Sunday, August 15, 2010

ரஷ்யாவில் நடைபெற்ற உலக அறிவியலார் மாநாட்டில் பேராசிரியர் ஆபிதீன் பங்கேற்பு – ஆராய்ச்சிக்கு உலக அளவில் அங்கீகாரம்- சாகீர் உசேன் கல்லூரி பெருமிதம்.

ரஷ்யாவில் நடைபெற்ற உலக அறிவியலார் மாநாட்டில் பேராசிரியர் ஆபிதீன் பங்கேற்பு – ஆராய்ச்சிக்கு உலக அளவில் அங்கீகாரம்- சாகீர் உசேன் கல்லூரி பெருமிதம்.


சமீபகாலங்களில்; மருத்துவ தாவரங்கள் “Phytopharm” பற்றிய ஆராய்ச்சியும் விழிப்புணர்வும் உலகஅளவில் அதிகமாக கவனத்தில் கொள்ளப்பட்டு வருகிறது. வேதிஉரங்களுக்குப் பதிலாக உயிர்உரங்களை(டீழைகுநசவடைணைநச ) கண்டறிந்து பயன்படுத்துவதிலும். தாவரங்களைக் கொண்டு நோய்களைக் குணபடுத்தும் மருந்துப்பொருள்களை கண்டறிவதிலும் உலக நாடுகள் ஒன்றை ஒன்று போட்டிபோட்டு வரும் காலசூழல் இது.

அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் மருத்துவ தாவரங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் உலகஅளவிலான ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட அமைப்பு ஓன்று அந்தந்த வருடங்களில் கண்டறியப்படும் புதிய தாவரமருந்து கண்டுபிடிப்புகள் பற்றிய போட்டி நடத்துவது வழக்கம். உலக அளவில் பல்வேறு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள். ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருந்து கம்பெனி நிறுவனங்களிடமிருந்து ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்திற்கான கண்டுபிடிப்புகள் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள் பெறப்பட்டு அதில் தகுதியுள்ள கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்படும், மேலும் தேர்ந்தெடுக்கப்படும் ஆராய்ச்சி கட்டுரையாளர்கள் உலகஅளவிலான ஆராயச்சியாளர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டு அங்கே புதிய கண்டுபிடிப்புகள் பற்றி விவாதிக்கப்படும். இதன் வரிசையில் , மருத்துவ தாவரங்கள் பற்றிய PHYTOPHARM 2010 எனும் 14th International Conference ஜலை மாதம் 1 முதல் 4 தேதிகளில் ரஷ்ய நாட்டில் உள்ள St.Petersburg நகரத்தின் St.PETERSBURG State University ல் நடைபெற்றது.


இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியின் விலங்கியல் துறை பேராசிரியர் டாக்டர்.ஆபிதீன் தனது சமீபத்திய ஆராய்ச்சிக் கட்டுரையை கடந்த சில மாதங்களுக்கு முன் சமர்பித்திருந்தார்;. முடிவில், உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 ஆராய்ச்சி கட்டுரைகளில் டாக்டர் ஆபிதீன் அவர்களின் கட்டுரையும் தேர்ந்தெடுக்கப்பட்டு ரஷ்ய நாட்டில் உள்ள St.Petersburg நகரத்தில் நடைபெறும் மாநாட்டிற்கு நேரடியாக அழைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் , பல்கலைக்கழகம் , தமிழகஅரசு மற்றும் பல்கலைகழக மானிய குழுவின் முறையான அனுமதியுடன் டாக்டர் ஆபிதீன் கடந்த 27-06-2010 முதல் 07-07-2010 வரையிலான நாட்களில் விடுமுறை பெற்று அரசு செலவில் ரஷ்யாவின் St.PETERSBURG State University ல் நடைபெற்ற மருத்துவ தாவரங்கள் குறித்த ஆராய்ச்சி மாநாட்டில் தனது ஆராய்ச்சி கட்டுரையை மிகவும் சிறப்பான முறையில் சமர்ப்பித்து விட்டு 07-07-2010 அன்று தாயகம் திரும்பியிருக்கிறார்.

இது குறித்து டாக்டர் ஆபிதீன் அவர்களிடம் கேட்ட போது , இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்திரேலியா, ரஷ்யா, கனடா , பின்லான்ட், ஆஸ்ட்ரியா உட்பட சுமார் 60 க்கும் மேற்பட்ட முன்னனி நாடுகளிலிருந்து 150 க்கும் மேற்பட்ட ஆராய்சியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ,இதுவரை உலக சந்தையில் இல்லாத ஆண்கள் உபயோகிக்கக் கூடிய தற்காலிக கருத்தடை மாத்திரைகளை உருவாக்க சாத்யமுள்ள மருத்துவ தாவரங்கள் குறித்த எனது ஆராய்ச்சி கட்டுரை அதிக வரவேற்ப்பைப் பெற்றது. மேலும்,75 சதவீதம் முழுமை பெற்ற இந்த ஆராய்சி இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பின்பு விரைவில் முழுமையுடன் வெற்றி பெற அதிக சாத்திய கூறு உறுவாகி இருப்பதாகவும், அத்துடன் இந்த ஆராய்ச்சியைத் தொடர இந்தியஅரசின் நிதிஉதவி கிடைக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகிறார். இன்ஷ அல்லாஹ்...

மேலும் , மிகப் பெரிய ஆய்வுக்கூட வசதியுள்ள பல்கலைகழகங்களில் தான் இது போன்ற ஆராய்ச்சிகளுக்கான சாத்தியக்கூறு உள்ளது. அதே வேளையில் மிகப் பின்தங்கிய பகுதியில் உள்ள போதுமான ஆய்வக வசதியில்லாத நமது கல்லூரியிலும் இது போன்ற ஆராய்ச்சிகள் நடைபெறுவதற்கு காரணம் கல்லூரி நிர்வாகத்தினருடைய ஒத்துழைப்பும் சக பேராசிரியர்களின் ஊக்குவிப்பும் தான். அதற்காக தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கதாகவும் கூறுகிறார்.

அத்துடன் , ரஷ்ய நாட்டில் பல முன்னனி நாடுகளிலிருந்து ஆராய்சியாளர்கள் கலந்து கொண்ட ஒரு மிகப்பெரிய மாநாட்டில் ILAYANGUDI Dr.ZAKIR HUSIAN COLLEGE என்று ஒலித்த தருனம் , தனக்கு மிகப்பெரிய பெருமிதத்தைத் தந்தது என்கிறார் டாக்டர் ஆபிதீன்.( அல்ஹம்துலில்லாஹ்....)

பேராசிரியர் ஆபிதீன் அவர்களின் “கரையான்களை அழிக்கும் கடல் தாவரங்கள்” என்ற ஆராய்ச்சி கட்டுரை மலேசிய நாட்டின் பல்கலைகழகத்தில் தேர்வு பெற்று 2006 ம் ஆண்டு மலேசிய நாட்டின் பல்கலைகழகத்தின் அழைப்பின் பேரில் மலேசியா சென்று வந்ததும் இந்த ஆராய்ச்சிக்காக பல்கலைகழக மானியக்குழு ரூபாய் ஓரு இலட்சம் நிதியுதவி செய்ததும் குறிப்பிடத்தக்கது.



Thanks: ilayangudi.com


Rajaghiri Gazzali

ரமழானும் நடைமுறை வாழ்வும் - நேர்காணல்

ரமழானும் நடைமுறை வாழ்வும் - நேர்காணல்



தலைசிறந்த இஸ்லாமிய அறிஞரும் எழுத்தாளரும் நாவன்மை மிக்க பேச்சாளருமாகிய ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் 'ரமழானும் நடைமுறை வாழ்வும்' என்ற தலைப்பில் அல்ஹஸனாத்துக்கு வழங்கிய நேர்காணலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

அல்ஹஸனாத்: பல்லின சமூகத்தின் மத்தியில் வாழ்கின்ற சிறுபான்மையினர் என்ற வகையில் எமது ரமழான் கால நடவடிக்கைகளை, ரமழான் மாதத்தை பிற சமூகத்தினர் எவ்வாறு நோக்குகின்றார்கள்?
அஷ்ஷெய்க் அகார்: இந்த நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம் சமூகத்தின் நடவடிக்கைகளை அடுத்த சமுதாயங்கள் தூரத்தில் நின்று அவதானித்து வருகின்றன. எமது ஒவ்வொரு செயற்பாடும் அவர்களது பார்வையில் நேரானதாகவோ எதிர்மறையாகவோ நோக்கப்படுவதையும் எமது ஒவ்வொரு செயற்பாடு பற்றியும் அவர்களிடம் ஒரு கருத்து இருப்பதையும் நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. எமது பள்ளிவாசல்கள், வணக்க முறைகள், தொழுகைகள், சகோதரத்துவ உறவுகள், பழக்கங்கள், திருமண வைபவங்கள், ஜனாஸா நல்லடக்கம், பெண்களின் உடை, நடை, பாவனைகளை அவதானித்து முஸ்லிம்கள் பற்றி ஒரு கருத்தை எடுத்துக் கொள்கின்றார்கள்.


இவற்றில் எம்மிடமுள்ள நல்லம்சங்கள் மீது நல்லெண்ணம் கொள்கிறார்கள். ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான எமது கிரியைகளை அவர்கள் எப்போதுமே பாராட்டுகிறார்கள். முஸ்லிம்கள் மிகவும் எளிமையான முறையிலும் ஜனாஸாக்களை நாட்கணக்கில் வைத்திருக்காமலும் அவசரமாக நல்லடக்கம் செய்கின்றார்கள் என சிலாகித்துப் பேசக்கூடிய அளவுக்கு அவர்கள் இந்நடைமுறையினால் கவரப்பட்டிருக்கின்றார்கள். மற்றும் அண்மைக் காலம் வரைக்கும் எமது நடைமுறையில் இருந்து வந்த இறுக்கமான சகோதரத்துவ உறவைப் பாராட்டி பேசியுள்ளார்கள்.
ஆனால் அவர்கள் தற்போது எம்மை ஏளனமாகப் பார்க்கும் நிலை தோன்றி இருக்கிறது. அந்த அளவுக்கு எமது சமூகத்தில் நிலவும் பிளவுகளை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் அவர்கள் ரமழானை நேர்மறையாகப் பார்க்கின்றார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு மாத காலம் அதிகாலையிலிருந்து சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல் இறைவனுக்காக இவர்கள் விரதம் இருக்கிறார்களே! எப்படி இதைச் சாதிக்கிறார்கள் இவர்களுடைய மனோ வலிமை, மத நம்பிக்கை எவ்வளவு பலமானது, வலுவானது என்று அவர்கள் தமக்கு மத்தியில் பேசிக்கொள்கிறார்கள். முஸ்லிம் சகோதரர்களிடமும் இதனை சிலாகித்து பேசிக் கொள்கிறார்கள். முஸ்லிம்கள் மார்க்கத்தை ஆழமாக விசுவாசிப்பவர்கள் மாத்திரமல்ல அதனடிப்படையில் தமது வாழ்வை அமைத்துக் கொள்கின்றவர்கள் முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுவது போல் வேறெவரும் தனது மார்க்கத்தைப் பின்பற்றுவதில்லை என்ற கருத்து பிற சமூகத்தவர் மத்தியில் பரவலாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மறுபக்கம், அவர்களில் சிலர் ரமழான் மாதத்தை வரலாறு நெடுகிலும் எதிர்மறையாகவும் பார்த்து வருகின்றார்கள். குறிப்பாக, நகர்ப்புறங்களில் வாழ்கின்ற பிற சமயத்தவர்கள், அதாவது முஸ்லிம்களோடு இரண்டறக் கலந்து வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் அல்லாத மக்கள் நோன்பு மாதம் வரப்போகிறது என்றாலே இனி ஒருமாத கால இரவுத் தூக்கம் இல்லாமல் போய்விடும் நிம்மதியை இழந்துவிடுவோம் சிறுவர்களும் இளைஞர்களும் பாதையோரங்களில் விளையாட ஆரம்பித்துவிடுவார்கள், பாதையெங்கும் ஒரே சப்தமாக இருக்கும், குழந்தைகள் நோயாளிகளுக்கு நிம்மதியாக தூங்க முடியாது போகும் என்று எண்ணி கவலைப்படுகிறார்கள், அதிருப்தியடைகின்றார்கள்.

"யார் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொண்டார்களோ அவர் தனது அயலவருக்கு தொந்தரவு செய்யாமல் இருக்கட்டும் " என்றும் இன்னோர் அறிவிப்பில் "யார் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொண்டார்களோ அவர் தனது அயலவரை கண்ணியப்படுத்தட்டும்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அண்டை அயலவரோடு நல்ல முறையில் நடந்து கொள்வது, அவர்களின் உணர்வுகளை மதிப்பது ஈமானின் பிரதிபலிப்பாகும். எனவே அயலவர்கள் முஸ்லிம்களாக அல்லது முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாலும் அவர்களின் உரிமைகளை மிகக் கவனமாக பேணுமாறு நபியவர்கள் வலியுறுத்தினார்கள்.
ஆனால், எம்மவரின் நடைமுறை இதற்கு மாற்றமாக இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் வீதியோர விளையாட்டுக்களும் கேளிக்கைகளும் ஒருபுறம் இடையூறு விளைவிக்க, மறுபக்கம் ஸஹர் வேளையில் வானொலி சப்தத்தை அளவுக்கதிகம் கூட்டி வைத்துத்து கிறாத், உரைகள், ஸஹர் சிந்தனை உள்ளிட்ட அதிகாலை ரமழான் நிகழ்ச்சிகளை செவிமடுப்பதன் மூலம் அயலிலுள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இது இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் குற்றம், பாவம் என்பதையும் யாரும் உணர்ந்து கொள்வதாகத் தெரியவில்லை. மாற்றமாக அதன் மூலம் ஆன்மிக சூழலை உருவாக்குவதாக பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். உண்மையில் இது இஸ்லாத்தின் தார்மீக அடிப்படைகளை மீறும் செயல். ஏனைய மதத்தவர்களுக்கு பெரும் தலையிடியைக் கொடுக்கிறோம் அவர்களின் கோபத்தையும் சாபத்தையும் சம்பாதித்துக் கொள்கிறோம் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

"அநியாயம் இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கும், அல்லாஹ்வுக்குமிடையில் எவ்விதத் திரையும் கிடையாது. (காபிர்களாக இருந்தாலும் சரி) என நபி ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
எமது செயற்பாடுகளால் அயலவர்கள் எம்மை சபித்தவர்களாகவே தூங்குவார்கள் அவர்களின் உளக் குமுறல் எம்மைப் பாதிக்கும்.
ரமழானைப் பற்றி இன்னொரு கருத்தும் அவர்களிடம் இருக்கிறது. அதாவது, ரமழான் பிச்சைக்காரர்களின் மாதம், யாசகம் கேட்கும் மாதம் என்று ரமழானுக்கு அவர்கள் பெயர் சூட்டி வைத்துள்ளார்கள். ரமழான் காலப் பகுதியில் முஸ்லிம் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சகலரும் பாதைகள், கடை வீதிகள், அங்காடிகள் வழியே தெருத் தெருவாக கூட்டம் கூட்டமாகச் சென்று ஹதிய்யா கேட்பதனை வைத்தே அவர்கள் இப்படியொரு பெயரை புனித ரமழானுக்கு சூட்டி எள்ளி நகையாடுகிறார்கள்.
மேலும், ரமழான் காலத்தில் இலங்கையிலுள்ள சகல பள்ளிவாசல்களிலும் தராவீஹ் மற்றும் கியாமுல் லைல் தொழுகைகள் ஒலிபெருக்கிப் பாவனையுடன்தான் நடத்தப்படுகின்றன. இதுவும் பள்ளிவாயல்களைச் சூழ்ந்திருக்கின்ற மாற்று மத சகோதரர்களுக்கு இடையூறாகவே அமைகின்றது. தற்போது ஒலிபெருக்கி கட்டுப்பாடு இருக்கும் காரணத்தினால் இவ்விடயத்தில் நாம் சட்டத்திற்கு அமைவாக நிதானமாக செயல்பட வேண்டும்.
அல்ஹஸனாத்: இவ்வாறான தவறான அல்லது தூர நோக்கற்ற சில நடவடிக்கைகளால் இனமுறுகல்களும் ஏற்பட்டுள்ளன. எனவே மாற்று மதத்தவரின் அதிருப்தியைச் சம்பாதிக்காத வண்ணம் அவர்களின் உரிமைகளைப் பேணி நடந்து கொள்ளும் வழிமுறைகள் என்ன?
அஷ்ஷெய்க் அகார்: இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்குமிடையில் இனரீதியான அசம்பாவிதங்களுள் கணிசமானளவு ரமழான் காலத்தில்தான் இடம்பெற்றிருக்கின்றன. இதற்கு நான் ஏலவே குறிப்பிட்ட எமது தவறான நடத்தைகளும் முக்கிய காரணம்.
நாம் இந்த நாட்டில் தனியாக வாழ்பவர்கள் அல்ல. இங்கு வாழும் சகலரும் முஸ்லிம்களும் அல்ல. நாம் பெரும்பான்மை சமூகங்களுடன் இரண்டறக் கலந்து வாழ்கிறோம். எனவே அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அவர்களின் உரிமைகள் பேணப்பட வேண்டும். அவர்கள் ஆவேசப்படுகின்ற, ஆத்திரப்படுகின்ற சூழ்நிலையை நாம் உருவாக்கக் கூடாது.

எனவே, ரமழான் கால இரவு விளையாட்டுக்கள் முற்று முழுதாக நிறுத்தப்படல் வேண்டும். ரமழான் காலம் இரவு முழுக்க விளையாடி பகலெல்லாம் தூங்கும் காலமல்ல. அது வணக்க வழிபாடுகளின் பருவ காலம் என்ற மனப்பதிவு சகல மட்டங்களிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
ரமழானில் ஸகாத் கொடுப்பதன் சிறப்புக்கள் தாராளமாக வலியுறுத்தப்பட்டிருப்பதால் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எல்லோரும் வீதிக்கு வருகின்றார்கள். இந்த நிலையை மாற்றியமைப்பதற்கு ஒவ்வொரு ஊரும் கிராமமும் முயற்சிக்க வேண்டும். ஸகாத்தை கூட்டாக சேகரித்துக் கொடுத்தல், ஸதகாவை ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பின் கீழ் கொடுத்தல் போன்ற வழிமுறைகளின் மூலம் சமூகத்தின் வறுமை நீக்கப்படுமாக இருந்தால் இதனை நியாயமான அளவு குறைக்க முடியும்.

அடுத்ததாக ரமழானில் தெருத் தெருவாகச் சென்று யாசகம் கேட்பதை தொழிலாகச் செய்கின்றவர்கள் இருக்கின்றமை ஒரு கசப்பான உண்மை. இதன் பாரதூரமான விளைவை அவர்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களை நல்ல மக்களாக மாற்றுவதும் எமது பொறுப்பாகும்.

அல்ஹஸனாத்: ரமழான் விடுமுறைக்குரிய காலம், ஓய்வெடுப்பதற்குரிய காலம் எனும் மனப்பதிவு மக்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டிருக்கிறது. அது பற்றி...?
அஷ்ஷெய்க் அகார்: உலகின் பல நாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம்களோடு ஒப்பிடுகின்ற போது இலங்கை நாட்டு முஸ்லிம்கள் பாக்கியம் பெற்றவர்கள். இந்நாட்டில் நாம் 810 என்று சொல்லலாம். மிகுதி 90 ஆன மக்கள் பெரும்பான்மையினர். எனினும், இந்நாட்டில் வரலாறு நெடுகிலும் மிகவும் வளமாக வாழக்கூடிய சூழ்நிலையை அல்லாஹ் எமக்கு ஏற்படுத்தித் தந்துள்ளான்.
அண்மைக் காலம் வரைக்கும் கௌரவமான ஒரு சமுதாயமாக, எல்லா உரிமைகளையும் பெற்று வாழும் ஒரு சமுதாயமாக நாம் இருந்து வந்துள்ளோம்.
கடந்த பல தசாப்த காலமாக நாம் அனுபவித்து வரும் ஓர் உரிமைதான் ரமழான் கால நீண்ட விடுமுறை. எமது மாணவர்கள், சிறார்களுக்கு மட்டுமன்றி ஆசிரியர்களுக்கும் இச்சலுகை உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்விடுமுறைக் காலத்தை வெறுமனே ஓய்வு காலமாக அமைத்துக் கொள்ளக் கூடாது. இக்காலத்தில் ஆன்மிக ரீதியாக, ஒழுக்க ரீதியாக, தார்மிக ரீதியாக எம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த வகையில் ரமழான் காலத்தை இளைஞர்களுக்கான பயிற்சிக் காலமாக கருதி அவர்களை ஆன்மிக ஒழுக்க, தார்மீக ரீதியாக, பண்பாட்டு, அறிவு ரீதியாக வழிநடத்த வேண்டிய பொறுப்பு இந்த நாட்டிலுள்ள இஸ்லாமிய இயக்கங்கள், நிறுவனங்களுக்குரியது.

அண்மைக் காலமாக வானொலி நிகழ்ச்சிகளில் அதிகமான போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவ்வாறே இஸ்லாமிய அமைப்புக்களும் தஃவா நிறுவனங்களும் ரமழான் கால போட்டி நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. எமது இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் என சகலரும் இந்நிகழ்ச்சிகளைக் கேட்டு அதற்கான விடைகளை எழுதி அனுப்புவதில் ஈடுபாடு காட்டி வருகின்றனர். உண்மையில் இது வரவேற்கத்தக்க விடயம். ஆனால் இது மாத்திரம் போதுமானதல்ல. இதுபோன்ற இன்னும் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் மாணவர்களின், இளைஞர்களின் அறிவை, ஆற்றலை கூர்மைப்படுத்துகின்ற நிகழ்ச்சிகள் மற்றும் மார்க்க விழுமியங்களைப் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
இஸ்லாமிய வரலாற்றிலும் ரமழான் காலம் ஓய்வுக்குரிய காலமாக இருந்ததில்லை. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் ரமழானில் இடம்பெற்றுள்ளன. இஸ்லாத்தின் தலைவிதியைத் தீர்மானித்த பத்ர் யுத்தம், மாபெரும் மக்கா வெற்றி, வரலாற்றுப் புகழ் மிக்க ஐன் ஜாலூத் யுத்தம் என்பன ரமழான் காலத்தில்தான் இடம்பெற்றன. இவற்றை வைத்து ரமழான் யுத்தம் புரியும் காலம் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. அதாவது, ரமழான் செயற்திறன்மிக்க ஒரு காலம் உற்சாகமாக, சுறுசுறுப்பாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் காலம் சோம்பலினால் பல மணிநேரம் உறங்கும் காலம் அல்ல என்பதை அந்நிகழ்வுகள் எமக்கு சொல்லித் தருகின்றன.

அல்ஹஸனாத்: ஏனைய காலங்களை விட ரமழானில் வீட்டு செலவினம் இரட்டிப்படைவதன் காரணங்கள் என்னவாக இருக்கலாம்.?
அஷ்ஷெய்க் அகார்: உண்மையில் இது மிகவும் வினோதமான ஒரு நிலை. ரமழானுடைய காலம் என்பது முஸ்லிம்கள் பசியுடனும் தாகத்துடனுமிருக்கும் காலம். எனவே ஏனைய காலங்களுடன் ஒப்பிடுகின்றபோது ரமழானில் கண்டிப்பாக செலவினங்கள் குறைய வேண்டும். ஆனால் நடைமுறையில் நிலைமை நேர் எதிராகவே இருக்கின்றது.

இதற்கான அடிப்படைக் காரணங்களுள் ஒன்று, நாம் இஸ்லாமிய வணக்க வழிபாடுகளின் தாத்பரியங்களையும் தத்துவங்களையும் சரியகப் புரிந்து கொள்ளாமையே. பசி, தாகத்துடனிருந்து வணக்க வழிபாடுகள், நற்பண்புகளில் ஈடுபட்டு உடலுக்கும் உள்ளத்துக்குமான பயிற்சியைப் பெற்றுக் கொள்ளும் காலமே ரமழான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
ஷஷநோன்பு நோற்று உடல் ஆரோக்கியம் பெறுங்கள்
ஆனால், நாம் ரமழான் கால இரவுகளில் அதிகமாகச் சாப்பிடுகிறோம் அருந்துகிறோம். வகை வகையான உணவுகளைப் புசிக்கிறோம். இது ரமழானின் பயனைக் கெடுத்துவிடும். இதனால் ரமழானின் பயன், நோக்கம், அதன் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் வீணாகிவிடும். ரமழானில் பெரும்பாலான பெண்கள் ளுஹர் தொழுகையோடு சமையலறைக்குச் சென்றால் மஃரிப் வரைக்கும் அங்குதான் இருக்கிறார்கள். தராவீஹுக்குப் பின் இன்னும் சில மணித்தியாலயங்களை சமையலில் கழித்து விடுகிறார்கள். மீண்டும் ஸஹர் உணவைத் தயாரிப்பதற்காக நடுநிசியில் எழுந்துவிடுகிறார்கள். இப்படி பெண்களின் காலம் பெரும்பாலும் சமையலறையில்தான் கழிகின்றது.
எனவே, ரமழானில் நாம் இதுவரை காலமும் பேணிவந்த உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அல்ஹஸனாத்: ஏனைய காலங்களைவிட ரமழானில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரச்சினைகளும் பிளவுகளும் அதிகமாகவே நிகழ்கின்றன. சிலபோது கைகலப்பும் ஏற்படுவதுண்டு. இது பற்றி...?
அஷ்ஷெய்க் அகார்: இது அண்மைக் காலமாக முஸ்லிம்கள் மத்தியில் தொற்றிக் கொண்ட ஒரு கொடிய நோய். வரலாற்றில் முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் இப்படியான பிரச்சினைகள் பெரியளவில் இருக்கவில்லை. இஸ்லாமிய எழுச்சியும் மறுமலர்ச்சியும் ஏற்பட்டுள்ளதாக நாம் கூறிக் கொள்ளும் இந்தக் காலத்தில்தான் இப்படியான அவலங்கள் அதிகரித்துள்ளன. அமைதியாக, ஆன்மிக பக்குவத்துடனும் சகிப்புத்தன்மையுடனும் பரந்த மனப்பாங்குடனும் இருக்க வேண்டிய ஒரு காலத்தில் குழப்பம் விளைவித்துத் திரிவது ஆபத்தானது. எமது சமூகம் துண்டாடப்படுவதற்கு வழிகோலக் கூடியது.

வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு மிக மோசமான அசம்பாவிதங்கள் அண்மைக் காலங்களில் இடம்பெற்றுள்ளன. எனவே, முஸ்லிம் சமூகத்தில் மார்க்கத்தின் பெயரால் சண்டை, சச்சரவுகள் ஏற்படும்போது ரஹ்மத்துடைய மலக்குகள் இருக்க மாட்டார்கள். ஷைத்தான்களே ஆதிக்கம் செலுத்துவர். இதனால் நாம் அல்லாஹ்வின் அருளை இழந்து அவனின் கோபத்திற்குள்ளாகுவோம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மார்க்கம் பற்றிய புரிதலில் உள்ள கோளாறுதான் இம்மோதலுக்கு காரணம். எமக்கு மத்தியில் நிகழும் உட்பூசல்களுக்கும் சர்ச்சைகளுக்கும் காரணம், அறிவும் அறிவும் மோதிக்கொள்வதல்ல அறிவும் அறியாமையும் மோதிக் கொள்ளும் நிலையுமல்ல அறியாமையும் அறியாமையும் முட்டி மோதுவதன் விளைவுதான் இது என்பதை உறுதியாகக் கூறலாம்.
உதாரணமாக, தராவீஹ் தொழுகையைப் பொறுத்தவரை எட்டு ரக்அத்துக்களுக்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன. யாராவது எட்டு ரக்அத்துக்கள் தொழுதால் அவர்களைக் குழப்பவாதிகள் எனச் சொல்லக் கூடாது. அதேநேரம் இருபது ரக்அத்துகளுக்கு ஆதாரம் இல்லாமல் இல்லை. 'ரம் ஷரீபில் வரலாறு நெடுகிலும் இருபது ரக்அத்துக்களே தொழுவிக்கப்பட்டு வருகின்றன. உலகில் பல நாடுகளில் இருபது ரக்கஅத்துக்களே நடைமுறையில் உள்ளன. இதனை அரபியில் ஷமுதவாதிர் அமலி என அழைப்பர்.

தராவீஹின் ரக்அத்துக்கள் இருபதா, எட்டா? என்ற சர்ச்சை ஏற்படுவதற்கான காரணம், அது ஷநபில் முத்லக் என்ற அந்தஸ்தைப் பெற்றிருப்பதாகும். ஐவேளைத் தொழுகையில் ரக்அத்துக்களின் எண்ணிக்கையில் கருத்து முரண்பாடு ஏற்படுவதில்லை. காரணம், அவை வரையறுக்கப்பட்ட ரக்அத்துக்களைக் கொண்ட தொழுகைகள். எனவேதான் ஷநபில் முத்லக் ஆன தராவீஹ் தொழுகையின் ரக்அத்துக்கள் பற்றி வரலாறு நெடுகிலும் கருத்து வேறுபாடுகள் நிலவியுள்ளன. எட்டு, இருபது ரக்அத்துக்கள் மட்டுமல்ல, 36 ரக்அத்துக்கள் தொழலாம் என இமாம் அஹ்மத் கூறுகின்றார்.

இதுவெல்லாம் மார்க்க ரீதியான கண்ணோட்டங்களின் சில விளைவுகள். எனவே எட்டு ரக்அத்துக்கள் தொழுபவர்கள் இருபது ரக்அத்துக்கள் தொழுபவர்களோடு சச்சரவில் ஈடுபட வேண்டிய தேவையில்லை.
எனவே, இந்த வகையில் எல்லோரும் சேர்ந்து இருபது ரக்அத்துக்களைத் தொழலாம். அல்லது எட்டு ரக்அத்துக்கள் தொழலாம். அல்லது உடன்பாட்டுடன் எட்டு ரக்அத்துக்கள் தொழுபவர்கள் எட்டும் இருபது தொழுபவர்கள் இருபதும் தொழலாம். தராவீஹ் நடத்துவதில் குழப்பம் ஏற்படுமாக இருந்தால் அதனைத் தொழாமல் இருக்கலாம்.

அல்ஹஸனாத்: ரமழானில் கடைசிப் பத்தில் முஸ்லிம் வியாபாரிகள் இரவு பகலாக கடைகளைத் திறந்து வைத்திருக்கின்றனரே!
அஷ்ஷெய்க் அகார்: இது அண்மைக் காலங்களில் ஏற்பட்ட ஒரு புதிய மாற்றம். ஆரம்ப காலங்களில் இவ்வாறானதொரு நிலை இருக்கவில்லை. ஆடம்பர மோகம், எளிமையான வாழ்வு எம்மை விட்டும் விடைபெற்றுச் சென்றமை, இக்காலப் பகுதியில் அதிகப்படியான இலாபம் கிடைப்பது போன்ற காரணத்தினாலும் இன்று ரமழானுடைய பிற்பகுதி முழுக்க முழுக்க கடைத் தெருக்களிலும் நடைபாதைகளிலும் கழிகின்றன.
ரமழானின் கடைசிப்பகுதி வந்துவிட்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லுங்கியை இறுக வரிந்து கட்டிக் கொண்டு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். குடும்பத்தாரையும் விழிப்படையச் செய்து அவர்களும் இரவெல்லாம் வணங்குவதற்கு உற்சாகமளிப்பார்கள்.
எனவே, வியாபாரிகள் தமது வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் ஒரு பருவ காலமாக ரமழானைப் பயன்படுத்தாமல் அதனை ஆன்மிக வாழ்வுக்கான பருவ காலமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் வேறு பண்டிகைகள், விழாக்களை இலாபமீட்டிக் கொள்வதற்கான பருவ காலமாக மாற்றிக் கொள்ளட்டும்.

தற்போது சில வானொலி அலைவரிசைகளைக் கூட சிலர் வியாபார நோக்கத்துக்காக ஆரம்பித்துள்ளார்கள். அதில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை ஒலிபரப்பி மக்களை ஈர்த்துவிடுகின்றார்கள்.
வியாபாரிகள் இதற்கு மாற்று வழிகளைக் காண வேண்டும். குறிப்பாக இரவு காலங்களில் கடைகளைத் திறந்து வைத்து இரவு முழுக்க அல்லது நடுநிசி வரை வியாபாரம் செய்கின்ற சம்பிரதாயம் மிகவும் ஆபத்தானது. அதன் மூலம் ரமழானின் சிறப்புகளுக்கும் அதன் எதிர்பார்ப்புகளுக்கும் நாம் துரோகமிழைக்கின்றோம்.

வெறும் அற்ப லௌகிக இலாபத்துக்காக வாழ்க்கையில் மிக அருமையாகக் கிடைக்கும் ரமழானுடை காலத்தை நாம் வீணடித்து நஷ்டவாளிகளாக ஆகிவிடக் கூடாது. ஒரு ரமாழானை அடைந்தவர் அடுத்த ரமழானை அடைவார் என்பதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை. எனவே ஒவ்வொரு ரமழானையும் கடைசி ரமாழான் என்ற உணர்வோடு நோக்குவோம். எதிர்வரும் ரமழானில் முழுமையான பயனடைந்து முத்தகீன்களாக மாறுவதற்கு முயற்சிப்போம்!

Thanks : http://www.sheikhagar.org

http://www.islamreligion.com/

Kerala No.1 MUSLIM matrimonial website(waytonikah.com)

Fathima
dateSun, Aug 15, 2010 at 7:43 AM
subjectIntroducing Kerala No.1 MUSLIM matrimonial website(waytonikah.com)

Dear Friend,

Hope you are fine with the grace of God,

I would like to introduce a new website 'waytonikah.com', a matrimonial
website for Muslims in Kerala.

The following are the features of Waytonikah Dot Com:
-Free for registration
-We assure you full privacy
-Only for Muslims
-Photo protection using password
-24 hour live support

Please visit waytonikah.com today and register your or your relative’s
profile (if you or your relative is looking for suitable bride/groom)

Please forward this to your friends and relatives.

Ma'a Salama,
Fathima

Urdu press and India's freedom struggle

Urdu press and India's freedom struggle

On the occasion of India's independence please read my latest post on Urdu press and India's freedom struggle

Regards,
Danish
urdufigures.blogspot.com

You might also like:

Father-daughter duo who helped Bapu learn Urdu

Patna Man who introduced Shampoo to UK

Haroon Rashid: The man who brought an Inquilab

Kulsum Sayani: A Rahber of Hindustani

An interview with Dr Javid Iqbal, son of Allama Iqbal
--


danish.khan@gmail.com

Friday, August 13, 2010

Some Common Mistakes in Ramadaan

Some Common Mistakes in Ramadaan
Lets Strive Not to Repeat the Same.
By Asma bint Shameem


1 : Taking Ramadaan as a ritual

For many of us Ramadaan has lost its spirituality and has become more of a ritual than a form of Ibaadah. We fast from morning to night like a zombie just because everyone around us is fasting too. We forget that its a time to purify our hearts and our souls from all evil....we forget to make dua, forget to beseech Allaah to forgive us and ask Him to save us from the Fire. Sure we stay away from food and drink but that's about all.

Although the Prophet (Sal Allaahu Alaiyhi wa Sallam) said:
“Jibreel said to me, May Allaah rub his nose in the dust, that person to who Ramadaan comes and his sins are not forgiven, and I said, Ameen.
Then he said, May Allaah rub his nose in the dust, that person who lives to see his parents grow old, one or both of them, but he does not enter Paradise (by not serving them) and I said, Ameen.
Then he said, May Allaah rub his nose in the dust, that person in whose presence you are mentioned and he does not send blessings upon you, and I said, Ameen.’”
(Tirmidhi, Ahmad, others. Saheeh by al-Albaani)










2 : Too much stress on food and drink

For some people, the entire month of Ramadaan revolves around food. They spend the ENTIRE day planning, cooking, shopping and thinking about only food, instead of concentrating on Salaah, Quraan and other acts of worship. All they can think of is FOOD. So much so that they turn the month of fasting into the month of feasting. Come Iftaar time, their table is a sight to see, with the multitudes and varieties of food, sweets and drinks. They are missing the very purpose of fasting, and thus, increase in their greed and desires instead of learning to control them. It is also a kind of waste & extravagance.

".....and eat and drink but waste not by extravagance, certainly He (Allaah) likes not Al-Musrifoon (those who waste by extravagance)" [al-Araaf :31]










3 : Spending all day cooking

Some of the sisters (either by their own choice or forced by their husbands) are cooking ALL day and ALL night, so that by the end of the day, they are too tired to even pray Ishaa, let alone pray Taraweeh or Tahajjud or even read Quraan. This is the month of mercy and forgiveness. So turn off that stove and turn on your Imaan!










4 : Eating too much

Some people stuff themselves at Suhoor until they are ready to burst, because they think this is the way to not feel hungry during the day and some people eat at Iftaar, like there is no tomorrow, trying to make up for the food missed. However, this is completely against the Sunnah. Moderation is the key to everything.

The Prophet (Sal Allaahu Alaiyhi wa Sallam) said: "The son of Adam does not fill any vessel worse than his stomach; for the son of Adam a few mouthfuls are sufficient to keep his back straight. If you must fill it, then one-third for food, one-third for drink and one-third for air." (Tirmidhi, Ibn Maajah. saheeh by al-Albaani).

Too much food distracts a person from many deeds of obedience and worship, makes him lazy and also makes the heart heedless.
It was said to Imam Ahmad: Does a man find any softness and humility in his heart when he is full? He said, I do not think so.











5 : Sleeping all day

Some people spend their entire day (or a major part of it) sleeping away their fast. Is this what is really required of us during this noble month? These people also are missing the purpose of fasting and are slaves to their desires of comfort and ease. They cannot bear to be awake and face a little hunger or exert a little self-control. For a fasting person to spend most of the day asleep is nothing but, negligence on his part.











6 : Wasting time

The month of Ramadaan is a precious, precious time, so much so that Allaah calls this month "Ayyamum Madoodaat" (A fixed number of days). Before we know it, this month of mercy and forgiveness will be over. We should try and spend every moment possible in the worship of Allaah so that we can make the most of this blessing. However, there are some of us who waste away their day playing video games, or worse still, watching TV, movies or even listening to music. Subhaan Allaah! Trying to obey Allaah by DISOBEYING him!











7 : Fasting but not giving up evil

Some of us fast but do not give up lying, cursing, fighting, backbiting, etc. and some of us fast but do not give up cheating, stealing, dealing in haraam, buying lotto tickets, selling alcohol, fornication, etc. and all kinds of impermissible things without realizing that the purpose of fasting is to not stay away from food and drink; rather the aim behind it is to fear Allaah.

“O you who believe! Fasting is prescribed for you as it was prescribed for those before you, that you may become Al-Muttaqoon (the pious)” [al-Baqarah 2:183]

The Prophet (Sal Allaahu Alaiyhi wa Sallam) said: "Whoever does not give up false speech and acting upon it, and ignorance, Allaah has no need of him giving up his food and drink." (Bukhaari)











8 : Smoking

Smoking is forbidden in Islam whether during Ramadaan or outside of it, as it is one of al-Khabaaith (evil things). And this includes ALL kinds of smoking material eg.cigars, cigarettes, pipes, sheesha, hookah etc.
"he allows them as lawful At Tayyibaat (all good and lawful things), and prohibits them as unlawful Al Khabaa'ith (all evil and unlawful things) [al-Araaf :157]

It is harmful, not only to the one smoking, but also to the ones around him. It is also a means of wasting ones wealth.
The Prophet (Sal Allaahu Alaiyhi wa Sallam) said: "There should be no harming or reciprocating harm."
This is especially true during fasting and it invalidates the fast. (Fatwa -Ibn Uthaymeen)











9 : Skipping Suhoor

The Prophet (Sal Allaahu Alaiyhi wa Sallam) said: "Eat suhoor for in suhoor there is blessing."(Bukhaari, Muslim).

And he (Sal Allaahu Alaiyhi wa Sallam) said: "The thing that differentiates between our fasting and the fasting of the People of the Book is eating suhoor." (Muslim)











10 : Stopping Suhoor at Imsaak

Some people stop eating Suhoor 10-15 minutes earlier than the time of Fajr to observe Imsaak.

Shaykh Ibn Uthaymeen said: This is a kind of bidah (innovation) which has no basis in the Sunnah. Rather the Sunnah is to do the opposite. Allaah allows us to eat until dawn: "and eat and drink until the white thread (light) of dawn appears to you distinct from the black thread (darkness of night)" [al-Baqarah 2:187]

And the Prophet (pbuh) said: "….eat and drink until you hear the adhaan of Ibn Umm Maktoom, for he does not give the adhaan until dawn comes."

This imsaak which some of the people do is an addition to what Allaah has prescribed, so it is false. It is a kind of extremism in religion, and the Prophet (Sal Allaahu Alaiyhi wa Sallam) said:
"Those who go to extremes are doomed, those who go to extremes are doomed, those who go to extremes are doomed." (Muslim)









11 : Not fasting if they missed Suhoor

Some people are too scared to fast if they miss Suhoor. However, this is a kind of cowardice and love of ease. What is the big deal if you missed a few morsels of food? Its not like you will die. Remember, obedience to Allaah overcomes everything.









12 : Saying the intention to fast out loud or saying a specific dua to start fasting

The intention is an action of the heart. We should resolve in our heart that we are going to fast tomorrow. That is all we need. It is not prescribed by the Shariah for us to say out loud, "I intend to fast", "I will fast tomorrow" or other phrases that have been innovated by some people. Also, there is no specific dua to be recited at the time of starting the fast in the correct Sunnah. Whatever dua you may see on some papers or Ramadaan calendars, etc. is a Bidah.

read more :
Uttering the intention to fast out loud is an innovation (bidah)
http://groups.yahoo.com/group/LoveIslam_LiveIslam/message/258

Authentic & UnAuthentic Dua for Iftaar !!!
http://groups.yahoo.com/group/LoveIslam_LiveIslam/message/263










13 : Delaying breaking fast

Some people wait until the adhaan finishes or even several minutes after that, just to be on the safe side. However, the Sunnah is to hasten to break the fast, which means breaking fast whenever the adhaan starts, right after the sun has set. Aaishah (RA) said: This is what the Messenger of Allaah (Sal Allaahu Alaiyhi wa Sallam) used to do. (Muslim)

The Prophet (Sal Allaahu Alaiyhi wa Sallam) said: "The people will continue to do well so long as they hasten to break the fast." (Bukhaari, Muslim)

Determine to the best of your ability, the accuracy of your clock, calendar, etc. and then have tawakkul on Allaah and break your fast exactly on time.













14 : Eating continuously until the time for Maghrib is up

Some people put so much food in their plates when breaking their fast and continue eating, enjoying dessert, drinking tea, etc., until they miss Maghrib. That is obviously not right. The Sunnah of the Prophet (pbuh) was that once he broke his fast with some dates, them he would hasten to the prayer. Once you are done with the prayer, you can always go back and eat some more if you wish.












15 : Missing the golden chance of having your Dua accepted

The prayer of the fasting person is guaranteed to be accepted at the time of breaking fast.

The Prophet (Sal Allaahu Alaiyhi wa Sallam) said: "Three prayers are not rejected: the prayer of a father, the prayer of a fasting person, and the prayer of a traveler." (al-Bayhaqi, saheeh by al-Albaani).

Instead of sitting down and making Dua at this precious time, some people forego this beautiful chance, and are too busy frying samosas, talking, setting the food, filling their plates and glasses, etc. Think about it....Is food more important than the chance to have your sins forgiven or the fulfillment of your Duas.











16 : Fasting but not praying

The fasting of one who does not pray WILL NOT BE ACCEPTED. This is because not praying constitutes kufr as the Prophet (Sal Allaahu Alaiyhi wa Sallam) said: "Between a man and shirk and kufr there stands his giving up prayer." (Muslim)

In fact, NONE of his good deeds will be accepted; rather, they are all annulled.
"Whoever does not pray Asr, his good deeds will be annulled." (Bukhaari)











17 : Fasting and not wearing Hijaab

Not wearing the Hijaab is a major sin as it is obligatory for Muslim women. (See Surah Nur, Surah Ahzaab). So fasting and not wearing hijaab certainly takes away enormously from the rewards of fasting, even if does not invalidate it.










18 : Not fasting because of exams or work

Exams or work is NOT one of the excuses allowed by the Shariah to not fast. You can do your studying and revision at night if it is too hard to do that during the day. Also remember that pleasing and obeying Allaah is much more important than good grades. Besides, if you will fulfil your obligation to fast, even if you have to study, Allaah will make it easy for you and help you in everything you do.

"Whosoever fears Allah, He will appoint for him a way out and provide for him from where he does not expect, Allah is Sufficient for whosoever puts his trust in Him." (Surah at-Talaaq 2-3)












19 : Mixing fasting and dieting

DO NOT make the mistake of fasting with the intention to diet. That is one of the biggest mistakes some of us make (esp. sisters). Fasting is an act of worship and can only be for the sake of Allah alone.

Otherwise, mixing it with the intention of dieting may become a form of (minor) Shirk.











20 : Fighting over the number of Rakaah of Taraweeh

There is no specific number of rakahs for Taraweeh prayer, rather it is permissible to do a little or a lot. Both 8 and 20 are okay. Shaykh Ibn Uthaymeen said: "No one should be denounced for praying eleven or twenty-three (rakaah), because the matter is broader in scope than that, praise be to Allaah."











21 : Praying ONLY on the night of the 27th

Some people pray ONLY on the 27th to seek Lailat ul-Qadr, neglecting all other odd nights, although the Prophet (Sal Allaahu Alaiyhi wa Sallam) said: "Seek Lailat ul-Qadr among the odd numbered nights of the last ten nights of Ramadaan." (Bukhaari, Muslim).










22 : Wasting the last part of Ramadaan preparing for Eid

Some people waste the entire last 10 days of Ramadaan preparing for Eid, shopping and frequenting malls, etc. neglecting Ibadah and Lailatul Qadr. although, the Prophet (Sal Allaahu Alaiyhi wa Sallam) used to strive the hardest during the last ten days of Ramadaan in worship (Ahmad, Muslim) and not in shopping. Buy whatever you need for Eid before Ramadaan so that you can utilize the time in Ramadaan to the max.

Aaishah (RA) said: “When the (last) ten nights began, the Messenger of Allaah (Sal Allaahu Alaiyhi wa Sallam)) would tighten his waist-wrapper (i.e., strive hard in worship or refrain from intimacy with his wives), stay awake at night and wake his family.” (Bukhaari and Muslim).











23 : Iftaar parties

Although inviting each other for breaking fast is something good and encouraged, some people go to extremes with lavish Iftaar parties with all sorts of disobedience to Allaah, from flirting, mixing of the sexes and hijaab-less women, to show-off and extravagance, to heedlessness to Salaah, and Taraweeh to even music and dancing.


--
My Lord! grant me that I should be grateful for Thy favor which Thou hast bestowed on me and on my parents, and that I should do good such as Thou art pleased with, and make me enter, by Thy mercy, into Thy servants, the good ones.
Sent from HTC Touch Pro™ on Vodafone






--
Ziyaul Islam

Senior Oracle DBA
Mumbai - INDIA

Thursday, August 12, 2010

சுக்கு கஞ்சி....

சுக்கு கஞ்சி.....

5 கப் கொதிக்கும் தண்ணீரில் நன்றாகக் கழுகிய 1 கப் அரிசியை வேக வைக்கவும். (கால் கப் அளவு முருங்கை இலை (கீரை) கிடைத்தால் அரிசி ஓரளவு வெந்ததும் அதில் கலக்கவும்)

துருவிய தேங்காய் : முக்கால்
சுக்கு : 1 இஞ்ச் நீளம்
பூண்டு : 4 அல்லி...(இந்தியாவில் கிடைக்கும் சாதரண பூண்டு எனில் 7 அல்லிகள் தேவை)
சீரகம் : ஒரு மேசைக்கரண்டி

ஆகியவற்றை நன்றாக மிக்சியில் அரைத்து கஞ்சியில் கலக்கவும், தேவையான அளவு உப்பு சேர்த்து பருவமாக வெந்தவுடன் இறக்கிவிடவும்.

------

மிழகு கஞ்சி....

5 கப் கொதிக்கும் தண்ணீரில் நன்றாகக் கழுகிய 1 கப் அரிசியை வேக வைக்கவும். (கால் கப் அளவு முருங்கை இலை (கீரை) கிடைத்தால் அரிசி ஓரளவு வெந்ததும் அதில் கலக்கவும்)

துருவிய தேங்காய் : முக்கால்
மஞ்சள் பொடி : அரை மேஜை கரண்டி
பெருஞ்சீரகப்பொடி : 2 மேஜை கரண்டி
வத்தல் பொடி : அரைக்கால் மேஜை கரண்டி
மல்லிப்பொடி : அரை மேஜை கரண்டி
சிறிய உள்ள : ஆறு அல்லது ஏழு
இலவங்கப்பட்டை (கறுவா) : 2 இஞ்ச் நீளம்

ஆகியவற்றை நன்றாக மிக்சியில் அரைத்து கஞ்சியில் கலக்கவும், தேவையான அளவு உப்பு சேர்த்து பருவமாக வெந்தவுடன் இறக்கிவிடவும்.

தாளிக்க : சிறிய உள்ளி, கடுகு, கறி வேப்பிலை ஆகியவை உபயோகித்து தாளித்து கஞ்சியில் கலக்கவும்.

--

அபூ நூறா

HASHIM AMLA'S INTERVIEW ON RADIO ISLAM SOUTH AFRICA

HASHIM AMLA'S INTERVIEW ON RADIO ISLAM SOUTH AFRICA

http://radioislam.orgza.info/a/index.php?option=com_content&task=view&id=18419&Itemid=125

KINDLY FOLLOW THE LINK ABOVE FOR AN INTERVIEW WITH SOUTH AFRICAN CRICKETER HASHIM AMLA. WORTH LISTENING.

YOU CAN ALSO LISTEN VARIOUS ISLAMIC PROGRAMMES LIVE ON RADIO ISLAM SOUTH AFRICA ON THE FOLLOWING LINK
http://radioislam.ndstream.net/

JAZAKALLAHUKHAIR

RAMADAN MUBARAK
PLEASE REMEMBER IN YOUR DUAS
IQBAL AHMED ARIF
JEDDAH

மாணவர்களுக்கான தேடிய‌ந்திரம்

மாணவர்களுக்கான தேடிய‌ந்திரம்


கூகுல் சார்ந்தவை,கூகுல் சாராதவை என புதிய‌ தேடிய‌ந்திர‌ங்களை சுலபமாக இர‌ண்டு வ‌கையாக பிரித்து விடலாம்.
கூகுல் சார்ந்த‌வை என்றால் தேடலுக்கு என்று தனி தொழில்நுட்பத்தை நாடாமல் கூகுல் தேடலை பயன்படுத்திக்கொண்டு அத‌ன‌டிப்ப‌டையில் புதிய‌ தேட‌ல் வ‌ச‌தியை அளிக்க‌ முய‌லும் தேடிய‌ந்திர‌ங்க‌ள் என்று பொருள்.
உதாரண‌த்திற்கு சில தேடியந்திரங்கள் பிடிஎப் கோப்புகளை தேடித்த‌ருவதாக பெருமைபட்டுக்கொள்ளும்.ஆனால் அவற்றை பயன்படுத்தும் போது பார்த்தால் கீழே எங்காவது கூகுலுக்கு நன்றி என குறிப்பிடப்பட்டிருக்கும்.கூகுலிலேயே பிடிஎப் கோப்புகளை தேடலாம்.இந்த தேடிய‌ந்திரங்கள் பிடிஎப் கோப்புகளை மட்டும் கூகுலில் தேடி பட்டியலிட்டு தந்து நம் வேலையை எளிதாக்குகின்றன.
இதே போல‌ கிரீன்மேவ‌ன் போன்ற‌ தேடிய‌ந்திர‌ங்க‌ள் த‌ங்க‌ளை ப‌சுமை தேடிய‌ந்திர‌ங்க‌ள் என்று அழைத்துக்கொள்கின்ற‌ன‌.சுற்றுசூழ‌ல் நோக்கில் இவை முடிவுக‌ளை த‌ந்தாலும் அடிப்ப‌டையில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுவ‌து கூகுலின் தேட‌ல் முடிவுக‌ள் தான்.
உண்மையில் இப்ப‌டி த‌ன‌து தேட‌ல் ப‌ட்டிய‌லை ப‌ல‌ரும் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌ அனுமதிப்ப‌தே கூகுலின் வெற்றிக்கான‌ கார‌ண‌ங்க‌ளில் ஒன்று.
கூகுல் சாராத‌ தேடிய‌ந்திர‌ங்க‌ள் முற்றிலும் சுயேச்சையான‌வை.த‌ங்க‌ளுக்கென்று த‌னித்துவ‌மான‌ தேட‌ல் தொழில்நுட்ப‌த்தோடு இவை தேட‌ல் உல‌கில் த‌ங்க‌ளுக்கான‌ இட‌த்தை பிடிக்க‌ முய‌ற்சிக்கின்ற‌ன‌.இவை ஆயிர‌க்க‌ண‌க்கில் இருக்கின்ற‌ன‌.
மாமூலான‌ தேட‌லில் இருந்து வில‌கி ச‌மூக‌ நோக்கில் தேட‌லில் ஈடுப‌டும் தேடிய‌ந்திர‌ங்க‌ளும் இப்போது பிர‌ப‌ல‌மாகி வ‌ருகின்ற‌ன‌.
இவை ஒருபுற‌ம் இருக்க‌,கூகுல் சார்ந்த‌ தேடிய‌ந்திர‌ங்க‌ளிலேயே அற்புத‌மான‌ தேடிய‌ந்திர‌ம் என்று ஸ்வீட்ச‌ர்ச் தேடிய‌ந்திர‌த்தை குறிப்பிட‌லாம்.உண்மையில் கூகுலை அடிப்ப‌டையாக‌ கொண்டு இதைவிட‌ அருமையான‌ தேடிய‌ந்திர‌த்தை உருவாக்க‌ முடியாது என்றும் சொல்லலாம்.
ஸ்வீட்ச‌ர்ச் மாண‌வ‌ர்க‌ளுக்கான‌ தேடிய‌ந்திர‌ம் என்று த‌ன்னை வ‌ர்ணித்துக்கொள்கிற‌து.அந்த‌ வர்ண‌னைக்கு முழு விசுவாச‌மாக‌ மாண‌வ‌ர்க‌ளுக்கு பொருத்தாமான‌ தேட‌ல் முடிவுக‌ளை த‌ருகிற‌து.தேட‌லுக்கு கெட்டிக்காரானான‌ கூகுல் வைய‌விரிவு வ‌லையில் கோடிக்க‌ண‌க்கான‌ ப‌க்க‌ங்க‌ளை தேடிப்பார்த்து முடிவுக‌ளை கொண்டு வ‌ந்து கொட்டுகிற‌து.இவ‌ற்றில் பொருத்த‌மில்லாத‌வையும்,ப‌த‌ர்க‌ளும் நிறைய‌வே இருக்க‌லாம்.
ஆனால் ஸ்வீட்ச‌ர்ச்சோ க‌ல்வித்துறை நிபுண‌ர்க‌ள் ப‌ரிசிலித்து அங்கீக‌ரித்த‌ 35 ஆயிர‌ம் இணைய‌த‌ள‌ங்க‌ளில் ம‌ட்டுமே தேடி த‌க‌வ‌ல்க‌லை த‌ருகிற‌து.இந்த‌ த‌ள‌ங்கள் எல்லாமே ஆசிரிய‌ர்க‌ள்,கல்வியாளர்கள்,நூல‌க‌ர்க‌ள்,போன்ற‌வ‌ர்க‌ளால் ச‌ரிபார்க்க‌ப்ப‌ட்ட்வை என்ப‌தால் முடிவுக‌ள் மாண‌வ‌ர்க‌ளுக்கு ஏற்ற‌தாக‌வும் ப‌ய‌னுள்ள‌தாக‌வும் இருக்கும்.
பொதுவாக‌ க‌ல்வி அமைப்புக‌ளின் இணைய‌த‌ள‌ங்க‌ள் தேடிய‌ந்திர‌ங்கள் கண்ணில் படும் வகையில் தகவல்களை வடிவமைக்கவேண்டும் என்பதில் கவன‌ம் செலுத்துப‌வையாக‌ இல்லாதாதால் அவ‌ற்றில் உள்ள‌ விவ‌ர‌ங்க‌ள் தேட‌ல் ப‌க்க‌த்தில் இட‌ம்பெறாம‌லேயே போக‌லாம்.ஆனால் ஸ்வீட்ச‌ர்ச் க‌ல்வி நிறுவ‌ன‌ த‌ள‌ங்களில் உள்ள‌ த‌க‌வ‌ல்களை அழ‌காக‌ தேடி எடுத்து ப‌ட்டிய‌லிடுகிற‌து.
அதும‌ட்டும் அல்ல‌ தொட‌ர்ந்து இத‌ நிபுண‌ர் குழு இணைய‌த‌ள‌ங்க‌ள் ப‌ரிசில‌த்த‌ வ‌ண்ண‌ம் இருந்து பொருத்த‌மான‌ இணைய‌த‌ள‌ங்க‌ளை ம‌ட்டுமே தேட‌லுக்கு சேர்த்துக்கொள்கிற‌து.மேலும் முடிவுகளை அலசி ஆராய்ந்து அவற்றை தொடர்ந்து பட்டை தீட்டிக்கொண்டே இருக்கிறது.
மாண‌வ‌ர்க‌ளை பொருத்த‌வ‌ரை இந்த‌ தேடிய‌ந்திர‌ம் மிக‌வும் ப‌ய‌னுள்ள‌தாக‌ இருக்கும்.தேட‌ல் முடிவுக‌ளில் பொருத்த‌மான‌தையும் ந‌ம்ப‌க‌மான‌தையும் தேடிக்க‌ண்டுபிடிக்க‌ அல்லாடாம‌ல் எடுத்த‌ எடுப்பிலேயே தேவையான‌ முடிவுகளை இதன் மூல‌ம் பெற‌லாம்.
இணைய‌ உல‌கில் கூகுல் விள‌ம்ப‌ர‌ங்க‌ளை பெறுவ‌த‌ற்காக‌ என்றே புத்திசாலித்த‌ன‌மாக‌ உருவாக்க‌ப்ப‌ட்ட‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் ப‌ல‌ இருக்கின்ற‌ன‌.இவ‌ற்றில் உள்ள‌ விவ‌ர‌ங்க‌ள் பெரும்பாலும் ப‌ய‌ன‌ற்ற‌வையாக‌ இருக்கும்.ஸ்வீட்ச‌ர்ச் இந்த இணைய ப‌த‌ர்க‌ளை எல்லாம் த‌விர்த்துவிடுகிற‌து.என‌வே மாண‌வ‌ ச‌மூக‌த்திற்கு மிக‌வும் ப‌ய‌னுள்ள‌தாக‌ இருக்கும்.
ஸ்வீட்ச‌ர்ச்சில் இன்னும் சில‌ அற்புத‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌.அத‌ன் தேட‌ல் ப‌க்க‌த்த‌ல் இட‌து ப‌குதியில் யோலிங்க் என்று ஒரு கட்ட‌ம் தோன்றும்.அதில் ஏதாவ‌து ஒரு குறிச்சொல்லை அடித்தால் முடிவுகளின் பொருத்த‌மான‌ த‌ன்மையை அல‌சி ஆராய்ந்து அத‌ர்கேற்ற‌ முடிவுக‌ள் வ‌டிக்க‌ட்ட‌ப்ப‌டும்.இந்த‌ முடிவுக‌ளை பேஸ்புக் அல்ல‌து டிவிட்ட‌ர் வ‌ழியே ப‌கிர்ந்தும் கொள்ள‌லாம்.
இந்த‌ பிர‌தான‌ தேட‌ல் வ‌ச‌தியை த‌விர‌ இதில் சில‌ உப‌ தேடல்க‌ளும் உண்டு.ஸ்வீட்ச‌ர்ச்மீ என்ற‌ ப‌குதியை இள‌ம் மாண‌வ‌ர்க‌ள் த‌ங்களுக்கான‌தாக‌ வ‌டிவ‌மைத்துக்கொள்லாம். இதே போல‌ ஆசிரிய‌ர்க‌ள் ம‌ற்றும் நூல‌க‌ர்க‌ளுக்கான‌ த‌னித்த‌னி ப‌குதிக‌ளும் இருக்கின்ற‌ன‌.
இவ‌ற்றை எல்லாம் விட‌ சூப்ப‌ரான‌து தின‌ம் ஒரு தகவல் ப‌குதியும்,சுய‌ச‌ரிதைக்கான‌ ப‌குதியும் தான்.தின‌ம் ஒரு த‌க‌வ‌ல் ப‌குதியில் தின‌ந்தோறும் ஏத‌வாது புதிதாக‌ க‌ற்றுக்கொள்ள‌லாம்.இன்றைய‌ வார்த்தை,இன்றைய‌ பொன்மொழி,இன்றைய‌ பேட்டி,இன்றைய கவிதை,,என‌ ஏக‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ இருக்கின்ற‌ன்.
சுய‌ச‌ரிதை ப‌குதியில் சுய‌ச‌ரிதை எழுதுவ‌த‌ற்கான‌ குறிப்புக‌ளோடு,தின‌ம் ஒரு சுயசரிதைக‌ளின் தொகுப்பு பிற‌ந்த‌ நாள் காண்ப‌வ‌ர்க‌ள் என‌ நிறைய‌ விஷ‌ய‌ங்க‌ல் இட‌ம்பெறுகின்ற‌ன‌.ஆர்வ‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் மணிக்க‌ன‌க்கில் பொழுதை க‌ழிக்க‌லாம்
http://www.sweetsearch.com/
Thanks: cybersimman blog

Listen to the Holy Quran on the link below.

Listen to the Holy Quran on the link below.


http://www.listentoquran.net/

நேரத்திட்டமிடல்: வெற்றியடைய 10 சுலபமான வழிகள்

நேரத்திட்டமிடல்: வெற்றியடைய 10 சுலபமான வழிகள்!!


fasteddie.wordpress.com

வேகமான இன்றைய உலகில், நாமும் வேகமாவும், விவேகமாவும் இல்லையென்றால் வாழ்க்கை ஓட்டத்தில் மிகவும் பின்தங்கிவிடுவோம் என்பதுதான் நிதர்சனம். இந்தப் புரிதலினால், நம்மில் பலர் இன்று வாழ்வியல் முறைகளில் பலவகையான மாற்றங்களை அவ்வப்போது செய்துகொண்டு, வாழ்க்கையின் அடுத்தகட்டத்தை நோக்கி பயணிக்கிறோம்.
வாழ்வியல் முறை மாற்றங்களில் மிக முக்கியமானதும், எளிதில் கைவரப்பெறாததுமாய் ஒன்று இருக்குமென்றால், அது நேரத்திட்டமிடலே என்பது நம்மில் பலர் அறிந்திருக்கும் ஒன்று. நேரத்திட்டமிடல் குறித்த புரிதல்களையும், சில/பல நுணுக்கங்களையும் புத்தகங்கள், துறை வல்லுனர்கள், நண்பர்கள் மூலமாக எனப் பலவாறாக சேகரித்து வைத்திருப்போர் பட்டியலில் நம்மில் பலர் கண்டிப்பாக இருப்போம்!

நேரத்திட்டமிடல் குறித்த திட்டங்கள், ஆயத்தங்கள், முயற்ச்சிகள் என எல்லாம் இருந்தும் சில/பல சமயங்களில் அதில் வெற்றியடைவது என்பது நம்மில் பலருக்கு “கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட முடவன் கதையாய் போய்விடுகிறது!”. இதற்க்கு காரணம், நேரத்தை நாம் எப்படி அணுகுகிறோம் அல்லது நேரத்துடன் நம்மை நாம் எப்படி தொடர்புபடுத்திக்கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது என்கிறார்கள் உளவியலாளர்கள்!
நேரத்துடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வதென்பது கிட்டத்தட்ட முதலீடு செய்வதைப்போல. அதாவது, நேரத்துடனான நம் உறவு/தொடர்பு ஒரு கொடுக்கல்-வாங்கல் போலத்தானாம்?! தொடக்கத்தில் நாம் முதலீடு செய்யும் ஒரு குறிப்பிட்ட கால அளவானது இறுதியாக நமக்கு நல்ல லாபத்தைக் தரும் என்கிறார்கள் உளவியலாளர்கள்!

என்னங்க ஒன்னும் புரியலீங்களா? எனக்கும் அப்படித்தான் இருக்கு. அதுக்காக அப்படியே விட்றவா முடியும். வாங்க நேரத்திட்டமிடலா நாமளா அப்படீன்னு ஒரு கை பார்த்துடுவோம்……
நேரத்திட்டமிடலில் வெற்றியடைய முத்தான 10 சுலபமான வழிகள்!

நம்ம நேரத்தை நன்றாக திட்டமிட்டு செலவு செய்ய, அப்படிச்செய்தபின் அதற்க்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கும் 10 முத்தான, அதேசமயம் மிகவும் சுலபமான (?) வழிகளை பின்வரும் பட்டியலில் பார்ப்போம்…..

ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதை நிறுத்துங்கள் (Stop multitasking): சமீபகாலங்கள்ல, பொதுவாக பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது. அடிப்படையில், அறிவியல்ரீதியாக பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு தாவுவது/மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது என்பது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது!

முக்கியத்துவம் வாய்ந்த செயல்களை தேர்வு செய்து கொள்ளுங்கள் (Set your priorities): ஒவ்வொரு நாளுக்குமான தலையாய செயல்களை மனதில் பதிவு செய்துகொள்ளுங்கள். உங்கள் தேர்வுகளின் முக்கியத்துவங்கள் மாற்றியமைப்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, தீப்பற்றிக்கொண்ட ஒரு கட்டிடத்தை விட்டு வெளியேறுவதைவிட பணியிடத்தில் ஒரு விண்ணப்பத்தை எழுதி முடிக்கவேண்டுமென்பது முக்கியமானதல்ல!
உடற்பயிற்ச்சி செய்யுங்கள் (Exercise): உங்கள் உழைப்புத்திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த மனநலம் என்பது மிக அவசியம்! அதனால், புதிய யுக்திகளை கண்டறியவும் மன நலனை மேம்படுத்தவும், பணிக்கிடையில் நல்ல காற்றை சுவாசித்து காலாற நடந்துவிட்டு வாருங்கள்!

‘முடியாது’ என்பதை கனிவாக சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் (Learn to say ‘no’ with kindness): நம் பணிகளுக்கிடையில் நண்பர்களுக்கு சிறிய உதவிகள் செய்வதென்பது அவசியம்தான் என்றாலும், அச்சிறு உதவிகள் சில சமயங்களில் மிகுந்த நேரம் பிடிப்பவையாக, அயற்ச்சியைத் தருபவையாக, முக்கியத்துவம் குறைந்தவையாக இருக்கும் பட்சத்தில், கனிவாக “என்னால் இவ்வுதவி செய்ய இயலவில்லை” எனச் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்! இது உங்கள் நேரத்தை சேமிக்கவும், மன உளைச்சலைத் தவிர்க்கவும் உதவும்!

காலையில் ஒரு 15 நிமிடம் முன்பாக எழ முயற்ச்சியுங்கள் (Get up fifteen minutes early): ஒவ்வொரு நாளும் காலையில் சீக்கிரம் எழுந்து, பணிகளைத் தொடங்கும்முன் தியானம் செய்யவோ, உங்களின் டைரிக் குறிப்பு எழுதவோ பழகிக்கொள்ளுங்கள். உடல் நலனைப்போலவே மனநலனும் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதது!

உடற்பயிற்ச்சியிலும், மனநலன் காக்கும் செயல்களிலும் ஈடுபடுங்கள்!

போதுமான அளவு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் (Get enough rest): ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லுமுன், அதிகப்படியாக நீங்கள் செலவு செய்யும் ஒரு மணி நேரம், உங்களின் அடுத்த நாளின் ஒரு மணி நேர வேலையை குறைப்பதில்லை. ஓய்வின்றி வேலைசெய்பவர்கள் குழப்பத்துக்குள்ளாவார்கள் என்கிறது உளவியல்!

எதிர்பார்ப்புகளை மேலான்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள் (Manage expectations): உங்கள் அறையக் குப்பையாக்கிவிட்டு, விழுந்து விழுந்து சுத்தம் செய்வதற்க்கு பதிலாக, குப்பைகள் சேர்வதை முன்பே தவிர்த்துவிட்டால், குப்பையை சுத்தம்செய்வதில் வீணாகும் உங்களின் பொன்னான நேரம் சேமிக்கப்படும்!

மின்னஞ்சல் வாசிக்கும் நேரத்தை திட்டமிட்டு வைத்துக்கொள்ளுங்கள் (Check email at set times): ஒவ்வொரு மின்னஞ்சலும் குட்டி போடும் தெரியுமா உங்களுக்கு?! அதாங்க, நீங்க அனுப்புற ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் ஒரு பதில் மின்னஞ்சல் வருமே அதைச்சொன்னேன். அதாவது, மின்னஞ்சல்களை தினசரி சரியாக கவனித்துக்கொண்டால் நேர விரயம் ஏற்படாது. அதேமாதிரி, வேறு வேலை செய்யும்போது மின்னஞ்சல்களை பார்க்காதீங்க, கவனச்சிதறல் ஏற்படுவதை தவிர்க்க!

தேவையில்லாதபோது இணையம்/செல்பேசியை அணைத்துவிடுங்கள் (Unplug): அசினும், நயன்தாராவும் அடுத்த எந்த படத்துல நடிக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்கலைன்னா, ஒன்னும் குடி முழுகிப்பொயிடாது. அதனால, இணையத்தை உலாவுவதிலும், செல்பேசியில் குறுச்செய்தி அனுப்பவதிலுமே காலத்தைக் கழிக்காமல், இரண்டையும் சிறிது நேரம் அணைத்துவிட்டு, உடற்பயிற்ச்சியோ தியானமோ செய்து ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ளுங்கள்!
செயல்பட அதிக நேரம் இருப்பதாய் எண்ணிக்கொள்ளுங்கள் (Embrace time-abundant thinking): ஒவ்வொரு செயலைச் செய்யவும் போதுமான நேரம் இருக்கும்பட்சத்தில், அதை உணர்ந்து மன உளைச்சலைத் தவிர்க்கவேண்டும். குறிப்பிட்ட அந்தச் செயலுடன் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். மாறாக, மனதுக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபட்டு மனதையும் லேசாக்கி, நேரத்தையும் சரியாக செலவு செய்யவேண்டும்.

நாம் எப்போதும் இறந்தகாலத்திலும், எதிர்காலத்திலும் வாழ்வதைத் தவிர்த்து நிகழ்காலத்தில் வாழப் பழகிக்கொண்டோமானால் மனஅழுத்தம் இருந்த இடம் தெரியாமல் தொலைந்துபோகும். நேற்றும் நாளையும் மாயைகள். அவை இனி இல்லை, இந்தக் கணம்தான் உண்மை என்று எண்ணி வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்ளுங்கள். வெற்றி நமக்கே…..!!



Thanks:padmahari

Wednesday, August 11, 2010

சிரிக்கலாம் வாங்க-435:::| Rumour...!

சிரிக்கலாம் வாங்க-435:::| Rumour...!

சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார். "சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?"

வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும், வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்தி கேட்டார். "ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?"
அவர் பேச்சில் ஆரம்பித்தில் இருந்த வேகம் குறைந்தது. "இல்லை...."

"நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் உபயோகப்படக்கூடிய விஷயமா?"

"அதில்லை..."

"இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?"

"இல்லை"

"இதைச் சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?"

"அப்படிச் சொல்ல முடியாது....." அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.

"ஐயா, எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ, எதனால் நமக்கோ,
சமூகத்திற்கோ பயனுமில்லையோ, எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு
நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. குறுகிய
வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதில் நம் கவனம் செலுத்தலாமே" என்று

சாக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.

மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப்படும் போது நம்மில் எத்தனை பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டு தேர்ந்தெடுக்கிறோமா?
மற்றவர்கள் விஷயங்களையும், அவர்களது பணத்தையும் நம்மில் பெரும்பாலானோர் நம்முடையதைப் போல் பயன்படுத்தத் தவறி விடுகிறோம். ஒருவித அலட்சியம் தானாக வந்து விடுகிறது. அதன் விளைவுகள் நம்மை பாதிப்பதில்லை என்பதும் அவர்களை எந்த அளவில் பாதிக்கிறது என்பதை நாம் உணரத் தவறி விடுகிறோம் என்பதுமே அதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.

எங்கோ படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதை சிறிது சிறிதாகப் பிய்த்து காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார்.

சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னார். "சரி இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா".

சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? "குருவே அந்த பஞ்சு காற்றில் இன்னேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?"
"ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்து திரும்பக் கொண்டு வர முடியவில்லை. மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?"

அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது. கண்ணீர் மல்க வெட்கித் தலை குனிந்த சீடன் அன்றிலிருந்த அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.
நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர் மனதில் என்னென்ன அபிப்பிராயங்களை உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய் பொழுது போக்காய் அடுத்தவர் பற்றி நாம் முழுவதுமாக அறியாததைப் பற்றி சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

சிலர் நாங்கள் உள்ளதைத் தானே சொல்கிறோம், உண்மையைத் தானே சொல்கிறோம் என்று மற்றவரின் பலவீனமான உண்மைகளையும், நல்லதல்லாத உண்மைகளையும்
சொல்லக்கூடும். அப்போதும் ஒரு கேள்வியை நம்முள் கேட்டுக் கொள்வது மிகவும் நல்லது. "நம்முடைய எல்லா உண்மைகளையும் நாம் வெளியில் சொல்கிறோமோ? வெளியே நம்மைப் பற்றி தெரிய வேண்டாம் என்று நினைக்கிற தர்மசங்கடமான உண்மைகள் நம் வாழ்வில் இல்லவே இல்லையா?"

நாம் மனிதர்கள். நம்முள் மிக மேன்மையாவர்கள் கூட அந்த மேன்மையை எட்டுவதற்கு முன் எத்தனையோ தவறுகளை செய்து அதிலிருந்து கற்றிருக்கிறார்கள்; எத்தனையோ பலவீனங்களுடன் போராடிய பிறகே வென்றிருக்கிறார்கள். மற்றவர்களைப் பற்றி நாம் சொல்லும் தவறுகளை நாம் செய்யாதிருக்கக்கூடும். ஆனால் மற்ற எத்தனையோ தவறுகள் நாமும் செய்கிறோம். இப்படியிருக்கையில் நாம் அடுத்தவர் பற்றி வம்பு பேசுவது நியாயமா?
இனி யாராவது அடுத்தவர் பற்றி உங்களிடம் நல்லதல்லாதவற்றைச் சொல்ல வந்தால் பெரிய ஆர்வம் காண்பிக்காதீர்கள். சாக்ரடீஸ் போல சொல்ல முடியா விட்டாலும் நீங்கள் ஆர்வம் காண்பிக்காத போது மற்றவர்கள் உங்களிடம் சொல்வதைத் தானாகக் குறைத்துவிடுவார்கள். அதே போல் மற்றவர்களைப் பற்றி நல்லதல்லாதவற்றை நீங்கள் சொல்ல நினைக்கும் போது உதடுகளை இறுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் செய்யும் மிக உத்தமமான காரியம் அதுவாகத் தான் இருக்க முடியும்

ஊனம் தடையில்லை

ஊனம் தடையில்லை

நமது உடலில் இருக்கின்ற குறைகள் நமது சாதனைகளுக்கு முட்டுக்கட்டைகள் கிடையாது. சாதிக்கத் துடிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இந்த ஊனமே ஒரு தூண்டுகோலாக அமைந்துள்ளன. உதாரணமாக, இந்த உலகில் ஏதாவது ஒரு குறையுடன் பிறந்து தங்களின் சாதனைகளுக்கு என்றும் ‘சாவில்லை’ என்று நிலைநாட்டியவர்கள் ஏராளம். உதாரணமாக,

சாண்டோ எனபவர் பலகீனமான நோயாளியாகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினார். சாண்டோ எவரிடமிருந்தும் அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை. அவர் விரும்பியது பலம்! மன உறுதியுடன் தேகப் பயிற்சி செய்து உடல் வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். அவர் காலத்தில் ‘மிகவும் பலசாலி’ என்ற பெயரையும் பெற்றார்.
உடல் ஊனமுற்ற பலகீனமான உடலை உடைய ஜார்ஜ் ஜோவெட் என்கிற சிறுவன் தன்னுடைய நிலையை எண்ணி ஒரு போதும் வருந்தவில்லை. மற்றவர்கள் தனக்காக வருத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கவும் இல்லை. தன்னுடைய மனதையும், உடலையும் மேலும் மேலும் வளப்படுத்திக் கொண்டான். என்ன நடந்தது? அடுத்து பத்து ஆண்டுகளில் ‘செயலுக்கு ஏற்ற விளைவு’ என்ற இயற்கைவிதி செயல்பட்டது. உலகத்தின் ‘மிகச்சிறந்த பலசாலி’ என்கிற பெயரைப் பெற்றார்.
ஆனெட் கெல்லர்மேன் – உடல் ஊனமுற்ற நோயாளிப் பெண். முழுஉடலை அவள் விரும்பினாள். பயிற்சி, சிகிச்சை ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு மனஉறுதியுடன் முழுமையான உடலை அவள் ஏற்படுத்திக் கொண்டாள். உலகத்தில் உள்ள முழுமையான உடலைப் பெற்ற ஒருத்தியாக தேர்வு செய்யப்பட்டாள். நீரில் ‘டைவ்’ செய்கின்ற உலகச் சாம்பியன் பட்டத்தையும் அவள் வென்றாள்.
பீதோவன் சாகாவரம் பெற்ற ராகங்களை செவிடாக இருந்த நிலையில் தான் உருவாக்கினார்.
கவிஞர் மில்டன் – ‘சொர்க்கம் இழுக்கப்படல்’ என்கிற காவியத்தை பார்வையற்ற நிலையில் தான் எழுதி முடித்தார்.
ஃபிராங்க்ளின் ரூஸ் வெஸ்ட் – இளம்பிள்ளை வாதத்தால் கால் ஊனமுற்ற நிலையிலும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தார்.
ராபர்ட் லூயி ஸ் ஸ்டீபென்சன் - ஒரு மணி நேரம் கூட இருமலில் இருந்தும், நெஞ்சு வலியில் இருந்தும் விடுபட்டது இல்லை. அந்த நிலையிலும் ‘புதையல் தீவு’ போன்ற அருமையான கதைகளை எழுதி படைத்தார்.
எடிசன் தன்னுடைய பரிசோதனைகளில் காட்டியதைப் போல, நாமும் தொடர்ந்து முயற்சியில் உறுதியினைக் காட்டுவோம். பல தோல்விகளுக்குப் பிறகுதான் சரியானது என்ற தீர்வைக் கண்டுபிடிக்க முடிகிறது.

இவர்கள் யாவரும் குறைபாடுகள் உடையவர்கள் அல்ல. தங்களின் குறைபாடுகளை ஈடுசெய்ய மிக உயர்ந்த கோட்ப்பாடுகளை உருவாக்கிக் கொண்டார்கள். அதை தங்களின் வாழ்க்கையில் பிரதிபலித்திடவும் செய்தனர்.
“முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை”.

ஊனம் தடையில்லை

ஊனம் தடையில்லை

நமது உடலில் இருக்கின்ற குறைகள் நமது சாதனைகளுக்கு முட்டுக்கட்டைகள் கிடையாது. சாதிக்கத் துடிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இந்த ஊனமே ஒரு தூண்டுகோலாக அமைந்துள்ளன. உதாரணமாக, இந்த உலகில் ஏதாவது ஒரு குறையுடன் பிறந்து தங்களின் சாதனைகளுக்கு என்றும் ‘சாவில்லை’ என்று நிலைநாட்டியவர்கள் ஏராளம். உதாரணமாக,

சாண்டோ எனபவர் பலகீனமான நோயாளியாகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினார். சாண்டோ எவரிடமிருந்தும் அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை. அவர் விரும்பியது பலம்! மன உறுதியுடன் தேகப் பயிற்சி செய்து உடல் வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். அவர் காலத்தில் ‘மிகவும் பலசாலி’ என்ற பெயரையும் பெற்றார்.
உடல் ஊனமுற்ற பலகீனமான உடலை உடைய ஜார்ஜ் ஜோவெட் என்கிற சிறுவன் தன்னுடைய நிலையை எண்ணி ஒரு போதும் வருந்தவில்லை. மற்றவர்கள் தனக்காக வருத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கவும் இல்லை. தன்னுடைய மனதையும், உடலையும் மேலும் மேலும் வளப்படுத்திக் கொண்டான். என்ன நடந்தது? அடுத்து பத்து ஆண்டுகளில் ‘செயலுக்கு ஏற்ற விளைவு’ என்ற இயற்கைவிதி செயல்பட்டது. உலகத்தின் ‘மிகச்சிறந்த பலசாலி’ என்கிற பெயரைப் பெற்றார்.
ஆனெட் கெல்லர்மேன் – உடல் ஊனமுற்ற நோயாளிப் பெண். முழுஉடலை அவள் விரும்பினாள். பயிற்சி, சிகிச்சை ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு மனஉறுதியுடன் முழுமையான உடலை அவள் ஏற்படுத்திக் கொண்டாள். உலகத்தில் உள்ள முழுமையான உடலைப் பெற்ற ஒருத்தியாக தேர்வு செய்யப்பட்டாள். நீரில் ‘டைவ்’ செய்கின்ற உலகச் சாம்பியன் பட்டத்தையும் அவள் வென்றாள்.
பீதோவன் சாகாவரம் பெற்ற ராகங்களை செவிடாக இருந்த நிலையில் தான் உருவாக்கினார்.
கவிஞர் மில்டன் – ‘சொர்க்கம் இழுக்கப்படல்’ என்கிற காவியத்தை பார்வையற்ற நிலையில் தான் எழுதி முடித்தார்.
ஃபிராங்க்ளின் ரூஸ் வெஸ்ட் – இளம்பிள்ளை வாதத்தால் கால் ஊனமுற்ற நிலையிலும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தார்.
ராபர்ட் லூயி ஸ் ஸ்டீபென்சன் - ஒரு மணி நேரம் கூட இருமலில் இருந்தும், நெஞ்சு வலியில் இருந்தும் விடுபட்டது இல்லை. அந்த நிலையிலும் ‘புதையல் தீவு’ போன்ற அருமையான கதைகளை எழுதி படைத்தார்.
எடிசன் தன்னுடைய பரிசோதனைகளில் காட்டியதைப் போல, நாமும் தொடர்ந்து முயற்சியில் உறுதியினைக் காட்டுவோம். பல தோல்விகளுக்குப் பிறகுதான் சரியானது என்ற தீர்வைக் கண்டுபிடிக்க முடிகிறது.

இவர்கள் யாவரும் குறைபாடுகள் உடையவர்கள் அல்ல. தங்களின் குறைபாடுகளை ஈடுசெய்ய மிக உயர்ந்த கோட்ப்பாடுகளை உருவாக்கிக் கொண்டார்கள். அதை தங்களின் வாழ்க்கையில் பிரதிபலித்திடவும் செய்தனர்.
“முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை”.

அமெரிக்காவில் முஸ்லிம்கள்-ஓர் பயணக்கட்டுரை

அமெரிக்காவில் முஸ்லிம்கள்-ஓர் பயணக்கட்டுரை
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)


http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=270
- Hide quoted text -

அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் 14..7.2010 மாலை சி.என்.என் டி.வி சேனல் செய்தியினைப் பார்த்துக் கொணடிருந்த எனக்கு ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க ஹிஜாப் அணிந்த முஸ்லிம் சிறிமி மிகவும் வீராவேசமாக ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தாள். அது என்ன பேச்சு என்று கேட்க உங்களுக்கு ஆவலாக இருக்கும். 2001 செப்டம்பர் மாதம் 9ந்தேதி அமெரிக்காவின் வர்த்தக நகரமான நியூயார்க்கில் இரட்டைக் கோபுரத்தினை விமானகங்கள் மூலம் மோதி தகர்த்து அதன் மூலம் 2000 பேர்களுக்கு உயிர் சேதமிட்ட இடத்தின் அருகில் ஒரு பள்ளிவாசல் கட்ட அனுமதிக்கலாமா என்ற கருத்தாய்வுக் கூட்டத்தில் தான் அந்த சிறுமி ஆவேசமாக பேசினாள். அவளுக்கு முன்பு பேசிய அமெரிக்கர்கள் முஸ்லிம்கள் தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்கள், ஆகவே அந்த இடத்தில் மசூதி கட்ட அனுமதிக்கக்கூடாது என்று பேசினார்கள. ஆனால் அவர்களுக்கு பதில் சொல்லும் விதத்தில் இந்த 15 வயது சிறிமி, ‘தன்னுடைய பெற்றோர்களும், உறவினர்களும் கூட அந்த சம்பவத்தில் இறந்து தான் அனாதை முஸ்லிம் சிறிமியாக இருப்பதாகவும் அதற்காக எல்லா முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் என்று கூறி முஸ்லிம் அமைதியாக வழிபடுவதிற்கு பள்ளிவாசல் கட்ட இடம் மறுப்பது என்ன நியாயம் என்று கேட்டது, சிலப்பதிகார இலக்கியத்தில் தன்னந்தனியாக கணவன் கோவலனை இழந்த கண்ணகி மதுரை பாண்டியமன்னர் தர்பாரில் நியாயம் கேட்டது போன்ற இலக்கிய உண்மை நிகழ்ச்சியாக இருந்தது. அந்தப் முஸ்லிம் சிறிமி பேசியதினைக் கேட்டு வாயடைத்த கருத்துக் கேட்க வந்த அமெரிக்க நடுவர்கள் கருத்துக் கேட்டும் நிகழ்ச்சியினை ஒத்தி வைத்து விட்டு சென்று விட்டார்கள்.
1) அந்த சிறிமி பேசிய பின்பு அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் வழிபாடு தளங்கள,; அவர்களின் வாழ்க்கை முறைகள் பற்றி செய்திகளை சேகரித்து உங்களுக்கு வழங்கலாம் என் ஆசைப்பட்டு இந்தக் கட்டுரை எடுதுகிறேன்:
அமெரிக்காவில் இஸ்லாமிய கம்யூனிட்டிகள் 1920ல் தோன்றி வீடுகளில் கூட்டுத் தொழுகை நடத்தி தங்களுடைய சமூக பிரச்சனை பற்றி விவாதிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் 1950 ஆம் ஆண்டில் தான் ‘நேஷன் ஆப் இஸ்லாம’ என்ற அமைப்பினை அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் ஹார்லீன் நகரத்தில் ஆரம்பித்து ஒரு பள்ளிவாசலினை உருவாக்கியுள்ளனர்.
ஆனால் இன்று ஆயிரத்திற்கு மேலான பள்ளிகள் உள்ளன. அமெரிக்காவில் மிக பெரிய பள்ளிவாசல் அடிராய்டு நகரில் உள்ள இஸ்லாமிக் செண்டரில் 1962லிருந்து 1965வரை உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் அமெரிக்கா- ஆப்ரிக்க முஸ்லிம் மக்களின் உதவியால் உருவாக்கப்பட்ட பள்ளிவாசல்கள் பின்பு எகிப்து, சௌதி அரேபியா, ஈரான் மற்றும் லெபனீஸ் அரசுகளின் பண உதவியால் எழுப்பப்பட்ட பள்ளிவாசல்கள் அனைத்து இன முஸ்லிம் மக்களும் தொழும் பள்ளிகளாக மாற்றப்பட்டன. இஸ்லாமியர் மதசேவைக்காக ‘கவுன்சில் ஆப் மஸ்ஜித்’ அமைக்கப்பட்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சர்வேயின் படி 33 சதவீத தெற்கு ஆசிய மக்களும், 30 சதவீத அமெரிக்க-ஆப்ரிக்க இனத்தவரும், 25 சதவீத அரபிய மக்களும் தொழுகைக்காக பள்ளிக்கு வருகிறார்கள். பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதிற்காக இன்னமும் இமாம்கள் எகிப்து, துருக்கி, பாலஸ்த்தீனம் ஆகிய நாடுகளிலிருந்து தருவிக்கப்படுகிறார்கள். அத்துடன் ‘இமாம்கள் கவுன்சில்’ 1972 ஆம்; ஆண்டு நிறுவப்பட்டு இமாம்களுக்கான பயிற்சி கொடுத்து அமெரிக்காவில் வசிக்கும் மார்க்க அறிவாளிகளே தொழுகை நடுத்தும் முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிவாசலும் மற்றும் அதனை ஒட்டியுள்ள கம்யூனிட்டி சபை கட்டிடங்களும் மார்க்க மற்றும் பொது கல்விக்காக பயன்படுத்தப்படுகிறது. வாரந்தோறும் சிறுவர் மார்க்கக் கல்வி கற்க ஏற்பாடும், முதியோர் மார்க்க கல்விக்கும், இஸ்லாமியர் அல்லாதவர் இஸ்லாத்தினைப் பற்றி தெரிந்து கொள்வதிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வே படி அமெரிக்கா முஸ்லிம்களில் 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை ஐந்து வேளை தொழுகின்றனர். ஆனால் அமெரிக்கா கிறித்துவர்கள் 40 சதவீதம் கிறத்துவ சர்ச்சுகளுக்குச் செல்கின்றனர்.
தற்போது கிட்டத்தட்ட 2000 பள்ளிவாசல்கள் உள்ளன. அதனில் 200க்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் கலிபோர்னியா, நிய+யார்க் மாநிலங்களில் உள்ளன. 100லிருந்து 200 வரை பள்ளிவாசல்கள் டெக்ஸாஸ,; புளோரிடா, இல்லினோஸ், ஓகியோ, மிக்சிகான், பென்சில்வேனியா, நியூஜெர்சி போன்ற மாநிலங்களில் உள்ளன, 50திலிருந்து 100வரை பள்ளிவாசல்கள் வாசிங்டன், டென்னசி, அரிசோனா, ஓக்லாமா போன்ற மாநிலங்களில் உள்ளன.
2) அமெரிக்காவில் இஸ்லிமிய சமூதாய ஆரம்பமும் வளர்ச்சியும்:
முதன் முதலில் 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டினவர் அமெரிக்க மண்ணில் காலடி வைக்கும் போது இஸ்லாமியர் வந்தனர் எனக் கூறப்பட்டாலும் 1860ஆம் ஆண்டில் குடியேறிய சிரியா மட்டும் லெபனான் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக இருந்தனர். இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்பு ஐரோப்பா, ஆசியா, கிழக்கு ஆப்ரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் குடியேறினர். முதன் முதல் அமெரிக்க முஸ்லிம்கள் ஆப்பிரிக்க நாடுகளைச்சார்ந்த அடிமைகள் தான் என்றால் மினையாகாது. அவர்கள் பெரும்பாலோனோர் படித்தவர்கள். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்கா வெள்ளையினத்தினவரிடமிருந்து கறுபு;பின மக்களை விடுதலைக்காகவும் அவர்கள் உரினைமக்காகவும் குரல் கொடுத்தார். ஆனால் அமெரிக்கா-ஆப்பிரிக்கா முஸ்லிம் தலைவர் எலிஜா முகம்மது ‘நேஷன் ஆப் இஸ்லாம’; இயக்கத்தினை ஆரம்பித்து வெள்ளை நிற அமெரிக்க மக்களுடன் கறுப்பின மக்களுக்காக சமாதானத்தில் இஸ்லாம் மதத்தினை பரப்ப வழிவகுத்தார். எலிஜா முகம்மது கறுப்பின அமெரிக்கருக்கு தனி கறுப்பின இஸ்லாமிய மாநிலம் கேட்டார். அந்த இயக்கத்தினைச் சார்ந்தவர்கள் பல் வேறு குற்ற பின்னணியில் சிறையில் வாடும் கறுப்பினத்தவரை திருத்தி இஸ்லாத்தினைத் தழுவ தனி அமைப்பான ‘ரிகேபிளிட்டேஷன் ஆப் அமெரிக்கா பிளாக்’ ஏற்படுத்தினர். ஜெயிலில் வாடும் கறுப்பின மக்களை சந்தித்து கீழ்கண்ட உபதேசங்கள் செய்கின்றனர்:
1) கறுப்பராக பிறந்திருப்பது ஒரு வரப்பிரசாதம் அது இழிவல்ல. ஆகவே தாழ்வு மனப்பான்மையினை விட்டொழிக்க வேண்டும்.
2) நீங்கள் எந்த முஸ்லிமையினையும் அழுக்கான உடையிடனோ அல்லது முகச்சவரம் செய்யாத நபரையோ உடல் சுத்தமில்லாத நபரைவேயா பார்க்க முடியாது.
3) எந்த் முஸ்லிமையும் குடிபோதைக்கு ஆளாவதினைப் பார்க்க முடியாது.
4) எந்த முஸ்;லிமும் போதை தரும் புகைப்பான்களை உபயோகிப்பதினைக் காண முடியாது.
5) எந்த முஸ்லிமும் அநாகரிக ஆடல்களில் ஈடுபட்டதினை பார்க்க முடியாது.
6) எந்த முஸ்லிமும் தன் மனவியினைத் தவிர வேற்றுப் பெண்களில் உடல் ரீதியான தொடர்பு கொள்வதினைக் காண முடியாது.
7) எந்த முஸ்லிமும் சிறிய வருமானம் தரும் வேலை செய்யாமல் கூட வாழ பிச்கையெடுப்பதினைக் காணமுடியாது.
8) ஏந்த முஸ்லிமும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதினைக்காண முடியாது.
மேற்கொண்ட போதனைகள் மூலமே பல்லாயிரக்கணக்கான அமெரிக்க-ஆப்ரிக்க இனத்தவர் முஸ்லிம் மதத்திற்கு மாறினர். அதில் ஒருவர்தான் உலகக் குத்துச்சண்டை பதவியிலிருந்து பாலியில் குற்றச்சாட்டில் ஜெயிலில் வாடிய மைச் டைசன.; இன்று இஸ்லாத்திற்கு மாறி மாலிக்காக வெளி வந்துள்hர்.
எலிஜா முகம்மது 1965 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பின்பு அவருடைய மகனார் வாலாஸ் கறுப்பின முஸ்லிம்களுக்கு தனி மாநில கொள்கையினை கைவிட்டு கறுப்பினர் அல்லாத மக்களையும் நேஷன் ஆப் இஸ்லாம் இயக்கத்தில் சேர்த்துக் கொண்டார். அந்த அபை;பிற்கு மேற்கத்திய ‘வேர்ல்டு கமிட்டி ஆப் இஸ்லாம’ என்று பெயர் சூட்டினார். அதன் பின்பு அந்த அமைப்பிற்கு ‘அமெரிக்கன் முஸ்லிம் மிஷன்’ என்று மாற்றப்பட்டது.


3) குடிபெயர்ந்த அமெரிக்க முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள்:
1) ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்தாரும் 100 டாலரிடமிருந்து 250 டாலர் வரை வருடத்திற்கு செலுத்தி ஒவ்வொரு கம்யூனிட்டி அமைப்பிலும் உறுப்பினராகி உள்ளனர்.
2) தங்கள் குழந்தைகளை இஸ்லாமிய மார்க்க போதனைகளை வாரத்தில் இருமுறை கற்க வழிவகை செய்கின்றனர்.
3) பள்ளிவாசல் நிதிக்காக விருந்துடன் கூடிய சிறப்பு முகாம் நடத்தி வசூல் செய்கின்றனர். ஒரு தடவை நான் அது போன்ற முகாமில் கலிபோர்னியா மாநிலம் பிரிமாண்ட் பள்ளிவாசலில் பங்கேற்றேன்.
அப்போது நான், நீ என்று ஆண்கள், பெண்கள,; சிறார்கள் போட்டிபோட்டு நன்கொடை செலுத்தியதில் ஒரு லட்சத்து பத்தாயிரம் டாலர் நன்கொடையாக கிடைத்தது.
4) வெள்ளிதோறும் பெண்கள் தங்கள் வீட்டில் தயார்செய்த பண்டங்கள், உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் விற்று அந்தக் பணத்தினை பள்ளிவாசலுக்காக நன்கொடையாக தருகின்றனர்.
5) சிறப்பு பேச்சாளர்களின் பேச்சினை ஏற்பாடு செய்து அதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அது போன்ற மக்கா பல்கலைக் கழகத்தில் பயிற்சி பெற்று முதலிடத்தில் தேறிய ஒருவருடைய கம்யூட்டர் விளக்கத்துடன் கூடிய சொற்பொலிவினை நான் சானோஸ் கம்யூனிட்டி பள்ளியில் கேட்டேன்.
6) முஸ்லிம்கள் ஹலாலான உணவினையே சாப்பிடுகின்றனர். பெரும்பாலான கறிக்கடைகள் பாகிஸ்தானியர் மற்றும் ஆப்கானிஸ்தியர் தான் நடத்துகின்றனர். கலிபோர்னியாவிலுள்ள சாப்ட்வேர் தலைமையிடமான சானோசில் ஒரு சைனீஸ் முஸ்லிமின் ஹலால் ஹோட்டலில் அத்தனைக் கூட்டம் என்றால் பாருங்களேன்.
7) கம்யூனிட்டியில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ‘பாட்லாக்’, ‘பார்க்யூ’ என்ற முஸ்லிம் குடும்பங்கள் கூடி பொது பார்க்கில் விருந்துண்கின்றனர். அப்போது குடும்ப உறுப்பினரிடையே கலந்துரையாட ஏதுவாக உள்ளது. ஆனால் அப்படி நடக்கும் விருந்தோம்பல் நிகழ்வுகளில் கூட ஒவ்வொரு நாட்டிலும் அல்லது மாநிலத்தில் வந்தவர்களுக்கிடையே மட்டும் பழகும் பழக்கமாக இருந்து வருகிறது. எல்லை தாண்டி குடும்பப் பழக்கங்கள் வேரூன்றவில்லை.
8) வெள்ளிக்கிழமையில் ஜூம்மா குத்துபா முடிந்த பின்பு நோயுற்றவர்களுக்கு, இறந்தவர்களுக்கு துவா செய்யவும், மருத்துவச் செலவு, ரத்தம் தேவைப்படும் நோயாளிக்கு உதவவும் வேண்டுகோள் விடப்படுகிறது. அங்கு இறந்தவர்களை அடக்ம் செய்யும் இடம் மிகவும் விலை அதிகமாக இருக்கிறது. வசதியில்லாது இறந்தவரகளுக்கு அடக்கம் செய்ய கம்யூனிட்டிகள் வசூல் செய்து அடக்கம் செய்கிறார்கள்.
9) பெண்கள் நீண்ட கையுள்ள சட்டையினை அணிந்தும் மேலங்கி, தலை முக்காடும் அணிந்தும் காணப்படுகின்றனர். ஆனால் சில ஆண்கள் தான் சமூதாயம் கூடும் இடங்களுக்கு முனங்காலுக்கு மேலுள்ள அரைக்கால் சட்டையணிந்து வருகின்றனர். அதுவும் பெண்கள் கூடும் இடங்களுக்கு வருவது அந்த இளைஞர்களுக்கு மேலை நாகரிகமாக இருக்கலாம் ஆனால் என்னால் முகம் சுழிக்காமல் இருக்க முடியவில்லை. தமிழக முஸ்லிம் ஊர்களிலிருந்த முஸ்லிம் பட்டதாரிகள் ஊரில் கைலியும் தொப்பியும் அணிந்து விட்டு, அமெரிக்காவின் நகரங்களில் நாகரீகமென்று அரைக்கால் சட்டையினை அணிந்து வருவது அவ்வளவு இஸ்லாமிய பண்பாடுக்கு உகந்ததாக கருத முடியவில்லை.
10) சிறார்கள் அமெரிக்காவின் மேதாவி கலாச்சாரத்தில் ஈடுபடாமல் தங்கள் மதக்கோட்பாடோடு வாழ பெண்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.
11) இஸ்லாமியர் கருத்துச்சுதந்திரத்துடன் வழிபாடு நடத்த பல இஸ்லாமிய நாடுகளில் கூட இல்லாதிருந்தும் அமெரிக்காவில் இருக்கிறது பாராட்டத்தக்கது.
12) இந்திய முஸ்லிம் கூட்டமைப்பு, தமிழ் முஸ்லிம் கூட்டமைப்பு போன்ற அமைப்புகள் சமூதாய தொண்டுகளும் மற்றும் இனையதளங்களும் நடத்தி வருகின்றன.

4) மேற்கத்தியவர் பார்வையில் இஸ்லாமியர:; 1989ஆம் ஆண்டு ஈரானியர் புரட்சிப்படை அமெரிக்காவின் தூரகத்தினைக் கைப்பற்றி அமெரிக்கர்களை பயணக்கைதிகளாக வைத்த பின்னரும், அமெரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் 11.9..2001 ஆம் ஆண்டு தகர்க்கப்பட்ட பின்பும், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாட்டோ நாடுகளின் கோபம் உலக முஸ்லிம்கள் மீது திரும்பியுள்ளது என்றால் அது மிகையாகாது. அந்த இரண்டு நிகழ்ச்சிகளுமே இஸ்லாமியர் வன்முறையாளர்கள் என்ற மாயைத்தோற்றத்தினை உருவாக்கி உள்ளது. அதன் விளைவு தான் அந்த நாடுகள் ஆப்பானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் படையெடுக்கத்தூண்டியதோடு மட்டுமல்லாமல், பாகிஸ்தானையும், ஈரானையும் பயமுறுத்தும் பம்மாத்துக்களில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமா? பிரான்ஸ், ஹாலந்து, நிய+ஜிலாந்து, இட்டாலி போன்ற நாடுகளில் பெண்கள் ஹிஜாப் அணிந்து வரவும், புர்கா போடவும் மறுக்கப்படுகிறது. ஆனால் கிறித்துவ இளைஞர்களும், பெண்களும் குளிர் காலத்தில் தலை மூடிய ‘ஹ_ட்’ கவச உடை அணிய அனுமதியள்ளது எவ்வாறு நியாயமாகும்? ஏன் இந்தியாவில் கூட முஸ்லிம் அல்லாத பெண்கள் வட மாநிலங்களிலும் முக்காடு போட்டும், இரு சக்கர வாகனத்தில் போகும் போது முகத்தினை மூடி செல்வதில்லையா? ஏன் இஸ்லாமியரை மட்டும் தனிமைப் படுத்துகிறார்கள் என்பது ஆச்சரியமே!
அமெரிக்காவின் இரட்டைக்கோபுர தகர்ப்பிற்கு பின்பு உலக முஸ்லிம்களைப் பற்றி தவறான தகவல்கள் எலக்ட்ரானிக் மீடியாவிலும், பத்திரிக்கைகளிலும் வராமலில்லை. பொதுவாக இஸ்லாமியர் வன்முறையாளர் என்ற கருத்தினை புகுத்தப் பார்க்கின்றனர். அதே வேளையில் அமெரிக்காவின் ஓக்லாமா சிட்டியில் ஃபெடரல் அரசு கட்டிடத்தினை குண்டு வைத்து தகர்த்த டிமோட்டி என்ற அமெரிக்கன் கிறித்துவ மதத்தினன் என்பதால் எல்லா கிறித்துவரும் தீவிரவாதிகள் என்று யாரும் சித்தரிக்க மாட்டார்கள். ஆனால் முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகள் என்று சாயம் பூசப்பார்;க்கிறார்கள். அவர்களெல்லாம் இஸ்லாம் அமைதியினைப் பேணிக்காக்கும் மதம் என்று அறியாதவர்கள். இஸ்லாம் மதமும், கிறித்துவ மதமும் சகோதர மதம். ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சொல்லிக் கொள்ளும் முகமனான ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதே உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாகுக என்று சொல்லப்படுவதே என்று அறியாதவர்கள். இஸ்லாமியர் மக்கள் ஒற்றுமைக்காகவும் ஏக இறை தத்துவத்தினை எடுத்தியம்பும் முக்கிய கடமையாக கொள்பவர்கள். அதே தத்துவத்தினைத்தானே ரசூலல்லாஹ் மட்டுமல்லாமல் அவர்களுக்கு முன்பு வந்த கிறித்துவ, யூத மதத்தின் கடவுள்களாக கருதப்படும் அப்ரஹாமும், மோசசும், ஜீசசும் போதித்தனர். அவர்களெல்லாம் ரசூலல்லாஹ்வின் முன்னோடி நபிமார்கள் என்று குர்ஆனில் சொல்லப்பட்டதினை அவர்கள் அறியாதவர்களா?
பொதுவாக இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் கூட்டுப்படை வெற்றி பெற்ற பின்னரும் முன்னாள் காலணி ஆகிக்கத்தினால் விடுபட்ட நாடுகளில், அல்லது இஸ்ரேயில் போன்று திணிக்கப்பட்ட நாடுகளில் உள்ள ஆட்சிக்கு ஆதரவாக அமெரிக்க-ஆங்கிலேய கூட்டுப்படை ஆதரவு அளித்து வருகிறது. அந்த திணிக்கப்பட்ட நாடுகளின் எல்லைகளை ஏற்காத நாடுகளில் வசிக்கும் எதிர்ப்பாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அப்படி எதிர்ப்பு காட்டுபவர்களில் பெரும்பாலும் முஸ்லிம்களாக இருப்பதால் கூட்டுப்படை தன் நவீன ஆயுத பலத்தினைக் காட்டி தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மறு காலணி ஆதிக்கத்திற்கு வழிவகுக்கிறது என்றால் மிகையாகாது. இதனை நான் சொல்லவில்லை அமெரிக்கா-கூட்டுப்டை எதிர்ப்பாளரான அமெரிக்க அறிஞர் நோம் சோம்கி சொல்கிறார் என் 7.8.2010 தேகியிட்ட ஹிந்துப ;பத்திரிக்கை தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் மேற்கத்திய நாடுகள் என்ன நினைக்கின்றனரென்றால் உலகத்தில் அவர்களைத் தவிர உயர்ந்த இனமில்லை என்றுதானே எண்ணத்தோன்றுகிறது. ஆனால் அமெரிக்கா 1776 ஆம் ஆண்டு விடுதலை பெற்றபோது பிரகடனப்படுத்திய குடிமக்களின் உயிருக்கும், உடமைக்கும், வழிபாடுக்கும் உத்திரவாதம் இஸ்லாமும் போதிக்கதானே செய்கிறது.
இஸ்லாமிய-இந்து மக்கள் சண்டைகள் பற்றி ஆராய்ச்சி செய்த பேராசிரியர் அஷ்டுஸ் வார்ஷ்னே, இரு கமூகத்தினர் சண்டைகளைக் களைந்து சமரசம் ஏற்பட அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கத்தினர், தொழிற்சங்கத்தினர், அறிவு ஜீவிகள், பத்திரிக்கையாளர்கள், சினிமாத்துறையினர், விளையாட்டு சங்கத்தினர் முன்வந்து அதற்கான வழிவகை செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே முஸ்லிம் மக்களின் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்க உணர்விற்கு எதிரான கசப்பினைப் போக்கி நல்லெண்ணம் உண்டாக்க வேண்டுமென்றால் கீழ்கண்ட வழிமுறைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்:
1) முஸ்லிம் நாடுகளின் வறுமையினை ஒழித்து அந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு தன்னிறைவு பெற உதவ வேண்டும்.
2) முஸ்லிம் நாடுகளின் இறையான்மைக்கு உத்திரவாதம் தர வேண்டும்.
3) முஸ்லிம் மக்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு வழிவகுக்கும் பாலஸ்தீனத்தில் அமைதி ஏற்பட உடனே முழு ஒத்துழைத்து அதனை நிலை நாட்டவேண்டும்.
4) மதசம்பந்தமான போதனைகளை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் மதரஸாக்களில் கல்வியினை கற்றுக் கொடுக்க கல்விக்கான உதவித் தொகையினை பின் தங்கிய முஸ்லிம் நாடுகளுக்குத் தரவேண்டும்.
5) நான் மேற்கூறிய யோசனைகளுக்கு அமெரிக்க முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்கள் முதலில் அமெரிக்காவில் வாழும் முஸ்லிம் என்ற நிலை மாறி அமெரிக்கா முஸ்லிம்களாக மாறி அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடு மக்களினன் தவறான எண்ணத்தினை மாற்ற கீழ்கண்ட வழிகளில் செயலாற்ற வேண்டும்:.
1) அமெரிக்கா முஸ்லிம்களில் 60 சதவீதம் வெளிநாடுகளிலிருந்;து வந்து குடியுரிமை பெற்றவர்கள். 40 சதவீதம் அமெரிக்கா-ஆப்பிரிக்கா இனத்தினர். இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் வாழும் கிறித்துவர்கள்-யூதர்களுடன் நல்ல உறவினை ஏற்படுத்தி அமெரிக்கா அல்லாத முஸ்லிம் நாடுகளுடன் நல்லுறவினை நிலைநிறுத்தும் பாலமாக அமைய வேண்டும்.
2) அமெரிக்காவின் யூதர்கள் என்ன செய்ய வேண்டும்?
பாலஸ்தீன மக்கள் அமைதியுடனும், சொந்த நாடு, உரிமை, மற்றும் உடல், பொருள் உத்திரவாதத்துடன் வாழ முயற்சி எடுக்க வேண்டும்.. ஏனென்றால் எந்த வன்முறையும் இஸ்ரேயில் நாட்டினை விடுவிக்க முடியாது. அதேபோல பாலஸ்தீனர்களை தங்கள் சொந்த இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக நிறந்திறமாக வெளியேற்றவும் முடியாது. ஆகவே இஸ்ரேயிலும், பாலஸ்தீன மக்களும் தன்னுரிமையுடன் வாழ அமெரிக்கா வாழும் கிறித்துவர்களும், யூதர்களும் வழிவகுக்க வேண்டும். அதற்கான முயற்சியினை அமெரிக்காவின் முஸ்லிம்கள் எடுக்க வேண்டும். அமெரிக்காவில் ஒரு பழமொழி சொல்வார்கள், நீங்கள் சிரியுங்கள், அடுத்தவரும் சிரிப்பார்’. அந்த பழமொழியே யூத மக்களுக்கும் பொருந்தும்.
3) அமெரிக்காவின் பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், சினிமாத்துறையினர் அமெரிக்கா படைகள் முஸ்லிம் நாடுகளில் தற்காலிக வெற்றியினை பிரதானப்படுத்தாது, எப்படி ஆப்பிரிக்கா மக்களை ‘டார்ஜன்’; படத்தின் மூலம் காட்டுமிராண்டிகள் போல எழுத்திலோ அல்லது எலக்ட்ரானிக் மீடியாவிலோ, அல்லது அமெரிக்கா கூட்டுப்படையின் தங்கள் நவீன போர் எந்திரங்கள் மூலம் எப்படி ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் வெற்றி கொண்டு முஸ்லிம்களை கோழையாக சித்தரிக்காது அவர்களும் தாங்கள் வாழும் கிரகத்தில் பிறந்த மனித பிறவிகள் தான் அவர்களுக்கும் கவுரவமாக, அமெரிக்காவின் 1776 ஆம் ஆண்டு சுதந்திர பிரகடனத்தில் கூறப்பட்டது போல சுதந்திரமாக வாழ அனைத்து உரிமைகளும் உண்டு என்பதினை உணர்ந்து செயலாற்ற வேண்டும். அவ்வாறு செயலாற்றினால் நிச்சயாக முஸ்லிம் மக்களின் வெந்த புண்ணிற்கு மருந்து போட்டது போல ஆதரவாக இருக்குமல்லவா? அதற்கான கருத்து ஒற்றுமையினை அமெரிக்க முஸ்லிம் ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.



AJ 100
dateSat, Aug 14, 2010 at 9:30 PM
subjectRE: muslims in usa


மதிப்பிற்குரிய பெரியவர் அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும்.
தாங்கள் அமெரிக்கா வந்த விபரம் மற்றும் உங்களை சந்திக்க வேண்டி எனக்கு சகோதரர் முதுவை ஹிதாயத் மின்னஞ்சல் செய்து இருந்தார். நான் தாங்களை தொடர்பு கொள்ள இருந்தேன். நீங்கள் ஜார்ஜியா அட்லான்டா பகுதிக்கு வரும் சமயத்தில் நான் ஒகோயோ மாநிலத்தில் பணிநிமித்த காரணத்தால் இருந்தேன். அத்துடன் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியாமல் போய்விட்டது. அந்த வாரம் எனக்கு அலுவலகத்தில் மிக முக்கியமான 24/7 பணி என்ற வகையில் நேரம் கிடைக்கவில்லை. தாங்களை சந்திக்காமல் போனதற்கு வருந்துகிறேன். இfன்ஷா அல்லாஹுf அடுத்து முறை வாய்ப்பு இருந்தால் சந்திப்போம்.
தாங்கள் தொடர்ந்து கல்வி, சமுதாய முன்னேற்றம் பற்றி பல கட்டுரை மற்றும் செய்திகளை மின்னஞ்சல் மூலம் தருவது நான் படித்து வருவேன்.
உங்களiன் சமுதாய விடியலுக்கு என்று ஒரு வேட்கையுடன் எழுதும் பாணியை நான் என்னும் விரும்புவேன். அரசு பணியில் ஒரு உயர்ந்த பொறுப்பில் இருந்து ஒய்வு பெற்ற நீங்கள், உங்களiன் அறிவாற்றலையும், அனுபவங்களையும் சமுதாயத்திற்கு பயன்மிக்க வகையில் சிந்தித்து செயல்படுவது வரவேற்றதக்கது. உங்களiன் பணியை வல்ல அல்லாஹுf ஏற்று கொள்ள துஆ செய்கிறேன்.
அமெரிக்கா பயணக்கட்டுரை என்று பல்வேறு தகவலை திரட்டி அருமையான கட்டுரை எழுதி இருக்கிறீர்கள். உங்கள் கட்டுரை முதுவை ஹிதாயத் மற்றும் ஆதன் ஆரிப்(மண்ணடிகாக்கா) மூலமும் எனக்கு ஏற்கெனவே வந்துவிட்டது. உங்கள் கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு பதில் எழுத வேண்டும் என்று இருந்தேன். ரமலான் தொடங்கி காரணத்தால் நேரம் ஓடிவிட்டது. இருந்தும் தாங்களiன் மின்னஞ்சல் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் தான் உடனே பதிலும் எழுதுகிறேன்.
உங்கள் பயணக்கட்டுரையில் நிறைய தகவல் சேகரித்து தமிழ் பேசும் மக்களுக்கு தௌiவாக அமெரிக்கா முஸ்லிம்களiன் தோற்றம் மற்றும் வளர்ச்சியுடன் இன்றைய நடப்புகளை பற்றியும் உங்களiன் அழகான பாணியில் எழுதியுள்ளIர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
தாங்கள் கட்டுரையை முடிந்த வரை எனது நண்பர்கள் வட்டாரத்திற்கு மின்னஞ்சல் செய்துள்ளேன்.
கட்டுரை பற்றி எனது கருத்தும் கேட்டு இருந்தீர்கள். உங்களiன் கட்டுரையில் எந்தவித குறையும் இல்லை தமிழ் பேசுபவர்களுக்கு அமெரிக்கா முஸ்லிம்களை பற்றி விளக்கி எழுதியுள்ளIர்கள்.
கருப்பினர்களுக்கு என்று விடுதலை குரல் கொடுத்த மார்டின் லு\த்தர் கீங், நேசனாப் இஸ்லாம் நிறுவனர் எலிஜா முஹும்மது பற்றி தகவல் குறிப்பிட்டு இருந்தீர்கள். அதை போல் மால்கம் எக்ஸ் அவர்களiன் தகவல் சேர்த்து இருக்கலாம் காரணம் இவரின் பிரச்சாரத்தில் முஸ்லிம் எண்ணிக்கை மிக அதிக அளவில் வந்த சான்றுகள் உள்ளன. அத்துடன் தற்போதைய குத்துசண்டை வீரர் டைசன் பற்றி எழுதியிருந்தீர்கள். இவருக்கு முன் முகம்மது அலி அவர்களை பற்றி எழுதியிருக்கலாம். இவர் பல சமுதாய சேவைகளை தன் அறக்கட்டளை மூலம் என்றும் செய்துவருகிறார்.
மேற்கண்ட தகவல் உங்கள் கட்டுரைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் என்ற எண்ணத்தில் எழுதியது தான் எதுவும் குறை கண்டு சொல்லுவதற்கு அல்ல.
உங்களiன் சமுதாய பணிகள் தொடர வாழ்த்துகள் வல்ல அல்லாஹுf உங்களுக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்வை கொடுக்க இந்த புனித மிக்க ரமலானின் துஆ செய்கிறேன்.
தொடர்ந்து சமுதாயத்திற்கு தேவையான கல்வி மற்றும் சமுதாய பாதுகாப்fபு பற்றி கட்டுரைகள் எழுதுங்கள்.
ரமலான் வாழ்த்துகள்
உங்களுக்கு நேரம் கிடைக்கும் பதில் எழுதுங்கள்
உங்கள் குடும்பத்தார்களுக்கு எனது ரமலான் வாழ்த்துகள் மற்றும் அன்பான விசாரிப்பும் சலாமும்.
அன்புடன்
தோப்புத்துறை முகம்மது நூர்தீன்

உங்களுக்கு சிறுகுறிப்பு தகவலுக்கு இதை பார்க்கவும்.


http://en.wikipedia.org/wiki/Malcolm_X

http://en.wikipedia.org/wiki/Muhammad_Ali



From: mdaliips@yahoo.com
Subject: muslims in usa

Assalamu allaikum Brother,
While I was in USA I was told by Mr. Hidayath that you might have touch with me. I think due to your preoccupation it was not materialised.
Anyhow I am sending my perception of muslims in USA. You may comment and circulate it is fit. Ramdhan mubaraak.

AP,Mohamed Ali

அமெரிக்காவில் முஸ்லிம்கள்-ஓர் பயணக்கட்டுரை

அமெரிக்காவில் முஸ்லிம்கள்-ஓர் பயணக்கட்டுரை
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)


http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=270
- Hide quoted text -

அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் 14..7.2010 மாலை சி.என்.என் டி.வி சேனல் செய்தியினைப் பார்த்துக் கொணடிருந்த எனக்கு ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க ஹிஜாப் அணிந்த முஸ்லிம் சிறிமி மிகவும் வீராவேசமாக ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தாள். அது என்ன பேச்சு என்று கேட்க உங்களுக்கு ஆவலாக இருக்கும். 2001 செப்டம்பர் மாதம் 9ந்தேதி அமெரிக்காவின் வர்த்தக நகரமான நியூயார்க்கில் இரட்டைக் கோபுரத்தினை விமானகங்கள் மூலம் மோதி தகர்த்து அதன் மூலம் 2000 பேர்களுக்கு உயிர் சேதமிட்ட இடத்தின் அருகில் ஒரு பள்ளிவாசல் கட்ட அனுமதிக்கலாமா என்ற கருத்தாய்வுக் கூட்டத்தில் தான் அந்த சிறுமி ஆவேசமாக பேசினாள். அவளுக்கு முன்பு பேசிய அமெரிக்கர்கள் முஸ்லிம்கள் தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்கள், ஆகவே அந்த இடத்தில் மசூதி கட்ட அனுமதிக்கக்கூடாது என்று பேசினார்கள. ஆனால் அவர்களுக்கு பதில் சொல்லும் விதத்தில் இந்த 15 வயது சிறிமி, ‘தன்னுடைய பெற்றோர்களும், உறவினர்களும் கூட அந்த சம்பவத்தில் இறந்து தான் அனாதை முஸ்லிம் சிறிமியாக இருப்பதாகவும் அதற்காக எல்லா முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் என்று கூறி முஸ்லிம் அமைதியாக வழிபடுவதிற்கு பள்ளிவாசல் கட்ட இடம் மறுப்பது என்ன நியாயம் என்று கேட்டது, சிலப்பதிகார இலக்கியத்தில் தன்னந்தனியாக கணவன் கோவலனை இழந்த கண்ணகி மதுரை பாண்டியமன்னர் தர்பாரில் நியாயம் கேட்டது போன்ற இலக்கிய உண்மை நிகழ்ச்சியாக இருந்தது. அந்தப் முஸ்லிம் சிறிமி பேசியதினைக் கேட்டு வாயடைத்த கருத்துக் கேட்க வந்த அமெரிக்க நடுவர்கள் கருத்துக் கேட்டும் நிகழ்ச்சியினை ஒத்தி வைத்து விட்டு சென்று விட்டார்கள்.
1) அந்த சிறிமி பேசிய பின்பு அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் வழிபாடு தளங்கள,; அவர்களின் வாழ்க்கை முறைகள் பற்றி செய்திகளை சேகரித்து உங்களுக்கு வழங்கலாம் என் ஆசைப்பட்டு இந்தக் கட்டுரை எடுதுகிறேன்:
அமெரிக்காவில் இஸ்லாமிய கம்யூனிட்டிகள் 1920ல் தோன்றி வீடுகளில் கூட்டுத் தொழுகை நடத்தி தங்களுடைய சமூக பிரச்சனை பற்றி விவாதிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் 1950 ஆம் ஆண்டில் தான் ‘நேஷன் ஆப் இஸ்லாம’ என்ற அமைப்பினை அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் ஹார்லீன் நகரத்தில் ஆரம்பித்து ஒரு பள்ளிவாசலினை உருவாக்கியுள்ளனர்.
ஆனால் இன்று ஆயிரத்திற்கு மேலான பள்ளிகள் உள்ளன. அமெரிக்காவில் மிக பெரிய பள்ளிவாசல் அடிராய்டு நகரில் உள்ள இஸ்லாமிக் செண்டரில் 1962லிருந்து 1965வரை உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் அமெரிக்கா- ஆப்ரிக்க முஸ்லிம் மக்களின் உதவியால் உருவாக்கப்பட்ட பள்ளிவாசல்கள் பின்பு எகிப்து, சௌதி அரேபியா, ஈரான் மற்றும் லெபனீஸ் அரசுகளின் பண உதவியால் எழுப்பப்பட்ட பள்ளிவாசல்கள் அனைத்து இன முஸ்லிம் மக்களும் தொழும் பள்ளிகளாக மாற்றப்பட்டன. இஸ்லாமியர் மதசேவைக்காக ‘கவுன்சில் ஆப் மஸ்ஜித்’ அமைக்கப்பட்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சர்வேயின் படி 33 சதவீத தெற்கு ஆசிய மக்களும், 30 சதவீத அமெரிக்க-ஆப்ரிக்க இனத்தவரும், 25 சதவீத அரபிய மக்களும் தொழுகைக்காக பள்ளிக்கு வருகிறார்கள். பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதிற்காக இன்னமும் இமாம்கள் எகிப்து, துருக்கி, பாலஸ்த்தீனம் ஆகிய நாடுகளிலிருந்து தருவிக்கப்படுகிறார்கள். அத்துடன் ‘இமாம்கள் கவுன்சில்’ 1972 ஆம்; ஆண்டு நிறுவப்பட்டு இமாம்களுக்கான பயிற்சி கொடுத்து அமெரிக்காவில் வசிக்கும் மார்க்க அறிவாளிகளே தொழுகை நடுத்தும் முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிவாசலும் மற்றும் அதனை ஒட்டியுள்ள கம்யூனிட்டி சபை கட்டிடங்களும் மார்க்க மற்றும் பொது கல்விக்காக பயன்படுத்தப்படுகிறது. வாரந்தோறும் சிறுவர் மார்க்கக் கல்வி கற்க ஏற்பாடும், முதியோர் மார்க்க கல்விக்கும், இஸ்லாமியர் அல்லாதவர் இஸ்லாத்தினைப் பற்றி தெரிந்து கொள்வதிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வே படி அமெரிக்கா முஸ்லிம்களில் 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை ஐந்து வேளை தொழுகின்றனர். ஆனால் அமெரிக்கா கிறித்துவர்கள் 40 சதவீதம் கிறத்துவ சர்ச்சுகளுக்குச் செல்கின்றனர்.
தற்போது கிட்டத்தட்ட 2000 பள்ளிவாசல்கள் உள்ளன. அதனில் 200க்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் கலிபோர்னியா, நிய+யார்க் மாநிலங்களில் உள்ளன. 100லிருந்து 200 வரை பள்ளிவாசல்கள் டெக்ஸாஸ,; புளோரிடா, இல்லினோஸ், ஓகியோ, மிக்சிகான், பென்சில்வேனியா, நியூஜெர்சி போன்ற மாநிலங்களில் உள்ளன, 50திலிருந்து 100வரை பள்ளிவாசல்கள் வாசிங்டன், டென்னசி, அரிசோனா, ஓக்லாமா போன்ற மாநிலங்களில் உள்ளன.
2) அமெரிக்காவில் இஸ்லிமிய சமூதாய ஆரம்பமும் வளர்ச்சியும்:
முதன் முதலில் 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டினவர் அமெரிக்க மண்ணில் காலடி வைக்கும் போது இஸ்லாமியர் வந்தனர் எனக் கூறப்பட்டாலும் 1860ஆம் ஆண்டில் குடியேறிய சிரியா மட்டும் லெபனான் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக இருந்தனர். இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்பு ஐரோப்பா, ஆசியா, கிழக்கு ஆப்ரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் குடியேறினர். முதன் முதல் அமெரிக்க முஸ்லிம்கள் ஆப்பிரிக்க நாடுகளைச்சார்ந்த அடிமைகள் தான் என்றால் மினையாகாது. அவர்கள் பெரும்பாலோனோர் படித்தவர்கள். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்கா வெள்ளையினத்தினவரிடமிருந்து கறுபு;பின மக்களை விடுதலைக்காகவும் அவர்கள் உரினைமக்காகவும் குரல் கொடுத்தார். ஆனால் அமெரிக்கா-ஆப்பிரிக்கா முஸ்லிம் தலைவர் எலிஜா முகம்மது ‘நேஷன் ஆப் இஸ்லாம’; இயக்கத்தினை ஆரம்பித்து வெள்ளை நிற அமெரிக்க மக்களுடன் கறுப்பின மக்களுக்காக சமாதானத்தில் இஸ்லாம் மதத்தினை பரப்ப வழிவகுத்தார். எலிஜா முகம்மது கறுப்பின அமெரிக்கருக்கு தனி கறுப்பின இஸ்லாமிய மாநிலம் கேட்டார். அந்த இயக்கத்தினைச் சார்ந்தவர்கள் பல் வேறு குற்ற பின்னணியில் சிறையில் வாடும் கறுப்பினத்தவரை திருத்தி இஸ்லாத்தினைத் தழுவ தனி அமைப்பான ‘ரிகேபிளிட்டேஷன் ஆப் அமெரிக்கா பிளாக்’ ஏற்படுத்தினர். ஜெயிலில் வாடும் கறுப்பின மக்களை சந்தித்து கீழ்கண்ட உபதேசங்கள் செய்கின்றனர்:
1) கறுப்பராக பிறந்திருப்பது ஒரு வரப்பிரசாதம் அது இழிவல்ல. ஆகவே தாழ்வு மனப்பான்மையினை விட்டொழிக்க வேண்டும்.
2) நீங்கள் எந்த முஸ்லிமையினையும் அழுக்கான உடையிடனோ அல்லது முகச்சவரம் செய்யாத நபரையோ உடல் சுத்தமில்லாத நபரைவேயா பார்க்க முடியாது.
3) எந்த் முஸ்லிமையும் குடிபோதைக்கு ஆளாவதினைப் பார்க்க முடியாது.
4) எந்த முஸ்;லிமும் போதை தரும் புகைப்பான்களை உபயோகிப்பதினைக் காண முடியாது.
5) எந்த முஸ்லிமும் அநாகரிக ஆடல்களில் ஈடுபட்டதினை பார்க்க முடியாது.
6) எந்த முஸ்லிமும் தன் மனவியினைத் தவிர வேற்றுப் பெண்களில் உடல் ரீதியான தொடர்பு கொள்வதினைக் காண முடியாது.
7) எந்த முஸ்லிமும் சிறிய வருமானம் தரும் வேலை செய்யாமல் கூட வாழ பிச்கையெடுப்பதினைக் காணமுடியாது.
8) ஏந்த முஸ்லிமும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதினைக்காண முடியாது.
மேற்கொண்ட போதனைகள் மூலமே பல்லாயிரக்கணக்கான அமெரிக்க-ஆப்ரிக்க இனத்தவர் முஸ்லிம் மதத்திற்கு மாறினர். அதில் ஒருவர்தான் உலகக் குத்துச்சண்டை பதவியிலிருந்து பாலியில் குற்றச்சாட்டில் ஜெயிலில் வாடிய மைச் டைசன.; இன்று இஸ்லாத்திற்கு மாறி மாலிக்காக வெளி வந்துள்hர்.
எலிஜா முகம்மது 1965 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பின்பு அவருடைய மகனார் வாலாஸ் கறுப்பின முஸ்லிம்களுக்கு தனி மாநில கொள்கையினை கைவிட்டு கறுப்பினர் அல்லாத மக்களையும் நேஷன் ஆப் இஸ்லாம் இயக்கத்தில் சேர்த்துக் கொண்டார். அந்த அபை;பிற்கு மேற்கத்திய ‘வேர்ல்டு கமிட்டி ஆப் இஸ்லாம’ என்று பெயர் சூட்டினார். அதன் பின்பு அந்த அமைப்பிற்கு ‘அமெரிக்கன் முஸ்லிம் மிஷன்’ என்று மாற்றப்பட்டது.


3) குடிபெயர்ந்த அமெரிக்க முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள்:
1) ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்தாரும் 100 டாலரிடமிருந்து 250 டாலர் வரை வருடத்திற்கு செலுத்தி ஒவ்வொரு கம்யூனிட்டி அமைப்பிலும் உறுப்பினராகி உள்ளனர்.
2) தங்கள் குழந்தைகளை இஸ்லாமிய மார்க்க போதனைகளை வாரத்தில் இருமுறை கற்க வழிவகை செய்கின்றனர்.
3) பள்ளிவாசல் நிதிக்காக விருந்துடன் கூடிய சிறப்பு முகாம் நடத்தி வசூல் செய்கின்றனர். ஒரு தடவை நான் அது போன்ற முகாமில் கலிபோர்னியா மாநிலம் பிரிமாண்ட் பள்ளிவாசலில் பங்கேற்றேன்.
அப்போது நான், நீ என்று ஆண்கள், பெண்கள,; சிறார்கள் போட்டிபோட்டு நன்கொடை செலுத்தியதில் ஒரு லட்சத்து பத்தாயிரம் டாலர் நன்கொடையாக கிடைத்தது.
4) வெள்ளிதோறும் பெண்கள் தங்கள் வீட்டில் தயார்செய்த பண்டங்கள், உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் விற்று அந்தக் பணத்தினை பள்ளிவாசலுக்காக நன்கொடையாக தருகின்றனர்.
5) சிறப்பு பேச்சாளர்களின் பேச்சினை ஏற்பாடு செய்து அதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அது போன்ற மக்கா பல்கலைக் கழகத்தில் பயிற்சி பெற்று முதலிடத்தில் தேறிய ஒருவருடைய கம்யூட்டர் விளக்கத்துடன் கூடிய சொற்பொலிவினை நான் சானோஸ் கம்யூனிட்டி பள்ளியில் கேட்டேன்.
6) முஸ்லிம்கள் ஹலாலான உணவினையே சாப்பிடுகின்றனர். பெரும்பாலான கறிக்கடைகள் பாகிஸ்தானியர் மற்றும் ஆப்கானிஸ்தியர் தான் நடத்துகின்றனர். கலிபோர்னியாவிலுள்ள சாப்ட்வேர் தலைமையிடமான சானோசில் ஒரு சைனீஸ் முஸ்லிமின் ஹலால் ஹோட்டலில் அத்தனைக் கூட்டம் என்றால் பாருங்களேன்.
7) கம்யூனிட்டியில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ‘பாட்லாக்’, ‘பார்க்யூ’ என்ற முஸ்லிம் குடும்பங்கள் கூடி பொது பார்க்கில் விருந்துண்கின்றனர். அப்போது குடும்ப உறுப்பினரிடையே கலந்துரையாட ஏதுவாக உள்ளது. ஆனால் அப்படி நடக்கும் விருந்தோம்பல் நிகழ்வுகளில் கூட ஒவ்வொரு நாட்டிலும் அல்லது மாநிலத்தில் வந்தவர்களுக்கிடையே மட்டும் பழகும் பழக்கமாக இருந்து வருகிறது. எல்லை தாண்டி குடும்பப் பழக்கங்கள் வேரூன்றவில்லை.
8) வெள்ளிக்கிழமையில் ஜூம்மா குத்துபா முடிந்த பின்பு நோயுற்றவர்களுக்கு, இறந்தவர்களுக்கு துவா செய்யவும், மருத்துவச் செலவு, ரத்தம் தேவைப்படும் நோயாளிக்கு உதவவும் வேண்டுகோள் விடப்படுகிறது. அங்கு இறந்தவர்களை அடக்ம் செய்யும் இடம் மிகவும் விலை அதிகமாக இருக்கிறது. வசதியில்லாது இறந்தவரகளுக்கு அடக்கம் செய்ய கம்யூனிட்டிகள் வசூல் செய்து அடக்கம் செய்கிறார்கள்.
9) பெண்கள் நீண்ட கையுள்ள சட்டையினை அணிந்தும் மேலங்கி, தலை முக்காடும் அணிந்தும் காணப்படுகின்றனர். ஆனால் சில ஆண்கள் தான் சமூதாயம் கூடும் இடங்களுக்கு முனங்காலுக்கு மேலுள்ள அரைக்கால் சட்டையணிந்து வருகின்றனர். அதுவும் பெண்கள் கூடும் இடங்களுக்கு வருவது அந்த இளைஞர்களுக்கு மேலை நாகரிகமாக இருக்கலாம் ஆனால் என்னால் முகம் சுழிக்காமல் இருக்க முடியவில்லை. தமிழக முஸ்லிம் ஊர்களிலிருந்த முஸ்லிம் பட்டதாரிகள் ஊரில் கைலியும் தொப்பியும் அணிந்து விட்டு, அமெரிக்காவின் நகரங்களில் நாகரீகமென்று அரைக்கால் சட்டையினை அணிந்து வருவது அவ்வளவு இஸ்லாமிய பண்பாடுக்கு உகந்ததாக கருத முடியவில்லை.
10) சிறார்கள் அமெரிக்காவின் மேதாவி கலாச்சாரத்தில் ஈடுபடாமல் தங்கள் மதக்கோட்பாடோடு வாழ பெண்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.
11) இஸ்லாமியர் கருத்துச்சுதந்திரத்துடன் வழிபாடு நடத்த பல இஸ்லாமிய நாடுகளில் கூட இல்லாதிருந்தும் அமெரிக்காவில் இருக்கிறது பாராட்டத்தக்கது.
12) இந்திய முஸ்லிம் கூட்டமைப்பு, தமிழ் முஸ்லிம் கூட்டமைப்பு போன்ற அமைப்புகள் சமூதாய தொண்டுகளும் மற்றும் இனையதளங்களும் நடத்தி வருகின்றன.

4) மேற்கத்தியவர் பார்வையில் இஸ்லாமியர:; 1989ஆம் ஆண்டு ஈரானியர் புரட்சிப்படை அமெரிக்காவின் தூரகத்தினைக் கைப்பற்றி அமெரிக்கர்களை பயணக்கைதிகளாக வைத்த பின்னரும், அமெரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் 11.9..2001 ஆம் ஆண்டு தகர்க்கப்பட்ட பின்பும், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாட்டோ நாடுகளின் கோபம் உலக முஸ்லிம்கள் மீது திரும்பியுள்ளது என்றால் அது மிகையாகாது. அந்த இரண்டு நிகழ்ச்சிகளுமே இஸ்லாமியர் வன்முறையாளர்கள் என்ற மாயைத்தோற்றத்தினை உருவாக்கி உள்ளது. அதன் விளைவு தான் அந்த நாடுகள் ஆப்பானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் படையெடுக்கத்தூண்டியதோடு மட்டுமல்லாமல், பாகிஸ்தானையும், ஈரானையும் பயமுறுத்தும் பம்மாத்துக்களில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமா? பிரான்ஸ், ஹாலந்து, நிய+ஜிலாந்து, இட்டாலி போன்ற நாடுகளில் பெண்கள் ஹிஜாப் அணிந்து வரவும், புர்கா போடவும் மறுக்கப்படுகிறது. ஆனால் கிறித்துவ இளைஞர்களும், பெண்களும் குளிர் காலத்தில் தலை மூடிய ‘ஹ_ட்’ கவச உடை அணிய அனுமதியள்ளது எவ்வாறு நியாயமாகும்? ஏன் இந்தியாவில் கூட முஸ்லிம் அல்லாத பெண்கள் வட மாநிலங்களிலும் முக்காடு போட்டும், இரு சக்கர வாகனத்தில் போகும் போது முகத்தினை மூடி செல்வதில்லையா? ஏன் இஸ்லாமியரை மட்டும் தனிமைப் படுத்துகிறார்கள் என்பது ஆச்சரியமே!
அமெரிக்காவின் இரட்டைக்கோபுர தகர்ப்பிற்கு பின்பு உலக முஸ்லிம்களைப் பற்றி தவறான தகவல்கள் எலக்ட்ரானிக் மீடியாவிலும், பத்திரிக்கைகளிலும் வராமலில்லை. பொதுவாக இஸ்லாமியர் வன்முறையாளர் என்ற கருத்தினை புகுத்தப் பார்க்கின்றனர். அதே வேளையில் அமெரிக்காவின் ஓக்லாமா சிட்டியில் ஃபெடரல் அரசு கட்டிடத்தினை குண்டு வைத்து தகர்த்த டிமோட்டி என்ற அமெரிக்கன் கிறித்துவ மதத்தினன் என்பதால் எல்லா கிறித்துவரும் தீவிரவாதிகள் என்று யாரும் சித்தரிக்க மாட்டார்கள். ஆனால் முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகள் என்று சாயம் பூசப்பார்;க்கிறார்கள். அவர்களெல்லாம் இஸ்லாம் அமைதியினைப் பேணிக்காக்கும் மதம் என்று அறியாதவர்கள். இஸ்லாம் மதமும், கிறித்துவ மதமும் சகோதர மதம். ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சொல்லிக் கொள்ளும் முகமனான ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதே உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாகுக என்று சொல்லப்படுவதே என்று அறியாதவர்கள். இஸ்லாமியர் மக்கள் ஒற்றுமைக்காகவும் ஏக இறை தத்துவத்தினை எடுத்தியம்பும் முக்கிய கடமையாக கொள்பவர்கள். அதே தத்துவத்தினைத்தானே ரசூலல்லாஹ் மட்டுமல்லாமல் அவர்களுக்கு முன்பு வந்த கிறித்துவ, யூத மதத்தின் கடவுள்களாக கருதப்படும் அப்ரஹாமும், மோசசும், ஜீசசும் போதித்தனர். அவர்களெல்லாம் ரசூலல்லாஹ்வின் முன்னோடி நபிமார்கள் என்று குர்ஆனில் சொல்லப்பட்டதினை அவர்கள் அறியாதவர்களா?
பொதுவாக இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் கூட்டுப்படை வெற்றி பெற்ற பின்னரும் முன்னாள் காலணி ஆகிக்கத்தினால் விடுபட்ட நாடுகளில், அல்லது இஸ்ரேயில் போன்று திணிக்கப்பட்ட நாடுகளில் உள்ள ஆட்சிக்கு ஆதரவாக அமெரிக்க-ஆங்கிலேய கூட்டுப்படை ஆதரவு அளித்து வருகிறது. அந்த திணிக்கப்பட்ட நாடுகளின் எல்லைகளை ஏற்காத நாடுகளில் வசிக்கும் எதிர்ப்பாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அப்படி எதிர்ப்பு காட்டுபவர்களில் பெரும்பாலும் முஸ்லிம்களாக இருப்பதால் கூட்டுப்படை தன் நவீன ஆயுத பலத்தினைக் காட்டி தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மறு காலணி ஆதிக்கத்திற்கு வழிவகுக்கிறது என்றால் மிகையாகாது. இதனை நான் சொல்லவில்லை அமெரிக்கா-கூட்டுப்டை எதிர்ப்பாளரான அமெரிக்க அறிஞர் நோம் சோம்கி சொல்கிறார் என் 7.8.2010 தேகியிட்ட ஹிந்துப ;பத்திரிக்கை தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் மேற்கத்திய நாடுகள் என்ன நினைக்கின்றனரென்றால் உலகத்தில் அவர்களைத் தவிர உயர்ந்த இனமில்லை என்றுதானே எண்ணத்தோன்றுகிறது. ஆனால் அமெரிக்கா 1776 ஆம் ஆண்டு விடுதலை பெற்றபோது பிரகடனப்படுத்திய குடிமக்களின் உயிருக்கும், உடமைக்கும், வழிபாடுக்கும் உத்திரவாதம் இஸ்லாமும் போதிக்கதானே செய்கிறது.
இஸ்லாமிய-இந்து மக்கள் சண்டைகள் பற்றி ஆராய்ச்சி செய்த பேராசிரியர் அஷ்டுஸ் வார்ஷ்னே, இரு கமூகத்தினர் சண்டைகளைக் களைந்து சமரசம் ஏற்பட அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கத்தினர், தொழிற்சங்கத்தினர், அறிவு ஜீவிகள், பத்திரிக்கையாளர்கள், சினிமாத்துறையினர், விளையாட்டு சங்கத்தினர் முன்வந்து அதற்கான வழிவகை செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே முஸ்லிம் மக்களின் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்க உணர்விற்கு எதிரான கசப்பினைப் போக்கி நல்லெண்ணம் உண்டாக்க வேண்டுமென்றால் கீழ்கண்ட வழிமுறைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்:
1) முஸ்லிம் நாடுகளின் வறுமையினை ஒழித்து அந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு தன்னிறைவு பெற உதவ வேண்டும்.
2) முஸ்லிம் நாடுகளின் இறையான்மைக்கு உத்திரவாதம் தர வேண்டும்.
3) முஸ்லிம் மக்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு வழிவகுக்கும் பாலஸ்தீனத்தில் அமைதி ஏற்பட உடனே முழு ஒத்துழைத்து அதனை நிலை நாட்டவேண்டும்.
4) மதசம்பந்தமான போதனைகளை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் மதரஸாக்களில் கல்வியினை கற்றுக் கொடுக்க கல்விக்கான உதவித் தொகையினை பின் தங்கிய முஸ்லிம் நாடுகளுக்குத் தரவேண்டும்.
5) நான் மேற்கூறிய யோசனைகளுக்கு அமெரிக்க முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்கள் முதலில் அமெரிக்காவில் வாழும் முஸ்லிம் என்ற நிலை மாறி அமெரிக்கா முஸ்லிம்களாக மாறி அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடு மக்களினன் தவறான எண்ணத்தினை மாற்ற கீழ்கண்ட வழிகளில் செயலாற்ற வேண்டும்:.
1) அமெரிக்கா முஸ்லிம்களில் 60 சதவீதம் வெளிநாடுகளிலிருந்;து வந்து குடியுரிமை பெற்றவர்கள். 40 சதவீதம் அமெரிக்கா-ஆப்பிரிக்கா இனத்தினர். இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் வாழும் கிறித்துவர்கள்-யூதர்களுடன் நல்ல உறவினை ஏற்படுத்தி அமெரிக்கா அல்லாத முஸ்லிம் நாடுகளுடன் நல்லுறவினை நிலைநிறுத்தும் பாலமாக அமைய வேண்டும்.
2) அமெரிக்காவின் யூதர்கள் என்ன செய்ய வேண்டும்?
பாலஸ்தீன மக்கள் அமைதியுடனும், சொந்த நாடு, உரிமை, மற்றும் உடல், பொருள் உத்திரவாதத்துடன் வாழ முயற்சி எடுக்க வேண்டும்.. ஏனென்றால் எந்த வன்முறையும் இஸ்ரேயில் நாட்டினை விடுவிக்க முடியாது. அதேபோல பாலஸ்தீனர்களை தங்கள் சொந்த இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக நிறந்திறமாக வெளியேற்றவும் முடியாது. ஆகவே இஸ்ரேயிலும், பாலஸ்தீன மக்களும் தன்னுரிமையுடன் வாழ அமெரிக்கா வாழும் கிறித்துவர்களும், யூதர்களும் வழிவகுக்க வேண்டும். அதற்கான முயற்சியினை அமெரிக்காவின் முஸ்லிம்கள் எடுக்க வேண்டும். அமெரிக்காவில் ஒரு பழமொழி சொல்வார்கள், நீங்கள் சிரியுங்கள், அடுத்தவரும் சிரிப்பார்’. அந்த பழமொழியே யூத மக்களுக்கும் பொருந்தும்.
3) அமெரிக்காவின் பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், சினிமாத்துறையினர் அமெரிக்கா படைகள் முஸ்லிம் நாடுகளில் தற்காலிக வெற்றியினை பிரதானப்படுத்தாது, எப்படி ஆப்பிரிக்கா மக்களை ‘டார்ஜன்’; படத்தின் மூலம் காட்டுமிராண்டிகள் போல எழுத்திலோ அல்லது எலக்ட்ரானிக் மீடியாவிலோ, அல்லது அமெரிக்கா கூட்டுப்படையின் தங்கள் நவீன போர் எந்திரங்கள் மூலம் எப்படி ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் வெற்றி கொண்டு முஸ்லிம்களை கோழையாக சித்தரிக்காது அவர்களும் தாங்கள் வாழும் கிரகத்தில் பிறந்த மனித பிறவிகள் தான் அவர்களுக்கும் கவுரவமாக, அமெரிக்காவின் 1776 ஆம் ஆண்டு சுதந்திர பிரகடனத்தில் கூறப்பட்டது போல சுதந்திரமாக வாழ அனைத்து உரிமைகளும் உண்டு என்பதினை உணர்ந்து செயலாற்ற வேண்டும். அவ்வாறு செயலாற்றினால் நிச்சயாக முஸ்லிம் மக்களின் வெந்த புண்ணிற்கு மருந்து போட்டது போல ஆதரவாக இருக்குமல்லவா? அதற்கான கருத்து ஒற்றுமையினை அமெரிக்க முஸ்லிம் ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday, August 10, 2010

Ramadhaan Mubarak

Ramadhaan Mubarak

One evening after sunset I heard a knock on my door; Who can it be, I was not quite sure.
I open the door and am filled with glee; The visitor ahead is no stranger to me.

I welcome the guest with utmost delight; For I know it has come to give me respite.
An air of happiness fills the space;
My home now seems, a better place!

Have you any clue who this visitor could be?
Yes! Its Ramadhaan, the month of mercy.
The pious and righteous cannot await its arrival; Others seem to greet it, with waves of denial.

For Almighty we fast from dawn to dusk;
For Him our breath is the fragrance of musk.
The Muslims who pray and fast with zest; Are aware of the rewards of this month manifest.

Throughout this month we weep and repent; Now is the time to strongly lament.
And those who shun this sacred month;
on the Day of Reckoning will face the brunt.

In the last ten nights, hides the Night of Decree; Almighty then awaits for his slaves to plea.
The angels descend with Gabriel/ Jibreel (AS) in the lead; To check on the steadfast and record every deed.

A feeling of grief now fills my heart;
As the month of Ramadhaan will soon depart.
So let us make a start and worship Him alone; Now that the worth of this month is known.

நேரடி ஒளiப்பரப்பு செய்தி (தோப்புத்துறை.டாட்காம்) www.thopputhurai.com

நேரடி ஒளiப்பரப்பு செய்தி (தோப்புத்துறை.டாட்காம்) www.thopputhurai.com

புனித ரமலான் வாழ்த்துகள்
நாளது 11.08.2010 புதன் கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வேதாரண்யம் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலத்தில்f நடக்கும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் தோப்புத்துறை டாட்காமில் நேரடி ஒளiப்பரப்பு செய்யப்படுகிறது.
சிறப்பு விருந்தினராக தமிழக அமைச்சர் மாண்புமிகு உபைத்துல்லா அவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
1946- உப்புச்சத்தியகிரக தியாகி சர்தார் வேதரத்தினம் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த குருகுலம் பள்ளi வேதாரண்யம் சுற்றி உள்ள பகுதியின் பெண்களiன் கல்விக்கு துணையாக சேவையாற்றி வருகிறது.
இவர்களiன் கல்வி பணியை பாராட்டும் விதமாக முதல் முறையாக இந்த பள்ளiயின் நிகழ்ச்சியை இணைதளத்தில் ஒளiப்பரப்பு செய்வதில் மிகழ்ச்சி அடைகிறோம்.
அன்புடன்
தோப்புத்துறை டாட்காம் தொழில் நுட்ப குழு.
இந்திய நேரம் பிற்பகல் 2.30 மணி முதல்\

நோன்பு - சில குறள்கள்.

நோன்பு - சில குறள்கள்.

1).
நோன்பை இறைவனுக்காய் நோற்கும் எவருக்கும்
மாண்பை அடையும் மனம்.
2).
ரமளான் எனுமோர் ரஹமத்தைப் பெற்றார்
அமல்கள் சிறப்ப
(து) அறிவு.
3).
வானிற் பிறையாய் உதித்த ரமளானை
வீணிற் கழிப்ப(து) இழிவு
.
4). வல்லோன் வழங்கிய வாய்ப்பாம் ரமளானை
நல்லோரே பேணுவர் நம்பு
.
5).
புலன்கள் அடக்கும் பயிற்சிகள் தந்து
நலம்பல செய்வதாம் நோன்பு
.
6).
மாதம் இதனில் முழுமைப் பயிற்சியில்
மீதமுள்ள காலமும் மீட்பு
.
7).
பொய்யும் புறமுமாய் பேச்சிருப்பின், நோன்பென்று
மெய்வருந்தச் செய்வது வீண்
.
8).
ஆயிரம் மாதபலன் அற்புத ஓரிரவில்
தூயநன் நோன்பிலே துய்ப்பு
.
9).
ஈகைப் பரிசை இறையிடமே பெற்றிடவே
வாகை ரமளானிற் வாய்ப்பு
.
10).
இறைவனின் பார்வையில் யாவுமே 'உள்'ளில்
நிறைவாய் உரைத்திடும் நோன்பு
.


இப்னு ஹம்துன்

Monday, August 9, 2010

இந்நேரம்,காம் ஊடகக்குழு அறிமுகம்

இந்நேரம்,காம் ஊடகக்குழு அறிமுகம்

இந்நேரம்.காம் ஊடகக்குழுமம்(MediaCircle@inneram.com), ஊடகத்தின் அவசியம் குறித்த கலந்துரையாடலுக்குக் களம் அமைப்பதோடு, முறையான பயிற்சியளித்துத் தரமிக்கச் செய்தியாளர்களை உருவாக்குகிறது. இக்குழுவில் இணைய ஆர்வமுடையவர்கள் கீழ்கண்டப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்புங்கள். வாருங்கள்... மனித நேயமிக்க, நடுநிலை தவறாத புதிய தலைமுறையை உருவாக்குவோம்!

எழுத்து மற்றும் ஊடகத்தில் ஆர்வமுடையவர்களுக்குச் செய்தியாளராவதற்கான பயிற்சி வழங்கும் இந்நேரம்.காம் ஊடகக்குழுவில் இணைய....

http://www.inneram.com/component/option,com_dfcontact/Itemid,226/

- அல் அமீன்
செய்தியாளர் இந்நேரம்.காம்
--

நமது தேசத்தின் சில அவலங்கள்!

நமது தேசத்தின் சில அவலங்கள்!

1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட அம்புலன்சும், தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!

6.நாம் அணியும் , ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும் , பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.

7.நாம் குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது...

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.

கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலாமவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை!

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்!

இந்த நிலை மாறுவது எப்போது?
தூங்கும் பாரதமாதவைத்தான் தட்டி எழுப்பிக் கேட்க வேண்டும்!