Thursday, July 29, 2010

நன்னடத்தையை வலியுறுத்தும் இஸ்லாம் - J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி

நன்னடத்தையை வலியுறுத்தும் இஸ்லாம்

http://www.mudukulathur.com/religiondetails.asp?id=325

புகழ் அனைத்தும் அகிலத்தார்களைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்விற்கே உரியது. நிச்சயமாக இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களின் இம்மை, மறுமை, வாழ்விற்குத் தேவையான எல்லா வற்றையும் சரியான முறையிலும் இலேசான முறையிலும் கற்றுத் தரக்கூடிய மார்க்கம். அம்மார்க்கம் பெண்களின் ஆடை விஷயத்தில் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்ற ஒழுக்கமான நன்னடத்தையையும், கண்ணியமான தூய வாழ்க்கைக்கும் வழி காண்பிக்கின்றது. இவ்விஷயத்தில் ஆழமாக சிந்தித்தால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்வும், முழுமையான ஒழுக்கங்களையும் உள்ளடக்கிய மார்க்கம் இஸ்லாம் என்று தெளிவாக விளங்க முடியும்.

இறைவன் அருள்மறையில் கூறுகிறான். நபியே ! நீர் உன் மனைவி மார்களுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்களின் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர் களென) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க அன்புடையோன் (அல் அஹ்ஜாப் 59) மேலும் கூறுகிறான். நபியே ! முஃமினான பெண்களிடம் நீர் கூறுவீராக ! அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்களின் வெட்கத்தலங்களைப் பேணிப் பாதுகாத்தும் கொள்ள வேண்டும் மேலும் தங்கள் அலங்காரத்தை அவற்றில் வெளியே தெரியக்கூடியதைத் தவிர (வேரெதையும்) வெளிக்காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் தங்களின் மார்பகங்களை மறைத்துக் கொள்ளட்டும். மேலும் அவர்கள் தங்களின் கணவரிடத்திலே தவிர தங்களின் அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம். (அந்நூர் 31) மேலும் கூறுகிறான் (நபியின் மனைவியர்களே) நீங்கள் உங்களின் வீடுகளிலேயே தங்கி விடுங்கள். முன்னர் அறியாமைக் காலத்துப் பெண்கள் திரிந்ததைப்போன்று திரிந்து கொண்டிருக்காதீர்கள். (அல் அஹ்ஜாப் 33) மேலும் கூறுகிறான். நபி (ஸல்) அவர்களின் மனைவியரிடம் நீங்கள் ஏதாவது ஒரு பொருளைக் கேட்பதாகயிருந்தால் திரை மறைவிலிருந்து கேட்டுக் கொள்ளுங்கள். (அல் அஹ்ஜாப் 53) என்று விரிவாக நம்மிடம் பேசுகிறான்.

நிச்சயமாக இஸ்லாமியப் பெண்கள் தெரிந்திருக்க வேண்டிய அவசியமான கடமைகளில் உள்ள ஒன்றுதான் பர்தா அணிந்து கொள்வது. இஸ்லாம் மட்டுமே ஒரு குடும்பம் வீழ்ந்து சின்னாபின்னப் பட்டு சிதைந்து போகாமல் அதைப் பாதுகாப்பதின் மீது அக்கறை கொண்டுள்ளது. இயற்கைச் சூழ்நிலையை கேடு படுத்திடாமல் குடும்பங்கள் ஆரோக்கியமாகவும், சமுதாயம் தூய்மையாகவும் வாழ வேண்டும் என்பதற்காக இஸ்லாம் ஒழுக்கங்கள், நற்குணங்கள் என்ற உறுதிவாய்ந்த சுவரை எழுப்பியுள்ளது. காரணம் இஸ்லாம், குழப்பத்தின் பால் இழுத்துச் செல்லக்கூடியவற்றை தடுப்பதற்காக பர்தா என்ற திரையை ஏற்படுத்தியுள்ளது. ஆண்களும், பெண்களும் சந்திக்கும்போது தங்களின் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளும்படியும் ஏவுகிறது. நிச்சயமாக அல்லாஹ் பெண்களை கண்ணியப்படுத்து வதற்காகவும், இழிவிலிருந்து அவளின் தன்மானத்தை தற்காத்துக் கொள்ளவும், மேலும் குழப்பவாதிகள் தீய எண்ணம் உடையவர்களின் கெடுதியைவிட்டும் பெண்களை தூரப்படுத்துவதற்காகவும், கண்ணியம், விலைமதிப்பு, மானம் மரியாதையை அறியாதவர்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், அதே சமயம் விஷப் பார்வைகளுக்குக் காரணமான குழப்பத்தின் வாசலை அடைத்திடுவதற்குமே அல்லாஹ் பெண்களுக்கு பர்தாவை மார்க்க மாக்கியுள்ளான். என்பதை தெளிவாக விளங்க முடிகிறது. இதை விட்டு விட்டு இஸ்லாம் பெண்களை ஆண்களை விட்டும் நீங்கி அந்நிய ஆடவருடன் கலந்துரையாடுவதை தடை செய்திருக்கின்றது என்று தவறாக விளங்கி தேவையில்லாத அறிவற்ற பிரச்சாரத்தை சில விஷமிகள் பரப்பி வந்தனர் வருகின்றனர். இஸ்லாம் பெண்களை ஆண்களை விட்டும் தூரப்படுத்தி அவர்களின் சுதந்திரத்தை பரித்து ஆணாதிக்கத்திற்கு கீழ்படிந்துதான் வாழவேண்டும் என்றெல்லாம் சிலர் பர்தா முறையை தவறாக விளங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இன்று ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் யார் யாரெல்லாம் அப்பிரச்சாரங்களை செய்து வந்தார்களோ அவர்களே பர்தா முறையை வரவேற்று பெண்களுக்கு பாதுகாப்பு பர்தா என்ற திரைதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் அனைத்துப் பெண்களின் நற்குணங்கள், குடும்ப அமைப்பு, சிறப்புக்கள் மற்றும் கண்ணியமான நடைமுறைகளை பாதுகாப்பதற்கும், குழப்பங்களையும் தவறான எண்ணங்களையும் தடுத்து நிறுத்துவதற்கும் இஸ்லாமிய சட்டங்கள் மட்டுமே சரியான வழிமுறைகளை வகுத்துத்தந்துள்ளது. நம்மைச் சீர்திருத்திக் கொள்வதுடன் சமூகத்தையும் சீர்திருத்தச் சொல்லும் மார்க்கம்தான் இஸ்லாம் என்பதை அவர்கள் மட்டுமல்ல அனைத்து சமூகமும் ஒப்புக்கொண்டுள்ளது. காரணம் குழப்பம் சூழ்ந்து பரவிக்கிடக்கும் இந்தக் காலத்தை விட குழப்பத்தின் பயம் வேறு எந்தக்காலத்தில் அதிகமாக இருக்கமுடியும் நல்லவர்கள் இறையச்சமுடையவர்களை விட பாவிகள் நிறைந்து போய் விட்டனர். கடைவீதிகளிலும் பல்வேறு இடங்களில் நின்றுகொண்டு தன் தவறான விஷப்பார்வையால் தன் கையில் வைத்திருக்கும் மொபைலின் மூலம் (செல்போன்) அன்றாட சமையல் தேவைக்காக காய்கறி மற்றும் மீன் இறைச்சி வாங்குவதற்காக பஜாருக்கு வரும் பெண்களை அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்து அதை மற்றவர்களுக்கும் S.M.S.மூலமாகவும் E.மெயில், இண்டர்நெட் என அனுப்பி தான் ஒரு பகுத்தறிவு படைத்த மனிதன் என்பதையே மறந்து ஷைத்தானுக்கு வழிபட்டு மிருகத்தனமான செயல்களிலே ஈடுபடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவ்விஷயத்தில் அல்லாஹ் கடுமையான எச்சரிக்கையை தருகின்றான். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின் பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் (ஷைத்தான்) உங்களுக்கு பகிரங்கமான விரோதியாவான். நிச்சயமாக அவன் (ஷைத்தான்) தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும், அல்லாஹ்வைப்பற்றி நீங்கல் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான். (அல்பகரா 168 மற்றும் 169) என்று இறைவன் கூறுகிறான்.

இவ்வாறான தவறான எண்ணம் கொண்ட விஷமிகளிடமிருந்து சமுதாயப் பெண்கள் பாதுகாப்புப் பெற்று கண்ணியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகத்தான் பர்தாவை இஸ்லாம் மார்க்க மாக்கியுள்ளது.

எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே ஒழுக்கமும் நன்னடத்தையும் நமது உடலில் உள்ள உயிரையும் நாம் சுவாசிக்கும் சுவாசத்தையும் போன்றது. குர்ஆனிலும் நபி மொழியிலும் அல்லாஹ்வின் மார்க்கம் ஒரு வலுவான கட்டடத்திற்கு உதாரணமாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்த மாளிகையின் அடித்தளமாயிருப்பது ஈமான் என்றால் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள தூண்களும், சுவர்களும், மேற் கூரையுமே இஸ்லாமாகும். இஸ்லாம் என்ற மாளிகையை கட்டி எழுப்புவதற்கும் அதை உறுதியாய் எழிலுடன் நிலை நிறுத்துவதற்கும் தேவையான இரண்டு விஷயங்கள்தான் தக்வா எனும் இறையச்சம் இஹ்ஸான் எனும் ஒழுக்கமும் நன்னடத்தையுமாகும்.

இறைவன் அந் நஹ்ல் 128 வது வசனத்தில் எவர்கள் இறையச்சம் கொள்கிறார்களோ மேலும் நன்னடத்தையை மேற்கொள்கிறார்களோ அத்தகையவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்று கூறுகிறான். எனவே அல்லாஹ் எனக்கும் உலக மக்கள் அனைவர்களுக்கும் ஒழுக்கமுள்ள நல்ல சிந்தனைகளை வழங்கி இறைவனுக்கும் இறைத் தூதர் (ஸல்) அவர்களுக்கும் வழிபட்டு நடக்கும் பாக்கியத்தை வழங்கு வானாக ஆமீன் வஸ்ஸலாம்

மெளலவி

J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி

050 547 15 43

Sharjah




--
MUDUVAI HIDAYATH
www.imandubai.org
www.mudukulathur.com

ஹிஜாப் தரும் சுதந்திரம்!

ஹிஜாப் தரும் சுதந்திரம்!


என்ன பார்க்கிறாய்?
என்னைப் பார்க்கும்போது
என்னில் என்ன பார்க்கிறாய்?

நான் சுதந்திரப் பறவையா?
கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?
இயந்திர உலகில் மாட்டியவளா?

கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்
கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ?
கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?



நாகரீகம் அறியாதவளாக
பிணைக்கப்பட்ட கைதியாக
நான் தெரிகிறேனோ உனக்கு?

எனக்கென்று சொந்தக் குரல்
எனக்கென்று சுயசிந்தனை இல்லை என்கிறாய்
வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய்

மூடி மறைத்தால் - கூண்டு கிளியா?
முடியை மறைத்தால் - அநாகரீகமா?
காட்ட மறுத்தால் - திணிப்பா?

சிறு வட்டத்தில் அடைப்பட்டவளென்று எண்ணி
பரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்
'சுதந்திரத்தின்' பொருள் அறியாமலேயே

கவலையும், துயரமும்
கோபமும், வேதனையும் எனக்கு
கண்களின் ஓரம் கண்ணீரும் இருக்கு

கண்ணீரின் காரணம்
நீ என்னை ஒதுக்குவதாலும்
உன் கேலிக் கூத்தாலும் அல்ல

நீ உனையே ஒதுக்குவதால்
உனை நீயே ஏமாற்றிக் கொள்வதால்
இறுதி நாளில் பாவியாக நிற்கப் போவதால்

அடுத்தவர் கண்களுக்கு நான் அழகாக
காட்சிப் பொருளாக
வடிவமான சிலையாக இல்லாமலிருக்கலாம்

இஸ்லாம் எனக்களித்த சட்டத்தை மதிக்க விரும்புகிறேன்
அக அழகே முக அழகு என்னில் சொல்கிறேன்
ஆதிக்கம் இல்லாமல் என்னையே ஆள்கிறேன்

அமைதியில் என் அழகும்
பொறுமையில் என் மென்மையும்
ஒழுக்கத்தில் என் பெண்மையும் காணலாம்

மன வலிமை
சரியான முடிவெடுக்கும் திறன்
சிந்திப்பதை செயல்படுத்தும் பக்குவம் உண்டு

வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும்போதும்
உழைப்புக்கு ஊதியம் மறுக்கும் போதும்
குட்டைப் பாவாடையும், இறுக்கும் மேலாடையும்
கைகொடுக்கும் என்றாலும் வேண்டாம் என்பேன்

கிடைப்பது எனக்கு மதிப்பும், மரியாதையும்
கீழ்த்தர பார்வை என் மீது பட்டதில்லை
அந்நிய கைகள் எனைத் தொட நினைத்ததில்லை



அந்நிய மோகத்திற்கு அடிமைப்படவுமில்லை

ஆண்களின் உணர்வை சீண்டவுமில்லை
கண்களால் கற்பழிப்பவன் என் கண்ணில் பட்டதில்லை

உண்மையில் நானே சுதந்திரப் பறவை
விண்ணில் பறக்கும் என் சிறகே 'ஹிஜாப்'
அபயத்தை அளிக்கும் கவசமே 'அபாயா'
அணிந்துக் கொண்டு பறப்போம் சுதந்திரமாக!!

Wednesday, July 28, 2010

மாவட்ட வக்ப் அலுவலகங்களின் முகவரிகள்

மாவட்ட வக்ப் அலுவலகங்களின் முகவரிகள்

சென்னை
வக்ப் ஆய்வாளர்
822 அண்ணா சாலை
மக்கா மஸ்ஜித் வளாகம்
மவுண்ட் ரோடு
சென்னை 600002
தொலைபேசி:044 -28520477

காஞ்சிபுரம் & திருவள்ளூர்
வக்ப் ஆய்வாளர்
பெரிய பள்ளிவாசல் வளாகம்
பூவிருந்தவல்லி
சென்னை 600056
தொலைபேசி: 044 - 26494523

கடலூர் & விழுப்புரம்
வக்ப் ஆய்வாளர்
(நூர் முஹம்மது ஷா அவுலியா தர்கா)
512 காந்தி ரோடு
பண்ருட்டி
கடலூர் மாவட்டம்
தொலைபேசி: 04142 - 242660

வேலூர் & திருவண்ணாமலை
வக்ப் ஆய்வாளர்
12 / 16 காந்தி ரோடு
வேலூர் - 632004
தொலைபேசி: 0416 - 2225770


சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி & தர்மபுரி
வக்ப் ஆய்வாளர்
எண் 4 A & 5 A , முதல் மாடி
திப்பு சுல்தான் மார்கெட்
முதலாவது அக்ரகாரம்
சேலம் - 636001
தொலைபேசி - 0427 - 2263126


கோயம்புத்தூர், ஈரோடு & நீலகிரி
வக்ப் ஆய்வாளர்
எண்: 14 - 15 பள்ளிவாசல் வளாகம்
அவினாசி சாலை
உப்பிபாளையம்
கோயம்புத்தூர் - 641018
தொலைபேசி - 0422 - 2380685


திருச்சி, புதுகோட்டை, கரூர் & பெரம்பலூர்
வக்ப் ஆய்வாளர்
எண்: 12 கிலேடர் தெரு
திருச்சி - 2
தொலைபேசி - 0431 - 2703407


மதுரை, திண்டுக்கல் & தேனீ
வக்ப் ஆய்வாளர்
எண்: 1 டவுன் ஹால் ரோடு பள்ளிவாசல்
டவுன் ஹால் ரோடு
மதுரை - 625001
தொலைபேசி - 0452 - 2346053


ராமநாதபுரம், விருதுநகர் & சிவகங்கை
வக்ப் ஆய்வாளர்
தர்பம்சயனம் சாலை
வெளிப்பட்டினம்
ராமநாதபுரம் - 623 504
தொலைபேசி: 04567 - 220053

தஞ்சை, திருவாரூர் & நாகப்பட்டினம்
வக்ப் ஆய்வாளர்
27 நீதி நகர்,
ஜும்மா பள்ளிவாசல்
கோர்ட் ரோடு
தஞ்சாவூர் - 613 001
தொலைபேசி: 04362 273077


திருநெல்வேலி, தூத்துக்குடி & கன்னியாகுமரி
வக்ப் ஆய்வாளர்
54 ஹை ரோடு
திருநெல்வேலி - 627001 தொலைபேசி: 0462 - 2334062


(இரண்டு அல்லது மூன்று மாவட்டத்திற்கு ஒரு அலுவலர் இருபதாலோ என்னவோ வக்ப் சொத்துக்கள் சமூக
விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன )

Rajaghiri Gazzali

மாவட்ட வக்ப் அலுவலகங்களின் முகவரிகள்

மாவட்ட வக்ப் அலுவலகங்களின் முகவரிகள்

சென்னை
வக்ப் ஆய்வாளர்
822 அண்ணா சாலை
மக்கா மஸ்ஜித் வளாகம்
மவுண்ட் ரோடு
சென்னை 600002
தொலைபேசி:044 -28520477

காஞ்சிபுரம் & திருவள்ளூர்
வக்ப் ஆய்வாளர்
பெரிய பள்ளிவாசல் வளாகம்
பூவிருந்தவல்லி
சென்னை 600056
தொலைபேசி: 044 - 26494523

கடலூர் & விழுப்புரம்
வக்ப் ஆய்வாளர்
(நூர் முஹம்மது ஷா அவுலியா தர்கா)
512 காந்தி ரோடு
பண்ருட்டி
கடலூர் மாவட்டம்
தொலைபேசி: 04142 - 242660

வேலூர் & திருவண்ணாமலை
வக்ப் ஆய்வாளர்
12 / 16 காந்தி ரோடு
வேலூர் - 632004
தொலைபேசி: 0416 - 2225770


சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி & தர்மபுரி
வக்ப் ஆய்வாளர்
எண் 4 A & 5 A , முதல் மாடி
திப்பு சுல்தான் மார்கெட்
முதலாவது அக்ரகாரம்
சேலம் - 636001
தொலைபேசி - 0427 - 2263126


கோயம்புத்தூர், ஈரோடு & நீலகிரி
வக்ப் ஆய்வாளர்
எண்: 14 - 15 பள்ளிவாசல் வளாகம்
அவினாசி சாலை
உப்பிபாளையம்
கோயம்புத்தூர் - 641018
தொலைபேசி - 0422 - 2380685


திருச்சி, புதுகோட்டை, கரூர் & பெரம்பலூர்
வக்ப் ஆய்வாளர்
எண்: 12 கிலேடர் தெரு
திருச்சி - 2
தொலைபேசி - 0431 - 2703407


மதுரை, திண்டுக்கல் & தேனீ
வக்ப் ஆய்வாளர்
எண்: 1 டவுன் ஹால் ரோடு பள்ளிவாசல்
டவுன் ஹால் ரோடு
மதுரை - 625001
தொலைபேசி - 0452 - 2346053


ராமநாதபுரம், விருதுநகர் & சிவகங்கை
வக்ப் ஆய்வாளர்
தர்பம்சயனம் சாலை
வெளிப்பட்டினம்
ராமநாதபுரம் - 623 504
தொலைபேசி: 04567 - 220053

தஞ்சை, திருவாரூர் & நாகப்பட்டினம்
வக்ப் ஆய்வாளர்
27 நீதி நகர்,
ஜும்மா பள்ளிவாசல்
கோர்ட் ரோடு
தஞ்சாவூர் - 613 001
தொலைபேசி: 04362 273077


திருநெல்வேலி, தூத்துக்குடி & கன்னியாகுமரி
வக்ப் ஆய்வாளர்
54 ஹை ரோடு
திருநெல்வேலி - 627001 தொலைபேசி: 0462 - 2334062


(இரண்டு அல்லது மூன்று மாவட்டத்திற்கு ஒரு அலுவலர் இருபதாலோ என்னவோ வக்ப் சொத்துக்கள் சமூக
விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன )

Rajaghiri Gazzali

Sunday, July 25, 2010

உணர்வாய் உன்னை !

உணர்வாய் உன்னை !

சகோதரர் ஜலாலுத்தீன்.

உங்கள் கணக்குகள் கேட்கப்படுமுன் நீங்களே உங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் எடை போடப்படுமுன் நீங்களே எடை போட்டுப் பாருங்கள். உமர் இப்னு கத்தாப் (ரலி).

இது ஒரு சுய மதிப்பீட்டுப் படிவம். நிகழ்காலத்தில் உங்கள் வாழ்க்கையின் பல பகுதிகளையும் மதிப்பீடு செய்து, உங்கள் திசைகளை மாற்றிக்கொள்வதற்கும், இன்னும் மேன்மைப்படுத்திக் கொள்வதற்கும் உதவும். இன்ஷா அல்லாஹ்..
பகுதி ஒன்று:
அல்லாஹ்வுடன் உங்களுடைய தனிப்பட்ட உறவு:

1. சந்தோஷமான, மகிழ்ச்சியான நேரங்களில் எத்தனை முறை அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனுக்கு நன்றி செலுத்தினீர்கள்?

2. இவ்வாண்டு, நீங்கள் பெற்ற கல்வியினாலும், செயல்பாடுகளினாலும் அல்லாஹ்வைப் பற்றிய ஞானமும் அவனுடன் உங்களுக்குள்ள கடமையுணர்ச்சியும் ஆழமானதா?

3. அல்லாஹ்வுடன் உள்ள தொடர்புகளில் சோம்பேறித்தனமாக இருந்தீர்களா?

4. உங்களுக்கு ஏதாவது தேவை இருந்த சமயம் தவிர, எத்தனை முறை அல்லாஹ்வுடன் துவா மூலம் பேசினீர்கள்?

5. எத்தனை முறை அல்லாஹ்வுடைய வழிகாட்டலை கேட்டிருக்கிறீர்கள்?

6. கவலை, தேவை, சிரமம் போன்ற சமயங்களில் எத்தனை முறை அல்லாஹ்விடம் கையேந்தியிருக்கிறீர்கள்?

7. அல்லாஹ்வின் நினைவையும், அவனுடனுள்ள உங்களுடைய கடமையுணர்ச்சியையும் அதிகரிப்பதற்கு தினசரி, வாராந்திர அடிப்படையில் நீங்கள் என்ன செய்யலாம்?

8. அல்லாஹ்வை எந்நேரமும் நினைவில் நிறுத்த, குர்ஆன், நபிமொழிகளிலுள்ள துவாக்களை எப்படி மனப்பாடம் செய்யலாம்?

9. அல்லாஹ்வுடன் தொடர்பு கொள்ளும்படி சகமனிதர்களை அழைத்திருக்கிறீர்களா?

உங்களுடைய இஸ்லாமிய அறிவு:

1. உங்களுடைய வாழ்நாட்களில் தினமும் குர்ஆனின் ஒரு வசனங்களையாவது பொருளறிந்து படித்திருக்கிறீர்களா? இல்லையெனில் இன்றிலிருந்து முயற்சி எடுப்பீர்களா?

2. இஸ்லாமிய கல்வி வட்டம் அல்லது வகுப்புகளுக்குச் சென்றீர்களா? இல்லையென்றால், அங்கு செல்லத் தடையாக இருப்பது எது..? எப்படி அந்தத் தடையை நீக்கலாம்?

3. இஸ்லாமிய அறிவைப் பெறுவதற்காக, மாநாடுகளுக்கோ, கருத்தரங்குகளுக்கோ பயணம் செய்தீர்களா?

4. கடந்த வருடத்தில் நீங்கள் கற்ற இஸ்லாத்தைப்பற்றி நீங்கள் முன்பு அறிந்திராத 10 விஷயங்கள் எவை? அவற்றில் நீங்கள் நடைமுறையில் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தவை எவை?

5. நீங்கள் அல்லாஹ்விற்காக மட்டுமே அறிவைத் தேடினீர்களா அல்லது வேறு எதாவது காரணத்திற்காகவா?

6. இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் அறிந்திராத எந்த 10 விஷயங்கள் பற்றி அடுத்த ரமளானுக்குள் அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள்?

7. கடந்த வருடத்தில் சுமாராக எத்தனை இஸ்லாமிய புத்தங்கள் படித்தீர்கள்?

8. கடந்த வருடத்தில் சுமாராக எத்தனை இஸ்லாமிய வீடியோக்களை பார்த்தீர்கள்?

9. சுமாராக எத்தனை இஸ்லாமிய ஆடியோ கேசட்டுகள் கேட்டீர்கள்?

10. அறிவு பெறுவதற்கு உங்களுக்கு எது மிகவும் பொருத்தமாக இருக்கிறது? (கேட்டல், பார்த்தல் அல்லது படித்தல்)

11. உங்களைச் சுற்றியுள்ள மக்களைப் பற்றியும் அவர்களிடம் உள்ள மார்க்க ஞானம் பற்றியும் அறிந்திருக்கிறீர்களா? அவர்கள் அறியாமையில் இருப்பின் அவைகளை களைய ஏதாவது முயற்சி எடுத்தீர்களா.?
உங்களுடைய தொழுகை:

1. ஒரு நாளுக்கு ஐந்து முறை தொழுகிறீர்களா?

2. ஒரு நாளில் எந்தெந்த தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுதீர்கள்?

3. பள்ளியிலோ பணியிலோ இருக்கும் போது தொழுகை நேரத்தில் தொழுதீர்களா, இல்லயென்றால், வீட்டிற்கு வந்தபின் அதற்காக ஈடு செய்தீர்களா?

4. தொழுகையை சரியான முறையில் நிறைவேற்றுகிறீர்களா? அல்லது நீங்கள் தொழுவது தான் சரியான முறை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

5. உங்கள் தொழுகையில் மன ஓர்மையுடன் இருக்கிறீர்களா?

தொடர்ந்து படிக்க கீழுள்ள தொடுப்பை கிளிக் செய்க
http://www.ottrumai.net/TArticles/37-DiscoverYourself.htm

Saturday, July 24, 2010

நூல் : முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாறு ( 1906 முத‌ல் 2006 )

நூல் : முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாறு ( 1906 முத‌ல் 2006 )
ஆசிரிய‌ர் : எழுத்த‌ர‌சு ஏ.எம். ஹ‌னீப்
ப‌க்க‌ங்க‌ள் : 552
விலை : ரூ.125
வெளியிட்டோர் :
முஸ்லிம் லீக் ப‌திப்ப‌க‌ம்
த‌மிழ்நாடு மாநில‌ இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக்
த‌லைமை நிலைய‌ம்
36 ம‌ரைக்காய‌ர் லெப்பை தெரு
ம‌ண்ண‌டி
சென்னை 600 001
போன் : 2521 8786
www.muslimleaguetn.com
info@muslimleaguetn.com



ப‌திப்புரை

அருளாள‌ன் அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெய‌ரால்
முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாறு முத‌ல் பாக‌ம் இதோ உங்க‌ள் க‌ர‌ங்க‌ளில்
அறிவிய‌ல் சாத‌னைக‌ள் பெருகிவரும் இக்கால‌ க‌ட்ட‌த்தில் வ‌ர‌லாற்றுச் செய்திக‌ள் அருகி
விட‌க்கூடாது.
வ‌ர‌லாறு அதை எழுதுகின்ற‌வ‌ரின் நோக்க‌த்தைப் பொறுத்தே அமைகின்ற‌து. அத‌னால் தான்
ப‌ல வ‌ர‌லாற்றுச் செய்திக‌ளால் உல‌க‌ம் ப‌ல‌ பிர‌ச்சினைக‌ளைச் ச‌ந்திக்கிற‌து.
இஸ்லாம் வாளால் ப‌ர‌ப்ப‌ப்ப‌ட்ட‌து என்ற‌ வ‌ர‌லாற்றுப் புர‌ட்டுக்கு நாம் இன்றைக்கும் ப‌தில்
சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
இந்திய‌ முஸ்லிம்க‌ளின் வ‌ர‌லாறு இந்த‌ தேச‌த்தோடு இர‌ண்ட‌ற‌க் க‌ல‌ந்துவிட்ட‌ ஒன்று.
ஆயிர‌த்து நூறு ஆண்டுக‌ளுக்கு மேற்ப‌ட்ட‌ முஸ்லிம்க‌ளின் ஆட்சி இந்திய‌ தேச‌த்திற்கு
வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ அருட்கொடை

ம‌த‌த்தைப் ப‌ர‌ப்புவ‌து அம்மன்ன‌ர்க‌ளின் நோக்க‌மாக‌ இல்லாம‌ல் இருந்தால் தான் இத்த‌னை
ஆண்டுகால ஆட்சி ந‌டைபெற்றும் முஸ்லிம்க‌ள் சிறுபான்மையின‌ராக‌ உள்ள‌ன‌ர்.
வ‌ர‌லாற்றை எழுத‌ முற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் வ‌குப்புவாத‌க் க‌ண்ணோட்ட‌த்தில் சிதைத்த‌தால் அதனைப்
ப‌டிக்கின்ற‌வ‌ர்க‌ளின் பார்வையும் விகார‌மாகிப் போன‌து.
இந்த‌ தேச‌ம்,பிர‌ச்ச‌னைக‌ளைச் ச‌ந்திப்ப‌த‌ற்கு இதுதான் பிர‌தான கார‌ண‌ம்.த‌ப்புப் பிர‌ச்சார‌ங்க‌ளை
த‌குதிமிக்க‌ப் பாட‌ங்க‌ளாக‌ ஆர‌ம்ப‌ப்ப‌ள்ளி முத‌ல் கொண்டு ச‌ர்வ‌க‌லாசாலைக‌ள் வ‌ரை க‌ற்றுக்
கொடுக்கின்ற‌ கார‌ண‌த்தால் பிஞ்சு உள்ள‌ங்க‌ளில் நஞ்சு விதைக்க‌ப்ப‌டுகிற‌து.
தேச‌ப் பிரி‌வினை என்ப‌து இந்திய‌ வ‌ர‌லாற்றின் ஒரு அத்தியாய‌ம்.அந்த‌ அத்தியாய‌ம்
முஸ்லிம்லீகால் வ‌ரைய‌ப்ப‌ட்ட‌து அல்ல‌.

இந்தியாவில் முஸ்லிம் லீக் உருவாக்க‌ப்ப‌டுவ‌த‌ற்கு எத்த‌னையோ கார‌ண‌ங்க‌ள்
இருந்த‌ன‌.

1906இல் அகில‌ இந்திய முஸ்லிம் லீக் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்டபோது பிரிவினை வாடை எங்கும்
வீச‌வில்லை.
இந்திய சுத‌ந்திர‌த்தின்போதும் அத‌ன் பின்பும் பிரிவினைக் குற்ற‌ச்சாட்டு முஸ்லிம்க‌ள்மீதும்,
முஸ்லிம் லீக் மீதும் திணிக்க‌ப்ப‌ட்ட‌து.
இந்த‌ப் பிர‌ச்சார‌த்தில் முன்ன‌ணியில் இருந்த‌வ‌ர்க‌ளே பின்ன‌ர்,த‌ங்க‌ள் நிலைபாட்டை
மாற்றிக் கொண்டுவிட்ட‌ன‌ர்.
ஆர்.எஸ்.எஸ்.சின் ஆங்கில‌ப் ப‌த்திரிகையான‌ "ஆர்க‌னைச‌ர்" ஆசிரிய‌ராக‌ இருந்த‌ கே.ஆர்
ம‌ல்கானி இந்திய‌ப் பிரிவினைக்கு முஸ்லிம்க‌ளோ,இந்துக்க‌ளோ கார‌ண‌ம‌ல்ல‌.அதை
உருவாக்கிய‌தும்,வ‌ள‌ர்த்ததும்,செய‌ல்ப‌டுத்திக் கொடுத்த‌தும் ஆங்கிலேய‌ர்க‌ள்தான் என‌ 1988 இல்
ப‌கிர‌ங்க‌ப்ப‌டுத்தினார்.
இத‌ற்குக் கார‌ண‌ம் இல்லாம‌லில்லை.காங்கிர‌ஸ் த‌லைவ‌ராயிருந்த‌ சுத‌ந்திர‌ப் போராட்ட‌
வீர‌ர் ம‌வ்லானா அபுல் க‌லாம் ஆஜாத் 1958 இல் எழுதி வெளியிட்ட‌ இந்திய‌ விடுத‌லை வெற்றி
( India wins freedom ) என்ற‌ நூலின் முப்ப‌து ப‌க்க‌ங்க‌ள் முப்ப‌து ஆண்டுக‌ள்
க‌ழித்தே வெளியிட‌ப்ப‌ட வேண்டும் என்ற‌ நிப‌ந்த‌னையில் ஆவ‌ண‌க் காப்ப‌க‌ங்க‌ளால் பாதுகாக்க‌ப்
ப‌ட்டிருந்த‌ன‌.
1988 செப்ட‌ம்ப‌ர் 29 ல் வெளியிட‌ப்ப‌ட்ட‌ அந்த‌ முப்ப‌து ப‌க்க‌ங்க‌ளும்,இருட்ட‌டிப்புச்
செய்ய‌ப்ப‌ட்ட‌ ப‌ல உண்மைக‌ளை வெளிச்ச‌த்திற்குக் கொண்டு வ‌ந்த‌ன‌.இத‌னால் ஏற்ப‌ட்ட‌
விளைவுதான் அது.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு எழுத்து வ‌டிவ‌ம் கொடுத்த‌ ம‌வுண்ட் பேட்ட‌ன் பிர‌புவின்
ஆலோச‌க‌ர் வி.பி.மேன‌ன்,தான் எழுதி வெளியிட்ட‌ "இந்திய‌ அதிகார‌ மாற்ற‌ம்( Transfer of Power in India ) என்ற‌ நூலில்" 1937 பொதுத் தேர்த‌லில் ஐக்கிய‌ (உ.பி)மாகாண‌த்தில் அமைச்ச‌ர‌வை அமைக்கும் விஷ‌ய‌த்தில் முஸ்லிம் லீக் த‌ர‌ முன் வ‌ந்த‌ ஆத‌ர‌வை காங்கிர‌ஸ் ஏற்றிருந்தால் வ‌ர‌லாறு மாறியிருக்கும் என குறிப்பிட்டுள்ள‌தே உண்மை.
வர‌லாறு தெரியாத‌வ‌ர்க‌ள்தான் இந்திய‌ப் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கார‌ண‌ம் என
சொல்லிக் கொண்டிருக்கின்ற‌ன‌ர்.
வ‌ர‌லாறு தெரிந்த‌வ‌ர்க‌ளும்,ஜின்னாவின் முஸ்லிம் லீக் பாகிஸ்தான் பிரிவினைக்காக‌
உருவான‌து என வ‌ம்ப‌ள‌ந்து கொண்டிருக்கின்ற‌ன‌ர்.
1904 ல் காங்கிர‌ஸில் சேர்ந்த‌ முஹ‌ம்ம‌த‌லி ஜின்னா கால‌மெல்லாம் இந்து முஸ்லிம்
ஒற்றுமைக்கு பாடுப‌ட்டார். இந்து முஸ்லிம் ஒற்றுமையின் தூத‌ர் ஜின்னா என்று ச‌ரோஜினி
நாயுடு வ‌ர்ணித்தார் 1935 ல்தான் முஸ்லிம் லீகின் நிர‌ந்த‌ர‌த் த‌லைவ‌ராக‌ ஜின்னா. சாஹிப்
தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்டார்.
1946 மே 16ல் வெளியிட‌ப்ப‌ட்ட‌ "அமைச்ச‌ர‌வை தூதுக்குழு திட்ட‌த்தை ஏற்று 1940 மார்ச்
23ஆம் தேதியில் "லாகூர் தீர்மான‌த்தையே கைவிட‌ முடிவு செய்த‌து முஸ்லிம் லீக்.
பிள‌வுப‌டாத‌ ந‌ல்ல‌ சூல்நிலை ஏற்ப‌ட‌ப் போகிற‌து என நாடே ம‌கிழ்ச்சியில் திளைத்த‌போது
1946 ஜூன் 10ல் ஜ‌வ‌ஹ‌ர்லால் நேரு ப‌ம்பாயில் அளித்த‌ பேட்டி . அந்த‌ ம‌கிழ்ச்சியை
நாச‌மாக்கிய‌து.
இப்ப‌டிப்ப‌ட்ட‌ வ‌ர‌லாற்று உண்மைக‌ளெல்லாம் உல‌குக்கு சொல்ல‌ப்ப‌டாத‌ கார‌ண‌த்தால் தான்
அபாண்ட‌ம் இந்திய‌ முஸ்லிம்க‌ளின் த‌லைமீது சும‌த்த‌ப்ப‌ட்ட‌து.
அந்த‌ சுமையை போக்கும் முய‌ற்சியாக‌வே முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாறு
அத்தியாய‌த்தை அந்நூல் அல‌சுகிற‌து.
எண்ப‌து வ‌ய‌தை தாண்டிய‌ எழுத்த‌ர‌சு ஏ.எம். ஹ‌னீப் 65 ஆண்டுக‌ளுக்கும் மேலாக‌
எழுத்துல‌கில் ஆதிக்க‌ம் செலுத்தி வ‌ருகின்ற‌வ‌ர்.முஸ்லிம் லீகின் வ‌ர‌லாறாக‌வே அவ‌ர் வாழ்ந்து
வ‌ருகின்ற‌வ‌ர்.
550 பக்க‌ங்க‌ள் அவ‌ர் எழுதியிருக்கும் இந்த‌ வ‌ர‌லாற்றுப் பொக்கிஷ‌ம் ஒவ்வொருவ‌ரிட‌மும்
இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மான ஆவ‌ண‌ம்.
விலை ம‌திப்ப‌ற்ற‌ இந்நூலுக்கு நீங்க‌ள் த‌ருகின்ற‌ ஆத‌ர‌வைப் பொறுத்தே முஸ்லிம் லீக்
நூற்றாண்டு வ‌ர‌லாற்றின் இர‌ண்டாம் பாக‌ம் சுத‌ந்திர‌ இந்தியாவில் முஸ்லிம் லீகின் பெருமையை
பேசக்கூடிய‌ அரிய‌ நூலாக‌ வெளிவ‌ர‌ ஏதுவாகும்.
த‌மிழ்நாடு மாநில‌ இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீகின் முஸ்லிம் லீக் ப‌திப்ப‌க‌ம் இத‌னை
வெளியிடுவ‌தில் பெருமைய‌டைகிற‌து.
ஒரு மாபெரும் வ‌ர‌லாறு பதிக்க‌ப்ப‌டுவ‌தில் அந்த‌ வ‌ர‌லாறு புதுப்பிக்க‌ப்ப‌டுகிற‌து.
இதை உருவாக்க‌ அரும்பாடுப‌ட்ட‌ எழுத்த‌ர‌சு ஏ.எம் ஹ‌னீப் ச‌முதாய‌த்தின் நன்றிக்குரிய‌வ‌ர்.
நேற்றைய‌ வ‌ர‌லாறு!
இன்றைய‌ உண்மை!
நாளைய‌ ந‌ம்பிக்கை!
ந‌ன்றியுட‌ன்
முஸ்லிம் லீக் ப‌திப்ப‌க‌ம்


www.imandubai.org
www.mudukulathur.com

Friday, July 23, 2010

அறிக‌ அறிவிய‌ல் மாத‌ இத‌ழ்

அறிக‌ அறிவிய‌ல் மாத‌ இத‌ழ்

அறிக‌ அறிவிய‌ல் மாத‌ இத‌ழ் விஞ்ஞான‌ ஆய்வுக‌ளைத் த‌மிழில் கொணர்ந்து த‌மிழுக்கு ஆக்க‌ம் சேர்ப்ப‌தைக் குறிக்கோளாக‌க் கொண்டு த‌வ‌த்திரு குன்ற‌க்குடி அடிக‌ளார் அவ‌ர்க‌ளால் தொட‌ங்க‌ப்பெற்று வெளியிட‌ப்பெறுவ‌து.

த‌மிழ் ம‌க்க‌ளிடையே விஞ்ஞான‌க் க‌ருத்துக்க‌ளை எடுத்துச் செல்லும் அறிவிய‌ல் த‌மிழ்த் தூதுவ‌னாக‌ப் ப‌ணி செய்து வ‌ருவ‌து. விஞ்ஞானிக‌ள் ப‌ல‌ரின் அரிய‌ அறிவிய‌ல் த‌மிழ்க் க‌ட்டுர‌க‌ளைத் தாங்கி அறிவொளி ப‌ர‌ப்பி வ‌ருவ‌து.

சுதேசி விஞ்ஞான‌ இய‌க்க‌ம், மைய‌மின் வேதியிய‌ல் ஆய்வ‌க‌ வ‌ளாக‌ம், காரைக்குடியின் ஆத‌ர‌வில் வெளிவ‌ருகிற‌து.

த‌ற்போதைய‌ நிர்வாக‌ ஆசிரிய‌ர் த‌வ‌த்திரு குன்ற‌க்குடி பொன்ன‌ம்ப‌ல‌ அடிக‌ளார்.
ஆசிரிய‌ர் முனைவ‌ர் மி. நோய‌ல்

அறிக‌ அறிவிய‌ல், த‌மிழ‌க‌ அறிவிய‌ல் வ‌ர‌லாறு, புதிய‌ ஆய்வு முடிவுக‌ள், ப‌ய‌னுள்ள‌ தொழில்நுட்ப‌க் க‌ண்டுபிடிப்புக‌ள் அறிவிய‌ல் க‌லைச் சொல்லாக்க‌ம் போன்ற‌ புதிய‌ ப‌குதிக‌ளுக்கான‌ க‌ட்டுரைக‌ளை வ‌ர‌வேற்கிற‌து.

க‌ட்டுரைக‌ள் அனுப்ப‌ வேண்டிய‌ முக‌வ‌ரி :

முனைவ‌ர் மி. நோய‌ல்
ஆசிரிய‌ர்
அறிக‌ அறிவிய‌ல்
மைய‌மின் வேதி ஆய்வ‌க‌ம்
காரைக்குடி 630 006

த‌னி இத‌ழ் ரூ. 6
ஆண்டுச் ச‌ந்தா ரூ. 70
ஆயுள் ச‌ந்தா ரூ. 700

தொட‌ர்பு முக‌வ‌ரி :

நிர்வாக‌ ஆசிரிய‌ர்
அறிக‌ அறிவிய‌ல்
குன்ற‌க்குடி 630 206
சிவ‌க‌ங்கை மாவ‌ட்ட‌ம்
போன் : 04577 264 166

Tuesday, July 20, 2010

இல்லை! இல்லை!!இல்லை !!!

இல்லை! இல்லை!!இல்லை !!!



அரேபியாவில் ஆறுகள் இல்லை
அத்தி, பலாமரங்கள் பூ பூப்பதில்லை.
ஆமைக்குப் பற்கள் இல்லை.
இந்திய ஜனாதிபதிக்கு ஓய்வுபெறும் வயதிற்கு வரம்பு இல்லை.
இனிப்பை உணர்ந்தறியும் சக்தி பூனைக்கில்லை.
இலந்தைமரங்களில் பறவைகள் கூடு கட்டுவதில்லை.
இந்தியாவில் எரிமலைகள் இல்லை.
ஈசலுக்கு வயிறு இல்லை.
உலகில் 26 நாடுகளில் கடலோ, கடற்கரையோ இல்லை.
ஐஸ்லாந்தில் ரெயில்கள் இல்லை.
ஒட்டகங்களுக்கு நீந்தத் தெரிவதில்லை.
ஹவாய்த் தீவில் பாம்புகள் இல்லை.
கடலில் முதலைகள் வாழ்வதில்லை.
பல்லி தண்ணீர் குடிப்பதே இல்லை.
பக்ரைன் நாட்டு தேசியகீதத்தில் வார்த்தைகளே இல்லை.
மாசிடோனியா நாட்டுக்கு தேசியக் கொடி இல்லை.
மலைப் பாம்புகளுக்கு நஞ்சு இல்லை.
யமுனை நதி கடலில் கலப்பதில்லை.
யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை.
வண்ணத்துப் பூச்சிகளுக்கு வாயில்லை.
ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை.
ஸ்பெயின் நாட்டில் தந்தை பெயரை முதல் எழுத்தாகப் பயன்படுத்தவில்லை.
கிவி பறவைக்கு இறக்கைகள் இல்லை.
குயில்கள் கூடுகட்டி வாழ்வதில்லை.
குயில்கள் குளிர்காலத்தில் கூவுவதில்லை.
பூடான் நாட்டில் திரைஅரங்குகள் இல்லை.
பூச்சிகளும் புழுக்களும் தூங்குவதில்லை.
சிங்கப்பூரில் காகங்கள் illai.

இந்திய பத்திரிகை (ஒளிபரப்பு) துறையின் ஜாம்பவான்கள்..

இந்திய பத்திரிகை (ஒளிபரப்பு) துறையின் ஜாம்பவான்கள்..




Mr. Jawahar Goel
President - IBF
ZEE Telefilms Ltd.,
FC - 19, Sector - 16A,
Noida - 201301.



Mr. K. V. L. Narayan Rao
Vice President � IBF
Group CEO & Executive Director NDTV
No. 207, Okhla Industrial Estate,
Phase � III,
New Delhi � 110 020.




Mr. I. Venkat
Treasurer - IBF,
Director
EENADU
Shantiskhara Complex,
Rajbhawan Road,
Somajiguda, Hyderabad - 500 082.



Mr. Baljit Singh Lalli
CEO
Prasar Bharati PTI Building,
Sansad Marg,
New Delhi � 110 001




Mr. Chintamani Rao
CEO,
Times Global Broadcasting Co. Ltd.
Trade House, 1st Floor,
Kamala Mills Compound,
Senapati Bapat Marg, Lower Parel,
Mumbai � 400013.



Mr. G. Krishnan
CEO & Executive Director,
TV TODAY
Videocon Tower,
E-1, Jhandewalan Extension,
New Delhi -110 055.




Mr. Mahesh Prasad
Council Director
SAHARA
C-2, Sahara India Complex,
Sector - 11,
Noida - 201 301.



Mr. Markand Adhikari
Vice Chairman & Managing Director
Janmat TV
Adhikari Chambers,
Oberoi Complex, 6/7th Floor,
Andheri (W), Mumbai -400 053.




Mr. Paritosh Joshi
President (Advertising Sales & Distribution)
STAR India Pvt. Ltd.,
'The Masterpiece', Marol Naka,
Andheri-Kurla Road, Andheri (E),
Mumbai- 400 059 .



Mr. R. C. Venkateish
ESPN Software India Pvt. Ltd.
7th Floor, Tower C,
Infinity Towers, DLF Phase-2,
Gurgaon-122 002




Mr. Rajat Sharma
Chairman
India TV
Plot No.17-B,
Sector 16-A, Film City
Noida 201301
Uttar Pradesh



Mr. Uday Shankar
Director,
Media Content & Communications,
Services (I) Pvt. Ltd.,
Star News Centre,
Off Dr. E Moses Road,
Mahalaxmi, Mumbai - 400 011.




CO-OPTED DIRECTORS



Mr.Man Jit Singh
CEO
MSM India Pvt Ltd
Interface Building no.7
near Goregaon
Sports Central,
Malad(West),
Mumbai �400064



Mr. Punit Goenka
Director
Zee News Ltd FC-19, Sector 16 A,
Noida 201 301
Uttar Pradesh




Mr. Siddharth Jain
Vice President (South Asia)
Turner International India Pvt. Ltd.
5th Floor, Radisson Commercial Plaza,
National Highway No. 8,
Mahipalpur,
New Delhi � 110 037.





SPECIAL INVITEES



Mr. Haresh Chawla
CEO
Network 18
Empire Complex, 1st Floor,
414, Senapati Bapat Marg,
Lower Parel,
Mumbai � 400 013.



Mr. Jayant Mammen Mathew
Director
MM TV Limited
P. B. No. 106,
Kandathil Varghese Mappillai
Memorial Society Building
K. K. Road, Kerala
Kottayam � 686 001.




OTHER IBF MEMBERS



Mr. Ajay Kumar Ramanuja
Principal Consultant
Kasthuri Media Pvt. Ltd.
12 & 12/1, Kasturba Road,
Bangalore - 560 001.



Mr. Rajesh Kamat
CEO
Viacom 18 Media Pvt. Ltd.
(Formerly MTV Networks India Pvt. Ltd.)
36 B, Dr. R. K. Shirodkar Road,
Parel, Mumbai - 400 012.




Mr. K. Madhavan
Managing Director
Asianet Communications Ltd.,
Jay Chambers, 'R' 2nd Floor
Service Road, Vile Parle (East).
Mumbai- 400 057 (India)




Mr. Kalanidhi Maran
Chairman & Managing Director
SUN TV
268-269, IIIrd Floor,
Anna Salai, Teynampet,
Chennai- 600 018.




Mr. M. Regunathan,
Director
Raj Television Network Ltd
32, Poes Road, 2nd Street
Teynampet,
Chennai 600 018




Mr. Nikhil Mirchandani
Managing Director
NGC Network (India) Pvt. Ltd.,
South Asia,
205, Okhla Industrial Estate,
Phase - III,
New Delhi - 110 020.




Mr. Rahul Johri
Head of India Operations
DISCOVERY
9/1 B, Qutab Inst. Area,
Aruna Asaf Ali Marg,
New Delhi.110 067.



Ms. Preet K. Dhupar
Director Finance & Operations
BBC World
E-21, Hauz Khas Market,
New Delhi � 110 016.




Mr. Ravi Prakash
CEO
TV 9,
Associated Broadcasting Co Pvt Ltd.,
No.97, Road No.3, Banjara Hills,
Hyderabad - 500 034.



Mr. Rukin Kizilbash
General Manager,
Taj Television (India) Pvt. Ltd.
403, Manish Commercial Centre,
Dr. Annie Besant Road,
Worli, Mumbai - 400 025.




Mr. Shantonu Aditya
Executive Director
UTV Global Broadcasting Ltd.
Parijaat House,
1076, Dr. E. Moses Road,
Worli Naka,
Mumbai � 400 018




Mr. Sharrath Marar
CEO,
Maa television Network Limited,
D. N. 6-3-663/B, Maa Chambers,
Behind Topaz Building, Punjagutta,
Hyderabad - 500 082.




Mr. Harish Thawani,
Director,
NEO Sports Broadcast Private Limited
Nimbus Centre, Oberoi Complex,
Andheri-West,
Mumbai � 400 053.



Mr. S. Ranganathan
Vice President (Admn. & Legal)
Jaya TV
Mavis Satcom Limited
No. 48 NP Jawaharlal Nehru Road
Ekkaduthangal
Chennai 600 032.





Mr. Sudhakar Jayaram
Director & CEO
Amrita Television
TC 15/ 1069, Gandhi Nagar,
Vazhuthacaud,
Thiruvananthapuram � 695 014




Mr. Vineet Jain
Managing Director
Zoom TV
Bennett Coleman & Co. Ltd.
The Times of India Building,
Dr. D.N. Road,
Mumbai - 400 001.




INX Media Pvt Ltd.
Urmi Corporation Park,
1 st Floor, Solaris �D,
Opp. L & T Gate No. 6,
Saki Vihar Road, Powai,
Mumbai 400 072




Mr. Harsh Krishna Rohtagi
Executive Vice President
(Revenue Mgt & New Ventures)
NDTV Imagine Ltd
4th Floor, Opp. Fun Republic
Off Link Road, Andheri (W)
Mumbai 400 053.




Ms. Anuradha Prasad
Managing Director
B.A.G. Network Ltd.
FC-23, Sector 16 A, Film City
Noida 201 301
Uttar Pradesh



Mr. Kartikeya Sharma
Managing Director
India News,
Information TV Pvt Ltd.
Media House,
276, Capt. Gaur Marg,
Srinivaspuri,
New Delhi 110 065.




Mr. Antoine Villeneuve
Sr. Vice-President & Managing Director
THE WALT DISNEY CO. (I) PVT. LTD.
4th Floor, Peninsula Tower � I,
Ganpatrao Kadam Marg,
Lower Parel,
Mumbai � 400 013





ASSOCIATE MEMBERS



Mr. Vikram Kaushik
Managing Director & CEO,
TATA Sky Ltd.,
3rd Floor,
Administrative Office Building,
Bombay Dyeing & Mfg Co. Ltd.,
Pandurang Budhkar Marg,
Worli, Mumbai 400 025






Mr.Lalit Jain
Director
Essel Shyam Communications Ltd.
C-34, Sector � 62,
Electronic City,
Noida � 201 307,
Uttar Pradesh




IBF Members

1.
Mr. Jawahar Goel, Zee Network

2.
Mr. I. Venkat, Eenadu TV

3.
Mr. G. Krishnan, TV Today

4.
Mr. Paritosh Joshi, Star TV

5.
Mr. Rohit Gupta, Multi Screen Media

6.
Mr. Raj Nayak, NDTV

7.
Mr. Joy Chakraborthy, Zee Network



AAAI Members

1.
Mr. Madhukar Kamath, Mudra

2.
Ms. Ambika Srivastava, Starcom

3.
Mr. Sam Balsara, Madison

4.
Mr. Srinivasan Swamy, R.K.Swamy BBDO

5.
Ms. Lynn De Souza, Lintas

6.
Mr. Sashi Sinha, Lodestar

7.
Mr. Vikram Sakhuja, Group M


IBF Members

1.
Mr. Paritosh Joshi, Star TV

2.
Mr. I. Venkat, Eenadu TV

3.
Ms. Ameeta Jog, MSM India Pvt Ltd

4.
Mr. Ashok Soni, Star TV

5.
Mr. Dinesh Gupta, NDTV

6.
Ms. Laxmi Shetty, Zee Network

7.
Mr. R. Rikhy, TV Today

8.
Mr. Sunil Pasricha, ESPN

9.
Ms. Sudha Rao, Network 18



AAAI Members

1.
Mr. Shashi Sinha, Lodestar

2.
Mr. Gopakumar Nair, Group M

3.
Mr. Ganesh R. Shetty, Mudra

4.
Mr. Sandeep Suchak, Rediffusion

5.
Mr. R.S.R. Murthy, Madison

6.
Mr. C. Suresh, Drafts FCB

7.
Mr. Himanshu Shah, Lintas

8.
Mr. K. L. Venkat, R. K. Swamy BBDO

9.
Mr. Dinesh Jain, TLG




IBF Members

1.
Ms.Ameeta Jog, MSM India Pvt Ltd

2.
Mr. Ashok Soni, STAR India

3.
Ms. Laxmi Shetty, Zee Network

4.
Mr. Dinesh Gupta, NDTV

5.
Mr. R. Rikhy, TV Today

6.
Mr. Veera Swamy, Eenadu TV

7.
Mr. Sunil Pasricha, ESPN

8.
Ms. Sudha Rao, Network 18

9.
Mr. Avinash Pandey, Star News

10.
Mr. Suhas Kokate, Walt Disney

11.
Mr. Hardik Shah, Ten Sports

12.
Mr. Nand Punjabi, Sahara TV

13.
Mr. Ganesh Rao, Viacom 18




1.
Mr. R. C. Venkateish, ESPN

2.
Mr. Chintamani Rao, Times Global Broadcasting

3.
Mr. Uday Shankar, Star News

4.
Mr. Paritosh Joshi, Star TV

5.
Mr. A. Mohan, Zee TV

6.
Mr. Vijay Rajput, ESPN

7.
Ms. Ritu Manchanda, Sahara Samay

8.
Mr. Aamod Gupte, Zoom TV

9.
Mr. Rahul Khanna, India TV

10.
Mr. Anshuman Sharma, Tata Sky

11.
Mr. A. Sushil Kumar, Amrita TV

12.
Mr. Sandeep Dahiya, Viacom 18

13.
Ms. Anju Jain Kumar, Walt Disney




1.
Mr. Jawahar Goel, Zee TV

2.
Mr. I. Venkat, Eenadu TV

3.
Mr. Paritosh Joshi, STAR TV

4.
Mr. R. C. Venkateish, ESPN

5.
Mr. Gurjeev Singh Kapoor, Star DEN

6.
Mr. Mohd. Mujeebuddin, Star DEN

7.
Mr. Amit Arora, Star DEN

8.
Mr. Dinesh Jain, Zee Turner

9.
Mr. Vipesh Dhaibar, Zee Turner

10.
Mr. A. Mohan, Zee TV

11.
Mr. I.A. Uthayya, ETV Network

12.
Mr. Natarajan, Sun Network

13.
Mr. Rajesh Kaul, MSM India Pvt. Ltd.

14.
Mr. Vijay Rajput, ESPN

15.
Mr. Makarand Palekar, ESPN

16.
Mr. Arun Poddar, Neo Sports

17.
Mr. Rajmohan Nair, TV Today




1.
Mr. Rajeev Mathur, NDTV

2.
Mr. Ashok K. Vermani, TV Today

3.
Mr. A. Mohan, Zee TV

4.
Mr. S. Bannerjee, Zee TV

5.
Mr. Rahul Khanna, India TV

6.
Mr. Aamod Gupte / Ms. Rachna Burman, Zoom & Times Now

7.
Ms. Ritu Manchanda, Sahara Samay

8.
Mr. Frank Thomas, Asianet




1.
Mr. Puneet Goenka, Zee TV

2.
Mr. Paritosh Joshi, Star TV

3.
Mr. Siddharth Jain, Turner

4.
Mr. Haresh Chawla, Network 18

5.
Mr. R. Radhakrishnan, Amrita TV

6.
Mr. Rajeev Mathur, NDTV
Rajaghiri Gazzali
20/07/2010

3.5 சதவிகித இடஒதுக்கீடு ? - டாக்டர் சே.சாதிக்

3.5 சதவிகித இடஒதுக்கீடு ? - டாக்டர் சே.சாதிக்

( முன்னாள் துணை வேந்தர், சென்னை பல்கலைக்கழகம் )

நன்றி : சமநிலை சமுதாயம், மாத இதழ், சென்னை.

வெகுகாலம் காத்திருந்த இட ஒதுக்கீடு தமிழக முஸ்லிம்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சியானது. அநேகமாக அனைத்துக் கட்சிகளும் அனைத்து சமூக மக்களும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இன்னும் ஓர் உண்மையைப் பார்க்க வேண்டும். இட ஒதுக்கீடு என்பது வேலை வாய்ப்பிற்கும் உயர் கல்விக்கும்தான். இரண்டிற்கும் ஒதுக்கீடு இருந்தாலும் வேலைக்கோ அல்லது உயர் கல்விக்கோ சேருவதற்கு குறைந்த அளவு தகுதி வைத்திருப்பார்கள். அனேகமாக அது மதிப்பெண்களாகத்தான் இருக்கும். அந்தக்குறைந்த தகுதியைப் பெறாதவர்களுக்கு ஒதுக்கீடு உதவ முடியாது. ஆகவே தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

இதையே லிண்டன் ஜான்சன் என்ற அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி வாய்ப்பின் வாசலை நம் மக்களுக்குத் திறக்க வேண்டியது முக்கியம். அந்த வாயிலில் நுழைவதற்கு அவர்களைத் தயார் செய்வது அதைவிட முக்கியம் என்று குறிப்பிட்டார்.

ஆகவே இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேற மிகவும் முக்கியமானது மாணவர்களின் தகுதியை வளர்ப்பதாகும். அதே போன்று வேலை தேடும் இளைஞர்களின் தகுதியையும் பொது அறிவையும் உயர்த்துவதாகும்.


வேண்டுவது என்ன ?

தரமும், தகுதியும் மந்திர சக்தியால் மாய வித்தைகளால் ஒரே கணத்தில் வருபவை அல்ல அதிக விளைச்சல் தரும் பயிரைக் கடைசி நாளில் கண்காணித்துப் பெற்றுவிட முடியாது ஆகவே அடிப்படையிலிருந்தே பிள்ளைகளைத் தயார் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மொத்த மக்கள் தொகையில் 73 சதவீதம் ஆகும். முஸ்லிம்களிடையே ஆண்கள் 81 சதவீதமும், 79 சதவீதம் பெண்களும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக உள்ளனர். ஆனால் 5 ம் வகுப்பைத்தாண்டும் நிலையிலும் அதன் பிறகும் முஸ்லிம்கள் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து விடுவது தான் வேதனையானது.

இதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன. மிக முக்கியமான காரணம், பொருளாதாரம் ஏழ்மையில் வாடும் முஸ்லிம்கள் வயிற்றுப் பாட்டையே கவனிக்க முடியாத நிலையில் கல்வியை எப்படி கவனிப்பது ?

இது ஒரு நியாயமான கேள்வி போல் தோன்றலாம். அதுவே முழுக்காரணம் அல்ல. ஆர்வமும், அக்கரையும் கல்விமேல் இல்லை என்பதும் ஒரு முக்கிய காரணமாகும். அக்கறையுள்ளவர்கள் ஏழையாக இருந்த போதும் பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்கான வழியை முயன்று தேடி வெற்றி பெற்றுள்ளதை முஸ்லிம் சமுதாயத்தினரும், அதிக அளவில் பிற சமூகத்திலும் சிறப்பாக கிருத்துவ சமூகத்திலும் காணலாம்.

இதற்கு சமுதாயம் பெரிய அளவில் அமைப்பு ரீதியாகப் பரவலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் பல வழிகளில் கல்வி வாய்ப்பையும், வசதியையும் உருவாக்க வேண்டும். பிள்ளைகளை நன்றாகப் படிக்க ஊக்குவிக்க வேண்டும். ஏழ்மை காரணமாக ஒரு முஸ்லிம் பிள்ளை படிக்க முடியவில்லை என்றால் சமுதாயமே அதற்குப் பொறுப்பு என்று உணரும் நிலை உருவாக வேண்டும்.

இட ஒதுக்கீடு : இன்னொரு பக்கம்

சிறுபான்மையினர் நடத்தும் உயர் கல்விக்கூடங்களில் 50 சதவீதம் இடங்களை சிறுபான்மையினரே நிரப்பிக் கொள்ளலாம் என்ற ஒரு ஏற்பாடு தமிழகத்தில் உள்ளது. மொத்தம் 14 முஸ்லிம் கல்லூரிகளில் 11 கல்லூரிகள் முஸ்லிம் சிறுபான்மைத் தகுதியைக் கேட்டுப் பெற்றுள்ளது. அவைகளில் ஆண்டுதோறும் சுமார் 4000 இடங்களில் 2000 இடங்கள் முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்டவை. இந்த ஏற்பாடு கூட ஒரு வகையில் இட ஒதுக்கீடுதான். ஆனால் 800 முதல் 1000 இடங்களில் முஸ்லிம்கள் சேராமல் அந்த வாய்ப்பு பிற சமூக மாணவர் களுக்குப் போய்க் கொண்டு இருக்கிறது.

ஏன் நமக்கென்று ஒதுக்கிய இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன? இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் அதிகமாக இருப்பதால், அதைச் செலுத்த முடியாமல், அவைகளில் சேராமல் இருக்கிறார்கள். இரண்டு பணம் இருந்தாலும் குறைந்த பட்சம் தகுதி மார்க் (Minimum Eligible Marks ) இல்லாத நிலையும் உள்ளது.

ஆகவே தகுதி மார்க்கும் வேண்டும். கட்டணம் மற்றும் வாழ்வுச் செலவும் பணமும் இல்லாமல் தனியார் கல்லூரிகளில் நமது இடங்கள் காலியாக உள்ளன. அவை அப்படியே காலியாக விடப்படவில்லை. பிற சமூகத்தினர் அவ்விடங்களை பெற்று வளர்கிறார்கள். எனவே, தகுதி மார்க் வாங்கும் வண்ணம் மாணவர்களை ஊக்குவித்தல் அவசியம். அதற்கு தொடக்கம் முதலே அவர்களைக் கண்காணித்து உதவி செய்து வளர்த்து வர வேண்டும். இது நம் சமுதாயக் கடமை.

அப்படிச் செய்கின்றபோது தானாகவே அதிக மதிப்பெண்கள் பெற்று அரசு கல்லூரிகளிலும், அண்ணா பல்கலைக் கழகத்தின் கல்லூரிகளிலும், அரசு உதவி பெற்ற கல்லூரிகளிலும் குறைந்த கட்டணத்துடன் நல்ல வாய்ப்பான பாடப் பிரிவுகளிலும் சேர முடியும். அப்போதுதான் உண்மையிலேயே அரசு தந்திருக்கும் 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு அர்த்தமுள்ளதாக அமையும்.

சமுதாயம் உயர்ந்த கல்விக் கட்டணத்திற்கும் ஏற்பாடு செய்தால் இரண்டாம் கட்டத்தில் உள்ள மாணவர்களும் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வாய்ப்பு உண்டு.

Monday, July 19, 2010

தொழிற்பயிற்சி பிரிவுகளின் பட்டியல்

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர்(சிறுபான்மையினர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்கும்
2010 மற்றும் 2011 க்கான தொழிற்பயிற்சி பிரிவுகளின் பட்டியல்:
(இதைப்பற்றிய அறிவிப்பு முன்னணி தமிழ் நாளிதழ்களில் இடம்பெறும்)

Heavy Vehicle Driving Training

Light Motor Vehicle Driver Training with PSV badge.

Advanced Embedded System

CNC Programming & Operation and CAD/CAM using Unigraphics Software

Production Operator (CNC shop)

Auto CAD (3D ModelinG Design using Auto CAD)

Advanced Networking using CISCO Routers

Computer Hardware Maintenance & MS office Tools

Apparel Manufacturing Technology (AMT)

Apparel Pattern Making (APM)

Apparel Manufacturing Technology (AMT)

Pattern Cutting Masters Course (PCMC)

Diploma in Knit Garment in Manufacturing Technology (DKMT)

Garment Making Course

Fitters Training Programme on Sulzer / Projectile / Rapier Weaving Machine

Weavers Training Programme

Certificate course in Knitting Technology

AVID -Digital Non Linear Editing

Multi Media

Audio Dubbing

Clothing Production Technology (CPT)

Fashion and Clothhing Technology (FCT)

Certificate course in Hotel Management and Cateriing Science

Garment Manufacturing Technology

Textile Designing & Computer Application

Diploma in logistics and Port Management

Certificate course in Automobile Technology

CNC Programming and operations

Hi Tech Welding (Arc,Gas,TIG&MIG)

JCB-Crane + Poclain + Fork lift operator / Maintenance

Jewellary Manufacturing

Business Management in Jewellary

Jewellary Designing & Hand Made Jewellary Techniques

Certificate course in ECG Technician

Certificate course in C.T.Scan operations.

Certificate course in Medical Lab Assistant

Certificate course in Exercise Therapy and Sports Rehabilitation

Plastics Mould Design with Auto CAD

Plastic Processing Machine Operator (PPMO)

Injection Moulding Machine operator (IMO)

Land surveying Supervisor

Certificate course in ELECTRICIAN

Certificate course in AIR CONDITIONING &REFRIDGERATION

Certificate course in FOUR WHEELER MECHNANISM

Certificate course in TWO WHEELER MECHANISM

Heavy Machine operation and Maintenance

Advanced Diploma in 3D Animation

Honours Diploma in Computer Application

Certificate course in computer Hardware

Computer Accountant

Certificate course in Linux, C, C++.

Web Developer

Certificate course in Multimedia

Auto CAD

Desk Top Publishing

Certificate course Mass Communication

Certificate course in Advertising

Certificate course in Communicative English

Editing, Non Linear Editing and Film Editing

Certificate course in Beauty Theraphy

Certificate course in Clinical Nursing Assistan

Certificate course in Radiological Assistant ( X-ray Assistant)

Certificate course in Medical Transcription

Certificate course in Digital Visual Communication

Certifcate course in Digital printing and Publication

Certificate course in Digital Photography

Certificate course in Mobile Phone Servicing

Certificate course in PLUMBING

Private Secretaryship and Executive Secretaryship

Certificate course in Different Footwear making

Certificate course in Leather Goods Making

The dates for walk in interview for selection of students will be published in leading Tamil dailies.
For further information, interested candidates may contact the concerned Institutions (Govt.
institutions) and Commissionerate of Backward Classes/ Most Backward Classes welfare
(044-28551442/ 28410042).

Sunday, July 18, 2010

காமராஜர் என்றொரு அரசியல்வாதி!

காமராஜர் என்றொரு அரசியல்வாதி!



நான் பிறக்குமுன்பே இறந்துபோன
காமராஜரைப் பற்றித்தான்
இன்றுகூட என் அப்பா
பெருமை பேசிப்பேசி
மாய்கிறார்!

ஒரு பினாமி இல்லை
புறம்போக்கு நிலமுமில்லை
பள்ளி கல்லூரி
எதுவுமில்லை
பட்டாசு கொளுத்திப் போடக்கூட
பட்டாளமில்லை!
பிறகெப்படி நம்புவேன்
இவர் அரசியல்வாதியென்று!

இவர் படிக்காத மேதையாம்!
அரசியலிலிருந்தும்
ஒரு டிகிரி கூட 'வாங்க'த் தெரியாத
இவர் அரசியலில் பேதையென்பேன்!
மதிய உணவு கொடுத்து
பள்ளிக்கு அழைத்தாராமே பிள்ளைகளை?
படிக்காத கூட்டமிருக்கும்வரையே
பதவி நிலைக்குமென்ற
அரிச்சுவடி கூட தெரியாத
இவரெல்லாமா அரசியல்வாதி?!

ஒருமுறை கூட
திருமணமாகவில்லை
வாரிசும் இல்லை
சொத்துமில்லை, பத்துமில்லை
சொந்தபந்தத்திற்கு
ஒரு பதவியுமில்லை!
இவரைப் போய்
"கிங் மேக்கர்" என்கிறார்கள்!

இன்றோ
இவர் ஆட்சியை அமைக்க
கோஷ்டிகளுக்குப் பஞ்சமில்லை
கொள்கையைப் பின்பற்றத்தான்
எவருமில்லை!
இவரணிந்த கதராடையை,
பாதயாத்திரை பக்தர்களின்
சீருடைபோல்
அவ்வப்போது மட்டுமே அணிகிறார்கள்
அடையாளத்திற்கு!

என் அப்பாவிடம் சொன்னேன்
இவர் அன்று
ஒருமுறைதான் தோற்றார்...
இன்றுவரை இருந்திருந்தால்
எல்லாத் தேர்தல்களிலும்
சொல்லிவைத்தாற்போல்
தோற்றுக்கொண்டே இருந்திருப்பார்!
விருந்து வைக்கத்தெரிந்தும்
'மருந்து' வைக்கத் தெரியாத
இவர் அரசியல்வாதியல்ல,
அரசியல் அப்பாவி!

Wednesday, July 14, 2010

இஸ்லாமிய வ‌ர‌லாற்றில் இந்த‌ மாத‌ம்

இஸ்லாமிய வ‌ர‌லாற்றில் இந்த‌ மாத‌ம்

ஷஅபான்

ஷஅபான் மாத‌த்தின் சிற‌ப்பு
அன்னை ஆயிஷா(ர‌ழி) அவ‌ர்க‌ள் அறிவிக்கிறார்க‌ள்: (ர‌மழானிற்கு)பிற‌கு ஷஅபான் மாத‌த்தை விட, வேறு எந்த‌ மாத‌த்திலும் ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் அதிக‌மாக‌ நோன்பு வைப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌வில்லை. ஏனெனில் ஷஅபான் முழுவ‌துமே நோன்பு வைப்பார்க‌ள். ம‌ற்றொரு அறிவிப்பில் ஷஅபானில் சில‌ நாட்க‌ளைத் த‌விர‌, அதிக‌மான‌ நோன்பு வைப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள் என‌ அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. (புகாரி,முஸ்லிம்)
ஷஅபான் மாத‌ம் ப‌தினைந்தாம் இர‌வு அல்லாஹுத் தஆலா த‌ன் ப‌டைப்பின‌ங்க‌ள் அனைத்தின் ப‌க்க‌மும் க‌வ‌ன‌ம் செலுத்துகின்றான். ப‌டைப்புக‌ள் அனைத்தையும் ம‌ன்னித்து விடுவான். ஆனால் இருவ‌ர் ம‌ன்னிக்க‌ப்ப‌டுவ‌தில்லை. 1.அல்லாஹ்வுக்கு இணை வைப்ப‌வ‌ர். 2.எவ‌ருட‌னாவ‌து விரோத‌ம் கொண்ட‌வ‌ர் என‌ ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் அருளிய‌தாக‌ அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ர‌ழி) அவ‌ர்க‌ள் அறிவிக்கிறார்க‌ள். (அஹ்ம‌த்)

இம்மாத‌த்தின் முக்கிய‌ நிக‌ழ்வுக‌ள்

கிப்லா மாற்ற‌ம்:
ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் ம‌தீனா சென்ற‌திலிருந்து பைத்துல் முக‌த்திஸை நோக்கி தொழுது கொண்டிருந்தார்க‌ள். ஹிஜ்ர‌த் செய்த‌ ப‌தினேழாவ‌து மாத‌த்தில் (ஷஅப‌னில்) பைத்துல் முக‌த்த‌ஸி‍லிருந்து, ம‌ஸ்ஜிதுல் ஹராம்(க‌ஃப‌துல்லாஹ்வின்) திசையை கிப்லாவாக‌ மாற்றி அல்லாஹ் குர்ஆனில் ஆய‌த்தை அருளினான்.
(ந‌பியே), உம்முடைய‌ முக‌ம் (கிப்லா மாற்ற‌க் க‌ட்ட‌ளையை எதிர்பார்த்து) வான‌த்தின் ப‌க்க‌ம் திரும்புவ‌தை நாம் காணுகிறோம். ஆக‌வே, நீர் விரும்புகின்ற‌ கிப்லாவுக்கு உம்மை நிச்ச‌ய‌மாக‌ நாம்திருப்பி விடுகிறோம்; என‌வே, உம்முக‌த்தை (தொழும்போது ம‌க்காவிலுள்ள‌) ம‌ஸ்ஜிதுல் ஹ‌ராமின் ப‌க்க‌ம் திருப்புவீராக‌! (முஃமின்க‌ளே) நீங்க‌ளும் எங்கிருந்தாலும் (தொழும்போது ம‌ஸ்ஜிதுல் ஹ‌ராமாகிய‌) அத‌ன் ப‌க்க‌ம் உங்க‌ளுடைய‌ முக‌ங்க‌ளை திருப்பிக் கொள்ளுங்க‌ள். (குர்ஆன் 2;144)

ர‌ம‌ழான் மாத‌த்தில் நோன்பு க‌ட‌மை:
ஹிஜ்ரி இர‌ண்டாம் ஆண்டு, ஷஅபான் மாத‌த்தில் தான் ர‌மழான் மாத‌த்தில் நோன்பு வைப்ப‌து க‌ட‌மையாக்க‌ப்ப‌ட்ட‌து.
ந‌ம்பிக்கை கொண்டோரே! உங்க‌ளுக்கு முன்னிருந்த‌வ‌ர்க‌ள் மீது க‌ட‌மையாக்க‌ப் ப‌ட்டிருந்த‌து போல் உங்க‌ள் மீதும் நோன்பு (நோற்ப‌து) க‌ட‌மையாக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து; (அத‌னால்) நீங்க‌ள் இறைய‌ச்ச‌முடைய‌வ‌ர் ஆக‌லாம். (குர்ஆன் 2;183)

ப‌னூ முஸ்த‌ல‌க் யுத்த‌ம்:
இதை "அல் முர‌ஸீஃ யுத்த‌ம்" என்றும் கூற‌ப்ப‌டுகிற‌து. இந்த‌ யுத்த‌ம் ஹிஜ்ரி 5 ஆம் ஆண்டு ஷஅபான் மாத‌ம் நிக‌ழ்ந்த‌தென்றும், சில‌ர் ஹிஜ்ரி‍ 6 ஆம் ஆண்டு ஷஅபான் மாத‌ம் நிக‌ழ்ந்த‌தென்றும் கூறுகின்ற‌ன‌ர். இப்போரில் எதிரிகள் அணி‌யில் 10 பேர் கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர். முஸ்லிம்க‌ளின் அணியில் யாரும் கொல்ல‌ப்ப‌ட‌வில்லை. ஆனால் ஒரு அன்சாரி ச‌ஹாபி, ஹிஷாம் இப்னு ஹுபாபா என்ற‌ ஒரு முஸ்லிம் வீர‌ரை எதிரிப்ப‌டையில் உள்ள‌வ‌ர் என்று எண்ணித் த‌வ‌றாக‌க் கொலை செய்துவிட்டார்.
இப்போரிலிருந்து திரும்பும்போது தான் அன்னை ஆயிஷா(ர‌ழி) அவ்ர்க‌ள் மீது, ந‌ய‌வ‌ஞ்ச‌க‌ர்க‌ள் அவதூறு ச‌ம்ப‌வத்தை பர‌ப்பினர். இத‌னால் க‌வ‌ளைய‌டைந்திருந்த‌ அன்னையார் அவ‌ர்க‌ளுக்கு, அவ‌ர்க‌ளின் ப‌த்தினித்த‌ன‌த்தை ப‌றைசாற்றி அல்லாஹுத்த‌ஆலா குர்ஆனில் அத்தியாய‌ம் 24 இல், 11 முத‌ல் 20 வ‌ரை உள்ள‌ வ‌சன‌ங்க‌ளை இற‌க்கி வைத்தான்.

உம‌ர் இப்னு க‌த்தாப்(ர‌ழி) ப‌டைப்பிரிவு:
ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு, ஷஅபான் மாத‌த்தில் உம‌ர்(ர‌ழி) அவ‌ர்க‌ளின் த‌லைமையில் 30 ந‌ப‌ர்க‌ளை 'துர்பா'‌ என்னும் ப‌குதிக்கு ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் அனுப்பி வைத்தார்க‌ள். இவ‌ர்க‌ளின் வ‌ருகையை அறிந்த‌ துர்பாவில் வ‌சிக்கும் ஹ‌வாஸின் கூட்ட‌த்தின‌ர்க‌ள் அப்ப‌குதியை காலி செய்துவிட்டு ஓடிவிட்ட‌ன‌ர்.

ப‌ஷீர் இப்னு சஅது(ர‌ழி) ப‌டைப்பிரிவு:
ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு, ஷஅபான் மாத‌த்தில் ப‌ஷீர் இப்னு சஅது(ர‌ழி) அவ‌ர்க‌ளின் த‌லைமையில் 30 ந‌பர்க‌ளை அனுப்பி 'ஃப‌த‌க்' என்னும் ப‌குதியில் வ‌சிக்கும் ப‌னூ முர்ரா கிளையின‌ர்மீது த‌க்குத‌ல் ந‌ட‌த்த‌ ஒரு ப‌டையின‌ரையும் அனுப்பிவைத்தார்க‌ள்.

அபூகதாதா(ர‌ழி) ப‌டைப்பிரிவு:
ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு ஷஅபான் மாத‌த்தில் அபூக‌தாதா(ர‌ழி) அவ‌ர்க‌ளின் த‌லைமையில் 15 பேருட‌ன், ந‌ஜ்து மாகாண‌த்தில் உள்ள‌ 'முஹாரிப்' என்னும் ப‌குதிக்கு ஒரு ப‌டையை ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் அனுப்பி வைத்தார்கள்.

தொகுப்பு: மவ்லவி அ.சீனி நைனார் முஹம்மது தாவூதி துபாய்

Tuesday, July 13, 2010

நபிகள் நாயக சீர்த்தி

நபிகள் நாயக சீர்த்தி

( அ.தெளஃபீக் ரமீஸ், M.C.A.,M.A.,M.Phil.,NET.,Cert.in.urdu.,

தமிழாய்வுத் துறை, ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி – 20 )

முஹம்மது (ஸல்) என்னும் திவ்ய நாமத்திற்கு சீர்த்திப் பெற்றியவர் புகழப்பட்டவர் – புகழுக்குரியவர் என்னும் ஆழிய பொருள் உண்டு. அப்பெரும் பெயரின் அர்த்த பாவங்களில் ஆழ்ந்து திளைத்தல் என்பது நல்லோர் பெறும் தனிப்பேறு. இறைவனின் திருவருள் நிறைந்த குருவருளால் அத்தீங்சுவையில் ஒரு கோண்பாகம் கண்டுளேன்.

முஹம்மது (ஸல்) என்னும் திவ்ய நாமத்திற்கு ‘சீர்த்திப் பெற்றியர்’ –புகழப்பட்டவர் – புகழுக்குரியவர் என்னும் ஆழிய பொருள் உண்டு. அப்பெரும் பெயரின் அர்த்த பாவங்களில் ஆழ்ந்து திளைத்தல் என்பது நல்லோர் பெறும் தனிப்பேறு. இறைவனின் திருவருள் நிறைந்த குருவருளால் அத்தீஞ்சுவையில் ஒரு கோண்பாகம் கண்டுள்ளேன்.

முஹம்மது (ஸல்) என்பது திவ்ய நாமம். ‘திவ்’ என்றால் ஒளி என்று பொருள் மூலமந்திரத் திருக்கலிமாலின் இருபத்து நான்கு அட்சரங்களும் நூரீ என்னும் ஒளியெழுத்துக்கள். எனவே,’முஹம்மது’ (ஸல்) என்பது ஒளிதிகழ் நற்பெயர் என்பது தெற்றென விளங்கும். அதனாலன்றோ, தாஜுஸ்ஸலவாத்தில் “இஸ்முஹூ மக்தூபுன் மர்ஃபூஉன் மஷ்ஃபூஉன் மன்கூஷுன்ஃபில் லவ்ஹி வல் கலம்” என்னும் நனி சால அழகிய கோர்வை.

‘வ குல்ல ஷைஇன் அஹ்ஸைனாஹூ ஃபீ இமாமின் முபீன்’ என்பது திருக்குர்ஆனில் ஒரு ஸ்லோகபாகம். இதனால் முஹம்மது (ஸல்) என்னும் செளந்தர்ய நாமம் மக்தூபானது என்பது பெற்றோம்.

‘வரஃபஃனா லக திக்ரக்’ என்று வல்லோனாம் அல்லாஹ் நம் நாயகத்தை நோக்கி நயந்து கூறினன். இதனால், முஹம்மது (ஸல்) என்னும் ஐஷ்வர்ய நாமம் மர்ஃபூவானது என்பது பெற்றோம்.

‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்பது திருக்குர்ஆனில் ஒரு ஓதம் திருக்கலிமாவின் இந்தச் சற்குணபாகத்தின் பொருட்டால் ஆதிபிதா ஆதம் (அலை) பாவமன்னிப்பென்னும் அகசொஸ்த்தம் பெற்றதறிவோம். இதனால், முஹம்மது (ஸல்) என்னும் கற்பக நாமம் மஷ்ஃபூவானது என்பது பெற்றோம்.

‘லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்னும் தாரக மூல சாராம்ஸ மந்திரத் திருக்கலிமாவை ஏகன் தன் அர்ஷெ முஅல்லாவில் வைர அச்செனப்பொறித்தனன். இதனால், முஹம்மது (ஸல்) என்னும் நித்ய – சத்ய – வித்ய நாமம் மன்கூஷானது என்பது பெற்றோம்.

முஹம்மது (ஸல்) சீர்த்திப் பெற்றியர் கீர்த்தி என்றால் புகழ். அதனினும் பெரிது சீர்த்தி. ‘சீர்த்தி மிகு புகழ்’ என்று தொல்காப்பியம் நவிலும் ‘மிகுபுகழ்’ என்பது வினைத்தொகை மிகுந்த – மிகுகின்ற – மிகும் என்று முக்கால முணர்த்தா நிற்பது. எனவே, முஹம்மது (ஸல்) அவர்களும் முன்பு புகழப்பட்டவர், இன்றும் புகழப்படுபவர், இனியும் ஓர் எல்லையின்றி புகழப்படப்போகிறவர் என்னும் உயரிய அந்தஸ்த்தில் உள்ளார்கள். ‘வலல் ஆகிரத்து கைருல்லக மினல் ஊலா’ என்பது திருக்குர்ஆன் ஸ்லோகமால் கணத்திற்குக் கணம் அண்ணலின் ஜ்யோதிர்மயம் விரிந்து பரந்த வண்ணம் உள்ளது.

இது நிற்க. முஹம்மது (ஸல்) என்னும் ஞானதீபத்திற்கு விட்டில்களான நாயகக்காதலர்தம் பேசரிய நிலை பற்றிச் சற்றே பேசுதல் விழைவாம். எங்கும் நிறை பரம்பொருளின் அம்ருத ஒளிக்கு ஓர் ஆடியாய்ப் பண்டு தெளிவெய்தி ‘தேசம்’ எனப் பெயரிய இப்பாரதத் திருநாட்டில் முந்தை ஞானியர் சிந்தையில் முகிழ்த்த உபாஸன உபாயம் நாயக நாயகி பாவனை என்பது உலகப் பிரஸித்தம். அஃது, துவக்கநிலைச் சாதகர்க்குத் தொடர்பறாமை கருதி சரீர சம்பந்த காமம் சான்ற பரிபாஷையில் பேசப்படுவதுண்டு. அவ்வாறன்றி, ஆப்தர் அறி நுணுக்க மொழியிலும் பேசப்படுவதுண்டு. பக்தி ரசம் கொப்பளிக்கும் இப்பாவனை பாவிய பாவிகப் பனுவல்கள் இஸ்லாத்தின் இதயமென நல்லறிஞர் ஒப்பும் சூஃபித்துவத்தில் சுடர் வீசிப் பூத்தன. இறைக்காதல் நறவம் நுரைத்துத் ததும்பும் இப்பொற்கிண்ணங்களில்தான் வான்படு வாலைக் குமரியின் வாலிபப்பால் என நபிகள் நாயகக் காதலும் பொங்கி வழிதல் காண்கிறோம். கஅபு (ரலி), மெளலானா ரூமி, இமாம் பூசரி, அல்லாமா இக்பால், குணங்குடி மஸ்தான், உமறுப்புலவர் மற்றும் இன்னோரன்ன ஞானக் கவிஞர்கள் நபிகள் நாயகத் திருமேனி நல்லழகை எல்லை கடவாது மோகித்து நின்று அதிரஸானுபவங்களில் தோய்ந்து மெத்த மெச்சி வருணித்துள்ளனர். அவ்வப்போது அப்போதுகளில் தாது கோதியபோது என் அந்தரங்கத்தில் உதிர்ந்த மகரந்தப் பொற்துகள்களால் என் உயிர் சிலிர்த்துப் பூப்படைந்த வழுவற்ற தெய்வப்பொழுதுகளை வழுத்துகிறேன். விம்மித விரிவடையும் என் நெஞ்சுக்கூடு வெடிப்புறல் அஞ்சி இருகரம் கொண்டு அழுத்துகிறேன்.

மெய்ஞான இலக்கியங்களில் காதற்பாவிகம் குறித்த தம் ஆய்வில் ஜோனா விண்டர்ஸ் (Jonah Winters), “It was the revolutionizing influence of Muhammad that inspired the development of a spiritual side to erotic poetry” என்று நாயகப் புகழ்ச்சி புகன்ற பின் இவ்வாறு எழுதுகிறார் “Unlike founders of certain other religions, Muhammad figures relatively little in the theme of erotic mysticism” எஞ்ஞான்றும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்பால் முறைபிசகு நேரா அணுகுமுறை காத்தற்பொருட்டு, ஞானக்கவிகள் தம் அறிவுவிழி மோகக் கிறக்கத்தில் மருகிச் செருகாது பேணி வந்துள்ளனர். எனினும், மெளலானா ரூமியின் இலக்கியங்களில் நாற்பதாண்டுகள் மூழ்கி ஆழங்காற்பட்டு நுண்மாண் நுழைபுலம் கண்ட அன்னிமேரி ஷிம்மெல் (Annemarie Scheimmel) கூறுவதுபோல் “The Western student of Islam will be surprised to see the strong ‘mystical’ qualities attributed to Muhammad’.

ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் நாயகப் பேரொளியின் நேயச் சாற்றின் ஈரம்பட வேண்டும் என்னும் அபிலாஷை என் அகத்தில் முற்றிவரும் இக்காலை, தூசுபடு பொறிநுகர்வின் மாசு இரித்த அருங்கலைவாணர்தம் நல்லிசை சிவணிய இலக்கியதரமார்ந்த பாடல்களைச் செவித்துச் சுவைத்து, பாகென மெழுகும் பக்தியில் பரவசம் பயில்வேனுக்கு நாயகம் மீதூறும் நற்காதலால் பாசுரங்கள் எழுதிப் பார்க்க ஆவல் மேலிட்டது. தளையறியேன், தொடையறியேன், இலக்கணப் புலமை என்னும் நிலையறியேன். எனினும் ஆசை பற்றி அறையலுற்றேன். ‘காற்றின் வரும் கீதமே’ என்னும் பாடல் வழி ராகத்திற்குக் கேள்விக்கொடை நல்கியவர் இசைஞானி.

பல்லவி

யா சையிதுல் அன்பியா – என்

ஆசைமயல் தீர்க்க வாரீர் (யா சையிதுல் …)

அனுபல்லவி

வாசமிகு அமுத வாய்திறந்து

வாழ்த்து மொழியொன்று கூறீர் (யா சையிதுல்…)

சரணங்கள்

நேசமுடன் உங்கள் தாள்பணிந்தேன்

நெஞ்சம் நெகிழ்ந்திட முத்தமிட்டேன்

கோசங்கள் எனை மோசம் செய்யாமல்

காவல் கொடுத்து அபயநிலை தாரீர் (யா சையிதுல்…)



தாசர்க்குத் தாசர்க்குத் தாசன் என்னும்

தரமொன்று அடைந்துட எனை ஏற்றி

நாச நிலைகள் என்னை அணுகாமல்

நபியே ! கதியே ! நல்லருள் தாரீர் (யா சையிதுல்…)



வீசுமுக நிலவில் தினம் குளித்து

தேசு மழை நனைந்து உயிர்குளித்து

மாசில் எழில் நிறைந்த உமை நோக்கி

மண்மேல் உய்யும் அநுபவம் தாரீர் (யா சையிதுல்…)




ந‌ன்றி :
தி ஜ‌மால் 2006 - 2007
ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி ஆண்டு ம‌ல‌ர்


--
MUDUVAI HIDAYATH
www.imandubai.org
www.mudukulathur.com

Sunday, July 11, 2010

இஸ்லாமியர்களின் இதழியல் பணி

இஸ்லாமியர்களின் இதழியல் பணி

இஸ்லாமிய தமிழ் அறிஞர்களும் வியத்தகு முறையில் இதழியல் பணியாற்றி உள்ளனர். இஸ்லாமிய அறிஞர்கள் தமிழ் அறிஞர்களுக்கு இணையாக தமிழ் இதழியல் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர் என்பதை கீழ்க்கண்ட இதழ்கள் விவரம் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

1873 புதினாலங்காரி - நெயினார் மரைக்காயர்-வாப்பு மரைக்காயர் -கொழும்பு மாதஇதழ்.

1879 இஸ்லாம் மித்திரன் - எல்.எம். உதுமான் - இலங்கை.

1882 முஸ்லிம் நேசன் - சித்தி லெப்பை மரைக்காயர் இலங்கை வார இருமுறை.

1887-88 ஞானசூரியன் - ஷேகு மக்தூம் சாயபு.

1887-88 தங்கை நேசன் - ஷேகு மக்தூம் சாயபு.

1888 ஞானாசிரியன் - மலேசியா நாளிதழ்.

1888 உலக நேசன் - சித்தி லெப்பை மரைக்காயர் கொழும்பு வார இதழ்.

1888 வித்தியாவிசாரிணி - குலாம் காதிரு நாவலர் நாகூர் வார இதழ்.

1888 சிங்கை நேசன் - பினாங்கு மாதஇதழ்.

1888 விஜயகேதனன் - குலாம் காதிரு நாவலர் பினாங்கு மாதஇதழ்.

1888 சம்சுல் இஸ்லாம் - முஹம்மது யுஸுப் - சென்னை மாதஇதழ்.

1892 ஞான தீபம் - சித்தி லெப்பை மரைக்காயர் இலங்கை மாதஇதழ்.

1893 இஸ்லாம் மித்திரன் - இலங்கை.

நவயுகம் - இலங்கை.

இஸ்லாமியத் தாரகை - இலங்கை.

1900 அஸ்ஸபாப் - ஐ.எல்.எம். அப்துல் அஜீஸ் - இலங்கை.

1906 லிவாயுள் இஸ்லாம் - ரவண சமுத்திரம். முஹம்மது கௌஸ்
ஹாஜி. சுழனி பக்கிர் ஆலிம் - சென்னை நாளிதழ்.

1907 முஸ்லிம் நேசன் - சென்னை வார இதழ்.

1907 ஸைபுல் இஸ்லாம் - மௌலவி அஹ்மத் சயித் - பர்மா வார இதழ்.

1908 முஸ்லிம் தூதன் - ஹாஜி. சாகுல் ஹமிது - சென்னை வார இதழ்.

1909 இஸ்லாம் நேசன் - சுல்தான் சயீது அஹ்மத் - சென்னை ராவ்தர் மாத இதழ்.

1910 அஜாயிபுல் அலம் - ந. அ. மௌலி. முஹம்மது - வலுந்தூர் தாகிர் மாதஇதழ்.

1914 வஜிருல் இஸ்லாம் - முஹம்மது அப்துல்லா - பர்மா.

1916 ஸைபுல் இஸ்லாம் - மௌலவி அஹ்மத் சயீத் - வேலூர்.

1918 தொண்டன் - சென்னை வார இதழ்.

1919 முஸ்லிம் சங்க கமலா - ஹாஜி. பா. தாவூத் ஷா - நாச்சியார் கோவில் மாதஇதழ்.

1920 அல் கலாம் - ஹாஜி. பா. தாவூத் ஷா - நாச்சியார் கோவில் மாதஇதழ்.

1920 அல் கலாம் - ஹாஜி. பா. தாவூத் ஷா - சென்னை மாதஇதழ்.

1923 இஸ்லாம் - ஹாஜி. மௌலவி முஹம்மது லால்பேட்டை மாதஇதழ்.

1924 வஜிருல் இஸ்லாம் - முஹம்மது அப்துல்லா - கூத்தநல்லூர் மாதஇதழ்.

1925 அல் இஸ்லாம் அபுல் ஹுதா - திருச்சி மாதஇதழ்.

1926 முஹம்மது இஸ்மாயில் காயல்பட்டினம் மாதஇதழ்.

1926 முசல்மான் முஹம்மது அப்துல் காதர் - தென்காசி மாதஇதழ்.

1926 தூதன் - இலங்கை மாதஇதழ்.

1926 தாஜுல் இஸ்லாம் - மௌலவி. முஹம்மது - ஈரோடு - மாதஇதழ்.

1928 சம்சுல் இஸ்லாம் கா. பா. முஹம்மது இஸ்மாயில் - (பர்மா) - சென்னை மாதஇதழ்

1929 ஹிபாஜதுள் இஸ்லாம் - மௌலவி அப்துல் காதர்.

தப்லிகுள் இஸ்லாம் - மௌலவி மூசா - ஈரோடு - மாதஇதழ்.

அல் ஹிதாயா - முஹம்மது இஸ்மாயில் - ஈரோடு - மாதஇதழ்.

அல் ஹிதாயா - முஹம்மது இஸ்மாயில் - காயல்பட்டினம் - மாதஇதழ்.

1930 தினத்தபால் - க.அ. மீரான் மொய்தீன் - நாளிதழ் - இலங்கை.

1930 ஹக்குல் இஸ்லாம் - ஹாஜி ஹாபிஸ் முஹம்மது அப்துல் காதிர்

1931 சம்சுல் ஹுதா - யுஸுப் பாவலர் - மன்னார்குடி மாதஇதழ்

1932 தேசநேசன் - மலேசியா நாளிதழ்.

1932 முஸ்லிம் மித்திரன் - மாதஇதழ் - கொழும்பு - இலங்கை.

1932 முஸ்லிம் நண்பன் - இப்ராகிம் (பர்மா) வாரஇதழ்

1934 முஸ்லிம் பாதுகாவலன் - சாகுல் ஹமிட் - சென்னை மாதஇதழ்.

1934 தேகசேவகம் - தாவூத் ஷா - சென்னை வாரஇதழ்.

1934 முஸ்லிம் பாதுக்காவலன் - எம்.ஏ. சாகுல் ஹமிட் - சென்னை மாதஇதழ்.

1934 பத்ஹுல் இஸ்லாம் - எம்.ஏ. சாகுல் ஹமிட் - சென்னை மாதஇதழ்.

1935 சாந்தி - ஹாஜி. குலாம் - திருச்சி மாதஇதழ்.

1935 அரங்க வர்த்தமானி (பர்மா நாளிதழ்).

1936 இஸ்லாமிய பிரசங்கநேசன் - சென்னை மாதம் இருமுறை.

1936 முஸ்லிம் எம்.எஸ். அப்துல் மஜீத் - சென்னை மாதம் இருமுறை.

1936 இந்திய ஒளி - கே. ஏ. ஹமிது - திருச்சி வாரஇதழ்.

1936 உதய சூரியன் - அறிஞர் கரீம்கனி - பர்மா வாரஇதழ் மற்றும் 1942 இல மலேசியா பதிப்பு.

1938 லீடெர் கே.ஏ. ஹமிது - திருச்சி வாரஇதழ்.

1939 சமரசம் - மௌலவி அப்துல் ஹசனத் குத்புதீன்.

1939 தோழன் - கே. ஏ. ஹமிது - திருச்சி வாரஇதழ்.

1939 நூருல் இஸ்லாம் - மௌலவி ஹபிழ் - திருச்சி வாரஇதழ்.

ஏ. என். முஹம்மது யுஸுப் - சென்னை மாதஇதழ் (பிறகு வாரஇதழ்).

1939 முஸ்லிம் லீக் - முஹம்மது இப்ராகிம் (பர்மா) சென்னை மாதஇதழ்.

1940 காம்ரடு - கே. ஏ. ஹமிது - திருச்சி மாதம் இருமுறை.

1940 தொண்டன் - எம்.கே.எம். இப்ராகிம் - பர்மா நாளிதழ்.

1940 மலேயா நண்பன் - அப்துல் அஜீஸ் - சிங்கப்பூர் சவுத் முஸ்லிம் இந்தியன் பிரஸ் லிமிடெட்.

1944 பால்யன் - உ. அ. ஹனிபா - காரைக்கால் - வாரஇதழ்.

1945 வானொலி - உ. முகைதீன் அப்துல் காதர் - காரைக்கால் -மாதஇதழ்.

1945 அல் இல்ம் - மௌலவி. அப்துல் ரஜாக் ஜமாலி - இலங்கை.

1945-46 ஜிந்தாபாத் - சி.நெ.அ. முஹம்மது அன்வர் - அடியக்கமங்கலம்.

1946 இஸ்லாமியத் தாரகை - கே. எம்.எம் . ஸாலிஹ் - இலங்கை.

முஸ்லிம் லங்கா - எம்.எம். அப்துல் காதர் - இலங்கை.

தோழன் - எஸ். எம் . முகைதீன் - இலங்கை.

1947
எழுத்தாணி - பத்துபகாட்.

1949 சமுதாயம் - எஸ். எம். ஹனிபா (கல்ஹினை) - இலங்கை.

1950
தூதன்.

1950 களஞ்சியம்.

1954 முன்னேற்ற முழக்கம் - எச்.எஸ். பக்ருதீன் - இலங்கை.

1955
தமிழ் முழக்கம் - கவிஞர். கா.மு. ஷெரிப் - மாதம் இருமுறை.

1957 அபியுக்தன் - எச். எம். பி. முகைதீன் - இலங்கை.

இன்ஸான் எ.எ. லத்திப் - இலங்கை.

தாரகை - எச். எம். பி. முகைதீன் - இலங்கை.

உம்மத் - எச். எம். பி. முகைதீன் - இலங்கை.

1960
அல் இஸ்லாம் - எம்.எச்.எம். ஹம்சா - இலங்கை.

1965
புதுமைக் குரல் - மஜ்லிசே இஸ்லாமி மாதஇதழ் பின்னர் மாதமிருமுறை - இலங்கை.

1967
அல் மதீனா - எம். பி.எம். மாஹிர் - இலங்கை.

மணிக்குரல் - எம். சி. எம். சுபைர் - தமிழ் இலக்கிய இதழ் - இலங்கை.

மரகதம் - எம். சி. எம். சுபைர் - தமிழ் இலக்கிய இதழ் - இலங்கை.

1968
இளம்பிறை - எம்.எ. ரஹ்மான் - இலங்கை.

1968 மக்கள் - மாத இதழ் - கலீல், காதர் - இலங்கை
.
1968 வான்சுடர் - டாக்டர். அப்துல். ரஹ்மான் - இலங்கை.

1968 சாதுளியா (தரிக்க ஏடு) - கொள்கை ஏடு - இலங்கை.

முஸ்லிம் - எஸ். எம் . ஹசன் - இலங்கை.

ஷிக்வா - எ. எச். ஜீ. அமீன் - மாதஇதழ் - இலங்கை.

சவ்துல்ஹக் - பிரசார இதழ் - இலங்கை.

ஸுஹினுல் இஸ்லாம் - அபு உபைதா, எஸ்.எம். ஸப்ரு - இலங்கை.

பாமிஸ் - மாதஇதழ் - இலங்கை.

உதயம் - முஸ்லிம் லீக் வாலிப முன்னணி - இலங்கை.

நிதாவுள் இஸ்லாம் - மௌலவி. புர்கானுதீன் - இலங்கை.

1970 கடமை - எஸ்.எ. கையூம் - இலங்கை.

அபேதவாதி - சுபைர் இளங்கீரன் - இலங்கை.

1972 மணி மஞ்சரி - கவிஞர். அப்துல் காதர் லெப்பை - இலங்கை.

1975 நல்வழி (தரிக்கா ஏடு) - இலங்கை.

அஷ்ஷபாப் - எம். எச். எம். நாளிர் - இலங்கை.

ஞான சுரங்கம் - அப்துல் ரவூப் - இலங்கை.

மிஸ்பாஹ் - இலங்கை.

இஸ்லாமிய சிந்தனை - இலங்கை.

அல் இஸ்லாஹ் - இலங்கை.

அஷ் ஸூரா - எம். எச். எம். சம்சு - செய்தி மடல்.

1976 அல் ஜன்னத் - மாத இதழ் - மௌலவி அப்துல் அஹ்மத் (வத்தலகுண்டு).

1979 விடிவு - புன்னியாமின் - இலங்கை.

1979 சுதந்திர பறவைகள் - கோவை இக்பால்.

1980 மதினா - இறையருள் கவிமணி. கே. அப்துல் கபூர் - மாதஇதழ் - திருநெல்வேலி டவுன்.

1980-82 அல்ஹிலால் - புன்னியாமின் - மாதமிருமுறை - இலங்கை.

1985 எழுச்சிக் குரல் - மாத இதழ் பின்னர் வார இதழ் - இலங்கை.

நேசன் - இலங்கை.

1986 இலக்கியா - திருச்சி சயது - திருச்சி.

1987 மணிச்சுடர் - ஆ. கா.அ.அப்துல் சமது. - முஸ்லிம் லீக்

1987 ரசிகன் - திருச்சி சயது - திருச்சி.

1988 மல்லிகை - திருச்சி சயது - திருச்சி.

1988 ப்ரியநிலா - உவன்வத்த ரம்ஜான் - காலாண்டு இதழ் - இலங்கை.

1989 இளைய நிலா - திருச்சி சயது - திருச்சி.

1990 பார்வை - சித்திக் காரியப்பர் - இலங்கை.

1990 அல்ஹக் - இலங்கை.

1990 சூப்பர் சிப்பி - ஜலால் - திருச்சி.

1990 புதிய வீணை - ராம்ஜி காஜா - திருச்சி.

1990 அல் முஜாஹித் - பழனி பாபா.

புனித போராளி - பழனி பாபா.

மறுமலர்ச்சி - திருச்சி யுஸுப் - வாரஇதழ்.

1992 சமாதானம் - மருதூர் வாணன் - இலங்கை.

1992
சத்தியம் - மாத இதழ்.

மீள்ப் பார்வை - இலங்கை.

விருட்சம் - இலங்கை.

கலைமகள் - ஹிதாயா - இலங்கை.

தடாகம் - இலங்கை.

உண்மை உதயம் - மௌலவி. பாசில் முஸ்தபா மௌலானா - மாதஇதழ் - இலங்கை.

1993
புள்ளி - ரபிக் - இலங்கை.

1993 தடம் - எம். பௌஸர் - இலங்கை.

1994 தினமதி - மௌலவி. முபாரக்.

1995 திங்கள்- ஹில்மி முஹம்மது - இலங்கை.

1995 சூரியன் - எம்.எச். எம். ஜவ்பர் - இலங்கை.

1996 உணர்வு - வாரஇதழ் - தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத்.

1996 நவமணி - அல்ஹாஜ். பி.எம். அஹ்ஸர் - நாளிதழ் - இலங்கை.

1996
புதிய வாணிகம் - (வணிகம் மற்றும் வேளாண்மை) மாதஇதழ் - பேராசிரியர். புலவர். உசேன் - சென்னை.

1997 இனியவனின் நம்பிக்கை - இனியவன் ஹாஜி. முஹம்மது - ஐக்கிய அரபு அமிரகம்.

1998 நம்பிக்கை - இனியவன் ஹாஜி. முஹம்மது - ஐக்கிய அரபு அமிரகம்.


1998 தமிழன் குரல் - மறுமலர்ச்சி கமால் பாஷா - ஐக்கிய அரபு அமிரகம்.

2002
ஒற்றுமை - மாதம் இருமுறை - தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்.

2003 ப்ரவாகம் - ஆஸிப் புகாரி - இலங்கை.

2003 கீழக்கரை அஞ்சல் - அபுபக்கர் தம்பி - கீழக்கரை.

2003 முஸ்லிம் குரல் ௦- வாரஇதழ் - இலங்கை.

எங்கள் தேசம் - இலங்கை.

ஏகத்துவம் - மாதஇதழ் - தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத்.

முஸ்லிம் பெண்மணி - மாதஇதழ்.

தீன்குலப் பெண்மணி - மாதஇதழ் - தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத்.

விடியல் வெள்ளி - மாதஇதழ்

2004 மக்கள் உரிமை - தமிமுன் அன்சாரி - தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்.

2005 சத்தியப்பாதை - ஸெய்யது ஆபுதீன் - கீழக்கரை.

2005 புதியக் காற்று - ஹாமீம் முஸ்தபா -மாதஇதழ் - மதுரை.

2006 தமிழ் சுடர் - டாக்டர். உஸ்மான் பயாஸ் - நாளிதழ்.

2006 பிறை செய்தி மடல் - பரங்கிபேட்டை. கலீல் பாகவி - மாத இதழ் - குவைத்.

2006 உலக வெற்றி முரசு.

2006 பெருவெளி - இலங்கை.

2008 சமூகநீதி முரசு - C.M.Nசலீம் - மாதஇதழ்.

2008 நீதியின் குரல் - விழுப்புரம் சாஜி - குவைத் மாதஇதழ்.

2008 அடியற்கை மெயில் - மாதஇதழ் - அடியக்கமங்கலம்.

2009 மக்கள் ரிப்போர்ட் - இந்திய தவ்கீத் ஜமாஅத்.

2009 வைகறை வெளிச்சம் - குலாம் முஹம்மது - மாதஇதழ்.

2009 சத்திய பேரொளி - அப்துல் ஹமிது - கிருஷ்ணகிரி.

2009 தங்கம் - ஷேக் மைதீன் -மாத இதழ்.

சமரசம் - சிராஜுல் ஹசன் - ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் - மாதம் இருமுறை

சமநிலை சமுதாயம் - A.V.M ஜாபர்தீன் - மாதஇதழ்

அல் ஹசனாத் - இலங்கை - மாத இதழ்.

அல் ஜசிரா - இலங்கை.

குரானின் குரல் -முஹம்மது அஸ்ரப் அலி - மாதஇதழ் - மதுரை.

நர்கீஸ் - மாதஇதழ் - திருச்சி.

முஸ்லிம் முரசு - மாதஇதழ்.

இதய வாசல் - கவிஞர். இக்பால் ராஜா - அய்யம்பேட்டை - மாதஇதழ்.

இனிய திசைகள் - சே. மு. மு. முஹம்மது அலி - மாதஇதழ் - தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்.

வசந்தம் -அப்துல் முசாவிர் - குவைத் - மாதஇதழ்.

பசுங்கதிர் - மௌலா - கீழக்கரை - மாதஇதழ்.

நம்ம ஊரு செய்தி - மயிலாடுதுறை.

நமது முற்றம்

வஸீலா

2009
சென்னை நண்பன் - நண்பன் அபுபக்கர்.

(தகவல்கள்: மூத்த பத்திரிகையாளர் ஹபீப் எழுதிய இதழியல் தகவல் தொழில் நுட்பங்கள், இலங்கை எழுத்தாளர் புன்னியாமின் அவர்களின் இலங்கை ஊடகவியளர்களின் விபரத் திரட்டு -

மற்றும் தகவல்களை அனுப்பி உதவிய சகோதரர்கள் திருச்சி சயது, இனியவன் ஹாஜி முஹம்மது, கீழை ஜமில், பிதாஉல்லாஹ் மற்றும் முதுவை ஹிதாயத் ஆகியோருக்கு எமது நன்றிகள்.....

ஆவணப்படுத்தளுக்கான சிறிய முயற்சி.


Rajaghiri Gazzali
www.rajaghiri.net
www.masjid-al-taqwa.blogspot.com


I could not find Dar-ul quraan by K M Kader Mohideen, Trichy in the list?

Regards .........
_______________________________
Mohamed Rahmathullah (Rahmath)
Risk Technology Head
Emerging Markets Retail Risk
Barclays Bank PLC
Desk: +971 4 4382226
E-mail: mohamed.rahmathullah@barclays.com

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

என் அன்பிற்கினிய சகோதரர் ராஜகிரி கஸ்ஸாலி அவர்களுக்கு உங்களின் சகோதரன் கீழை ஜமீல் முஹம்மது எழுதிக் கொண்டது.

தாங்களுடைய நல்ல முயற்சியில் நானும் ஒரு சிறு துரும்பைப் போட்டேன். அதற்கும் தாங்கள் நன்றி சொல்லி இருக்கிறீர்கள். மிக்க நன்றி. அல்லாஹ் தாங்களுக்கு நல்லருள் பாலிப்பானாக.

பசுங்கதீர் என்ற இதழின் ஆசிரியரின் பெயர் மவ்லா இல்லை மவ்லானா என்பதாகும். இவர்கள் 5ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் பொற்கிழி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களது மகன் கீழக்கரை ஈஸா அவர்களை ஆசிரியராக கொண்டு இலட்டு என்ற பத்திரிக்கை ஒன்று 1988 mudஅல்லது 1989இல் நடத்தப்பட்டது. சகோதரர் முதுவை ஹிதாயத் அவர்களுக்கு இன்னும் இது குறித்த விபரம் தெரியும்.

வஸ்ஸலாம்

அன்புடன் தாங்களின் சகோதரன்
கீழை ஜமீல்

Friday, July 9, 2010

திருக்குறள் - ஒரு அறிமுகம்

திருக்குறள் - ஒரு அறிமுகம்




தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.

இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.

இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் அச்செய்திகள் வாயிலாக அறிகிறோம்.

திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.

பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலநூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.

திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கிருஸ்துவ சகாப்தத்தின் முன் பகுதியைச் சேர்ந்ததாகப் பலர் கருதுவர்.
பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன.

1.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு
2.பதினென்கீழ்க்கணக்கு
3.ஐம்பெருங்காப்பியங்கள்
4.ஐஞ்சிறு காப்பியங்கள்
ஆகியவை அவை.

அவற்றில் பதினென்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு இந்நூல் விளங்குகின்றது.

"அறம், பொருள், இன்பம்", ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய ஆகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துபாடல்களைத் தன்னுள் அடக்கியது.

இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.

குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.

"பாயிரம்" என்னும் பகுதியுடன் முதலில் "அறத்துப்பால்" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்", ஆகிய அதிகாரங்கள்.

அடுத்துவரும் "இல்லறவியல்" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது.

அடுத்து வரும் "பொருட்பாலி"ல் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.

கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள்.

திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.

"அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு...."

என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,

"ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
கூடி முயங்கப்பெறின்"

என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார்.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.

பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப் படுவது திருக்குறள் முனுசாமியின் உரை.

தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு.

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

"மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"

http://www.thirukkural.com/

http://ta.wikisource.org/wiki/திருக்குறள்

Saturday, July 3, 2010

இஸ்லாமிய பெருநாட்கள்

இஸ்லாமிய பெருநாட்கள்

உலகத்திலுள்ள மதங்கள் அனைத்தும் பெருநாட்கள் கொன்டாடுகின்றன. ஓவ்வொரு பெருநாளுக்கும் காரனங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. பல்வேறு தத்துவங்கள் கூறப்படுகின்றன. காலம் காலமாக இவை தொடர்ந்து கொண்டாடப்படுகின்றன. ஒன்று மதத் தலைவர்கள் அல்லது தீர்க்கதரிசி அவதரித்த நாளாக இருக்கும் அல்லது அந்த மதத் தலைவர் முக்தி பெற்ற நாளாகவோ, மரித்த நாளாகவோ இருக்கும். ஊலகத்தில் அநீதி தலை தூக்கி நின்ற போது அதை சம்ஹாரம் செய்ய பகவான் உலகத்திற்கு அவதாரமெடுத்து வந்த நாளாக இருக்கும் இப்படி சொல்லிக்கொன்டே போகலாம். வுpழா எடுப்பதற்கு ஒரு காரணம் அல்லது பின்னணி கற்பிக்கப்பட்டு அந்தந்த விழாக்களை எடுத்து அந்தந்த மதவாதிகள் மகிழ்வதைப் பார்க்கிறோம்.

ஓவ்வொரு பெருநாளும் ஒவ்வொரு விதமாக கொன்டாடபடுகிறது. அப்பெருநாளுக்குக் கற்பிக்கப்பட்ட காரணங்களையொட்டி விழா எடுக்கப்படுகிறது. அவைகளையொட்டிய முறைகள் கையாளப்படுகின்றன. ஒவ்வொரு பெருநாளுக்கும் புத்தாடைகள் - அதற்கு தகுந்தாற்போல் தின்பண்டங்கள் - சடங்குகள், சம்பிரதாயங்கள், களியாட்டங்கள் போன்ற அம்சங்கள் வகுக்கப்பட்டு முறையோடு இயக்கப்படுவதைப் பார்க்கிறோம். இத்தகை விழாக்கள் இங்கு மட்டுமல்ல, எல்லாப் பிரதேசங்களிலும், நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றன. ஒரே விழா எல்லைக்கு எல்லை மாறுபட்ட கருத்துக்களோடும் மாறுபட்ட டுறைகளோடும் கொண்டாடப்படுகிறது.

இஸ்லாத்தில் இரு பெருநாட்கள் வருகின்றன. ஒன்று ரம்ஜான் மற்றொன்று பக்ரீத். இவ்விரு பெருநாட்களையும் உலகத்தில் கொண்டாடப்படும் எந்த பெருநாட்களோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இத மற்ற பெருநாட்களுக்கு முற்றிலும் மாறுபட்டவை – காரணங்களில், தத்துவங்களில், நடைமுறைகளில் எல்லாம் தனித்து நின்று உலகத்துக்கு ஒரு புதுதத்துவத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

வுpழா எடுப்பதில் ஒரு வெற்றி பொதிந்திருக்கும் - தம் பாரம்பரியத்தில் ஒரு வெற்றிக்கு அறிகுறியாக விழா அமைந்திருக்கும். இதுதான் நடப்பு. ஆனால் இஸ்லாமிய பெருநாட்கள் உலக மாந்தர்கள் எல்லாம் பெருமிதம் கொள்ளும் வகையில் தியாகப் பிழம்புகளாக தம்மை ஆக்கிக் கொள்வதற்கும், ஆயத்தப்படுத்தி கொள்வதற்கும் ஓர் முன்னோடி போன்றதுதான் என்பது 1429 ஆண்டுகளாக நீருபிக்கப்பட்டுவிட்டது. தம்மையும், தம் செல்வத்தையும், தாம்பெற்ற அனைத்தையும் இவ்வுலகில் நம்மை படைத்து, பாதுகாத்து பரிபாலித்து வரும் அல்லாஹ்வுக்காக தியாகம் புரியத் துணிந்துவிட்டதின் பின்னர் ஏற்படும் ஆத்ம திருப்தியும், மகிழ்ச்சியும் இருக்கிறதேத அதை வெளிப்படுத்திக் காட்டுவதுதான் பெருநாள்.

காலம் காலமாக குழந்தை இல்லாமல் காலம் கடந்து முதுமையில் ஒரு அழகான ஆண்மகவைப் பெற்றெடுக்கிறார் நபி இப்ராகிம் (அலை) அவர்கள். உலக ஆசைகளையெல்லாம் அக்குழந்தையின் மீது கொட்டிப் பாசத்தால் நெஞ்சில் இருத்தி வளர்க்கிறார். அத்திருமகனார் நபி இஸ்மாயில் (அலை) அவர்களை அத்தகையக் குலக்கொழுந்தை ஒரே குழந்தையை பருவமடையாத அந்த பாலகனைக் கழுத்தை அறுத்துத் தனக்காக குர்பானி – தியாகம் செய்யும்படி கூறுகிறான் அல்லாஹ். உலகம் அதுவரை கண்டிராத சோதணையின் உச்சக்கட்டம், தன்னால் படைக்கப்பட்ட மனிதன் - ஒரு நபி – தன்னை விட மற்றதை மதிக்கிறானா என்று சோதிக்க நாடிய அல்லாஹ் ஆணையிடுகிறான் அப்படி.

‘நான் என்ன, என் குழந்தை என்ன, என் குடும்பம் என்ன, நான் பெற்ற அனைத்தையும் உனக்காகத் தியாகம் புரிவேன்’ எனக்கூறி தான் பெற்ற பாலகனை, பாசங்கொட்டி வளர்த்த மழழைக் குழந்தையை கீழே கிடத்தி கூர்மையான தன் வாளை – கழுத்தின் மேல் செலுத்தத் துனிந்துவிட்ட அவரின் தியாகத்தை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். அதன் மூலம் உலகத்துக்கு ஒரு படிப்பினையை அருளிவிட்டான். நரபலியை தடுத்தது மட்டுமல்ல, மனிதன் பிரபஞ்சங்கள் அனைத்தையும் படைத்து இயக்கி வரும் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்வுக்காக அனைத்தையும் தியாகம் புரிய சித்தமாக இருக்கக் கூடியவனே அடியான் எனக்கோடிட்டுக் காட்டிவிட்டான். அந்த வழிவந்த நாம், இத்தியாகத்தில் வெற்றிபெற்ற நாம், பக்ரீத் பெருநாளைக் கொன்டாடுகிறோம்.

அடுத்து ரம்ஜான் பெருநாள். இம்மாதத்தின் முப்பது நாட்களும் மனிதன் பகல் நேரத்தில் உண்னாமலும், பருகாமலும், புணராமலும் இருக்க கடமைப்பட்டவன். பகல் முழுவம் பசித்திருந்து, தாகித்திருந்து இச்சைகளை கட்டுபடுத்தி தன்னைத் தானே வருத்திக்கொள்வதன் மூலம், அல்லாஹ்வின் நல்லடியார்களின் கூட்டத்தில் தன்னை இனைத்துக்கொள்ள முயல்கிறான் மனிதன். இரவு பகல் விழிதிருந்து இறைவனை தொழுது, பொய் பேசாமல், புரம் பேசாமல் மட்டுமல்ல மனதார எண்ணாமலும் கூடத் தனனைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டு அல்லாஹ் விதித்துள்ள கட்டளைகளை மேற்கொண்டு பொறுமையின் பிம்பமாய் அதே நேரத்தில் தியாகத்தின் சின்னமாய் முப்பது நாட்களையும் வெற்றிகரமாக கழிக்கின்றானே அதை எண்ணிப் பெருமைப்பட்டவனாக, அத்தகைய தியாகத்தில் வெற்றி பெற்றவனாக பெருநாளை கொன்டாடுகிறான் ஒரு முஸ்லிம். தனக்கென வாழாமல் பிறருக்காகவும் வாழ வேண்டும் என்ற அடிப்படை தத்துவத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுவான் வேண்டி, தான தர்மங்களைச் செய்தவனாக அதிலும் அனைத்தையும் சர்வ வல்லமை பொருத்தி அல்லாஹ்வுக்காக எதையும் செய்யமுடியும் என பக்குவத்தை அடைந்தவனாகப் பெருநாளை கொன்டாடுகிறான் முஸ்லிம்.

ஆக இந்த இரு பெருநாட்களையும் மற்ற பெருநாட்களோடு ஒப்பிட முடியாது - கூடாது. இப்பெருநாட்கள் தியாகத்தின் தியாகத்தின் அடிப்படையிலேயே, அத்தியாகத்தை செய்ததில் வெற்றி பெற்றவர்கள் என்ற அடிப்படையிலேயே முஸ்லிம்களால் கொண்டாடப்படுகின்றன என்ற உண்மையைப் நாம் புரிந்துக்கொன்டால் நம் பெருநாட்களின் தத்வங்கள் நமக்கு புரிந்துவிடும்! புரிந்து கொன்ட அந்த தத்துவத்தின் அடிப்படையிலே நாம் நடைபோட ஆரம்பித்தால் தியாக உணர்வு நம்மை வழி நடத்தும். அந்த வழியிலே நாம் செல்வோமானால் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ் நம்மை நேரான பாதையில் சீராக நடத்திவிட்டான் என்பது புரிந்துவிடும். ஆதன் மூலம் இம்மையிலும் மறுமையிலும் நாம் வெற்றி பெற்றவர்களாவோம்.

பெற்றோர்கள் சிந்தனைக்கு … சில துளிகள் !

பெற்றோர்கள் சிந்தனைக்கு … சில துளிகள் !

வழக்கறிஞர் உதுமான் மைதீன்

கல்வி
கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமும் கல்வி கற்பது ஆண் – பெண் ஆகிய இருபாலருக்கும் கட்டாயக் கடமை என்கிறது. தற்போது கல்வியைக் காசு கொடுத்து வாங்கக் கூடிய அளவில் ஒவ்வொரு கல்விக்குமென தனித் தனியான மதிப்பீடுகளை அரசாங்கமும் நிர்ணயித்துள்ளது. அது போன்றே காசுக்காக பட்டங்கள் வழங்கவும் பல்வேறு பல்கலைக்கழகங்களும் தோன்றியுள்ளன. இவ்வாறு அரசும், தனியார் நிறுவனங்களும் கல்வியைத் தாராளமயமாக்கி விட்டதால் கற்றவர்களின் எண்ணிக்கையும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன.

யார் மீது குற்றம்?

கல்லாதவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றும், கல்வி மனிதனை மேம்படுத்தும் என்றும் காலம்காலமாய்ச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் கற்றவர்கள் நிரம்பி விட்ட இக்காலத்தில் கற்காலத்தை விடவும் தீமைகள் பெருகிக் கொண்டல்லவா இருக்கின்றன.
மது – போதை போன்றவை அதிகரித்து, இலஞ்சம், வழிப்பறி, வன்முறை, கலப்படம், கொலை – கொள்ளை- ஆபாசம் ஆகிய கொடுமைகள் அதிகரித்துக் கொண்டல்லவா இருக்கின்றன. அதிலும் இது போன்ற செயல்களில் கற்றவர்களும் அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்பதுதான் உச்சக்கட்ட வேதனை. கல்வி ஏன் மனிதனை நல்வழிப்படுத்தவில்லை என்ற எண்ணமும் நம் நெஞ்சங்களில் எழுகின்றது.
இது கல்வியின் மேலுள்ள குற்றமா?
கல்வி கற்றவர்கள் மேலுள்ள குற்றமா?

கற்பித்தவர்கள் மீதுள்ள குற்றமா?

என்பது பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாய காலகட்டத்தில் உள்ளோம்.

அக்கால கல்விமுறை

நமது நாட்டை எடுத்துக் கொண்டால் அக்கால குருகுலக் கல்விமுறை உயர்குல மக்களை மட்டுமாவது நல்வழிப் படுத்த உதவியது எனலாம். ஒரு குருவை – ஆசிரியரைத் தங்களது வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு அவரிடம் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரும் குருவையே தங்கள் முன் மாதிரியாக கொள்வார்கள். படிப்புடன் பல்வேறு கலைகளையும் – வாழ்க்கை நுணுக்கங்களையும் கற்றார்கள். அடுத்து முகலாய ஆட்சியின் போது ‘மத்ரஸா’ கல்விமுறை பின்பற்றப்பட்டது. இதில் எல்லா மாணவர்களும் கல்வி கற்க முடிந்தது. இதிலும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் – (உஸ்தாது) நன்னெறி மிக்கவராகவே இருப்பதால் அவரிடம் கல்வி கற்கும் மாணவர்களும் அவரையே தங்கள் முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் பழக்கவழக்கங்களையும் அமைத்துக் கொண்டார்கள். மத்ரஸாக்களில் கணிதம், விஞ்ஞானம், மருத்துவம், புவியியல், வானவியல் மற்றும் தர்க்கவியல் போன்ற பாடங்களும் கற்பிக்கப்பட்டு வந்தன.

மெக்காலேயின் கல்வி

மேற்சொன்ன இரு காலகட்டங்களிலும் கற்றவர்களில் மிகப் பெரும்பான்மையோர் நன்னெறி மிக்கவர்களாகவே இருந்தனர். ஆனால் ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட போது அடிமைகளுக்கென ஒரு கல்வித்திட்டம் அப்போதைய லார்ட் மெக்காலேயால் உருவாக்கப்பட்டது. ஆனால் நம்நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும் அக்கால – மெக்காலேயின் கல்வித்திட்டத்தைத்தான் நாமும் பின்பற்றினோம். இந்தக் கல்வித்திட்டத்தில் மனித நன்னெறிகளுக்கான எத்தகைய வழிகாட்டல்களும் இல்லை. மனிதன் யார்? அவன் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளான்? அவன் மரணத்திற்குப் பின் எங்கு செல்வான்? இவ்வுலகில் மனிதன் செய்ய வேண்டிய நற்கருமங்கள் என்னென்ன? போன்ற எந்த நல் வழிகாட்டல்களும் இல்லை. மனித வளத்தின் மேம்பாடு பற்றி சிந்திக்கவேயில்லை. வெறும் கல்வியுடன் மட்டும் தனது கடமையை அந்தக் கல்வித்திட்டம் நிறுத்திக் கொண்டதால் மாணவர்களின் குணநல மாண்புகள் படிப் படியாக தரம் இறங்கி ஒருகால கட்டத்தில் ’கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என்ற அளவில் தங்கள் மனம் போன போக்கில் மாணவர்கள் நடக்க முற்பட்டு விட்டனர். மேற்கத்திய பண்பாட்டுச் சீரழிவுகளிலும் சிக்க ஆரம்பித்து விட்டனர். ஒரு நாட்டின் மிகச்சிறந்த மனித வளமாக முதுகெலும்பாக இருக்க வேண்டிய இளைய சமுதாயம் எவ்வித நெறிமுறைகளுக்கும் மதபோதனைகளுக்கும் கட்டுப் படாமல் தன்னிச்சையாக மனம் போன போக்கில் வரம்பற்ற சுதந்திரமாகத் திரிய ஆரம்பித்து விட்டதன் விளைவுகளைத் தான் தற்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். கல்வி அவர்களுக்குத் தேவையான நேரத்தில் கடிவாளமிட்டு அவர்களை நேர்வழியில் செலுத்தத் தவறியதால் தறிகெட்டுப் பாயும் காளைகளைப் போல் இளைய சமுதாயம் சீர்கேடு களில் சிக்கித் தவிக்க ஆரம்பித்து விட்டது.

நெறிகெட்ட கல்வியின் விளைவுகள்

இதன் விளைவாகத்தான் நம் நாட்டிலும் டிஸ்கோத்தே, காபரே கிளப்புகள், சூதாட்ட விடுதிகள், ஆபாச அரங்குகள், வன்முறை, மனிதநேயமற்ற செயல்முறைகள், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் முறைகள், கந்து வட்டிக் கடைகள், மது அடிமைகளை உருவாக்கும் மதுபான பார்கள், கஞ்சா – அபின் – ஹெராயின் போன்ற போதை வகைகள், கொலை செய்யும் கூலிப்படைகள், திருடர்கள், கொள்ளையர் களின் சாம்ராஜ்யங்கள், கள்ள நோட்டுக் கும்பல்கள், வெடிகுண்டு கலாச்சாரங்கள் ஆகியன படிப்படியாகப் பெருக ஆரம்பித்தன. இவற்றை பெரிய திரைகளிலும், சின்னத்திரை களிலும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி பட்டி – தொட்டி களிலுள்ள பாமர மக்களுக்கும் இந்தத் தீமைகளைக் கொண்டு சேர்ந்த பெருமை நிச்சயமாக திரைப் படங்களையும் தொலைக்காட்சிகளையும் தான் சேரும்

இளைய சமுதாயம்

தீமைகளை மட்டும் சொல்லி விட்டு தீர்வைச் சொல்லா விட்டால் பயனேதும் இல்லை. இவற்றிலிருந்து மீள்வதற்கான தீர்வுதான் என்ன? சென்று விட்ட சமுதாயத்தைப் பற்றி சிந்தித்துப் பயன் இல்லை. இப்போது இருக்கின்ற சமுதாயத்தை நெறிமுறைப்படுத்த நாட்கள் பல ஆகலாம். அல்லது நாம் நினைப்பது போல் நடக்காமலும் போகலாம். ஆனால் இனி வரும் இளைய சமுதாயத்தை – வருங்கால சமுதாயத்தை வார்த்தெடுக்கின்ற பணிகளை நாம் மேற்கொண்டால் நிச்சயமாக அதுவே நமக்கு மிகவும் நன்மை பயப்பதாக அமையும்.

தீர்வு என்ன?

தற்போது நம்மில் பலரும் நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் போது அவர்களை என்ன படிக்க வைக்கலாம்? அதற்கென எந்தக் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யலாம்? என்பதை மட்டும்தான் எண்ணுகிறோம். ஆனால் எந்தக்கல்வி நிலையம் என்பதைத் தேர்ந்தெடுப்பது தான் மிகவும் முக்கியமானது. பலமாடிக் கட்டிடங்களையும் நுனிநாக்கு ஆங்கிலத்தையும் அதிகமான கல்விக் கட்டணத்தையும் மட்டுமே நல்ல கல்விக் கூடத்துக்கான அளவு கோல்கள் என்று எடுத்துக் கொண்டால் அதுவே நாம் செய்யும் மிகப் பெரிய தவறாகவும் அமைந்து விடலாம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நம்மில் பலர், குழந்தைகளுக்கான நேர்த்தியான உடைகள், பெல்ட், டை, ஷூ- ஷாக்ஸ், புத்தகப்பை – டிபன் பாக்ஸ் போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள கவனத்தைக்கூட தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒப்படைக்கும் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்வதில் எடுப்பதில்லை என்றுதான் கூற வேண்டும். கல்வியை மட்டுமே கருத்தில் கொள்ளும் போது வாழ்க்கை நெறிமுறைகள், பண்பாடுகள், கண்ணியம் போன்ற பலவும் காணாமல் போய் விடுகின்றன. பின்னர் பல பட்டங்களுடன் கூடிய தனது வாரிசுகள் குடிகாரனாகவோ, வன்முறையாளனாகவோ மாறும் போதுதான் பெற்றோர்கள் மனம் பதைபதைக்கிறது. உள்ளம் உதிரத்தைக் கொட்டுகிறது. குதிரை ஓடிய பிறகு லாயத்தை மூடி என்ன பயன்? அது போல்தான் இவர்களது கதையும் எல்லாம் முடிந்தபின் என்ன செய்ய முடியும்? பல மெத்தப்படித்த மேதாவிப் பெற்றோர்களின் நிலையும் இதுதான்.

நெறிசார்ந்த கல்வி

எனவே இன்றைய தேவை நெறிசார்ந்த கல்வியாகும்.(value Based Education) ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை கல்வி நிலையங்களில் சேர்க்கும் போது அவர்களது எதிர்காலத்தையும் அங்கு அடைக்கலப் பொருளாகக் கொடுக்கிறார்கள். எனவே கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யும்போது கீழ்க்கண்டவற்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
கல்வி தரமானதாக இருக்க வேண்டும். கல்வியுடன் குழந்தைகளுக்கு நன்னெறி போதனைகளையும் நல்ல பண்புள்ள பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அந்தக் கல்வி நிலையங்கள் காசு ஒன்றினை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளங்கள் நஞ்சுகள் கலந்து விடாமல் பாதுகாத்து அவர்களை நல்லவர் களாக்குவதற்கான தார்மிகப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இன்று மாணவர்களுக்கான முன்மாதிரி அரிதாக இருக்கிறது. அதனால் ஆசிரியர்களே தியாக உணர்வுடன் நேர்மையாகச் செயல்பட்டு மாணவர்களுக்கு மாடல்களாக விளங்க வேண்டும். அத்தகைய அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களை அதிக ஊதியம் கொடுத்தேனும் கல்வி நிலைய நிர்வாகிகள் பணியில் அமர்த்த வேண்டும். அது போன்ற கல்வி நிலையங்களால் மட்டுமே மாணவர்களுக்குத் தரமான கல்வி கற்பிப்பதுடன் நற்போதனை வகுப்புகளையும் நடத்தி தீமைகளிலிருந்து அவர்களைத் தடுத்து நல்லவர் களாக நாட்டின் நற்குடிமக்களாக பெற்றோரைப் பேணுபவர் களாக சுற்றத்தாரை மதிப்பவர்களாக அண்டை அயலாருடன் அன்புடன் பழகுபவர்களாக உருவாக்க முடியும்.

இஸ்லாமிய மாதிரிப் பள்ளி

மேற்சொன்ன கருத்துகள் வெறும் பேச்சுகள் அல்லது ஆலோசனைகள் மட்டும் அல்ல. செயல்வடிவங்கள். இது போன்ற எண்ணங்கள் ஏக்கங்களுடன் 1993 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் – திருவிதாங்கோடு எனும் ஊரில் இஸ்லாமிய மாதிரிப் பள்ளி (Islamic Model School) எனும் மெட்ரிக்குலேஷன் பள்ளியை ஒரு சோதனைக்காக ஆரம்பித்தோம். இன்று இறைவன் அருளால் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ – மாணவியருடன் சுமார் 60 ஆசிரியை களையும் கொண்ட ஒரு சிறந்த பள்ளியாக அது திகழ்கிறது. மாணவ – மாணவிகளுக்கு சிறப்பானதொரு அடித்தளத்தினை பாலர் பள்ளி முதல் பத்தாம் வகுப்பு வரை அமைத்துக் கொடுத்ததால் கல்வித் தரத்தில் சிறந்தவர்களாக கல்வி மாவட்டத்தின் 1வது 2வது மற்றும் 3வது இடங்களையும் அரசு மெட்ரிக் தேர்வில் ஒருங்கே பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தனர். வெறும் மதிப்பெண்களுடன் மட்டும் நின்று விடாது கலை, விளையாட்டுப்போட்டிகள், பேச்சு, கட்டுரை, கவிதை, வினாடி – வினா போன்ற திறனாய்வுப் போட்டிகளிலும் மாவட்ட அளவில் பல்வேறு பரிசுகளையும் மாநில அளவில் பரிசுகளையும் பெற்றனர். இவற்றைப் பெருமையாக பறைசாற்றவில்லை. ஏன் என்றால் இன்னும் பல பள்ளிகளும் இதுபோன்ற சாதனைகளை நிகழ்த்தி யிருக்கலாம். ஆனால் இங்கு 10 ஆம் வகுப்பு படித்து விட்டு வெளியே சென்ற மாணவர்களில் சிலர் பட்டங்கள் பெற்று பதவிகளில் உள்ளார்கள். இன்னும் பலர் பல்வேறு கல்லூரி களில் உயர்கல்வி கற்று வருகிறார்கள். ஆனால் எல்லா இடங்களிலும் நல்ல மாணவர்கள் என்று பலராலும் பாராட்டப்படுகிறார்கள். அதற்குக் காரணம் இந்தப் பள்ளியில் அவர்கள் நல்ல மாணவர்களாக வளர்க்கப்பட்டதுதான். மாணவ – மாணவிகள் அனைவருமே மது – போதை, வட்டி – வரதட்சணை, லஞ்சம், ஏமாற்று, திருட்டு போன்ற எந்த தீமைகளின் பக்கமும் செல்லாதவர்களாகவும், வன்முறை, பொதுச் சொத்துக்களுக்குத் தீங்கிழைத்தல் போன்றவற்றில் ஈடுபடாத பண்பாளர்களாகவும் விளங்கு கிறார்கள்.

இவர்களைப் போன்ற மாணவர்களை எல்லா பள்ளிக் கூடங்களுமே உருவாக்கி விட்டால் நிச்சயமாக இன்னும் குறுகிய காலத்தில் மகத்தானதொரு மறுமலர்ச்சியை எதிர் பார்க்கலாம். எங்கள் மாதிரிப்பள்ளியைப் பின்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் இன்னும் மூன்று பள்ளிகளும் தமிழக மெங்கும் பல இடங்களிலும் இதுபோன்ற பள்ளிகள் உருவாக்கப்பட்டு நல்ல மாணவர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது சிவகங்கை மாவட்டம் – இளையான்குடியில் 5 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இக்ரா மெட்ரிக்குலேஷன் பள்ளியும் நன்மக்களை உருவாக்கிடும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வெற்றியும் பெற்று வருகிறது.

இன்றைய உங்கள் குழந்தைகள்
நாளைய நமது சமுதாயம்
அவர்களை நன்மக்களாக வளர்க்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை நினைவில் கொண்டு நல்ல கல்வி நிலையத்தில் அவர்களை சேர்ப்பதைக் கடமை யாகக் கொள்ளுங்கள்.

(மாதிரிப் பள்ளிகள் அமைக்க அல்லது இருக்கின்ற பள்ளிகளை இது போன்ற நன்னெறி மிக்க சமுதாயத்தை உருவாக்கும் பள்ளியாக மாற்ற ஆலோசனைகள் பெற விரும்புபவர்கள் கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ளலாம். அலைப்பேசி: 94431 17984)
நன்றி : சமரசம் மாதமிருமுறை ( 16 – 31 ஜுன் 2009 )

Friday, July 2, 2010

மரணத்தின் பிடியில் ஊமைக்குளம் !

மரணத்தின் பிடியில் ஊமைக்குளம் !

( ஆக்கம் :- மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி )


http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=182

நூற்றுக்கும் குறைவான வீடுகளே இருக்கும் எங்கள் ஊர் ஒரு குக்கிராமம் தான். எழில் பொங்கும் இயற்கை வளத்தை போர்வையாய் போர்த்திக் கொண்ட ஒரே கிராமம் எங்கள் ஊராகத் தானிருக்கும். நெஞ்சை நிமிர்த்திய தென்னை மரங் களும், வெட்கத்துடன் தலை குனிந்து நிற்கும் வாழை மரங் களும் தான் எங்கள் ஊரின் பசுமை புரட்சி நாயகர்கள் ! சிறிய ஊராயிருந்தாலும் அனைத்து சமுதாய மக்களும் கூடி வாழும் ஓர் அதிசய சமத்துவபுரம் என்றே சொல்லலாம் ! ஏனென்றால் எமது மக்களுக்குள் ஜாதி பிரிவினையோ, தீண்டாமையோ கடுகளவுமிருக்காது.

ரம்ஜான் ,தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற எந்த பண்டிகை யானாலும் அவற்றை ஊர் சார்பில் கொண்டாடுவது தான் எங்கள் கிராமத்தின் தனிச்சிறப்பாகும். இந்த கண் கொள்ளக் காட்சியை காண்பதற்கென்றே அக்கம் பக்கத்து ஊர் மக்களெல்லாம் எங்கள் ஊரின் சிறப்பு விருந்தினர்களாக வந்து செல்வர். ராவுத்தரின் டீக்கடையும், மூர்த்தியின் மளிகைகடையும், கென்னடியின் காய்கறி கடையும்தான் எங்கள் கிராமத்தின் வணிக (shopping mall) வளாகங்கள் !

எங்கள் ஊரின் நுழைவு வாயிலை அழகு படுத்திக் கொண்டிருப்பது ஊமை குளம் தான். அந்த குளத்திற்கு நீர் வற்றிய அனுபவம் இன்று வரை கிடையாது ! மழை பெய்தாலும், பொய்த்தாலும் வற்றா ஜீவநதி போல அந்த குளம் தான் எங்கள் ஊரின் வாழ்வாதாரமாய் திகழ்கிறது. வெளியூர் காரர்களையும் கூட புன்சிரிப்புடன் வரவேற்கும் அந்தக் குளத்தின் பெயரையே தான் எங்கள் ஊரின் பெயராக வும் வைத்துள்ளோம் !

சுற்று வட்டார பதினெட்டுப்பட்டி கிராமத்து மக்களாலும் மதிக்கப்படும் ஊமைகுளம் கிராமத்தில் பிறந்ததற்காக நாங்கள் பெருமைப்பட்டுக் கொள்வோம். வற்றாத ஜீவநதியாய் இருக்கும் ஊமை குளத்தால் எங்களுக்குப் பெருமையா? அல்லது எங்களின் நல்ல பழக்க வழக்கங் களால் ஊமை குளத்திற்குப் பெருமையா? என்பதை பிரித்துப் பார்க்க முடியாது !

பரந்து விரிந்த வயற்பரப்புதான் எங்களின் பொருளாதார சந்தை. நெல்,கரும்பு,தென்னை,வாழை போன்றவைகள் மிகுத மாய் விளையும் எங்கள் கிராமத்தின் மண்வளம் கண்டு விவசாய அதிகாரிகளே அதிசயித்துப் போவதுண்டு. படித்தவர் கள், பாமரர்கள் என்ற பாகுபாடில்லாமல் எல்லோருமே வயற் காட்டில் இறங்கி வேலை செய்வது கூடுதல் சிறப்பாகும். எங்களின் விளைச்சலுக்கு தேவையான தண்ணீரை ஊமை குளமே வழங்கி வருகிறது !

கோடை வெப்பத்தின் போது அக்கம் பக்கத்து ஊர்களின் குளங்கள், கண்மாய்கள், கிணறுகளெல்லாம் வற்றும் போது அவ்வூர் மக்கள் பெரிதும் நம்பிக்கையுடன் தண்ணீருக்காக எதிர்பார்த்து வருவது எங்களின் ஊமை குளத்தை தான். காவிரி நீருக்காக தமிழகமும் கர்நாடகமும் அடித்துக் கொள்வதை போல, முல்லை பெரியாறுக்காக கேரளாவும் தமிழகமும் மல்லுக்கட்டுவதை போல, பாலாறுக்காக தமிழகமும் ஆந்திராவும் கீரியும் பாம்புமாக இருப்பதைப் போல இல்லாமல் சுற்று வட்டார பதினெட்டுப்பட்டி கிராமத்து மக்களுக்கும் பயன் தரும் வகையிலேயே ஊமைகுளம் வாழ்ந்தது !

நாங்களும் இந்த விஷயத்தில் பரந்த மனப்பான்மையுடன் தான் நடந்து கொள்வோம். காரணம் நீர் வளமென்பது இறைவனின் அருட்கொடை ! அது மனிதனாய் பிறந்த அனைவருக்குமே சொந்தமானது என்ற சித்தாந்தத்தில் நம்பிக்கையுடையவர்களாய் வாழ்ந்ததால் தான் எவ்வளவு பெரிய கோடை வெப்பமானாலும், மழை பெய்தாலும், பொய்த்தாலும் எங்கள் ஊமைகுளம் மட்டும் வற்றா ஜீவநதியாய் இருந்து கொண்டிருக்கிறது. எங்கள் ஊர் மக்கள் தங்களது குடும்பத்தின் நல்லது கெட்டதென எதுவாக இருந்தாலும் ஊமைகுளத்தை சாட்சியாக வைத்துதான் முடிவு செய்வர் !

ஆமாம், குளத்தாங்கரையில் குளிக்கும் போது தான் மற்றவர்களோடும் கலந்து பேசி செல்வோம். நாங்கள் பேசிக்கொள்ளும் எந்த ரகசியமானாலும் அதை ஒட்டு கேட்டு பிறரிடம் கோள் சொல்லும் பழக்கம் ஊமைகுளத்திற்கு கிடையாது ! அந்த நம்பிக்கையில் தான் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போதே முக்கியமான விஷயத்தை கூட பேசிக் கொள்வோம்.

ஒரு நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டிய ராணுவ அதிகாரிகளில் சிலரே நம் நாட்டு ராணுவ ரகசியங்களை வெளிநாட்டவருக்கு விற்ற கொடுகையை கடந்த காலங்களில் தினசரி பேப்பர்களில் படித்த நினைவுண்டு. ஆனால் இது போன்ற ஈனத்தனமான வேலைகளை எங்கள் ஊர் ஊமைகுளம் செய்த்தே இல்லை. மொத்தத்தில் பொதிகை சேனலின் சிறப்பு அடையாளமான வயலும் வாழ்வுமாகவே தான் எங்களது வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது !

எங்களில் யாரும் யாருக்காகவும் கடனாளியாக இல்லாமல் எல்லோரும் உழைப்பாளிகளாகவும், முதலாளிகளாகவுமே வாழ்ந்து கொண்டிருந்தோம். இந்த சூழ்நிலையில் தான் எங்கோ உள்ள இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் சுனாமி பேரலைகளில் சிக்கி சின்னா பின்னமான கடலூர் மாவட்ட தேவனாம்பட்டினத்தைப் போல எங்கள் ஊரிலிருந்து 10 மைல் கல்லுக்கு அப்பால் உள்ள ஊரான மாயாவி குளத்து மக்களின் வெளிநாட்டு மோகம் என்ற பூகம்பத்தால் சிக்கி சின்னாபின்னமாகி போனது எங்கள் ஊர் ஊமைகுளமும் தான் !

படிப்பறிவில்லாத நாங்கலே ஆயிரக்கணக்கில் டாலர்களையும், தீனார்களையும் பார்க்கும் போது படித்த இளைஞர்களான உங்களால் ஏன் வெளிநாடுகளில் சம்பாதித்து குறுகிய காலத்திலேயே கோடீஸ்வரனாக முடியாது ? என எங்களைப் பார்த்து கேள்வி கேட்பது போலிருந்தது அவர்களது நடையும், பாவனைகளும் ! மாயாவி குளத்தை சேர்ந்த வெளிநாட்டு அடிமைகள் சிலரின் கவர்ச்சியான வெளித்தோற்றத்தை கண்டு எங்கள் ஊர் இளைஞர்கள் சிலரும் கூட வெளிநாட்டு உழைப்பை பற்றி சிந்திக்க ஆரம்பித்தனர்.

அதன் விளைவு தற்பொழுது எங்கள் ஊரின் வயற்பரப்பில் முக்கால் பகுதி விளைநிலங்கள் கட்டுமானங்களால் அழிக்கப்பட்டுவிட்டன. ஆம், வெளிநாட்டு பணத்தின் ஆணவம் பங்களாக்களாக உருமாறிவிட்டதால் உயிரென மதித்து வந்த எங்களது சுய நிர்ணய விவசாயமென்னும் பொருளாதாரச் சந்தையை நாங்களே குழி தோண்டி புதைத்து விட்டோம். இப்போதோ, உலகப் பொருளாதார சந்தையின் சரிவை கண்டு திகிலடைந்து நிற்கிறோம். காரணம் படித்த எங்களின் பலரது வேலைவாய்ப்புகளும் கேள்விக் குறியாக்கப்பட்டு விட்டன.

படித்த நாங்கள் வெளிநாட்டு கரன்சிகளை வைத்து ஊரில் காட்டிய பந்தாவால் படிப்பறிவில்லாத எங்கள் ஊர் இளைஞர்களின் மனநிலையிலும் மாற்றம் வந்த்து. அதன் விளைவு, அவர்களிடம் இருந்த சொற்ப விளைநிலங்களும் பன்னாட்டு குளிர்பான கம்பெனிக்காக விற்கப்பட்டு அதில் கிடைத்த சொற்ப பணத்தையும் ஒரு போலி ஏஜெண்ட் வசம் கொடுத்து வெளிநாடு போனவர்கள் குடியுரிமை மீறல் சட்டத்தின் கீழ் கைதிகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.

எதற்காக எனக் கேட்கிறீர்களா ? போலி விசாவில் அந்நாட்டிற்குள் நுழைந்ததற்காகத் தான். ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான் எனக் கூறுபவர்களே, தினமும் ஏமாறுவது தான் இன்றைய வாழ்வியல் எதார்த்தம். பசுமையான வாழ்க்கை சொர்க்கத்தை இழந்து மேலை நாட்டு ஆடம்பர கலாச்சாரமென்னும் நரக வாழ்க்கையை தேடிக்கொண்ட எங்களது எதிர்காலம் மட்டுமா சூனியமானது ? எதுவுமே அறியாத எங்கள் ஊரின் ஊமைகுளத்தின் எதிர்காலமும் தான் சூனியமாகிக் கொண்டிருக்கிறது !

பன்னாட்டு குளிர்பானக் கம்பெனியின் கழிவுகள் ஊமைகுளத்தில் கலந்து குளிப்பதற்கோ, குடிப்பதற்கோ லாயக்கற்றதாய் மாறிவிட்டது. எங்கள் வாழ்க்கையில் முதன் முதலா இப்போது தான் ஊமைகுளம் வற்றிக்கொண்டிருக்கும் கொடுமையை பார்க்கிறோம். விரைவிலேயே எங்களின் கண்களை விட்டும் ஊமைகுளம் மறைந்து விடும். அந்த பாவத்தை மட்டும் மறக்கவோ, மறைக்கவோ முடியாமல் நாங்கள் சுமந்து வாழப் போகிறோம்.

கடந்த 19-08-09 அன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மாநில உணவு அமைச்சர்களின் மாநாட்டில் பேசிய விவசாய அமைச்சர் சரத் பவார் இவ்வருடம் மழை குறைவாக பெய்ததால் 1.37 கோடி ஏக்கர் அளவுக்கு நெல் பயிரிடுவது குறைந்து விடுமென்றும் அதனால் ஒரு கோடி டன் அரிசி உற்பத்தியும் குறையும் என்றார். இந்த தகவலால் நாட்டில் அரிசி (தட்டுப்பாடு) பஞ்சம் வந்து விடுமோ? என நாட்டு மக்களை கவலை கொள்ள செய்துவிட்டது.

மழையை நம்பியே விவசாயம் செய்து வரும் ஆந்திர மாநில விவசாயிகள் மழை பெய்ததால் வறட்சியின் பிடியில் சிக்கி தற்கொலை செய்து வருகிறார்கள். கடந்து 40 நாளில் மட்டும் 21 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். என்ற செய்திகளையெல்லாம் தினசரி பத்திரிகைகளில் படிக்கும் போது நெஞ்சம் வெடித்து விடும் போல் இருக்கிறது. மழை பெய்தாலும், பொய்த்தாலும் விவசாயத்திற்கும் மனிதர் களின் வாழ்வியல் தேவைகளுக்கும் குறைவின்றி நீராதாரத்தை வழங்கி வந்த எங்கள் கிராமத்து ஊமை குளத்தின் இயற்கை வளத்தை எங்களின் ஆடம்பர வாழ்க்கை யென்னும் மோகத்திற்காக நாங்களே அழித்து விட்டோமே என நினைத்து ஓ… வென கதற துடிக்கிறது எங்கள் நெஞ்சம்.

வெளிநாட்டு சிறைகளில் வாடி வதங்கி வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கும் எங்கள் கிராமத்து இளைஞர் களும், வேலை பறி போய் விடுமோ? என அச்சப்பட்டு வாழும் எங்கள் ஊர் வெளிநாட்டு உழைப்பாளிகளும் ”என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் – ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் –

ஒழுங்காய் – பாடுபடு – வயற்காட்டில் – உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில் “ என்ற பாடல் வரிகளை வாழ்க்கை தத்துவமாக ஏற்றிருந்தால் இத்தனை இடர்பாடுகளுக்கும் ஆளாகாமல் தவிர்த்திருக்கலா மல்லவா?
குளங்கள் இல்லா ஊர்கள் இல்லை என்ற நிலையை மாற்றி குளங்கள் உள்ள ஊர்களே இல்லை என்ற “சாப” புரட்சிக்கு வித்திட துடிக்கும் கிராமத்து மக்களே எங்களை பார்த்தாவது பாடம் படித்துக் கொள்ளுங்கள். இருக்கும் குளங்கள், கண்மாய்கள், பொதுக்கிணறுகளையாவது நம்மில் ஒருவர் என நினைத்து பாதுகாக்க முன் வாருங்கள். சிறப்பு பொருளாதார மண்டலம், துணை நகரங்கள், பண்ணாட்டு வர்த்தக நிறுவனங்கள் என திட்டங்களை அறிவித்து அதற்காக விளைச்சல் பூமிகளையெல்லாம் கபளீகரம் செய்ய துடிக்கும் அரசியல் (ஊழல்) வாதிகளின் சூழ்ச்சிக்கு பழியாகி விடாமல் உயிரை கொடுத்தேனும் இயற்கை வளங்களையும் விளை நிலங்களையும் பேணி பாதுகாப்பது இந்தியனாய் பிறந்துள்ள ஒவ்வொருவரின் மீதான கடமை என நினைத்து வாழ்வோம் ! இயற்கையுடன் இணைந்து வாழ்வோம் !!

இப்படிக்கு

பொது மக்கள்

ஊமை குளம்

குறிப்பு :-
வாசகர்கள் தங்களின் விமர்சனங்களை SJAROOSI@ yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 050 – 7959960 என்ற கைப்பேசிக்கோ தெரியப்படுத்தலாம் !

Thursday, July 1, 2010

நான் தான் “திருக்குர்ஆன்” பேசுகிறேன் !

நான் தான் “திருக்குர்ஆன்” பேசுகிறேன் !
( ஆக்கம்;- மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி )
http://www.mudukulathur.com/religiondetails.asp?id=160
என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே, உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவிட வேண்டுமென்பது தான் எனது ஆவல் ! அதற்காகத்தான் நானும் உங்களுக்காக இறைவனிட மிருந்து இறக்கி அருளப்பட்டிருக்கிறேன். நான் சுவர்க்கத்தின் லவ்ஹூல் மஹ்பூல் என்னும் ஏட்டில் வசித்து வருபவன். இவ்வுலகில் நான் முதன் முதலில் ஆரத்தழுவி கட்டி அணைத்து முத்தமிட்டது நமதருமை நாயகம் (ஸல்) அவர்களைத்தான் ! மனிதர்கள் எல்லோருமே என்னைத்தான் முத்தமிடுவீர்கள். ஆனால் நானோ எம்பெருமானாரை முத்தமிட்டவன்.
என்னை சுமப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட ஆரம்ப கட்ட சிரமத்தை நானும் எனது இறைவனுமே நன்கு அறிவோம். அதனை சாதாரண மனிதர்களாகிய நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள் ! இத்தனை நெருக்கடிக்குள்ளும் என்னை சுமந்து எனது பெருமைகளை உணர்ந்து எனது சகவாசம் உலகம் அழியும் வரைக்கும் வாழக்கூடிய தனது உம்மத்தினர் அனைவருக்கும் வேண்டும் என்பதற் காகத்தான் ஆரம்பத்தில் என்னை மாட்டுத் தோலிலும், மரக்கட்டை களிலும் பதிய வைத்து என்னை ஓர் பொக்கிஷமாக உங்களிடம் ஒப்படைத்துள்ளார்கள் நாயகம் (ஸல்) அவர்கள். ஆனால் நீங்களோ, எனது சகவாசத்தை விரும்பாமல் ஷைத்தானின் சகவாசத்தை விரும்பக்கூடியவர்களாக மாறி விட்டீர்கள். “கூடா நட்பு கேடாய் முடியும்” என்ற பழமொழி மறந்து விட்டதோ?
என்னை மறக்க ஆரம்பித்ததும் எவ்வளவு இழிவுகளையும் சோதனை களையும் சந்தித்து வருகிறீர்கள். எனது சிறப்பைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால் ”ஹுதன்லில் முத்தக்கீன்”இறையச்சமுடையவர் களுக்கு நேர்வழி காட்டக்கூடியவனாயிருக்கிறேன். யார் என்னை நம்பி பின்பற்றினாலும் நிச்சயம் நான் அவர்களை ஈருலகிலும் நல்லோர் களாய் வாழச் செய்வேன் என்பதை அளவு கடந்த உறுதியுடன் என்னால் கூற முடியும்.
இன்று யார் யாருக்கோ பின்னால் போய்க்கொண்டிருக்கும் மனிதர்களே ! அவர்களெல்லாம் நாளை மறுமையில் உங்களுக்கு துணை நிற்பவர்கள் என நினைத்தால் ஏமாந்து தான் போவீர்கள். ஒரு காலத்தில் வீடு தோறும் புனிதமானவனாக மதிக்கப்பட்டு உயர்ந்த ரக ஆடைகளை கொண்டு என்னை மூடி வீட்டின் உயர்வான இடத்தில் எனக்கென்று தனியொரு இடம் அமைத்து அதில் வைத்து அழகு பார்த்த நீங்கள் இன்று உங்கள் வீட்டு குழந்தைகளின் பள்ளிக்கூட புத்தகங்களோடும், அறுவருக்கத்தக்க புகைப்படங்களை சுமந்து வரும் நாலாந்தர புத்தகங்களோடும், மார்க்கத்தின் பெயரால் மனிதர்கள் தம் மனம் போன போக்கில் கண்டதையும் எழுதிவரும் மற்ற நூல்களுடனும் சேர்த்தே என்னையும் வைத்து விட்டீர்களே ! இது நியாயமா?
டி.வி. என்ற இப்லீஸின் நாசகார கவர்ச்சி பெட்டிகள் வருவதற்கு முன்பெல்லாம் வீடுதோறும் குடும்ப பெண்கள் அதிகாலையே எழுந்து சுபுஹு தொழுகையை முடித்து விட்டு என்னை கரத்தில் ஏந்தி கம கமக்கும் சந்தன ஊதுபத்தியின் புகையில் எனது வசனங்களை ஓதும் போது வெளியாகும் அந்த இனிமையான ஓசை தென்றல் காற்றோடு கலக்கும் ரம்மியம் தானே, அன்றைய மக்களின் சங்கீதமாய் இருந்தது. ஆனால் இன்றோ நள்ளிரவு வரை டி.வி.யில் தொடர் (சீரியல்) களை பார்த்து விட்டு உறங்குவதால் பள்ளியில் கூறப்படும் அதிகாலை பாங்கின் ஓசைக்கு எதிர் ஓசையாய் உனது குறட்டை சத்தம் வெளி யாவது இறைவனின் கோபத்திற்குரியதல்லவா? ஓ ….. ஜெய்னம்பு பீவியே … படைத்தவனையே மறந்து விட்ட நீ என்னையா கையில் எடுத்து ஓதி விடப் போகிறாய் ?
எனதருமை தெரியாத மனிதர்களே ! என்னைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை கேளுங்கள்;- “திருக்குர்ஆனிலிருந்து சிறிதளவு கூட தம் உள்ளத்தில் மனனம் இல்லாதவர் பாழடைந்த வீடு போன்றவர் ஆவார்.”
(அறிவிப்பாளர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதி)
பார்த்தாயா? நான் இல்லாத இதயம் பாழடைந்த வீட்டைப் போன்ற தாகி விடுகிறது.
என்னைப் பார்த்தால் அதற்கு ஒரு கூலி, ஓதினால், பிறர் ஓத கேட்டால், மனனம் செய்தால் என ஒவ்வொன்றுக்கும் தனிதனி அந்தஸ்தில் இறைவனின் நற்கூலிகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதை மறந்து விட்டீர்களா? வருடம் முழுவதும் என்னை நினைத்து வாழ்ந்த நீங்கள், இன்றோ வருடத்தில் ஒரு மாதம் ரமலானில் மட்டுமே நினைக்க கூடிய பச்சோந்திகளாய் மாறி விட்டீர்கள்.
ஒவ்வொரு நாளும் குளித்து சீவி சிங்காரித்து சுத்தம் செய்து கொள்ளும் நன்றி கெட்ட மனிதனே ! என்னை மட்டும் உன் வீட்டு பரணி மேல் தூசியடைய வைத்து விட்டு ரமலான் வரும் போது மட்டும் சுத்தம் செய்து கையிலெடுப்பது ஓரவஞ்சனையில்லையா? உன் போன்ற சந்தர்ப்ப வாத வேடதாரிகளை நாளை மறுமையில் எனது இறைவனுக்கு முன்பாக தோலுரித்துக் காட்டுவேன். என்பதை நினைவில் வைத்துக் கொள் !
ஒரு நேரத்தில் (ஒளு) சுத்தமில்லாமல் என் அருகில் வருவதற்கே பயந்து நடுங்கிய மனிதன் இன்று குளிப்பு கடமையான நிலையிலும் கூட என்னை சர்வ சாதாரணமாக தொடுவதற்கு துணிந்து விட்ட கன்றாவியை கண்டு சகித்துக் கொள்ள முடியவில்லை. ”லாய மஸ்ஸுஹு இல்லல் முதஹ்ஹரூன்” ( தூயவர்களைத் தவிர மற்றெவரும் அதை தொட மாட்டார்கள் ) என்ற இறை வசனத்தை அவமரியாதை செய்கின்ற பாவத்தை எந்தப் பாவிப்பயல் வழிகாட்டி கொடுத்தானோ? அவன் ஈருலகிலும் நாசமடைவது திண்ணம் !
தமிழக முஸ்லிம்களாகிய நீங்கள் தான் என் சிறப்பை உணராமல் என்னை உதாசீனப்படுத்தி வருகிறீர்கள். ஆனால் ஒரு வகையில் மலேசியா நாட்டு முஸ்லிம்களை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். ஆமாம் அவர்கள்தான் ஆண், பெண் என்ற பாகுபாடில் லாமல் என்னை தலையில் வைத்து கொண்டாடி வருகிறார்கள். மலேசியாவின் கோலா கங்ஸார் என்ற ஊரில் நடக்கின்ற திருமணங் களின் போது திருமணத்திற்கு முதல் நாள் இரவு ஒரு நிகழ்ச்சி நடக்கும்.
பெண் வீட்டில் மணமகன் வீட்டார் உட்பட உறவினர் அனைவரும் கூடி இருப்பார்கள். அச்சம், மடம், நாணம் என்று அந்த காலத்தில் சொல்வார்களே, அத்தனையும் ஒருங்கே பொதிந்த நிலையில் மணப் பெண் வந்து சபையில் அமர்வாள். பிறகு அவளுக்கு முன்பாக வைக்கப் பட்டிருக்கும் திருக்குர்ஆனாகிய என்னை புரட்டி தஜ்வீத் என்ற விதி முறைப்படி எனது வசனங்களை அட்சரம் பிசகாமல் ஓதி முடிப்பாள். பின்னர் எல்லோருக்கும் இனிப்பு வழங்குவார்கள். அதை விட ஓதப் பட்ட தித்திக்கும் எனது வசனத்தை கேட்ட மன நிறைவோடு வந்தவர் கள் வீடு திரும்புவார்கள்.
மணமகளுடைய அழகைவிட, கற்ற அறிவைவிட, பெற்றிருக்கும் செல்வத்தைவிட எனது வசனங்களை பிழையின்றி ஓதுவதில் தான் மணப்பெண்ணின் சிறப்பு இருக்கிறது என்று மலேசியா முஸ்லிம்கள் கருதுகிறார்கள். திருக்குர்ஆனை ஓதுவதில் தான் அந்த எதிர்காலத்தாய், குலவிளக்கு, குடும்பத் தலைவியின் பூரணத்துவம் இருக்கிறது என மலாய் மக்கள் முழு நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள்.
எனதருமை தமிழ் முஸ்லிம் சமுதாயமே, பார்த்தாயா? மலாய் முஸ்லிம்களும் நானும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோமென்று ! பெண் பார்க்கும் படலத்தில் கூட அங்கு என்னைத் தான் முன்னிலைப் படுத்துகிறது மலாய் முஸ்லிம் சமுதாயம். அந்நாட்டில் தான் என்னை ஓதுவதை பெண்களுக்கு ஒரு முக்கியமான அம்சமாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். அங்கு வாழும் தாய்க் குலத்தினரின் முணு முணுப்பும், குழந்தைகளின் தாலாட்டும் கூட எனது வசனங்களாக இருப்பதினாலேயே அகில உலக கிராஅத் போட்டியில்கூட மலாய் மக்கள் அரபுகளை விட சிறப்பாக ஓதி உயர்வான பரிசுகளை பெற்று விடுகிறார்கள்.
ஆனால் நீயோ சினிமா பாடல்களை பாடி உன் குழந்தைகளை தூங்க வைக்கிறாய் ! உன் பிள்ளை கண் விழித்து பாடுவதும் சினிமா பாடல் களாகவே ஆகிவிட்டது. உனது முணு முணுப்பிலும் கூட சினிமா, டி.வி. தொடர் பற்றியேத் தான் போய்க்கொண்டிருக்கிறது. அதனால் தான் உனது வாழ்க்கையும் ஒரு டிராமா போல் முடிந்து விடுகிறது ! எல்லாம் அந்த இப்லீஸ் படுத்தும் பாடுதான் !
இவ்வருட ரமலான் வரைக்கும் நான் உங்களது போலித்தனமான பக்திக்குரிய செல்லப் பிள்ளையாக் இருப்பேன். பின்னர் வழக்கம் போல பரணி மீது படுத்துவிடுவேன். அடுத்த வருட நோன்புவரை ! அறிவுள்ள வர்களுக்கு மட்டும் உறுதியாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். யார் என்னை தங்களது நெஞ்சத்தில் வைத்து பாதுகாக்கிறார்களோ? அவர் களின் மரணத்திற்குப்பின் மண்ணறை வாழ்க்கையின் போது வேதனையை விட்டும் கொடிய விஷமுள்ள பாம்பு, தேள் போன்ற ஜந்துகளின் தீங்குகளை விட்டும் அவர்களை நான் பாதுகாப்பேன். நாளை மறுமையிலும் இறைவனிடம் பரிந்துரை செய்வேன்.
என்னை சுமந்து வாழும் இதயங்கள் மட்டுமே ஈருலகிலும் ஒளி மயமாக இருக்கும். என்னைப் பற்றி இவ்வளவு கூறிய பிறகும் தினந் தோறும் நீ என்னை உன் இதயத்தில் சுமக்க மறுத்தால் நஷ்டம் எனக்கல்ல, உனக்குத்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள் !
( வஸ்ஸலாம்! )
வாசகர்கள் விமர்சனங்களை
sjaroosi@yahoo.com
என்ற மின்னஞ்சல் அல்லது 050- 7959960 என்ற கைபேசிக்கோ தெரிவிக்கலாம்