Thursday, July 9, 2009

நாள் ஒரு நூல்

நாள் ஒரு நூல்

தமிழம் வலையில் www.thamizham.net நாள் ஒரு நூல் பகுதியில் ஒவ்வொரு
நாளும் 3 க்குக் குறையாத நூல்கள்/இதழ்கள் வலை ஏற்றப்படுகின்றன.
கல்லாடம், சூடாமணி நிகண்டு, திராவிட நாடு மலர், காஞ்சி இதழ், என வலை ஏற்றப்படுபவை
படவடிவக் கோப்பாக ஏற்றப்படுகின்றன.

தமிழின் வரலாறு காட்டும் இத்தகைய
முயற்சியைக் கண்டு, நண்பர்களுக்கும் அறிமுகப் படுத்தவும்.
இதுவரை 715 வகையானவை வலை ஏற்றப்பட்டுள்ளன

இந்தக் கருத்தினை ஒவ்வொரு வாரமும் நூல்களைப் பார்த்து
உங்களுக்குத் தெரிந்த குழுமங்களுக் கெல்லாம் அனுப்பி வைக்கவும்
பலரும் பார்த்து மகிழட்டும்

www.newshunt.com

Try this "NEWSHUNT" software to view Indian regional languages, english newspapers in your mobile.

Link:
www.newshunt.com

த‌மிழில் டாக்ட‌ர் ஜாஹிர் நாய‌க்கின் உரைக‌ள்


த‌மிழில் டாக்ட‌ர் ஜாஹிர் நாய‌க்கின் உரைக‌ள்

பிர‌ப‌ல‌ இஸ்லாமிய‌ சொற்பொழிவாள‌ர் டாக்ட‌ர் ஜாஹிர் நாய‌க்கின் ஆங்கில‌ உரைக‌ளை த‌மிழில் விசிடியாக‌ கொண்டு வ‌ரும் ப‌ணியினை காய‌ல்ப‌ட்ட‌ண‌ம் இத்திஹாதுல் இஹ்வானில் முஸ்லிமின் ( ஐஐஎம் ) எனும் அமைப்பு மேற்கொண்டு வ‌ருகிற‌து.

இத்த‌க‌வ‌லை வ‌ளைகுடாவில் சுற்றுப்ப‌ய‌ண‌ம் மேற்கொண்டு வ‌ரும் முஹ‌ம்ம‌து த‌ம்பி தெரிவித்தார்

இதுவ‌ரை தீவிர‌வாத‌ம் முஸ்லிம்க‌ளின் த‌னி உடைமையா ? ம‌ற்றும் இந்து ச‌ம‌ய‌ப் பிர‌முக‌ர் ர‌விச‌ங்க‌ருட‌ன் டாக்ட‌ர் ஜாஹிர் நாய‌க் நிக‌ழ்த்திய‌ உரை ஆகிய‌ இரண்டு நிக‌ழ்வுக‌ள் த‌மிழில் வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

ஒரு விசிடியினை த‌மிழாக்க‌ம் செய்திட‌ சுமார் இர‌ண்டு இல‌ட்ச‌ம் ரூபாய் செல‌வு ஆவ‌தாக‌
முஹ‌ம்ம‌து த‌ம்பி தெரிவித்தார்.

இத்திஹாதுல் இஹ்வானில் முஸ்லிமின் அமைப்பின் த‌லைவ‌ராக‌ அபுல் ஹ‌ச‌ன் க‌லாமி ஹாஜியாரும், செய‌லாள‌ராக‌ ந‌வாஸ் உள்ளிட்ட‌ 12 பேர் கொண்ட‌ க‌மிட்டி உறுப்பின‌ர்க‌ள் இருந்து வ‌ருகின்ற‌ன‌ர்.

இத‌ன் சார்பில் ஆயிஷா சித்திக்கா பெண்க‌ள் அர‌பிக்க‌ல்லூரி ம‌ற்றும் பைத்துல்மால் உள்ளிட்ட‌வை ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌.

விசிடி த‌யாரிப்பில் உத‌விட‌ விரும்புவோர் அமீர‌க‌த்தில் தொட‌ர்பு கொள்ள‌
ஜ‌லாலுதீன் 050 614 2633

இந்தியாவில்

இத்திஹாதுல் இஹ்வானில் முஸ்லிமின் ( ஐஐஎம் )
141 கே.டி.எம். தெரு
காய‌ல்ப‌ட்ட‌ண‌ம் 628 204
தூத்துக்குடி மாவ‌ட்ட‌ம்
94 871 24246

Pls click below link and watch Translated Dr.Zakir Spean in Tamil

http://www.readislam.net/videoislam-zakirnaik.htm

Is terrorism a Muslims monopoly? by Dr.Zakir Naik in Tamil (தமிழில்)

Dr.Zakir Naik's dialogue with Sri Sri Ravi Sankar in Tamil (தமிழில்)

http://www.readislam.net/videoislam-zakirnaik.htm

Tuesday, July 7, 2009

அறிவியல் அதிசயம்

அறிவியல் அதிசயம்

(புத்தக மதிப்புரை - தினத்தந்தி நாளிதழ் 13-1-2009)

தினத்தந்தி இளைஞர் மலரில் தொடராக வெளிவந்த அறிவியல் அதிசயம் கட்டுரைகள் புத்தக வடிவில் வெளி வந்துள்ளது.

பொறியியல், மருத்துவம், விண்வெளி, ரோபட், தொழில் நுட்பம் என்று அனைத்து தரப்பு அறிவியல் கண்டு பிடிப்புகளும் ஆராய்ச்சி தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக விண்வெளியில் உள்ள கிரகங்களுக்கு லிப்ட் அமைக்கும் ஆராய்ச்சி மற்றும் மனிதர்களின் ஆயுளை நீட்டிக்கச் செய்யும் ஆராய்ச்சிகள் ஆச்சரியமூட்டும் தகவல்கள் ஆகும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த நூல் அமைந்திருப்பது சிறப்பு. அழகான அச்சும், நேர்த்-தி-யான வடிவமைப்பும் புத்தகத்தின் சிறப்பை மேம்படுத்துகின்றன. தமிழ்ப்புத்தக உலகுக்கு ஓர் அரிய புது வரவு.

(ஆசிரியர்: எம்.ஜே.எம்.இக்பால் வெளியீடு: பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை-108; பக்கம்: 440; விலை: ரூ.500)

Monday, July 6, 2009

உர்தூ மொழியின் பிறப்பும் சிறப்பும்

சென்னையில் இஸ்லாமிய இலக்கிய மாநில மாநாடு

சென்னையில் இஸ்லாமிய இலக்கிய மாநில மாநாடு
Sunday, 05 July 2009
சென்னை, இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் 9-வது மாநில மாநாடு வரும் டிசம்பர் மாதம் நடத்துவது என இக்கழகத்தின் பொதுக்குழு தீர்மானித்துள்ளது.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொதுக் குழு தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் பொதுச் செயலாளர் கேப்டன் அமீர் அலி பொருளாளர் எஸ்.எம்.இதயத்துல்லா தலைமையில் நடந்தது. இலக்கிய கழகத்தின் மாநாட்டை வரும் டிசம்பரம் மாதம் சோழிங்கநல்லலூரில் உள்ள சதக் கல்லூரியில் நடத்துவது எனவும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் இலக்கிய இஸ்லாமிய அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்றும் அதற்கான விரிவான சர்வதேச இலக்கிய கருத்தரங்க ஏற்பாடுகளை நிறைவற்ற பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

BUY LAND IN KODAIKANAL EARN RESIDUAL INCOME LIFE LONG

BUY LAND IN KODAIKANAL EARN RESIDUAL INCOME LIFE LONG

Dear Investors,




In Kodaikanal - Princes of hill stations of India - Buy 22 cents of land for Rs.3 lakhs and get Rs.30000/- annual returns from second year onwards life long. Assured property value appreciation too in long run. Avail one week free stay every year in our resort. Limited plots in phase-I. For bookings contact Ashfaq-0551986077, ashfaq106@gmail.com

If a corpus fund for the welfare of downtrodden Indian community is planned, we can contribute for the growth of such fund from our bio-organic venture " Bio-Network " for the benefit of our Indian community living in Saudi Arabia.

With best regards

Ashfaq Hussain
Mobile # 0551986077


Dear all,

It was 1997 when I lived in Jeddah, there was a introduction meeting arranged by Latif Real Estate (office in Chennai next to Motcham theatre) to convince us to buy their land. That time they brain-washed us by some beautiful photos & other materials. I am one of many, purchased two lands (2400sq each) near Tambaram (5km from Tambaram bustand, Mudichur road back side of Kishkinda) at Manimangalam for about 3lakhs. When I fully paid, they gave me the ownership deed in my name. Now it is 2009, I am in need of money for some family commitment, when I decided to dispose the land it was a big skock for me. Because the buyer asked for complete documents like Patta, layout, approval, deed document, copy of orginal ownership, etc... When I approached Latif Estates in Chennai office for asking them these documents, firstly they said my plot numbers are wrong so I have to pay the document fees to amend the plot number which was around INR40,000, then I did so. Still I asked for the above mentioned documents. Then they said, sell it to us we will pay you the same amount what I paid in 1997. Till date they did not issued the documents (God knows whether they have or not), and the value is also not that much realized because of the location.

Therefore, If anyone intend to purchase land in home country, please visit the area + check the current market value with the local brockers + check the area for its recent improvements and check all complete documents with the seller, etc., otherwise no guarantee for your money.

I just shared my experience as a well wisher through this group and It is not my intention against any one.

Thanks,
Jamal
jamalgafoor@hotmail.com

அமெரிக்காவில் ஜும்மா - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

அமெரிக்காவில் ஜும்மா - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
-------------------------------------------------------------------------------------

நான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போதும் என்னுள் எழுந்து நிற்கும் கேள்வி - ‘ஜும்மா’வுக்கு
எங்கே போவது ?. அமெரிக்கப் பயணமும் அதற்கு விதிவிலக்கல்ல.


நியூ யோர்க்கில் ஒரு பெரிய பள்ளி இருப்பதாகச் சொன்னார்கள். கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணிக்
கொண்டேன். நியூ யோர்க் என்பது மேன்ஹட்டன், ப்ரூக்ளின், குயீன்ஸ், ப்ரோங்க்ஸ், ஸ்டட்டென் தீவு என்ற
ஐந்து பெரும் பகுதிகளைக்கொண்ட ஒரு மா பெரும் நகரம்.


நான் தங்கி இருந்தது ஸ்டேட்டன் தீவில் திரு தேவகுமர் ராசையா - ஸ்வாதி சாந்த கௌரி தம்பதியர் வீட்டில். !
ஸ்வாதி சொன்னார்: “ ஐயா, இங்கே நான் வழமையாக எங்கள் ஊர் சாமான்கள் வாங்கும் ஒரு கடைக்கு எதிரில் அல்பேனிய கலாச்சார மையம் என்ற ஒன்றிருக்கிறது அவர்களைக் கேட்டால் தெரியும்” என்றார்.


நண்பகல் 12 மணிக்கே சொன்ன இடத்துக்கு கார் மூலம் அனுப்பி வைத்தார். ஒரு இஸ்லாமிய கலாச்சார
மையம், ஓர் உயர்தரக் கல்வி நிலையம், ஒரு விசாலமான பள்ளி, ஏராளமான வாகனம்க்கள் நிறுத்த இடம்
என்று ஒரு பெரிய வளாகமே இருந்தது.


முனைவர் பட்டம் பெற்ற ஃபரீத் பர்தோலி தான் அந்த மையத்தின் செயலர் மற்றும் பள்ளியின் பேஷ் இமாம்.
பன்னிரண்டரை மணிக்கு எல்லோரும் ஒருங்கிணைந்து, உரத்த குரலில் யாசீன் ஓதினார்கள். பிறகு அதான்.
சுன்னத் தொழுகை. பிறகும் அதான். அதையடுத்து ஜும்மா பிரசங்கம் - அபேனிய மொழியில். பிறகு அவரே
தொடர்ந்தார் - ஆங்கில மொழியில்...!


“அக்கிரமங்களை எதிர்க்கும் கடமை இன்ன இனத்தாருக்கு - மதத்தாருக்கு என்றில்லை. மனிதராகப் பிறந்த
ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. ‘ஜிஹாத்’ என்பது அநியாயங்களுக்கு எதிரான போராட்டமே தவிர
அக்கிரமங்களுக்கு ஆதரவான கூக்குரல் அல்ல.” அழகான கருத்துக்கள். ஆணித்தரமான வாதம். Dr. ஸாக்கிர்
நாயக்கின் சாயல் தெரிந்தது. நம்மவர்களும் இதைப் பின் பற்றினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.


வழமையாக மதிய உணவு அல்லது மென் பதார்த்தங்கள் வழங்கப்படும் என்றார்கள். ஆனால் அன்றில்லை.
அதற்கு, அடுத்த வாரம் பள்ளிக்கூட பட்டமளிப்பு விழா நடைபெற விருப்பதால் தடபுடலான விருந்துக்கு
ஏற்பாடாகியுள்ளதாகச் சொன்னார்கள். (நம்ம அதிர்ஷ்டம் அப்படி !!!). அமெரிக்காவில்., ஏன் துபையிலும்
கூட, முதல் வகுப்பிலிருந்து இரண்டாம் வகுப்புக்குப் போவதையும் ஒரு பட்டமளிப்பு விழா நடத்தி
கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள்.


மக்காவுக்குப் பிறகு பள்ளியில் அதிகம் அதிகமான வெளிநாட்டவர்களைச் சந்தித்தது லண்டனில்..! பிறகு
இதோ இங்கே..!! ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம் - சுவையான அனுபவம். அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, July 5, 2009

இரவு எட்டே முக்காலுக்கு மஃரிப் தொழுகை...! - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

இரவு எட்டே முக்காலுக்கு ம்ஃரிப் தொழுகை...! - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளிகிழமை மாலை நியூ யோர்க்கிலிருந்து விமானத்தில் சின்சினாட்டி புறப்பட்டேன். அந்த நள்ளிரவில்
வேந்தன் ஐயா எனக்காக விமான நிலையத்தில் காத்திருந்தார். மறுநாள் காலை அவரே பத்து மணி நேரம்
காரை ஓட்டி நயாகரா நீர் வீழ்ச்சிக்கு என்னை அழைத்துச் சென்றார். நயாகரா மறக்க முடியாத அனுபவம்.
அதைவிட வேந்தன் ஐயாவின் அன்பு.

மறுநாள் இரவு சின்சினாட்டி திரும்பி, திங்கள் முற்பகல் இந்தியானாபொலிஸ் வரை வந்து என் உறவினர்
ஃபைசல் வசிக்கும் ஸ்ப்ரிங்ஃபீல்டுக்கு பேருந்து ஏற்றி விட்டார். இரவு எட்டரை மணிக்கு அங்கு சென்றடைந்தேன். வரவெற்ற ஃபைசல் போகும் வழியில்தான் பள்ளி தொழுதுவிட்டுப் போய் விடலாம் என்றார்.

விசாலமான் ஒரு வளாகத்தில் அழகான பள்ளி. புதியவர்கள் யாரும் எளிதில் உள் நுழைந்து விட முடியாது.
குறிப்பிட்ட ச்ங்கேத எண்ணை அழுத்தினால்தான் கதவே திறக்கும். ஃபைசல் அங்கு உறுப்பினர். ஆகவே
எந்தச்சிரமமும் எனக்கு இருக்கவில்லை.

உள்ளெ நுழைந்தபோது தொழுகை ஆரம்பமாகவிருந்தது. இரவுத் தொழுகைக்கான சங்கல்பத்தைச் செய்து
கொண்டு தொழ ஆரம்பித்தேன். பிறகுதான் அது சாயுங்காலத் தொழுகை என்று தெரிய வந்தது. ஆக, மீண்டும்
ஒரு முறை சாயுங்காலத் தொழுகை, இரவுத் தொழுகை, பள்ளிக்கான காணிக்கைத் தொழுகை ஆகியவற்றை
நிறைவேற்றி முடித்தேன்.

அந்தப் பள்ளியில் அதிகாலைத் தொழுகை, மதியத் தொழுகை, மாலைத் தொழுகை எல்லாம் நம்மூர்
போலவே உரிய காலங்களில் நடைபெறுகின்றன. சாயுங்காலத் தொழுகை மட்டும், சூரியன் 8.40 க்கு
அஸ்தமிப்பதால் 8.45 க்கு நடைபெறுகிறது. இரவுத் தொழுகை பத்துமணிக்குப் பிறகு நடைபெறுகிறது.

ஃபைசல் வீட்டுக்கும் பள்ளிக்கும் ஐந்து மைல்கள்.(அமெரிக்காவில் இன்னும் மைல் கணக்குத்தான்...!)
பக்கத்து வீட்டில் ஹைதராபாதைச் செர்ந்த நண்பர் இம்ரான். இருவரும் மாலை அலுவல் முடிந்து வீடு
வருகிறார்கள். பிறகு இருவரும் சேர்ந்தே காரில் பள்ளி செல்கிறார்கள். சாயுங்காலத் தொழுகைக்குப்பிறகு
கடைகளுக்குச் சென்று தேவைப்பட்ட சாமான்களை வாங்கி விட்டு இரவுத் தொழுகையையும் முடித்து
விட்டு வீடு வருவதை வழமையாகக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்களுக்கெனெ தனிப்பகுதி இருப்பதால் பலர் குடும்பத்துடனேயே வருகிறார்கள். நேரத்தைக் கணக்குப்
பார்த்து ஓடிக்கொண்டே இருக்கும் அந்த மக்களுக்கு இந்த ஒன்று கூடலும் சந்திப்பும் ஒரு மிகப் பெரிய
ஆறுதல். அத்துடன் தொழுகையும் நிறைவேறி விடுகிறது.

__._,_.___

Thursday, July 2, 2009

துபாயில் அறந்தாங்கி இஸ்லாமிய சமுக நல அமைப்பின் ஆறாம் ஆண்டு துவக்க விழா

துபாயில் அறந்தாங்கி இஸ்லாமிய சமுக நல அமைப்பின் ஆறாம் ஆண்டு துவக்க விழா

துபாயில் அறந்தாங்கி இஸ்லாமிய சமுக நல அமைப்பின் ஆறாம் ஆண்டு துவக்க விழா கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை துபை தேரா அல் முதினாவில் உள்ள அஸ்கான் D பிளாக்கில் நடைபெற்றது.
அற‌ந்தாங்கி இஸ்லாமிய‌ ச‌மூக‌ ந‌ல‌ அமைப்பின் தலைவர் ஜனாப் முஹ‌ம்ம‌து சாலிஹ் தலைமை வ‌கித்தார். முன்ன‌தாக‌ முஹ‌ம்ம‌து சாலிஹ் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார்.

ஜனாப் எம். சைய‌து அபூதாகிர் வரவேற்புரை நல்கினார். ஜனாப் பைசல் அஹ்ம‌த் அமைப்பின் செயல்பாட்டினை தொகுத்து வழங்கினார்.

கீழக்கரை ஜமாஅத் நிர்வாகி ஜனாப் ஹமீத் யாஸீன்,ஐக்கிய‌ முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செய‌லாள‌ர் ஜனாப் கே. முஹ‌ம்ம‌து ஹிதாயத்துல்லா ஆகியோர் வாழ்த்துரை வ‌ழ‌ங்கின‌ர்.

திருக்குர்ஆன் ஆய்வாள‌ர் ஜனாப் காஞ்சி அப்துல் ர‌வூப் பாக்கவி அவ‌ர்க‌ள் த‌ன‌து சிற‌ப்புரையில் இஸ்லாமிய‌ வ‌ங்கி முறையினைப் பின்ப‌ற்றி க‌ட‌ன் உள்ளிட்ட‌வ‌ற்றை மேற்கொண்டு வ‌ருவ‌த‌ற்கு பாராட்டு தெரிவித்தார். இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் மாநில‌ப் பேச்சாள‌ர் ம‌வ்ல‌வி ஜஹாங்கீகீர் அரூஸி அவ‌ர்க‌ள் த‌ன‌து சிற‌ப்புரையில் பொதுந‌ல‌நோக்குட‌ன் செய‌லாற்றி வ‌ரும் அற‌ந்தாங்கி இஸ்லாமிய‌ ச‌மூக‌ ந‌ல‌ இய‌க்க‌த்தின‌ரைப் பாராட்டினார்.

அமைப்பின் பொருளாளர் ஜ‌னாப் அபூதாகிர் தொகுத்து வழங்க, ஜனாப் கலந்தர் மைதீன் நன்றி உரை வழங்க, விழா இனிதே முடிவடைந்தது


Warm Regards,

FAISAL AHMAD.S.A
M/S SHAHEEN EXCHANGE LLC,
UNITED ARAB EMIRATES,
DUBAI, DEIRA, NAIF ROAD,
POST BOX NO. 28478,
TEL NO. 9714 2266488,
MOB NO. 97150 6579841,
Alternate Email. fasa@india.com

லால்பேட்டை எக்ஸ்பிரஸ்

லால்பேட்டை நண்பர்கள்அனைவர்களுக்கும்

அஸ்ஸலாமுஅழைக்கும்

http://lalpetexpress.blogspot.com/

லால்பேட்டை எக்ஸ்பிரஸ் என்னும் புதிய வலைபூவில் லால்பேட்டைசெய்திகள் மற்றும் அரசியல்செய்திகள் அனைத்தும் காணலாம். நீங்கள் நமதுநகரில் நடைபெறும் அனைத்து நீகழ்ச்சிகளையும் எனது lalpetexpress@gmail.com இ மெயில் முகவரிஇல் தெரியபடுத்தவும்.

பிளாஸ்டிக் எமன் - உண்மைகள்

பிளாஸ்டிக் எமன் - உண்மைகள்
ஆதி
- ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.

- கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே

- தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.

நாம் அனைவரும் கவனக்குறைவாக வெளியேற்றும் கீழ்க்காணும் கழிவுகள்தான் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகளில் 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.

- கேரி பேக்குகள்
- காய்கறி கேரி பேக்குகள்
- மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்
- பேக்கேஜிங் பைகள், சுருள்கள்
- வீட்டு குப்பை பைகள்
- வணிக குப்பை பைகள்
- தொழிற்சாலை லைனர்கள்
- மருத்துவ, ஹோட்டல் குப்பை பைகள்

மக்கிப் போவதற்கு ஆகும் காலம்

பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்

வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்
பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்
காகிதம் - 2-5 மாதங்கள்
கயிறு - 3-14 மாதங்கள்
ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்
உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்
டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்
தோல் காலணி - 25-40 ஆண்டுகள்
நைலான் துணி - 30-40 ஆண்டுகள்
தகர கேன் - 50-100 ஆண்டுகள்
அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்
பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்
டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்

பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது

எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா?

துபாயில் கீழ‌க்க‌ரை தெற்குத்தெரு ஜ‌மாஅத் ஒருங்கிணைப்புக் கூட்ட‌ம்

துபாயில் கீழ‌க்க‌ரை தெற்குத்தெரு ஜ‌மாஅத் ஒருங்கிணைப்புக் கூட்ட‌ம்

துபாய் : துபாயில் கீழ‌க்க‌ரை தெற்குத்தெரு ஜ‌மாஅத்தின‌ரை ஒருங்கிணைக்கும் வ‌கையில் கூட்ட‌ம் ஒன்றிற்கு வெள்ளிக்கிழ‌மை ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

கீழ‌க்க‌ரை தெற்குத்தெரு ஜ‌மாஅத் ஒருங்கிணைப்புக் கூட்ட‌ம் 03 ஜுலை 2009 வெள்ளிக்கிழ‌மை மாலை 5.30 ம‌ணிக்கு அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இக்கூட்ட‌த்தில் கீழ‌க்க‌ரை தெற்குத்தெருவைச் சேர்ந்த‌ அனைவ‌ருக் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ இந்நிக‌ழ்வின் ஒருங்கிணைப்பாள‌ர் ஏ. ஹ‌மீது யாசின் 050 2533 712 கேட்டுக் கொண்டுள்ளார்.

Sunday, June 28, 2009

Eight ways to befriend journalists via e-mail

Eight ways to befriend journalists via e-mail
By: Christine Kent
How to approach and build reporter relationships, one e-mail message at a time

Back when PR pros schmoozed with journalists at a local bar, or bumped into them at events around town, it was a lot easier to make connections and start lobbing a few pitches their way. Now, years after e-mail took over our lives, PR people have to rely on an impersonal and easily disposable method of communication to make these crucial connections.

Since e-mail is what we're stuck with, how can you engage a media contact in few words, and without the force of your personal charm? PR pros say that getting too chummy in an e-mail—especially a message to a journalist you've never met—usually has the opposite effect (i.e., you sound a bit like a stalker). And a too-formal tone comes off as extra-stiff in an e-mail.
Here's some guidance on hitting the right note in those first-approach e-mails.

1. Show you're a fan. "I can't think of a more simple, intuitive or appropriate approach to building relationships with journalists and editors via e-mail than actually reading their content, and then commenting to them via e-mail," says David Muise, vice president of PR at Full Spectrum Media in Fort Lauderdale, Fla.
"It's a great introduction, requires no fluff and shows that you are practicing due diligence. It also shows that you are an active player in the story, and that you're not just sending materials blindly when you need something."

2. Give it the personal touch. Along those same lines, Kevin Aschenbrenner, senior account supervisor/PR for Jaffe Associates in Victoria, Canada, says to use names in your e-mail pitch, and not just the ones you get from a mail merge. "Even if you're working off of a huge media list, start it with their name," says Aschenbrenner. "I actually think it's better to use Outlook and not some mail merge program because, wearing my other hat as the editor of the Jaffe Legal News Service, I've seen e-mail pitches that are so obviously mail merges it's painful."

3. Spell-check makes perfect. Christine Hohlbaum, a Munich, Germany-based PR consultant for U.S.-based Wasabi Publicity, relies heavily on e-mail relationships given the distance between her and her media contacts.
She says that a polished message is key to making a good first impression. "I avoid typos," says Hohlbaum. "Using improper grammar and spelling in an e-mail is like stuttering."

4. Just the facts, ma'am. "E-mailing press isn't writing a love letter," says David Libby, principal of Libby Communications in Oakland, Calif. "It's akin to a job application.
The information should be factual, pertinent to the reporter's audience, quick to the point and mirror the reporter's style. If the information in an e-mail, to a reporter, carries these qualities, consistently, e-mail after e-mail, then the reporter will develop trust for the PR person and might respond."

5. E-mail to help out, not just to pitch. Dylan Powell, a PR writer at Houston's Origin Design, practices the "three to one" rule. He contacts journalists three times with helpful background info or comments before sending them one pitch.

6. The need for speed. "If a PR representative replies to journalists' questions with lightning speed, it automatically shows diligence and a commitment to assist," says Matthew Zintel, managing director of Zintel PR in Los Angeles. "That goes a long way in forming a relationship outside of e-mail. I can't tell you how many times an editor or writer has thanked us for quickly answering e-mail questions just minutes after receiving them, no matter the time."

7. Chill out. "Relax your tone," advises Kevin Quartz, PR director at Harrisburg, Pa., ad agency Pavone.
"Many pitches sound too polished, like every word has been agonized over and scrutinized by a team of writers, because they often have. The most effective and personal e-mail communications read like conversations between two friends—as if you wrote the e-mail just for them."

Kacie Main, an account executive at O'Connell & Goldberg PR in Hollywood, Fla., says she imagines she's chatting up a media contact over the phone.

"I think as PR professionals we get into our 'writing modes' and write e-mails as if we're drafting an overall PR plan we are going to send to the CEO of a major company," Main says. "In order to build relationships through e-mail, you have to write them as if you're on the phone. You would never call someone and immediately jump into your pitch. You would say 'hi, how are you?' And when hanging up, you wouldn't say 'best regards,' you would say 'thanks' or 'talk to you soon.'"

But don't get too friendly: "Don't act like someone's best friend in the first e-mail," says Karen Campbell, senior public relations manager for Zondervan, a publisher based in Grand Rapids. Kevin Quartz agrees: "Keep it professional. There's a fine line between conversational and awkwardly personal. Don't ask how their family is doing if you've never met them."

Think hard about that subject line: "You need to make your subject lines count," says Aschenbrenner. "'New Partners Join Firm' is something I see a lot. They don't even put the firm name in the subject. I try to write subjects like headlines. You want to snag a reporter so they open the e-mail, or at least read the first few sentences in the preview pane."

8. The five-second scan. Elizabeth Robinson, president of Volume PR in Centennial, Colo., got a grateful response to a short-and-sweet pitch she sent to a Fortune Small Business reporter who liked the fact that she didn't waste his time. "This is not an age where people curl up with a cup of a coffee to read e-mails," says Robinson. "We scan everything."

Robinson gives her pitches the "five-second scan test" to see if they're succinct and short enough to be digested in just a few seconds. "Set a timer, and see if the pitch entices you to read on," she suggests.
In her pitch to Fortune Small Business, she reduced the news to a few bullet points. The editor contacted her within three minutes, telling her that he was thankful he "didn't have to unpack paragraphs of text."

Kevin Quartz also likes the bulleted approach. "We've moved away from the 'pitch and attached release' format towards a series of easily digestible bullets of information incorporated into the body of the e-mail," he says. "This makes the entire e-mail look like the information is being delivered directly to the recipient."

Aschenbrenner also believes in the Gospel of Keeping it Short.

"When it comes to the body of the e-mail, the way you're going to let a reporter know that they're dealing with a flack who will be an asset and not a pest is to keep it short, and to the point," he explains. "I write out all my pitches ahead of time and make sure that they are no longer than five to seven sentences. That ensures they don't run beyond the first part of an e-mail. Reporters don't scroll."

--
Thanks & Regards

Poornima B iyer
Public Relations Consultant
Mobile: +91-9820682391
Email: godessofpr@gmail.com
godessofpr@yahoo.com

செய்திகளைப் படிக்க மொபைல் போன் சாஃப்ட்வேர்

செய்திகளைப் படிக்க மொபைல் போன் சாஃப்ட்வேர்


மொபைல் போனில் செய்தித் தாள்களைப் படிப்பதற்கான புதிய சாஃப்ட்வேரை எடெர்னோ இன்ஃபோடெக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சாஃப்ட்வேர் நியூஸ்ஹன்ட் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி செய்தி பத்திரிகைகளை மொபைல் போனில் படிக்க முடியும்.

மொபைல் போன் ஜிபிஆர்எஸ் திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.
பிராந்திய மொழிக்கான ஃபான்ட் வாடிக்கையாளரின் மொபைல் போனில் இல்லையென்றாலும் 'நியூஸ் ஹன்ட்' சாஃப்ட்வேர் அதைச் செயல்படுத்தும்.
எனவே சிரமம் இன்றி பிராந்திய மொழி செய்திகளையும் படிக்கலாம்.
தற்போது இந்த சாஃப்ட்வேர் மூலம் 15 ஆங்கில மற்றும் பிராந்திய மொழி செய்தித்தாள்களை படிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியைப் பெற விரும்புவோர் அதற்கான சாஃப்ட்வேரை இலவசமாகப் பெறலாம்.
இதை எஸ்எம்எஸ் மூலம் அனுப்பியும் பெறலாம். ‘hunt’ என டைப் செய்து 57333 என்ற எண்ணுக்கு அனுப்பினால் இதற்கான சாஃப்ட்வேரைப் பெறலாம்.
அல்லது http://newshunt.com என்ற இணையதளத்திலிருந்தும் பெறலாம்.

மேலதிக செய்திகளுக்கு: www.mypno.com

ஆங்கிலம் தெரிந்தால் போதும் தமிழில் டைப் செய்யலாம்!

ஆங்கிலம் தெரிந்தால் போதும் தமிழில் டைப் செய்யலாம்!

வாசகர்களே!

இப்போது நமக்கு வந்து கொண்டிருக்கும் இமெயில்களில் பல மெயில்கள் தமிழிலேயே வருவதைக் கண்டிருப்பீர்கள். நம்மால் தமிழில் டைப் செய்ய முடியவில்லையேவென உங்களுக்கும் கவலையாகவிருக்கலாம். இதோ உங்களுக்காக நமது வி களத்தூர்.காம் ( www.vkalathur.com ) வலைதளத்தில், ஆங்கிலத்தில் டைப் செய்தாலே தமிழில் எழுத்துக்கள் வருமாறு அமைத்துள்ளோம். உதாரணத்திற்கு ‘amma’ என ஆங்கிலத்தில் டைப் செய்தால், தானாகவே தமிழில் ‘அம்மா’ என்று எழுதிவிடும். நீங்கள் நினைப்பதை, நமது தாய்மொழியிலேயே எழுதி உங்கள் நண்பர்களுக்கு அனுப்பலாம்.
எழுதியதைக் காப்பியெடுத்து உங்கள் இமெயிலில் பேஸ்ட் செய்ய வேண்டும்.

http://www.vkalathur.com/pad.php

Friday, June 26, 2009

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்..

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

பி.எஸ். அப்துல் ரஹ்மான் ஜக்காத் ஃபண்ட் பவுண்டேஷன்

கல்வி உதவித்தொகை பெற‌ உத‌வும் முகவ‌ரிக‌ள்


பி.எஸ். அப்துல் ரஹ்மான் ஜக்காத் ஃபண்ட் பவுண்டேஷன்

நோக்கம் : சிறந்த மதிப்பெண் பெற்று, ஜகாத் பெறக்கூடிய குடும்ப சூழலில் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்

தகுதி : நடந்து முடிந்துள்ள இறுதித் தேர்வில் குறைந்தது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பெற்றோர்களின் குறைந்த வருமானம் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களாய் இருத்தல் வேண்டும்.

விதிமுறைகள் :

ஜகாத் தொகை பெறுவதற்கு தகுதியுடைவர்களாக இருத்தல்

படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேர்வில் தவறினால் உதவித் தொகை நிறுத்தப்படும்.

படிப்பு முடியும் வரை ஒவ்வொரு வருடமும் மதிப்பெண் பட்டியலை சமர்பித்தல் வேண்டும்.
படிக்கின்ற போதும், படிப்பிற்கு பிறகும் ஒழுக்க நடைமுறைகளை / இஸ்லாமிய நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.

விண்ணப்பங்கள் பெற மதிப்பெண் விவரத்துடன் கோரிக்கை மனு அனுப்பவும்.
அல்லது

விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட இணையத்தளத்தில் இருந்தும் பெறலாம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ண்ப்பங்கள் வந்து சேர கடைசி நாள்
செப்டம்பர் 30, 2009 ( முதலாம் ஆண்டு ம‌ருத்துவ‌ம் ம‌ற்றும் பொறியிய‌ல் படிப்புகள் )
ஜுலை 31,2009 ( ம‌ற்ற‌ படிப்புகள் )

CONTACT
B.S. ABDUR RAHMAN ZAKAAT FUND FOUNDATION
BUHARI BUILDING
NO 4 MOORES ROAD
CHENNAI 600 006
PHONE : 044 4226 1100
FAX : 044 2823 1950
E mail : admin©bsazakaat.org
bsazakaat©gmail.com
www.bsazakaat.org

Tuesday, June 23, 2009

பெற்றோர்கள் சிந்தனைக்கு … சில துளிகள் !

பெற்றோர்கள் சிந்தனைக்கு … சில துளிகள் !

வழக்கறிஞர் உதுமான் மைதீன்

கல்வி

கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமும் கல்வி கற்பது ஆண் – பெண் ஆகிய இருபாலருக்கும் கட்டாயக் கடமை என்கிறது. தற்போது கல்வியைக் காசு கொடுத்து வாங்கக் கூடிய அளவில் ஒவ்வொரு கல்விக்குமென தனித் தனியான மதிப்பீடுகளை அரசாங்கமும் நிர்ணயித்துள்ளது. அது போன்றே காசுக்காக பட்டங்கள் வழங்கவும் பல்வேறு பல்கலைக்கழகங்களும் தோன்றியுள்ளன. இவ்வாறு அரசும், தனியார் நிறுவனங்களும் கல்வியைத் தாராளமயமாக்கி விட்டதால் கற்றவர்களின் எண்ணிக்கையும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன.

யார் மீது குற்றம்?

கல்லாதவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றும், கல்வி மனிதனை மேம்படுத்தும் என்றும் காலம்காலமாய்ச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் கற்றவர்கள் நிரம்பி விட்ட இக்காலத்தில் கற்காலத்தை விடவும் தீமைகள் பெருகிக் கொண்டல்லவா இருக்கின்றன.
மது – போதை போன்றவை அதிகரித்து, இலஞ்சம், வழிப்பறி, வன்முறை, கலப்படம், கொலை – கொள்ளை- ஆபாசம் ஆகிய கொடுமைகள் அதிகரித்துக் கொண்டல்லவா இருக்கின்றன. அதிலும் இது போன்ற செயல்களில் கற்றவர்களும் அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்பதுதான் உச்சக்கட்ட வேதனை. கல்வி ஏன் மனிதனை நல்வழிப்படுத்தவில்லை என்ற எண்ணமும் நம் நெஞ்சங்களில் எழுகின்றது.

இது கல்வியின் மேலுள்ள குற்றமா?

கல்வி கற்றவர்கள் மேலுள்ள குற்றமா?

கற்பித்தவர்கள் மீதுள்ள குற்றமா?

என்பது பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாய காலகட்டத்தில் உள்ளோம்.



அக்கால கல்விமுறை

நமது நாட்டை எடுத்துக் கொண்டால் அக்கால குருகுலக் கல்விமுறை உயர்குல மக்களை மட்டுமாவது நல்வழிப் படுத்த உதவியது எனலாம். ஒரு குருவை – ஆசிரியரைத் தங்களது வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு அவரிடம் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரும் குருவையே தங்கள் முன் மாதிரியாக கொள்வார்கள். படிப்புடன் பல்வேறு கலைகளையும் – வாழ்க்கை நுணுக்கங்களையும் கற்றார்கள். அடுத்து முகலாய ஆட்சியின் போது ‘மத்ரஸா’ கல்விமுறை பின்பற்றப்பட்டது. இதில் எல்லா மாணவர்களும் கல்வி கற்க முடிந்தது. இதிலும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் – (உஸ்தாது) நன்னெறி மிக்கவராகவே இருப்பதால் அவரிடம் கல்வி கற்கும் மாணவர்களும் அவரையே தங்கள் முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் பழக்கவழக்கங்களையும் அமைத்துக் கொண்டார்கள். மத்ரஸாக்களில் கணிதம், விஞ்ஞானம், மருத்துவம், புவியியல், வானவியல் மற்றும் தர்க்கவியல் போன்ற பாடங்களும் கற்பிக்கப்பட்டு வந்தன.

மெக்காலேயின் கல்வி

மேற்சொன்ன இரு காலகட்டங்களிலும் கற்றவர்களில் மிகப் பெரும்பான்மையோர் நன்னெறி மிக்கவர்களாகவே இருந்தனர். ஆனால் ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட போது அடிமைகளுக்கென ஒரு கல்வித்திட்டம் அப்போதைய லார்ட் மெக்காலேயால் உருவாக்கப்பட்டது. ஆனால் நம்நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும் அக்கால – மெக்காலேயின் கல்வித்திட்டத்தைத்தான் நாமும் பின்பற்றினோம். இந்தக் கல்வித்திட்டத்தில் மனித நன்னெறிகளுக்கான எத்தகைய வழிகாட்டல்களும் இல்லை. மனிதன் யார்? அவன் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளான்? அவன் மரணத்திற்குப் பின் எங்கு செல்வான்? இவ்வுலகில் மனிதன் செய்ய வேண்டிய நற்கருமங்கள் என்னென்ன? போன்ற எந்த நல் வழிகாட்டல்களும் இல்லை. மனித வளத்தின் மேம்பாடு பற்றி சிந்திக்கவேயில்லை. வெறும் கல்வியுடன் மட்டும் தனது கடமையை அந்தக் கல்வித்திட்டம் நிறுத்திக் கொண்டதால் மாணவர்களின் குணநல மாண்புகள் படிப் படியாக தரம் இறங்கி ஒருகால கட்டத்தில் ’கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என்ற அளவில் தங்கள் மனம் போன போக்கில் மாணவர்கள் நடக்க முற்பட்டு விட்டனர். மேற்கத்திய பண்பாட்டுச் சீரழிவுகளிலும் சிக்க ஆரம்பித்து விட்டனர். ஒரு நாட்டின் மிகச்சிறந்த மனித வளமாக முதுகெலும்பாக இருக்க வேண்டிய இளைய சமுதாயம் எவ்வித நெறிமுறைகளுக்கும் மதபோதனைகளுக்கும் கட்டுப் படாமல் தன்னிச்சையாக மனம் போன போக்கில் வரம்பற்ற சுதந்திரமாகத் திரிய ஆரம்பித்து விட்டதன் விளைவுகளைத் தான் தற்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். கல்வி அவர்களுக்குத் தேவையான நேரத்தில் கடிவாளமிட்டு அவர்களை நேர்வழியில் செலுத்தத் தவறியதால் தறிகெட்டுப் பாயும் காளைகளைப் போல் இளைய சமுதாயம் சீர்கேடு களில் சிக்கித் தவிக்க ஆரம்பித்து விட்டது.


நெறிகெட்ட கல்வியின் விளைவுகள்

இதன் விளைவாகத்தான் நம் நாட்டிலும் டிஸ்கோத்தே, காபரே கிளப்புகள், சூதாட்ட விடுதிகள், ஆபாச அரங்குகள், வன்முறை, மனிதநேயமற்ற செயல்முறைகள், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் முறைகள், கந்து வட்டிக் கடைகள், மது அடிமைகளை உருவாக்கும் மதுபான பார்கள், கஞ்சா – அபின் – ஹெராயின் போன்ற போதை வகைகள், கொலை செய்யும் கூலிப்படைகள், திருடர்கள், கொள்ளையர் களின் சாம்ராஜ்யங்கள், கள்ள நோட்டுக் கும்பல்கள், வெடிகுண்டு கலாச்சாரங்கள் ஆகியன படிப்படியாகப் பெருக ஆரம்பித்தன. இவற்றை பெரிய திரைகளிலும், சின்னத்திரை களிலும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி பட்டி – தொட்டி களிலுள்ள பாமர மக்களுக்கும் இந்தத் தீமைகளைக் கொண்டு சேர்ந்த பெருமை நிச்சயமாக திரைப் படங்களையும் தொலைக்காட்சிகளையும் தான் சேரும்


இளைய சமுதாயம்

தீமைகளை மட்டும் சொல்லி விட்டு தீர்வைச் சொல்லா விட்டால் பயனேதும் இல்லை. இவற்றிலிருந்து மீள்வதற்கான தீர்வுதான் என்ன? சென்று விட்ட சமுதாயத்தைப் பற்றி சிந்தித்துப் பயன் இல்லை. இப்போது இருக்கின்ற சமுதாயத்தை நெறிமுறைப்படுத்த நாட்கள் பல ஆகலாம். அல்லது நாம் நினைப்பது போல் நடக்காமலும் போகலாம். ஆனால் இனி வரும் இளைய சமுதாயத்தை – வருங்கால சமுதாயத்தை வார்த்தெடுக்கின்ற பணிகளை நாம் மேற்கொண்டால் நிச்சயமாக அதுவே நமக்கு மிகவும் நன்மை பயப்பதாக அமையும்.

தீர்வு என்ன?

தற்போது நம்மில் பலரும் நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் போது அவர்களை என்ன படிக்க வைக்கலாம்? அதற்கென எந்தக் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யலாம்? என்பதை மட்டும்தான் எண்ணுகிறோம். ஆனால் எந்தக்கல்வி நிலையம் என்பதைத் தேர்ந்தெடுப்பது தான் மிகவும் முக்கியமானது. பலமாடிக் கட்டிடங்களையும் நுனிநாக்கு ஆங்கிலத்தையும் அதிகமான கல்விக் கட்டணத்தையும் மட்டுமே நல்ல கல்விக் கூடத்துக்கான அளவு கோல்கள் என்று எடுத்துக் கொண்டால் அதுவே நாம் செய்யும் மிகப் பெரிய தவறாகவும் அமைந்து விடலாம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நம்மில் பலர், குழந்தைகளுக்கான நேர்த்தியான உடைகள், பெல்ட், டை, ஷூ- ஷாக்ஸ், புத்தகப்பை – டிபன் பாக்ஸ் போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள கவனத்தைக்கூட தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒப்படைக்கும் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்வதில் எடுப்பதில்லை என்றுதான் கூற வேண்டும். கல்வியை மட்டுமே கருத்தில் கொள்ளும் போது வாழ்க்கை நெறிமுறைகள், பண்பாடுகள், கண்ணியம் போன்ற பலவும் காணாமல் போய் விடுகின்றன. பின்னர் பல பட்டங்களுடன் கூடிய தனது வாரிசுகள் குடிகாரனாகவோ, வன்முறையாளனாகவோ மாறும் போதுதான் பெற்றோர்கள் மனம் பதைபதைக்கிறது. உள்ளம் உதிரத்தைக் கொட்டுகிறது. குதிரை ஓடிய பிறகு லாயத்தை மூடி என்ன பயன்? அது போல்தான் இவர்களது கதையும் எல்லாம் முடிந்தபின் என்ன செய்ய முடியும்? பல மெத்தப்படித்த மேதாவிப் பெற்றோர்களின் நிலையும் இதுதான்.

நெறிசார்ந்த கல்வி

எனவே இன்றைய தேவை நெறிசார்ந்த கல்வியாகும்.(value Based Education) ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை கல்வி நிலையங்களில் சேர்க்கும் போது அவர்களது எதிர்காலத்தையும் அங்கு அடைக்கலப் பொருளாகக் கொடுக்கிறார்கள். எனவே கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யும்போது கீழ்க்கண்டவற்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
கல்வி தரமானதாக இருக்க வேண்டும். கல்வியுடன் குழந்தைகளுக்கு நன்னெறி போதனைகளையும் நல்ல பண்புள்ள பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அந்தக் கல்வி நிலையங்கள் காசு ஒன்றினை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளங்கள் நஞ்சுகள் கலந்து விடாமல் பாதுகாத்து அவர்களை நல்லவர் களாக்குவதற்கான தார்மிகப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இன்று மாணவர்களுக்கான முன்மாதிரி அரிதாக இருக்கிறது. அதனால் ஆசிரியர்களே தியாக உணர்வுடன் நேர்மையாகச் செயல்பட்டு மாணவர்களுக்கு மாடல்களாக விளங்க வேண்டும். அத்தகைய அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களை அதிக ஊதியம் கொடுத்தேனும் கல்வி நிலைய நிர்வாகிகள் பணியில் அமர்த்த வேண்டும். அது போன்ற கல்வி நிலையங்களால் மட்டுமே மாணவர்களுக்குத் தரமான கல்வி கற்பிப்பதுடன் நற்போதனை வகுப்புகளையும் நடத்தி தீமைகளிலிருந்து அவர்களைத் தடுத்து நல்லவர் களாக நாட்டின் நற்குடிமக்களாக பெற்றோரைப் பேணுபவர் களாக சுற்றத்தாரை மதிப்பவர்களாக அண்டை அயலாருடன் அன்புடன் பழகுபவர்களாக உருவாக்க முடியும்.

இஸ்லாமிய மாதிரிப் பள்ளி

மேற்சொன்ன கருத்துகள் வெறும் பேச்சுகள் அல்லது ஆலோசனைகள் மட்டும் அல்ல. செயல்வடிவங்கள். இது போன்ற எண்ணங்கள் ஏக்கங்களுடன் 1993 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் – திருவிதாங்கோடு எனும் ஊரில் இஸ்லாமிய மாதிரிப் பள்ளி (Islamic Model School) எனும் மெட்ரிக்குலேஷன் பள்ளியை ஒரு சோதனைக்காக ஆரம்பித்தோம். இன்று இறைவன் அருளால் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ – மாணவியருடன் சுமார் 60 ஆசிரியை களையும் கொண்ட ஒரு சிறந்த பள்ளியாக அது திகழ்கிறது. மாணவ – மாணவிகளுக்கு சிறப்பானதொரு அடித்தளத்தினை பாலர் பள்ளி முதல் பத்தாம் வகுப்பு வரை அமைத்துக் கொடுத்ததால் கல்வித் தரத்தில் சிறந்தவர்களாக கல்வி மாவட்டத்தின் 1வது 2வது மற்றும் 3வது இடங்களையும் அரசு மெட்ரிக் தேர்வில் ஒருங்கே பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தனர். வெறும் மதிப்பெண்களுடன் மட்டும் நின்று விடாது கலை, விளையாட்டுப்போட்டிகள், பேச்சு, கட்டுரை, கவிதை, வினாடி – வினா போன்ற திறனாய்வுப் போட்டிகளிலும் மாவட்ட அளவில் பல்வேறு பரிசுகளையும் மாநில அளவில் பரிசுகளையும் பெற்றனர். இவற்றைப் பெருமையாக பறைசாற்றவில்லை. ஏன் என்றால் இன்னும் பல பள்ளிகளும் இதுபோன்ற சாதனைகளை நிகழ்த்தி யிருக்கலாம். ஆனால் இங்கு 10 ஆம் வகுப்பு படித்து விட்டு வெளியே சென்ற மாணவர்களில் சிலர் பட்டங்கள் பெற்று பதவிகளில் உள்ளார்கள். இன்னும் பலர் பல்வேறு கல்லூரி களில் உயர்கல்வி கற்று வருகிறார்கள். ஆனால் எல்லா இடங்களிலும் நல்ல மாணவர்கள் என்று பலராலும் பாராட்டப்படுகிறார்கள். அதற்குக் காரணம் இந்தப் பள்ளியில் அவர்கள் நல்ல மாணவர்களாக வளர்க்கப்பட்டதுதான். மாணவ – மாணவிகள் அனைவருமே மது – போதை, வட்டி – வரதட்சணை, லஞ்சம், ஏமாற்று, திருட்டு போன்ற எந்த தீமைகளின் பக்கமும் செல்லாதவர்களாகவும், வன்முறை, பொதுச் சொத்துக்களுக்குத் தீங்கிழைத்தல் போன்றவற்றில் ஈடுபடாத பண்பாளர்களாகவும் விளங்கு கிறார்கள்.

இவர்களைப் போன்ற மாணவர்களை எல்லா பள்ளிக் கூடங்களுமே உருவாக்கி விட்டால் நிச்சயமாக இன்னும் குறுகிய காலத்தில் மகத்தானதொரு மறுமலர்ச்சியை எதிர் பார்க்கலாம். எங்கள் மாதிரிப்பள்ளியைப் பின்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் இன்னும் மூன்று பள்ளிகளும் தமிழக மெங்கும் பல இடங்களிலும் இதுபோன்ற பள்ளிகள் உருவாக்கப்பட்டு நல்ல மாணவர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது சிவகங்கை மாவட்டம் – இளையான்குடியில் 5 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இக்ரா மெட்ரிக்குலேஷன் பள்ளியும் நன்மக்களை உருவாக்கிடும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வெற்றியும் பெற்று வருகிறது.

இன்றைய உங்கள் குழந்தைகள்

நாளைய நமது சமுதாயம்

அவர்களை நன்மக்களாக வளர்க்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை நினைவில் கொண்டு நல்ல கல்வி நிலையத்தில் அவர்களை சேர்ப்பதைக் கடமை யாகக் கொள்ளுங்கள்.

(மாதிரிப் பள்ளிகள் அமைக்க அல்லது இருக்கின்ற பள்ளிகளை இது போன்ற நன்னெறி மிக்க சமுதாயத்தை உருவாக்கும் பள்ளியாக மாற்ற ஆலோசனைகள் பெற விரும்புபவர்கள் கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ளலாம். அலைப்பேசி: 94431 17984)

நன்றி : சமரசம் மாதமிருமுறை ( 16 – 31 ஜுன் 2009 )

Saturday, June 20, 2009

எஸ்.எஸ்.எல்.சி, பிள‌ஸ் டூ, ப‌த்தாம் வ‌குப்பு ம‌ற்றும் மெட்ரிகுலேஷ‌ன் மாணவிக‌ள் க‌வ‌ன‌த்திற்கு

எஸ்.எஸ்.எல்.சி, பிள‌ஸ் டூ, ப‌த்தாம் வ‌குப்பு ம‌ற்றும் மெட்ரிகுலேஷ‌ன் மாணவிக‌ள் க‌வ‌ன‌த்திற்கு

அல்ஹாஜ் டாக்ட‌ர் ஏ. ஜ‌மீர் பாஷா ‍ ஹாஜியா ஷ‌கீலா த‌ம்ப‌திக‌ள்
அல்ஹாஜ் டாக்ட‌ர் எம்.எஸ். அஷ்ர‌ஃப் ஹாஜியா ஜீன‌த் த‌ம்ப‌திக‌ள்
அல்ஹாஜ் ஹெச். க்யூ. ந‌ஜ்முதீன் ஹாஜியா சைய‌து பாத்திமா த‌ம்ப‌திக‌ள்
அல்ஹாஜ் ஏ. ப‌ஷீர் அஹ்ம‌த் ஹாஜியா அப்ரோஜா க‌னி த‌ம்ப‌திக‌ள்

வ‌ழ‌மை போல் இவ்வ‌ருட‌மும் எஸ்.எஸ்.எல்.சி, பிள‌ஸ் டூ, ப‌த்தாம் வ‌குப்பு ம‌ற்றும் மெட்ரிகுலேஷ‌ன் தேர்வில் அதிக‌ ம‌திப்பெண்க‌ள் பெற்ற‌ முஸ்லிம் மாண‌விக‌ளுக்கு ந‌ர்கிஸ் சார்பில் ப‌ரிசுக‌ளை வ‌ழ‌ங்கி பாராட்ட‌ இருக்கிறார்க‌ள்.

அதிக‌ ம‌திப்பெண் பெற்ற‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து ம‌திப்பெண் சான்றித‌ழ்க‌ளை ஜுன் 30 க்குள் கைப்ப‌ட‌ எழுதிய‌ க‌டித‌ம், வீட்டு முக‌வ‌ரி, தொலைபேசி எண், 1 புகைப்ப‌ட‌ம், ரிப்ளை க‌வ‌ர் இணைத்து ந‌ர்கிஸ் முக‌வ‌ரிக்கு அனுப்பித் த‌ர‌ வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி, பிள‌ஸ் டூ, ப‌த்தாம் வ‌குப்பு ம‌ற்றும் மெட்ரிகுலேஷ‌ன் மாண‌விக‌ள் என்று க‌வ‌ரில் குறிப்பிட‌வும்.

முக‌வ‌ரி :

எம். அனீஸ் ஃபாத்திமா
ஆசிரியை, ந‌ர்கிஸ்
54 ம‌ரிய‌ம் ந‌க‌ர்
ம‌ல்லிகைபுர‌ம்
திருச்சி 620 001