Monday, September 20, 2010

விடைக்கொடுக்க முடியாமல்..

விடைக்கொடுக்க முடியாமல்..

அடை மழையிலும்
வேலைக்கு விடைக்கொடுக்க
முடியாமல் நான்!

வறுமைக்கு
வாக்கப்பட்டதால்
வயதானக் காலத்தில்
இப்படி!

உயர்வேதும் இல்லை பதவியில்;
உயரம் கூடினாலே
அன்றி!

வரம்பேதும் இல்லை வயதிற்கு;
மூட்டுக்கு
முடிச்சி விழும்
வரை!

இல்லாத செல்வத்தால்
பொல்லாத வறுமை;
இப்போது
அழுதாலும் கவலையில்லை
மழையோடு சேர்ந்து
மறைந்துவிடுமேன்று!

கனவேதும் பெரியதில்லை
ஒருநாள் உழைத்ததைக் கொண்டு
மறுநாளும் உண்ண வேண்டும்;
தினக்கூலி என்றப் பெயர் மாறவேண்டும்!

- யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com


இப்போது
அழுதாலும் கவலையில்லை
மழையோடு சேர்ந்து
மறைந்துவிடுமேன்று!
மறைந்துவிடுமென்று!


திருத்திக் கொள்ளவும்..


இஸ்லாமிய சகோதரன்
யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.கம

No comments: