Tuesday, May 19, 2009

துபாயில் முதுவை கவிஞர் உமர் ஜஹ்பர் சொற்பொழிவு - டி பிளாக் ( புதன்கிழமை ) & கோட்டைப் பள்ளி ( வியாழக்கிழமை )

துபாயில் முதுவை கவிஞர் உமர் ஜஹ்பர் சொற்பொழிவு - டி பிளாக் ( புதன்கிழமை ) & கோட்டைப் பள்ளி ( வியாழக்கிழமை )

துபாயில் வாரந்தோறும் புதன்கிழமை அஸ்கான் டி பிளாக்கில் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

20.05.2009 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெற இருக்கும் மார்க்க விளக்க நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் திடல் ஜமாஅத் தலைவர் முதுவைக் கவிஞர் மவ்லவி அ. உமர் ஜஹ்பர் ஃபாஜில் மன்பயீ அவர்கள்

கல்வி ஒன்றே வாழ்வின் ஒளிவிளக்கு
எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை செய்துள்ளது.

கோட்டைப் பள்ளி

21.05.2009 வியாழன் மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் கோட்டைப் பள்ளியில் பிரதி வார ஸஹீஹுல் புஹாரி அல் ஹதீஸ் விளக்கவுரை மஜ்லிஸ் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்வில் முதுவைக் கவிஞர் மவ்லவி அ. உமர் ஜஹ்பர் ஃபாஜில் மன்பயீ அவர்களும், கீழக்கரை முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் உள்ளிட்டோர் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜமாஅத்துல் உலமா பேரவை மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை ஆகியவை செய்துள்ளன.

துபாயில் நடைபெறும் சமுதாய நிகழ்வுகளின் தொகுப்புகளை www.tamilislamicaudio.com எனும் இணையத்தளத்தில் காணலாம்.

குறிப்பு : ரமலான் மாத உம்ரா செய்ய விரும்புவோர் 050 467 6618 எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

No comments: