Thursday, June 19, 2008

அமீரக தொழிலதிபருக்கு மாநாட்டில் சமயநல்லிணக்கத்துக்கான விருது


அமீரக தொழிலதிபருக்கு மாநாட்டில் சமயநல்லிணக்கத்துக்கான விருது


துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் கீழக்கரை அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன், கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, கிறிஸ்தவ பிரமுகர் மறைதிரு வின்சண்ட் சின்னதுரை உள்ளிட்டோருக்கு சமய நல்லிணக்கத்துக்கான சிராஜுல் மில்லத் விருது இந்திய யூனியன் முஸ்லிம் 60 ஆம் ஆண்டு மணி விழா மாநாட்டில் சனிக்கிழமை வழங்கப்பட இருக்கிறது.

துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமத்தில் சுமார் 70,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பல்வேறு இன,மொழி, நாடு உள்ளிட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சமய பேதமில்லாது சர்வ சமய மக்களும் பணிபுரிந்து வரும் கேந்திரம் ஈடிஏ அஸ்கான் நிறுவனம், சமயநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் இடம். இதில் 70,000 பேர் என்றில்லாது 70,000 குடும்பங்கள் இதன் மூலம் பயன்பெற்று வருகின்றன.

இதேபோல் சம்ய நல்லிணக்கப் பணிகளை மேற்கொண்டு வரும் நல்லகண்ணு, வின்சண்ட் சின்னதுரை உள்ளிட்டோருக்கும் இவ்விருது வ்ழங்கப்பட்டுகிறது.

மேலும் இயக்க வளர்ச்சிக்காக 50 ஆண்டுகள் உழைத்தோருக்கு காயிதெமில்லத் விருது, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேவையாற்றியோருக்கு சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கப்படுகிறது.மேலும் சாதனைப்பெண்மணிகளுக்கும் விருது வழங்கப்படுகிறது.

அமீரக அமைப்புகள் வாழ்த்து : சமய நல்லிணக்க விருது பெறும் செய்யது எம் ஸலாஹுதீனுக்கு அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, ஏகத்துவ மெய்ஞான சபை தலைவர் எம். ஜே. முஹம்மது இக்பால், துபாய் தமிழ்ச் சங்க தலைவர் சபேசன், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், அமீரக தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன், தமிழ்த் தென்றல் இதழ் ஆசிரியர் அப்துல் ரவூஃப், வானலை வளர்தமிழ் நிர்வாகி காவிரி மைந்தன், சுடர் வம்சம் நிறுவனர் ரகுராஜ், உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் சலாஹுதீனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

No comments: