Monday, September 17, 2012

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத அறிஞர்கள்


நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத அறிஞர்கள் முத்திரை பதித்த வித்தகர் முஹம்மது (ஸல்) முஹம்மது நபிகளின் வாழ்வு பிரதிபலிக்கும் உண்மைகள்! நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி இறைவன் இவ்வாறு கூறுகிறான், நாம் உம்மை அகிலாத்தாருக்கு ஓர் அருட்கொடையாக அனுப்பியுள்ளோம் (21:107) நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வுலகத்தில் ஏற்படுத்தியத் தாக்கம், அவர்கள் ஏற்படுத்திய சமூக புரட்சி, அவர்களிடம் இருந்த நற்பண்புகள் ஆகியவைகளை முஸ்லிம்கள் சொல்லுவிதைவிட முஸ்லிமல்லாத அறிஞர்கள், அறிவுஜீவிகள் போன்றோர் சொல்லுவதே இந்த தலைப்பிற்கு மேன்மையாக இருக்கும் என்று நினைக்கின்றோம். மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒருவரின் மிகச் சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல் கொண்டேன். (அவ்விதம் அதனை நான் படித்தறிய முற்பட்ட போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது வாள் பலமல்ல என்று முன் எப்பொழுதையும் விட அதிகமாக உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை தம்மைப் பெரிதாகக் கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர்பண்பு. எந்நிலையிலும் வாக்குறுதியைப் பேணிக் காத்த தன்மை தம் தோழர்கள் மீது கொண்டிருந்த அழியாத அன்பு அவரது அஞ்சாமை இறைவன் மீதும் தமது பிரச்சாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவை தான் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலகச்சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத் தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவை தான் காரணமே தவிர வாள்பலம் அல்ல. (Young India, Quoted in The light, Lahore, for 16th Sep 1824. Mahatma Gandhi) காந்திஜி இவ்வாறு கூறுகிறார், ஆட்சி புரியும் அமைச்சர்கள் நபிபெருமான் வகுத்த சீர் திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும். (மகாத்மா காந்தி) மைக்கேல் ஹெச். ஹார்ட் என்ற ஆய்வு வல்லுனர் உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில், முதலில் 1000 பேரை தெரிவு செய்தார் பின்பு அதிலிருந்து 100 நபர்களை மட்டும் தேர்வு செய்தார்.இப்படி ஆய்வு செய்து முதலிடத்தை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு கொடுத்தார்.பின்பு இவ்வாறு கூறுகிறார் இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் "ஏன் அப்படி?" என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் கொள்கை ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது. இந்நிலையில், மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபியின் தாக்கத்தை-செல்வாக்கை-எப்படிக் கணக்கிடுவது? ஏனைய சமயங்களைப் போன்றே இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவோரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் உலகப் பெரும் சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர். உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது,எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. [ஒன்று: கிறிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு(அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை(THEOLOGY)உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்.( St. PAUL) ஆனால்,இஸ்லாத்தின் இறைமையியல் (THEOLOGY), அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபிதான். அன்றியும் அச்சமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொறுப்பினை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தாம். முஹம்மது வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும், கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன. அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே,முஹம்மது நபியின் கருத்துகளும், போதனைகளும், கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை. ஆனால், ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும்(மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி உண்டுபண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும், தூய பவுலும் ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட, முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுவுக்கும் இருந்தது என்று சொல்லலாம். இரண்டாவது: மேலும், ஏசுநாதரைப் போலில்லாமல், முஹம்மது நபி சமயத் தலைவராக மட்டுமின்றி,உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு,பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.] Source - (The Hundred) தமிழில் அந்த நூறு பேர். ‘நிச்சயமாக நீர் மிக உயர்ந்த நற்குணம் உடையவராக இருக்கின்றீர்’ (குர்ஆன் 68:04) ஒற்றுமையற்று, ஒழுக்கம் குலைந்து, இறைத்தன்மை உணராமல், தறிகெட்டு வாழும் அரபுக்களின் வாழ்க்கை நிலையை மாற்றி உயர்த்த இறைவனால் நியமிக்கப்பட்ட ஓர் ஊழியராகவே அவர் தம்மை உணர்ந்தார். துளி அகங்காரம் கிடையாது. பெருமையோ, வானவர் வந்து "இறைத்தூதர்" என்று அறிவித்துப்போன பெருமிதமோ, கர்வமோ கிடையாது. ஊழியன். வெறும் ஊழியன். இப்படித்தான் முகம்மது தம்மை இறுதிவரை கருதினார். (எழுத்தாளர் பா. ராகவன்) முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன். (பெர்னாட்ஷா) நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும். மனித குலம் முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது. (டாக்டர் ஜான்சன்) இறைவனின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது (குர்ஆன் 33:21) முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும். (ஜவஹர்லால் நேரு) (நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம் (குர்ஆன் 48:01) துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், 'முஹம்மது ஒரு சரித்திர நாயகர்' என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள். (எஸ். எச். லீடர்) இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்? (வாஷிங்டன் இர்விங்) முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார் (குர்ஆன் 48:29) நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை.கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும். (தாமஸ் கார்லைல்) (நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம் பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்.(2:99) நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல. (டால்ஸ்டாய்) ‘இவர்களுக்காக துக்கமும், வேதனையும் அடைந்தே உமது உயிர் போய்விட வேண்டாம்’. (குர்ஆன் 35:08) செந்தழலைக் குளிராகவும், சினங்கொண்டு சீறிவரும் பகையைக் குணங்கொண்ட நட்பாகவும் மாற்றவல்ல மனவலிமைமிக்க மேலோர் நபிகள் நாயகம். நபிகள் நாயகம் மற்றவர்களைத் திருத்துவதற்கு முன்பு தன்னைத் திருத்திக்கொண்டார் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு. (கலைஞர் கருணாநிதி) முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது கொள்கைகளுக்காக எல்லாவித சித்திரவதைகளையும் கொடுமைகளையும் சகித்துக் கொண்டு அவர்களைத் தமது தலைவராகக் கருதிய அவர்களின் தோழர்களுடைய உயர்ந்த ஒழுக்கப் பண்புகளும் அவர்கள் இறுதியில் நிகழ்த்திய சாதனையின் மகத்துவமும் இவையனைத்தும் அவர்களின் அடிப்படையான நேர்மையான நம்பகமான தன்மையை நன்கு எடுத்துரைக்கின்றன. முஹம்மத் (ஸல்) அவர்களை ஏமாற்றுக்காரராகவும் மோசடிக்காரராகவும் கருதுவது பல பிரச்னைகளையும் கேள்விகளையும் தாம் எழுப்புகிறதே தவிர பிரச்னைகளைத் தீர்க்கக் கூடியதாயில்லை. மேலும் உலக வரலாற்றின் மகத்தான மனிதர்களில் முஹம்மதைப் போல் மேற்குலகில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் வேறெவருமில்லை.(Mohammed at Mecca , Oxford 1932, P.52) அவர் தமது மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்தது வியப்புக்குரியதல்ல மாறாக அது என்றும் நீடித்து நிலைத்திருக்கும் பாங்குதான் வியப்புக்குரிய ஒன்றாகும். மக்கா நகரிலும் மதீனா நகரிலும் அவர் வடிதளித்த இஸ்லாத்தின் அதே அசல்வடிவம் தூய்மை கெடாமல் மாற்றப்படாமல் திரிக்கப்படாமல் பன்னிரண்டு நூற்றாண்டுகளில் நடந்தேறிய புரட்சிகள் பலவற்றிற்குப் பின்னரும் இன்று வரை இந்திய ஆப்ரிக்க துருக்கியப் பகுதிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றது. சமயத்தைக் குறித்து கற்பனை மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான கருத்தோட்டங்களிலிருந்து முஹம்மதியர்கள் ஒதுங்கியே நின்றனர். அவற்றை அடியோடு கிள்ளி எறிந்தும் விட்டார்கள்.நான் ஒரே இறைவன் மீது நம்பிக்கை கொள்கிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதராவார் என்பது தான் இஸ்லாத்தின் முன்மாதிரியான மாறுபாடற்ற ஒரேவிதமான பறைசாற்றலாகும். ஒருபுறம் கடவுள் பற்றிய அறிவார்ந்த கருத்தோட்டத்தின் மதிப்பு கண்ணுக்குப் புலப்படும் உயிரினங்கள் சிலைகள் மற்றும் பொருள்களின் அளவுக்குக் குறைக்கப்பட்டதில்லை. இறைத்தூதருக்கு அளிக்கப்பட்ட உயர்மதிப்புகள் மனிதர் என்கிற அந்தஸ்தை தாண்டி (கடவுள் என்கிற அளவுக்கு) உயர்த்தியதில்லை. அவர் அளித்து விட்டுச் சென்ற சிரஞ்சீவியான கட்டளைகள் அவரைப் பின்பற்றுவோர் அவருக்குக் காட்டும் நன்றியுணர்வை பகுத்தறிவு மற்றும் சமயத்தின் எல்லைக்குள் கட்டுப்படுத்தி (மிகைத்து விடாமல் தடுத்து) வைத்திருக்கின்றன.(Edaward Gibbon Simon Ocklay, History of the Saracen Empire. London, 1870, p.54) திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை. - நெப்போலியன் - இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது. - ஜி.ஜி. கெல்லட் - சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்கமுடியாது. - வில்லியம்மூர் - அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முஹம்மது நபி ஒருவரே. - கிப்பன் - எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது. அந்த மனிதர், ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூறினார். எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு ‘குடிஅரசு’ எப்படி இருக்கவேண்டும் என்பதையும் அவரே விளக்கினார். - கவியரசி சரோஜினி நாயுடு -

Sunday, September 16, 2012

தினமணி - ஆஸ்திரேலியாவில் 50,000 ஆண்டுகளுக்கு முன் தமிழ்மொழி!


தமிழ்மொழி மிகவும் தொன்மையான மொழி என்கிறோம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழி என்கிறோம். ஆனால், தமிழ் எப்போது ஒரு மொழியாக உருவாகியிருக்கும் என்பதற்கு போதிய சான்றுகள் நம்மிடம் இல்லை. ஆஸ்திரேலியாவில் வாழும் பூர்வக்குடிகளின் மொழிகளை ஆய்வு செய்வதன் மூலம் இதற்கு விடை காண இயலும் என்று நம்புகிறேன். ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகள் 200 மொழிகளுக்கு மேல் பேசி வந்திருக்கின்றனர். இவற்றுள் தற்போது இருபதிற்கும் குறைவான வட்டார மொழிகள்தான் பயன்பாட்டில் உள்ளன. இவற்றிற்குத் தனி வரிவடிவம் கிடையாது. ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 50,000. இவர்களில் 30,000 பேர் மட்டுமே தங்கள் தாய்மொழியை ஓரளவு பேசுகின்றனர். இவர்கள் பேசும் மொழிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 150. இம்மொழிகளில் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. வெவ்வேறு 15 குடும்பங்களின் வழித் தோன்றல்கள் இம்மொழிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். எந்த ஒரு மொழியையும் 5000 பேருக்கு மேல் பயன்படுத்துவோர் இல்லை. பத்து மொழிகளைப் பேசுவோர் மொத்த எண்ணிக்கை 1,000. "ஆராண்டா" என்னும் மொழியை ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் (Alice Springs) என்னும் மத்திய ஆஸ்திரேலியப் பகுதியில் இருக்கும் நகரைச் சுற்றியுள்ளவர்கள் பேசுகின்றனர். மேற்கு ஆஸ்திரேலியாவில் பேசப்படும் முக்கியமான மொழி "பிதாஞ்ச ஜாத்தா" இன்னொரு மொழி "வால் ம ஜாரி". முன்பு ஒரு காலத்தில் ஆஸ்திரேலியா, நியூகினி, இந்தோனேசியா ஆகியவற்றின் நிலப்பகுதி இந்தியாவோடு நெருங்கி இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் ஆப்பிரிக்கர்கள் இந்தியா வழியாக ஆஸ்திரேலியாவை அடைந்திருக்கின்றனர். இடையிடையே நீர்ப்பகுதிகள் இருந்தாலும் அவற்றின் தூரம் குறுகிய அளவிலேயே இருந்தது என்று நிலநூல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முதன் முதலில் ஆஸ்திரேலியாவிற்குச் சென்றவர்கள் மீனவர்களாகவும் கடற்கரைப் பகுதிகளில் உணவைத் தேடிச் சென்றவர்களாகவும் இருந்திருக்கின்றனர். அவர்கள் ஓர் இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு மிக விரைவாகச் சென்றிருக்க முடியாது என்கிறார் மரபணு விஞ்ஞானி ஸ்பன்சர் வெல்ஸ். கிரஹம் வால்ஷ் என்பவர் வட ஆஸ்திரேலியாவிலுள்ள கிம்பர்லி என்னும் இடத்தில், பாறையில் தீட்டப்பட்ட பழைய சித்திரம் ஒன்றினை சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்தார். 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் அதில் 29 பேர் படகு ஒன்றில் இருப்பதாக வரையப்பட்டுள்ளது. ஸ்பென்சர் வெல்ஸ்:- தென் இந்தியாவில் வசிக்கும் பிறமலைக் கள்ளர் என்னும் பூர்வக்குடிகளின் இரத்தத்தில் உள்ள மரபணுவும், ஆஸ்திரேலியக் குடிகளின் மரபணுவும் (M130) ஒன்றுபோல் இருக்கின்றன என்று கூறினார். ஸ்பென்சர் கூற்றுப்படி ஆப்பிரிக்காவிலிருந்து 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் தென் இந்தியா வழியாக ஒரு பகுதி மக்கள் தென் கிழக்கு ஆசியா, நியூகினி ஆகியவற்றின் வழியாக ஆஸ்திரேலியா சென்றடைந்தனர் என்று தெரிகிறது. கடைசி உறைபனி (Last Ice Age) காலத்தில் இந்தக் குடியேற்றம் நடந்தது. அதன்பிறகு கடல் நீர்மட்டம் உயர்ந்தபோது இந்தியத் துணைக்கண்டம் தென் கிழக்காசியாவில் இருந்து துண்டித்துப் போகும் நிலை ஏற்பட்டது. குமரிக் கண்டம்: தமிழகத்தின் தென் பகுதியில் ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்தது என்றும், அது கடலில் மூழ்கிப்போனது என்றும் பழந்தமிழ் நூல்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன. "பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி''. என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறியுள்ளார். "பஃறுளியாறு" - கங்கை போன்று பெரிய ஆறு என்றும், குமரி மலை இமயமலைக்கடுத்த பெரு மலை என்றும் ஊகிக்கலாம். இடைச்சங்க காலத்தில், பாண்டிய நாட்டுப் பகுதி மூழ்கியதன்றி, வேறு ஒரு மாறுதலும் நேர்ந்ததில்லை. பஃறுளி மூழ்கிய பின் தமிழகத்தில் பெரிய ஆறாக இருந்தது குமரியாறே. "தெனா அதுருகெழு குமரி'' (புறம் - 67) கடைச்சங்க காலத்திற்குப் பின் குமரியாறும் மூழ்கிற்று. பஃறுளியும் குமரியும் மூழ்கிய பின்னரே, "தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணாவ துஞ்சோழ மண்டலமே''. என்று கம்பர் பாடுமாறு காவிரி தமிழகத்தில் சிறந்த, சோழ நாடு, புனல் நாடு எனப்பட்டது. (பழந்தமிழராட்சி ஞா.தேவநேயப் பாவாணர்). தமிழ் இலக்கியக் குறிப்புக்களைக் கொண்டு பார்க்கும்போது குமரிக் கண்டம் நீரில் மூழ்கிப் போவதற்கு முன்பு, ஆஸ்திரேலிய பூர்வக்குடிகள் இக்கண்டம் வழியாகச் சென்றுள்ளனர் என்று தெரிகிறது. இதனை ஸ்பென்சர் வெல்ஸின் மரபணு ஆய்வு மெய்ப்பிக்கிறது. பேசியது என்ன மொழி? தமிழகம் வழியாக ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகள் சென்றனர் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், 50,000 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் என்ன மாதிரியான மொழி பேசியிருக்கக் கூடும் என்று அறிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. தமிழகம் மூலமாகச் சென்றதால் அவர்கள் பேசும் மொழிகளில் ஏதேனும் தமிழ்ச் சார்ந்த சொற்கள் இருக்க வேண்டும் என்று என் உள்ளுணர்வு கூறியது. அண்மையில் நான் ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, குயீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள டவுன்ஸ்வில் நகரில் இருக்கும் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக நூலகத்திற்குச் சென்று ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகளைப் பற்றிய சிறிய ஆய்வினை மேற்கொண்டேன். என்னுடைய யூகம் சரியாக இருந்தது. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பேச்சு வழக்கில் இருக்கும் அவர்களின் மொழிகளில் சில சொற்கள், இன்று நாம் பயன்படுத்தும் தமிழ் மொழிச் சொற்களாகவே இருக்கின்றன. * முட்டி - muti : கை, கால் முட்டிகளை முட்டி என்றே ஆஸ்திரேலியப் பூர்வக் குடிகள் கூறுகின்றனர். * பிறை - pira : இளம் திங்களைப் பிறை என்கிறோம். அவர்கள் சந்திரனை இப்படிக் கூறுகின்றனர். * வல்லூறு - waluwuru: கழுகுக்கு வல்லூறு என்றும் பெயர் உண்டு. ஒருவகைக் கழுகை அவர்கள் இப்படி அழைக்கின்றனர். * காகம் - kaanka: காகத்தை "கான்கா" என்கின்றனர். * புற்று - putu: புற்று என்பதை நாம் புத்து என்று பேச்சு தமிழில் வழங்குகின்றோம். அவர்களும் (எறும்பு) புற்றை = புத்து என்றே கூறுகின்றனர். * கிளி - killy : கிளியை அவர்கள் "கீளீ" என்கின்றனர். * குட்டன் - kuta: தமிழில் குட்டம் என்றால் மகள். அவர்கள் அண்ணனை குட்டா என்றழைக்கின்றனர். * வால் - walu, waly: வால்,வாலிது ஆகிய சொற்களுக்குத் தமிழில் வெண்மை, தூய்மை ஆகிய பொருள்கள் உண்டு. கடவுளை "வாலறிவன்" (வால் அறிவன்) என்கிறார் வள்ளுவர். வாலறிவன் என்றால் "தூய அறிவுடையவன்" என்று பொருள். ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகள் வெள்ளை நிறத்தை wala, waly என்றழைக்கின்றனர். அவர்கள் வெள்ளைக்காரரை walypara என்றும் வெள்ளைக்காரியை walypala என்றும் அழைக்கின்றனர். * இலகரி - Ilakari: நீண்ட அகன்ற பொந்திரைக்குத் தமிழில் இலகரி என்று பெயர். அவர்கள் நீண்ட வான்வெளியை இவ்வாறு அழைக்கின்றனர். * மங்குல் - munga: பகல் பொழுது சிறிது சிறிதாக மங்கிக்கொண்டு வந்து, இறுதியில் இருட்டாகிறது. இத்தகைய இருட்டுதான் இரவு. ஆஸ்திரேலியப் பழங்குடியினர் இரவுப் பொழுதை இவ்வாறு கூறுகின்றனர். "மங்குல்" என்னும் சொல்லுக்குத் தமிழில் இருள் என்னும் பொருள் உண்டு. இன்னும் சில சொற்கள் சிதைந்த நிலையில் வழங்கிவருகின்றன. எ.கா:- இல்லம் - yiwalu; பறத்தல் - parkani மேற்குறிப்பிடும் சொற்கள் pitgantjatjara என்னும் வட்டார மொழியில் காணப்படுகின்றன. இந்த மொழி வட ஆஸ்திரேலியாவிலும் தென் ஆஸ்திரேலியாவிலும் பேசப்படுகிறது. 50,000 ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகள் தமிழ்ச் சொற்கள் சிலவற்றை இன்னும் பயன்படுத்துகின்றனர் என்பதை அறியும்போது வியப்பாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இவர்கள் அக்காலத்தில் வழக்கில் இருந்த தமிழ் மொழியைத் தங்களோடு கொண்டு சென்றுள்ளனர். பயன்படுத்தியவை தனித்தமிழ்ச் சொற்கள். வடமொழிக் கலப்பு இல்லாதவை. இறுதியாக:- ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகள் பேசும் மொழியில் பயன்பாடு காணும் தமிழ்ச் சொற்கள் மூலம், தமிழ்மொழி ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான மொழி என்பது உறுதியாகத் தெரிகிறது. க.கந்தசாமி "மலேசிய அறிமுக மலர்" மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம். நன்றி:- தினமணி

நாடுகளும் அதன் தலைநகரங்களும்


நாடுகளும் அதன் தலைநகரங்களும் 1.அங்கோலா — லுவாண்டா. (Luvanda) 2.அசர்பைஜான் — பாகூ. 3.அமெரிக்கா — வாஷிங்டன் டி.சி 4.பியூர்டோரிகோ — சான்ஜிவான் 5.குவாம் — அகானா 6.வடக்கு மரியானாத் தீவுகள் — சாய்பான். 7.சமோவா — பாகோ 8.வெர்ஜின் தீவுகள் — சார்லோட்டா 9.அயர்லாந்து — டப்ளின். (Dublin) 10.அர்மீனியா — ஏரவன். (Yereven) 11.அர்ஜென்டீனா — போனஸ் அயர்ஸ். (Buenos aires) 12.அல்பேனியா — டிரானா. (Tirana) 13.அல்ஜீரியா — அல்ஜீயர்ஸ். (Algiers) 14.அன்டோரா — அண்டோரா லா வெல்லா. (Andorra La velle) 15.ஆப்கானிஸ்தான் — காபூல். (Kabul) 16.ஆண்டிகுவா மற்றும் பார்புடா — செயின்ட் ஜோன்ஸ். (saint Johns) 17.ஆஸ்திரியா — வியன்னா. (Vienne) 18.ஆஸ்திரேலியா — கான்பெர்ரா. (Canberra) 19.இத்தாலி — ரோம். (Rome) 20.இந்தியா — புதுடில்லி. (New Delhi) 21.இந்தோனேசியா — ஜகார்த்தா. (Jakartha) 22.இராக் — பக்தாத். (Baghdad) 23இரான் — டெஹ்ரான். (Teheran) 24.இலங்கை — கொழும்பு. (Colombo) 25.தமிழீழம் — திருகோணமலை. (Tringo) 26.இஸ்ரேல் — ஜெருசலேம். (Jerusalem) 27.ஈக்வாடார் — க்யுடோ. (Quito) 28.ஈக்வடோரியல் கினியா — மலபோ. (Malabo) 29.உக்ரைன் — கீவ். (Kive) 30.உகண்டா — கம்பாலா. (Kampala) 31.உருகுவே — மோண்டேவிடியோ. (Montevodeo) 32.உஸ்பெகிஸ்தான் — தாஷ்கண்ட். (Tashkent) 33.எகிப்து — கெய்ரோ. (Cairo) 34.எத்தியோப்பியா — அடிஸ் அபாபா. (Addis Ababa) 35.எரித்ரியா — அஸ்மாரா. (Asmara) 36.எல்சால்வடார் — சன்சால்வடார். (San Salvador) 37.எஸ்தோனியா — டால்லின். (Tallin) 38.ஐக்கிய அரபுக் குடியரசுகள் — அபுதாபி. (Abudhabi) 39.ஐவரி கோஸ்ட் — யமெளஸ்செளக்ரோ. (Yamoussoukro) 40.ஐஸ்லாந்து — ரெய்க்ஜாவிக். (Reykjqvik) 41.ஓமன் — மஸ்கற். (muscut) 42.கத்தார் — தோஹா. (Doha) 43.கம்போடியா — போனெம்பென்க். (Phnom Penh) 44.கயானா — ஜார்ஜ் ரவுன். (geroge Town) 45.கனடா — ஒட்டாவா. (Ottawa) 46.கஸகஸ்தான் — அல்மாதி. (Almathy) 47.காங்கோ — பிரசஸ்சஸாவில்லே. (Brazzaville) 48.காங்கோ (முன்னாள் ஜயர்) — கின்ஷாஸா. (Kinshasa) 49.காபோன் — லிப்ரவில்லே. (Libreville) 50.காமரூன் –யாவூண்டே. (Yaounde) 51.கமரோஸ் — மொரோனி. (Moroni) 52.காம்பியா — பன்ஜீல் . (Banjul) 53.கானா — அக்ரா. (Accra) 54.கியூபா — ஹவானா. (Havana) 55.கிர்கிஸ்தான் — பிஸ்ஹேக். (Biskek) 56.கிரிபாடி — தராவா. (Tarawa) 57.கிரீஸ் — ஏதென்ஸ். (Athens) 58.கிரெனடா — செயின்ட் ஜார்ஜஸ். (Saint Geroges) 59.கினியா — கோனக்ரி. (Conakry) 60.கினியா_பிஸ்ஸெல் — பிஸ்ஸெல். (Bissau) 61.குரோசியா — சியாக்ரெப். (Zagreb) 62.குவைத் — குவைத். (Kuwait) 63.கென்யா — நைரோபி. (Nairobi) 64.கேப்வெர்ட் — பிரய்யா. (Praia) 65.வடகொரியா — பியோங்யாங். (Pyongyang) 66.தென்கொரியா — சியோல். (Seoul) 67.கொலம்பியா — பொகோடா. ( Bogota) 68.கோஸ்டாரிகா — சான் ஜோஸ். (San Jose) 69.கெளதமாலா — கெளதமாலா நகர். (Gautemala City) 70.மேற்கு சமோவா — அபியா. (Apia) 71.சஹ்ராவி அரபுக் குடியரசு — எல் _ அலயுன். (El_ Alayun) 72.சாத்ட் — இன்ட்ஜாமெனா. (N`Djamena) 73.சாம்பியா — லுசாகா.( lusaka) 74.சாலமன் தீவுகள் — ஹோனியரா. (Honiara) 75.சாடோம் மற்றும் பிரின்சிப் — சாடோம். (Sao Tome) 76.சன்மரினோ — சன்மரினோ. (San Marino) 77.சிங்கப்பூர் — சிங்கப்பூர். (Singapore) 78.ஜிம்பாவ்வே — ஹராரே. (Harera) 79.சிரியா — டமாஸ்கல். (Damascus) 80.சியர்ரா லியோன் — ப்ரீரவுன். (Free Town). 81.சிலி — சாண்டியாகோ. (Santiago) 82.சீனா — பெய்ஜிங். (Beijing) 83.சுவாசிலாந்து — பாபேன். (Mbabne) 84.சுவிட்சர்லாந்து — பெர்ன். (bern) 85.சுவீடன் — ஸ்டாக்ஹோம். (Stockhalm) 86.சுரினாம் — பரமரிபோ. (Paramaribo) 87.சூடான் — கார்டூம். (Khartoum) 88.செக் குடியரசு — பராகுவே. (Prague) 89.செனகல் — .தாகர். (dakar) 90.செயின்ட்கிட்ஸ் — நெவிஸ்_ பெஸ்ஸடர். (Besseterre) 91. செயின்ட் லூசியா — காஸ்ட்ரீஸ். (Castries) 92.செயின்ட்வின்சென்ட் — கிங்ஸ்டவுன். (Kings Town) 93.சேஷெல்ஸ் — விக்டோரியா. (Victoriya) 94.சைப்ரஸ் — நிகோசியா. (Nicosia) 95.சோமாலியா — மொகடிஷூ. (Mogadishu) 96.செளதி அரேபியா — ரியாத். (Riyadh) 97.டிரினிடாப் மற்றும் டொபாகோ — போர்ட் ஆஃப் ஸ்பெயின். (Pot os Spain) 98.டென்மார்க் — கோபன்ஹேகன். (Copenhagen) 99.டொமினிகன் குடியரசு — சான்டோ டொமின்கோ. (Santo Domingo) 100.டொமினிகா — ரோஸியு. (Roseu) 101.டோகோ — லோம் (Lome) 102.டோங்கா — நுகு அலோஃபா (Nuku Alofa) 103.தாய்லாந்து — பாங்காக் (Bangkok) 104.தான்சானியா — டூடுமா (Dodoma) 105.தஜிகிஸ்தான் — துஷான்பே (Dushanbe) 106.துர்க்மேனிஸ்தான் — அஷ்காபாத் (Ashkhabad) 107.துருக்கி — அங்காரா (Ankara) 108.துனிசியா — துனிஸ் (Tunis) 109.துவலு — புனாஃபுதி (Funa Futi) 110.தாய்வான் — தைபே (Taipei) 111.தென் ஆப்பிரிக்கா — கேப்ரவுன் (cape Town) 112.நமீபியா — வின்ட்ஹோக் (Windhoke) 113.நோர்வே — ஒஸ்லோ (Oslo) 114.நிகரகுவா — மனாகுவா (managua) 115.நியூசிலாந்து — வெல்லிங்டன் (Wellington) 116.நெதர்லாந்து — ஆம்ஸ்டர்டாம் (Amsterdam) 117.நேபாளம் — காட்மாண்டு (Kathmandu) 118.நைஜர் — நியாமி (Niyamey) 119.நைஜீரியா — அபுஜா (Abuja) 120.நெளரு — யாரென் (Yaren) 121.பங்களாதேஷ் — டாக்கா (Dhaka) 123.பராகுவே — அகன்சியான் (Aguncian) 124.பல்கேரியா — சோஃபியா (Sofia) 125.பலாவ் — கோரோர் (koror) 126.பனாமா — பனாமா நகர் (Panama City) 127.பஹ்ரைன் — மனாமா (Manama) 128.பஹாமாஸ் — நஸ்ஸாவ் (Nassau) 129.பாகிஸ்தான் — இஸ்லாமாபாத் (Islamabad) 130.பாப்புவா நியூகினியா — போர்ட் மோர்ஸ்பி (Port Moreshby) 131.பார்படோஸ் — பிரிட்ஜ் ரவுன் (Bridge Town) 132.பாலஸ்தீனம் — காஸா (Gaza) 133.ஃபிரான்ஸ் — பாரிஸ் (Paris) 134.பிரிட்டன் — லண்டன் (London) 135.வடக்கு அயர்லாந்து — பெல்ஃபாஸ்ட் (Belfast) 136.ஸ்காட்லாந்து — எடின்பர்க் (Edinburg) 137.ஐஸ் ஆஃப் மேன் — டக்ளஸ் 138.அங்குய்லா — திவாலி 139.பெர்முடா — ஹாமில்டன் 140.மான்ட்செரட் — பிளைமவுத் 141.பிரேசில் — பிரேசிலியா (Brasillia) 142.ஃபிலிப்பைன்ஸ் — மணிலா (manila) 143.ஃபின்லாந்து — ஹெல்சிங்கி (helsinki) 144.ஃபிஜி — சுவா (Suwa) 145.புருண்டி — புஜீம்பரா (Bujumbura) 146.புருனை — பந்தர் செரி பெகாவன் (Bandar seri Begavan) 147.பிர்கினாஃபாஸோ –அவ்கதெளகெள (Ouagadougou) 148.பூட்டான் — திம்பு (Thimpu) 149.பெரு — லிமா (Lima) 150.பெல்ஜியம் — பிரல்ஸல்ஸ் (Brussels] 151.பெலராஸ் — மின்ஸ்க் (Minsk) 152.பெலிஸ் — பெல்மோபான் (Belmopan) 153.பெனின் — போர்டோ (Porto _ Nova) 154.பொலிவியா — லாபாஸ் (Lapaz) 155.போட்ஸ்வானா — காபோரோன் (Gaborne) 156.போர்த்துக்கல் — லிஸ்பன் (Lisbon) 157.போலந்து — வார்ஸா (Warsaw) 158.போஸ்னியா மற்றும் ஹெர்சேகோவினா — சரோஜிவோ (Sarajevo) 159.மங்கோலியா — உலன்பதார் (Ulan Bator) 160.மடகாஸ்கர் — அன்டானானாரிவோ (Antananarivo) 161.மத்திய ஆப்பிரிக்க குடியரசு — பான்குய் (Bangui) 161.மலாவி — லிலாங்வே (Lilongwe) 162.மலேசியா — கோலாலம்பூர் (Kula Lumpore) 163.மார்ஷல் தீவுகள் — மஜீரோ (Majuro) 164.மாரிடானியா — நவாக்சோட் (Nouak Chott) 165.மால்டா — வலேட்டா (Valetta) 166.மால்டோவா — சிசிநவ் (Chisinau) 167.மாலத்தீவுகள் — மஜீரோ (male) 167.மாலி — பமாகோ (Bamako) 168.மாசிடோனியா — ஸ்கோப்ஜே (Skopeje) 169.மியான்மர் — யங்கோன் (Yangon) 170.மெக்சிகோ — மெக்சிகோ நகர் (Mecixo City) 171.மைக்ரோனேஷியா — பாலிகிர் (Palikir) 172.மொரிசியஸ் — போர்ட் லூயிஸ் (Port Louis) 173.மொனாக்கோ — மொனாக்கோ (Monaco) 174.மொசாம்பிக் — மொபுடோ (Maputo) 175.யூகோஸ்லாவியா — பெல்கிரேட் (Belgrade) 176.யேமன் — சனா (Sana) 177.ருமேனியா — புகாரெஸ்ட் (Bucharest) 178.ருவாண்டா — கிகாலி (Kigali) 179.ரஷ்யா — மொஸ்கோ (Moscow) 180.லக்ஸம்பார்க் — லக்ஸம்பார்க் (Luxenberg) 181.லாட்வியா — ரிகா (Riga) 182.லாவோஸ் — வியாணன்டைன் (Vientiane) 183.லிச்டென்ஸ்டெயின் — வடூஸ் (Vaduz) 184.லிதுவேனியா — வில்னியஸ் (Vilnius) 185.லிபியா — திரிபோலி (Tripoli) 186.லெசோதா — மஸெரு (Maseru) 187.லெபனான் — பெய்ரூட் (Beirut) 188.லைபீரியா — மன்ரோவியா (Monorovia) 189.வனுவது — விலா (Vila) 190.வத்திக்கன் — வத்திக்கன் நகர் (Vatican City) 191.வியட்னாம் — ஹனோய் (Hanoi) 192.வெனிசுலா — கராகஸ் (Caracas) 193.ஜப்பான் — டோக்கியோ (Tokyo) 194.ஜமைக்கா — கிங்ஸ்டன் (Kington) 195.ஜார்ஜியா — திபிலிசி (Tbillisi) 196.ஜிபூடி — ஜிபூடி (Djibouti) 197.ஜெர்மனி — பேர்ளின் (Berlin) 198.ஜோர்டான் — அம்மான் (Amman) 199.ஸ்பெயின் — மாட்ரிட் (Madrid) 200.ஸ்லோவாகியா — பிராட்டிஸ்லாவா (Bratislava) 201.ஸ்லோவேனியா — ஜூபில்ஜானா (Ljubljana) 202.ஹங்கேரி — புட்டாபெஸ்ட் (BudaBest) 203.ஹாங்காங் — விக்ரோரியா (Voctoriya) 204.ஹோண்டுராஸ் — டெகுசிகல்பா (Tegueigalpa) 205.ஹைதி — போர்ட் _ அவு _ பிரின்ஸ் (Port _ Au _ Prince)

சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கறிக்கோழிதான் காரணமா?


பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கறிக்கோழிதான் காரணமா? குமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த சுசிலாவுக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்த பெண்கள் இருவரும் பதினாறு வயதில்தான் பருவமடைந்தார்கள். மூன்றாவது பெண் பத்து வயதில் உட்கார்ந்துவிட்டாள். சின்னமகள் வயதுக்கு வந்ததை வெளியில் சொல்ல வெட்கப்பட்ட தாய், மகளை டாக்டரிடம் அழைத்துச் சென்றார். ""எங்க பரம்பரையில யாருமே 15 வயதுக்கு முன்னால பூப்படையமாட்டாங்க. இவள் 10 வயசுல வந்துட்டாள். ஏதாவது நோய் இருக்குமோன்னு பயமா இருக்கு டாக்டர்.'' சிறுமியை பரிசோதித்த டாக்டர், ""புள்ளைக்கு உடம்புல புரோட்டின் சத்து அதிகமாட்டு இருக்கு. பிராய்லர் கோழி இறைச்சியில அதிக புரோட்டின் இருக்கு. அதை அதிகம் சாப்பிட்டால் குழந்தைகள் சீக்கிரம் வயதுக்கு வர நிறைய வாய்ப்பிருக்கு'' என்றார் டாக்டர்.. ""ஆமாம் டாக்டர், பெரிய பொண்ணுங்களைவிட இவள் பிராய்லரை விரும்பிச் சாப்பிடுவாள். கோழி இறைச்சி இல்லைன்னா இவளுக்கு சாப்பாடு இறங்காது'' என்றார் சுசிலா. இதே ஊரைச்சேர்ந்த கோகிலவாணியின் மகளும் 10 வயதில் வயதுக்கு வந்துவிட்டாள். (Your family too some daughters early happened like this) பாஸ்ட்ஃபுட் அதிகம் விரும்பிச் சாப்பிடுவதால் இந்த வளர்ச்சி மாற்றம் ஏற்பட்டிருக்குமோ? சந்தேகப்பட்ட கோகிலவாணி மகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். ""பாஸ்ட்ஃபுட் சாப்பிட்டால் உடல் பருமனாகும். பருவத்திற்கு வரமாட்டாள். பிராய்லர் கோழி விரும்பிப் சாப்பிடுவாளா உங்கள் பெண்?'' -திருப்பிக் கேட்டார் பெண் மருத்துவர். ""கோழிதான் காரணமா டாக்டர்?'' ""கோழிக்கு போடுகிற ஊசி மருந்து காரணமாக இருக்கும்'' என்றார் டாக்டர். தற்போது பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடு வதை இந்தப் பகுதி மக்கள் வெகுவாகக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதே பிராய்லர்கள்தான் காயத்ரி தேவி என்ற ஆரம்பப் பள்ளி மாணவியையும் தாய்மைக்கு தயாராக்கி யுள்ளது. ""10 வருடத்திற்கு முன்பு நகர்ப் புறத்து மக்கள் பிராய்லர் இறைச்சி யை விரும்பிச் சாப்பிட்டனர். இப்போது பிராய்லர் இறைச்சிக்கடை இல்லாத கிராமம் இல்லை என்கிற அளவுக்கு விற்பனையாகிக்கொண்டிருக் கிறது. பிராய்லர் கோழிகள் சீக்கிரம் பெருக்கவேண்டும், எடை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார் கள். இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது. இது ஆண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது'' என்கிறாô சமூக ஆர்வலர் சேம்ஜி. இது .உண்மை தானா? பட்டுக்கோட்டை அரசு கால் நடை மருந்தக மருத்துவர் பெயர் வேண்டாம் என்ற கண்டிஷனோடு பதில் சொன்னார். ""தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளவை கோழிகளுக்கான நோய்த் தடுப்பு மருந்துகள்தான். கோழி வளர்ச் சிக்கான மருந்துகள் அல்ல. வெளி நாடுகளில் இறைச்சிக்காக வளர்க்கப் படும் பன்றி மற்றும் மாடுகளுக்கு குறுகிய நாளில் வளர்ச்சியடைய ஊசிகள் போடு வது வழக்கம். சில மாதங்களில் கொழுகொழுவென வளர்ந்துவிடும். இந்தியாவில் அத் தகைய மருந்துகள் பயன்படுத்தப் படவில்லை. ஏனெனில் அந்த மருந்துகளின் விலை அதிகம். ஆனால் பிராய்லர் இறைச்சியில் அதிகம் புரதச் சத்து இருப்பது உண்மை'' என்றார். கால்நடைகள் ஆய்வு மைய பேராசிரியர் ஒருவரிடம் நாம் இந்த "சிறுமிகள் பூப்படையும்' பிரச்சனை பற்றி கேட்டபோது... ""இந்த சந்தேகம் எங்களுக்கும் இருக்கிறது. தென் மாவட்டங்களில் பிராய்லர் கோழியை அறிமுகப் படுத்தியதே நான்தான். அப்ப ஒரு பிராய்லர் கோழியின் அதிகபட்ச எடை ஒண்ணேகால் கிலோதான் இருக்கும். சிறிது காலத்தில் பெரு முதலாளிகள் இந்தத் தொழிலில் இறங்கிவிட்டனர். அவர்கள்தான் குஞ்சு, தீவனம், ஊசி என்று நேரடியாக கொடுத்து கோழி வளர்க்கச் சொல்லி கொள்முதல் செய்து மார்க்கெட்டுக்கு அனுப்புகிறார் கள். முதலில் இந்திய முறைப்படிதான் பிராய்லர் ஜீன் தயாரிக்கப்பட்டது. பெருமுதலாளிகள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து தாய்க் கோழி வாங்கி வந்து உற்பத்தி செய்கிறார்கள். மருந்து களும் வெளிநாட்டு ஃபார்முலாதான். விவசாயத்திற்கு அமெரிக்க விதைகள் நுழைந்ததைப் போல கோழி மற்றும் பசுமாடுகளும் நுழைந்துவிட்டது. வெளிநாட்டு ஃபார்முலாப்படி 45 நாளில் 2 கிலோ எடைக்கு வந்துவிடுகிறது பிராய்லர் கோழி. நிச்சயம் இதனால் பாதிப்புதான். இதனை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டால் ஒரேநாளில் பிராய்லர் கோழி விற்பனை படுத்துவிடும். அதனால் தான் நாட்டுக்கோழி வளர்க்குமாறு நாங்கள் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறோம். 10 வயதில் ஒரு சிறுமி பெரிய மனுஷியா வதற்கு பிராய் லர் இறைச்சியும் முக்கியமான காரணமாக இருக்கலாம்'' என்கிறார் பெயர்கூற விரும்பாத ஆய்வு மைய பேராசிரியர். தமிழக சுகாதாரத்துறை அவசர அக்கறை காட்ட வேண்டிய ஒரு முக்கிய பிரச்சனை இது. நன்றி -மணிகண்டன், பகத்சிங் Alternate Solution is Eat "நாட்டுக்கோழி "Country Cock & Hen"

தினமணி - அயல்மாநிலத் தமிழர்களும், தாய்மொழிக் கல்வியும்


அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ள இந்த உலகத்தில் கல்விதான் மக்களின் நலத்தையும் வளத்தையும் தீர்மானிக்கிறது. பன்மொழிச் சூழல் நிறைந்த இந்தியாவில் தாய்மொழிக் கல்வி என்பது பல சிக்கல்களையும், சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, மாநிலம் விட்டு மாநிலம் சென்று வாழ்கின்ற மக்களிடம் தாய்மொழிக் கல்வி இன்னும் முழுமையாகச் சென்று சேராத நிலையே தொடர்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழி கல்விமொழியாகவும், ஆட்சிமொழியாகவும் இருந்து வருகிறது. தகவல் தொடர்புச் சாதனங்களிலும் மாநில மொழிகளின் செல்வாக்குக் காணப்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும், அம்மாநில உள்ளாட்சி அமைப்பும் தாய்மொழி வழிக் கல்வியைப் பயிற்றுமொழியாக்க தொடக்கக் கல்வியில் தேவையான வசதி வாய்ப்புகளை உருவாக்க முயற்சித்தல் வேண்டும் என்றும், மொழிரீதியான சிறுபான்மையினர் உட்பட அனைவருக்கும் இவ்வசதிகளைச் செய்து தரவேண்டும் என்றும் அரசியலமைப்புச் சட்டம் அறிவுறுத்தியிருந்தாலும், இன்னும் இந்த இலக்கை எட்டமுடியாதவர்களாகவே நாம் இருந்து வருகிறோம். அயல் மாநிலங்களில் குடியேறி வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் தங்கள் தாய்மொழியைத் தக்கவைத்துக்கொள்ளவும், தங்களுக்கான தாய்மொழிக் கல்வியைப் பெற்றுக் கொள்ளவும் ஏராளமான நடைமுறைச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். வெளிமாநிலத்தில் வாழும் தமிழர்கள் வீட்டில் மட்டும் தமிழ் பேசுவதற்கான வாய்ப்பைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஒரு குழந்தை தானாகவே உள்ளூர் மொழியை தனது முதல் மூன்று ஆண்டுகளுக்குள் இயல்பாகக் கற்றுக்கொள்கிறது. பேச்சு வழக்கின் தரத்தை அக்குழந்தை கற்றிட மேலும் அதிக வலுவுள்ள கற்கும் சூழலை, அனுபவத்தைப் பெறுதல், உருவாக்கித் தருதல், பேசவும் கவனிக்கவும் ஒரே மொழியாக இருக்கும் சூழலில் கணிசமான குறிப்பிடத்தக்க அளவிற்கு அக்குழந்தை கற்றுவிடும். ஆனால், அயல் மாநிலங்களில் புறச்சூழலில் தாய்மொழி இல்லாத நிலையில் வாழும் குழந்தைகளுக்கு இயற்கையாகவே கிடைக்கக்கூடிய தாய்மொழி அறிவு கிடைப்பதில்லை. இடம்பெயர்ந்த தமிழர்கள் வேலைவாய்ப்புக்காகவும், கருத்துப் பரிமாற்றத்திற்காகவும் அந்தந்த மாநில மொழிகளைக் கட்டாயம் கற்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. மாநிலமொழியின் பயன்பாடு அதிகரிக்க, அதிகரிக்க தமிழின் பயன்பாடு குறையத் தொடங்கும். இது இறுதியில் மொழி இழப்புக்கு வழிவகுத்துவிடும். எனவே, அயல்மாநிலத் தமிழர்கள் மொழித்தக்கவைப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குடும்பச் சூழலில் எக்காரணத்தைக் கொண்டும் பிற மொழிப் பயன்பாடு இருத்தல் கூடாது. வீட்டுமொழியாக முழுமையாகத் தமிழைப் பயன்படுத்தும் பயிற்சியைப் பெற்றோர் பெறவேண்டும். அடுத்த தலைமுறைக்குத் தமிழைக் கொண்டு செல்ல மறக்கக்கூடாது. பள்ளிகளில் தமிழைப் படிக்க வாய்ப்பு இல்லாத நிலையில், பெற்றோர்களே ஆசிரியர்களாக மாறி, தமிழைச் சொல்லித்தர முன்வர வேண்டும். நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி தாய்மொழியைப் பயிற்றுவிக்க வேண்டும். தாய்மொழியின் தேவையைக் குழந்தைகளின் மனங்கொள்ளுமாறு பதிவுசெய்ய வேண்டும். இளைய தலைமுறையினரிடம் மொழிப்பற்று குறைந்து வரும் நிலை காணப்படுகிறது. எனவே, பெற்றோர்கள் விழிப்புடனிருந்து அடிப்படைத் தமிழை அடுத்தத் தலைமுறையினரிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும். பிற மாநிலங்களில் வசித்துக்கொண்டு தமிழ்ச்சூழலை நுகர தமிழ் இதழ்கள், தமிழ்த் தொலைக்காட்சிகள், தமிழ் இணையதளங்கள் போன்றவை துணைபுரியும். இவற்றில் குழந்தைகள் ஈடுபாடு கொள்ளச்செய்தல் பெற்றோர்களின் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து விலகிச்சென்று வெகுதூரத்தில் பிற மாநிலங்களில் வாழ்ந்தாலும் தமிழ் மண்ணோடு தொடர்ந்து உறவு வைத்துக்கொள்ள வேண்டும். உற்றார் உறவினரிடம் தொடர்பு நீடிக்கும்போது இயல்பாகத் தமிழ் மொழியின் மீதும் தொடர்பு அதிகரிக்கும். திருவிழாக் காலங்களில் குழந்தைகளோடு சொந்த ஊருக்கு வந்து சில நாள்கள் தங்கியிருந்து போகும் பழக்கத்தைப் பிற மாநிலத் தமிழர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்மூலம், தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு மற்றும் தமிழரின் மரபார்ந்த பழக்கவழக்கங்கள் போன்றவற்றைப் புதிய தலைமுறையினர் புரிந்துகொள்ள முடியும். தமிழர் திருநாளாகத் திகழ்கின்ற பொங்கல் விழா நாள்களில் இத்தகைய பிறந்த ஊர் நோக்கிய பயணத்தை அமைத்துக் கொண்டால் மிகுந்த பயன் கிடைக்கும். பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் அங்கு ஒன்றுகூடி தமிழ்நாட்டுப் பண்டிகைகளைக் கொண்டாடி மகிழவேண்டும். தாங்கள் வாழும் பகுதிகளில் சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முனைய வேண்டும். குழந்தைகளின் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி ஆகியவற்றோடு தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் நடத்தும் தொலைநிலைக் கல்வியில் தமிழில் கூடுதல் பட்டம் பெற பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். கேரள மாநிலத்தில் இடுக்கி, பாலக்காடு, திருவனந்தபுரம் போன்ற மாவட்டங்களில் தமிழர் மிகுதியாக வாழ்கின்றனர். இவர்களுக்குக் கேரள மாநிலக் கல்வி ஆராய்ச்சி நிலையம் தமிழ்ப் பாடங்களைத் தயாரித்து அளித்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்திலும், கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் பகுதிகளிலும் தமிழ்க் கல்விக்கான வசதிகள் கிடைக்கின்றன. பெங்களூரில் கல்லூரி அளவிலும் தமிழ்மொழி இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழகத்தையொட்டிய மாநிலங்களில் தமிழ்மொழிக் கல்விக்கான வாய்ப்பு ஓரளவு இருந்து வருகிறது. அந்தமானில் வாழும் தமிழர்களுக்காக தீவு மலர் எனப் பாட நூல்களைத் தயாரித்து அளித்து வரும் பணியை மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் செய்து வருகிறது. ஆனால், பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் மொழிக் கல்விக்கான வாய்ப்பின்றி இருந்து வரும் சூழலை மாற்ற வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழகம் கால் நூற்றாண்டுக்கு முன்பே இதில் ஆர்வம் கொண்டு பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் தொடர்பாக சோமலெ மூலம் கள ஆய்வு செய்து ஆய்வறிக்கை பெற்று அதை நூலாகவும் வெளிட்டது. இன்றையச் சூழலில் மீண்டும் கள ஆய்வு மூலம் புதிய தரவுகளைத் திரட்டி அயல் மாநிலத் தமிழர்களின் தாய்மொழிக் கல்வியின் தாகம் தணிக்கத் தமிழ்ப் பல்கலைக்கழகம் முயற்சி மேற்கொள்ள இருக்கிறது. முனைவர் திருமலை துணைவேந்தர், தஞ்சைப் பல்கலைக்கழகம் நன்றி:- தினமணி

Wednesday, September 12, 2012

லஞ்சம் வாங்காகாதீர்கள், கொடுங்கள் ஆர்- நடராஜன் !


லஞ்சம் வாங்காகாதீர்கள், கொடுங்கள் ஆர்- நடராஜன் ! http://rssairam.blogspot.com/2012/09/blog-post_6.html மக்கள் நினைத்தால் தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இய்க்க மாத இதழ், ஆசிரியர் இல். சு. ஜெகநாதன் 9444939698 இவர்களை அணுகி உறுப்பினராகலாம். கூட்டங்கள் அறிவுரைகள் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். 500 டூபாய் செலுத்தி அடையாள அட்டை வாங்கிக் வைத்துக் கொண்டால் லஞ்சம் கொடுக்காமல் காரியங்கள் நடக்கும். மேலும் ஒரு இணைய தளத்தில் லஞ்சம் கொடுத்த விபரத்தை முகவரியுடனோ, முகவரி இல்லாமலோ பதிவு செய்யலாம். அந்த இணையதளம் வடநாட்டில்தான் இயக்கப்படுகின்றது என்று கருதுகின்றேன்.எனது வலைப்பூவிலும் பதிவு செய்துள்ளேன் தேடினேன், உடனே கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் இத்துடன் இணைய முகவரி இணைக்கப்பட்டு விடும்.. தாங்கள் சொல்வதெல்லாம் சரிதான். துணிச்சலுக்கும், நேர்மைக்கும் ஆயிரம் வணக்கங்கள். நாம் என்ன செய்ய வேண்டும் ? அதையும் சொல்ல்லித் தாருங்கள் .நன்றி. LKM பப்ளிகேஷன்ஸ் கார்த்திகேயன் 33/4 ( 15/4 )இராமநாதன் தெரு, தி.நகர், சென்னை-17, 24361141, 24340599 வழங்கியுள்ள பதிப்புரை :- ஆர்.நடராஜன் நாட்டின் அரசியல் தலைவர்களுக்கும், முக்கிய அதிகாரிகளுக்கும் அறிமுகமாகியுள்ள, அவர்களுடன் பழகியுள்ள, எழுத்தாளர்; பத்திரிகையாளர். இரு குடியரசுத் தலைவர்கள் இவரது நூல்களைப் பாரட்டியுள்ளார்கள். குடியரசுத் துணைத் தலைவராக இருந்தபோது இவர் எழுதியிருந்த ஒரு நூலுக்கு அணிந்துரை தந்துவிட்டு, குடியரசுத் தலைவர் பதவியிலிருந்தும் விலகிவிட்டார். விலகியவுடன் இவரது இன்னொரு நூலையும் வெளியிட்டார். ஒரு பிரதமர் லண்டனில் இவரது நூலை வெளியிட்டார். இன்னொரு பிரதமர் இவருடன் மதிய விருந்தில் தேர்தல் போக்குகள் பற்றி விவாதிதார். பிரதமராக இருந்தபோது தன்னைப்ப் பற்றி இவர் எழுதிய நையாண்டிச் சிறுகதையின் மொழிபெயர்ப்பை, ஒரு முன்னாள் பிரதமர், இவரிடமிருந்தே கேட்டு வாங்கிப் படித்தி ரசித்தார். இவரை விருந்துக்கு அழைத்தார். ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ,இப்போதைய மத்திய அமைச்சருமான ஒருவர், இவரது இன்னொரு நூலை வெளியிட்டார். ஒரு முன்னாள் அமைச்சர் தன் டாக்டர் பட்ட ஆய்வேடு வெளியாக, இவர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்திருக்கின்றார். ஒரு தேசியத் தலைவர் சென்னையில் இவருடன் தனியாக அரசியல் பற்றி விவாதிக்க அரைமணிநேரம் ஒதுக்கினார். நான்கு தமிழக முதல்வர்கள், மூன்று கவர்னர்களுடன் இவர் பழகியிருக்கின்றார். சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இவரது கதைகளையும், கட்டுரைகளையும் பாராட்டியிருக்கிறார்கள். இவரோ, நட்பு, பழக்கம், தாட்சண்யம் பாராமல் மனதுக்குப் பட்டதை அப்பட்டமாக எழுதுகின்றார். இவரது விழிப்புணர்வு அரசியல் கட்டுரைத் தொகுப்பை வெளியிடுவதில் எங்கள் பதிப்பகம் பெருமைப் படுகின்றது. எழுத்தாளர் ஆர். நடராஜனின் முன்னுரையிலிருந்து :- நாட்டின் பலமும் பலவீனமும் மக்களே. நம் பலவீனங்களைப் புரிந்துகொள்வதற்காகவே அரசியல்வாதிகளின் ச்யநலப் போக்குகளை படம் பிடித்துக் காட்டி வருகின்றேன். மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டே மக்களைச் சுரண்டும் அரசியல்வாதிகளைப் புரிந்துகொள்ளாதது நம் பலவீனமே. எழுதுவதற்குள்ள துணிவு இப்போது பதிப்பிபதற்கும் வேண்டும். லஞ்சம் வாங்காதீர்கள் கொடுங்கள் என்ற எனது கட்டுரைத் தொகுப்பை, வெளியிட்டுள்ல நண்பர் சென்னை எல்.கே.எம். பதிப்பக உரிமையாளர் திரு. கார்த்திகேயன் அவர்களுக்கு என் நன்றி. வாசகர்களின் கருத்தை வரவேற்கிறேன், என்கிறார், எழுத்தாளர், ஆர். நடராஜன். அவரது, மின்னஞ்சல் முகவரி :- hindunatarajan@hotmail.com லஞ்சம் வாங்காதீர்கள் ! கொடுங்கள்! லோக் சத்தா என்ற மராத்தியப் பத்திரிகை லஞ்சம் கொடுத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு வாசகர்களிடம் கேட்டுக்கொண்டது. நாற்பது கடிதங்கள் வ்ந்தன. பத்திரிகையாளர் பிரபாகர் குல்கர்னி தொகுத்த கடிதங்களின் சாரம்சம் இவைதான்:- மின்வாரியம், மாநகராட்சி, வருவாய்த்துறை, வட்டாரப் போக்குவரத்துத்றை அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் மற்ரும் லிஃப்ட் சான்றிதழ்கள், மரணச் சான்றிதழ் அலுவலகங்கள், ”லஞ்சம் இல்லாமல் வேலை நடக்காது. நாங்கள் ல்ஞ்சம் கொடுத்திருக்கின்றோம்.” என்றே கூறியிருந்தனர். மும்பை லிஃப்ட் தயாரிக்கும் ரமேஷ் போஸ்லே சான்றிதழ் பெற லிஃப்ட் ரூ.3000 முதல் ரூ.10000 வரை லஞ்சம் தர வேண்டியிருந்ததாம்.லிஃப்ட் நிறுவனங்கள் லைசென்சுக்கு ரூ.50000 முதல் ஒரு லட்சம் தருவதால், அந்த அலுவலகத்தின் எட்டு இன்ச்ப்ர்க்டர்கள் மாதம் 40 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறுகிறார்கள். இஞ்ஜினியர்களும் ஆர்கிடெக்ட்களும் சம்பாதிப்பதவிட அதிகமான தொகையை மும்பை முனிசிபல் கார்ப்பொரேஷனைச் சேர்ந்தவர்கள் கட்டட ஒப்பந்தக் கோப்புகளில் பெற்ரு விடுகிறார்கள் என்கிறார் பெயர் சொல்லி வம்பில் மாட்டிக் கொள்ள விரும்பாத ஒரு ஆர்கிடெட் ஒருவர். .தாதர்ரில் உள்ல ஒரு மருத்துவ மனையின் டைரக்டர் ராஜ்ஸ்ரீ கேல்கர், வெளிநாட்டில் வசித்துவிட்டு இந்தியாவிற்கு வந்தவர். தாநாட்டில், தனக்கும் மகனுக்கும் பாஸ்போர்ட்டில் முகவரி மாற்ரத்திற்கு விண்ணப்பித்தபோது, ஒவ்வொரு பாஸ் போர்ட்டிற்கும் ரூ.300/- லஞ்சம் தர வேண்டியிருந்ததாம். புரோக்கட்கள் புழங்குமிடம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம். சுரேந்திரநாத் மற்ரும் உமேஷ் கடம் ஆகியோருக்கு லஞ்சம் கொடுர்ஹ்ர்ஹ பின்னர்தான் லசென்ஸ் கிடைத்ததாம். சந்தீப் தாமோதர் எல்ர்க்ட்ரிக் கான்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார்.சம்பந்தப்பட்ட அலுவலரை டீ சாப்பிட அழைத்தார். 500ரூ.லஞ்சம் கொடுக்கவும் தயாராய் இருந்தார். அவர் ஏதேதோ சொல்லி 7000/- ரூ. கறந்து விட்டார். இதனால் அவர் வெறும் எலெக்ட்ரீஷியனாக இருந்தால் போதும் என்ற முடிவிற்கு வந்து விட்டார். மரணச் சான்றிதழ் பெற்ரிட மாநகராட்சியில் 500/- ரூ.லஞ்சம் கொடுத்த அவலத்தை அருண், ராஜாராம் ஜோஷி ஆகிய வாசகர்கள் கூறினர். சொத்துச் சான்றிதழ் பெற வருவாய்த்துறை அலுவலகத்திற்கும், பிராவிடெண்ட் ஃபண்ட் அலுவலகத்திற்கும் லஞ்சம் கொடுத்தகதை இரு வாசகர்களுடையதாக இருந்தது. பத்திரிகைகள் லஞ்சப்புகார்களைக் கேட்க ஆரம்பித்தால், இது புதிய லோக்பால் சட்டம் என்று சொல்லி, லஞ்சம் கொடுத்தவர்களையே அரசு ஜெயிலில் தள்லிவிடும் அபாயமும் உண்டு. ஒரு சமயம் குல்சாரிலால் நந்தா , லஞ்சமில்லாத நிர்வாகத்திற்காக “சதார்த்த சமிதி” என்ற அமைப்பைத் துவக்கினார். உறுப்பினராகத் தகுதி, 1) லஞ்சம் பெறக் கூடாது 2) லஞ்சம் தரக் கூடாது என இரண்டுதான். தன் நண்பர் ஸ்ரீபிரகாசாவை ( காங்கிரச் காலத்தில் தமிழ் நாட்டில் கவர்னராக இருந்தவர் ) அந்த சமிதியில் உறுப்பினராகுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு ஸ்ரீவத்சா, ” லஞ்சம் வாங்கக் கூடாது; என்ற நிபந்தனை சரி. லஞ்சம் கொடுக்காதே, என்று சொல்லாதீர்கள். லஞ்சம் கொடுக்காமல் இருக்க முடியாது. எனக்கும் காரியம் ஆக வேண்டாமா ?” என்று பதிலளித்தார். ஆன்னானப்பட்ட கவர்னருக்கே இந்தக் கதி என்றால், அப்புறம் மக்கள் எந்த மாத்திரம்? லஞ்சம் போன்ற சமதர்ம, சமத்துவவாதி வேறு யாரும் இல்லை. கடவுள் வேறுபாடு பார்ப்பதில்லை. சமூக நீதியுடன் இயங்குவது லஞ்சம் மட்டுமே. லஞ்சத்தை ஒழிக்க ஒரே வழி வேறு வார்த்தையை அகராதியில் பதிய வேண்டியதுதான். இந்த நூலில் 54 தலைப்புக்களில் கட்டுரைகள் உள்ளன. அத்தனையும் முத்துக்கள். அவசியம் வாங்கி வீட்டு நூலகத்தில் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம். எழுத்தாளர் மின்னஞ்சல் முகவரி மேலே உள்ளது. நூலை விமர்சனம் செய்வோம். கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம். அதுதான் படைப்பாளிக்கு நாம் கொடுக்கும் பரிசு. கிடைக்குமிடமும் மேலே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பதிப்புரை ஒன்றே போதும், இந்தநூலினை வாங்கிடத் தூண்டும். லஞ்சம் கொடுப்போமா? த்விர்ப்போமா ? தீர்மானிக்க வேண்டியது நாம்தான் ! இன்னும் சில பொன்மொழிக் குறிப்புகள்:- 1. ஒருவரிடம் பதவி இருக்கிறது; மற்றவரிடம் அதிகாரம் இருக்கிறது. 2.பிரதமர் பதவியே அதிகாரத்தில் கூனிக் குறுகிப் போய்விட்டதே ! 3.பத்திரிகை உலகம் ஏன் சோனியா பற்றி “சதிகார மெள்னம்”காக்கிறது? 4. சட்டம் தன் வேலையைச் செய்கிறது. பணமும் தன் வேலையைச் செய்கிறது. 5.அரசியல் சுழற்சியில் தரகர்கள் இல்லாமல் பணப்புழக்கம் இல்லை. . 6. கூட்டணிதர்மம் அரசியல் சாசனத்தைவிட சிரேஷ்டமானது. 7.இந்திய ஜனநாயகம் இப்பொழுது ஆம்புலன்சில் ஏறியிருக்கிறது. இத்தலைப்புக்களுரியவை கட்டுரைகளைக்கிடையேதான் வரும் VVI POINTS தேடிப்படிப்பதும் ஒரு சுகமல்லவா?