Friday, January 18, 2008

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ( K-Tic ) ஏற்பாடு செய்யும்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ( K-Tic ) ஏற்பாடு செய்யும்
'' நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகளின் 75 வது வார சிறப்பு நிகழ்ச்சி ''

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 18-01-2008 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை யைத் தொடர்ந்து குவைத் , ஹவல்லி (ஸாதிக் ரவுண்டானா மற்றும் ஷுவூன் அலுவலகம் அருகில் அமைந்துள்ள) மஸ்ஜித் அஷ்-ஷைக்கா அஷ்-ஷபீக்கா பள்ளிவாசல் வளாகத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ( K-Tic) ஹவல்லி கிளை ஏற்பாடு செய்யும் '' நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகளின் 75 வது வார சிறப்பு நிகழ்ச்சி '' நடைபெற இருக்கின்றது. (இப்பள்ளிவாசலில் கடந்த 75 வாரங்களாக ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன் கண்ணியமிக்க உலமா பெருமக்கள் மூலமாக தமிழில் நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது).

சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லானா மவ்லவீ அஷ்ஷைக் M.S. முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் உலமாக்கள் குழு உறுப்பினர் பேராசிரியர் மவ்லவீ அஷ்ஷைக் A. அப்துஸ் ஸலாம் தாவூதி ஹழ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றுகின்றார்.

இச்சிறப்பு மிகு நிகழ்வில் குவைத் வாழ் இந்திய , இலங்கையைச் சார்ந்த தமிழ் இஸ்லாமியர்கள் அனைவரும் தங்கள் நண்பர்கள் மற்றும் சகோதரர்களுடன் பங்கேற்று பயனடையுமாறு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் ஹவல்லி கிளை நிர்வாகிகள் , உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com லும் நிகழ்ச்சி குறித்த செய்தியையும், (பேரூந்து என்களுடன்) நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் வரைபடத்தையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் , மேலதிக விபரங்களுக்கு q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ மற்றும் 9430786 , 7872482, 7738420, 7302747, 7684739, 7841399 , 5088149, 9383812 , 7243382, 7585914 போன்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளும்படியும் சங்க செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது.

செய்தி :
தகவல் தொடர்பு பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ( K-Tic )
இணையதளம் : www.k-tic.com
மின்னஞ்சல் : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
யாஹூ குழுமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group


குறிப்பு :

இந்தச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

No comments: