Sunday, January 4, 2009

கேரம் போட்டி: கீழக்கரை பள்ளி மாணவர்கள் முதலிடம்

கேரம் போட்டி: கீழக்கரை பள்ளி மாணவர்கள் முதலிடம்


கீழக்கரை, ஜன. 3: ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை மாவட்ட அளவில் நடைபெற்ற இரட்டையர் கேரம் போட்டியில், கீழக்கரை மஹ்தூமியா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முதல் இடத்தைப் பிடித்தனர்.

ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த இரட்டையர் கேரம் போட்டியில், கீழக்கரை மஹ்தூமியா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் எம். ஹீப்பத்துல்லா, ஏ. அஜ்மீர் இர்சாத் ரசூல் ஆகியோர் வெற்றி பெற்று, முதல் பரிசாக ரூ. 4,000 மற்றும் அதற்கான சான்றிதழையும் பெற்றனர்.

வெற்றிபெற்ற மாணவர்களை, பள்ளியின் தாளாளர் ஏ.கே.எஸ். ஹிதாயத்துல்லா, தலைமை ஆசிரியர் ஏ. ஜரீனா லோட்டஸ், உடற்கல்வி ஆசிரியர் ஐ. பாபு ஆபிரகாம் ஆகியோர் பாராட்டினர்.

மேலும், இவர்கள் மாநில அளவிலான போட்டிக்கும் தேர்வு பெற்றுள்ளனர்.

No comments: