Sunday, January 4, 2009

ஊர்

சமிபத்தில் படித்ததில் இருந்து....... சில....

நபி இப்ராஹிம் அவர்கள் ஈராக் இல் “ஊர்” எனும் இடத்தில் பிறந்து வாழ்ந்து ஆட்சி செய்தார்கள். இது பாரசிகம் எனவும் அழைக்கப்பட்டது. "ஊர்” எனும் சொல் நாம் நினைப்பது போல் திராவிட மொழி சொல் அல்ல. இது ஒரு சுமேரிய மொழிச் சொல் ஆகும்.

மக்கள் நெருக்கமாக விவசாய நாகரிகத்தோடு, வியாபாரமும் செய்த மக்கள் குடியிருந்த இடங்களெல்லாம் “ஊர்” என அழைக்கப்பட்டது.

ஈரானில் நிசாபூர் எனும் ஒரு இடம் இருக்கிறது. இங்கு தான் உலக புகழ் பெற்ற கவிஞர் உமர்கையாம் பிறந்தார்.

ஆப்கனிஸ்தான் இல் உள்ள ஜோபூர்
பங்களாதேஷில் உள்ள தினாஜ்பூர்
இந்தியாவில் மைசூர், பெங்களூர், நாக்பூர், ஜெய்பூர், நாகூர்
துர்கியில் உள்ள ஷோக்பூர்
கம்போடியாவில் ஹங்கூர்
ரஷ்யாவில் பைலூர்
மலேசியாவில் சிலாங்கூர், கோலாலம்பூர்
சிங்கப்பூர்
பாகிஸ்தானில் லாகூர், பாகல்பூர்
இலங்கையில் தோப்பூர், மூதூர், மருதூர், நல்லூர், சம்பூர், நிந்தவூர், கோவிலூர், பச்சனூர், மயிலங்கடலூர், ஏறாவூர், மகிளூர்.

தமிழகத்தில் உள்ள சில ஊர்களின் பெயர்கள்:
வழுத்தூர், கூத்தாநல்லூர், பேகம்பூர், லால்பூர், திருவாங்கூர்,
எழும்பூர், பர்கூர், தானூர், கொடுங்கலூர், கண்ணனூர், திருவிடைமருதூர், வடலூர், ஆரய நல்லூர், கீழூர், சீழசாத்தனூர், மாணிக்கபூர், பெரம்பூர், நெல்லூர், கரூர், மாலையூர், கோயம்புத்தூர், பனையூர், வேலம்புதூர், வண்டியூர், கண்டியூர், மணலூர், செம்பனூர், அரியலூர், காட்டுபுதூர், ஆரூர், புத்தூர், எருக்கூர், நீடூர், ஆலந்தூர், சாத்தூர், சானூர், குன்னூர், அரசூர், மைலாப்பூர், திருப்பூர், கடலூர், முசாபூர், வடலூர், ஆம்பூர்.

உலக நாடுகள் பலவற்றிலும் ஊர் எனும் சொல்லோடு கூடிய பகுதிகள் உள்ளன.

மேலும் எங்கு எல்லாம் “ஊர்” எனும் சொல்லோடு கூடிய “ஊர்” இருக்கிறதோ அங்கு எல்லாம் முஸ்லிம்கள் பெருபான்மையாக இருப்பார்கள் என்பது நிஜம்.

Rajaghiri Gazzali

No comments: