Saturday, March 6, 2010

தொலைத்து விட்ட உறவுகளுக்காக....

தொலைத்து விட்ட உறவுகளுக்காக....

அஸ்ஸலாமு அலைக்கும்,



துடிக்கின்ற இதயத்தில்
தூண்டிலாக உன் நினைவுகள்!


வெடிகின்ற வேதனைக்கு
அருமருந்தாய் நம் மழலையின் உளறல்!!


தவறிழைக்கும் போது
தலையில் குட்டி கன்னத்தை கிள்ளும் என் அன்னை!


முரட்டு பார்வையால்
விரட்டும் தந்தை!!


காண கிடைக்காத காட்சிகளாய் போயின
இந்த பாலைவனத்திலே!!


அனைத்தும் முடித்து
அமைதியாய் படுக்கைக்கு சென்றாலும்;
கனத்துப்போன இதயத்திற்க்கு மட்டும்
கைகள் மட்டுமே ஒத்தடமாய்!!


தொலைந்துப் போன உறவுகள் அல்ல;
தொலைத்து விட்ட உறவுகளுக்காக
தேடிவந்திருக்கிறேன் பணம்!!


வறுத்தெடுக்கும் வெயிலும்
கறுத்துப் போன தோலுமாய் இங்கே;
அழுக்கு உடையில் அலுவல் செய்தாலும்
அழகாய் உடையணிந்து ஆளுக்கொரு புகைப்படம் வீட்டிற்க்கு!!



- யாசர் அரஃபாத்
itzyasa@gmail.com

தலையங்கம்:ஊருக்குத்தான் உபதேசம்!

தலையங்கம்:ஊருக்குத்தான் உபதேசம்!

First Published : 06 Mar 2010 02:36:00 AM IST

Last Updated : 06 Mar 2010 06:15:47 AM IST

ராமகிருஷ்ண பரமஹம்சரின் குட்டிக்கதை ஒன்று உண்டு. கங்கைக் கரை ஓரமாக உள்ள ஒரு கிராமத்தில் வாழும் யாதவகுலப் பெண்கள் சிலர் தினமும் தலையில் மோர், தயிர் மற்றும் வெண்ணெயைக் கலயங்களில் சுமந்து கொண்டு கங்கையின் மறுகரையிலுள்ள கிராமங்களில் விற்றுப் பிழைப்பு நடத்தி வந்தனர்.

தினமும் காலையில் ஓடத்தில் கங்கையைக் கடப்பதும், மாலையில் அதேபோல ஓடத்தில் ஏறித் தங்கள் கிராமத்துக்குத் திரும்புவதும் வழக்கம்.

ஒருநாள் மாலையில் மறுகரையில் இருந்த ஓடத்துக்காகக் காத்திருந்த அந்த யாதவப் பெண்களை அருகிலிருந்த கிருஷ்ணன் கோயிலில் நடந்து கொண்டிருந்த உபந்நியாசம் கவர்ந்திழுத்தது. அந்தப் பெண்களும், பக்தர்கள் கூட்டத்துடன் அமர்ந்து கேட்டனர்.
ஓடத்தில் ஏறித் தங்களது வீட்டுக்கு வந்த பிறகும், அந்தப் பெண்களின் மனதிலிருந்து உபந்நியாசகர் சொன்ன ஒரு கருத்து அகலவில்லை. நமது பக்தி
அப்பழுக்கில்லாததாகவும், முழுமையானதாகவும் இருக்க வேண்டும். அப்படி இருக்குமேயானால், நமக்கு அளப்பரிய சக்தி ஏற்பட்டுவிடும். உதாரணத்துக்கு, "கிருஷ்ணா' என்று மனதை ஒருமுகப்படுத்தி வேண்டினால், கங்கையைக்கூட நடந்து கடந்து விடலாம்...' என்பதுதான் அந்த மோர் விற்கும் யாதவப் பெண்களை மிகவும் பாதித்த கருத்து.
அடுத்த நாள் அதிகாலையில் கங்கைக்கரையில் கூடிய அந்தப் பெண்கள் தாங்கள் ஏன் உபந்நியாசகர் சொன்னதைச் செய்து பார்க்கக்கூடாது என்று நினைத்தனர். கள்ளங்கபடமற்ற அந்தப் பெண்கள் கண்களை மூடி, மனதை ஒருமுகப்படுத்திக் கண்ணனை நினைத்தபடி, தயிர்க் கலயங்களுடன் நடக்கத் தொடங்கினர். என்ன அதிசயம்? நிஜமாகவே அவர்கள் கங்கையை நடந்து கடந்துவிட்டனர்.

அன்றுமுதல் தினமும் கண்ணனை நினைத்தபடி கங்கையை நடந்து கடக்கத் தொடங்கிய அந்தப் பெண்கள் ஓடக்காரனுக்குக் கொடுத்து வந்த கூலியை ஓர் உண்டியலில் சேர்த்து வைத்தனர். தங்களுக்கு இறையுணர்வை ஏற்படுத்திய, கங்கையை நடந்து கடக்க வழிவகை செய்த மகானான உபந்நியாசகரைத் தங்களது கிராமத்துக்கு அழைத்து வந்து கௌரவிக்க வேண்டும் என்கிற அவர்களது ஆசையை கிராமத்தவர்களும் ஆமோதித்தனர்.
உபந்நியாசகரும் ஒப்புக்கொண்டார். குறிப்பிட்ட நாளும் வந்தது. அந்தப் பெண்கள் உபந்நியாசகரை அழைத்துக் கொண்டு கங்கைக் கரைக்கு வந்தனர். மறுகரையில் தெரிவதுதான் தங்களது கிராமம் என்று உபந்நியாசகருக்குக் காட்டினார்கள். உபந்நியாசகர் கேட்டார்-""எங்கே ஓடம்?''

""ஓடமா?, நீங்கள் சொல்வதுபோல நாங்கள் "கிருஷ்ணா' என்றபடி நடந்துதான் போகிறோம்'' என்றபடி அந்தப் பெண்கள் கங்கையின் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் நடக்கத் தொடங்கினர். உபந்நியாசகர் விட்டால் போதும் என்று பிடித்தார் ஓட்டம்.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் இந்தக் கதைதான் நாளும் பொழுதும் அரங்கேறிய வண்ணம் இருக்கிறது. பரமஹம்ச நித்யானந்தர் போன்ற சில ஆன்மிகவாதிகளின் செயல்பாடுகள் மட்டுமல்ல, நமது முன்னணி அரசியல் மற்றும் சமுதாய வழிகாட்டிகளின் செயல்பாடுகளும் இப்படித்தான் இருக்கின்றன. அரசியல் அசிங்கம் ஹைதராபாத் ஆளுநர் மாளிகையில் அரங்கேறியது. ஆன்மிக அசிங்கம் ஆசிரம அறையில் அரங்கேறி இருக்கிறது.
மேலைநாடுகளில் தனிமனித ஒழுக்கம் என்பது அறவே இல்லை என்கிற நிலைமைதான். ஆனால் அவர்கள் தங்களது தலைவர்கள் ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். இங்கே நிலைமை தலைகீழ். தனிமனிதர் ஒழுக்கமாக இருக்கிறார். அவரது அரசியல் மற்றும் ஆன்மிக வழிகாட்டிகள் ஒழுக்கக்கேடின் ஒட்டுமொத்த உருவங்களாகத் தொடர்கிறார்கள்.

தவறு அவர்கள் மீதல்ல. நம் மீதுதான். இவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களது வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ளும் உரிமையை நமக்குச் சுதந்திரம் அளித்திருக்கிறதே. நாம் ஏன் தொடர்ந்து தவறானவர்களை மட்டுமே தேடிப்பிடித்துத் தேர்ந்தெடுக்கிறோம்?
இப்படி எல்லாம் நடக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்திருந்த ஒரே ஒரு தீர்க்கதரிசி அண்ணல் மகாத்மா காந்தி மட்டுமே. பொதுவாழ்வில் இருப்பவர்கள் மக்களுக்கு வழிகாட்டினால் மட்டும் போதாது, வாழ்ந்தும் காட்ட வேண்டும் என்பதை வற்புறுத்திய மகான் அவர். அந்த மாமனிதரின் வழிகாட்டுதலைப் புறந்தள்ளியதால் இந்திய சமுதாயம் அடைந்திருக்கும் பின்னடைவுதான் இது.

கடந்த கால் நூற்றாண்டு காலமாக நம்மை ஓர் "ஆக்டோபஸ்' போலப் பிடித்திருக்கும் கார்ப்பரேட் கலாசாரத்தின் கோர முகங்களில் ஒன்றுதான் காளான்கள்போல உருவாகி இருக்கும் சாமியார்களும், யோகா குருக்களும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் அளப்பரியது. அவர்களது மூளை கசக்கிப் பிழியப்படுகிறது. அந்த அழுத்தத்தைக் குறைக்கிறோம் என்கிற பெயரில் பல யோகா மற்றும் தியான ஆசிரியர்கள் காவி உடை தரித்துக் களம் இறங்கி இருக்கிறார்கள்.

இவர்களை முற்றும் துறந்த முனிவர்களாகவும், தேவதூதர்களாகவும், சாப விமோசனம் தரும் ஜீவன் முக்தர்களாகவும் கருதினால் அது யாருடைய தவறு? காவி உடையில் நடமாடும் போலிகளை யோகிகள் என்று நம்பி யார் ஏமாறச் சொன்னது?
அது ஒருபுறம் இருக்கட்டும். தவறுகளை மக்களுக்கு அடையாளம் காட்டி சமுதாயம் சீர்கெடாமல் காப்பாற்ற வேண்டிய கடமை ஊடகங்களுக்கு உண்டு என்பதில் மாறுபட்ட கருத்து நமக்கு இல்லை. அதேநேரத்தில், மீண்டும் மீண்டும் தவறை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறோம் என்கிற பெயரில் ஆபாசப் படத்தை ஒளிபரப்பி மக்கள் மனதில் அருவருப்பை ஏற்படுத்தியதை எப்படி ஏற்றுக்கொள்வது?

தமிழகத்திலுள்ள பெருவாரியான பெற்றோர்கள் தங்களது வீட்டிலுள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளை உடைத்து விடலாமா என்கிற அளவுக்கு ஆத்திரமடைந்தனரே, என்ன கொடுமை? குழந்தைகள் பார்த்து விடுவார்களோ என்று பயந்தனரே, இது என்ன நியாயம்? இதற்குப் பெயர் சமுதாயப் பொறுப்பா? இதன் மூலம் தனது டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்த நினைக்கும் கீழ்த்தரமான வியாபாரத் தந்திரம் குமட்டலை ஏற்படுத்துகிறதே...
ஒரு புலனாய்வுப் பத்திரிகை, சாமியாரின் களியாட்டக் குறுந்தகடைத் தனது இணையதளத்தில் வெளியிட்டு, கட்டணம் வசூலித்தது. சுமார் 20 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்ததாம். வெட்கக்கேடு...

""பத்திரிகைகளிலோ, தொலைக்காட்சிகளிலோ காட்டப்படும் செய்திகளும், படங்களும் அளவுக்கு அதிகமாக இருந்தால், அவை இளையோர் நெஞ்சங்களில் மோசமான மாறுதல்களை ஏற்படுத்தும். அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவது தேவையற்றது'' என்கிற தமிழக முதல்வரின் அறிக்கை பொறுப்புணர்வுடன் வெளியிடப்பட்ட ஆதங்கம்.
நடிகை செய்தது விபசாரம்! நித்யானந்தர் செய்தது அபசாரம்!! நமது ஊடகங்கள் செய்தது வியாபாரம்!!

சகிக்கவில்லை...

உலக பயங்கரவாதமும்-உலக நாடுகள் சபையின் பக்கவாதமும்

உலக பயங்கரவாதமும்-உலக நாடுகள் சபையின் பக்கவாதமும்

(டாக்டர் ஏ.பீ.முகம்மது அலி,பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)

28.2.2010 அன்று தமிழகம் முழுவதும் இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் உலக பயங்கரவாத எதிர்ப்பு தினமும்-ரத்ததான முகாமும் நடத்தினார்கள். சென்னையில் வி.எச்.எஸ் மருத்துவ மனையுடன் இணைந்து மண்ணடியில் நடத்திய முகாமில் சகோதரரகள் பாக்கர், லீக் பசீர,; மற்ற முக்கிய பிரமுகர்களுடன் நானும் கலந்து கொண்டேன்.
பங்கரவாத எதிர்ப்பினுக்கு ஏன் ரத்ததானம் என்று விழா அமைப்பாளர்களைக் கேட்டபோது, இஸ்லாமியர் பயங்கரவாதத்திற்கு எப்போதுமே எதிர்ப்பு தெரிவிப்பவர்கள். ஆனால் இன்றைய உலகில் எந்த வன்முறைக்கும் இஸ்லாமியர்களே காரணம் என்ற நொண்டிச் சாக்கினை சொல்லி சாயம் ப+சப்பார்ப்பதினை முறியடிக்கவே எங்கள் சாத்வீக முறையில் ஜாதி, மத வேறுபாடின்றிய சகோதரத்துவத்தினைக் காட்டவே தேவைப்படுகிறவர்களுக்கு உதவும் முறையில் ரத்ததானம் செய்வதாகக் கூறினார்கள். அவர்கள் முயற்சியினை வாழ்த்துவதோடு பயங்கரவாதம் பற்றி உங்களுடன் கலந்துறையாடல் செய்யலாம் என எண்ணுகிறேன்.
பயங்கரவாதம் என்பது தன்னுடைய கொள்கைக்காக பயமுறுத்துதலில் ஈடுபட்டு பொதுமக்களின் உடலுக்கும், உடமைக்கும் ஊறு செய்து வன்முறையில் ஈடுபடுவதாகும். பயங்கரவாதத்தினை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்:
தனிப்பட்டவர் செயல்
ஒரு குழுமத்தின் செயல்
ஒரு நாட்டின் செயல்
பல நாடுகளின் செயல்

1) தனிப்பட்டவர் செயலுக்கு முன் உதாரணமாக அமெரிக்காவில் ஒரு பல்கலைகழகத்தில் தன் சக மாணவர்கள் மீது வெறுப்புக் கொண்டு அந்த மாணவர்களை மிரட்டிப் பாடம் புகுத்தும் நோக்குடன் முன்னேற்பாடாக வீடியோவில் தனது செயலைப் பதிவு செய்து முக்கிய பத்திரிக்கை செய்தி நிறுவனத்திற்கு அதை அனுப்பி விட்டு கையில் இரண்டு நவீன துப்பாக்கியுடன் அந்த பல்கலைக் கழகத்தில் நுழைந்து சக மாணவ, மாணவியர் என்று நிதானம் பாராது சுட்டுத்தள்ளி தன்னையும் மாய்த்துக் கொண்ட நிகழ்ச்சி தான் தனிப்பட்டவர் பயங்கர வாதமாகும். அதேபோன்று ஒரு பேராசிரியையும் சமீபத்தில் தனது ஆராய்ச்சிக் கட்டுரைக்கு உரிய மதிப்புத்; தரவில்லையென்று இந்திய பேராசிரியர் உள்பட நான்குபேர்களை சுட்டுக்கொன்றும் உள்ளார.; அதுவும் தனிப்பட்ட செயலே ஆகும்



ஒரு குழுமம், ஒரு வகுப்பினர் ஈடுபடும் செயல்: ஜாதி, மத, இன, மொழி, இடம் சம்பந்தமான பயங்கரவாதத்திற்கு நாகாலந்து , மணிப்ப+ர், அசாம் விடுதலை முன்னணிகள், நக்சலைட் வன்முறைகள், இந்து முன்னணியினர், பாபரி மஸ்ஜித் இடிப்புப்போன்ற செயல், முஸ்லிம் முகாஜியினர் அதற்கு பதிலடியாகக் கொடுக்கும் வன்முறை, ஆர்,எஸ்,எஸ்-சமதா சான்ஸ்தா அமைப்பின் மலேகான் போன்ற குண்டு வெடிப்புகள், சிவசேனா அதன் பிரிவான ராஜ்தாக்கரே வடஇந்தியர்களுக்கான வன்முறைகள், மங்க@ர் பண்பாடு காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் தடியெடுத்துத் தாக்கும் செயல் பாடுகள் ஆகியவை தான் ஒரு குழுமம் ஈடுபடும் வன்முறைகள். இது போன்ற பயங்கரவாதத்தால் சொந்த நாட்டிலே இந்திய குடிமக்கள் அன்னியராக சித்தரிக்கப்படுவது தான் அவர்கள் கொள்கை என்றால் அது மிகையாகாது. ராஜா ரவிவர்மா, மைக்கேல் ஆஞ்சலோ போன்ற சிறந்த ஓவியர் வரிசையில் நவீன உலகத்தில் கொடிகட்டிப்பறந்த மும்பையினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட, மீசை, தாடி நரைத்தாலும் ஆசை மறையாது என்று 85 வயதிலும் பாலிவுட் பிரபலம் மாதிரி திக்ஷிட்டோடு இணைந்து பேசபட்ட எப்.எம்.ஹ_சைன் இன்று தன் சொந்த நாட்டில் வசிக்க இடமில்லாது நாடோடிபோல 95 வயதானாலும் இந்துத்துவா பயங்கரவாதத்திற்குப் பயந்து கத்தார் பிரஜா உரிமையினை பெற வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். காரணம் ஹிந்துக் கடவுள்களை கேலியாக தனது ஓவியத்தில் சித்தரித்தார் என்றக் குற்றச்சாட்டு தானே. ஆனால் அதே மதத்தவர் மட்டும் கிரேசி மோகன் நாடக நடிகர், ‘சாக்லேட்கிருஷ்ணா’ என்ற சிரிப்பு நாடகம் நடத்துகின்றனர், கவுண்டமணி-செந்தில் ஜோடி எமதர்மன்-சித்திரகுப்தன் பூலோக விஜயம் என்ற கேலி சினிமாவும், கமல் சிவன் வேடத்தில் பூம்-ப+ம் மாடு மேல் உட்கார்ந்து நகைச்சுவை சினிமா நிகழ்ச்சி கண்டு சிரிக்கிறார்கள். அவர்கள் மேல் எந்தக் கண்டனமும் எழுப்புவதில்லை. அது ஏன்? சற்றே யோசிக்க வேண்டாமா? போதை பொருள் கடத்தல் குழுக்கள் கொலம்பியா நாட்டில் ஒரு அரசினையே நடுங்க வைக்கும் அளவிற்கு நடத்தும் கொலைகள் பயங்கரவாதத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஜப்பான் நாட்டில் சின்-பின் என்ற மத தீவிரவாதக்கும்பல் நச்சுக்கெமிக்கல் புகையினை ஜப்பான் பாதாள ரயில் நிலையத்தில் பரவவிட்டு பலரைக் கொலை செய்த சம்பவமும் மத குழுவின் பயங்கரத்திற்கு எடுத்துக் காட்டாகும். ஆப்பிரிக்கா ருவாண்டா நாட்டில் டூட்சி இனத்தவர் நடத்திய தாக்குதல் இன பயங்கரவாதத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
ஒரு நாட்டின் பயங்கர வாதம்: இஸ்ரேயில் நாட்டினர் பாலஸ்தீனர் மீதும் மற்றும் செர்பியர,; அர்மேனிய முஸ்லிம் மக்கள்; மீது நடத்திய தாக்குதலை சிறந்த உதாரணங்களுக்கு எடுத்துக் கொள்ளலாம்: இரண்டாம் உலகப் போரில் வெற்றிகண்ட களிப்பில் கூட்டுப்படையினரின் தயவில் உருவாக்க்ப்பட்ட நாடு இஸ்ரேயில் ‘ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியினை விரட்டிய’ கதையாக அப்பாவி பாலஸ்தீன மக்களின் நிலங்களை அபகரித்ததோடு மட்டுமல்லாது அவர்களை எதிர்க்கும் மக்கள் மீது உடலில் பட்டதுடன் பற்றிக்கொள்ளும் பாஸ்பரஸ் குணடுகளையும் வீசி உயிர் சேதம் விளைவிக்கும் செயல்தான் ஒரு நாடு உpளைவிக்கும் பயங்கரவாத செயலாகும். இதில் என்ன வேடிக்கையென்றால் அந்த நாட்டினரின் பயங்கரவாத செயல் பாலஸ்தீன நாட்டோடு மட்டும் நின்று விடவில்லை மாறாக துபாய் நாட்டிற்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்ற காசா நகரைச்சார்ந்த ஹமாம் அமைப்பின் முக்கியத்தலைவர் மெகமூதை இங்கிலாந்து, ஆஸ்ரியா, ஆஸ்திரேலியா, ஸவிட்சர்லாந்து, ஜெர்மனி, இட்டாலி நாட்டினரின் போலி பாஸ்போர்ட்டுகளில் சென்ற இஸ்ரேயிலின் ‘மொசாத்” உளவுப்படையினர் அவர் தங்கியிருந்த ஹோட்டலிலேயே தங்கியிருந்து அவருக்கு மயக்க மருந்து கொடுத்து மூச்சுத்திணர சாகடித்தது விட்டு துபாயிலிருந்து தப்பியிருக்கிறார்கள் என்றால் எவ்வளவு பயங்கரமான செயல்களில் அடுத்த நாட்டில் நரிதந்திரத்தில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று அறியலாம். செர்பியா நாட்டில் அர்மேனிய முஸ்லிம் மக்களை வெறிநாய்கள் போல வேட்டையாடியதோடு மட்டுமல்லமால் அவர்கள் வீடுகளையும் தீக்கிரையாக்கினர். ஆதற்காக அதன் தலைவர்கள் ஜெனீவா பன்னாட்டு நீதிமன்ற சிறைச்சாலையில் வாடுகின்றனர்.
பல நாடுகளின் கூட்டு பயங்கரவாதம்: 2001ஆண்டு இரட்டைக்கோபுரம் இடிக்கப்பட்டதிற்குக் காரணம் என்று ஆப்கானிஸ்தான் மீதும், உயிர்கொல்லி ஆயுதம் வைத்திருந்ததாகச் சொல்லி இராக் மீதும் உலக நாடுகள் சபை ஒப்புதல் இல்லாமல் படையெடுத்து தாலிபான்களை ஒழிக்கிறோமென்று அப்பாவி மக்கள் மீது ஆளில்லா குண்டுகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் போடுவது தான் பல நாடுகள் சேர்ந்த நேட்டோ படை என்ற ஐரோப்பிய நாடுகள் அமைப்பு அமெரிக்கா-இங்கிலாந்து நாடுகளுடன் சேர்ந்து ஈடுபடும் பயங்கரவாதம் செயல்களாகும். அப்பாவி மக்கள் வாகனத்தில் செல்லும் போதும், திருமண நிகழ்ச்சிகளில் ஈடுபட்டபோதும், இறந்த வீட்டில் அனுதாபத்திற்காக கூடியிந்த மக்கள் மீதும் குண்டு வீசிக் கொன்ற பின்பு கூட்டுப்படை தலைவர் ‘மன்னிப்புக்கேட்டார்’; என்;;;;றால் போன உயிர் வந்துவிடுமா நண்பர்களே? கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், ‘கொலை பாதகம் சும்மா விடாது’, என்று அதே போன்ற நிலைதான் அமெரிக்கா நாட்டில் ஜார்ஜ் புஷ் கட்சியான ரெபப்ளிகன் கட்சி ஜனாதிபதித்தேர்தலில் அமெரிக்கா நாட்டில் மண்ணைக்கவ்வியது, இங்திலாந்து நாட்டில் பிரதமர் பதவியிழந்ததோடு மட்டுமல்லாது இன்றைய(1. 3. 2010 பக்கம் 13 ல்) இந்து ஆங்கிலப்பத்திரிக்கையில், ‘ஈராக் யுத்தத்திற்குப் பின்பு முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயரின் உடல், மன நிலை மிகவும் பாதித்தவர் போல காட்சி தருகிறார். கடுங்குளிரிலும் தூக்கம் வராது நடுராத்திரியிலும் எழுந்து உட்கார்ந்து கொள்கிறார’;, என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே தான் கிராம பழமொழியான ‘கொலை பாவம் சும்மாவிடாது’ என்பது எவ்வளவு உண்மையானது என்பதிற்கு டோனி பிளேயர் கதை ஒரு காரண கதையாகுமல்லவா?

இன்றைய சூழ்நிலையில் சர்வதேச நாடுகள் ஒத்துக் கொள்ளக்கூடிய குற்றவியல் சட்டம் பயங்கரவாதத்திற்கு இல்லை. ஆனால் குர்ஆனின் போதனையில் அப்பாவி மக்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்கக் கூடாது என்று ஆணித்தரமாக கூறப்பட்டுள்ளது. ரசூலல்லாஹ்வின் ‘குதபியா’ கூட்டு ஒப்பந்தம் எவ்வாறு வீரர்க்ள் வெற்றிக்களிப்பில் வேட்டையாடாது மிகுந்த தன்னடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற சிறந்த எடுத்துக்காட்டாகும். அதற்கு பின்பு வந்த கலிபாக்கள் அவர்கள் தளபதிகள் மற்ற நாடுகள் மீது படையெடுத்தபோது உயிர் பிராணிகளுக்கும், பயிர்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், வயது முதிந்தோருக்கும் கடுகளவு கொடுந்துண்பம் விளைவிக்கக் கூடாது என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. பயங்கரவாதமென்று உலகில் முதன் முதலில் 1795 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடந்த புரட்சியில் புரட்சியாளர் மீது ஆளுங்கட்சியான ஜேக்கோபினர் நடத்திய பயங்கர தாக்குதலே முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்டது.
2004 ஆம் ஆண்டில் ஐ.நா. என்ற உலக நாடுகள் சபை தீவிரவாதம் பற்றி விளக்கம் அளிக்கையில், ‘ வேண்டுமென்றே பொதுமக்களுக்கும், உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் செயல் என்று அறிவித்துள்ளது. ஆனால் படையெடுக்கும் நாடு மீது உணர்வுப் பூர்வமான எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்துவது தீவிரமாகாது’ என்றும்; விளக்கம் சொல்லப்பட்டுள்ளது.
அவ்வாறென்றால் அமெரிக்காவும்-இங்கிலாந்தும் பொய்யானக் காரணத்தினைத்தின் பேரில் வேண்டுமென்றே உலக நாடுகள் சபை அனுமதி பெறாமல் போர் தொடுத்தது குற்றவியல் சட்டப்படி சர்வதேசக் குற்றம் தானே! அதன்பின்பு உயிர் கொல்லி ஆயுதம் ஈராக்கிலில்லை, எதிரியாக சித்தரிக்கப்பட்ட ஜனாதிபதி சதாம் ஹ_சைனையும் தூக்கிலிட்ட பின்பு அமெரிக்க-இங்கிலாந்து படைக்கு அங்கு என்ன வேலை? அவர்களை வெளியேற்ற உலகநாடுகள் சபை நடவடிக்கை எடுக்காது வேடிக்கைப் பார்ப்பது பக்கவாத நடவடிக்கை என்றால் சரிதானே தானே! அதன்பின்பு ஆப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் போது அவர்கள் எதிர்தாக்குதல் நடத்தினால் அதனை தீவிரவாத நடவடிக்கை என்றும் அவர்களை தீவிரவாதிகள் என்று சித்தரிப்பதும் பக்கவாத நடவடிக்கையாகாதா? நீதி தேவதை போன்று இருக்கின்ற உலக நாடுகள் சபை வல்லரசு நாடுகளாக அமெரிக்காவும்-இங்;கிலாந்தும்-நேட்டோ நாடுகளும் இருப்பதால் உலக நாடுகள் சபை வாய் பொத்தி-கைகட்டி மவுனியாக இருக்கலாமா? உலக நாடுகள் சபை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்தால் உலக மக்கள் எள்ளி நகையாடி பக்கவாத நோயால் உலக நாடுகள் சபை செயலிழந்து விட்டதோ என்று சந்தேகப்படலாமெல்லவா?
ஆகவே உலக நாடுகள் சபை பயங்கரவாதத்திற்கான குற்றவியல் சட்டத்தினை கூடிய சீக்கிரத்தில் நிறைவேற்ற வேண்டும்
உலக நாடுகள் சபையின் அங்கீகாரமில்லாது எந்த நாடும் அடுத்தநாட்டின் மீது படையெடுக்கக்கூடாது. என்ற தீர்மானத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும். எந்த வல்லரசு நாடும் தனது வீட்டோ என்ற தனி உரிமையினை பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிராக உபயோகிக்க முடியாது என்ற சட்டம் இயற்ற வேண்டும்.
உறுப்பு நாடுகளில் மதம், மொழி, இனம், இடம் சம்பந்தமாக பயங்கரவாத தாக்குதல் எந்த பிரிவினைவாத சக்திகள் நடத்தினாலும் கண்டனம் தெரிவிப்பதோடு, அந்த உறுப்பு நாடுகளை அப்படிப்பட்ட பிரிவினை பயங்கரவாத அமைப்பினை தடை செய்ய சட்டமியற்ற வற்புறுத்த வேண்டும்.
இஸ்லாமிய பெற்றோர் தங்கள் குழந்தைகளை தீவிரவாத அமைப்பில் சேராமலும், அந்த அமைப்புகளுக்குப் பலியாகாமலும் கண்காணிக்க வேண்டும்.
சுனாமி பேரலை 2004 டிசம்பர் 24ந்தேதி தமிழகத்தினைத் தாக்கியபோது கடலூர், பரங்கிப்பேட்டை, நாகை போன்ற ஊர்களில் எப்படி முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜாதி, மதம் பாராது உதவி செய்தார்களோ அதேபோன்று கூப்பிட்ட குரலுக்கு இயற்கை சீற்றங்களாலும், பயங்கரவாதங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதிற்கு ரத்ததானம், உடலுலைப்பு, மற்றும் பொருள் உதவி செய்கின்ற இளைஞர்கள் பதிவேடு தயார்நிலையில் வைத்து உதவுவது மூலம் மக்கள் சேவைக்கு தங்களை தயார் படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

வெளிநாட்டிற்கான PCC-Police Clearance Certificate பெறுவது எப்படி

வெளிநாட்டிற்கான PCC-Police Clearance Certificate பெறுவது எப்படி

முன்னூறு ரூபாய் மட்டுமே செலுத்தி ஒருவர் பெறக்கூடிய பாஸ்போட்டிற்கான PCC-Police Clearance Certificate ஐ பலர் ஆயிரத்திற்கும் அதிகம் செலுத்தி தரகர்கள் மூலம் பெறுவதும் சில நேரம் (குறிப்பாக சரியான தகவல் அறியாதவர்கள்) ஏமாந்து போவதும் வாடிக்கையாகி வருகிறது.


இருமுறை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு PCC விஷயமாக சென்றதில் நான் அறிந்தவற்றை இணையத்தில் பகிர்ந்து கொண்டால் பலருக்கு உபயோகமாக இருக்கும் என்பதால் தான் இந்த பதிவு.



Police Clearance Certificate க்குரிய படிவத்தை(form) ஐ பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். http://passport. gov.in/cpv/ miscell.pdf


3.5 x 3.5 செ.மீ அளவு புகைப்படம் ஒட்டி, நிரப்பப்பட்ட அந்த படிவத்துடன் அசல் பாஸ்போர்ட்டும் அதன் நகலும், இருப்பிட சான்றும்,(உதாரணத்திற்கு Ration Card நகல்), சமர்ப்பிக்க வேண்டும்.


காவல் நிலையங்களிலிருந்து எந்த விதமான சான்றிதழ்களும் வாங்கத் தேவையில்லை(உங்களுக்கு எதிராக எந்த வழக்கும் இல்லையென்றால் மட்டும்)


விண்ணப்பிக்கும் நபர் கடந்த ஒரு வருடமாக தற்போது இருக்கும் முகவரியில் இல்லையெனில் அதற்கு என்று தனியாக படிவம் ஒன்று சமர்ப்பிக்க வேண்டும். அந்த படிவத்தை பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம் https://passport. gov.in/pms/ PPForm.pdf


காலை 9.30 முதல் 12 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். காலை 8.45 க்கு எல்லாம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருக்குமாறு சென்றால் எளிமையாக இருக்கும்.


கட்டணமாக 300 ரூபாய் மட்டும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கட்டினால் போதும். கட்டண விவரம் கீழே உள்ள சுட்டியில் இருக்கிறது.


http://passport. gov.in/cpv/ FeeStructure. htm


காலையில் விண்ணப்பித்தால் மாலை 5 மணிக்கு எல்லாம் PCC கிடைத்து விடும்.


PCC குறித்த முழு விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதளத்தில் உள்ளது https://passport. gov.in/pms/ Police%20Clearan ce%20Certificate .htm


விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரர் தான் நேரில் செல்ல வேண்டுமென்பதுமில்லை,விண்ணப்பிப்பவர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வர இயலாத காரணத்தை குறிப்பிட்டு அவர் கையெழுத்துடன் கூடிய ஒரு கடிதத்தை யாரேனும் கொண்டுசென்றாலும் போதுமானது.


மதுரை பாஸ்போர்ட் அலுவலக முகவரி.

Passport Office, Bharathi Ula Veethi, Race Course Road, Madurai-625 002.
website: http://passport. gov.in/madurai. html



மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க முடியும்.

திருச்சி பாஸ்போர்ட் அலுவலக முகவரி



Passport Office, Water Tank Building, W.B. Road , Tiruchirappalli. Pin Code 620 008, Fax: 0431-2707515 E-mail: rpo.trichy@mea. gov.in


திருச்சி, கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலக முகவரி

Passport Office, First Floor, Corporation Commercial Complex, Opp. Thandumariamman Koil, Avinashi Road, Coimbatore - 641018



Phone: 0422-2304888, 2309009, Fax: 0422-2306660, E-mail: rpo.cbe@mea. gov.in, Tele-enquiry: 0422-2309009, 2304888, Web-site: http://passport. gov.in/coimbator e.html


கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

சென்னை பாஸ்போர்ட் அலுவலக முகவரி



Regional Passport Office,IInd Floor, Shastri Bhavan, 26, Haddows Road, Chennai - 600 006
Phones : 91-44-28203591, 28203593, 28203594, 28240696
Fax : 91-44-28252767
E-mail : rpo.chennai@ mea.gov.in


சென்னை, கடலூர், தர்மபுரி, காஞ்சிபுரம், காரைக்கால், கிருஷ்ணகிரி, பாண்டிச்சேரி, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் வேலுர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

Regards,
A. Mohamed sirajudeen.

Thanks to thamizhanedwin