Thursday, February 12, 2009

DTP இன் அவ‌சிய‌ம்

DTP இன் அவ‌சிய‌ம் ப‌ற்றி எனது ந‌ண்ப‌ர் த‌மீம் அன்சாரி எழுதிய‌தை இங்கு பார்க்க‌லாம்.
நண்பர் அபூபக்கரின் வேண்டுகோளுக்கிணங்க எனக்குத் தெரிந்த சில விஷயங்களை நான் இங்கே தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இன்றைய சூழலில் சிட்டியில் எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் DTP சென்டர்கள் கண்டிப்பாக இருக்கிறது. இன்னும் பல பேருக்கு அது பெரிதும் உதவுகிறது. ஒவ்வொரு வியாபரத்தின் நுழைவாயிலும் இதுதான். இதனால் நமக்கு கிடைக்ககூடிய பயன்கள் பல, அ வைகளாவன‌ …
1. லெட்டர் பேட் தயாரிப்பது.
2. விசிட்டிங் கார்ட் தயாரிப்பது.
3. பில்புக் தயாரிப்பது.
4. பிட் நோட்டிஸ் அடிப்பது.
5. பேனர்கள் தயாரிப்பது.
6. ரப்பர் ஸ்டாம்ப் டிசைன் செய்வது,
7. போட்டோக்களில் மாற்றங்கள் செய்வது.
என அடுக்கிக்கொண்டே போகலாம். இதனை முறையாக கற்றுக்கொண்டால் இந்த துறையில் சிறந்தவராக‌ ஆக முடியும். அதற்கு தங்களிடத்தில் முழுமையான ஆர்வமும் அதற்குரிய முயற்சியும் இருந்தால் போதும். எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக்கொள்ளவும் நம்மிடத்தில் வெட்கம், பெருமை, பொறாமை , அலுப்பு ஆகியவைகள் இருக்க கூடாது என்பார்கள்.
நான் பார்த்த வரையில் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள கடுமையான பயிற்சியிம் அவசியம். நாம் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டால் அதனை உடனே செய்து பார்க்க வேண்டும். பிறகு செய்யலாம் என்று நினைத்தால் அந்த ‘பிறகு’ எப்பொழுது என்றே தெரியாமல் போய்விடும்.
கணிப்பொறி துறையை பொறுத்த வரையில் பொதுவான ஒரு IDEA வும், ஆங்கில அறிவும் இருந்தால் போதுமானது. அதாவது தாங்களுக்கு என்ன தேவை என்பதை ஆங்கிலத்தில் மாற்றம் செய்து பார்த்தால் அது குறிப்பிட்ட மெனுவில் கிடைக்கும். அதை போல் இந்த டிடிபி துறையில் வேகமும், நுண்ணிய வேகமும் இருக்க வேண்டும். இதை பெற வேண்டுமானல் பயற்சி அவசியம்.
நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன வென்றால் நமக்கு தேவையான option எதில் இருக்கிறது, அதை எப்படி பயன்படுத்துவது என்பதுதான். அதைத்தான் நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
DTP - DESK TOP PUBLISHING:
DTP என்றால் என்ன‌? அத‌ன் கோர்வைக‌ள் என்ன‌? அத‌ன் ப‌ய‌ன்பாடுக‌ள் என்ன‌? அதை எங்கு/எப்ப‌டி ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து ?

DESK TOP PUBLISHING. என்பதின் சுறுக்கமே DTP, முந்தைய காலத்தில் பிரிண்டிங் சம்பந்தமான வேலைகளை கையினால் அச்சு கோர்த்து செய்துவந்தனர். அதனை நவீன படுத்தும் வகையில் மாறிவரும் கணிப்பொறி காலத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த DTP , இது மூன்று மென்பொருள்கள் உள்ளடக்கியது ஆகும். முதலில் அதன் பயன்களை காண்போம்.
பயன்கள்:
1. லெட்டர் தலைகள் தயாரிப்பது,
2. பில்புக்குகள் தயாரிப்பது.
3. பிட் நோட்டிஸ் தயாரிப்பது.
4. வால் நோட்டிஸ் தயாரிப்பது.
5. பேனர்கள் தயாரிப்பது.
6. ரப்பர் ஸ்டாம்புகள் வடிவமைப்பது.
7. போட்டோக்களில் மாற்றங்கள் செய்யலாம்.
8. மாதிரிப்படிவங்கள் உருவாக்குவது. .
9. LOGO உருவாக்குவது, (நிறுவனத்தின் குறியீடு)
10. விசிட்டிங் கார்டுகள். (அறிமுக அல்லது முகவரிச்சீட்டு)
11.காலன்டர்கள் தயாரிப்பது. ( நாள்காட்டி)
12. டைரிகள், புத்தகங்கள் உருவாக்குவது.
12. குடும்ப/ நண்பர்கள் திருமண அழைப்பு பத்திரிக்கைகள் தயாரிப்பது..
DTP யை வியாப‌ர‌ங்க‌ளின் விள‌ம்ப‌ர‌த்திற்காக‌வும், க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ளின் புராஜெக்ட் வொர்க் போன்ற‌வைகளுக்காக‌வும், அலுவ‌ல‌க‌ங்க‌ளில் மாதிரிப்ப‌டிவ‌ம், வார‌,மாத‌, நாள் இத‌ழ் போன்ற‌ ப‌த்திரிக்கைக‌ளுக்காக‌வும், பேக்குக‌ள், துணிக‌ள் போன்ற‌வ‌ற்றிற்கு டிசைன் செய்வ‌த‌ற்காக‌வும், இன்னும் ப‌ல‌ ந‌ல்ல‌ விச‌ய‌ங்க‌ளுக்காக‌ ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டும்.
DTP யின் அட‌ங்கிய‌ மென்பொருட்க‌ள்:
பெரும்பான்மையான‌ இட‌ங்க‌ளில் DTP என்றால் மூன்று மென்பொருட்க‌ளை ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டுத்துகிறார்க‌ள்.
1.ADOBE PAGEMAKER
2.COREL DRAW
3.ADOBE PHOTOSHOP
இந்த‌ மூன்று மென்பொருட்க‌ள் மூல‌ம், மேலே சொன்ன‌ அனைத்து வேலைகளையும் முடித்து விட‌லாம்.
1.ADOPE PAGEMAKER :
இந்த‌ மென்பொருள் மூல‌ம் BOOKS, VISITING CARDS, BILL BOOK , NOTICE , FORMS, INVITATION போன்ற‌ வேலைக‌ளை சுல‌ப‌மாக‌ செய்ய‌லாம்.
2. COREL DRAW:
இந்த‌‌ மென்பொருள் மூல‌ம் அனைத்துவ‌கையான‌ ம‌ல்டி க‌ல‌ர் வேலைக‌ளும், ர‌ப்ப‌ர் ஸ்டாம்ப் டிசைன்க‌ளும், பேக்குக‌ள்,பைக‌க‌ள் போன்ற‌வ‌ற்றின் டிசைன்க‌ள் ம‌ற்றும் லோகோக்க‌ள்(LOGO) த‌யாரிக்க‌லாம்.
3. PHOTOSHOP:
இத‌ன் மூல‌ம் புகைப்ப‌ட‌ங்க‌ளில் என்னென்ன‌ மாற்ற‌ங்க‌ள் தேவையோ அனைத்தையும் செய்ய‌லாம். பேனர்க‌ள் டிசைன், புத்த‌க‌ங்க‌ளில் முன்ப‌க்க‌ம் டிசைன், இன்னும் ப‌ல‌ வ‌கையான‌ வேலைக‌ளையும் செய்ய‌லாம்.

முதலாவதாக நாம் Adobe Pagemaker பற்றிய மென்பொருளைப்பற்றி தெரிந்து கொள்வோம்.

படம்-1
(1) Adobe Pagemaker என்பது Adobe நிறுவனத்தின் ஒரு மென்பொருளாகும் இதன் மூலம் நாம் பெறக்கூடிய பயன்களை முந்தைய பதிவில் கண்டோம். இந்த மென்பொருளைப் பொறுத்த வரையில் பேப்பர் அளவுகள், மார்ஜின் அளவுகள், கார்டு அளவுகள் என்று அனைத்து அளவுகளையும் நாம் அறிந்திருப்பது மிக அவசியம். அப்படித் தெரிந்திருந்தால் மட்டுமே அனைத்தையும் வேகமாகவும், சுலபமாகவும் செய்துமுடித்துவிட முடியும்.
வழக்கம்போல நாம் அறிந்த Start–>Program–>Adobe–>Pagemaker முறையில் இதனை துவக்க வேண்டும். பிறகு படம்‍‍-1 மற்றும் படம்-2 ‍ல் உள்ளபடி முகப்பைக் காணலாம்.

படம்-2
நாம் புதியதாய் ஒரு கோப்பை உருவாக்க

படம்-3
படம்-3 ல் உள்ளது போல் New என்பதை தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்தால் படம்-4 ல் உள்ளதுபோல் உங்கள் திரையில் காண்பீர்கள்.
பொதுவாக நாம் மற்ற மென்பொருளைப் பொறுத்த வரையில் ஒரு புதிய பக்கத்தை திறந்த பிறகுதான் அதற்குரிய Margins மற்றும் இதர settings-களை செய்வோம். ஆனால் Page maker-ஐ பொறுத்த வரையில் முதலில் நாம், நமக்குத்தேவையான பக்க அளவுகளை நிர்ணயித்து விட்டுத்தான் உள்ளே நுழைய முடியும்.

படம்-4
படம்-4 ல் தாங்கள் காண்பது: அதில்
இடது புறம் காட்சியளிப்பது = Text box,
நடுப்பகுதியில் காட்சியளிப்பது = Document Setup Windows ,
கீழே காட்சியளிப்பது = Control/properties box.
முதலில் Document Setup Window யைப்பற்றி காண்போம். இதில் முதலில் Page size என்னவென்று தேர்வு செய்யவேண்டும். பெரும்பாலும் நடைமுறையில் இருப்பது Letter size, A4 Size, A3 Size, Legal Size, A5 Size, Envelope Size ஆகும்,
இதில் தங்களுக்குத்தேவையான அளவை தேர்வு செய்யவேண்டும். உதராணமாக: A4 Size ஐ எடுத்துக்கொள்வோம். தாங்கள் தேர்வு செய்தவுடன் Page sizஎ க்கும் கீழே Dimensionச் ல் அதற்குரிய அளவுகளைக்காணலாம். தங்களுக்கு வேறு அளவுகள் தேவையெனில் Dimensions ல் அதற்குரிய அளவுகளைக் கொடுக்க வேண்டும். அப்படித்தறும் போது Pagesize ல் Custom Size என்று தானாகவே மாறிக்கொள்ளும்.
அடுத்து Orientation என்பது தங்களுக்கு தெரிந்தவையே. Potrait/Tall-ல் ‍ செங்குத்தாக, Landscape/Wide -படுக்கை முறையில், பேப்பரை தேர்வு செய்வதற்காக உள்ளது.
அடுத்து option-ல் த‌ங்க‌ளுக்கு ப‌க்க‌ங்க‌ள் அடுத்த‌டுத்து தேவை என்றால் Double Sided என்ப‌தை தேர்வு செய்ய‌வேண்டும். தேவையில்லை என்றால் தேர்வு செய்யாம‌ல் விட்டுவிட‌லாம். இதைப்ப‌ற்றி பின்னால் விரிவாக‌ பார்க்க‌ இருக்கிறோம். த‌ற்பொழுது அதை தேர்வு செய்யாம‌ல் விட்டு விடுவோம்.
அடுத்த‌தாக‌ த‌ங்க‌ளுக்கு எத்த‌னை ப‌க்க‌ங்க‌ள் தேவை அவை எந்த‌ எண்ணிலிருந்து ஆர‌ம்பிக்க‌ வேண்டும் என்ப‌தை Number of Pages & Start Page No என்ப‌தை கொடுக்க‌ வேண்டும்.
அடுத்து Margin ல் (ப‌க்க‌த்தை ஒழுங்குப்ப‌டடுத்தும் வித‌மாக‌ இட‌து, வ‌ல‌து, மேல் ம‌ற்றும் கீழ் ப‌குதிக‌ளில் சிறிது இடைவெளி விடுவ‌தைத்தான் Margin என்கிறோம்.) தாங்க‌ளுக்கு தேவையான‌ இடைவெளிக‌ளை இங்கே கொடுக்க‌வேண்டும். (இத‌னை Millimeter ம‌ற்றும் Inch என்று எதுவாக‌ வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள‌ முடியும், எப்ப‌டி என்ப‌தை பிற‌கு காண்போம்.)
அடுத்து Target Output Resolution என்பது அச்சின் த‌ர‌த்தினை குறிக்கிற‌து. இதில் உங்க‌ளுக்கு தேவையான‌ அள‌வை கொடுக்க‌வேன்டும். (300 Resolution ஏதுவாக‌ இருக்கும்).
Compose to Printer என்ப‌தில் த‌ங்க‌ளிட‌ம் ப‌ல‌ வ‌கையான‌ Printer‍க‌ள் இருந்தால், அதில் எது தேவையோ அதை ம‌ட்டும் தேர்வு செய்து கொடுக்க‌லாம்.
பிறகு OK கொடுக்க‌ வேண்டும். இப்ப‌டி அனைத்தையும் தேர்வு செய்த‌ பின்ன‌ர்தான் புதிய‌ கோப்பினை திற‌க்க‌ முடியும். கோப்பினை திறந்தவுடன்.

படம்-5
பட‌ம் 5 ல் உள்ள‌து போல் உங்க‌ள் திரையில் காண‌லாம்…. (தொட‌ர்ச்சி அடுத்த‌ ப‌குதியில்)
குறிப்பு: “சமூக‌ சேவை” என்ப‌த‌ன் நோக்க‌த்தில் அலுவல்களுக்கு மத்தியில் கிடைத்த நேரத்தை பயன்படுத்திகிறோம். ஆதனால் தாமதமாக கட்டுரை எழுத வேண்டி உள்ளது., இக்க‌ட்டுரையைப்ப‌ற்றிய‌ உங்க‌ள‌து மேலான‌ க‌ருத்துக்க‌ளை எதிர்ப்பார்க்கிறோம்….

THANKS : ADIRAIABU

உருது மொழியின் உன்னதக் கவிஞர் - கைஃபி ஆஜ்மி (1918-2002)

உருது மொழியின் உன்னதக் கவிஞர் - கைஃபி ஆஜ்மி (1918-2002)
தமிழில்: ஆனந்த செல்வி


கைஃபி ஆஜ்மி உத்திரப் பிரதேச மாவட்டம் அஜாம்காட்டில் 1918ம் ஆண்டு ஒரு ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சையத் அக்தர் ஹூசைன் ரிஜ்வி ஆகும். கைஃபி தனது பதினோறாவது வயதில் "இத்னா தோ ஜிந்தகி மெய்ன் கிஸி கி கலால் படே"' என்ற கஜலை எழுதினார். இந்தக் கஜலைப் பாடி அதற்கு உயிர் கொடுத்தவர் பிரபல பாடகி பேகம் அக்தர். இந்தக் கஜல் இன்னமும் பாடப்பட்டு வருகிறது.

கைஃபி தனது 19வது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். மேலும் அலி சர்தார் ஜப்ரியுடன் சேர்ந்து கட்சிக்காக "குவாமி ஜங்'' என்ற பத்திரிக்கைக்கு எழுதி வந்தார். இந்தக் காலக்கட்டத்தில் மும்பைக்கு வந்தார்.

கைஃபி தனது தோழர்கள் பைஃஜ் மற்றும் மக்தூம் ஆகியோருடன் சேர்ந்து நவீன உருது கவிதையில் புரட்சியை உண்டாக்கினார். உலகம் முழுவதுமுள்ள உருது மொழிப் பிரியர்களுக்கு மூன்று தலைமுறைக்கான கவிதைகளை எழுதியுள்ளார். இவர்களின் கவிதைகள் இன்பியல் மற்றும் மக்கள் பிரச்சனை குறித்ததாக அமைந்தது. கைஃபியின் முதல் கவிதைத் தொகுதியான "ஜான்கார்'' 1943ம் ஆண்டு வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆவாரா சஜ்தே', ஆகீர் ஷாப், கைஃபியாத்', கைஃபி ஆஜ்மியின் தேர்ந்தெடுத்தக் கவிதைகள் மற்றும் ஸர்மாயா' ஆகியத் தொகுதிகளும் வெளிவந்தன.

கைஃபியின் கவிதைகள் காகிதப் பக்கங்களை அலங்கரிக்கும் அடுக்குச் சொற்களாக இல்லாமல் அவை சமூக மாற்றத்திற்கான கருவியாக இருந்தது. தனது இளைய பருவத்தில் வர்த்தக யூனியனில் இருந்தவர் பின் சமூக மாற்றம் விரும்பிய மனிதனாக தீவிரமாக செயல்பட்டார்.

இவர் சமூகத்தில் மாற்றத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்படியாக கவிதைகளை எழுதினார். மதம், ஜாதியம், சமூகத்தில் நிலவிய ஏற்றத் தாழ்வுகள் மற்றும் பெண் விடுதலை மற்றும் உரிமை குறித்து மிக தைரியமாக கவிதைகளை எழுதினார்.

மேலும் இவர் உருது பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைகள் நபி குலிஸ்தான்' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. மேலும் இவரின் திரைப்படப் பாடல்கள் மேரி ஆவாஜ் சுனோ' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. மற்றும் இவர் எழுதிய திரைக்கதை வசனங்களும் புத்தகமாக வந்துள்ளது.

இந்திய விடுதலைக்குப் பிறகு கவிஞர்கள் மற்றும் கதாசிரியர்கள் பிழைப்புக்காக மும்பை நகரில் தஞ்சம் புகுந்தனர். 19551975 காலகட்டம் இந்தி திரைப்படப் பாடல்கள் மற்றும் வசனங்களில் மாபெரும் மாற்றத்தையும் புதுமைகளையும் படைத்த காலங்கள். புதிய அலை திரைப்பட இயக்குனர்கள் வழக்கமான காதல் கதைகளைத் தவிர்த்து சமூக அக்கறையுள்ள படங்களை இயக்கினார்கள். கைஃபி ஆஜ்மி 1952ல் ஷாஹித் லதிஃப் இயக்கிய புஜ்திலி' என்ற படத்திற்கு பாடல் எழுதி தனது திரைப்பட பாடலாசிரியர் கணக்கைத் துவங்கினார். இதனைத் தொடர்ந்து பலத் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். இதில் ஷமா, காகஜ் கே பூல், ஷோலா அவுர் ஷப்னம், அனுபமா, ஆக்ரி கத், ஹஷ்தே ஹக்ம், ஆர்த் ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கன.

இயக்குனர் சேத்தன் ஆனந்த் இயக்கிய ஹீர் ரான்ஜா' காதல் காவியத்தில் பாடல்கள் மற்றும் வசனப் பொறுப்பை ஏற்றார். இப்படத்தின் கவித்துவமான வசனத்திற்காக அப்படம் தேசிய விருதைப் பெற்றது. மேலும் எம் எஸ் சத்யுவின் கரம் ஹவா படத்திற்காக பிலிம்ஃபேர் விருதையும் பெற்றார். பிரபல இயக்குனர் ஷாயித் மிர்ஜாவின் விருது பெற்ற நசீம் படத்தில் கைஃபி நடிக்கவும் செய்தார்.

தனது இறுதி காலம் வரை இலக்கிய நிகழ்வுகள், நாடக அரங்குகள் மற்றும் கவிதை அரங்குகள் என அயராது ஓடினார். ஒரு கவிஞர் தன் கவிதையை வாசிக்கையில் கேட்பது அலாதி இன்பம். கைஃபி தனது கரகரப்பான குரலால் கவிதை வாசிப்பதற்கு ஈடு எதுவுமில்லை.

இந்தியாவில் அதிகம் விருது பெற்ற உருது கவிஞர் இவரே ஆவார். சாகித்திய அகடமி பெல்லோசிப் பெற்ற முதல் உருது கவிஞர் இவர்தான். மேலும் இந்திய அரசாங்கம் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. மேலும் மகாராஷ்டிர கவுரவ் விருது, யுவ பாரதிய விருது, டெல்லி அரசு விருது மற்றும் சர்வ தேசிய விருதான ஆப்ரோஆசிய எழுத்தாளர்களின் லோடஸ் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும் சாந்தி நிகேதனின் விஸ்வ பாரதி பல்கலைக் கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இந்தியன் பியுபில்ஸ் தியேட்டர் அசோசியேஷன் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் அமைப்பின் தலைமைப் பொறுப்புகளையும் வகித்தார். கைஃபி தன்னை நாடக உலகில் ஈடுபடுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாது, இளைய சமுதாயத்தில் நாடகத்தின்பால் ஒரு ஈர்ப்பையும் ஈடுபாட்டையும் உண்டாக்கினார்.

இறுதி காலத்தை தான் பிறந்த கிராமத்தில் கழித்தார். இங்கு இவர் மூன்று பள்ளிக்கூடங்கள், பிரசவ மருத்துவமனை மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை உண்டாக்கி மக்களுக்கு சேவை செய்ததோடு மட்டுமல்லாமல் தனது கிராமத்தை நவீன கிராமமாக மாற்றி உள்ளார்.

கைஃபியின் நினைவாக உத்திரப் பிரதேச மாநிலத்தில் நெடுஞ்சாலை ஒன்றிற்கு கைஃபி ஆஜ்மி ஹைவே என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் டெல்லியிலிருந்து அஜாம்காட் செல்லும் ரயிலுக்கு கைஃபியாத் என்று பெயரிடப்பட்டுள்ளது. மும்பையின் ஜூகு பகுதியில் கைஃபி பார்க் என்று ஒரு பூங்காவுக்கு பெயரிடப்பட்டுள்ளது. மேலும் பூர்வாஞ்சல் பல்கலைக் கழகத்தின் கைஃபி ஆஜ்மி மீடியா சென்டர் என்ற பெயரிலும் உ.பி. மாநிலம் லக்னவில் கைஃபி ஆஜ்மி அகடமி என்ற பெயரிலும் கல்விப் பிரிவு ஏற்படுத்தியுள்ளது.

கைஃபி அவர்களிடம் இருந்த ஊக்கமும், எந்நிலையிலும் தளராத மனமும் கடுமையான உழைப்பும் பிரமிக்கக்கூடியது. அவர் சோர்ந்து இருந்ததாக யாரும் கண்டிருக்கவில்லை. உருது மொழியில் ஆளுமையின் பிரவாகமாக கவிதை படைக்கும் திறனும் இவருக்கு வாய்த்தது போல் யாருக்கும் வாய்க்காது. தனது கவிதைகளை வாசித்து சுகம் காணும் ரகமாக இருக்கக் கூடாத எனவும் எவை மக்களைச் சிந்திக்கவும் அவர்கள் தங்களை மாற்றத்திற்கு உட்படுத்திக் கொள்ளவும் பயனுள்ளதாக அமைய வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளார்.

தோளில் கனக்கிறது கடந்த காலம்

பண்பாட்டின் வெற்றியா இல்லை தோல்வியா
தோளில் கனக்கிறதின்னுமென் கடந்த காலம்
இன்றும் ஓடிப்போய் அனைத்துக் கொள்கிறேனதனை
எனது மார்பில் உயிர்த்து செழிக்கிறதொரு ஆரண்யம்
முன்மண்டையில் முளைக்கிறது கொம்புகள்.

கடந்த காலத்தின் நிழல் படர்ந்து கொண்டிருக்கிறதென் மேல்
குருதியிலான யுகத்தினை கடந்துள்ளேன் மறைப்பதெப்படி
குருதியில் மூழ்கியபடி தெரிகிறது எனது பற்கள்

யாரையெல்லாம் நாம் விரும்பவோ வெறுக்கவோ இல்லையோ
அவர்களைத் தாக்குகிறேன்
அவர்களை வேட்டையாடுகிறேன்
இப்படியாக என் பிறவியை பூசி நிறைகின்றேன்

உடலென்பது வெறும் வயிறுதான், மனதில்லை, இதயமில்லை
கையில் விளக்குடன் எத்தனை அவதாரங்கள் போய்விட்டது
கடந்தகாலக் கறையைக் கழுவ இயலாது பார்த்துக்
கொண்டிருக்கிறோம்

பண்பாட்டின் பொடியை நெற்றியில் பூசிக் கொண்டோம் ஆனாலும்
மிருகத்தனத்தின் கறை இன்னும் அழியவே இல்லை
ஊரை வெறுமையாக்கி நகரத்தை உருவாக்கினோம்
காடுகளுடனான நம்முறவு இன்னும் அறுந்து போகவில்லை

வீடு

இன்று இரவு கடுமையான சுடுகாற்று வீசுகிறது
இன்று இரவு நடைபாதையில் தூக்கம் வராது
எல்லோரும் எழுங்கள், நானும் நீங்களும் எழுவோம், நீயும் எழு,
இந்த சுவற்றிலேயே ஒரு ஜன்னல் திறக்கக் கூடும்

இந்நிலையிலும் நம்மை விழுங்கவே காத்திருக்கிறது பூமி
முறிகின்ற கிளைகளிலிருந்து கால்கள் இறங்குகையில்
இந்த வீட்டிற்கும் தெரியாது அதில் வசிப்பவருக்கும் தெரியாது
குகைகளில் கழிந்த நம்முடைய நாட்கள் பற்றி

அச்சில் அமிழ்ந்து போகும் கைகள் கலைப்பதில்லை
சிலைகளுக்குப் பின் புதுச் சிலைகளை உருவாக்கினோம்
சுவரை வலிமையாக, மேலும் வலிமையாக இன்னும் வலிமையாக்கினோம்
கூறையை அழககாக்கினோம், கதவுகள் அமைத்து பலமாக்கினோம்

எளிமையாய் ஜ்வாலையை பறித்துப் போகிறது கடுவளி
மின்சார விண்மீன்கள் கொண்டு வெளிச்சமாக்குவோம் வானை
மாளிகை கட்டப்பட்டு விட்டதும், காவலுக்கு அமைகிறார் ஒருவர்
சில்லுகள் மேலும் கட்டுமான பெருஞ்சத்தத்திலும் தூங்கிப் போனோம்

நாளங்கள் அனைத்திலும் உழைப்பின் வலி தாங்கினோம்
மூடிய கண்களில் இந்த மாளிகையின் ஓவியம் பெற்று
இப்படித்தான் நாளென்பது உருகுகிறதெங்கள் தலைமேல் இதுவரை
இப்படித்தான் கழிகிறது தூங்காத எங்கள் இரவுகள்

இன்று இரவு கடுமையான சுடுகாற்று வீசுகிறது
இன்று இரவு நடைபாதையில் தூக்கம் வராது
எல்லோரும் எழுங்கள், நானும் நீங்களும் எழுவோம், நீயும் எழு,
இந்த சுவற்றிலேயே ஒரு ஜன்னல் திறக்கக் கூடும்

தமிழில்: ஆனந்த செல்வி
http://www.keetru.com/ani/may08/anandhaselvi_1.php

IBN KATHIR'S TAFSIR OF THE HOLY QUR'AN

IBN KATHIR'S TAFSIR OF THE HOLY QUR'AN
Read Ibn Kathir's Tafsir online in your browser (FREE FOR NOW):
(Please write a review if you can)
10 Volumes (each volume contains 3 parts of the 30 parts of the Glorious Qur'an):

Volume 1: Parts 1 -3
Introduction to Surah 1: Al-Fatihah (The Opening)
Surah 1: Al-Fatihah (The Opening), Verses 1-7
Introduction to Surah 2: Al-Baqarah (The Cow)
Surah 2: Al-Baqarah (The Cow), Verses 1-286
Introduction to Surah 3: Al-i-'Imran (The Family Of 'Imran)
Surah 3: Al-i-'Imran (The Family Of 'Imran), Verses 1-91

Volume 2: Parts 4 -6
Surah 3: Al-i-'Imran (The Family Of 'Imran), Verses 92-200
Introduction to Surah 4: An-Nisa (The Women)
Surah 4: An-Nisa (The Women), Verses 1-176
Introduction to Surah 5: Al-Ma'ida (The Table Spread)
Surah 5: Al-Ma'ida (The Table Spread), Verses 1-82

Volume 3: Parts 7 -9
Surah 5: Al-Ma'ida (The Table Spread), Verses 83-120
Introduction to Surah 6: Al-An'am (Cattle, Livestock)
Surah 6: Al-An'am (Cattle, Livestock), Verses 1 - 165
Introduction to Surah 7: Al-A'raf (The Heights)
Surah 7: Al-A'raf (The Heights), Verses 1 - 206
Introduction to Surah 8: Al-Anfal (Spoils Of War, Booty)
Surah 8: Al-Anfal (Spoils Of War, Booty), Verses 1-40

Volume 4 to 10: Coming very soon

Our Mission
Our mission is to gather in one place, for the English-speaking public, all relevant information needed to make the Qur'an more understandable and easier to study. This book tries to do this by providing the following:
The Arabic Text for those who are able to read Arabic
Transliteration of the Arabic text for those who are unable to read the Arabic script. This will give them a sample of the sound of the Qur'an, which they could not otherwise comprehend from reading the English meaning.
The meaning of the qur'an (translated by Dr. Muhammad Taqi-ud-Din Al-Hilali, Ph.D. and Dr. Muhammad Muhsin Khan)
Background introductions by two famous Islamic scholars, Maududi and Ibn Kathir
Explanation ( abridged Tafsir) by Ibn Kathir (translated by Safi-ur-Rahman al-Mubarakpuri)
We hope that by doing this an ordinary English-speaker will be able to pick up a copy of this book and study and comprehend The Glorious Qur'an in a way that is acceptable to the understanding of the Rightly-guided Muslim Ummah (Community).

Read Ibn Kathir's Tafsir online in your browser for FREE:
10 Volumes (each volume contains 3 parts of the 30 parts of the Glorious Qur'an):
Volume 1: Parts 1 -3 (Please write a review if you can)
Volume 2: Parts 4 -6 (Please write a review if you can)
Volume 3: Parts 7 -9 (Please write a review if you can)
Volume 4 to 10: Coming very soon

http://books.google.com/books?id=VrR-CcESLrsC&printsec=frontcover&source=gbs_summary_s&cad=0

An evening with Dr. K.V.S.Habeeb Muhammad

An evening with Dr. K.V.S.Habeeb Muhammad


The event: A splendid tamil language inter-action programme

( Maanuda vasantham) for non-muslim brothers aimed at removing

the misconception about ISLAM and promoting peace and harmony

in the society.


The Venue: Indian Consulate, Dubai


The time: Insha Allah 27th Feb 2009, 6.00 p.m.


A briefing upon the Speaker :


Dr.KVS , a Chennai based scholar/thinker who plays an important

role in the IFT Islamic Colloquium. A soft spoken, well attired, a credible personality whose perspective , brilliant analysis and modern approach have earned him a high reputation even among non-muslim brothers around the globe.

Please do attend this rare, insightful and enlightening discussion.



Organised by: IMAN , Dubai



Info by :

Ayyampettai Kamaludeen

Dubai, Feb 2009

Dubai visa from india

http://www.dubaivisa.net/index.aspx

Visitors to Dubai flying on Emirates can now apply for the visa in India without having to locate a sponsor in Dubai.

Over the past several years, there has been a significant increase in the number of Indians travelling to Dubai on business or holiday. Dubai has also become a very attractive stopover to passengers travelling beyond to America and Europe, Africa and Australia. Dubai's cosmopolitan flair has made the city immensely popular with discerning travellers.

Emirates, Dubai's award winning international airline, operates services to Dubai from Mumbai, New Delhi, Chennai, Kolkata, Hyderabad, Cochin, Trivandrum and Bangalore.

Emirates has tied-up with VFS to set up the Dubai Visa Processing Centre (DVPC) in India to assist its passengers in obtaining a Tourist Visa or 96 hrs Visa to Dubai.

Advantages by applying for visa through Emirates.

Passengers do not require to locate a sponsor in UAE.
Tourist Visa or 96 hrs Visa is processed within two working days provided all the documents are found in order.
Visa is granted electronically - hence passengers do not have to queue up at Visa Delivery Counter at Dubai International Airport upon their arrival; instead they proceed directly to Immigration.
Tourist Visa or 96 hrs Visa can be applied in 4 steps :

Obtain the Visa Application Form from:
a) Emirates Offices
b) Dubai Visa Application Centres
c) Download from our website: www.dubaivisa.net Photocopy of this form is also accepted.
Create an Application Pack.
Submit the Application Pack at any Dubai Visa Application Centre, or at the nearest designated office of Blue Dart.
Check Visa Status through Emirates PNR.
Please Note:

The U.A.E is closed on Fridays and Saturdays.
Tenure of Visas, Tourist (58 days) or 96 hrs(58 days) includes the day of arrival and departure

மத நல்லிணக்கம் காத்த மாவீரன் திப்பு சுல்தான்

மத நல்லிணக்கம் காத்த மாவீரன் திப்பு சுல்தான்

முன்னுரை :

இந்தியாவின் 565 சமஸ்தானங்களும் ஆங்கிலேயரிடம் அடிபணிந்து மடிப்பிச்சையாகத் தம் சுகவாழ்வைப் பெற்ற போது தன்மானம் காக்கவும் தாய்நாட்டின் மண்மானம் காக்கவும் தனித்தெழுந்த துணிந்தெதிர்த்துத் துடித்தெழுந்த இம்மண்ணின் ஒரே மாவீரன் தியாகிகளின் சக்கரவர்த்தி இந்திய விடுதலைப் போரின் முன்னோடி மைசூர் புலி திப்பு சுல்தான்!

250 ஆண்டுகால ஆசிய வரலாற்றில் வாளேந்திப் போர் புரிந்து அப்போர்க்களத்திலேயே வீரமரணம் அடைந்த ஒரே மாமன்னர் திப்பு சுல்தான்!
இவர்களது ஒப்பற்ற தியாகத்தால் ஆங்கிலேயரிடமிருந்து மீட்கப்பட்டு இன்று சுயநல அரசியல்வாதிகளிடம் சிக்கித் தவிக்கும் இந்தியாவை மீண்டும் மீட்கத் துடிக்கும் தென்னிந்தியத் திப்புசுல்தான் பேரவையின் முயற்சி வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம். திப்புசுல்தானின் 208 வது நினைவுநாள் அஞ்சலியாகவும் அனைத்துலக இஸ்லாமிய இலக்கியத்தமிழ் ஏழாம் மாநாட்டில் இதனை அன்பளிப்பாகவும் வழங்கிய தென்னிந்திய திப்புசுல்தான் பேரவைத் தலைவர் சர்தார் ஷேக் அவர்களுக்கும் நல்லமுறையில் அச்சிட்ட ஈரோடு மாருதி பிரஸ் பணியகத்திற்கும் இதனைப் படிப்பதன் மூலம் மாவீரன் திப்பு சுல்தானை நன்றியுடன் நினைவுகூறும் அனைத்து நல் உணர்வாளர்கட்கும் நன்றி...நன்றி...நன்றி...!

2.5.2007
எம்.கே. ஜமால் முஹம்மது
ஈரோடு
அலைபேசி : 94437 02958

மத நல்லிணக்கம் காத்த மாவீரன் திப்புசுல்தான் !

ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன் திப்புசுல்தானின் 208 வது நினைவு நாளையொட்டி இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

இருநூறு ஆண்டுகள் செம்மறி ஆடாய் வாழ்வதைவிட இரண்டு நாள் சீறும் புலியாய் வாழ்வதே சாலச்சிறந்தது என்று சூளுரைத்த சுத்தவீரன் திப்புசுல்தானின் 208 ஆவது நினைவு ஆண்டில் அம்மாவீரனுக்கு அஞ்சலி செலுத்துவதோடு இம்மண்ணின் புண்ணிய மைந்தனைப் போற்றி நினைவு கூர்வோம்.

பிறப்பும், வளர்ப்பும் :

கி.பி. 18 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துங்கபத்திரா நதிக்கரையிலிருந்து காவேரி வரை அதாவது கிருஷ்ணா நதியிலிருந்து திண்டுக்கல் வரை தெற்கு வடக்காக நானூறு மைல் தூரமும் மலபாரிலிருந்து கிழக்கு தொடர்ச்சிமலை வரை மேற்கு கிழக்காக முன்னூறு மைல் தூரம் கொண்ட பரந்த பூமியை 17 ஆண்டுகள் நல்லாட்சி செய்த தீரர் திப்புசுல்தான். நவாப் ஹைதர் அலிகான் பஹதூர் பஃருன்னிசா தம்பதிகளுக்கு நன்மகனாக தேவனஹள்ளியில் கி.பி.1750 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ம் நாள் வெள்ளிக் கிழமை அவதரித்தார்.
புலிக்குப் பிறந்தது

தீரர் திப்புசுல்தான் தந்தை ஹைதருடன் பழகி 16 வயதிலேயே சிறந்த யுத்தத் தந்திரங்கள்,ராஜதந்திரங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்று சிறந்த கல்விமானாகவும் படைத்தளபதியாகவும் விளங்கினார்.

வெற்றித்திருமகன்

திப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப்ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப்படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார் கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப்படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.

திருமணம்

1774 ம் ஆண்டு இறுதியில் ருக்கையாபானுவையும் சில மாதம் கழித்து தந்தை ஹைதர் அலியின் விருப்பத்திற்காக ஆற்காடு ரோஷன் பேகத்தையும் திப்பு திருமணம் முடித்துக் கொண்டார். திருமணம் முடிந்த பின் 1776 ல் மராட்டியர் நைஜாமியருடன் போரிட்டு காதிக்கோட்டையை திப்பு சுல்தான் வென்றார்.

ஹைதரின் மரணமும் அரியணையும்

1782 டிசம்பர் மாதம் 6ம் தேதி ஹைதர் அலி இறையடி சேர்ந்தார். அதன் பின்னர் 26 நாட்கள் மரணச் செய்தி யாருக்கும் அறிவிக்காமல் ரகசியமாக வைக்கப்பட்டு பொன்னானியிலிருந்து இளவரசர் திப்பு கோலார் வந்தபிறகே ஹைதர் அலியின் மரணம் அறிவிக்கப்பட்டது அதன் பின் 1782 டிசம்பர் 26 ம் தேதி (ஹிஜ்ரி 1197 முஹர்ரம் 20 ம் தேதி ) சனிக்கிழமை தனது 32 வது வயதில் நவாப் திப்பு சுல்தான் பஹதூர் என்று திப்புசுல்தான் மகுடம் சூட்டிக் கொண்டார் மகுடம் சூட்டியதும் புதிய தமது ராஜ்ஜியத்திற்கு திப்புசுல்தான் “சல்தனத்தே குதாதாத்” (இறையாட்சி) என பெயரிட்டார். புலிச்சின்னம் கொடியிலும், கீழே அல்லாஹ்வே ஆண்டவன் என்ற வாசகமும் பொறிக்கப்பட்டன.

திப்பு சுல்தான் அடிக்கல் நாட்டிய அணை

1791 தகி மாதம் 29 ம் தேதி திங்கட்கிழமை காலை திப்புசுல்தானே காவிரியின் குறுக்கே அணை ஒன்று கட்ட அடிக்கல் நாட்டினார். அந்த சாசனக்கல் இன்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைச்சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. சரியாக 120 ஆண்டுகளுக்கு பின் அதே இடத்தில் பிரிட்டிஷ் அரசு இந்த அணையை கட்டியது 1789 டிசம்பர் 28 லிருந்து 1790 மார்ச் வரை திருவிதாங்கூர் முற்றுகை. இதனால் காரன்வாலிஸ் பிரபு மைசூர் மீது போர் பிரகடனம் செய்தான் கோரப் புரட்சி ஒடுக்கப்பட்டது.
போர்க்களங்களில் திப்பு

மைசூர் ராஜ்ஜியத்தை பல திசைகளில் தாக்க ஆங்கிலேயர் போர் முறையை வகுத்தனர் மேஜர் ஜெனரல் வில்லியம் மெடோஸ் ஐ பவானிக்கு அருகில் திப்பு வென்றார் கிழக்கு பகுதியில் போர் தொடுத்து கர்னல்கெல்லியும் தோற்றான் ஆங்கிலப்படையை விரட்டிக் கொண்டே திப்பு பாண்டிச்சேரி வரை விரைந்து சென்றார் 1791 பிப்ரவரியில் சதுரங்கப்பட்டினம் முற்றுகை ஆரம்பம்

1792 பிப்ரவரி 26 ம் தேதி செய்த ஒப்பந்தம் மார்ச் 19 ம் தேதி கையெழுத்தானது இதன்படி மைசூர் ராஜ்ஜியத்தின் பாதி நிஜாம், மராட்டியர் ஆங்கிலேயர் மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. 1கோடியே 65 லட்சம் வராகனும் 10 வயதான அப்துல் காலிக் சுல்தான் 8 வயதான மொய்சுதீன் சுல்தான் இருவரையும் ஆங்கிலேயர் பிணையாகப் பெற்றனர் மீதி 1 கோடியே 35 லட்சம் வராகனும் 3 தவணையில் தர ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் திண்டுக்கல், கோவை, சத்தியமங்கலம், தேங்கணிக்கோட்டை, சேலம், பெல்லாரி, கிருஷ்ணா நதியொட்டிய பகுதிகள் எதிரிகள் வசமாயின. 1794 பிப்ரவரி 29 ம் தேதி தேவனஹள்ளியில் மூன்றாவது தவணை செலுத்தி விட்டு தமது புதல்வர்களை திரும்பப் பெற்றார். இப்போருக்கு பின்னர் திப்பு கதீஜா ஜமானி பேகம் என்ற பெண்ணையும் மணந்து கொண்டார். நான்கு மனைவியருக்கும் குழந்தைகள் உண்டு.

1796 லிருந்து 1798 மத்தியில் வரை பிரெஞ்சு தளபதி மாவீரன் நெப்போலியனுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார் திப்பு பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்களுக்கு சமமான படைபலம் திப்புவிடம் இருந்தது. பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியும், மைசூர் அரண்மனையில் முக்கிய பொறுப்பில் உள்ள நம்பிக்கை துரோக நயவஞ்சகர்களின் சூழ்ச்சியும் திப்புவை பலவீனமாக்கின. ஆஞ்சி சாமய்யா, கிருஷ்ணராவ், திருமல்ராவ், மீர்சாதிக், கமருத்தீன் போன்ற முக்கிய மந்திரிகளின் துரோகம் அம்மாவீரன் சரிவுக்கு காரணமாக அமைந்தது.

தியாகதீபம் அணைந்தது

1799 மே 3ம் தேதி கோட்டை செப்பனிடும் வேலையும் அதே நேரம் நயவஞ்சக நரிகளின் துரோகத்தின் உச்சமும் நடந்தது. 1799 மே மாதம் 4ம் தேதி நடுப்பகலில் சாதாரண சிப்பாயின் உடையில் வெறும் 50 பேர்களுடன் திப்புசுல்தான் வடமேற்கு பகுதியில் சுட்டுக் கொண்டே முன்னேறினார். அவ்வேளையில் இந்த மண்ணின் புண்ணிய மைந்தனின் நெற்றி பொட்டில் குண்டு பாய்ந்தது.கத்தியை இறுகப் பற்றியபடியே அந்த வீரமைந்தன் தன் தாயக விடுதலைக்காக வீரசுவர்க்கம் புகுந்தார். ஆம் உயிர் பிரிந்தது.இன்னாலில்லாஹி...
திப்பு சுல்தானின் குடும்பம்

குடும்ப வாழ்வில் ருக்கையாபானு, ஆற்காடு ரோஷன்பேகம், புரந்தி பேகம், கதீஜா ஜமானி பேகம் என நான்கு மனைவியர், நால்வருக்கும் குழந்தைகள் உண்டு.

திப்புவின் புதல்வர்கள்

ஃபத்தே ஹைதர், அப்துல் காலிக், முஹ்யித்தீன், மொய்சுதீன்கான், முஹம்மது யாசீன், முகம்மது சுபான், ஷ்ருக்கில்லாஹ், சிர்ருதீன், குலாம் முஹம்மது, குலாம் ஹமீது, முனீருத்தீன், ஜமீயுத்தீன் ஆகிய பன்னிருவர்.

திப்புவின் புதல்விகள்

பீவி பேகம், அஸ்முலுன்னிஸா பேகம், உமருன்னிஸா பேகம், பாத்திமா பேகம், பதீயுன்னிஸா பேகம், நூருன்னிஸா பேகம், குலூமா பேகம், கதீஸா பேகம் ஆகிய எட்டுபேர்.

ஆட்சி மாண்பும், படைபலமும்

திப்பு சுல்தான் தனது அரசு தர்பாரை ஒரு பார்லிமெண்ட் மாதிரியே நடத்தினார் படை, வியாபாரம், விவசாயம், மதம் என தனித்தனி இலாக்காக்களாக பிரித்து இருந்தார். நீதி வழங்க மொத்தம் 99 கோர்ட்டுகள் இருந்தன அனைத்து மதத்தவரும் அவரவர் மத சம்பிரதாய சட்டப்படி அவரவர்களே நீதி வழங்கினர். ஒவ்வொரு ஊருக்கும் காஜி, கதீப், காவல்நிலையம், ரகசிய உளவு இலாகா இருந்தன. எட்டு பாகமுள்ள அரசியல் சட்டப்புத்தகம் ‘கிதாபேதொஹபதுல் முஜாஹிதீனை’ (புனித வீரர்களின் வெற்றி) திப்பு இயற்றினார்.

ராணுவம்

திப்பு சுல்தான் வசம் மிகப்பெரிய ராணுவம் இருந்தது. மூன்று லட்சத்து இருபதாயிரம் வீரர்கள் இதர தனிப்பட்ட ராணுவமும் போலிஸும் இருந்தன யானைகள் 900, ஒட்டகங்கள்6000, 25000 அரபிக்குதிரைகள், நான்கு லட்சம் மாடுகள், மூன்று லட்சம் துப்பாக்கிகள், இரண்டு லட்சத்து இருபத்து நாலாயிரம் வாட்கள், 929 பீரங்கிகள் மற்றும் ஏராளமான வெடிமருந்து குவியல்கள் இருந்தன.

கப்பற்படை

கடற்படையில் 60 பீரங்கிகள் ஏற்றக்கூடிய ஒரு கப்பல், 30 பீரங்கிகள் ஏற்றக்கூடிய 30 கப்பல்கள், இரண்டு பீரங்கிகள் ஏற்றக்கூடிய 20 படகுகள் இருந்தன அரேபியாவில் ஜித்தா வளைகுடாவில் உள்ள மஸ்கட் துறைமுகம் இந்திய மேற்கு கூரையில் உள்ள கச்சு நவகார் ஆகிய துறைமுகங்களில் கிட்டங்கிகளை திப்பு நிறுவினார். அணிவகுத்து போரிடும் 72 கப்பல்கள் அவரிடம் இருந்தன 72 பீரங்கிகளும் கொண்ட ஒரு கப்பலில் 24 ராத்தல் பீரங்கிகள் 30 ம், 18 ராத்தல் பீரங்கிகள் 30ம், 9 ராத்தல் பீரங்கிகள் 9ம் இருந்தன 40 கப்பல்களில் 10,520 கடற்படை வீரர்கள்
இருந்தனர்.

திப்பு கடற்பயிற்சி பள்ளியும் கப்பல் செப்பனிடும் துறையும் நிறுவினார். இவற்றிற்கான செலவு ஓராண்டில் 1,82,400 பவுன் (சுமார் 23,84,000 ரூபாய்)ஆகியது. (தகவல்: மைசூர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் செல்வராஜ், 24 மார்ச் 1984 ல் நடந்த தென்னிந்திய வரலாற்று பேரவைக் கூட்ட சொற்பொழிவில்) ஆங்கிலேயரிடம் இல்லாத நவீன ஏவுகனைகள் அந்நாளிலேயே திப்புவிடம் மட்டுமே இருந்தன நவீன ராக்கெட்டின் முன்னோடி திப்பு சுல்தான்.

சதவீத அடிப்படையில் மான்யம்

மைசூர் ராஜ்ஜியத்தில் 90 சதவீதம் ஹிந்துக்களும், 10 சதவீத முஸ்லீம்களுமே வாழ்ந்தனர். ஒரே ஆண்டு மட்டும் ஹிந்து கோயில்களுக்கும் தேவஸ்தானங்களுக்கும் 1,93,959 வராகன்களும் பிராமண மடங்களுக்கு 20,000 வராகன்களும் ஆனால் முஸ்லிம் ஸ்தாபகங்களுக்கு 20,000 வராகன்களுமே ஆக மொத்தம் 2,33,959 வராகன்கள் சர்க்கார் கஜானவிலிருந்து வழங்கப்பட்டுள்ளன. சதவிகித அடிப்படையில் மான்யம் வழங்கிய
முதல் மன்னன் திப்பி சுல்தான்.

ஆதாரம் (கி.பி.1798 MYSORE GAZETER பக்கம் 38.VOL IV 1929)

சீர்திருத்தம்

மலபார் பகுதியில் பெண்கள் மேலாடையின்றி இருந்த பழக்கத்தை மாற்றி உயிர் உயர் மானங்காக்க மேலாடை அணியும் பழக்கத்தை உருவாக்கி குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் மணந்து கொள்ளும் பழக்கத்தைத் தடுத்தார். சட்டம் இயற்றி சீர்திருத்தம் செய்தார்.
திப்புசுல்தான் மைசூரில் நரபலியையும் கோவில்களின் தேவதாசி முறையையும் ஒழிக்கச் சட்டம் போட்டார் மதுவிலக்கை முழுமையாக அமலாக்கினார் மத ஒற்றுமையும் மதுவிலக்கும் திப்புசுல்தானின் இருகண்களாக இருந்தன

தொழில் வளர்ச்சி

அரிசி, சந்தனம், செம்பு, குதிரை, முத்து, செம்மணிக்கல், பட்டு இவையனைத்தும் ஏற்றுமதி செய்ய மிகவும் கவனம் செலுத்தினார் சந்தன அத்தர், எண்ணெய் வடிதொழிலைத் திப்புசுல்தான் துவங்கினார் நாடு முற்றிலும் விவசாயம் செழித்திடச் செய்தார்.

தொழிற் புரட்சி

கடிகாரம், கண்ணாடி, பீங்கான் தயாரிக்கின்ற தொழிற்சாலைகளை வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் நிறுவினார் மஸ்கட்டிலிருந்து பட்டுப் பூச்சிகளை வரவழைத்து பட்டு உற்பத்தியை உண்டாக்கினார் கூட்டுறவுப் பண்டக சாலைகளை அமைத்து மக்களுக்கு மலிவு விலையில் பண்டங்கள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

திப்புவின் மானியம் பெற்ற திருக்கோயில்கள்

*கி.பி.1786 மேலக்கோட்டை நரசிம்மசாமி கோயில் தங்க, வெள்ளி, ஆராதனைப் பாத்திரங்கள், பாரசீக மொழிப்பட்டயம், 12 யானைகள் பரிசும் வழங்கினார் நாராயணசாமி கோவிலுக்கும், கந்தேஸ்வரசாமி கோவிலுக்கும் ரத்தின ஆராதனைத் தட்டுக்கள் வழங்கினார்.
*நஞ்சன் கூடுவில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்திற்கும் மரகதலிங்கம் வழங்கினார் அதன் பெயர் இன்றும் “பாதுஷாலிங்கம்” என்று வழங்கப்படுகின்றது.

*குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கும் அக்கோவிலைச் சுற்றியுள்ள நிலவரிவசூல் செய்யும் உரிமையை தானம் வழங்கினார் கி.பி.1790 ல் காஞ்சிபுரம் கோவிலுக்கும் 10,000 வராகன் நன்கொடை திப்புசுல்தான் வழங்கினார்.

மைசூரில் உள்ள தொன்னூரில் இராமனுஜகுளம் தூர்வாரப்பட்டு செப்பனிடப்பட்டதும் திப்புவால்தான். பர்பாபுதனன்கிரி என்ற தத்தாத்ரீயபீடம் மடத்திற்கும் இருபது சிற்றூர்கள் இனாமாகவும் புஷ்பகிரி மடத்திற்கு இரண்டு கிராமங்கள் மானியமாகவும் திப்பு வழங்கினார்

*சிருங்கேரி மடத்தில் ஹைதர் அலியின் சனதுகள் மூன்றும் திப்பு சுல்தானின் சனதுகள் முப்பதும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

*கி.பி.1793 ல் ஜகத்குரு சங்கராச்சாரியார் சச்சிதானந்த பாரதிக்கு திப்புசுல்தான் எழுதிய கடிதம் இன்றும் மைசூர் நூலகத்தில் உள்ளது. இந்நூலகத்தில் ஹிந்துக் கோயில்கள் பலவற்றுக்கு திப்பு வழங்கிய மானியங்கள் பற்றிய அரசு ஆணைகள் பல உள்ளன.

*வாழ்நாள் முழுவதும் போராடியே வாழ்ந்த திப்புசுல்தான், தரியாதெளலத் அரண்மனையும், பூங்காவும், மொராக்கோ அரபிகளைக் கொண்டு பெங்களூரில் பிரம்மாண்டமான பள்ளிவாயிலும், பலவிதத் தோட்டங்களும், கட்டிடங்களும், பாலங்களும் கட்டினார். ஸ்ரீரங்கப்பட்டினத்தில் கலாசாலை ஒன்றும் நிறுவினார்.

கிட்டத்தட்ட மாவீரன் திப்பு மறைந்து 20 ஆண்டுகளில் முழு இந்தியாவும் ஆங்கிலேயர் வசமானது.

நிறைவு

ஆங்கிலேயரை இந்திய மண்ணிலிருந்து விரட்டிய பின்பே பஞ்சு மெத்தையில் உறங்குவேன் என்று வீரசபதமிட்ட மாவீரன் திப்பு தன் இன்னுயிரை நாட்டுக்கீந்து 148 ஆண்டுகள் கழித்து கி.பி. 1947 ஆகஸ்ட் 15 நடுநிசியில் யூனியன் ஜாக்கொடி கீழே இறங்கியது. அப்பொழுது தான் திப்புவின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும். ஆம் அல்லாமா இக்பாலின் “கிழக்கு அன்று உறங்கிக் கொண்டிருந்த போது, விழித்திருந்த ஒரே மனிதன் திப்புசுல்தான் மட்டுமே” என்ற வரிகளின் உண்மையை இந்திய சுதந்திரமும் உலகும் என்றும் மறக்க முடியாது. நாமும் அம்மாவீரனை நினைவு கூர்வோமாக!

வாழ்க திப்புவின் புகழ்! வெல்க திப்புவின் தியாகம்!
வெளியீடு :
தென்னிந்திய திப்புசுல்தான் பேரவை ( கூகூக )

தொகுப்பாளர் : ஈரோடு எம்.கே. ஜமால் முஹம்மது

( 4.5.2007 அன்று திப்புசுல்தான் 208 ஆவது நினைவு நாள் நினைவாக வெளியிடப்பட்ட்து )
மே 2007 ல் சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஏழாம் மாநாட்டில் வெளியிடப்பட்டு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

சமர்ப்பணம்

தியாகிகளின் சக்கரவர்த்தி திப்புசுல்தானின் பரிசுத்த ஆன்மாவிற்கு..

திப்புவையும் வேலூர் புரட்சியையும் திறனாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்று திப்புவின் தாசராகவே வாழ்ந்து திப்பு மறைந்த மாத த்திலேயே இறையடி சேர்ந்த ( 11.05.2006 ) அமரர் முனைவர் பி. சின்னையன் அவர்களின் ஆன்ம நினைவிற்கு

முதற்பதிப்பு : 02.05.2007

அச்சிட்டோர் : மாருதி ஆப்செட் பிரிண்டர்ஸ், ஈரோடு
2253165

நாட்டில் நலன் காக்க !
நல்லிணக்கதை நிலை நாட்ட !
நூறாண்டுகள் அடிமைகளாய்
ஆட்டுமந்தை போல் வாழ்வதை விட
இரண்டு நாள் மக்களின் விடுதலைக்காக போராடி
வேங்கையாய் மடிவதே மேல்
- மாவீரன் திப்புசுல்தான்

என்றும் வாழும் திப்புவின் தியாகம்
என்றும் வாழும் திப்புவின் வீரம்
என்றும் வெல்லும் திப்புவின் கொள்கை ! நாட்டிற்கு
என்றும் வேண்டும் திப்புவின் கொள்கை !

வெளியீடு
தென்னிந்திய திப்புசுல்தான் பேரவை ( TTP )
தலைமை அலுவலகம்
77 கிழக்கு ரத வீதி,
திண்டுக்கல் 624 001
தொலைபேசி : 0451 6531228
தொலைநகல் : 0451 2420860
அலைபேசி : 98423 52513/92442 28187 / 94439 10222
மின்ன ஞ்சல் : ttp@india.com / tipumail@india.com