Tuesday, January 29, 2008

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 2006-07 ஆம் ஆண்டு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா 01.02.2008 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் ஆர்.எம்.அப்துல் கரீம் நினைவரங்கில் நடைபெற இருக்கிறது.

பரிசளிப்பு விழாவிற்கு பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் எம். அன்வர் தலைமை தாங்குகிறார்.

சென்னை கிளை ஜமாஅத் தலைவர் அமீர் ஹம்சா,மதுரை கிளை ஜமாஅத் தலைவர் முஹம்மது இப்ராஹிம், முதுகுளத்தூர் திடல் ஜமாஅத் தலைவர் முஹம்மது மசூது, முஸ்தபா நகர் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் செய்யது இப்ராஹிம், பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி தாளாளர் ஏ. முஹம்மது மூஸா, பள்ளிவாசல் நர்சரி பள்ளி தாளாளர் வாவா ராவுத்தர், ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க தலைவர் சீனி முஹம்மது உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம். ராஜா முஹம்மது வரவேற்புரை நிகழ்த்துகிறார். பள்ளிவாசல் பள்ளிகள் கல்விக்குழு தலைவர் ஏ.எம்.எம். முஹம்மது மீரா பொன்னாடை அணிவிக்கிறார்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவருக்கு குடிசை மாற்றுவாரியத்துறை அமைச்சர் சுப. தங்கவேலனும், இரண்டாம் இடம் பெற்றவருக்கு முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கே. முருகவேல், மூன்றாம் இடம் பெற்றவருக்கு ஓய்வுபெற்ற பள்ளிக்கல்வித்துறை இணைய் இயக்குநர் எம்.எஸ். நெய்னா முஹம்மது ஆகியோர் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கின்றனர்.

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பொன்னாடை அணிவித்து முதன்மைக்கல்வி அலுவலர் வி. பழனிவேலுச்சாமி மாவட்டக் கல்வி அலுவலர் மேகவர்ணம்,முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஈஸ்வரி கருப்பையா, பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ஏ. ஷாஜஹான், பேரூராட்சி மன்ற தலைவர் சசிவர்ணம், சென்னை முதுகுளத்தூர் முஸ்லிம்கள் நலச்சங்க தலைவர் ஏ.அப்துல் குத்தூஸ், சென்னை அஜீஸ் ஸ்டீல் கார்ப்பரேஷன் அஜீஸ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ( பொறுப்பு ) பாலசுப்பிரமணியம், உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்துராமலிங்கம், இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ். சௌக்கதலி, பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் பொருளாளர் கமால்நாசர் உள்ளிட்டோர் சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்குகின்றனர்.

தேசிய நல்லாசிரியர் எஸ்.அப்துல் காதர், முன்னாள் தலைமையாசிரியர்கள் நல்லாசிரியர் எஸ். காதர் முகைதீன், எம்.எஸ். லியாக்கத்தலி, எஸ். வரிசை முஹம்மது, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஞானதாஸ், டிஇஎல்சி பள்ளி தலைமையாசிரியர் ஜான் இராஜேந்திர பிரசாத உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

பெரிய பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஓ.ஏ. முஹம்மது சுலைமான் நன்றியுரை நிகழ்த்துகிறார்.

தகவல் உதவி :

ஏ.முஹம்மது மூஸா,
பானு பிரிண்டிங் பிரஸ்,
முதுகுளத்தூர்

No comments: