Monday, June 2, 2008

ராமநாதபுரம் மாவட்டத்தில் மெட்ரிக் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி

ராமநாதபுரம் நேஷ னல் அகாடமி மெட்ரிக் பள்ளி மாணவி பாயிஹா, 471 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலி டம் பெற்றார். பாடவாரி யாக இவர் பெற்ற மதிப்பெண்: தமிழ்-93, ஆங்கிலம்-91, அறிவியல்-95, கணிதம்-99, வரலாறு மற்றும் புவியியல்-93. மாணவி பாயிஹாவின் தந்தை சகுபர் சாதிக், தாய் ஷபீகா ஆகியோர் டாக்டர்கள். பாயிஹாவின் சகோதரி தஹ்சினீ நிலோபர், கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 4 பாடங்களில் 100 சதவீத மதிப்பெண் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது வெற்றி குறித்து மாணவி பாயிஹா கூறுகையில், `பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்க வேண்டும். பின்னர் மருத்துவம் படித்து சமூக சேவை செய்வதே எனது விருப்பம்' என்றார்.

No comments: