Thursday, December 31, 2009

பார்க்கவும் வேண்டுமோ..????

பார்க்கவும் வேண்டுமோ..????

பட்டப் படிப்பு முடிப்பதற்குள்...கணினி
வேலைக்கும் உத்தரவு.....
இருபத்தியொரு வயதினிலே....
இருபத்தைந்தாயிரம் கையினிலே.....
கேட்கவும் வேண்டுமோ..?

யௌவன கர்வம்.....
வாணியும்...'ஸ்ரீ' யும் கூடி நிற்க...
அழகோடு அறிவும் சேர்ந்தால்....
கேட்கவும் வேண்டுமோ..?

மனமகுடதிற்கு.....கூடவே....
குணம் குன்றலானது.....
கண்பார்க்கும் எதுவும் துச்சமானது...
வருமானம் தந்த தன்மானம்.....
கேட்கவும் வேண்டுமோ..?

காதோடு இணைந்த 'கைபேசி'
தோளோடு தழுவும் 'தோல்ப்பை'..
உலகமே துச்சமாய் ஒரு பார்வை...
கேட்கவும் வேண்டுமோ..?

கவலை ஏதும் அறியாது....
உலக உண்மை புரியாது...
பெற்றோர்களின் அறிவுரைகள்...
அறவே..தனக்குப் பிடிக்காது....
தறுதலை பதில்களும்..வெறும்..
தலையாட்டலும்......அனாசய
நிராகரிப்பில்...
கேட்கவும் வேண்டுமோ?...

பணதருமை அறியாது...
பச்சை நோட்டுக்கள் கத்தை கத்தையாய்...
பூச் செண்டுக்கும், செருப்புக்கும், சென்ட்டுக்கும் பறக்க...
சொல்லப் போனால்....'சுதந்திரம் போச்சு'
என.. ஏக வசனத்தில் வெடிக்க....
கேட்கவும் வேண்டுமோ....?

வளர்ந்த பெண்ணின் வாய்க்கு
பயந்து....பயந்து.....பயந்து.........
அன்பின் அச்சாணியில்....சுழன்று...
போகும் வழி தவறென்று......
மனசுக்குள் மணி அடிக்க...
கேட்கவும் வேண்டுமோ..?

பெற்றவரின் மன உளைச்சல்...
பெருமை எல்லாம் ஊருக்காகத்தான்..
வீட்டின் உள்ளே.....பொருமித் தீர்க்கும் மனசு....!!
கேட்கவும் வேண்டுமோ...?

கால்கட்டு போட்டுவிட்டால்...பெண்
கைபிடிக்குள் வந்திடுவாள்....என
ஏமாளிப் பெற்றோர்கள்.....வரன் தேடி அலைய.........
கோமாளி ஆகுதற்க்கே.....புதுத் துணையோடு...
நுழைந்தாள்......மகள்....!!!
கேட்கவும் வேண்டுமோ...?

பட்டமும்.. ..வேலையும்.....வந்ததால்.....
தந்ததே.....சுதந்திரம்....அவளுக்கு...
மாலையாய்....... வந்ததே....
மலர்வளையம்..... எங்களுக்கு..!!!!
பார்க்கவும் வேண்டுமோ..????

ஜெயஸ்ரீ ஷங்கர்....

No comments: