Thursday, May 1, 2008

இறையச்சம்

இறையச்சம்

கவிஞர் திலகம் ம. முஹம்மது மைதீன்

அச்சம் பறந்து விடும் - இறையச்சம்
ஆன்மா குடிபுகுந்தால் - அறம்
உச்சத்தில் நின்றாடும் - செயலில்
உண்மை ஒளிர்வதனால் !

பொங்கும் கவிதைகளில் - இறையச்சம்
பூத்துமணம் பரப்பும் - இதத்தில்
தங்கி அருவியெனத் - தீன்மொழி
தவழ்ந்தே நெறிநிரப்பும் !

வாழும் உயிர்களிலே - இறையாக்க
வார்ப்படம் மின்னுதல்போல் - துயர்
சூழும் மதவெறிகள் - நீங்கித்
தூய்மைதலை தூக்கும் !

தாய்மையைப் போற்றிடுவீர் - பெண்குலத்
தலைமையை ஏற்றிடுவர் - கற்பின்
தூய்மை இருபாலர் - தமக்கும்
தொடர்பெனக் கொண்டிடுவர் !

தீவிர வாதமெனும் - கொடிய
தீயை அணைத்துவிடும் - இறையச்சம்
மேவிய நெஞ்சத்திலே - வன்முறை
மேகமென மறையும் !

பாதை நெற்மறந்தால் - திருமறைப்
பாடநெறி துறந்தால் - இரு
காதுக ளற்றயானை - போலக்
காட்சி யளிப்பாரே !


இனிய திசைகள் - பிப்ரவரி 2008 இதழிலிருந்து

27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 2 493 6115

No comments: