Wednesday, June 18, 2008

துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநருக்கு விருது ! சென்னை முஸ்லிம் லீக் மாநாட்டில் !!










சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு - ஜுன் 20 & 21 நடக்கிறது


இந்திய முஸ்லிம்களின் வரலாற்றுப் பேரியக்கமாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு ஜுன் 20 மற்றும் 21 தேதிகளில் சென்னையில் நடைபெற இருக்கிறது.

ஜுன் 20 வெள்ளிக்கிழமை

ஜுன் 20 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையினை சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா மஸ்ஜிதில் நிறைவேற்றியபின்னர் காயிதெ மில்லத் நினைவிடத்தில் ஜியாரத் ஃபாத்திஹா நடைபெறும் அதனைத் தொடர்ந்து சிராஜுல் மில்லத் நினைவிடத்துக்கு செல்லப்படும்.

துஆ மஜ்லிஸ்

சென்னை மண்ணடி மரைக்காயர் லெப்பை தெருவில் அமையப்பெற்றுள்ள தலைமை நிலையமாம் காயிதெமில்லத் மன்ஸிலில் அல்லாமா அஷ்ஷெய்க் தைக்கா ஷுஐபு ஆலிம் தலைமையில் துஆ மஜ்லிஸ் மாலை 5.00 மணிக்கு நடைபெறும்.

இந்நிகழ்விற்கு ஏ.கே. அப்துல் ஹலீம், ஆரூர் அப்துல் காலிக், எழுத்தரசு ஏ.எம். ஹனீஃப், எஸ்.எம். காதர் பாட்சா, எஸ்.எம். கோதர் முஹைதீன், பி.எஸ்.ஹம்ஸா, டாக்டர் இக்பால் பாஷா, வி.எஸ்.டி.ஷம்சுல் ஆல்ம், எஸ்.டி. நிசார் அஹ்மது, எம். ஜெய்னுல் ஆப்தீன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மாநாடு வரவேற்புக் குழு கூட்டம்

காயிதெ மில்லத் மன்ஸிலில் மாலை 7.00 மணிக்கு மாநாடு வரவேற்புக்குழு கூட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. தலைமையில் நடைபெறும்.

முஜாஹிதெ மில்லத் ஜி.எம். பனாத்வாலா, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹ்மது, செய்யிது முஹம்மதலி ஷிஹாப் தங்கள், பி.கே.குஞ்ஞாலிக் குட்டி, பி.வி.அப்துல் வஹாப் எம்.பி, வழக்கறிஞர் அஹ்மது பக்‌ஷ், நயீம் அக்தர் தஸ்தகீர் ஆகா உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. செய்யது சத்தார் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

ஜுன் 21 சனிக்கிழமை

காயிதெமில்லத், சமுதாய ஒளிவிளக்கு, சிராஜுல் மில்லத் விருதுகள் வழங்கும் விழா

காலை 9.30 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் விருது வழங்கும் விழாவிற்கு முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. தலைமை தாங்குகிறார்.

செய்யிது முஹம்மது அலி ஷிஹாப் தங்கள் துஆ ஓதுகிறார்.

அல்லாமா அஷ்ஷெய்க் தைக்கா ஷுஐபு ஆலிம், மவ்லானா எம்.எஸ். உமர் பாரூக் மவ்லானா, டி.ஜே.எம். ஸலாஹுத்தீன், எஸ்.எம்.சேகு நூர்தீன், டாக்டர் காஜா கே. மஜீத், ஏ.ஜே. அப்துல் ரஜ்ஜாக், காக்கா முஹம்மது ஜுபைர், முஹம்மது யூனுஸ் ( எம்.ஐ.இ.டி ) வி.எம். அப்துல் ஜப்பார், கே.பி. இஸ்மத் பாட்சா உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. செய்யது சத்தார் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

வி.எம். செய்யது அஹ்மது, ஏ.அப்துல் ஹக்கீம், திருப்பூர் எம்.ஏ. சத்தார், மவ்லவீ என். ஹாமித் பக்ரீ, அமீரக காயிதெமில்லத் பேரவை பொதுச்செயலாளர் குத்தாலம் லியாக்கத் அலி, எஸ்.எம். கனி சிஷ்தீ, எம்.பி. காதர் ஹுசைன், கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது உள்ளிட்டோர் கருத்துரை வழங்குகின்றனர்.

சிறப்பு மலர் வெளியீடு

முஜாஹிதெ மில்லத் ஜி.எம். பனாத்வாலா முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு சிறப்பு மலர் வெளியிட மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஏ. ராசா முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார்.

காயிதெ மில்லத் விருது

முஸ்லிம் லீகில் ஐம்பதாண்டு காலம் உழைத்து வரும் தியாகிகளுக்கு காயிதெ மில்லத் விருது வழங்கி சிறப்புரையினை மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹ்மது நிகழ்த்துகிறார்.

தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன், அப்துல் வஹ்ஹாப் எம்.பி, ஷைகுல் ஹதீஸ் மவ்லானா ஏ.இ.எம். அப்துல் ரஹ்மான், மெஜஸ்டிக் கே.வி.எம். அப்துல் கரீம், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச்செயலாளர் பேராசிரியர் முனைவர் சேமுமு முஹம்மது அலி உள்ளீட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

சமுதாய ஒளிவிளக்கு விருது

கல்வியாளர்கள் மார்க்க அறிஞர்கள் மற்றும் சமுதாய புரவலர்களுக்கு சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கி தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, வணிகவரித்துறை அமைச்சர் எஸ்.என்.எம். உபைதுல்லாஹ், விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன் கான், சிறுசேமிப்புத்துறை துணைத்தலைவர் இரகுமான்கான், சென்னை மேயர் மா.சுப்பிரமணியம், ஜே.எம். ஹாரூன் எம்.பி, உள்ளிட்டோர் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர்.

சிராஜுல் மில்லத் விருது

சமூக நல்லிணக்கத்திற்காக உழைத்து வரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லகண்ணு, துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் செய்யது எம். ஸலாஹுத்தீன், சிறுபானமை நலத்துறையின் வின்சண்ட் சின்னதுரை உள்ளிட்ட பெருமக்களுக்கு சிராஜுல் மில்லத் விருது வழங்கி தமிழக கல்வி அமைச்சர் க. அன்பழகனார் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

தவத்திரு பொன்னம்பல அடிகளார், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி, கவிக்கோ அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயீல் நன்றியுரை நிகழ்த்துகிறார்.

கல்வி மேம்ப்பாடு, விழிப்புணர்வு, மகளிர் கருத்தரங்கம்

ஜுன் 21 சனிக்கிழமை காலை பத்து மணிக்கு ராஜாஜி மண்டபத்தில் நடைபெறும் மகளிர் கருத்தரங்கிற்கு மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஏ.எஸ். ஃபாத்திமா முஸஃப்பர் தலைமை தாங்குகிறார்.

கனிமொழி எம்.பி. ஜெயந்தி நடராஜன் எம்.பி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

கவிஞர் ருக்கையா சல்மா, வழக்கறிஞர் அருள்மொழி, கமருன்னிசா அன்வர், நூர்பீனா ரசீத், பேராசிரியை நசீமா பானு உள்ளிட்டோர் கருத்துரை வழங்குகின்றனர்.

மாபெரும் பிறைக்கொடி பேரணி

பிற்பகல் 3.30 மணிக்கு மாபெரும் பிறைக்கொடி பேரணி சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்பட்டு வாலஜா சாலை, அண்ணா சாலை, மன்றோ சிலை வழியாக தீவுத்திடலை அடைகிறது.

பேரணியை அப்துல் ரவூஃப் துவக்கி வைக்க ஹெச். அப்துல் பாஸித் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிரார்.

ஜி.எம். ஹாஷிம், கே.எம். நிஜாமுத்தீன், எம்.எஸ். முஹம்மது ரஃபீக், வி.ஆர். முஹம்மது இப்ராஹீம், கே.எஸ். ஷேக் தாவூத், மவ்லவீ ஏ.எஸ். அப்துல் ரஹ்மான், முஸஃப்பர் அஹ்மத், ஏ.ஏ. ரஷீத் கான் உள்ளிட்டோர் பேரணிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவர்.

இசையரங்கம்

மாலை 4 மணிக்கு தீவுத்திடலில் இசையரங்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முகவை சீனி முஹம்மது, கலைமாமணி இறையன்பன் குத்தூஸ் குழுவினர் இயக்கப் பாடல்கள் பாடுகின்றனர்.

மாநாடு நிறைவு விழா

மாலை 6.30 மணிக்கு தீவுத்திடலில் நிறைவு விழா கே.டி.எம். அஹ்மது இப்ராஹிம் நுழைவு வாயிலில், அப்துல் வஹ்ஹாப் ஜானி சாஹிப் அரங்கில் நடைபெறும்.

விழாவிற்கு முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. தலைமை தாங்குகிறார்.

பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. செய்யது சத்தார் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் எம்.எல்.ஏ. தீர்மானங்களை வாசிக்கிறார்.

முஜாஹிதெ மில்லத் ஜி.எம். பனாத்வாலா, மத்திய அமைச்சர் இ.அஹ்மது, தமிழக அமைச்சர் ஆற்காடு வீராசாமி, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், தா.பாண்டியன், தொல்.திருமாவளவன், பி.கே. குஞ்ஞாலிக்குட்டி, அஸத்துத்தீன் உவைஸி எம்.பி, கர்நாடக அமீரே ஷரீஅத் மவ்லானா அஷ்ரப் அலி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

ஹெச்.அப்துல் பாசித் எம்.எல்.ஏ. அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம்.அப்துல் ரஹ்மான், எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், கவிஞர் ஜபருல்லாஹ், நெல்லை அப்துல் மஜீத், காயல் மகபூப், கமுதி பஷீர், வழக்கறிஞர் ஜீவகிரிநாதன் உள்ளிட்டோர் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர்.

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் நிறைவுப் பேருரை நிகழ்த்துகிறார்.

தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் நன்றி கூற மாநில மார்க்க அணி செயலாளர் மவ்லவீ தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான் துஆவுடன் மாநாடு நிறைவுறும்.

தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ )

No comments: