நோயில்லா உலகம் படைப்போம்
வழி காட்டும் சீன மருத்துவம்
இன்று நம்மில் பல்வேறு நபர்கள் நோயினால் அவதிப்பட்டு, ஆங்கில மருந்துகளின் பின்விளைவுகளாலும் மற்றும் அதற்கு சிகிற்சை அளிக்க போதிய வருமானமில்லாது இறந்து போகும் நிலமையையும் நாள்தோறும் கண்டுவருகிறோம்.
இதற்கெல்லாம் விடைகொடுக்கும் விதமாக, எளிமையான எந்த பக்க விளைவுகளுமின்றி நாடி முறைப்படி நோயறிந்து அதற்கு தகுந்த முறையில் அக்குபஞ்சர் சிகிற்சை அளித்து பூரண குணப்படுத்தி வருகிறோம். நோயாளிக் கூறாமலேயே அவர்களது உடலில் உள்ள நோய்களை பட்டியலிட்டு கூற இயலும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிறப்புக் கருவியின்மூலம். பின் கண்டறியப்பட்ட நோய்களுக்குத் தகுந்த முறையில் சிகிற்சையும் அளிக்கிறோம்.
ஒருவரது உணவுப்பழக்கமும், உடல்பயிற்சியும், நல்ல தூக்கமும் நல்ல ஆரோக்கியத்திற்கு அடிப்படை. ஐவேளை தொழும்பொழுது மனதை ஒருமுகப்படுத்தி கட்டுபடுத்தவும் முடியும். சரியான வேளையில் தொழுகையை நடத்த கூறுவதுபோல், சரியான வேளையில் உணவையும் உட்கொள்ளவேண்டும். அப்போது நாம் சந்திக்கும் பற்பல நோய்களிலிருந்தும், விடுபடலாம் இன்ஷா அல்லாஹ். இது மிகவும் இன்றியமையாதது.
மேலும் அதிக விபரத்திற்கு அல்லது அக்குபஞ்சர் சிகிற்சைக்கு தொடர்பு கொள்ளவும் >
மருத்துவர் சாதிக் > 09443389935
"தாருல்ஸஃபா அக்குபஞ்சர் சிகிற்சை நிலையம்" > நாகர்கோவில்.
சிகிற்சையின் போது தகுந்த ஆலோசனைகளும் அளிக்கப்படும். அப்போது மீண்டும் நோய் வருவதிலிருந்து உங்களைப்பேணி பாதுகாத்துக் கொள்ளலாம். BP, Diabetics-ற்கு தொடர்ந்து மருந்து சாப்பிடத் தேவையில்லை. இம்மருத்துவம் செய்வதன்மூலம் முழுமையாக அந்த மாத்திரைகளை நிறுத்தி சிறந்த உடல்நலத்தோடு வாழலாம். BP மற்றும் Diabetics-ற்கு தொடர்ந்து மாத்திரை சாப்பிடுவதன்மூலம் இறுதியில் சிறுநீரகத்தை இழக்க நேரிடும் என்பதையும் மறவாதீர்கள்.
உங்களது இடத்தில் ஒருநாள் இலவச அக்குபஞ்சர் விழிப்புணர்வு முகாம் நடத்தவும் மேற்குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு தேதியைப் பெற்றுக்கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ். எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எங்களது ஆவல்; நோயற்ற உலகம் படைப்போம் இன்ஷா அல்லாஹ்.
அன்புடன்,
தாருல்ஸஃபாவிலிருந்து மருத்துவர் சாதிக்.
Mobile: 09443389935.
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts
Monday, May 4, 2009
Monday, January 26, 2009
ஒரு பேரிடரின் முடிவு - உலகம் நிம்மதிப் பெருமூச்சு!
ஒரு பேரிடரின் முடிவு - உலகம் நிம்மதிப் பெருமூச்சு!
வியாழன், 22 ஜனவரி 2009
உலகப் பத்திரிகைகள் பலவும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வால்டர் புஷ்ஷின் பதவிக்காலம் முடிந்ததை ஒட்டி தலையங்கங்கள் தீட்டியுள்ளன. பெரும்பாலான பத்திரிக்கைகள் புஷ் ஒரு தகுதியில்லாத, பண்பு சிறிதுமற்றத் தலைவர் என்றே சித்தரித்துள்ளன.
பெரும்பான்மைப் பத்திரிகைகள் "புஷ் செய்த அநியாயங்களுக்கு வரலாறு ஒருபோதும் அவரை மன்னிக்காது" எனத் தெரிவித்துள்ளன.
ஜெர்மனியின் Sueddeutsche Zeitung நாளிதழ், "பெரும்தோல்வி" என்ற பொருளில் "The Failure" என்ற தலைப்பிட்டு அவரைப்பற்றி எழுதுகையில் "உறுதியான கொள்கைகளுக்கும் விவேகமற்ற முரட்டுத்தனத்திற்கும் வேறுபாடு அறியாதவர்" என்று குறிப்பிட்டு எழுதி, "தன் பதவியின் மாபெரும் பொறுப்பை உணராத, தகுதியற்ற தலைவர்" என வருணித்துள்ளது.
அதோடு தேவையற்ற இரு போர்களை அமெரிக்க மக்களின் மீது திணித்து எண்ணிலடங்கா ஆப்கன், ஈராக் பொது மக்களைக் கொன்று குவிக்க புஷ் காரணியாக இருந்தார் எனவும் நல்ல நிலையில் கையிலெடுத்த அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து அதள பாதாளத்தில் தள்ளி உலகப் பொருளாதாரத்தை ஆட்டம் காணவைத்து உலகின் பல்வேறு மக்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைத்த 'பெருமை' இவரைச் சாரும் என்றும் அது கூறியுள்ளது.
அதேவேளை, 'ஜெருஸலம் போஸ்ட்' என்ற பெயரில் இஸ்ரேலில் இருந்து வெளியாகும் நாளிதழோ, "கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் புஷ்ஷைப் போன்று இஸ்ரேலின் உற்ற நண்பராயிருந்த அதிபரைக் காண இயலாது" என்று புகழாரம் சூட்டியிருந்தது. "இஸ்ரேலும் அமெரிக்காவும் விடுதலை விரும்பிகள்; அதனால் இரு நாடுகளுக்கும் இருந்த பொது எதிரிகளைச் சரியாகக் கண்டறிந்து அழிக்க இஸ்ரேலுக்குப் பெரும் உதவிகள் செய்தவர் புஷ்" என்றும் தெரிவித்திருந்தது.
கனடாவின் 'டொரண்டோ ஸ்டார்' என்ற நாளிதழ், "உலகம் இதுவரை கண்டிராத ஆக மோசமான அதிபரை வழியனுப்பி விடையிறுப்போம்" என்று கூறியதோடு, "ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றி புஷ் ஒரு கடுமையான, தடுக்க இயலாத (unmitigated) கோமாளிக் கொடுங்கோலன்" என்றும் வருணித்துள்ளது. "ஆப்கன், இராக் போர்களைக் கையாண்ட விதத்திலாகட்டும், கட்ரீனா புயலின் பேரழிவைக் கையாண்ட விதத்திலாகட்டும், பொருளாதாரச் சீரழிவினைக் கட்டுப்படுத்துவதிலாகட்டும், புஷ் ஒரு தகுதியற்ற அதிபராகத்தான் இருந்தார்" எனச் சாடியுள்ளது.
பிரிட்டனின் 'டெய்லி மெயில்' நாளிதழ், "மத்தியக் கிழக்கைப் பற்றி எரியும் நெருப்பிலும் அமெரிக்காவைக் கடும் பொருளாதாரப் பற்றாக்குறையிலும் விட்டுச் செல்கிறார் புஷ். அவரது ஒரே சாதனை செப்டம்பர் 11, 2001க்குப் பிறகு அமெரிக்க மண்ணில் வேறு தாக்குதல்கள் நடைபெறாமல் பார்த்துக் கொண்டதே" எனக் கூறியுள்ளது.
ஸ்காட்டிஷ் நாளிதழான 'டெய்லி ரெக்கார்டு', "அமெரிக்காவை உலக மக்களில் பெரும்பாலானோர் வெறுப்பதற்கு மூல காரணமாகத் திகழ்ந்தவர் புஷ். அவரது போர்வெறி உலகைப் பாதுகாப்பற்ற ஓரிடமாக ஆக்கியுள்ளது; அவரது பொருளாதார அறிவின்மை அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீரழித்ததால் அதனைச் சார்ந்தே இயங்கும் உலகப் பொருளாதாரத்தையும் சீரழித்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.
பிரெஞ்சு நாளிதழான 'Le Monde', "புஷ்ஷை ஒரு பேராபத்து என்று வர்ணிக்காத ஒரே ஒரு வரலாற்றாய்வாளரைக் கூடக் கண்டுபிடிப்பது கடினம்" என்று கூறியுள்ளது.
அதே வேளை, ஜெர்மனியின் 'ஸ்டெர்ன்' நாளிதழ், "புஷ் தனது தகுதியின்மையால் உலகின் மிகப் பலம் பொருந்திய நாடான அமெரிக்காவைச் சிதைத்து விட்டார். பேரழிவு ஆயுதங்கள் என்ற பெயரில் கணக்கிலடங்காப் பொய்களை அவிழ்த்துக் கொட்டி, விடுதலை என்ற பெயரில் அப்பாவிகளைக் கடும் சித்திரவதை செய்து உலகை நாசப்படுத்தியவர் அவர்" எனக் கூறியுள்ளது.
அரபகத்தின் பல நாடுகளில் வெளிவரும் அரபி நாளிதழான 'அல்-ஹயாத்', "விதி வலியது என்பர். உண்மை தான்; அமெரிக்க மக்களை ஃப்ளோரிடா வாக்கு எண்ணிக்கையில் கைவிட்ட விதி, எட்டு ஆண்டுகள் அவர்களை மட்டுமின்றி உலகையே வாட்டியது" என்று நையாண்டி செய்திருந்தது. "எனினும் புஷ் தனது பதவிக்காலத்தில் பாதி நாட்களைச் சுற்றுப் பயணத்தில் கழித்ததால் இது போன்ற இருமடங்கு சேதம் விளைவிப்பதிலிருந்து விதி நம்மைக் காப்பாற்றியுள்ளது" என்று தொடர்ந்து எழுதியுள்ளது.
ஆஸ்திரியப் பத்திரிக்கையான 'Wiener Zeitung', "புஷ்ஷை விட ஈரானிய அதிபர் மஹ்மூத் அஹமதிநிஜாத் ஒரு சிறந்த உலகத் தலைவராவார்" என எழுதியுள்ளது. "நீதியின் சின்னமாக விளங்கிய அமெரிக்காவை நாசமாக்கியவர் புஷ்; ஆனால் உலகில் மனித நேயத்துடன் அனைவருக்கும் குரல் கொடுப்பவர் அஹமதிநிஜாத்" என்று தெரிவித்துள்ளது.
புஷ்ஷை அவர் மொழியில் வர்ணிப்பதானால் நாம்தான் அவரை "misunderestimate" செய்து விட்டோமோ எனத் தோன்றுகிறது.
முஸ்லிம் உலகு புஷ்ஷுக்குக் கொடுக்க வேண்டிய பட்டத்தை ஏற்கனவே வெனிஸுலா அதிபர் கொடுத்து விட்டார்.
கிருமிகள் ஒழியட்டும்; உலகு தழைக்கட்டும்!
வியாழன், 22 ஜனவரி 2009
உலகப் பத்திரிகைகள் பலவும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வால்டர் புஷ்ஷின் பதவிக்காலம் முடிந்ததை ஒட்டி தலையங்கங்கள் தீட்டியுள்ளன. பெரும்பாலான பத்திரிக்கைகள் புஷ் ஒரு தகுதியில்லாத, பண்பு சிறிதுமற்றத் தலைவர் என்றே சித்தரித்துள்ளன.
பெரும்பான்மைப் பத்திரிகைகள் "புஷ் செய்த அநியாயங்களுக்கு வரலாறு ஒருபோதும் அவரை மன்னிக்காது" எனத் தெரிவித்துள்ளன.
ஜெர்மனியின் Sueddeutsche Zeitung நாளிதழ், "பெரும்தோல்வி" என்ற பொருளில் "The Failure" என்ற தலைப்பிட்டு அவரைப்பற்றி எழுதுகையில் "உறுதியான கொள்கைகளுக்கும் விவேகமற்ற முரட்டுத்தனத்திற்கும் வேறுபாடு அறியாதவர்" என்று குறிப்பிட்டு எழுதி, "தன் பதவியின் மாபெரும் பொறுப்பை உணராத, தகுதியற்ற தலைவர்" என வருணித்துள்ளது.
அதோடு தேவையற்ற இரு போர்களை அமெரிக்க மக்களின் மீது திணித்து எண்ணிலடங்கா ஆப்கன், ஈராக் பொது மக்களைக் கொன்று குவிக்க புஷ் காரணியாக இருந்தார் எனவும் நல்ல நிலையில் கையிலெடுத்த அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து அதள பாதாளத்தில் தள்ளி உலகப் பொருளாதாரத்தை ஆட்டம் காணவைத்து உலகின் பல்வேறு மக்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைத்த 'பெருமை' இவரைச் சாரும் என்றும் அது கூறியுள்ளது.
அதேவேளை, 'ஜெருஸலம் போஸ்ட்' என்ற பெயரில் இஸ்ரேலில் இருந்து வெளியாகும் நாளிதழோ, "கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் புஷ்ஷைப் போன்று இஸ்ரேலின் உற்ற நண்பராயிருந்த அதிபரைக் காண இயலாது" என்று புகழாரம் சூட்டியிருந்தது. "இஸ்ரேலும் அமெரிக்காவும் விடுதலை விரும்பிகள்; அதனால் இரு நாடுகளுக்கும் இருந்த பொது எதிரிகளைச் சரியாகக் கண்டறிந்து அழிக்க இஸ்ரேலுக்குப் பெரும் உதவிகள் செய்தவர் புஷ்" என்றும் தெரிவித்திருந்தது.
கனடாவின் 'டொரண்டோ ஸ்டார்' என்ற நாளிதழ், "உலகம் இதுவரை கண்டிராத ஆக மோசமான அதிபரை வழியனுப்பி விடையிறுப்போம்" என்று கூறியதோடு, "ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றி புஷ் ஒரு கடுமையான, தடுக்க இயலாத (unmitigated) கோமாளிக் கொடுங்கோலன்" என்றும் வருணித்துள்ளது. "ஆப்கன், இராக் போர்களைக் கையாண்ட விதத்திலாகட்டும், கட்ரீனா புயலின் பேரழிவைக் கையாண்ட விதத்திலாகட்டும், பொருளாதாரச் சீரழிவினைக் கட்டுப்படுத்துவதிலாகட்டும், புஷ் ஒரு தகுதியற்ற அதிபராகத்தான் இருந்தார்" எனச் சாடியுள்ளது.
பிரிட்டனின் 'டெய்லி மெயில்' நாளிதழ், "மத்தியக் கிழக்கைப் பற்றி எரியும் நெருப்பிலும் அமெரிக்காவைக் கடும் பொருளாதாரப் பற்றாக்குறையிலும் விட்டுச் செல்கிறார் புஷ். அவரது ஒரே சாதனை செப்டம்பர் 11, 2001க்குப் பிறகு அமெரிக்க மண்ணில் வேறு தாக்குதல்கள் நடைபெறாமல் பார்த்துக் கொண்டதே" எனக் கூறியுள்ளது.
ஸ்காட்டிஷ் நாளிதழான 'டெய்லி ரெக்கார்டு', "அமெரிக்காவை உலக மக்களில் பெரும்பாலானோர் வெறுப்பதற்கு மூல காரணமாகத் திகழ்ந்தவர் புஷ். அவரது போர்வெறி உலகைப் பாதுகாப்பற்ற ஓரிடமாக ஆக்கியுள்ளது; அவரது பொருளாதார அறிவின்மை அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீரழித்ததால் அதனைச் சார்ந்தே இயங்கும் உலகப் பொருளாதாரத்தையும் சீரழித்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.
பிரெஞ்சு நாளிதழான 'Le Monde', "புஷ்ஷை ஒரு பேராபத்து என்று வர்ணிக்காத ஒரே ஒரு வரலாற்றாய்வாளரைக் கூடக் கண்டுபிடிப்பது கடினம்" என்று கூறியுள்ளது.
அதே வேளை, ஜெர்மனியின் 'ஸ்டெர்ன்' நாளிதழ், "புஷ் தனது தகுதியின்மையால் உலகின் மிகப் பலம் பொருந்திய நாடான அமெரிக்காவைச் சிதைத்து விட்டார். பேரழிவு ஆயுதங்கள் என்ற பெயரில் கணக்கிலடங்காப் பொய்களை அவிழ்த்துக் கொட்டி, விடுதலை என்ற பெயரில் அப்பாவிகளைக் கடும் சித்திரவதை செய்து உலகை நாசப்படுத்தியவர் அவர்" எனக் கூறியுள்ளது.
அரபகத்தின் பல நாடுகளில் வெளிவரும் அரபி நாளிதழான 'அல்-ஹயாத்', "விதி வலியது என்பர். உண்மை தான்; அமெரிக்க மக்களை ஃப்ளோரிடா வாக்கு எண்ணிக்கையில் கைவிட்ட விதி, எட்டு ஆண்டுகள் அவர்களை மட்டுமின்றி உலகையே வாட்டியது" என்று நையாண்டி செய்திருந்தது. "எனினும் புஷ் தனது பதவிக்காலத்தில் பாதி நாட்களைச் சுற்றுப் பயணத்தில் கழித்ததால் இது போன்ற இருமடங்கு சேதம் விளைவிப்பதிலிருந்து விதி நம்மைக் காப்பாற்றியுள்ளது" என்று தொடர்ந்து எழுதியுள்ளது.
ஆஸ்திரியப் பத்திரிக்கையான 'Wiener Zeitung', "புஷ்ஷை விட ஈரானிய அதிபர் மஹ்மூத் அஹமதிநிஜாத் ஒரு சிறந்த உலகத் தலைவராவார்" என எழுதியுள்ளது. "நீதியின் சின்னமாக விளங்கிய அமெரிக்காவை நாசமாக்கியவர் புஷ்; ஆனால் உலகில் மனித நேயத்துடன் அனைவருக்கும் குரல் கொடுப்பவர் அஹமதிநிஜாத்" என்று தெரிவித்துள்ளது.
புஷ்ஷை அவர் மொழியில் வர்ணிப்பதானால் நாம்தான் அவரை "misunderestimate" செய்து விட்டோமோ எனத் தோன்றுகிறது.
முஸ்லிம் உலகு புஷ்ஷுக்குக் கொடுக்க வேண்டிய பட்டத்தை ஏற்கனவே வெனிஸுலா அதிபர் கொடுத்து விட்டார்.
கிருமிகள் ஒழியட்டும்; உலகு தழைக்கட்டும்!
Monday, January 5, 2009
நாடகமே உலகம்
http://jazeela.blogspot.com
நாடகமே உலகம்
ஜெஸிலா | அனுபவம்/ நிகழ்வுகள் | 60 மறுமொழிகள் | #
செய்வதையும்செய்து விட்டு இப்படி எழுத என்ன அருகதை இருக்கிறது என்பவர்களுக்கு முதலிலேயே ஒரு விசயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். இதைச் சொல்லும் தார்மீக உரிமை கூட எனக்குக் கிடையாது என்பதை உணர்ந்த பிறகே இதனை எழுதுகிறேன். ஆனால், நடந்த உண்மைகளுக்கு சாட்சியாக இருக்க நேர்ந்ததால் அதனை வெளிப்படுத்தவே இதனை இங்கே பதிவாக்குகிறேன்.
அரட்டை அரங்கத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். எனக்கும் அப்படித்தான். தொலைக்காட்சியில் அவரவர் பிரச்சனையைப் பேசுவதும் அதற்கு உதவி பெறுவதுமாக இருக்கும் அரட்டை அரங்கத்தைக் கண்ணீர் மல்கப் பார்த்திருக்கிறேன். பேச்சுத்திறனை வியந்திருக்கிறேன். 'வாய் பார்க்காதே' என்று அதட்டும் அம்மாவும் கூட என்னைப் பார்க்க அனுமதித்ததாலோ என்னவோ அந்த நிகழ்ச்சி பிடித்திருந்தது. ஆனால் சிலர் அதை வெறும் நடிப்பு என்று கிண்டல் செய்தபோது கொஞ்சம் யோசித்தாலும் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனுஷ்ய புத்திரனின் 'அரட்டையும் அரட்டலும்' கட்டுரையை வாசித்த போது அந்த நிகழ்ச்சியை பார்க்கும் கண்ணோட்டமே மாறிவிட்டிருந்தது. அதுவும் அவர் அந்தக் கட்டுரையில் எப்படி எல்லோரும் ஒரே மாதிரியான குரலில், பேசும்முறையில், முகபாவத்தில், உடல் அசைவில் பேச முடிகிறது. பல ஒத்திகை பார்த்து பிரச்சனையை கண்ணீருடன் எப்படி சொல்கிறார்கள் என்று எழுப்பிய கேள்வி சிந்திக்கத் தூண்டியது. அதன் பிறகு அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அதுவே ஒலித்துக் கொண்டும் இருந்தது.
துபாயில் அரட்டை அரங்கம் என்று அறிவிப்பைப் பார்த்தேன். ஆனால் கலந்துக் கொள்ள ஆவல் பெரிதாக வரவில்லை. பல நகைச்சுவைப் பட்டிமன்றங்களில் பேச்சுக்காக நகைச்சுவைக்காக எத்தனையோ தலைப்பை எடுத்துப் பேசியிருக்கிறேன். அது வெறும் பேச்சாகத்தான் இருக்குமே தவிர என் மனதின் கருத்தாக வாதமாக அமையாது. என் நோக்கமெல்லாம் பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பதாகவும் என்னுடைய பொழுதுபோக்காகவும் மட்டுமே அமையும். அதனாலேயே இந்த 'சீரியஸ்' மற்றும் உருக்கமான அரட்டை விளையாட்டுக்குப் போகவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களே உங்களைப் போன்றவர்கள் நிகழ்ச்சிக்குத் தேவை என்று வீட்டில் சொல்லிவிட கலந்து கொள்ள நேர்ந்தது.
எந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டாலும் அதில் அக்கறை செலுத்தாத வீட்டினருக்கும் கூட இம்முறை நான் ஒவ்வொரு சுற்றில் தகுதி பெறும்போதும் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அவர்கள் 'இந்தச் சுற்றில் தேர்வாகிவிட்டாயா?' என்று கேட்கும் போதெல்லாம் ஏதோ புது பொறுப்பு வந்துவிட்டதாக பயம் மேலோங்கியது. கொடுக்கப்பட்ட தலைப்போ 'அமீரக வாழ்வில் யாருடைய பிரிவு அதிக வேதனை தருகிறது
1. குடும்பம்
2. காதலி
3. நண்பர்கள்
4. தாய்மண்
5. என்னத்த பிரிவு? இங்கு நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்'.
தலைப்பு வந்தவுடன் என்னை நன்றாகத் தெரிந்தவர்கள் அத்தனை பேரும் நான் 'நிம்மதியாக இருக்கிறோம்' என்று தான் பேசுவேன் என்று சரியாகச் சொல்லிவிட்டார்கள். நானும் எல்லாச் சுற்றிலும் நிம்மதியைப் பற்றிப் பேசியே தகுதியும் பெற்றேன். இறுதிச் சுற்றின் முடிவுக்கு எதிர்பார்த்திருந்த போது அழைப்பு வந்தது 'தேர்வாகிவிட்டீர்கள் ஆனால் எங்களுக்காக நீங்கள் வேறு தலைப்பில் பேச வேண்டும். உங்கள் பேச்சுத்திறனை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறோம்' என்று. எனக்குப் பேசக் கொடுத்த தலைப்பு 'தாய்மண் பற்றிய பிரிவு'. விரும்பிப் பேசுவது வேறு, அலங்காரப் பேச்சு வேறு - இதற்கு உடன்பட வேண்டாமென்று தோன்றினாலும் வீட்டில் உள்ளவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக ஒப்புக் கொண்டேன். யதார்த்தமில்லாது சோகம் கொட்டி நடிப்பது எனக்கு கடினமாகப்பட்டது.
ஆனால் 'முடியும்' என்று என் எண்ணத்தையே அதற்கேற்ப மாற்றிக் கொண்டு நாடகத்திற்கு தயாரானேன் அவர்களும் ஒரு சில விவரங்களையும் தந்து 'தயார்படுத்தினார்கள்'. என்னுடன் பேசியவர்களில் ஒரு பெண் அவர்களுக்கு 'brain tumor' இருந்த போது தன் குடும்பத்தினர் எப்படி ஒத்துழைத்தார்கள் என்று பேசி இதைவிட இந்த இடத்தில் இன்னும் உருக்கமாக்குவது எப்படி என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் ஒரு குழந்தையின் மரணத்தை பற்றி ஒத்திகையில் பேசி முடித்தவுடன் தேர்வுக்குழுவினரோ 'அந்த இடத்தில் இன்னும் உருக்கமாக இது போல் பேசுங்கள்' என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்படியாக ஒவ்வொருவருக்கும் எப்படி பேசுவதென்பது பற்றி குறிப்புகள் வழங்கப்பட்டபோதுதான். அரட்டை அரங்கம் என்பது 'நாடக அரங்கம்'தான் என்று தெள்ளத்தெளிவானது. இதனால்தான் எல்லோர் குரலும் ஒரே விதமாக ஒலிப்பதும் புரிந்தது.
நிகழ்ச்சி அரங்கேறியது சில வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு வேலை தினமாதலால் பார்க்கவுமில்லை அது குறித்து வீட்டாருக்கு நினைவுப்படுத்தவும் மறந்திருந்தேன். ஆனால், நான் பேசி முடிந்ததும் முகத்திற்கு வட்டம் போட்டு 'அவர் அவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்' என்ற பாடலையும் ஒலிக்கச் செய்தார்களாம். ஒளிபரப்பிய நொடியிலிருந்து ஊரிலிருந்து சுற்றமும் நட்பும் அழைத்துப் பாராட்டு மழை பொழிந்தார்கள். என் வாப்பா என்னிடம் சரியாக பேசக் கூட முடியவில்லை காரணம் என் பேச்சைக் கண்டு கண் கலங்கி தொண்டையும் அடைத்துவிட்டிருந்தது. என் நடிப்புக்கு இவ்வளவு சக்தியா என்று நினைத்துக் கொண்டேன். எனது மாமியார் அழைத்து 'நீங்க பேசுனது சந்தோஷமா இருந்துச்சு ஆனா நீங்க பேசின விசயம் வேதனையா இருந்துச்சு. அங்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னா இங்கு வந்திடுங்க' என்று அப்பாவித்தனமாகச் சொன்னது மனதைச் சங்கடப்படுத்தியது. இதையெல்லாம் விட என் மாமா மகனுக்கு நிச்சயித்த பெண் இவனுக்கு துபாய்க்கு தொலைபேசி 'துபாய் மாப்பிள்ளைன்னு சொன்னதும் கல்யாணமாகி நானும் அங்க வரலாம்னு நினைச்சிருந்தேன். உங்க மச்சி பேசுனதப் பார்த்து அந்த ஆசையே போயிடுச்சு. உங்களுக்கெல்லாம் நம்ம நாட்ட பிரிஞ்ச ஏக்கம் இவ்வளவு இருக்குன்னா அங்க இருக்க வேணாம் வந்திடுங்க' என்று சொன்னார்களாம். அதை அவன் என்னிடம் சொல்லும் போது இந்த வருடத்தின் மிகப் பெரிய நகைச்சுவை என்றுதான் சிரிக்க முடிந்தது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுவதை அப்படியே நம்பி விடும் அளவுக்கு இதைக் கேட்கிறவர்கள் முட்டாள்களா, அல்லது அவர்களை முட்டாளாக்க முடிவு செய்து இப்படி வேஷம் போட்ட நாங்கள் முட்டாள்களா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இதைப் போல் எத்தனை பேர் நான் இப்படிப் பேசியதை உண்மையென்று கண்மூடித்தனமாக நம்பி 'உச்சு' கொட்டியிருப்பார்கள், கண்ணீர் வடித்திருப்பார்கள். அதற்கு நானும் காரணமானதை நினைத்து என்னை நானே நொந்துக் கொண்டேன். இந்த மாதம் நடந்த ஜெயா 'மக்கள் அரங்கத்தில்' அதனாலேயே கலந்துக் கொள்ளவில்லை.
அரட்டை அரங்கத்தில் என்னுடன் ஒருவர் 'இலங்கைத் தமிழர்' என்ற முகவுரையோடு ஆரம்பித்துப் பேசினார். ஆனால் அவர் பேச்சு எனக்கு இலங்கைத் தமிழாகத் தெரியவில்லை அதுவும் அவரை முதல் சுற்றில் சாதாரண தமிழில் பேசி பார்த்த நினைவும் இருந்ததால் அவரிடம் நான் கேட்டுக் கொண்டது ஒன்றே ஒன்றுதான் 'நீங்கள் இலங்கைத் தமிழராகப் பேசுங்கள் பிரச்சனையில்லை ஆனால் நீங்கள் பேசுவது மொத்த இலங்கைத் தமிழரின் பிரதிபலிப்பாகட்டும் என்றேன். "மற்றவர்களுக்கெல்லாம் தற்காலிக பிரிவுதான் ஆனால் தாய் மண்ணை மீண்டும் எப்போது பார்ப்போம் என்று தெரியாமல் தவிப்பவர்களின் குரலாக உங்களுடையது ஒலிக்கட்டும்" என்றேன். அவரோ 'நிம்மதி' என்ற தலைப்பிற்குப் பேசினார். இலங்கைத் தமிழராக பேசிய அதே நபர் மக்கள் அரங்கில் சாதாரண தமிழில் பேசி என் சந்தேகத்தை தீர்த்து விட்டார். நாடகத்தில் இது கேடுகெட்ட நாடகம் என்று நினைத்துக் கொண்டேன்.
இந்த அரட்டை அரங்கத்தில் / மக்கள் அரங்கில் எத்தனையோ பேர் பேசுகிறார்கள் ஆனால் ஒருவரும் நடப்பது நாடகம்தான் என்று மற்ற அப்பாவிகளுக்குச் சொல்லாமல் இருப்பது ஏன்? நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களே உண்மையை வெளியில் சொன்னால் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்து அதில் ஏற்படும் பச்சாதாபம் குறையும்தானே? ஒத்திகை பார்த்து அழுதழுது சோகத்தை உள்ளிழுத்துப் பேசுகிறார்கள் சரி, ஆனால் ஒத்திகையில் கேட்டுவிட்ட அதே செய்தியை மீண்டும் நிகழ்ச்சியில் கேட்கும் போது எப்படித்தான் மடை திறந்த வெள்ளமாக டி.ஆருக்கும் சரி விசுவுக்கும் சரி தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறதோ தெரியவில்லை. சத்தியமா 'கிளிசரின்' போடாமல் இவ்வளவு கண்ணீர் வடிப்பதை முதல் முறையா பார்க்கிறேன்.
இந்த நிகழ்ச்சி மக்கள் அரங்கமாக, அரட்டை அரங்கமாக இன்னும் 'சன்', 'ஜெயா'வில் பல வருடங்களாக பல ஊர்களில் நடந்தவையாக ஒளிபரப்பிக் கொண்டிருப்பதற்கு காரணம் நம் மக்கள் இன்னும் முட்டாள்களாக இருப்பதுதான். மக்கள் விழித்துக் கொள்ள என் ஒரு பதிவு மட்டும் போதுமா என்ன?
நாடகமே உலகம்
ஜெஸிலா | அனுபவம்/ நிகழ்வுகள் | 60 மறுமொழிகள் | #
செய்வதையும்செய்து விட்டு இப்படி எழுத என்ன அருகதை இருக்கிறது என்பவர்களுக்கு முதலிலேயே ஒரு விசயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். இதைச் சொல்லும் தார்மீக உரிமை கூட எனக்குக் கிடையாது என்பதை உணர்ந்த பிறகே இதனை எழுதுகிறேன். ஆனால், நடந்த உண்மைகளுக்கு சாட்சியாக இருக்க நேர்ந்ததால் அதனை வெளிப்படுத்தவே இதனை இங்கே பதிவாக்குகிறேன்.
அரட்டை அரங்கத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். எனக்கும் அப்படித்தான். தொலைக்காட்சியில் அவரவர் பிரச்சனையைப் பேசுவதும் அதற்கு உதவி பெறுவதுமாக இருக்கும் அரட்டை அரங்கத்தைக் கண்ணீர் மல்கப் பார்த்திருக்கிறேன். பேச்சுத்திறனை வியந்திருக்கிறேன். 'வாய் பார்க்காதே' என்று அதட்டும் அம்மாவும் கூட என்னைப் பார்க்க அனுமதித்ததாலோ என்னவோ அந்த நிகழ்ச்சி பிடித்திருந்தது. ஆனால் சிலர் அதை வெறும் நடிப்பு என்று கிண்டல் செய்தபோது கொஞ்சம் யோசித்தாலும் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனுஷ்ய புத்திரனின் 'அரட்டையும் அரட்டலும்' கட்டுரையை வாசித்த போது அந்த நிகழ்ச்சியை பார்க்கும் கண்ணோட்டமே மாறிவிட்டிருந்தது. அதுவும் அவர் அந்தக் கட்டுரையில் எப்படி எல்லோரும் ஒரே மாதிரியான குரலில், பேசும்முறையில், முகபாவத்தில், உடல் அசைவில் பேச முடிகிறது. பல ஒத்திகை பார்த்து பிரச்சனையை கண்ணீருடன் எப்படி சொல்கிறார்கள் என்று எழுப்பிய கேள்வி சிந்திக்கத் தூண்டியது. அதன் பிறகு அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அதுவே ஒலித்துக் கொண்டும் இருந்தது.
துபாயில் அரட்டை அரங்கம் என்று அறிவிப்பைப் பார்த்தேன். ஆனால் கலந்துக் கொள்ள ஆவல் பெரிதாக வரவில்லை. பல நகைச்சுவைப் பட்டிமன்றங்களில் பேச்சுக்காக நகைச்சுவைக்காக எத்தனையோ தலைப்பை எடுத்துப் பேசியிருக்கிறேன். அது வெறும் பேச்சாகத்தான் இருக்குமே தவிர என் மனதின் கருத்தாக வாதமாக அமையாது. என் நோக்கமெல்லாம் பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பதாகவும் என்னுடைய பொழுதுபோக்காகவும் மட்டுமே அமையும். அதனாலேயே இந்த 'சீரியஸ்' மற்றும் உருக்கமான அரட்டை விளையாட்டுக்குப் போகவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களே உங்களைப் போன்றவர்கள் நிகழ்ச்சிக்குத் தேவை என்று வீட்டில் சொல்லிவிட கலந்து கொள்ள நேர்ந்தது.
எந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டாலும் அதில் அக்கறை செலுத்தாத வீட்டினருக்கும் கூட இம்முறை நான் ஒவ்வொரு சுற்றில் தகுதி பெறும்போதும் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அவர்கள் 'இந்தச் சுற்றில் தேர்வாகிவிட்டாயா?' என்று கேட்கும் போதெல்லாம் ஏதோ புது பொறுப்பு வந்துவிட்டதாக பயம் மேலோங்கியது. கொடுக்கப்பட்ட தலைப்போ 'அமீரக வாழ்வில் யாருடைய பிரிவு அதிக வேதனை தருகிறது
1. குடும்பம்
2. காதலி
3. நண்பர்கள்
4. தாய்மண்
5. என்னத்த பிரிவு? இங்கு நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்'.
தலைப்பு வந்தவுடன் என்னை நன்றாகத் தெரிந்தவர்கள் அத்தனை பேரும் நான் 'நிம்மதியாக இருக்கிறோம்' என்று தான் பேசுவேன் என்று சரியாகச் சொல்லிவிட்டார்கள். நானும் எல்லாச் சுற்றிலும் நிம்மதியைப் பற்றிப் பேசியே தகுதியும் பெற்றேன். இறுதிச் சுற்றின் முடிவுக்கு எதிர்பார்த்திருந்த போது அழைப்பு வந்தது 'தேர்வாகிவிட்டீர்கள் ஆனால் எங்களுக்காக நீங்கள் வேறு தலைப்பில் பேச வேண்டும். உங்கள் பேச்சுத்திறனை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறோம்' என்று. எனக்குப் பேசக் கொடுத்த தலைப்பு 'தாய்மண் பற்றிய பிரிவு'. விரும்பிப் பேசுவது வேறு, அலங்காரப் பேச்சு வேறு - இதற்கு உடன்பட வேண்டாமென்று தோன்றினாலும் வீட்டில் உள்ளவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக ஒப்புக் கொண்டேன். யதார்த்தமில்லாது சோகம் கொட்டி நடிப்பது எனக்கு கடினமாகப்பட்டது.
ஆனால் 'முடியும்' என்று என் எண்ணத்தையே அதற்கேற்ப மாற்றிக் கொண்டு நாடகத்திற்கு தயாரானேன் அவர்களும் ஒரு சில விவரங்களையும் தந்து 'தயார்படுத்தினார்கள்'. என்னுடன் பேசியவர்களில் ஒரு பெண் அவர்களுக்கு 'brain tumor' இருந்த போது தன் குடும்பத்தினர் எப்படி ஒத்துழைத்தார்கள் என்று பேசி இதைவிட இந்த இடத்தில் இன்னும் உருக்கமாக்குவது எப்படி என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் ஒரு குழந்தையின் மரணத்தை பற்றி ஒத்திகையில் பேசி முடித்தவுடன் தேர்வுக்குழுவினரோ 'அந்த இடத்தில் இன்னும் உருக்கமாக இது போல் பேசுங்கள்' என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்படியாக ஒவ்வொருவருக்கும் எப்படி பேசுவதென்பது பற்றி குறிப்புகள் வழங்கப்பட்டபோதுதான். அரட்டை அரங்கம் என்பது 'நாடக அரங்கம்'தான் என்று தெள்ளத்தெளிவானது. இதனால்தான் எல்லோர் குரலும் ஒரே விதமாக ஒலிப்பதும் புரிந்தது.
நிகழ்ச்சி அரங்கேறியது சில வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு வேலை தினமாதலால் பார்க்கவுமில்லை அது குறித்து வீட்டாருக்கு நினைவுப்படுத்தவும் மறந்திருந்தேன். ஆனால், நான் பேசி முடிந்ததும் முகத்திற்கு வட்டம் போட்டு 'அவர் அவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்' என்ற பாடலையும் ஒலிக்கச் செய்தார்களாம். ஒளிபரப்பிய நொடியிலிருந்து ஊரிலிருந்து சுற்றமும் நட்பும் அழைத்துப் பாராட்டு மழை பொழிந்தார்கள். என் வாப்பா என்னிடம் சரியாக பேசக் கூட முடியவில்லை காரணம் என் பேச்சைக் கண்டு கண் கலங்கி தொண்டையும் அடைத்துவிட்டிருந்தது. என் நடிப்புக்கு இவ்வளவு சக்தியா என்று நினைத்துக் கொண்டேன். எனது மாமியார் அழைத்து 'நீங்க பேசுனது சந்தோஷமா இருந்துச்சு ஆனா நீங்க பேசின விசயம் வேதனையா இருந்துச்சு. அங்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னா இங்கு வந்திடுங்க' என்று அப்பாவித்தனமாகச் சொன்னது மனதைச் சங்கடப்படுத்தியது. இதையெல்லாம் விட என் மாமா மகனுக்கு நிச்சயித்த பெண் இவனுக்கு துபாய்க்கு தொலைபேசி 'துபாய் மாப்பிள்ளைன்னு சொன்னதும் கல்யாணமாகி நானும் அங்க வரலாம்னு நினைச்சிருந்தேன். உங்க மச்சி பேசுனதப் பார்த்து அந்த ஆசையே போயிடுச்சு. உங்களுக்கெல்லாம் நம்ம நாட்ட பிரிஞ்ச ஏக்கம் இவ்வளவு இருக்குன்னா அங்க இருக்க வேணாம் வந்திடுங்க' என்று சொன்னார்களாம். அதை அவன் என்னிடம் சொல்லும் போது இந்த வருடத்தின் மிகப் பெரிய நகைச்சுவை என்றுதான் சிரிக்க முடிந்தது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுவதை அப்படியே நம்பி விடும் அளவுக்கு இதைக் கேட்கிறவர்கள் முட்டாள்களா, அல்லது அவர்களை முட்டாளாக்க முடிவு செய்து இப்படி வேஷம் போட்ட நாங்கள் முட்டாள்களா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இதைப் போல் எத்தனை பேர் நான் இப்படிப் பேசியதை உண்மையென்று கண்மூடித்தனமாக நம்பி 'உச்சு' கொட்டியிருப்பார்கள், கண்ணீர் வடித்திருப்பார்கள். அதற்கு நானும் காரணமானதை நினைத்து என்னை நானே நொந்துக் கொண்டேன். இந்த மாதம் நடந்த ஜெயா 'மக்கள் அரங்கத்தில்' அதனாலேயே கலந்துக் கொள்ளவில்லை.
அரட்டை அரங்கத்தில் என்னுடன் ஒருவர் 'இலங்கைத் தமிழர்' என்ற முகவுரையோடு ஆரம்பித்துப் பேசினார். ஆனால் அவர் பேச்சு எனக்கு இலங்கைத் தமிழாகத் தெரியவில்லை அதுவும் அவரை முதல் சுற்றில் சாதாரண தமிழில் பேசி பார்த்த நினைவும் இருந்ததால் அவரிடம் நான் கேட்டுக் கொண்டது ஒன்றே ஒன்றுதான் 'நீங்கள் இலங்கைத் தமிழராகப் பேசுங்கள் பிரச்சனையில்லை ஆனால் நீங்கள் பேசுவது மொத்த இலங்கைத் தமிழரின் பிரதிபலிப்பாகட்டும் என்றேன். "மற்றவர்களுக்கெல்லாம் தற்காலிக பிரிவுதான் ஆனால் தாய் மண்ணை மீண்டும் எப்போது பார்ப்போம் என்று தெரியாமல் தவிப்பவர்களின் குரலாக உங்களுடையது ஒலிக்கட்டும்" என்றேன். அவரோ 'நிம்மதி' என்ற தலைப்பிற்குப் பேசினார். இலங்கைத் தமிழராக பேசிய அதே நபர் மக்கள் அரங்கில் சாதாரண தமிழில் பேசி என் சந்தேகத்தை தீர்த்து விட்டார். நாடகத்தில் இது கேடுகெட்ட நாடகம் என்று நினைத்துக் கொண்டேன்.
இந்த அரட்டை அரங்கத்தில் / மக்கள் அரங்கில் எத்தனையோ பேர் பேசுகிறார்கள் ஆனால் ஒருவரும் நடப்பது நாடகம்தான் என்று மற்ற அப்பாவிகளுக்குச் சொல்லாமல் இருப்பது ஏன்? நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களே உண்மையை வெளியில் சொன்னால் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்து அதில் ஏற்படும் பச்சாதாபம் குறையும்தானே? ஒத்திகை பார்த்து அழுதழுது சோகத்தை உள்ளிழுத்துப் பேசுகிறார்கள் சரி, ஆனால் ஒத்திகையில் கேட்டுவிட்ட அதே செய்தியை மீண்டும் நிகழ்ச்சியில் கேட்கும் போது எப்படித்தான் மடை திறந்த வெள்ளமாக டி.ஆருக்கும் சரி விசுவுக்கும் சரி தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறதோ தெரியவில்லை. சத்தியமா 'கிளிசரின்' போடாமல் இவ்வளவு கண்ணீர் வடிப்பதை முதல் முறையா பார்க்கிறேன்.
இந்த நிகழ்ச்சி மக்கள் அரங்கமாக, அரட்டை அரங்கமாக இன்னும் 'சன்', 'ஜெயா'வில் பல வருடங்களாக பல ஊர்களில் நடந்தவையாக ஒளிபரப்பிக் கொண்டிருப்பதற்கு காரணம் நம் மக்கள் இன்னும் முட்டாள்களாக இருப்பதுதான். மக்கள் விழித்துக் கொள்ள என் ஒரு பதிவு மட்டும் போதுமா என்ன?
Tuesday, July 15, 2008
உலகின் முதிய பிளாக்கர் மரணம்
'World's oldest blogger' dies at 108
Posted Mon Jul 14, 2008 1:40pm AEST
Updated Mon Jul 14, 2008 1:54pm AEST
Olive Riley was known as the world's oldest blogger (ABC)
Video: Watch Joe O'Brien's report from Olive Riley's last birthday celebration. (ABC News) Audio: Filmmaker Mike Rubbo on ABC Broken Hill discusses the life of the world's oldest blogger Olive Riley (ABC News)
A filmmaker who made a documentary on the life and times of Olive Riley says he will sorely miss the woman who is known as the world's oldest blogger.
She died in a nursing home on the New South Wales central coast at the weekend, aged 108.
Born in Broken Hill in 1899, Olive Riley returned in 2004 for the filming of the documentary.
Since early last year, she had written about 70 entries on her life experiences and posted them online, receiving feedback from all over the world.
Documentary maker Mike Rubbo says the idea for blogging came from another older friend who had taken it up.
"He suggested that Ollie could blog so we put it to her and explained what a blog was and then I undertook to do all the sort of leg work, it was great fun and it was great too to probe her memory more deeply and you get evermore stories about her past, many of which of course were set in Broken Hill," he said.
http://www.abc.net.au/news/stories/2008/07/14/2303077.htm
Posted Mon Jul 14, 2008 1:40pm AEST
Updated Mon Jul 14, 2008 1:54pm AEST
Olive Riley was known as the world's oldest blogger (ABC)
Video: Watch Joe O'Brien's report from Olive Riley's last birthday celebration. (ABC News) Audio: Filmmaker Mike Rubbo on ABC Broken Hill discusses the life of the world's oldest blogger Olive Riley (ABC News)
A filmmaker who made a documentary on the life and times of Olive Riley says he will sorely miss the woman who is known as the world's oldest blogger.
She died in a nursing home on the New South Wales central coast at the weekend, aged 108.
Born in Broken Hill in 1899, Olive Riley returned in 2004 for the filming of the documentary.
Since early last year, she had written about 70 entries on her life experiences and posted them online, receiving feedback from all over the world.
Documentary maker Mike Rubbo says the idea for blogging came from another older friend who had taken it up.
"He suggested that Ollie could blog so we put it to her and explained what a blog was and then I undertook to do all the sort of leg work, it was great fun and it was great too to probe her memory more deeply and you get evermore stories about her past, many of which of course were set in Broken Hill," he said.
http://www.abc.net.au/news/stories/2008/07/14/2303077.htm
Wednesday, May 7, 2008
சவுதியில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகம்
Subject: Scholarships at Saudi University planned to be a world class
university
Assalamu alaikkum!
Saudi Arabia is setting up a technological university
http://www.kaust. edu.sa
that is scheduled to open in Sept 2009 and is aggressively planning to make it as one of the most leading technological universities in the world, spending 10
billion dollars, which is more than what was spent on MIT.
In order to make it a world class technology institute
it has decided to sponsor 500 students world wide who are
currently doing their engineering degrees. They would sponsor your
existing education tution fees and a stipend at your existing
university in India and fully fund your studies in MS in Saudi along
with a handsome stipend so that it attracts some of the
brightest minds in engineering in the world that could help it in making it
a top class universtiy. It has employing some of the leading
faculties and some Nobel price winners as part of their faculty. It is
completely based on Merit and as part of their first round, no students
from India were selected. Now the second round is scheduled to
close on May 10.
This is an ideal oppurtunity for the bright students to
pursue their
education and expect top class faculty and research
guides and they
will get some of the best jobs in the middle east.
http://www.kaust. edu.sa/students/ discovery-
scholarships. aspx
This is completely based on merit irrespective of
religion or race
and people from all places are welcome to apply.
On the other side: This university would be outside the
Saudi
government islamic rule. Some of them are that this
would be the
first co-ed campus in the kingdom and women would be
allowed to wear
non-traditional dresses.
university
Assalamu alaikkum!
Saudi Arabia is setting up a technological university
http://www.kaust. edu.sa
that is scheduled to open in Sept 2009 and is aggressively planning to make it as one of the most leading technological universities in the world, spending 10
billion dollars, which is more than what was spent on MIT.
In order to make it a world class technology institute
it has decided to sponsor 500 students world wide who are
currently doing their engineering degrees. They would sponsor your
existing education tution fees and a stipend at your existing
university in India and fully fund your studies in MS in Saudi along
with a handsome stipend so that it attracts some of the
brightest minds in engineering in the world that could help it in making it
a top class universtiy. It has employing some of the leading
faculties and some Nobel price winners as part of their faculty. It is
completely based on Merit and as part of their first round, no students
from India were selected. Now the second round is scheduled to
close on May 10.
This is an ideal oppurtunity for the bright students to
pursue their
education and expect top class faculty and research
guides and they
will get some of the best jobs in the middle east.
http://www.kaust. edu.sa/students/ discovery-
scholarships. aspx
This is completely based on merit irrespective of
religion or race
and people from all places are welcome to apply.
On the other side: This university would be outside the
Saudi
government islamic rule. Some of them are that this
would be the
first co-ed campus in the kingdom and women would be
allowed to wear
non-traditional dresses.
Monday, February 25, 2008
“ கவி ஞானி காயல் பிறைக்கொடியான் புகழ் நிலைக்கும் "
“ கவி ஞானி காயல் பிறைக்கொடியான் புகழ் நிலைக்கும் "
கவிக் கொண்டல் என்றும்
பிறைக் கொடியான் என்றும்
விருது பெற்று அல்லாஹ்வின்
ஏற்ற மிகு நல்லடியாராய் வாழ்ந்தவர்!!!
வரகவி காஸிம் புலவரின்
வழித்தோன்றலாய் வளமோடு பல
பாக்களையும், எழுpல் முத்துக்களையும் தந்த
மஹ்மூது ஹ}ஸைன் என்ற மூத்த கவிஞர்; அவா.;!!!
சாகித்திய அகாதமி
விருது பெறா சாதனையாளர்
சாமானியர்களுக்கம் எளிதாக
புரியும்படி எழுதியவர் !!!
கதை, கட்டுரை கடிதம் வாழ்த்து
என பல் திறமை வித்தகர்
கடுமையான உழைப்பால்
கவிச்சிகரம் சென்றவர் !!!
ஏழைகளின் இன்னலை
கவிதைகளில் வடித்தவர்
ஏழைகளோடு ஏழையாய்
கடைசி வரை வாழ்ந்தவர் !!!
எளிமையின் சின்னமாய்
எனறென்றும் இருந்தவர்
ஏற்ற தாழ்வுகளை உயர்ந்த
கவிதையால் சாடியவர். !!!
தாய்ச்சiபாயாம் லீக்கிற்கு
தாரக மந்திரமாய் இருந்தவர்
வாய் பேசா மகனுக்கு உற்ற
தந்தையாய் விளங்கியவர். !!!
பச்கை; கொடிக்கு
பசுமை முலாம் பூசியவர்
இச்சை இளைஞர்களை
கச்சிதமாய் நெறி படுத்தியவர். !!!
சிற்றிதழ்களின் இராஜாவாக
சிம்மாசனம் இட்டவர் பல முறை
அழைப்பு வந்தும்
'அம்மாசனம்" போகாதவர் !!!
கருப்பு , வெள்ளை சிகப்பு வண்ணங்கள்
ஆல் வட்டம் அடித்தபோது
பச்சை பிறைக் கொடியை பற்றி பிடித்த
பாசமிகும் மறவர் அவர் !!!
வாழ்த்துரை கேட்டால் வாகாய் தருபவர்
வாழும் தலைமுறை மூன்றை
வளமாய் பெற்று சீரிய எழுத்தால்
காயலர் தம் இதயத்தில் நிலைத்தவர் !!!
கர்வம் என்றால்
என்னவென்று அறியாதவர்
கனிவான பேச்சால்
குழந்தைகளை வென்றவர். !!!
மயிலிறகு வருடுவது போல்
விமர்சனம் செய்தவர்
மனது புண்படும்படி என்றும்
விமர்சனம் அறியாதவர். !!!
வாழ்ந் நாட்களில் ஆசை அறவே அற்ற
நவீன கவிஞர் அவர்
ஆழ்ந்த அன்பில், பண்பில்
காயலர் இதயத்தை கவர்ந்தவர். !!!
பணம்,பதவி, புகழ் விரும்பாத
கவி ஞானியே
பாடகர் பலர் உயர்ந்திட காரணமாய்
இருந்த ஏணியே. !!!
உலகம் உள்ள வரை
கவிதை இருக்கும்
கவிதை உள்ள வரை நம்
காயல் பிறைக் கொடியான்
SMB-ன் பகழ் நிலைக்கும்
கவிதையாக்கம் : யு.சு. ரிபாயி.
ஜித்தா
arrefaye@yahoo.com
கவிக் கொண்டல் என்றும்
பிறைக் கொடியான் என்றும்
விருது பெற்று அல்லாஹ்வின்
ஏற்ற மிகு நல்லடியாராய் வாழ்ந்தவர்!!!
வரகவி காஸிம் புலவரின்
வழித்தோன்றலாய் வளமோடு பல
பாக்களையும், எழுpல் முத்துக்களையும் தந்த
மஹ்மூது ஹ}ஸைன் என்ற மூத்த கவிஞர்; அவா.;!!!
சாகித்திய அகாதமி
விருது பெறா சாதனையாளர்
சாமானியர்களுக்கம் எளிதாக
புரியும்படி எழுதியவர் !!!
கதை, கட்டுரை கடிதம் வாழ்த்து
என பல் திறமை வித்தகர்
கடுமையான உழைப்பால்
கவிச்சிகரம் சென்றவர் !!!
ஏழைகளின் இன்னலை
கவிதைகளில் வடித்தவர்
ஏழைகளோடு ஏழையாய்
கடைசி வரை வாழ்ந்தவர் !!!
எளிமையின் சின்னமாய்
எனறென்றும் இருந்தவர்
ஏற்ற தாழ்வுகளை உயர்ந்த
கவிதையால் சாடியவர். !!!
தாய்ச்சiபாயாம் லீக்கிற்கு
தாரக மந்திரமாய் இருந்தவர்
வாய் பேசா மகனுக்கு உற்ற
தந்தையாய் விளங்கியவர். !!!
பச்கை; கொடிக்கு
பசுமை முலாம் பூசியவர்
இச்சை இளைஞர்களை
கச்சிதமாய் நெறி படுத்தியவர். !!!
சிற்றிதழ்களின் இராஜாவாக
சிம்மாசனம் இட்டவர் பல முறை
அழைப்பு வந்தும்
'அம்மாசனம்" போகாதவர் !!!
கருப்பு , வெள்ளை சிகப்பு வண்ணங்கள்
ஆல் வட்டம் அடித்தபோது
பச்சை பிறைக் கொடியை பற்றி பிடித்த
பாசமிகும் மறவர் அவர் !!!
வாழ்த்துரை கேட்டால் வாகாய் தருபவர்
வாழும் தலைமுறை மூன்றை
வளமாய் பெற்று சீரிய எழுத்தால்
காயலர் தம் இதயத்தில் நிலைத்தவர் !!!
கர்வம் என்றால்
என்னவென்று அறியாதவர்
கனிவான பேச்சால்
குழந்தைகளை வென்றவர். !!!
மயிலிறகு வருடுவது போல்
விமர்சனம் செய்தவர்
மனது புண்படும்படி என்றும்
விமர்சனம் அறியாதவர். !!!
வாழ்ந் நாட்களில் ஆசை அறவே அற்ற
நவீன கவிஞர் அவர்
ஆழ்ந்த அன்பில், பண்பில்
காயலர் இதயத்தை கவர்ந்தவர். !!!
பணம்,பதவி, புகழ் விரும்பாத
கவி ஞானியே
பாடகர் பலர் உயர்ந்திட காரணமாய்
இருந்த ஏணியே. !!!
உலகம் உள்ள வரை
கவிதை இருக்கும்
கவிதை உள்ள வரை நம்
காயல் பிறைக் கொடியான்
SMB-ன் பகழ் நிலைக்கும்
கவிதையாக்கம் : யு.சு. ரிபாயி.
ஜித்தா
arrefaye@yahoo.com
Subscribe to:
Posts (Atom)