Thursday, June 4, 2009

Faculty positions available

Faculty positions available

After retirement from service as University Professor, I offer counselling to educational institutions. One of the oldest private Engineering Colleges, located in Ramanathapuram Dt, is gearing up for staking claim for Deemed University status, and I'm helping them in this endeavor. One of the basic requirements here is qualified and competent faculty. The College is looking for suitable candidates, particularly with Ph.D. qualification but M.E./M.Tech/MBA qualifieds may also approach. The salary is negotiable. Friends in TAFAREG group may propagate this message among those who will bennefit.


Dr. M. A. AKBARSHA, Ph.D., akbarbdu@yahoo.com,

ஊடகங்களை வெல்லுவோம் வாருங்கள்!

ஊடகங்களை வெல்லுவோம் வாருங்கள்!
புகாரியின் புதல்வன்

இன்று இன்பர்மேஷன் டெக்னாலஜி என்று சொல்லப்படக்கூடிய ஐ.டி (IT)துறைக்கு நிகராக வருமானத்தை அளிக்கக் கூடிய துறையாக மீடியா துறை (Media) இருந்து வருகிறது. ஆனால் இன்றைய அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் உலகளவிலும் ஐ.டி துறை பின்னடைவு அடைந்திருப்பதையும், பிரபலமான ஐ.டி நிறுவனங்களே தங்களின் ஊழியர்களை அன்றாடம் வெளியே அனுப்பி வருகிறது. ஆனால் அதற்கு பகரமாக ஊடகத்துறையின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது.

இந்த ஊடகத்துறையின் தொடர்பாக முதலில் என்னென்ன கல்விகள் தமிழகத்தில் இருந்து வருகின்றது என்று பார்க்கலாம்.
விஷுவல் கம்யூனிகேசன் (Visual Communication), ஜெர்னலிசம் (Journalisam), எலக்ட்ரானிக்ஸ் மீடியா (Electronic Media), மாஸ் மீடியா அண்ட் கம்யூனிகேசன்ஸ் (Mass Media and Communications) ஆகிய படிப்புகளை தமிழ கத்தில் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பயிற்று விக்கப்பட்டு வருகின்றன.

விஷுவல் கம்யூனி கேஷன்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியா ஆகிய இரண்டு படிப்புகளும் பி.எஸ்.சி., மற்றும் எம்.எஸ்.சி படிப்புகளாக வழங்கப்பட்டு வருகின்றன. பி.எஸ்.சி படிப்பதற்கு பிளஸ் டூவில் எந்த குருப் படித்தவர்களும் இதில் சேரலாம். அது போலவே இளநிலை பட்டம் முடித்தவர்கள் யார் வேண்டுமானாலும் எம்.எஸ்.சி விஸ்காம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியாவைப் படிக்கலாம்.

இந்த விஸ்காம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியா படிப்புகளில் இணையதள வடிவமைப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு, மல்டி மீடியா, அனிமினேஷன் ஆகியவை பாடத்திட்டங்களாகும். இதனை படித்து முடித்து விட்டால் தொலைக்காட்சிகள், வானொலிகள், விளம்பர தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமில்லாமல் பல்வேறு அனைத்து ஊடகங்களிலும் நுழைவதற்கு இந்த படிப்புகள் ஒரு விசிடிங் கார்டு போன்று ஆகும். இதனைப் படித்து விட்டு வேலையில் சேர்பவர்களுக்கு ஆரம்ப நிலை சம்பளமே குறைந்தது ரூ.10,000க்கு மேல் கிடைக்கும். மேலும் வளைகுடா நாடுகளில் இந்த படிப்பு களுக்கு மவுசு அதிகமாக உள்ளது. ஊதியமும் மாதத்திற்கு லகரங்களில் கிடைக்கும்.

ஜெர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் படிப்புகளைப் பொறுத்த மட்டிலும் பத்திரிக்கை துறையில் நுழைய விரும்புபவர்கள் இதனை தேர்ந்தெடுக்கலாம். ஆரம்ப நிலை ஊதியமாக குறைந்தது ரூ.7,000 கிடைக்கும். இதுவே ஆங்கில ஊடகங்களாயின் ஆரம்ப நிலை ஊதியமே ரூ. 20,000க்கு குறையாது.

மேற்கண்ட ஊடகப் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்க விரும்புபவர்கள் ஏதேனும் ஒருதுறையை முன்னரே தேர்ந்தெடுத்து அதில் சிறப்பு பயிற்சி பெறுவதே நன்று. படிக்கும் போதே பகுதி நேரம் வேலையை தேர்ந்தெடுக்கும் வசதியும் இந்தப் படிப்புகளில் உண்டு.

இந்த படிப்பினை வழங்கும் கல்வி நிறுவனங்கள்..
1) புதுக்கல்லூரி, சென்னை
2) லயோலோ கல்லூரி, சென்னை
3) சதக் கல்லூரி, சென்னை
4) அண்ணா பல்கலைக் கழகம்
5) சென்னை பல்கலைக் கழகம்
6) காமராஜர் பல்கலைக் கழகம்
7) ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜெர்னலிசம், சென்னை

Posted By முத்துப்பேட்டை to முத்துப்பேட்டை at 6/03/2009 11:43:00 PM

http://muthupettai.blogspot.com/2009/06/blog-post.html

வெற்றி பெற வேண்டுமா?

வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல¨ என்று வேதனைப் படுவார்கள்

அப்படி தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று அவர்கள் நினைப்பதுதான் முதல் தவறு.

பலரும் தங்களது ஆலோசனைகளை நமக்கு அள்ளித் தந்துள்ளனர்

அவரவர்க்கு ஏற்ற வழிகளை நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.



அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம்.

அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக மிகக் குறைவாகவும் தூங்க வேண்டாம்.

பொறாமை குணம் இருந்தால் விரட்டி விடுங்கள்.

சந்தேகமும், சஞ்சலபமும்தான் உங்கள் முதல் எதிரிகள். அவற்றை துரத்தியடியுங்கள்.

சோம்பல் உங்களிடம் இருந்தால் முதலில் அதை ஒழித்துக் கட்டுங்கள்.

எந்த சூழ்நிலையிலும் பேராசை கொள்ளாதீர்கள்.

உடல் தூய்மை முக்கியமானது. அதனால் தினமும் குளியுங்கள்.

எப்போதும் நல்லதை மட்டுமே மனதால் நினையுங்கள். அப்போது நல்லவை மாத்திரமே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடமே இருக்கிறது.

எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். தைரியமாகவும் இருக்க பழகிடுங்கள்.

பொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள். எப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்.

இதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி
--


A.Ahamed Ismathullah Sait
CELL : 0091 94804 83943

Wednesday, June 3, 2009

பிளஸ் 1 பிளஸ்2 வகுப்பில் சேரப்போகிறீர்களா?

பிளஸ் 1 பிளஸ்2 வகுப்பில் சேரப்போகிறீர்களா?
இலவச வகுப்பிற்கு விண்ணப்பிக்க அழைப்பு!

மதுரை மாவட்டம் மேலூரில் இயங்கி வரும் சைதை சா. துரைசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில்பிளஸ் 1, பிளஸ் 2 சேரும் 50 மாணவ, மாணவிகளுக்கு, இலவச விடுதி வசதியுடன் கல்வி அளிக்கப்படும் என்று, மனிதநேய அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் சைதை துரைசாமி நடத்திவரும் மனிதநேய அறக்கட்ளை நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மனிதநேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற அகில இந்திய அளவிலான தேர்வுகளுக்கு இலவச தங்கும் வசதியுடன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அண்ணா பல்கலைக் கழகம், அரசு மருத்துவக் கல்லூரிகள் போன்ற புகழ் மிக்க கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும் வகையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நோக்கிலும், இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க 25 மாணவர்கள், 25 மாணவிகளுக்கு இலவச தங்கும் வசதியுடன் கல்வி அளிக்கவும், அவர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கவும் சைதை துரைசாமி முன்வந்துள்ளார்.

இதில் சேர விரும்பும் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 85 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் மதுரை மாவட்டம் மேலூரில் இயங்கி வரும் சைதை சா. துரைசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு புத்தகம் முதல் படிக்க தேவைப்படும் அனைத்துப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள், பி.வி. கந்தசாமி, தாளாளர், சைதை சா. துரைசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 71, பைபாஸ் ரோடு, மேலூர், மதுரை மாவட்டம் 625 106. (போன் 0452-3204545, செல் போன் 94430 49599) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Shaffi's NRI services

Date: Mon, 1 Jun 2009 08:40:14 +0530
Subject: Shaffi's NRI services
From: shaffia@gmail.com
To: s_abdullah_747@hotmail.com

Dear Sheikh,

Assalamu Alaikkum.

I'm offering a specialized services for NRIs who live in the Middle Eastern countries such as Saudi Arabia, UAE, Kuwait, Oman, Bahrain, Qatar etc., NRIs who need special services such as booking Bus, Rail and Air tickets, payment of school/college fees etc., (if a special service is required, then that can be also offered Insha Allah).

This service is offered only in and arround Chennai for now.

Please inform this to your friends and relatives who live Saudi Arabia, UAE etc., about this service. My email and contact number is available in my website.

Please visit the below website about my services (and please also suggest to improve this website)

https://sites.google.com/site/chennaiindians1/

Please contact me if you need more information.

Jizak Allah Khairan.

Shaffi
W. C. Fields - "I am free of all prejudices. I hate every one equally."

Dear Friends,

The following special and personalized services are offered in and around Chennai for your convenience.

Transportation arrangements from Chennai Airport by Rail, Road and Air
Taking care of your sons/daughters school fee payments
Arranging and shipping of the desperately needed medicines from popular Pharmacies in Chennai to your country of living/working
And all other services that need special attention and personalized service
All the above services at affordable price as low as SR. 50

Please contact me at 9841452393 or email me at shaffia@gmail.com with the details of your service request.

வாரியாருக்கு வாயடைப்பு

வாரியாருக்கு வாயடைப்பு


நான் திருவாரூ ரில் படித் துக் கொண்டி ருக் கும் போது எங்கள் ஊருக் குக் காலட்சேபம் செய்ய திருமுருக கிருபானந்த வாரியார் அடிக்கடி வருவார். அவரைக் கலாட்டா செய்ய வேண்டுமென் பதற்காகவே, பள்ளிக் கூடத்திற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு நண் பர்களுடன் செல் வேன்.

காலட்சேபத்தில் கதை கூறும்போது திரு.வாரியார் அவர் கள், உருயிருள்ள ஒன் றையும் - மிருகங்க ளையோ, பறவைக ளையோ கொன்று மனிதன் சாப்பிடுவ தற்காக கடவுள் படைக் கவில்லை என்றார். நான் எழுந்து, சிங்கத் திற்கு கடவுள் என்ன உணவைப் படைத் தார் என அவரிடம் கேட்டேன்.

வாரியார் என்னை உட்காரும்படி அடக்கி விட்டு, தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதே, அதைச் சாப்பிடலாமா? என்று மாமிசம் உண் போர் கேட்பார்கள். காய்கறிகளை பறித்த பின் அவைகளின் வளர்ச்சி தடைப்படுவ தில்லை. ஆனால், மனி தன் காய்கறிகளைத் தாராளமாக உண்ண லாம்; இது யாருக்கும் தெரியாது என்றார்.

உடனே நான் எழுந்து, நான் கீரைத்தண்டை வேரோடு பறித்து உண்கிறோம்; அது எப்படி?என்று கேட் டேன். மறுபடியும் என்னை அடக்கி உட் கார வைத்தார் வாரியார்.
அன்று நான் எழுப் பிய கேள்விக்கு இன்று வரை பதில் கிடைக்க வில்லை. அதனால் நானும் என் கொள்கையை மாற்றிக் கொள்ள வில்லை.

- கலைஞர்
நன்றி;விடுதலை.

Excel - ல் Change Case - Lower கேசை Upper கேசாக மாற்ற..,

Excel - ல் Change Case - Lower கேசை Upper கேசாக மாற்ற..,


Excel - ல் Word- ல் இருப்பதுபோல் Change case வசதி இல்லை. தவறுதலாக Upper case அல்லது Sentence/Proper case -ல் டைப் செய்ய வேண்டிய Text - ஐ Lower case -ல் டைப் செய்து விட்டால் அதை அப்படியே மாற்ற இயலாது. திரும்பவும் டைப் செய்யத்தான் வேண்டும்.


இங்கே கீழே உள்ள சுட்டியில் கிளிக் செய்து instxlscase.xla என்ற Excel Add-on ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்


http://sites.google.com/site/suryakannan/Home/flash/instxlscase.xla?attredirects=0

Excel - ஐ திறந்து கொண்டு,

Tools -> Add-ons -> Browse

சென்று நீங்கள் தரவிறக்கம் செய்த instindwds.xla என்ற கோப்பை தேர்ந்தெடுங்கள்.

இப்பொழுது உங்கள் Excel tool bar -ல் Text Case என்ற ஒரு புதிய Toolbar வந்திருக்கும்.



இந்த Tool - ஐ உபயோகித்து நாம் விரும்பியபடி Text Case -ஐ மாற்ற இயலும்.

Tuesday, June 2, 2009

Brief profiles of ministers

Brief profiles of ministers

Press Trust of India / New Delhi May 28, 2009, 13:28 IST

Praful Patel (51) has been credited with changing the Indian aviation sector by opening up the skies and making air travel popular. Patel's five-year tenure saw low-cost carriers attracting high-end train travelers. Stiff competition among the airlines also led to lowering of air fares. He won the Gondia-Bhandara Lok Sabha seat, his fourth electoral win, defeating his nearest rival by over two lakh votes. Patel was instrumental in the government decision of buying aircraft for the Indian Airlines and Air India soon after he took over the ministry in 2004.

Salman Khursheed (56), the grandson of former President Zakir Hussain, makes a come back to the council of ministers after a gap of 13 years. Khursheed, who won from Farrukhabad in UP, will be a Minister of State in the Manmohan Singh-led government. He had an impressive innings as a Minister of State for External Affairs from 1991 to 1996 in the P V Narsimha Rao government. Khursheed also served as Officer on Special Duty in the Prime Minister's Office during the tenure of Indira Gandhi.

As Minister of State in PMO, Prithviraj Chavan (63) was one of the closest aides of Prime Minister Manmohan Singh. The US-educated Chavan, who was elected to the Upper House for a second term last year, has held several positions in the party including general secretary incharge of states like Jammu and Kashmir.

As Minister of State for Home in the previous UPA Government, Sri Prakash Jaiswal (64) was the spokesperson of the government on internal affairs. He is a three-time MP from Kanpur constituency of Uttar Pradesh.

Dinsha Patel (72), who won the general elections from Kheda in Gujarat, has been elevated as MoS with independent charge after being MoS in the Petroleum ministry in the UPA government. A senior leader of the Congress, Patel had unsuccessfully contested the Gujarat Assembly elections against Chief Minister Narendra Modi last year.

Jairam Ramesh (55), who was Minister of State for Commerce and Industry, and Power in the previous UPA government, has been promoted and given independent charge. His elevation in the government is seen as a reward for charting the successful Congress strategy for the recent general elections. Born in Chickmaglur in Karnataka on April 9, 1954 he represents Andhra Pradesh in the Rajya Sabha.

Krishna Tirath, 54, a two-time MP from Delhi, makes her debut in the Manmohan Singh ministry. Tirath began her political career as a member of the Delhi Legislative Assembly from 1984-2004 and held the portfolios of Social Welfare, and Labour and Employment. She won the recent elections from Delhi North-West. Tirath represented Karol Bagh in the previous Lok Sabha.

Dinesh Trivedi, considered a close confidante of Railway Minister Mamata Banerjee, was elected from Barrackpore in West Bengal on a Trinamool Congress ticket. A Gujarati, he is settled in West Bengal.

Sisir Adhikari, who won the Lok Sabha election from Contai on a TMC ticket, is making his maiden entry into the Union Council of Ministers.

Saugata Ray of TMC defeated BJP's Tapan Sikdar and sitting MP Amitava Nandi to wrest the Dum Dum seat from the CPI-M in a tripartite battle.

Mohan Jatua, a former IPS officer, won from Mathurapur constituency on a TMC ticket.

Sultan Ahmed, President of Kolkata's Mohammadan Football Club and TMC MP from Uluberia, is one of six Ministers of State from his party.

Prateek Patil hails from a family of politicians. His grandfather Vasantdada Patil was the chief minister of Maharashtra. He is a second time MP from Sangli parliamentary constituency. He makes his debut as a minister at the Center.

Arun Yadav represents Khandwa seat in Madhya Pradesh. His father Subhash Yadav was deputy chief minister of the state when Digvijay Singh was the chief minister. He got elected to the Parliament in 2007 from Khargone seat in a bye-election. He had to contest from Khandwa as Khargone became a reserved seat after the delimitation exercise.

Bharatsinh Solanki is a second time MP from Anand in Gujarat. His father Madhav Sinh Solanki was former Gujarat Chief Minister. Solanki was Pradesh Congress Committee president in 2007 when the party lost the assembly polls.

Tushar Choudhary won from Bardoli in Gujarat. He was MLA prior to his becoming MP. This is his second term as an MP.

Ajay Maken (45) has been known to make a difference whichever post he handles — be it privatization of the Delhi Vidyut Board, running public transport on CNG or modernization of the Delhi Assembly. He won the New Delhi Parliamentary seat humbling BJP stalwart Jagmohan and was made the Minister of State for Urban Development. The nephew of Congress leader Lalit Maken, Ajay's career surged after becoming the President of Delhi University Students Union in 1985.

R P N Singh hails from the royal family of Kushinagar in Uttar Pradesh. He was an MLA from the same seat till recently. He defeated BSP stalwart Swami Prasad Maurya who is the state unit president of his party.

Pradeep Jain was an MLA from Jhansi earlier. He wrested the Lok Sabha seat from the Samajwadi Party. He was associated with youth Congress.

Daggubati Purandeswari (50), the daughter of legendary Andhra Pradesh Chief Minister N T Rama Rao, won the recent general election from Visakhapatnam. Purandeswari made her mark as a Minister of State for HRD in the previous UPA government.

Panabaka Lakshmi (51), who won the Bapatla seat in Andhra Pradesh, gets back as MoS. She was MoS Health in the previous government.

Namo Narain Meena (65), a former Additional Director General of Police, took the political plunge in 2004 general elections which he won from Sawai Madhopur in Rajasthan. He was MoS Environment and Forests in the previous government.

Jitin Prasada (35), who is seen as one of the upcoming young leaders of the Congress, has a prominent political lineage to boast of. The son of Congress veteran Jitendra Prasada, Jitin first made his electoral debut from Shahajahanpur in Uttar Pradesh in 2004 and was made Minister of State for Steel. He won from Dhaurahra in the Lok Sabha elections.

A three-time MP from Kakinada, M M Pallam Raju (48) makes a comeback in the Union Council of Ministers. Raju, an MBA from Temple University Philadelphia, US, was the Minister of State for Defense in the previous UPA government. His grandfather M Pallam Raju was a freedom fighter and father M S Sanjeevi Rao was a minister in the Indira Gandhi government between 1982-84.

Mullapally Ramachandran won from Vadakara Lok Sabha constituency in Kerala defeating sitting MP Satheedevi of the CPI(M). Ramachandran was a minister in the P V Narasimha Rao government. He is the vice president of Kerala Pradesh Congress Committee.

Born in Shimla, 64-year-old Preneet Kaur has a distinction of scoring a hattrick as she bagged Patiala constituency for the third successive time. The wife of former Punjab Chief Minister Amarinder Singh, she was elected to Lok Sabha for the first time in 1999 and then in 2004. Known as the Maharani of Patiala, Kaur is the daughter of former Punjab Chief Minister Gyan Singh Kahlon.

An engineer by profession, Vincent Pala entered politics only this year. He won from Shillong seat in Meghalaya.

At 28, Agatha Sangma is the youngest minister in the Manmohan Singh ministry. Agatha of NCP is a lawyer by profession. She first entered the previous Lok Sabha through a byelection and was reelected this time from Tura in Meghalaya. Agatha is the daughter of former Lok Sabha Speaker P A Sangma.

A member of the Gwalior royal family, the 38-year-old Jyotiraditya Scindia first entered the Lok Sabha in 2002 from Guna which was represented by his father Madhvrao Scindia till his death. The junior Scindia was re-elected in 2004 and was made Minister of State for Information Technology in 2007. He has retained the seat. An MBA from Stanford University, the Guna MP worked as an investment banker for Merrill Lynch and Morgan Stanley before he joined politics.

Born on October 5, 1954, Gurudas Kamat is a six time MP from Mumbai-North East. Kamat, an influential Congress leader from Maharashtra, has an MBA degree and is a commerce graduate.

A Sai Prathap, 65, is a six time MP from Andhra Pradesh. An agriculturist, Prathap was member of a number of Lok Sabha committees.

Sachin Pilot is 32-year-old MP from Ajmer. He is the Gujjar face of the Congress. Son of former union minister Rajesh Pilot, he had to contest from Ajmer as his Dausa seat was reserved. He is married to Farooq Abdullah's daughter. Pilot is one of the young leaders of the party who is close to general secretary Rahul Gandhi. This former Stephanian has a pilot license. He defeated Kiran Maheshwari of BJP in the polls.

S S Palanimanickam won from Thanjavur on a DMK candidate for the fifth consecutive time. He defeated his nearest rival Durai Balakrishnan of MDMK by 101,789 votes. He has served as Minister of State for Finance earlier.

D Napolean, an actor in the Tamil film industry, won on a DMK ticket from Perambalur by more than 77,000 votes.

Srikant Jena, 59, Congress MP from Balasore constituency of Orissa, was union minister in the United Front government as a member of the Janata Dal. He has been MP thrice since 1989 to 1998. Jena was jailed twice during the national emergency.

K H Muniyappa, a six-time MP from Karnataka, was minister of state for surface transport in the previous government. The Kolar MP was first elected in 1991 and has not looked back since winning every election thereafter.

Mahadeo Singh Khandela won from Sikar defeating CPI(M) candidate Amra Ram and sitting BJP MP Subhash Maharia.

Harish Rawat, who won the Haridwar seat, will be a MoS for the first time. The former Uttarakhand Congress chief has served as an MP earlier.

Prof K V Thomas won by a majority of 11,700 votes from the Ernakulam constituency on a Congress ticket. A Chemistry professor, he was a sitting MLA representing the Ernakulam assembly seat. Earlier, he was a minister in the Kerala government.

53-year-old Shashi Tharoor, who failed in his bid to become UN chief three years back, proved his popularity at the hustings in his hometown of Thiruvananthpuram where he won on a Congress ticket with a huge margin. In his 22-year career at the United Nations he served as Undersecretary General for Communications and Public Information under Kofi Annan.

E Ahamed (71) was Minister for State for External Affairs in the previous UPA government. A six-time MP, Ahamed won from the newly constituted Malappuram on a Indian Union Muslim League ticket. Ahamed was a Member of the Kerala Legislative Assembly for five consecutive terms from 1967 to 1991 and held the Industry portfolio between 1982 and 1987.

V Narayansamy, 61, who was Minister of State for Parliamentary Affairs in the previous ministry, is a close confidant of Rahul Gandhi. A Lok Sabha MP from Pudducherry, he is a lawyer by profession. He was first elected to Rajya Sabha in 1985 and then in 1991. He was entrusted with the responsibility of reviving the Congress in Chhattisgarh but failed to achieve much. His USP is his abiding loyalty to the Gandhi family.

MGR loyalist-turned Karunanidhi confidant S Jagathrakshakan runs a string of medical and engineering colleges and is the chancellor of the private Bharat University near Chennai. He has won the Lok Sabha elections for the third time. He had merged his Jananayaka Munnetra Kazhagam, which he floated in 2000, with the DMK on the eve of Lok Sabha elections.

A Stalin loyalist, S Gandhiselvan, 46, sprang a surprise by winning the newly created Namakkal seat, considered to be a bastion of AIADMK.

A trusted follower of Mamata Banerjee, Mukul Roy has been a Rajya Sabha member since 2006 and the general secretary of TMC for the last two years. Roy, 55, known as a political and social worker, has been a member of the Committee on Urban Development and Member, Consultative committee for the Ministry of Home Affairs since April 2008.

பயர்வால்கள் (Firewalls) எப்படி செயல்படுகின்றன?

பயர்வால்கள் (Firewalls) எப்படி செயல்படுகின்றன?
எழுதியவர் : கார்த்திக் 21 March 2009

உங்களுக்கும் இன்டர்நெட்டுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு அரணாக இயங்க வேண்டுவதே பயர்வால் தொகுப்பின் தன்மையாகும். இது உங்கள் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கும் வைரஸ்களை தடுக்கும் செயலை முழுமையாக மேற்கொள்ளவில்லை. குறிப்பிட்ட சில போர்ட்டுகள் மூலம் வரும் வைரஸ்களை மட்டுமே இதனால் தடுக்க முடியும்.



இன்டர்நெட்டில் நம் கம்ப்யூட்டரை இணைத்து செயல்படுகையில் அது பல்லாயிரக்கணக்கான கம்ப்யூட்டர்கள் இணைந்த நெட் வொர்க்குடன் இணைந்து செயல்படுகிறது. இதனால் இந்த நெட்வொர்க்கில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களில் இருந்தும் உங்கள் கம்ப்யூட்டரைத் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தித்தான் பல விஷமிகள் நம் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களைத் திருட முயற்சிக்கிறார்கள். அல்லது வைரஸ் புரோகிராம்களை அனுப்பி நம் கம்ப்யூட்டரில் நாசம் விளைவிக்கிறார்கள். இந்த முயற்சியில் ஈடுபடுவோர் எப்போதும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல தொடர்ந்து செயல்படுகின்றனர்.


இவர்களிடமிருந்து நம் கம்ப்யூட்டரை மூன்று வழிகளில் பாதுகாக்கிறோம்.

1. வைரஸை அண்டவிடாமலும் அப்படி வந்துவிட்டால் அவற்றை நீக்கும் செயலையும் மேற்கொள்ளும் ஆண்டி வைரஸ் எனப்படும் புரோகிராம்கள்.

2. உள்ளே இது போன்ற எந்த நாசம் விளைவிக்கும் புரோகிராமினையும் புகவிடாமல் தடுக்கும் பயர்வால் புரோகிராம்கள்.

3.ஸ்பைவேர் அழித்தல்.

இந்த மூன்று வகை புரோகிராம்களும் இன்றைக்கு ஒரு கம்ப்யூட்டருக்குத் தேவை. இதன் முக்கியத்துவம் ஒன்றுக்கொன்று வேறுபடலாம். இங்கு பயர்வால்கள் என்ன செய்கின்றன என்று பார்க்கலாம்

உங்களுக்கும் இன்டர் நெட்டுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு அரணாக இயங்க வேண்டுவதே பயர்வால் தொகுப்பின் தன்மையாகும். இது உங்கள் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கும் வைரஸ்களை தடுக்கும் செயலை முழுமையாக மேற்கொள்ளவில்லை. குறிப்பிட்ட சில போர்ட்டுகள் மூலம் வரும் வைரஸ்களை மட்டுமே இதனால் தடுக்க முடியும்.


பயர்வால் தொகுப்பைப் பொறுத்தவரை இரண்டு வகை உண்டு:ஹார்ட்வேர் பயர்வால் மற்றும் சாப்ட்வேர் பயர்வால்.


அதிகம் புழங்கப்படும் ஹார்ட்வேர் பயர்வால் ரௌட்டராகும் (router).ஒரு சிறிய நெட்வொர்க்கில் இது கம்ப்யூட்டருக்கும் மோடத்திற்கும் இடையே இணைக்கப்படும். உங்களுக்கு இன்டர்நெட் தொடர்பினைத் தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் நிறுவனம் உங்கள் கம்ப்யூட்டருக்கென ஒரு ஐ.பி. முகவரியினைத் தரும். இது தெரிந்தால் யாரும் இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டருக்குள் புகுந்து தகவல்களைத் திருட முடியும். இந்த ரௌட்டர் அதனை மற்றவர்களிடமிருந்து மறைத்து வேறு ஒரு முகவரியை இணைக்கப்பட்ட கம்ப்யூட்டருக்குத் தருகிறது. இதன் மூலம் கம்ப்யூட்டரில் எளிதாக நுழையக் கூடிய போர்ட்களை ரௌட்டர் மூடிவிடுகிறது.

சாப்ட்வேர் பயர்வால் சிறிது மாறாகச் செயல்படுகிறது. இதில் சில நன்மைகளும் உள்ளன; பிரச்னைகளும் உள்ளன. ஹார்ட்வேர் பயர்வால் கம்ப்யூட்டருக்கு வெளியே அமைக்கப்படும் சாதனம். சாப்ட்வேர் பயர்வால் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்படும் புரோகிராம். எது எப்படி இருந்தாலும் உங்கள் கம்ப்யூட்டருக்கு ஏதாவது ஒரு பயர்வால் கட்டாயம் தேவை.

சாப்ட்வேர் பயர்வால் உங்கள் கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு போல ஒரு அப்ளிகேஷன் புரோகிராமாக இயங்குகிறது. இதனால் நீங்கள் இன்டர்நெட் தொடர்பில் இருக்கையில் புராசசர் வேகம் சற்று குறையலாம். சாப்ட்வேர் பயர்வால் ரௌட்டர் செய்வது போல ஐ.பி.முகவரி மாற்றம் எதனையும் மேற்கொள்ளாது. சாப்ட்வேர் பயர்வால் செயல்படுவது ஒரு நண்பரை வாட்ச்மேனாக வைத்திருப்பது போல.

இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில் எந்த புரோகிராமினை நாம் இன்டர்நெட்டில் தொடர்பு கொண்டாலும் உடனே சிறிய பாக்ஸ் ஒன்றை உருவாக்கி இந்த ஐ.பி. முகவரியிலிருந்து இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் நுழைந்திட முயற்சிக்கிறது. இதனை அனுப்பவா? என்று கேட்கும். நீங்கள் அனுமதித்தால் தான் அதனை அனுமதிக்கும்.

இது கெடுதலான புரோகிராமிற்கு மட்டுமல்ல. நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் அனைத்து புரோகிராம்களுக்கும் இந்த செய்தி கிடைக்கும். ஒரு முறை ஒரு புரோகிராமினை அறிந்து கொண்டு அதனை நீங்கள் அனுமதிப்பதையும் பதிந்து கொண்டு அடுத்த முறை அதே வெப் சைட்டை நீங்கள் தொடர்பு கொள்கையில் உங்களைக் கேட்காமலேயே அனுமதிக்கும்படியும் இதனை செட் செய்திடலாம்.

வேறு எவராவது அவர்களின் புரோகிராம் மூலம் உங்கள் கம்ப்யூட்டருக்குள் திருட்டுத் தனமாக நுழைய முயற்சிக்கையில் இந்த ஐ.பி. முகவரியிலிருந்து ஒருவர் உங்கள் கம்ப்யூட்டருக்குள் முயற்சிக்கிறார் என்று எச்சரிக்கைச் செய்தியினை பயர்வால் வழங்கும். அப்படிப்பட்ட நேரத்தில் அதனைக் குறித்து வைத்துக் கொண்டு உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு இந்த முகவரியிலிருந்து ஒருவர் என்னுடைய கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கிறார் என நீங்கள் தெரிவிக்கலாம்.

பயர்வால் என்பது இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவருக்கும் தேவயான ஒன்று. எனவே இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் பயர்வால் ஒன்றை டவுண்லோட் செய்து பயன்படுத்துவது நல்லது. அல்லது நிறுவனங்கள் விற்பனை செய்திடும் பயர்வால் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தலாம். விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பில் பயர்வால் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு சிறிய அளவில் தான் இயங்குகிறது.

ராமநாதபுரம் தமிழ்ச் சங்க முப்பெரும் விழா

ராமநாதபுரம் தமிழ்ச் சங்க முப்பெரும் விழா

ராமநாதபுரம், மே 31: ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் தின விழா, மாவட்ட நூற்றாண்டு துவக்க விழா, நகராட்சி பொன்விழா ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர். வாசுகி தலைமை வகித்து தமிழ்ச் சங்க நூலகத்தின் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்துப் பேசினார்.

ராமநாதபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர். லலிதகலா ரெத்தினம் முன்னிலை வகித்தார். சங்கச் செயலர் சந்திரசேகரன் வரவேற்றார்.

தமிழ்ச் சங்க நிறுவனர் எஸ்.எம். கமாலின் உருவப் படத்தை தொழிலதிபர் எம். காதர் மைதீன் திறந்து வைத்தார்.

நிறுவனரின் நினைவுகள் குறித்து கவிஞர் நா. வேலுச்சாமி துரை, எம்.எம்.எஸ். செய்யது இப்ராஹிம், இல. நடராஜன் ஆகியோர் பேசினார்கள்.

நூறாண்டுகள் கண்ட மாவட்டம் என்ற தலைப்பில் தமிழ்ச் சங்க துணைத் தலைவர் எம்.எஸ்.கருணாநிதி, மூத்த பத்திரிகையாளர் எம்.எஸ். அல்லாபாக்ஸ், பொன் விழா கண்ட நகராட்சி என்ற தலைப்பில் அ. அன்வர்தீன் ஆகியோர் பேசினர்.

விழாவில் தமிழ்ச் சங்க வளர்ச்சிக்கு நக்கீரன் கோபால் ரூ. 25,000 நன்கொடையாக வழங்கியதுடன் குற்றம் குற்றமே என்ற தலைப்பில் பேசினார்.

இலக்கிய இன்பம் என்ற தலைப்பில் கவிஞர் தெய்வச்சிலை பேசினார். விழா ஏற்பாடுகளை சங்கத் தலைவர் அப்துல்சலாம், துணைத் தலைவர் விவேகானந்தன், செயலர் சந்திரசேகரன், பொருளாளர் சுந்தர மூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

விழாவில் தலைமை ஆசிரியை காளீஸ்வரி, விபத்து மீட்புச் சங்க தலைவர் தேவசேனாதிபதி, சங்க துணைத் தலைவர் கு. விவேகானந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Sunday, May 31, 2009

மாம்பழமாம் மாம்பழம்

மாம்பழமாம் மாம்பழம்

webdunia photoWD

மாம்பழ ‌வி‌ற்பனை துவங்கி படு ஜோராக நட‌ந்து வரு‌கிறது. எங்கு பார்த்தாலும் மஞ்ஞை மஞ்சேலென காட்சி அளிக்கிறது மாம்பழங்கள். தெருவோரக் கடைகளிலும் சரி, நடைபாதைக் கடைகளிலும் சரி தற்போது அதிகம் வியாபாரமாவது மாம்பழம்தான்.

குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி குறிப்பாக பெண்கள் மாம்பழத்தை வாங்கி அதிகளவில் சாப்பிடும் நேரம் இது. பலரது ‌வீடுக‌‌ளி‌ல் சா‌ப்பா‌ட்டு‌க்கு பதா‌ர்‌த்தமாகவே இ‌ந்த மா‌ம்பழ‌த்தை வை‌த்து‌க் கொ‌ள்வா‌ர்க‌ள். ப‌ள்‌ளி ‌திற‌க்க‌ட்டு‌ம், பா‌தி மாணவ‌ர்களது உணவு ட‌ப்பா‌க்க‌ளி‌ல் மா‌ம்பழ‌ம் ‌நி‌ச்சய‌ம் இட‌ம்பெ‌ற்று ‌விடு‌ம்.

மாம்பழத்தை வெறுப்பவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அதிகமாக சாப்பிட விரும்பாதவர்கள் என்று வேண்டுமானால் இருப்பார்கள். அவர்களும், இதுவரை சுவையான மாம்பழத்தை சுவைத்ததில்லை என்றுதான் கூற வேண்டும். சுவையான மாம்பழத்தை சுவைத்தவர்கள் யாரேனும் மாம்பழம் வேண்டாம் என்று கூறுவார்களா? அப்படியே அவர்கள் கூறினா‌ல் அவர்களுக்கு ஒன்று நீரிழிவு நோய் அ‌ல்லது ம‌ஞ்ச‌ள் காமாலை இருக்க வேண்டும் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். சரி இந்த கதையெல்லாம் எதற்கு

இந்த மாம்பழத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று யாராவது உங்களிடம் கேட்டால் நீங்கள் உடனே என்ன சொல்வீர்கள்.

ஆம், அதற்குத்தான் இந்த கட்டுரை. அதாவது மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகிய சத்துகளும் காணப்படுகின்றன.

தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த வைட்டமின்கள் மற்றும் சத்துகள் நமக்கு எளிதில் கிடைத்துவிடும்.

மாம்பழத்தை சாப்பிடுபவர்கள், அதன் தோல் பகுதியை பெரும்பாலும் நீக்கிவிட்டு சாப்பிடுகிறார்கள். இது பெரும் தவறு. ஏன் என்றால் மாம்பழத்தின் தோல் பகுதியில்தான் அதிக அளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. மாம்பழத்தை சாப்பிட்டுவிட்டு தூக்கி எறியும் மாங்கொட்டை‌யிலும் கால்சியம் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் காணப்படுகின்றன.

பொதுவாக மாம்பழ வரத்து ஏப்ரல் மாதம் துவங்கி ஜூன் மாத இறுதி வரை நீடிக்கும். உலகில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாம்பழ ரகங்கள் இருந்தாலும் இந்தியாவில் குறிப்பிட்ட சில ரக மாம்பழங்கள் மட்டுமே விளைகிறது. இவற்றில் இமாம்பசந்த், அல்போன்சா, பங்கனப்பள்ளி, பீத்தர், செந்தூரா, ராஸ்புரி, நீலம், ஒட்டு, மல்கோவா, கிளிமூக்கு உள்ளிட்ட சில ரகங்கள் முக்கியமானவை.

பொதுவாக நமக்கு திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து மாம்பழ வரத்து அதிகமாக இருக்கும். ஆனால் கடந்தாண்டை விட இந்தாண்டு மாம்பழ விலை சற்று அதிகமாக இருப்பதால், மாம்பழப் பிரியர்கள் பலரும், மாம்பழம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இன்னும் சில நாட்கள் போகட்டுமே, விலை குறையும் என்று காத்திருக்கின்றனர். ஒரு சிலர்.. என்ன விலை என்று கூட கேட்காமல் வாங்கிச் சென்று சுவைக்கின்றனர்.

மாம்பழத்திலும் தற்போது நமக்கு கவலையை அளிக்கும் விஷயம் ஒன்று வந்துவிட்டது.

அதுதான், மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கற்களைப் பயன்படுத்துவது. வியாபாரிகள் பலரும், மாங்காய்களை வாங்கி வந்து குடோனில் போட்டு, அதனுடன் கார்பைடு கற்களையும் வைத்து விடுகின்றனர். இதனால் மாம்பழங்கள் சீக்கிரம் பழுத்துவிடுகின்றன. ஆனால், இப்படி பழுக்க வைக்கும் மாம்பழங்களை சாப்பிடுபவர்களுக்கு, உடல் சூடு அதிகரிக்கும், கொப்புளம், குடல் புண் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

காவல்துறையும், பல இடங்களில் சோதனை நடத்தி இப்படி பழுக்க வைக்கும் மாம்பழங்களை அழித்து வருகின்றனர்.

எனினும் இலைமறைக் காயாக ஆங்காங்கே கார்பைடு கற்களைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் சந்தைக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன.

மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு, அதனை குளிர்ந்த நீரில் அல்லது சாதாரண நீரில் மூழ்குமாறு போட்டு வைத்துவிட்டு பின்னர் சாப்பிடுவது உடலுக்கு சூட்டை ஏற்படுத்துவதை குறைக்கும் என்று சிலர் கூறுகிறார்கள்.

மேலும், மாம்பழம் கிடைக்கிறதே என்று அதிகமாக சாப்பிட்டு விடாமல், அளவாக சாப்பிடுவதும் உடலுக்கு மிகவும் நல்லது. அ‌ப்படி மா‌ம்பழம் சாப்பிட்டால், பால் குடிப்பது உடல் சூட்டைக் கட்டுப்படுத்தும்.

க‌ர்‌ப்‌பி‌ணிக‌ள் மா‌ம்பழ‌ம் சா‌ப்‌பிடுவதை குறை‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திக சூடு‌ குழ‌ந்தை‌க்கு ந‌ல்லத‌ல்‌ல. அ‌தி‌ல்லாம‌ல் மா‌ம்பழ‌த்‌தினா‌ல் குழ‌ந்தை‌க்கு மா‌ந்த‌ம் என‌ப்படு‌ம் நோ‌ய் ஏ‌ற்படவு‌ம் வா‌ய்‌ப்பு உ‌ள்ளது. அ‌தனா‌ல் கவன‌ம் தேவை.

‌விளையு‌ம் அனை‌த்து மாம்பழ‌ங்களு‌ம் சா‌ப்‌பிடுவத‌ற்கு ம‌ட்டும‌ல்லாம‌ல், ‌ அதிகமாக சாறும், நாறும் உள்ள பழங்களில் இருந்து பழச்சாறு செய்யப்படுகிறது. தென்னிந்தியாவில், மாம்பழத்தை வைத்து பச்சடி மற்றும் சட்னி செய்வார்கள். மாம்பழ ஊறுகாய், மாம்பழ ஜாம் உள்ளிட்டவையும் தயாரிக்கப்படுகிறது.

என்ன ஒரே மாம்பழ வாடை வீசூகிறதா? சரி சரி நாக்கில் எச்சில் ஊறுகிறது. போய் ஒரு மாம்பழம் வாங்கி சாப்பிட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்கலாம்.

வருகிறோம்

துபாய் முதுவைக் கவிஞருடன் ( 29 மே 2009 ) அல் கிஸஸ் ஷேக் காலனியில்.....



Friday, May 29, 2009

ஹி ஹி ஹி மொபைல் மற்றும் நெட்வொர்க் கம்பெனி களை வைத்து ஒரு திருவிளையாடல் ரீமிக்ஸ்....

ஹி ஹி ஹி மொபைல் மற்றும் நெட்வொர்க் கம்பெனி களை வைத்து ஒரு திருவிளையாடல் ரீமிக்ஸ்....



சேர்ந்தே இருப்பது ?
ஏர்செல் உம் நெட்வொர்க் பிஸி உம் ....
சேராமல் இருப்பது?
ரிலையன்ஸ் இல் இருந்து BSNL க்கு msg...
செய்ய கூடாதது ?
செல் to land லைன் கால்...
செய்ய வேண்டியது?
customer கால்...
செல்லுக்கு?
நோக்கியா...
பில்லுக்கு?
BSNL...
டவர் க்கு ?
ரிலையன்ஸ்...
சைஸ் க்கு?
மோடோரோலா...
கலருக்கு?
LG..
கேமராக்கு ?
சோனி Ericsson...
சவுண்ட் க்கு?
சாம்சுங்...
SMS க்கு?
ஏர்செல்...
offerkku?
ஏர்டெல்...
Recharge க்கு?
Vodafone...
ரேட் க்கு?
டாட்டா இண்டிகாம்...
மொக்கைக்கு?
நான்...
பொலம்பல் க்கு ?
நீங்க....

என்ன வரட்டா.....

Be Cool...
Stay Cool...

operations@alzafercargo.com

TNTJ மாணவர் அணியின் இந்த வார (May 30 - 31) கல்வி சேவை நிகழ்சிகள் (இன்ஷா அல்லாஹ்)

TNTJ மாணவர் அணியின் இந்த வார (May 30 - 31) கல்வி சேவை நிகழ்சிகள் (இன்ஷா அல்லாஹ்)


1. இராமநாதபுரத்தில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்

என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?

நாள் : மே 30 - சனி கிழமை- (இன்ஷா அல்லாஹ்)

நேரம் : காலை 9: 30 மணி முதல் மதியம் 1 மணி வசிறப்புரை : S. சித்திக் M.Tech ( மாநில மாணவர் அணிச் செயலாளர்)

இடம் : TNTJ மர்கஸ், AKS காம்ப்லெக்ஸ், (அரவிந்த் மருத்துவமனை எதிரில்),
இராம்நாட், இராமநாதபுரம் மாவட்டம்

தொடர்பிற்கு : 9894652633, 9994588737

மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது
TNTJ. இராமநாதபுரம் மாவட்ட மாணவர் அணி.


2. முத்து பேட்டையில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்

என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?

நாள் : மே 30 - சனி கிழமை- (இன்ஷா அல்லாஹ் )

நேரம் : காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை

சிறப்புரை : J.முஹமது தஸ்தகீர். B.E.

இடம் : TNTJ மர்கஸ், நூர் பள்ளிவாசல் தெரு, முத்து பேட்டை, திருவாரூர்
மாவட்டம்

தொடர்பிற்கு : 9094283904

மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது
TNTJ. திருவாரூர் மாவட்ட மாணவர் அணி.


3. கும்பகோணத்தில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்

என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?

நாள் : மே 31 - ஞாயிற்று கிழமை- (இன்ஷா அல்லாஹ் )

நேரம் : காலை 9 மணி முதல் 1 மணி வரை

சிறப்புரை : S. சித்திக் M.Tech ( மாநில மாணவர் அணிச் செயலாளர்)

இடம் : TNTJ மர்கஸ், No: 193, ஜான் செல்வராஜ் நகர் (கும்பகோணம் பேருந்து
நிலையம் அருகில்) , கும்பகோணம்

தொடர்பிற்கு : 9944338847

மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது
TNTJ தஞ்சை (வடக்கு) மாவட்ட மாணவர் அணி.


4. திண்டிவனதில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்

என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?

நாள் : மே 31 - ஞாயிற்று கிழமை- (இன்ஷா அல்லாஹ் )

நேரம் : காலை 9 மணி முதல் 1 மணி வரை

சிறப்புரை : J.முஹமது தஸ்தகீர். B.E.

இடம் : TNTJ மர்கஸ், அரவப்பாக்கம், திண்டிவனம்

தொடர்பிற்கு : 9865271550

மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது
TNTJ விழுப்புரம் மாவட்ட மாணவர் அணி.


தர்பியா நிகழ்சிகள்

1. இராமநாதபுரத்தில் TNTJ மாணவர் அணியின் ஒழுக்க பயிற்சி முகாம் (தர்பியா)

நாள் : மே 30 - சனி கிழமை- (இன்ஷா அல்லாஹ்)

நேரம் : மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

இடம் : TNTJ மர்கஸ், AKS காம்ப்லெக்ஸ், (அரவிந்த் மருத்துவமனை எதிரில்),
இராம்நாட், இராமநாதபுரம் மாவட்டம்

தொடர்பிற்கு : 9894652633, 9994588737

மாணவர்கள், இளைஞர்கள், அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ
இராமநாதபுரம் மாவட்ட மாணவர் அணி.



2. கும்பகோணத்தில் TNTJ மாணவர் அணியின் ஒழுக்க பயிற்சி முகாம் (தர்பியா)

நாள் : மே 31 - ஞாயிற்று கிழமை- (இன்ஷா அல்லாஹ் )

நேரம் : மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

இடம் : TNTJ மர்கஸ், No: 193, ஜான் செல்வராஜ் நகர் (கும்பகோணம் பேருந்து
நிலையம் அருகில்) , கும்பகோணம்,

தொடர்பிற்கு : 9944338847

மாணவர்கள், இளைஞர்கள், அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ
தஞ்சை (வடக்கு) மாவட்ட மாணவர் அணி.

Monday, May 25, 2009

Golden Rules for Memorizing the Qur’an

Golden Rules for Memorizing the Qur’an


Be Sincere

Correct Pronunciation and Recitation

Apportion the Daily Number of Verses to Memorize

Do Not Move to the Next Portion Till You Master the Present One

Stick to One Specific Copy of the Glorious Qur’an

Understand What You Are Memorizing

Do Not Move from One Surah to Another Till You Connect Its Beginning to Its End

Recite Frequently before Others

Follow Up Frequently

Pay Attention to Similarities

Seize the Opportunity of the Golden Years to Memorize



LINK to Islamonline.net

பிளஸ் 2-க்கு பிறகு 5 வருட முதுகலைப் பட்டப்படிப்பு : சென்னைப் பல்கலை. அறிமுகம்

பிளஸ் 2-க்கு பிறகு 5 வருட முதுகலைப் பட்டப்படிப்பு : சென்னைப் பல்கலை. அறிமுகம்

பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த 5 வருட முதுகலைப் பட்டப்படிப்பு தொடங்கப்படவுள்ளது.

இந்த ஐந்து ஆண்டுகளுக்கு இடையில் படிப்பை நிறுத்தினால், அதற்கேற்ப சான்றிதழ் வழங்கப்படும் என்பது சிறப்பம்சம்.

ஒருங்கிணைந்த 5 வருட முதுகலைப் பட்டப்படிப்பு குறித்து சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ராமச்சந்திரன் கூறியது:

"பிளஸ்-2 முடித்த மாணவர்கள் நலன் கருதி சென்னை பல்கலைக்கழகத்தில் 5 வருட ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்பு இந்த வருடம் தொடங்கப்படவுள்ளது. எம்.ஏ. மானுடவியல், எம்.ஏ. நவீன மேம்பாட்டு (போஸ்ட் மாடர்ன் டெவலப்மென்ட் அட்மினிஸ்ட்ரேசன்) நிர்வாகம், எம்.ஏ. பிரெஞ்சு ஆகியவையும் எம்.எஸ்சி. வாழ்க்கை அறிவியல் படிப்பும் தொடங்கப்படவுள்ளன. இவற்றில் தலா 20 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். அதிகமானோர் விண்ணப்பித்தால் நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.
இந்த படிப்புகளில் மாணவர்கள் ஒரு வருடத்தில் நின்றால் சான்றிதழ், 2 வருடத்தில் நின்றால் டிப்ளமோ, 3 வருடத்தில் நின்றால் பட்டம், 4 வருடத்தில் நின்றால் முதுகலை டிப்ளமோ, 5 வருடம் படித்து தேர்ச்சி பெற்றால் முதுகலை பட்டம் வழங்கப்படும்.

இவற்றில் எம்.எஸ்சி. படிப்புக்கு மட்டும் அவ்வாறு சான்றிதழ் கிடையாது. 3 வருடம் படித்தால்தான் பட்டமும், 5 வருடம் முடித்தால் முதுகலைப்பட்டமும் கிடைக்கும். இதற்கு கட்டணம் ஆண்டுக்கு ரூ.4, 500 மட்டுமே," என்றார் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ராமச்சந்திரன்.

மேலும், "இந்தப் படிப்புகள் தவிர எம்.எஸ்சி. கடல் சார் அறிவியல் தொழில்நுட்பம் படிப்பும், எம்.எஸ்சி. சுற்றுச்சூழல் அறிவியல் படிப்பும் தொடங்கப்படவுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகார கல்லூரிகளில் 250 படிப்புகள் உள்ளன. மாணவர்கள் அவர்களின் திறனுக்கு ஏற்ப சரியான பாடங்களை தேர்ந்து எடுத்து நன்றாக படித்தால் வேலைவாய்ப்பு உறுதி.

மாணவர்கள் நலன் கருதி கல்விக் கண்காட்சி சென்னை பல்கலைக்கழகத்தில் 23 மற்றும் 24 தேதிகளில் நடத்தப்படவுள்ளன," என்று அவர் தெரிவித்தார்.

New Indian Passport and Visa Service Centres to open in Kuwait

New Indian Passport and Visa Service Centres to open in Kuwait

Effective Wednesday, 27 May 2009, collection and submission of Indian passport and visa applications and their delivery to applicants in Kuwait will take place only via two Indian Passport and Visa Service Centres located at the following addresses:



1. Emad Commercial Centre, Basement Floor, Ahmed Al Jaber Street, Sharq, Kuwait City. Telephone: 22470005. Telefax: 22470006.

2. Mujamma Unood, 4th floor, Office No. 25-26 Makka Street, Fahaheel, Kuwait. Telephone: 23912352. Telefax: 23912354.

Both Service Centres will function from 0800 hrs. to 1200 hrs. and 1600 hrs to 2000 hrs. from Sunday to Thursday, and from 1600 hrs. to 2000 hrs. on Saturdays. They will be closed on Fridays and major public holidays. Both Centres are located at venues that are regularly served by public transport and have free parking space available nearby.

An Indian Company, M/S BLS International Visa Services, will operate both Service Centres, which will also offer the following facilities: [a] Information desk; [b] Free distribution of passport and visa application forms; [c] Filling of passport and visa application forms [at nominal charge]; and [d] Photocopy facility [at nominal charge].

A service fee of KD 1.500 for Passport Services and KD 5.000 for Visa Services per application will be charged by M/S BLS International Visa Services, in addition to the Passport and Visa fees of the Government of India.

The website http://www.bls-international.com/, which will be functional from Sunday, 24 May 2009, will provide details of all passport and visa services available at both Service Centres. A Consular representative of the Embassy of India, Kuwait, will initially be available at both locations in case of need for any clarification.

Applications for visas on Diplomatic/Official/Special passports as well as for issue of PIO/OCI cards and Emergency Certificates will continue to be accepted directly at the Embassy of India, Kuwait. Affidavit/Attestation services will also continue to be provided at Embassy of India, Kuwait.



Kuwait
May 21, 2009
http://arifmaricar.blogspot.com/2009/05/new-indian-passport-and-visa-service.html

____________________________________________________________________

S.M. Arif Maricar
Technical Clerk,
Ministry of Electricity & Water,
Treasurer,
(TMCA) Tamilnadu Muslim Cultural Association, Kuwait .

http://www.tmcaonline.com
http://www.arifmaricar.blogspot.com
http://www.flickr.com/photos/30497921@N08/
http://www.flickr.com/photos/28801755@N03/

திருந்தினால் திரை விலகும்...!

கதை தானே என்று ஒதுக்கி விட வேண்டாம். தேவையான பல கருத்துக்கள் அடங்கியுள்ளது. படித்துப் பாருங்கள்.



திருந்தினால் திரை விலகும்...!

தொழுதுவிட்டு சலாம் சொல்வதற்கும் டெலிபோன்மணி ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது. எடுத்துப்பேசிய ஜீனத்பாத்திமாவின் முகம் தாமரையாக மலர்ந்தது. மனைவியின் முகமலர்ச்சிக்கு காரணம் புரிந்தது ஜாபர்அலிக்கு.

"என்ன பாத்திமா, ஷாகிராவிடமிருந்து செய்தி வந்திருக்கா? என்ன சொல்றா உன் மக?"

"பேசியது நம்ம பொண்ணுதான்னு எப்படி கண்டு பிடிச்சீங்க!" கண்கள் மலர குழந்தைத் தனமாகக் கேட்டாள் பாத்திமா.

"இதென்ன பெரிய விஷயமா? ஷாகிராவை பெங்களூர் காலேஜ்லே சேர்த்ததிலிருந்து பார்த்துகிட்டு தானே இருக்கேன்.மககிட்டே பேசும்போது உன் முகத்தில் காணும் சந்தோஷத்தை!"

"இருக்காதாபின்னே! மூன்று பிள்ளைகளுக்குப் பிறகு பிறந்த ஒரே ஆசை மவளாச்சே.வருஷம் போனதே தெரியலைங்க.ஷாகிராவுக்கு எம்.சி.ஏ பரிட்சை ஆரம்பமாகப்போகுதாம்.முடிஞ்சதும் போன்செய்றாளாம்.. அழைத்துப்போக உங்களை வரச் சொன்னாள்."

"அதுக்கென்ன போயிட்டு வரேன்.சரக்கு எடுக்க சீக்கிரமாக போகணும்.டிபன் எடுத்து வை".

இரவு படுக்கையில் மெல்ல பேச்செடுத்தாள் பாத்திமா. எந்தக் குடும்ப விஷயமாக இருந்தாலும் இரவு நேரத்தில்தான் ஜாபர் அலி ஓய்வாக செவி கொடுத்து கேட்பார். மற்ற நேரங்களில் டென்ஷன் பார்ட்டிதான். 45 வருடதாம்பத்யத்திய அனுபவம் பாத்திமாவிற்கு.

"என்னங்க நம்ம பொண்ணுக்கு படிப்பு முடிஞ்சிப்போச்சு. இனி நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்து கல்யாணம் நடத்திவிடுவதுதான் நல்லது. இப்போதே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிடுச்சிடுங்க. சரியா இருக்கும். "

"ஷாகிரா படிச்ச பொண்ணு. அவ படிப்புக்கு ஏற்ற மாப்பிள்ளையை நம்ப பிள்ளைங்கதான் பார்க்கணும். எனக்கு என்ன விபரம் தெரியும். அவங்க மூன்று பேரையும் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரச்சொல்லி போனில் சொல்லிடு."

அடுத்து பேசுவதற்குள் குறட்டைச் சத்தம்தான் அவரிடமிருந்து பதிலாக வந்தது. கணவருக்கு வியாபார அலைச்சல் அதிகம் என்று தனக்குத்தானே சமாதானம் செய்துக்கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை...........

மூன்று மகன்களும் தொலைபேசி தொடர்பின் காரணமாக அவரவர்களுடைய விலையுர்ந்த கார்களில் முகமதியார்பேட்டை வந்து இறங்கினர். மகன்களை ஒருசேரக்கண்டதில் ஜாபர் அலிக்கு மட்டில்லா மகிழ்ச்சி. இருக்காதா பின்னே..........

படிப்பு,பதவி, பெரிய இடத்து மாப்பிள்ளைகள் என்ற அந்தஸ்த்து ஆகிய முகாந்திரம் எல்லாம் ஒரு சேரக்கண்டதில் பரம திருப்தி அவருக்கு.

மூத்த மகன் அப்துல் சலீம் பி.இ (சிவில்) படித்துவிட்டு சென்னையில் ரியல் எஸ்டேட் மற்றும் சலீம் கன்ஸ்ட்ரகஷன் தொழிலை நடத்திக்கொண்டு குடும்பத்துடன் சென்னையில் செட்டில் ஆகிவிட்டான்.

இரண்டாவது மகன் அப்துல் மாலிக் பி.காம் முடித்துவிட்டு மதுரைஅரசு பதிவுத்துறை அலுவகத்தில் சார்பதிவாளராக பணிபுரிகின்றான்.மதுரைவாசியாகிவிட்டான்.

மூன்றாவது மகன் அப்துல் வஹாப் பி.எஸ்சி (கெமிஸ்ட்ரி) முடித்துவிட்டு திருச்சியிலுள்ள பால்வளத்துறை நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகின்றான். வீட்டு மாப்பிள்ளையாக இருக்கிறான்.

தங்கையின் திருமணப்பேச்சு சம்பந்தமான விவாதம் நடந்தது. எல்லோருடைய ஒட்டுமொத்தமான கருத்துக்களும் தங்களுடைய அந்தஸ்த்துக்கேற்ற பணக்கார மாப்பிள்ளையை தேடுவதில்தான் இருந்தது. ஜாபர் அலியின் விருப்பமும் அதுதான். தன் மகளுக்கு ஒழுக்க குணமுள்ள மாப்பிள்ளைதான் வேண்டும் என்ற ஜீனத் - பாத்திமாவின் வேண்டுகோள் எடுபடவில்லை. இறை நாட்டப்படி நடக்கட்டும் என்று அவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு தன்கைமணச்சுவையோடு வயிறார உணவு பறிமாறி மகன்களை அனுப்பி வைத்தாள் பாத்திமா.

படிப்பு முடித்துவிட்டு வந்த மகளுக்கு வாய்க்கு ருசியாக வித விதமாகச் சமைத்துப் போட்டு மகிழ்ந்தாள் பாத்திமா. அண்ணன்கள் வந்ததையும் மாப்பிள்ளையைப் பற்றிய அவர்களுடைய கருத்துக்களும் தலையசைக்கும் தந்தையைப்பற்றியும் கூறினாள் பாத்திமா. அதைக்கேட்ட ஷாகிராவின் முகம் வாடியது.

"ஏம்மா, எல்லோரும் தீன் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்காங்க. அவர்கள் மார்க்கக்கல்வி படிக்கலையா?வாப்பாவும் அவர்கள் வழி செல்கிறாரே?"

"என்னம்மா செய்யறது, உன்னை மதரஸாவில் சேர்த்து படிக்க வைத்தது போலத்தான் அண்ணன்களையும் படிக்க வச்சேன். நீ கருத்தாகப் படிச்சே, பட்டப்படிப்பையும் இஸ்லாமியக்கல்லூரியிலேயே சேர்ந்து படிச்சதாலே தீன் பற்று உனக்கு அதிகமா இருக்கு. ஆனா உன் அண்ணன்கள் சரியா படிக்கலன்னா ஹஜரத் தலையில் ஓங்கிக் கொட்டுவார்னு சாக்கு சொல்லி படிக்காம நின்னுட்டாங்க. ஹஜரத் கொஞ்சம் கண்டிப்பானவர். ஓதுறதுல அசிரத்தையா இருந்தா அவருக்குக் கோபம் வரும். நம்ம நல்லதுக்குத்தானே!. வாப்பாகிட்டேயும் சொல்லிப் பாத்துட்டேன். அவர் வியாபாரம் மூலம் பணம் சேர்ப்பதில்தான் குறியாக இருந்தார். உன் மனசு நோகக் கூடாதுன்னுதான் ஊறுகாய் தொட்டுக்கொள்வதைப்போல பள்ளிக்குப் போய் வருவார்."

(வாழ்க்கை) வசதிகள் அதிகமா இருப்பது செல்வமல்ல;மாறாக போதுமென்ற மனமே (உண்மையான)செல்வமாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), நூல்: புகாரி)

"அரபியில் ஓத வரலைன்னா என்னம்மா? நம்ம உம்மத்துக்களுக்கு மார்க்கம் எவ்வளவு எளிமைப்படுத்தி கொடுக்க முடியுமோ அப்படி கொடுத்துள்ளது. தமிழிலியே இஸ்லாமிய கருத்துக்களையும் மார்க்க நெறிமுறைகளையும் ஆய்வுகளையும் சூராக்களையும் படித்து கடைப்பிடிக்கலாமே! அண்ணிங்க கூடவா எடுத்து சொல்லமாட்டாங்க"

"அட போம்மா,பூவோட சேர்ந்த நாறும் மணம் வீசும் என்பாங்க". இவங்க பூவா இருந்தால்தானே!. இவர்கள் மறுமை வாழ்க்கைக்கு அமல் செய்வதை விட, இவ்வுலக நாகரீக மோகமும் பணம் சம்பாதிக்க கணவன்களுக்கு தவறான வழி காட்டுவதில்தான் ஆர்வமா இருக்காங்க. அவங்க பிள்ளைகளை ஆண்டவன் தான் காப்பாத்தணும்."

சந்திரனை மேகம் மறைத்தது போல பாத்திமாவின் முகத்தில் கவலையின் ரேகைகள் படிந்தன. மனவருத்தத்தை மறைத்துக்கொண்டு தாய்க்கு ஆறுதல் கூறினாள் ஷாகிரா.

ஓய்வு நேரத்தை பயனுள்ள விதத்தில் செலவிடவும் மார்க்கக் கல்வி பற்றிய செய்திகளை அதிகமா தெரிந்து கொள்ளவும் ஒரு கம்ப்யூட்டர் தேவையென வாப்பாவிடம் கூறினாள் ஷாகிரா. மகளின் வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாத ஜாபர் அலி அவள் விருப்பப்பத்தை நிறைவேற்றி வைத்தார். மகன்களிடம் இருந்து மாப்பிள்ளைகளின் விபரங்கள்,புகைப்படத்துடன் பதிவுத்தபாலில் வந்து சேர்ந்தன. ஜாபர் அலி மகளைக் கூப்பிட்டார்.

"ஷாகிரா,மாப்பிள்ளைகளின் பயோடேட்டா, போட்டோ எல்லாம் வந்திருக்கு. பெரிய இடம் போலிருக்கு, போட்டோவைப் பார்த்தாலே தெரியுது".

ஷாகிரா பயோடேட்டாவை மட்டும் வாங்கிப் பார்த்தாள். அதில் படித்த, அழகான, வசதியான பெண் வேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருந்தது.

"வாப்பா,எனக்கு இந்த மாப்பிள்ளைகள் பிடிக்கவில்லை"என்றாள் ஷாகிரா.

"என்னம்மா சொல்றே, எந்த போட்டோவையும் பார்க்காமலேயே எப்படிம்மா பிடிக்கலைன்னு சொல்றே?"

"பயோடேட்டாங்கிறது முகம் பார்க்கும் கண்ணாடி மாதிரி, மாப்பிள்ளைகளுடைய குணம், நோக்கம்,எ திர்பார்ப்பு எல்லாம் அதிலேயே தெரிஞ்சுக்கலாம். எனக்கு மார்க்கப்பற்றுள்ள, படித்த, எளிமையான மாப்பிள்ளை போதும், வாப்பா; பணம், வசதி எல்லாம் வேண்டாம்".

"என்னம்மா, புரியாத பொண்ணா இருக்கியே! குணம் மட்டும் பத்தாது, பணம் தாம்மா நம்மை வாழவைக்கும்".

"வாப்பா, நீங்க புரிஞ்சிக்கிட்டது அவ்வளவுதான். நமக்கெல்லாம் வழிக்காட்டியாக விளங்கும் நாயகமும் அவர்களின் வழித்தோன்றல்களும் பெண்களுக்கெல்லாம் சிகரமாகத் திகழும் பாத்திமா நாயகமும் அவர்களின் எளிமையான வாழ்க்கை நெறிமுறைகளும் தான் இஸ்லாத்திற்கு பெருமையைச் சேர்க்கிறது. நீங்கள் நினைப்பதுபோல் இல்லே."

"நம்ம பொண்ணு சொல்றது சரிதாங்க. அவள் விருப்பப்படியே மாப்பிள்ளைப் பார்ப்போம்" என்று ஆதரவாகப் பேசினாள் பாத்திமா.

"சரிம்மா, நீ சொல்றமாதிரி பையனை எங்கேபோய் தேடுவது சொல்லு."

"ஒண்ணும் கஷ்டம் இல்லே வாப்பா, இன்டர்நெட்லே இல்லாத விஷயமே இல்லே. நீங்க அனுமதி கொடுத்தா தேடிப்பார்க்கிறேன்" என்றாள்.

"இதெல்லாம் கூட கம்ப்யூட்டர் செய்யுதா என்ன! புரோக்கருக்கு வேலையே இல்லைன்னு நினைக்கிறேன்."

தந்தையின் அனுமதி கிடைத்தது ஷாகிராவுக்கு.

"என் மனம் நாடும் மணாளனை மணம் முடித்து வை." என்று இறைவனிடம் துவா கேட்டாள். நாட்கள், வாரங்கள், மாதங்கள் நகர்ந்தன.

"தொழுகை தூக்கத்தை விட சிறந்தது" என்பதால் ஃபஜர் தொழுதுவிட்டு அம்மாவுக்குச் சமையலில் உதவி செய்த பின் கம்ப்யூட்டர் முன்அமர்ந்தாள். இஸ்லாமிய இணையதளம் ஒன்றில் அவள் பார்த்த மாப்பிள்ளையின் விவரம் அவளை வெகுவாகக் கவர்ந்தது. மார்க்கப்பறுள்ள, ஐவேளைதொழுகும் தன் பெற்றோர்களைப் பராமரிக்கும் பெண் தேவையென குறிப்பிட்டு இருந்தது.

"நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். 1. செல்வத்திற்காக 2.குடும்ப வம்ச பாரம்பரியத்திற்காக 3.அழகிற்காக 4.மார்க்க நல்லொழுக்கத்திற்காக. எனவே மார்க்க நல்லொழுக்கத்திற்காக பெண்ணை மணந்து வெற்றி அடைந்துக்கொள்.(இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்." (அறிவிப்பாளர்: அபு ஹுரைரா(ரலி), நூல்: புகாரி. எண்; 5090)

மாப்பிள்ளையின் விவரங்களை ஷாகிரா பெற்றோர்களிடம் தெரிவித்தாள். அவள் முகத்தில் சந்தோஷத்தைக் காண தவறவில்லை ஜாபர்அலி. வாழப்போகும் மகளின் விருப்பம்தான் முக்கியம் எனக்கருதி மாப்பிள்ளையைப் பார்க்கப் புறப்பட்டார். ஊரிலிருந்து திரும்பிவந்த ஜாபர்அலியின் முகத்தில் மட்டில்லா மகிழ்ச்சியும் மனநிறையும் தென்பட்டது. சொல்லப்போகும் செய்தியைக் கேட்க பாத்திமா ஆவலுடன் கணவரின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றாள்.

"பாத்திமா, நம்ம பொண்ணு தேர்வு செய்த மாப்பிள்ளை அவள் எதிர்ப்பார்த்த மாதிரியே இருக்கார். எளிமையான குடும்பமாக இருந்தாலும் நல்லபெயரைச் சம்பாதித்து வைத்துள்ளார். தொழுகையாளி, அடக்கம், சாந்தமான பேச்சு, பெற்றோர்கள் பழகும் விதம் எல்லாம் மனசு நிறைஞ்சு இருக்கு. நம்முடைய பணமும் அவர்களுடைய குணமும் நம்ம பொண்ணைச் சந்தோஷமாக வாழவைக்கும்!".

அவருடைய உள்மனம் ஒரு கணக்குப் போட்டது. தொலைபேசிமூலம் தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் மாப்பிள்ளை பற்றிய விவரங்களையும் தங்களுடய விருப்பத்தையும் தெரிவித்தார். மூவரும் குடும்பத்துடன் வந்து திருமண ஏற்பாடுகளைக் கவனிக்கும்படி சொல்லி முடித்தார். மூன்று குடும்பங்களும் வந்து இறங்கினார்கள் சுனாமிபோல் ஆவேசமாக. காரசாரமான விவாதங்கள் நடந்தன. தாங்கள் பார்த்த வரன்களை நிராகரித்ததன் காரணமாக தங்கள் கௌரவம், அந்தஸ்த்து எல்லாம் பஞ்சாக பறந்து விட்டது என ஆர்ப்பரித்தனர். அண்ணிகள் தங்கள் பங்குக்கு உபதேசம்செய்தனர். தன் நிலையிலிருந்து தளரவேயில்லை ஷாகிரா.

"அண்ணா, எனக்கு ஆடம்பரமான பணக்கார குடும்பம் வேண்டாம். சொத்துக்களோ, நகைநட்டோ வேண்டாம். மனசுக்கு நிறைந்த வாழ்க்கையே போதும். மூவரும் ஒன்று சேர்ந்து நடத்தி வைங்க" என்று உருக்கமாக வேண்டினாள்.

அவர்கள் மனம் இரும்பாக இருந்தால்தானே உருக வாய்ப்பிருக்கும்; அதுதான் கல்லாகி விட்டதே.! பிடிவாதமாக எல்லோரும் புறப்பட்டுச் சென்று விட்டனர். பலமுறை நேரில் அழைத்தும் வர மறுத்து விடவே உறவினர்கள், நண்பர்களை வைத்து படைத்தவன்மேல் பாரத்தைப் போட்டு திருமணத்தை முடித்து விட்டார் ஜாபர் அலி. மறுவீடு வந்த மருமகனிடம் மகளுடன் வீட்டோடு தங்கிவிடும்படி கேட்டார்.

அதற்குச் சாதிக், "மாமா, உங்களுக்குத் தெரியாதது ஒண்ணும் இல்லே. மகன்கள் இருக்கும்போது வீட்டு மாப்பிள்ளையாக இருப்பது உகந்தது இல்லே. அது முறையும் இல்லே. நான் என் சொந்த காலில் நிற்கவே ஆசைப்படுகிறேன். என் பெற்றோர்களைப் பராமரிக்கும் கடமையும் இருக்கு. மனைவி ஷாகிராவை மட்டும் என்னுடன் அனுப்பினால் போதும். வேறு எதுவும் வேண்டாம். தவறாக நினக்காதீங்க; அல்லாஹ் போதுமானவன்" என்று பதில் கூறினான்.

கணவரின் கருத்தையே ஆமோதிப்பதுப்போல் மகளும், "வாப்பா புகுந்த வீடுதான் பெண்களுக்கு சொர்க்கம். அவருக்கும் அவரைப்பெற்றவர்களுக்கும் பணிவிடை செய்யவே விரும்புகிறேன். ஆண்டவன் துணையும் உங்களின் துவா பரகத்தும் போதுமானது" என்றாள்.

பாசம் ஒன்றையே சீதனமாகக்கொண்டு விடைப்பெற்றுச் செல்லும் மகளையும் மருமகனையும் பெருமிதத்தோடுப் பார்த்துக்கொண்டு நின்றார் ஜாபர் அலி. ஜீனத் பாத்திமாவுக்கு கண்கள் குளமாயின. ஜாபர் அலியின் மனக்கணக்கு பொய்த்ததில் அவருக்கு வருத்தமே இல்லை.

பணக்கார வீட்டுப்பெண் என்ற சுவடு தெரியாமல் மன நிறைவோடு குடும்பம் நடத்தினாள் ஷாகிரா. அக்கம்பக்கத்துப் பிள்ளைகளுக்கு ஓதவும் தொழவும் கற்றுக் கொடுத்தாள். பெண்களைக்கூட்டி இஸ்லாமிய நெறிமுறைகளை எடுத்துக்கூறினாள். எல்லோருடைய மனதிலும் நிறைந்து நின்றாள். கணவனின் வேலைக்காக நாளிதழ்களைப் புரட்டவும் தவறுவதில்லை. எல்லா பட்டதாரிகளையும் போல சாதிக்கும் வேலை கிடக்காமல் அல்லாடினான். கணவனின் நிலை கண்டு கண்கலங்கிய ஷாகிராவின் பார்வை அன்றைய செய்தித்தாளில் நிலைத்தது. ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான விண்ணப்பம் ஒன்றை கண்டாள்.

"குருடனுக்குப் பார்வை கிடைத்ததைப்போல" மனம் துள்ளியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க கணவனை வற்புறுத்தினாள். "ஷாகிரா, இந்தத் தேர்வு எழுத நிறைய செலவாகும். நம் சக்திக்கு ஒத்து வராதும்மா" என்றான் சாதிக்.

இருவரும் பேசியதைக்கேட்ட அவனது பெற்றோர்கள், "சாதிக், கவலைப்படாதே, நம்முடைய பூர்வீக நிலம் கொஞ்சம் இருக்கு. அவசரத்துக்கு உதவும் என்று தான் வைத்துள்ளோம். அதை விற்று மருமகளின் ஆசையை நிறைவேற்றுப்பா" என்று கூறினார்கள்.

ஈடுபாட்டுடன் படித்து தேர்வு எழுதிய சாதிக் மாநிலத்தில் ஏழாவது இடத்தில் தேர்ச்சி பெற்றான். ஷாகிரா ஐவேளை தொழுகையிலும் துவா கேட்டதும் ஸலவாத்து ஓதியதும் மற்றவர்களுக்கு உதவியதும் வீண் போகவில்லை. மட்டுமின்றி, சாதிக்கின் தேர்வுக்குத் தேவையான விஷயங்களைச் சேகரித்துக் கொடுப்பதிலும் ஷாகிரா நிறைந்து நின்றாள். சாதிக் முகமதுவுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்தன. டேராடூனில் பயிற்சி முடிந்து திருச்சியில் கூடுதல் கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டான். பங்களாவில் தன் பெற்றோர்களுடன் குடியேறினான்.

மருமகனின் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் பதவியும் கண்டு ஷாகிராவின் பெற்றோர்கள் பூரித்துப் போனார்கள். மைத்துனரின் முன்னேற்றத்தைக் கண்ட ஷாகிராவின் சகோதரர்கள் மூவரும் பொறாமைப்பட்டார்கள்; எரிச்சலடைந்தார்கள். வாழ்க்கையில் வேகமாக முன்னேற வேண்டும் என்ற வெறி அதிகமாகியது. மனைவிகளின் தூண்டுதல்களின் பேரில் பதவியைப் பயன்படுத்தி தவறான பாதையில் செல்ல ஆரம்பித்து, பிடிபட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டனர். கேள்விப்பட்ட ஜாபர் அலியும் பாத்திமாவும் நிலைகுலைந்து போனார்கள்.

இறைவழி நின்று எல்லோருடைய பாராட்டுகளோடு உயர்ந்து வரும் மருமகன் ஒருபுறம்; பொறாமைத்தீயில் வெந்து, பதவியை இழந்து நிற்கும் பிள்ளைகள் ஒருபுறம். இஸ்லாத்தில் பிறந்து, ஐவேளை தொழுகையை மறந்து, செல்வத்தைச் சேர்ப்பதில் கவனமாக இருந்த தனக்கு அல்லாஹ் பாடம் புகட்டிவிட்டான் என்று எண்ணினார். முதன் முறையாக அவருடைய உடல் இறையச்சத்தால் நடுங்கியது; கண்கள் கலங்கியது. இரு கைகளையும் ஏந்தி அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட மூவரும் வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தனர். அண்ணன்களின் செய்தியறிந்து ஷாகிரா கணவருடன் தாய்வீடு வந்தாள். மூவருக்கும் ஆறுதல் கூறினார்கள்.

சாதிக் முகமது தன் மைத்துனர்களைப்பார்த்து, "நான் வயதில் உங்களை விட வயதில் சிறியவன். நான் சொல்லப்போவதை யாரும் தவறாக எண்ண வேண்டாம்; சொல்லுவதை என்னுடைய கடமையாக எண்ணுகின்றேன். நீங்கள் மூவரும் பதவியைப் பயன்படுத்தி லஞ்சம் வாங்கியது, கலப்படம் செய்தது, நம்பியவர்களை ஏமாற்றியது எனப் பல குற்றங்களை செய்துள்ளீர்கள். இதற்கெல்லாம் காரணம் மார்க்கத்தைப்பற்றிய அறிவும் இறையச்சமும் இல்லாததுதான்."

"நபிகள் நாயகம் கூறுகிறார்கள்: லஞ்சம் கொடுப்பவன் மீதும் வாங்குபவன் மீதும் அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டும்.(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி), நூல்: இப்னுமாஜா).

ஒவ்வொரு முஃமீனுக்கும் புனித குர்ஆனையும் முகமதுநபி(ஸல்) அவர்களின் போதனையையும் படித்து பின்பற்றுவது, மார்க்க அறிவைப்பெறுவது கடமையாக்கப்பட்டுள்ளது.

"எவன் தூய்மையான அச்சமுடையவனாக இருக்கிறானோ அவன்தான் அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவன்" (அல் குர்ஆன் 49:13)

"பயபக்தி உடையவர்களுக்கு அருகில் சுவனபதி கொண்டு வரப்படும்; வழி தவறியவர்களுக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும்" (அல் குர்ஆன் 29:90-91)

முதலில் மைத்துனருடைய அறிவுரைகளை அலட்சியப்படுத்தியவர்கள், பின்னர் அவருடைய பேச்சையும் குர்ஆன் வசனத்தையும் கேட்க ஆரம்பித்தப்பிறகு உண்மையிலேயே இறையச்சத்திற்கு ஆளானார்கள்; முகம் வியர்த்தது.

சாதிக் முகமது மேலும் தொடர்ந்தான்... "உங்களின் தவறான போக்குக்குக் காரணம் நீங்கள் மட்டுமல்ல; சரியான பாதையைக் காட்டத்தவறிய பெரியவர்களும்தான்."

ஜாபர் அலி தன் குற்ற உணர்வால் தலை நிமிரவே இல்லே.

"மச்சான் எங்களின் இந்நிலைக்கு முழுக்காரணமும் நாங்கள்தான். எங்களின் தங்கையைப்போலவே எங்கள் மனைவிகள் இருந்து இருந்தால் கூட இந்நிலை வந்திருக்காது." என வருந்தினார்கள்.

"இனி ஒருவர் மேல் ஒருவர் பழி சொல்லிப் பயனில்லை. நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக அமையட்டும்."

"எங்களை அல்லாஹ் மன்னிப்பானா?" மூவரின் குரல்களும் தழுதழுத்தது.

"உங்கள் தவறுகளை எப்போது உணர்ந்தீர்களோ, அப்போதே அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான். இறையச்சம் உடையவர்களை அல்லாஹ் நேசிக்கிறான். கவலை வேண்டாம்."

மூவரின் இதயங்களின் இருள் திரை விலகி கரையைக்கடந்ததுப் போன்ற ஓர் தெளிவு பிறந்தது.

"முடிந்தவரை மூவரும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்வு காணுங்கள். தண்டனை காலம் முடிந்ததும் வேலைக்கு முயற்சி செய்கிறேன்." என்றான் சாதிக்.

"வேண்டாம் மச்சான். இனி எங்களுக்கு வேலைக்குப் போக விருப்பமில்லை. எங்களை நல்வழிப்படுத்தியதே போதும். இனி வாப்பாவுக்கு உதவியாக இருந்து, தீனுக்காக உழைக்கப்போகிறோம். எங்கள் ஊர் பள்ளிவாசலை பெரிதுபடுத்தி மார்க்கக்கல்வியை விரிவாக்குவோம். மறுமை வாழ்வுக்கு அமல்கள் செய்வோம்", மூவரும் மனநிறைவோடு கூறினார்கள்.

தன் பிள்ளைகளின் மாற்றங்களைக்கண்டு மகிழ்ந்த ஜாபர் அலி மருமகனின் கைகளை கண்களில் ஒற்றிக்கொண்டார். இதனைக் கண்ட ஷாகிராவின் கண்கள் பனித்தன. சாதிக் முகமதுவின் முகத்தில் நிறைவான புன்னகை தவழ்ந்தது.

"அனைத்திற்கும் ஆண்டவன் போதுமானவன்!"

"எவர்கள் நேர்வழியில் செல்லுகின்றார்களோ, அவர்களுடைய நேர் வழியை (இன்னும்)அதிகப்படுத்தி அவருக்கு தக்வாவை-பயபக்தியை(இறைவன்)அளிக்கிறான்". (அல் குர்ஆன் 47:17)

ஆக்கம்: ஆர். நூர்ஜஹான் ரஹீம் (கல்லை)


Source: satyamargam.com

Begin to "UNDERSTAND QURAN AND SALAH - The Easy Way" in Tamil @ Jeddah on 29.05.2009

Begin to "UNDERSTAND QURAN AND SALAH - The Easy Way" in Tamil @ Jeddah on 29.05.2009

அன்புச்சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஷா அல்லாஹ் வருகிற வெள்ளிக்கிழமை 29.05.2009 அஸர் தொழுகைக்குப்பின், ஸனாயியா தாஃவா அழைப்பகத்தில் (Jeddah, Industrial Area) ஆண்களுக்கென்று பிரத்யேகமாக குர்ஆன் மற்றும் தொழுகையை புரிந்துக்கொண்டு செயல்படுவது சம்பந்தமாக, தமிழில்

Begin to "UNDERSTAND QURAN AND SALAH - The Easy Way" in Tamil

சகோதரர். முகையதீன் கஜ்ஜாலி (ரியாத்)
அவர்களைக் கொண்டு நடக்க இருக்கின்றது.

இதற்கு தகுதி:
அரபியில் குர்ஆன் ஓத மற்றும் தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.

மூன்று மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் எட்டு பாடங்கள் கற்பிக்கப்படும் (through Powerpoint slides). ஒவ்வொரு பாடங்களும் சுமார் 20 நிமிடத்தில் முடியும்.

கீழே குறிப்பிட்டவைப் போன்று கற்பிக்கப்படும்:

1. ஸூரா அல்-பாத்திஹா, அல்-அஸர், மற்றும் அன்றாடம் தொழுகைக்கு பயன்படும் துஆக்கள் தமிழ் மொழிபெயர்ப்புடன் சொல்லிக் கொடுக்கப்படும்.
2. அரபு இலக்கணம் எளிய வழியில் (TPI - Total Physical Interaction method)
3. ஓதுவதை எப்படி எளிதாக ஞாபகத்தில் வைத்துக்கொள்வது.
4. 50 தடவை திருக்குர்ஆனில் திரும்ப திரும்ப வரும் 27,500 அரபி சொற்கள் அதன் தமிழ் மொழி ஆக்கத்துடன் கற்பது. இது தெரிந்தால் ஏறத்தாழ 35% சொற்கள் தெரிந்தது போல் ஆகும்.


நிகழ்ச்சியின் முடிவில் அனைவரும் குறைந்தது 50 வார்த்தைகளை கற்றுக்கொண்டதை உறுதி செய்ய கேள்வித்தாள்கள் கொடுத்து விடை கேட்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
சகோதரர். இப்ராஹிம் மௌலவி (0506625229)
சகோதரர். அப்துல் பத்தாஹ் (0508569066)
ஆகியோர்களில் ஒருவரை கைப்பேசியில் தொடர்புக் கொண்டு தங்கள் வருகையை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளவும்.

குறிப்பு: வருகிற அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்ஙனம்
இஸ்லாமிய அழைப்பகம்,
ஸனாயியா, ஜித்தா

Sunday, May 24, 2009

Muslim MPs in Indian Parliment

30, not 28 Muslims MP have won this Lok Sabha election
S.O. News Service, Saturday, 23 May 2009 - 17:12:09 IST
http://www.sahilonline.org/english/news.php?catID=nationalnews&nid=5459&viewed=0


New Delhi: The number of Muslim candidates who have been elected to the new Lok Sabha is now 30. According to the final result of successful Lok Sabha candidates, 30 among 543 members are Muslims.

In the early reports after the counting of votes, only 28 Muslims were shown winner. While Bahujan Samaj Party candidate Kaisar Jahan, who won Sitapur Lok Sabha constituency in Uttar Pradesh, was missing in early lists, the name of the newly elected Trinamool Congress candidate Kabir Suman seems to have confused many. Suman, a convert and practicing Muslim, has won Jadavpur Lok Sabha constituency in West Bengal. He got 5,40,667 votes and defeated CPM's Sujan Chakraborty by about 60 thousand votes.

Kabir Suman, a Kolkata-based modern Bengali singer-songwriter, guitarist, poet, journalist, TV presenter and occasional film actor, converted to Islam in 2000. Before being Kabir Suman, he was Suman Chattopadhaya. Jadavpur University graduate in English Literature as the major subject, Kabir Suman is married to Sabina Yasmin. His album of protest songs "Nandigram" in response to atrocities committed on the residents of the village is his latest work.

Against the 14th Lok Sabha which had 39 Muslim Members, this Lok Sabha will have 30. As for the representation of the Muslim community in the Lok Sabha is concerned, this is a far less number given the fact that the community (150 million) counts about 15% of the total population.

Partywise distribution of Muslim MPs in 15th Lok Sabha

Indian National Congress --- 11
National Conference --- 4
Bahujan Samaj Party --- 4
Trinamool Congress --- 3
Muslim League --- 2
Majlis Ittehadul Muslimeen --- 1
Assam United Democratic Front --- 1
Janata Dal United --- 1
Dravida Munnetra Kazhagam --- 1
Communist Party of Marxist --- 1
Bharatiya Janata Party --- 1

Full list of successful Muslim Lok Sabha candidates

1. Andhra Pradesh, Hyderabad, Asaduddin Owaisi All India Majlis-E-Ittehadul Muslimeen
2. Assam, Dhubri, Badruddin Ajmal, Assam United Democratic Front
3. Assam, Barpeta, Ismail Hussain, Indian National Congress
4. Bihar, Kishanganj, Mohammad Asrarul Haque, Indian National Congress
5. Bihar, Begusarai, Dr. Monazir Hassan, Janata Dal (United)
6. Bihar, Bhagalpur, Syed Shahnawaz Hussain, Bharatiya Janata Party
7. Jammu & Kashmir, Baramulla, Sharief Ud Din Shariq, Jammu & Kashmir National Conference
8. Jammu & Kashmir, Srinagar, Farooq Abdullah, Jammu & Kashmir National Conference
9. Jammu & Kashmir, Anantnag, Mirza Mehboob Beg, Jammu & Kashmir National Conference
10. Jammu & Kashmir, Ladakh, Hassan Khan, Independent
11. Kerala, Malappuram, E. Ahamed, Muslim League Kerala State Committee
12. Kerala, Ponnani, E.T. Muhammed Basheer, Muslim League Kerala State Committee
13. Kerala, Wayanad, M.I. Shanavas, Indian National Congress
14. Tamil Nadu, Vellore, Abdulrahman, Dravida Munnetra Kazhagam
15. Tamil Nadu, Theni, Aaron Rashid.J.M, Indian National Congress
16. Uttar Pradesh, Kairana, Tabassum Begum, Bahujan Samaj Party
17. Uttar Pradesh, Muzaffarnagar, Kadir Rana, Bahujan Samaj Party
18. Uttar Pradesh, Moradabad, Mohammed Azharuddin, Indian National Congress
19. Uttar Pradesh, Sambhal, Dr. Shafiqur Rahman Barq, Bahujan Samaj Party
20. Uttar Pradesh, Kheri, Zafar Ali Naqvi, Indian National Congress
21. Uttar Pradesh, Farrukhabad, Salman Khursheed, Indian National Congress
22. Uttar Pradesh, Sitapur, Kaisar Jahan, Bahujan Samaj Party
23. West Bengal, Maldaha Uttar, Mausam Noor, Indian National Congress
24. West Bengal, Maldaha Dakshin, Abu Hasem Khan Choudhury, Indian National Congress
25. West Bengal, Murshidabad, Abdul Mannan Hossain, Indian National Congress
26. West Bengal, Basirhat, Sk. Nurul Islam, All India Trinamool Congress
27. West Bengal, Uluberia, Sultan Ahmed, All India Trinamool Congress
28. West Bengal, Burdwan - Durgapur, Sk. Saidul Haque, Communist Party of India (Marxist)
29. West Bengal, Jadavpur, KABIR SUMAN, All India Trinamool Congress
30. Lakshadweep, Lakshadweep, Muhammed Hamdulla Sayeed A.B, Indian National Congress




Kerala 4 Wayanad M.I. Shanavas Indian National Congress
Kerala 6 Malappuram E. Ahamed Muslim League Kerala State Committee
Kerala 7 Ponnani E.T. Muhammed Basheer Muslim League Kerala State Committee
Tamil Nadu 8 Vellore Abdulrahman Dravida Munnetra Kazhagam
Tamil Nadu 33 Theni Aaron Rashid.J.M Indian National Congress
Andhra Pradesh 9 Hyderabad Asaduddin Owaisi All India Majlis-E-Ittehadul Muslimeen
Assam 4 Dhubri Badruddin Ajmal Assam United Democratic Front
Assam 6 Barpeta Ismail Hussain Indian National Congress
Bihar 10 Kishanganj Mohammad Asrarul Haque Indian National Congress
Bihar 14 Darbhanga Kirti Azad Bharatiya Janata Party
Bihar 24 Begusarai Dr. Monazir Hassan Janata Dal (United)
Bihar 26 Bhagalpur Syed Shahnawaz Hussain Bharatiya Janata Party
Jammu & Kashmir 1 Baramulla Sharief Ud Din Shariq Jammu & Kashmir National Conference
Jammu & Kashmir 2 Srinagar Farooq Abdullah Jammu & Kashmir National Conference
Jammu & Kashmir 3 Anantnag Mirza Mehboob Beg Jammu & Kashmir National Conference
Jammu & Kashmir 4 Ladakh Hassan Khan Independent
Maharashtra 21 Nashik Sameer Bhujbal Nationalist Congress Party
Uttar Pradesh 2 Kairana Tabassum Begum Bahujan Samaj Party
Uttar Pradesh 3 Muzaffarnagar Kadir Rana Bahujan Samaj Party
Uttar Pradesh 6 Moradabad Mohammed Azharuddin Indian National Congress
Uttar Pradesh 8 Sambhal Dr. Shafiqur Rahman Barq Bahujan Samaj Party
Uttar Pradesh 28 Kheri Zafar Ali Naqvi Indian National Congress
Uttar Pradesh 40 Farrukhabad Salman Khursheed Indian National Congress
West Bengal 7 Maldaha Uttar Mausam Noor Indian National Congress
West Bengal 8 Maldaha Dakshin Abu Hasem Khan Choudhury Indian National Congress
West Bengal 11 Murshidabad Abdul Mannan Hossain Indian National Congress
West Bengal 18 Basirhat Sk. Nurul Islam All India Trinamool Congress
West Bengal 26 Uluberia Sultan Ahmed All India Trinamool Congress
West Bengal 39 Burdwan - Durgapur Sk. Saidul Haque Communist Party of India (Marxist)
Lakshadweep 1 Lakshadweep
Muhammed Hamdulla Sayeed
A.B Indian National Congress
Lakshadweep 1 Lakshadweep
Muhammed Hamdulla Sayeed
A.B Indian National Congress