Wednesday, February 25, 2009

குற்றாலம்

குற்றாலம்

குற்றாலம் அருவி தென் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது சிற்றாறு மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது.



குற்றாலம் தென்காசியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குற்றாலத்தின் அருகே (86 கிலோமீட்டர்) அமைந்துள்ள விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையமாகும். தென்காசி தொடர்வண்டி நிலையம் குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள தொடர்வண்டி நிலையமாகும்.



தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழுத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.


குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.


1. பேரருவி - இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.


2. சிற்றருவி - இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.


3. செண்பகாதேவி அருவி - பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.



4. தேனருவி - செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.



5. ஐந்தருவி- குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.



6. பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்)- இது ஐந்தருவியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு.



7. புலி அருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த அருவிக்கு பாசுபத சாஸ்தா அருவி என்ற மற்றொரு பெயரும் உண்டு.



8. பழைய குற்றாலம் அருவி - குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 4 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது. சுமார் 100 அடி உயரத்திலிருந்து இந்த அருவியில் தண்ணீர் விழுகிறது.



9. பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது.


படகு குழாம் : குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் தமிழ்நாடு சுற்றுலாதுறை சார்பில் வெண்ணமடை என்ற குளத்தில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.

மீன் காட்சியகம் : குற்றாலம் மெயின் அருவிக்கு செல்லும் பாதையில் ரூ.9.35 லட்சம் செலவில் வண்ண மீன்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருட்காட்சியகத்தில்வெல்வெட் துணி மீன்கள், நியான் விளக்கு மீன்கள், தேவதை மீன், வெண் விலாங்கு மீன், தலைகீழ் கெழுத்தி மீன்கள், தங்க தகடு மீன்கள் என 25க்கும் மேற்பட்ட மீ்ன்கள் அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது.

சித்திர சபை : இந்த சபையில் மூலிகைகளின் சாறு கொண்டு பலநூறு ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தொல்பொருள் ஆய்வகம்: பேரரூவிக்கும், திருக்குற்றால நாதர் திருதலத்திற்கும் செல்லும் வழியில் தொல்பொருள் ஆய்வகம் உள்ளது. இங்கு பல்வேறு விதமான பழங்கால சுவடிகள், சிலைகள், மண்பானைகள், தாழி, ஆயுதங்கள், பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

விடுதிகள்: அரசு விடுதிகள் 6 (182 அறைகள்) மற்றும் தனியார் விடுதிகள் 120க்கும் மேல் உள்ளது. இது போக குடும்பத்துடன் தங்குவதற்கு வீடுகள், தின வாடகைக்கு இங்கு கிடைக்கும்.

தமிழக பாதுகாப்பு இயக்கம்

தமிழக பாதுகாப்பு இயக்கம்

அன்பு நண்பர்களே! தாய்மார்களே!! மாணவச் செல்வங்களே!!!

velunachiar@gmail.com

இந்த இந்திய தேசம் பல்வேறு இனம், மொழி, கலாசாரம், பண்பாடு மற்றும் பல்வேறு மாநிலங்கள் உள்ளடங்கிய கோடிக்கணக்கான மக்கள் வாழும் செழிப்பான பூமியாகும். இங்கு அவ்வபோது ஒரு சில சாதிகளின் பெயராலும், மதத்தின் பெயராலும் விரும்ப தாகத சம்பவங்கள் நடைப்பெற்றபோதும் கூட இந்த இந்திய தேசத்தை கட்டி அமைப்பதில் நாம் அனைவரும் பெரும் பங்கு ஆற்றி இருக்கிறோம். ஒரு சிறிய நாட்டில் ஒரு இனத்தின் பெயரை வைத்துக்கொண்டு இருக்கின்ற அனைத்து கிரிமினல் வேலைகளையும் செய்த கூட்டத்திற்கு வக்காலத்து வாங்குவதற்காக பழ. நெடுமாறன், ராமதாஸ், வைகோ, திருமாவளவன், இலங்கை தமிழனின் வரலாறே தெரியாத சீமான் போன்ற சமூக விரோத கூட்டம் இன்று தமிழகத்தை கலவர பூமியாக மாற்றி வருகின்றனர் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த போலி அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்க புறப்பட்டு இருக்கிறது இளைஞர்களின் தமிழக பாதுகாப்பு இயக்கம்.

உலகப் பொருளாதார நெருக்கடிகளால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விகுரியாக்கப்படுள்ள நிலையில் அரசிற்கு அவப்பெயரை தேடித்தரும் என்ற நிலையில் இதுபோன்ற சமுக விரோதிகளின் செயல்களை அரசு கண்டுக்கொள்ள மறுக்கிறது. எனவே அன்பிற்கினிய தமிழ் சமுதாய சொந்தங்களே! இளைஞர்களே! மிகவும் விழிப்புடன் இருங்கள். மாணவச் செல்வங்களுக்கு தேர்வுகள் நெருங்கி விட்டன. கடந்த காலங்களில் தமிழ் பத்திரிகைகள் எல்லாம் கல்வி பற்றிய செய்தியை வெளியிட்டன. ஆனால் இந்த வருடம் ஈழ தமிழன் என்று சொல்லி காசுப் பார்த்து வருகின்றன.

எங்கள் இயக்கத்தை பற்றிய செய்திகள் அனைத்து தமிழ் நாளிதழ்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.

வாருங்கள் ஒன்றுப்படுவோம்!
தமிழகத்தை பாதுகாப்போம்!!

இல‌வ‌ச‌ பிளாஸ்டிக் ச‌ர்ஜ‌ரி செய்ய‌

இல‌வ‌ச‌ பிளாஸ்டிக் ச‌ர்ஜ‌ரி செய்ய‌

தீ விப‌த்தில் பாதிக்க‌ப்ப‌ட்டோர், இணைந்த‌ காது, மூக்கு, வாய் இவ‌ற்றுட‌ன் பிற‌க்கும் குழ‌ந்தைக‌ள் கொடைக்கான‌ல் பாஸ‌ம் ம‌ருத்துவ‌ம‌னை மார்ச் 23 முத‌ல் ஏப்ர‌ல் 4 வ‌ரை ஜெர்ம‌ன் ம‌ருத்துவர்க‌ளைக் கொண்டு இல‌வ‌ச‌மாக‌ பிளாஸ்டிக் ச‌ர்ஜ‌ரி செய்ய‌ப்ப‌ட‌ இருக்கிற‌து.

மேலும் விப‌ர‌ங்க‌ளுக்கு தொட‌ர்பு கொள்ள‌ வேண்டிய‌ தொலைபேசி எண்க‌ள்
045420240668,240668,245732

http://www.hindu.com/2009/01/11/stories/2009011151570300.htm

Free plastic surgery camp



Staff Reporter

KODAIKANAL: A free plastic surgery camp will be held at Pasam Hospital from March 23 to April 4. Internationally acclaimed surgeons from Germany will perform surgeries in the hospital to needy patients, said Dindigul Collector R. Vasuki,

In a press release issued here on Saturday, she said that those who were affected by any kind of burn injuries could avail treatment at the camp.

Those with ailments in eyes, ears, nose and lips by birth may register their names with the hospital for free treatment.

They may contact the hospital functioning on M.M. Street, Kodaikanal, either in person or through telephone (04542) 240778 and 240668 or e-mail pasam.vision@gmail.com for registration, the release added

புஷ்ஷின் மீது ஷுவை வீசிய வீரன் முன்தஸிர் அல் ஜய்தி

புஷ்ஷின் மீது ஷுவை வீசிய வீரன் முன்தஸிர் அல் ஜய்தி
-கமால்

புஷ் புஷ் என்று
வாயில் விரலை வைத்து உஷ்
என்று உலகே நடுங்கியபோது
ஷுவை எய்து அவனை
புஸ் என்று ஆக்கியவன் நீ

நீ வீசியது செருப்பல்ல
ஒட்டுமொத்த முஸ்லீம்களின் வெறுப்பு

வல்லரசுகள் கூட ஒரு கொல்லரசை
கண்மூடித்தனமாக ஆதரித்த போது
அமெரிக்கா ஒரு புல்லரசு என்று புரிய வைத்தவன் நீ

ஆயுதம் வைத்திருப்பவர்கள் கூட
அணு ஆயுதம் வைத்திருப்பவர்கள் கூட
அவன் அடிவருடியபோது
ஆயுதம் தேவையில்லை
ஆண்மை தான் தேவை என்று தெரிய வைத்தவன் நீ



உலக இனங்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாய்
அவன் கால்கையைப் பிடித்தால் தான் வாழ முடியும்
என்ற நினைப்பை உன் இரு அடியால்;
அவனுடைய காலையும் கையையும் குறுக வைத்து
முஸ்லிம்களின் வீரத்தை ஓரேயடியாய்; உயர்த்தியவன் நீ

அப்பாவிகள் மீது குண்டு வீச ஆணையிட்டு
கொக்கரித்த அப்“பாவி” மீது –
ஏவுகணை அல்ல
உன் கோபக்கணை எய்தபோது
இஸ்லாமியர்கள் இறுமாந்தனர்.
உலக இனங்கள் எல்லாம் மூக்கில் விரலை வைத்தன
முஸ்லிமின் தன்மானம் கண்டு

அவனைக் கண்டு அவனியே குனிந்தது
அவனையே குனிய வைத்தவன் நீ.
தலைக்குனிய வைத்தவன் நீ

குனிந்தது தலையல்ல
ஒரு தறுதலை

நீ கொடுத்தது செருப்படி மட்டுமல்ல
ஒட்டுமொத்த முஸ்லீம்களின் வெறுப்படியும் கூட….


Kamal
Dubai United Arab Emirates
Mob: 050 8444097
vkamal@etazenath.com

துபாயில் திருக்குர்ஆனை ஓத கற்றுக் கொள்ள அரிய வாய்ப்பு

துபாயில் திருக்குர்ஆனை ஓத கற்றுக் கொள்ள அரிய வாய்ப்பு

ஒவ்வொரு எழுத்துக்கும் 10 நன்மைகளை பெற்றுத்தரும் திருமறையினை ஓதத் தெரியாமல் பல சகோதரர்கள் வருத்தப்படுகிறார்கள். இவ்வாறு குர்ஆன் ஓதத்தெரியாமல் இருப்பவர்களுக்காகவும் மற்றும் சிறுவர்களுக்காகவும் துபை நாஸர் சதுக்கத்தில் உள்ள ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் ஹதீத் அலுவலகத்தில் வாரத்தில் 4 நாட்கள் திருக்குர்ஆன் ஓத பயிற்சி அளிக்கப்படுகிறது.

சிறுவர்களுக்கு - அஸர் தொழுகையிலிருந்து மக்ரிப் தொழுகை வரை உள்ள நேரத்தில் வந்து கற்றுக்கொள்ளலாம்.
பெரியவர்களுக்கு - பஜ்ர் தொழுகைக்கு பிறகு


மேலதிக விபரங்களுக்கு மெளலவி நூருல் அமீன் அவர்களை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண் - 055 6462745

தங்களுக்கு தெரிந்தவர்களிடமும் தெரியப்படுத்துங்கள்...

அன்புடன்
ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீத்
துபை
jaqhmoderator@gmail.com