Showing posts with label திருக்குர்ஆன். Show all posts
Showing posts with label திருக்குர்ஆன். Show all posts

Friday, August 6, 2010

திருக்குர்ஆனையும் தொழுகையையும் புரிந்துகொள்ளுங்கள் - எளிய வழியில்

திருக்குர்ஆனையும் தொழுகையையும் புரிந்துகொள்ளுங்கள் - எளிய வழியில்

From: Sheik Masthan
Date: 5 August 2010 4:23:43 PM GMT+04:00
To: Sheik Masthan
Subject: திருக்குர்ஆனையும் தொழுகையையும் புரிந்துகொள்ளுங்கள் - எளிய வழியில்
Reply-To: uqc_organizing_committee@googlegroups.com


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....


கீழ்கண்ட பயிற்சியினை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் சென்னையில்
தங்கள் பகுதியில் உள்ள ஸ்கூல்.காலேஜ்,பள்ளிவாசல் மற்றும் பொது இடத்தில் நடத்த விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்...
1. ஷேக் மஸ்தான் : 9841223553
2. அஹ்மது கபீர் : 9994176372


பயிற்சியின் விபரம்.....


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
உங்களில்; சிறந்தவர் குர்ஆனை தானும் கற்று மற்றவர்களுக்கும் கற்று கொடுப்பவரே
- நபிமொழி அறிவிப்பவர் : உதுமான் (ரழி) நூல் : புஹாரி.


குறுகிய கால பயிற்சி - தமிழில் (3 மணி நேரம்)


திருக்குர்ஆனையும், தொழுகையையும்
புரிந்து கொள்ளுங்கள் - எளிய வழியில், இன்ஷா அல்லாஹ்


குர்ஆனிலுள்ள திரும்ப திரும்ப வரும் 50 வார்த்தைகளை முழுக்க முழுக்க அர்த்தம் புரிந்து முற்றிலும் புதிய மற்றும் எளிய முறையில் கற்றுக்கொள்ள ஒரு அரிய சந்தர்ப்பம்.


இதில் கற்றுக்கொள்ளும் 50 வார்த்தைகளை தெளிவாக அறிவதன் மூலம் ஏறக்குறைய திருக்குர்ஆனிலுள்ள தோராயமாக 28,995 வார்த்தைகளை புரிந்து கொண்டு ஓத முடியும். திருக்குர்ஆனில் உள்ள மொத்தம் ஏறத்தாழ 78,000 வார்த்தைகளில், இது 35 சதவீதத்திற்கும் அதிகமான வார்த்தைகளாகும்.




• மல்டி மீடியா திரை மூலம் பாடம் கற்பித்தல்
• 12 வயதுக்கு மேற்பட்டவர்க்கு மட்டும்
• குர்ஆன் ஓத தெரிந்து இருத்தல் போதுமானது




குறுகிய காலப் பயிற்சிகளின் நோக்கம்:


திருக்குர்ஆன்,


1. கற்க எளிதானது என்பதை உணர்த்துதல்.
2. அதைப் புரிந்துகொண்டு திரும்பத் திரும்ப ஓத ஊக்குவித்தல்.
3. அதனுடன் உறவாட, அதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த உதவுதல்.
மேலும்,
4. தொழுகையை அர்த்தம் அறிந்தவராய் தொழுதல்.
5. குழு உணர்வைத் தோற்றுவித்தல்.




PLEASE FORWARD TO ALL YOUR FRIENDS AND RELATIVES.....


A short course on
Begin to "UNDERSTAND QURAN AND SALAH - The Easy Way" in Tamil 3Hrs…

Following are the brief details about the programme :
Qualification : The participant should know to read Quran and Tamil Language
Understand Quran and Salah - The Easy Way in Tamil for 3 hours through Power Point Presentation and it covers in Total 8 Lessons - Each Lesson will be conducted for 20 minutes and contents are as follows:

1. Surah Al Fathiha and Al Asr, some hadees and Duas from our Daily Prayers with word to word translation.
2. Some Grammar thru TPI method (Total Physical Interaction)
3. Motivational & Educational Tips to memorize, remember, etc...
4. 50 Arabic words will be taught with translation and examples. That 50 words repeat in quran more than 27,500 times, it means more than 35% of the words in quran (total words in quran approx. 78,000)
5. Test paper (Objective type Questions) will be given at end of the course to make sure that the participants learnt these 50 words thoroughly.



9Hrs Course...


Assalam alaikum wa rahmatullah

OVERALL objectives of this program are as follows:
1. Bring Islamic brothers to interact with the QURAN (recite, understand, follow).
2. Teach 100 words & basic Grammar in these program through what they recite everyday and through easy grammar techniques. (50% coverage of words of the Qur'an; not the Qur'an itself).
3. Grouping the participants under some Learned Peoples to clear their doubts and to continue their learning
4. Teach another 250 words within two months (through additional recommended recitations) & some more Grammar thru email and conducting 25 hours of additional teaching at suitable intervals at Chennai. At the end of this course, a student is familiar with 70% of the words (not 70% of the Qur'an). So, in each line, only two unknown words (on the average) remain.
5. Teach the Quran from Al-Fatihah till An-Naas in 165 hours or at least guide the people how to learn it from first to last.
(A practical alternative for people can be having a 3 hour session every weekend, where they can complete half para easily; after completing the above steps. In 60 weeks, the Qur'an can then be completed from Al-Fatihah till An-Naas).
Please note that a total of 200 teaching hours are required for basic understanding of the Qur'an. The remaining 30% of the words are learnt in this process, i.e., in Step 5, automatically. The list of these words can be provided but it really does not help because a person can not memorize from lists or does not learn a language from a dictionary!.
The objectives of the short course are (as given in the slides):
1. Convince that Qur'an is easy to learn
2. Encourage to recite Qur'an again and again with understanding
3. Help in interacting with the Qur'an (to bring it into our lives)
4. To pray Salah effectively
5. To generate the team spirit to work for Islamic cause (Muslim as well as humanity cause)


Jazakallah
Sheik Masthan
9841223553

Thursday, July 1, 2010

நான் தான் “திருக்குர்ஆன்” பேசுகிறேன் !

நான் தான் “திருக்குர்ஆன்” பேசுகிறேன் !
( ஆக்கம்;- மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி )
http://www.mudukulathur.com/religiondetails.asp?id=160
என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே, உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவிட வேண்டுமென்பது தான் எனது ஆவல் ! அதற்காகத்தான் நானும் உங்களுக்காக இறைவனிட மிருந்து இறக்கி அருளப்பட்டிருக்கிறேன். நான் சுவர்க்கத்தின் லவ்ஹூல் மஹ்பூல் என்னும் ஏட்டில் வசித்து வருபவன். இவ்வுலகில் நான் முதன் முதலில் ஆரத்தழுவி கட்டி அணைத்து முத்தமிட்டது நமதருமை நாயகம் (ஸல்) அவர்களைத்தான் ! மனிதர்கள் எல்லோருமே என்னைத்தான் முத்தமிடுவீர்கள். ஆனால் நானோ எம்பெருமானாரை முத்தமிட்டவன்.
என்னை சுமப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட ஆரம்ப கட்ட சிரமத்தை நானும் எனது இறைவனுமே நன்கு அறிவோம். அதனை சாதாரண மனிதர்களாகிய நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள் ! இத்தனை நெருக்கடிக்குள்ளும் என்னை சுமந்து எனது பெருமைகளை உணர்ந்து எனது சகவாசம் உலகம் அழியும் வரைக்கும் வாழக்கூடிய தனது உம்மத்தினர் அனைவருக்கும் வேண்டும் என்பதற் காகத்தான் ஆரம்பத்தில் என்னை மாட்டுத் தோலிலும், மரக்கட்டை களிலும் பதிய வைத்து என்னை ஓர் பொக்கிஷமாக உங்களிடம் ஒப்படைத்துள்ளார்கள் நாயகம் (ஸல்) அவர்கள். ஆனால் நீங்களோ, எனது சகவாசத்தை விரும்பாமல் ஷைத்தானின் சகவாசத்தை விரும்பக்கூடியவர்களாக மாறி விட்டீர்கள். “கூடா நட்பு கேடாய் முடியும்” என்ற பழமொழி மறந்து விட்டதோ?
என்னை மறக்க ஆரம்பித்ததும் எவ்வளவு இழிவுகளையும் சோதனை களையும் சந்தித்து வருகிறீர்கள். எனது சிறப்பைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால் ”ஹுதன்லில் முத்தக்கீன்”இறையச்சமுடையவர் களுக்கு நேர்வழி காட்டக்கூடியவனாயிருக்கிறேன். யார் என்னை நம்பி பின்பற்றினாலும் நிச்சயம் நான் அவர்களை ஈருலகிலும் நல்லோர் களாய் வாழச் செய்வேன் என்பதை அளவு கடந்த உறுதியுடன் என்னால் கூற முடியும்.
இன்று யார் யாருக்கோ பின்னால் போய்க்கொண்டிருக்கும் மனிதர்களே ! அவர்களெல்லாம் நாளை மறுமையில் உங்களுக்கு துணை நிற்பவர்கள் என நினைத்தால் ஏமாந்து தான் போவீர்கள். ஒரு காலத்தில் வீடு தோறும் புனிதமானவனாக மதிக்கப்பட்டு உயர்ந்த ரக ஆடைகளை கொண்டு என்னை மூடி வீட்டின் உயர்வான இடத்தில் எனக்கென்று தனியொரு இடம் அமைத்து அதில் வைத்து அழகு பார்த்த நீங்கள் இன்று உங்கள் வீட்டு குழந்தைகளின் பள்ளிக்கூட புத்தகங்களோடும், அறுவருக்கத்தக்க புகைப்படங்களை சுமந்து வரும் நாலாந்தர புத்தகங்களோடும், மார்க்கத்தின் பெயரால் மனிதர்கள் தம் மனம் போன போக்கில் கண்டதையும் எழுதிவரும் மற்ற நூல்களுடனும் சேர்த்தே என்னையும் வைத்து விட்டீர்களே ! இது நியாயமா?
டி.வி. என்ற இப்லீஸின் நாசகார கவர்ச்சி பெட்டிகள் வருவதற்கு முன்பெல்லாம் வீடுதோறும் குடும்ப பெண்கள் அதிகாலையே எழுந்து சுபுஹு தொழுகையை முடித்து விட்டு என்னை கரத்தில் ஏந்தி கம கமக்கும் சந்தன ஊதுபத்தியின் புகையில் எனது வசனங்களை ஓதும் போது வெளியாகும் அந்த இனிமையான ஓசை தென்றல் காற்றோடு கலக்கும் ரம்மியம் தானே, அன்றைய மக்களின் சங்கீதமாய் இருந்தது. ஆனால் இன்றோ நள்ளிரவு வரை டி.வி.யில் தொடர் (சீரியல்) களை பார்த்து விட்டு உறங்குவதால் பள்ளியில் கூறப்படும் அதிகாலை பாங்கின் ஓசைக்கு எதிர் ஓசையாய் உனது குறட்டை சத்தம் வெளி யாவது இறைவனின் கோபத்திற்குரியதல்லவா? ஓ ….. ஜெய்னம்பு பீவியே … படைத்தவனையே மறந்து விட்ட நீ என்னையா கையில் எடுத்து ஓதி விடப் போகிறாய் ?
எனதருமை தெரியாத மனிதர்களே ! என்னைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை கேளுங்கள்;- “திருக்குர்ஆனிலிருந்து சிறிதளவு கூட தம் உள்ளத்தில் மனனம் இல்லாதவர் பாழடைந்த வீடு போன்றவர் ஆவார்.”
(அறிவிப்பாளர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதி)
பார்த்தாயா? நான் இல்லாத இதயம் பாழடைந்த வீட்டைப் போன்ற தாகி விடுகிறது.
என்னைப் பார்த்தால் அதற்கு ஒரு கூலி, ஓதினால், பிறர் ஓத கேட்டால், மனனம் செய்தால் என ஒவ்வொன்றுக்கும் தனிதனி அந்தஸ்தில் இறைவனின் நற்கூலிகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதை மறந்து விட்டீர்களா? வருடம் முழுவதும் என்னை நினைத்து வாழ்ந்த நீங்கள், இன்றோ வருடத்தில் ஒரு மாதம் ரமலானில் மட்டுமே நினைக்க கூடிய பச்சோந்திகளாய் மாறி விட்டீர்கள்.
ஒவ்வொரு நாளும் குளித்து சீவி சிங்காரித்து சுத்தம் செய்து கொள்ளும் நன்றி கெட்ட மனிதனே ! என்னை மட்டும் உன் வீட்டு பரணி மேல் தூசியடைய வைத்து விட்டு ரமலான் வரும் போது மட்டும் சுத்தம் செய்து கையிலெடுப்பது ஓரவஞ்சனையில்லையா? உன் போன்ற சந்தர்ப்ப வாத வேடதாரிகளை நாளை மறுமையில் எனது இறைவனுக்கு முன்பாக தோலுரித்துக் காட்டுவேன். என்பதை நினைவில் வைத்துக் கொள் !
ஒரு நேரத்தில் (ஒளு) சுத்தமில்லாமல் என் அருகில் வருவதற்கே பயந்து நடுங்கிய மனிதன் இன்று குளிப்பு கடமையான நிலையிலும் கூட என்னை சர்வ சாதாரணமாக தொடுவதற்கு துணிந்து விட்ட கன்றாவியை கண்டு சகித்துக் கொள்ள முடியவில்லை. ”லாய மஸ்ஸுஹு இல்லல் முதஹ்ஹரூன்” ( தூயவர்களைத் தவிர மற்றெவரும் அதை தொட மாட்டார்கள் ) என்ற இறை வசனத்தை அவமரியாதை செய்கின்ற பாவத்தை எந்தப் பாவிப்பயல் வழிகாட்டி கொடுத்தானோ? அவன் ஈருலகிலும் நாசமடைவது திண்ணம் !
தமிழக முஸ்லிம்களாகிய நீங்கள் தான் என் சிறப்பை உணராமல் என்னை உதாசீனப்படுத்தி வருகிறீர்கள். ஆனால் ஒரு வகையில் மலேசியா நாட்டு முஸ்லிம்களை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். ஆமாம் அவர்கள்தான் ஆண், பெண் என்ற பாகுபாடில் லாமல் என்னை தலையில் வைத்து கொண்டாடி வருகிறார்கள். மலேசியாவின் கோலா கங்ஸார் என்ற ஊரில் நடக்கின்ற திருமணங் களின் போது திருமணத்திற்கு முதல் நாள் இரவு ஒரு நிகழ்ச்சி நடக்கும்.
பெண் வீட்டில் மணமகன் வீட்டார் உட்பட உறவினர் அனைவரும் கூடி இருப்பார்கள். அச்சம், மடம், நாணம் என்று அந்த காலத்தில் சொல்வார்களே, அத்தனையும் ஒருங்கே பொதிந்த நிலையில் மணப் பெண் வந்து சபையில் அமர்வாள். பிறகு அவளுக்கு முன்பாக வைக்கப் பட்டிருக்கும் திருக்குர்ஆனாகிய என்னை புரட்டி தஜ்வீத் என்ற விதி முறைப்படி எனது வசனங்களை அட்சரம் பிசகாமல் ஓதி முடிப்பாள். பின்னர் எல்லோருக்கும் இனிப்பு வழங்குவார்கள். அதை விட ஓதப் பட்ட தித்திக்கும் எனது வசனத்தை கேட்ட மன நிறைவோடு வந்தவர் கள் வீடு திரும்புவார்கள்.
மணமகளுடைய அழகைவிட, கற்ற அறிவைவிட, பெற்றிருக்கும் செல்வத்தைவிட எனது வசனங்களை பிழையின்றி ஓதுவதில் தான் மணப்பெண்ணின் சிறப்பு இருக்கிறது என்று மலேசியா முஸ்லிம்கள் கருதுகிறார்கள். திருக்குர்ஆனை ஓதுவதில் தான் அந்த எதிர்காலத்தாய், குலவிளக்கு, குடும்பத் தலைவியின் பூரணத்துவம் இருக்கிறது என மலாய் மக்கள் முழு நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள்.
எனதருமை தமிழ் முஸ்லிம் சமுதாயமே, பார்த்தாயா? மலாய் முஸ்லிம்களும் நானும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோமென்று ! பெண் பார்க்கும் படலத்தில் கூட அங்கு என்னைத் தான் முன்னிலைப் படுத்துகிறது மலாய் முஸ்லிம் சமுதாயம். அந்நாட்டில் தான் என்னை ஓதுவதை பெண்களுக்கு ஒரு முக்கியமான அம்சமாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். அங்கு வாழும் தாய்க் குலத்தினரின் முணு முணுப்பும், குழந்தைகளின் தாலாட்டும் கூட எனது வசனங்களாக இருப்பதினாலேயே அகில உலக கிராஅத் போட்டியில்கூட மலாய் மக்கள் அரபுகளை விட சிறப்பாக ஓதி உயர்வான பரிசுகளை பெற்று விடுகிறார்கள்.
ஆனால் நீயோ சினிமா பாடல்களை பாடி உன் குழந்தைகளை தூங்க வைக்கிறாய் ! உன் பிள்ளை கண் விழித்து பாடுவதும் சினிமா பாடல் களாகவே ஆகிவிட்டது. உனது முணு முணுப்பிலும் கூட சினிமா, டி.வி. தொடர் பற்றியேத் தான் போய்க்கொண்டிருக்கிறது. அதனால் தான் உனது வாழ்க்கையும் ஒரு டிராமா போல் முடிந்து விடுகிறது ! எல்லாம் அந்த இப்லீஸ் படுத்தும் பாடுதான் !
இவ்வருட ரமலான் வரைக்கும் நான் உங்களது போலித்தனமான பக்திக்குரிய செல்லப் பிள்ளையாக் இருப்பேன். பின்னர் வழக்கம் போல பரணி மீது படுத்துவிடுவேன். அடுத்த வருட நோன்புவரை ! அறிவுள்ள வர்களுக்கு மட்டும் உறுதியாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். யார் என்னை தங்களது நெஞ்சத்தில் வைத்து பாதுகாக்கிறார்களோ? அவர் களின் மரணத்திற்குப்பின் மண்ணறை வாழ்க்கையின் போது வேதனையை விட்டும் கொடிய விஷமுள்ள பாம்பு, தேள் போன்ற ஜந்துகளின் தீங்குகளை விட்டும் அவர்களை நான் பாதுகாப்பேன். நாளை மறுமையிலும் இறைவனிடம் பரிந்துரை செய்வேன்.
என்னை சுமந்து வாழும் இதயங்கள் மட்டுமே ஈருலகிலும் ஒளி மயமாக இருக்கும். என்னைப் பற்றி இவ்வளவு கூறிய பிறகும் தினந் தோறும் நீ என்னை உன் இதயத்தில் சுமக்க மறுத்தால் நஷ்டம் எனக்கல்ல, உனக்குத்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள் !
( வஸ்ஸலாம்! )
வாசகர்கள் விமர்சனங்களை
sjaroosi@yahoo.com
என்ற மின்னஞ்சல் அல்லது 050- 7959960 என்ற கைபேசிக்கோ தெரிவிக்கலாம்

Sunday, April 18, 2010

துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் திருக்குர்ஆன் மனனப் பயிற்சி மையம்

துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் திருக்குர்ஆன் மனனப் பயிற்சி மையம்

துபாய் : துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் திருக்குர்ஆன் மனனப் பயிற்சி மையத்தை பர்மாவைச் சேர்ந்த சகோதரர்கள் நடத்தி வருகின்றனர். இப்பயிற்சி மையத்தில் ஐந்து வயது மாணவர்கள் முதல் 15 வயது வரையிலான மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி முற்றிலும் இலவசம்.

சில பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி உள்ளது.

மேலும் விபரங்களுக்கு :

தொலைபேசி : 04 – 2645 777 / 050 797 5677

மின்னஞ்சல் : burmacentre.dubai@hotmail.com

Burmacentre.dubai@gmail.com

Friday, April 2, 2010

துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் திருக்குர்ஆன் மனனப் பயிற்சி மையம்

துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் திருக்குர்ஆன் மனனப் பயிற்சி மையம்

துபாய் : துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் திருக்குர்ஆன் மனனப் பயிற்சி மையத்தை பர்மாவைச் சேர்ந்த சகோதரர்கள் நடத்தி வருகின்றனர். இப்பயிற்சி மையத்தில் ஐந்து வயது மாணவர்கள் முதல் 15 வயது வரையிலான மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி முற்றிலும் இலவசம்.
சில பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி உள்ளது.
மேலும் விபரங்களுக்கு :
தொலைபேசி : 04 – 2645 777 / 050 797 5677
மின்னஞ்சல் : burmacentre.dubai@hotmail.com
Burmacentre.dubai@gmail.com

Friday, September 4, 2009

நான் தான் “திருக்குர்ஆன்” பேசுகிறேன் !

நான் தான் “திருக்குர்ஆன்” பேசுகிறேன் !

( ஆக்கம்;- மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி )

http://www.mudukulathur.com/religiondetails.asp?id=160

என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே, உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவிட வேண்டுமென்பது தான் எனது ஆவல் ! அதற்காகத்தான் நானும் உங்களுக்காக இறைவனிட மிருந்து இறக்கி அருளப்பட்டிருக்கிறேன். நான் சுவர்க்கத்தின் லவ்ஹூல் மஹ்பூல் என்னும் ஏட்டில் வசித்து வருபவன். இவ்வுலகில் நான் முதன் முதலில் ஆரத்தழுவி கட்டி அணைத்து முத்தமிட்டது நமதருமை நாயகம் (ஸல்) அவர்களைத்தான் ! மனிதர்கள் எல்லோருமே என்னைத்தான் முத்தமிடுவீர்கள். ஆனால் நானோ எம்பெருமானாரை முத்தமிட்டவன்.

என்னை சுமப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட ஆரம்ப கட்ட சிரமத்தை நானும் எனது இறைவனுமே நன்கு அறிவோம். அதனை சாதாரண மனிதர்களாகிய நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள் ! இத்தனை நெருக்கடிக்குள்ளும் என்னை சுமந்து எனது பெருமைகளை உணர்ந்து எனது சகவாசம் உலகம் அழியும் வரைக்கும் வாழக்கூடிய தனது உம்மத்தினர் அனைவருக்கும் வேண்டும் என்பதற் காகத்தான் ஆரம்பத்தில் என்னை மாட்டுத் தோலிலும், மரக்கட்டை களிலும் பதிய வைத்து என்னை ஓர் பொக்கிஷமாக உங்களிடம் ஒப்படைத்துள்ளார்கள் நாயகம் (ஸல்) அவர்கள். ஆனால் நீங்களோ, எனது சகவாசத்தை விரும்பாமல் ஷைத்தானின் சகவாசத்தை விரும்பக்கூடியவர்களாக மாறி விட்டீர்கள். “கூடா நட்பு கேடாய் முடியும்” என்ற பழமொழி மறந்து விட்டதோ?

என்னை மறக்க ஆரம்பித்ததும் எவ்வளவு இழிவுகளையும் சோதனை களையும் சந்தித்து வருகிறீர்கள். எனது சிறப்பைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால் ”ஹுதன்லில் முத்தக்கீன்”இறையச்சமுடையவர் களுக்கு நேர்வழி காட்டக்கூடியவனாயிருக்கிறேன். யார் என்னை நம்பி பின்பற்றினாலும் நிச்சயம் நான் அவர்களை ஈருலகிலும் நல்லோர் களாய் வாழச் செய்வேன் என்பதை அளவு கடந்த உறுதியுடன் என்னால் கூற முடியும்.

இன்று யார் யாருக்கோ பின்னால் போய்க்கொண்டிருக்கும் மனிதர்களே ! அவர்களெல்லாம் நாளை மறுமையில் உங்களுக்கு துணை நிற்பவர்கள் என நினைத்தால் ஏமாந்து தான் போவீர்கள். ஒரு காலத்தில் வீடு தோறும் புனிதமானவனாக மதிக்கப்பட்டு உயர்ந்த ரக ஆடைகளை கொண்டு என்னை மூடி வீட்டின் உயர்வான இடத்தில் எனக்கென்று தனியொரு இடம் அமைத்து அதில் வைத்து அழகு பார்த்த நீங்கள் இன்று உங்கள் வீட்டு குழந்தைகளின் பள்ளிக்கூட புத்தகங்களோடும், அறுவருக்கத்தக்க புகைப்படங்களை சுமந்து வரும் நாலாந்தர புத்தகங்களோடும், மார்க்கத்தின் பெயரால் மனிதர்கள் தம் மனம் போன போக்கில் கண்டதையும் எழுதிவரும் மற்ற நூல்களுடனும் சேர்த்தே என்னையும் வைத்து விட்டீர்களே ! இது நியாயமா?

டி.வி. என்ற இப்லீஸின் நாசகார கவர்ச்சி பெட்டிகள் வருவதற்கு முன்பெல்லாம் வீடுதோறும் குடும்ப பெண்கள் அதிகாலையே எழுந்து சுபுஹு தொழுகையை முடித்து விட்டு என்னை கரத்தில் ஏந்தி கம கமக்கும் சந்தன ஊதுபத்தியின் புகையில் எனது வசனங்களை ஓதும் போது வெளியாகும் அந்த இனிமையான ஓசை தென்றல் காற்றோடு கலக்கும் ரம்மியம் தானே, அன்றைய மக்களின் சங்கீதமாய் இருந்தது. ஆனால் இன்றோ நள்ளிரவு வரை டி.வி.யில் தொடர் (சீரியல்) களை பார்த்து விட்டு உறங்குவதால் பள்ளியில் கூறப்படும் அதிகாலை பாங்கின் ஓசைக்கு எதிர் ஓசையாய் உனது குறட்டை சத்தம் வெளி யாவது இறைவனின் கோபத்திற்குரியதல்லவா? ஓ ….. ஜெய்னம்பு பீவியே … படைத்தவனையே மறந்து விட்ட நீ என்னையா கையில் எடுத்து ஓதி விடப் போகிறாய் ?

எனதருமை தெரியாத மனிதர்களே ! என்னைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை கேளுங்கள்;- “திருக்குர்ஆனிலிருந்து சிறிதளவு கூட தம் உள்ளத்தில் மனனம் இல்லாதவர் பாழடைந்த வீடு போன்றவர் ஆவார்.”

(அறிவிப்பாளர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதி)

பார்த்தாயா? நான் இல்லாத இதயம் பாழடைந்த வீட்டைப் போன்ற தாகி விடுகிறது.

என்னைப் பார்த்தால் அதற்கு ஒரு கூலி, ஓதினால், பிறர் ஓத கேட்டால், மனனம் செய்தால் என ஒவ்வொன்றுக்கும் தனிதனி அந்தஸ்தில் இறைவனின் நற்கூலிகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதை மறந்து விட்டீர்களா? வருடம் முழுவதும் என்னை நினைத்து வாழ்ந்த நீங்கள், இன்றோ வருடத்தில் ஒரு மாதம் ரமலானில் மட்டுமே நினைக்க கூடிய பச்சோந்திகளாய் மாறி விட்டீர்கள்.

ஒவ்வொரு நாளும் குளித்து சீவி சிங்காரித்து சுத்தம் செய்து கொள்ளும் நன்றி கெட்ட மனிதனே ! என்னை மட்டும் உன் வீட்டு பரணி மேல் தூசியடைய வைத்து விட்டு ரமலான் வரும் போது மட்டும் சுத்தம் செய்து கையிலெடுப்பது ஓரவஞ்சனையில்லையா? உன் போன்ற சந்தர்ப்ப வாத வேடதாரிகளை நாளை மறுமையில் எனது இறைவனுக்கு முன்பாக தோலுரித்துக் காட்டுவேன். என்பதை நினைவில் வைத்துக் கொள் !

ஒரு நேரத்தில் (ஒளு) சுத்தமில்லாமல் என் அருகில் வருவதற்கே பயந்து நடுங்கிய மனிதன் இன்று குளிப்பு கடமையான நிலையிலும் கூட என்னை சர்வ சாதாரணமாக தொடுவதற்கு துணிந்து விட்ட கன்றாவியை கண்டு சகித்துக் கொள்ள முடியவில்லை. ”லாய மஸ்ஸுஹு இல்லல் முதஹ்ஹரூன்” ( தூயவர்களைத் தவிர மற்றெவரும் அதை தொட மாட்டார்கள் ) என்ற இறை வசனத்தை அவமரியாதை செய்கின்ற பாவத்தை எந்தப் பாவிப்பயல் வழிகாட்டி கொடுத்தானோ? அவன் ஈருலகிலும் நாசமடைவது திண்ணம் !

தமிழக முஸ்லிம்களாகிய நீங்கள் தான் என் சிறப்பை உணராமல் என்னை உதாசீனப்படுத்தி வருகிறீர்கள். ஆனால் ஒரு வகையில் மலேசியா நாட்டு முஸ்லிம்களை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். ஆமாம் அவர்கள்தான் ஆண், பெண் என்ற பாகுபாடில் லாமல் என்னை தலையில் வைத்து கொண்டாடி வருகிறார்கள். மலேசியாவின் கோலா கங்ஸார் என்ற ஊரில் நடக்கின்ற திருமணங் களின் போது திருமணத்திற்கு முதல் நாள் இரவு ஒரு நிகழ்ச்சி நடக்கும்.

பெண் வீட்டில் மணமகன் வீட்டார் உட்பட உறவினர் அனைவரும் கூடி இருப்பார்கள். அச்சம், மடம், நாணம் என்று அந்த காலத்தில் சொல்வார்களே, அத்தனையும் ஒருங்கே பொதிந்த நிலையில் மணப் பெண் வந்து சபையில் அமர்வாள். பிறகு அவளுக்கு முன்பாக வைக்கப் பட்டிருக்கும் திருக்குர்ஆனாகிய என்னை புரட்டி தஜ்வீத் என்ற விதி முறைப்படி எனது வசனங்களை அட்சரம் பிசகாமல் ஓதி முடிப்பாள். பின்னர் எல்லோருக்கும் இனிப்பு வழங்குவார்கள். அதை விட ஓதப் பட்ட தித்திக்கும் எனது வசனத்தை கேட்ட மன நிறைவோடு வந்தவர் கள் வீடு திரும்புவார்கள்.

மணமகளுடைய அழகைவிட, கற்ற அறிவைவிட, பெற்றிருக்கும் செல்வத்தைவிட எனது வசனங்களை பிழையின்றி ஓதுவதில் தான் மணப்பெண்ணின் சிறப்பு இருக்கிறது என்று மலேசியா முஸ்லிம்கள் கருதுகிறார்கள். திருக்குர்ஆனை ஓதுவதில் தான் அந்த எதிர்காலத்தாய், குலவிளக்கு, குடும்பத் தலைவியின் பூரணத்துவம் இருக்கிறது என மலாய் மக்கள் முழு நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள்.

எனதருமை தமிழ் முஸ்லிம் சமுதாயமே, பார்த்தாயா? மலாய் முஸ்லிம்களும் நானும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோமென்று ! பெண் பார்க்கும் படலத்தில் கூட அங்கு என்னைத் தான் முன்னிலைப் படுத்துகிறது மலாய் முஸ்லிம் சமுதாயம். அந்நாட்டில் தான் என்னை ஓதுவதை பெண்களுக்கு ஒரு முக்கியமான அம்சமாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். அங்கு வாழும் தாய்க் குலத்தினரின் முணு முணுப்பும், குழந்தைகளின் தாலாட்டும் கூட எனது வசனங்களாக இருப்பதினாலேயே அகில உலக கிராஅத் போட்டியில்கூட மலாய் மக்கள் அரபுகளை விட சிறப்பாக ஓதி உயர்வான பரிசுகளை பெற்று விடுகிறார்கள்.

ஆனால் நீயோ சினிமா பாடல்களை பாடி உன் குழந்தைகளை தூங்க வைக்கிறாய் ! உன் பிள்ளை கண் விழித்து பாடுவதும் சினிமா பாடல் களாகவே ஆகிவிட்டது. உனது முணு முணுப்பிலும் கூட சினிமா, டி.வி. தொடர் பற்றியேத் தான் போய்க்கொண்டிருக்கிறது. அதனால் தான் உனது வாழ்க்கையும் ஒரு டிராமா போல் முடிந்து விடுகிறது ! எல்லாம் அந்த இப்லீஸ் படுத்தும் பாடுதான் !

இவ்வருட ரமலான் வரைக்கும் நான் உங்களது போலித்தனமான பக்திக்குரிய செல்லப் பிள்ளையாக் இருப்பேன். பின்னர் வழக்கம் போல பரணி மீது படுத்துவிடுவேன். அடுத்த வருட நோன்புவரை ! அறிவுள்ள வர்களுக்கு மட்டும் உறுதியாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். யார் என்னை தங்களது நெஞ்சத்தில் வைத்து பாதுகாக்கிறார்களோ? அவர் களின் மரணத்திற்குப்பின் மண்ணறை வாழ்க்கையின் போது வேதனையை விட்டும் கொடிய விஷமுள்ள பாம்பு, தேள் போன்ற ஜந்துகளின் தீங்குகளை விட்டும் அவர்களை நான் பாதுகாப்பேன். நாளை மறுமையிலும் இறைவனிடம் பரிந்துரை செய்வேன்.

என்னை சுமந்து வாழும் இதயங்கள் மட்டுமே ஈருலகிலும் ஒளி மயமாக இருக்கும். என்னைப் பற்றி இவ்வளவு கூறிய பிறகும் தினந் தோறும் நீ என்னை உன் இதயத்தில் சுமக்க மறுத்தால் நஷ்டம் எனக்கல்ல, உனக்குத்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள் !

( வஸ்ஸலாம்! )

வாசகர்கள் விமர்சனங்களை
SJAROOSI@Yahoo.Com என்ற மின்னஞ்சல் அல்லது 050- 7959960 என்ற கைபேசிக்கோ தெரிவிக்கலாம் !

Thursday, July 16, 2009

திருக்குர்ஆன்

திருக்குர்ஆன்




திருக்குர்ஆன்
இதன் வருகை வானத்திலிருந்து!
இதன் வசனங்கள் இறையின் ஞானத்திலிருந்து !
இது பூத்தபின்தான் மானுடம் தன் மணத்தை
நுகர்ந்தது ! மவுனம் வாய் திறந்து தன் மனத்தைப் பகர்ந்தது.
கூவும் இந்தக் குர்ஆன் எனும் குயிலின் நிறம்
கறுப்பல்ல !

கொட்டும் இந்தக் குர்ஆன் எனும் மழை முகிலின்
நிறம் கறுமையல்ல !
திட்பமும் நுட்பமும் கொண்ட இதன்
தீர்ப்புகள் - வைகறை வாசகங்கள்;
மறுதலிக்கவொண்ணா வாக்கியங்கள் !
இது துயிலெழுப்பும் சூரியன்தான். எனினும்
தொடுகின்ற இதன் கரங்கள் சுடாதவை; தூசுப்
படாதவை !

இது நினைவூட்டும் நல்லவைகளை !
இது நறுக்கெனச் சாடும் அல்லவைகளை !
இதைப் படித்தவர்கள்தாம் உண்மையில்
படித்தவர்கள் !

இதைப் பாராதவர்கள் தங்களைப் பாராதவர்கள் !
உலகத்திற்குள் இது உள்ளதென்றாலும் உலகமே
இதற்குள்தான் உள்ளது !

இது ஒப்பனை இல்லாதது; கற்பனை இல்லாதது !
இதன் சுவடுகள் மலைக்கும் எளிய வழிகாட்டும்;
அலைக்கும் அழியா நிலைகாட்டும் !
துடுப்புகள் தேவையில்லை இந்தத் தோணிக்கு !
கண்களும் தேவையில்லை இதன் வாசிப்புக்கு !
இது காட்டிய மனிதச் சங்கிலியில்
கையுள்ளோரெல்லாம் கலந்து கொள்ளலாம்;
கவுரவம் பெறலாம்.

இதன் இருக்கையோ உச்சரிக்க
முடியாத உயரத்தில் !
இதன் இறக்கையோ உவமிக்க
முடியாத அதிசயத்தில் !
தொல்லியலா? இது சொல்லிக் கொடுக்கும்.
அறிவியலா? இது அள்ளிக் கொடுக்கும்.
இல் இயலா? இது எடுத்துக் கொடுக்கும்.
அரசியலா? இது அடுத்துக் கொடுக்கும்.
பட்டறையில் உருவாகும் ஊசிக்கும் பருத்திக்
கூட்டணியில் உருவாகும் நூலுக்கும் இது
இணைப்புப் பாலமாக இராதிருந்தால் அழகு
உடையை உலகம் அணிந்திருக்காது .
இது பிறந்து வந்த பிறகுதான் பெண்ணியம்
பெற்றது கண்ணியம் ! பிறந்தகம் கண்டது
புண்ணியம் !

இது ஓதுவதற்கு வந்ததென்றாலும் வெறுமனே
பேசுவதற்கு வரவில்லை.
செல்வர்களே, உங்கள் செல்வத்தில் ஏழைகளுக்குப்
பங்குண்டு; கேட்க வெட்கப்படுபவர்களுக்கும்
பங்குண்டு; என்ற இதன் இரட்டை வரிகளும்
முழுமையாக உலகம் ஏற்றால் பரட்டைத் தலையும்
இல்லை; பஞ்சக் குறட்டையும் இல்லை.

குர்ஆன்
குளிக்கக் கிடைத்த குற்றால சோப்பு !
களிக்கக் கிடைத்த கற்கண்டு சூப்பு !
பசிக்குக் கிடைத்த பண்பாட்டு விருந்து !
நோய் தீர்க்கக் கிடைத்த நூதன மருந்து !
தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்

-- நன்றி : சமரசம்

Monday, March 2, 2009

திருக்குர்ஆன்

திருக்குர்ஆன்


குர் ஆன்
இதன் வருகை வானத்திலிருந்து!
இதன் வசனங்கள் இறையின் ஞானத்திலிருந்து !
இது பூத்தபின்தான் மானுடம் தன் மணத்தை
நுகர்ந்தது ! மவுனம் வாய் திறந்து தன் மனத்தைப்
பகர்ந்தது.


கூவும் இந்தக் குர்ஆன் எனும் குயிலின் நிறம்
கறுப்பல்ல !
கொட்டும் இந்தக் குர்ஆன் எனும் மழை முகிலின்
நிறம் கறுமையல்ல !

திட்பமும் நுட்பமும் கொண்ட இதன்
தீர்ப்புகள் – வைகறை வாசகங்கள்;
மறுதலிக்கவொண்ணா வாக்கியங்கள் !

இது துயிலெழுப்பும் சூரியன்தான். எனினும்
தொடுகின்ற இதன் கரங்கள் சுடாதவை; தூசுப்
படாதவை !


இது நினைவூட்டும் நல்லவைகளை !
இது நறுக்கெனச் சாடும் அல்லவைகளை !
இதைப் படித்தவர்கள்தாம் உண்மையில்
படித்தவர்கள் !
இதைப் பாராதவர்கள் தங்களைப் பாராதவர்கள் !

உலகத்திற்குள் இது உள்ளதென்றாலும் உலகமே
இதற்குள்தான் உள்ளது !

இது ஒப்பனை இல்லாதது; கற்பனை இல்லாதது !

இதன் சுவடுகள் மலைக்கும் எளிய வழிகாட்டும்;
அலைக்கும் அழியா நிலைகாட்டும் !
துடுப்புகள் தேவையில்லை இந்தத் தோணிக்கு !
கண்களும் தேவையில்லை இதன் வாசிப்புக்கு !

இது காட்டிய மனிதச் சங்கிலியில்
கையுள்ளோரெல்லாம் கலந்து கொள்ளலாம்;
கவுரவம் பெறலாம்.

இதன் இருக்கையோ உச்சரிக்க
முடியாத உயரத்தில் !

இதன் இறக்கையோ உவமிக்க
முடியாத அதிசயத்தில் !

தொல்லியலா? இது சொல்லிக் கொடுக்கும்.
அறிவியலா? இது அள்ளிக் கொடுக்கும்.
இல் இயலா? இது எடுத்துக் கொடுக்கும்.
அரசியலா? இது அடுத்துக் கொடுக்கும்.

பட்டறையில் உருவாகும் ஊசிக்கும் பருத்திக்
கூட்டணியில் உருவாகும் நூலுக்கும் இது
இணைப்புப் பாலமாக இராதிருந்தால் அழகு
உடையை உலகம் அணிந்திருக்காது .

இது பிறந்து வந்த பிறகுதான் பெண்ணியம்
பெற்றது கண்ணியம் ! பிறந்தகம் கண்டது
புண்ணியம் !


இது ஓதுவதற்கு வந்ததென்றாலும் வெறுமனே
பேசுவதற்கு வரவில்லை.

செல்வர்களே, உங்கள் செல்வத்தில் ஏழைகளுக்குப்
பங்குண்டு; கேட்க வெட்கப்படுபவர்களுக்கும்
பங்குண்டு; என்ற இதன் இரட்டை வரிகளும்
முழுமையாக உலகம் ஏற்றால் பரட்டைத் தலையும்
இல்லை; பஞ்சக் குறட்டையும் இல்லை.


குர்ஆன்

குளிக்கக் கிடைத்த குற்றால சோப்பு !
களிக்கக் கிடைத்த கற்கண்டு சூப்பு !
பசிக்குக் கிடைத்த பண்பாட்டு விருந்து !
நோய் தீர்க்கக் கிடைத்த நூதன மருந்து !


தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்
அலைப்பேசி : 94442 72269



நன்றி : சமரசம் 16-28 பிப்ரவரி 2009
www.samarasam.net

Wednesday, February 25, 2009

துபாயில் திருக்குர்ஆனை ஓத கற்றுக் கொள்ள அரிய வாய்ப்பு

துபாயில் திருக்குர்ஆனை ஓத கற்றுக் கொள்ள அரிய வாய்ப்பு

ஒவ்வொரு எழுத்துக்கும் 10 நன்மைகளை பெற்றுத்தரும் திருமறையினை ஓதத் தெரியாமல் பல சகோதரர்கள் வருத்தப்படுகிறார்கள். இவ்வாறு குர்ஆன் ஓதத்தெரியாமல் இருப்பவர்களுக்காகவும் மற்றும் சிறுவர்களுக்காகவும் துபை நாஸர் சதுக்கத்தில் உள்ள ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் ஹதீத் அலுவலகத்தில் வாரத்தில் 4 நாட்கள் திருக்குர்ஆன் ஓத பயிற்சி அளிக்கப்படுகிறது.

சிறுவர்களுக்கு - அஸர் தொழுகையிலிருந்து மக்ரிப் தொழுகை வரை உள்ள நேரத்தில் வந்து கற்றுக்கொள்ளலாம்.
பெரியவர்களுக்கு - பஜ்ர் தொழுகைக்கு பிறகு


மேலதிக விபரங்களுக்கு மெளலவி நூருல் அமீன் அவர்களை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண் - 055 6462745

தங்களுக்கு தெரிந்தவர்களிடமும் தெரியப்படுத்துங்கள்...

அன்புடன்
ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீத்
துபை
jaqhmoderator@gmail.com

Saturday, February 14, 2009

அபுதாபியில் திருக்குர் ஆனை புரிந்துகொள்ள தமிழில் பயிற்சி வகுப்பு

அபுதாபியில் திருக்குர் ஆனை புரிந்துகொள்ள தமிழில் பயிற்சி வகுப்பு

அபுதாபியில் திருக்குர் ஆனை புரிந்துகொள்ள உதவும் பயிற்சி வகுப்பு ( http://www.understandquran.com ) தமிழில் 20.02.2009 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஈடிஏ ஹெச்.ஆர்.டி. ஹாலில் நடைபெற இருக்கிறது.

மேலதிக விபரம் பெற சையத் ஜாபர் 050-4929184 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






---------- Forwarded message ----------
From: understand Quraan
Date: Sat, Feb 14, 2009 at 1:47 AM
Subject: Understand Quraan in Tamil
To: Muduvai Hidayath , kahidarts@gmail.com
Cc: jafsdeen@yahoo.com, aimanjaafar@gmail.com



Dear Brothers


Assalamu Alaikum....

Please find attached herewith an information on the UNDERSTAND QURAAN http://www.understandquran.com/
programme Insha Allah scheduled to be held in ETA HRD Hall in Abu Dhabi on the 20th Feb 2009, between
5 and 8 PM.

Kindly circulate the attached to all your Abu Dhabi contacts and pass on the message to all tamil speaking
muslims in Abu Dhabi.

Please note that the notice is prepared using Sarukesi font, which is also attached for ready use.

With kind regards
Seyed Jaafar
050-4929184

Monday, September 22, 2008

துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி : யேமன் மாணவர் முதல் பரிசு பெற்றார்




துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி : யேமன் மாணவர் முதல் பரிசு பெற்றார்

http://www.kayalpatnam.in/latest/news-23092008-1
http://www.muduvaivision.com/
http://www.adhikaalai.com/index.php?/en/?????????/?????-???????/???????-?????????????-?????-??????


துபாயில் வருடந்தோறும் சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டிகள் அமீரக துணை அதிபர்,பிரதம அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் ஆதரவில் நடத்தப்பட்டு வருகிறது.

12 ஆவது ஆண்டாக இவ்வாண்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா கண்டங்களைச் சேர்ந்த எண்பத்து ஐந்து நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் யேமன் நாட்டைச் சேர்ந்த ஃபரேஸ் அல் அகம் முதல் பரிசைப் பெற்றார். இவருக்கு திர்ஹம் 250,000 பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

இரண்டாவது இடத்தை லிபியாவின் நூர் அல் தீன் அல் யூனுஸி ( திர்ஹம் 200,000 ), மூன்றாவது இடத்தை குவைத்தின் காலித் அல் அய்னதி ( திர்ஹம் 150,000 ), நான்காவது இடத்தை ஆப்கானிஸ்தானின் மஜித் அப்துல் சமி ( திர்ஹம் 65,000 ), ஐந்தாவது இடத்தை மொரிடானியாவின் அஹ்மது தாலிப் ( திர்ஹம் 60,000 ) ஆறாவது இடத்தை லெபனானின் நாஜிஹ் அல் யாஃபி ( திர்ஹம் 55,000 ), ஏழாவது இடத்தை தைவானின் உசாமா சியான் ( திர்ஹம் 50,000 ), எட்டாவது இடத்தை பாகிஸ்தானின் முஹம்மது ஆலம் ( திர்ஹம் 45,000 ), ஒன்பதாவது இடத்தை கேமரூனின் அப்துல் ரஹ்மான் அட்ஜித் ( திர்ஹம் 40,000 ), பத்தாவது இடத்தை சவுதி அரேபியாவின் தாரிக் அல் லுஹைதான் ( திர்ஹம் 35,000 ) பெற்றனர்.

மேலும் பத்தாவது இடத்திற்குப் பின்னர் எண்பது சதவிகிதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 30,000 மும், 70 முதல் 79 சதவிகித மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 25,000 ம், 70 சதவிகிதத்திற்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 20,000 மும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

சிறந்த குரல் வளத்துக்கான பரிசு மலேசிய மாணவருக்கு வழங்கப்பட்டது.

இப்பரிசுகளை துபாயில் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் வழங்கினார்.

விருது

சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியினையொட்டி வருடந்தோறும் சிறந்த இஸ்லாமிய அறிஞருக்கான விருது வழங்கப்படுகிறது. இவ்வாண்டு இவ்விருது தனிநபருக்கு இல்லாமல் திருக்குர்ஆன் பிரதிகளை அதிக அளவில் அச்சிட்டு வழங்கி வரும் சவுதி அரேபியாவின் மன்னர் பஹத் திருக்குர்ஆன் அச்சகத்துக்கு வழங்கப்பட்டது. இதுவரை 200 மில்லியன் திருக்குர்ஆன் பிரதிகள் இவ்வச்சகத்தின் மூலம் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வருடந்தோறும் 10 மில்லியன் திருக்குர்ஆன் பிரதிகள் இங்கு அச்சிடப்பட்டு வருகின்றன. 30 மில்லியன் திருக்குர்ஆன் பிரதிகள் அச்சிடப்படுவதற்குரிய வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கான பரிசுத்தொகை திர்ஹம் ஒரு மில்லியன் ஆகும். இதன் மூலம் இவ்வச்சகம் இன்னும் பன்மடங்கு விரிவுபடுத்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வருடந்தோரு இப்போட்டிகள் பெருமளவு மக்களைக் கவர்ந்துள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் இப்போட்டியைக் காணவருவது இப்போட்டிக்கு ஏற்பட்டு வரும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திவருவதாக இப்போட்டிக்கான தலைவர் இப்ராஹிம் பூ மெல்ஹா தெரிவித்தார்.

http://www.kayalpatnam.in/latest/news-23092008-1

Saturday, September 13, 2008

துபாய் : திருக்குர்ஆன் ஓதுபவர்களை அது கண்ணியப்படுத்தும் : போட்டியாளார்கள்

Recitation of Holy Quran Brought Honour to Them, say ContestantsAhmed Shaaban

14 September 2008

http://www.khaleejtimes.com/DisplayArticle.asp?xfile=data/theuae/2008/September/theuae_September320.xml§ion=theuae&col=

DUBAI — Mohamed bin Ahmed Zahid from Malaysia, a contestant for the Dubai International Holy Quran Award, is only 13. He says the Holy Quran has changed his behaviour, manners and whole life for the better.

“I call upon memorisers of the Holy Quran to be patient and never to give up. The blessings and light of the Holy Quran will fill their life,” he said.

“I am really grateful to my parents who have always supported me to memorise the Holy Quran.

“I have been nominated for the award by the Dar Al Hikma Islamic Centre, following a number of local competitions. I started memorising the Holy Quran at the age of seven and finished at 10,” he added.

Arabic language was an obstacle for him in the beginning but now, he has good command of it, thanks to the Holy Book. “I used to read and revise five to 10 parts of the Holy Quran everyday,” Zahid said.

Eighteen-year-old Abdul Haq Al Beryaq from Spain used to revise 10 parts of the Holy Quran per day.

“I started memorising the Holy Quran with the help of my uncle at the age of 12 and finished in two years,” he said, adding Arabic Language was never a problem for him as he is originally from Morocco.

“The Islamic Centre of Valencia has nominated me for the award, following a number of local competitions,” he explained.

“The award is a great opportunity to know, communicate and compete with contestants from other countries. The Holy Quran helps me a lot in my life and makes people respect me more.”

Hoping to be the Imam of the Holy Mosque in Makkah, 17-year-old Usama Mohamed Yusef Chian from Taiwan said he started memorising the Holy Quran when he was six and finished at the age of 12.

“The Chinese Islamic Association of Taiwan has nominated me for the award after I showed competence in an international contest as well as five local competitions,” he said.

“I used to revise eight to ten parts of the Holy Quran on a daily basis. I have always encouraged my brother and sister to memorise the Holy Book,” he said.

For 18-year-old Tariq Zeyad Abdul Fattah from Jordan, the Holy Quran is the most precious treasure he has ever obtained. “I started memorising the Holy Quran at the age of five at the mosque, and finished at nine,” he said, adding that both his parents, especially his father, used to encourage and reward him to learn the Holy Book. They always pushed him to follow the footsteps of his two brothers.

Having shown efficiency in memorising and reciting the Holy Quran, Tariq was nominated for the award by the Jordanian Ministry of Auqaf.

“I have been very keen to participate in this award for nothing but God’s pleasure. I also wanted to please my parents and proudly represent my country

Tuesday, September 9, 2008

துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியில் முத்திரை பதித்த முதல் போட்டியாளர்


துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியில் முத்திரை பதித்த முதல் போட்டியாளர்

துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி 12 ஆம் ஆண்டாக இவ்வாண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 11 ஆண்டுகளாக துபாய் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அரங்கில் நடைபெற்று வந்த இப்போட்டிகள் இவ்வாண்டு மம்சார் பகுதியில் உள்ள கலாச்சார மற்றும் அறிவியல் சங்க அரங்கில் நடைபெற்று வருகிறது.

திருக்குர்ஆன் மனனப் போட்டியில் முத்திரை பதித்த முதல் போட்டியாளரான கிழக்கு ஆப்பிரிக்காவின் புருண்டி நாட்டைச் சேர்ந்த பதினான்கு வயது நிரம்பிய நியாந்வி மஜலிவா கூறுவதைக் கேளுங்கள் இதோ :

தனது நாடான புருண்டி கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. வடக்கே ருவாண்டாவும், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் டான்ஸானியாவும், மேற்குப் பகுதியில் காங்கோ நாடும் உள்ளன.

எனது தாயாரின் அறிவுரைப்படி திருக்குர்ஆனை மனனம் செய்யத் தொடங்கினேன்.பத்து வயதான போது திருக்குர்ஆனை மனனம் செய்யத் தொடங்கிய நான் 2007 ஆம் ஆண்டு நிறைவு செய்தேன்.

அரபி மொழி ஆசிரியரின் உதவியுடன் அரபி மொழி ஓதக் கற்றுக்கொண்ட நான், தனது தாயாரின் உந்துதலின் காரணமாகவே திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது என்கிறார்.

தனது தகப்பனார் ஒரு சிறிய வணிகர் என்றும், காலை பஜ்ர் தொழுகைக்குப் பின்னர் பள்ளி செல்லும் வரையிலும், பின்னர் பள்ளி விட்டு வந்த பின்னர் சூரியன் மறையும் வரையிலும் நான் திருக்குர்ஆன் மனனம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தேன். இதற்காக எனது ஊரில் மிகச் சிறப்பாக கௌரவப்படுத்தப்பட்டேன்.

தனது ஊரில் 62 சதவீதம் பேர் ரோமன் கத்தோலிக்கர் எனவும்,8 முதல் 10 சதவீதம் பேரே முஸ்லிம்கள் என்றார். மீதமுள்ளவர்கள் கிறிஸ்துவத்தின் பிற பிரிவுகளைச் சேர்ந்தோராவர்.

உள்நாட்டுப் போரின் காரணமாக தனது நாடு போதிய வளர்ச்சியடையவில்லை என்கிறார் நியாந்வி. தனது நாடு உலகிலுள்ள பத்து ஏழை நாடுகளில் ஒன்றாக இருந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

http://www.gulfnews.com/nation/Heritage_and_Culture/10243869.html

Friday, August 29, 2008

துபாயில் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி


துபாயில் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி

துபாயில் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி ( www.quran.gov.ae ) செப்டம்பர் எட்டாம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை துபாய் அல் மம்சார் பூங்கா அருகில் அமையப்பெற்றுள்ள கலாச்சார மற்றும் அறிவியல் கழகத்தில் நடைபெற இருக்கிறது.

இப்போட்டிகள் 1997 ஆம் வருடம் துவங்கப்பட்டு 12வது வருடமாக அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களது ஆதரவில் நடைபெற்று வருகிறது. இவ்வருடம் 85 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க இருப்பதாக இப்போட்டிகளுக்கான ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் இப்ராஹிம் முஹம்மது பு மெல்ஹா தெரிவித்துள்ளார். முதல் முறையாக ஸ்விட்சர்லாந்து, உஸ்பெஸ்கிஸ்தான், போஸ்ட்வானா மற்றும் ஜான்சிபார் உள்ளிட்ட நாடுகள் முதல் முறையாகப் பங்கேற்கின்றன.


கடந்த காலங்களை விட ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அல்ஜீரியாவில் இருந்து பங்கேற்கு ஒன்பது வயது மாணவர் பதேஹ் பாதி மிகவும் இளவயது போட்டியாளர். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட நாடுகள் வருடந்தோறும் பங்கேற்று வருகின்றன.


இப்போட்டியினையொட்டி சிறப்பு தொலைக்காட்சி சேனலும் துவங்கப்பட இருக்கிறது. போட்டிகள் தொடர்பான நிகழ்வுகள் அனைத்தையும் உலகெங்கும் உள்ளோர் பார்க்கும் வண்ணம் இவ்வசதி செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டி நடத்தும் அமைப்பின் சார்பில் வருடந்தோறும் சிறந்த இஸ்லாமிய அறிஞர் விருது, அமீரக அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டி, சிறைக்கைதிகளுக்கான திருக்குர்ஆன் மனனப் பயிற்சி, இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள், திருக்குர்ஆன் அறிவியல் நிகழ்ச்சி உள்ளிட்ட பலவேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

சிறந்த இஸ்லாமிய அறிஞர் விருதுக்காக தேர்வு செய்யப்படுவருக்கு திர்ஹம் ஒரு மில்லியன் வழங்கப்படும். திருக்குர்ஆன் மனனப்போட்டியில் வெற்றி பெறும் முதல் பத்து போட்டியாளர்களுக்கு முறையே திர்ஹம் 250000, 200000, 150000,65000,60000,55000,50000,45000,40000,35000 வழங்கப்படும்.

இப்போட்டிகளுக்கான நடுவர்கள் சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்டான், நைஜீரியா, சிரியா மற்றும் போஸ்னியா ஹெர்சகோவினா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகை புரிந்துள்ளனர்.

Saturday, August 2, 2008

திருக்குர்ஆன் இணையத்தளம்

கீழ்க்கண்ட

திருக்குர்ஆன் இணையத்தளம்

அரபி - ஆங்கிலம்
அரபி - உர்தூ

உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஓதுவதைக் கேட்டு பயன் பெறலாம்

http://www.quranexplorer.com/quran/

அரபி மொழியை உச்சரிப்புடன் பயில உதவும் இணையத்தளம்

http://www.multimediaquran.com/

Sunday, July 27, 2008

திருக்குர்ஆனும் - திருக்குறளும்

திருக்குர்ஆனும் - திருக்குறளும்

தொகுப்பு : எம். முஹம்மது மஸ்தான், எம்.ஏ., பிஎஸ்ஸி
தலைமையாசிரியர் - ஓய்வு


விதிப்பற்றி திருக்குரானும்,திருக்குறளும்

இறைவன் கொடுத்ததை தடுப்பவன் எவனுமில்லை.
இறைவன் தடுத்ததை கொடுப்பவன் யாருமில்லை.
இறைவனின் அனுமதியின்றி எதுவும் நடப்பதில்லை.
இதை திருக்குர்ஆன்( 15 145 ) தெளிவு படக் கூறுகிறது.

மேலும் எந்த ஆன்மாவும் ( முன்னரே ) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க அல்லாஹ்வின் அனுமதியின்றி மரணிப்பதில்லை. எவரேனும் இந்த உலகத்தின் நற்பலனை ( மட்டும் ) விரும்பினால் நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்கிவிடுவோம். இன்னும் எவர் மறுமையினையும், நன்மையையும் விரும்புகிறானோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம். நன்றியுடையோருக்கு அதி சீக்கிரமாய் நற்கூலி கொடுக்கிறோம்.

இதையே வள்ளுவர் தமது வான்மறையில் ஒரு கோடி பொருளை சேர்த்து ஒழுங்குப்படுத்தி வைத்திருந்தாலும் இறைவன் விதித்த வகையால் அல்லாமல் அவற்றை அனுபவிக்க முடியாது என்ற கருத்தை -

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
கொடுத்தார்க்கும் துய்த்தல் அரிது

என்ற குறலால் விளக்கப்படுகிறது.

கஞ்சத்தனமும், ஊதாரித்தனமும்

திருக்குர் ஆனில் ‘கஞ்சத்தனமுமாக உம்முடைய கையைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர். உம்முடைய வாயை முற்றிலும் விரித்து விடாதீர் ( 17 : 29 ) இதனை வள்ளுவர் கஞ்சத்தனமிக்கவன் இந்த பூமிக்கு பாரம் என்பதை -

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை

என்ற குறளிலும் ஊதாரித்தனம் இல்லாமல் முறையாக செலவு செய்வது பற்றி

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி

என்ற குறளிலும் தெளிவாக விளக்குகிறார்.

தீயசெயல் பற்றி திருக்குரானும், திருக்குறளும்

மனிதர்களே : உங்களுடைய அடாத செயல்கள் ( தீய செயல்கள் ) உங்களுக்கே கேடாக முடியும் குரான் ( 10 : 23 ) இதனை வள்ளுவர்

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

என்ற குறளில் தீயைக் காட்டிலும் தீயவை கொடுமையானது என்று கூறுகிறார்.

புறங்கூறுதல் பற்றி குரானும், குறளும்

பிறர் குறைகளை நீங்கள் துருவித் துருவி கொண்டிராதீர். அன்றியும் சிலர் சிலரைப் பற்றியும் புறம் பேச வேண்டாம் 50 : 2(16) இது பற்றி திருக்குறள் கீழ்வரும் குறள்களில் தெளிவாக விளக்குகிறது. பிறர் குறைகளைக் காண்பதுபோல் தம் குறைகளைக் கண்டு உணர்ந்தால் இந்த மண்ணுலகில் தீதில்லை என்பதை -

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டா மன்னும் உயிர்க்கு ?

என்ற குறளிலும், ஒருவன் தர்மம் என்னும் சொல்லைக்கூட சொல்லாமல் தீயவை செய்து ஒழுகினாலும் அவன் புறங்கூறமாட்டான் என்று நற்பெயர் எடுப்பதே நல்லது என்பதை -

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது

இக்குறளிலும் விளக்குகிறார்.

இன்னா செய்யாமை பற்றி இறைமறையும் இனிய குறளும் :

இறைமறையில், நன்மையும், தீமையும் சம்மாகமாட்டா. நீங்கள் ( தீமையை ) தன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது யாருக்கும் உமக்கும் இடையே பகைமை இருந்ததோ அவர் நண்பரே போல் ஆகிவிடுவார். 41:5(34) இதை திருக்குறள் நமக்கு தீங்கு செய்பவரை தண்டிப்பது அவர் வெட்கம் அடையும்படி அவருக்கு நல்லதைச் செய்தலே ஆகும். இதனால் அவர் தாம் செய்த செயலுக்கு வருந்தி வெட்கப்பட்டு திருந்துவார் என்பதை -

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

என்ற குறளில் விளக்குகிறார்.

ஷக்கராத் பற்றி திருக்குறள்

எல்லா மனிதருக்கும், இறக்கும் தருவாயில் ‘சக்கராத்' என்ற நிலை ஏற்படும். அந்த நிலை வருவதற்கு முன்பாக எல்லாம் வல்ல இறைவன்பால் ஈமான் கொண்டு நல்வினை ஆற்றிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது திருக்குரான். இதனையே திருவள்ளுவார் நாக்கு பேசமுடியாமல் செத்துவிக்கும் முன்பே நல்ல செயல்களை செய்திடல் வேண்டும் என்ற கருத்து மேலோங்கி கீழ்வரும் குறளில் சொல்லுகிறார்.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்

எல்லாப்புகழும் இறைவனுக்கே :

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று திருக்குர்ஆன் ‘அல்ஹம்துலில்லாஹ்' என்ற வாக்கியத்தின் மூலம் இயம்புகிறது. இதனை திருவள்ளுவர் தலைமைக் குணங்களுடைய இறைவனின் மெய்யான புகழை இடைவிடாது அன்போடு சொல்லுபவர்பால் ‘இருள்சேர் இருவினையும் சேரா'என்பதை சொல்லுவது மூலம் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதை வலியுறுத்துகிறது.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்பரிந்தோர் மாட்டு

என்ற குறளில் தெளிவுபடக் கூறுகிறார்.

நன்றி : இஸ்மி
ஜூலை 2005

Monday, July 7, 2008

துபாயில் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள்

துபாயில் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள்

துபாய் தேரா கோட்டைப் பள்ளியில் வாரந்தோறும் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்கள் இஷா தொழுகைக்குப் பின்னர் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலதிக விபரம் பெற : மௌலவி இஸ்மாயில் ஹஸனி 050 29 28 746

Thursday, March 13, 2008

Easy Way to Understand Quran & Salah

Bismillah
Assalamu Alaikum Rah
Insha Allah
Basic course -
Easy Way to Understand Quran & Salah,

will be held every Sunday starting from 23.03.08 . (Total classes :10)
Time : 9 AM to 12 Noon
in, Chennai (Venue will be informed Later)
Course Fee : Rs 650 with materials.

Are U Willing to Join ?

Please confirm through SMS to 9841223553

or email uqchennai@gmail.com,
or call: 9994578210, 9894379102

JOIN UNDERSTANDQURANCHENNAI GOOGLEGROUP : PLS SEND A BLANK MAIL TO UNDERSTANDQURANCHENNAI-SUBSCRIBE@GOOGLEGROUPS.COM

Friday, February 15, 2008

சென்னையில் திருக்குர்ஆனை அறிந்து கொள்ள உதவும் எளிய பயிற்சி வகுப்புகள்

சென்னையில் திருக்குர்ஆனை அறிந்து கொள்ள உதவும் எளிய பயிற்சி வகுப்புகள்


சென்னை கலைவாணர் அரங்கத்தில் திருக்குர்ஆனை அறிந்து கொள்ள உதவும் எளிய பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 17 மற்றும் 24 ஆகிய இரு தினங்கள் காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை நடைபெற இருக்கிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீம் இப்பயிற்சியினை ஆங்கிலத்தில் அளிக்க இருக்கிறார். இவர் சவுதி அரேபியாவின் தஹ்ரானில் உள்ள மன்னர் பஹத் பெட்ரோலியம் மற்றும் மினரல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். தமிழக மக்களுக்கு பயிற்சி அளிப்பதெற்கென பிரத்யேகமாக வருகிறார்.

இரண்டு நாள் பயிற்சியுடன் பாடப்புத்தகம், குறுந்தகடு, சிற்றுண்டி மற்றும் குறிப்பேடுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக நூறு ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள இல்ம் கல்வி அறக்கட்டளை, ஐ மேக்ஸ் நர்சரி மற்றும் துவக்கப்பள்ளி, மலபார் அசோஷியேஷன் ஜலாலுதீன், பிராட்வே யாசின் டெக்ஸ், ஆலந்தூர் அனிஸ் இன்போடெக், வில்லிவாக்கம் ஒன் ஸ்டாப் சொலுசன் செண்டர் உள்ளிட்ட இடங்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம். மேலும் 9994578210 / 9884492862 / 9894379102 / 9841223553 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வில்லிவாக்கம் ஒன் ஸ்டாப் சொலுசன் செண்டர் மற்றும் இல்ம் கல்வி அறக்கட்டளை ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.

www.sidconagar.com
www.ilmtrust.org