Friday, December 26, 2008

முதுகுளத்தூர் மீனாட்சிபுரத்தில் புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா

முதுகுளத்தூர் மீனாட்சிபுரத்தில் புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா



முதுகுளத்தூர் மீனாட்சிபுரத்தில் புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா

www.mudukulathur.com

www.muduvaivision.com

முதுகுளத்தூர் மீனாட்சிபுரத்தில் புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா 26 டிசம்பர் 2008 வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதனை பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி அல்ஹாஜ் எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் துஆ ஓதி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவரும், பேரூராட்சி மன்ற துணைத்தலைவருமான ஏ.ஷாஜ‌ஹான், சென்னை அல் ஹ‌ர‌மைன் அறக்கட்டளை தலைவர் முஹம்ம‌து ர‌பீக் ஹாஜியார், பொறியாளர்கள் ருக்னுதீன்,தேரிருவேலி காஜா நஜுமுதீன், ப‌னைக்குள‌ம் ஜாஹிர் ஹுசைன் குடும்பத்தினர். திட‌ல் ஜமாஅத் தலைவர் மவ்லவி அல்ஹாஜ் உம‌ர் ஜ‌ஃப‌ர் மன்பயீ, திடல் முன்னாள் ஜமாஅத் தலைவர் முஹ‌ம்ம‌து ம‌சூது, பெரிய பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எஸ்.க‌மால் நாச‌ர், பெரியபள்ளிவாசல் முன்னாள் ஜமாஅத் தலைவரும், ஓய்வு பெற்ற தாசில்தாருமான எம்.அன்வ‌ர், தேசிய நல்லாசிரியர் எஸ். அப்துல் காத‌ர் உள்ளிட்ட அனைத்து ஜமாஅத் பிரமுகர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

இப்பகுதியில் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்தினருக்குட்பட்ட இவ்விடத்தில் இப்புதிய பள்ளிவாசல் ஆறு மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். அல் ஹரமைன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இப்பள்ளி கட்டப்படுகிறது. இப்பகுதியில் சுமார் 66 குடும்ப‌ங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலோர் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களாவர். இவர்களது குழந்தைகள் மார்க்கக் கல்வி கற்றுக் கொள்வதற்கும் இப்பள்ளிவாசல் உதவியாக இருக்கும்.

No comments: