Monday, September 20, 2010

தாகத்தைத் தணிக்க..

தாகத்தைத் தணிக்க..

நெடுந்தூரப் பயணம்
தாகத்தைத் தணிக்க
தாகத்துடன் தினமும்
ஏக்கத்துடன்!

வறண்டுப்போன பூமியால்
மிரண்டுப்போன வாழ்க்கை
இறுண்டுப்போன நாங்கள்!

சேர்க்க வேண்டியக் காலத்தில்
சேர்க்காமல் இருந்ததால்
சேற்றைப்பார்க்க முடியாமல்!

படைகளைக் கொண்டு
எதிரிகள் உண்டு
எதிர்காலத்தில்;
எண்ணையைப் போல
நீருக்கும்!

நீரும் இருக்காது
நீயும் இல்லாது!
முழுதாய் காய்ந்திடும்
முன்னே சேர்த்திடு
நீரைக் காத்திடு!


-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com

No comments: