Monday, February 2, 2009

துபாயில் இந்திய‌ முஸ்லிம் ந‌ல‌ அற‌க்க‌ட்ட‌ளை ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா சிற‌ப்பு ம‌ல‌ர் வெளியீடு



























துபாயில் இந்திய‌ முஸ்லிம் ந‌ல‌ அற‌க்க‌ட்ட‌ளை ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா சிற‌ப்பு ம‌ல‌ர் வெளியீடு

துபாயில் பெர‌ம்ப‌லூர் மாவ‌ட்ட‌ம் வி.க‌ள‌த்தூர் இளைஞ‌ர்க‌ளால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ரும் இந்திய‌ முஸ்லிம் ந‌ல‌ அற‌க்க‌ட்ட‌ளையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா ம‌ற்றும் சிற‌ப்பு ம‌ல‌ர் வெளியீட்டு விழா 30.01.2009 வெள்ளிக்கிழ‌மை துபாய் தேரா கேர‌ளா முஸ்லிம் க‌லாச்சார‌ மைய‌த்தில் ந‌டைபெற்ற‌து.

விழாவிற்கு ப‌த்திரிகையாள‌ர் க‌மால் பாஷா த‌லைமை வ‌கித்தார். ஸ‌பியுல்லாஹ் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். எம். ச‌பியுல்லாஹ் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். ஜெ.முஹ‌ம்ம‌து அலி இந்திய‌ முஸ்லிம் ந‌ல‌ அற‌க்க‌ட்ட‌ளை குறித்த‌ அறிமுக‌வ‌ரை நிக‌ழ்த்தினார்.

பொறியாள‌ர் ஷேக் முஹம்ம‌து இந்திய‌ முஸ்லிம் ந‌ல் அற‌க்க‌ட்ட‌ளையின் க‌ல்விப் ப‌ணிக‌ளை விரிவாக‌ எடுத்துரைத்தார். அவ‌ர் த‌ன‌து உரையில் க‌ல்வி உத‌வி, வ‌ட்டியில்லாக் க‌ட‌ன் உள்ளிட்ட‌ திட்ட‌ங்க‌ள் சிற‌ப்பாக‌ செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட்டு வ‌ருவ‌தை விரிவாக‌ விள‌க்கினார்.

ம‌வ்ல‌வி நூருல்லா ஹ‌ஜ்ர‌த் ப‌தினொரு ந‌ப‌ர்க‌ளுட‌ன் துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌ இந்த‌ அற‌க்க‌ட்ட‌ளை இன்று உய‌ர்நிலையினை அடைந்துள்ள‌து குறித்து பெருமித‌ம் கொள்வ‌தாக‌த் தெரிவித்தார்.

ஈமான் அமைப்பின் பொதுச்செய‌லாள‌ர் ஏ. லியாக்க‌த் அலி ச‌முதாய‌ மேம்பாட்டிற்கு க‌ல்வியின் அவ‌சிய‌த்தை வ‌லியுறுத்திப் பேசினார். க‌ல்வி விழிப்புண‌ர்வு மாநாடு உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நிக‌ழ்வுக‌ளை தொட‌ர்ந்து சிற‌ப்புற‌ ந‌ட‌த்தி வ‌ர‌ வாழ்த்தினார்.

சிங்க‌ப்பூர் ஆடிட்ட‌ர் ஃபெரோஸ் கான் க‌ல்வியின் முக்கிய‌த்துவ‌ குறித்து நீண்ட‌ உரை நிக‌ழ்த்தினார். அதில் ஆசிரிய‌ர்க‌ள் ச‌மூக‌ அக்க‌றையுட‌ன் செய‌லாற்ற‌ வேண்டும் என‌ வேண்டுகோள் விடுத்தார். ம‌னித‌ன் புனித‌னாக‌ க‌ல்வி மிக‌வும் அவ‌சிய‌மான‌ ஒன்று என்றார்.
இந்திய‌ முஸ்லிம் ந‌ல‌ அற‌க்க‌ட்ட‌ளையின் ஐந்தாம் ஆண்டு ம‌ல‌ரை ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் வெளியிட‌ முத‌ல் பிர‌தியினை தொழில‌திப‌ர் அபுதாஹிர் பெற்றுக்கொண்டார்.

ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான், ஆடிட்ட‌ர் ஃபாரூக், ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா,அய்மான் க‌ல்லூரி செய‌லர் சைய‌து ஜாப‌ர், சாதிக் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் உரை நிக‌ழ்த்தின‌ர்.

Muslim leaders launch national movement for Muslim reservation

Muslim leaders launch national movement for Muslim reservation

http://www.indianmuslims.info/news/2009/feb/01/muslim_leaders_launch_national_movement_muslim_reservation.html
http://www.indianmuslims.info/news/2009/feb/01/govt_urged_grant_reservation_muslims_community.html
http://www.twocircles.net/2009feb01/give_muslims_jobs_development_benefits_bridge_alienation.html
http://www.hindustantimes.com/StoryPage/Print.aspx?Id=8d490b8c-2ddf-4b24-bfdd-f186e23a0723

New Delhi: The Muslim community in India should be recognized as a Backward Class and should be given reservation along with SCs, STs, and OBCs, demanded Joint Committee of Muslim Organizations for Empowerment (JCMOE) at the end of a national convention for Muslim reservation in New Delhi today. New Delhi: Presiding over the first session of the convention, former Chief Justice of India A.M. Ahmadi, who said in his view secularism is the vision of India, averred, "No country can progress if a sizeable section is denied the opportunity to participate in development… We are yet to see our democracy blossom to its full when minorities are meted out equal treatment." Earlier, in his welcome and introductory speech, Convenor of JCMOE and former president All India Muslim Majlis-e-Mushawarat and Ex-MP Syed Shahabuddin said, "The Muslim community today is demanding reservation as a Backward Class, as a deprived group, who is almost as backward as SC/ST and more backward than the non-Muslim OBCs. The second session chaired by Maulana Syed Jalaluddin Umari, Ameer Jamaat-e-Islami Hind, provided the delegates and participants to interact. Ameer of Jamaat said the Sachar Report has established that the governments have been biased against the Muslim community, so it is necessary for them to grant reservation to the community for its social, economic and education progress. He assured the JCMOE leaders that Jamaat will give its full support to the Muslim reservation movement. Shahnawaz Ali Raihan, secretary, Students Islamic Organization of India, told the elders to offer full support of the youth organization to the movement for reservation. Speaking on the occasion Raihan said as Muslims constitute 13.4% of total population and compared to SC/ST 90% of the community is backward, 12% reservation should be given to them. He also called for a nationwide movement against casteism and communalism – both hard and soft communalism. "Dr. Sayyid Hamid, renowned educationist and Chancellor Jamia Hamdard, also pleaded for Muslim reservation. Mr. Ram Vilas Pawan, Chemicals, Fertiliser and Steel Minister and president Lok Janshakti Party, said that Muslim community should be provided reservation in government employment and higher education under the relevant sections of the Constitution for the socio-economic upliftment of the socially and economically backward sections of the population. A.B. Bardhan of Communist Party of India, Debabrata Biswas of All India Forward Block, representatives of Janta Dal (S) and Nationalist Congress Party, and Christian leader Fr. Dominic Emmanuel and Jail leader Bal Patil also endorsed the Muslims' demand for reservation. The third and final session chaired by Dr. Zafarul-Islam Khan, president All India Muslim Majlis-e-Mushawarat and Editor Milli Gazette. JCMOE, which has in its fold all major Muslim organizations including Jamiat Ulema-I-Hind, Jamaat-e-Islami Hind, All India Muslim Majlise Mushawarat, All India Milli Council and Markazi Jamiat Ahle Hadis, has launched a national movement for Muslim reservation and appealed to Muslim community and organizations to rise above all considerations and participate in the movement wholeheartedly. Twocircles.net/ Ians/ ndtv/HT

காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் மேல் நிலைப்பள்ளி,,இமாம் ஷாஃபி (ரஹ்) மேல்நிலைப் பள்ளி,,,---மாணவர் பேரவை

காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் மேல் நிலைப்பள்ளி,,இமாம் ஷாஃபி (ரஹ்) மேல்நிலைப் பள்ளி,,,---மாணவர் பேரவை

தளமும் மாணவர் பேரவையும் ஏன்? எதற்கு? எப்படி?
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)...


அன்புள்ள முன்னாள்,இன்னாள் மாணவர்களே!


நலம்!

நலம் பல சூழ்க,


நாம் அனைவரும் ஒரு இடத்தில் குழுமி நாம் கற்ற கல்விக்கூடத்திற்கு ஏதேனும் செய்திடல் வேண்டும்!!

அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் காரண காரியங்களை விவாதித்து, நல்ல விசயங்களில் நிருவாகதிற்கு துணை நின்றிட வேண்டும்;



அதற்கு இடற்பாடுகள் வருகிறபோது துணை நிற்கவும்; தடுமாறுகிற போது ஆலேசனைக் கூறி தடம் மாறாமல் இருக்கவுமே இத்தளம்!!


எனவே, முன்னாள், இன்னாள் மாணவர்களே!!


தளத்தில் உங்களை இனைத்துக்கொண்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்!!!

அதன் தனெழுச்சியே இத்தளமும் மாணவர் பேரவையும்!!!


இவைப்போக, உங்களுடைய கல்விக் கற்ற/கற்கும் நாட்களின் மறக்கமுடியாத

சம்பவங்கள்,

நகைச்சுவைகள்,

உங்களைப்பாதித்த விசயங்கள்,

ஆசிரியர்கள் பற்றி...

இன்னும் பள்ளி, கல்வி மேம்பாடு குறித்து...

எங்களுக்கு மின்னஞ்சல் adiraipost@gmail.com அனுப்பினால் பதிவோம்!


அல்லது பின்னூட்டமாகவும் பதியவும்!

C BOX-ஸையும் பயன் படுத்திக்கொள்ளவும்!!


இன்ஷாஅல்லாஹ்...

மீண்டும் சந்திப்போம்........




காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் மேல் நிலைப்பள்ளி
மாணவர் பேரவை www.kmcadirai.blogspot.com




இமாம் ஷாஃபி (ரஹ்) மேல்நிலைப் பள்ளி
மாணவர் பேரவை www.imamshafi.blogspot.com

த‌க்க‌லையில் அன்புட‌ன் அல்லாவுக்கு................. நூல் வெளியீட்டு விழா

த‌க்க‌லையில் அன்புட‌ன் அல்லாவுக்கு................. நூல் வெளியீட்டு விழா

த‌க்க‌லை பீர் முஹ‌ம்ம‌து அப்பா அர‌ங்கில் 2009 பிப்ர‌வ‌ரி 6 வெள்ளிக்கிழ‌மை மாலை 4.30 ம‌ணிக்கு அன்புட‌ன் அல்லாவுக்கு.... எனும் நூல் வெளியீட்டு விழா ந‌டைபெற‌ இருக்கிற‌து.

நூல் வெளியீட்டு விழாவிற்கு உத்த‌மபாளைய‌ம் ஹாஜி க‌ருத்த‌ ராவுத்த‌ர் க‌ல்லூரி பேராசிரிய‌ர் மு. அப்துல் ச‌ம‌து த‌லைமை தாங்குகிறார்.

ஏ. அப்துல் ர‌வூஃப் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்துகிறார். ம‌வ்ல‌வி எச்.எம். சித்தீக் கிராஅத் ஓதுகிறார். முன்னாள் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் பி. முஹ‌ம்ம‌து இஸ்மாயில், நாகர்கோவில் சுகாதார‌த்துறை துணை இய‌க்குந‌ர் டாக்ட‌ர் ரால்ஃப் செல்வின், ஹாஜி என்.எஸ்.எஸ். தாஜுத்தீன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வ‌ழ‌ங்குகின்ற‌ன‌ர்.
நெல்லை ச‌த‌க்க‌த்துல்லாஹ் அப்பா க‌ல்லூரியின் ஓய்வு பெற்ற‌ முத‌ல்வ‌ர் கா. முஹ‌ம‌ம்து ஃபாரூக், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்த‌வ‌ க‌ல்லூரியின் ஓய்வு பெற்ற‌ முத‌ல்வ‌ர் முனைவ‌ர் ஜேம்ஸ் ஆர். டேனிய‌ல், க‌விஞ‌ர் த‌க்க‌லை ஹ‌லீமா உள்ளிட்டோர் க‌ருத்துரை வ‌ழ‌ங்குகின்ற‌ன‌ர்.

க‌விமாம‌ணி பேராசிரிய‌ர் தி.மு.அப்துல் காத‌ர் நூல் வெளியிட்டு சிற‌ப்புரை நிக‌ழ்த்துகிறார்.
நூலின் பிர‌திக‌ளை எஸ். முஹ‌ம்ம‌து முஸ்த‌பா,துபாய் ஈடிஏ அஸ்கான் பொறியாள‌ர் எம். ஷாகுல் ஹ‌மீது, ஓய்வு பெற்ற‌ முத‌ன்மைக் க‌ல்வி அலுவ‌ல‌ர் ச‌ந்தான‌ குமார‌சுவாமி, என்.எஸ். ஹ‌மீது, எஸ். ஷேக் ப‌ரீது, ம‌க்காய்பாளைய‌ம் முஸ்லிம் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் ஏ.பி.எம். ராபி, டிடிஎன் தொலைக்காட்சி உரிமையாள‌ர் ஏ.எஸ். ஜ‌ஹ‌ப‌ர் சாதிக் உள்ளிட்டோர் பெறுகின்ற‌ன‌ர்.

நூலாசிரிய‌ர் எம்.ஏ. ஷாகுல் ஹ‌மீது ஏற்புரை நிக‌ழ்த்துகிறார். எச். ஹாமீம் முஸ்த‌பா ந‌ன்றி கூறுகிறார். நாவ‌லாசிரிய‌ர் எம். மீரான் மைதீன் நிக‌ழ்ச்சியினை ஒருங்கிணைக்கிறார்.

இந்நூல் லைலா ப‌திப்ப‌க‌ம், 6 35 முகில் இல்லம், இராஜ‌ல‌ட்சுமி ந‌க‌ர், பெருவிளை ரோடு, நாக‌ர்கோவில் 3 என்ற‌ ப‌திப்ப‌க‌த்தால் வெளியிட‌ப்ப‌டுகிற‌து. வெளியீட்டு விழாவில் நூல் ரூ. 100 க்கு கிடைக்கும்.

சேது பொறியியல் கல்லூரி 10_வது பட்டமளிப்பு விழா அமைச்சர் அன்பழகன் பங்கேற்பு

சேது பொறியியல் கல்லூரி 10_வது பட்டமளிப்பு விழா அமைச்சர் அன்பழகன் பங்கேற்பு
மதுரை,பிப்.2


சேது பொறியியல் கல்லூரியின் 10_வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அன்பழகன் கலந்துகொண்டு மாணவ_மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.




மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் 10_வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் முகமது ஜலீல் பட்டமளிப்பு விழாவை துவக்கிவைத்து வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் அ.செந்தில்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.




இந்த விழாவில் நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் கலந்துகொண்டு 250 மாணவ_மாணவிகளுக்கு பொறியியல் பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:_




தமிழ்நாட்டில் அண்மையில் கடந்த 50 ஆண்டு காலத்தில் நடைபெறாத வளர்ச்சி கல்வித்துறையில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐ.டி.துறை உலக அளவில் இந்திய நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட ஐ.டி.துறையில் கைதேர்ந்த இளைஞர்கள் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட தகுதி வாய்ந்த இளைஞர்கள் தமிழ்நாட்டில் இருந்து சென்று ஐ.டி.துறையில் சிறந்து பணியாற்றி வருகிறார்கள். இது நமது மாநிலத்தை உலக அளவில் அறியச்செய்துள்ளது. ஒரு காலத்தில் பலருக்கு கல்வி மறுக்கப்பட்டது.




இன்னார்தான் கல்வி அறிவு பெறவேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு இருந்தது. அதையெல்லாம் மாற்றி தற்போது யார் வேண்டுமானாலும் கல்வியை பெறலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வியை புகுட்டுவது ஒரு அரசின் கடமை. கல்வி யாருக்கும் மறுக்கப்பட கூடாது என்ற நிலை இப்போது உள்ளது. எனவே இதை பயன்படுத்தி அனைத்து இளைஞர்களும் முன்னேற வேண்டும். அதற்கான முயற்சியில் ஞிங்கள் ஈடுபட வேண்டும். இங்கு படித்து பட்டங்களை பெற்றுச்செல்லும் ஞிங்கள் உங்களது தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் அடைந்து ஏராளமாக சம்பாதித்து வீட்டையும் நாட்டையும் வளப்படுத்த எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.




பட்டமளிப்பு விழாவில் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதன்மை கல்வி அதிகாரி சீனி முகைதீன் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர். முடிவில் ஆங்கிலத்துறை தலைவர் கிறிஸ்டோபர் ரமேஷ் நன்றி கூறினார்.

Sunday, February 1, 2009

GULFJOBS.COM

GULFJOBS.COM

PLEASE FORWARD TO ALL OUR BROTHERS TO FOLLOW THE PROCEDURE STATED LAST-BELOW AND GET SUBSCRIBED AS A MEMBER OF THIS GULFJOBS.COM; SO THAT THEY'LL REGULARLY RECEIVE DAILY JOD-UPDATES AUTOMATICALLY TO THEIR EMAIL INBOXES.


The Only site of the world collecting job / vacancies appearing in different English News Papers of Arabian / Persian Gulf

A Powerful Poem

Look into my eyes
And tell me what you see.
You don't see a damn thing,
'cause you can't possibly relate to me.
You're blinded by our differences.
My life makes no sense to you.
I'm the persecuted Palestinian.
You're the American red, white and blue.
Each day you wake in tranquility,
No fears to cross your eyes.
Each day I wake in gratitude,
Thanking God He let me rise.
You worry about your education
And the bills you have to pay.
I worry about my vulnerable life
And if I'll survive another day.
Your biggest fear is getting ticketed
As you cruise your Cadillac.
My fear is that the tank that just left
Will turn around and come back.
American, do you realize,
That the taxes that you pay
Feed the forces that traumatize
My every living day?
The bulldozers and the tanks,
The gases and the guns,
The bombs that fall outside my door,
All due to American funds.
Yet do you know the truth
Of where your money goes?
Do you let your media deceive your mind?
Is this a truth that no one knows?
You blame me for defending myself
Against the ways of Zionists.
I'm terrorized in my own land
And I'm the terrorist?
You think you know all about terrorism
But you don't know it the way I do,
So let me define the term for you,
And teach you what you thought you knew.
I've known terrorism for quite some time,
Fifty-five years and more.
It's the fruitless garden uprooted in my yard.
It's the bulldozer in front of my door.
Terrorism breathes the air I breathe.
It's the checkpoint on my way to school.
It's the curfew that jails me in my own home,
And the penalties of breaking that curfew rule.
Terrorism is the robbery of my land,
And the torture of my mother,
The imprisonment of my innocent father,
The bullet in my baby brother.
So American, don't tell me you know about
The things I feel and see.
I'm terrorized in my own land
And the blame is put on me.
But I will not rest, I shall never settle
For the injustice my people endure.
Palestine is our land and there we'll remain
Until the day our homeland is secure.
And if that time shall never come,
Then we will never see a day of peace.
I will not be thrown from my own home,
Nor will my fight for justice cease.
And if I am killed, it will be in Falasteen.
It's written on my every breath.
So in your own patriotic words,
Give me liberty or give me death.

துபாயில் தமிழ்க் குடும்பம் ஒன்றிற்கு அறை வாடகைக்கு தேவை

Assalamu Alaikkum,

Kindly be informed if any room available for Tamil Family in Deira Circumstance.

Await your positive reply for this matter

Vassalam


M.R. Guthus,
Post Box # 51585,
Accountant Assistant,
Yellow Flower Trading Co.,
The Appreal Company,
Tel : 04-2733257, Fax : 04-2733639,
Mobile : 0097150-5050359

இணையதளமொன்றை பதிவு செய்வது எப்படி?

இணையதளமொன்றை பதிவு செய்வது எப்படி?

சொந்தமாக தமக்கென்று இணையதளம், வலைப்பூக்கள் என்று உருவாக்கிக் கொண்டு அதில் தம் கருத்துக்களையும், உணர்வுகளையும் உலகோடு பகிர்ந்துகொள்வது மிகப்பிரபலமாகி வருகிறது. அப்படி நமக்கென்று ஒரு இணையதளத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டுமானால் முதலில் அதன் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இப்படி பதிவு செய்துகொள்வதினால் அந்தப்பெயரை வேறு எவரும் பயன்படுத்திக்கொள்ள முடியாது என்பதோடு, இணையதளம் முழுக்கட்டுப்பாட்டில் நம் கையில் வந்து விடுகிறது.

இணையதளப் பெயரினை தேர்ந்தெடுக்கும் முன் எத்தகைய பணிக்காக இணையதளத்தை உருவாக்க விருக்கிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். காரணம் அதன் அடிப்படையில் தான் இணையதளத்தின் பின்னொட்டு அமைய வேண்டும். உதாரணத்திற்கு, வணிகரீதியானது எனில் .com என்றும், லாப நோக்கமற்றது எனில் .org என்றும் குழுசார்ந்தது எனில் .net என்றும் கல்வி சார்ந்தது எனில் .edu அல்லது .ac என்றும் குறிப்பிட வேண்டும். இந்திய இணையதளம் என்று குறிப்பிட வேண்டுமெனில் .in என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இணையதள பதிவிக்கென பதிவாளர்கள் இணையத்தில் ஏராளாமக இருக்கின்றனர். முழுக்கட்டுப்பாட்டுடன் கூடிய சிறந்த வசதி, வாடிக்கையாளர் சேவை போன்றவற்றை முன்னிறித்தியே நாம் பதிவாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அத்தகைய சிறந்த பதிவாளர்களாக bagfull.net திகழ்கிறது. மிகக்குறைந்த விலையில் சிறப்பான வசதியை அளித்திடும் இந்நிறுவனம் இணையதளப் பதிவு மற்றும் அதற்கான இடம் என்று இரண்டு வசதியையும் அளிக்கின்றது.

இணையதளப் பெயரினை பதிவு செய்வதற்கான படிநிலைகள் :
முதலில் அப்பெயர் பதிவிற்கு இருக்கிறதா அல்லது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். http://www.bagfull.net/check.php முகவரியில் இதனை உறுதிசெய்து கொள்ளலாம்.
பெயர் பதிவுக்கு இருக்குமாயின் நம்முடைய தகவல்களை அளித்து பதிவு செய்து கொள்ளலாம். எத்துனை ஆண்டுகாலம் பதிவு செய்ய வேண்டுமென்பதையும் நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பதிவுக்காலம் முடிந்தவுடன் மீண்டும் பணத்தைச் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம்.




மேற்குறிப்பிட்ட தொகையை செலுத்தி, பெயரை பதிவு செய்துகொண்ட பின், பதிவாளரிடமிருந்து பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும்.
இது வெறும் பெயர் பதிவு மட்டுமே. இடத்திற்கு தனியாக பணம் செலுத்தி பெயரையும் இடத்தையும் இணைத்துக் கொள்ளவேண்டும். இதன் பிறகு நமது கோப்புகள் பதிவாளர் தந்துள்ள முகவரிக்கு பதிவேற்றம் செய்யப்படும்போது உலகோடு நமது தொடர்பு பரவத் தொடங்குகிறது. தற்போதெல்லாம் பெயர் பதிவு செய்தால் மட்டுமே போதுமானது. ஏராளாமான நிறுவனங்கள் இலவசமாக இடத்தை அளிக்கின்றன. இணைய உலகின் ஜாம்பவான் Google நிறுவனம், இடத்தையும் தாண்டி, சிறு நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இலவசமாகவே அளிக்கிறது.

Rajaghiri Gazzali

எளிய மருத்துவக் குறிப்புகள்

எளிய மருத்துவக் குறிப்புகள்

1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.
2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.
3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.
4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.
5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.
6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.
7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.
குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.
9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.
10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.
11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.
12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.
13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.
14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.
15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.
16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.
17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும்.. நன்றாக மலம் இளகும்.
18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.
19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.
22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.
23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.
24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.
25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்..
26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.
28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.
29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.
30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.
31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.
32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.
33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.
34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.
35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.
36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.
37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்..
38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.
39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.
40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.
41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.
42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.
43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.
44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.
45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.
46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.
47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.
48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.
49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.
50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.
51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.
52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.
53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.
55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.
56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.
57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.
58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.
59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.
61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.
62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.
63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.
64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்
65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.
66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.
67) பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.
68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.
69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.
70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.
71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.
72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.
73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.
74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.
75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.
76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.
77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.
78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.
79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.
80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.
81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.
82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.
83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.
84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.
85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.
86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.
87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.
88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.
89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.
90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.
91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.
92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.
93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.
94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.
95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.
96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.
97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.
மூலம்: தமிழ் சித்தமருத்துவக் கழகம்

Saturday, January 31, 2009

ELECTRONIC QUR'AN

ELECTRONIC QUR'AN -- EXCELLENT WORK.

Please click on the below link

http://www.quranflash.com/en/quranflash.html

Excellent Work

Thursday, January 29, 2009

சிங்கப்பூர் ஜாமியா நிகழ்ச்சி

சிங்கப்பூர் ஜாமியா நிகழ்ச்சி

சிங்கப்பூர் ஜாமியா அமைப்பினரால் ஜனவரி 18 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியினைக் கேட்க

http://bayan.koothanallur.net/

http;//bayan.koothanallur.net

Solution Vs Problem Mentalities

Assalamu Alaikum,

You probably have read, or at least received several emails on the backwardness of Muslims, atrocities against Muslims, Insults on Islam etc; followed by "Please forward to all your contact" (I don't forward). If you read some of the socio-political magazines, you could see that they also describe the same stuff over and over. It's important that we know what is really going on around us, but

How beneficial it is that these emails / reports are read only by Muslims?
Why is that no email / magazine talks about solutions - even simple actions?
Why did we become a nation (Ummah) of complainers?

Why is that only a few are talking/writing/thinking about solutions? Rather than buying these magazines, I'd rather spend that money to help a student become a journalist who can present our side using The Hindu, Dinamani, NDTV, etc. Or, create a fine lawyer who can defend Muslims in court.

My request: When some speaker or a writer, talks about the issues, or describes the problems – ask him/her this: What do you think are solutions, which can be done by you and me? Let's not get into solutions that require massive investment (from Kings, or Ministers). God will not ask you on things beyond your control. But, if you could do a few things, but didn't (and complained that rulers or rich Muslims aren't doing) - be prepared to answer in the Hereafter.

Role Model: Remember the story of a blind Sahabi (Companion of the Prophet PBUH) who wanted to go to war. He didn't think his blindness is an excuse (like many who think, if only had more money, or if only I were a Prime Minister, I'd do this and that). When others asked him how he could contribute – he replied: "I can carry the flag of Islamic army. Since I'm blind, I won't be afraid of enemy. Besides, I increase the count of Muslims by one"

Please consider this: Some of your class-mates / colleagues may be working to improve the spiritual, educational and financial (poor laborers, don't have money to continue study) status of Muslims in some area. They'll need a few more volunteers. They would request your involvement, suggestions and time/efforts.

Our own problems look smaller (or silly, sometimes) when we see the problems of others, who are in a very bad state. You'll get a sense of supreme satisfaction when your efforts go beyond your family & friends. Trust me, i was lazy & late to join my co-workers in their efforts. But once i became part of it, it is a refreshing experience. You got to experience it to believe it.

And, most importantly – inviting to good, helping the community, and other good deeds are the ones that'll help us once we cease to live.

Bill Gates, when asked "what advice he had for ordinary readers who might want to engage in micro-philanthropy".

Reply: "The key thing is to pick a cause, whether its crops or diseases or great high schools. Pick one and get some more in-depth knowledge. If possible, travel to see the problems firsthand, then pick an organization to support with donations or volunteer time" (NYT Interview. Also in The Hindu Dt. 26-Jan-09)

seyed.ibrahim@gmail.com

துபாயில் குடும்ப‌ பொருளாதார‌ திட்ட‌மிட‌ல் குறித்த‌ க‌ல‌ந்துரையாட‌ல்

துபாயில் குடும்ப‌ பொருளாதார‌ திட்ட‌மிட‌ல் குறித்த‌ க‌ல‌ந்துரையாட‌ல்

துபாயில் குடும்ப‌ பொருளாதார‌ திட்ட‌மிட‌ல் குறித்த‌ க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சி 23.01.2009 வெள்ளிக்கிழ‌மை மாலை அஸ்கான் ச‌முதாய‌க் கூட‌த்தில் அமீர‌க‌ வாழ் இளையான்குடி ஜ‌மாஅத்தின‌ரால் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

இக்க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சியினை சிங்க‌ப்பூர் வாழ் இளையான்குடி பிர‌முக‌ர் ஆடிட்ட‌ர் ஃபேரோஸ் கான் ந‌ட‌த்தினார். அவ‌ர் த‌ன‌து உரையில் ந‌டைமுறை சாத்திய‌த்தை கூறுவ‌தோடு அல்லாம‌ல் அத‌ற்கான‌ தீர்வினைக் கொடுக்க‌ வேண்டும் என்றார். ஜெர்ம‌ன் அறிஞ‌ர் ஒருவர் ஒரு ம‌னித‌ன் த‌ன‌து வாழ்வின் அனுப‌வ‌த்தை ப‌ள்ளிக்கு வெளியே க‌ற்றுக் கொள்கிறான் என்று கூறிய‌த‌ நினைவு கூர்ந்து த‌ன‌து அனுப‌வ‌த்தின் மூல‌ம் குடும்ப‌ப் பொருளாதார‌த்தை திட்ட‌மிட‌ல் குறித்து விவ‌ரித்தார்.

மேலும் க‌ண‌வ‌ன் ம‌னைவி உற‌வு, பெற்றோர் பிள்ளை உற‌வு, ஆசிரியர் மாண‌வ‌ர் உற‌வு உள்ளிட்ட‌ ப‌ல்வேறு த‌லைப்புக‌ளிலும் இவ‌ர் ஆலோச‌னை வழ‌ங்கி வ‌ருகிறார். அமீர‌கத்தில் ஒரு வார‌ம் இருக்கும் இவ‌ரை 055 988 68 05 எனும் எண்ணில் தொட‌ர்பு கொள்ள‌லாம்.

இவ‌ர‌து http://www.bitter-truth.net ஆக்க‌ங்க‌ளை எனும் இணைய‌த்த‌ள‌த்தில் பார்க்க‌லாம்.

இந்நிக‌ழ்ச்சிக்கான‌ ஏற்பாடுக‌ளை அஷ்ர‌ஃப், க‌பீர் உள்ளிட்டோர் செய்திருந்த‌ன‌ர். இந்நிக‌ழ்வில் ந‌ம்ம‌ ஊரு செய்தி ஆசிரிய‌ர் முனைவ‌ர் அய்யூப், அப்துல் மாலிக் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

சென்னையில் பிப்.1 இல் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு!

சென்னையில் பிப்.1 இல் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு!

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெறவுள்ள மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாடு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இன்ஷா அல்லாஹ் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும்.

ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே, அழைப்புக் கடிதம் கொடுக்கப்பட்டது. சிரமத்திற்கு வருந்துகிறோம். தாங்கள் அனைவரும் சிரமத்தை பொருட்படுத்தாமல் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி தலைமை வகிக்கிறார்.

தி.மு.க. பொருளாளரும், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருமாகிய, மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் இம்மாநாட்டில் கலந்து கொண்டு நிறைவு பேருரை நிகழ்த்துகின்றார். வக்ஃப் வாரிய அமைச்சர் மாண்புமிகு டி.பி. எம்.மைதீன்கான் வாழ்த்துரை வழங்குகின்றார்.

இம்மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையது சத்தார் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம். சையது அஹமது, தமிழக அரசு ஹஜ் கமிட்டி தலைவர் - வக்ஃபு வாரிய உறுப்பினர் ஜே.எம். ஹாரூன் எம்.பி,, தலைமை காஜி முப்தி முஹம்மது ஸலாவுத்தீன் அய்யூப், ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான், செய்யது எம். ஸலாவுத்தீன், காயிதே மில்லத் பேரவை சர்வதேச அமைப்பாளர் முத்துப்பேட்டை அப்துர் ரஹ்மான், இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் மௌலவி அ.முஹம்மது கான் பாகவி, முஸ்லிம் ஜமாஅத் பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவரும், வக்ஃப் வாரிய உறுப்பினருமான ஹாஜி எம். சிக்கந்தர்,, முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளர் சேமுமு முஹம்மதலி ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர்கள், மாநில செயலாளர்கள், சமுதாய புரவலர்கள், மாநில அணி அமைப்பாளர்கள் முன்னிலை வகிக்க உள்ளனர். முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.,
தமிழகம் முழுவதும் உள்ள இமாம்கள், சங்கமிகு ஆலிம் பெருமக்கள், முத்தவல்லிகள், அறக்கட்டளை நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்க உள்ள இம்மாநாட்டிற்கு அலைகடலென திரண்டுவரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

சீரகம்

சீரகம்

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.

* சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.

* சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுற தடுப்பு முறையாகக் கூட (Prophylactive) இதைச் சாப்பிடலாம்.

* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.

* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.

* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்..

* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

* சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.

* கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

* மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும

தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளில் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கிறது

தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளில் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கிறது

கனடிய பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் இருந்து தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளிடத்தில் (புட்டிப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகளைக் காட்டினும்) நுண்ணறிவுத்திறனை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும் இது தாய்ப்பாலின் நேரடி விளைவால் ஏற்படுகிறதா அல்லது தாய்ப்பால் ஊட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பலமான உறவுப்பாலம் மூலம் ஏற்படுகிறதா என்பதை ஆய்வாளர்கள் அறிதியிட்டு கூறிட முடியவில்லை.

சுமார் 14,000 குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்ட இவ்வாய்வின் பிரகாரம் தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் ஆறு வயதை அடையும் நிலையிலேயே தமது நுண்ணறிவுத்திறனைக் காண்பிக்க ஆரம்பித்து விடுகின்றனராம். முதல் 3 மாதங்கள் தொடங்கி 12 மாதங்கள் வரை தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகளில் 5.9% அதிக நுண்ணறிவுத்திறன் வெளிப்பட்டிருக்கிறது..!

தாய்ப்பாலின் கட்டமைப்பில் மூளை வளர்ச்சிக்கு அவசியமான கொழுப்பமிலங்கள் உள்ளன என்பதால் அவற்றின் பங்களிப்பும் இந்த நுண்ணறிவுத்திறன் வளர்ச்சியில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்று கூறும் ஆய்வாளர்கள் பாலூட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பெளதீக தொடுகைகள் மற்றும் குரல் (சொற்கள்) பரிமாற்றங்கள் கூட இதில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்..!

அதனால் தான் என்னவோ பழங்கால தமிழ் தாய்மார் பாலூட்டும் போதும் நித்திரைக்குச் செல்லும் போதும் குழந்தைகளுக்கு தாலாட்டுப் பாடினரோ..?!

எதுஎப்படியோ நவநாகரிக உலகில் பாலூட்டுதலால் தங்களின் கவர்ச்சி விரைந்து இழக்கப்பட்டு விடும் என்று கருதி பாலூட்டலைத் தவிர்க்கும் பெண்கள் அந்த நிலையில் இருந்து விலகுவது சிறப்பு என்பதை இவ்வாய்வு எடுத்துக்காட்டுகிறது. அதுமட்டுமன்றி குறைந்தது 6 மாதங்களாவது குழந்தைகளுக்குப் பாலூட்டுவது நுண்ணறிவுத்திறனை மட்டுமன்றி நோயெதிர்ப்பு சக்தியையும் குழந்தைக்கான அடிப்படை ஊட்டச்சத்து வழங்கலையும் அதிகரிக்கும்..!

பாலூட்டும் பெண்களுக்கு மார்ப்பகப் புற்றுநோய் ஏற்படுவதும் குறைவு என்பது பல ஆய்வுகளில் முன்னர் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2072:2008-07-07-11-54-46&catid=78:medicine

முன்னாள் மாணவனின் ஆனந்த கண்ணீர் மடல்

மதிப்பு மிக்க எனது (முன்னாள்) பள்ளியின் இன்னாள் தலைமை ஆசிரியை மற்றும் ஆசான் பெருந்தகைகட்கு, இப்புனித மிக்க கா.மு.பள்ளியின் முன்னாள் பள்ளியின் மாணவன் எழுதும் அஞ்சல்.

முன்னாள் மாணவர் அமைப்பு அமையப் போகும் நற்செய்தி எனக்கு கிட்டியது; மனமெல்லாம் மகிழ்ச்சி எட்டியது. நாங்கள் பள்ளியிறுதித் தேர்வில் எழுபத்தி யிரண்டு விழுக்காடு பெற்றோம்( ஆண்டு 1974 ). ஆனால், தற்பொழுது அதைவிட அதிகம் எடுத்து நம் பள்ளியின் பெருமையை அறியச்செய்திட்ட அறச்செயல் செய்திட்ட ஆசான்கட்கு நிரம்ப நன்றி. என்னைப் பற்றிய் சிறு குறிப்பு கீழே எழுதியுள்ளேன்:

பெயர்: அபுல்கலாம்
பள்ளியிறுதி முடித்த ஆண்டு: 1974

சிறப்பு தகுதிகள் (என் நன்றிக்குரிய ஆசான்களால் பெற்றவைகள்): வகுப்பில் எப்பொழுதும் முதல் தரம் பெறும் பேறு; இறுதி பொதுத் தேர்வில் இரண்டாமிடம்.

"யாப்பிலக்கணத்தின்" அடியொற்றி வெண்பா சுயமாக எழுதியதால் எனது மதிப்பிற்குரிய- தமிழ்ப்பால் ஊட்டிய தமிழாசிரியர்கள் திரு. இராமதாசு /திரு. சண்முகம் மற்றும் என் வகுப்பு தோழர்களால் "கவியன்பன்" என்று அழைக்கப் பெற்றேன்; இன்று வரை அப்பெயரிலேயே கவிதைகள் யாத்தும் உலகமெங்கும் நமதூர் பெயர் அறியச் செய்கின்றேன். எங்கட்கு கிடைத்த ஆசான்களின் அற்புதமான போதனா முறைகளால் தமிழைப் போல் ஆங்கில இலக்கணத்திலும் எங்களுக்கு ஆழமான அறிவமுதம் ஊட்டித்தான் வெளியுலகுக்கு அனுப்பி வைத்தனர். அதனாற்றான், இன்றளவும், இறையருளால், ஆங்கில இலக்கணத்தில் தவறின்றி எழுதவும்; பேசவும் எங்களால் முடியும்.யாராகிலும் தவறாக இலக்கணப் பிழையுடன் பேசினால் உடனேத் திருத்தி கொடுக்கின்றேன்; அதன் விளைவாக, எனது பட்ட படிப்பு -இளங்கலை வணிகவியல் முடித்த ஆண்டு முதல் இன்று வரை இலவசமாக ஆங்கில இலக்கணம் கற்று தருகின்றேன். அத்தனைக்கும் அடிப்படை அதிரையில் பிறக்க வைத்த அல்லாஹ்வின் அருளும் அற்புதமான ஆசான்களின் போதனா முறைகளும். எனவே, என்னை அதிரை என்னும் அழகிய பதியில் உதிக்க வைத்த அல்லாஹ்வுக்கு நன்றி. ஆயுள் முழுவதும் என் ஆசான்கட்கு நிரம்ப நன்றி கடன் பட்டுள்ளேன். அரபு நாடுகள் முதல் அமெரிக்கா வரைச் சென்று உயர்பதவிகளில் உட்கார்ந்து பணியாற்றிட உதவியாக அமைந்தது உண்மையாக எனது தாய்மடி போன்ற என் பள்ளி தான் என்று மனம் மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் விட்டேன்.
எனது நன்றி மறவா ஆசான்கள்:

தமிழ்ப்பால் ஊட்டிய திரு. இராமதாசு/ திரு.சண்முகம்
ஆங்கிலத்தில் சுயமாக பேச - எழுத பயிற்றிவித்த : ஜனாப். அலியார் சார்
அறிவியல் பாடத்தை அற்புதமாக நடத்தும்; ரெங்கராஜ் ஐயா
ஓவியப்பாடத்தூடே ஆங்கில இலக்கணம் கற்று தந்த : ஜனாப் வாவன்னா சார்
எனது திறமைக்கு மதிப்பளித்து தேர்தலின்றியே- பள்ளித்தலவனாகத் தேர்வு செய்த தலைமை ஆசிரியர்: ஜனாப் இப்றாஹிம் சார்
பல்கலைவேநதராகிய அதிரையின் இயக்குனர் திலகம் : ஜனாப். ஹாஜா முஹையித்தீன் சார்
(அவர்கள் கற்று தறாத பாடமேயில்லை எனலாம். அடிப்படையில் கணித ஆசிரியர். ஆனால், தமிழ்-இலக்கண இலக்க்கியம்; ஆங்கில இலக்கண இலக்கியம்; மற்றும் பேச்சு திறன் எழுத்துத் துறை எல்லாம் கற்ற- கற்பித்த அவர்கள் தான் என் உதாரண புருஷர். அவர்கள் இயற்றி இயக்கிய நாடகத்தில் பங்கு பெற்றது என் வாழ்வில் கிடைத்த ஒரு பேறு.
எனது படைப்புகள்:
என்னைப் படைத்தவனருளால், நான் படைத்து இன்று வரை இணய தளத்தில் உலகமெங்கும் உள்ள் தமிழர்களால் பாராட்டப்பெற்று அதிரையின் பெயர் அகிலம் உணரவும் அதற்கு அடிப்படையான கா.மு.பள்ளியினை நினைவு கூரத்தக்க கவிதைத் தொகுப்பு
ஆங்கில வழி போதனாமுறையில் படித்த எத்தனையோ பட்டதாரிகட்கும் பயன்பெற்று தந்த -தந்து வரும்

"KALAM'S INSTITUE: BASIC LEVEL GRAMMAR TEACHING"என்ற சிறு நூல் ஒன்றும் இயற்றி இலவசமாக இணய தளம் மூலம் உலகத்தமிழர்கட்கு அனுப்பியுள்ளேன்.
அடுத்து வரும் அஞ்சலில் அவ்விரண்டு படைப்புகளும் தங்கட்கு- என் முன்னாள் பள்ளி என்ற தாய்மடிக்கு சமர்ப்பிக்கின்றேன்.
நன்றியுள்ள முன்னாள் மாணவன்


-"கவியன்பன்"கலாம், அதிராம்பட்டினம்
00971-50-8351499
shaickkalam@yahoo.com


பின் குறிப்பு:
தங்கர்பச்சன் படைத்த "பள்ளிகூடம்" திரைப்படம் பார்த்தபோழ்து என் உள்ளம் என் தாய்மடியான அதிரை கா.மு.பள்ளியை நினைத்து அழுது விட்டேன்; இன்று முன்னாள் மாணவர் சங்கம் அமைத்து அதில் நானும் அங்கம் என்பதை நினத்து ஆனந்த கண்ணீர் விட்டேன். உண்மையாக, ஒவ்வொரு முறை விடுமுறையில் நான் பிறந்த ஊராம்- தமிழகத்தில் சிறந்த ஊராம் "அதிரா(ம்)" ப்ட்டினத்துக்கு வரும்பொழுதெல்லாம், என் பள்ளியினுள்ளேச் சென்று சிறிது நேரம் அமர்ந்து விட்டு பழைய நினைவுகளை உள்ளத்தில் ஏந்தி வருவேன்; அது சமயம்- தாயின் மடியில் தலை வைத்த சுகமான உள்ளுணர்வே எனக்கு ஏற்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் இம்முறை விடுமுறையில் வரும்பொழுது
முன்னாள் மாணவர் சங்கத்தில் இணய உள்ளேன் என்பதை நினைத்தாலே இனிக்கின்ற நினைவலைகளுடன்................................

Wednesday, January 28, 2009

Flats available

TRICHY

Flats in prime area, Khaja Nagar located in the heart of the city surrounded by 99% muslim people, near Jamal Mohamed, Arabic colleges and
also Samad Matriculation School.. Very decent building by Engineers and Architects
Centralized sewage and gas connections..
(Please contact: Mr J.Sharfuddin
email: ameertravels@hotmail.com


Flats available
==========
Floor Sq.Ft.
============
1st floor 891 sq.ft
2nd floor 1102 sq.ft
3rd floor 891 sq.ft
3rd floor 1102 sq.ft
4th floor 1114 sq.ft
4th floor 1111 sq.ft

Rate is Rs.2244/- per sq.ft

பள்ளிவாசல் தோறும் நூலகம் அமைப்போம் !!!

பள்ளிவாசல் தோறும் நூலகம் அமைப்போம் !!!

முஸ்லிம்களின் நூலக பாரம்பரியம் தொன்மைமிக்க ஒன்றாகும். எண்ணற்ற புகழ் மிக்க நூலகங்களை அமைத்து நூலக கலைக்கு ஆற்றிய பணிகளை எல்லாம் இங்கே விரிவாக சொல்லிவிட முடியாது. எனினும் இஸ்லாத்தின் ஆரம்ப கால முஸ்லிம்களிடையே அறிவு பெருக்கத்திற்கு நூலகங்கள் எவ்வாறு துணை நின்றன என்பதை மட்டும் இங்கே பதிவு செய்வோம்.

இஸ்லாமிய உலகில் நூலகங்களின் தோற்றத்திலும், வளர்ச்சியிலும் நாம் காணக்கூடிய சிறப்பம்சம் நூலகங்கள் அல்லாஹ்வின் இறை இல்லமான பள்ளிவாசல்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தன. ஒவ்வொரு பள்ளி வாசல்களும் ஒரு அறிவுபீடமகவே திகழ்ந்தன.

மருத்துவம் தவிர்த்து ஏனைய துறைகளெல்லாம் பெரும்பாலும் பள்ளிவாசல்களில் தான் போதிக்கப்பட்டன.

இவ்வுலகில் மிகத் தொன்மையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான அல் அஹ்ஸர் பல்கலைக் கழகம் (கி.பி 970) பள்ளிவாசலோடு இணைந்து உருவான உன்னத அறிவு பீடமாகும். ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் கலிபா அப்துல் அஜிஸ் அவர்களால் அல் அஹ்ஸர் பள்ளிவாசலுக்கு அருகில் சுமார் 35 உலமாக்கள் தங்கி இருப்பதற்கான இல்லமொன்று நிறுவபெற்றது. வெள்ளிக் கிழமைகள் தோறும் இந்த அறிஞர்கள் அல் அஹ்ஸர் பள்ளியில் உரை நிகழ்த்தி வந்தார்கள். இதிலிருந்து தான் அப் பல்கலைகழகம் உருவாகியது. இப்பல்கலை கழக நூலகத்தில் கிடைப்பதற்கு அறிய பல கையெழுத்து பிரதியில் ஆன நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மொரோக்கோ வின் பண்டைய தலைநகரம் பெஸ் (FEZ) இல் கி.பி 859 இல் எழுந்த அல் கரவயீன் பள்ளிவாசலும் குறிப்பிடத்தக்கதாகும். இது வணக்க தளமாகவும், சிறந்த கல்வி கூடமாகவும் விளங்கியது. இங்கு தான் அன்றைய உலகின் புகழ்மிக்க வானவியல் மற்றும் கணித அறிஞர்களும் ஆய்வு நிகழ்த்தினார்கள். இப்னு கல்தூன் லியோ ஆப்ரிகனஸ் போன்ற பேரறிஞர்களில் பெயர்கள் இப்பல்கலை கழகத்துடன் இணைந்துள்ளன. இங்கும் சுமார் 16000 மேற்பட்ட கையெழுத்து பிரதிகள் பாதுக்ககபட்டு வருகின்றன.

இதேபோல் அல் ஹக்கீம் என்பவருடைய நூலகம் நாற்பது அறைகளை கொண்டு இயங்கி வந்தது. இங்கு சுமார் 18.000 நூல்கள் அன்றைய காலகட்டத்தில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தன.

ஈராக் தலைநகர் பாக்தாத் இல் ஷாக்பூர் என்பவர் 1.00.000 மேற்பட்ட நூல்களை கொண்டு நூலகம் ஒன்றை நிறுவி இருந்தார்.

இதேபோல் கலிபாகளும், பல தனியாரும் அமைத்த நூலகங்களின் விபரம் இஸ்லாமிய வரலாற்று நூல்களில் காண கிடைக்கின்றன.

நபிகள் நாயகம் அவர்கள் தமது காலத்தில் சமுக, கலாச்சார, அரசியல் நடவடிகைகள் அனைத்திற்கும் பள்ளிவாயிலையே தலைமை இடமாக எற்படுத்தி இருந்தார்கள். இங்கு தான் இறை விசுவாசிகள் தொழுகைக்கு கூடும் இடமாகும். அங்கு நபி அவர்களின் சொற்பொழிவினை செவிமடுப்பார்கள்.

இரண்டாவது கலிபா உமர் அவர்கள் கூபா, பஸ்ரா, திமிஸ்க் போன்ற நகரங்களில் உள்ள பள்ளிவாசல்களில் உரை நிகழ்த்த பல அறிஞர்களை நியமித்தார். இவர்கள் காஸ் என அழைக்கப்பட்டனர். இதற்கு கதை சொல்வோர் என்பதாகும்.

இவ்வறிஞர்கள் இஸ்லாத்திற்கு முற்பட்ட காலத்தில் புராண கதைகள் கூறுவது போலன்றி, திருக்குரான் மற்றும் ஹதிஸ் விளக்கங்களை போதித்து வந்தனர். இவ்வாறாக பள்ளிவாசல்கள் இறை வணக்கதளமாக மட்டுமின்றி கல்விகூடங்களாக
பரிணமித்தன. இப்பள்ளிகளில் நிகழ்த்தப்பட்ட விரிஉரைகள் நாளடைவில் பெருகி பள்ளிவாசல்களோடு இணைந்த மதராசா (கல்லூரி) களின் தோற்றத்திற்கு வழிகோலின.

பல்வேறு சமூகங்களோடு இணைந்து வாழும் நாம் நமது கலாச்சாரங்களை பாதுகாக்க பள்ளிவாசல்களை மார்க்க மற்றும் கலாச்சார மையமாக சமூகத்தில் பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு நூலகம் நிறுவ பட வேண்டும்.
60 வருட சுதந்திர இந்தியாவில் குறிப்பாக தமிழ் முஸ்லிம்களிடையே கடந்த 10 ஆண்டுகளில் கல்வி பற்றிய விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்பட்டு இருக்கிறது.

கிடைத்த இடஒதிக்கீட்டை சரியான வழியில் பயன் படுத்தவும், வருங்கால தலைமுறைக்கு வழிகாட்டவும் களமாக அமைய வேண்டியது பள்ளிவாசல்களும், அதனுடன் இணைந்த நூலகமும் தான் என்பதை சமுதாயத்துக்கு உணர்த்துவோம்!!.

முஸ்லிம்களிடைய குறிப்பாக இளைஞர்களிடைய வாசிக்கும் பழக்கம் குறைவாகவே இருக்கிறது. மேலும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அரசாங்க நூலகம் இருப்பது குறைவே. முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் படிப்பகங்கள் இருக்கின்றன. இங்கு அமைப்பு மற்றும் இயக்கம் சார்ந்த பத்திரிகைகள், புத்தகங்கள் மட்டுமே இருப்பது வாசிப்பவர்களை ஒரு குறிப்பிட வட்டத்திற்குள் அடக்கிவிடுகிறது.

தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் தினசரி பத்திரிகைகள் வெளிவராமல் போனதற்கும்,
மாத மற்றும் வார இதழ்கள் வெற்றி பெறாமல் போனதற்கும் நூலகங்கள் நிறுவ படாததே முக்கிய காரணமாகும்.

முஸ்லிம் சமுதாயத்தில் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு சம்மந்தம் இல்லாத அரசியற் கொள்கைகள், கோட்பாடுகள், சமுக கலாச்சார மாற்றங்கள் சமுதயத்தில் வேகமாக பரவி போனதற்கு சமுகத்தின் உண்மையான அவல நிலையை, கலாசார சீரழிவை, கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கூடிய வலிமையான பத்திரிகைகள் இல்லாமல் போனதே மிக முக்கிய காரணம் ஆகும். இஸ்லாமிய மார்க்க,கலாச்சார மற்றும் இலக்கிய ஏடுகள் மக்களிடையே ஆதரவு இல்லாமல் போனதன் அவல நிலையை இன்று காண்கிறோம். ஊடகங்களில் எத்தனை வகை இருந்தாலும் பத்திரிகை ஒரு வலுவான ஊடகம் ஆகும். பிற நாளிதழ்கள் மக்களிடையே மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. உதரணமாக நபிகள் நாயகம் சித்திரத்தை வரைந்த தினமலர், தொடர்ந்து முஸ்லிம் விரோத கருத்துக்களை எழுதி வரும் இந்திய டுடே. துக்ளக், காலசுவடு என நம்மிடம் பட்டியலே இருக்கிறது. வாசகர்களாகிய நீங்கள் அறிந்ததே. அவற்றை சமாளிக்க கூடிய நாளிதலோ, வார இதழோ, மாத இதழோ நம்மிடம் இல்லை. அப்படியே இருந்தாலும் அவை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே இயங்கி வருகின்றன. வெகு ஜனங்களை இந்த இதழ்களால் கவர முடிய வில்லை.

இன்னும் கவலை தர கூடிய செய்தி முஸ்லிம் இதழ்களின் பெயர்களே தெரியாத படித்த முஸ்லிம்கள் உள்ளனர் என்பதாகும்.

உலகில் பத்திரிகைகள் அதிகமாக வரும் நாடு எது தெரியுமா சகோதரர்களே!!! இஸ்ரேல்.

என்று யூதர்கள் மத்திய கிழக்கை நோக்கி வந்தார்களோ அன்றிலிருந்து சரியாக பதினேழாவது நாள் அவர்கள் நாளிதழ்கள் தொடங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடங்கி சரியாக 38 நாட்களில் அவர்களால் பத்திரிகைகள் வெளி இடப்பட்டன. அடுத்த ஐந்து மாத காலத்தில் பல்கலை கழகத்திற்கும் அடிக்கல் நாடினார்கள். இது நடந்த வருடம் 1947.

முஸ்லிம் சமுதாயத்தில் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு சம்மந்தம் இல்லாத அரசியற் கொள்கைகள், கோட்பாடுகள், சமுக கலாச்சார மாற்றங்கள் சமுதயத்தில் வேகமாக பரவி போனதற்கு சமுகத்தின் உண்மையான அவல நிலையை, கலாசார சீரழிவை, கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கூடிய வலிமையான பத்திரிகைகள் இல்லாமல் போனதே மிக முக்கிய காரணம் ஆகும். இஸ்லாமிய மார்க்க,கலாச்சார மற்றும் இலக்கிய ஏடுகள் மக்களிடையே ஆதரவு இல்லாமல் போனதன் அவல நிலையை இன்று காண்கிறோம். ஊடகங்களில் எத்தனை வகை இருந்தாலும் பத்திரிகை ஒரு வலுவான ஊடகம் ஆகும். பிற நாளிதழ்கள் மக்களிடையே மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. உதரணமாக நபிகள் நாயகம் சித்திரத்தை வரைந்த தினமலர், தொடர்ந்து முஸ்லிம் விரோத கருத்துக்களை எழுதி வரும் இந்திய டுடே. துக்ளக், காலசுவடு என நம்மிடம் பட்டியலே இருக்கிறது. வாசகர்களாகிய நீங்கள் அறிந்ததே. அவற்றை சமாளிக்க கூடிய நாளிதலோ, வார இதழோ, மாத இதழோ நம்மிடம் இல்லை. அப்படியே இருந்தாலும் அவை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே இயங்கி வருகின்றன. வெகு ஜனங்களை இந்த இதழ்களால் கவர முடிய வில்லை.

இன்னும் கவலை தர கூடிய செய்தி முஸ்லிம் இதழ்களின் பெயர்களே தெரியாத படித்த முஸ்லிம்கள் உள்ளனர் என்பதாகும்.

உலகில் பத்திரிகைகள் அதிகமாக வரும் நாடு எது தெரியுமா சகோதரர்களே!!! இஸ்ரேல்.

என்று யூதர்கள் மத்திய கிழக்கை நோக்கி வந்தார்களோ அன்றிலிருந்து சரியாக பதினேழாவது நாள் அவர்கள் நாளிதழ்கள் தொடங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடங்கி சரியாக 38 நாட்களில் அவர்களால் பத்திரிகைகள் வெளி இடப்பட்டன. அடுத்த ஐந்து மாத காலத்தில் பல்கலை கழகத்திற்கும் அடிக்கல் நாடினார்கள். இது நடந்த வருடம் 1947.




ராஜகிரி கஸ்ஸாலி

shabath ahamed
dateWed, Jan 28, 2009 at 2:56 PM
subjectRe: பள்ளிவாசல் தோறும் நூலகம் அமைப்போம் !!!

Thank You for the information.

AHMED MEERAN MOHAMED BILAL
dateThu, Jan 29, 2009 at 10:20 AM
subjectRe: பள்ளிவாசல் தோறும் நூலகம் அமைப்போம் !!!

Thanks. very good informations.
Bilal

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - அதிராம்பட்டினம் முன்னாள் மாணவர்கள் சங்கம்

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - அதிராம்பட்டினம் முன்னாள் மாணவர்கள் சங்கம்

அஸ்ஸலாமு அலைக்கும்.


நீங்கள் நம்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரா? உடன் நமது முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் உறுப்பினராகுங்கள். நீங்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் பள்ளியான காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைத் தொடர்புகொண்டு உறுப்பினராகுங்கள்.நம்பள்ளி சென்ற ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 85% சதவீதம் தேர்ச்சியும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92% சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். எல்லா திறனும் உள்ள நமது மாணவர்களை சிறந்த சாதனையாளராக உருவாக்க உங்களின் ஒத்துழைப்பு தேவை என்பதால் முழுக்க‌ முழுக்க பள்ளியின் நலன் கருதியே இந்த முன்னாள் மாணவர் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. உடன் 04373-242229 என்ற நம் பள்ளியின் தொலைபேசியிலோ அல்லது kmboysoldstudentassociation@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்தோ அல்லது உங்களின் வாழ்வில் மறக்க முடியாத இனிமையான நினைவுகளைத் தூண்டிய உங்கள் ஆசிரியர்களைத் தொடர் கொண்டோ இச்சங்கத்தில் இணையுங்கள். உங்களுக்கென்று விரைவில் ஒரு விழா தொடங்க இருக்கிறது. பழமையின் நினைவுகளும் இளமையின் கனவுகளும் சுமந்துள்ள நீங்கள் உங்கள் நண்பர்களைச் சந்திக்க இது ஒரு அரிய வாய்ப்பாகும்.
திரும‌தி பி.ரோச‌ம்மாள்
த‌லைவ‌ர்
த‌லைமையாசிரிய‌ர்
(செல் : 9442267365)


ஜ‌னாப் எம்.ஹாஜி முக‌மது
துணைத் த‌லைவ‌ர்


ஜனாப் ஏ.மஹ்பூப் அலி
செயலாள‌ர்
(செல் : 9442767380)



திரு.ஏ.சீனிவாச‌ன்
பொருளாளர்
(செல் : 9443863697)


டாக்ட‌ர் ஆ.அஜ்முதீன்
துணை செயளாளர்
(செல் : 9894666791)


உங்க‌ள் ந‌ண்ப‌ர்களின் இமெயில் முக‌வ‌ரியைத் தெரிவிக்க‌வும் அவ‌ர்க‌ளிட‌ம் இத்த‌க‌வ‌லையும் தெரிவிக்க‌வும்


http://www.4shared.com/file/83035620/f532178f/OLD_STUDENTS_REGISTER_FORM.html



ந‌ன்றி : காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

மன அழுத்தம்

நமது வாழ்வில் நிரந்தரமாக இருக்கக்கூடியவை என்று சொன்னால், அதில் மன அழுத்தம் கண்டிப்பாக இருக்கின்ற ஒன்றாகும். அவை பற்றி பேசுவதற்குக் கூட இன்று நம்மில் பலரும் தயாராக இல்லை. ஏனென்றால், அவை நம் வாழ்க்கையினுடைய ஒரு பகுதியாக தான் கருதுகிறார்கள். இது சரியும் கூட.
ஆனால், மன அழுத்தத்தால் ஏற்படுகின்ற இடையூறுகளை புரிந்துகொண்டால் மட்டுமே, இதனை விலக்கி வைப்பதற்கான தேவையை நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.

பொதுவாக மன அழுத்தம் இரண்டு வகையில் உள்ளன.
1. உங்களுக்கு சுயமாக தெரியக் கூடிய மன அழுத்தம்.
2. வெளிப்படையாக தெரிந்துகொள்ள முடியாத மன அழுத்தம்.
ஆனால், சுயமாக தெரியக் கூடிய மன அழுத்தத்தை நம்மால் ஓரளவு விலக்கிக் கொள்ள முடியும்.

மன அழுத்தத்தால் ஏற்படும் இடையூறுகள்

மன அழுத்தத்தால் நம் மனதுக்கும் உடலுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. முதுகு வலி, அதிகமாக பசி எடுப்பது, அதிமான தலைவலி போன்றவை மன அழுத்தத்தாலும் ஏற்படுவதுண்டு.
ஆண்களும் பெண்களும் பெரும்பாலும் முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள். இப்பிரச்சனை இல்லாமல் இருப்போர் மிகச் சொற்பம்தான். ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்றால், இந்த முதுகுவலிக்கு முக்கியக் காரணமாக இருப்பது, 'டென்ஷன்' தான் என்பது! இதைப் போலவே மற்றொரு பிரச்சனைதான் அதிகமாக பசி எடுப்பதும்!

அளவுக்கு அதிகமாக உணவை உட்கொள்வது பலருடைய வழக்கமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். அப்படிப்பட்டவர்கள் நிரந்தரமான மன அழுத்தத்துக்கு ஆளாகி உள்ளனர் என்று தெரிந்துகொள்ளலாம்.

மன அழுத்தம் மன ரீதியான ஒன்றுதான் என நம்புவதால், இதற்கு உடம்பு வலி ஏற்படுத்த முடியாது என்று முடிவு செய்துகொள்வது தவறு. உங்களுக்கு ஏற்படுகின்ற பல நோய்களுக்கும் காரணமாக இருப்பதில் ஒரு முக்கியப் பங்கு மன அழுத்தத்துக்கு உண்டு.

நகத்தைக் கடிப்பது, தலையைச் சொறிவது, எப்போதும் கைகளால் ஏதாவது செய்துகொண்டிருப்பது போன்றவை எல்லாம் பழக்கமாவது மன அழுத்தம் அதிகமாகும் தருணத்தில்தான்.

மன அழுத்தத்தை போக்குவதற்கான வழிமுறைகள்:

சில நேரங்களில் எதாவது ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும்போது, காரணமே இல்லாமல் கடுமையான மன அழுத்தம் ஏற்படலாம். சீக்கிரமாக செய்து முடிக்க வேண்டிய வேலைகளாக இருந்தால், அதில் முழுமையாக கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இந்த நேரங்களில் ஒரு ரப்பர் பேண்டால் கைகளைக் கட்டிக் கொள்ளலாம்.

பேப்பரைத் துண்டு துண்டாகக் கிழித்துப் போடுவதால் சிலருக்காவது மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ள உதவியாக இருக்கின்றது. பேப்பரைக் கிழிக்கும்போது கேட்கின்ற சத்தமும், கிழித்து முடித்தவுடன் ஏற்படுகின்ற உணர்வும், அதாவது நாம் எதையோ செய்துவிட்டோம் என்று தோன்றுவது. இது நல்லதுதான். இது மன அழுத்தத்துக்கு தீர்வாக இருக்கிறது.

ஒரே விஷயம்தான் உங்களை மீண்டும் டென்ஷன் ஆக்குகிறது என்றால், கண்களைக் கொண்டு தீர்வு காணலாம் என்றும் மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். எந்த விஷயம் உங்களை அலட்டுகின்றதோ, அந்த விஷயத்தை நன்றாக யோசித்த பிறகு, தலை அசைக்காமல், கண்ணின் மணிகளை இரு பக்கங்களிலும் வேகமாக அசைக்கவும். இதை இருபது தடவை செய்து பார்த்த பிறகு நமது நாடியைப் பிடித்துப் பார்த்தால், கண்டிப்பாக மன அழுத்தம் குறைந்திருப்பதை உணரலாம். இது பலருக்கும் உதவியாக இருக்கின்றது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதிக அளவில் உணவை உட்கொள்பவர்கள், சாப்பிட்ட பிறகு 15 நிமிடம் தூங்குவது நல்லது. இதனால் புத்துணர்வு அதிகமாவதற்கும், மன அழுத்தம் குறைவதற்கும் வழிவகுக்கலாம்!

Abu Sumayyah.....
Jeddah



--
Posted By Adirai Mansoor to Adirai Express at 1/28/2009 12:53:00 PM

Tuesday, January 27, 2009

அயல்நாட்டு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க கால அவகாசம்

அயல்நாட்டு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க கால அவகாசம்

கடலூர், ஜன. 3: அயல்நாட்டு வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து, புதுப்பிக்க முடியாமல் போனவர்கள் புதுப்பித்துக் கொள்ள காலஅவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வெளிநாட்டு நிறுவனங்களில், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகள், பொறியாளர்கள் மற்றும் பொறியியல் தொழில் நுட்பம் சார்ந்த பணிகளில், தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தமிழகத்தினரை பணி அமர்த்தி வருகிறது.
பதிவு மூப்பு அடிப்படையில், அயல்நாட்டு வேலை வாய்ப்புக்கான தேர்வுக்கும் பரிந்துரைக்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கெனவே பதிவு செய்தவர்களில் பலர் தவிர்க்க முடியாத காரணத்தால் புதுப்பிக்கத் தவறியிருப்பார்கள்.
அவர்கள் தங்கள் பதிவை புதுப்பிக்க 1-1-2009 முதல் 31-3-2009 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
புதுப்பிக்கத் தவறியவர்கள் பதிவு எண், பணி தொடர்பான விவரங்கள், சான்றிதழ்களின் 2 நகல்கள், புதுப்பித்தல் கட்டணம் ரூ.112-க்கான ஓவர்ஸீஸ் மேன்பவர் கார்பரேஷன் லிமிடெட் என்ற பெயரில் எடுக்கப்பட்ட வரைவோலை ஆகியவற்றுடன் சென்னை அடையாறு டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள, அயல்நாட்டு வேலைவாய்பு அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 24464286 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

நன்றி: தினமணி

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DND20090103215629&Title=Districts+News&lTitle=U%F4YhPf+%F9Nn%A7Ls&Topic=0&ndate=1/4/2009&dName=LP%DB%F4o&Dist=

EASY & DIFFICULT

EASY & DIFFICULT


Easy to occupy a place in the telephone Directory
Difficult to occupy the heart of somebody.

Easy to judge the errors of others
Difficult to recognize our own errors.

Easy to hurt those whom we love
Difficult to heal these wounds.

Easy to expect others to forgive us
Difficult to forgive others.

Easy to expect others to ask for forgiveness from us
Difficult to ask others for forgiveness

Easy to exhibit victory
Difficult to assume defeat with dignity.

Easy to dream every night
Difficult to fight for a dream.

Easy to pray every night
Difficult to see the power of God in the smallest of things.

Easy to preach others
Difficult to practice ourselves

Easy to say we love
Difficult to demonstrate it every day.

Easy to criticize everybody
Difficult to better/perfect ourselves.

Easy to think of improving
Difficult to stop thinking & really do it.

Easy to receive
Difficult to give.

உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா?

உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா?
உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?:

தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா? : யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா? : யார் ஒரு நாளில் நூறு தடவை سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

உங்களுக்கும் நரகத்துக்கும் மத்தியில் நாற்பது ஆண்டுகள் துலை தூரம் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ, அல்லாஹ் அவரை நாற்பது ஆண்டுகள் தொலை தூரம் நரகத்திலிருந்து தூரமாக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அல்லாஹ் உங்கள் மீது, அருள்புரிய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?: யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?: யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ்விற்கு சமீபத்தில் இருக்க விரும்புகின்றீர்களா?: ஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள நேரம், அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஹஜ் செய்த நன்மையைபெற விரும்புகின்றீர்களா? : ரமளான் மாத்தில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு சமமாகும் அல்லது என்னுடன் ஹஜ் செய்ததற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

சுவர்க்கத்தில் வீடு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றீர்களா? : அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக அதுபோன்ற (வீட்டை) சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புகின்றீர்களா?: ஒரு கவள உணவை உண்டுவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும், ஒரு வாய் தண்ணீர் அருந்திவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும் நிச்சயமாக அல்லஹ் பொருந்திக் கொள்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

உங்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா? : பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

ஒரு வருடம் முழுமையாக நோன்பு நோற்ற நன்மை கிடைக்க வேன்டுமென விரும்புகின்றீர்களா? : ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது, வருடமெல்லாம் நோன்பு நோற்பதற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மலையளவு நன்மை கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா? : ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்படும் வரை அந்த ஜனாஸாவில் யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு ஒரு கிராத்து நன்மையும், அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரு கிராத்து நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கிராத்து என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. இரு பெரும் மலை அளவு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

சுவர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க விரும்புகின்றீர்களா? : நானும் அனாதையை பொறுப்பெடுப்பவரும் இவ்வாறு சுவர்க்கத்தில் இருப்போம் என, நபி(ஸல்) அவர்கள் தனது நடு விரலையும் ஆள்க்காட்டி விரலையும் சுட்டிக்காட்டினார்கள். (புகாரி)
அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் போராளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது விடாமல் தொடர்ந்து நோன்பு நோற்கும் நோன்பாளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது இரவெல்லாம் நின்று வணங்கும் வணக்கதாரியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? : விதவைக்கும் மிஸ்கீனுக்கும் உதவி செய்பவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவரைப் போன்றவராவார், இப்படியும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எண்ணுகின்றேன், அதாவது இரவெல்லாம் நின்று வணங்குபவரைப் போன்றும் விடாமல் நோன்பு நோற்பவரைப் போன்றும் என்று.(அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகம்) (புகாரி, முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர விரும்புகின்றீர்களா? : யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மரணத்துக்குப் பின்னும், உங்களின் நன்மைத்தட்டில், நன்மை எழுதப்பட வேண்டுமா? : ஒரு மனிதன் மரணித்தால் மூன்றைத்தவிர மற்ற எல்லா அமல்களும் துண்டித்து விடும், நிரந்தர தர்மம், பிரயோஜனம் உள்ள அறிவு, தனக்காக பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான பிள்ளை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷம் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என விரும்புகின்றீர்களா? : لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று கூறுவது சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

முழு இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? : யார் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு பாதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும், யார் சுப்ஹுத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு முழு இரவும் நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஒரு நிமிடத்தில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீகளா? : சூரத்துல் இக்லாஸை ஒரு தடவை ஓதுவது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் நன்மைத் தராசு, அதிகம் இடையுள்ளதாக ஆக வேண்டும் என விரும்புகின்றிர்களா? : இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை) سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
May Almighty ALLAH (SWT) guide all of us to the Right Path and give all of us the courage to accept the Truth in the light of Qur'an and Sunnah and to reject all things which are in contradiction to the Holy Qur'an and Sunnah, Aameen.

Monday, January 26, 2009

ஜும்ஆப் பேருரைகள்

ஜும்ஆப் பேருரைகள்

முஸ்லிம்களின் ஒற்றுமைக்கும் மேம்பாட்டிற்கும் வலிமை சேர்க்கின்ற ஜும்ஆப் பேருரைகள் சீர் செய்யப்பட்டு மார்க்கம், சமூகம், நாட்டு நடப்புகள், உலக நிகழ்வுகளை பிரதிபலிக்கின்ற தரம் மிக்கவையாக அனைத்து ஊர் ஜமாஅத்துகளிலும் ஒரேக் குரலில் ஒலிக்க வேண்டும் என்கிற சமுதாய ஆர்வலர்களின் பல்லாண்டுக் காலக் கனவு நனவாகும் வகையில் அதன் முதன் முயற்சியாக "மிஸ்பாஹிகள் பேரவை"யில் முடிவு செய்யப் பட்டு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் வெள்ளி முதல் இரு வாரங்களுக்கு ஒரு முறை தமிழகத்தின் தலைச்சிறந்த மார்க்க அறிஞர்களின் குழுவால் ஜும்ஆப் பேருரை தயாரிக்கப் பட்டு முன்னதாகவே நமது நீடூர்ஆன்லைன்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஜும்ஆப் பேருரைகளை பிரதி எடுத்து அனைத்து ஊர் இமாம் பெருமக்களும் இந்த முயற்சிக்கு துணை நின்று ஒரே குரலில் ஜும்ஆப் பேருரைகளை அமைத்துக் கொண்டு இந்த சீரிய சேவைக்கு ஆலோசனைகளை வழங்கி அல்லாஹ்வின் திருப் பொருத்ததைப் பெறுமாறு வேண்டுகிறோம்.

இன்ஷா அல்லாஹ் சமூக ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள கருத்தின்படி இம்முயற்சியின் விரிவாக்கம் தமிழக ஜமாஅத்துல் உலமா சபை மூலம் மாநிலம் முழுமைக்குமாக இருக்கும்.
உலகலாவிய ஊர்ஜிதமான முக்கிய நிகழ்வுகளை தமிழில் அறிஞர் குழுவின் பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

www.niduronline.com

ஒரு பேரிடரின் முடிவு - உலகம் நிம்மதிப் பெருமூச்சு!

ஒரு பேரிடரின் முடிவு - உலகம் நிம்மதிப் பெருமூச்சு!
வியாழன், 22 ஜனவரி 2009
உலகப் பத்திரிகைகள் பலவும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வால்டர் புஷ்ஷின் பதவிக்காலம் முடிந்ததை ஒட்டி தலையங்கங்கள் தீட்டியுள்ளன. பெரும்பாலான பத்திரிக்கைகள் புஷ் ஒரு தகுதியில்லாத, பண்பு சிறிதுமற்றத் தலைவர் என்றே சித்தரித்துள்ளன.



பெரும்பான்மைப் பத்திரிகைகள் "புஷ் செய்த அநியாயங்களுக்கு வரலாறு ஒருபோதும் அவரை மன்னிக்காது" எனத் தெரிவித்துள்ளன.
ஜெர்மனியின் Sueddeutsche Zeitung நாளிதழ், "பெரும்தோல்வி" என்ற பொருளில் "The Failure" என்ற தலைப்பிட்டு அவரைப்பற்றி எழுதுகையில் "உறுதியான கொள்கைகளுக்கும் விவேகமற்ற முரட்டுத்தனத்திற்கும் வேறுபாடு அறியாதவர்" என்று குறிப்பிட்டு எழுதி, "தன் பதவியின் மாபெரும் பொறுப்பை உணராத, தகுதியற்ற தலைவர்" என வருணித்துள்ளது.
அதோடு தேவையற்ற இரு போர்களை அமெரிக்க மக்களின் மீது திணித்து எண்ணிலடங்கா ஆப்கன், ஈராக் பொது மக்களைக் கொன்று குவிக்க புஷ் காரணியாக இருந்தார் எனவும் நல்ல நிலையில் கையிலெடுத்த அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து அதள பாதாளத்தில் தள்ளி உலகப் பொருளாதாரத்தை ஆட்டம் காணவைத்து உலகின் பல்வேறு மக்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைத்த 'பெருமை' இவரைச் சாரும் என்றும் அது கூறியுள்ளது.

அதேவேளை, 'ஜெருஸலம் போஸ்ட்' என்ற பெயரில் இஸ்ரேலில் இருந்து வெளியாகும் நாளிதழோ, "கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் புஷ்ஷைப் போன்று இஸ்ரேலின் உற்ற நண்பராயிருந்த அதிபரைக் காண இயலாது" என்று புகழாரம் சூட்டியிருந்தது. "இஸ்ரேலும் அமெரிக்காவும் விடுதலை விரும்பிகள்; அதனால் இரு நாடுகளுக்கும் இருந்த பொது எதிரிகளைச் சரியாகக் கண்டறிந்து அழிக்க இஸ்ரேலுக்குப் பெரும் உதவிகள் செய்தவர் புஷ்" என்றும் தெரிவித்திருந்தது.

கனடாவின் 'டொரண்டோ ஸ்டார்' என்ற நாளிதழ், "உலகம் இதுவரை கண்டிராத ஆக மோசமான அதிபரை வழியனுப்பி விடையிறுப்போம்" என்று கூறியதோடு, "ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றி புஷ் ஒரு கடுமையான, தடுக்க இயலாத (unmitigated) கோமாளிக் கொடுங்கோலன்" என்றும் வருணித்துள்ளது. "ஆப்கன், இராக் போர்களைக் கையாண்ட விதத்திலாகட்டும், கட்ரீனா புயலின் பேரழிவைக் கையாண்ட விதத்திலாகட்டும், பொருளாதாரச் சீரழிவினைக் கட்டுப்படுத்துவதிலாகட்டும், புஷ் ஒரு தகுதியற்ற அதிபராகத்தான் இருந்தார்" எனச் சாடியுள்ளது.

பிரிட்டனின் 'டெய்லி மெயில்' நாளிதழ், "மத்தியக் கிழக்கைப் பற்றி எரியும் நெருப்பிலும் அமெரிக்காவைக் கடும் பொருளாதாரப் பற்றாக்குறையிலும் விட்டுச் செல்கிறார் புஷ். அவரது ஒரே சாதனை செப்டம்பர் 11, 2001க்குப் பிறகு அமெரிக்க மண்ணில் வேறு தாக்குதல்கள் நடைபெறாமல் பார்த்துக் கொண்டதே" எனக் கூறியுள்ளது.

ஸ்காட்டிஷ் நாளிதழான 'டெய்லி ரெக்கார்டு', "அமெரிக்காவை உலக மக்களில் பெரும்பாலானோர் வெறுப்பதற்கு மூல காரணமாகத் திகழ்ந்தவர் புஷ். அவரது போர்வெறி உலகைப் பாதுகாப்பற்ற ஓரிடமாக ஆக்கியுள்ளது; அவரது பொருளாதார அறிவின்மை அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீரழித்ததால் அதனைச் சார்ந்தே இயங்கும் உலகப் பொருளாதாரத்தையும் சீரழித்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.

பிரெஞ்சு நாளிதழான 'Le Monde', "புஷ்ஷை ஒரு பேராபத்து என்று வர்ணிக்காத ஒரே ஒரு வரலாற்றாய்வாளரைக் கூடக் கண்டுபிடிப்பது கடினம்" என்று கூறியுள்ளது.

அதே வேளை, ஜெர்மனியின் 'ஸ்டெர்ன்' நாளிதழ், "புஷ் தனது தகுதியின்மையால் உலகின் மிகப் பலம் பொருந்திய நாடான அமெரிக்காவைச் சிதைத்து விட்டார். பேரழிவு ஆயுதங்கள் என்ற பெயரில் கணக்கிலடங்காப் பொய்களை அவிழ்த்துக் கொட்டி, விடுதலை என்ற பெயரில் அப்பாவிகளைக் கடும் சித்திரவதை செய்து உலகை நாசப்படுத்தியவர் அவர்" எனக் கூறியுள்ளது.

அரபகத்தின் பல நாடுகளில் வெளிவரும் அரபி நாளிதழான 'அல்-ஹயாத்', "விதி வலியது என்பர். உண்மை தான்; அமெரிக்க மக்களை ஃப்ளோரிடா வாக்கு எண்ணிக்கையில் கைவிட்ட விதி, எட்டு ஆண்டுகள் அவர்களை மட்டுமின்றி உலகையே வாட்டியது" என்று நையாண்டி செய்திருந்தது. "எனினும் புஷ் தனது பதவிக்காலத்தில் பாதி நாட்களைச் சுற்றுப் பயணத்தில் கழித்ததால் இது போன்ற இருமடங்கு சேதம் விளைவிப்பதிலிருந்து விதி நம்மைக் காப்பாற்றியுள்ளது" என்று தொடர்ந்து எழுதியுள்ளது.

ஆஸ்திரியப் பத்திரிக்கையான 'Wiener Zeitung', "புஷ்ஷை விட ஈரானிய அதிபர் மஹ்மூத் அஹமதிநிஜாத் ஒரு சிறந்த உலகத் தலைவராவார்" என எழுதியுள்ளது. "நீதியின் சின்னமாக விளங்கிய அமெரிக்காவை நாசமாக்கியவர் புஷ்; ஆனால் உலகில் மனித நேயத்துடன் அனைவருக்கும் குரல் கொடுப்பவர் அஹமதிநிஜாத்" என்று தெரிவித்துள்ளது.

புஷ்ஷை அவர் மொழியில் வர்ணிப்பதானால் நாம்தான் அவரை "misunderestimate" செய்து விட்டோமோ எனத் தோன்றுகிறது.
முஸ்லிம் உலகு புஷ்ஷுக்குக் கொடுக்க வேண்டிய பட்டத்தை ஏற்கனவே வெனிஸுலா அதிபர் கொடுத்து விட்டார்.
கிருமிகள் ஒழியட்டும்; உலகு தழைக்கட்டும்!

Sunday, January 25, 2009

தமிழக அரசு வழங்கும் பட்டா இணையவழியில்

தமிழக அரசு வழங்கும் பட்டா இணையவழியில்

தமிழ் நாடு அரசின் எந்நேரத்திலும் எங்கிருந்தும் இணையவழி சேவைகளைப் பெற உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தமிழ் நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும் அ-பதிவேட்டின் படி நில விவரங்களை இங்கு காணலாம்.

http://taluk.tn.nic.in/eservicesnew/

Obesity

Obesity


Obesity may be described as a bodily condition characterised by excessive deposition or storage of fat in adipose tissue. It usually results from consumption of food in excess of physiological needs. Obesity is common among people in Western countries and among the higher income groups in India and other developing countries.


Obesity can occur at any age in either sex. Its incidence is higher inpersons who consume more food and lead sedentary leaves. Among women, obesity is liable to occur after pregnancy and at menopause. A woman usually gains about 12 kgs. weight during pregnancy. Part of this is an increase in the adipose tissue which serves as a store against the demands of lactation. Many women gain more and retain part of this weight. They become progressively obese with each succeeding child.

Obesity is a serious health hazard as the extra fats puts a strain on the heart, kidneys and liver as well as the large weight-bearing joints such as the hips, knees and ankles, which ultimately shortens the life span. It has been truly said, ‘ the longer the belt, the short the life. ‘ Overweight persons are susceptible to several diseases like coronary thrombosis, heart failure, high blood pressure, diabetes, arthritis, gout and liver and gall-bladder disorders.

Causes

The chief cause of obesity , most often, is overeating - that is, the intake of calories beyond the body’s energy requirement. Some people are habituated to eating too much while others may be in the habit of consuming high-calorie foods. These people gain weight continuously as they fail to adjust their appetite to reduce energy requirements. There has, in recent times, been an increase in awareness of psychological aspects of obesity. Persons who are generally bored , unhappy, lonely or unloved, those who are discontented with their families, or social or financial standing usually tend to overeat as eating is a pleasure and solace to them.

Obesity is sometimes also the result of disturbances of the thyroid or pituitary glands. But glandular disorders account for only about two per cent of the total incidence of obesity. In such persons, the basal metabolism rate is low and they keep gaining weight unless they take a low-calorie diet.

Treatment

A suitably planned course of dietetic treatment, in conjunction with suitable exercise and other measures for promoting elimination is the only scientific way of dealing with obesity. The chief consideration in this treatment should be the balanced selection of foods which provide the maximum essential nutrients with the least number of calories.

To begin with, the patient should undertake a juice fast for seven to ten days. Juices of lemon, grape fruit, orange, pineapple, cabbage, celery, may be taken during this period. Long juice fast upto 40 days can also be undertaken, but only under expert guidance and supervision. In the alternative, short juice fasts should be repeated at regular intervals of two months or so till the desired reduction in weight is achieved.

After the juice fast, the patient should spend a further four or five days on an all-fruit diet, taking three meals of fresh juicy fruits such as oranges, grapefruit, pineapple and papaya. Thereafter, he may gradually embark upon a low-calorie well- balanced diet of three basic food groups, namely (i) seeds, nuts and grains , (ii) vegetables and (iii)fruits, with emphasis on raw fruits, vegetables, and fresh juices.

The foods which should be drastically curtailed or altogether avoided are high-fat foods such as butter, cheese, chocolates, cream, ice-cream, fat meats, fried foods, and gravies ; high carbohydrated foods like bread, candy, cake, cookies, cereal products, legumes, potatoes, honey, sugar, syrup and rich puddings beverages such as all-fountain drinks and alcoholic drinks.

One sure method of reducing weight is by practicising what is known as "Fletcherism". It was discovered in 1898 by Horace Fletcher of the U.S.A.. Fletlcher, at 40, considered himself an old man. He was 50 pounds overweight, contracted flu every six months and constantly complained of indigestion and a tired feeling. After a deep study, he made some important discoveries and prescribed the rules for "Fletcherism" which are as follows :

1. Chew your food to a pulp or milky liquid until it practically swallows itself.

2. Never eat until hungry.

3. Enjoy every bite or morsel, savouring the flavour until it is swallowed.

Do not eat when tired, angry, worried, and at meal-time refuse to think or talk about unpleasant subjects.

4.Horace Fletcher followed these rules for five months. As a result he lost more than 60 pounds and felt better than he had for 20 years. A weight reducing programme built on Fletcherism works wonders and is worth a trial.

Ingestion of honey is an excellent home remedy for obesity. It mobilises the extra deposited fat in the body and puts it into circulation which is utilised as energy for normal functions. One should start with small quantity of about 10 grams to be taken with hot water. The dose can be gradually increased.

Fasting on honey -lime juice water is highly beneficial in the treatment of obesity without the loss of energy and appetite. In this mode of treatment, one spoon of fresh honey should be mixed with a juice of half a lime in a glass of lukewarm water and taken at regularly intervals.

Another effective remedy for obesity is an exclusive lemon juice diet. On the first day the patient should be given nothing but plenty of water. On the second day juice of three lemons mixed with equal amount of water should be given. One lemon should be subsequently increased each day until the juice of 12 lemons is consumed per day. Then the number of lemons should be decreased in the same order until three lemons are taken in a day. The patient may feel weak and hungry on the first two days, but afterwards the condition will be stabilised by itself.

Cabbage is considered to be an effective home remedy for obesity. Recent research has discovered in this vegetable a valuable content called tartroric acid which inhibits the conversion of sugar and other carbohydrates into fat. Hence, it is of great value in weight reduction. A helping of cabbage salad would be the simplest way to stay slim, a painless way of dieting. A hundred grams of cabbage yields only 27 kilo calories of energy while the same quantity of wheat bread will yield about 240 calories. Cabbage is found to possess the maximum biological value with minimum calorific value. Moreover, it gives a lasting feeling of fullness in the stomach and is easily digestible.

Along with dietetic treatment, the patient should adopt all other natural methods of reducing weight. Exercise is an important part of weight reduction plan. It helps to use up calories stored in body fat and relieves tension, besides toning up the muscles of the body. Walking is the best exercise to begin with and may be followed by running, swimming, rowing and other outdoor sports.

Five times Prayer and Exercise and Certain yogi asanas are highly beneficial. Not only do they break up or re-distribute fatty deposits and help slimming, but they also strengthen the flabby areas. Sarvangasana, halasana, bhujangasana, shalabhasana, dhanurasana, chakrasana, naukasana, ardh-matsyendrasana, paschimottanasana, vajrasana, yogamudra and trikonasana are recommended. These asanas work on the glands, improve circulation, strengthen many weak areas and induce deep breathing which helps to melt off excess fat gradually. Yogic kriyas like kunjal and jalneti and pranayamas such as kapalbhati and bhastrika are also helpful in normalising body weight. The patient should also adopt measures which bring on excessive perspiration such as sauna baths, steam bath and heavy massage. They help to reduce weight. Above all, obese persons should make every effort to avoid negative motions such as anxiety, fear, hostility and insecurity and develop a positive outlook on life.


Regards
http://adiraiexpress.blogspot.com
--
Posted By Adirai Mansoor to Adirai Express at 1/24/2009 01:33:00 PM

இஸ்லாமும் நானும் - சுப.வீரபாண்டியன்

இஸ்லாமும் நானும் - சுப.வீரபாண்டியன்


இன இழிவைப் போக்க இஸ்லாமே நன்மருந்து’ என்று தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி, என்னை இஸ்லாம் மதத்தைத் தழுவுமாறு அன்போடு அழைப்பு விடுத்துள்ளீர்கள். உங்கள் அழைப்புக்கும், நீங்கள் என்னிடம் காட்டும் அன்புக்கும் நன்றி. எனினும் நான் என் நிலையை இம்மாமன்றத்தில் தெளிவாக்கி விட வேண்டும் என்று கருதுகின்றேன்.

மதம் அல்லது மார்க்கம் எதுவானாலும், அது கடவுளை நம்புவது ஆகும். கடவுள் நம்பிக்கையோடு, இம்மண்ணில் வாழும் வாழ்க்கை நெறியை வகைப்படுத்துவதே சமயம் என்று கூறுவர். ஏக இறை வணக்கம் என்பதும்; பல்தெய்வ வழிபாடு என்பதும் இஸ்லாம், இந்து மதங்களுக்கிடையேயான பெரும் வேறுபாடுகளில் ஒன்று என்பதை நான் அறிவேன்.

என்னைப் பொறுத்தளவு, நான் அறவே கடவுள் நம்பிக்கை இல்லாதவன். அதனால் ‘எம்மதமும் சம்மதமில்லை’ என்ற நிலைப்பாட்டைக் கொண்டவன். ‘நான் இந்து’ என்பது கூட இந்திய அரசமைப்புச் சட்டம் என் மீது ஏற்றி வைத்திருக்கும் இழிவுதான்; நான் மதமற்றவன் என்பதே உண்மை. எனவே, இஸ்லாம் உட்பட எந்த ஒரு மதத்தையும் தழுவுவதில் எனக்கு உடன்பாடில்லை. சட்டப்படியும் மதமற்றவனாக என்னை அறிவித்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே என் விருப்பம். சட்டம் அதற்கு இடந்தரவில்லையெனினும், அதனை நோக்கியே என் முயற்சிகள் அமையும்.

ஜனநாயக, சமூக நீதிப் போராட்டங்களில் எப்போதும் நான் உங்கள் தோழனாய் இருப்பேன். ஆனால் வாழ்நாள் முழுவதும், எந்த மதத்தையும் சாராமல், பெரியாரியக் கோட்பாடுகளைப் பரப்பும் தொண்டனாக மட்டுமே இருப்பேன்.

-01.01.2009 அன்று குவைத் நாட்டில், TMMK & இஸ்லாமிய வழிகாட்டுப் பேரவை நடத்திய சமூக நீதிக் கருத்தரங்கில் சுப.வீரபாண்டியன்.