று உள்ளமுருக பாடினார். “இன்னும் ஒருமுறை பாடுங்களேன் ஹனீபா சாஹேப்”
என்று காயிதேமில்லத் மறுபடியும் வேண்டுகோள் விடுக்கிறார்.

“பல்லுடைந்த நேரத்திலும் எங்கள் பெருமானே
பின்வாங்கி ஓடவில்லை எங்கள் பெருமானே
கல்லடிகள் பட்டபோதும் எங்கள் பெருமானே
கயவர்களைச் சபிக்கவில்லை எங்கள் பெருமானே”

என்ற வரிகளை ஹனிபா பாடியபோது காயிதேமில்லத் அவர்களின் கண்களிலிருந்து
கண்ணீர் பெருக்கெடுத்து தாரை தாரையாக வழிந்தோடுகிறது. தேம்பித் தேம்பி
அழுகிறார். தாயிப் நகரத்து பாதகர்கள் சாந்தநபி மீது புரிந்த கொடுஞ்செயல்
காயிதேமில்லத்தின் கண்முன் நிழலாடி அவரை கலங்கடித்திருக்க வேண்டும்.

நபிகள் நாயகத்தின் சகிப்புத்தன்மைக்கும், கருணையுள்ளத்திற்கும் எடுத்துக்
காட்டாய்த் திகழ்கிறது தாயிப் நகரத்தில் நடந்த இந்நிகழ்ச்சி !

நாயகத் திருமேனியின் ஏகத்துவ போதனைகளை ஏற்க மறுத்த தாயிப் நகர மக்கள்
அவர்கள் மீது கல்மாரி பொழிந்தார்கள். அண்ணலாரின் புண்பட்ட மேனியிலிருந்து
செந்நீர் குருதி மண்மீது வழிந்தோடுகிறது.

"தாயிப் நகரத்தின் வீதிகளில் - ஒரு
தங்க நிலவைத் துரத்துகிறார்
அருமை நபியை ஆருயிரை
அணையா விளக்கை வருத்துகிறார்"

என்று இந்தக் காட்சியை மு.மேத்தா கவிநயத்தோடு வருணிப்பார்.

'கவிக்கோ' அப்துர் ரகுமானின் உவமைப் படிமம் வித்தியாசமாக இருக்கும்

"கல்லின் மீது
பூவை எறிபவர்கள்
இப்போது
பூவின் மீது
கல்லை எறிகிறார்கள்" என்பார்

இதே காட்சியினை தனக்கே உரிய பாணியில் வடிப்பார் இறையருட் கவிமணி கா.
அப்துல் கபூர்.

"சொன்மாரி பொழிந்ததற்காய்க்
கன்மாரி பெய்துவிட்ட
வன்மனத்தார் திருந்துதற்கு
வழிவகுத்த நாயகமே" என்று.

அருமை நபிகளுக்கு நேர்ந்த இந்தக் கொடுமை ஹனிபாவுக்கு ஆழ்ந்த பாதிப்பை
ஏற்படுத்தியதாலோ என்னவோ “எத்தனை தொல்லைகள், என்னென்ன துன்பங்கள்” என்று
தொடங்கும்

இன்னொரு பாடலிலும்

“கல்லடி ஏற்று
கடுமொழி கேட்டு
உள்ளம் துடித்து
உதிரத்தை வடித்து”

என்ற வார்த்தைகள் வலம் வரும். “அண்ணல் நபி பொன்முகத்தை கண்கள் தேடுதே!”
என்ற பாட்டிலும்

“தாயிப் நகரில் கல்லடிகள்
தந்த தழும்பிலே – இமைகள்
தழுவதற்கும் அழுவதற்கும்
கண்ணீர் பொங்குதே..”

என அந்த சோகத்தை நினைவூட்டுவார். எல்லாவற்றிற்கும் மேலாக

“தாயிப் நகரத்து வீதியிலே - எங்கள்
தாஹா இரசூல் நபி நடக்கையிலே
பாவிகள் செய்த கொடுமையினை - என்ணிப்
பார்த்தால் நெஞ்சம் பதைக்குதம்மா!”

என்ற பாடலில் அந்த வேதனையான நிகழ்ச்சியை முழுவதுமாகவே படம்பிடித்துக்
காட்டியிருப்பார்.

இவரைப்போன்று ஒரு தான்ஸன் தமிழ்நாட்டில் இதுவரை பிறந்ததுமில்லை; இனி
பிறக்கப் போவதுமில்லை. ஒவ்வொரு முறை இவர் சுகவீனம் அடையும் போதெல்லாம்
“நாகூர் ஹனீபா இறந்து விட்டார்” என்ற புரளியை கிளப்பி நம்மை கலங்கடிக்க
வைக்கும் அந்த சோதனையைத்தான் நம்மால் தாங்க முடிவதில்லை.

84 வயதை எட்டியிருக்கும் இந்த மார்க்கண்டேய குரலுக்குச் சொந்தமான இந்த
மாமனிதன் இன்னும் பல ஆண்டுகள் நீடுழி வாழ வேண்டும் என்பதுதான் அனைவரும்
செய்யும்
பிரார்த்தனை.

அருஞ்சொற்பொருள்:

மெளத்து : மரணம்
யா ரசூலுல்லாஹ்! : ஓ இறைவனின் தூதரே!
தாயிப் : சவுதி அரேபியாவிலிருக்கும் ஒரு நகரம்
ஈமான் : இறையச்சம்

திண்ணையில் அப்துல் கையூம்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20904235&format=html

அபுதாபி அய்மான் நிகழ்ச்சியில்....


அபுதாபி அய்மான் நிகழ்ச்சியில்

அபுதாபி அய்மான் நிகழ்ச்சியில்
கவிக்கோ அப்துல் ரஹ்மான்
மற்றும்
எஸ்.எம். இதாயத்துல்லா
ஆகியோருடன்
20.11.2009

மாறாத சொந்தம் !

மாறாத சொந்தம் !
கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது, புதுக்கோட்டை

சிந்தனையில் தேன் சுரக்க
செந்தமிழின் மேலினிக்க
வந்தருளும் நாயகமே
வழிபார்க்கும் வையகமே!


முன்யாரும் கண்டதுண்டா
முஹம்மதரைப் போன்றவரை?
பின்னேனும் அவர்போலாம்
பேறுடையார் எவருமுண்டா?


ஓரழகு! சீரழகு!
ஒப்பில்லாப் பேரழகு!
யாரழகு முஹம்மதினும் –
யாதான போதிலுமே?

சொல்லழகு செயலழகு
சோர்வறியாத திறமழகு!
நல்லழகு மாதிரிபோல்
நானிலத்தில் ஏதழகு?

பொறுமைக்கோர் இலக்கணமாய்,
புகழுக்கும் இலக்கியமாய்
வறுமையிலும் செம்மையுடன்
வழிகாட்டும் வாழ்வழகு!

புண்சிரிப்போ முழுநிலவு!
பூப்போன்ற மென்மைமுகம்!
கண்பார்வை, அருள்வெள்ளம்
காண்பவர்கள் தமைவெல்லும்!

முத்தொளிரும் பல்தெரிய
முறுவலுடன் அவர்திருவாய்
சத்தியத்தைப் பேசிடுமே!
சாந்தஒளி வீசிடுமே!

அடியெடுக்கும் நடைநேர்த்தி
அணிந்திருக்கும் உடைநேர்த்தி
வடிதேனாம் அவர்மொழிகள்,
வையகத்தில் தனிநேர்த்தி!

கண்ணியத்தின் சின்னமவர்
கஸ்தூரி வாசமவர்
பொன்பொதிந்த வெள்ளியெனப்
பொலியும் அவர்திருமேனி!

குற்றங்கள் கூறாதார்
குறைகூறிப் பேசாதார்!
மற்றெவரே ஆனாலும்
மதிக்கின்ற மாண்பாளர்!

சொர்க்கத்தின் மாமன்னர்!
சோபனங்கள் கூறுபவர்!
வர்க்கமெனும் மானுடம்நாம்,
வைத்திருக்கும் மணிமகுடம்!

மாறாத சொந்தமிவர்
மறவாத பந்தமிவர்
ஆறாத துயரினிலும்
ஆறுதலாம் அண்ணலிவர்

ந‌ன்றி : ம‌ணிச்சுட‌ர் த‌மிழ் நாளித‌ழ்

ஷார்ஜா க‌ல்ஃப் டுடே அலுவ‌ல‌க‌த்தில்



ஷார்ஜா க‌ல்ஃப் டுடே அலுவ‌ல‌க‌த்தில்

ஷார்ஜா க‌ல்ஃப் டுடே ப‌த்திரிகை அலுவ‌ல‌க‌த்தில் நடைபெற்ற‌ பொருளாதார‌ப் பின்ன‌டைவால் ஏற்ப‌ட்டுள்ள‌ நிக‌ழ்வுக‌ள் குறித்த‌ கருத்த‌ரங்கிலிருந்து






ஷார்ஜா க‌ல்ஃப் டுடே ப‌த்திரிகை அலுவ‌ல‌க‌த்தில் நடைபெற்ற‌ பொருளாதார‌ப் பின்ன‌டைவால் ஏற்ப‌ட்டுள்ள‌ நிக‌ழ்வுக‌ள் குறித்த‌ கருத்த‌ரங்கிலிருந்து

ஷார்ஜாவில் இய‌க்க‌ ஊழிய‌ர்க‌ளுட‌ன் டாக்ட‌ர் கே.வி.எஸ்.





ஷார்ஜாவில் இய‌க்க‌ ஊழிய‌ர்க‌ளுட‌ன் டாக்ட‌ர் கே.வி.எஸ்.

துபாயில் டாக்ட‌ர் கே.வி.எஸ். வ‌ருகையின் போது எடுத்த‌ புகைப்ப‌ட‌ங்க‌ள்



துபாயில் டாக்ட‌ர் கே.வி.எஸ். வ‌ருகையின் போது எடுத்த‌ புகைப்ப‌ட‌ங்க‌ள்

Shamrock Journeys (P) Ltd.

Greetings from all of us at Shamrock Journeys….

Benchmarking: Destination Attractiveness and Hospitality Business Performance
We are a professionally managed company which started in the year 1999 and backed by a diligent and pro-active team of professionals, holding sound experience, helping us to confidently meet every challenge that comes our way and leaving no room for any customer grievances.

We have achieved the reputation of the leading tour operators in India by rendering the best travel related services for various kinds of groups and individuals.
We cover all the Indian destinations and provide services for our precious clients according to their desire, demand, special need and interest. Consumers also benefit through clearer indication of the service likely to be offered, so that their service expectations are more likely to correspond with our performances, and their satisfaction with the destination to be increased by observing our hospitality.
Special care and remarkable homely hospitality make our clients always with us.
Looking forward to give you the best services.
Regards,

Shamrock Journeys (P) Ltd.
(AN ISO 9001:2008 CERTIFIED COMPANY)
Accredited & Associated with ADTOI, IATO, ITOPC
Recognized By Ministry of Tourism – Govt. of India
Regd. Address:
Shamrock Journeys (P) Ltd.
108, R.B.House
Hzt.Nizamuddin West
New Delhi – 110 013 (INDIA)
Tel: +91-11- 41827651 / 41827817
Fax: +91-11- 41827919, Cell: + 91-9811091230
Visit us - www.shamrockjourneys.com

க‌விஞ‌ர் அப்துல் க‌த்தீம்


க‌விஞ‌ர் அப்துல் க‌த்தீம்

துபாயில் இய‌க்க‌ ஊழிய‌ர்க‌ளுட‌ன் டாக்ட‌ர் கே.வி.எஸ்.

துபாயில் இய‌க்க‌ ஊழிய‌ர்க‌ளுட‌ன் டாக்ட‌ர் கே.வி.எஸ்.






UAE Government has increased the departure tax

Dear Sir/Madam,

Kindly note that the UAE Government has increased the departure tax at all UAE airports from AED 30 to AED 75 per passenger for tickets issued after 1st April 2009 and for travel after 1st May 2009.

In case you have booked your ticket between 1st April 2009 and 21st April 2009 please arrange to contact the nearest Reservation office of Air India Express and pay the balance amount of AED 45 prior to your departure. The contact details of our offices in UAE are as follows:

1) Dubai:
Al Maha Travel & Tours
GSA – Air India Express
Bu Haleeba Plaza,
Flat no. 304, 3rd floor,
Muraqqabat Road,
Deira, Dubai, U.A.E.
Tel: 04 2666950
Fax: 04 2667730
Email : dxbcity@airindiaexpress.in

2) ABU DHABI:
Air India / Air India Express Reservation Office
Next to Abu Dhabi Chamber of Commerce
Old Airport Road
Corniche
Abu Dhabi , UAE
Tel : 02 - 6322300 / 02 - 6322747 (Abu Dhabi )
Tel : 03 - 7557695 (Al Ain)
Email : auhcity@airindiaexpress.in

3) SHARJAH:
Kanoo Travels
GSA – Air India Express
Kanoo Group Building (Air India)
Al Arouba Street , PO 153, Shj ,U.A.E
Tel - 06-5616635 Direct – 06-5620972
Fax - 06-5621941 Mob- 050-4560081 / 050-5769285
E-mail - aishj@eim.ae and gsasales@ktai.ae

This amount may also be paid at the airport at the time of check-in.


Best Regards
Air India Express Team

Saturday, April 25, 2009

செல் பேசி

செல் பேசி

தொலைத்தொடர்பு சாதனங்கள் பல்கிப் பெருகிக் கொண்டிருப்பது நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றது. எங்கிருந்தும், எப்போதும், யாரிடமும் தொடர்புகொள்ளலாம் என்கிற அளவிற்குச் செல் ஃபோன்கள் நமக்குக் காலத்தைச் சுருக்கித் தந்துவிட்டன. தொலைபேசி (Land Line) இணைப்புகளை முழுமையாகப் பயன்படுத்தாமலேயே ஒரு தலைமுறை சென்றுகொண்டிருக்கையில் இன்று பிறந்த குழந்தைகள் கூட செல் ஃபோன்களில் பேசத் தொடங்கிவிட்டன. உங்கள் பேர் என்ன? என்று கேட்பதற்குப் பதில் உங்கள் செல் நெம்பரைச் சொல்லுங்கள் என்று கேட்கும் அளவிற்கு இன்று காலம் மாறிவிட்டது.

2004-டிசம்பர் மாதம் எடுத்த கணக்கெடுக்கின்படி இந்தியாவில் செல் ஃபோன் பயன்படுத்துவோர்கள் 4.74 கோடி பேர். இது கடந்த 2003-ஐ காட்டிலும் 68% அதிகம்.(1) இந்த அளவிற்குச் செல் ஃபோன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருகிறது.

இப்போதெல்லாம் செல் ஃபோன் திருடர்கள் பெருகிவிட்டார்கள். சாலையோரம் பேசிக் கொண்டிருக்கும் போதே பிடுங்கிச் சென்று விட்டார்கள் என்று ஒரு பெங்காலி நண்பருக்கு நேர்ந்த சோகக்கதையைச் சொல்லி விழிப்பூட்டும் நண்பர்.., குளியலறையில் கேட்கும் ஹலோ சப்தங்கள், செல் ஃபோனை கழிவறையில் தவறவிட்டு பல்வேறு பழுதுபார்க்கும் கடைகள் ஏறிஇறங்கி அதன் ஈமச்சடங்குகளை முடிந்து சோகமாய் அமர்ந்திருக்கும் என் தொழிற்சாலைத் தோழன். செல் ஃபோன் வாங்க கடைகளில் மொய்ந்து கொண்டிருக்கும் இளைஞர் கூட்டம்.

"சொல் இல்லார்க்கு உய்வுண்டாம் - உய்வில்லை
Cell இல்லாதவர்க்கு"

என்று எனது துபாய் தோழர் செல் ஃபோனில் உதிர்த்த நகைச்சுவை... என்று நம் வாழ்க்கையின் நிகழ்வுகள் ஏதாவது ஒரு வகையில் செல் ஃபோன்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவே தோன்றுகிறது.

"செல்" வைத்துக் கொள்வது அவசியமா? என்று சிலரிடம் கேட்டபோது, ஆம்! ஹாஜிகளுக்குச் சேவை செய்ய! தவறியவர்களை கண்டெடுக்க! புதிய முகவரிகளைக் கண்டுபிடிக்க! உறவுகளுடன் தொடர்பு கொள்ள!.. என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது, என்றாலும் செல் ஃபோன்கள் முழுக்க முழுக்கப் பலன்களை மட்டுமே கொண்டுள்ளது அல்ல! என்ற குற்றச் சாட்டையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. செல் ஃபோன் பற்றிய நன்மைகளை நாம் நிறையவே அறிந்து வைத்திருக்கின்றோம். ஆகவே அதில் உள்ள தவறான உபயோகங்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு ஊட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

பல பேர் "செல்" வாங்கிவிடுகின்றனர். அதை முறையாகப் பயன்படுத்தத் தெரியவில்லை. குறிப்பாக ரிங் டோன் (Ring Tone)ஐ அலறவிடுகின்றனர். இரவெல்லாம் (Night Shift) வேலை பார்த்துவிட்டு அயர்ந்து தூங்கும் அறைத்தோழர்களை Fire Alarm போல செல் ஃபோனை அலறவிட்டு எழுப்பக்கூடிய சூழல்.
பள்ளிவாசல்கள், கல்விச்சாலைகள், மருத்துவமனைகள் என்று இடவேறுபாடு பாராமல் செல் ஃபோன் சப்தங்கங்ளை அலறவிடுவதை தவிர்க்க வேண்டும். இடத்திற்குத் தகுந்த முறையில் சப்தங்களை சரிசெய்ய வேண்டும். இந்த நேரத்தில் பள்ளிவாயில்களில் நடக்கும் செல் ஃபோன் இடையூறுகளை சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது.

இமாம் தக்பீர் கட்டியவுடனேயே இந்த செல் ஃபோன் ஆலாபனைகள் ஆரம்பமாகிவிடுகின்றன. சிலபேர்கள் இமாமத் செய்யும்போதுகூட செல் ஃபோன் கதற தொழுகையில் நெழிய வேண்டிய சூழல்.
Ring Tone என்று பல சப்தங்கள் இருந்தாலும் பெரும்பாலானோர் விரும்புவது சங்கீதத்தைத்தான். குறிப்பாக சினிமா மெட்டுக்களை(தான்) Ring Tone ஆக உபயோகிக்கின்றனர். இதை முஸ்லிம்களும் ஏன் விபரம் அறிந்தவர்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல என்ற அளவுக்கு நிலைமை போய்விட்டது. காலணிகளை கழற்றிவிட்டு உள்ளே வரவும் என்று எழுதுவது போன்று செல் ஃபோன்களை அமர்த்திவிட்டு உள்ளே வரவும், என்று பள்ளிவாயில்களில் அறிவிப்புப் பலகை வைக்கும் நிலைமை!
தொழுகை என்பது இறைவனுடன் அடியான் உரையாடுவது. பள்ளிவாயில்கள் இறைவனை நினைவுகூறும் இடம் என்பதை எல்லாம் ஏனோ இவர்கள் மறந்துவிடுகின்றனர்.

"என்னை நினைவுகூறுவதற்காக தொழுகையை நிறைவேற்றுவீராக!" (2)

என்று இறைவன் கூற இவர்கள் இடையூறு செய்பவர்களாக உருவானது ஏன்? இதேபோல் மார்க்கச் சொற்பொழிவு நடக்கும் இடங்களில் கூட பேச்சாளரை மிஞ்சும் வகையில் இடையிடையே ஹலோ! சப்தங்களையும், சம்பாஷனைகளையும் கேட்க முடிகிறது. மலக்குகள் சூழ்ந்துள்ள சபையல்லவா! இடையூறு தரும் இந்த இசைத் தொல்லைகள் இறைவனைக் கோபமூட்டுமல்லவா!
அன்புக்குரியவர்களே! இத்தகைய செயல்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். முதலாளியுடன் பேசும்போது அமர்த்திவைக்க ஆர்வம் காட்டும் "செல்"களை இறைவனுடன் உரையாடும்போது அலறவிடுவது முறைதானா? சிந்தியுங்கள்!

இப்போதெல்லாம் மிகச்சிறிய "செல்" வைத்துக்கொள்வது ஃபேஷன் ஆகிவிட்டது. என்னுடைய செல் தான் மிகச் சிறியது, என்னிடத்தில் கலர் ஸ்கிரீன் செல் உள்ளது, என்னிடத்தில் கேமரா செல் உள்ளது, என்னிடத்தில் வீடியோ கேமரா செல் உள்ளது என்று பெருமை பாராட்டுவதே சிலரின் வழக்கமாகிவிட்டது. சாதாரணமாக மிஸ் கால்(Missed Call) கொடுப்பதற்கும், நேரம் பார்ப்பதற்கும் மட்டுமே "செல்"ஐ உபயோகப்படுத்தும் எத்தனையோ நண்பர்கள். ஆயிரங்களை செலவழித்து செல் ஃபோன் வாங்குவதைப் பார்க்கிறோம். மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் ஏழைகள் கூட எங்கே நம்மை வறுமைக்கோட்டிற்கு கீழே சேர்த்து விடுவார்களோ?! எனப்பயந்து தன்மானப் பிரச்சனையாகக் கருதி செல் ஃபோன் வாங்கிவிடுகின்றனர். இன்னும் சிலபேரிடம் வர்ண செல்கள், வகைவகையாக (ஒன்றுக்கும் மேற்பட்ட) செல்களைக் காணமுடிகிறது.

இனிவரும் காலங்களில் ஒரே ஒரு செல் ஃபோன் (Cell Phone) வைத்திருப்பவர்களை ஒரு செல் (Cell) உயிரினம் என்று அழைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! ஒரு சாதாரண தொடர்பு சாதனத்துக்கு பல்லாயிரம் செலவழிக்க வேண்டுமா? வார்த்தைகளை புரியவைக்க வர்ணங்கள் அவசியம்தானா? இது ஒரு பெருமையின் சாயலைப் பிரகடனப்படுத்துவதே அன்றி வேறல்ல. தமது தேவைகளுக்கேற்றவாறு செல் ஃபோன் வாங்கிக் கொள்வதே சிறந்தது.

யாரின் உள்ளத்தில் ஓர் அணுஅளவு பெருமையுள்ளதோ, அவர் சுவர்க்கததில் நுழைய மாட்டார் என நபி(ஸல்) கூறினார்கள். (3)

சிலர் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு (Bill) பணம் கட்ட கஷ்டப்படுவதும், கட்டாமல் தலைமறைவானதும் கூட நடக்கின்றது. தலைநகர் சென்னையில் மட்டும் பணம் கட்டாத 550 பேர் மீது BSNL நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த 550 பேரும் 25,000 ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்தவர்கள். இதுபோல் 2 கோடி ரூபாய் சென்னையில் மட்டும் பாக்கி, இது தேவைதானா? (4)

அடுத்ததாக ளுஆளு எனப்படும் "குறுந்தகவல் சேவை" ஒரு குறிப்பிடத்தக்கது. செல்லில் பேசி பணத்தை விரயம் செய்யாமல் சுருக்கமாக தகவல்களை பரிமாற்றிக்கொள்ள இந்த ளுஆளு வகை செய்கிறது. தொழுகை, நோன்பு போன்றவை சம்மந்தமான நபி மொழிகளை அனுப்பி மக்களுக்கு தஃவா செய்யக்கூட இந்த அறிய ளுஆளுஐ பயன்படுத்தலாம். ஆனால் இன்று இந்த ளுஆளு பயன்படுத்துவதெல்லாம் முறை தவறிய செயல்களுக்குத்தான்.

என்னுடன் பணிபுரியும் தமிழ்ச் சகோதரருக்கு வந்த ஆங்கில SMS, (குறுந்தகவல்) "தோழி தேவையென்றால் தொடர்புகொள்ளவும் இப்படிக்கு லாரா" .நல்லவேளை அவருக்கு ஆங்கிலம் தெரியாது. நான் அந்தத் தகவலை அழித்துவிட்டேன். இது ஒரு மாதிரிதான். இதைப்போன்று பல்வேறு தகவல்கள் ஆண், பெண் பேதமின்றி பரிமாற்றிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்திய காதலர் தினக் களியாட்டங்களில் கூட இந்த SMS பங்கு அதிகம் என்றால் அது மிகையாகாது. நல்ல குடும்பப் பெண்களுக்கும், தொழுகையாளிகளுக்கும் கூட சில விஷமிகள் கெட்ட படங்களை அனுப்பி விடுகின்றனர். இதனால்தான் கிரைம் பிரான்ச் (Crime Branch) காலம் போய் சைபர் கிரைம் பிரான்ச் (Cyber Crime Branch) குற்றப்பிரிவுகள் காவல்துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

.



இது மட்டுமல்ல, பொது இடங்களில் செல்லும் குடும்பப் பெண்களின் அவர்களுக்குத் தெரியாமல் படம் எடுப்பதுகூட நடக்கின்றது. இவ்வளவு அசம்பாவிதங்கள் போதாதென்று சினிமாத்துறையும் தனது திரைப்படங்களை கேமரா செல் மூலம் ரிலீஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

.

இறைவன் தன் மாமறையில்
"இறுதியாக (நரகமாகிய) அதன்பால் அவர்கள் வந்து சேர்ந்துவிடுவார்களாயின் (பாவம்) செய்த அவர்களுக்கு விரோதமாக அவர்களது செவிப்புலனும், பார்வைகளும், தோலும் அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி சாட்சி சொல்லும்". (6)

எனவே அன்புள்ளம் கொண்டவர்களே! செல் ஃபோன் என்பது இறைவன் நமக்களித்த இந்த நூற்றாண்டின் அருட்கொடை எனலாம். அதைப் பயன்படுத்தும் முறையில்தான் அது ஹராமா? ஹலாலா? என தீர்மானிக்க முடியும். நிச்சயமாக இதை தவறாக பயன்படுத்தினால் மறுமை மன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவோம்.

நபி(ஸல்) அவர்களும், அபூபக்கர்(ரலி), உமர்(ரலி) ஆகியோர் அபுல் ஹைதம் பின் அத்தீஹான்(ரலி) அவர்களின் வீட்டில் விருந்துண்டபின் நபி(ஸல்) அவர்கள் கூறிய வாசகம் இங்கே நினைவுகூற ஏற்றம். "நிச்சயமாக அல்லாஹ்வின்மீது ஆணையாக இந்த அருட்கொடை பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்" (7)

சாதாரண பேரிச்சம் பழத்தினை உணவாக உட்கொண்டதற்கே (அருட்கொடையாக) விசாரணை உண்டென்றால்.. செல் ஃபோன் என்ற இந்த அரிய தொடர்புச்சாதனம் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!

எனவே! பெருமைக்காக அனாச்சாரங்களில் பயன்படுத்துவது, தவறான வழியில் பயன்படுத்துவது, Cell-லில் தேவைக்கதிகமாகப் பேசி வீண்விரயம் செய்வது போன்றவற்றைத் தவிர்ப்போம். செல் ஃபோன் இறைவனின் அருட்கொடை என்பதை கருத்தில் கொண்டு முறையாகப் பயன்படுத்துவோம்!

செல் ஃபோன் பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டியவை


-Ring Tone-களில் இசையை முழுமையாகத் தவிர்க்கவேண்டும். சாதாரணமான Ring Tone அல்லது மணியோசை போன்றவற்றை பயன்படுத்தலாம்

-சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் Ring Tone சப்தத்தை வைத்துக் கொள்ளவேண்டும். தொழுகை நடக்கும் இடம், மார்க்கச் சொற்பொழிவு அரங்கங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றில் அதிர்வூட்டலை (Vibration Mode) பயன்படுத்தலாம். அமர்த்திவிடுவது சாலச்சிறந்தது.

-எதிர் முனையில் நாம் தொடர்பு கொள்ளக்கூடிய நபர் துக்கம் அல்லது முக்கியமான சந்திப்பில் (Meeting) இருக்கலாம், அல்லது வாகனத்தை ஓட்டிக்கொண்டோ அல்லது பயணத்திலோ இருக்கலாம். முன் அனுமதி பெறுவது நல்லது.

-நாம் Dial செய்யும்முன் தொழுகைக்குரிய நேரமா என்பதைப் பார்த்துக் கொள்ளவேண்டும்.

-பேசும் போது பொருளாதார வீண்விரயம் கருதி சுருக்கமாகப் பேசவேண்டும், சிலர் பத்து நிமிடம் பேசினால் 5 நிமிடம் சிரிப்பில் கழிந்துவிடுகிறது.

-எதிர் முனையில் நாம் தொடர்பு கொள்ள வேண்டிய நபர் இல்லாமல் அவரது மனைவி மற்றும் பெண்கள் எடுக்கும் பட்சத்தில் நீட்டாமல் சுருக்கமாகச் செய்தியைக் கூறி முடிக்கவேண்டும்.

-பிறர் செல் ஃபோன் எண்களை வாங்கும் போதும், பிறருக்கு நாம் சொல்லும் போதும் சரியாகக் கொடுக்க வேண்டும். டயல் செய்யும் முன் டயல் செய்யும் எண்ணைச் சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.

-வாகனம் ஓட்டும்போது செல் பேசிகளில் பேசுவது அல்லது ரிசீவ் செய்வதைத் தவிர்க்கவும்.

-நிர்பந்தம் எற்படாவிட்டால் தவிர நமது செல் பேசிகளை மற்றவர்கள் சுதந்திரமாக பாவிக்க அனுமதிக்க வேண்டாம். அதேபோல் நாம் மற்றவர்கள் செல் ஃபோன்களை உபயோகிக்க நேர்ந்தால் மென்மையாக உபயோகிப்பது நல்லது.

-அறிமுகமில்லாதவர்களிடம் தங்கள் செல் ஃபோனில் பேச அனுமதிக்க வேண்டாம். செல் பேசிக்கொண்டே அவர்கள் ஓடிப்போய்விடுவது... அல்லது நமது தனிப்பட்ட எண்களைக் குறித்துக் கொண்டு தவறான முறையில் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.

-பேசும் போது நடுத்தரமான குரலில் பேசுவது நல்லது. அதிக சப்தமாக பேசினால் நம் பேச்சை மற்றவர்கள் கேட்கவும், மற்றவர்களுக்கு இடைஞ்சலாகவும் இருக்கும்.

சிரிப்பு

சிரிப்பு


"சிரிப்பு" என்பது சிநேகத்திற்கான முதல் தூது. இறுக்கமான சூழ்நிலையை இணக்கமாக்க உதவுவது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பகிரங்க அடையாளமே சிரிப்பு. சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான். ஆரோக்கியத்திற்கான பல்வேறு சுவைகளில் "நகைச்சுவை"யும் ஒன்று. "நிச்சயமாக அவனே (மனிதனை) சிரிக்க வைக்கிறான்". (அல்-குர்ஆன் 53:43).

நோய் நிவாரணி
சிரித்து மகிழ்வோடு இருப்பதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது என்பது ஜப்பான் பல்கலைக்கழக சமீபத்திய ஆய்வு. மேலும் இது இரத்த அழுத்தத்தை குறைத்து நரம்பு மண்டலத்திற்கு புத்துயிர் அளித்து தசை பிடிப்புகளை தளர்த்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் இருதயத்தையும் பலப்படுத்துகிறது என்பது நிபுணர்களின் கூற்று.

சிரிப்பும் அதற்கான வாய்ப்பும்
ஒரு மனிதன் தனியாக இருப்பதை விட பலருடன் கலந்து இருக்கும் போது வாய் விட்டு சிரிப்பதற்கு முப்பது மடங்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு குழந்தை ஒரு நாளில் சராசரியாக 300 முறை சிரிக்கிறதாம். (இனி மேல் வாழ்வில் சிரிக்கவே முடியாது என்பதனாலோ என்னவோ?) வளர்ந்த மனிதனும் கூட ஒரு நாளில் சராசரியாக 17 முறை சிரிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நகைப்பென்னும் உடற்பயிற்சி
100 முறை சிரித்தால் அது 15 நிமிடங்கள் வேகமாக சைக்கிள் ஓட்டுவதற்கு சமம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். (நன்றி: தினமணிக்கதிர் 20.7.2003).

புண்படுத்துவதும் பண்படுத்துவதும்
பிறரைப் புண்படுத்திச் சிரித்து மகிழும் போக்கை (Caustic Humour) இஸ்லாம் முழுமையாக தடை செய்யும் அதே நேரம் எவர் மனதையும் நோகடிக்காத பண்பான ஆரோக்கியமான நகைச்சுவையை (Compassionate Humour) இஸ்லாம் வரவேற்கிறது.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் ஏறிச்செல்ல ஒரு வாகனம் கேட்டார். அதற்கு நபியவர்கள் உம்மை ஒட்டகத்தின் குட்டியின் மீது ஏற்றிவிடுகிறேன் என்றார்கள். அதற்கு அம்மனிதர் இறைதூதர் அவர்களே! ஒட்டகக்குட்டியை வைத்து நான் என்ன செய்வது? என்று கேட்டதற்க்கு எந்த ஒட்டகமும் தாய் ஒட்டகத்தின் குட்டித்தானே என்றார்கள் (புன்னகை பூக்க).
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: அபூதாவூத், திர்மிதி).

மார்க்கம் தரும் வரப்பிரசாதம்
உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பதும் தர்மமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி), ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (திர்மிதி 2022, 2037).

இவ்வாறு கூறும் உன்னத மார்க்கம் உலகில் இஸ்லாத்தை தவிர வேறெதுவும் இல்லை.

கண்ணியப் பார்வை
சிரிக்க காசு கேட்கும் சிடுமூஞ்சியாகவும் இல்லாமல், எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் இளிச்சவாயனாகவும் இல்லாமல் நடுநிலையோடு சிரிப்பதையே (புன்னகை) மார்க்கம் வலியுறுத்துகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு போதும் ஒரேயடியாக தமது உள் நாக்குத் தெரியும் அளவுக்கு சிரிக்க நான் கண்டதில்லை. அவர்கள் (பெரும்பாலும்) புன்னகை புரிபவர்களாகவே இருந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி


புன்னகையாய் எதிர்கொள்ளல்
பிரச்சனைகளை ஏன் போர்க்களத்தை கூட புன் சிரிப்புடன் தான் எதிர்கொள்வார்கள் நபி (ஸல்) அவர்கள் (ஆதாரம்: புகாரி)

அறிஞர்கள் தரப்புச் சிரிப்பு
அழகின் சிரிப்பு என்றான் பாரதிதாசன்.
துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... என்றான் வள்ளுவநேசன்.
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே... என்றான் கண்ணதாசன்.
சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவா மனித ஜாதி... என்றான் பொதுவுடைமை கவிஞன்.
வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போச்சு... என்றான் தமிழ் மூதறிஞன்.

இறைவனின் சிரிப்பு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்து சிரிக்கிறான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிடுகின்றார். இருவருமே சொர்க்கத்தில் நுழைகின்றார்கள் (எப்படி) முதலாமவர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு கொல்லப்படுகின்றார். பிறகு (அவரைக்) கொன்றவர் பாவமன்னிப்புக் கோர அதை ஏற்று அவரை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். பிறகு அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர் தியாகியாகி விடுகின்றார். (ஆதாரம்: புகாரி எண் 2826).

உஹது போரில் ஸயீத் பின் ஆஸ் (ரலி) அவர்களின் மகன் அஃபான் என்பார் எதிரிகளின் அணியில் இருந்தார். போரில் நுஃபான் பின் கவ்கல் (ரலி) என்ற முஸ்லிமை அவர் கொலை செய்து விட்டார். இவர் பிறகு இஸ்லாத்தில் இணைந்தார். பின்பு அறப்போரில் கொல்லப்பட்டு உயிர்த் தியாகியாகி விட்டார்.

22 tips for Parents regarding TEENS

From: Huma Qureshi (hqureshi)
Sent: Thursday, April 23, 2009 9:52 PM
To: muslims(mailer list)
Subject: FW: 22 tips for Parents regarding TEENS


What does it take for parents to get a teen to become a practicing Muslim? Sound Vision has talked to parents, Imams, activists and Muslims who have grown up in the West to ask what are some practical things parents can do to help Muslim teens maintain their Deen. These are some of their suggestions:

Tip #1: Take parenting more seriously than you would a full-time job
This means both parents must understand their children are a trust from Allah, and He will ask how they were raised. If the children do not grow up practicing Islam because of their parents' negligence, it is not going to be pretty in this life or the next.

Tip #2:Reduce or change work hours and exchange them for time with the family
It is better to have one full-time job, fewer luxuries in the house (i.e. more cars, expensive clothes, a bigger, fancier home) and more time with the family, than many material things and absent parents. This goes for mothers AND fathers. Parents can't instill values in their children if they just aren't there, period. Quit that extra job on the weekends or in the evenings and instead drive the kids to the mosque for Halaqas and activities instead. Or consider switching shifts at work so that you're home when the kids are.

Tip #3: Read the Quran, understanding its meaning, for five minutes every day
Just five minutes. Whether it's in the car during a traffic jam, early morning after Fajr, or right before you go to bed, read the Quran with a translation and/or Tafseer. Then watch the snowball effect. You will, Insha Allah, reconnect with Allah, and in the long run, develop into a role model helping your whole family, not just your teen, reconnect with Him too.

Tip #4: Attend a weekly Halaqa
Trade playing cards or watching television on Sunday afternoons for a Halaqa. If you don't have something already in place during that time slot, help the Imam to set one up. Attend it vigilantly. The added bonus of this is that when children see their parents striving to learn about Islam, they will in many cases be encouraged to do the same.

Tip #5: Respect your teen
Respecting your teen means not treating them like inept babies, but like maturing adults, not talking down to them or humiliating and insulting them. It means involving them in useful activities around the home and seeking their opinions on matters of importance.

Tip #6: Take an interest in what they do
Does Noor play hockey in an all-girls' sports league? Attend Noor's games as regularly as possible. Does Ihsan collect stamps? See if you can find old letters from your parents in Malaysia or Lebanon and pass the stamps on them to her. Does Muhsin love building websites? Visit his site, post a congratulatory e-mail on the message board and offer some suggestions for the site. Give him a book on advanced web design as Eid gift.

Tip #7: Be aware of problems and address them straightforwardly
As you spend more time with your teen, you will be more able to sense if there is something bothering them. Don't brush this feeling under the carpet. Address it straight on. But don't do this in the family meeting or n in front of others. Do it during the next tip.

Tip #8: "Date" your teenager
While dating is commonly associated with boy-girl social meetings, the concept can be extended to any meeting between two people wanting to get to know each other better.

It's especially important to "date" your children on an individual level once they hit their teens because they are no longer just "one of the kids". They are young adults who need attention and guidance on an individual level. You can go out on a "date" when Sumayya graduates from high school (instead of going to the prom), when Ahmed gets his driver's license or if you feel there is something bothering them and you want to address them alone.

Tip #9: Don't just be your teen's parent, be his or her partner
Making them a partner means giving them responsibilities within the family. Get 16 year old Amir, who just got his driver's license, to help his mom with grocery shopping on Saturday's; get 15 year old Jasmine, who loves flowers, to be responsible for the garden and mowing the lawn. This way, teens will feel a part of the family, included and needed.

Tip #10: Build a Masjid in your home
Delegate a room, part of the basement or the living room as the home Masjid. You can do this for less than $25.
Make this Masjid entirely the responsibility of the kids. Get the eldest to be in charge and to delegate responsibilities for younger siblings. Responsibilities include keeping the Masjid clean, waking people up for Fajr, calling the Adhan, etc.

Tip #11: Don't practice "men's Islam"
That means don't exclude wives or daughters from prayers. When the men are praying in Jamaah, make sure the women are either behind them or also praying in congregation. Make sure the Imam recites the prayer loud enough for the women to hear if they are in another part of the house. Also, encourage women to pray in Jamaah if there are no men present.

Tip #12: Establish an Islamic library and choose a librarian
Equip your home with an Islamic library with books, video and audio cassettes about various aspects of Islam, catering to everyone's age and interests. If 13-year-old Bilal likes adventure novels, for example, make sure you have a couple of Islamic adventure books

Get one of your teens to be the librarian. S/he keeps materials organized and in good condition. Any requests for materials to be added to the collection have to go through him or her. Give this librarian a monthly budget for ordering new books, cassettes, etc.

Tip#13: Take them out.....to Islamic activities
Instead of a fancy dinner at a restaurant, save your money to take everyone out to the next Muslim community dinner or activity. Make a special effort to go to events where other Muslim teens will be present and the speaker caters his/her message to this crowd.

It's also important to regularly take Bilal and Humayra to Islamic camps and conferences where they will meet other Muslim kids their age on a larger scale.

Tip #14: Move to a racially and religiously mix neighborhood in your city
If your children can interact with Muslim as well as non-Muslim children on a daily basis, it is going to be healthier for their growth. May be a move closer to a masjid is going to help as well.

Tip #15 : Help teens start their own youth group
After living in a Muslim neighborhood and attending Islamic activities regularly, teens in many cases will develop a friendship with other Muslims their age. Don't let this end here.

Help them establish a youth group, not just to learn about Islam, but to go to the amusement park together, go swimming, etc. Have meetings at members' houses on a weekly or bimonthly basis. Get this group involved in useful work like cleaning up litter around the Masjid or visiting senior citizens' homes.This group must have parental supervision, although teens' decision-making powers should not be interfered with unless really necessary.

Tip #16: Establish a TV-free evening and monitor TV watching in general
Parents' biggest competitor for their children's attention is the T.V. Sound Vision's unTV guide. Monitoring what everyone watches simply means taking care to remind and help everyone avoid shows which depict sex, violence and encourage unIslamic activities. Put up a list of acceptable and unacceptable shows on the wall beside the T.V.

Establishing TV-free evenings means having one evening of the week when no one, adult, teen or child is allowed to watch television. Hopefully, this is a first step towards general TV reduction in the home. This is an ideal time to have the next tip.

Tip #17: Have weekly family meetings
The purpose: to find out what is going on in everyone's lives and to consult the family on important issues. Hanan started attending a Halaqa, Imran just returned from a Muslim youth camp, Bilal aced the last algebra test. The point is not to just give this news in point form. It's to elicit discussion and communication between everyone, and to keep up-to-date about what is going on in everyone's life, which gets harder when kids become teenagers.

This is also the place to consult the family and decide on major issues affecting everyone: a move to another city; a marriage of one of the family members; difficulties with a bully in school, etc.

Please note: Shura in the family does not mean a majority vote determines what to do about a situation. While the parents remain in charge, teens and younger children voice opinions and suggestions parents will consider in making a final decision about a matter.

Tip #18: Have "Halal Fun night" once a month
"Fun is Haram" is a joke sometimes heard amongst Muslim youth, mocking the attitude of some Muslims for whom virtually anything enjoyable is automatically labeled Haram (forbidden).

Islamic entertainment is a much neglected area of Muslim concern. Islamic songs, skits, etc. are a viable tool for the transmission of Islam. Maybe 16-year-old Jameel knows how to play the Duff, while his sister Amira, 14, can write and sing well. Let them present their own Islamic song to the whole family. Or have 12-year-old Ridwan recite some of his best poetry. Make one of the teens in charge of this event. Help them establish a criteria of acceptable and unacceptable Halal entertainment.

Tip #19: Provide the right role models-What would Abu Bakr have done?
Apart from being a role model yourself by trying to practice Islam, make sure you provide teens with reading material about the Prophet Muhammad (peace and blessings be upon him) and his Companions (Sahaba), both the men and the women. Otherwise, the characters on the programs your kids watch on television may become their "Sahabas".
Discuss what a Companion may have done in a situation relevant to teens' lives. What would Abu Bakr Siddiq do if he saw a someone selling answers to the grade 11 math final exam? What would Aisha have done is she was confronted with the opportunity to cheat her parents?

Tip #20: Read books on Positive Parenting
These can be books written by Muslims, but even books by non-Muslims can help. However, just be ready and make sure you are able to identify what is Islamically acceptable versus what is not.

Tip #21: Get them married early
The societies of the West are permeated by sex: on TV, billboards, on the streets, buses, in movies, etc. A Muslim teenager facing this is in a tough position: succumb to the temptations or try really, really hard not to. Getting them married early (check out some tips for parents) will ease the pressure, and they don't have to stop their studies to do this. Remember, as a parent you will also be partly responsible if your son or daughter wanted to marry, you stopped them and they ended up having sex outside of marriage. You should also remember when undertaking this step not to force your son or daughter to marry someone they do not like.

Tip #22: Last but not least-Make Dua
Make Dua. It is really Allah who guides and misguides, but if you've done your job as a parent, Insha Allah, keeping your teen a practicing Muslim will be easier to do than if you had neglected this duty. As well, make Dua for your teen in front of them. This reminds them how much you love them and your concern for them.

துபாயில் சிங்க‌ப்பூர் ஆடிட்ட‌ர் பெரோஸ் கான்

துபாயில் சிங்க‌ப்பூர் ஆடிட்ட‌ர் பெரோஸ் கான்







துபாய் பூகோள‌ கிராம‌ம்

துபாய் பூகோள‌ கிராம‌ம்



துபாய் யுஏஇ த‌மிழ்ச் ச‌ங்க‌ விழாவில் அல்ஹாஜ் செய்ய‌து எம் ஸ‌லாஹுத்தீன்



துபாய் யுஏஇ த‌மிழ்ச் ச‌ங்க‌ விழாவில் அல்ஹாஜ் செய்ய‌து எம் ஸ‌லாஹுத்தீன்

துபாயில் ப‌ர‌ம‌க்குடி கீழ‌ முஸ்லிம் ஜ‌மாஅத் ச‌பை அங்க‌த்தின‌ர்க‌ள் ச‌ந்திப்பு

துபாயில் ப‌ர‌ம‌க்குடி கீழ‌ முஸ்லிம் ஜ‌மாஅத் ச‌பை அங்க‌த்தின‌ர்க‌ள் ச‌ந்திப்பு