அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே!
சமுதாய ஐக்கியம்/ ஒற்றுமை பற்றி ஷேக் A.C.அகார் முஹம்மது அவர்கள் சிங்கப்பூரில் ஆற்றிய முத்திரை பயான் தற்பொழுது உங்கள் தமிழ் முஸ்லிம் டியூபில் கீழ்காணும் இணைப்பில் உள்ளது
http://www.tamilmuslimtube.com/video/Part-18-Muranpattil-udanpaadu-k
நம் முஸ்லிம் சமுதாயத்தின் குறிப்பாக தமிழ் முஸ்லிம் சமுதாயத்தின் உண்மை நிலையை பட்டவர்தனமாக பிரதிபலிக்கிறது.
வல்ல அல்லாஹ் இந்த குழுவாதத்திலிருந்து நம்மை காப்பாற்றி. உண்மையான சகோதர அன்புடன் கூடிய முஸ்லிம்களாக வாழ வைப்பானாக!!!
Dear Brothers and Sisters, Assalamu Alaikum
Please find link for one of the best speeches I ever seen & this reflects current situation of Muslims Ummah especially “Tamil Muslims”.
May Allah reward Sheikh A.C.Agar Mohamed in this world and hereafter for his Dawa and give him long life to hear such a thought provoking speeches.
Please click to view
http://www.tamilmuslimtube.com/video/Part-18-Muranpattil-udanpaadu-k
Yours Brotherly,
Tamil Muslim Tube – Ahamed K. Raja
e-mail: tamilmuslimtube@gmail.com
Dua in Arabic & Tamil by Mufti A.Omar Sherif Kasimi
அரபி மற்றும் தமிழில் முஃப்தி A உமர் ஷெரீஃப் காசிமி அவர்களின் அற்புதமான துஆ
http://www.tamilmuslimtube.com/video/Part-18-Muranpattil-udanpaadu-k
Holy Mihraj – Kayal Sheikh Ahamed Abdul Kader mahlari
புனித மெஹ்ராஜ் இரவு - காயல் ஷெய்க் அஹமது அப்துல் காதர் மஹ்லரி பயான்
http://www.tamilmuslimtube.com/playlist/29863009298530072980-2990301430
Sri Lanka Moulavi, Al Haj. Abdul Hameed (Bahji) bayan
இலங்கை மெளலவி அல்ஹாஜ் அப்துல் ஹமீத் பஹ்ஜி அவர்களின் பயான்
http://www.tamilmuslimtube.com/video/Tamil-Bayan-Ikhlas-Al-Haj-Moul-2
Mufti A.Omar Sherif Kasimi’s Bayan on Zakath & Charity.
ஜகாத் / தருமம் பற்றி முஃப்தி உமர் ஷெரிஃப் காஸிமி அவர்களின் பயான்
http://www.tamilmuslimtube.com/video/Quran-Echarikum-Theeya-Panbug-6
Tamil Islamic Songs தமிழ் இஸ்லாமிய கீதங்கள்
http://www.tamilmuslimtube.com/playlist/Tamil-Islamic-Songs
பி.ஜே.யின் மனோ இச்சையும் சன்மார்க்கமும் - காயல் ஷெய்க் ஹாமித் பக்ரி
“P.J.yin Mano Itchaiyum Sanmaarkamum” emotional bayan by Sheikh.Kayal Hameed Bakri
http://www.tamilmuslimtube.com/video/1-4
ஷெய்க் அப்துல்லா ஜமாலி கேள்வி பதில் - Sheikh Abdulla Jamali Q&A
http://www.tamilmuslimtube.com/video/Allah-is-Shapeless
இலங்கை ஷெய்க் A.C.K.முஹம்மத் கேள்வி பதில்
Sri Lanka Sheikh A.C.K.Mohamed Q&A
http://www.tamilmuslimtube.com/video/TAMIL-MUSLIM-QUESTION-AND-ANSWE
கீழக்கரையின் சிறப்புகள் - Kilakaraiyin Sirappukal
http://www.tamilmuslimtube.com/playlist/Pride-of-Kilakarai
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label ஒற்றுமை. Show all posts
Showing posts with label ஒற்றுமை. Show all posts
Thursday, July 23, 2009
Tuesday, January 6, 2009
ஒற்றுமையே தீர்வு!
ஒற்றுமையே தீர்வு!
http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1125&Itemid=52
உண்மைகள் உறங்குவதற்கும் அசத்தியமும் அட்டூழியமும் அதிகாரங்களில் வீற்றிருப்பதற்கும் அநியாயமாக ஒரு சமூகம் அடக்கி ஒடுக்கப்படுவதற்கும் தங்களது உரிமைகள் என்ன என்பதைக் குறித்தும் அதனை அடைவதற்கான வழிமுறைகள் யாவை என்பதைக் குறித்தும் போதிய அறிவின்றியும் அதற்காக ஒன்றுபட்டு போராடும் போராட்ட குணமின்றியும் இருப்பதே அச்சமூகம் பின்தங்கிக் கிடப்பதற்கு முழு முதற்காரணமாகும். விழிப்புணர்ச்சி என்பதும் ஒன்றிணைந்து உரிமைக்காக உழைத்தல் என்பதும் ஒன்றோடொன்று கலந்ததாகும். இரண்டில் எந்த ஒன்றில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் உண்மை உறங்கும்; அக்கிரமம் கோலோச்சும்; உரிமைக்குரியவர் அநியாயமாக அடக்கி ஒடுக்கப்படுவர். இவ்விரண்டில் இரண்டுமே இல்லாதிருந்தால்.....?
80 களிலிருந்து 2000 க்கு இடைப்பட்ட 20 ஆண்டுகால இடைவெளியில் இந்திய முஸ்லிம்களின் நிலையினை எடுத்துப் பார்த்தால் கிட்டத்தட்ட மேற்கண்ட இரண்டுமே இல்லாமல், அநியாயக்காரர்களால் படுபயங்கரமாக அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டு கொள்ளலாம். இதனைத் தெளிவாக படம் பிடித்துக் காண்பித்ததுதான் இந்திய முஸ்லிம்களின் அரசியல், அதிகார, கல்வி, பொருளாதார நிலை குறித்த சச்சார் கமிட்டியின் அறிக்கை.
இந்திய அரசியல்-அதிகார அமைப்புக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது போன்று, தங்களை எவர் ஆண்டால் என்ன? யார் அதிகாரத்தில் இருந்தால் என்ன என்று, இந்திய முஸ்லிம் சமூகம் அசட்டையாக இருந்ததன் விளைவு, நாட்டில் வெடிக்கும் அனைத்து குண்டுகளுக்கும் மூலாதாரியாக வேறு சக்திகள் இயங்கினாலும் கார்க்கரேக்கள் மூலம் அவை வெளிச்சத்துக்கு வந்தாலும் சாமர்த்தியமாக அவை மறைக்கப்பட்டு குற்றவாளிக் கூண்டில் நிரபராதியான இந்த முஸ்லிம் சமூகம் அடைக்கப்பட்டு நாட்டை விட்டு அந்நியப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
காலம் கடந்தெனினும் இன்று, மாநிலங்களிலிருந்து தேசியம்வரை, அரசியல் விழிப்புணர்ச்சியும் அதனை அடைவதற்கான வழிமுறைகளைக் குறித்துச் சிந்திக்கும் போக்கும் சமூகத்தில் கொஞ்சங் கொஞ்சமாக வேரூன்றி வருகிறது.
இதற்கான வெளிப்படையான உதாரணங்களாக சமீபத்தில் தமிழகத்தில் உருவான ஐ.டி.எம்.கே, தமுமுகவின் மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற முஸ்லிம் அரசியல் இயக்கங்களும் தென்னகத்தை மையமாக வைத்து உருவாக நினைக்கும் பாப்புலர் 'ஃப்ரண்ட ஆஃப் இந்தியா'வின் அரசியல் பிரவேசமும் தேசிய அளவில் செயல்படப் போகும் ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் பிரவேச அறிக்கையும் சான்றுகளாக அமைந்துள்ளன.
முஸ்லிம்கள் அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தால் மட்டும் போதாது. அதனை அடைய, "அரசியலில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டால் மட்டுமே அற்புதங்களை நிகழ்த்திக் காட்ட இயலும்!". இதனை ஒரு தாரக மந்திரமாகக் கையில் எடுத்துக் கொண்டு செயலாற்ற இந்த அமைப்புகள் முன்வர வேன்டும். என்றாலே உரிமைகளை மீட்டெடுப்பதிலும் அடக்கி ஒடுக்கப் படுவதிலிருந்து சமுதாயத்தை முழுமையாகப் பாதுகாப்பதிலும் வெற்றி பெற இயலும்.
இந்தத் தாரக மந்திரம் சரியாகப் பின்பற்றப் படுமானால், தமிழக அரசியல் கட்சிகள் பெருமளவில் முஸ்லிம்களை அணுகி மன்றாட வேண்டிய நிலையினை முஸ்லிம் சமுதாயத்தால் ஏற்படுத்த இயலும்.
கடந்த 1967 இல் தமிழகத்தில் நடந்த நான்காவது சட்டசபைத் தேர்தலின்போது இஸ்லாமியர்களிடையே ஏற்பட்ட மார்க்க மற்றும் அரசியல் ரீதியிலான ஒற்றுமை ஏற்படுத்திய விளைவுகளை ஒரு சிறந்த உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகை மொத்த மக்கள் தொகையில் 6% என அரசு பதிவேடு கூறுகிறது.
கடந்த 1967 இல் காயிதே மில்லத் இஸ்மாயில் அவர்களின் தலைமையில் அமைந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மூலம் தமிழக முஸ்லிம்கள் ஓரணியில் திரண்டனர். காயிதே மில்லத் அவர்கள் அண்ணாதுரையுடன் கைகோர்த்து தி.மு.கவுடனான வலுவான அரசியல் கூட்டணியை அமைத்தார்.
அதனைத் தொடர்ந்து 1967 தேர்தல் களத்தில் 137 இடங்களைத் திமுக கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது. 1962 இல் நடந்த இதற்கு முந்தைய தேர்தலில் இதே திமுக வெறும் ஏழு இடங்களை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது.
1967 தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து திருச்சியிலிருந்து பிரசுரமாகும் "மறுமலர்ச்சி" செய்தித்தாள் தேர்தல் முடிவுகளைப் பற்றிய தனது ஆய்வுகளை மேற்கொண்டது.
அதில், 58 தொகுதிகளில் திமுக எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றதற்கான காரணிகள் அத்தனையும் ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகின. அதாவது மேற்கண்ட தொகுதிகளில் மூவாயிரம் முதல் பத்தாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது திமுக.
மேற்கூறிய அதே தொகுதிகளில், முஸ்லிம்களின் ஓட்டுக்கள் அனைத்தும் பெருவாரியாக திமுகவிற்கு அளிக்கப்பட்டிருந்ததும், அதுவே திமுகவின் அரசியல் வரலாற்றில் அண்ணாதுரையின் தலைமையில் முதன் முறையாக திமுக பெருவாரியான இடங்களைக் கைப்பற்றக் காரணமாயிருந்ததும் நிரூபிக்கப்பட்டன. தேர்தல் களத்தில் 80% தொகுதிகளில் வெற்றியினை நிர்ணயிப்பது வெறும் 5% முதல் 10% வரையிலான ஓட்டுக்களே என்பதும் அதுவே ஒரு வேட்பாளரின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடியதுமாகும் என்பதும் சிறுபிள்ளைக்குக்கூடத் தெரியும் ஒரு விஷயமாகும்.
அரசியல் ரீதியில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஓரணியில் நின்றால் தமிழக அரசியலை நிர்ணயிக்கக்கூடிய பெரும் சக்தியாக முஸ்லிம்கள் விளங்க முடியும்.
தமிழக முஸ்லிம்களின் சக்தி என்னவென்பதைத் திமுகவின் மூத்த தலைவர்கள் அனைவரும் நன்கு அறிவர். அதிலும் குறிப்பாக திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் கண்களுக்கு தமிழக முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ள தமுமுக- வினை தம் பக்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் மிகுந்து காணப்படுகிறது.
இந்தியா விடுதலை பெற்று 61 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்திய அளவில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு கேட்டுப் பெறப் போராடும் வேளையில் முஸ்லிம்களுக்கு 3.5% இட ஒதுக்கீட்டைத் திமுக அளித்தது இந்த ஆவலை மனதில் வைத்துத்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அதே வேளையில் இந்திய ராணுவத்தில் 3.5 % முஸ்லிம்கள் உள்ளனரா? அல்லது வெறும் 0.25% மட்டுமா? போன்றவற்றினைப் பற்றி இத்தனை நாள் அறியாத கட்டுப் பெட்டிகளாக முஸ்லிம்கள் இருந்து வந்தனர்.
இதனைப் பற்றிய கேள்விகள் எழுப்பியபின் தொடர்ந்த விசாரணையில் அநீதியும் அவநம்பிக்கையும் வெளிப்படையாகத் தெரிந்தன. இத்தனை நாட்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த அநியாயத்தினை வெளிக் கொண்டுவந்த சச்சார் கமிட்டி அறிக்கையினை முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டும். இதனை ஒட்டிய கேள்விகளையும் உரிமைக்குரல்களையும் முஸ்லிம் அறிவுஜீவிகள் உரிய இடங்களில் எழுப்ப வேண்டும்.
ஆக, ஒரு 6% முஸ்லிம் மக்கள்தொகை 40% சட்டசபை இடங்களை வெற்றியோ தோல்வியோ அடையச் செய்து தமிழக அரசியலை நிர்ணயிக்குமெனில் இந்திய அளவில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் என்னவாகும் என்பதை இந்தச் சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டும். குறிப்பாக உ.பி, கேரளா, அஸ்ஸாம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்களே துருப்புச் சீட்டுக்களாக உள்ளனர். அரசியல் ரீதியில் முஸ்லிம் அமைப்புகளிடையே ஒற்றுமை மலர்ந்தால் இந்திய அளவில் சிறிதும் பெரிதுமாக 150 பாராளுமன்ற சீட்களை முஸ்லிம்களால் நிர்ணயிக்க முடியும் என்பது ஆணித்தரமான உண்மை.
மார்க்க ரீதியில் இயக்கங்கள், அமைப்புக்கள் என்று ஏகத்திற்கு தமிழகத்தில் பெருகினாலும், அவைகூடத் தம்மை வளர்த்து விட்ட சாதாரண பாமர முஸ்லிம்களுக்கு அரசு மூலம் கிடைக்கக் கூடிய உரிமைகளை, பலன்களை எப்படி வாங்கித் தருவது? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்திய அளவிலும் மாநில அளவிலும் அரசியல் ரீதியில் முஸ்லிம்கள் பிரிந்து கிடப்பதே கடந்த 60 ஆண்டுகளாக மோசமான பின்தங்கியிருக்கும் சமுதாயமாக முஸ்லிம் சமுதாயத்தை இன்னும் வைத்திருக்கிறது.
எனவே முஸ்லிம்கள் குறைந்தபட்சம் அரசியல் ரீதியில் ஒன்றுபட்டு மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கும் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
முஸ்லிம் சமுதாய இயக்கங்கள், அமைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரீதியிலாக கொள்கை கட்டமைப்பினைக் கொண்டிருந்தாலும் தொலைநோக்குப்பார்வையுடன் முஸ்லிம் சமுதாயம் செல்ல வேண்டிய பாதையினை நிர்ணயிக்கும் அரசியல் சக்தியாக உருவெடுக்க தேசிய அளவில் ஒன்றிணைந்து ஒரே கட்சியாக வெளிவர வேண்டும்.
வெற்றியைத் தரக்கூடியவன் வல்ல இறைவன். அதற்கான அணுகூலங்களை அமைக்க சமுதாயம் ஒன்றுபடட்டும்!
http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1125&Itemid=52
உண்மைகள் உறங்குவதற்கும் அசத்தியமும் அட்டூழியமும் அதிகாரங்களில் வீற்றிருப்பதற்கும் அநியாயமாக ஒரு சமூகம் அடக்கி ஒடுக்கப்படுவதற்கும் தங்களது உரிமைகள் என்ன என்பதைக் குறித்தும் அதனை அடைவதற்கான வழிமுறைகள் யாவை என்பதைக் குறித்தும் போதிய அறிவின்றியும் அதற்காக ஒன்றுபட்டு போராடும் போராட்ட குணமின்றியும் இருப்பதே அச்சமூகம் பின்தங்கிக் கிடப்பதற்கு முழு முதற்காரணமாகும். விழிப்புணர்ச்சி என்பதும் ஒன்றிணைந்து உரிமைக்காக உழைத்தல் என்பதும் ஒன்றோடொன்று கலந்ததாகும். இரண்டில் எந்த ஒன்றில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் உண்மை உறங்கும்; அக்கிரமம் கோலோச்சும்; உரிமைக்குரியவர் அநியாயமாக அடக்கி ஒடுக்கப்படுவர். இவ்விரண்டில் இரண்டுமே இல்லாதிருந்தால்.....?
80 களிலிருந்து 2000 க்கு இடைப்பட்ட 20 ஆண்டுகால இடைவெளியில் இந்திய முஸ்லிம்களின் நிலையினை எடுத்துப் பார்த்தால் கிட்டத்தட்ட மேற்கண்ட இரண்டுமே இல்லாமல், அநியாயக்காரர்களால் படுபயங்கரமாக அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டு கொள்ளலாம். இதனைத் தெளிவாக படம் பிடித்துக் காண்பித்ததுதான் இந்திய முஸ்லிம்களின் அரசியல், அதிகார, கல்வி, பொருளாதார நிலை குறித்த சச்சார் கமிட்டியின் அறிக்கை.
இந்திய அரசியல்-அதிகார அமைப்புக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது போன்று, தங்களை எவர் ஆண்டால் என்ன? யார் அதிகாரத்தில் இருந்தால் என்ன என்று, இந்திய முஸ்லிம் சமூகம் அசட்டையாக இருந்ததன் விளைவு, நாட்டில் வெடிக்கும் அனைத்து குண்டுகளுக்கும் மூலாதாரியாக வேறு சக்திகள் இயங்கினாலும் கார்க்கரேக்கள் மூலம் அவை வெளிச்சத்துக்கு வந்தாலும் சாமர்த்தியமாக அவை மறைக்கப்பட்டு குற்றவாளிக் கூண்டில் நிரபராதியான இந்த முஸ்லிம் சமூகம் அடைக்கப்பட்டு நாட்டை விட்டு அந்நியப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
காலம் கடந்தெனினும் இன்று, மாநிலங்களிலிருந்து தேசியம்வரை, அரசியல் விழிப்புணர்ச்சியும் அதனை அடைவதற்கான வழிமுறைகளைக் குறித்துச் சிந்திக்கும் போக்கும் சமூகத்தில் கொஞ்சங் கொஞ்சமாக வேரூன்றி வருகிறது.
இதற்கான வெளிப்படையான உதாரணங்களாக சமீபத்தில் தமிழகத்தில் உருவான ஐ.டி.எம்.கே, தமுமுகவின் மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற முஸ்லிம் அரசியல் இயக்கங்களும் தென்னகத்தை மையமாக வைத்து உருவாக நினைக்கும் பாப்புலர் 'ஃப்ரண்ட ஆஃப் இந்தியா'வின் அரசியல் பிரவேசமும் தேசிய அளவில் செயல்படப் போகும் ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் பிரவேச அறிக்கையும் சான்றுகளாக அமைந்துள்ளன.
முஸ்லிம்கள் அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தால் மட்டும் போதாது. அதனை அடைய, "அரசியலில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டால் மட்டுமே அற்புதங்களை நிகழ்த்திக் காட்ட இயலும்!". இதனை ஒரு தாரக மந்திரமாகக் கையில் எடுத்துக் கொண்டு செயலாற்ற இந்த அமைப்புகள் முன்வர வேன்டும். என்றாலே உரிமைகளை மீட்டெடுப்பதிலும் அடக்கி ஒடுக்கப் படுவதிலிருந்து சமுதாயத்தை முழுமையாகப் பாதுகாப்பதிலும் வெற்றி பெற இயலும்.
இந்தத் தாரக மந்திரம் சரியாகப் பின்பற்றப் படுமானால், தமிழக அரசியல் கட்சிகள் பெருமளவில் முஸ்லிம்களை அணுகி மன்றாட வேண்டிய நிலையினை முஸ்லிம் சமுதாயத்தால் ஏற்படுத்த இயலும்.
கடந்த 1967 இல் தமிழகத்தில் நடந்த நான்காவது சட்டசபைத் தேர்தலின்போது இஸ்லாமியர்களிடையே ஏற்பட்ட மார்க்க மற்றும் அரசியல் ரீதியிலான ஒற்றுமை ஏற்படுத்திய விளைவுகளை ஒரு சிறந்த உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகை மொத்த மக்கள் தொகையில் 6% என அரசு பதிவேடு கூறுகிறது.
கடந்த 1967 இல் காயிதே மில்லத் இஸ்மாயில் அவர்களின் தலைமையில் அமைந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மூலம் தமிழக முஸ்லிம்கள் ஓரணியில் திரண்டனர். காயிதே மில்லத் அவர்கள் அண்ணாதுரையுடன் கைகோர்த்து தி.மு.கவுடனான வலுவான அரசியல் கூட்டணியை அமைத்தார்.
அதனைத் தொடர்ந்து 1967 தேர்தல் களத்தில் 137 இடங்களைத் திமுக கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது. 1962 இல் நடந்த இதற்கு முந்தைய தேர்தலில் இதே திமுக வெறும் ஏழு இடங்களை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது.
1967 தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து திருச்சியிலிருந்து பிரசுரமாகும் "மறுமலர்ச்சி" செய்தித்தாள் தேர்தல் முடிவுகளைப் பற்றிய தனது ஆய்வுகளை மேற்கொண்டது.
அதில், 58 தொகுதிகளில் திமுக எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றதற்கான காரணிகள் அத்தனையும் ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகின. அதாவது மேற்கண்ட தொகுதிகளில் மூவாயிரம் முதல் பத்தாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது திமுக.
மேற்கூறிய அதே தொகுதிகளில், முஸ்லிம்களின் ஓட்டுக்கள் அனைத்தும் பெருவாரியாக திமுகவிற்கு அளிக்கப்பட்டிருந்ததும், அதுவே திமுகவின் அரசியல் வரலாற்றில் அண்ணாதுரையின் தலைமையில் முதன் முறையாக திமுக பெருவாரியான இடங்களைக் கைப்பற்றக் காரணமாயிருந்ததும் நிரூபிக்கப்பட்டன. தேர்தல் களத்தில் 80% தொகுதிகளில் வெற்றியினை நிர்ணயிப்பது வெறும் 5% முதல் 10% வரையிலான ஓட்டுக்களே என்பதும் அதுவே ஒரு வேட்பாளரின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடியதுமாகும் என்பதும் சிறுபிள்ளைக்குக்கூடத் தெரியும் ஒரு விஷயமாகும்.
அரசியல் ரீதியில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஓரணியில் நின்றால் தமிழக அரசியலை நிர்ணயிக்கக்கூடிய பெரும் சக்தியாக முஸ்லிம்கள் விளங்க முடியும்.
தமிழக முஸ்லிம்களின் சக்தி என்னவென்பதைத் திமுகவின் மூத்த தலைவர்கள் அனைவரும் நன்கு அறிவர். அதிலும் குறிப்பாக திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் கண்களுக்கு தமிழக முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ள தமுமுக- வினை தம் பக்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் மிகுந்து காணப்படுகிறது.
இந்தியா விடுதலை பெற்று 61 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்திய அளவில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு கேட்டுப் பெறப் போராடும் வேளையில் முஸ்லிம்களுக்கு 3.5% இட ஒதுக்கீட்டைத் திமுக அளித்தது இந்த ஆவலை மனதில் வைத்துத்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அதே வேளையில் இந்திய ராணுவத்தில் 3.5 % முஸ்லிம்கள் உள்ளனரா? அல்லது வெறும் 0.25% மட்டுமா? போன்றவற்றினைப் பற்றி இத்தனை நாள் அறியாத கட்டுப் பெட்டிகளாக முஸ்லிம்கள் இருந்து வந்தனர்.
இதனைப் பற்றிய கேள்விகள் எழுப்பியபின் தொடர்ந்த விசாரணையில் அநீதியும் அவநம்பிக்கையும் வெளிப்படையாகத் தெரிந்தன. இத்தனை நாட்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த அநியாயத்தினை வெளிக் கொண்டுவந்த சச்சார் கமிட்டி அறிக்கையினை முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டும். இதனை ஒட்டிய கேள்விகளையும் உரிமைக்குரல்களையும் முஸ்லிம் அறிவுஜீவிகள் உரிய இடங்களில் எழுப்ப வேண்டும்.
ஆக, ஒரு 6% முஸ்லிம் மக்கள்தொகை 40% சட்டசபை இடங்களை வெற்றியோ தோல்வியோ அடையச் செய்து தமிழக அரசியலை நிர்ணயிக்குமெனில் இந்திய அளவில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் என்னவாகும் என்பதை இந்தச் சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டும். குறிப்பாக உ.பி, கேரளா, அஸ்ஸாம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்களே துருப்புச் சீட்டுக்களாக உள்ளனர். அரசியல் ரீதியில் முஸ்லிம் அமைப்புகளிடையே ஒற்றுமை மலர்ந்தால் இந்திய அளவில் சிறிதும் பெரிதுமாக 150 பாராளுமன்ற சீட்களை முஸ்லிம்களால் நிர்ணயிக்க முடியும் என்பது ஆணித்தரமான உண்மை.
மார்க்க ரீதியில் இயக்கங்கள், அமைப்புக்கள் என்று ஏகத்திற்கு தமிழகத்தில் பெருகினாலும், அவைகூடத் தம்மை வளர்த்து விட்ட சாதாரண பாமர முஸ்லிம்களுக்கு அரசு மூலம் கிடைக்கக் கூடிய உரிமைகளை, பலன்களை எப்படி வாங்கித் தருவது? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்திய அளவிலும் மாநில அளவிலும் அரசியல் ரீதியில் முஸ்லிம்கள் பிரிந்து கிடப்பதே கடந்த 60 ஆண்டுகளாக மோசமான பின்தங்கியிருக்கும் சமுதாயமாக முஸ்லிம் சமுதாயத்தை இன்னும் வைத்திருக்கிறது.
எனவே முஸ்லிம்கள் குறைந்தபட்சம் அரசியல் ரீதியில் ஒன்றுபட்டு மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கும் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
முஸ்லிம் சமுதாய இயக்கங்கள், அமைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரீதியிலாக கொள்கை கட்டமைப்பினைக் கொண்டிருந்தாலும் தொலைநோக்குப்பார்வையுடன் முஸ்லிம் சமுதாயம் செல்ல வேண்டிய பாதையினை நிர்ணயிக்கும் அரசியல் சக்தியாக உருவெடுக்க தேசிய அளவில் ஒன்றிணைந்து ஒரே கட்சியாக வெளிவர வேண்டும்.
வெற்றியைத் தரக்கூடியவன் வல்ல இறைவன். அதற்கான அணுகூலங்களை அமைக்க சமுதாயம் ஒன்றுபடட்டும்!
Tuesday, June 17, 2008
ஒற்றுமையே வேண்டாம்
ஒற்றுமையே வேண்டாம்
சமீபத்தில் ஷியாக்களும், சுன்னிகளும் சேர்ந்து தொழுகை நடத்தியதாகவும்,
மேலும் நடத்த இருப்பதாகவும் இது ஏற்படப்போகும் ஒற்றுமையின் அறிகுறி
என்று ஒரு செய்தி படித்தேன் இதுவரை நடந்தவை, இனி நடக்கக் கூடியவை என்ன
விளைவுகளை ஏற்படுத்தும் என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
இந்த நிலையில் பொதுவாக இந்தியாவில், குறிப்பகத் தமிழகத்தில், இஸ்லாமிய
இயக்கங்களிடையே 'ஒற்றுமை' என்பது அனைவரும் எதிர்பார்ப்பட்டது.
ஆனால் எட்டாக் கனியாகவே காட்சி தருவது என்றாகி இருக்கிறது.
இப்போது பரஸ்பரத் தாக்குதல்கள் மூர்க்கமாகி இருக்கின்றன. ஆகவே ஒற்றுமை
என்பதே வேண்டாம். தாக்குதல்கள் த்ரம் தாழ்ந்து போகாமல் இருந்தால்
சரி என்கிற நிலைக்கு நாம் ஆளாகி இருக்கிறோம். சிலர் கண்ணியமாக தங்கள்
வாதத்தை முன் வைக்க சிலர் காட்டுத்தனமாக வசை மாரிகளைப் பொழிந்து
தள்ளுகிறார்கள்.
இதில் எதிலும் சேராத, நல்லதை மட்டுமே விரும்பும் என்னைப் போன்றவர்களும்
இடையில் அகப்பட்டுக் கொண்டு அநியாயத்துக்கு அநாவசிய சொல்லடிகளை
வாங்க வேண்டியதிருப்பதுதான் பெரும் சோகம்.
நான் ஒரு ஊடகவியளாளன். அல்ஹம்துலில்லா, ஓரிரு வருடங்களல்ல. சுமார் அரை
நூற்றாண்டுக்கும் அதிகமாக ! இதில் நமது சமுதாயத் தலைவர்களை
உலகின் பல்வேறு பகுதி மக்களுக்குப் பரிச்சயப் படுத்தும், நம் சமுதாயச்
செய்திகளை உலகெங்கும் எடுத்துச் செல்லும் வசதியும் வாய்ப்பும் இறைவன்
அருளால் எனக்கு அமைந்து இருக்கிறது. அதை நன்கு பயன்படுத்திக் கொண்டு
என்னால் இயன்றவற்றையெல்லாம் சமுக நன்மைக்கு செய்து வருகிறேன் -
பிரதி பலன் கருதாது.
தனி நபர் ஆராதனையில் (Hero Worship) எனக்கு நம்பிக்கை இல்லை. எந்த
இயக்கத்தின் மீதோ அல்லது கட்சியின் மீதோ எவ்வித பற்றும் கிடையாது.
உண்மையான் பத்திரிகை தர்மப்படி காய்தல், உவத்தல் இன்றி, விருப்பு -
வெறுப்புகளின்றி எல்லோர் கருத்துக்கும் மதிப்பளித்து அவற்றை மக்கள்
முன்பு
வைக்கிறேன். தீர்ப்பை அவர்களுக்கே விட்டு விடுகிறேன். கண்ணியமானவர்கள்,
விஷயம் தெரிந்தவர்கள் என்னுடைய இந்த நிலையை பாராட்டுகிறார்கள்.
இதைப் பொறுக்க மாட்டாதவர்களோ அல்லது " நீ எங்கள் இயக்கமில்லையா
அப்படியானால் நீ எங்கள் எதிரிதான்" என்கிற குரூரமான (Sadist) மனப்
பான்மை உடையவர்கள் புழுதி வாரித் தூற்றுகிறார்கள். அவர்கள்
தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் நாகரீகமானவையாக இல்லை. ஒரு இந்துத்வ
"ஜடாயு"
அவ்வாறு திட்டுவதை என்னால் புரிந்து கொள்ளமுடியும். ஆனால் ஒரு முஸ்லிம்
'சத்தியத்தின் குரல்' அவ்வாறு செய்வது வேதனை தருகிறது.இத்தகைய
சூழ்நிலையில் அபூ நூரா போன்ற நண்பர்கள் கண்ணியமான வார்த்தைகளைப்
பயன்படுத்தி இருப்பது மனதுக்கு இதம் தருகிறது. அதேசமயம், நான் ஒரு
குறிப்பிட்ட இயக்கத்துக்குப் பயந்து கொண்டு அல்லது அங்கு எனக்குள்ள
நாற்காலி மறுக்கப் பட்டு விடும் என்கிற எண்ணத்தில் நான் செயல் படுவதாக
உள்
நோக்கம் கற்பித்து கொச்சைப் படுத்துவது நியாயமானதாகப் படவில்லை.
ஆயிற்று ஐம்பத்தெட்டு ஆண்டுகள் - ஒலிபரப்புத்துறையில் - ஊடகத் துறையில்
உள் நுழைந்து.! "உலகின் மூத்த தமிழ் ஒல்லிபரப்பாளன்" ( The most SENIOR
Tamil Broadcaster in the WORLD) என்கிற தகுதியை எனக்களித்துள்ள
இறைவனுக்கே எல்லப் புகழும் -- நன்றியும்.
இத்தனை காலத்தில் யாருக்கும் தீங்கு எண்ணியதில்லை. உண்மைகளை மட்டுமே
உலகுக்குச் சொல்வதில் உறுதியாக இருந்திருக்கிறேன். காரணம்
'உண்மைக்கு நடுநிலை இல்லை' என்று நம்புகிறவன் நான். எனக்குப் பூச்சூட
வேண்டாம், பொன்னாடை போர்த்த வேண்டாம், 'வாழ்-நாள் சாதனையாளர்'
விருது கூட வேண்டாம். என்னை தூற்றாமல் இருங்கள் போதும். என் கருத்து
பிடிக்கவில்லையா ? அதை எடுத்துச் சொல்வதில் ஒரு கண்ணியம் இருக்கட்டும்.
அதுபோல, ஒற்றுமை என்பது வருகிறபோது வரட்டும். இப்போது வேண்டாம் என்றால்
வேண்டாம் என்றே இருக்கட்டும். யாரும் சரி, எந்தச் சூழலிலும் சரி தரம்
தாழ்ந்து தாக்குவதைக் கை விடுங்கள். ஏனெனில் நாம் மனிதர்களுக்குப்
பயப்படாதவர்களாக இருக்கலாம். ஆனால் ஆண்டவனுக்குப் பதில் சொல்லியே
ஆக வேண்டும். எல்லாவற்றின் மையப் புள்ளியும் அதுதான்.
நலமே நடக்கும் என்கிற நம்பிக்கையுடன் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
abjabin@gmail.com
சமீபத்தில் ஷியாக்களும், சுன்னிகளும் சேர்ந்து தொழுகை நடத்தியதாகவும்,
மேலும் நடத்த இருப்பதாகவும் இது ஏற்படப்போகும் ஒற்றுமையின் அறிகுறி
என்று ஒரு செய்தி படித்தேன் இதுவரை நடந்தவை, இனி நடக்கக் கூடியவை என்ன
விளைவுகளை ஏற்படுத்தும் என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
இந்த நிலையில் பொதுவாக இந்தியாவில், குறிப்பகத் தமிழகத்தில், இஸ்லாமிய
இயக்கங்களிடையே 'ஒற்றுமை' என்பது அனைவரும் எதிர்பார்ப்பட்டது.
ஆனால் எட்டாக் கனியாகவே காட்சி தருவது என்றாகி இருக்கிறது.
இப்போது பரஸ்பரத் தாக்குதல்கள் மூர்க்கமாகி இருக்கின்றன. ஆகவே ஒற்றுமை
என்பதே வேண்டாம். தாக்குதல்கள் த்ரம் தாழ்ந்து போகாமல் இருந்தால்
சரி என்கிற நிலைக்கு நாம் ஆளாகி இருக்கிறோம். சிலர் கண்ணியமாக தங்கள்
வாதத்தை முன் வைக்க சிலர் காட்டுத்தனமாக வசை மாரிகளைப் பொழிந்து
தள்ளுகிறார்கள்.
இதில் எதிலும் சேராத, நல்லதை மட்டுமே விரும்பும் என்னைப் போன்றவர்களும்
இடையில் அகப்பட்டுக் கொண்டு அநியாயத்துக்கு அநாவசிய சொல்லடிகளை
வாங்க வேண்டியதிருப்பதுதான் பெரும் சோகம்.
நான் ஒரு ஊடகவியளாளன். அல்ஹம்துலில்லா, ஓரிரு வருடங்களல்ல. சுமார் அரை
நூற்றாண்டுக்கும் அதிகமாக ! இதில் நமது சமுதாயத் தலைவர்களை
உலகின் பல்வேறு பகுதி மக்களுக்குப் பரிச்சயப் படுத்தும், நம் சமுதாயச்
செய்திகளை உலகெங்கும் எடுத்துச் செல்லும் வசதியும் வாய்ப்பும் இறைவன்
அருளால் எனக்கு அமைந்து இருக்கிறது. அதை நன்கு பயன்படுத்திக் கொண்டு
என்னால் இயன்றவற்றையெல்லாம் சமுக நன்மைக்கு செய்து வருகிறேன் -
பிரதி பலன் கருதாது.
தனி நபர் ஆராதனையில் (Hero Worship) எனக்கு நம்பிக்கை இல்லை. எந்த
இயக்கத்தின் மீதோ அல்லது கட்சியின் மீதோ எவ்வித பற்றும் கிடையாது.
உண்மையான் பத்திரிகை தர்மப்படி காய்தல், உவத்தல் இன்றி, விருப்பு -
வெறுப்புகளின்றி எல்லோர் கருத்துக்கும் மதிப்பளித்து அவற்றை மக்கள்
முன்பு
வைக்கிறேன். தீர்ப்பை அவர்களுக்கே விட்டு விடுகிறேன். கண்ணியமானவர்கள்,
விஷயம் தெரிந்தவர்கள் என்னுடைய இந்த நிலையை பாராட்டுகிறார்கள்.
இதைப் பொறுக்க மாட்டாதவர்களோ அல்லது " நீ எங்கள் இயக்கமில்லையா
அப்படியானால் நீ எங்கள் எதிரிதான்" என்கிற குரூரமான (Sadist) மனப்
பான்மை உடையவர்கள் புழுதி வாரித் தூற்றுகிறார்கள். அவர்கள்
தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் நாகரீகமானவையாக இல்லை. ஒரு இந்துத்வ
"ஜடாயு"
அவ்வாறு திட்டுவதை என்னால் புரிந்து கொள்ளமுடியும். ஆனால் ஒரு முஸ்லிம்
'சத்தியத்தின் குரல்' அவ்வாறு செய்வது வேதனை தருகிறது.இத்தகைய
சூழ்நிலையில் அபூ நூரா போன்ற நண்பர்கள் கண்ணியமான வார்த்தைகளைப்
பயன்படுத்தி இருப்பது மனதுக்கு இதம் தருகிறது. அதேசமயம், நான் ஒரு
குறிப்பிட்ட இயக்கத்துக்குப் பயந்து கொண்டு அல்லது அங்கு எனக்குள்ள
நாற்காலி மறுக்கப் பட்டு விடும் என்கிற எண்ணத்தில் நான் செயல் படுவதாக
உள்
நோக்கம் கற்பித்து கொச்சைப் படுத்துவது நியாயமானதாகப் படவில்லை.
ஆயிற்று ஐம்பத்தெட்டு ஆண்டுகள் - ஒலிபரப்புத்துறையில் - ஊடகத் துறையில்
உள் நுழைந்து.! "உலகின் மூத்த தமிழ் ஒல்லிபரப்பாளன்" ( The most SENIOR
Tamil Broadcaster in the WORLD) என்கிற தகுதியை எனக்களித்துள்ள
இறைவனுக்கே எல்லப் புகழும் -- நன்றியும்.
இத்தனை காலத்தில் யாருக்கும் தீங்கு எண்ணியதில்லை. உண்மைகளை மட்டுமே
உலகுக்குச் சொல்வதில் உறுதியாக இருந்திருக்கிறேன். காரணம்
'உண்மைக்கு நடுநிலை இல்லை' என்று நம்புகிறவன் நான். எனக்குப் பூச்சூட
வேண்டாம், பொன்னாடை போர்த்த வேண்டாம், 'வாழ்-நாள் சாதனையாளர்'
விருது கூட வேண்டாம். என்னை தூற்றாமல் இருங்கள் போதும். என் கருத்து
பிடிக்கவில்லையா ? அதை எடுத்துச் சொல்வதில் ஒரு கண்ணியம் இருக்கட்டும்.
அதுபோல, ஒற்றுமை என்பது வருகிறபோது வரட்டும். இப்போது வேண்டாம் என்றால்
வேண்டாம் என்றே இருக்கட்டும். யாரும் சரி, எந்தச் சூழலிலும் சரி தரம்
தாழ்ந்து தாக்குவதைக் கை விடுங்கள். ஏனெனில் நாம் மனிதர்களுக்குப்
பயப்படாதவர்களாக இருக்கலாம். ஆனால் ஆண்டவனுக்குப் பதில் சொல்லியே
ஆக வேண்டும். எல்லாவற்றின் மையப் புள்ளியும் அதுதான்.
நலமே நடக்கும் என்கிற நம்பிக்கையுடன் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
abjabin@gmail.com
Labels:
அப்துல் ஜப்பார்,
இந்தியா,
ஒற்றுமை,
தமிழ்நாடு
Subscribe to:
Posts (Atom)