Tuesday, March 24, 2009

இஸ்லாமிய இலக்கியவாதிகளுக்கு இனிய செய்தி !

இஸ்லாமிய இலக்கியவாதிகளுக்கு இனிய செய்தி !

இனியவர்களே !
அஸ்ஸலாமு அலைக்கும்

தமிழில் எழுதும் முஸ்லிம் படைப்பாளிகளின் சிறுகதைகளில் சிறந்த சிறுகதைகளை தொகுத்து நல்ல சிறுகதை தொகுப்பு இதுவரை வெளிவரவில்லை என்ற குறை இஸ்லாமிய இலக்கியத்துறையில் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இலக்கியத்தரம் வாய்ந்த இஸ்லாமிய வரம்புகளுக்குட்பட்ட படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் எழுத்தாளர்களின் சிறுகதைகளில் ஒவ்வொரு எழுத்தாளர்களின் சிறுகதைகளில் மிகச்சிறந்த ஒரு கதையை தேர்வு செய்து “இதயத்தைக் கவர்ந்த இஸ்லாமிய இலக்கியக் கதைகள்” என்ற நல்ல சிறுகதை தொகுப்பு ஒன்று வெளியிட வேண்டும் என்பது என் கன்வு !

இத்தொகுப்பிற்காக... தாங்கள் எழுதிய சிறுகதைகளில் மிகவும் சிறந்த கதையாக தாங்கள் கருதும் கதையை அனுப்புங்கள் ! தங்கள் சக எழுத்தாளர்கள் எழுதிய கதைகளில் தங்களுக்குப் பிடித்த சிறுகதையையும் ( எழுதியவர் பெயரோடு ) அனுப்பி வைக்கலாம் ! வாசகர்கள் தாங்கள் படித்த கதைகளில் தங்கள் மனசுக்குப் பிடித்த சிறுகதையை ( எழுதியவர் பெயரோடு ) அனுப்பி வைக்கலாம் !

சகோதர சமுதாய மக்களும் இஸ்லாத்தின் மேன்மையை உணரும் வகையில் சிறுகதைகள் உணர்ச்சி பூர்வமாக இருக்க வேண்டும். பிற மதத்தவர்களின் மனதை காயப்படுத்தும் வகையில் கண்டிப்பாக கதை இருக்கக் கூடாது.

வியாபார நோக்கத்தோடு இந்நூலை தயாரிக்கவில்லை. இஸ்லாமிய இலக்கியம் பரவலாக்கப்பட வேண்டும். முஸ்லிம் படைப்பாளிகள் கௌரவிக்கப்பட வேண்டும் என்ற உயரிய இலட்சியத்துடனே இந்நூல் தயாராகிறது.

இன்ஷா அல்லாஹ் ........ வந்து சேரும் சிறுகதைகள் ஜே.எம்.சாலி, ஹிமானா சையத், ஜின்னாஹ் ஷரீபுத்தீன், சிராஜுல் ஹஸன் போன்ற இஸ்லாமிய இலக்கியவாதிகளின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் கதைகள் அழகிய நூல் வடிவில் மலரும். ஆண்டவன் நாடினால் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் அணிந்துரையோடும், மானுட வசந்தம் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களின் மதிப்புரையோடும் வெளிவரும் !

சிறுகதை நகலை ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : trichysyed@yahoo.com

கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி : 31.12.2009



மகிமையும், மேன்மையும் நிறைந்த அல்லாஹ் நம் முயற்சிகளுக்கு துணை நிற்பானாக !

தோழமையுடன்

திருச்சி சையது

No comments: