Sunday, November 4, 2007

கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர் தேசத்திலிருந்து .......

கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர் தேசத்திலிருந்து கண்டெடுத்தவை!!

உனக்கு நானோ எனக்கு நீயோ சுமையாகிப் போகாமல்
துணையாகிப் போவோம் வா !
தேவைதானா என்று கேட்டிருந்தால்
தீயை அறிந்திருக்க முடியுமா ?
குரங்கிலிருந்து மனிதன் குதித்திருக்க முடியுமா ?
தூரத்தைநெருங்கியிருக்க முடியுமா ?
நேரத்தைசுருக்கியிருக்க முடியுமா ?
தேவை தான்முட்டைக்குள் இருக்கும் உயிரை மூச்சு விடவைக்கிறது
அனுபவங்களின் தொகுப்புத்தான் வாழ்க்கை
நம் வாழ்க்கை முறை தீர்மானிக்கப்பட்ட அனுபவங்களையே
நம்மீது திணித்தது
யாருக்கோ நேர்ந்த அனுபவங்களை ஒப்புக் கொள்ளுமாறு
நம்மீது துப்பியது
ஆகவே தாத்தாக்களின் நகல்களாகவே
தமிழன் தயாரிக்கப்பட்டான்
சாதிக்கும் முளையிருந்தும்
சோதிக்கும் முயற்சியில்லை--------வைரமுத்து

No comments: