துபாய் தமிழ்ச் சங்கத்தில் வேலூர் எம்பிக்கு பாராட்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சி
துபாய் : துபாய் தமிழ்ச் சங்கம் அமீரகத்தின் 38 ஆவது தேசிய தினம், வேலூர் எம்.பி. எம். அப்துல் ரஹ்மானுக்கு பாராட்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகளை டிசம்பர் 2 ஆம் தேதி இந்திய உயர்நிலைப்பள்ளி ஷேக் ராஷித் அரங்கில் நடத்த இருக்கிறது.
இம்மாபெரும் விழாவில் அமீரகத்தில் வாழ்ந்து வரும் இந்திய மக்களுக்குப் பல்வேறு சேவைகளை ஆற்றிவரும் இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி, தொழில்துறை மற்றும் மனிதநேயப்பணிகளுக்கு உதவி வரும் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும நிர்வாக இயக்குநர் செய்யது எம். ஸலாஹுத்தீன், சமூக சேவைக்காக இந்திய கம்யூனிட்டி வெல்ஃபேர் கமிட்டியின் கன்வீனர் கே. குமார் உள்ளிட்டோர் கௌரவப்படுத்தப்பட உள்ளனர்.
மேலும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மானுக்கு பாராட்டு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இவ்விழாவிற்கு கலைப்புலி தாணு சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். சன்டிவி கல்யாணமாலை புகழ் வாசுகி மனோகரன் குழுவினரின் பட்டிமன்றம், இசையமைப்பாளர் கங்கை அமரன் தலைமையில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. துபாய் தமிழ்ச் சங்க குழந்தைகளின் நடன நிகழ்ச்சியும் இடம்பெற இருக்கிறது.
அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அரங்கினுள் அனுமதிக்கப்படுவர். அனுமதிச் சீட்டுகளை பெற துபாய் தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் சி. ஜெகநாதன் 050 5787657 / விழாக்குழு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா 050 467 4399 / 050 51 96 433 / dubaitamilsangam@gmail.com உள்ளிட்ட எண்களில் தொடர்பு கொண்டு பெறலாம்.
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label தமிழ்ச் சங்கம். Show all posts
Showing posts with label தமிழ்ச் சங்கம். Show all posts
Tuesday, November 24, 2009
Friday, May 8, 2009
Subscribe to:
Posts (Atom)