Monday, June 2, 2008

கீழக்கரைஅரபு கல்லூரி பட்டமளிப்பு விழா

கீழக்கரைஅரபு கல்லூரி பட்டமளிப்பு விழா


கீழக்கரை, ஜுன்.2-

கீழக்கரை அரூஸிய்யா தைக்கா அரபு கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

அரபு கல்லூரி

கீழக்கரையில் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு 1671-ம் ஆண்டு மேலத்தெருவில் இஸ் லாமிய மார்க்க மகான் சதக் கத்துல்லா அப்பா என்பவ ரால் அரபு கல்லூரி தொடங் கப்பட்டது. இந்த கல்லூரிக்கு அல்மதரசத்துல் அரூஸிய்யா தைக்கா அரபிகல்லூரி என்று பெயர்.

இங்கு அரபு மொழி கல்வி கற்கும் ஆலிம், உலமாக்களுக்கு இலவச உணவு, தங்குமிடம் வழங்கப்படுகிறது. இந்த கல் லூரியை தைக்கா சாகிபு ஒலியுல்லா மற்றும் மார்க்க மாமேதை செய்யது முகமது மாப்பிள்ளை லெவ்வை ஆலிம் ஆகியோரின் வாரிசு கள் நிர்வகித்து வருகின்ற னர்.

பட்டமளிப்பு விழா

இந்த கல்லூரியின் மவுலவி ஆலிம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு டிரஸ்டி அல்ஹாஜ் டி.எம்.அகமது அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். சென்னை சுலைமான் அறக் கட் டளை தலைவர் அல்ஹாஜ் கே.எஸ்.எம்.சாகுல்ஹமீது ஆலிம் முன்னிலை வகித்தார். அல்மதரஸத்துல் அரூஸிய்யா தைக்கா டிரஸ்டி அல்ஹாஜ் கே.டி.எம். அகமது முஸ்தபா வரவேற்று பேசினார். டிரஸ்டி டி.எஸ்.ஏ.ஹமீது அப்துல் காதிர் அறிமுக உரையாற்றி னார்.கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளி வாசல் கத்தீபு எம்.அஜ்மத் உசேன் ஆலீம் தொடக்க உரையாற்றினார். காயல்பட்டிணம் மதரஸா மஹ்ரத்துல் காதிரியா அரபி கல்லூரி முதல்வர் எஸ்.கலந் தர் மஸ்தான் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு பேசி னார்.

விழாவில், கல்லூரி மேனே ஜிங் டிரஸ்டி அல்ஹாஜ் டாக் டர்.தைக்கா சுஐபு அலீம் கலந்து கொண்டு மாண வர்களுக்கு மவுலானா மவு லவி பட்டங்களை வழங்கி பேசினார். இதில் தைக்கா டிரஸ்டி அல்ஹாஜ் தைக்கா அகமது ஷாகீர், கீழக் கரை செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி பேராசிரியர் எம்.ரபீக் அகமது, அல்மதரசத்துல் அரூ ஸிய்யா தைக்கா பேராசிரி யர்கள் கே.ஏ.முகைதீன் அப் துல் காதர், எச்.முகைதீன் அப்துல்காதர், எம்.ஐ.முகமது சுல்தான், எஸ்.எஸ்.சலாஹூ தீன் ரிபாயி ஆகியோர் வாழ்த்தி பேசினர். டிரஸ்டி, அல்ஹாஜ் தைக்கா முகமது அஷரப் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

கலந்து கொண்டோர்

விழாவில் சீதக்காதி அறக் கட்டளை செயலாளர் காலித் ஏ.கே.புகாரி, இ.டி.ஏ. ஸ்டார் நிறுவனங்களின் நிர்வாகி ஷாக் கிர், உஸ்வத்துன் ஹசனா சங்க செயலாளர்எம்.கே.எம்.அசன் தம்பி, கே.வி.எம்.கïம், இஸ் லாமி பைத்துல்மால் -குத்பா கமிட்டி செயலாளர் மைதீன் தம்பி, டாக்டர்.செய்யது அப் துல்காதர், என்.டி.எம்.அகமது பாரூக், சா.கி.மு.ஹபீபு முக மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஹமீது சுல்த்தான் ஆலிம் அரூஸி உள்பட பல ருக்கு மவுலானா மவுலவி பட்டங்களும் மற்றும் அவர் கள் படித்த கல்வி படிப்புக் கான பட்டங்களும் வழங்கப் பட்டது. முடிவில் கல்லூரி முதல்வர் சலாகுதீன் ஆலிம் நன்றி கூறினார். கீழக்கரை மேலத்தெரு பள்ளிவாசல் இமாம் அல்ஹாஜ் எஸ்.ஏ.முக மது ஆரிப் ஆலிம் துஆ ஓதி னார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=416316&disdate=6/2/2008&advt=2

No comments: