Thursday, October 16, 2008

துபாயில் கவிக்கோ மற்றும் எஸ்.எம். இதாயத்துல்லா

அபுதாபி அய்மான் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர்



துபாயில் ஈடிஏ ஜேஎம்டி பி.எஸ்.எம். ஹபிபுல்லா காக்காவுடன்


துபாயில் கவிக்கோ அப்துல் ரகுமான் மற்றும் எஸ்.எம். இதாயத்துல்லா ஆகியோர் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக 17.11.2008 திங்கட்கிழமை முதல் 22.11.2008 சனிக்கிழமை வரை துபாயில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

அந்நிகழ்விலிருந்து சில புகைப்படங்கள்

படிப்பு இலவசமாக தரப்படுகிறது

நிறைய நேரங்களில் சாதாரண உரையாடல்கள் கூட வாழ்க்கையைப் புரட்டிப்போடப்போகும் நிகழ்வுகளுக்கு அடித்தளமாக அமைந்துவிடலாம். இந்த வருட ஆரம்பத்தில் வாழ்க்கையில் ஒரு மாற்றம் உடனடியாகத் தேவை என எண்ணிக்கொண்டே ஒரு முறை பதிவர் 'மாற்று' ரவிசங்கருடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது, எதேச்சையாக மேற்படிப்பு பற்றி பேச்சு ஆரம்பித்தது.

அவர் உரையாடலின் ஊடாக 'ஸ்கேண்டிநேவியன்' நாடுகளில் படிப்பு இலவசமாகத் தரப்படுகிறது என சொன்னபொழுது , எனக்குள் நீண்ட நாட்களாக மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்திற்கு மீண்டும் உயிரோட்டம் கிடைத்தது. மனிதனின் சிறந்த உருவாக்கங்களில் ஒன்றான கூகிளில் தேட ஆரம்பித்தேன்.

ஸ்கேண்டிநேவியா நாடுகள் என்பது டென்மார்க்,சுவீடன்,நார்வே,பின்லேந்து மற்றும் ஐஸ்லேந்து. டென்மார்க்கில் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டதாலும், பின்லாந்து பல்கலைக் கழகங்கள் 75% மதிப்பெண் எதிர்பார்த்ததாலும் , நார்வே, ஐஸ்லேந்து குளிர் பிரதேசங்களாக இருப்பதாலும் எஞ்சிய சுவீடன் பற்றி தேட ஆரம்பித்தேன்.

தேடலில் மிக மிக மிக அத்தியாவசியமான மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு தகவல் தரப்பட்டிருந்தது.


இந்தியாவில் தொழில்நுட்பம்,பொறியியல் மற்றும் அறிவியல் படிப்புபடித்திருப்பவர்களுக்கு ஆங்கில மொழித் தேர்வு மதிப்பெண் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீண்ட காலமாக எனது மேற்படிப்புக்கான முயற்சிகளில் ஈடுபடாமல் இருந்ததற்கு இந்த மொழித்தேர்வும் ஒரு காரணம். ஆகையால், மக்களே சுவீடனில் மேற்படிப்பு படிக்க IELTS/TOEFL போன்ற ஆங்கில மொழித்தேர்வுகள் எழுதத்தேவை இல்லை. இது பி.எஸ்.சி படித்திருப்பவர்களுக்கும் பொருந்தும்.


இந்த விபரத்துக்கான சுட்டியைப்படிக்க இங்கே சுட்டவும்

ஐரோப்பாவில் அமைதியான நாடுகளில் ஒன்று என பொதுவாக அறியப்படும் சுவீடனில் படிப்புக்க்கட்டணம் கிடையாது. மொத்த படிப்புக்கான செலவும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்.அது எல்லா நாட்டு குடிமக்களுக்கும் பொருந்தும்.

சுவீடனில் மொத்தம் 48 கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் அரசாங்கமே நடத்துபவை. இவற்றின் கல்வித்தரம் அனைத்திலும் ஏறக்குறைய சமமாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நிறைய மக்களால் அறியப்படும் பல்கலைகழகங்களின் பெயர்கள், ராயல் இன்ஸ்டிடியுட் ஆஃப் டெக்னாலஜி(KTH),உப்பசாலா, கோதன்பர்க், சால்மர்ஸ் , லுந்த் மற்றும் பிலெக்கிஞ் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி ஆகியன.

(BTH- Blekinge Institute of Technology கல்லூரியில் தான் நான் Software Engineering படிக்கிறேன். BTH மென்பொருள் துறைக்காகவே அப்போது மிகவும் பின் தங்கி இருந்த பிலெக்கிஞ்ச் மாகாணத்தில் ரோன்னிபே,கார்ல்ஸ்க்ரோனா,கார்ல்ஷாம் ஆகிய மூன்று நகரங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. )

தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகம் நேரிடையாக அனைத்து பொறியியற் கல்லூரிகளுக்கு ஒரே விண்ணப்பிக்கும் முறை வைத்திருப்பது போல , சுவீடனில் படிக்க Studera என்ன மையப்படுத்தப்பட்ட முறையின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

அதற்கான இணையத்தளம் www.studera.nu ஆங்கிலத்தில் இணையதளத்தைப்பார்க்க இந்த சுட்டியைப் பயன்படுத்தவும். https://www.studera.nu/studera/241.html


ஸ்டூடரா தளத்தில் உங்களுக்கான கணக்கைத் துவக்கிக்கொள்ளவும்.
உங்களுக்கான 4 விருப்பத்தேர்வுகளுக்கு ஒரே சமயத்தில் விண்ணப்பிக்கலாம்.
(போன வருடம் 8 விருப்பத்தேர்வுகளை வைத்திருந்தார்கள். இந்த வருடம் 4 ஆக குறைத்துவிட்டார்கள்.)

இணையத்தின் வாயிலாக விண்ணப்பித்துவிட்டு , நமது சான்றிதழ்களை நோட்டரி பப்லிக் கையொப்பம் பெற்று சுவீடனுக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.

தபாலில் அனுப்பவேண்டிய சான்றிதழ்களைப் பற்றிய விபரங்களை இந்தச்சுட்டியில் வாசிக்கலாம்.

https://www.studera.nu/studera/1175.html

சுவீடன் பல்கலைகழகங்களில் வருடத்தில் ஜனவரியிலும் செப்டம்பரிலும் என இரண்டு முறை சேர்க்கை முறை இருக்கும். அடுத்த 2009 செப்டம்பர் சேர்க்கைக்கு 2009 பிப்ரவரி இரண்டாவது வாரம் கடைசியாக இருக்கும்.

செப்டம்பரில் வருபவர்களுக்கு மே மாத இறுதியில் சேர்க்கை நிலவரம் அறிவிக்கப்படும். அனுமதி கிடைத்தவுடன் விசா விற்கு விண்ணப்பிக்கலாம். விசா விண்ணப்பித்து இரண்டு மாதங்கள் கிடைத்து விசா கிடைத்தவுடன் சுவீடனுக்கு பறக்க ஆரம்பிக்கலாம்.

ஆகையால் அடுத்த செப்டம்பரில் இங்கு வர நினைப்பவர்கள் இப்பொழுதே பல்கலைக்கழகங்களைத் தங்களது விருப்பப்பாடங்களுக்கு ஏற்ற படி விபரங்களைத் தேட ஆரம்பியுங்கள்.

படிக்கும் காலங்களில் சிக்கனமாக இருந்தால் , இரண்டு வருட மேற்படிப்பை 3 லட்சரூபாய்க்கும் குறைவாகவே முடித்துவிடலாம். இருந்த போதிலும் விசா பெறுவதற்கு கிட்டத்தட்ட 10 லட்ச ரூபாய் நம் வங்கிக் கணக்கில் காட்டவேண்டும். பெரும்பலான மக்கள் குறுகிய கால கடனாக நண்பர்கள்/உறவினர்களிடம் வாங்கி விசா பெறும் வரை கணக்கில் வைத்துவிட்டு பிறகு திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்.

பகுதி நேர வேலை என்பது சுவீடனைப் பொருத்த மட்டிலும் கொஞ்சம் கடினமே என்றாலும் சிறிய அளவிலான வேலைகள் கிடைக்கின்றன. வேலை அதிக அளவில் கிடைக்காமல் இருப்பதற்குக் காரணம் சுவீடீஷ் மொழி . சுவிடீஷ் மொழியை ஆறு மாதத்தில் கற்றுக்கொள்பவர்களுக்கு இங்கு எளிதாக வேலைக் கிடைக்கும்.

கல்விக்கட்டணம் இல்லை என்பதால், ஸ்காலர்ஷிப் கள் அதிக அளவில் கிடையாது. இருந்தபோதிலும் இந்த சுட்டியில் நீங்கள் சில ஸ்காலர்ஷிப் முறைகளைப்பார்க்கலாம்.
http://www.studyinsweden.se/templates/cs/Article____5001.aspx


மேற்படிப்பு படிக்க அனைத்து நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளும் கடன் தருகின்றனர். 7.5 லட்சம் வரை பெற்றோர் மற்றும் Guarantor உறுதிமொழியுடன் தருகிறார்கள். 4 லட்சம் வரை பெற பெற்றோர் கையொப்பம் மட்டும் போதுமானது. 7.5 லட்சத்துக்கும் அதிகம் பெற சொத்து பத்திரங்களைச் சமர்ப்பிக்கவேண்டும். சுவீடனைப்பொறுத்தமட்டில் 4 அல்லது 7.5 லட்சம் வகையில் கல்விக்கடன் விண்ணப்பிக்கலாம்.


இந்தப்பதிவின் அதிமுக்கிய நோக்கம், 2010 ஆம் ஆண்டில் இருந்து சுவீடனும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இன்னும் அரசாங்க ஆணை ஏதும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை எனினும் மிகவிரைவில் செயற்படுத்தப்படலாம் என்ற ஒரு பேச்சு இருக்கிறது.

இருந்த போதிலும் அதிகாரப்பூர்வமாக ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை சுவீடன் அரசாங்கம் அறிவித்துள்ளது. அது என்னவென்றால் மேற்படிப்பு படிக்க வருபவர்கள் 30 ECTS அதாவது நான்கு பாடங்கள் முடித்துவிட்டால் 48 மாதங்களுக்கு வேலைக்கான விசாவும்/தற்காலிக தங்கும் குடியுரிமையும் (Residence permit) உடனடியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதி இந்த வருடம் டிசம்பர் 15 லிருந்து செயற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் மேற்கத்திய நாடுகளில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என நினைத்து, ஆங்கிலப்புலமை குறைவு என்பதினாலோ அல்லது அதிகக் கட்டணம் கட்டவேண்டும் என்றோ இது நாள் வரை தவிர்த்து வந்தவர்களுக்கு சுவீடனில் படிக்கும் வாய்ப்பு ஒரு அரிய வரப்பிரசாதம்.

முக்கியமான விசயம், சுவீடனைப்பொருத்தமட்டில் எல்லாம் ஸ்டூடரா இணையத்தளம் வாயிலாக மட்டும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதைத்தவிர எனது கல்லூரி BTH போன்றவை நேரடியாகவும் அவர்களின் கல்லூரித்தளங்களில் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.

சுவீடனை பொருத்தமட்டில் நேரடியாக செய்ய வாய்ப்பு இருப்பதால் எந்த ‘மேற்படிப்பு படிக்க உதவும் ஏஜென்சிகளையும் அணுக வேண்டாம். எந்த ஏஜென்சிக்கும் ஏனைய மேற்கத்திய கல்லூரிகளைப்போல சுவீடன் கல்லூரிகளால் உரிமம் கொடுக்க்கப்படவில்லை. ஏஜென்சிகளை அணுகினாலும் அவர்களும் இந்த ஸ்டூடரா வழியாகத்தான் விண்ணப்பிப்பார்கள். வீணாக 25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை கன்சல்டன்சி கட்டணம அழ வேண்டாம்.

சுவீடனில் மேலும் நிறைய தமிழ்க் குரல்களைக் கேட்க விருப்பம். மேற்படிப்பு படிக்க விரும்பும் தமிழ் நண்பர்களே வாருங்கள், சுவீடன் உங்களை வரவேற்கிறது.

அதி முக்கிய இணையத்தளங்கள்;

1. Studyinsweden.se, சுவீடனில் மேற்படிப்புப்பற்றிய அனைத்து விபரங்களும் அறிய

2. சுவீடன் பல்கலைகழங்களுக்கு விண்ணப்பிக்கும் இணையத்தளம் Studera.nu

3. விசா விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் ஏனைய குடியேற்ற சட்டதிட்டங்கள் பற்றி அறிய

4. Blekinge Institute of Technology யில் மென்பொருள் சம்பந்தமாக படிக்க விரும்புவர்கள் இந்த தளத்தில் விண்ணப்பிக்கலாம். செப்டம்பருக்கான அறிவுப்பு விரைவில் வரும்.

5. இந்த வருடம் விண்ணப்பித்த முறை, அதில் சந்தித்த சங்கடங்கள் ஆகியனவற்றைப்பற்றி விபரமாக இந்தத் தளத்தில் காணலாம்

6. www.facebook.com என்ற சமுதாய இணையத்தளத்தில் இந்த வருடம் சுவீடனுக்கு விண்ணப்பித்தவர்களின் அனுபவங்களை வாசிக்கலாம். இது வரும் வருடம் விண்ணப்பிப்பவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.ஆரம்பம் முதல் கடைசி விசா முடியும் வரை அனைத்து விபரங்களும் தெளிவாக இருக்கும்.

-------------
ஸ்டாக்ஹோல்ம் KTH பல்கலைகழகத்தில் ICT Entrepreneurship படிக்கும் சாந்தகுமார் கீழ்கண்ட தகவல்களை தனி மின்னஞ்சலில் எனக்கு அனுப்பி இருந்தார்.
சென்னையில் AISEC என்ற மாணவர் அமைப்பு இருக்கின்றது.. இதன் மூலமாக இந்தியாவில் படிப்பவர்கள் வெளிநாடுகளில் Internship வாங்க இயலும் .

முதுவை ஹிதாயத் - புகைப்படங்கள்

துபாய் ஏர்போர்ட் எக்ஸ்போ
கேன் கலெக்‌ஷன்
28 மே 2009


துபாய் பெஸ்டிவல் சிட்டி
DUBAI FESTIVAL CITY


AL AIN - JABAL HAFEET ON 07TH DEC 2008 at 4.00
pm

free Haj

jafar sadik
reply-toTAFAREG@yahoogroups.com

ccTAFAREGexecutive@yahoogroups.com

dateSun, Oct 12, 2008 at 4:49 PM
subject[TAFAREG] Fwd: free Hajj


Images are not displayed.
Display images below - Always display images from sadikjafar@gmail.com

If you know anyone who is in the 60's or 70's of age and poor and did not go on Hajj to Holy Makka, please let them call the number below to make reservation for them to attend Hajj for free.

0096626919999

Please forward to everyone you know in case someone needs to go on Hajj
which will be in your sheet of good deeds on the day of Judgment..

சென்னையில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் விருது வழங்கும் விழா

சென்னையில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் விருது வழங்கும் விழா

சென்னையில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் விருது வழங்கும் விழா 19.10.2008 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு சென்னை-4,146 டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு சென்னையில் செயல்பட்டு வரும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் அல்ஹாஜ் எஸ்.எம். ஹிதாயத்துல்லாஹ் தலைமை வகிக்கிறார். முதல்வர் டாக்டர் எம். ஷேக் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

கல்லூரி செயலாளர் ஹாஜி எம்.ஜே.எம். அப்துல் கஃபூர், பொருளாளர் கே.ஏ. கலீல் அஹ்மத் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். அசோக்குமார், சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் டி.ஆர்.பச்சமுத்து, சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பி. மன்னர் ஜவஹர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி முன்னாள் மாணவர் சங்க விருதுகளை தங்க கலியபெருமாள் ஐ.ஏ.எஸ், ஹெச்.தன்ராஜ் ஐ.ஏ.எஸ் (ஓய்வு), ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. அஹ்மதுல்லாஹ்,கல்லூரிக் கல்வித்துறை இணை இயக்குநர் டாக்டர் முஹம்மது இஃப்திஹாருதீன், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எம்.கே. ஹிதாயத்துல்லாஹ் ஆகியோருக்கு வழங்க உள்ளனர்.

சமுதாய சேவைக்கான விருதுகளை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம். பொன்னவைக்கோ, என்.சிவா எம்.பி, ஓமியட் சங்க தலைவர் யு. முஹம்மது கலீலுலாஹ், டாம்கோ தலைவர் ஏ. ஷேவியர் அருள்ராஜ், சிப்காட் தலைவர் டாக்டர் என். கோவிந்தன் ஐ.ஏ.எஸ், குஜராத்தில் பணிபுரியும் பி.பன்னீர்வேல் ஐ.ஏ.எஸ், ஏ. இளங்கோவன் ஐ.ஏ.எஸ், கேப்டன் என்.ஏ. அமீர் அலி, எஸ்.ஆர்.எம்.பல்கலை பி. ரவி, ஜமால் முஹம்மது கல்லூரி தலைவர் எம்.ஜே. நூர்தீன் சாஹிப், சித்தார்கோட்டை முஹம்மதியா பள்ளிகள் தலைவர் எஸ்.தஸ்தகீர், ஜமால் முஹம்மது கல்லூரி உதவிச் செயலாளர் ஏ.கே. காஜா நஜீமுதீன், நாமக்கல் பாவை நிறுவன தலைவர் சி.ஏ.என். நடராஜன் உள்ளிட்டோர் பெற உள்ளனர்.

பேராசிரியர் முனைவர் எம்.எம். சாகுல் ஹமீது ஆண்டறிக்கை வாசிக்கிறார். சென்னை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க செயலாளர் பி. அப்துல் காதர் நன்றியுரை நிகழ்த்துகிறார். மேலும் அவர் எழுதிய நம்நாடு முன்னேற நாம் என்ன செய்ய வேண்டும் ? என்ற சமூக சிந்தனை நூல் வெளியிடப்பட இருக்கிறது.

மேலும் விபரமறிய தொடர்புக்கு : 98 400 400 67 / 98 402 46265 / 98 404 40818

செய்தி : முதுவை ஹிதாயத் ( 94 880 23 199 )

முதுகுளத்தூரில் முப்பெரும் விழா

முதுகுளத்தூரில் முப்பெரும் விழா
அக்டோபர் 25 ஆம் தேதி நடைபெறுகிறது

இராமநாதபுரம் ஜில்லா முதுகுளத்தூரில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் அரசுத் தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு - ‘பச்சை ரத்தம்' நூல் வெளியீடு - மடிக் கணினி வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை இணைந்து முப்பெரும் விழா முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் எதிர்வரும் அக்டோபர் 25 சனிக்கிழமை மாலை 2.30 மணிக்கு நடைபெற இருக்கிறது என ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்விழாவிற்கு முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஏ. ஷாஜஹான், திடல் ஜமாஅத் ஜமாஅத் தலைவர் முஹம்மது மசூத், முஸ்தபாபுரம் ஜமாஅத் தலைவர் செய்யது இப்ராஹிம், பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி கல்விக்குழுத் தலைவர் திவான் முஹம்மது, தாளாளர் கமால் நாசர், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஓ.ஏ. முஹம்மது சுலைமான், கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை ஜெய்லானி, ஜமாஅத் பிரமுகர்கள், பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இவ்விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ராமநாதபுரம் ஜில்லா தலைவர் ஹாஜி எம்.எஸ். சௌக்கத் அலி, தேசிய நல்லாசிரியர் டாக்டர் எஸ். அப்துல் காதர்,முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.நெய்னா முஹம்மது, பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சிராஜுல் உம்மத் மவ்லவி அல்ஹாஜ் எஸ். பஷீர் சேட் ஆலிம், டாக்டர் முஹம்மது மைதீன், டாக்டர் குலாம், முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர் ஆலிம், அயிரை அப்துல் காதர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி விலங்கியல் துறைப் பேராசிரியர் எஸ். ஆபிதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசு வழங்கி சிறப்புரை நிகழ்த்த உள்ளார்.

இவ்விழாவில் பேராசிரியர் ஆபிதீன் மற்றும் பேராசிரியர் இப்ராஹிம் ஆகியோர் எழுதிய ‘பச்சை ரத்தம்' எனும் நூல் வெளியிடப்பட உள்ளது. இந்நூல் சுதந்திரப் போரில் பங்கேற்று மறைக்கப்பட்ட சமுதாயத் தியாகிகள் பற்றியது.

நூலைப் பெற விரும்புவோர் ரூ. 32/ ஐ பேரா. ஆபிதீன், விலங்கியல் துறை, டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி, இளையான்குடி 630 702 சிவகெங்கை மாவட்டம் எனும் முகவரிக்கு அனுப்பி பெறலாம்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இஸ்லாமிக் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன், ஏ. அஹ்மத் இஸ்மத்துல்லாஹ், ராஜா முஹம்மது, முஹம்மது ஃபாரூக் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

விழா குறித்து மேலதிக விபரம் பெற : முதுவை ஹிதாயத் 94 880 23199

தகவல் முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி