Saturday, March 13, 2010

மார்ச் 18 முதல் 20 வரை துபாயில் சர்வதேச அமைதி கருத்தரங்கு

மார்ச் 18 முதல் 20 வரை துபாயில் சர்வதேச அமைதி கருத்தரங்கு

துபாய் : துபாயில் சர்வதேச அமைதி கருத்தரங்கு மார்ச் 18 முதல் 20 வரை துபாய் ஏர்போர்ட் எக்ஸ்போவில் நடைபெற இருக்கிறது.
இதனையொட்டி கருத்தரங்கு, கண்காட்சி மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.
இதில் மக்கா இமாம் ஷேக் அப்துல் ரஹ்மான் சுதேஸ், குவைத் இமாம் ஷேக் மிஸேரி ராஷித் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர்.
மேலும் யூசுப் எஸ்டேஸ் ( அமெரிக்கா ), அப்துல் ரஹீம் கிரீன் ( இங்கிலாந்து ), அஹ்மது ஹமீத் ( இந்தியா ), ஹுசைன் யீ ( மலேசியா ) , டாக்டர் ஹமீத் ஹுசைன் ( எகிப்து ), எம்.எம். அக்பர் ( இந்தியா ), யாசிர் காதி ( அமெரிக்கா ), சயித் ரகிஆ ( கனடா ) உள்ளிட்ட சர்வதேச பேச்சாளர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்த இருக்கின்றனர்.
அனைத்து மத/மார்க்க நம்பிக்கை கொண்டவர்களும் இதில் பங்கேற்கலாம். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு 04-3394767 / 04 – 608 7602
மின்னஞ்சல் : info@peaceconvention.com / www.peaceconvention.com

No comments: