Thursday, May 1, 2008

தமிழ்நாடு வக்ஃப் வாரிய நிதி உதவி திட்டங்கள் !

தமிழ்நாடு வக்ஃப் வாரிய நிதி உதவி திட்டங்கள் !

தமிழ்நாடு வக்ஃப் வாரியம் கீழ்க்கண்ட திட்டங்களின் கீழ் நிதி உதவி அளித்து வருகின்றன.

1. உலமா ஓய்வு ஊதியத் திட்டம் :

இத்திட்டத்தின்படி வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்ட்ட அல்லது தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்ட வக்ஃப் நிறுவனத்தில் குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் பேஷ்இமாமாக அல்லது முஅத்தீனாக அல்லது அரபி ஆசிரியராக அல்லது ஆசிரியை ஆகப்பணி புரிந்த 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின்படி மாதம் ரூ. 750/- உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2200 பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின்கீழ் இதுவரை சுமார் 2125 பேர் மட்டுமே பயன்பெற்றுள்ளார்களென்பது குறிப்பிடத்தக்கது.

2. பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் மற்றும் தர்காக்கள் பழுதுபார்க்க அல்லது புதுப்பிக்க உதவி :

இத்திட்டத்தின்படி உதவித்தொகையாக ரூ. 25,000/- வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 20 நிறுவனங்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. திட்ட வரைபடம் மற்றும் மதிப்பீட்டுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

3. மையவாடிகளுக்குச் சுற்றுச்சுவர் அல்லது முள்கம்பிவேலி அமைக்க உதவி :

இத்திட்டத்தின்படி ஒவ்வொரு மையவாடிக்கும் ரூ. 25,000/- வரை உதவிநிதி வழங்கப்படுகிறது. 20 இடங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படுகிறது. திட்ட வரைபடம் மற்றும் மதிப்பீட்டுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

4. நகர்ப்புற வக்ஃப் சொத்துக்களை அபிவிருத்தி செய்ய உதவி

நகர்ப்புற வக்ஃப் சொத்துக்களை அபிவிருத்தி செய்வதற்காகப் புதுதில்லி மத்திய வக்ஃப் கவுன்சில் மதிப்பீட்டுத் தொகையில் 75 சதவிகிதம் வரை கடனாக உதவி வழங்குகிறது.

வக்ஃப் கண்காணிப்பாளர் / வக்ஃப் ஆய்வாளர் வழியாக
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

முதன்மை நிர்வாக அலுவலர்
தமிழ்நாடு வக்ஃப் வாரியம்
எண் 1 ஜாபர் சாரங் தெரு
வள்ளல் சீதக்காதி நகர்
சென்னை 600 001

இணையதளம் : www.tnwakfboard.com

தகவல் உதவி

இனிய திசைகள் மாத இதழ்
பிப்ரவரி 2008
எண் 27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 2493 6115

No comments: