Thursday, May 1, 2008

சிறந்த மருந்தாக்கியல் வல்லுநர் விருது பெற்ற முதல் முஸ்லிம்

மருந்தாக்கியல் துறையில்
யூசுப் சிறப்பு விருது பெற்றார் !

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் அண்ணாநகர் மண்டலத்தின் செயலாளரும், அண்ணாநகர் ஜாவீத் பள்ளிவாசலின் செயலாளருமாகிய அல்ஹாஜ் எம். முஹம்மது யூசுப், பி.ஃபார்ம், இந்த ஆண்டின் சிறந்த மருந்தாக்கியல் வல்லுநராகத் ( Best Pharmacist of the Year ) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.

அகில இந்திய அளவில் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் இந்த விருது முதன்முதலாக முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவருக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். மருந்து உற்பத்தி, மருந்துத் தரம், பகுப்பாய்வுத் துறையில் செய்த செம்மையான சேவைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற பெரும் விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தாக்கியல் பட்டதாரிகளின் முன்னிலையில் தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா விருது வழங்கிக் கௌரவித்தார்.

அல்ஹாஜ் எம். முஹம்மது யூசுப் சென்னை மருத்துவக் கல்லூரியில் பி.ஃபார்ம் இளங்கலை பட்டம் பெற்றவர். இதற்கு முன்பும் மருந்தாக்கியல் துறையில் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த இவர் பல தன்னார்வத் தொண்டு இயக்கங்களில் பங்கு கொண்டு சமுதாயத் தொண்டாற்றி வருகிறார். இவர் சிறந்த எழுத்தாளரும் ஆவர்.

இவர் எழுதிய பல இஸ்லாமியக் கட்டுரைகள் பல இஸ்லாமிய மாத இதழ்களில் வெளிவந்துள்ளன. மேலும், சிதறிய முத்துக்கள், வான்முறைதரும் வழிமுறை, மரணம் ஓர் சிந்தனை, இறைமறை துஆக்கள், நபிலான வணக்கங்கள், அறவேள்வியும் பொருள் வணக்கமும் ( நோன்பு, ஜகாத் ) இஸ்லாமிய வாழ்வில் ஓர் இனிய பயணம் முதலிய நூல்களையும் அவர் எழுதியுள்ளமை பாராட்டுக்குரியதாகவும்.

தகவல் உதவி :

இனிய திசைகள்
பிப்ரவரி 2008

27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 2 493 6115

No comments: